ஏகாதிபத்தியம் உள்ளவரை போரைத் தடுக்க முடியாது.


வரலாற்று புரிதலுக்கு

இலங்கை சிங்களம் (சிறீலங்கா), தமிழீழம் என்கிற இரு தேசங்களைக் கொண்ட ஒரு நாடாகும். இந்த இரு தேசங்களில் ஒன்றான தமிழீழம் அம்மக்களின் சுயவிருப்பை அறியாமல் பலாத்காரமாக பிரித்தானிய காலனியாதிக்கவாதிகளால் கட்டாயமாக இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட புதியக்காலனிய நாடே இலங்கை ஆகும். இதற்கு வித்திட்டது பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளின் கோல்பூர்க் கெமெரன் சீர்திருத்தமும் சோல்பரிஅரசியல் யாப்புமாகும். இதற்குத் துணைபோனவர்கள் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் சமஷ்டிக் கட்சியின் அடிகோலாக விளங்கிய தரகுமுதலாளிய கும்பல்களாகும். இராமநாதனுக்கும், பொன்னம்பலத்துக்கும் முன்னால் உள்ள `சர்-SIR’ பட்டம் பட்டத்தரசி பிரித்தானிய எலிசபத் மகாராணி வழங்கியதாகும்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட இலங்கையில் ஏற்பட்ட முதல் இனவெறித் தாக்குதல் 1915 இல் கொழும்பு வர்த்தகத்தில் மேலோங்கியிருந்த இஸ்லாமியத்தமிழர்களுக்கு எதிரானதாகும். இத்தாக்குதலை நியாயம்செய்து, சிங்கள ஆளும் வர்க்கத்தை நியாயப்படுத்தி பிரித்தானியா மகாராணியிடம் முறையீடு செய்துவிட்டு திரும்பிவரும் வேளையில்தான் சர்.பொன் இராமநாதன் சிங்களவர்களால் தேரில் இழுத்துவந்து கௌரவிக்கப்பட்டார்.

1947 போலிச்சுதந்திர அதிகாரக் கைமாற்றத்துக்குப் பின், சிங்கள ஆளும் கும்பல் தமது அதிகாரத்தை ஏகபோகமாக்கும் பொருட்டு சிங்களப் பெருந்தேசியஇனத்தை தம் பின்னால் திரட்டும் நோக்கில் சிங்களப் பேரினவாதத்தையும், பௌத்த மதவாதத்தையும் தமது கருத்தாயுதமாக ஏந்தினர்.

அடுத்த தாக்குதல் மலையகத் தமிழ் மக்களின் பாராளுமன்ற அங்கத்துவத்தின் மீது பாய்ந்தது. மலையகத் தமிழர்கள் வாக்குரிமை, குடியுரிமைபறிக்கப்பட்டு தேசமற்ற நவீன கூலி அடிமைகள் ஆக்கப்பட்டனர். பின்னர்தான் (மூன்றாவது இலக்காகத்தான்) இது தமிழ் மக்கள் மீது பாய்ந்தது.

அதிகாரவர்க்கத்தில் இருந்து (அரசுமுறையில் இருந்து) தமிழரை வெளியேற்ற கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச்சட்டம் 1958 `கலவரத்தில்` முடிந்தது.இதைத் தொடர்ந்து இந்தக் `கலவரம்` என்கிற ஆயுதம் 1983 வரை நிராயுத பாணியான தமிழீழ தேசத்தின் மீது 25 ஆண்டுகள் தொடர்ந்து
பிரயோகிக்கப்பட்டது.

1961இல் சிறீ எதிர்ப்புக் `கலவரம்`, 1977 சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிரான `கலவரம்`, 1981இல் மாகாண சபைத் தீர்வை எதிர்த்த மக்களுக்கு எதிரானபடுகொலை, 1983இல் இலங்கைத் தழுவிய இனப்படுகொலை. குழந்தைகளில் இருந்து தெய்வங்கள் உட்பட அனைத்துத் தமிழ் அடையாளம் மீதும்சிங்களப் பேரினவாதக் காட்டுமிராண்டி வெறியாட்டம் கட்டவிழ்க்கப்பட்டது.

இதனால் வெகுண்டெழுந்த வெகுஜன உணர்வின் தாக்கத்தால் சமரசவாதத் தலைவர்களான செல்வா தலைமையில் சமஷ்டிக் கட்சி, பின்னாளில் தமிழர் கூட்டணி, தனித் தமிழீழத் தீர்மானத்தை 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மாநாட்டில் நிறைவேற்றியது. 1977* தேர்தலில் ஈழத் தமிழர்கள் தனி ஈழத்திற்கு ஆதரவாக தமிழரசுக் கட்சிக்கு (தமிழர்கூட்டணி) வாக்களித்ததால் அக்கட்சி 100 சதவீத இடங்களைக் கைப்பற்றியது. பின்னர் அக்கட்சி தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு துரோகமிழைத்தது. அத்தகைய ஒரு சூழலில்தான் அரசியல் வழியில் அமைதி வழியில் பெறமுடியாத போது தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் வெடித்துக் கிளம்பியது. போராளிக் குழுக்கள் தோன்றின.

1983- இனக்கலவரமும் ஆயுதப் போராட்டமும்

1983 ஜூலை இனக்கலவரங்களுக்குப் பிறகு ஈழத் தமிழ் இனத்தைச் சார்ந்த பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எப், டெலோ, எல்.டி.டி.இ போன்ற பல்வேறு குழுக்கள்ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கின. ஈழவிடுதலைப் போர் ஆயுதப் போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்துக் கொண்டது. அத்தகைய ஒரு சூழலில்இ.க.க. (மா.லெ) மக்கள்யுத்தக் கட்சியின், “தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தை ஆதரிப்போம்! இந்திய அரசின் இராணுவத் தலையீட்டைஎதிர்ப்போம்!” என்ற அரசியல் தீர்மானத்தை சமரன் வெளியிட்டது. அதில் இலங்கையில் தனித் தமிழ் ஈழம்தான் ஈழ மக்களுக்கான அரசியல் தீர்வுஎன்பதை கோட்பாட்டு ரீதியில் முன்வைத்ததுடன், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போரை நசுக்க இந்தியா இராணுவத் தலையீடு செய்யும் என்பதை
முன்கூட்டியே அறிவித்தது. எனவே ஈழவிடுதலையை ஆதரித்தும், இந்திய இராணுவத் தலையீட்டை எச்சரித்தும் ஒரு தெளிவான நிலைபாட்டைமுன் வைத்தது.

“தனித் தமிழ் ஈழம்தான் தீர்வு” என்பதற்கான காரணத்தை அது பின்வருமாறு கூறுகிறது:

“இலங்கையின் அரைக்காலனித்துவ - அரைநிலப்பிரபுத்துவ அரசு, சிறுபான்மை இனத்தவரை ஒடுக்குவதையே தனது வாழ்விற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளதால், இன்றுள்ள இலங்கை அமைப்பிற்குள் இனமோதல் தவிர்க்க முடியாததாகிறது. இரு தேசிய இனங்களுக்கும் இடையில் அமைதியும் சாத்தியமற்றதாகிறது. சிங்களப் பேரினவாத, அதிகாரவர்க்க முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ வர்க்கங்களும், அவர்களது அரசும் இரு தேசிய இன மக்களிடையே உண்டாக்கும் முடிவற்றப் பூசல்களும் மோதல்களும் தமிழ்பேசும் மக்களின் பொருளாதார வாழ்வின் சுதந்திரத்திற்குத் தடையாகவே இருக்கின்றன. இவையாவற்றிற்கும் மேலாக ஈழத்தமிழினத்தை ஒழித்துக் கட்டவும், குடியுரிமை அற்ற மலையக மக்களை நவீன அடிமைகளாக நடத்தவும், தாங்கள் விரும்பினால் அவர்களை நாட்டைவிட்டே விரட்டியடிப்பதற்காகவும் இலங்கை அரசு மேற்கொள்ளும் இன ஒடுக்குமுறைகள் தமிழீழ மக்கள் தனிநாடு கோரவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. மலையக மக்கள் குடியுரிமை உள்ளிட்டு அனைத்து ஜனநாயக உரிமைகளையும் கோருகிறார்கள். தமிழ் முஸ்லீம்கள், மத உரிமை உள்ளிட்டு அனைத்து ஜனநாயகக் கோரிக்கைகளையும் தேசிய அமைதியையும் கோருகிறார்கள். இலங்கை நாட்டிலுள்ள தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமையையும் தேசிய அமைதியையும் மக்கள் ஜனநாயகப் புரட்சி ஒன்றுதான் உத்திரவாதம் செய்ய முடியும். ஆனால் இந்த மக்கள் ஜனநாயகப் புரட்சியானது தமிழ் தேசிய இனம் சிங்கள தேசிய இனத்திடமிருந்து பிரிந்து போவதில் முடியுமா? அல்லது சிங்கள தேசிய இனத்துடன் சம அந்தஸ்து பெறுவதில் முடியுமா? என்பதுதான் இன்றுள்ள பிரச்சினை”-நன்றி சமரன் வலைதளம்
மேலும் நமது ஆசான் லெனின் சோசலிசமும் போரும் நூலிலிருந்து சில பகுதிகள் கீழே:-

ஏகாதிபத்தியம் உள்ளவரை போரைத் தடுக்க முடியாது. சமூகம் வர்க்கமாக பிளவுண்டு கிடக்கும் வரை சமூகத்தில் போர் தவிர்க்க முடியாது.

தேசியங்களுக்குள், அவற்றுக்கிடையில்  நடைபெறும் போர்களை காட்டுமிராண்டித்தனமானவை, அதை முரட்டுத்தனமான கொடூரமானவை என்று கூறி சோசியலிஸ்ட்கள் எப்போதுமே அவற்றை கண்டனம் செய்து வந்துள்ளனர். எனினும் போரை பற்றி நாம் கொண்டுள்ள போக்கு பூர்ஷ்வா சமாதானவாதிகளிடையே (சமாதானத்தின் ஆதரவாளர்கள் அது வேண்டும் என்று சரியானது என்று எடுத்துரைக்க அதற்கான வாதி போர் ஆகியோருடைய) போக்கினின்று அடிப்படையில் மாறுபட்டது .அராஜவாதிகளுடைய போக்கின்றும் அடிப்படையில் மாறப்பட்டது. நாட்டிற்குள் நடக்கும் வர்க்க போராட்டத்திற்கும் போர்களுக்கும் உள்ள தவிர்க்க முடியாத தொடர்பினை நாம் அறிந்து புரிந்து கொண்டுள்ளோம் என்ற விஷயத்தில் நாம் முன்னர் குறிப்பிட்டவர்களிட மிருந்து பூஷ்வா  சமாதானவாதிகளிடமிருந்து மாறுபட்டவர்கள் வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டு சோசலிசம்  படைக்கப்பட்டால் இன்றி போர்கள் ஒழிக்க முடியாது என்பதை நாம் அறிந்து கொண்டுள்ளோம்.மேலும் உள்நாட்டுப் போர்களை அதாவது ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஒடுக்கும் வர்க்கத்தினை எதிர்த்து நடத்தும் போர்கள் , அடிமைகள் அடிமை உடைமையாளர்கள் எதிர்த்து நடத்தும் போர் ..... ஆகிய போர்கள் முற்றிலும் முறையானவை முற்போக்கானவை தேவையானவை என்று நாம் கருதுகிறோம். ஒவ்வொரு போரினையும் அதன் வரலாற்றியல் அம்சத்திலே (மார்க்ஸ் அவர்களுடைய முரண்பாட்டியல் பொருள் முதல் வாதத்தின் நோக்கு நிலையில் இருந்து) தனித்தனியாக ஆராய்ந்து அறிய வேண்டும் என்று நாங்கள் கருதுவதில்லை. அனைத்து போர்களும் தவிர்க்க முடியாத வகையில் வரும் குரூங்கள் கொடுமைகளும் வேதனைகளும் துயர்களும் கோரங்களும் இருந்தபோதிலும் முற்போக்காக இருந்து அதாவது மிகவும் தீங்கிழைத்து வந்த பிற்போகஸ்தாபனங்களை உதாரணமாக ஒரு தனி மனித தன்னிச்சையாக ஆட்சி அதிகாரத்தை ஒழிப்பதற்கு உதவி செய்த மனித வர்க்கத்தின் வளர்ச்சி நன்மையை பயத்த போர்கள் கொடுங்கோன்மை ஆட்சியை ஒழிப்பதற்கு உதவியே மனித வர்க்கத்தின் வளர்ச்சிக்கு நடந்த கடந்த கால போர்கள் எடுத்து பரிசீலனை செய்ய வேண்டும் ஆராய வேண்டும்

இன்றைய போர் ஓர் ஏகாதிபத்திய போர். இந்த போர் இன்று நடைபெற்று வரும் போர் ஒரு ஏகாதிபத்திய போர் என்பது அநேக அனைத்து இடங்களிலும் ஒப்புக்கொள்ளப்படுகின்றது . எனினும் பெரும்பாலான இடங்களில் இந்த சொல்லின் பொருள் திரிக்கப்படுகிறது. அல்லது ஒரு சாராருக்கு மட்டுமே கொடுக்கப்படுகின்றது

ஏகாதிபத்திய காலகட்டத்தில்  முதலாளித்துவமானது தேசியங்களை ஒடுக்கும் ஒடுக்கலின் மிகப்பெரிய ஒடுக்கல் காரனாக மாறிவிட்டது முன்னாள் முற்போக்கு  இயல்புகளில் இருந்த முதலாளித்துவம் இப்போது பிற்போக்கு இயல்பு பெற்றுவிட்டது. நிலமான முறையை எதிர்த்து போராடிய போராட்டத்தில் தேசங்களை விடுவிக்கும் விடுதலையாளனாக இருந்த முதலாளித்துவம் இங்கே பிற்போக்கு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டது

போர் என்பது அரசியலின் தொடர்ந்த தொடரே தான் வேறு (வன்முறை)  வழியில் தொடர்ந்து செல்லும் தொடர்ச்சி தான்.

 காலணிகளை கொள்ளையடிப்பது பிரதேசங்களை ஒடுக்குவது தொழிலாளி வார்த்த இயக்கத்தை நசுக்குவது இவைதான் நாம் காணும் படிப்பினைகள் இந்த போக்கு இப்பொழுதும் தொடர தான் செய்கிறது

தேசியக் களின் சுயநினைவுரிமை

தேசியங்களை ஒடுக்கி வரும் அனைத்துவித ஒடுக்கல்களையும் எதிர்த்து போரிடாமல் சோசியலிஸ்ட்கள் தம்முடைய மாபெரும் லட்சத்தை சாதிக்க முடியாது ஆகவே ஒடுக்கும் நாடுகளில் உள்ள சமூக ஜனநாயக கட்சிகள் கொடுக்கப்பட்ட தேசியத்தின் சுயநிர்ணய உரிமைக்காக அதன் அரசியல் பொருளியல்  விசேஷமாக அதாவது அரசியல் வகை பிரிந்து போகும் உரிமை என்பதை ஏற்று அதற்கு ஆதரவாக முன் இருக்க வேண்டும் என்பது எவ்வித ஐயத்திற்கு இடம் இன்றி கோர வேண்டும். இந்த உரிமைக்காக நிற்காதவர் போர் வெறியன் ஆவான். (40)

ஏகாதிபத்தியம் என்பது கையளவிலான பெரு வல்லரசுகள் உலகில் உள்ள தேசியங்களை இடையறாது அதிகமான அளவில் ஒடுக்கும் சகாப்தம் ஆகும் ஆதலால் தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்காவிட்டால் சோசியலிஸ்ட்கள் சர்வதேச புரட்சிக்கு போராடுவது என்பது அசாத்தியம். எந்த ஒரு தேசியமும் பிரதேசங்களை உடைக்கின்றாள் அது சுதந்திரமாக இருக்க முடியாது( மார்க்ஸ் -எங்கெள்ஸ்). பிற தேசியங்களை சிறிதளவிலேனும் வன்முறையில் வலுக்கட்டாயமாக தம்முடைய சொந்த தேசியங்களை இம்சிப்பதை சகித்துக் கொண்டிருக்கும் ஒரு பாட்டாளி வர்க்கம் சோசலிஸ்ட் பாட்டாளி வர்க்கமாக இருக்க முடியாது.(41).

இதேபோல் சமரன் ஈழப் போராட்டம் பற்றி தங்களின் கருத்துகளை முன் வைத்துள்ளதை பார்ப்போம்.
ராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் மூலம் ஈழத் தமிழருடைய விடுதலைப் போரை நசுக்கவும், இலங்கை இனவெறி அரசைப் பாதுகாக்கவும் இந்திய அமைதிப்படை எனும் பேரில் ஒரு ஆக்கிரமிப்புப் படையை இலங்கைக்கு அனுப்பி ஈழத் தமிழர்களை நரவேட்டையாடியது. இலங்கையை தமது மேலாண்மையின் கீழ் கொண்டு வருவதற்காக இரு ஏகாதிபத்திய நாடுகளும் தங்களுக்குள் போட்டி போட்டுக்கொண்டே மறுபுறம் ஈழத்தமிழ்த் தேசிய இன விடுதலைப்போரை நசுக்குவதற்கு இலங்கை அரசுக்குத்
துணைபோகின்றன. ஈழத் தமிழருக்கு எதிரான இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு அமெரிக்க, இரசிய ஏகாதிபத்தியவாதிகளின் ஆதரவு முழுமையாக இருந்தது.

புலிகள் அமைப்பைத் தவிர டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., பிளாட் போன்ற போராளிக் குழுக்கள் இந்திய அரசின் சதிவலையில் வீழ்ந்து, இந்தியவிரிவாதிக்கத்திற்கு சேவை செய்து ஈழ விடுதலைப் போருக்குத் துரோகம் இழைத்தன. துரோகக் குழுக்களாக மாறின. விடுதலைப் புலிகள் அமைப்புஇந்திய ஆக்கிரமிப்புப் படையை எதிர்த்துப் போராடி இந்திய இராணுவத்திற்கு ஒரு கசப்பான படிப்பினையை அளித்தது. இந்திய இராணுவத்தைத்திரும்பப் பெறுவது என்ற அடிப்படையில் அன்றைய பிரேமதாசா அரசாங்கத்துடன் விடுதலைப் புலிகள் ஒரு உடன்பாட்டிற்கு வந்தனர். இந்தியப்படையை இலங்கையைவிட்டு வெளியேற்றினர்.

இந்திய ஆக்கிரமிபுப் படையை எதிர்த்துப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பின் செயல்தந்திரத்தை நாம் முழுமையாக ஆதரித்ததுடன்,விடுதலைப் போரை வெற்றிக்கு இட்டுச்செல்வதில் உள்ள புலிகள் அமைப்பின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு தவறவில்லை.


அதேசமயம் “விடுதலைப் புலிகளின் ஜனநாயக மறுப்பும் எதேச்சதிகார முறைகளும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பாரதூரமான விளைவுகளைஏற்படுத்துகின்றது. அது தேசிய இன ஒடுக்குமுறையை அல்லது இந்திய மேலாதிக்கத்தை எதிர்ப்பதற்கான மக்களின் பலத்தின் வளர்ச்சியைபாரதூரமாக தடைப்படுத்தி, இதன்விளைவாக அது தேசிய விடுதலைப் புரட்சிகர சக்திகளின் வெற்றிகளின் அளவைக் குறைத்து, விடுதலைப்போராளிகளுக்கு இழப்பை ஏற்படுத்துகின்றன,“ஆகையால் விடுதலைப் புலிகள் ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் ஊன்றிநிற்கும்வரை அவர்களை ஒடுக்குமுறை யுத்தத்தைநடத்துபவர்களுடன் சமப்படுத்திப் பார்க்காமல், தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்த போராட்டத்தில் அவர்களுடன் ஒற்றுமையும், அவர்களின் ஜனநாயகஉரிமை மறுப்பு மற்றும் எதேச்சதிகாரப் போக்குகளை எதிர்த்த போராட்டமும் தான் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் அணுகுமுறையாக இருக்கவேண்டும்.
விடுதலைப் புலிகள் தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடும் வரையில் பாடாளிவர்க்க இயக்கம் அவர்களுடன் ஒற்றுமையும்,போராட்டமும் என்ற உறவையே கொள்ளவேண்டும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் 9/11 இரட்டைக் கோபுரத் தகர்வுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து அதன்மீது பல்வேறு தடைகளை விதித்தது. இந்திய அரசோ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பிரித்து அகண்ட ஈழம்அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளது என்ற பொய்யானக் குற்றச்சாட்டின் கீழ் இன்றளவும் தடைவிதித்துள்ளது. 2005ஆம் ஆண்டு நார்வே தலைமையில்தொடங்கிய ஓஸ்லோ பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தத்தால் ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் 30 நாடுகளில் தடைசெய்யப்பட்டது. அதனால் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கான நிதி உதவி பெருமளவில் தடைசெய்யப்பட்டது.
அமெரிக்காவும் பிரிட்டனும் இலங்கைக்கு ஏராளமான கடன் வழங்கினர். அமெரிக்கா தமது நட்பு நாடான இசுரேல் மூலம் இலங்கைக்கு இராணுவதளவாடங்களை வழங்கியது
இவ்வாறு சர்வதேச நாடுகளின் பங்களிப்புடன் ஒரு கொடிய
யுத்தத்தை நடத்திதான் இராஜபட்சே கும்பல் விடுதலைப் புலிகளை வென்றது. விடுதலைப் புலிகளின் தலைமையை நயவஞ்சகமாக அழித்தொழித்தது.
ஈழ விடுதலைப் போரை நசுக்குவதில் அமெரிக்க-இந்திய நாடுகளின் பாத்திரம்தான் முதன்மையானது.
 அமெரிக்கா மீதிருந்த மாயையும், இந்திய அரசின் மீதான குருட்டு நம்பிக்கையும் கஸ்பர் சாமியார் போன்ற துரோகிகளை நம்பியதும்தான் தோல்விக்கும் தலைமையின் அழிவிற்கும் காரணமாகி விட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் குட்டி முதலாளித்துவ அரசியல் நிலைபாடு, ஏகாதிபத்தியம் பற்றிய மாயைகளுக்கு அடித்தளமாக இருந்தது.
அதுவே விடுதலைப் போரின் தோல்விக்கும், அமைப்பின் தலைமை அழிக்கப்படுவதற்கும் காரணம் ஆகிவிட்டது. நன்றி சமரன் இணையம் தகவலுக்கு.






No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்