தோழர்களுக்கு வணக்கம்.
இலக்கு இணைய இதழ் 01 ஜீன் 2022 அன்று தொடங்கினோம். இதுவரை நான்கு இணைய இதழ்களை வெளியிட்டுள்ளோம். இப்பொழுது இலக்கு 5 இணைய இதழ் வரவுள்ளது.அதன் மீதான விமர்சனங்கள் வரவேற்க்கிறோம்.
இன்று இலக்கை போராட்டமாகட்டும், ஸ்ரீமதி கொலைக்கு நியாயம் கேட்க்கும் போராட்டமாகட்டும் இந்த அரசின் செயலை கோட்பாட்டு ரீதியில் புரிந்து கொள்ள வேண்டியவை பல அதே போல....
தேர்தல் நேரத்திலும் தேர்தலுக்கு முன்னும் "Go back Modi" என்று குரல் கொடுத்தோர் குரல் கொடுக்க சொன்னவர் இன்று ஆட்சியில் உள்ளவர் அப்படி பேசினால் தண்டிக்கப் படுவீர் என்பதும்.
இதே கட்சி ஆட்சிக்கு வெளி இருந்த பொழுது விமர்சித்த இந்த போலீஸ் அராஜகம் மற்றும் பல செயல்களை இன்று தன் அதிகாரத்தில் அதை மூடி மறைக்க நீலிக் கண்ணீர் வடிப்பதை நீங்களும் புரிந்துக் கொள்ளாமல் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதும் ஏன் என்பதனை விளக்க வந்தவையே இந்தக் கட்டுரை இலக்கு இதழ் -5 ந் முதல் கட்டுரை.
அரசு குறித்து மார்க்சியமும், சந்தர்ப்பவாதமும்- தேன்மொழி அவர்களின்...
ஒடுக்கும் முதலாளித்துவ வர்க்கங்கள், மாபெரும் புரட்சியாளர்களை அதாவது அவர்களுடைய வாழ்நாளில் ஓயாமல் வேட்டையாடின. அவர்களுடைய கருத்துக்களின் மீது வெறுப்பு கொண்டு கயமைத்தனமான அவதூறு பிரச்சாரங்கள் செய்தார்கள். ஆனால் அவர்கள் மறைந்தபின்பு அவர்களை அபாயமற்ற பூஜையறை படங்களாக்கி அவர்களை வழிபாட்டுக் குரியவர்களாக மாற்றினர். அதன் மூலம் ஒடுக்கப்பட்டமக்களை ஆன்ம திருப்தி செய்து ஏமாற்றினர். அதே நேரத்தில் மார்க்சின்போதனைகளிலுள்ள புரட்சிகர சாரத்தை மூடி மறைத்துவிட்டு, அதனைதிருத்தி முதலாளி வர்க்கத்தாருக்கு சாதகமான முறையில் மாற்றி மக்களிடம் பிரச்சாரம்செய்து மக்களை முதலாளி வர்க்கங்களிடம் அடிமைப் படுத்துவதில் முதலாளிகளும் தொழிலாளி வர்க்க இயக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதிகளும் ஒன்றுபடுகிறார்கள்.
இவ்வாறு முதலாளித்துவ அறிவாளிகளும் தொழிலாளி வர்க்க இயக்கங்களிலுள்ள சந்தர்ப்பவாதிகளாலும் மிகவும் அதிகமாக மார்க்சியத்தை திருத்தி மக்களை குழப்பத்திற்குள் ஆழ்த்தியமார்க்சிய போதனைகளில் மிகவும் முதன்மையானது அரசு பற்றிய மார்க்சியபோதனையையே ஆகும்.
ஏனெனில் மார்க்சின் போதனைகளிலேயே மிகவும் முதன்மையான, மற்றும் உழைக்கும் மக்களாலும், அதன் முன்னணிகளாலும் உணர்ந்து, புரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டிய கொள்கை என்பதுஅரசு பற்றிய
மார்க்சியக் கொள்கையாகும். அரசு பற்றிய மார்க்சியகொள்கையில் உழைக்கும் மக்களுக்கும் அதன் முன்னணிகளுக்கும் குழப்பம்இருந்தால் ஆளும் முதலாளி வர்க்கமும், தொழிலாளிவர்க்க இயக்கத்திலுள்ள சந்தர்ப்பவாதிகளும்,மக்களும் அதன் முன்னணிகளும் மார்க்சியத்தின் அடிப்படைகளையே புரியவிடாமல் செய்துவிட முடியும், மேலும் மார்க்சிய சித்தாந்தத்தின் மீதே நம்பிக்கை இழக்கச்செய்ய முடியும். உலக வரலாற்றிலும், இந்திய வரலாற்றிலும் முதலாளித்துவ (ஏகாதிபத்திய) வர்க்கமும், சந்தர்ப்பவாதிகளும் அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை திருத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்களை நம்ப வைத்தார்கள். அதன் மூலம் முதலாளிகள், அவர்களை பாதுகாத்துக்கொண்டு தற்போதுகொடூரமான முறையில் அதாவது பாசிச முறையில்உழைக்கும் மக்களை சுரண்டிக் கொண்டும் ஒடுக்கிக் கொண்டும் இருக்கிறார்கள். இந்த சூழலில் அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை உழைக்கும் மக்களும் அதன் முன்னணியினரும் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.
‘’அரசுகுறித்த சந்தர்ப்பவாதத் தப்பெண்ணங்களை எதிர்த்துப் போராடாமல், பொதுவில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும், குறிப்பாய் ஏகாதிபத்திய முதலாளி வர்க்கத்தின் செல்வாக்கிலிருந்தும் உழைப்பாளி மக்களை விடுவிக்கப் போராடுவது சாத்தியமன்று.’’ என்றார் லெனின்.
ஆகவே அரசு குறித்த சந்தர்ப்பவாதிகள் அதாவது மார்க்சிய போதனையை திருத்தி விளக்கம் கொடுத்து மக்களை ஏமாற்றும் திருத்தல்வாதிகளின் கொள்கைகளை எதிர்த்துப் போராடாமல் மக்களை விடுவிக்க நாம்போராட முடியாது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
‘’அரசின்பால்சோசலிசப் பாட்டாளிவர்க்கப் புரட்சிக்குள்ள போக்கு குறித்த பிரச்சனை நடைமுறை அரசியல் முக்கியத்துவம் மட்டுமின்றி, இன்றைய மிக அவசர அவசியப் பிரச்சனையாகவும் (முதலாளித்துவக்கொடுங் கோன்மையிலிருந்து தம்மைவிடுவித்துக்கொள்ள வெகுஜனங்கள்கூடிய சீக்கிரத்தில் என்ன செய்ய வேண்டியிருக்கும்என்பதை அவர்களுக்குவிளக்கிச் சொல்லும் பிரச்சனையாகவும்) முக்கியத்துவம் பெற்று வருகிறது’’என்றார் லெனின்.
அரசுக்கும் பாட்டாளி வர்க்கம் தன்னை விடுவித்துக் கொள்வதற்கான போராட்டங்களுக்கும் இடையிலான உறவை உழைக்கும் வர்க்கம் மற்றும் அதன் முன்னணிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்பது நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்தது. மேலும் முதலாளித்துவ கொடுங்கோன்மை குறிப்பாக இன்றைய பாசிஸ்டுகளின் கொடுங்கோன்மை நிலவுகின்ற சூழலில்உழைக்கும் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்என்பதை வழிகாட்டுவதற்கு அரசு பற்றிய மார்க்சிய கொள்கைகளை புரிந்துகொள்ள வேண்டியது மிகமிகஅவசியமாகும்.
‘’மார்க்சியத்தைதிரித்துப் புரட்டுவது என்றுமில்லாத அளவுக்கு மலிந்திருக்கும் ஒரு சூழலில், மெய்யாகவே மார்க்ஸ் அரசு எனும் பொருள்குறித்து என்ன போதித்தார் என்பதைத் திரும்பவும் நிலைநாட்டுவது நமது கடமையாகும்.
இதற்கு மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்களிலிருந்து நீண்ட மேற்கோள்களை தருவது இன்றியமையாதது’’என்றார் லெனின்.
லெனின் காலத்திலேயே மார்க்சியத்தை திருத்தி மக்களை ஏமாற்றும் திருத்தல்வாதக் கூட்டத்தை எதிர்த்துப் போராட வேண்டிய சூழலில் தற்போது மார்க்சியத்தை திருத்துவதோடு மட்டுமல்லாமல் மார்க்சியத்தோடு ஏகாதிபத்திய சீர்திருத்தவாத கொள்கைகளையும் கலந்துகொள்ள வேண்டும்என்ற கலைப்புவாதம், அடையாள அரசியல் போன்ற மார்க்சியத்திற்கு எதிரான கொள்கைகளும் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், லெனின் சொன்னது போல மெய்யாகவே அரசு பற்றி மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின்போன்றவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை உழைக்கும் வர்க்கமுன்னணிகள் கற்றுத் தேர்வது எவ்வளவு அவசியம் என்பதைநாம் புரிந்துகொள்ள வேண்டும்,
மேலும் அது நமது கடமையாகும்.
லெனின் காலத்தில் திருத்தல்வாதியான காவுத்ஸ்கியின் மார்க்சியத்தை திருத்திய வாதங்களை முறியடிப்பதன் மூலம் லெனின் அரசு பற்றிய மார்க்சின் போதனைகளை மட்டுமல்லாது மார்க்சியத்தை பாதுகாத்தார்.
எனினும் இன்றைய காலத்திலும் காவுத்ஸ்கி போன்ற திருத்தல்வாதிகள் மட்டுமல்ல ஏராளமான திருத்தல்வாதிகள் அரசுபற்றிய மார்க்சிய கோட்பாடுகளை திருத்தியும் மார்க்சியத்திற்கு நேர் எதிரான கொள்கைகளையும் மக்களிடம் பரப்பி வருகிறார்கள். அவர்களைமுறியடிக்க அரசு பற்றிய மார்க்சிய கோட்பாடுகளை படித்து உள்வாங்கி முன்னணிகளை வளர்த்திடுவோம்.
அரசின் தோற்றத்தைப் பற்றி குடும்பம், தனிச்சொத்து, அரசின் தோற்றம் என்ற நூலில் எங்கெல்ஸ் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். அதாவது ‘’அரசானது எவ்வகையிலும் வெளியிலிருந்து சமுதாயத்தின் மீது வலுக்கட்டாயமாய் இருத்தப்பட்ட சக்தியல்ல; இதேபோல அது எவ்வகையிலும் ஹெகல் வலியுறுத்தும் ‘அறநெறி கருத்தின் எதார்த்தஉருவோ’, ‘அறிவின் பிம்பமும் எதார்த்தமோ அல்ல’. மாறாக சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தின் விளைவே அரசு. இந்தசமுதாதாயம் தன்னுடனான தீராத முரண்பாட்டில் சிக்கிக்கொண்டு விட்டது, இணக்கம் காணமுடியாத பகை சக்திகளாய்ப் பிளவுண்டுவிட்டது, இந்த பகைமை நிலையை அகற்றத் திறனற்றதாகி விட்டதை ஒப்புக்கொள்வதன் விளைவே அரசு. ஆனால் இந்தப் பகை சக்திகள் முரண்பட்டு மோதிக்கொள்ளும் பொருளாதார நலன்களைக்கொண்ட இந்த வர்க்கங்கள், தம்மையும் சமுதாயத்தையும் பயனற்ற போராட்டத்தில் அழித்துக் கொண்டு விடாமல் தடுக்கும் பொருட்டு, மோதலை தணித்து ‘ஒழுங்கின்’ வரம்பிற்குள் இருத்தக் கூடிய ஒரு சக்தியை வெளிப்பார்வைக்கு சமுதாயத்திற்கு மேலானதாய்த் தோன்றும் ஒரு சக்தியைநிறுவுவது அவசியமாயிற்று. சமுதாயத்திலிருந்து உதித்ததனாலும்சமுதாயத்திற்கு மேலானதாய்த் தன்னை அமர்த்திக்கொண்டு மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும்இந்தச் சக்தியே அரசு எனப்படுவதாகும்’’என்றார் எங்கெல்ஸ்.
இதன் மூலம் அரசானது சமுதாயத்திற்கு அப்பால் வெளியிலிருந்து உருவானது அல்ல. அதாவது கடவுளால்உருவாக்கப்பட்டதோ, அல்லதுபுனிதமானதோ அல்ல என்பது மார்க்சியம். ஆனால் முதலாளிகளும் சீர்திருத்தவாதிகளும் திருத்தல்வாதிகளும் அரசை புனிதமானது என்றே சித்தரிக்கின்றனர். சமுதாயத்தின் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தில், வர்க்கங்கள் தோன்றி முரண்பாடுகள் தோன்றி பகைத்தன்மை வளர்ந்து,இந்தப் பகையை தீர்க்க முடியாதநிலை ஏற்பட்டபோதுதான் அரசு தோன்றியது. இந்த வர்க்க பகைமையானது பயனற்ற போராட்டங்களில் ஈடுபட்டு சமுதாயமே அழிந்துவிடாமல் பாதுகாப்பிற்கான ஒழுங்கைஏற்படுத்துவதற்காகவேஅரசு அவசியம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அரசானது சமூகத்திற்கு மேலானது என்றும் அதற்குகட்டுப்பட வேண்டியது அவசியம் என்ற கருத்தை விதைத்துஉருவாக்கப்பட்டதுதான் இந்த அரசாகும்.
மேலும் சமூகத்திற்கு மேலானதாக நிறுவிக்கொண்ட அரசானது மேலும் மேலும் மக்களிடமிருந்து அன்னியப்பட்டு மக்களுக்கு எதிரான பகை சக்தியாகவே அரசு மாறிவிட்டது. இந்தஉண்மையை மூடிமறைத்துவிட்டு அரசை மக்களின் நண்பனாகவும், மக்களுக்காக பாடுபடும் நிறுவனமாகவும் அதிலுள்ள சிலர் தவறு செய்வதால்அரசே தவறானது என்று கருதக்கூடாது என்று முதலாளித்துவவாதிகளும் சீர்திருத்த திருத்தல்வாதிகளும் கருதுகிறார்கள்.
‘’வர்க்கப்பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவும் வெளியீடுமே அரசு’’இதுதான் அரசு பற்றிய மிகத்தெளிவான மார்க்சிய கோட்பாடாகும். எங்கே, எப்பொழுது எந்தளவுக்குவர்க்கப் பகைமைகள் புறநிலைக் காரணங்களால் இணக்கம்காண முடியாதவை ஆகின்றனவோ, அங்கே அப்பொழுது, அந்தளவுக்கு அரசு உதித்தெழுகிறது. எதிர்மறையில் கூறுமிடத்து, அரசு ஒன்று இருப்பதானதுவர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதனவாய் இருத்தலை நிருபிக்கிறது என்பது மார்க்சியம் ஆகும்.
இதிலிருந்து நாம் வந்தடையும் முடிவுஎன்ன? அரசு ஒன்று இருந்தால்அங்கே வர்க்கங்கள் இருக்கிறது மேலும் அங்கே வர்க்கப்பகைமைகள் நிலவுகின்றது என்பது பொருளாகும். அதே போலவே வர்க்கங்களும் வர்க்கப் பகைமைகளும் நிலவும் சமூகத்தில் அரசுஎன்ற ஒரு நிறுவனம் கட்டாயம் இருக்கும். இந்த கோட்பாட்டிலிருந்துதான் சோசலிச சமூகமாக இருந்தாலும் அங்கே தொழிலாளர்களின் அரசு இருக்கும் அதேநிலையில் சோசலிசசமூகத்திலும் வர்க்கங்களும் வர்க்க பகைமைகளும் இருக்கும் என்று மார்க்சியம் வரையறுத்தது. அவ்வாறு சோசலிச சமூகத்தில் முதலாளி வர்க்கங்களின் அதிகாரம் ஒழிக்கப்பட்டிருந்தாலும், முதலாளித்துவ வர்க்கங்கள் முழுவதுமாக ஒழிக்கப்பட்டிருக்காத நிலையில், வர்க்கங்களும் வர்க்கப் போராட்டங்களும் நீடிக்கும் நிலையில் முதலாளித்துவ வர்க்கங்களை முற்றிலும் ஒழிக்கும் வரை பாட்டாளி வர்க்கத்திற்குஅரசியல் அதிகாரம்வேண்டும் என்கிறது மார்க்சியம்.
மார்க்சியம்கூறும்இந்தஉண்மையைதிருத்தி, புரட்டிடும் முதலாளித்துவவாதிகளும், சீர்திருத்த திருத்தல்வாதிகளும் இரண்டுவகையாக மார்க்சியத்தை திருத்துகிறார்கள்.
எங்கே வர்க்கப் பகைமைகளும் வர்க்கப் போராட்டங்களும் உள்ளனவோஅங்கே மட்டும் அரசு இருக்கிறதுஎன்ற புறநிலை உண்மையை மறுக்கமுடியாமல் ஏற்றுக்கொள்கிறார்கள். எனினும் இந்த வர்க்கப்பகைமைகளுக்குஇணக்கம் காண்பதற்காகவே அரசு உருவாகிறது என்றும்அரசானது பகைவர்க்கங்களுக்கு இடையே இணக்கம் காண்பதற்கானநிறுவனம்தான் அரசு என்று வாதிடுகிறார்கள். ஆனால் பகை வர்க்கங்களுக்கு இடையே இணக்கம்காண முடிந்திருந்தால் அரசு என்பதே தோன்றுவதற்குஅவசியமில்லை என்பதுதான் மார்க்சின் கருத்தாகும்.
அதாவது வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாததன்விளைவே அரசு என்பதுதான் மார்க்சின் கருத்தாகும். இந்த கருத்தைத்தான் திருத்தல்வாதிகள் இணக்கம்காணமுடியாத வர்க்கப் பகையையை இணக்கம்காணச் செய்ய முடியும் என்று திருத்துகிறார்கள். இதன் மூலம் வர்க்கப்பகைமைகள் இணக்காணமுடியாதவை என்ற உண்மையை மூடிமறைத்து இந்த அரசானது வர்க்கப்பகைமையை ஒழித்துவிடும் என்று பொய்ப் பிரச்சாரம்செய்கிறார்கள்.
மார்க்சின் கருத்துப்படி ‘’வர்க்க ஆதிக்கத்திற்கான ஓர்உறுப்பே, ஒரு வர்க்கம்பிற வர்க்கங்களை ஒடுக்குவதற்கான உறுப்பே அரசு’’ என்ற புகழ்பெற்றமார்க்சிய கோட்பாட்டை இவர்கள் மறுக்கிறார்கள்.
வர்க்கங்களுக்கு இடையிலான மோதலை மட்டுப்படுத்தி அதன்வாயிலாக இந்த ஒடுக்குமுறையைச் சட்டமாக்கி, நிரந்தரமாக்கிடும் ‘ஒழுங்கை’ நிறுவதுவே அரசாகும் என்கிறது மார்க்சியம். இதற்கு மாறாக குட்டிமுதலாளித்துவவாதிகள் இந்த ‘ஒழுங்கை’வர்க்கங்களை ஒடுக்குவதற்கான ஒழுங்கு என்று பார்ப்பதற்கு எதிராக வர்கங்களுக்கு இடையில் இணக்கம் உண்டாவதற்கான ஒழுங்கு என்று பார்க்கிறார்கள்.மோதலை மட்டுப்படுத்துவது என்றால் ஒடுக்கும் முதலாளிகளின்ஆட்சியைக்கவிழ்ப்பதற்கான குறிப்பிட்ட மக்களின் போராட்ட சாதனங்களையும் முறைகளையும் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களிடமிருந்து பறிப்பதல்ல, மாறாகவர்க்கங்களுக்கு இடையே இணக்காண்பதற்காக மோதலை மட்டுப் படுத்துவதுதான் என்று குட்டி முதலாளித்துவ வாதிகள் வாதிடுகிறார்கள். இதன் மூலம் முதலாளித்துவ அரசானது, உழைக்கும் மக்கள் முதலாளித்துவ அரசை எதிர்த்துப் போராடும்போது அந்த போராட்டங்களை ஒடுக்குவதற்காக தனது வன்முறை கருவிகளான போலீசையும்இராணுவத்தையும்ஏவிவிடுகின்ற எதார்த்த உண்மையை மூடி மறைக்கிறார்கள்.
முதலாளி வர்க்கத்திற்கும் உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையில் இணக்கம்காணமுடியாதபகைத்தன்மைஉருவாகிவிட்டதால், முதலாளிவர்க்கத்தின்அரசானது தொழிலாளி வர்க்கத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் அரசாக இருக்கிறது என்ற உண்மையை குட்டி முதலாளித்துவவாதிகளால் புரிந்து கொள்ள முடியவில்லை.‘’மறுபுறத்தில், மார்க்சியத்தைப் பற்றிய காவுத்ஸ்கிவாதப் புரட்டு இன்னும்நுண்ணியம் வாய்ந்தது. அரசானது வர்க்க ஆதிக்கத்திற்கானஓர் உறுப்பு என்பதையோ, வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை என்பதையோ ‘தத்துவார்த்தத்தில் ’இப்புரட்டு மறுப்பதில்லை. ஆனால் அதுபாராமுகமாய் அது விட்டொழிப்பது அல்லது பூசிமெழுகிச் செல்வது இதுதான்: வர்க்கப் பகைமைகள் இணக்கம் காணமுடியாதவை ஆகியதன்விளைவேஅரசு என்றால், அது சமுதாயத்துக்கு மேலானதாய்நின்று ‘மேலும் மேலும் தன்னை அதற்கு அயலானாக்கிக் கொள்ளும்சக்தி ஆகும்’என்றால்,ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் விடுதலை பலாத்காரப் புரட்சியின்றி சாத்தியம் இல்லை என்பதோடு, ஆளும் வர்க்கத்தால் தோற்றுவிக்கப்பட்டதும்‘அயலானாய்இருக்கும்’இந்தநிலையின் உருவகமானதுமான அரசு அதிகார இயந்திரத்தை அழித்திடாமலும் இந்த விடுதலை சாத்தியமில்லை என்பது தெளிவு.’’ (லெனின்- அரசும் புரட்சியும்)
இங்கே மார்க்சியம் அரசு பற்றிய சொன்னகருத்துக்களை எல்லாம் காவுத்ஸ்கி ஏற்றுக்கொள்கிறார். அதிலிருந்து இந்த அரசை பலாத்கார முறையில் ஒரேயடியாக ஒழித்துவிட வேண்டும் என்ற மார்க்சியத்திற்கு எதிரான தவறான இடதுசாரி முடிவிற்குவருகிறார். இந்த கருத்திற்கு மாறாக அரசை ஒரேயடியாக ஒழிக்க முடியாது என்றும், தற்போது நிலவும்முதலாளித்துவ அரசிற்கு முடிவுகட்டிவிட்டு, பாட்டாளிவர்கத்திற்கான இடைக்கால அரசை உருவாக்கி சமூகத்தைவர்க்கமற்ற சமூகமாகமாற்றியமைக்கும் போக்கில் அரசானது உலர்ந்து உதிரும்என்ற கருத்தை மார்க்சியம் முன்வைக்கிறது. அதுபற்றி தொடர்ந்து விரிவாகப் பார்ப்போம்.
இறுதியாக நாம் மனதில் பதிவுசெய்துகொள்ள வேண்டிய அரசு பற்றிய
குறிப்புகள்.
1. அரசு என்பதை சமூகத்திற்கு வெளியிலுள்ள சக்தி (கடவுள்) உருவாக்கவில்லை.
2. அரசு என்பது புனிதமானதும் அல்ல.
3.சமூகத்திலிருந்து உருவாகி சமூகத்திற்கு மேலானதாக அரசு தன்னை காட்டிக்கொள்கிறது.
4. அரசு பற்றிய மார்க்சிய போதனைகளை மறைத்துவிட்டு அதன் புரட்சிகரத் தன்மையை நீக்கிவிட்டு முதலாளித்துவ்வாதிகளும் சீர்திருத்தவாத திருத்தல்வாதிகளும் நம்மை ஏமாற்றுகிறார்கள்.
5. சந்தர்ப்பவாதிகளால் குழப்பப்பட்ட மார்க்சிய போதனைகளில் முதன்மையானது அரசு பற்றிய மார்க்சியபோதனையே ஆகும்.
6. அரசு பற்றிய மார்க்சிய போதனைகளைநாம் புரிந்துகொள்ளவில்லைஎன்றால் நம்மால் மார்க்சியத்தின் அடிப்படைகளையேநம்மால்புரிந்துகொள்ள முடியாது. அதாவது மார்க்சின் போதனைகளிலேயேமுதன்மையானது அரசு பற்றிய அவரதுபோதனைகளே ஆகும்.
7. தற்போது இந்திய பெருமுதலாளிகளும் அந்நியகார்ப்பரேட்டு முதலாளிகளும் உழைக்கும் மக்களை சுரண்டிக்கொண்டும் கொடூரமாகபாசிச முறையில் ஒடுக்கிக் கொண்டிருப்பதற்கும் அடிப்படை இந்த அரசுதான் என்பதை நடைமுறையிலிருந்து புரிந்துகொள்ளவேண்டும்.
8. அரசு பற்றிய சந்தர்ப்பவாத தப்பெண்ணங்களை எதிர்த்துப் போராடாமல் உழைக்கும் வர்க்கத்திற்கு விடுதலை இல்லை.
9. உழைக்கும் மக்கள் தங்களுக்கான வளமானவாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமானால், அதற்கு மக்கள் என்னசெய்யவேண்டும் என்று தீர்மானிப்பதற்கு அரசுபற்றிய மார்க்சின் போதனைகளை எவ்விதமான திருத்தமுமின்றி தெளிவாகப்புரிந்து கொள்ள வேண்டும்.
10. அரசு பற்றிய மார்க்சிய கோட்பாட்டை என்றுமில்லாத அளவு திருத்திக் கொண்டிருக்கும் சூழலில் அரசு பற்றி மார்க்ஸ்உண்மையிலேயே என்ன போதித்தார் என்பதைநாம் தெரிந்துகொள்ளவேண்டியது நமது கடமையாகும்.
11. மார்க்ஸ், லெனின் காலத்திலேயே காவுத்ஸ்கிபோன்றவர்களின் திருத்தல்வாதக் கருத்துக்கள் முறியடிக்கப்பட்டது. எனினும்தற்காலத்திலும் காவுத்ஸ்கி போன்றவர்களின் திருத்தல்வாதக் கருத்துக்களை புதிய வடிவத்தில் சிலர்கொண்டுவந்து உழைக்கும்வர்க்க முன்னணிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்த முயலுகிறார்கள். அந்ததிருத்தல்வாதிகளை முறியடிக்க நாம் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் போன்றவர்களின் கருத்துக்களை ஆழ்ந்து படிக்க வேண்டும்.
12. வர்க்கப் பகைமைகள் இணக்கம்காண முடியாததன் விளைவே அரசு ஆகும்.
13. வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாததால்ஆளும் வர்க்கமானது உழைக்கும் வர்க்கத்தை ஒடுக்குவதை தவிர வேறுவழியில்லாத்தால் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்காக அரசைஉருவாக்கியது.
14. வர்க்கங்களுக்குஇடையில் மோதலைமட்டுப்படுத்துவதற்காகவே அரசுபாடுபடுகிறது என்ற பொய்யைச் சொல்லி, உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான சட்டங்களைப் போட்டு ஒடுக்குவதுதான் அரசின் வேலையாகும்.
15. வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாததால்உருவான அரசால்ஒருபோதும் வர்க்கங்களுக்கு இடையிலான பகையை ஒழித்து வர்க்கங்களுக்கு இடையில் சமாதானத்தை கொண்டுவரமுடியாது.
16. வர்க்கங்களுக்குஇடையில் பகையை ஒழித்து சமாதானத்தைகொண்டுவர முடியும் என்ற கருத்தானது அரசுபற்றிய மார்க்சியபோதனையை திருத்திய சந்தர்ப்பவாத திருத்தல்வாதிகளின்கருத்தாகும் ..
தேன்மொழி..........
தொடரும்