இந்த ஆதாரங்கள் மார்க்சிய-லெனினிய தத்துவத்தை வளர்க்கும் நோக்கில்
இலக்கு 101 இணைய இதழை பிடிஎப் வடிவில் பெற்று வச்சிக்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
இந்த இதழை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
இலக்கு 101 இணைய இதழில் உள்ள கட்டுரைகள்
01. ஆசிரியரிடமிருந்து -03
02.மார்க்சிய மெய்ஞானம் ஜார்ஜ் பொலிட்ஸர். பாகம் 3. -13
03.சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி, லியோஷோசி பாகம் 18. -20
04. அரசும் புரட்சியும் (புதியது) பாகம் 2. -29
மார்க்சிய-லெனினிய அறிவியல் என்பது வெறும் தத்துவக் கோட்பாடு மட்டுமல்ல; அது சமூகத்தை மாற்றுவதற்கான ஒரு புரட்சிகர நடைமுறை (Revolutionary Praxis) ஆகும். மார்க்சியம் எப்போதும் சமூக யதார்த்தங்களை அதன் இயக்கவியலோடு (Dialectics) அணுகுகிறது. ஆனால், இந்த அறிவியல் பாதையைச் சிதைத்து, உழைக்கும் வர்க்கத்தின் புரட்சிகர வீரியத்தை மழுங்கடிக்கும் இரண்டு முக்கிய தத்துவார்த்தப் பிறழ்வுகள் உண்டு: ஒன்று திருத்தல்வாதம் (Revisionism), மற்றொன்றுந் குறுங்குழுவாதம் (Sectarianism).
தோழர்களே,
இலக்கு ஆசிரியர்களாக நாங்கள் இதுவரை 100 இணைய இதழ்களை கொண்டு வந்துள்ளோம். அதில் பல தோழர்கள் தங்களின் கட்டுரைகளை எழுதியுள்ளனர். இப்பொழுது ஒரு சிலரைத் தவிர வேறு யாருமில்லை.
இலக்கில் எழுதுவதற்கு பல்வேறு மார்க்சிய ஆசான்களின் நூல்கள் வாசிப்பதையும்; அதன் மூலம் இங்கு தேவையான மார்க்சிய போதனைகளை எடுத்து கையாள்வதும்; நடைமுறைக்கான ஆம் மார்க்சியத்தின் அடிப்படைகளை போதிப்பதையும் முதன்மையாக கொண்டு பல்வேறு கட்டுரைகள் இலக்கில் வெளியிடப் பட்டுள்ளது. அதனை தொகுத்து சிறு விளக்கங்களுடன் உங்கள் முன் இங்கே வைக்க விரும்புகிறோம்.
உள் நுழையும் முன் எங்களை பற்றிய சுயவிமர்சனமாக ஏற்று மேலே செல்க தோழர்களே.
நாங்கள் பல விவாதங்களில் பல்வேறு குழுக்கள் பல்வேறு நிலைப்பாட்டில் உள்ளவர்களிடமும் விவாதித்துள்ளோம். அவர்கள் பெரும்பான்மையோர் நடைமுறைவாதிகளே. அவர்கள் எங்கள் மீது வைக்கும் ஒரே விமர்சனம், “நீங்கள் நடைமுறையில் இல்லை, நாங்கள் நடைமுறையில் உள்ளோம்” என்கிறனர் இதனைப் பற்றி விரிவான சில கட்டுரைகள் பல எழுதப்பட்டுள்ள நிலையில், நாங்கள் மார்க்சிய தத்துவ போதனைகான பணியைதான் செய்துக் கொண்டுள்ளோம் இப்பொழுது நடைமுறையில் இயங்கும் பலம் இன்மையால் கூட்டு விவாதம் கூட்டு பணிக்கு மார்க்சிய வழிப்பட்ட நடைமுறையில் கலந்துக்கொள்ள ஆயத்தமாக உள்ளோம் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளையில் ஆளும் வர்க்கத்தின் வாலாக செயல்படுவதையையோ, ஆளும் வர்க்கத்தை விமர்சிப்பதன் பேரில் ஆளும் வர்க்கத்தின் Safety valve ஆக செயல்படும் கூட்டங்களும் பயணில்லை என்று தெளிவாக கூறிக் கொள்ள விரும்புகிறோம்.
மார்க்சிய தத்துவம் என்பது நடைமுறைக்கான வழிகாட்டிதான் மார்க்சிய தத்துவ நடைமுறைகளை வழிகாட்டியாக கொள்ளாத எந்த நடைமுறையும் இறுதியில் ஆளும் வர்க்கத்திடம் சரணடையவே செய்யும் இவைதான் லெனின் சொன்ன வாக்கியம், “தத்துவம் என்பது வர்க்கம் சார்ந்தவையே, பொதுவானதாக இல்லை. அதை ஒடுக்குமுறைக்கான ஒடுக்கம் வர்க்கம் தத்துவமாக இருக்கலாம்; ஒடுக்கப்படும் வர்க்கத்தின் விடுதலைக்கான தத்துவமாக இருக்கலாம். இந்த இரண்டும் இல்லாத மூன்றாவது ஒரு நடுநிலையான தத்துவம்இல்லை” என்பது தான் லெனினுடைய கருத்து.இந்த மூன்றாவது வகையான தத்துவம் என்பது ஆளும் வர்க்கத்தை ஆதரிக்க செய்யும் தத்துவம் தான் என்பது தெளிவாக விளங்கி விளக்குகிறார். (என்ன செய்ய வேண்டும் நூல் பக்கம் 60-61)
இந்தப் பணியில் எமது எழுத்துக்களில் நாங்கள் இதுவரை தேடிய கருத்துகள் ஒரு மீள் பார்வைக்காக எழுதுகிறோம்...
இலக்கு இணைய இதழ்: மார்க்சிய சிந்தனையின் கல்வி இயக்கம்
ஒரு அரசியல் இயக்கம் வெறும் போராட்டங்களால் மட்டுமே வளராது; அதற்கு கோட்பாட்டு கல்வியும், வரலாற்றுப் புரிதலும், சமூக ஆய்வும் அவசியம். இந்த நோக்கத்திலேயே "இலக்கு" இணைய இதழ் பல்வேறு துறைகளில் மார்க்சிய-லெனினிய அடிப்படையிலான கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. பொருளாதாரம், தத்துவம், வரலாறு, அரசியல், கலை, தொழில்நுட்பம், பண்பாடு போன்ற பல துறைகளை ஒருங்கிணைத்து வாசகர்களுக்கான ஒரு சிந்தனைத் தளமாக இது அமைகிறது.
.
.
தொடர்புடைய கட்டுரைகள்:
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.