Showing posts with label இலக்கு இதழ். Show all posts
Showing posts with label இலக்கு இதழ். Show all posts

இலக்கு 47 இணைய இதழ் pdf வடிவில்

                    இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்

1.ஆசிரியரிடமிருந்து

2. நமது படிப்பைச் சீர்செய்வோம். மாவோ

3. இந்தியாவில் தோன்றிய பொதுவுடமை கட்சிகள் பற்றி ஓர் தேடல்

4. சர்வதேச தொழிலாளர் தினம்-மே தினம்






இலக்கு 47 இணைய இதழ் PDF வடிவில் இந்த லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளவும் 

இலக்கு இணைய இதழ் தொடங்கி இரண்டாம் ஆண்டை நெருங்க போகிறோம் தோழர்களே.

 

இந்த நேரத்தில் எங்களின் பணி உண்மையிலே என்ன சலனத்தை மார்க்சியவாதிகளிடையே ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வு செய்தால் இந்த இதழில் பேசப்பட்டுள்ள முக்கியமான பகுதியாகும்.

தத்துவத்தை நடைமுறையோடு இணைப்பது என்கின்றனர்- எந்த தத்துவத்தை நடைமுறையோடு இணைப்பது என்ற கேள்வி மட்டுமில்லாமல் விடையாக இங்கு தோன்றி பொதுவுடமை இயக்கங்களின் சுருக்கமான வரலாற்றோடு அவர்களின் நடைமுறை பணி என்ன? அவர்கள் நடைமுறை என்று என்ன செய்துக் கொண்டுள்ளனர் அவர்களின் தோல்விக்கு காரணம் மார்க்சிய ஆசான்கள் வழிக்காட்டிய தத்துவ நடைமுறையை புரிந்துக் கொள்ளாமை மற்றும் கட்சி பற்றிய ஆசான்களின் பாணியை கைவிட்டு மார்க்சியத்தை மறுத்து மார்க்சிய விரோத பாதையில் பயணித்தவையே என்று தெளிவுப்படுத்தியுள்ளோம்.

நமக்கான வழிகாட்டிகள் மார்க்சிய ஆசான்களே அவர்களின் பாதையை கைவிட்டு விட்டு பேசும் மற்றெல்லாம் மார்க்சியம் அல்லாத ஆளும் வர்க்கத்திடம் அண்டி பிழைக்கும் பாதையே

மார்க்சியத்தை கற்று தேறுவொம் நமது ஆசான்களிடமிருந்தே அதனை நம் நாட்டிற்கு ஏற்றவகையில் நடைமுறை படுத்துவோம் ஆசான்களின் வழியில் நின்று.

உலக தொழிலாளர்களின் உதிரத்தை உரிஞ்சி வாழும் கூட்டத்தை வேரறுக்காமல் சுரண்டலுக்கு முடிவில்லை.

மே நாள் தியாகிகளுக்கு செவ்வணக்கம்

அவர்களின் பணியை அவர்கள் விட்டு சென்ற பணியை முடிக்க சபதமேற்போம்

தோழமையுடன்

இலக்கு ஆசிரியர் குழு

சர்வதேச தொழிலாளர் தின-மே தின வரலாறு

 சர்வதேச தொழிலாளர் தினம்-மே தினம் 

ஜார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள்.இங்கும் 1895 -1899 இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள்நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் 1832ல் பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள் 10 மணி நேர வேலைகோரிக்கையைமுன்வைத்துவேலைநிறுத்தம்செய்தனர்.அதேபோல்1835ல் பிலடெல்பியாவிலும், பென்சில்வேனியாவிலும் இதே கோரிக்கையை முன்வைத்து இயக்கம் நடத்தப்பட்டது. பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களும், இரயில்வே தொழிலாளர்களும் குறைவான வேலை நேரத்தை வலியுறுத்தி 1877இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்புஎன்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு மே 11886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

தொழில் நகரங்களான நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கியது. இவ்வேலை நிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலை நிறுத்தத்தினால், அமெரிக்க பெரு நிறுவனங்கள் மூடப்பட்டன. இரயில் போக்குவரத்து நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும்மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

சிக்காகோ பேரெழுச்சி

மே 3, 1886 அன்று மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது.இந்நேரத்தில்காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச்சூடுநடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 211886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிகழ்வு ஹேமார்க்கெட் படுகொலை என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வினை ஒட்டிஅந்த ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.

நவம்பர்111887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல்ஆகியோர்தூக்கிலிடப்பட்டனர். நவம்பர்13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது.

அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக கொண்டாடப்படுகிறது.

1889 ஜூலை14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் சங்கம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள்இக்கூட்டத்தில்பங்கேற்றனர் . பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்பட பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.

இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிக்க வழிவகுத்தது.

இந்தியாவில்சென்னைமாநகரில்1923-ம்ஆண்டில் மெரீனாகடற்கரை மற்றும் திருவான்மியூர்  பகுதிகளில் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும், தலைசிறந்த சீர்திருத்தவாதியுமான .சிங்காரவேலர் தலைமையில் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள மெரினா கடற்கரையில், இந்தியாவின் முதல் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.

+++++++++++++++++++++++++++++++++++++++++

உலக தொழிலாளர் தினம்

வாழ்த்துகள் தோழர்களே.

இந்தியாவில் தோன்றிய பொதுவுடமை கட்சிகள் பற்றி ஓர் தேடல்

இந்தியாவில் தோன்றிய பொதுவுடமை கட்சிகள் பற்றி ஓர் தேடல்

இன்றைய இந்தியாவின் மக்கள் தொகை 1,44 கோடியாகும் அதில் ஆண்கள் 74.16கோடி, பெண்கள் 69.47 கோடி இதில் 35 வயதுக்குட் பட்டவர்கள்  65%பேர் 33% இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். 50% பெண்கள் 15-29 இடைபட்ட வயதினாராகவும் இவர்கள் படிக்கவும் போகவில்லை வேலையிலும் இல்லை இதுவே பெரிய இடர்பாடாக உள்ளதாக NSSO அறிக்கை கூறுகிறது. இன்றைய ஆட்சியில் உள்ள மதவாத அரசானது உலக மய தனியார் மய கொள்கையால் தன்னுடைய நிதி ஆதரங்களை திரட்ட மக்கள் மீது வரியை சுமத்துகிறது மக்களுக்கான எந்தவித நல திட்டங்களயும் தீட்டுவதேயில்லை அதற்கு ஜாதிவாத மதவாத அரசியலை பயன்படுத்தி மக்களை பிரித்தாளுகிறது. மக்களுக்கு வாழவழியான வேலையில்லை கல்வியும் தனியார் மயம் ருத்துவமும் உயிர்வாழ உழைப்பிருந்தால் வாழலாம் இவை எதையுமே செய்ய இயலாத அரசுதான் டந்த 9 நிதியாண்டுகளில், 2014-15 முதல் 2022-23 வரை, வங்கிகள் மொத்தம் ரூ.14.56 லட்சம் கோடி மதிப்பிலான வாராக் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாக ஆகஸ்ட் 7 (2023) அன்று நாடாளுமன் றத்தில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துப் பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பெரும் முதலாளிகளுக்கு வாரி வழங்கும் அரசு உழைக்கும் மக்களை கண்டுக் கொள்வதே யில்லை.

கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை

ஒரு நாட்டில் சமூக மாற்றம் நடக்க வேண்டுமானால், அந்த மாற்றத்திற்கு தலைமை தாங்கி, வழிநடத்துவதற்கு ஒரு ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சி தேவை. கம்யூனிஸ்டுகள் பல்வேறு பிரிவாக பல அமைப்புகளில் பிளவுபட்டு இருந்தால் அங்கு சமூக மாற்றம் நடப்பதற்கு வாய்பே இல்லை என்று லெனின் விளக்குகிறார். இவ்வாறு கம்யூனிஸ்டுகள் பிளவுபட்டிருப்பது ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமானதே ஆகும். இந்த சாதகமான சூழலை பயன்படுத்தி ஆளும் வர்க்கமானது தனது அரசை பயன்படுத்தி உழைக்கும் மக்களின் மீது கொடூரமான தாக்குதலை தொடுக்கிறார்கள். கம்யூனிச குழுக்களும் அதற்கு எதிராக போராட முடியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். உழைக்கும் மக்களின் வாழ்வு மேலும்மேலும்கீழேபோய்க்கொண்டிருக்கிறது. ஆகவே கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்டு சமூக மாற்றத்திற்கானதிட்டத்தை,பெரும்பாலோரால் ஏற்றுக் கொள்ளக் கூடிய திட்டத்தை உருவாக்க வேண்டியதும், அதன் அடிப்படையில் ஒரு ஒன்றுபட்ட கட்சியை உருவாக்க வேண்டியதும்முதன்மையான கடமையாகும். இத்தகைய ஒருஒன்றுபட்ட கட்சி உருவாகி விட்டால், அந்த கட்சியை உழைக்கும் மக்கள் பின்பற்றினால் சமூக மாற்றமானது எவ்விதமான தடையும் இல்லாமல் நடக்கும். அப்படியே தடைகள் வந்தால் உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் தடைகள் தகர்க்கப்படும்.

இந்தியாவிலும் பல கம்யூனிஸ்டுகள் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டு உயிர் தியாகம் செய்துள்ளார்கள். இந்தியாவில் இவ்வாறு உயிர் தியாகம் செய்த கட்சிகளில் முதன்மையானது கம்யூனிஸ்டுகட்சியேயாகும்.இந்தியகம்யூனிஸ்டு கட்சியின் வரலாற்றில் கம்யூனிஸ் டுகள் நடத்திய போராட்டத்தில், தெலுங்கானா போராட்டம் ஒரு சிறப்பான போராட்டமாகும். அந்த போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டுகளையும், விவசாயி களையும் பாசிச நேருவின் ஆட்சியில் அதன் இராணுவம் தெலுங்கானா போராட்டத்தை நசுக்குவதற்காக அது செய்த கொடுமைகள் அதனால் பல கம்யூனிஸ்டு களும், விவசாயிகளும் கொல்லப்பட்ட கொடூராவரலாற்றை படிப்பவர்களின் கண்களிலிருந்து இரத்த கண்ணீர் வருவதை இன்றும் காணலாம். அந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் தோல்வியடைந்தாலும், அந்த போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் தியாகத்தை இன்றும் யாராலும் மறக்க முடியாது. அதன் காரணமாக அன்றைய காலங்களில் கம்யூனிஸ்டுகளுக்கு மக்களிடையே செல்வாக்கு பலமாக இருந்தது.

அதற்குப்பின் தோன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிய-லெனினி) கட்சியானது விவசாயிளையும், தொழிலாளர் களையும், மாணவர்களையும், இளைஞர் களையும் திரட்டிப் போராடியது. இந்த கட்சி நடத்திய போராட்டங்கள் வீரத்தெலுங்கானா போராட்டப் பாதையையே பின்பற்றியது. இவர்கள் நக்சல்பாரியிலும், கல்கத்தா நகர வீதிகளிலும், ஆந்திர மாநில ஸ்ரீகாகுளம் போன்ற பகுதிகளிலும் தமிழகத்தில் தருமபுரி, வடஆற்காட்டுப் பகுதிகளில் நடத்திய போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அப்போது இந்த கம்யூனிஸ்டுகளின் மீது ஆட்சியாளர்கள்கொடூரமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தியதன் காரணமாக பல தியாக கம்யூனிஸ்டுகள் வீரமரணம் அடைந்தார்கள். பலர் வாழ்க்கையை இழந்தார்கள். இந்த கம்யூனிஸ்டுகளின் போராட்டங்கள் ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்டாலும், இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை மக்கள் இன்றும் மறக்கவில்லை. அவர்களின் தியாகமும் போராட்டமும் எதிர்கால படிப்பினைக்கு ஆம் தவறுகளை புரிந்து அதனை களைந்து சரியான பாதையில் பயணிக்க வழி கிடைக்கும்.

நமது ஆசான்களின் வழிக்காட்டுதல்

1905, ஜூன் - ஜூலை மாதங்களில் ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகவாதிகளின் இரண்டு போர் தந்திரங்கள்என்ற அறிக்கையை லெனின் எழுதினார். இதில் அவர் முதலாளிகளுடன் சமரசம் செய்து கொள்ளும் கொள்கையைக் கடைப்பிடித்த மென்ஷெவிக்குகளின் செயல்தந்திரத்துக்குஎதிராக,எதேச்சாதிகாரத்தை எதிர்த்துத் திட்டமான, விட்டுக் கொடுக்காத போராட்டத்தை நடத்து மாறும், அவசிய மேற்பட்டால் ஆயுதமேந்தியும் போரிடுமாறும், அறைகூவி அழைத்த போல்ஷெவிக்குகளின் செயல் தந்திரத்தை முன்வைத்தார்.

மனிதகுலத்தின் அறிவு அனைத்தையும் பெற வேண்டும். இவ்வாறு பெறும்போது பொதுஉடைமை முறையை ஏதோ குருட்டுப் பாடமெனக் கற்கக் கூடாது; மாறாக அது நீங்களாகவே யோசித்த ஒன்றாக இருக்க வேண்டும்; நிகழ்காலக் கல்வியின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது தவிர்க்க முடியாதபடி பெறப்பட்ட முடிவுகளை உட்கொண்ட ஒன்றாக இருக்க வேண்டும். இத்தகைய திறமையைப் பெறுவது அவசியம்என்று லெனின் கூறினார்.

மார்க்ஸ் எழுதியவற்றை மட்டும் லெனின் படிக்கவில்லை.முதலாளித்துவமுகாமிலுள்ள அவரது எதிரிகள் மார்க்ஸைப் பற்றியும் மார்க்சியத்தைப்பற்றியும் எழுதியவற்றையும் படித்தார். அவர்களுடன் ஏற்பட்ட தர்க்கத்தில் மார்க்சியத்தின் அடிப்படைகளை விளக்குகிறார் ஆக நாம் நமது நாட்டின் நிலைமையோடு மார்க்சியத்தை பொறுத்தி புரிந்துக் கொள்ள வேண்டும்.

இன்று திரிபுவாதம், இடதுசாரி குறுங்குழுவாதம், வறட்டுவாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டே இந்திய கம்யூனிஸ்டு இயக்கம் உள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு இயக்கமானது, இன்றுவரை அதற்கான பணியான மக்கள் ஜனநாயக புரட்சியையோ அல்லது சோசலிசத்தை அமைக்கும் பணியையோ நிறைவேற்றாமையால் அவை கனவாகவே உள்ள நிலையில், உலகின் சில நாடுகளில் கம்யூனிஸ்ட்கட்சிகட்டப்பட்டு வெற்றிகரமாக புரட்சியை முடித்து சோசலிசத்தை கொணர்ந்தது, உலகில் உயர்ந்த நிலையில் அச் சமுகத்தை நிலை நிறுத்தி இருந்தது, ஆனால் அங்கும் இன்று நவீன திரிபுவாதம் சோசலிசத்தை பின்னடையச் செய்து முதலாளித்துவ நிலைக்கு சென்று விட்டது. 

 

· 1848 ஆம் ஆண்டு மார்க்ஸ் எங்கெல்ஸ் அவர்களால் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிடப்பட்டது. உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்று போர்க்குணமிக்க முழக்கம் பிரகடனப் படுத்தப்பட்டது. விஞ்ஞான ரீதியான கம்யூனிசத்துக்கு முறையான ஆழமான விளக்கத்தை அளித்து அதன் மூலம் சர்வதேச பாட்டாளி வர்க்கம் ஒற்றுமைக்கான இந்த அடிப்படைகளை மார்க்ஸ் எங்கெல்ஸ் நிறுவினர். இன்றளவும் அதுசர்வதேச தொழிலாளர் ஒற்றுமைகான பொதுவாக அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது.

· வளர்ந்த முதலாளித்துவ நாடுகளில் பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தைதூக்கிஎறிந்து அதிகாரத்தைக் கைப்பற்றி சோசலிச உற்பத்தி முறையை கட்டி அமைக்கும் பணிக்கு வழி நடத்த முதல் அகிலமும் இரண்டாம் அகிலம் உருவாக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டு தொழிலாளர்களின் உழைப்பின் மூலம் பாரிஸ் கம்யூன் தோற்றுவிக்கப்பட்டது

சில மாதங்கள் வரைநீடித்த பாரிஸ் கம்யூன் பலநாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியால் அது வீழ்த்தப்பட்டது. ஆனாலும் அது வரலாற்றில் முதலாளி வர்க்கத்தை வீழ்த்துவதற்கான ஒத்திகையாக இருந்துள்ளது.. சோசலிச புரட்சி முதலாளி நாடுகளில் முதலில் நடைபெறும் நிகழ்வாக அப்போது பார்க்கப்பட்டது.

முதலாளித்துவம் ஏகபோக முதலாளித்து வமாக ஏகாதிபத்தியமாக மாறி உலக சந்தையை மறுபங்கீடு செய்து கொள்ளையடிப்பதற்காக ஏகாதிபத்திய போரான முதலாம் உலகப் போரை நடத்தின. அச்சமயம் சர்வதேச கம்யூனிச இயக்கம் ஏகாதிபத்திய போரை உள்நாட்டு போராக மாற்றி முதலாளி வர்க்கத்தை தூக்கி எறிய வேண்டும் என்று வழிகாட்டலை அளித்தது.

இதற்கு ஏற்ப லெனின் தலைமையில் ரஷ்யாவின் போல்ஷ்விக் கட்சி முதலாளி வர்க்கத்தை தூக்கி எறிந்து சோசலிசப் புரட்சியை நடத்தி வெற்றி அடைந்தது. இது ஒரு உலக வரலாற்றில் மாபெரும் திருப்பு முனையாக அமைந்தது.

 உலகில் ஏகாதிபத்திய முதலாளித்துவ பிற்போக்கு சக்திகளை எதிர்த்துப் போராடும் சக்திகளுக்கு உத்வேகம் காலனிய எதிர்ப்பு தேசிய விடுதலைப் போரிலும் சோசலிசக் கட்சிகளும் இணைந்து உலகப் புரட்சி என்ற முழுமையான அம்சங்களை என உலகத் தொழிலாளர்களே ஒடுக்கப்பட்ட தேசங்களே ஒன்று கூடுங்கள் என்ற புதிய முழக்கம் முன்னுக்கு வந்தது. இரண்டாம் அகிலம் சந்தர்ப்பவாத நோயால் பீடிக்கப்பட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக மாறியதால் உலகத்துக்கு வழிகாட்ட தகுதியற்றதாக மாறியது. ரஷ்யப் புரட்சிக்குப் பின் லெனின் தலைமையில் மூன்றாம் அகிலம் உருவாக்கப்பட்டது.மூன்றாம் அகிலமானது சோசலிச நாடுகள் முதலாளிய நாடுகள் மற்றும் குடியேற்ற நாடுகளின் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் அமைப்புகளை உள்ளடக்கியதாக இருந்தது.

· வரலாற்றில் மூன்றாவது அகிலத்தின் இடத்தை லெனின் பின்வருமாறு வரையறுத்தார்," முதலாவது அகிலம் சோஷலிசத்திற்கான பாட்டாளிவர்க்க சர்வதேச போராட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது, இரண்டாம் அகிலம் அனேக நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை விரிவான விஸ்தரிப்புக்கு முன்னேற்பாடுகள் நடத்தியது. மூன்றாம் அகிலம் இரண்டாம் அகிலம் செய்த வேலைகளில் பயன்களை ஏற்றுக்கொண்டு அதன் சந்தர்ப்பவாத சமூக தேசியவெறிக் கொள்கையையும், குட்டி முதலாளித்துவ தவறுகளையும் எதிர்த்துப் போராடி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை துணிந்து செயல்படுத்த தொடங்கியது.

· மூன்றாவது அகிலம் எல்லா நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைப்பதற்கு வழிகாட்டியது அகிலத்தின் இரண்டாம் மாநாட்டில் லெனின் வரையறுத்த" ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி" பாதை குடியேற்ற நாடுகளுக்கான அரசியல் திசை வழியாக அமைந்தது. குடியேற்ற நாட்டில் ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்துதல் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் இணைவதன் மூலம் குடியேற்ற நாடுகளும் உலக புரட்சிக்கு பங்காற்ற இயலும், குடியேற்ற நாடுகளில் நடைபெறும் போராட்டம் சோசலிச போராட்டமாக இருக்காமல் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட ஜனநாயக போராட்டமாக இருக்கும்.

 

இன்று இந்தியாவில் இடதுசாரி கட்சிகள் என்பது கம்யூனிசத்தின் பெயரால் முதலாளித்துவ கும்பலின் ஒரு பிரிவினராக ஆட்சியதிகாரத்தில் தங்களின் பங்கில் வாழ்ந்து கொண்டுள்ளனர் . புரட்சி பேசும் புரட்சியாளர்களும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக, ஏகபோக மூலதனத்திற்கு எதிராக நிலவுடமை கும்பல்களுக்கு எதிராக பெருமுதலாளிகளுக்கு எதிராக விஞ்ஞானப் பூர்வமான வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைத்து நடத்துவதில் திறமை அற்றவர்களாக இருக்கின்றனர்.

கம்யூனிசத்திற்கு ஆளுக்கு ஒரு வகையாக விளக்கம் கொடுத்து மக்களை குழப்புகின்றனர். ஆக மக்கள் கம்யூனிசத் திற்கு பக்கம் வரத் தயங்குகின்றனர்.

இதனை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இரண்டாம் அகிலத்தில் காவுத்ஸகி போன்ற துரோகிகள் செய்த அந்தப் பெரும் துரோகத்தை இரண்டாம் அகிலத்தில் தவறுகளை களைந்து மூன்றாம் அகிலத்தை லெனின் எப்படி கட்டியமைத்தார் என்பதிலிருந்து இதனை சரியாக புரிந்து கொள்ள முடியும்.

கம்யூனிஸ்டுகள் மக்களிடம் வேரூன்றி அவர்களை அரசியல் படுத்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் மாபெரும் புரட்சிக்கு தலைமைஏற்க வேண்டும் என்பதைஎல்லாபொதுவுடமை இயக்கங்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் ஒருபுறம் திருத்தல்வாதிகளாகிப்போன பொதுவுடமை இயக்கம் மக்களிடையே பணியாற்றுவது என்றபெயரால் உழைக்கும் மக்களை அணிதிரட்டி உடனடி பொருளாதார கோரிக்கைகளுடன் வரம்பிற்குட்பட்ட அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் புரட்சிகரப் போராட்டங்களை புறக்கணித்து  அதற்கேற்ப ஓட்டுப் பொறுக்கும் பிழைப்பு வாதத்தையே தமது நடைமுறையை மாற்றிக் கொண்டனர்.

திருத்தல்வாதத்தை புறக்கணித்தபுரட்சியின் இலக்கான மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடிக்கும் புரட்சியாளர்கள் இன்று  இடதுவலது சந்தர்ப்பவாதபோக்கில்மூழ்கிக்கிடப்பதோடு குறுங்குழுவாத நோயாலும் பீடித்துள்ளனர்.

இன்று மாலெ அமைப்புகளின் தோல்விகளும் தேக்கமும் பின்னடைவும் பல்வேறு கேள்விகளை உள்ளடக்கு கின்றன.

ஒவ்வொன்றாகத் தேடி விரிவாக பின்னர் எழுதுகிறேன் தற்பொழுது இன்றைய நிலையில் நமது அவசியமான பணியினை முன் வைப்போம்.

கார்ல் மார்க்ஸினால் முன்வைக்கப்பட்டது.சமுதாயத்தில் ஒரு புரட்சிகர மாற்றத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தி,சுரண்டலை முடிவிற்குக்கொண்டுவர வேண்டுமானால்,ஒவ்வொரு புரட்சியாளனும் இதைக் கட்டாயமாகக்கிரகித்துக்கொள்ள வேண்டுமென பின்னர் லெனினும் மாவோவும் மீண்டும் உறுதிப்படுத்தினர்

இந்திய பாராளுமன்றம்:- இந்திய அரசானது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பாராளுமன்ற மற்றும்சட்டமன்றதேர்தல்களைமுன்னிறுத்தி, அதன்மூலம் மக்கள் பிரதிநிதிகளை(?) தேர்ந்தெடுத்து ஆளும் வர்க்கங்களுக்கு சேவைசெய்து வருகிறது. வெளித்தோற்றத் தில் பார்க்கும் பொழுது இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசமைப்புபோல் தோன்றினாலும், இங்கு மக்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மட்டுமே உரிமை உண்டு, அதற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் மக்களுக்காக எந்த வேலையையும் செய்யவில்லை என்றாலோ, மக்கள் நலனுக்கு விரோதமான செயலில் இறங்கினாலோ, அவரை ஒன்றும் செய்ய இயலாது. தேர்ந்தெடுக்கப்பட மட்டுமே உரிமை, அவர்களை திருப்பி அழைக்க எந்த வித உரிமையும் இல்லை. முதலாளித்துவ பாராளுமன்றதின்பால்கடைபிடிக்க வேண்டிய சரியான அணுகுமுறை குறித்து  மார்க்சிய லெனினியவாதிகளுக்கும் பிற சந்தர்ப்ப வாதிகளுக்கும்  மற்றும் திருத்தல்வாதி களுக்கும் இடையே ஒரு அடிப்படை வேறுபாடு எப்போதும் இருந்து வந்திருக்கிறது .

முதலாளிகளின் பிற்போக்கு தன்மையை அம்பலப்படுத்தவும் மக்களுக்கு கற்றுக் கொடுக்கவும்  புரட்சிகர வலிமை சேகரித்துக் கொள்ளவும்  உதவும் குறிப்பான சூழ்நிலைகளில்  பாட்டாளி வர்க்கக் கட்சி பாராளுமன்ற போராட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றும் பாராளுமன்ற மேடையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மார்க்சிய லெனினியவாதிகள் புரிந்து செயல்பட வேண்டும்.  தேவைப்படும்போது இந்த சட்டப்பூர்வமான போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ளமறுப்பதுதவறாகும்.  ஆனால் பாட்டாளி வர்க்க கட்சி ஒருபோதும் பாட்டாளி வர்க்கபுரட்சிக்கு மாறாக  பாராளுமன்ற போராட்டத்தை கருதக்கூடாது,  அல்லது சோசலிசத்திற்கானமாற்றாகபாராளுமன்றபாதை மூலம்  சாதித்து விடலாம் என்று மாயையில் ஆழ்ந்து விடக்கூடாது.  அதாவது எல்லா சமயங்களிலும் வெகுஜன போராட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

காவுட்ஸ்கியை விமர்சனம் செய்த லெனின் "பாட்டாளி வர்க்கம் ஏகாதிபத்திய முதலாளிகளை புரட்சிகரமான முறையில் தூக்கி எறிய போராடி வருகிறது ஆனால் கவுட்ஸ்கியோ ஏகாதிபத்தியத்துக்கு அடி பணிந்து கொண்டு அதை சீர்திருத்த முறையில் முன்னேற்றவும் அதற்கு ஒத்துப் போகவும் போராடுகிறார் (லெனின் தேர்வு நூல்கள் தொகுதி 2 பக்கம் 95 ).உழைக்கும் வர்க்கத்தையும் பறந்து பட்ட மக்களையும் புரட்சியில் வழிநடத்திச் செல்வதற்கு பாட்டாளி வர்க்க கட்சி போராட்டத்தின் அனைத்து வடிவங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும் வேறுபட்ட வடிவங்களை ஒன்றிணைக்கவும் போராட்டத்தின் நிலைமையில் மாறுவதற்கு ஏற்ப ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு விரைவாக மாற்றிக் கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். அமைதியான மற்றும் ஆயுதம் தாங்கிய பகிரங்கமான மற்றும் ரகசியமான சட்டப்படியான மற்றும் சட்ட விரோதமான பாராளுமன்ற முறையிலான மற்றும் மக்கள் திரள் போராட்டமாக உள்நாட்டு மற்றும் சர்வதேச போராட்டமாக இவ்வாறு எல்லாவிதமான போராட்ட வடிவங்களிலும் தேர்ச்சி பெற்று இருந்தால் தான் அது எந்த சூழ்நிலையிலும் வெல்லப் பட முடியாத இருக்கும் என்று மார்க்சிய லெனினிய வாதிகளாய் நாம் எப்போதும் கூறுகிறோம்.குறிப்பான தனித்தன்மைகளுக்கு ஏற்ப போராட்டத்தில் அனைத்து வடிவங்களிலும் முழுமையாகவும் திறமையாகவும் தேர்ச்சி பெற்றிருப்பதன் விளைவாக புரட்சி வெற்றியடைய முடியும்.

உலக வரலாறு இதுவரை முதலாளித்து வத்தில் இருந்து சோசலிசம் சமாதான முறையில் மாற்றம் தானாகவே நடந்தேறியதாக எந்த முன்மாதிரியும் உருவாகவில்லை என்பது வரலாற்று உண்மை

ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி நமக்கு ஏன் வேண்டும்?. ஒரு கம்யூனிஸ்டு கட்சியானது புரட்சிகர கட்சியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?. உலகத்தில் வாழும் உழைக்கும் மக்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்கள் உழைக்கும் மக்களை ஒடுக்குகின்றனர்.அம்மக்கள் எதிரியினுடைய ஒடுக்குமுறையினைத் தூக்கியெறிந்திட வே விரும்புகின்றனர். முதலாளியமற்றும் ஏகாதிபத்திய காலகட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சி போன்ற ஒரு கட்சியே தற்போது தேவைப் படுகிறது. அதனைப் போன்ற ஒருகட்சியில்லாமல் எதிரியின் ஒடுக்கு முறையை  மக்களால் தூக்கியெறிந் திட முற்றிலும் சாத்தியமற்றதாகும். நாம் கம்யூனிஸ்டுகள்.எதிரியைத் தூக்கி யெறிவதற்கு மக்களுக்கு வழிகாட்ட விரும்புகிறோம். ஆகவேநமதுபடையின் அணிவகுப்புகளைச் சிறந்த நிலையில் வைத்தாக வேண்டும். நாம் ஒழுங்காக அணிவகுத்துச் சென்றாக வேண்டும். நமது துருப்புகள் அதாவது நமது கட்சி உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து    அது தேர்ந்தெடுக்கப்பட்ட துருப்புகளாக இருக்க வேண்டும். நமது ஆயுதங்களும் சிறந்த ஆயுதங்களாக இருக்க வேண்டும். அதாவது நமது கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் விஞ்ஞான முறையின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். அத்தகைய தத்துவஆயுதம்தான் நமது ஆயுதமாகும். இந்த நிலைமைகள் இல்லாமல் எதிரியை நம்மால்தூக்கியெறிய முடியாது. -மாவோ-

கட்சி என்பது ஒரு வர்க்கத்தின் அரசியல் ரீதியான உணர்வு பெற்ற வளர்ச்சி அடைந்த பிரிவாகும்; இது அந்த வர்க்கத்தின் முன்னணி படையாகும். அந்த முன்னணி படையின் வலிமை அதில் உள்ளவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் ஒரு 100 மடங்கு அதிகமானதாகும்.... நூறு மடங்கு அதிகமானதாகும்.(லெனின்தொகுப்பு நூல்கள் தொ 19. 406 ).

வரலாற்றில்தனக்குரிய பாத்திரத்தை உணர்ந்து கொள்கிற பாட்டாளி வர்க்கம், மற்ற சுரண்டப்படும் வர்க்கங்களின் முன்னணி படையாக தன்னை அமைத்துக் கொள்கிறது. இந்த வர்க்கங்களில் முதன்மையானது குட்டி முதலாளி வர்க்கமாகும். பாட்டாளி வர்க்கம் அவ்வர்க்கங்களுக்குரிய தலைமையை வழங்குகிறது; அவர்களது ஆதரவை வென்றெடுக்கிறது அதேவேளை அந்த வர்க்கங்கள் தம்முடன் இயக்கத்துக்குள் கொண்டு வரும் ஊசலாட்டங்களையும் திசைவிலகல்களையும் எதிர்க்கிறது. பாட்டாளி வர்க்கமே ஒரு சுதந்திரமான பாட்டாளி வர்க்க கட்சியின் தலைமையின் கீழ் அமைப்புக்குள்ளாக்கப்பட்டு இருந்தால் தான் அதை சாதிக்க முடியும். (லெனின் தொகுப்பு நூல்கள் தொ 7 , 415 ).

முன்னணி படை என்ற வகையில் தன் கடமையை நிறைவேற்று வதற்காக கட்சியானது பாட்டாளி வர்க்கத்துக்கும் குட்டி  முதலாளி வர்க்கத்திற்கு உள்ள பல்வேறு பிரிவுகளுக்கும் இடையே உள்ள உறவுகளையும் பாட்டாளி வர்க்கத்திற்கு உள்ளே இருக்கிற பல்வேறு பிரிவுகளுக்கு இடையே உள்ள உறவுகளையும் சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும். (லெனின் தேர்வு நூல்கள் தொ 31, 74 ).

அதிகாரமாற்றத்திற்குப் பிறகு இந்திய பொருளாதாரம் ஏகாதிபத்திய அடிமைத்தளைகளிலிருந்து விடுதலை பெறவில்லை என்பதை சுட்டிக்காட்ட கீழ் வரும் உண்மை போதுமானவையே பெரும் வணிக மூலதனத்தின் பிடியானது விலகுவதற்கு பதிலாக மென்மேலும் இறுக்கமானது ஆங்கிலேய முதலாளித்துவவாதிகள்  இங்கு செழித்து வளருவதற்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என்று அவர்களுக்கு 1946 இல் நேரு உறுதி அளித்தார். பற்பல அதிகாரப்பூர்வமான தீர்மானங்கள் வாயிலாகவும் பேச்சுக்கள் மற்றும் இன்ன பிறவற்றின் மூலமாகவும் இந்திய அரசாங்கம் ஏகாதிபத்திய மூலதனத்திற்கு வரவேற்பினை வழங்கியது. பரந்து விரிந்த கிராமப் பகுதிகளின் நிலவிய நிலப்பிரப்புத்துவ அல்லது அரைநிலப்பிரப்புத்துவ உறவுகளைப் பொருத்தமட்டில் அடிப்படை மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை. நிலப்பிரப்புத்தின் சில கோர வடிவங்கள் மட்டுமே களையப்பட்டன. இந்தியாவில் ஜனநாயக புரட்சி அல்லது விவசாய புரட்சி ஏதும் நடைபெறவில்லை. கிராமப்புறத்தில் உள்ள சொத்துடமை வடிவத்தில் மாற்றம் ற்பட்டாலும் பெரிய மாறுதல் நிகழவில்லை எனலாம்”.

சரி நடைமுறை பணிபற்றி

மக்கள் என்னும் கடலில் மீன்களாக நீந்தி வரும் கம்யூனிசப் புரட்சியாளர்களுக்கும் புரட்சிகர அணிகளுக்கும் மக்களிடையே ஆற்றவேண்டிய புரட்சிப் பணிகளைப் பற்றி ஒருங்கிணைந்த கண்ணோட்டம் புரிதலையும் உருவாக்குவதே நமது கடமையாக இருக்கின்றது, முயல்வோம்.

மார்க்சியவாதிகள் இயக்கவியல் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தை தங்கள் அணிகளுக்கு மட்டுமன்றி பரந்துபட்டதிரளான மக்களுக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டும். உழைக்கின்ற பெரும் திரள் மக்கள் இந்தக் கண்ணோட்டத்தை பற்றிக்கொண்டு முதலாளித்துவ கண்ணோட்டத்தை (திரிப்புவாதிகளையும்) நிராகரிக்காத வரையில், எதிரியை தோற்கடிப்பது என்பது அசாத்தியமாகும்.

அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தின் படி உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடே சமுதாயத்தை உந்தி முன்தள்ளி செல்வதற்கு தலையாய காரணமாகும். இம்முரண்பாட்டுத் தீர்வே ஒரு புதிய சமுதாயம் எழ வழிவகுக்கிறது. இம் முரண்பாட்டின் பிரதான அம்சம் உற்பத்தி சக்திகள் ஆகும்.(உழைக்கும் மக்கள்).

இந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தி இருப்பதுதான் இந்திய சமுதாயத்தை பின் தங்கிய நிலையிலே வைத்திருக்கிறது. பிற்போக்கு சக்திகளின் தளைகளில் இருந்து உற்பத்தி சக்திகள் விடுபடும் பொழுது ஒரு புதிய சமுதாயம் உருவாகிறது. அப்படி என்றால் இந்த உற்பத்தி சக்திகளில் தலையாய மற்றும் பிரதான பிரச்சினையாகிறது.

அது பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் உள்ள உழைப்பே அன்றி வேறல்ல எனவே மக்கள் திரள் அதாவது உழைக்கும் மக்கள் பின்தங்கிய உற்பத்தி உறவுகளின் தளைகளில் இருந்து விடுபட்ட உடன் புதிய உற்பத்தி உறவுகளை கொண்ட ஒரு முற்போக்கான புதிய சமுதாயம் பிறக்கிறது.

"பொருள்களின் வளர்ச்சிக்கான அடிப்படை காரணம் அப்பொருளுக்கு வெளியே இல்லை; ஆனால், அவற்றிற்குள்ளேயே அவற்றின் உள் முரண்பாடுகளிலேயே உள்ளது" என்று இயக்கவியல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.

மூலதனத்துடனான உழைப்பின் மோதல், அவை இரண்டுக்கும் இடையிலான கடுமையான போராட்டத்தின் மூலம் தான் தீர்க்கப்படுகிறதே ஒழிய அவற்றிற்கு வெளியில் உள்ள சக்தியால் அல்ல.

மூலதனத்தின் பிரதான சக்தி அதன் சொந்த பலத்தில் - அதாவது அரசு எந்திரத்தைத் தலையாய அங்கமாகக் கொண்டிருக்கிற அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் - அடங்கியுள்ளது. அதுபோலவே, உழைப்பின் சக்தியும் அந்த சொந்த பலத்திலேயே -அதாவது பாட்டாளி வர்க்கக் கட்சியைத் தலையாய அங்கமாக கொண்டுள்ள அதன் ஒட்டு மொத்த அமைப்பின் பலத்தில்- அடங்கியுள்ளது.

ஆனால், இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில், உழைப்பாளரில் ஒரு பகுதியினரைக் கொண்டதே பொதுவுடைமைக் கட்சி. எனவே சமூதாயத்தை மாற்ற புரட்சி நடத்துவது என்பது கட்சி மட்டுமே செய்ய கூடியது அல்ல;உழைப்பாளர் அனைவரும் ஒட்டுமொத்தமாக செய்வதாகும்; பொதுவுடமைக் கட்சி புரட்சிக்கு சித்தாந்த தலைமை அளிக்கிறது. ஆனால், அது தனது சொந்த பலத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வெற்றி பெறுவது ஒருபோதும் முடியாது. எனவே பொதுவுடமைக் கட்சி என்ற தேர் ஆனது மக்கள் திரள் என்ற அச்சாணியை உறுதியாக கொண்டிருக்க வேண்டும். ஒரு பொதுவுடமை கட்சி அல்லது மார்க்சிய குழு பரந்துபட்ட மக்களின் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு பணியாற்றுமானால் அது அச்சாணி அற்ற தேர் போன்றதாகும் , அதன் இதர பகுதிகள் எவ்வளவு அழகாக மிகச் சரியாக இருந்தாலும் உண்மையான பொருளில் அது தேர் ஆகாது. அதாவது, பரந்துபட்ட மக்களிடமிருந்து பிரிந்து தனிமைப்பட்ட ஒரு கட்சி பொதுவுடமைக் கட்சியே அல்ல.

"ஒரு தத்துவம் மக்களால் பற்றி கொள்ளப்பட்டு விட்டால் அது ஒரு பௌதிக சக்தியாகி விடுகிறது" என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டி யுள்ளார். தொழிலாளி வர்க்க சித்தாந்த்தால் மக்கள்திரளை ஆயுத பாணியாக்கும் இக் கடமைதான் எந்த ஒரு நேர்மையான பொதுவுடமைக் கட்சியும் மேற்கொள்ள வேண்டிய கடமை ஆகும்.  பரந்துபட்ட மக்கள் தமக்குச் சொந்தமான தத்துவத்தைப் பற்றி கொண்டு அதன்படி நடக்க துணியும் போது தமது குருதியை உறிஞ்சி கொண்டிருக்கும் அட்டைகளையும் நச்சு கிருமிகளையும் சீறி எழுந்து ஒரே அடியாக அழித்தொழிப்பர். கட்சி மக்களிடம் இருந்து பிரிந்து தனிமைப் பட்டிருந்தால் இது சாத்தியமில்லை.

ஏனெனில் மக்கள் தாமாகவே தமக்கு சொந்தமான தத்துவத்தைப் பற்றி கொள்ள முடியாது. மக்களுக்கு அவர்களுடைய வர்க்கத்தின் நலன்களைப் பற்றி போதிப்பதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களை அமைப்பாக திரட்டுவதுமான இந்த இமாலயப்பணியையேநாம்மக்களிடையேயான பணி என்கிறோம்.( நடைமுறை பணி).

மக்களிடையேயான பணியின் பாத்திரம் தத்துவார்த்த ரீதியில் நிலை நாட்டப்பட்ட பின் சில நடைமுறைப் பிரச்சினைகளை எழுகின்றன. அவையாவன:

(1). மக்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகின்றோம்?

(2). மக்களிடம் ஒரு கம்யூனிஸ்ட் கடைப்பிடிக்க வேண்டிய போக்கு எவ்வாறு இருக்கவேண்டும்?.

(3). மக்களை பயிற்றுவிப்பதிலும் அமைப்பாகத் திரட்டுவதிலும் என்ன முறைகள் கையாளப்பட வேண்டும்?.

மக்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகின்றோம்?

பொதுவாக மக்கள் என்று நாம் குறிப்பிடும் போது உற்பத்தியில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்கும் அடிப்படை வர்கங்களையே அதாவது தொழிலாளர்கள் விவசாயிகளை யே குறிப்பிடுகின்றோம்.

ஆக தத்துவமும் நடைமுறைக்கான உறவு என்ன பார்ப்போம்!

நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிபிஐ ஆகட்டும் 60 ஆண்டுகளுக்கு முன்தோன்றிய சி பி எம் ஆகட்டும் 50 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிபிஐஎம்எல் ஆகட்டும் இன்று அவர்களுடைய நடைமுறை திட்டத்தில் தோல்வி கண்டு உள்ளார்கள்தானே?1925 ல் தோன்றி இ..க இருந்து அதற்கு பின் தோன்றிய CPMமும் ஏன் CPI(ML) ஏன் அதற்கான இலக்கை அடையாவில்லை?

அப்படி என்னும் பொழுது அவர்களுடைய நடைமுறையில் ஏதோ சிக்கல்தான் உள்ளது.  100 ஆண்டுகள் 60 ஆண்டுகள் 50 ஆண்டுகள் ஆகியும் அவர்களின் ஏற்பட்ட தோல்வியை அவர்கள் மறுபரிசீலனை செய்தார்களா அந்தத் தோல்விக்கான பாடத்தில் இருந்து அவர்கள் என்ன மாறி உள்ளார்கள் ஒவ்வொரு செயலையும் நடைமுறைப் படுத்துவதற்கு அவர்களுக்கான ஒரு திட்டம் தேவைப்படுகிறது. அந்தத் திட்டத்தின் தோல்விதான் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி என்னும் பொழுது அந்த திட்டத்தில் எப்படி தோல்வி அடைந்தார்கள்? அவர்கள் பரிசீலிக்க தயாரில்லாமல்  ஒருபக்கம் பாராளுமன்றம் மூலம் சமாதான வ்ழியில் சோசலிசத்தை நிர்மாணித்து விடலாம் என்ற மார்க்சியம் அல்லாத காவுத்ஸ்கிய குருசேவிய பாணியிலான நடைமுறை இது ஆபத்தில்லாது. ஆளும் வர்க்கத்துடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டே அவர்கள் இவர்களுக்கானவழிவிடும்வரை காத்திருந்து அடிமைகளாக வாழ சொல்லும் தந்திரம் இவைதான் இவர்களின் நடைமுறை.

அடுத்து இன்று இந்திய சமூகத்தில் எது சரியான திட்டமாக இருக்கும் அதற்கான ஆய்வையும் அதற்கான புரிதலையும் ஏற்படுத்தாமல் திடீரென்று நடைமுறை என்பது எவ்வகையில் சரியாக இருக்கும்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்-பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயர்த்துவது, ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் வெற்றி பெறுவது என்பதுதான் உழைக்கும் மக்களின் போராட்டத்தின் முதல் நடவடிக்கை ஆகும்- கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இருந்து.

உழைக்கும் வர்க்க அதிகாரம் பற்றி லெனின்  எழுதினார்:-வர்க்கப் போராட்டத்தை மட்டும் ஏற்பவர்கள் மார்க்சியவாதிகள் ஆகிவிடமாட்டார்கள் ... வர்க்கப் போராட்டத்தை ஏற்பதும் பாட்டாளி வர்க்க  சர்வாதிகாரத்தை ஏற்பது வரை விரிந்து செல்பவனே மார்க்சியவாதியாவான்.மார்க்சியவாதிக்கும் சாதாரண சிறு (அதே போல் பெரு)முதலாளிக்கும் இடையே உள்ள மிகவும் ஆழமான வேறுபாடாக இதுவே அமைகிறது.மார்க்சியம் பற்றிய உண்மையான புரிதலையும் அதை ஏற்றுக் கொள்வதை சோதித்து அறிவதற்கான உரைக்கல்லும் இதுதான் (லெ.தொ.நூ.  25. 411)

இவ்வாறு மார்க்சிவாதி பற்றி லெனின் வரையறுப்புக்கு உள்ளேயே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய கருத்தாக்கம் நுழைந்து விடுகிறது.எனவே நாம் இவ் வரையறுப்பை ஏற்றுக் கொள்வோமானால் மார்க்சியம் பற்றிய தற்காலத்தில் நிலவும் முரண்பாடுகள் பற்றிய விளக்கங்களை இனம் பிரித்தறிவதில் இவ்வரையறுப்பை நாமும் ஒரு உரைக்கல்லாகப் பயன்படுத்துவோம்.

வர்க்க சமுதாயம் சுரண்டலையே அடிப்படையாகக் கொள்கிறது.சுரண்டுபவர்கள் ஆளும்வர்க்கமாகும் சுரண்டப்படுபவர்கள் ஆளப்படும் வர்க்கமாகவும் அமைகிறார்கள் ஆளும்வர்க்கம் அரசின் வழியாக தனது ஆட்சியை திணிக்கிறது.

அரசு என்பது ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை வன்முறையோடு ஒடுக்கும் உறுப்பு. அதன் முதன்மையான கருவிகள் ராணுவம் போலீஸ்ஆகும்.தமது கரங்களில் அதிகாரத்தை குவித்துக் கொண்டுள்ளவர்கள் ஒரு தனிப்பட்ட வர்க்கமாக இருப்பது தான் அரசின் சிறப்பம்சமாகும் (லெ.தொ. நூ 1 419).

எனவே வர்க்க சமுதாயத்தின் ஒவ்வொரு வடிவமும் - அடிமை சமுதாயம், நிலப் பிரப்புத்துவச் சமுதாயம் முதலாளித்துவ சமுதாயம் இவை ஒவ்வொன்றுமே - ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரம்ஆகும்.அதாவது முதலாளித்துவ  சமுதாயத்தில் இது அநேகமாக ஜனநாயகம் இருக்கலாம் ;இது அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையை கொண்ட பாராளுமன்ற தேர்தலையும் அனுமதிக்கலாம்;ஆயினும் அது இன்னும் ஒரு சர்வாதிகாரம் தான் - ' பாராளுமன்ற வடிவம் என்ற முகமூடி தரித்த முதலாளி வர்க்க சர்வாதிகாரம்' தான் (லெ.தொ.நூ30 100).

பாட்டாளி வர்க்கத்துக்கு கல்விப் புகட்டுவதற்கும் போராட்டத்துக்காக அதற்குப் பயிற்சி அளிப்பதற்கும் முதலாளித்துவஜனநாயகம் விலைமதிபற்ற தாகஉள்ளது என்றாலும் அது எப்போதும் குறுகலான போலித்தனமான மாய்மலம் நிறைந்த பொய்யான ஒன்று அது எப்போதும் வசதி படைத்தவர்களுக்கு ஜனநாயகமாகவும் றியவர்களுக்கு மோசடியாக இருக்கிறது (லெ.தொ.நூ28 108).

எனவே மிக உறுதியான தீர்மானகரமான புரட்சிகர ஜனநாயக உணர்வோடு (லெ.தொ.நூ 21.409) முதலாளி வர்க்க ஜனநாயக உரிமைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழிலாளர் களிடம் வற்புறுத்திகூறிய அதே வேளையில் லெனின் பாராளுமன்ற வழிமுறையை கொண்டு அவர்கள் அதிகாரத்தை வென்றெடுக்க முடியும் என்று நினைப்பது ஒரு பிரம்மை என்றும் எச்சரித்தார். இதுதான் அவருக்கும் அவர் காலத்திய புரட்டல்வாதிகளுக்கும் இடையிலிருந்த முதன்மையான பிரச்சினையாகும்.

இரண்டாம் அகில தலைவர்களைப் பற்றி பேசும் இடத்தில் சொல்லளவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்வது தான் மிகவும் ஆபத்தான விஷயம்,பாட்டாளி வரர்க்க சர்வாதிகாரம் என்பதை சொல்லளவில் ஏற்றுக்கொண்டு கூடவே பெரும்பான்மை யோரின் சித்தம் அனைவருக்கும் வாக்குரிமை முதலாளித்து பாராளுமன்ற கொள்கை முதலாளி வர்க்க அரசு எந்திரத்தை முழுமையாக அழிக்கப்பட்டு உடைக்கப்பட்டு சுக்கு நூறாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஒதுக்குதல் ஆகியவற்றை கள்ளத்தனமாக கொண்டு வருவதுதான் இப்போதைய நலுவல்கள் சீர்திருத்தவாத புதிய ஓட்டைகள் ஆகியவைதான் மிகவும் அஞ்ச தக்கவை. இடதுசாரி கம்யூனிசம் - இளம் பருவக் கோளாறு என்ற நூலில் ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ரஷ்யப் புரட்சியின் அனுபவத்தி லிருந்து ஒரு நாட்டில் புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவதற்கு மார்க்சிய சித்தாந்த அறிவை நாம் பெற வேண்டிதன் அவசியம் குறித்து கூறியுள்ளதையும், ரஷ்யாவில் கம்யூனிஸ்டு கட்சி உருவாகி வளர்ந்து புரட்சியை சாதித்த வரலாற்றிலி ருந்தும் மார்க்சிய சித்தாந்த அறிவை நாம் பெற வேண்டியதன் அவசியம் குறித்து நாம்புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். இடதுசாரி கம்யூனிசம் - இளம் பருவக்கோளாறு எனும் நூலில் லெனின் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“1917-20-ல் முன்பின் கண்டிராத மிகக் கடினமான நிலைமைகளில் போல்ஷ்விசமானது மிகவும் கண்டிப்பான மத்தியத்துவத்தையும் எஃகு உறுதி வாய்ந்த கட்டுப்பாட்டையும் நிறுவி அவற்றை வெற்றிகரமாக கட்டிக்காக்க முடிந்ததற்கு ரஷ்யாவின் வரலாற்றுச் சிறப்பியல்கள் பலவும் தான் காரணம்.

ஒருபுறத்தில், மார்க்சியத் தத்துவம் எனும் உறுதி மிக்க அடித்தளத்தின் மீது 1903-ல் போல்ஷ்விசம் உதித்தெழுந்தது. இந்தப் புரட்சிகரத் தத்துவம் பிழையற்றதாகும் என்பது, இதுஒன்றுமட்டும்தான் பிழையற்ற தாகும் என்பது, பத்தொன்பதாம் நூற்றாண்டு முழு வதிலுமான உலக அனுபவத்தால் மட்டுமின்றி, இன்னும் முக்கியமாய் ரஷ்யாவில் புரட்சிகரச்சிந்தனையின் விசாரங்கள், ஊசலாட்டங்கள், தவறுகள், ஏமாற்றங்கள் ஆகியவற்றின் இந்த அனுபவத்தாலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் மிகவும் கொடிய, மிகவும் பிற்போக்கான ஜாரிசத்தால் ஒடுக்கப்பட்டு வந்த முற்போக்குச் சிந்தனை சுமார் அரை நூற்றாண்டாய்கடந்த நூற்றாண்டில் ஏறத்தாழ நாற்பதாம் ஆண்டுகளிலிருந்து தொண்ணூறாம் ஆண்டுகள்வரையில் --பிழையற்ற புரட்சிகரத் தத்துவத்தை ஆவலுடன் தேடி வந்தது; இத்துறையில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்; இறுதி முடிவாகக் கருதக் கூடியவை ஒவ்வொன்றையும் கண்ணும்கருத்துமாய், தளர்வில்லா ஊக்கத்துடன் கவனித்து வந்தது. ஈடிணையற்ற துன்பமும் தியாகமும்,ஈடிணையற்ற புரட்சிகர வீரமும், நம்புதற்கரிய முனைப்பும், அயராத தேடலும், ஆராய்ச்சியும், நடைமுறைச் சோதனையும், ஏமாற்றமும், சரிபார்த்தலும், ஐரோப்பிய அனுபவத்துடனான ஒப்பிடலும் நிறைந்த அரை நூற்றாண்டுக்காலத்தில் அனுபவித்த வேதனையின் வாயிலாய் ரஷ்யாவானது, பிழையற்ற ஒரேயொரு புரட்சித் தத்துவமான மார்க்சியத்தை வந்தடைந்தது.

ஜாரிசத்தால் அரசியலாளர்கள் நாடுகடத்தப் பட்டு வந்ததன் விளைவாய், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புரட்சிகர ரஷ்யா, வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத அளவுக்கு வளமான சர்வதேசத் தொடர்பு களும், உலகப் புரட்சி இயக்கத்தின் வடிவங்களையும் தத்துவங்களையும் பற்றிய அருமையான தகவல்ஞானமும் பெறலாயிற்று.

தத்துவமெனும் இந்தக் கருங்கல் அடித்தளத்தின் மீதுஎழுந்தபோல்ஷ்விசமானது,  மறுபுறத்தில், உலகில் வேறு எங்கும் ஒப்புவுமை காண இயலாத அனுபவச் செழுமை வாய்ந்த பதினைந்து ஆண்டுகால (1903-17) நடைமுறை வரலாற்றினைக் கடக்கலாயிற்று. அந்த பதினைந்து ஆண்டுகளின் போது இந்நாடு கண்ட புரட்சிகர அனுபவத்துக்கும், அதிவேகமாகவும் பல்வேறு வகைப் பட்டதாகவும் வரிசையாக வந்த வெவ்வேறு இயக்க வகைகளுக்கும்-சட்டப்பூர்வமானதும் சட்டவிரோதமானதும், அமைதியானதும் புயலின்மூர்க்கம் கொண்டதும், தலைமறை வானதும் பகிரங்கமானதும், சிறு குழுக்களின் அளவிலானதும் பரந்த வெகுஜன வீச்சு கொண்டதும், நாடாளுமன்ற வடிவிலானதும் பயங்கரவாத வடிவிலானதும் ஆகிய விதவிதமான இயக்க வகைகளுக்கும் -- ஏறத்தாழ ஒப்பானவற்றையுங்கூட வேறு எந்த நாடும் கண்டதில்லை. வேறு எந்தநாட்டிலும் நவீனச் சமுதாயத்தின் எல்லாவர்க்கங்களுக் குறிய போராட்டத்தின் இத்தனை விதமான வடிவங்களும் வகைகளும் முறைகளும் இவ்வளவு குறுகியகால வரம்பினுள் ஒன்று குவிந்ததில்லை. இந்தப் போராட்டம் நாட்டின் பிற்பட்ட நிலை காரணமாகவும், வியக்கத்தக்க வேகத்தில் முதிர்ச்சியுற்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் அனுபவத்தின்;இறுதி முடிவாகக்; கருதக் கூடியவற்றுள் பொருத்தமானவற்றை மிகுந்த ஆவலுடனும், வெற்றிகரமாகவும் கிரகித்துக் கொண்டது” (லெனின் தேர்வு நூல்கள், தொகுதி 10, பக்கம் 190) 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி நடத்தி வெற்றி பெற்றதற்கு, ரஷ்யாவின் சிறப்பு இயல்புகள்தான் காரணம் என்கிறார் லெனின்.

 அந்த சிறப்பு இயல்புகள் என்ன? ஒரு புறத்தில், மார்க்சியத் தத்துவம் எனும் உறுதி மிக்க அடித்தளத்தின் மீது 1903-ல் போல்ஷ்விசம் உதித்தெழுந்தது என்கிறார் லெனின். அதாவது மார்க்சியம் என்ற சித்தாந்தத்தை உள்வாங்கி, அறிவு வளர்ச்சி பெற்ற புரட்சிகர சக்திகளின் கூட்டு முயற்சியால் தான் அங்கே போல்ஷவிசம் என்ற தொழிலாளர்களின் கட்சி உறுவானது என்கிறார். இதனையே புரட்சிகர தத்துவம் இல்லாமல் ஒரு புரட்சிகர இயக்கம் இல்லை என்ற கோட்பாட்டை லெனின் நமக்கு வகுத்துக்கொடுத்தார். இதன் மூலம் ஒரு கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்குவதற்கு மார்க்சிய தத்துவப்புரிதல் எவ்வளவு அவசியமானது என்பதை இங்கே லெனின் விளக்குகிறார். ஆனால் இந்தியாவில் அடிப்படையான மார்க்சிய அறிவு வளர்ச்சி குறைவானவர்கள் எல்லாம் தங்களை கம்யூனிஸ்டுகள் என்றும், தங்களுக்குத் தெரியாத விசயங்கள் எதுவுமே இல்லை என்றும் தலைகனம் மிக்கவர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்களே. இது சரியா? சிந்திக்க வேண்டும். இத்தகைய அரைகுறையாக மார்க்சியத்தை தெரிந்து கொண்டு பிரச்சனைகளை மார்க்சிய தத்துவ வெளிச்சத்தில் பார்க்காமல், அகநிலையாக பிரச்சனைகளை பார்த்து அவர்களது உணர்வுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பார்த்து முடிவுகள் எடுத்து செயல்படுவதால், பிரச்சனைகளை தீர்க்க முடிவதில்லை. என்ற அனுபவத்திலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ளாமல்,தொடர்ந்து அகநிலைவாத கண்ணோட்டத்தில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் இவர்களால் சமூகப் பிரச்சனையை பலஆண்டுகாலம் ஆன பிறகும் தீர்க்க முடிய வில்லை.

ரஷ்யப் புரட்சியின் அனுபவத்தி லிருந்தும் இவர்கள் பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சியின் வரலாற்றைஇவர்கள் படிப்பதே இல்லை. இன்னும் சிலர் ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சியின் அனுபவம் இங்கே பொறுந்தாது என்கிறார்கள்.

மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புரட்சிகரத் தத்துவம் பிழையற்றதாகும் என்பதும், இது ஒன்று மட்டும்தான் பிழையற்றதாகும் என்பதும், பத்தொன்பதாம்நூற்றாண்டு முழுவதிலுமான உலக அனுபவத்தால் மட்டுமின்றி, இன்னும் முக்கியமாய் ரஷ்யாவில் புரட்சிகரச் சிந்தனையின் விசாரங்கள், ஊசலாட்டங்கள், தவறுகள், ஏமாற்றங்கள் ஆகியவற்றின் இந்த  அனுபவத்தாலும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது என்கிறார் லெனின்.

இவ்வாறு உருவாக்கப்பட்ட புரட்சிகர தத்துவம் (திட்டம், போர்த்தந்திரம், செயல் தந்திரம் அமைப்புக் கோட்பாடுகள்) பிழையற்றதாகும் என்றார் லெனின். அது பிழையற்றது என்பது உலகம் முழுவதிலு முள்ள பல நாடுகளின் அனுபவத்திலிருந்தும், ரஷ்யாவின் அனுபவத்திலிருந்தும் நடைமுறையில் நிருபிக்கப்பட்டுவிட்டது என்கிறார் லெனின். மேலும் ரஷ்யாவில் இந்ததத்துவத்திற்கு எதிராக போராடியவர்கள், ஊசலாடியவர்கள், தவறு செய்தவர்கள், மக்களை ஏமாற்றியவர்களின் எதிர்ப்பிரச்சாரங் களாலும் இந்த தத்துவத்தை தோற்கடிக்க முடியவில்லை என்கிறார் லெனின். இதன் மூலம் அங்கு உருவாக்கப்பட்ட திட்டமானது மார்க்சியம் பற்றிய தெளிவான கண்ணோட்டத்திருந்து உருவாக்கப்பட்டதால் அந்த திட்டம் பிழையற்றதாக இருந்தது என்பதையே லெனின் இதன் மூலம் நமக்கு எடுத்துக்காட்டுகிறார். ரஷ்யாவில் மிகவும் கொடிய, மிகவும் பிற்போக்கான ஜாரிசத்தால் ஒடுக்கப்பட்டு வந்தமுற்போக்குச் சிந்தனை சுமார் அரை நூற்றாண்டாய் --கடந்த நூற்றாண்டில்ஏறத்தாழநாற்பதாம் ஆண்டுகளிலிருந்து தொண்ணூறாம் ஆண்டுகள் வரையில்--- பிழையற்ற புரட்சிகரத் தத்துவத்தை ஆவலுடன் தேடி வந்தது என்கிறார் லெனின். அதாவது ஜாரின் கொடூரமான சர்வாதிகாரஆட்சிநடந்துகொண்டிருக்கும் போதுதான் ரஷ்யா விலுள்ள தொழிலாளர்களும், அறிவுஜீவி களும், சமூகத்தை மாற்றுவதற்கான முற்போக்கு சித்தாந்தத்தை ஆவலுடன் தேடிக்கொண்டிருந்தார்கள் என்கிறார் லெனின். அத்தகைய முற்போக்கான தத்துவம்தான் மார்க்சியம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்றும் அதற்காக பல காலம் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்கிறார் லெனின்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை

குறுகியகா இடைவெளியிளான 1933 மற்றும் 1934-35 ஆண்டுகள் தவிர்த்து சிபிஐயின் வரலாறு முழுவதும் சந்தர்ப்பவாத வரலாறே பின்னர்  சிபிஎம் வரலாறும் அவ்வாறே இருந்தது என்று தோழர்சுனிதிகுமார்கோஷ்தன்னுடைய  நக்சல்பாரி முன்பும்பின்பும்நூலில் குறிப்பிடுகிறார்.இந்த உருவகம் சிபிஐ தலைவர்களுக்கு பொருத்தமாக இருந்தது எனினும் சாதாரண கம்யூனிஸ்ட் ஊழியர்களுக்கு பொருந்தவில்லை.அர்ப்பணிப்பு வீரம்தியாகம் போன்ற பண்புகளைகொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஏகாதிபத்யதிற்கு எதிராகவும் உயர்மட்ட காங்கிரஸ் தலைவர்களையும் உள்ளடக்கியிருந்த ஏகாதிபத்தி உள்ளூர் கூட்டாளிகளுக்கு எதிராகவும் தன் எழுச்சியாக பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள் போதிய அரசியல் ஞானம் இல்லாத காரணத்தால் ஜோஷி போன்றவர்களால் மக்கள் ஏமாற்றப்பட்டனர்.  இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய காலங்களில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகவும் அதனுடைய பாதம் தாங்கிகளுக்கு எதிராகவும் கம்யூனிஸ்டு களின் தலைமையின் கீழ் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள் என்றும் சிபிஐ யின் தலைமை செய்த மோசடியால் தான் எதிர் புரட்சி வெற்றி பெற முடிந்தது என்றும் ஏற்கனவே கண்டோம்.(105)

ஜோசி முதல் ரணதிவே வரையிலான வரலாறு அப்பட்டமான வலது சந்தர்ப்பத்தில் இருந்து தீவிரஇடதுசாரி துணிச்சல் வாதத்துக்கு பாய்ந்த வரலாறாகவும் தெலுங்கானா போராட்டம் போன்ற விவசாய புரட்சிகளை துரோகம் இழைத்த வரலாறாகவும் இருந்தது.

ஏகாதிபத்தியத்தின் நேரடியான அல்லது மறைமுகமான ஆட்சியின் கீழ் உள்ள ஒரு நாட்டில் ஜனநாயக புரட்சியானது ஏகாதிபத்திற்கு எதிராகவும் நிலப் பிரபுவத்துக்கு  எதிராகவும் நடத்தப்படுகிறது. ஆனால் சோசலிச புரட்சியானது மூலதன ஆதிக்கத்திற்கு எதிராக நடத்தப்படுகிறது. அவை இரண்டும் வெவ்வேறு கட்டங்களாக இருக்கின்றன ஒன்று மற்றொன்றுக்கு முன்பு நடைபெறுகிறது.ஜனநாயகப் புரட்சியின் இலக்குகள் எட்டப்பட்ட பிறகுதான் சோசலிச புரட்சி வெற்றிகரமாக நிறைவேற்றிட முடியும். இரண்டு புரட்சியையும் ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியும் என்பது வாய் சவடால்தானே தவிர வேற அல்ல.மாவோ கூறியது போல ஒற்றைப் புரட்சி குறித்தகோட்பாடு புரட்சி கிஞ்சிற்றும் தொடர்பில்லாத கோட்பாடே..…(அதே நூல்).

எனவே ரணதிவே அரசியல் மற்றும் அமைப்பு இரண்டிலும் புரட்சிக்கு பதிலாக குழப்பத்தை ஏற்படுத்தினார்.குறிப்பான நிலைமைகளை புறந்தள்ளி அவர் வீதிகள் சிறைச்சாலைகள் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் போன்ற எதுவாயினும் இங்கு அச்சமற்று வழிகாட்டுதல் போர் குணம் மிக்க நடவடிக்கை போன்றவற்றின் முன்னுறுத்துகின்ற துணிச்சல்வாத வழியை போதித்தார். குண்டுகளையும் அமில பல்புகளையும் பயன்படுத்துவது தான் போர்குணம் மிக்க நடவடிக்கையின் முதன்மையான கூறாக விளங்கியதுதான் நகர்ப்புற பகுதிகளில் இடதுசாரி துணிச்சல் வாதத்தைகடைப்பிடித்துக்கொண்டிருந்ததாகவும் கிராமப் பகுதிகளில் வலது சந்தர்ப்பவாத பாதையை பின்பற்றியதாகவும் பின்னாளில் ரணதிவே ஒப்புக்கொண்டார். ஒன்று அல்லது இரண்டு அரசியல் தலைமை குழு உறுப்பினர்களை மட்டுமே சார்ந்திருந்த ரணதிவே. கட்சியின் கொள்கைகளை தீர்மானிப்பது தேர்ந்தெடுக் கப்பட்டு மாநில குழுக்களை களைப்பது அதற்கு பதிலாக தனக்கு விருப்பமானவர் களை கொண்டு புதிய மாநில குழுக்களை உருவாக்குவது கட்சியின் மத்தியகுழு மற்றும் அரசியல் தலைமைகுழு உறுப்பினர்களுக்கு கண்டனம் தெரிவிப்பது போன்றவற்றை மேற்கொள்வதன் உரிமை தனக்கு தானே எடுத்துக் கொண்டார் ரண்திவே. அவரது தலைமையின் கீழ் கட்சி இயங்கி இரண்டுக்கும் மேற்பட் ஆண்டுகளில் மத்திய குழு கூட்டம் கூட்டப்படவே இல்லை அரசியல் தலைமை குழு கூட்டங்களும் மிக அரிதாகவே நடைபெற்றன. (.107)

மே16,1950தேதி சுயவிமர்சனம்  சமர்ப்பித்தவுடன் அவர் இயன்றவரை தன்னைதானே தரம் தாழ்த்திக் கொண்டார் தான் கட்சியின் முதுகில் குத்தி விட்டேன் என்பதுதான் அவ்வரிக்கையின் சாரம்சமாக இருந்தது.(history of the Communist party of India. VII pp535-538)

கட்சியின் இரண்டாவது மாநாட்டில் மறுசீரமைப்பு கூட்டம் ஜூன் 1 வரை நடத்தினர் அதில் ராஜேஸ்வர ராவ் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது. தேவ் காலத்தின் போது கட்சியின் தலைமை குழு உறுப்பினராக விளங்கிய ராஜேஸ்வர ராவ் தெலுங்கானா போராட்டத்தின் தலைவராக இருந்தவர்.அவர் மாவோவின் புதிய ஜனநாயக கோட்பாட்டை ஆதரித்து ஜனநாயகம் மற்றும் சோசலிச புரட்சிக்கான கட்டங்களை வேறுபடுத்திப் பார்த்தவர். அரசியலமைக்கப்பட்ட மையக்குழு மாவோவை  பாராட்டியதோடு ரணதிவே மாவோவை அவதூறு  செய்தும் துணிச்சல்வாத பாதையை முன்னுறுத்தி உருவாக்கி இருந்த ஆய்வுகளான இந்தியாவின் மக்கள் ஜனநாயக புரட்சிக்கான போராட்டத்தில் மூலயுத்தியும் செயல்யுத்தியும் இந்தியாவில்  விவசாய பிரச்சினை குறித்து மற்றும் மக்கள் ஜனநாயகம் குறித்து என்ற மூன்று ஆவணங்களையும் திரும்பப்பெற்றது. கட்சி உறுப்பினர்கள் மற்றும் அனுதாபிகள் மத்தியில் சுற்று விடப்பட்டது. பழைய அரசியல்குழுதலைமையையும் அதனுடைய செயல்பாடுகளையும் கண்டித்தது.ஆங்கிலேய ஏகாதிபத்தியம் போலியான சுதந்திரத்தை இந்தியாவின் மீது திணித்தது என்றும் நிலப்பிரப்புதுவ வர்க்கத்துடன் கந்து வட்டி மூலனத்தின் நெருங்கிய உறவை கொண்டிருந்தது பெரும் முதலாளிகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டிருந்தது அதிகாரம் மாற்றத்திற்குப் பிறகு ஏகாதிபத்தி இளைய பங்காளிகளாக மாறினாரே தவிர ஒட்டுமொத்த தேசிய முதலாளித்துவ வர்க்கத்தினர் அல்ல என்று கூறியது. சீனாவின் பாதை தான் இந்தியாவின் பாதை என்று சுட்டிக்காட்டப் பட்டு கிராமப்புற பகுதிகளில் கொரில்லா போர் முறையை மேற்கொள்ள விடுதலை செய்யப்பட்ட ப்பகுதிகளையும் விடுதலைப் பகுதிகளில் உருவாக்கி நாடுதளுவிய அளவில் அதிகாரத்தை கைப்பற்றும் நடவடிக்கை மேற்கொள்வதன் மூலமாக நாட்டை ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து விடுவிக்க நிலப்பிரப்புதுவத்தை ஒழித்து இந்திய புரட்சி நிறைவேற்ற முடியும் என்று அந்த கடிதம் மேலும் கூறியது.(letters of the new central committee to all party members and SYMPATHIZERS in Rao (Ed), pp 644)

சிலப் பகுதிகளை தவிர்த்து இந்தியா முழுவதும் கொரில்லா போர் தொடங்குவதற்கான புறவய நிலைமைகள் சாதகமாக இருக்கின்றன",என்றும் "கட்சிதான் அவற்றை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்"என்று மறுசீரமைப்பு மையக்குழு கமிட்டி தன் கருத்தை தெரிவித்தது.மக்களுடைய ஆயுதப்போரால் ஆளும் வர்க்கத்தை வீழ்த்துவதற்கும் மொத்த மக்கள் தங்களுடைய விதியை தாங்களே நிர்ணயிப்பதற்கு ஏற்ற சூழல் நிலவுகிறது என்றும் அது மேலும் கூறியது. புதிய மையக்குழுவானது சில குறிப்பிட்ட வரையறைகளை உருவாக்கியது.அது இந்தியாவின் சுதந்திரம் போலியானது என்றும் இந்திய முதலாளித்து வர்க்கத்தினர் மத்தியில் ஏகாதிபத்தி மூலதனத்துடன் தங்களுடைய நலன்களை நேர்த்தியாக ஒன்றிணைந்திருக்கிறது என்றும் நிலப்பிரபுத்துவ அங்கத்தினர் நெருக்கமாக இணைப்பு உள்ளது என்றும் பெரும் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு சுதந்திரமான சந்தை உருவாக்கும் ஒரு பகுதியாகவும் விவசாய புரட்சிதான் இந்திய புரட்சி அச்சாணியாகும் என்றும் அது வரையறுத்தது. ஆனால் நிலவுகின்ற சூழல் குறித்து மையகுழு மேற்கொண்ட மதிப்பீடானது முற்றிலும் அகவயம் சார்ந்த மதிப்பீடாக இருந்தது.ஜோசியின்  காலத்தின் போதும் அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கடைப்பிடிக்கப்பட்ட கண்மூடித்தனமான துணிச்சல்வாத போக்காலும் பல ஆண்டுகளாக புரையோடிப் போயிருந்த சந்தர்ப்பவாதமானது கட்சியை நிர்மூல மாக்கி இருந்தது என்பதை ஒப்புக்கொண்டது. ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் மக்களின் முன்பு ஏற்கனவே ரத்தக் காட்டேரிகளின் அரசாங்கமாக அம்பலப்பட்டு நிற்கிறது என்பதும் காங்கிரஸ் கட்சியை குறித்து பழைய மதிப்பீடுகள் மாயைகள் முற்றிலும் நொறுங்கிவிட்டன  என்பதும் ஆயுதம் தாங்கிய எழுச்சிக்கு காலம் கனிந்து விட்டது என்பதும் கண்மூடித்தனமான மதிப்பீடாக  இருந்தது.மக்கள் மட்டுமின்றி சிபிஐ தலைவர்களானஅஜய்கோஷ் எஸ்.வி.காட்டே எஸ்..டாங்கே போன்றோரும் மற்றும் பலரும் காங்கிரஸ் தலைமை குறித்த குறிப்பாக நேரு குறித்து மாயையிலிருந்து விடுபட்டு இருக்கவில்லை.மேலும் அவர்கள் சந்தர்ப்பவாத நோயிலிருந்து குணமடையவில்லைஇதே நோய்க்கு 60 களுக்குப் பிறகு ராஜேஷ்வரராவும் ஆட்பட்டது தான் வரலாற்று பக்கங்கள் நமக்கு சொல்லுவன.

தலைவர்களும் கட்சியுடன் அந்த கட்டத்தில் எது அவசியமாக இருந்ததெனில் நமது சமுதாயத்தில்உள்ளஉண்மையானநிலைமைகளை ஆய்வு செய்து அதனை வெகுமக்கள் அமைப்புகள்வர்க்கப்போராட்டங்கள்ஆகியவற்றின் மூலமாக மக்களுடைய துயருக்கான காரணங்களை அவர்களது தெளிவுபடுத்தி அவர்களை பிரசாரம் செய்துஎழுச்சியூட்டி ஆயுதம் தாங்கியபோராட்டத்திற்காக அவர்களை அணி திரட்டும் பொருட்டு மார்க்சிய லெனினியத்தையும் நமது நாட்டினுடைய வரலாற்று புரிந்துணர்வும் உறுதியான சித்தாந்தம் மற்றும் அரசியல் அடிப்படையில் நன்கு ஒழுங்கமை்பட்ட கட்சி கட்டுவதுதான் அவசியமாக இருந்தது. இவை அனைத்திற்கும் பொறுமையாகவும் விடாமுயற்சியும் கடின உழைப்பும் தேவைகளாக இருந்தன அந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்காக அறைகூவல் விடுப்பது என்பது தயாரிக்கப்பட்ட பணிகளில் செய்ய மறுப்பதற்கு ஒப்பாகும்(110)

கட்சி அமைப்புகளால் தெலுங்கானாவில் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த ஆயுதம் தாங்கி போராட்டம் ஆதரிக்க வேண்டும் என்பதும் இந்த முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதும் உண்மைதான். நிஜாமால்ஆட்சி செய்யப்பட்ட பழைய ஐதராபாத் மாகாணத்தில் உள்ள தெலுங்குபேசும்பகுதியிலானதெலுங்கானாவில் கொடூரமான நிலப்பிரப்புத்துவ ஒடுக்குமுறை கோலோச்சியது. சிபிஐயின் தலைமையின் கீழ் வழிநடத்தப்பட்ட ஆயுதம் தாங்கி விவசாயிகள் போராட்டம் தான் தெலுங்கானா முதல் போராட்டமாக இருந்தது.40களின் தொடக்கத்தில் நில பிரபுத்துவதிற்கு எதிரான இயக்கமாக வழிநடத்திக் கொண்டிருந்த ஆந்திர மகா சபை கம்யூனிஸ்டுகளின் தலைமையின் கீழ் வந்த பின்பு அவர்கள் அந்த அமைப்பை நிஜாமுக்கு எதிரான நிலப்பிரப்புத்துவ ஒடுக்குமுறைக்கு  எதிரான ஜனநாயக அமைப்பு என்ற நிலையிலிருந்து விவசாயிகள் இளைஞர்கள் வணிகர்கள் மற்றும் பிற நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோர் கொண்ட ஐக்கிய முன்னணி ஒன்றை உருவாக்கி போர்க்குணம் மிக்க அமைப்பாக மாற்றினார்கள். இயக்கமானது வாரங்கள் மற்றும் நலகுண்ட மாவட்டங்களுக்கும் கம்மம் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் பரவியது. நிலப் பிரப்புக்களின் குண்டர்படைகளை எதிர்கொள்வதற்காக தொண்டர்படை உருவாக்கப்பட்டு அவர்களுக்குபயிற்சிஅளிக்கப்பட்டது.1947ஆம் ஆண்டில் அதிகார மாற்றம் நிகழ்ந்த காலகட்டத்தில் இந்திய ஒன்றியத்துடன் ஹைதராபாத் மாகாணத்தை இணைப்பதற்கு நடைபெற்ற போராட்டத்தில் மாநில காங்கிரஸ் உடன் சிபி.அய் இணைந்து அங்கிருந்து விவசாயிகளின் போராட்டத்தில் சட்ட விரோதமாக விதிக்கப்பட்டிருந்த வரி விதிப்புகளுக்கு ஒரு முடிவு கண்டது.நில பிரபுக்களாலும் பெரும் நிலக்கிழார்களாலும் முன்பு ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நிலங்களை கைப்பற்ற தொடங்கினார்கள்.

நிஜாம் ஹைதராபாத் மாகாணத்தை சுதந்திர அரசாக மாற்றுவதற்கு பேராவல் கொண்டிருந்தார். ஹைதராபாத் சுதந்திரமான  முஸ்லிம் அரசாக மாற்றுவதை விரும்பினார்.  நிஜாமின் அரவணைப்பில் மஜிலையே இந்தியா என்ற முஸ்லீம் அமைப்பு ராஜாக்கர்களை உருவாக்கியது. அவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சமாக இருந்தது நிஜாமின் காவல் துறையின் இந்த அமைப்பு கிராமங்களை கொள்ளை இட்டு போராட்டக்காரர்கள் என்று சந்தேகப்படுபவர் களை கொன்றொழித்து அவர்களுடைய பெண்களை பாலியல் வன்முறைக்கு பலியாக்கி பயங்கரவாத வன்முறை தாண்டவத்தை கட்டவிழ்த்து விட்டது. அதே வேளையில் நிஜாமின் காவல் படையையும் இந்த குண்டர்படையையும் எதிர்த்து போரிட பத்தாயிரம் உறுப்பினர்களை கொண்ட கிராமபாதுகாப்பு குழுக்களையும் 2000 க்கு அதிகமான நிரந்தர கொரில்லா குழுக்களையும் கட்டமைத்தது  ... நலகொண்டா, வாரங்கல் மற்றும் கம்மம் மாவட்டங்களில் ஏறத்தாழ 3000 முதல் 4000 கிராமங்கள் வரை விடுவிக்கப்பட்டு அவற்றின் நிர்வாகம் விவசாயிகளால் நிர்வாக படுத்தப்பட்ட கிராம ராஜ்யங்கள் மேற்கொள்ளப்பட்டன.நிலப் பிரப்புக்களிடமி ருந்து பறிக்கப்பட்ட நிலங்களும் தானியம் கால்நடை ழுகருவிகள் போன்றவற்றை ஏழை மற்றும் நிலமற்ற விவசாயிகள் மத்தியில் விநியோகம் செய்யப்பட்டது.கரீம்நகர் மேடக் மாவட்டங்களின் சில பகுதிகளில் தொடர்ச்சியானபாய்சலில்முன்னேறியதோடு அது ஒட்டுமொத்த தெலுங்கானாவையும் அதன் சுற்றுப்புற பகுதிகளையும் அச்சுறுத்தியது.(Sundarayya peasant movement in India 1920-1950 Page 198).(112)

சி.பி.எம். கட்சி தோன்றுதல்...

கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி போக்கானது மெல்ல மெல்ல வளர்ந்து கட்சியே பிளவுபடும்சூழலுக்குஇட்டுச்சென்றது. ஏற்கனவே தெனாலியில் கூட்டப்பட்ட அதிருப்தியாளர்களின் மாநாட்டில் அறிவித்தற்கு ஒப்ப,  கல்கத்தாவில் 1964-ம் ஆண்டு ஆக்டோபர்  31 முதல் 7 நாட்களுக்கு நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த பேராயம் கட்சி இரண்டாக பிளவுபட்டதை உணர்த்தியது. ஒப்பற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாக நாடகமாடிய நேருவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தோடு தொடங்கியது பேராயம் சி.பி.ஐ யின் வெளிப்படையான துரோகத்தை எதிர்த்து, புதியதாக அழைப்பு விடுத்திருக்கும் தலைவர்களின்உணர்ச்சிமயமானஉரைகளும் ஆக்கபூர்வமாக செயல்பட்ட தோழர்கள் பலரையும்அதில்இணைத்தது.  ஏறத்தாழ சுமார் ஒரு வருடகாலமாக புதியதாக உருவாக்கப்பட்ட கட்சிக்கென தோழர்கள் உழைத்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் புதியகட்சியின்  (தொடக்கத்தில் இரு கட்சிகளுக்குமே சி.பி.ஐ எனத்தான் பெயர் இருந்தது. சின்னங்கள் ஒதுக்கீடு தொடர்பாக எழுந்த சிக்கலில் தேர்தல் கமிஷனின் ஆலோசனைப் படியே புதியகட்சி சி.பி..(எம்) எனஆனது.)  சி.பி.(எம்) கட்சியின் தலைமைக் குழுவானது 1967-ம் ஆண்டு தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறும்,  காங்கிரஸ் அமைச்சரவையை தூக்கியெறியுமாறும் அணிகளுக்கும்,  மக்களுக்கும் அரைகூவல் விடுத்தது. மேலும் எதிர் கூட்டணி உருவாக்க பிற கட்சிகளோடு பேச்சுவார்த்தை தொடங்கியது.  இதன்மூலம் தெலுங்கானா பாணியிலான ஆயுதம் தாங்கிய வர்க்கப் போராட்டம் என்பதை நடைமுயைில் அது கைவிட்டது. சி.பி..யோடு ஆழமாக கருத்து வேறுபாடுகளோடு வெளிவந்த தோழர்களுக்கு புதிய கட்சியின் இந்த அழைப்பு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. தேர்தலை சந்தித்த கட்சி எட்டு மாநிலங்களில் காங்கிரஸை தோற்கடித்தது. கம்யூனிஸ்டுகளின் கூட்டணி மூலம் தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தது.

கட்சியின் அப்போதைய செயலாளர் சுந்தரையா மத்திய அமைச்சர் குல்சாரிலால் நந்தாவுக்கு சரணாகதி கடிதம் எழுதியது, .எம்.எஸ்  பாக்கிஸ்தானுக்கு எதிராக போர் செய்த ஜவான்களுக்கு மக்களை இரத்த தானம் செய்யக் கோரியது என படிப்படியாக சி.பி.எம். மின் செயல்பாடுகளின்மீது புரட்சிகரத்தோழர்களுக்கும் அதிருப்தி தோன்றியது. சாரம்சத்தில் சி.பி., சி.பி.எம் ஆகிய இரண்டு திரிபுவாதிகளுக்கும் இடையே கோட்பாட்டு ரீதியில் எந்த வேறுபாடுகளும் இல்லை என்பதை சி.பி.எம்மின் நடைமுறை உணர்த்தியது. தங்களின் புரட்சிகர நோக்கமானது நவீன திரிபுவாதிகளால் பாழாவது கண்டு மெய்யான புரட்சியாளர்கள் பதைபதைத்தனர். உட்கட்சியில் நவீன திரிபுவாதம் குறித்தும் அதை அம்பலப் படுத்தியும், புரட்சிகரத் தோழர்கள் போராடினர்.

நக்சல்பாரியின் எழுச்சி ஏன்?

தோழர்களின் உட்கட்சிப் போராட்டம் இப்படியிருக்க இந்தச் சூழலில்தான் மேற்கு வங்கத்திலிருந்து சேதியொன்று ஒட்டுமொத்த இந்திய புரட்சியாளர் உள்ளங்களிலும் வசந்தத்துக்கான இடி முழக்காமாய் இறங்கியது. அதுதான் நக்சல்பாரி.

திரிபுவாதிகள் மற்றும் நவ திரிபுவாதிகளின் மக்கள் விரோதப் போக்கை சித்தாந்த ரீதியில் உறுதியாக அம்பலப் படுத்துவோம்.  என்ற பதாகையின் கீழ் பல புரட்சியாளர்கள்ஒன்றிணைந்தனர்.  அதன்பால் ஈர்க்கப்பட்டர். இதுதொடர்பாக சி.பி.எம் முடன்  நடைபெற்ற விவாதத்தின் போது எவ்வித  ஜனநாயக மத்தியத்துவமும் அற்று  தமிழகத்தில் அப்பு உள்ளிட்ட பல தோழர்கள் கட்சியில் இருந்து வலுகட்டாயமாகவெளியேற்றப்பட்டனர்.  கோவை மாவட்டத்தில் மட்டும் கட்சியில் இருந்த மாவட்டக்குழுஉறுப்பினர்களில் 21 பேரில் 14 பேர் நீக்கப்பட்டனர். பல கட்சி அமைப்புகள்கலைக்கப்பட்டன. இந்நிலையில்தான் தோழர் அப்பு கல்கத்தா சென்று நக்சல்பாரியின் முக்கியக் தலைவரான தோழர் சாருமஜூம்தாரைச் சந்தித்தார். நவம்பர் 11,1967ல் கல்கத்தாவில் உள்ள ஷாஹித்மினார் மைதானத்தில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் அப்பு நக்சல்பாரிப் பாதையின் உன்னதம் குறித்து உரையாற்றினார். அதைத் தொடர்ந்த நாட்களில் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவிலும் பங்கெடுத்தார். மேலும் சாரு மஜூம்தாரைப் பொதுச் செயலாளராகக் கொண்ட சி.பி..(மா.லெ)மையக் குழுவிலும் தமிழகத்திலிருந்து தோழர் எல்.அப்பு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் மக்களின் விடுதலைக்காக தீரமுடன் போராடிய முற்போக்கு இயக்கங்களில் தமிழக வரலாற்றில் நக்சல்பாரிகளுக்கு என்றைக்கும் முன்வரிசையில் இடம் உண்டு. படுகொலைசெய்யப்பட்டவர்கள் ஒருபுறம் என்றால் அடக்குமுறைகளுக்கு ஆளானவர்கள், சித்திரவதை செய்யப் பட்டவர்கள், ஆயுள்தண்டனைகளுக்குஆளாகி சிறைகளிலிலேயே தனது இளமைக் காலங்களைத் தொலைத்தவர்கள் என தனக்குள்ளே ஒரு மாபெரும் தியாகவரலாற்றை கொண்டிருக்கிறது இந்த நக்சல்பாரி இயக்கம். எல்லா தடைகளையும் கடந்து நக்சல்பாரி இயக்கம் மக்களை ஒளிமிகுந்த ஓர் வருங்காலத்திற்கு அது அழைத்துச் சென்றதா என்றால் அவர்களின் உயரிய அர்பணிப்பும் தியாகமும் சரியான மார்க்சிய லெனினிய புரிதல் இன்மையால் இடதுசாரி சாகசவாதத்தால் எதிரிக்கு ஏற்படுத்த வேண்டிய பேரிழப்பிற்கு பதில் தன்னையே அழித்துக் கொண்டது. மார்க்சியத்தின் புரட்சிகர ஆன்மாவை நக்சல்பாரி இயக்கமானது நிகழ்ச்சி நிரலில் வைத்து, ஒடுக்கப் பட்ட மக்களுக்கு புரட்சிகர கட்சியின் தலைமையளிக்க முன்னெடுத்த இயக்கம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உயர்த்திப்பிடித்து, புரட்சியின் மூலம் சுரண்டும்வர்க்கஅரசைத்தகர்ப்பது, சோசலித்துக்கான அமைதிவழி மாற்றத்தை நிராகரித்து, புரட்சிகர பலாத்காரத்தை ஏற்றல், பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக கம்யூனிஸ்ட் கட்சியை மாற்றியமைத்தல், புதியஜனநாயகப்புரட்சி, தொழிலாளி, விவசாயிகள் கூட்டணி அமைத்தல் போன்ற அரசியல் நிலைப்பாடுகளை அங்கீகரித்தது. ஆனால் வலது திருத்தல்வாத போக்குகளுக்கு சித்தாந்தரீதியில் பலத்த அடி கொடுக்காமலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்குவதற்கான நெறிமுறைகள் மூன்றாம் அகிலத்தினால் உருவாக்கப்பட்டதை கவனத்தில் கொள்ளாமலும் கட்சி தொடங்கிய காலத்தில் குருச்சேவ் திருத்தல்வாதத்தை எதிர்த்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவப் போராட்டமான மாபெரும் விவாதத்தின் நிலைப்பாடுகளை கிரகித்துக் கொள்ளாமலும் கட்சி கட்டப்பட்டது. கொரில்லாப் போரைத் தவிர மற்ற எல்லா போராட்ட வடிவங்களும் அமைப்புவடிவங்களும்நிராகரிக்கப்பட்டன. இடது குறுங்குழுவாதத்தை புரட்சி வழியாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது. இன்று ஒரு கட்சிக்கு பதிலாக பல குழுக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையானது பாட்டாளிவர்க்கப் போராட்டம் சந்தித்துக் கொண்டு இருக்கும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையாகும். இந்த சூழ்நிலைகளை மாற்ற வேண்டியது கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். அனுபவத்தின்வாயிலாகவும், அரைகுறையாக கோட்பாடுகளை கிரகித்துக் கொண்டதன் மூலம் இன்று அறியப்படும் நிலைப்பாடுகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் நடைமுறைகள், மற்றும் ரசிய புரட்சியிக்கு முன்னும் பின்னும் எழுந்ததிருத்தல்வாதத்தையும்சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து லெனின் அவர்கள் கடுமையாக போராடிய அனுபவத்தை கிரகிக்காத நிலை, அதாவது ட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் எழுந்த ஒவ்வொரு போக்கையும் எவ்வாறு லெனின் முறியடித்தார் என்பதை பார்க்காத தன்மை ஆகியவற்றை தொகுப்பாக பார்க்கும் பொழுது முதலில் புரட்சியைவிட ஒரு புரட்சிகர தத்துவத்தை நிலை நாட்டுவதுதான் முக்கியமானது என்பதை லெனினியமும் இந்திய கம்யூனிஸ்டுகளின் அனுபவமும் நமக்கு சுட்டிகாட்டுகிறது. ஆகவே நமது தோழர்களின் உயரிய தியாகத்தை போற்றும் நாம், அதற்கு ஒரு ஒன்றுபட்ட புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி வேண்டும் என்பதனை உணரவேண்டும். அதற்காக நாம் மார்க்சிய தத்துவத்தை பயில வேண்டும். அதன் அடிப்படையில் இந்தியப் புரட்சிக்கான குறிப்பான பொதுத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதை உணர்ந்து நமது நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.கம்யூனிஸ்டுகளாகிய நாம் வெறுமனே பொருளாதாரப் பிரச்சனைகளை மட்டும் எடுத்துக் கொண்டு நமது அணிகளுக்கும் மக்களுக்கும் போதனை அளித்து அரசியல் அதிகாரத்திற்காகப் போராடுவதோடு நாம் நின்றுவிடக் கூடாது. அதற்கு மேலும் மார்க்சிய தத்துவம் மற்றும் கம்யூனிச பண்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். நமதுமக்களுக்குமார்க்சிய,  கம்யூனிசத்தை போதித்து மக்களை சித்தாந்தரீதியாகவளர்க்க வேண்டும். மேலும் நம்மிடையே கம்யூனிச பண்புகளை திட்டமிட்டு வளர்க்க வேண்டும், கம்யூனிச பண்புகளுக்கு எதிரான தீயபண்புகள் நம்மிடம் இருக்குமானால் அதனை களைவதற்கு நாம்முயற்சி செய்ய வேண்டும் மேலும் மக்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும். பல தியாகங்கள் செய்து புரட்சி நடத்திய, சோவியத்து ரஷ்ய கம்யூனிஸ்டுகட்சிக்குள்ளும், ஆட்சிக்குள்ளும் தனிவுடமை சிந்தனையின் அடிப்படையி லான தீயபண்பாளர்கள் உள்ளே நுழைந்து இருந்ததால்தான் பல லட்சக்கணக்கான மக்கள் ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட சோவியத்து அரசை மிகவும் எளிதாக வீழ்த்த முடிந்தது என்ற வரலாற்றிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் இதுவரை அடைந்துள்ள தோல்விகளுக்கு காரணம் தம்மிடமுள்ள குறைகள்தான் என்பதை உணரத் தவறுவது. தமது தோல்விகளுக்கு பிறரை காரணமாக காட்டிக்கொண்டு தமது தவறான வழியிலேயே செல்வது. தம்முடைய தவறுகளை சுட்டிக்காட்டி, தம்மை எதிர்த்துப் போராடுபவர்களின் மீது முத்திரை குத்தி அவர்களை எதிரிகளாக பாவித்து செயல்படுவது. இது போன்று பல குறைகள் கம்யூனிஸ்டுகளாகியநம்மிடம்காணப்படுகிறது. இந்ததீய குணங்களிலிருந்து நாம் விடுபட வேண்டியது மிகமிக அவசியமாகும். 

உயிர்தியாகம் புரிந்த கம்யூனிஸ்டுகளால் நடத்தப்பட்டபோர்க்குணமிக்கபோராட்டங்களை வன்முறைகொண்டு ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்ட பின்பு அந்த கம்யூனிச அமைப்புகளுக்கு பொறுப்பிற்கு வந்த தலைவர்களிடம்தியாககம்யூனிஸ்டுகளிடமிருந்த கம்யூனிச பண்புகள் இல்லை. குறிப்பாக தியாக உணர்வு இல்லை, உழைக்கும் மக்களை நேசிக்கும் பண்பு இல்லை, உழைக்கும் மக்களையும் கம்யூனிஸ்டுகளையும் ஒற்றுமை படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஒவ்வொருவரும் தன்னை மிகச்சிறந்த அறிவாளியாக கருதிக்கொண்டு தனக்கென்று பேரும்புகழும்வேண்டும் என்ற அடிப்படை யிலேயே செயல்பட்டனர்.

ஒரு நாட்டில் சமூக மாற்றம் நடக்க வேண்டுமானால், அந்த மாற்றத்திற்கு தலைமை தாங்கி, வழிநடத்துவதற்கு ஒரு ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சி தேவை. கம்யூனிஸ்டுகள் பல்வேறு பிரிவாக பல அமைப்புகளில் பிளவுபட்டு இருந்தால் அங்கு சமூக மாற்றம் நடப்பதற்கு வாய்பே இல்லை என்று லெனின் விளக்குகிறார். இவ்வாறுகம்யூனிஸ்டுகள் பிளவுபட்டிருப்பது ஆளும் வர்க்கங்களுக்கு சாதகமானதே ஆகும். இந்த சாதகமான சூழலை பயன்படுத்தி ஆளும் வர்க்கமானது தனது அரசை பயன்படுத்தி உழைக்கும் மக்களின் மீது கொடூரமான தாக்குதலை தொடுக்கிறார்கள். கம்யூனிச குழுக்களும் அதற்கு எதிராக போராட முடியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். உழைக்கும் மக்களின் வாழ்வு மேலும் மேலும் கீழே போய்க்கொண்டிருக்கிறது.

ஆகவே கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட்டு சமூக மாற்றத்திற்கானதிட்டத்தை,பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளக் கூடிய திட்டத்தை உருவாக்க வேண்டியதும், அதன் அடிப்படையில் ஒரு ஒன்றுபட்ட கட்சியை உருவாக்க வேண்டியதும் முதன்மையான கடமையாகும். இத்தகைய ஒரு ஒன்றுபட்ட கட்சி உருவாகிவிட்டால், அந்த கட்சியை உழைக்கும் மக்கள் பின்பற்றினால் சமூக மாற்றமானது எவ்விதமான தடையும் இல்லாமல் நடக்கும். அப்படியே தடைகள் வந்தால் உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தால் தடைகள் தகர்க்கப்படும்.

இத்தகைய ஒன்றுபட்ட கட்சியை கட்டுவதற்கு தடையாக இருப்பது எது? கம்யூனிஸ்டுகளிடமுள்ள குறைபாடே காரணமாகும். கம்யூனிஸ்டுகள் செய்யும் தவறுகளே காரணமாகும். உண்மையிலேயே உழைக்கும் மக்களின் நல்வாழ்விற்காக பாடுபட வேண்டும் என்ற லட்சிய உணர்வுள்ள கம்யூனிஸ்டுகள், இதனை உணரவேண்டும். தங்களிடத்தில் குறைகள் உள்ளது என்பதையும், தாங்கள் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என்ற உணர்வை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியது என்ன? தற்போது ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்ட,பலராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டியது அவசியமாகும். அதனை பற்றி தொடர்ந்து விவாதிப்போம் அதற்கான பணியை முன்னெடுப்போம் தோழர்களே. தொடரும்.

++++++++++++++++++++++++++++++++++++++++ 

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்