நமது படிப்பைச் சீர்செய்வோம். மாவோ பகுதி – 2 மாவோ தேர்ந்தெடுக்கபட்ட படைப்புகள் 3 பக் 23-26)
III
இந்தக் கருத்தை மேலும் விளக்குவதற்கு இரண்டு எதிர் எதிரான அணுகுமுறைகளைவேறுபடுத்திக் காட்ட விரும்புகிறேன்.
முதலாவதுஅகநிலைவாத அணுகுமுறை இந்த அணுகுமுறையோடு ஒருவர் சூழ்நிலையை முறையாகவும் முற்றாகவும்ஆய்வுசெய்வதில்லை.ஆனால் வெறும் மானசீகமான உற்சாக்கத்தோடு மட்டும் வேலை செய்கிறார்.
இன்றைய சீனத்தின் முகத்தோற்றத்தின் ஒரு தெளிவற்ற சித்திரம்தான் இவரிடம் இருக்கிறது.இந்த அணுகுமுறையோடு இவர் வரலாற்றைச் சிதைக்கிறார்.இவருக்கும் பண்டைய கிரீஸ்நாட்டைத்தான் தெரியும். ஆனால் சீனத்தைத் தெரியாது.நேற்றைய சீனத்தைப் பற்றியும்,அதற்கு முந்தைய சீனத்தைப் பற்றியும் மேலோட்டமாகவே தெரிந்துகொண்டு இருக்கிறார்.
இத்தகைய அணுகுமுறையோடு ஒருவர் மார்க்சிய – லெனினியக் கோட்பாட்டை மேலோட்டமாக இலக்கு ஏதுமில்லாமல் படிக்கிறார். அவர் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின்,ஸ்டாலின் ஆகியோரிடம் செல்கிறார். அவர்களுடைய நிலையையும் நோக்குநிலையையும்முறையையும் தேடி அடைகிறார். அதைக் கொண்டு சீனப் புரட்சியின் கோட்பாட்டுப் பிரச்சனை களையையும் செயலுத்திச் சிக்கல்களையும் தீர்ப்பதற்காக அல்ல, மாறாககோட்பாட்டை வெறும் கோட்பாட்டிற்காகவே படிக்கிறார். அவர் அம்பை இலக்கை நோக்கிஎய்வதில்லை, ஆனால் மனம் போன போக்கில் எய்கிறார். புறநிலையான யதார்த்தத்திலிருந்துதொடங்கி அதிலிருந்து விதிகளைப் பெற்று தமது செயலுக்கு வழிகாட்டியாகப் பயன்படுத்தவேண்டுமென்று மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோர் நமக்குக்கற்பிக்கின்றார்கள். இந்த விதிகளை பெறுவதற்காக – மார்க்ஸ் கூறியதைப் போன்று – விவரப் பொருள்களை விரிவாகப் பயன்படுத்தி அவற்றை அறிவியல் வழியான பகுப்பாய்விற்கும்தொகுப்பிற்கும் உட்படுத்த வேண்டும்.நமது தோழர்கள் பலர் இந்த வழியில் செயல்படுவதில்லை. இதற்கு எதிராகச் செய்கிறார்கள்.
இதில் ஒரு கணிசமான பகுதியினர் ஆராய்ச்சி வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால், இன்றைய சீனத்தையோ முந்தைய சீனத்தையோ பற்றிப் படிப்பதில்லை. அவர்களுக்குஅக்கறையில்லை.அவர்களுடையஅக்கறையெல்லாம்யதார்த்தத்திலிருந்து விலகிய வெற்றுக் கோட்பாடுகளைப் படிப்பதிலேயே உள்ளடங்கி இருக்கிறது. மற்றும் பலர் நடைமுறை வேலை செய்கிறார்கள். ஆனால், அவர்களும் யதார்த்த நிலைமைகளைப் பற்றிப் படிப்பதில் கவனம் செலுத்துவதில்லை. அடிக்கடி அவர்கள் வெறும் உற்சாகத்தை மட்டும் சார்ந்திருந்து,கொள்கைகளுக்குப் பல தமது சொந்த உணர்ச்சிகளை வைக்கிறார்கள்.
இவ்விருவகையானவர்களும்அகநிலையைச் சார்ந்த புறநிலை யதார்த்தங்கள் இருப்பதைப் புறக்கணிக்கிறார்கள். இவர்கள் உரை நிகழ்த்தும்போது, அ, ஆ, இ, ஈ, 1, 2, 3, 4 என்ற நீண்டதலைப்புகளில் தங்களது உரைகளை நிகழ்த்துவதில் இறங்கிவிடுகிறார்கள். கட்டுரைகள்எழுதும்போது அவர்கள் ஏராளமான வார்த்தை ஜாலங்களைக் கொட்டுகிறார்கள். யதார்த்தவிவரங்களிலிருந்து உண்மையைத் தேடும் நோக்கம் அவர்களிடம் இல்லை. ஆனால்பகட்டான வார்த்தை ஜாலங்களால் தனக்கு அனுகூலத்தைப் பெற வேண்டும் என்ற விருப்பம்மட்டும் இருக்கிறது. அவர்கள் உறுதியற்றவர்கள். உடைந்து போகக் கூடியவர்கள். அவர்கள்எப்பொழுதும் சரியானவர்கள் இல்லை.வானத்திற்குக் கீழே அதிகாரம் படைத்த முதல் நபர்கள் அவர்கள்தான். எல்லா இடங்களுக்கும் விரைந்தோடும் பேர்ரசின் பிரதிநிதிகள் அவர்கள். நமதுஅணியிலுள்ள சில தோழர்களின் வேலைமுறை இத்தகையதுதான்.
ஒருவருடைய சொந்த நடத்தையை இத்தகைய வேலை நடைமுறையினால் ஆள்வதுஅவருக்கே தீமையைத் தருவதாகும். இதையே மற்றவர்களுக்கும் போதிப்பது தீமைவிளைவிப்பதாகும். தொகுத்துக் கூறினால்,அறிவியலுக்கும்,மார்க்சிய லெனினியத்திற்கும்முரணான இந்த அகநிலை வழியானது கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும், நாட்டிற்கும் பயங்கரமான பகையானதாகும். கட்சி உணர்வில் தூய்மையற்ற போக்கின்வெளிப்பாடுதான் இது.ஒரு பயங்கரமான விரோதி நம் முன் நிற்கிறான். நாம் அவனை வீழ்த்தவேண்டும். அகநிலைப் போக்கை வீழ்த்தினால்தான் மார்க்சிய – லெனினியத்தின் உண்மைபரவும்.நமது கட்சி உணர்வு வலுப்படுத்தப்படும்.புரட்சி வெற்றியடைய முடியும்.அறிவியல்வழியான ஓர் அணுகுமுறையின்றி,அதாவது கோட்பாட்டையும் நடைமுறையையும் ஒன்றுசேர்க்கும் மார்க்சிய லெனினியப் பார்வையின்றி,இருப்பது என்பதற்கு கட்சி உணர்வில்லாமல் இருப்பது அல்லது கட்சி உணர்வு குறைவாக இருப்பது என்றுதான் பொருள். இதை நாம் வலியுறுத்தியாக வேண்டும்.
இத்தகைய நபர்களை சித்தரிக்கின்ற கவிதை ஒன்று உண்டு. அது வருமாறு.
சுவற்றிலேவளரும்நாணல்தலைகணத்துத் தண்டு மெலிந்து ஊன்றாத வேருடையது குன்றுகளின் மேல் பாயும் மூங்கில் -முனை கூர்ந்து தோல்கனத்த உள்ளூர ஓட்டையும் உடையது.
அறிவியல் வழியிலான அணுகுமுறை இல்லாதவர்களையும் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின்,ஸ்டாலின்ஆகியோரின்கட்டுரைகளில் இருந்து வெறும் வார்த்தைகளையும் கூற மட்டும்தான் முடியும் என்றிருப்பவர்களையும் மிகப் பொருத்தமாக இந்தக்கவிதை விளக்க வில்லையா?. தனது நோயை தானே குணப்படுத்திக் கொள்ள யாராவது உண்மையிலேயே விரும்பினால் இந்தக் கவிதையை நினைவில் பதிய வைத்துக்கொள்ளட்டும். அல்லது இன்னும் அதிகத் துணிச்சலைக் காட்டி இதை அவரது அறையில் ஒட்டி வைத்துக் கொள்ளட்டும் என்று நான் அவருக்கு அறிவுரை கூறுவேன். மார்க்சியம் -லெனினியம் என்பது அறிவியல். அறிவியல் என்றால் நேர்மையான உறுதியான அறிவு என்றுபொருள். அதில் ஏமாற்று வித்தைகளுக்கு இடமில்லை. எனவே, நாமும் நேர்மையாகஇருப்போம். இரண்டாவது மார்க்சிய - லெனினிய அணுகுமுறை:இந்த அணுகுமுறையோடு ஒருவர் சூழ்ந்துள்ள நிலைமைகளை முறையாகவும் முற்றாகவும்பரிசீலித்துப் படிப்பதற்கு மார்க்சிய - லெனினியக் கோட்பாட்டையும் வழிமுறையையும் பயன்படுத்துகிறார். அவர் வெறும் உற்சாகத்தின் மூலம் மட்டும் வேலை செய்வதில்லை.
ஸ்டாலின் கூறுவது போல புரட்சிகர வீச்சை நடைமுறைப்படுத்தும் உணர்வோடு அவர் இணைக்கிறார்.இந்த அணுகுமுறையோடு அவர் வரலாற்றைச் சிதைக்க மாட்டார்.பண்டைய கிரீஸ் நாட்டைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது.அவர் சீனத்தையும் தெரிந்துகொள்ளவேண்டும்.அவர் வெளிநாடுகளின் புரட்சிகர வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த அணுகுமுறையோடு ஒருவர் மார்க்சிய லெனினிய கோட்பாட்டை ஒரு நோக்கத்தோடு படிக்கிறார்.அதாவது,மார்க்சிய லெனினிக் கோட்பாட்டைச் சீனப் புரட்சியின் இயக்கத்தோடுஒன்றிணைத்து இந்தத் தத்துவத்திலிருந்து சீனப்புரட்சியின் கோட்பாட்டுச் சிக்கல்களையும்,செயலுத்திச் சிக்கல்களையும் தீர்ப்பதற்கான நிலையை நோக்கி அம்பை எய்வதாகும். “இலக்கு” என்பது சீனப்புரட்சி, “அம்பு”என்பதுமார்க்சியம்லெனினியம். சீனக் கம்யூனிஸ்டு களாகிய நாம் இந்த அம்பைத் தேடிக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால் நாம் சீனப் புரட்சி இயக்கத்தின்இலக்கைத் தாக்க விரும்புகிறோம். இத்தகைய மனநிலை என்பது யதார்த்த விபரங்களிலிருந்து உண்மையைத் தேடுவதாகும். புறநிலையாக உள்ள எல்லா விசயங்களும் “யதார்த்தவிபரங்கள்” என்பதாகும்.
‘உண்மை’ என்றால் அவற்றின் உள்உறவுகள், அதாவது அவற்றை நிர்வகிக்கும் விதிகள்.’தேடுவது’ என்றால் ஆராய்வது என்று அர்த்தமாகும். நாடு, மாகாணம், மாவட்டம், பிரதேசம்இவற்றின் உள்ளும் புறமும் உள்ள உண்மையான நிலைமைகளிலிருந்து நாம் தொடங்கி அவற்றிலிருந்து நமது செயலுக்கு வழிகாட்டியாக அமையும் விதிகளை நாம் வகுத்துக் கொள்ள வேண்டும். அவ்விதிகள் கற்பனையில் தோன்றாதவையாக, அவற்றில் இயற்கையாய்ப்புதைந்துள்ளதாக இருக்க வேண்டும். அதாவது, நம்மைச் சுற்றி நடைபெறும் சம்பவங்களின் அக உறவுகளை நாம் கண்டறிய வேண்டும். இதைச் செய்வதற்கு நாம் மானசீகமான கற்பனைக் கணப்பொழுதில் தோன்றி மறையும் உற்சாகம், உயிரற்ற நூல்கள் ஆகியவற்றைச் சார்ந்திருக்கக் கூடாது. மாறாக, புறநிலையிலுள்ள யதார்த்த விவரங்களை சார்ந்திருக்க வேண்டும்.ஆதாரங்களை விவரமாகத் தொகுத்துப் பொதுவான மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளின் வழிகாட்டுதலின் கீழ் அவற்றிலிருந்து சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.
இத்தகைய முடிவுகள் அ,ஆ,இ,ஈ வரிசையில் முறைப்படுத்திய நிகழ்வுகளின் பட்டியலாக இராது.ஆனால்,அவை அறிவியல் வழியிலான முடிவுகளாகும்.இத்தகைய மனநிலை சான்றுகளிலிருந்து உண்மையைத் தேடும் ஓர் அணுகுமுறையாகும்.கட்டான வார்த்தை ஜாலங்கள் மூலம் அனுகூலமானதைப் பெறுவதல்ல.இதுதான் கட்சி உணர்வின் கோட்பாட்டையும் நடைமுறையையும் ஒன்றுபடுத்தும் மார்க்சிய லெனினிய வேலைமுறையின் வெளிப்பாடு.கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் மிகவும் குறைந்த பட்சமாவது இருக்க வேண்டிய அணுகுமுறைஇதுவே. இந்த அணுகுமுறையைஎவரும் “தலைகனத்தோடு மெலிந்த ஊன்றாத வேர்” அல்லது “முனை கூர்ந்து தோல் தடித்து உள்ளூற ஓட்டையாகவோ” இருக்க மாட்டார்கள்..
IV
மேற்கூறிய கருத்துகளின் படி நான் கீழ்வரும் திட்டங்களை முன்வைக்கிறேன்.
1.நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலையை முழுமையாகவும் முறையாகவும் படிக்கும் கடமையை நாம் முழுக்கட்சியின் முன்னால் வைக்க வேண்டும். மார்க்சிய - லெனினியக் கோட்பாடு, வழிமுறை ஆகியவற்றின் அடிப்படையில் நமது எதிரிகள், நமது நண்பர்கள், நமது தரப்பு ஆகியோரின் பொருளாதாரம், நிதி, அரசியல், இராணுவம், பண்பாடு, கட்சி நடவடிக்கைகள் முதலிய துறைகளின் வளர்ச்சியைப் பற்றி நாம் விவரமாகப் பரிசீலித்து, படித்த பின்பு முறையான அவசியமான முடிவுகளை வகுத்துக்கொள்ள வேண்டும். இந்த நோக்கத்திற்காக நடைமுறைப்படுத்த வேண்டிய விசயங்களைப் பரசீலிப்பதிலும் நம்முடைய தோழர்களை நாம் கவனம் செலுத்தச் செய்ய வேண்டும். கம்யூனிஸ் கட்சித் தலைமை அமைப்புகளின் அடிப்படை கடமையின் இரட்டைப் பகுதிகள்: நிலைமைகளை அறிந்து கொள்வது: கொள்கையை திறமையாக பயன்படுத்துவது. முன்னது உலகைப் புரிந்துகொள்வது. அடுத்தது கொள்கையை திறமையாகப் பயன்படுத்துவது. இதை நமது தோழர்கள் புரிந்துகொள்ளச் செய்ய வேண்டும். பரிசீலனை இல்லாமல் பேச உரிமை இல்லை.
ஆரவாரமான பிதற்றல்கள் 1,2,3,4என்ற வரிசைப்படுத்திய வெறும் நிகழ்வு எல்லாம் எந்தப் பயனையும் தராது என்பதை நமது தோழர்கள் உணரச் செய்ய வேண்டும்.
உதாரணத்திற்கு பிரச்சார வேலையை எடுத்துக் கொள்வோம், நமது எதிரிகளின் பிரச்சாரம், நமது பிரச்சாரம் இவை பற்றிய நிலைமைகள் என்னவென்று நாம் அறியாமல் இருந்தால் ஒரு சரியான பிரச்சாரக் கொள்கையை முடிவு செய்ய நம்மால் முடியாது.எந்தத்துறையின் வேலையாக இருந்தாலும் முதலில் நிலைமைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.பிறகுதான் வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியும்.
கட்சியின் வேலை முறையை மாற்றுவதில் அடிப்படையான கண்ணி,பரிசீலனைக்கும் படிப்புக்குமான திட்டத்தை கட்சி முழுவதிலும் நிறைவேற்றுவதாகும்.
2.நாம் தகுதி வாய்ந்தவர்களை ஒன்று கூட்டி இணைத்தும் முறையான வேலைப் பிரிவினையுடனும் கடந்த நூற்றாண்டுகளின் சீனாவின் வரலாற்றைக் கற்க செய்வதன் மூலம் இன்றைய ஒழுங்கற்ற நிலைமைகளை வெற்றி கொள்ள வேண்டும். முதலில் பொருளாதார வரலாறு, அரசியல் வரலாறு, இராணுவ வரலாறு,பண்பாட்டு வரலாறு ஆகியவற்றின் பல்வேறு துறைகளைப் பகுத்தாராய்ந்து கற்பது அவசியம். இதற்குப் பிறகுதான் முறைப்படுத்தி தொகுத்து கற்பது சாத்தியம்.
3.ஊழியர்களின் கல்வியைப் பொறுத்தவரை வேலையிலும் சரி ஊழியர்களுடன் கல்வி நிலையங்களிலாயினும் சரி சீனப் புரட்சியின் நடைமுறை சிக்கல்களை ஆராய்வதை மையமாக வைத்து மார்க்சிய லெனினியத்தின்அடிப்படைக்கோட்பாடுகளை வழிகாட்டியாகப் பயன்படுத்தும் கொள்கை ஒன்று நிலைநாட்டப்பட வேண்டும்.
மேலும்,மார்க்சிய லெனினியத்தைக் கற்பதில் சோவியத்து ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்குகள்)வரலாற்றின் சுருக்கத்தை முதன்மையான முதன்மையான கல்விப் பொருளாகப் பயன்படுத்த வேண்டும். இது சிறந்ததோர் சேர்க்கையாகவும்,கடந்த நூற்றாண்டுகால உலககம்யூனிச இயக்கத்தின் தொகுப்புரையாகவும் கோட்பாட்டையும் நடைமுறையையும் ஒன்றிணைப்பதின் முன்மாதிரியாகவும் உள்ளது.இதுவரையில் உலகத்தில் வந்துள்ள புத்தகங்களிலேயேஇதுஒன்றுதான்சிறந்ததும் விரிவானதுமானமுன்மாதிரியாகஇருக்கின்றது. எப்படி லெனினும், ஸ்டாலினும் மார்க்சியத்தின் அனைத்தும் தழுவிய உண்மையை சோவியத் புரட்சியின் பருண்மையான நடைமுறையோடு ஒன்றிணைத்தார்கள்.அதன் மூலமாக மார்க்சியத்தை வளர்த்தார்கள் என்பதை பார்க்கும்போது சீனாவில் எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம்.
நாம் பல தவறான வழிகளில் சுற்றி வந்திருக்கிறோம்.ஆனால் தவறுகள் என்பதுஅனேகமாகச் சரியானது எது என்பதன் முன்னறிவிப்பாளனாகவே இருக்கிறது.மிகத்தீவிரமான உயிர்த் துடிப்போடும் மிகச் செழிப்போடும் பல வகைப்பட்டும் சீனப் புரட்சியானது நடக்கும் தருணத்தில் நமது படிப்பைச் சீர் செய்வது சிறப்பான பலனை உறுதியாகத் தரும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியது
1.ஒரு பிரச்சனையை ஒரு சமூகத்தை அகநிலைவாத அணுகுமுறையோடு ஒருவர்ஆய்வு செய்தால் அல்லது புரிந்துகொள்ள முயன்றால் அவரால் அந்தப் பிரச்சனையையோ அல்லது அந்த சமூகத்தையோ முழுவதுமாக ஆய்வு செய்யமுடியாது, புரிந்துகொள்ளவும் முடியாது.
2.அகநிலைவாத அணுகுமுறையோடு சமூகத்தை ஆய்வு செய்து எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் ஒருவர் சமூகத்தை மாற்றியமைக்க செயல்பட்டால்,அவரலால் வெறுமனே மானசீகமான உற்சாகத்தோடு மட்டுமே அவரால் வேலைசெய்ய முடியும்,அதன் மூலம் அவரால் எவ்விதமான பயனும் அடைய முடியாது.
3.அகநிலைவாத கண்ணோட்டத்தோடு இந்திய சமூகத்தை ஆய்வு செய்தால் இந்திய சமூகத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.இந்திய சமூகத்தை முழுமையாக புரட்சிகரமாக மாற்றியமைக்கவும் முடியாது.
4.அகநிலைவாத கண்ணோட்டத்தோடு இந்திய சமூகத்தை ஆய்வு செய்பவரிடம் இந்திய சமூகத்தைப் பற்றி தெளிவற்ற சித்திரம்தான் இருக்கும்.
5.அகநிலைவாத கண்ணோட்டத்தோடு இந்திய வரலாற்றை ஆய்வு செய்பவர் இந்தியவரலாற்றையே சிதைப்பவராகவே இருப்பார்.
6.அகநிலைவாத கண்ணோட்டத்தோடு மார்க்சியத்தை படிப்பவர், இலக்கு ஏதுமின்றியே மார்க்சியத்தை படிக்கிறார் அதனால் எவ்விதமான பயனும் இல்லை.ஆகவே மார்க்சியத்தை புரட்சி நோக்கத்திலிருந்து படிப்பதன் மூலமே நல்ல பலன் கிடைக்கும்.
7. மார்க்சிய கோட்பாடுகளை வெறும் கோட்பாட்டிற்காகப் படிப்பதில் எவ்விதமானபயனும் இல்லை. இந்தியப் புரட்சியின் செயலுத்தி சிக்கலை தீர்ப்பதற்காகப் படிப்பதுதான் பயன்தரும்.
8.புறநிலை யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதில் தொடங்கி அதிலிருந்து விதிகளைப்புரிந்துகொண்டு தமது செயலுக்கு அந்த விதிகளை வழிகாட்டியாகக் கொண்டுபயன்படுத்துவதன் மூலமே நாம் வெற்றியடைய முடியும்.
9.சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை தொகுத்தும் பகுப்பாய்வு செய்தும் விரிவான ஆய்வுக்குட்படுத்தி எடுக்கப்படும் முடிவை சோதித்து அறிவதன் மூலமே சமூகத்தைப் பற்றிய உண்மையை நாம் அறிய முடியும்.
10. இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்டுகளில் பலர் இன்றைய இந்தியாவையும் படிப்பதில்லை, நேற்றைய இந்தியாவையும் படிப்பதில்லை.மாறாக புறநிலையதார்த்தத்திலிருந்து விலகி வெற்றுக் கோட்பாடுகளை படிப்பதில்தான் கவனம்செலுத்துகிறார்கள்.அதனால்தான் இவர்களால் இந்தியாவையும் இந்திய மக்களையும் புரிந்துகொள்ள முடியவில்லை.இவர்கள் மக்களைத் திரட்டி அமைப்பு பலம் உள்ளவர்களாக இருந்தாலும் அந்த அமைப்பு பலத்தை இவர்களால் பயன்படுத்த முடியவில்லை.
11.கம்யூனிஸ்டுகளில் பலர் நடைமுறை வேலைகளில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மக்களை திரட்டி ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள்.ஆனால் இவர்களில் பலர் யதார்த்தத்தைப்படித்துகற்றுக்கொள்ளவில்லை.அதன் காரணமாகவே இவர்கள் வெற்றிபெற முடியாதது மட்டுமல்லாமல் மக்களின் நம்பிக்கையை தொடர்ந்து இழந்தும் வருகிறார்கள்.
12.மார்க்சியக் கோட்பாட்டை புரட்சி என்ற இலக்கை நோக்கமாகக் கொண்டு படித்தால்தான் மார்க்சியத்தை உண்மை யாகவேபுரிந்துகொண்டு நடைமுறை போராட்டங்களில் ஈடுபட முடியும்.
13.அம்பை இலக்கு நோக்கி எய்திடல் வேண்டும்.ஆகவே சமூக மாற்றத்திற்கான இலக்கு எது என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.அதாவது புரட்சியில் நம்முடைய எதிரி யார்? நண்பர்கள் யார் என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
14.நம்மில் சிலர் கவர்ச்சியகப் பேசுகிறார்கள்.வார்த்தை ஜாலங்களால் தனக்கென சுயநலமாக அனுகூலங்களை பெறுவதற்கு முயற்சி செய்கிறார்கள்.இவர்களுக்கு புறநிலை யதார்த்தங்களிலிருந்து உண்மையைத் தேடும் முயற்சி இல்லை.கவர்ச்சியான பேச்சுகளின் மூலமாகவே தன்னை ஒரு சிறந்த தலைவனாக காட்டிக் கொள்கிறார்கள்.
இத்தகைய நபர்கள் புரட்சிக்கு எவ்விதத்திலும் பயன்பட மாட்டார்கள். இத்தகையநபர்கள் உறுதியற்றவர்களாகவும், உடைந்துபோகக் கூடியவர்களாகவுமே இருப்பார்கள். இத்தகைய நபர்கள் எப்பொழுதும் சரியானவர்களாக இருக்க மாட்டார்கள். வானத்துக்கு கீழே அதிகாரம் படைத்த முதல் நபராக தன்னை கருதிக்கொள்வார்கள். பேரரசின் அதிகாரப் பூர்வமான பிரதிநிதியாக தங்களை பற்றி பெருமையாக நினைத்துக் கொள்வார்கள். இத்தகைய பண்புகளை கம்யூனிஸ்டுகள் வளர்த்துக்கொள்ளக் கூடாது. இத்தகைய பண்புகளை ஒருவர் வளர்த்துக் கொண்டால் அவரால் தொடர்ந்து கம்யூனிஸ்டாக இருக்க முடியாது.
15.அகநிலைவாத கண்ணோட்டம் என்பது அறிவியலுக்கும் மார்க்சியத்துக்கும் எதிரானதாகும்.இந்தகண்ணோட்டத்திலிருந்து செயல்பட்டால் அது கம்யூனிஸ்ட் கட்சிக்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும், நாட்டிற்கும் மிகவும் கொடிய தீங்கையே விளைவிக்கும்.
16.கோட்பாட்டையும் நடைமுறையையும் இணைத்து செயல்படும் வழிதான் மார்க்சியம் நமக்கு காட்டும்வழியாகும்.மேலும் நடைமுறையிலிருந்து கோட்பாடுகளை வகுப்பதற்கு நாம் மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்திலிருந்து நாம் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.
17.வெறும் உற்சாகத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதால் எவ்விதமான பயனும் கிடைக்காது.பிரச்சனைகளைப் பற்றிய ஆழ்ந்த அறிவுடனும் பிரச்சனையை தீர்ப்பதற்கான திட்டமிட்ட வழிமுறையை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதால் மட்டுமே நாம் விரும்பிய பலனை பெற முடியும்.
18.புரட்சிகரமான வீச்சை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உணர்வோடு நமது நடவடிக்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். அதன்மூலம் மட்டும் தான் நாம்புரட்சிக்கு பயன்பட முடியும்.
19.நாம் வெளிநாடுகளின் புரட்சி வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் நமதுநாட்டின் புரட்சி வரலாற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
20.மார்க்சிய லெனினிய கோட்பாட்டை இந்தியப் புரட்சியின் நடைமுறையோடு இணைத்துப் புரிந்துகொள்வதற்கும் செயல் படுவதற்குமான அறிவு மற்றும் திறமையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
21.நம்மை சுற்றி நடைபெறும் சம்பவங் களுக்கு இடையிலான உறவுகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதிலிருந்து நாம் செய்ய வேண்டிய கொள்கைகளைமுடிவு செய்ய வேண்டும். இவ்வாறு நம்மை சுற்றி நடைபெறும் புறநிலையிலானநிகழ்வுகளை கண்டுகொள்ளாமல் நமது மனதுக்கு பட்ட உணர்விலிருந்து நமது நடைமுறை செயல்பாடுகளை செயல்படுத்தினால் நாம் வெற்றியடைய முடியாது.
22.நமக்கு கிடைக்கும் ஆதாரங்களை விவரமாகத் தொகுத்து பகுத்தாராய வேண்டும். மார்க்சிய லெனினிய கோட்பாடு களின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.
23.சான்றுகளிலிருந்தும்ஆதாரங்களிலிருந்தும்தான் நாம் உண்மையைத் தேடவேண்டும்.
24. வார்த்தை ஜாலம் புரிவதன் மூலம் உண்மையை அறிய முடியாது.
25.ஒரு கம்யூனிஸ்ட் கட்சியானது நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைமுழுமையாகவும் முறையாகவும் மார்க்சிய லெனினியக் கோட்பாட்டு வழிகாட்டுதலின் அடிப்படையில் பகுத்து ஆராய வேண்டும். அதற்கு கட்சியிலுள்ளமுன்னணியினருக்குஇடையில் வேலைப்பிரிவினை ஏற்படுத்தி செயல்பட வேண்டும். இந்தியப் புரட்சி வரலாற்றை ஆய்வு செய்வதற்கு ஒரு குழு, இந்திய பொருளாதாரத்தை ஆய்வு செய்வதற்கு ஒரு குழு,இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகளின் வர்க்கத் தன்மைகளை ஆராய்வதற்கு ஒரு குழு சர்வதேச பொருளாதாரத்தை ஆய்வு செய்வதற்கு ஒரு குழு என்று இந்த சமூகத்திலுள்ள பல்வேறான பிரச்சனைகளை தனித்தனியே ஆய்வு செய்து அறிக்கை வைப்பதற்கு பல்வேறு குழுக்களை வேலைப்பிரிவினையாக பிரித்துக்கொடுக்க வேண்டும்.
26. பரிசீலனை இல்லாமல் பேசுவது தவறு. டாம்பகமான உளரல்களை தவிர்க்க வேண்டும்.
27.எதிரிகளின் பிரச்சாரத்தை நாம் ஆழமாகப் பரிசீலனை செய்ய வேண்டும்.எதிரிகளின் மக்கள் விரோத பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக நமது பிரச்சாரம் அமைய வேண்டும்.
28.கட்சியின் வேலைமுறையில் நமது நடைமுறைஅனுபவத்திலிருந்து தேவையானமாற்றங்களை தொடர்ந்து செய்ய வேண்டும்.கட்சியின் வேலைமுறையை புறநிலை எதார்த்தத்திற்கு பொருத்தமாக மாற்றிக் கொள்ளாமல் அரைத்தமாவையே அரைத்துக் கொண்டிருந்தால் கட்சியால் வளர முடியாது.
29.நாம் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து ஒன்றுகூட்டி அவர்களுக்கு இடையே வேலைப் பிரிவினை செய்துகொண்டு பிரச்சனைகளை கற்றுக்கொண்டு வேலை செய்வதன் மூலமே தற்போது நிலவும் ஒழுங்கற்ற தன்மையை நாம் போக்கிக்கொள்ள முடியும்.
30.ஊழியர்களின்கல்வியைப் பொறுத்த வரையில் இந்தியப் புரட்சியை நோக்கமாகக்கொண்டு அரசியல்,பொருளாதாரம்,தத்துவம்,பண்பாடு போன்றவற்றை மார்க்சிய அடிப்படையிலிருந்து ஆய்வு செய்து புரிந்துகொள்வதற்கான போதனையாக இருக்கவேண்டும்.
31.ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சி மற்றும் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சிகளின் புரட்சிகர வரலாற்று அனுபவங்கள் நமது கல்வி போதனைகளில் இடம்பெற வேண்டும்.
32.லெனினும் ஸ்டாலினும் மார்க்சியத்தின் அனைத்தும் தழுவிய உண்மையை சோசலிப் புரட்சியின்பருண்மையானநடைமுறையோடு ஒன்றிணைத்தார்கள் என்பதையும் அதன் மூலம் மார்க்சியத்தை வளர்த்தார்கள் என்பதையும் இந்திய கம்யூனிச இயக்கத்திலுள்ள உறுப்பினர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் போதிக்க வேண்டும்.
33.நாம் கட்சி வாழ்க்கையில் பல தவறுகள் செய்துள்ளோம்.அந்தத் தவறுகள் அனைத்தும் நாம் சரியான வழியைத் தேர்ந்தெடுப்பதற்கான முன்னறிவிப்புகளாகக் கருத வேண்டும்.அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தவறுகளை களைந்து சரியான வழிகளை பகுத்தறிந்து கண்டுபிடித்து நாம் முன்னேற வேண்டும்.
34.இந்தியப் புரட்சியில் நம்பிக்கை கொண்டு அதனை சிறப்பாகச் செய்வதற்கு நமது படிப்பை சீர்செய்வதுதான் நமக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.
தேன்மொழி.
==================================================
COMMENTS
SHARE
READ LATER