இன்று இந்திய கம்யூனிச கட்சி/ இயக்கங்கள் பல்வேறுவிதமான போக்கில் உள்ளன.
சிபிஅய் தொடங்கி அதன் வழி தோன்றலான சிபிஎம்மும் மார்க்சிய ஆசான்களான லெனின்
ஸ்டாலின் மாவோவினை பின் பற்றி ஒரு புரட்சியை
சாதிக்க வல்ல கட்சியாக இல்லாமல் ரசிய
கம்யூனிஸ்ட் கட்சியின் 20 காங்கிரசில்
எடுத்த முடிவை ஏற்றதனால் அவை பாட்டாளி வர்க்க புரட்சியை கைவிட்டு 2ஆம் அகிலத் தலைவரின் (காவுத்ஸ்கிய வாதத்தை) நிலைபாட்டை ஏற்று புரட்சிக்கு
பதிலாக சரணாகதி பாதை மேற்கொண்டனர். அந்த திருத்தல்வாதம் ஒட்டுமொத்த கட்சியையும்
புரட்சி என்ற வார்த்தையை உச்சரிப்பது கூட வெறுப்படைய செய்யும் வகையில் பயிற்று
விட்டதோடு பாராளுமன்றததில் பங்கெடுபதன் மூலம் சாதித்துவிடலாம் என்ற முதலாளித்துவ
பாதையை கையில் எடுத்து அணிகளை அடையாள போராட்டதிற்காக போராடும் அமைப்பாக
சீரழித்துவிட்டது அதன் ஒருவகைதான் மார்க்சியத்தை திருத்தும் மண்ணுக்கேற்ற
மார்க்சியம். திருத்தல்வாதத்தின்
இன்னொரு போக்கு மண்ணுகேற்ற மார்க்சியம்.
இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
திருத்தல்வாதத்தின் இன்னொரு போக்கு:-
மார்க்சியமோ,தனிச்சிறப்பான கூறுகளுக்கும், பருண்மையான நிலைமைகளுக்கும் ஒருங்கிணைந்த வழியையையும் தீர்வையும் கோருகிறது. அதற்கு மாறாக, சந்தர்ப்பவாத அரசியலையே நடைமுறையாகக் கொண்டவர்கள் வெவ்வேறு பிரச்சினைக்கு வெவ்வேறு தீர்வுகளைக் கூறும் தத்துவங்களைக் கலவையாக்கி, இதுதான் “மண்ணுக்கேற்ப மார்க்சியம்” என்கின்றனர். இந்த வகையில் தமிழின, தலித்தியவாதிகள் மட்டுமல்ல, இந்துமதவெறி சனாதனிகள் கூட “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” பேசமுடியும் என்பதுதான் சமீபத்திய முன்னேற்றம்!
“மண்ணுக்கேற்ற மார்க்சியம்”இந்த வகையில் திராவிடதமிழினவாதிகளின் அங்கீகாரத் தையும் பெற்றுள்ளனர். இங்குள்ள அதிகாரபூர்வகம்யூனிசக்கட்சிகள் புறக்கணித்த தேசியஇனம், சாதியப்பிரச்சினைகளை, தமிழின,தலித்தியவாதிகள் தோன்றுவதற்கு பலஆண்டுகள் முன்புகைவிட்டதைஇப்பொழுது கையிலெடுத்ததுள்ளது வருத்ததிற்குறியது.
மாவோ ஒரு முறை சொன்னது போல் மார்க்சியம் என்பதே பொதுத்தன்மையைக் குறிப்பான தன்மையுடன் இணைப்பதாகவும்.அந்தந்த நாடுகளில் உள்ள குறிப்பான தன்மைகளுக்கு ஏற்ப பொதுவான தன்மைகள் பொருத்தப்பட வேண்டுமே தவிர,குறிப்பான தன்மைகளுக்கு முதன்மை கொடுத்து பொதுத்தன்மைகளை மறந்துவிடக்கூடாது.
ஆனால் இங்கோ பலர் இது போன்ற பொதுத்தன்மைகளை புறக்கணித்து விடுகின்றனர். இதுவே பொதுத்தன்மையை குறிப்பான தன்மையயுடன் பொருத்திக் காணுதலாகும். இங்குள்ள சிலரின் கோட்பாடு மட்டுமல்ல அவர்களுக்கு மார்க்சியமே அவர்களின் ஒவ்வொருவரின் தேவைகளை ஒட்டி மார்க்சியம் தனித்தனியாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.மார்க்சியத்தில் ரஷ்யா மார்க்சியம் ,சீனா மார்க்சியம் ஏன் தமிழகம் மார்க்சியம் என்று கோட்பாடுகள் இல்லை. அந்தந்த நாட்டின் பொதுத் தன்மையைக் குறிப்பான குறிப்பான தன்மையுடன் இணைப்பதாகும்.
l ஒவ்வொரு நாட்டின் விடுதலைக்கான பாதைகள் மாறுமே தவிர ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியா மார்க்சியம் என்பதில்லை.ரஷ்யாவின் குறிப்பான சூழலுக்கு ஏற்ப அங்கு ஆயுத ரீதியிலான குறுகிய கால எழுச்சிப் பாதை மேற்கொள்ளப்பட்டது.
குடியேற்ற அரை குடியேற்ற நிலவுடமை தன்மை கொண்ட சீனாவில் நீண்ட மக்கள் பாதை மேற்கொள்ளப்பட்டது.
l இன்னும் சொல்லப்போனால் சமனற்ற வளர்ச்சி தன்மை கொண்டும் பல தேசிய இனங்களை கொண்டுள்ள ஒரு நாட்டில்,குறிப்பிட்ட வரலாற்றுச் சூழல் கருதி தேசிய இனங்களின் தன்மைகளுக்கு ஏற்ப விடுதலைப்பாதையில் மாறலாமே தவிர ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தனித் தனி மார்க்சியமாவதில்லை. தனித் தனியாக பார்பவர்கள் மார்க்சிய அரசியலை புரிந்துக் கொள்ளாதவரே. அவர் மார்க்சியவாதி அல்ல.
எப்போதும் மக்கள் போராட்டங்களுக்குத் துரோகமிழைக்கும் திருத்தல்வாதிகள் ‘நூல் இழையில்’ மறைக்கும் பகுதிகளை நாம் சொல்லியாக வேண்டும்.ஆம் இவர்கள் குருசேவ் பாதையில் கட்சியை சீரழித்ததுடன் மார்க்ச்சியதையே“மண்ணுகேற்றமார்க்ச்சியம்”என்று ஏமாற்றி பிழைக்கும் நிலை,நேருவும் காந்தியும் இவர்கள் தலைவர்கள் ஆகும்போது இவர்கள் எந்த வர்க்கத்தை சார்ந்தவர்கள் என்பது அறிவது மிகசுலபம். ஆனால் அன்றைய வீரஞ்செறிந்த கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கப்போராட்டத்தை, தலைமறைவு இயக்கத்தில் கம்யூனிச போராளிகள் செய்த தியாகம், அர்ப்பணிப்பை வர்க்க உணர்வு கொப்பளிக்க செறிவாக அளித்திருக்கலாம். விவசாயிகள் இயக்கத்தின் வரலாறை, அதன் வர்க்கப் போராட்ட வீச்சை இடது, வலது எனும் திருத்தல்வாதிகள் இன்னும் முழுமையாக,ஆழமாக மக்களிடம் துலக்கமாக எடுத்துக்காட்டாததன் மர்மம்தான் என்னஏகாதிபத்திய கட்டத்தில் முதலாளித்துவத்தின் காலனியாதிக்க பண்புகள் இதற்கு முந்திய முதலாளித்துவ சமூக குணாம்சரீதியில் வேறுபாடு கொண்டதாகும் .இதன் தனி இயல்பு மூலதன ஏற்றுமதியாகும் மூலப் பொருட்கள் கிடைக்கும் இடம் உலகின் எந்த மூலையில் இருப்பினும் அங்கெல்லாம் மூலதனத்தை ஏற்றுமதி செய்ய ஏகாதிபத்தியம் பேயாய் அலைகிறது.பின்தங்கிய நாடுகளில் மட்டுமல்ல அதன் மூலதன ஏற்றுமதிக்கு முன்னேறிய நாடுகளையும் வேட்டையாடி சேர்த்துக் கொள்கிறது மூலதன ஏற்றுமதி மூலம் நாடுகளை உத்தரவாதமாக கொள்ளையிடவும் சுரண்டவும் அவற்றை காலனிகளாகவும் செல்வாக்கு மண்டலமும் மாற்றி அமைக்கிறது. (ஏகாதிபத்தியம் முதலாளித்து வத்தின் உச்சகட்டம் -லெனின்).
அப்படிப்பட்ட சமரசமற்றகாலகட்ட ஆரம்பத்தில் சீனிவாசராவ், களப்பால் குப்பு, கரம்பயம் சுப்பையாவரிசையில் அதிகார புரோக்கர்களான இ.எம்.எஸ்யும், சுர்ஜித்தையும், ஜோதிபாசுவையும், இந்திரஜித் குப்தாவையும் .... காணச்சகிக்க முடியாது. CPI மிலிருந்து வெளியேறிய CPM எதோ மார்க்ச்சியத்தை காப்பது போல் புறப்பட்ட வேகத்திலே மார்க்ச்சிய-லெனின்யத்தை தூக்கிபிடித்து உலுபவனுக்கே நிலம் உழைப்பவனுக்கே அதிகாரம் என்று 1967 ல் வெடித்த மக்கள் போராட்டங்களை தனது போலிசுடன் மத்திய அரசு படை பலத்தால் கொன்றொழித்த இவர்கள் மார்க்ச்சியத்தை பேச என்ன அருகதை உள்ளது?
பாராளுமன்றத்துக்கு உள்ளே பதவி நாற்காலியிலும் இருப்பவர்கள் எந்த வர்க்க நலனுக்காக போராடுகின்றனர்?. 1948, 50-களில் போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றால்; தொழிலாளி வர்க்கத்தின் மீதான அடக்கு முறைக்கு எதிராக ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் யார் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
யூடூபில் காண இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
“மண்ணுக்கு ஏற்ற மார்க்சியம்” என்ற ப.கு. ராஜன் NCBH-ல் பதிப்பாசிரியருக்கு sathes karki யின் முகநூல் பதிவு கீழ்
ப.கு. ராஜன் NCBH-ல் பதிப்பாசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
தோழர் மாமேதை லெனின் பிறந்த நாளன்று அவர் வெளியிட்ட “மண்ணுக்கு ஏற்ற மார்க்சியம்” என்ற பதிவு குறித்து சில முக்கிய விளக்கங்கள் வழங்க வேண்டியது அவசியமாயிற்று.
இன்றைய சூழலில் பாசிச பாஜக அரசு மக்களை சுரண்டி வரும் நிலையில், மக்களை வர்க்க அரசியலின் பாதைக்கு ஒன்று சேர விடாமல் அடையாள அரசியல், பிராந்திய அரசியல், பண்பாட்டு அரசியல் போன்ற பல திசைதிருப்பல்கள் நிகழ்கின்றன. இத்தகைய சூழலில் “மண்ணுக்கு ஏற்ற மார்க்சியம்” போன்ற சொல்லாக்கங்கள் எந்த அரசியல் நோக்கில் பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் நூற்றாண்டைக் கடந்த வரலாற்றைப் பெற்றுள்ளது. அப்படிப்பட்ட நிலையில், லெனின் பிறந்த நாளன்று நாம் பதிவு செய்ய வேண்டியது என்ன?
1.இன்றைய பொருளாதார நெருக்கடிகள் குறித்து லெனின் கருத்துகள்
2.தொழிலாளர் வர்க்க ஒழுங்கமைப்பின் அவசியம்
3. பாசிசம், போர் குறித்து லெனின் எழுத்துகள்
4. புரட்சிகரக் கட்சி, செய்தித்தாள், ஒழுங்கு, தத்துவம் பற்றிய கருத்துகள்
இவற்றுள் ஏதாவது ஒன்றை எடுத்துரைப்பதே பொருத்தமானதாக இருக்கும்.
ஆனால் ப.கு. ராஜன் அவர்கள், லெனின் பயன்படுத்தாத “மண்ணுக்கு ஏற்ற மார்க்சியம்; காலத்திற்கேற்ற மார்க்சியம்” என்ற தலைப்பை வைத்து, தன் அரசியல் வாசகத்தை லெனின் மீது சுமத்தி உள்ளார்.
லெனின் உண்மையில் என்ன சொன்னார்?
நமது திட்டம் Our Programme நூலில் லெனின் கூறுவது:
மார்க்சியம் முடிவுற்ற, மாற்றமற்ற கோட்பாடு அல்ல.வாழ்க்கையின் போக்கோடு வளர்த்தெடுக்கப்பட வேண்டிய அறிவியல் அடித்தளம்.ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட பொருளாதார, அரசியல், வரலாற்று நிலைமைகளுக்கேற்ப பொதுக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
தோழர் லெனின் கூறாதது:
“மண்ணுக்கு ஏற்ற மார்க்சியம்” என்ற சொற்றொடர்.ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி மார்க்சியம்.மார்க்சியத்தின் சர்வதேச பொதுக் கொள்கைகளை கைவிட்டு உள்ளூர் சிந்தனையால் மாற்றுவது
எனவே, “மண்ணுக்கு ஏற்ற மார்க்சியம்” என்பது லெனினின் நேரடி சொல் அல்ல; பின்னாளில் சிலர் உருவாக்கிய அரசியல் வாசகமே இந்த மண்ணுக்கு ஏற்ற மார்க்சியம்.
ப.கு ராஜனுக்கு உண்மையான அக்கறை இருந்தால் என்ன செய்திருக்கலாம்?
April 14 அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது 27 தொகுதிகள், 8500 பக்கங்கள் கொண்ட விற்பனைக்கு வழங்கப்படும் என NCBH அறிவித்தது.
பல இடங்களில் சிறப்பு புத்தகக் கண்காட்சிகளும் நடத்தப்பட்டன.
அதேபோல் லெனின் பிறந்த நாளை முன்னிட்டு:
லெனின் தேர்வு நூல்கள் வெளியீடு,
லெனின் Collected Works அறிமுகம், சலுகை விலையில் புத்தகம் வழங்கப்படுவதற்கான முயற்சியை அவர் NCBH மூலம் கொண்டு வர முயற்சி செய்து இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் தொழிலாளர் இளைஞர்களுக்கான வாசிப்பு பட்டியலை அவர் பதிவு செய்து இருக்க வேண்டும்.
ஆனால் அலைகள் பதிப்பகம் தோழர் லெனின் எழுதிய ஆறு புத்தகங்களை அவரது பிறந்த நாளை முன்னிட்டு சலுகை விலையில் வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறார்கள்.
மேலும் கவனிக்க வேண்டியது
அடுத்ததாக மே தினம், காரல் மார்க்ஸ் பிறந்த நாள் போன்ற நாட்களில்:
“மார்க்சியம் ஐரோப்பிய தத்துவம்”
“இங்கே மண்ணுக்கு ஏற்ற மார்க்சியம் வேண்டும்”
“பண்பாட்டு புரட்சி தான் வழி”
என்கிற வாசகங்கள் மீண்டும் முன்வைக்கப்படுமா என்று ப.கு. ராஜன் பதிவிடுவாரா அல்லது மாமேதை மார்க்ஸ் நூல்களை சலுகை விலையில் வெளியிட முயற்சி செய்வாரா? என்பதை கவனிக்க வேண்டும்.
இவ்வாறு ப.கு.ராஜன் போன்ற பலர் பிற்பாடு இத்தயை திரிவு வேலையை செய்வார்கள் என அறிந்து தான் லெனின் தேர்வு நூலின் முகவுரையிலே பதில் வழங்கி இருக்கிறார்கள். அதன் விவரம் கிழே வழங்கப்பட்டு இருக்கிறது
லெனின் தேர்வு நூல்கள் தொகுதி -1
முகவுரை பக்கம் 12,13,14
''மார்க்சின் தத்துவத்தை நாங்கள் முற்றும் முடிவான ஒன்றாய், மீற வொண்ணாத ஒன்றாய்க் கருதவில்லை. மாறாக, அது சோஷ லிஸ்டுகளுக்குரிய விஞ்ஞானத்தின் அடிக்கல்லை மட்டுமே அமைத்துக் கொடுத்திருக்கிறது, சோஷலிஸ்டுகள் வாழ்க்கை யுடன் சேர்ந்து நடைபோட விரும்பினால் இந்த விஞ்ஞா னத்தை எல்லாத் திசைகளிலும் வளர்த்துச் செல்வது அவசியம் என்பதை நாம் ஐயமற அறிவோம். மார்க்சின் தந்து வத்தைத் தன்னிச்சையான முறையில் விரிவுபட வளர்த்திடுவது முக்கியமாய் ருஷ்ய சோஷலிஸ்டுகளுக்கு மிக்கதொரு தேவையாகுமெனக் கருதுகிறோம். ஏனெனில் இந்தத் தத்துவம் பொதுவான வழிகாட்டும் கோட்பாடுகளையே அளித்திடு கிறது; தனிப்பட்ட முறையில் அவை பிரான்சிலிருந்து வேறு விதமாய் இங்கிலாந்திலும், ஜெர்மனியிலிருந்து வேறு விதமாய் பிரான்சிலும், ருஷ்யாவிலிருந்து வேறு விதமாய் ஜெர்மனியிலும் கையாளப்படுகிறவை என்று லெனின் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் எழுதினார்.
இன்றைய முதலாளித்துவப் புரட்டர்களும் திருத்தல் வாதிகளும் லெனினியத்தை மார்க்சியத்துக்கும் லெனினை மார்க்சுக்கும் நேர் எதிராக வேறுபடுத்திக் காட்ட முயல் கிறார்கள். ஒரு தனிமாதிரியான ரஷ்யன் தேசியப் புலப்பாடு என்று அவர்கள் நிரூபிக்க முயல்கிறார்கள். சோஷலிசத்தின் விரோதிகள் லெனினியத்தின் சர்வதேச முக்கியத்துவத்தைத் தாழ்வுபடுத்தி, இதர நாடுகளில் அதற்குச் செயற்பாட்டுத் திறமில்லை என்று நிரூபிக்கவும் முயல்கிறார்கள். லெனினியம் ஒரு "தனிப்பட்ட ருஷ்ய மண்ணில்" தான் தோன்ற முடியும் எனவும், அது ருஷ்ய மெய்ப் பாட்டின் "தனிவிலக்கான'' நிலைமைகளோடு தொடர்பு பூண்டு இருப்பது போலவும் அவர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு நாட்டிலும் பிரத்தியேக நிலைமைகள் இருக்கின்றன, மார்க்சியவாதிகள் தமது நடவடிக்கைகளில் இவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று லெனின் சுட்டிக் காட்டியுள்ளார். ஆனால் மார்க்சியத் தத்து வத்தின் பொதுவான கருத்துக்கள் எல்லா நாடுகளிலும் செயற்படுத்தப்படலாம். ருஷ்யாவிலும்கூட "நாம் முதலாளித்துவ வளர்ச்சியின் அதே அடிப்படை நிகழ்ச்சிப் போக்குகளை, சோஷலிஸ்டுகள் மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் அதே அடிப்படைக் கடமைகளை நாம் காண்கிறோம் என்று லெனின் எழுதினார். அந்த நாட்டிலோ வேறு எந்த நாட்டிலோ உருவாகும் அந்தப் பிரத்தியேகமான நிலைமை கள், சோஷலிசப் புரட்சி மற்றும் சோஷலிச நிர்மாணத்தின் வளர்ச்சி அடிப்படை முறைமைகளை செல்லுபடியற்றதாக்கி விடா.
அரசியலில் ஒருவர் அகவயப்பட்ட செயலுணர்ச்சி மற்றும் விருப்பங்களில் இருந்து செயல்படத் தொடங்கக் கூடாது. மாறாக புறவய நிலைமைகளிலிருந்தும், எதார்த்த நிலைமை பற்றிய ஆய்வின் அடிப்படையிலும் மட்டுமே ஒருவர் அரசி யல் கொள்கை வழியை நிர்ணயம் செய்து அதைச் செயல் படுத்த வேண்டும் என்று மார்க்சியம்-லெனினியம் கருதுகிறது. "ஒருவர், காரியங்களை உள்ளது போலவே ஒப்புக் கொள்ள வேண்டும், அதாவது மாறுபட்ட கால இடச் சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான ஒரு வழியில் புரட்சிகர நலன்களை ஒருவர் பாதுகாக்க வேண்டும் என்று கார்ல் மார்க்ஸ் கூறினார்.
மார்க்சிய-லெனினியத் தத்துவம் புரட்சிகர நடை முறைக்கான ஒரு விஞ்ஞான அடிப்படையினை வழங்குகிறது. "புரட்சிகரமான தத்துவம் இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்க முடியாது' "" என்று லெனின் எழுதினார். அனைத்து நாடுகளின் புரட்சிகர அனுபவம் மற்றும் புரட்சிகர சிந்தனையில் இருந்து பிறந்த மார்க்சிய - லெனி னியத் தத்துவம், அனைத்து ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களின் மகத்தான விடுதலை இயக்கத்தின் ஒரு முன்னணிப் படைப்பிரிவாகவும் தலைவனாகவும் செயல்படுமாறு அழைக்கப்படும் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுப் பணியினை ஆதாரப்படுத்தி உறுதிப்படுத்துகிறது.
ஆக மண்ணுக்கு ஏற்ற மார்க்சியம் மீது ப.கு ராஜனுக்கு தனிப்பட்ட ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதனை மாமேதை தோழர் லெனினே கூறி இருக்கிறார் என்று தவறான தகவலை முகநூலில் பதிவிடுவது அபத்தமான செயலாகும்.
மேலும் NCBHல் பதிப்பாசிரியரே தோழர் லெனின் தேர்வு நூல்களை வாசிக்காமல் இவ்வாறு பதிவிடுவது தத்துவ விரோத செயலாகும்.
பி.கு ப.கு ராஜன் மண்ணுக்கு ஏற்ற மார்க்சியத்தின் பதிவு லிங்க முதல் கமெண்டில் வழங்கப்பட்டு இருக்கிறது.
லெனின் பிறந்தநாள் சிந்தனை!
-----------------------------------------
மண்ணுக்கேற்ற மார்க்சியம்; காலத்திற்கேற்ற மார்க்சியம் ... உங்கள் கட்சி இப்படி உள்ளதா?
-------------------------------------------------------------
”நாங்கள் மார்க்சின் கோட்பாடுகள் முழுமை பெற்றவை என்றோ அல்லது மீறமுடியாதவை என்றோ கருதவில்லை. மாறாக அவை சோசலிஸ்ட்டுகள் வாழ்க்கையின் போக்கோடு இயைந்து செல்ல விரும்பினால் எல்லா திசைகளிலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய கட்டமைப்பின் அடிக்கற்களை மட்டுமே அளித்துள்ளது என்றே கருதுகின்றோம். ரசிய சோசலிஸ்ட்டுகள் மார்க்சியக் கோட்பாட்டை தாங்களே சுதந்திரமாக வளர்த்து விரிவாக்குவது மிகவும் இன்றியமையாதது என்று கருதுகின்றோம். ஏனென்றால் மார்க்சின் கோட்பாடுகள் பொதுவான வழிகாட்டும் கொள்கைகளை மட்டுமே அளிக்கின்றது. இவை இங்கிலாந்தில், ஃபிரான்ஸில் போலல்லாது வேறுவிதமாகத்தான் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியிருக்கும்; ஃபிரான்ஸில், ஜெர்மனியில் போலல்லாதும், ஜெர்மனியில் ரசியாவில் போலல்லாததுமாக நடைமுறைப்படுத்த வேண்டியிருக்கலாம். எனவே நாம் மிகவும் கருத்து முரண்பாடான கூறுகளையும் மிகவும் வெளிப்படையாக விவாதிக்கவும் கோட்பாடுரீதியான கட்டுரைகளை எழுத எல்லாத் தோழர்களுக்கும் நம்முடைய இதழ்களில் மனமுவந்து இடமளித்து அவர்களை எழுதச் சொல்லி வரவேற்க வேண்டும்.”
- லெனின், ‘நமது திட்டம்’ – (லெனின் முழுத் தொகுதி-4, பக்கம் 210)
- V.I.Lenin, Collected Works, Vol 4, Page 210)
தொடர்புடைய கட்டுரைகள்:
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.