உயிரின் தோற்றம் -5முதற் கட்டத்தில்தோன்றிய உயிரினங்கள்-ஏ.ஐ.ஓபரின்

 தொடர்ந்து இலக்கு இதழ்களில் வெளிவந்த உயிரின் தோற்றம் பற்றிய கட்டுரை இத்தோடு முடிவடைகிறது இந்த நூலை PDF  வடிவில் இந்தப் பகுதியில் இணைத்துள்ளேன் தேவைபடும் தோழர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்

முதற் கட்டத்தில்தோன்றிய
உயிரினங்கள்-..ஓபரின்

கடல்களிலும், சமுத்திரங்களிலும் முதன்முதல் தோன்றிய கோயசர்வேட் துளிகளுக்கு உயிரென்னும் பண்பு இல்லை. ஆனால் வளர்வதற்குத் தேவையான சூழ்நிலை இருந்ததால் ஆரம்பக்கட்ட உயிரினங்களாக மாறக்கூடிய தன்மை அவற்றுள் பொதிந்து கிடந்தன.

பொருள்களின்பரிணாமத்தில்முன்கட்டங்களிலும் இதே அம்சம் உண்டென்பதை முன் அத்தியாயங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. வானஇடைவெளியிலிருந்துகரி அணுக்கள் கரி நீரகப் பொருள்களாவும் கரியின் வழிப் பொருள்களாகவும்ஆகும். தன்மையுடையன வாகயிருந்தனவென்று முன்னர் கண்டோம். அவை, தம்முடைய அணுக்கூட்டின் ஒழுங்கான அமைப்பு, ரசாயனப் பண்புகள், இவை காரணமாக அணுக்கூட்டு எடை அதிகமாகவுள்ள பல பொருள்களாக உருவாகும் தன்மை கொண்டிருந்தன. புராதன சமுத்திரத்தில் உண்டான அத்தகைய பொருள்களில் புரதம் போன்ற பொருள்களும் இருந்தன. சிக்கலான கோயசர்வேட்டுகள் தோன்ற புரதங்கள் காரண மாயின. அவற்றின் அமைப்பு மேலும் சிக்கலாகி, அவற்றின்அணுக்கூட்டுகளில் பல ஒன்றுகூடி திரவ ரூபத்தில் நீரினின்றும் பிரிந்து வந்தன.

அவை மேலும் வளர்ச்சிப் பாதையில் முன்னேற இவ்வாறு அவை சூழலிலிருந்து குழம்பு போன்ற நிலையில் பிரிந்து வெளிவந்ததே காரணமாயிற்று. ஒரே சமயத்தில் இவ்வாறுவெளியாகும் துளிகள் ஒவ்வொன்றும் அமைப்பிலும் உள்ள அமைப்பிலும் சற்று வேறுபடுகின்றன. ஒவ்வொரு கோயசர் வேட்துளியின் தனிப்பட்ட அமைப்பும், பண்புகளும், அதனுள் நிகழும் மாறுதல்களுக்கு அடிப்படையாயின. (ஒவ்வொரு துளியில் நடைபெறும் மாறுதல் அதன் பண்பைப் பொறுத்து வேறுபட்டது) சில குறிப்பிட்ட நிலைமைகள், கோயசர்வேட் துளியினுள் நிகழும் மாறுதல்களையும், மாறுதல் முறைகளையும்நிர்ணயித்தன. (அந்நிலைமைகளாவன : ஒரு குறிப்பிட்ட பொருள் துளியில் இருப்பது அல்லது இல்லாதது; இரும்பு, செம்பு, கால்சியம் போன்ற உலோகங்களின் உப்புகள், கோயசர்வேட் துளியில் புரதங்களின் அடர்த்தி; கடைசியாக மிகவும் நிலையற்ற தன்மையுடையதாயினும் ஒரு குறிப்பிட்ட உள்ளமைப்பு உடையதாக அத்துளி இருப்பது ஆகிய நிலைமைகள்.) இவ்வாறு கோயசர்வேட் துளியின் தனி அமைப்பு, அதன் உள்ளமைப்பு ஆகியவற்றிற்கும், சூழலிலுள்ள நிலைமை அதனுள் நிகழும் மாறுதல்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொடர்பு ஏற்பட்டது. வெவ்வேறு துளிகளில் வெவ்வேறு மாறுதல்கள் நிகழ்ந்தன.

ஏறக்குறைய பல்வேறு வகையில் கோயசர்வேட்டில் நிகழ்ந்த மாறுதல்கள் அதன் வருங்காலத்தை நிர்ணயித்தன. அவற்றுள் சில பயனுள்ளவையாகவிருந்து துளிகளை நிலையுள்ளதாகவும் நீண்டநாள் நிலைத்திருப்பதாகவும் செய்தன. மற்றும் சில அழிவுப்போக்கில் மாறுதல்களை உண்டாக்கித் துளிகளை அழித்துவிட்டன.

தனி அமைப்புகள் இவ்வாறு தோன்றியது புதிய நியதிகளையும், ஒழுங்குகளையும் உண்டாக்கியது. இவை சேதனைப் பொருள் இரண்டறக் கலந்திருக்கும் கரைசலைப் பொறுத்தவை. “பயனுள்ளது”, “அழிவுள்ளதுஎன்ற சொற்கள் பெருளற்றனவாகத் தோன்றலாம். ஆனால் கரைசலிலிருந்து பிரிந்து வந்த துளிகளின் விஷயத்தில் இச்சொற்கள் பொருள் உள்ளனவையே. பயனுள்ள அல்லது அழிவுதரும் மாறுதல்களைப் பொறுத்து துளிகளின் வருங்காலம் இருக்கும்.

ஒரு சேதனப் பொருள் கரைசலில் இரண்டறக் கரைந்திருக்கும் வரை (அதாவது புராதனக் கடலில்) பொருளைப் பற்றி முழுதாக ஆராய முடிந்தது. கோயசர்வேட் துளிகளாக அவை வெளிவரும்போது மிகவும் சிக்கலான தொடர்புகள் தோன்றுகின்றன. அவை எல்லைவளத்தால்சூழப்பட்டுதனித்தன்மை பெறுகின்றன. ஒரு துளிக்கும் மற்றொரு துளிக்கும் வேறுபாடு தோன்றுகிறது. ஒவ்வொருதுளிக்கும் தனிச்சரித்திரம் உண்டாகி விடுகிறது. அதன் வருங்காலம் சூழ்நிலைமைகளையும், துளியின் உள்ளமைப்பையும் பொறுத்தது. மற்றத் துளிகள் அவற்றின் உள்ளமைப்பில் சிறிதளவுஒன்றுக்கொன்றுமாறுபடுகின்றன.

குறிப்பிட்ட சூழ்நிலைமையில் ஒரு துளி நிலைப்பதை எவை நிர்ணயித்தன? அதிகமான கூட்டணு எடையுள்ள சேதனப் பொருள்கள் கரைந்திருக்கும் கடலில் ஒரு கோயசர்வேட் துளி இருப்பதை எண்ணிப் பாருங்கள். அது பல பொருள்களின் கரைசல்கள் கலப்பதால் உண்டாகின்றது. ஒவ்வொரு துளியின் வளர்ச்சிப் பாதையையும் கவனியுங்கள். உலகத்தின் புராதனக் கடலில் கோயசர்வேட் துளி, தண்ணீரில் மட்டுமல்லாமல், பல சேதனப் பொருள்கள்கரைந்த கரைசலில் மூழ்கியிருக்கிறது. இப்பொருள்கள் கரைந்திருக்கும் பொருள்களைக் கிரகித்துக்கொண்டு பல்வேறு ரசாயன நிகழ்ச்சிகளைத் தன்னுள் நிகழ்த்துகிறது. இதுதான் அத்துளியின் வளர்ச்சிக்கு காரணம். இக்கூட்டுதலைப் போலவே சிதைவு மாறுதலும் அத் துளியினுள் நிகழ்கின்றது. இவ்விரண்டு மாறுதல்களின் வேகங்களின் பரஸ்பரத் தொடர்பு சூழ்நிலைமைகளையும் (சீதோஷ்ண நிலை, அழுத்தம், சேதனப் பொருள்கள் கடலில் கரைந்திருக்கும் அளவு, உப்புகள், அமில அளவு முதலியன) துளியின் பெளதீக ரசாயன அமைப்பையும் பொறுத்துள்ளது. கூட்டு மாறுதல்களின் வேகங்களே இக்குழம்பு போன்ற அமைப்பின் வருங்காலத்தை நிர்ணயிக்கிறது. அவை பயனுள்ள மாறுதலாகவோ, அழிவுள்ள மாறுதலாகவோ, பரிணமிக்கலாம். துளி தோன்றுவதோ, நிலைத்திருப்பதோ, அழிந்துபோவதோ இவ் வேகங்களைப் பொறுத்துள்ளன.

கோயசர்வேட் துளிகள் நீண்டகாலம் நீடித்து நிலையாக விருக்கும் தன்மை உடையன. இயங்கு சமநிலை அவற்றிற்கு உண்டு. சிதைவு மாறுதலைவிட வேகமாக கூட்டு மாறுதல்கள் அவற்றுள் நிகழ்கின்றன. இதற்கு எதிரிடையாக சில துளிகளில், குறிப்பிட்ட சூழ்நிலைமையில் சிதைவு மாறுதல்கள் வேகமாக நிகழ்ந்தால், அவற்றின் விளைவாக துளிகள் மறைந்துவிடும். அல்லது அவை தோன்ற முடியாத நிலைமையும் ஏற்படலாம். அத்துளிகளின் வாழ்க்கைச் சரித்திரம் திடீரென்று முடிவுற்றன. பொருள்களின் பரிணாம வளர்ச்சியில் இத் துளிகளுக்கு இடமில்லை. வளர்ச்சியுற்ற துளிகளே மேலும் இயங்கு சமநிலையில் நிலைத்து பரிணாம வளர்ச்சியில் இடம்பெற்றன. அந்நிலைக்கு முரண்பட்ட துளிகள் புதிய அமைப்புத் தோன்ற வழியின்றி அழிந்தன. சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத அமைப்புடைய துளிகள் சிதைந்தொழிந்தன. அவை வேறு சேதனப் பொருள்களாகி கரைசலோடு இரண்டறக் கலந்து விட்டன. அப்பொருள்களை சூழ்நிலைக்குப் பொருத்தமான துளிகள் உணவாகக் கொண்டன.

கூட்டு மாறுதல் முனைப்பாக நிகழ்ந்த துளிகள் (சிதைவு மாறுதலைவிட வேகமாக கூட்டு மாறுதல் நிகழ்தல்) நிலைத்தது மட்டுமில்லாமல் எடையிலும் பரிணாமத்திலும் பெரிதாயின. இவ்வாறாக, குறிப்பிட்ட சூழ்நிலைமைக்குப் பொருத்தமான அமைப்புடையதுளிகள் உருவத்தில் பெரிதாயின. சில யாந்திரிக இயக்கங்களின் காரணமாக இவை பகுதிகளாகப் பிரிதலும் கூடும். அவ்வாறு பிரிந்த சிசுக்களும்கூடத் தாயின் தன்மைகளைப் பெற்றிருந்தன. (அவற்றின் ரசாயன அமைப்பும், கூட்டணு இணைப்பும் முதல் துளியையே ஒத்திருந்தன.) பிரிந்தது முதல்ஒவ்வொருதுளிக்கும் தனிவாழ்க்கைப் பாதை வகுக்கப்பட்டுவிட்டது. ஒவ்வொரு துளியிலும்விசேஷமாறுதல்கள்உண்டாயின. அம் மாறுதல்களின் தன்மையைப் பொறுத்துஅவைநிலைக்கவோ, மறையவோ கூடும். சூழ்நிலை காரணமாக உள்ளமைப்பில் இயங்கு சமநிலை வாய்ந்த ஒவ்வொரு துளிக்கும் மேற்கூறிய விதி பொருந்தும். அத்தகைய துளிகளே நீண்ட நாட்கள் நிலைத்திருந்து புதிய துளிகளைத் தோற்றுவிக்கமுடியும்முற்கூறியநிபந்தனைகள் அமுலில் இருந்தால் மட்டுமே, சூழ்நிலையில் ஏற்படும் மாறுதல்களுக்கு ஏற்ப இவை தம்மை நிலைப்படுத்திக் கொள்ளமுடியும். குறிப்பிட்ட வாழ்க்கை நிலைமைகளில் எந்த மாறுதலும்துளியின் இயங்கு சமநிலையைக் கலைக்காமல் உறுதிப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் கோயசர்வேட் துளி நிலைக்கும். இந்த சூழ்நிலையில்தான் இணைப்புடைய பொருள்களின் அளவு அதிகமாயின. கோயசர்வேட் அணிகள் வளர்ச்சியுறும் அதேசமயத்தில் ஒரு திசையில் அவற்றின் தன்மையைப் பொறுத்த மாறுதல்கள் நிகழ்ந்தன. அதாவது தானே நிலைத்தலும், தன்னைப் போன்றதொன்றை முழுமையாகத் தோற்று வித்தலுமாகிய தன்மைகள் தோன்றின.

அதேசமயத்தில் துளிகள் நிலைக்கும் தன்மை அதிகப் படவே, அவற்றின் பரிணாமம் இவற்றின் இயக்கத்தின் வேகத்தை அதிகப்படுத்தி, இவற்றின் நிலைக்கும் தன்மையை வலிவுறச் செய்தன. கரைசலிலுள்ள எத்தனையோ சேதனப் பொருள்களின்துளிகளைவிட,கோயசர்வேட்துளிகள் இவ்வகையில் சிறப்பமைந்த வையாயின, ஆகவே அவை நிலைத்தன. வேறு சேதனப் பொருள்களின் துளிகளை அவை உட்கொண்டு வளர்ந்தன. ஆகவே, அவற்றின் முக்கியத்துவமும், அவற்றின் வழித்தோன்றல்களின் முக்கியத்துவமும் அதிகரித்தன.

சுலபமான அமைப்புடைய கோயசர்வேட் துளிகள் உலகிலிருந்து விரைவிலோ, மெதுவாகவோ, சிதைந்து மறைந்து விடும். சிதைந்தபின் உண்டாகும் பொருள்கள் கரைசலில் கலந்து விடும். இத்துளிகள் ஒரளவு ஸ்திரத் தன்மையுடைய வழித் தோன்றல்களை உண்டாக்கியிருந்தால் அவற்றினுள் நிகழும் ரசாயன மாறுதல்கள் விரைவாக நிகழ்ந்தாலன்றி அவையும் சிதைந்து மறைந்துவிடும். துளிகளினுள் விரைவாக ரசாயன மாறுதல்கள் நிகழ்ந்து, அவற்றில் ஓர் ஒழுங்கும், இணைப்பும் இருந்தால்தான் அத்துளிகள் நிலைக்கமு டியும்.உயிருள்ள புரோட்டோ பிளாசத்திலுள்ள ரசாயனமறுதல்களை ஊக்குவிக்கும் சாதனங்கள் என்ஸைம்கள் என்று ஐந்தாவது அத்தியாயத்தில் பார்த்தோம். என்ஸைம்களின் சக்தியும், அவை குறிப்பிட்ட திசையில் மாறுதல் நிகழஉதவுவதும்அவற்றிலுள்ள வெவ்வேறு புரதங்களின் அமைப்பைப் பொறுத்தது என்பது சமீபத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை. இவற்றில் வினைஊக்கிப் பொருள்களும், அவற்றின் திறனை மிகுதிப்படுத்தும் புரதங்களும் உள்ளன. உதாரணமாக காடலேஸ் என்ற பெயருடைய என்ஸைமின் தன்மையைக் கவனிக்கலாம். அது ஹைட்ரஜன் பெர் ஆக்ஸைடு என்ற திரவம், நீராகவும், ஆக்ஸிஜனாகவும்ஆகும். ரசாயன மாற்றத்தை ஊக்குவிக்கிறது. இதே மாறுதலை இரும்பும் ஊக்குவிக்கும். ஆனால் இரும்பைவிடக் காடலேஸ் சக்திவாய்ந்த வினைஊக்கி, ஆனால் இரும்பை, பிரோல் என்னும் சேதனப் பொருள்களோடு கூடச்செய்து அக்கூட்டுப் பொருளை வினைஊக்கியாகப் பயன்படுத்தினால் முன்பைவிட 1000 மடங்கு வேகத்தில் மாறுதல் நடைபெறும் காடலேஸ்என்ற என்ஸைம்கூட, இரும்பும், பிரோலும் கொண்ட இயற்கைப் பொருளே. ஆனால் அதைப் பயன்படுத்தினால் முன்பைவிடக் கோடி மடங்கு வேகத்தில் நிகழ்ச்சிநடைபெறுகிறது. காடலேஸில் ஒரு குறிப்பிட்ட புரதம் இருப்பதே இதற்குக் காரணம். காடலேஸிலுள்ள ஒரு மில்லிகிராம் எடையுள்ள இரும்பு இது குன்றின்மணி எடையில் பத்தில் ஒரு பங்குகூட இராது) பத்துடன் எடையுள்ள சாதாரண இரும்புக்கு (வினை ஊக்கித் திறனுக்குச்) சமம். மனிதன், செயற்கை முறைகளில் இன்னும் இயற்கையின் வினை ஆற்றலை மிஞ்சவில்லை.

என்ஸைம்களின் இவ்வசதியான சக்திக்கு அவற்றிலுள்ள புரதங்களின் அமைப்பும், இயக்கமுள்ள அணுக்கூட்டுகளின் தொகுப்புகளுமே காரணம். என்ஸைம்களின் பகுதிகளைத் தனித் தனியாக உபயோகப்படுத்தினால் அவை சக்திவாய்ந்தவையாகக் காணப்படவில்லை. அப்பகுதிகள் குறிப்பிட்ட வகையில் இணைக்கப்பட்டிருப்பதால்தான் இத்தகைய சக்தியை என்ஸைம்கள் பெறுகின்றன. என்ஸைம்களில் தொகுப்புகளை இணைத்திருக்கும் முறை என்ஸைம்களது அமைப்புக்கும்,

அவற்றில் உடற்கூறு வேலைமுறைக்கு முள்ள தொடர்பு, இவையனைத்தும் வாழ்க்கை நிலைமைகளுக்கு ஏற்ப அவை தங்களை மாற்றிக் கொண்ட விளைவாக ஏற்பட்டவை என்பது நிச்சயம். சேதனப் பொருள்களும், முதலில் தோன்றிய துளிகளும், புராதனக் கடலினுள் மெதுவாக மாறுதலடைந்தன. அசேதன வினைஊக்கிகளே (இரும்பு, செம்பு, கால்சியம் உப்புகள்) மாறுதல்களைத் துரிதப்படுத்தின. இவை புராதனக் கடலில் இருந்தன என்பதில் ஐயமில்லை. தனித்தனிச்சிறுதுளிகளில் இவ்வினை ஊக்கிப் பொருள்கள் ஆயிரக்கணக்கான வகையில் கூடின. இக்கூட்டுப் பொருள் களில் சில அதிர்ஷ்டமற்றவையாயிருந்தன. அவற்றில் நிகழ்ந்த மாறுதல்கள் மெதுவாக நிகழ்ந்ததால் அவை அழிந்துபோயின. அவை உலகினின்றும் மறைந்தன. விரைவாக மாறுதலை நிகழ்த்தக் கூடிய சிக்கலான அமைப்புடையவை மட்டும் மேலும் வளர்ச்சியுற்றன.

மேலே வருணித்த பரிணாம முறையின் படி கரை பொருள்கள் கரைசலில் இரண்டறக் கலந்திருக்கும் போது, ரசாயன வினையை ஊக்குவதற்கு உதவியாக இருக்கும் அசேதனப் பொருள்கள் செயலிழந்தன. அவற்றிற்குப் பதில் சிக்கலான அமைப்புடைய என்ஸைம்கள் தோன்றின. அவை வினை ஊக்கித் திறனில் மிகவும் ஆற்றல் படைத்தவை என்பது மட்டுமல்லாமல், குறிப்பிட்டவினைக்கு மட்டுமே வினைஊக்கி சாதனமாகப் பயன்படும்என்பதால்மிகவும் பயனுள்ளவை. குறிப்பிட்ட குழம்பு போன்ற கரைசலில், ரசாயன வினை முறையை ஒரு திசையில் நிகழ்த்துவதற்கு இவ்வென்ஸைம்கள் மிகவும் உதவின.

என்ஸைம்கள் வினையை ஊக்கும் ஒவ்வொரு ரசாயன மாறுபாட்டிலும் ஓர் ஒழுங்கும், பரஸ்பரத் தொடர்பும் இருந்தால்தான், என்சைம்கள் வளர்ச்சியுற முடியும். ஒரு குழம்பு போன்ற கரைசலில், அதன் இயங்கு சமநிலையைக் குலைக்காத முறையில் என்ஸைம்களின் வினைஊக்கி வேகங்கள்இருந்தாலொழியஎன்ஸைம்களின் வினை ஊக்கி வேகத்தால் பயனில்லை.

முதல் கோயசர்வேட்துளியில் அதனுள் நிகழும் மாறுபாடுகளிடையே, ஓர் ஒழுங்கும் பரஸ்பரத் தொடர்பும் வளர்ச்சியுறவில்லை. சூழலிலிருந்து கிரகிக்கப்பட்ட பொருள்களும், துளியினுள் உண்டாகும் கழிவுப் பொருள்களும், பல மாறுதல்களை வெவ்வேறு விதங்களில் நிகழ்த்துவது சாத்தியமாக இருந்தது. சிலவேளைகளில் இப்பொருள்களின் சேர்க்கையால் உண்டாகும் சில பொருள்கள் துளிகளின் வளர்ச்சிக்கு ஆக்கமளித்தன. வேறு பகுதிகளில் மாறுதல்கள் ஏற்பட்டு துளிகள் அழியக்கூடிய நிலை ஏற்பட்டது. அப்பொழுதுதான் கூட்டு மாறுதல்கள் இணைக்கப்பட்டு ஒருதிசையில் நிகழத் தொடங்கின. மேலும் மேலும் கூட்டுமாறுதல்கள் நிகழ்ந்தன. இயங்கு சமநிலை உறுதிப்பட்டது துளிகளும் நிலைத்தன; தனித்தனி குழம்பு போன்ற கரைசல்களை ஆராயும்போது, எந்த வகையிலாவது இப்பொருள் உண்டாகிறதா, அப்பொருள் உண்டாகிறதா என்று கவனிப்பது முக்கியமல்ல. பொருள்கள் கூடி சிக்கலான பொருள்களைத் தோற்றுவிக்கும் போது ஏற்படும், இணைப்பு, ஒழுங்கு, நியதி இவற்றையே கவனிக்க வேண்டும். ஏனெனில் அவைதான் மறுபடியும் அப்பொருள் தோன்றும் நிலையை உண்டுபண்ணும். இவ்வாறு ஒரு புதிய பண்பு தோன்றுகிறது. அதாவது புரோட்டோபிளாசம் தன்னைப் போன்றதைத் தோற்றுவிக்கிறது.

இதனடிப்படையில்தான் குழம்பு போன்ற கரைசலின் அமைப்பில் நிலையான தன்மை ஏற்படுகிறது. புரதப் பொருள்கள் மறுபடியும் ஒழுங்காக உண்டாவது இதனையே காட்டுகிறது. ஒழுங்கற்ற ஓர் இணைப்புக்கு புரத கூட்டணுத் தொடரில் இடமில்லை. ஏனெனில் பல ஒழுங்கான ஒன்றன்பின் ஒன்று வரிசையாக நடக்கக்கூடிய பல மாறுதல்களின் விளைவாக உண்டாவது புரதக்கூட்டணு. முதன் முதல் பல்வேறு வகையில் இணைக்கப்பட்டிருந்த அமினோ அமிலங்கள், ஒழுங்கான அமைப்புப் பெற்ற பின்னரே, புரத உருண்டையாக மாறின.

ரசாயன அமைப்பு நிலையாக இருக்கும் நிலைமை ஏற்பட்ட பின்னர், துளிகளின் அமைப்பிலும் நிலையானதன்மை உண்டாயிற்று. ஒரு குறிப்பிட்ட வகையில் பகுதிகள் இணைக்கப் பட்டால் ஏதோ ஒரு வகையில்என்றில்லாமல் குறிப்பிட்ட ஒழுங்கான அமைப்பு அதற்கு அமைகிறது. ஆகையால் முதலில் கோயசர்வேட்டுகள் வெளித்துண்டுதல்களுக்கு ஈடுகொடுக்கும் சக்தியில்லாத முறையில் நிலையுள்ளதாக இருந்தால் அவற்றிற்குப் பதில் நிலையான உள்ளமைப்பில் ஒழுங்குள்ள துளிகள் தோன்றின. அத்துளிகள் என்ஸைம்கள் பங்குகொள்ளும் ரசாயன மாறுபாடுகளில், கூட்டு மாறுதல்கள், சிதைவு மாறுதல்களைவிட முனைப்பாக நடக்கச் செய்யும் சக்தியுடைய உள்ளமைப்புப் பெற்றிருந்திருக்க வேண்டும்.

பல மாறுதல்களின் இணைப்பு, குறிப்பிட்ட வாழ்க்கை நிலைமைகளில் உயிர் நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் தன்மை பெற்ற அமைப்பு, (இதுதான் உயிருள்ளவற்றின் அமைப்பின் சிறப்பான தன்மை) ஆகிய படிகளுக்கு பரிணாமப் பாதை இதுதான்.

தற்காலத்தில் வாழும் மிகமிகச்சிறிய உயிருள்ள பிராணியின் அமைப்பை ஆராய்ந்து முற்கூறிய துளிகள் மேலும் சிக்கலாகி எவ்வாறு பூரணமாகியுள்ளன என்பதைநாம்அறியலாம். இந்நிகழ்ச்சிகளின்தொடர்ச்சி, பொருளுக்கு, ஒரு புதிய உருவத்தை அளித்தது. இக் குண மாறுதலின் காரணமாக உலகில் மிகச்சிறிய உயிர் தோன்றிற்று.

முதலில் தோன்றிய உயிர்கள் தற்கால[1]புரோட்டோஸோவாவை ஒத்திருந்தன. இன்று நாம் காணும் ஒற்றை ஜீவ அணுவைவிட முதலில் தோன்றிய உயிர்கள்சுலபமான அமைப்புடையவையாக இருந்த போதிலும், அவை கோய சர்வேட் துளிகளைவிடச் சிறந்தவை. ஆனால் அவற்றிற்கு ஜீவ அணுவின் சிறந்த அமைப்பு இருக்கவில்லை. வாழ்க்கையின் வளர்ச்சியில் பிற்பட்டகாலத்தில் செல் அமைப்பு தோன்றியது.


1. புரோட்டோஸோவா- ஒற்றையங்கமுடைய மிகச் சிறிய உயிர்ப் பிராணி. இவை ஒற்றை ஜீவ அணு உயிர்கள் படத்தைப் பார்க்கவும்.

ஆயிரக்கணக்கானவருஷங்கள்ஆனபின் யிர்களின் அமைப்பு வளர்ச்சியுற்றன; அவை சூழ்நிலைக்கேற்ப அவற்றின் அமைப்பு திருந்தியது. முதலில் அவை சேதனப் பொருள்களையே உட்கொண்டன. காலம் ஆக,ஆக சேதனப் பொருள்கள் குறைந்தன. மூலஉயிர்கள் ஒன்றுமாயவேண்டும்        அல்லது தங்களுக்கு வேண்டிய உணவை சூழலிலுள்ள அசேதனப் பொருள்களி லிருந்து பெறவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அவ்வாறு பெறும் வகையில் தங்களுடைய வினைமுறைகளை என்ற நிலைமை ஏற்பட்டது. சூழலிலுள்ள பொருள்கள் கரியமிலவாயுவும் நீரும்,சேதனப்பொருள்களைஉண்டாக்கக்கூடிய பொருள்கள். சில உயிர்கள் இவ்வாறுசேதனப்பொருள்களைஅவற்றிலிருந்துஉண்டாக்குவதில் வெற்றியடைந்தன. இவ்வாறு வளர்ச்சியுறும்போது சூரியனது சக்தியைக் கிரகித்து அதன் உதவியால் கரியமில வாயுவைப் பிரித்து, அதிலுள்ள கரியிலிருந்து சேதனப் பொருள்களை தங்களின் உடலிலேயே அவை தயாரித்தன. இவ்வாறு சிறிய பூண்டுகள் தோன்றின. நீலம் கலந்த பச்சை நிறமான ஆல்கே, இவ்வாறு தோன்றிற்று. (அது பூமியின் பழங்காலத் தரையில் புதையுண்டு இன்றும் கிடக்கிறது.)

மற்றைய ஜந்துக்கள் பழைய முறையிலேயே உணவு உட்கொண்டன. ஆனால் இப்போது ஆல்கே அவற்றின் உணவாயிற்று. அதிலிருந்து சேதனப் பொருள்களை அவற்றின் உடல்கள் பெற்றன. இவ்வாறு முதன் முதலில் விலங்கினங்கள் உலகில் தோன்றின. உயிரின்உதயகாலத்தில்(இக்காலத்தை     இயோஸோயிக்-காலம்என்றுவிஞ்ஞானிகள் அழைப்பர்) தாவரங்களும், விலங்குகளும், இன்று காணப்படும் பாக்டீரியா, அல்லது அமீபா போன்ற ஒற்றை அங்கஜீவிகளாக இருந்தன. வாழ்க்கையின் தொடர்ச்சியான வளர்ச்சியில் பல ஜீவ அணுக்கள் கூடிய உயிர்ப் பிராணிகள் தோன்றியது மிக முக்கியமானமுன்னேற்றமாகும். சிக்கலான அமைப்புடையனவும், பல்வேறு வகையானவுமான உயிர்ப் பிராணிகள் தோன்றின. பலகோடி வருஷங்கள் நீடித்திருந்த இயோஸோயிக் - காலத்தில் புராதன சமுத்திரத்தில் வாழ்ந்த உயிரினங்களின் தொகை அதிகமாயிற்று முற்றிலும் மாறுபட்ட பலவகைப் பிராணிகளும் தோன்றின. மிகப்பெரிய ஆல்கே பூண்டுகள் கடலடியில் முளைத்தன. அவற்றின் ஊடே மெடுஸே, மொலஸ்கா, எகிம்டெர்ம், கடற்புழுக்கள் போன்ற பிராணிகள் தோன்றின. வாழ்க்கையின்அடுத்தகட்டத்தை பாலிஸோயிக் காலம் என்றழைக்கின்றனர். பல கோடிவருஷங்களுக்கு முன் இக்காலத்தில்) வாழ்ந்தஉயிர்ப்பிராணிகளின்சடலங்களை கல்லிடைச் சின்னங்களில் காணலாம்.

ஐம்பது கோடி வருஷங்களுக்கு முன்புள்ள காலத்தை கேம்பிரியன்-காலம் என்பார்கள். அக்காலத்தில் உயிர்கள் கடல்களிலும், சமுத்திரங்களிலும்தான் வாழ்ந்தன. முதுகெலும்புள்ள விலங்குகள் (மீன், நீரிலும், நிலத்திலும் வாழ்வன, ஊர்வன, பறப்பன, விலங்குகள் முதலியன) அப்பொழுதில்லை. அதே போல் பூக்களுள்ள செடிகொடிகளோ, மரங்களோ இல்லை.)

தாவரங்களில்கடற்பாசிகள்மட்டுமேயிருந்தன. விலங்குகளில் மெடுஸே, பங்கி, அனிலிடா, டிரிலோபைட்ஸ் போன்றவை (முதுகெலும்பற்றவை) தானிருந்தன.

அடுத்த வளர்ச்சிக் காலத்துக்கு சிலூரியன் காலம் என்று பெயர். அக்காலத்தில் செடிகள்தோன்றின.முதல்முதுகெலும்புள்ள பிராணிகள் தோன்றின. இவையாவும் கடலில் தோன்றின. அவற்றின் உடல், எலும்பு போன்ற ஓட்டினால் மூடப்பட்டிருந்தது.

35 கோடி வருஷங்களுக்கு முன்பிருந்த காலத்தில்(டிவானியன்காலம் என்றழைக்கப்படும்) மீன்கள், கடல்களில் ஆழமற்ற இடங்களிலும், ஆறுகளிலும் தோன்றின. அவற்றை தாற்கால மகர மீன்களுக்கு தூரபந்துக்கள் என்று சொல்லலாம். தற்கால மீன்களான ஆசியன், ஸாண்டர், பிரீம், பைக் போன்றவை அக்காலத்தில் இல்லை. மேலும்பத்துக்கோடி வருஷங்களுக்குப்பின் (இக்காலத்தை கார்போனிபெரஸ் காலம் Carboniperoes Period என்றழைப்பர்) பூதாகரமான

தாவரங்கள் தோன்றின. (உதாரணங்கள்: பெரணி (பூக்கா தாவரங்கள்), குதிரைவால்-Horse Tail கைத்தடி போன்ற பாசி) கடற்பாறையிலும், ஆற்றங்கரையிலும், நீரிலும், நிலத்திலும் வாழும் எண்ணற்ற பிராணிகள் வாழ்ந்தன. வழுவழுப்பான அவற்றின் தோல் காய்ந்துவிடக்கூடாதாகையால் அவை நீர்நிலைகளின் அருகேயே வாழ்ந்தன. நீரிலேயே (மீனைப் போல) ஆயிரக்கணக்கில் உயிர் வித்துகள் சிதறின. இக்கால முடிவில் ஊரும் ஜந்துக்கள் தோன்றின. அவற்றின் தோலமைப்பு தோல் உலர்ந்தாலும் கெடுதல் ஏற்படாதபடி அமைந்திருந்தது. நீர் நிலைக்கு அப்பால் வெகுதூரம் சென்று வாழ இத்தன்மை அவற்றிற்கு உதவி செய்தது. அவை வெகுதூரம் பரவின. அவை உயிர் வித்துக்களைச் சிதறாமல், முட்டையிட்டன.

இருபத்திரண்டரைக் கோடி வருடங்களுக்கு முன் இக்காலத்தை பெர்மியன்காலம் என்றழைப்பர்). பூக்காத பெரணி வகைச் செடிகள் மாய்ந்து தற்கால கூர்நுனி மரங்கள் (சவுக்கு போன்றவை) தோன்றின. உலர்ந்த சீதோஷ்ணத்துக்கு ஏற்ற வகையான உடலமைப்பு பெற்ற ஊரும் ஜந்துக்கள் பெருகின. நீரிலும் நிலத்திலும் வாழும் ஜந்துக்கள் அழிந்தன. பெர்மியன் கால மடிவுக்குப் பின் பூதாகரமான ஊர்வன தோன்றிப் பெருகின. விலங்குகளோ, பறவைகளோ அக்காலத் திலும் தோன்றவில்லை.

ஊர்வன மிகப்பெருகி வாழ்ந்திருந்த காலத்தில் மரங்களும், பூக்களும், பூண்டுகளும் தோன்றின. (அவை தற்காலத்திலுள்ளவற்றை ஒத்திருந்தன.) ஊர்வன சக்தி மிகுந்தவையாக, நிலத்திலும் நீரிலும் வானத்திலும் ஆதிக்கம் வகித்தன. டினாசார்கள் என்ற பூதாகரமான ஊரும் ஜந்துக்கள் நிலத்தில் உலவித் திரிந்தன. பறக்கும் டிராகான் என்னும் பிராணிகள் வானத்தில் பறந்தன. பாம்புகளும், இட்சியோ சாரியா, பிளியோசாரியா போன்ற ஜந்துக்கள் கடலில் வாழ்ந்தன.

மூன்றரைக் கோடி வருஷங்களுக்கு முன் குட்டிபோட்டுப் பால் கொடுக்கும் விலங்கினங்கள் தோன்றின. மூன்றாவது கற்பகாலம் என்றழைக்கப்படும் காலத்தில் ஊரும் ஜந்துக்களில் பெரியவை பெரும்பாலும் மாய்ந்துவிட்டன. பலவகைப்பறவைகளும் குட்டி போட்டு, பால் கொடுக்கும் விலங்குகளும் பெருகின. அவை எண்ணிக்கையில் மற்றைய வகை விலங்குகளுக்கும் மிகுதியாயின. ஆனால், தற்காலப் பிராணிகளை அவை ஒத்திருக்கவில்லை. அக்காலத்தில் வாலில்லாக் குரங்குகள், குதிரைகள், காளைகள், மான்கள், யானைகள் போன்ற பிராணிகள் தோன்றவில்லை.

மூன்றாம் கர்ப்பகால மத்தியில்தான் படிப்படியாக நம் காலத்து பிராணிகளைப் பலவகையில் ஒத்திருக்கும் விலங்கினங்கள் தோன்றின. அக்கால முடிவில், மான், குதிரை, காண்டாமிருகம், யானைமுதலியன தோன்றின. இக்காலத்தில் வாலில்லாக் குரங்குகளும் தோன்றின. பின்பு மனிதனை ஒத்திருக்கும் குரங்குகள் தோன்றின. (AnthropoidApes)

பத்து லட்சம் வருடங்களுக்கு முன் (அதாவது மூன்றாவது கர்ப்பகால முடிவுகளும் நான்காம் கர்ப்பகால ஆரம்பத்திலும்) குரங்கு மனிதன் தோன்றினான் பிதிகாந்திரோபஸ் என்றழைக்கப்படும் அவன் குரங்குக்கும் மனிதனுக்கும் இடையிலுள்ள இணைப்புச் சங்கிலியாவான். அம்மனிதன் வேலைசெய்யச்சில கருவிகளைப் பயன்படுத்தினான். அம் மனித இனம் மாய்ந்தது. அவர்களது வழித்தோன்றல்களே நமது மூதாதையர் நான்காவது கர்ப்பகாலத்தில் நீண்ட பனிக்காலத்தில், யானை போன்ற மாமத் என்ற மிருகமும், ரெய்ன்டீர் என்ற மானும் வாழ்ந்திருந்த காலத்திலேயே மனிதனும் வாழ்ந்து வந்தான். அவன் உடலமைப்பில் தற்கால மனிதனை எல்லா வகையிலும் ஒத்திருந்தான்.

முடிவு:-பொருள்களின் வளர்ச்சியால் உலகில் உயிர் தோன்றிய விதத்தை நாம் விரிவாகத் தெரிந்து கொண்டோம். செஞ்சூட்டுப் பக்குவத்திலுள்ள வானக் கோளங்களின் மேற்பரப்பில், கரி அணு ரூபத்தில் பிரிந்து கிடக்கிறது. உலகின் மேற்பரப்பில் கரி, கரி நீரகக் கூட்டுப் பொருள்களாக மாறிற்று. காலப் போக்கில் இப்பொருள்கள், ஆக்சிஜனோடும், நைட்ரஜனோடும் சோர்ந்து அவற்றின் அடிப்பொருள்களாக மாறின. அவைகள் மிகவும் சுலபமான அமைப்புடைய சேதனப் பொருள்கள், புராதனக் கடல் நீரில் இவை சிக்கலான அமைப்புடைய பொருள்களாக மாறின. புரதங்களும், வேறு பொருள்களும் தோன்றின. தாவரங்கள், விலங்குகள் இவற்றின் உடல்களை ஆக்கும் சேதனம் இவ்வாறு உண்டாயின. முதன் முதலில் இவை கடலில் கரைந்திருந்தன. பின்னர் கோயசர்வேட் துளிகளாக வெளிப்பட்டன. முதன் முதலில் தோன்றிய இத்துளிகள் சுலபமான அமைப்புடையவை. பின்னர் இவற்றினுள் மாறுதல்கள் நிகழ்ந்தன. அவை சிக்கலானதும், முன்னிருந்ததைவிடச் சிறந்ததாகவும் உள்ள அமைப்பைப் பெற்றன. அத்தகைய அமைப்பைப் பெற்ற உருவங்களே உலகின் மூல உயிர்களாக மாறின.

உயிர் வளர்ச்சியுற்றது. மூல உயிர்களுக்கு ஜீவ அணு வடிவமில்லை. உயிரின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஜீவ அணு தோன்றியது. ஒற்றை அங்க உயிர்களும் பல அங்க உயிர்களும் உலகில் நிலைபெற்றன. உயிர்ப் பிராணிகளின் தோற்றத்துக்கு ஆத்மாவோ அல்லது கடவுளோ காரணமென்ற கொள்கையை மேற்கூறிய காரணங்களால் விஞ்ஞானம் மறுக்கிறது.

உயிர்களின்தோற்றத்தையும்வளர்ச்சியையும் விளக்கும் விதிகளைக் கண்டு பிடித்திருக்கும் நவீன இயற்கை விஞ்ஞானம் கருத்து முதல் வாதத்தையும், நிலை இயல் முறையையும், ஏகாதிபத்தியப் பிற்போக்கு வாதங்களையும் உடைத் தெறிந்து விட்டது.

உயிர்ப் பிராணிகளின் உள்ளமைப்பைப் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சிகள் தற்காலத்தில் நடைபெற்றிருக்கின்றன. உயிரென்பது பொருளின் ஒரு சிறப்பான வடிவமே என்பதைச் செயல்முறை நிரூபிக்க முடியும் என்று நம்பக் காரணங்களிருக்கின்றன. சோவியத் உயிர் நூலாரின் வெற்றிகள், சுலபமான அமைப்புடைய சிற்றுயிர்களை செய்கையிலேயே படைக்க முடியும்; அது மட்டுமல்ல, வெகு சீக்கிரத்திலேயே செய்ய முடியும் என்ற நம்பிக்கையை நமக்களிக்கிறது. முற்றிற்று.

+++++++++++++++++++++++++++

உயிரின் தோற்றம் நூல் PDF வடிவில் இந்த லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள்

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்