Showing posts with label முக்கிய செய்திகள். Show all posts
Showing posts with label முக்கிய செய்திகள். Show all posts

மின்சாரம் இல்லாத கார் வடிவமைப்பு

 ஹோண்டா தலைமை நிர்வாக அதிகாரி: "இந்தப் புதிய எஞ்சின் முழு EV துறையையும் அழித்துவிடும்!"

1. யாரும் பார்க்காத ஆச்சரிய அறிவிப்பு

ஒரு துணிச்சலான பத்திரிகையாளர் சந்திப்பில், ஹோண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி உலகளாவிய ஆட்டோமொபைல் துறையின் பாதையை சீர்குலைக்கக்கூடிய ஒரு புரட்சிகரமான எஞ்சின் தொழில்நுட்பத்தை வெளியிட்டார். வழக்கமான EVகளைப் போலல்லாமல், இந்த புதிய உள் எரிப்பு இயந்திரம் அரிதான பூமி பொருட்கள் அல்லது லித்தியம் பேட்டரிகளை நம்பாமல் மின்சார செயல்திறனுடன் போட்டியிட வடிவமைக்கப்பட்டுள்ளது.

2. அதி-திறமையான ஹைட்ரஜன் எரிப்பு இயந்திரத்தை அறிமுகப்படுத்துதல்

ஹோண்டாவின் புதிய பவர்டிரெய்ன் வெறும் பின்னடைவு அல்ல - இது ஒரு முன்னோக்கி பாய்ச்சல். இயந்திரம் ஒரு சுத்தமான எரிப்பு செயல்முறை மூலம் ஹைட்ரஜனில் இயங்குகிறது, ஒரு எரிவாயு இயந்திரத்தின் பழக்கமான உணர்வையும் சக்தியையும் வழங்குகிறது, ஆனால் அதன் ஒரே உமிழ்வாக நீர் நீராவி உள்ளது. ஓட்டுதலின் சிலிர்ப்பைப் பராமரிக்கும் அதே வேளையில் இது பாரம்பரிய EVகளின் உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறைபாடுகளைத் தவிர்க்கிறது.

3. வேகமான எரிபொருள் நிரப்புதல், நீண்ட தூரம், பூஜ்ஜிய சமரசம்

45 நிமிட சார்ஜிங் நிறுத்தங்களை மறந்துவிடுங்கள். இந்த எஞ்சின் 5 நிமிடங்களுக்குள் எரிபொருள் நிரப்புகிறது மற்றும் பல EVகளை மிஞ்சும் வரம்புகளை வழங்குகிறது. இந்த அமைப்பை பரந்த அளவிலான வாகனங்களில் - குடும்ப செடான்கள் முதல் செயல்திறன் கார்கள் வரை - பெரிய பேட்டரி பேக்குகள் அல்லது ரீசார்ஜிங் கட்டங்கள் தேவையில்லாமல் ஒருங்கிணைக்க முடியும் என்று ஹோண்டா கூறுகிறது.

4. டெஸ்லா, BYD மற்றும் பிறவற்றிற்கு ஒரு சவால்

இந்த அறிவிப்பு EV துறையில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. டெஸ்லா போன்ற நிறுவனங்கள் லித்தியம் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை தொடர்ந்து செம்மைப்படுத்தி வரும் நிலையில், ஹோண்டா உரையாடலை முழுவதுமாக மாற்றுகிறது. அவர்களின் புதிய இயந்திரம் பேட்டரி மட்டுமே தீர்வுகளின் நீண்டகால நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது மற்றும் உண்மையான நிலைத்தன்மை எப்படி இருக்கும் என்பது பற்றிய விவாதத்தை மீண்டும் தூண்டுகிறது.

5. முன்னோக்கிச் செல்லும் பாதை: இடையூறு அல்லது மறு கண்டுபிடிப்பு?

ஹோண்டாவின் கண்டுபிடிப்பு ஒரு பெரிய திருப்புமுனையைக் குறிக்கலாம். அளவிடக்கூடியதாக இருந்தால், இந்த இயந்திரம் விதிமுறைகள், விநியோகச் சங்கிலிகள் மற்றும் நுகர்வோர் எதிர்பார்ப்புகளை மறுவடிவமைக்க முடியும். தற்போதைய EV தொழில்நுட்பத்தின் ஆபத்துகள் இல்லாமல் கார்பன் நடுநிலைமைக்கான பாதையை இது வழங்குகிறது - மேலும் இயக்கத்தின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்பதை மறுவரையறை செய்யலாம்.

முடிவு: ஹோண்டாவின் துணிச்சலான நடவடிக்கை இயந்திரங்களைப் பற்றியது மட்டுமல்ல - இது வேகமாக வளர்ந்து வரும் துறையில் தலைமைத்துவத்தைப் பற்றியது.

Honda CEO: "This NEW Engine Will Destroy The Entire EV Industry!"
1. The Surprise Announcement No One Saw Coming
In a bold press conference, Honda’s CEO unveiled a groundbreaking engine technology that could disrupt the trajectory of the global auto industry. Unlike typical EVs, this new internal combustion engine is engineered to rival electric performance—without relying on rare earth materials or lithium batteries.
2. Introducing the Ultra-Efficient Hydrogen Combustion Engine
Honda's new powertrain isn’t just a throwback—it’s a leap forward. The engine runs on hydrogen through a clean combustion process, delivering the familiar feel and power of a gas engine but with water vapor as its only emission. It sidesteps the infrastructure and environmental downsides of traditional EVs while maintaining the thrill of driving.
3. Faster Refueling, Longer Range, Zero Compromise Forget about 45-minute charging stops. This engine refuels in under 5 minutes and offers ranges that surpass many EVs. Honda claims this system can be integrated into a wide range of vehicles—from family sedans to performance cars—without needing massive battery packs or recharging grids.
4. A Challenge to Tesla, BYD, and the Rest The announcement sent ripples through the EV sector. While companies like Tesla continue to refine lithium-based tech, Honda is shifting the conversation entirely. Their new engine questions the long-term viability of battery-only solutions and reignites the debate over what true sustainability looks like.
5. The Road Ahead: Disruption or Reinvention? Honda’s innovation could mark a major turning point. If scalable, this engine could reshape regulations, supply chains, and consumer expectations. It offers a path to carbon neutrality without the pitfalls of current EV technology—and might just redefine what the future of mobility should look like.
Conclusion: Honda’s bold move isn’t just about engines—it’s about leadership in a rapidly evolving industry.







சாதி அன்றும் இன்றும் மார்க்சிய பார்வையில் நூல் அறிமுகம்.

 

அன்பார்ந்த தோழர்களே,

சாதி அன்றும் இன்றும் மார்க்சிய பார்வையில் நூல் பிரிண்டாகி விட்டது அறிமுக கூட்டம் பல காரணங்களால் விலகி போவதால் பொதுதளத்தில் அதுவரை முன்வெளியீட்டு திட்டத்தில் அறிவித்தது போலவே 225 ரூபாய் நூலை கோரியர் செலவுடன் 150 விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். அதன் படி நூல் தேவைப்படுவோர் நூலுக்கான தொகையாக ₹ 150 (கோரியர் செலவு உட்பட) 9095136356 என்ற எண்ணிற்கு அனுப்பி வைபதோடு உங்களின் விலாசம் இதே எண்ணிற்கோ அல்லது 7010134299 என்ற வாட்சாப் எண்ணிற்கோ அனுப்பினால் உங்கள் விலாசத்திற்கு நூல் கோரியர் மூலம் அனுப்பி வைக்கபடும் தோழர்களே.





இதுவரை 31 நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  பல்வேறு தோழர்களுக்கு நேரடியாக 50கும் மேற்பட்ட நூல்கள் கொடுத்துள்ளேன். அறிமுக கூட்டம் அனேகமாக அடுத்த மாதம் நடக்கலாம் என்று பதிப்பாளர் (வெளியீட்டாளர்) கூறியுள்ளார். அதனால் காலதாமதம் ஏற்படவுள்ளதால் இந்த சிறப்பு விற்பனை அறிவிப்பு. 

சாதியை பற்றிய தேட நான் பல நூல் ஆதாரங்கள் மற்றும் சமூக விஞ்ஞான புரிதலுக்கு தொல்லியல் ஆய்வுகள் இலக்கிய ஆய்வுகள் அடிப்படைகளுடன் வரலாற்றில் உள்ள சரி தவறுகளையும் தேட முனைந்துள்ளேன் எல்லாம் மதம் என்பதும் வேதகாலம்தான் என்பதும் பல நூல் ஆதாராங்களுடன், சாதி சமூகத்தில் எப்பொழுது தோன்றியது சாதியின் தேவை என்ன? இன்று சாதி இருபதற்கான காரணம் என்ன அதில் அம்பேத்கர் மற்றும் பெரியார் பாத்திரம் சாதி தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் பங்களிப்பென்ன? அவர்களின் போராட்டம் எந்தளவு வெற்றி கண்டது?

மார்க்சிய வழியில் சாதியின் தோற்றம் முதல் அதனை இல்லாதொழிப்பது வரை எவ்வகையான முறையில் சாத்தியம் என்பதனையும். நம் மத்தியில் இன்றுள்ள சாதி சண்டைகள் ஏன் அவை இல்லாதொழிக்க மார்க்சியம் என்ன சொல்கிறது அதே நேரத்தில் பல்வேறு சாதி ஒழிப்பு பேசுபவர்கள் என்ன சொல்லிக் கொண்டுள்ளனர் என்பதனை விரிவாக தெளிவாக விளக்கியுள்ளேன்.

வர்க்கப் பகைமைகள் முழுமையாக மறைந்தொழியது அவ்வடிவங்களும் கருத்துகளும் முற்றிலுமாக மறைந்து போக முடியாது. (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை). 

உழைக்கும் மக்களின் விடுதலை உற்பத்தி சக்திகளின் தேவையும், வளர்ச்சியும் சமூக தேவையும் சட்ட வடிவில் ஆட்சியாளர்களின் பங்களிப்பிலும் தீண்டாமை நடைமுறை ஒழிப்பு சாத்தியமானதே அவை அரசு இயந்திரம் முயன்றால்.- இவை ஜப்பான் படிப்பினை அங்கே உழைப்பாளரின் தேவை அச்சமூகதிற்கு வேண்டியதாக இருந்தது, அதனால் சமூகத்தின் ஒரு பிரிவினர் தீண்டாமையின் காரணமாக ஒதுக்கப்படுவது அந்நாட்டின் உற்பத்திக்கு பெரும் இழப்பாக இருந்ததனால் அரசே முன் வந்து இந்த தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்டி எல்லோரும் உழைப்பில் ஈடுபட வழிவகை செய்தது. இங்கே செய்ய முடியும் ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்ய தயார் இல்லை.

இன்று தமிழகத்தில் சாதி தீண்டாமை சம்பங்கள் ஆங்காங்கே ஏதோ ஒருவகையில் நிகழ்வதை காண்கிறோம். அது வேங்கைவயல் மட்டுமல்ல பல பகுதிகளில் வெவ்வேறு வழிகளில் தீண்டாமை கொடுமைகள் நடப்பது காலனிய ஆட்சியில் அல்ல, இன்று நம்மவர் நம்மை ஆளும் இவர்களின் ஆட்சியில்தான் பாராமுகமாய் பல நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டுள்ளன. தமிழகத்தில் 341 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகின்றன என்பது செய்தி தகவல். உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்கிச் சுரண்டும் ஆளும் வர்க்கம் சாதியை ஓட்டு வங்கிகளாக சாதி கட்சிகளை ஆதரிப்பதுதான் ஆட்சியாளர்களின் கொள்கையாக உள்ளது தெளிவாக தெரிகிறது.

1990 க்கு பிறகான உலகமய, தனியார்மய கொள்கையால்; இலவச கல்வி, அரசு வேலை வாய்ப்பு அரிதாகி விட்டது. அரசு அறிவித்துள்ளது போல், இடஒதுக்கீடு அதாவது சாதிகளுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பு அரசு வழங்க முடியாத நிலையில் உள்ளது. தன் இயலா நிலையை மூடிமறைக்க செய்யும் கூத்துகள் பல.

அந்தந்த சாதிகளுக்கு கொடுக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை வழங்க முன்வராத அரசு; அந்தந்த சாதி கட்சிகளுக்கு தூபம் போடுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவ்வளவு இடஒதுக்கீடு செய்வோம் என்பது ஒருபுறம், மற்றோருபுறம் சாதிக் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களின் இடஒதுக்கீட்டை கொடு எனும் அதேநேரத்தில் இன்னொரு சாதியால்தான் தம் இடஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்பு பறித்துவிட்டது என்று கூறி ஒரு சாதிக்கு எதிராக இன்னொரு சாதியை நிறுத்தும் மோசடி.

உலக மக்கள் சமுதாய வரலாற்றை ஆராயும் பொழுது, சாதிய முறையானது உலகில் பல நாடுகளில் தோன்றி மறைந்தது தான். மார்க்சியம் போதிக்கும் சமூக விஞ்ஞான அடிப்படையில் சமுதாய வரலாற்றை புரிந்து கொள்வர்களால் மட்டுமே இதை விளங்கிக் கொள்ள முடியும்.

சாதி இல்லாத காலமும் ஒன்று இருந்தது என்பதனை முதலில் தெளிவடைய வேண்டும். சாதி பிரிவினை தோன்றி 2500 ஆண்டுகள் ஆகலாம் என்று கணக்கிட்டாலும்; சாதிய சமூகமாக செயல்பட தொடங்கி 2000 ஆண்டுகள் ஆனாலும்; சாதி ஆதிக்கம் சமூகத்தில் கோலோச்ச தொடங்கியது சோழர் ஆட்சிகாலம் தொடக்கம் என்றாலும் சாதி முழுமையாக செயல்பட தொடங்கி 1600 ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆகையால் சாதியின் இன்றைய இருப்பையும் அதன் ஒழிப்பையும் அதன் தோற்றம் முதல் பல்வேறு தகவல்கள் மற்றும் சமூக இயக்கவியல் அடிப்படையில் தேடியுள்ளேன். சாதி இருப்பிற்கான சமூகம் உடைத்தெறியப்படவில்லை, சாதிய ஏற்றதாழ்வை கட்டிகாக்கும் முறைகளை இன்றைய வர்க்க அரசு தொடர செய்கிறது. அதில் ஒன்றுதான் சாதிகட்சிகளை ஊக்கிவிப்பதும், சாதி சங்கங்களை வளர செய்வதும் ஆகும். இன்னொன்று சாதி சான்றிதழ்கள் வழங்கும் பழக்கத்தை ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்கள் தொடங்கினர். அன்று அவர்கள் சாதியால் ஒதுக்கபட்ட ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு கல்விக்கற்கவும் எல்லோரும் வேலை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இடஒதுக்கீட்டை தொடங்கினர் என்றே வைத்துக் கொண்டாலும், அந்த நோக்கம் முழுமையடையவில்லை. உண்மையில் எத்தனை சதவீத மக்களின் கல்வி வேலை வாய்பிற்கு உத்தரவாதம் அளித்தது என்றால், இடஒதுக்கீட்டால் சில பிரிவு மக்களின் சிலருக்கு சிறிது உயர வழிவகை செய்தது. எல்லோரும் அந்த நிலையை அடைய வழி செய்யவில்லை. ஆனால் அதனால் பல பின் விளைவுகள் இன்றும் நம் சமூகத்தில் காணலாம். அவைதான் சாதி அடையாளங்களை தாங்கி பிடிக்கும் சில போக்குகள்.

தனிப்பட்ட முயற்சிகள் - ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட வாழ்வில் சாதி பாகுபாடுகளை எதிர்க்க வேண்டும். சாதி அடிப்படையிலான நடைமுறைகளில் பங்கேற்காமல் இருத்தல் (எ.கா., சாதி பெயர்களை கேட்டல், சாதி அடிப்படையில் திருமணம் செய்தல் போன்றவை).

சாதி தீண்டாமை ஒரு நாளில் மாறிவிடக்கூடிய பிரச்சினை அல்ல. ஆனால், கல்வி, சட்டம், சமூக முன்னேற்றம் மற்றும் தனிப்பட்ட முயற்சிகள் வழியாக இதை படிப்படியாக ஒழிக்க முடியும். ஒரு சமத்துவமான மற்றும் நீதியான சமூகத்தை உருவாக்குவதே இறுதி இலக்காக இருக்க வேண்டும்.

"மனிதர் அனைவரும் சமம்; சாதி, மதம், இனம் எதுவாக இருந்தாலும் மரியாதை மற்றும் சமத்துவம் அனைவருக்கும் உரியது."

இந்த முறைகளை நாட்டின் பல முன்னோடிகள் பலவகையில் முயன்றவைதான், இருந்தும் இவை அரசினால் முழு வீச்சில் செயல்படுத்தாமல் மெத்தனம் காட்டுவதும். சாதி தீண்டாமைகளை போதிக்கும் மத-சாதிய நிறுவனங்களை அரசே தடை செய்யாமல் ஏற்று நடத்துவதே இன்று சாதி தீண்டாமை மற்றும் பல்வேறு கொடுமைகள் நடந்தேறுவதற்கு காரணமாக உள்ளது. ஆகையால் நமக்கான வழிமுறை மார்க்சிய லெனினியம் எனும் புரட்சிகர தத்துவ வழிபட்ட நடைமுறையில்தான் இந்த ஏற்ற தாழ்வை ஒழிக்க முடியும். அதனை பற்றி தொடர்ந்து விரிவாக புரிந்துக் கொள்வோம்.

வர்க்க சமூகத்தை மறுக்கும் சாதி எதிர்ப்பு போக்குகள்.

இந்திய சமுதாயம் என்பது கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுவது போல வர்க்க சமுதாயம் அல்ல, என்று தொடங்கும் சிலர். இங்கு சாதிய சமுதாயம் தான், ஆகையால் இங்கு முதலில் சாதி ஒழிப்பு போராட்டம் தான் நடத்த வேண்டும் என்கின்றனர்.

இவர்கள் மேலும் கூறுகின்றனர், “பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு 2000 ஆண்டுகளாக கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது, அரசியல் ஆதிக்கம் பார்ப்பனர்கள் மட்டுமே கொண்டுள்ளனர்”, என்கின்றனர்.

வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் வர்க்க சமூக வளர்ச்சியை புரிந்துக் கொள்ளா நிலையில் உள்ளோரின் புரிதல் அற்றப்போக்கே இவை. எல்லோருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, அரசு அதிகாரம் என்பது தோன்றி வளர்ந்து வந்தது சில நூறு ஆண்டுகளுக்கு முன்தானே. நில உடைமை சமூகத்தில் மன்னர்களும் அதன் பரிவாரங்களும் அதிகாரத்தில் உள்ள அதன் மந்திரிகளும் தந்திரிகளும் அதிகாரம் படைத்தவர்களாகவும் அங்கே கல்வி எல்லோருக்கும் இல்லை என்பதும் புரிந்து கொள்ள வேண்டும். அன்று எல்லோரும் கல்வி கற்க வேண்டிய தேவையில்லை, அவரவர் குல தொழில் சார்ந்த அனுபவ அறிவு முதன்மையாக இருந்தது. கல்வி அறிவு அதிகாரம் படைத்தவர்களுக்கும் கருத்து பரப்புவர்களும் அவசியமானதாக இருந்தது.

எல்லோருக்கும் கல்வி எல்லோருக்கும் வேலை வாய்ப்பு எல்லோரும் சமம் என்பது பிரெஞ்சு புரட்சிக்கு பிறகு உலகெங்கும் பேசுப் பொருளாகவும் நடைமுறைக்கும் வந்தது. அதற்கு முன் உடல் உழைப்பு கூட்டத்திற்கு கல்வி இல்லை உடல் உழைப்பு இல்லாத மூளை உழைப்பு கூட்டம் கல்வி கற்று உடல் உழைப்பவர்களை ஏய்த்து வாழ்ந்தது. அதில் மதத்தை முன்வைத்து கருத்தியலை பரப்பிய அன்றைய மத தலைவர்களுக்கும் மத நிறுவனங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. அச்சமுக கடமையாக அவை இருந்தது. உழுவுத் தொழில் செய்பனும் கைத்தொழில் செய்பவனும் தனக்கான தொழில் செய்வது போல் மத ஆச்சாரங்களை வளர்க்கும்தொழில் செய்தவர்கள் அதற்கான கல்வி நிலையில் இருந்தனர். அதனை வெறும் பார்ப்பனர்களாக மட்டுமே எதிரியாக சுருக்கிப் பார்ப்பவர்கள் வர்க்க சமூகத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ளவில்லை. ஆதியில் ஒன்றாக இருந்தவர்கள் தொழிலாள் பிரிந்தனர் என்ற சமூக இயக்கத்தையும் புரிந்துக் கொள்ளவில்லை.

சமுதாயத்தின் ஏற்றதாழ்வுக்கு அங்கு நிலவும் பொருளாதார சுரண்டல், சமூக அடக்குமுறையும் நிலவும் வர்க்க அரசின் தேவைக்காக நிகழ்கிறது. நம்மிடையே உள்ள பார்ப்பனர் எதிர்பாளர்கள் உண்மையான சுரண்டலாளன் ஆளும் வர்க்கத்தை விட சாதி எதிர்ப்பு முதன்மையாக காண்கின்றனர். இவை அன்றைய காலனிய் ஆட்சிகாலம் தொட்டு நடக்கும் முறையாகதான் உள்ளது. நேரடி ஆட்சி அதிகாரத்திலிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை அதேபோல் நிலவுடைமை சமுக இருப்பை எதிர்க்காமல் அதன் கருத்தியல் அம்சமான சனாதன எதிர்ப்பு (பார்பனர் எதிர்ப்பு), சாதி தீண்டாமை எதிர்ப்பு என்ற பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிப்பதை முதன்மையாக இல்லாதது போலவே அந்த அரசும் சிற்சில சீர்திருத்தங்கள் மூலம் நிலவுடைமை சமூக இழிநிலைகளை போக்க முன் வந்தது. அவை தற்காலிக பயனை ஸ்தல அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்தது. ஆனால் சுரண்டல், ஒடுக்குமுறையிலிருந்து விடுதலைதான் கிடைக்கவில்லை .

சாதி அமைப்பை கட்டிக்காக விரும்பும் ஒரு பிரிவு சனாத்தான ஒழிப்பு பார்ப்பன எதிர்ப்பு மட்டும் பேசுகிறது. இவர்கள் பார்ப்பனர் அல்லாவர்கள் அரசின் உயர் பதவியில், அரசின் நல திட்டங்களால் சமூகத்தில் உயர்வான நிலைக்கு வந்தவர்கள். இந்த அமைப்பு முறையினால் அதிகாரம் படைதவர்களாகவும் ஆளும் வர்க்க நலன் சார்ந்தவர்களாகவும் இருப்பர். இவர்கள் சாதிமுறை நீடித்தால் தான் தங்களுக்கான சலுகை கிடைக்கும் என்பர். சாதி ஒழிப்பதை விட சாதி இடஒதுகீடை விரும்புவர்கள். இந்த கூட்டம் சுரண்டும் கூட்டத்தின் பிரதிநிதிகளே. இவர்கள் வாழும் வாழ்க்கையும் இவர்களுக்கான சிந்தனையும் இவர்களின் வர்க்க சிந்தனையாக அமைகிறது. அதாவது இவர்கள் சமுதாயத்தில் வைக்கும் பாத்திரமும் வர்க்கத் தன்மையும் அவர்கள் சிந்தனையை தீர்மானிக்கிறது. இங்கே நாம் காண வேண்டியது அவர்கள் வர்க்கரீதியாக எந்த வர்க்கத்தின் நலனுக்காக செயல் புரிபவர்கள் என்பதே. இதன் அடிப்படையில் சாதி ஒழிப்பில் அம்பேத்கர் பெரியார் பாத்திரம் சுருக்கமாக பார்ப்போம்.

மார்க்சின் கூற்றுப்படி, இங்குள்ள அதிகார வர்க்கப் பதவிகளில் உள்ளவர்கள் சாதி கடந்து வர்க்கமாக ஒடுக்கும் வர்க்கத்தின் கருவியாக செயல்படுகிறார்கள். அவர்கள் எந்தப் பதவி வைக்கிறார்களோ அந்த பதவிக்கான பணியை ஆளும் வர்க்கத்தின் நலனில் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர் பிறப்பால் எந்த சாதியாக இருந்தாலும். அவை தான் ஆளும் வர்க்கத்தின் சட்ட திட்டங்கள். இங்கே அரசின் கருவியான இவர்கள் மற்றவர்களை ஒடுக்கும் சுரண்டும் பணியை செய்கின்றனர். வர்க்கத்தால் இவர்கள் சுரண்டும் வர்க்கதினரே.

சனாதன பார்ப்பன எதிர்ப்பு பேசி அரசு பதிவிகளுக்கு வருவோர் பணி அடிப்படையில் வர்க்கமாக பார்ப்பதா சாதியாகவா? மேலும் அரசு பதவிகளுக்கு வந்து விட்டால் எல்லா சாதியினரும் சமம் ஆகி சமாதானம் வந்துவிடுமா, சனாதனம் ஒழிந்து விடுமா? அதிகார வர்க்கத்தில் தங்களுடைய பங்கு கேட்டு தாங்களும் சுரண்ட கொள்ளை அடிக்க இடம்தானே? இவை சமத்துத்தையோ சுதந்திரத்தையோ விடுதலையையோ தருமா?

இந்த சமூகத்தில் வாழ்வதற்கான கொள்ளையடிப்பதற்கான ஒடுக்குவதற்கான இடம் கேட்பது சாதி ஒழிக்க பயன்படுமா?

இன்றைக்கு சாதியால் அடக்கி ஒடுக்கப்படும் மக்கள் கூடுதலான கொடூரங்களை அனுபவிக்கிறார்கள். ஆனால் இதிலிருந்து விடுதலை என்பது பெரியார் சொன்ன வழியிலோ, அம்பேத்கர் சொன்ன வழியிலோ, ஏன் தலித்தியம் பேசுவோர் கூறும் வழியிலோ, இல்லையில்லை NGO-கள் கூறும் வழியிலோ சாத்தியம் இல்லை. ஏனென்றால் சாதி ரீதியாக ஏற்படும் எல்லா துன்பதிற்கும் காரணமான இந்த சமூக பொருளாதார அரசியல் அமைப்பே, இதனை இந்த மேற்காணும் பிரிவினர் புரிந்துக் கொள்ளவில்லை, ஆகவே இவர்களால் முன்வைக்கப்படும்கொள்கைகள் இதுவரை வெற்றி பெற முடியவில்லை, இனியும் வெற்றிப் பெறப் போவதில்லை சாதிய ‘கொடுமைகளும் அவர்களின் முன்னெடுப்பால் தீர்வில்லை. தினம் தினம் மக்கள் கடந்து செல்லும் இங்குள்ள எல்லா அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் இந்த பிற்போக்கான நடைமுறைகளை கட்டிக்காக்கும் ஆளும் வர்க்கத்தின் அரசியல், பொருளாதார நலன்களை பாதுகாத்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டே நிகழ்கிறது என்கிறது மார்க்சியம். ஆகவே இந்த ஒடுக்குமுறையின் நுகத்தடியை தூக்கியெறிய சொல்கிறது மார்க்சிய லெனினிய தத்துவம். ஆனால் இதனை விடுத்து ஆளும் வர்க்கங்களுடன் கூடிக்குலாவிக் கொண்டு அவர்கள் பின்னால் அணிவகுக்க வேண்டும் என்று சந்தர்ப்பவாதிகள் சுயநலப் போக்குள்ளவர்கள் சொல்கின்றனர். இதுதான் சீர்திருத்தவாதம் பேசும் சந்தர்ப்பவாதிகளின் வழிகாட்டல் ஆகும்.

வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது மக்கள் சாதியை கடந்து ஒன்றுபடுகிறார்கள், சாதி ஆதிக்க சக்திகள் ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை அன்றைய புரட்சிகரக் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுத்த போராட்டங்கள் வர்க்க ஒற்றுமையை அனைத்து சாதியினருக்கும் இடையில் ஏற்படுத்தியது. சாதிமுறை உள்ளிட்ட அனைத்துவகையான பிற்போக்கு அம்சங்களும் தூக்கி எறியப்படும். அதற்கு தேவை சமூக மாற்றதிற்கான புரட்சி ஒன்றுதான் ஒரே வழியாகும் என்பதனை நிரூபித்தன. அத்தகைய புரட்சிதான் இந்த எல்லா சீர்கேடுகளையும் துடைதெறியும்.

சாதியின் தோற்றம் எப்படி அதன் சமூக தேவைக்காக உருவானதோ அந்த உற்பத்தி முறையை மாற்றி அமைக்கவும் புதிய சமூக உறவுகளிலிருந்து இந்த கேடான தீண்டாமையையும் சாதி ஒடுக்கு முறைக்கான எல்லா காரணிகளையும் ஒழிப்பதே தீர்வாகும். அதிகார வர்க்கமாக பல்வேறு சாதிகளிலிருந்து பிரதிநிதிகள் இருப்பது போல ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களும் அனைத்து சாதிகளிலும் உள்ளனர். அதிகாரத்துவ சமூக அமைப்பு பேணும் சாதியத்தை தகர்க்கும் பொருட்டு வர்க்க அடிப்படையிலான பல்வேறு அரசியல் காரணிகள் ஒடுக்கு முறைக்கு ஆட்படுகிற அனைத்து சாதிகளையும் சேர்ந்த உழைக்கும் ஏழை எளிய மக்களை ஓரணியில் ஒன்றிணைத்து போராட வேண்டியுள்ளது. சாதிய உணர்வுகளை விட்டொழிந்து புத்துலகம் படைக்கும் உணர்வுடன் அனைத்து உழைக்கும் ஏழை எளிய சாதியில் உள்ளவர்கள் ஒன்றுபட்டு போராடுவது சாத்தியமானதே.

தொடரும்...





CCR இலக்கு இணைய இதழ் ஒன்றிணைவு




CCR மற்றும் இலக்கு இணைய இதழ் ஒன்றிணைவு 

தோழர்களுக்கு வணக்கம். நாங்களும் புரட்சியாளர் ஒருங்கிணைப்பு குழுவும்(CCR) விவாதித்து (11-07-2025 மற்றும் 12-07-2025) ஒரு முடிவுக்கு வந்துள்ளோம்.

இங்குள்ள கம்யூனிஸ்டுகள் கட்சிகள் மற்றும் புரட்சி பேசும் குழுக்கள் என்னென்ன செயல்பாட்டில் உள்ளது? உழைக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களை போக்குவதில் அவர்கள் ஏன் தீர்மானகர சக்தியாக இல்லை? எங்கே உள்ளது இதற்கான அடிப்படை பிரச்சினை என்று தேடும் பொழுது நாங்கள் கண்டடைந்த முடிவு... இவர்கள் மார்க்சிய ஆசான்களின் அடிப்படைகளை ஆம் மார்க்சிய லெனினிய தத்துவத்தை அரசியல் பொருளாதார நிலைமைகளை நம் நாட்டில் பொருத்திபார்த்து முடிவெடுப்பதில் பின்னடைந்துள்ளனர். ஆகையால் எல்லோரும் கற்று தேற தொடர் கல்வி இயக்கத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளோம். அந்த கல்வியானது மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படைகளை விளக்கி பாட திட்டத்தை முன்வைத்து நேரடி மற்றும் இணைய வழி மற்றும் எழுத்து வடிவில் எல்லோரையும் சோசலிச சிந்தனை உள்ளவர்களாக பொதுவுடமை  நோக்கிய பயணத்தில் தெளிவான கண்ணோட்டத்தில் இயங்க மார்க்சியத்தை கசடற கற்று தேற எல்லாவித வழிமுறைகளையும் பின் பற்றி கல்வி இயக்கத்தை நடத்த உறுதி பூண்டுள்ளோம் உங்களின் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.

தோழமையுடன்

மார்க்சிய லெனினிய கல்வி கழகம்  

 










தோழர்.சுகுந்தன்

தோழர் சுகுந்தன் மறைந்து ஈராண்டு ஓடோடி விட்டது இன்று அவர் அலுவலகத்தை கடக்கும் பொழுது அவரின் வெறுமை வாட்டுகிறது.
இதுபோன்ற தியாக தோழர்களின் உயரிய பணியால் கட்சி வாழ்கிறது.
இவர்களை போன்றோரை மதிப்பதும் சரியானவற்றை போற்றுவதும் உண்மையில் அவர்களின் பணியை புரிந்து செயல்படுபவர்களின் அவசியமான பணி...

தோழருக்கு செவ்வணக்கம். 

தோழர் சுகுந்தன் (75) இன்று மதியம் 2.00 மணியளவில் கடும் மூச்சு திணறல் ஏற்பட்டு இயற்கை எய்தினார் என்பது ஏற்க முடியவில்லை.
நக்சல்பாரி இயக்கத்தில் ஆழ்ந்து ஈடுபட்ட அவர், தனது குடும்ப உறவுகளை துறந்து, மக்கள் நலன், கட்சியின் நலன் என்பது மட்டுமே தனது வாழ்நாள் பணியாக ஏற்று வாழ்ந்து மறைந்து விட்டார்.
அவரின் இறுதி நாட்களில் நான் அவருடன் விவாதிக்க என்னை ஒழுங்கு படுத்திக் கொள்ள ஆசானாக ஏற்றாலும் அவரின் கட்சியின் மீதான அனுதாபம் ஏனோ மார்க்சியத்திலிருந்து விலகியவர்களை சரிபடுத்தும் நோக்கில் இல்லாமல் போனாது.
இதற்கு முன் மூச்சு திறனல் ஏற்பட்ட பொழுது ICU வில் சேர்த்து விட்டு வந்த பொழுது அவரின் கட்சியாட்கள் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்ற பின் வந்து விட்டோம். அவரின் உடல் நிலை சீராகி வெளியே வந்தாலும் திரும்பவும் அட்டாக் வரும் என்று மருத்தவர் கூறியதை அவருக்கு செவ்வாய் கிழமை கூறிய பொழுது நான் நாளை அடுகம்பாறை மருத்துவமனைக்கு செல்வதாக கூறினார். சரி நேற்று பேசவில்லை என்பதனால் காலையிலிருந்து முயற்சி செய்தோம் பேசமையால் அவருடன் இருந்தவருக்கு போன் செய்தோம் எந்த தெளிவான பதிலும் இல்லை.
என்ன சொல்ல, இப்பொழுது சென்னையிலிருந்து தோழர் கவின்மொழி தெரிவித்த பின் தெரிய வந்தது அவரின் மறைவு.
வருத்தமாக உள்ளது. சக தோழர் யாருடன் பழகினார் அவருக்கு கூட தெரிவிக்காதவர்களை நினைத்து.
கீழே அவரின் இன்றைய கட்சி விடுத்துள்ள செய்தி
தோழரின் உடல்,ஜூலை -07,2023, (வெள்ளி)
காலை முதல் ஆம்பூர் கட்சி அலுவலகத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருக்கும்.
கட்சித் தோழர்கள் தொழிலாளர் தோழர்கள், காலை முதலே ஆம்பூர் அலுவலகத்தில் ஒன்று கூடி நமது அன்பு தோழருக்கு செங்கொடி தாழ்த்தி பிரியாவிடை கொடுப்போம்.! என்று லிபரேசன் மாநிலச் செயலாளர் கூறியுள்ளார்...
செவ்வணக்கம் தோழ.
உன்னை போன்ற உண்மையான தோழர்கனால்தான் இன்றும் செங்கொடிக்கு பெருமை.
கண்ணீர் சிந்துவதை தவிர என்னால் வேறு ஒன்று செய்ய முடியாத கையறு நிலையில் உன்னை தவிக்க விட்டு விட்டேனே தோழா.
ஒவ்வொரு விசியத்திலும் விவாதித்து சண்டை போட்டுக் கொள்ள இனி நீங்கள் இல்லையே தோழா!!!
உன்னை போன்றோரின் நினைவுகள் செயல்கள் எங்களை போன்றோருக்கு வழிகாட்டும் தோழா.
செவ்வணக்கம் தோழா-சிபி.

அவரை பற்றி தெரிந்துக் கொள்ள...


மீ.த.பாண்டியன் - MDPandian

70களின் பிற்பகுதியில் இகக (மா-லெ) விடுதலை அமைப்பில் இணைந்து இயங்கத் தொடங்கிய சிம்சன் தொழிற்சாலைத் தொழிலாளி சுகுந்தன் (எ) கீர்த்தி வல்லபன். தஞ்சை, மதுரை, திண்டுக்கல் நேரடிப் பொறுப்பில் பணியாற்றியவர். இகக (மா-லெ) விடுதலை 1992இல் வடபழனி வெளிப்படை மாநாட்டில் மத்தியக்குழு ஒப்புதலுடன் இருவேறு திட்ட முன்வைப்பு மோதலில் அதிகாரப்பூர்வ அமைப்பு தரப்பில் நின்றார். நாங்கள் அ.வெங்கடேசன், சிரீரரங்கன், எஸ்.அண்ணாதுரை, நமசு, பாலகிருஷ்ணன், மதிவாணன், டி.எஸ்.எஸ்.மணி, சிதம்பரநாதன், நவநீதன் உள்ளிட்டோர் குறிப்பான திட்டத்திற்காக நின்றோம்.
பின்னர் அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் AIALA தமிழ்மாநிலப் பொறுப்பாளர்களாக நாங்கள் இணைந்து இயங்கினோம்.
2005இல் மாநிலக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது மாநிலச் செயலாளர் தேர்வில் தோழர்கள் என்னை முன்னிறுத்திய போது என்னை முன் வைத்தவர்களில் முக்கியமானவர்.
உட்கட்சிப் பழிவாங்குதலில் 2006இல் நான் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து முக்கியத் தலைவர்கள் தோழர்கள் எஸ்.அண்ணாதுரை, அ.வெங்கடேசன், ஜெ.சிதம்பரநாதன், நெய்வேலி செல்வராஜ் உள்ளிட்டோர் அமைப்பிலிருந்து ஒருவருட காலத்தில் வெளியேறினர்.
இகக (மா-லெ) மக்கள் விடுதலை உருவானது. தொடர்ந்து 2007இல் தோழர் சுகுந்தன் அமைப்பிலிருந்து வெளியேறி எங்களுடன் இணைந்தார். நாங்கள் உருவாக்கிய டிடீயூசி (DTUC) தொழிற்சங்க மையத்தின் தலைவராக வாணியம்பாடி ஏ.வி (எ) அ.வெங்கடேசன், பொதுச்செயலாளராக தோழர் சுகுந்தன், நெய்வேலி செல்வராஜ் உள்ளிட்டோர் பொறுப்பெடுத்து இயங்கினர். வாணியம்பாடி வேலைகளுக்கு தோழர்கள் சுகுந்தனும், வழக்கறிஞர் கார்க்கிவேலனும் சென்று வந்தனர். தோழர் கார்க்கி வேலன் மட்டும் குடும்பத்துடன் காட்பாடியில் தங்கி தோழர் ஏ.வி.யுடன் இணைந்து பணியாற்றினார்.
தலைவர் ஏ.வி. இழப்பு வாணியம்பாடி, ஆம்பூரில் தொழிற்சங்கப் பணியில் வெற்றிடம் உருவாகக் கூடாது எனும் வகையில் அங்கே, அப்போதே கூடிய கட்சியின் முடிவுப்படி பொறுப்பிலிருந்த நான் தலைவர்
ஏ.வி உடல் அடக்கத்திற்கு முன்பே வேலூர் மாவட்ட தோல் மற்றும் தோல் பொருள் தொழிற்சங்கத் தலைவராக தோழர் சுகுந்தனை அறிவித்தேன்.
2010இல் அமைப்புக்குள் திட்டம் தயாரிக்கும் பணியில் - வர்க்கப் போராட்டம், சாதி ஒழிப்பு, தேசியஇனப் பிரச்சினை - நிலைப்பாடு முன்னெடுப்பதில் முரண்படத் தொடங்கினார்.
2013இல் மக்கள்யுத்தக் குழுவிலிருந்து வெளியேறி இயங்கிய தோழர் பாலன் தலைமையிலான தோழர்களும் இகக (மா-லெ) மக்கள் விடுதலை தோழர்களும் ஒரே அமைப்பாக இணைவதற்கான பேச்சு வார்த்தை நடத்தும் குழுவில் தோழர் சுகுந்தனும் எங்களுடன் பங்கேற்று " கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு " அமைப்பு உருவாக்கப்பட்டது.
2014 திருவெற்றியூர் முதல் மாநாட்டின் போது கட்சியின் வாணியம்பாடி தொழிற்சங்கத்துடன் அமைப்பிலிருந்து வெளியேறினார்.
நீண்ட நாட்கள் தனித்தியங்கியவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் இகக (மா-லெ) விடுதலையுடன் இணைந்து இயங்கினார்.
தொடர்ந்து இயங்கி மறைந்த தோழர் சுகுந்தனும் நானும் 33 ஆண்டுகாலம் இணைந்து இயங்கியுள்ளோம். இறுதியாக தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை இழப்பில் 2016இல் மாதவரத்தில் சந்தித்தது.
1983 எனது வீட்டில் டி.எஸ்.எஸ்.மணி உடன் முதல் சந்திப்பு. உடன்பாடும் முரண்பாடும் என்னோடு மோதல் போக்கும் கடுமையாகக் கொண்டவர். சென்னை மூலக்கடை பகுதியைச் சேர்ந்தவர்....
தொழிற்சங்கத் தலைவர் தோழர் சுகுந்தனுக்கு எனது இறுதி அஞ்சலி!
மூத்த தோழர்கள் தஞ்சை கலியபெருமாள், முகவூர் ஆறுமுகம், வாணியம்பாடி ஏ.வி (எ) அ.வெங்கடேசன், நெய்வேலி செல்வராஜ், தஞ்சை டி.கே.எஸ்.ஜனார்த்தனன், எஸ்.அண்ணாதுரை, பிவிஎஸ் (எ) கணேசன், தேவகோட்டை நமசு வரிசையில் சுகுந்தனுக்கு விடை கொடுப்போம்! செவ்வணக்கம்!
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
அரசியல் தலைமைக் குழு
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா)

நமது ஸ்மார்ட்போன் ஒரு உளவு கருவியே

நமது ஸ்மார்ட்போன் ஒரு உளவு கருவியே….சி.ப

ஏழு ஆண்டிற்கு முன்னர் தேடி எழுதியவை 31 மே தொடங்கி 3 ஜீன் 2025 வரை என்னுடைய முகநூல் முடக்கம் அது சம்பந்தமாக என்னுடைய தகவல்கள் சரிபார்த்தல் என்ற பெயரில் என்னை வேவு பார்த்த நிகழ்வுகளின் அடிப்படையில் என் பழைய முகநூல் பதிவுகளையே தொகுத்துள்ளேன்

இன்றைய தினம் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் நமது தகவல்களை மிக எளிதாக உளவு பார்பதை அனுமதிக்கும் சில செயலிகளை உருவாக்கி அதன்மூலம் நாம் கண்காணிக்க பட்டு கொண்டிருக்கிறோம்.இந்த உளவு செயலி நமது எல்லா ரகசியத்தை யும் நமக்கு தெரியாமல் வெளியிடவோ அல்லது வேவு பார்க்கும் ஒருவர் சேகரிக்க முடியும்.

சமீபத்தில் ஒரு வீடியோ ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது எப்படி நமக்கு தெரியாமலே நமது தகவல்களை திருட முடியும் என்று விளக்கி இருந்தார். சில எச்சரிக்கை குறிப்புகள் கீழே:-

அவற்றில் உள்ள கேமரா வசதி, ஆப், போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை கவனித்து அவைகளின் பயன்பாடுகளை அறிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும்.

ஏனெனில் சில ஸ்மார்ட்போன்களில் ஸ்பை(spy app) எனும் நம்மை உளவு பார்க்கும் ஆப் இருக்கலாம். இந்த ஸ்பை ஆப்பை பொறுத்தவரை சில ஸ்மார்ட்போன்களில் Global Positioning System(GPS) போன்று செயல்படுகிறது.

இது உங்களின் மொபைலில் இருக்கும் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற அனைத்தையும் பதிவு செய்யும் திறமையை கொண்டுள்ளது.

அதனால் உங்களின் ஸ்மார்ட்போனில் தேவையற்ற மென்பொருளை தவிர்த்து, மென்பொருள் விற்பனையாளரிடமிருந்து வழங்கப்பட்ட சட்டபூர்வமான ஆப் பயன்பாடுகளை ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம்.

ஆனால் கூகுள் ப்ளே ஸ்டோரில் கிடைக்கும் சில ஆப் பயன்படுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. இதனால் உங்களுடைய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவராமல் தடுக்க முடியும்.
இருந்தாலும் நமது வாட்சாப் மற்றும் முகநூல் பக்கங்கள் முழுமையாக உளவு பார்க்கப் பட்டு கொண்டிருக்கின்றன.அவற்றை நமது CPU மற்றும் IP address மூலமாக நமது தகல்களை திரட்டுவதோடு நமது எல்லா பதிவுகளையும் கண்காணிக்க படுகிறது, இவை நமது ஸ்மார்ட்போன் மூலமாக ஏனெனில் நமது போன் IP address எந்த Sim மாற்றினாலும் ஒன்றே, நமது இணைய பயன்பாட்டின் மூலமாக நமது நடவடிக்கைகள் உளவு பார்க்க படுகிறது…

உங்களைக் காட்டிக் கொடுக்கும் ஸ்மார்ட்போன்

உங்களிடம் ஸ்மார்ட்போன் இருக்கிறதா? அதில் இணையத் தொடர்பை ஏற்படுத்தி வேலை செய்கிறீர்களா?

அப்படியானால் நீங்கள் பாதுகாப்பாக இல்லை என்கிறார்கள் துறை சார்ந்த நிபுணர்கள்.

உங்களை தனிநபர்கள் உளவு பார்க்கலாம், அரசுகளும் வேவு பார்க்கலாம் என்பதை இணையப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஊடுருவி வேவுபார்க்கும் நிறுவனங்கள்

உளவு பார்க்க விரும்புபவர் NSO Group என்ற இஸ்ரேலிய நிறுவனத்திற்கு பணம் செலுத்தினால் போதும்.

நீங்கள் டைப் செய்யும் ஒவ்வொரு எழுத்தையும், உங்கள் போனில் கேட்கும் ஒவ்வொரு சத்தத்தையும், உங்கள் இருப்பிடத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

இந்த நிறுவனம் வழங்கும் உளவு பார்க்கும் கருவிகள், உங்களது செயற்பாடுகளை ரகசியமாக பதிவு செய்யும் கருவியாக ஸ்மார்ட் போனை மாற்றும்.

இது மாத்திரமன்றி வேறு பல நிறுவனங்களும் உளவு பார்க்கும் தொழில்நுட்பத்தை விற்பதாக தெரியவந்துள்ளது.

அரசுகளின் கைங்கர்யம்

NSO Group உளவு பார்த்த நபர்களின் பட்டியல் பெரியது. இவர்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனித உரிமை ஆர்வலரது ஐபோனும் அடங்கும். மெக்ஸிக்கோ அரசின் ஊழல்களை அம்பலப்படுத்திய ஊடகவியலாளரும் வேவு பார்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிறுவனம் உலகெங்கிலுமுள்ள எத்தனையோ அரசுகளுக்கு தொழில்நுட்பத்தை விற்பனை செய்ய முயன்றிருக்கிறது. பொலிஸ் அமைப்புக்களும் இதன் சேவையைப் பெற்றுள்ளன.

இன்று அப்பிள், பேஸ்புக், கூகிள் போன்ற நிறுவனங்கள் தரவுகளை Encryption முறையில் சங்கேதக் குறியீடுகளாக மாற்றுகின்றன. இதன் நோக்கம், அரச நிறுவனங்களிடம் இருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பது தான்.

மென்பொருளில் இருந்த சிறிய குறைபாட்டைப் பயன்படுத்தி, அப்பிளை ஊடுருவும் அளவிற்கு நிறுவனம் ஆற்றல் படைத்ததாக இருக்கிறது. அத்தகைய நிறுவனங்கள் உங்களையும் வேவு பார்ப்பது அப்படியொன்றும் கஷ்டமான விஷயம் அல்ல.

https://www.google.co.in/amp/news.lankasri.com/mobile/03/108790/amp

அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ, ஆண்ட்ராய்ட் போன்கள், மைக்ரோசாப்ட் நிறுவன கணினிகள், மடிக்கணினிகள், சாம்சங் ஸ்மார்ட் டி.வி. வாயிலாக உளவு பார்ப்பதாக விக்கிலீக்ஸ் இணையதளம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஏ.பி. செய்தி நிறுவனம் பல்வேறு தரப்பு மக் களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி சிறப்பு கட்டுரையை வெளியிட் டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

ஆண்ட்ராய்ட் போன்கள், ஸ்மார்ட் டி.வி., கணினி மூலம் தகவல் பரிமாற்றம் செய்யும்போது சிஐஏ நம்மை உளவு பார்க்குமா என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழுகிறது. இந்த கேள்விக்கு மேலோட்டமாக பதில் அளித்தால் ‘உளவு பார்க்க வாய்ப் பில்லை’ என்று கூறலாம். கொஞ்சம் ஆழமாக யோசித்து பதில் அளித்தால் ‘வாய்ப்பிருக்கிறது’ என்றே தோன்றுகிறது.

நியூயார்க்கை சேர்ந்த சவுன்ட் போர்டு ஆபரேட்டர் ஆண்ட்ரூ மார்ஷெல்லோ கூறியபோது, விக்கிலீக்ஸ் தகவல்கள் கவலை யடையச் செய்துள்ளன. எனினும் நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொள்ளும்போது இதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று தெரிவித்தார்.

சட்டத் துறை வல்லுநர் ஸ்காட் வெர்னிக் கூறியபோது, சிஐஏவின் உளவு தொழில்நுட்பங்கள், உளவு தகவல்கள் உள்ளூர் போலீஸா ருடன் பகிர்ந்து கொள்ளப் படுகிறதா என்ற கேள்வியை பலர் கேட்கின்றனர், இதற்கு யாருமே பதில் அளிப்பது இல்லை என்றார்.

நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்த எட்மையர்வின்ஸ்கை கூறிய போது, இணையதளம் சார்ந்த கருவிகளை பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை விக்கிலீக்ஸ் செய்தி உணர்த்தியுள்ளது. தவறு செய்யாதவர்கள் சிஐஏ குறித்தோ, வேறு உளவு அமைப்புகள் குறித்தோ அச்சப்பட தேவை யில்லை என்று தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/world/ஆண்ட்ராய்ட்-போனில்-சிஐஏ-நம்மை-உளவு-பார்க்கிறதா/article9578872.ece

இன்றைய அதி நவீன தொழில்நுட்ப வளர்ச்சி யில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அதனை பயன்படுத்துவது மட்டும் இல்லாமல் அதனின் அனைத்தையும் அறிந்து கொள்ளாவிட்டாலும் நமது பாதிப்புகளையாவது அறிந்து கொள்ள வேண்டாமா???

தொழில்நுட்ப வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்க் கொளல் அவசியம் அன்றோ??? சி.ப

நான் இவற்றை பல செய்திகளின் அடிப்படையில் அடுக்கி கொண்டிருக்கிறேன் தவறுகளை சுட்டிக்காட்டலாம்!!!

ஸ்மார்ட்போன்கள்- ஸ்மார்ட் டிவி மூலம் வேவு பார்க்கும் அமெரிக்க உளவு நிறுவனங்கள்

சாம்சங் நிறுவனத்தின் அதிநவீன தொலைக்காட்சி சாதனமான “ஸ்மார்ட் டிவி’க்களில் குறிப்பிட்ட மென்பொருளை பதிவு செய்துள்ளதன் மூலம், அந்த சாதனம் வழியாக வீடுகளில் நடைபெறும் உரையாடல்களை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ ஒட்டுக் கேட்பதாக விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது.

ரகசிய ஆவணங்களை வெளியிடுவதில் கில்லாடியான இணையதளம் விக்கிலீக்ஸ். இந்த தளமானது தற்போது அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ பற்றிய தகவல்கள் மற்றும் கோப்புகளை வெளியிட்டுள்ளது. வால்ட் 7 என்ற பெயரில், அமெரிக்க உளவு அமைப்பின் 8,761 கோப்புகளை வெளியிட்டுள்ளது. இனியும் தொடர்ந்து வெளியிட இருக்கிறது. மக்களின் மொபைல்போன், ஸ்மார்ட் டிவி, கணினி ஆகியவற்றை எந்தெந்த வழிகளில் எல்லாம் சி.ஐ.ஏ உளவு பார்க்கிறது என்பதனை பக்கம் பக்கமாக விளக்கியுள்ளது விக்கிலீக்ஸ்.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் படி உங்களின் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்டிவி, ஆன்டி வைரஸ் மென்பொருட்கள் போன்ற அனைத்தையும் சி.ஐ.ஏ.,வால் ஹேக் செய்ய முடியும்; அதுமட்டுமின்றி மக்கள் பாதுகாப்பானது, என்க்ரிப்ட் செய்யப்பட்டது என நினைத்து பயன்படுத்தும் மெசேஜிங் அப்ளிகேஷன்களைக் கூட ஹேக் செய்ய முடியும். உதாரணமாக வீப்பிங் ஏஞ்சல் எனப்படும் சாம்சங் ஸ்மார்ட் டிவிக்களை உளவு பார்க்கும் டூல் பற்றி விக்கிலீக்ஸ் கூறும்போது, “இந்த டூல் மூலம் சாம்சங் ஸ்மார்ட் டிவிக்களை பேக் ஆப் என்னும் மோடில் வைக்க முடியும். அதாவது பயனாளர் டிவியை அணைத்தாலும், டிவி அணையாமல் இருக்கும். அப்போது டிவி பக் ஆக செயல்பட்டு, டிவி இருக்கும் அறையில் நடக்கும் உரையாடல்களை பதிவு செய்யும். பின்னர் அதனை இணையம் மூலம் சி.ஐ.ஏ சர்வருக்கு அனுப்பும்” என்கிறது.

அதேபோல சி.ஐ.ஏ.,வால் ட்ரக் மற்றும் கார்களில் இருக்கும் வாகன கண்ட்ரோல் சிஸ்டமையும் உளவு பார்க்க முடியுமாம். “இதன் மூலம் வாகன விபத்துக்களை கூட அவர்களால் உருவாக்க முடியும்” என சி.ஐ.ஏ குறித்து குற்றம் சாட்டுகிறது விக்கிலீக்ஸ். அதேபோல சி.ஐ.ஏ.,வில் இருக்கும் மொபைல் டிவைஸ் பிரான்ச் ஆனது ஐபோன்களை கன்ட்ரோல் செய்யும் அல்லது தகவல்களை திருடும் மால்வேர்களையும் உருவாக்கியுள்ளதாக கூறுகிறது.

தற்போதைய காலத்தில் ஸ்மார்ட்போன்கள் என்பவை தனிநபர்களின் முக்கியமான விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன. எனவே அவற்றின் தகவல்கள் மிக முக்கியமானவை என்பதால் சி.ஐ.ஏ இதனை செய்கிறது. அதேபோல ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களை ஹேக் செய்வதன் மூலமாக, அந்த போன்களில் இருக்கும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஆப்ஸ்களை உளவு பார்ப்பதும் எளிதான விஷயமாக இருக்கிறது. இதில் வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்றவை கூட விதிவிலக்கல்ல. இந்த விஷயத்தில் ஆப்பிள், கூகுள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் பெயர்களும் அடிபடுவதால் அவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து கேள்வி எழுந்துள்ளன.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “நாங்கள் பார்த்தவரையில் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள பெரும்பாலான குறைபாடுகள் ஏற்கெனவே எங்கள் சமீபத்திய அப்டேட்டில் சரி செய்யப்பட்டு விட்டன. எங்கள் பயனாளர்களை எப்போதும் லேட்டஸ்ட் அப்டேட்டான ஆபரேட்டிங் சிஸ்டமைத்தான் பயன்படுத்த சொல்லிக் கூறி வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இத்தனை ஆவணங்கள் பற்றிய உண்மைத் தன்மை பற்றியும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து இன்னும் சி.ஐ.ஏ எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு நோட் 7 போன் பிரச்னையால் நஷ்டத்தை சந்தித்தது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவி வடிவில் மீண்டும் பிரச்னை வந்துள்ளது. இந்தநிலையில் இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்து எட்வர்ட் ஸ்னோடென், “அமெரிக்காவில் இருக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை கண்காணிக்கும் வகையில் வேண்டுமென்றே, அமெரிக்க மென்பொருட்களில் பாதிப்புகளையும் பாதுகாப்புக் குறைபாடுகளையும் ஏற்படுத்தியுள்ளது. இதனை சரிசெய்யாவிட்டால், எந்த ஹேக்கரும் இந்தப் பாதுகாப்புக் குறைபாட்டைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அமெரிக்க உளவு அமைப்பிற்கும், FBI-க்கும் இதுபற்றி தெரிந்திருந்தாலும் கூட, உளவு பார்ப்பதற்காக இவற்றை சரிசெய்யவில்லை” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் வேறொரு செய்தியில் கீழே உள்ள கருத்துகள்

உளவு செய்ய இருப்பவர்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் பரிசளிக்கும் போதே அதில் எஸ்எம்எஸ் டிராக்கர் (SMS Tracker) செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த செயலியை பிளே ஸ்டோர் மூலம் மிக சுலபமாக இன்ஸ்டால் செய்ய முடியும்.

அம்சங்கள்:

டெக்ஸ்ட் மெசேஜ்பிக்சர் மெசேஜ்போன் கால் லாக்ஸ்லொகேஷன் ஹிஸ்ட்ரிபிரவுசர் ஹிஸ்ட்ரி ஆண்ட்ராய்டு 5 மற்றும் அதற்கும் பிந்தைய சாதனங்கள்

என மேலே குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை கண்காணிக்க முடியும்.

வழிமுறை 1: செயலியை இன்ஸ்டால் செய்யும் முன் ஸ்மார்ட்போனில் உள்ள Unknown sources ஆப்ஷனை செயல்படுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

வழிமுறை 2: இனி செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

வழிமுறை 3: இன்ஸ்டால் செய்ததும், உங்களது பெயர், செல்ல பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டவை குறிப்பிட்டு கணக்கினை பதிவு செய்ய வேண்டும்.

வழிமுறை 4: இவ்வாறு செய்ததும் டிவைஸ் ஐடி உங்களுக்கு கிடைக்கும்.

வழிமுறை 5: இனி https://smstrackerweb.com/login.php தளம் சென்று உங்களது யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டு பதிவு செய்ய வேண்டும்.

வழிமுறை 6: லாக் இன் செய்த பின் எஸ்எம்எஸம் லாக் டேப் சென்று எஸ்எம்எஸ் சார்ந்த தகவல்களை பார்க்க முடியும்.
————–_——–
இனியும் தொடரும்…..


இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்