Showing posts with label இலக்கு இதழ். Show all posts
Showing posts with label இலக்கு இதழ். Show all posts

இலக்கு 78 இணைய இதழ் PDF வடிவில்

 ஒரு கம்யூனிஸ்ட் கட்சியானது கறாரான பாட்டாளிவர்க்க கண்ணோட்டம், கொள்கை கோட்பாடுகளில் உறுதியான பற்றுகொண்டிருக்கவேண்டும். ஆகவே கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் பாட்டாளிவர்க்க கண்ணோட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களில் பலர் பாட்டாளிவர்க்க கண்ணோட்டமில்லாமல், பாட்டாளிவர்க்க நிலைபாட்டில் குறைபாடுள்ளவர்களாகவும், மார்க்சிய லெனினிய தத்துவத்தையும், சிந்தனையையும் வேலைமுறையையும் தெளிவாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். இவர்களால், நடைமுறைப் பணிகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தும் ஆற்றலற்றவர்களாகவே இருப்பார்கள் என்றார் லியோஷோசி. ஒவ்வொரு பிரச்சனையை எதிர்நோக்கி தீர்ப்பதிலும் ஒருவர் பாட்டாளிவர்க்க நிலைபாட்டில் உறுதியாக நிற்க்கும் போதுதான் அவரால் மார்க்சிய லெனினிய தத்துவத்தையும் அரசியலையும் கற்று முதிர்ச்சியடைய முடியும். அதாவது ஒரு கம்யூனிஸ்டு முதலில் பாட்டாளிவர்க்க உணர்வுபடைத்தவராக இருக்கவேண்டும். அத்தகைய உணர்வுள்ளவர் களால்தான் மார்க்சிய ஆசான்களது போதனைகளை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ள முடியும். இதற்கு மாறாக குட்டிமுதலாளிய உணர்வு படைத்தவர்களால் மார்க்சியத்தை அவர்களது சுயநல நோக்கத்திலிருந்தே புரிந்து கொள்கிறார்கள். இத்தகையவர்கள்தான் மார்க்சியத்தை திருத்தும் திருத்தல்வாதிகளாக இருக்கிறார்கள். ஆகவே ஒரு பிரச்சனைக்கான தீர்வை ஒருவர் முன்வைக்கிறார் என்றால், அவர் பாட்டாளிவர்க்க நலன் அல்லது கண்ணோட்டத்திலிருந்து வைக்கிறாரா? அல்லது குட்டிமுதலாளித்துவ நலன் அல்லது கண்ணோட்டத்திலிருந்து வைக்கிறாரா? என்று பார்க்கவேண்டும். உதாரணமாக பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் வேண்டும் என்ற கொள்கையானது பாட்டாளிவர்க்க கண்ணோட்டத்திலிருந்து வருகிறது. இதற்குமாறாக பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் கூடாது என்ற கொள்கை முதலாளித்துவ மற்றும் குட்டிமுதலாளித்துவ கண்ணோட்டத்திலிருந்து வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வை முன்வைக்கும்போது அதற்கு அடிப்படையாக பின்னணியாக ஒரு வர்க்க நலன் மற்றும் கண்ணோட்டம் இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை

1). போர்வெறியும் ஏகாதிபத்தியமும்

2). சிறந்த கம்யூனிஸ்டாவது எப்படி? பாகம் - 7

3).அரசு பற்றி லெனின் பாகம் 4.

4).அடையாள அரசியலும் மார்க்சியத்தை மறுக்கும் போக்குகளும்

ஏகாதிபத்தியம் என்றாலே போரும் சுரண்டலும் ஒடுக்குமுறையும் நிறைந்த காலம் என்பதும்தான். ஆக ஆசான் லெனின் வழிகாட்டியுள்ளவற்றை புரிந்துக் கொள்ள முயலுவோம்.

"தேசங்களுக்குள், அவற்றுக்கிடையில் நடைபெறும் போர்களை காட்டுமிராண்டித்தனமானவை, அதை முரட்டுத்தனமான கொடூரமானவை என்று கூறி சோசலிஸ்டுகள் எப்போதுமே அவற்றை கண்டனம் செய்து வந்துள்ளனர். எனினும் போரை பற்றி நாம் கொண்டுள்ள போக்கு பூர்ஷ்வா சமாதானவாதிகளிடையே (சமாதானத்தின் ஆதரவாளர்கள் அது வேண்டும் என்று சரியானது என்று எடுத்துரைக்க அதற்காக வாதிபோர் ஆகியோருடைய) போக்கினின்று அடிப்படையில் மாறுபட்டது அராஜவாதிகளுடைய போக்கின்றும் அடிப்படையில் மாறப்பட்டது. நாட்டிற்குள் நடக்கும் வர்க்க போராட்டத்திற்கும் போர்களுக்கும் உள்ள தவிர்க்க முடியாத தொடர்பினை நாம் அறிந்து புரிந்து கொண்டுள்ளோம் என்ற விஷயத்தில் நாம் முன்னர் குறிப்பிட்டவர்களிடமிருந்து பூஷ்வா சமாதானவாதிகளிடமிருந்து மாறுபட்டவர்கள்.

வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டு சோசலிசம் படைக்கப்பட்டாலன்றி போர்கள் ஒழிக்க முடியாது என்பதை நாம் அறிந்து கொண்டுள்ளோம். மேலும் உள்நாட்டுப் போர்களை அதாவது ஒடுக்கப்பட்ட வர்க்கம் ஒடுக்கும் வர்க்கத்தினை எதிர்த்து நடத்தும் போர்கள் , அடிமைகள் அடிமை உடைமையாளர்கள் எதிர்த்து நடத்தும் போர்..... ஆகிய போர்கள் முற்றிலும் முறையானவை முற்போக்கானவை தேவையானவை என்று நாம் கருதுகிறோம். ஒவ்வொரு போரினையும் அதன் வரலாற்றியல் அம்சத்திலே (மார்க்ஸ் அவர்களுடைய முரண்பாட்டியல் பொருள் முதல் வாதத்தின் நோக்கு நிலையில் இருந்து) தனித்தனியாக ஆராய்ந்து அறிய வேண்டும் என்று நாங்கள் கருதுவதில்லை. அனைத்து போர்களும் தவிர்க்க முடியாத வகையில் வரும் குரூரங்கள் கொடுமைகளும் வேதனைகளும் துயர்களும் கோரங்களும் இருந்தபோதிலும் முற்போக்காக இருந்து அதாவது மிகவும் தீங்கிழைத்து வந்த பிற்போகன ஸ்தாபனங்களை உதாரணமாக ஒரு தனி மனித தன்னிச்சையாக ஆட்சி அதிகாரத்தை ஒழிப்பதற்கு உதவி செய்த மனித குல வளர்ச்சியில் நன்மையை கொடுத்த போர்கள் கொடுங்கோன்மை ஆட்சியை ஒழிப்பதற்கு உதவிய மனித குல வளர்ச்சிக்கு உகந்த நடந்த கடந்த கால போர்கள் எடுத்து பரிசீலனை செய்ய வேண்டும் ஆராய வேண்டும்" என்கிறார்.

ஏகாதிபத்தியம் உள்ளவரை போரைத் தடுக்க முடியாது. சமூகம் வர்க்கமாக பிளவுண்டு கிடக்கும் வரை சமூகத்தில் போர் தவிர்க்க முடியாது என்கிறார் லெனின்.

இந்த போர் இன்று நடைபெற்று வரும் போர் ஒரு ஏகாதிபத்திய போர் என்பது அநேக அனைத்து இடங்களிலும் ஒப்புக்கொள்ளப்படுகின்றது. எனினும் பெரும்பாலான இடங்களில் இந்த சொல்லின் பொருள் திரிக்கப்படுகிறது.

ஏகாதிபத்திய காலகட்டத்தில் முதலாளித்துவமானது தேசியங்களை ஒடுக்கும் ஒடுக்கலின் மிகப்பெரிய ஒடுக்கல் காரனாக மாறிவிட்டது. போர் என்பது அரசியலின் தொடர்ந்த தொடரே தான் வேறு (வன்முறை) வழியில் தொடர்ந்து செல்லும் தொடர்ச்சி தான். தன் நாடு கடந்து நாடுகளை ஒடுக்குவது, கொள்ளையடிப்பது தொழிலாளி வர்க்க இயக்கத்தை நசுக்குவது இவைதான் நாம் காணும் படிப்பினைகள் இந்த போக்கு இப்பொழுதும் தொடர தான் செய்கிறது.

மேலும் மாவோ கூறுகிறார்,

"பிற்போக்காளர்களே புரட்சிகர சக்திகளுக்குப் பயப்பட வேண்டும், மறுபுறமாக அல்ல" என்றார் (ஆனால் ஏகாதிபத்தியங்கள் செய்யும் சூழ்ச்சி வலையில்

முழு இதழை வாசிக்க கீழ்காணும் இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே.

இலக்கு 78 இணைய இதழ் PDF இணையத்தில் இந்த இணைப்பில்

முரண்தர்க்க பொருள்முதல்வாதம் நூல்

 நாம்‌ சில சமயங்களில்‌ நினைப்பதைக்‌ காட்டிலும்‌அதிகமான சந்தர்ப்பங்களில்‌ நாம்‌ தத்துவ ஞானத்தின்‌ வியை நாடுகிறோம்‌ என்று தோன்றுகிறது. இது வேறெந்த முறையிலும்‌ இருக்க  முடியாது. “நிகழ்ச்சிகளை அவன்‌ கட்டுப்படுத்திஅவற்றால்‌ அவன்‌ கட்டுப்‌ படுத்தப்‌ படாமல்‌     இருக்க வேண்டுமானால்‌ஒரு சோசலிஸ்டுக்கு,ன்கு சிந்திக்கப்‌பட்டதும்‌உறுதியுடன்‌ கடைப்பிடிக்கப்‌ படுவதுமான உலகக்‌ கண்ணோட்டம்‌ தேவை! என்று லெனின்‌ எழுதினார்‌. 

மார்க்ஸீய தத்‌துவியலின்‌ அடிப்படைப்‌ (பிரச்சினைகள்‌ பற்றிய புத்தகம்‌ இது. மார்க்‌சியத்தின்‌ பொருளை இது விவரிப்பதோடு, பிற விஞ்ஞானங்களிலிருந்து இது எவ்வாறு வேறு படுகிறதென்பதையும்‌ விளக்குகிறது. தத்துவார்த்தத்தின்‌ அடிப்படைப்‌ பிரச்சினையையும்‌, பொருள்‌, தன்னுணர்வு ஆகியவற்‌றின்‌     பொருளையும்‌ இது வெளிப்படுத்துகிறது. முரண்‌ தர்க்கத்தின்‌ அடிப்படை விதிகளையும்‌, அதாவது, எண்ணியலான மாற்றங்கள்‌ பண்பிய மாற்றங்கள்‌ ஆவதையும்‌, எதிர்நிலைகளின்‌ ஐக்கியமும்‌, போராட்டமும்‌, மறுப்பின்‌ மறுப்பு ஆகியவற்றையும்பற்றிக்‌ கூறுகிறது. முரண்தர்க்க வகைகளுக்கும்‌, அறிவின்‌ தத்துவத்திற்கும்‌ உண்மையின்‌ நடைமுறையின்‌ பிரச்சினைகளுக்கும்‌ பங்கிற்கும்‌, பெருங்‌ கவனம்‌ அளிக்கப்பட்டுள்ளது.  முரண்தர்க்கப்‌ பொருள்‌ முதல்‌ வாதத்தின்‌ நடைமுறைப்‌ பலனை இதன்‌ ஆசிரியர்‌ வலியுறுத்துவதோடு, அதன்‌ விதிகள்‌, இனங்கள்‌ குறித்தும்‌ விளக்கியுள்ளார்‌. கால ஓட்டத்‌துடன்‌ எழுதப்பட்டுள்ள இந்நூல்‌, மார்க்சிய  தத்துவியலைக்‌ கற்க ஆரம்பிப்பவர்கள்‌ அனைவரும்‌ அவசியம்‌படிக்க வேண்டிய ஒரு நூலாகும்‌. 


முரண்தர்க்க பொருள்முதல்வாதம் நூல் PDF வடிவில் இந்த இணைப்பில்

“நான்‌ தத்துவஞானத்தின்‌ ஒருதலைச்‌ சார்பு 

தான் செய்ய என்ன விரும்பியதை எல்லாம்‌ முடியுமானால்‌ என்ன செய்வீர்?  என்ற தலைப்பில்‌ ஒரு கட்டுரை எழுதும்‌ படி மேற்கு ஜெர்மனியைச்‌ சேர்ந்த பள்ளிக்‌ குழந்தைகள்‌ கேட்டுக்‌ கொள்ளப்‌ பட்டார்கள்‌. அவர்கள்‌ எழுதிய விடைகள்‌ என்ன? 

“உலகில்‌ உள்ள பள்ளிக்கூடங்களை எல்லாம்‌ நான்‌ வெடிவைத்துத்‌ தகர்ப்பேன்‌”, என்று ஒரு குழந்தை எழுதியது. “நான்‌ எல்லா இடங்களிலும்‌ வெடி. குண்டுகளை வீசுவேன்‌; வீட்டிற்குத்‌ தீ வைத்து  விட்டு ஆற்றிலே குதித்து விடுவேன்‌”, என்று இன்‌னொரு குழந்தை எழுதியது. 

சோவியத்‌ பள்ளிக்‌ குழந்தைகள்‌ அதே கேள்விக்கு எழுதிய விடைகள்‌ இவைதான்‌. “முதலாளிகளாலும்‌, தொழிற்சாலை முதலாளிகளாலும்‌ அடிமைப்‌ படுத்தப்பட்ட நீக்ரோக்களை தான்‌ விடுதலை செய்வேன்‌,” என்று ஒரு குழந்தை எழுதியது, “அணு குண்டுகளையும்‌ ஹைட்ரஜன்‌ குண்டுகளையும்‌, செய்வது தான்‌ நான்‌ செய்யும்‌ முதல்‌ காரியமாக இருக்‌கும்‌,” என்று மற்றொரு குழந்தை எழுதியது.

குழந்தைகளின்‌ விடைகள்‌ இந்த அளவிற்கு வேறு படுவானேன்‌? மக்களிடத்தில்‌ வெறுப்புணர்சசியுடன்‌ வளர்க்கப்பட்டு, பூர்ஷுவா உலகக்‌ கண்ணோட்டத்தில்‌ ஊறிய குழந்தைகளின்‌ மத்தியிலிருந்து வந்தவர்‌ முன்‌னவர்‌. தங்கள்‌ தாய்நாட்டை நேசிக்கும்படியும்‌, உலகெங்கிலும்‌ சமாதானத்தை நிலைநாட்டும் படியும்‌ பள்ளிகளில்‌ போதிக்கப்பட்ட குழந்தைகளின்‌ மத்தியிலிருந்து வந்தவர்‌ இரண்டாமவர்‌. 

 கம்யூனிஸ உலகக்‌ கண்‌ ணோட்ட உணர்ச்சியுடன்‌ தங்கள்‌ குழந்தைகளை சோவியத்‌ பள்ளிகள்‌ வளர்க்கின்றன. வாழ்க்கையின்‌ பொருள்‌ என்ன?, மகிழ்ச்சி என்பது என்ன?, என்பன போன்ற கேள்விகளுக்கு சோசலிஸ சமூகத்திலும்‌ , பூர்ஷுவா சமூகத்திலும்‌  விடைகள்‌  கிடைக்கின்றன. அவை வெவ்வேறானவை  ஆம் வெவ்வேறு சமூக அமைப்பு. சமூகத்தில் நிலவும் கருத்துகள் ஆளும் வர்க்க கருத்துகளே என்ற ஆசான்களின் வழி மொழிதலை புரிந்துக் கொள்ளாதவர்கள் கம்யூனிஸ்டுகளா?

நாம் வாழும் வர்க்க சமூகத்தில் இவ்விதமாகப்‌ பிரச்சினைக்கு இரண்டு அணுகல்‌ முறைகள்‌ இருப்பதை காணலாம். பூர்ஷ்வா கண்ணோட்டம்‌,             பாட்‌ டாளி வர்க்கக்‌ கண்ணோட்டம்‌ என்ற இரு உலகக்‌ கண்‌ ணோட்டங்கள்‌ இருப்பதை நாம்‌ மீண்டும்‌ காண்கிறோம்‌. சமுகம்‌ வர்க்கங்களாகப்‌ பிரிக்கப்பட்‌ டிருந்தால்‌,  எந்தப்‌ பொதுவானதொரு உலகக்‌ கண்‌ணோட்டமும்‌ இருக்க முடியாது, ஒரு வர்க்கத்திற்கு ஒரு தத்துவஞானமும்‌, மற்றொன்‌றிற்கு வேறொரு தத்துவ ஞானமும்‌ உள்ளன. இது புரிந்து கொள்ளக்கூடியதே. பாட்டாளிகள்‌, உழைக்கும்‌ மக்கள்‌ இவர்களது வாழ்க்‌கையும்‌, அந்தஸ்தும்‌, பூர்ஷுவாக்கள்‌, சுரண்டுபவர்கள்‌ இவர்களது வாழ்க்கையிலிருக்தும்‌, அந்தஸ்‌திலிருக்தும்‌ உலகில்‌ வேறுபடுகின்றன. நடைபெறும்‌ நிகழ்ச்சிகளுக்கு அவர்கள்‌ வெவ்வேறு வழிகளில்‌ மறுவினைபுரிகிறார்கள்‌. ஒவ்வொரு வர்க்கமும்‌ தனக்கே உரித்தான வழியில்‌ அவற்றைப்‌ புரிந்து கொள்கின்றது. எனவே அவர்கள்‌ தங்கள்‌ உலகக்‌ கண்ணோட்டத்தில்‌, அல்லது  தத்துவஞானத்தில்‌ வேறுபடுகிறார்கள்‌. பாட்டாளி வர்க்‌க தத்துவமும்   பூர்ஷுவா தத்துவ ஞானத்திலிருந்து வேறுபட்டது. 

 வர்க்கத்தின்‌ நடுநிலைத்‌ தத்துவ ஞானம்‌ என்று, அதாவது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்திற்குத்‌ தொண்டு செய்யாத தத்துவ ஞானம்‌ என்று, ஒன்றுமே இல்லை. லெனின்‌ போதித்தது போல, தத்‌துவஞானம்‌ எப்‌பொழுதும்‌ ஒருதலைச்‌ சார்புடையதுதான்‌. அதாவது அது ஒருதலைச்‌ சார்பான, வர்க்க நலன்களைப்‌ பா துகாக்‌ கிறது. எனவே ஒவ்வொரு வரலாற்றுக்‌ காலத்திலும்‌ தத்துவஞானத்தில்‌ போட்டியிடும்‌ இரண்டு கட்சிகள்‌ இருப்பதைக்‌ காண்கிறோம்‌.

இலக்கு இணைய இதழ் 77

 தோழர்களுக்கு வணக்கம், 

இந்த இதழில் நாம் செய்ய வேண்டியதை மார்க்சிய ஆசான்கள் செய்தவையில்

இருந்து தேர்ந்தெடுத்து எழுதிக் கொண்டும் அதில் குறிப்பான சில பகுதிகள்

இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை
1).ஆசிரியர் பகுதி

2)முதலாளியப் புரட்சிக்கும் சோசலிசப் புரட்சிக்கும் இடையிலான உறவு குறித்து. பாகம் 1

3).மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை. ஜார்ஜ் தாம்ஸன். பாகம் - 3

2. வர்க்கப் போராட்டத்தை தொடர்ந்து நடத்துதல்.

மார்க்சியம் வெல்வதற்கரிய ஓர் உலகத் தத்துவம். அவை மானுட சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளை ஆழ்ந்து ஆராய்ந்து விளக்கி சுரண்டலில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறையை நம் முன் வைத்துள்ளது. அதற்கான கண்ணோட்டமும் தத்துவமும் மார்க்சியம்தான் அல்லவா?. மார்க்சியம் உழைக்கும் மக்கள் எல்லோருக்குமான வழிகாட்டும் தத்துவமென்றால் இங்கு கம்யூனிஸ்டுகள் பல்வேறு கட்சிகளாவும், அமைப்புகளாகவும், குழுக்களாகவும் மற்றும் தனிநபர்களாகவும் பிளவுபட்டுள்ளோம். ஏன்? இந்த அவலம் ஏன்? என்று கேள்வி எழுப்புவதோடு மார்க்சிய ஆசான்கள் சொன்னவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் எப்படி மார்க்சியவாதியாக கம்யூனிஸ்டாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? அதனைப் பற்றி தேடுவதோடு இங்கே உள்ள பல போக்குகளை ஆராய்வது அவசியம் ஆகும்.

அன்றைய சோசலிச நாடுகளின் சாதனைகள் சில கீழ்கண்டவாறு.....

1). இலவச கல்வி, இலவச மருத்துவம் அனைத்து மக்களுக்கும் கிடைத்தது.

2). வயது வந்தோர் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது.

3). பொது சமையல் கூடம், குழந்தை பராமறிப்பு முதியோர் பராமறிப்பு பெண்கள் வீட்டு சமையல் கூடத்திலிருந்து வெளியேறி சமூக உற்பத்தியில் ஈடுபடல். போன்றவற்றின் மூலம் பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்தது.

4). கூட்டுபண்ணையும், பொதுத் தொழிற் கூடம், மூலம் தனிசொத்துடமை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

5). பெருமுதலாளிகளுக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மக்களின் உடமையாக்கப்பட்டது.

இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம் இத்தகைய சாதனையை உலகில் எந்த நாட்டிலும், எந்த ஆட்சியாளர்களும் இதனை இன்றுவரை சாதித்ததில்லை. ஆனால் உலகம் முழுவதிலுமுள்ள பிற்போக்கு அரசியல்வாதிகள் சோசலிசத்தை தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் ஒரு கொடுமை என்னவென்றால் தன்னை கம்யூனிஸ்டு என்று சொல்லிக்கொள்பவர்கள் சோசலிச கொள்கையையும் அதன் பலன்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்வதே இல்லை. ஒருசில அமைப்புகள் சோசலிசத்தைப் பேசினாலும் சோசலிசத்தை அடைவதற்கான மார்க்சிய வழிமுறையைப் பின்பற்றுவதில்லை. மாறாக தொழிற்சங்கவாத முறையையே பின்பற்றுகிறார்கள். சோசலிசப் புரட்சிக்காக மக்களுக்கு உணர்வூட்டி திரட்டுவதில்லை.

கம்யூனிஸ்டுகள் செய்யும் தவறுகளை மக்களிடம் வெளிப்படையாக ஒத்துக் கொள்ள வேண்டும் என்றார் லெனின். ஆனால் இங்கேயுள்ள தலைவர்கள் அதிகமாக தவறுகள்தான் செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் செய்யும் தவறுகளை ஒத்துக்கொள்வதே இல்லை, மாறாக தொடர்ந்து மூடிமறைக்கிறார்கள் மேலும் தனது தவறை மறைக்க பிறர்மீது குற்றம் சாட்டுகிறார்கள்.இவர்கள்போராடுவதற்கு தயாரில்லாத உண்மையை மறைத்து விட்டு மக்கள் போராடத்தயாரில்லை என்று மக்களின் மீதே குற்றம் சாட்டுகிறார்கள். அன்றைய லெனினிஸ்டுகள் தங்களது குற்றங்களை ஒத்துக்கொண்டதோடு அவர்களது குறைகளை சரிசெய்வதற்கு விருப்பு வெறுப்பின்றி பரிசீலனை செய்து குறைகளை களைந்தார்கள். அதன் பயனாகவே அவர்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்று மக்களைத் திரட்டி வெற்றிகொள்ள முடிந்தது. ஆனால் இங்குள்ள கம்யூனிஸ்டுகள் செய்யும் தவறுகளை புரிந்துகொள்வதும் இல்லை, பிறர் குறைகளை சுட்டிக்காட்டினாலும் அதனை பரிசீலிப்பதில்லை மாறாக குறைகளை சுட்டிக் காட்டுபவர்கள் மீது அவதூறு செய்வது, குறைகளை களைவதற்கு எவ்விதமான முயற்சியும் எடுக்காமல் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

வர்க்கப் போராட்டத்தை நாம் எப்படி நடத்துவது என்பதை குறிப்பாக வர்க்க ஆய்வுகளின் அடிப்படையிலேயேதான் நாம் நடத்த வேண்டும். வர்க்கப் போராட்டம் என்றால் பொருளாதாரப் போராட்டம், அரசியல் போராட்டம், சித்தாந்தப் போராட்டம் என்ற மூன்றையும் உள்ளடக்கியப் போராட்டம் ஆகும். ஆகவே நாம் வர்க்கப் போராட்டத்தை நடத்துவதற்கு நடைமுறையிலுள்ள பொருளாதார உற்பத்தியைப் பற்றி ஆய்வு செய்து மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கான பொருளாதாரத்தை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். அத்தகைய பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக மக்களை திரட்ட வேண்டும். அந்தக் கட்டத்தில் நிலவுகின்ற புரட்சிகரமான வர்க்கங்களைப் பற்றி ஆய்வு செய்து புரிந்துகொண்டு அந்த புரட்சிகரமான வர்க்கங்களைக் கொண்ட அரசை நாம் உருவாக்க வேண்டும். இப்பிரச்சனைகள் தொடர்பான பல்வேறுவிதமான கருத்துக்களுக்கு இடையில் விவாதங்கள் நடத்தி, மார்க்சிய கண்ணோட்டத்தி லிருந்து சரியான கொள்கைகள், நடைமுறைகளை முடிவு செய்து மக்களுக்கு பயிற்சியளிக்க வேண்டும். இந்த முறையில்தான் நாம் வர்க்கங்களை ஒழிக்கும்வரை வர்க்கப் போராட்டத்தை தொடர வேண்டும். ஆனால் திருத்தல்வாதிகளும் மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களும் வர்க்கங்கள்இருக்கும்வரை வர்க்கப் போராட்டம் நடத்தப்பட வேண்டும் என்ற மார்க்சிய கொள்கையின் முக்கியத்துவத்தை மூடிமறைத்துவிட்டு சாதிப் போராட்டம், மதப் போராட்டம் பெண்ணடிமைக்கான போராட்டம் தேசிய இன விடுதலைப் போராட்டம் என்று தனித்தனியான போராட்டம் பற்றி பேசி வர்க்கப் போராட்டத்தின் அவசியத்திலிருந்து மக்களை திசைதிருப்புகிறார்கள். இவர்கள் சொல்லும் ஒவ்வொரு போராட்டங்களும் வர்க்கப் போராட்டத்துக் குள்ளேயே அடங்கியிருக்கிறது என்பதை இவர்கள் பார்க்க மறுக்கிறார்கள், அல்லது மூடிமறைக்கிறார்கள். இவர்கள் சொல்லும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்குப் பின்னால் சுரண்டல் நோக்கமே உள்ளது. சுரண்டும் நோக்கத்தின் அடிப்படையிலேயே இங்கு சாதி, மத, இன, பெண் மற்றும் தேசிய இனங்களின் அடிமைத்தனமும் ஒடுக்குமுறையும் இங்கு நிலவுகிறது. இந்த சுரண்டல்முறையை ஒழிக்காமல் சாதி மதம் இனம் பெண் தேசிய இனம் போன்ற பிரச்சனைகள் தீராது. சுரண்டலை ஒழிப்பதன் மூலமே அனைத்துவகையான பிரச்சனைகளும் தீரும் என்பது ஒரு சமூக விஞ்ஞானக் கோட்பாடாகும். ஆனால் இந்த சுரண்டல்முறையானது ஒரேஅடியில் தீர்ந்துவிடாது இடைவிடாத தொடர்ந்த போராட்டம் அதற்கு அவசியமாகும். அதற்கு வர்க்கங்களைப் பற்றியும் வர்க்கப் போராட்டங்களைப் பற்றியும் தொடர்ந்து ஆய்வு செய்து அவ்வப்போது முடிவுசெய்து செயல்படுவதைத் தவிர வேறு வழியில்லை.

முழு இதழ் வாசிக்க கீழ் காணும் இணைப்பில் செல்க தோழர்களே.

இலக்கு இணைய இதழ் 77 PDF வடிவில் 


இன்றைய கம்யூனிஸ்டுகள் சிந்திப்பார்களா!?

தோழர்களுக்கு வணக்கம்,
சிலர் ஏன் குறைக்கூறிக் கொண்டே உள்ளீர் நடைமுறையில் ஈடுபடுவதில்லை தத்துவம் பேசி என்ன பயன் சமூகம் சீரழிந்துவிட்ட பின்னர்நீங்கள் என்ன செய்வீர்? என்று ஆதங்க படுகின்றனர்.


உண்மையில் நாம் வாழும் சமூக நடைமுறையில் உள்ள கண்ணோட்டங்களை புரிந்துக் கொள்ள வேண்டும் அதனிலிருந்து நமக்கான நடைமுறை தந்திரத்தை வகுத்து செயல்பட வேண்டும் அப்படிதானே இங்குள்ள ஒவ்வொருவரும் செயல்பட்டுக் கொண்டுள்ளனர். அவர்களின் வெற்றி தோல்வியை ஆராய்ந்து சரியான வழிமுறையில் நாம் நடைபோடுவதுதானே சரியாக இருக்கும் அதனை விடுத்து இங்கே இருப்பவர்கள் போல் ஏன் நீங்கள் செயல்படவில்லை என்பது சரியா?

இங்குள்ள கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளாக இல்லாமலிருப்பதற்கு என்ன காரணம் என்பதை நாம் தெரிந்துகொள்ள, நமது மார்க்சிய ஆசான்களது போதனைகளை கற்றுக்கொண்டு நமது நடைமுறைப் பணியில் ஈடுபடவேண்டும் என்பதை உணர்த்திடவே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

21ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலேயே மார்க்சிய லெனினியம் ஒரு உயிர் துடிப்புள்ள நடைமுறைக்கான தத்துவம் என்பதை நிலைநாட்டி விட்டது. ரஷ்ய புரட்சியின் ஊடாக மார்க்சியம் எனும் தத்துவத்தை நடைமுறைக்கான வழிகாட்டியாக கொண்டு லெனின் தன் நாட்டில் சுரண்டல் முறைக்கு முடிவு கட்டி அதற்கான கட்சி கட்டி புரட்சி நடத்தி உலகிற்கு அந்த வெளிச்சம் ஓர் புதிய கலங்கரை விளக்காக ஒளிக்கத் தொடங்கியது.

மார்க்சின் காலம், முதலாளித்துவ ஆரம்பவ வடிவம் இயந்திர வகைப்பட்ட உற்பத்திமுறையாக இருந்தது; லெனினிது காலம் முதலாளித்துவம் ஏகபோகமாக வளர்ந்து, ஏகாதிபத்தியமாக மாறி பல்வேறு துறைகளில் கால் பதித்தது. குறிப்பாக மின்சாரம் தொடங்கி மின்னணுயுகம் வரை வளர்தோங்கியுள்ளது. இன்று விஞ்ஞானமானது பல்வேறு துறையில் மிக வேகமாக புதியபுதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டுள்ளதும், நவீன பொது விஞ்ஞானம் சமூக தேவையை ஒட்டித்தான் முன்னேறிக் கொண்டுள்ளது. சமூக விஞ்ஞானமான மார்க்சிய தத்துவமும் அதற்கேற்ற வகையில் பல்வேறு முன்னேற்றங்களை கண்டிருந்தாலும் இன்றைய ஏகாதிபத்திய சதியால் மார்க்சிய வாதிகளுக்குள் பல்வேறு விதமான விவாதங்களும், விளக்க உரைகளும், திருத்தங்களும் செய்து மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாடுகளையே நீர்த்துப்போகச் செய்யும் அளவிற்கு பல்வேறு சதி வேலைகளில் மார்க்சிய அமைப்புக்குள்ளேயே உள்ள குட்டிமுதலாளிய சந்தர்ப்பவாதிகள் ஈடுபட்டுக்கொண்டுள்ளார்கள் இவையும் ஆளும் சுரண்டல் வர்க்கம் நீடிக்க செய்யும் சதியே.

ஏகாதிபத்திய சரக்குகளான (கருத்துக்களை) பின் நவீனத்துவம், மண்ணுகேற்ற மார்க்சியம், அடையாள அரசியல், புதிய இடதுகள் இதுபோன்ற இன்னும் சில மயக்கங்களும், சுணக்கங்களும் கம்யூனிஸ்டுகள் மத்தியில் நிலவவே செய்கிறது. அதனைத் தெளிவுபடுத்தி; மார்க்சியத்தின் அடிப்படைத் தத்துவங்களை மீண்டும் மீண்டும் பல்வேறு முறைகளில் பல்வேறு வடிவங்களில் பேச வேண்டும், எழுத வேண்டும், கற்க வேண்டும், கடை கோடி மனிதனுக்கும் விஞ்ஞான அடிப்படையில் சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும் வகையில் மார்க்சியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதுதான் மார்க்சியத்தை நேசிப்பவரின் முதன்மையான கடமையாக தற்போது உள்ளது. மார்க்சியத்திற்கு புகழாரம் சூட்டுவோர் தேவையில்லை. அதை நடைமுறை படுத்துவதற்கு உண்மையான மார்க்சிய சிந்தனையாளர்கள்தான் தேவை. அந்த மார்க்சியவாதிகள் தான் இங்குள்ள ஒடுக்குமுறையையும் சுரண்டல் முறையையும் ஒழித்துக் கட்டி எவ்வித சுரண்டல் இல்லா ஒரு சமூகத்தை நோக்கி மக்களை கொண்டு செல்வார்கள்.

மார்சியம் வெல்வதற்கரிய ஓர் உலகத் தத்துவம். அவை மானுட சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகளை ஆழ்ந்து ஆராய்ந்து விளக்கி சுரண்டலில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறையை நம் முன் வைத்துள்ளது. அதற்கான கண்ணோட்டமும் தத்துவமும் மார்க்சியம்தான் அல்லவா?. மார்க்சியம் உழைக்கும் மக்கள் எல்லோருக்குமான வழிகாட்டும் தத்துவமென்றால் இங்கு கம்யூனிஸ்டுகள் பல்வேறு கட்சிகளாவும், அமைப்புகளாகவும், குழுக்களாகவும் மற்றும் தனிநபர்களாகவும் பிளவுபட்டுள்ளோம். ஏன்? இந்த அவலம் ஏன்? என்று கேள்வி எழுப்புவதோடு மார்க்சிய ஆசான்கள் சொன்னவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்ளாதவர்கள் எப்படி மார்க்சியவாதியாக கம்யூனிஸ்டாக இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா? அதனைப் பற்றி தேடுவதோடு இங்கே உள்ள பல போக்குகளை ஆராய்வது அவசியம் ஆகும்.

ரஷ்ய சோசலிசப்புரட்சியின் தாக்கம் உலக நாடுகளில் பரவியது, அதன்காரணமாக ஏகாதிபத்திய சுரண்டல் மற்றும் ஆதிக்கம் சற்று தளர்ந்தது. ஆனாலும் ஏகாதிபத்தியங்கள் குள்ளநரிதனமான வேலையில் ஈடுபட்டது. சோசலிச நாடுகளின் உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிட்டு உள் நாட்டு கலவரங்களைத் தூண்டியது. சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் அதுவரை தங்களை முற்போக்காக காட்டிக் கொண்டிருந்த பல்வேறு ஆளும் வர்க்க சக்திகள், தங்களின் சுரண்டலின் கோரமுகத்தை காட்ட தொடங்கினர். அதேபோன்று சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் மார்க்சியம் பற்றி பல்வேறு விதமான ஐயங்களும் கேள்விகளும் மார்க்சிய இயக்கத்துக்குள்ளேயே எழுப்பப்பட்டது. மார்க்சியத்தை மறுக்கும் மார்க்சிய விரோதமான பல்வேறு எழுத்துக்களும் நூல்களும், விவாதங்களும் தொடரப்பட்டு இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் விளைவாய் மார்க்சியத்தையே ஆளுக்கொரு வகையில் பேசும் அளவிற்கு இன்று மார்க்சித்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளார்கள். மார்க்சியத்தை மறுக்கும் ஆளும் வர்க்க கூட்டம் மார்க்சியவாதிகளாக தங்களைக் காட்டிக்கொண்டு வலம் வருகிறார்கள். பல்வேறு முற்போக்கு மற்றும் மார்க்சிய புரட்சிகர பெயர்களிலும் மார்க்சிய எதிரப்பாளர்கள் உள்ளார்கள், இவர்கள் மார்க்சியவாதியாக தங்களைக் காட்டிக்கொண்டு நடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஏன் ஏகாதிபத்தியம் சோசலிசத்தை கண்டு நடுநடுங்குகிறது என்றால் அன்றை குறுகிய காலத்தில் ஏழை எளிய உழைக்கும் மக்களுக்கு ரஷ்ய சோசலிச சோவியத் அரசும் சரி உலகில் தோன்றிய பல்வேறு நாட்டு சோசலிச கட்டுமாணமானது முதலாளித்துவ நாடுகள் இதுவரை செய்யாத மிகப்பெரிய சாதனைகளை செய்து காட்டியது. ஆகவே உலக மக்கள் சோசலிச ஆட்சியை விரும்பினார்கள். எனவே ஏகாதிபத்தியவாதிகளின் நாட்டிலும் மக்கள் சோசலிசப் புரட்சியை நடத்தி அவர்களது ஆட்சியை தூக்கியெறிந்துவிடுவார்கள் என்றே ஏகாதிபத்தியவாதிகள் சோசலிசத்தைக் கண்டு அஞ்சினார்கள். அன்றைய சோசலிச நாடுகளின் சாதனைகள் கீழ்கண்டவாறு.....

1). இலவச கல்வி, இலவச மருத்துவம் அனைத்து மக்களுக்கும் கிடைத்தது.

2). வயது வந்தோர் அனைவருக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது.

3). பொது சமையல் கூடம், குழந்தை பராமறிப்பு முதியோர் பராமறிப்பு பெண்கள் வீட்டு சமையல் கூடத்திலிருந்து வெளியேறி சமூக உற்பத்தியில் ஈடுபடல். போன்றவற்றின் மூலம் பெண்ணடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்தது.

4). கூட்டுபண்ணையும், பொதுத் தொழிற் கூடம், மூலம் தனிசொத்துடமை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

5). பெருமுதலாளிகளுக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மக்களின் உடமையாக்கப்பட்டது.

இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம் இத்தகைய சாதனையை உலகில் எந்த நாட்டிலும், எந்த ஆட்சியாளர்களும் இதனை இன்றுவரை சாதித்ததில்லை. ஆனால் உலகம் முழுவதிலுமுள்ள பிற்போக்கு அரசியல்வாதிகள் சோசலிசத்தை தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் ஒரு கொடுமை என்னவென்றால் தன்னை கம்யூனிஸ்டு என்று சொல்லிக்கொள்பவர்கள் சோசலிச கொள்கையையும் அதன் பலன்களையும் மக்களிடம் எடுத்துச் சொல்வதே இல்லை. ஒருசில அமைப்புகள் சோசலிசத்தைப் பேசினாலும் சோசலிசத்தை அடைவதற்கான மார்க்சிய வழிமுறையைப் பின்பற்றுவதில்லை. மாறாக தொழிற்சங்கவாத முறையையே பின்பற்றுகிறார்கள். சோசலிசப் புரட்சிக்காக மக்களுக்கு உணர்வூட்டி திரட்டுவதில்லை.

1924ஆம் ஆண்டு ரஷ்ய சோவியத்து அரசு அங்குள்ள தேசிய இனங்களுக்கு பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தேசிய சுயநிர்ணய உரிமைக்கான சட்டத்தைக் கொண்டு வந்து அங்கு நிலவிய தேசிய இனச்சிக்கலுக்கு தீர்வு கண்டது. 1988 ஆம் ஆண்டுவரை அங்குள்ள தேசிய இனங்கள் ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் சேர்ந்தே வாழ்ந்து வந்தனர். கோர்பர்ஷேவின் கலைப்புவாத ஆட்சிக்குப் பிறகே கலைப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்தின் விளைவாக ரஷ்யாவிலுள்ள தேசியஇனங்கள் பிரிந்து சென்றன. தேசிய இனங்களின் மீதான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறையை எதிர்த்தப் போராட்டத்தின்போதே பிரிவினைக் கோரிக்கை எழுகிறது. ரஷ்யாவில் சோசலிசம் முழுமையாக கைவிடப்பட்டு கோர்பச்சேவின் சமூக ஜனநாயக ஆட்சியில் சுரண்டலும் ஒடுக்குமுறையும் தோன்றியதன் விளைவே அங்கு பிரிவினை உணர்வு தோன்றி அங்கு இருந்த சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி தேசிய இனங்கள் சோவியத்திலிருந்து பிரிந்துசென்றன. ஆகவே தேசிய இனச் சிக்கலுக்கு சரியான தீர்வான தேசிய சுயநிர்ணய உரிமை என்ற கொள்கையும் சுரண்டல் ஒழிப்பு கொள்கையையும் மார்க்சிய லெனினியம் முன்வைக்கிறது. இதனை இங்குள்ள பல இயக்கங்கள் புரிந்துக் கொள்ளாததன் வெளிபாடே இங்கு பேசும் தேசிய இனம் பிரச்சினை பற்றி பேசுவோர் நிலைப்பாடு.

இன்று நாம் வாழும் வர்க்க சமூகத்தில் தோன்றியுள்ள பல்வேறு முரண்பாடுகள் அதற்கான தீர்வையும் தேட சமூக விஞ்ஞாமான மார்க்சிய அறிவு வேண்டும். அவை நூல் வாசிபதனால் மட்டுமல்ல சமூக இயக்கத்தை அதன் ஒவ்வொரு அசைவையும் புரிந்து களமாட மார்க்சிய தத்துவ அறிவும் வேண்டும்.

மார்க்ஸ் எங்கெல்ஸ் தோற்றிவித்த தத்துவ போதனையை நடைமுறையாக்கிவர் லெனின். அவர் தன் நாட்டிற்கு மட்டுமல்லாது உலகிற்கு பாட்டாளி வர்க்க கட்சி மற்றும் புரட்சி பற்றி மிகத் தெளிவாக வழிகாட்டியுள்ளார். அவர் பாட்டாளி வர்க்க கட்சி கட்டி ரஷ்யாவில் புரட்சி நடத்தினார். அந்த அனுபவத்தின் அடிப்படையைத்தான் உலகில் பல நாடுகள் பின்பற்றி அவர்களது நாட்டில் புரட்சி நடத்தி வெற்றிகண்டார்கள். ஆனாலும் புரட்சி நடத்தி வெற்றிகண்டவர்கள், புரட்சிக்குப் பிறகு முன் அனுபவம் இன்மை மற்றும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைப் பயன்படுதுவதில் அச்சமூக நிலைமைகளை கட்டுக்குள் வைதுக்கொள்வதில் ஏற்பட்ட தவறுகளின் காரணமாக பின்னடைவு ஏற்பட்டு சோசலிசம் தற்காலியகமாக தோல்வி கண்டது. இது இறுதியான தோல்வியில்லை. இந்தத் தோல்விக்குப் பின்பு அதிகாரத்துக்கு வந்த திருத்தல்வாத குருஷேவ் கும்பல் சமாதான முறையில் சமூகத்தை மாற்ற முடியும், புரட்சி எதுவும் தேவையில்லை என்ற திருத்தல்வாதக் கொள்கையை முன்வைத்து உலகம் முழுவதிலுமுள்ள மார்க்சிய லெனினியக் கட்சிகளை திருத்தல்வாதக் கட்சிகளாக மாற்றியதையே பின்பற்றி பாட்டாளி வர்க்கத்துக்கு இன்றுவரை துரோகம் செய்துவருகின்றனர். இந்த இழிவான நிலையை மாற்றிட நாம் மார்க்சிய ஆசான்களிடம் கற்று தெளிவடைய வேண்டி இருக்கிறோம் தோழர்களே.

இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.(கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து). இந்த ஆசான்களின் இடிமுழக்கம் புரட்சிக்கான கட்சியையையும் புரட்சிக்கான தயாரிப்புகளையும் கோருகிறது ஆனால் இங்கு ஆளுக்கொரு குழுவையும் ஆளுக்கொரு கண்ணோட்டத்தையும் கொண்டுள்ளவர்கள் புரட்சியை நடத்த மக்களை திரட்ட ஓரணியில் இணைய வேண்டும் என்பதனை அறியதவரகள் அல்ல... அவர்களை அகம் புறம் அறிந்து செயலாற்ற மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டல் கூவி அழைக்கின்றது, உழைக்கும் மக்களின் எதிரிகளுக்கெதிரான போரில் உழைக்கும் மக்கள் சார்பானவர்கள் ஒன்றிணைந்தால் வானமும் வசப்படும்...

புரட்சிக்கான கட்சியும் அதற்கான தயாரிப்பும் கம்யூனிஸ்டுகள் முன் உள்ள நீண்ட நெடிய பணி அதனை செய்யாத குறுங்குழுகளும் தாங்கள் கட்சி என்று அழைத்துக் கொள்ளும் கட்சிகளும் ஏதோவகையில் ஆளும் வர்க்க ஆட்சியை அதன் சுரண்டலை நீட்டிக்க செய்ய துணை போகின்றது எனலாம். ஏனெனில் அவை தங்களுக்கான பணியை செய்யாத பொழுது எதற்காக இங்கே உள்ளது என்பது கேள்விதானே பதிலளிப்பார்களா?

தோழமையுடன் இலக்கு ஆசிரியர் குழு

தோழர்களேநாங்கள் நடைமுறையில் இருக்கிறோம் என்பவர்களே!!!

ரசியாவில் மார்க்சிய தத்துவத்தை நடைமுறை படுத்தியவர் லெனின். மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் போல்ஷ்விக் கட்சியை கட்டி மார்க்சிய தத்துவத்தினை நடைமுறையாக்கி புரட்சியை சாதித்தார் லெனின்.

சீனாவில் மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் வழிகாட்டிய தத்துவத்தின் அடிப்படையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறையில்தான் நாட்டின் புரட்சியின் ஊடாக செஞ்சீனமாக்கினார் மாவோ .

ஆக அங்கே மார்க்சிய தத்துவத்தை நடைமுறையில் அவர்கள் புரட்சியை சாதித்தனர்ஆனால் இங்கு மார்க்சிய லெனினிய தத்துவத்தை நடைமுறையில் இருக்கிறது என்றால் ஆளும் வர்க்க செயலுக்கு வால் பிடிக்கும் நோக்கம் என்ன? 

வர்க்க சமூகத்தில் வர்க்கம் அல்லாதவை எவையும் இல்லை எனும் பொழுது அண்மையில் போர் பதட்டத்தில்  வர்க்க அடிப்படையில் வர்க்கம் ஏன் ஏகாதிபத்தியம் உள்ளவரை போர் தவிர்க்க முடியாதவை என்ற லெனின் வார்த்தையின் புரிதல் இல்லையோ?

தத்துவமும் நடைமுறையும் என்ற இடத்தில் தத்துவத்தை நடைமுறையோடு உரசி பார்க்க வேண்டும் என்பதே நமது மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதல்.

இங்கே தத்துவம் இல்லாத எந்த நடைமுறையும் இல்லை அப்படியெனும் பொழுது பல போக்கில் ஏன் உள்ளனர் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?

அப்படியெனும் பொழுது இங்கு நடைமுறையில் உள்ள தத்துவங்களும் இங்குள்ள கருத்துகளும் ஆளும் வர்க்கத்து தத்துவங்களே அது மக்களுக்கான விடுதலைக்கானவை அல்ல.

மேலும் இவை இங்குள்ள அமைப்பு முறையை கட்டி காப்பதற்கான வழிமுறையை போதிப்பதோடு சுரண்டப்படும் மக்களை ஒடுக்கவும் அடக்கவும் சில நேரங்களில் சில சலுகைகள் மூலம் மக்கள் கொந்தளிப்பை மட்டுபடுத்தவும் செய்யும் சீர்திருத்தம் சில சட்டங்கள் என்ற பெயரில் காட்டும் கரிசனம்தான்.

இவை மக்களுக்கு விடுதலை தவிர மற்ற எல்லா ஆன்மீகவாதிகளை போல போதனை தருகிறது இந்த அனைத்து முறைகளையும் அடங்கி ஒடுங்கி அவர்கள் கொடுக்கும் சன்மானம் பெற்றுக் கொண்டு வளமாக வாழ போதிக்கிறதுஇதனைதான் நமது தோழர்கள் மேன்மையானது என்கின்றனர் அவைதான் அவர்களின் நடைமுறையாகவும் உள்ளது.

இந்த இடத்தில் மார்க்சியம் இந்த எல்லா ஒடுக்குமுறை சுரண்டல்முறைக்கு காரணமான சமூகத்தை சமூகத்தை மாற்றி அமைக்க சொல்கிறது அதற்கு தேவை புரட்சி அப்படியெனும் பொழுது புரட்சிக்கான திட்டமும் அதை நடைமுறைப்படுத்த கட்சியும் வேண்டும்.

அப்படியென்றால் இங்கு கட்சி இல்லையா என்பீர்?

இருக்கிறது அதன் செயல்பாடுகள் மார்க்சிய வகைபட்ட புரட்சியை நோக்கியதாக செயலில் உள்ளதா என்பதுதான் கேள்வியாக உள்ளதுபின்னர் விவாதிப்போம் தற்போது அந்த விவாதம் வேண்டாம்.

தத்துவம் நடைமுறை என்ற இடத்தில் இங்கு பலரும் நாங்கள் நடைமுறையில் உள்ளோம் என்கின்றனர்.

ஆனால் அவர்கள் எந்த தத்துவத்தின் அடிப்படையில் நடைமுறையில் உள்ளார்கள் அப்படி என்னும் பொழுது இதற்கான மூலத்தை அறிய வேண்டும் அல்லவா?

மார்க்சியத்திற்கு முந்தைய தத்துவங்கள் எல்லாம் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை பேசியது மார்க்சியம் மட்டும்தான் பிரச்சனைக்கான காரணத்தையும் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிவகை கூறியது எல்லா தத்துவங்களும் உள்ள அமைப்பு முறையை அதை தக்கவைத்துக் கொள்ள விரும்பியது மார்க்சியம் இந்த அமைப்பு முறைதான் இந்த பிரச்சினைகளுக்கான காரணம் இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்அதற்கான வழிவகையை கூறினர் அதன் அடிவொற்றி ரசிய சீன புரட்சி நடந்தது உலக நாடுகளில் பல நாடுகளில் புரட்சி நடந்தேறியது இன்று அவை நமக்கான படிப்பினைகள்தான்...

அதனை பற்றி பார்க்கும் முன் நமது நாட்டில் நடந்த சில போராட்டங்கள் எப்படி சமூக மாற்றதிற்கான அடிதளத்தை இட்டது, இருந்தும் வெற்றி பெறாமைக்குள்ள காரணிகளை பேச வரவில்லை அவர்களின் பணி, பாணி மக்கள் மத்தியில் செயலாற்றியது மக்களை ஒன்றினைய செய்தது அல்லவாஅவை பற்றி சிறிது பார்ப்போம்.

தமிழகத்தில் தோன்றிய தஞ்சை விவசாயிகள் போராட்டமாகட்டும் அதற்கு பிறகான தெலுங்கான போராட்டமாகட்டும் ஏன் நக்சல்பாரி போராட்டம் இப்படி சில போராட்டங்களை கணக்கில் எடுத்துக் கொள்வோம்.

தஞ்சையில் நடந்த போராட்டமானது உழைக்கும் எல்லா குறிப்பாக கூலி விவசாயிகளை உள்ளடக்கி அன்றைய போராட்டமாக இருந்ததுஅந்த உழைக்கும் மக்களின் கொடுமைக்கு காரணமானவர்களை அடையாளப் படுத்தியதோடு எதிரிக்கு எதிராக களம் கண்டது. அந்தப் போராட்டம் உழைக்கும் ஏழை எளிய மக்களை அவை ஒருங்கிணைக்க வழிவகை செய்தது மக்கள் அணி திரண்டார்கள்... அதன் வழிவந்த கட்சியானது அந்தப் போராட்ட வடிவத்தை கைவிட்டதன் அதன் பின் நடந்தேறியவை அறிந்ததே.

இன்று அந்தப் போராட்டத்தை சாதிய போராட்டமாக சித்தரிக்கப்படும் அளவு இங்குள்ளோர் சீர் கெட்டுவிட்டனர்இவற்றுக்கான வரலாறு பிறகு பார்ப்போம்.

அடுத்து தெலுங்கானா போராட்டம் அன்று கொடுங்கோன்மைக்கு எதிராக நிலமற்ற கூலி விவசாயிகள் பண்ணை அடிமைத்தனமும் பண்ணையார் களுக்கு எதிராக ஒன்று திரண்டு அந்தக் கட்டுதளைகளை உடைத்து விடுதலைக்கான பாதையை அமைத்து நடை போட தொடங்கினார்கள்.

அன்றைய வரலாறு நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். அன்று நிலைமற்ற கூலி விவசாயிகளுக்கு நிலம் பகிர்ந்து அளிக்கப்பட்டது, 1952 க்கு பின்னான வரலாறு தேவையில்லை... அதனை இன்றைய சில NGOகள் குறிப்பிடுகின்றனர் "சாதி போராட்டமாக சுருக்குகிறார்கள்என்னே சொல்ல?

அடுத்து நக்சல்பாரி போராட்டத்தை எடுத்துக் கொள்வோம்.

அன்றைய நில உடமை சமூகத்தில் பண்ணையார்களின் மேலாதிக்கம் கூலி விவசாயிகளுக்கு எதிரான கொடூரங்களை எதிர்த்து பண்ணையார்களை அழிக்க ஒழிக்க தொடங்கி அவர்கள் போராட்டமானது மக்கள் மத்தியில் வீறு கொண்டு எழுந்தது அவை மக்களை ஒன்றினைக்க செய்ததுஇருந்தும் அது குறிப்பிட்ட கட்டத்தில் செயலற்று போனது அதன் பின்புலத்தை மற்றதையும் பிறகு பார்ப்போம்.... அவர்களின் நோக்கமும் செயலும் சமூக மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது அதில் பல விமர்சனங்கள் இருந்தாலும் இன்று அதனை தனதாக்கிக் கொள்ள விரும்பும் பலரும் அவர்களை அன்று தாக்கியவர்கள் எதிர்த்து வந்தவர்கள் இன்று அவர்களின் வாரிசுகள் எங்கின்றனர் காலக் கொடுமை...

அப்படியெனும் பொழுது நடைமுறையில் ஏற்பட்ட சாதக பாதங்களை கணக்கில் கொள்வோம். அதே நேரத்தில் இந்த சமூகத்திலே விடுதலை காண நினைப்போர் விடுதலையை மறுத்து அடிமையாக வாழ சொல்லும் ஆளும் ஒடுக்கும் வர்க்க தத்துவத்தை ஆதரிப்போரே.

 

சமூக மாற்றமும் மக்களுக்கான விடுதலையாஅல்லது சீர்திருத்தம் என்றால் உள்ள அமைப்புமுறைகுள்ள சில சலுகைகள் பெற்று அடிமையாக வாழ்வதா?

இங்கேதான் நமது தத்துவத்தையும் நடைமுறையும் உரசி பார்க்க வேண்டிய இடம்...

நாம் வாழும் இந்த சமூகத்தில் எப்படியாவது சொத்து சேர்த்து நாமும் சுகபோகமாக வாழ்ந்து விடலாம் என்று எல்லோரும் ஓடிக் கொண்டுதான் உள்ளார்கள் அதுதான் இந்த சமூகத்தின் தத்துவமாக உள்ளதுஆனால் எல்லோரும் முன்னேறி விடுகிறார்களாஏன் இல்லைஎன்பதை நீங்களே தேடிக் கொள்ளுங்கள்!

ஆக பெரும்பான்மையான மக்களை ஏமாற்றி சிறுபான்மையான சொத்து சேர்பதற்கு உழைக்கும் மக்களை ஏய்பதற்காக உருவானது தான் இந்த தத்துவம் நாம் வாழும் சமூகத்தின் ஆளும் சுரண்டும் வர்க்கத்தின் தத்துவம்.

ஏதோ ஒரு வகையில் இதற்குள்ளே சுழன்று சுழன்று அடிமையாக வாழ வைப்பது தான் இந்த தத்துவத்தின் மகிமை. 

இதைப் புரிந்து கொள்ளாமலே பெரும்பானமையிலான உழைக்கும் ஏழை எளிய மக்களும் ஓடிக்கொண்டுதான் உள்ளார்கள் எப்படியாது இதில் வாழ வேண்டும் என்றுஆனால் அவர்களை ஒட்ட சுரண்டுவதுதான் இந்த தனிஉடமை சமூகத்தின் தத்துவம் என்பதனை அறியாமலே இதற்குள்ளே ஓடியோடி தேய்ந்து ஓய்ந்துப்போவதைதான் காண்பீர் இவையை நாமும் புரிய வைப்பதில் தூரமாகவே உள்ளோம்ஏனென்றால் நாம் கை கொள்ள வேண்டிய தத்துவம் மார்க்சிய தத்துவம்அவை தனி உடமையற்ற பொதுவுடமை நோக்கியதாக உள்ளதுஅப்படி என்னும் போது இந்த சிறு உடைமை வர்க்கம் அதை விட்டு ஓடி வந்து விடுமா அவர்களை எப்படி நீங்கள் கரை சேர்க்கப் போகிறீர்கள்அவர்கள் பின் ஓடப்போகிறீர்களா அல்லது அவர்களின் இந்த கொடூரமான சுரண்டல்முறைக்கான காரணத்தை விளக்கி இந்த அவலங்களுக்கு முற்று புள்ளி வைக்க போகிறீர்களா?

அதில் தான் அடங்கி உள்ளது உங்களது செயலும் பணியும் அதுதான் தத்துவம் நடைமுறையும் என்கிறேன்.அதனைதான் மார்க்சிய இயங்கியல் போதிக்கிறது.

தொடர்ந்து விவாதத்தின் நோக்கம் இங்கு சிலர் கூறுவது போல் நாங்கள் நடைமுறையில் உள்ளோம் என்பவர்கள் எந்த வகையான தத்துவத்தில் நடைமுறையில் உள்ளார்கள் என்பதை கேள்வி?

சாதாரண மக்கள் கூட பேசுகிறார்கள் "ஜான் ஏறினால் முலம் சறுக்குகிறோம்என்பர்அவர்கள் வாழ நினைக்கும் வாழ்க்கையை பற்றி சலித்துக் கொள்கிறார்கள்உண்மையிலே அவர்களுடைய நோக்கம் தனி சொத்து உடைமையை பாதுகாக்க தன்னுடைய போராட்டம் தானே சொத்து சேர்க்க போராடும் முறை தானே அப்படி என்னும் பொழுது அவர்களுடைய நோக்கமானது இந்த தனி உடைமை சமூகத்தில் தானும் ஒரு இடம் தேடுவது தானே சமூகத்தில் உள்ள இந்த போக்கானது எல்லார் மத்தியிலும் ஏதோ ஒரு வகையில் பீடித்து உள்ளதுதானே?

சொத்துக்காக சேர்க்க தனியுடமை தத்துவம் கூறுவது போலவே தனது அமைப்பும் தனது கட்சி மட்டுமே உண்மையான தத்துவ தளத்தில் உள்ளதாக கூறுபவர்களும் செயல்படுகிறார்கள் ஆக மார்க்சிய தத்துவமானது தனி உடைமையின் விவரங்களை அம்பலப்படுத்துவதோடு அந்த தனி உடமையை உடைத்தெறிந்து பொதுவுடமையை நோக்கிய நமது பயணத்துக்கான வழிகாட்டி நிற்கிறதுஆனால் நமது மார்க்சிய தத்துவப்புரிதலில் உள்ள கோளாறு தான் நமது செயல்பாடுகளை சீரழிக்கிறது என்பேன்.

ஒட்டுமொத்த சமூகமும் சுரண்டப்பட்டும் சூறையாடப்பட்டும் ஒடுக்கப்பட்டும் அடக்கப்பட்டும் கிடக்கும் பொழுது இதற்குள்ளே சிலரின் அல்லது சில முழக்கங்களின் அடிப்படையில் செயல்படுவது எவ்வகையான சமூக மாற்றத்திற்கு பயன்படும்.

ஆகவே மார்க்சிய  தத்துவம் ஒட்டுமொத்த சமூகத்தில் உள்ள சீர்கேடுகளை அம்பலப்படுத்தி அதற்கு விடுதலைக்கான பாத்திரத்தை புரட்சிகர கட்சிக்கு வழங்குகிறது.

அந்த புரட்சிகர கட்சி ஆனது தனது செயல்பாட்டை மார்க்சியத்தின் துணை கொண்டு செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

அப்பொழுதுதான் மார்க்சிய தத்துவமானது நடைமுறையில்  செயல்பட முடியும் ஆகவே தத்துவம் நடைமுறை என்பது மார்க்சிய தத்துவத்தை தான் கூறுகின்றோம்,

மார்க்சியமல்லாத பல்வேறு தத்துவங்களை பிடித்துக் கொண்டு அவை நடைமுறை ஆக்குவதால் உண்மையாலுமே சுரண்டப்பட்டும் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருக்கும் மக்களுக்கு எவ்வித விடுதலைகளையும் தராது

மார்க்சியத்தின் உயிராதரமான தத்துவத்தை புரிந்து கொள்வதில் லெனில் மிகத் தெளிவாக செயல்பட்டார்மார்க்சியத்தை நிலை நாட்டுவதில்ஒரு புரட்சிகர கட்சியின் அவசியத்தையும்அந்தப் புரட்சிகர கட்சியின் செயலையும்அதே நேரத்தில் புரட்சிக்கு விரோதமானநிலையில் உள்ளவற்றையும் உள்ளவர்களையும் அம்பலப்படுத்தினார். 

அதே நேரத்தில் பறந்து கிடந்த தன் நாட்டில் பல்வேறு வகையான வர்க்கங்களை வர்க்க சக்திகளை இனம் கண்டு புரட்சிக்கானவர்களை ஒருங்கிணைத்தார் புரட்சிக்கு எதிரானவர்களை அம்பலப்படுத்தினார்.

அவ்வகையில் மக்கள் மத்தியில் தனது கட்சி ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியத்தை  பறைசாற்றினார்.  அந்த நடைமுறையை தான் புரட்சி சாதித்ததுஇதேபோன்று பின் தங்கிய நாடான சீனத்தில் தனது நாட்டின் நிலைமை கேட்ப ஒன்றுபட்ட கட்சியின் அவசியமும் பகுதி வாரியான செயல்பாடுகளையும் ஒரு கட்சி செய்ய வேண்டிய பணியையும் மிகத் தீவிரமாக மாவோ ஆராய்ந்தார் அதன் அடிப்படையில் ரஷ்ய புரட்சியில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் தனது நாட்டில் புரட்சியை நடத்துவதற்கான மார்க்சியத்தை உள்வாங்கி அந்த தத்துவத்தை நடைமுறை ஆக்கும் பணியை கட்சிக்கு விதித்தார்அவை தான் அந்த சீனாவில் இருந்த பிற்போக்குத்தனங்களை உடைத்தெறிந்து ஒரு புரட்சிகர சமூகத்தை படைத்ததுஅதில் தான் மார்க்சிய தத்துவமும் நடைமுறையும் அடங்கி உள்ளது.

இங்குள்ள சிலர் சொல்லுவது போல் நடைமுறை எந்த தத்துவத்தின் அடிப்படையில் என்பதை தெளிவுபடுத்தாமல் ஏதோ ஒரு வகையில் ஓடிக்கொண்டு உள்ளார்கள் அவை தான் நடைமுறை என்று!.

உண்மையாலுமே நடைமுறை என்பது மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை ஆகவே தத்துவம் நடைமுறை என்பது ஒரு சமூக மாற்றத்திற்கான தத்துவமான மார்க்சிய வகைபட்டவையும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான பணியும் தான் என்பதை புரிந்து கொண்டு மேலும் தொடர்வோம்....

சமுகமாற்றத்தில்புரட்சியில் நம்பிக்கை கொண்டவர்கள் தத்துவத்தை கைவிடக்கூடாது என்ற பாடத்தை  வரலாற்று அனுபவம் எடுத்துரைக்கிறதுதொழிலாளி மற்றும் உழைக்கும் வர்க்கங்களிடம் வர்க்க தத்துவப் பிரச்சாரத்தை செய்வதும்,முதலாளித்துவ தத்துவநிலைகள்,மதப்பழமைவாதங்களின்  குரலாக ஒலிக்கிற உலகப் பார்வைகள் போன்றவற்றிற்கு எதிராக தத்துவப் போராட்டம் மேற்கொள்வதும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவசியமனது என்று லெனினிய அறிவுரை.

கருத்து முதல்வாதிகள் எப்படி மாறான நிலையில் சமூகத்து வைத்துக்கொள்ள நினைக்கின்றார்களோ அதே போல தான் சீர்திருத்தவாதிகளும் இச்சமுகத்தை அப்படியே கட்டி காக்க நினைக்கின்றார்கள் அதில் தங்களுக்கான ஒரு இடத்தை தேடிக் கொண்டு உள்ளார்கள் இங்கே எல்லா மக்களுக்குமான விடுதலை பற்றி அவர்களுக்கு செயல்பாட்டு அளவில் முடங்கிக் கொண்டு இதே சமூகத்திற்கு உள்ளே வாழுகிறார்கள் இங்கேதான் மார்க்சிய தத்துவம் மாறுபடுகிறது இந்த சமூக அமைப்பை மாற்றியமைக்க சொல்லுகிறது அதுதான் தத்துவத்திற்கான அடிப்படையும் நடைமுறையும் ஆகும்.

அம்பேத்கர் பெரியார் ஆகியோரின் பணிகள் அன்றையசமுகத்தில் பெரும் வரவேற்பு பெற்றது ஏனென்றால் அன்றைய ஆங்கிலேய ஏகாதிபத்தியம் ஒரு குறிப்பிட்ட அளவில் சீர்திருத்த வகையில் சமூக மாற்றத்திற்கு பணி செய்தது ஆனால் அதன் நோக்கம் சமூகம் மாற்றத்தை தடைபோட போராட்டங்களை நிறுத்தி வைக்க தான் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் இருந்து திசை மாற இதை பயன்படுத்தினார்கள்.  ஆம் அம்பேத்கர் பெரியார் முன்வைத்த கோரிக்கைகள் ஒரு சிலர் பயன்பட்டு இன்று மேல் நிலையில் உள்ளார்கள் ஆனால் இன்றும் பெரும்பான்மையான இவர்கள் பேசும் மக்கள் மிகக் கொடூரமான முறையில் அடைக்கப்பட்டு ஒடுக்கப்பட்டும் கிடக்கிறார்கள் அவர்களைப் பற்றி கவலைப்படாத இந்த மேல் நிலைக்கு வந்த கூட்டம் தங்களின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்த அம்பேத்கரையும் பெரியாரையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆனால் பேச்சில் மார்க்சியவாதியாக உள்ள இவர்கள் செயலில் மார்க்சியத்தை மறுக்கும் ஏகாதிபத்திய காவலர்களாக உள்ளனர்

‘’சீர்திருத்தங்கள் என்றால் ஆளும் வர்க்கத்தின் ஆட்சியதிகாரத்தை அழிக்காமலேயே உழைக்கும் மக்களின் நிலைமைகளில் மேம்பாட்டையச் செய்வதாகும்அதாவது மூலதனத்தின் ஆதிக்கம் இருக்கும் வரைதனிப்பட்ட மேம்பாடுகள்  ஏற்பட்டாலும்எப்போதும் கூலி அடிமைகளாகவே இருந்து வருவோரான  தொழிலாளர்களை முதலாளித்துவ வழியில் ஏமாற்றுவதுதான் சீர்திருத்தவாதம் ஆகும்’’ என்றார் லெனின்.

"மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தார் ஒரு கையால் சீர்திருத்தங்களை வழங்கிவிட்டு மறுகையால் எப்போதும் அவற்றை திருப்பி எடுத்துக்கொண்டு விடுகிறார்கள்என்றார் லெனின்.

முதலாளிகள் உழைக்கும் மக்களுக்கு குறைந்த கூலி கொடுத்து சுரண்டி அவர்களின் மூலதனத்தை குவித்துக் கொள்வார்கள் . ஆகவே முதலாளிகளும் அவர்களது அரசும் எப்போதும் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க விரும்பமாட்டார்கள்ஆனாலும் வேலையில்லாத்திண்டாம் அதிகரித்தால் உழைக்கும் மக்கள் அரசை எதிர்த்துப் போராடுவார்கள் என்பதை உணர்ந்து ஆட்சியாளர் மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க ஆர்வம் உள்ளவர்கள்போல் காட்டிக் கொள்வதற்காக வேலை வாய்ப்பில் எளிய மக்களுக்கு (பிற்பட்டதாழ்த்தப்பட்ட சாதியினருக்குமுன்னுரிமை கொடுக்கிறோம்  என்று சொல்லி இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்ற சீர்திருத்தக்கொள்கையை கொண்டு வந்து இந்தியாவில் செயல்படுத்தினார்கள்இதன் மூலம் இவர்களால் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் வேலைவாய்ப்பை இவர்களால் கொடுக்க முடியாது அதற்கு இவர்கள் முயற்சி செய்ய மாட்டார்கள் என்ற உண்மையை உழைக்கும் மக்களிடம் மூடிமறைத்து ஏமாற்றினார்கள்அனைத்து மக்களுக்கும் இவர்கள்வேலை வாய்ப்பை ஏற்படுத்தவே இல்லைமேலும் சாதிஅடிப்படையிலான இட ஒதுக்கீடு செய்வதன் மூலம் உழைக்கும் மக்களை சாதிரீதியாக நிரந்தரமாகபிரிக்கும் மோசடியை செய்தார்கள்ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த  உழைக்கும் மக்களும் ஒற்றுமையாக இருக்க விடாமல் சாதி அடிப்படையில்  சில சாதியைச் சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைப்பதைப் பார்த்து பிற சாதியினர் போட்டிபொறாமை கொள்ளச் செய்து சாதி அடிப்படையில் வேற்றுமையையும் வெறுப்பையும் பகையையும் வளர்த்தார்கள்

லெனின் கூறியதுபோல உழைக்கும் மக்களை கோஷ்டிகளாக சாதி அடிப்படையில் பிளவுபடுத்தினார்கள்கூலி அடிமைத் தனத்திலிருந்து உழைக்கும் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்றஉணர்வை உழைக்கும் மக்களிடம் மழுங்கடித்தார்கள்.

ஆட்சியாளர்களும்முதலாளிகளும்கொடுக்கும் சலுகைகளே போதுமானது என்ற சுயதிருப்தி மனப்பான்மையை மக்களிடம் ஏற்படுத்தினார் கள்இந்தகைய மன நிலையிலேயே வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்ட மக்கள் இப்போதுஅவர்களுக்குகொடுக்கப்பட்டசலுகைகளை ஆட்சியாளர்கள் பறிக்கும் போது உழைக்கும் மக்கள்கையறு நிலையிலேயே நிற்கிறார்கள்இந்த அநீதிகளை எதிர்த்துப் போராடுவதற்கான நிறுவனங்கள் அதாவது கட்சிகள் இன்றி  மக்கள் தனிமைப் பட்டுள்ளார்கள்.ஆகவே இந்திய வரலாற்றில் உழைக்கும் மக்கள் இந்த சீர்திருத்தவாதி களை நம்பி அவர்கள் பின்னால் சென்றதன் விளைவாக உழைக்கும் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் பலவீனப் படுத்தப்பட்டுள்ளார்கள்உழைக்கும் மக்கள் சீரழிந்துள்ளார்கள் என்ற நடைமுறை உண்மையை அன்றே லெனின் பல நாடுகளின் அனுபவங்களிலிருந்து வழிகாட்டியதை நாம் பின்பற்றத்தவறியதன் பலனைஇப்போதுநாம்அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.

"அற்பசலுகைகளின்மூலம்சீர்திருத்தவாதிகள்தொழிலாளர்களைபிளவுபடுத்தவும்ஏமாற்றவும் முயல்கிறார்கள்.அவர்களை வர்க்கப் போராட்டத்திலிருந்து திசைதிருப்பிவிட முயலுகிறார்கள்"என்றார் லெனின்

மார்க்சிய வரலாற்றுப் பொருள் முதல்வாதம் நாம் வாழும் சமூக இயக்கத்தை ஆம் அந்த சமூகத்தின் ஒவ்வொரு அங்கங்களின் இயக்கத்தை அவை எப்படி இயங்குகிறது என்பதை மிகத் துல்லியமாக குறிப்பிடுகிறது அப்படி என்னும் பொழுது அந்த சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் புரிந்து கொண்டவர்கள் மட்டும் தான் மார்சியவாதியாக இருக்க முடியும்.

இன்னும் பின்னர்....











இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்