பாட்டாளி வர்க்கக் கல்வியும் கட்சி மேம்பாடும்-ஒலி வடிவில்

பாட்டாளி வர்க்கக் கல்வியும் கட்சி மேம்பாடும்

கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் நபர்கள் பல்வேறு சமூகப் பின்னணிகளைக் கொண்டிருப்பதால், அவர்களை பாட்டாளி வர்க்க உணர்வுள்ள வீரர்களாக மாற்றுவதற்கு முறையான பயிற்சி அவசியம் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. ஒரு மனிதனின் பண்பு என்பது பிறப்பால் வருவதல்ல, மாறாக அவர் மேற்கொள்ளும் சமூகப் பயிற்சிகளால் உருவாவதே என்ற கருத்தை முன்வைத்து, கட்சி உறுப்பினர்களுக்கு மார்க்சியக் கல்வியை போதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இது விளக்குகிறது. ஆரம்பக்காலத்தில் சுயநல நோக்கங்களுக்காகவோ அல்லது தற்காலிகத் தேவைகளுக்காகவோ கட்சியில் சேருபவர்களை, தொடர் கண்காணிப்பு மற்றும் போதனைகள் மூலம் கம்யூனிச லட்சியத்தைப் புரிந்தவர்களாகச் செதுக்க வேண்டும். மக்கள் நலனுக்காகவும் ஏகாதிபத்திய எதிர்ப்பிற்காகவும் மார்க்சிய வழியில் உறுதியாகப் போராடும் கட்சியை மக்கள் என்றும் ஆதரிப்பார்கள் என்பதற்குச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு உதாரணமாகக் காட்டப்படுகிறது. இறுதியில், ஒரு வலுவான கட்சியைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் அதன் உறுப்பினர்களிடையே நிலவும் மார்க்சியத்திற்கு எதிரான கருத்துக்களை முறியடித்து, அவர்களுக்குத் தொடர்ச்சியான அரசியல் கல்வி இயக்கத்தை நடத்த வேண்டும் என இப்பாடம் அறிவுறுத்துகிறது.

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு மார்க்சிய கல்வி ஏன் அவசியமாகிறது?

சுயநல நோக்கங்களுக்காக கட்சியில் சேருபவர்களை எவ்வாறு பண்படுத்த வேண்டும்?

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு உணர்த்தும் முக்கிய பாடங்கள் யாவை?

இந்த பகுதியின் ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே

youtube ல் காண்க


நமது கட்சியில் சேருபவர்கள் வெவ்வேறு வர்க்கத்திலிருந்து வந்தவர்களாக இருப்பதுடன் தமது வர்க்க நிலையிலும் மாறுபட்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தம்முடன் வெவ்வேறு வகையிலான நோக்கங்களையும் தப்பெண்ணெங்களையும் கட்சிக்குள் கொண்டு வருகின்றனர். கம்யூனிசத்தை கொண்டு வருவதற்காகவும் பாட்டாளி வர்க்கத்தையும் முழு மனித குலத்தையும் விடுவிக்கும் மகத்தான லட்சியத்திற்காகவும் பலரும் கட்சியில் சேர்கின்றனர் என்பது உண்மைதான்; ஆனால், சிலர் வேறு காரணங்களுக்காகவும் நோக்கங்களுக்காகவும் சேருகின்றனர் என்பதும் உண்மைதான். எடுத்துக்காட்டாக விவசாயி பின்னணி கொண்ட சில தோழர்கள் உள்ளூர் கொடுங்கோலர்களின் உடமைகளை பறிமுதல் செய்வதும் நிலங்களை விநியோகிப்பதும்தான் கம்யூனிசம் என்று நினைக்கின்றனர். முதலில் அவர்கள் நம்மோடு சேரும்போது கம்யூனிசத்தின் உண்மையான பொருள் என்னவென்று அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. கட்சி ஜப்பானிய எதிர்ப்பில் முன்னணியில் இருப்பதாலும் ஜப்பானிய எதிர்ப்பு தேசிய ஐக்கிய முன்னணிக்காக உறுதியாக வாதிடுவதாலும் இப்போது பெரிய எண்ணிக்கையில் ஆனவர்கள் கட்சியில் சேருகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சி நல்ல பெயர் எடுத்திருப்பதாலும், கம்யூனிஸ்ட் கட்சி சீனாவை காப்பாற்றும் என்று மேலோட்டமாக புரிந்து கொண்டு உள்ளதன் அடிப்படையிலும் சிலர் கட்சியில் சேருகிறார்கள். (சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?, லியோஷோசி, பக்கம் - 72, 73)
கம்யூனிஸ்ட் கட்சியில் சேருபவர்கள் வெவ்வேறு வர்க்கங்களிலிருந்து வந்தவர்களாகவும் வெவ்வேறு வர்க்க சிந்தனை, கருத்து மற்றும் பழக்கவழக்கங்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது இயல்பானதே ஆகும். ஆகவே அவர்களை வெவ்வேறு சிந்தனைமுறையிலேயே விட்டுவிடலாமா? என்ற கேள்வி எழுகிறது. அதற்கு மார்க்சியம் கூறும் பதில் அவர்களை அப்படியே விட்டுவிடக்கூடாது என்பதுதான். ஒரு மனிதனது பண்பானது பிறப்பிலிருந்து உருவானதல்ல, மாறாக சமூக வாழ்க்கையிலிருந்து அவன் கற்றுக்கொள்வதன் மூலமே ஒருவரது பண்பில் மாற்றங்கள் ஏற்படும் என்பது அறிவியல் ஆகும். உதாரணமாக ஒருவர் இராணுவ வீரராக பணியில் சேர்ந்துவிட்டால் அங்கு அவருக்கு இராணுவப் பயிற்சி கொடுக்கப்படும். அந்தப் பயிற்சியின் மூலமே ஒரு இராணுவ வீரர் உருவாகிறார். அதைப்போலவே கம்யூனிஸ்ட் கட்சியும் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்பதால் அந்த கட்சியிலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் பாட்டாளி வர்க்கப் படைவீரராக பயிற்சி பெறவேண்டும். அத்தகைய பயிற்சியை கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்கள் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். அதாவது கம்யூனிஸ்ட் கட்சிப் படைவீரர்கள் ஒவ்வொருவரும் மார்க்சியம் என்ற ஆயுதத்தை ஏந்தி போராடுவதற்கான பயிற்சியைப் பெற வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் சிலர் மார்க்சியத்துக்கு எதிரான கருத்துக்களை கட்சிக்குள் கொண்டுவருகிறார்கள். இவர்களை எதிர்த்துப் போராட பாட்டாளி வர்க்க உணர்வுள்ள கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மார்க்சியம் என்ற ஆயுதத்தை எடுத்து போராடி முறியடிக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியில் சேருபவர்கள் பல்வேறு காரணங்களுக்காக கட்சியில் சேருகிறார்கள். கம்யூனிச லட்சியத்தை அடிப்படையில் புரிந்துகொண்ட சிலரும் கட்சியில் சேருகிறார்கள். விவசாயிகள் பண்ணையார்களிடமிருந்து கம்யூனிஸ்டுகள் நிலத்தை பறித்துக்கொடுப்பார்கள் என்று கட்சியில் சேருகிறார்கள், தொழிலாளர்கள் தங்களுக்கு கூலி போனஸ் போன்றவற்றை வாங்கிக் கொடுப்பார்கள் என்று கட்சியில் சேருகிறார்கள், இவ்வாறு பல்வேறுவிதமான சுயநல காரணங்களுக்காக கட்சியில் சேருகிறார்கள். இவர்கள் ஆரம்பத்தில் கட்சியின் கம்யூனிச இலட்சியத்தை புரிந்துகொள்வதில்லை. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியானது ஜப்பானிய ஏகாதிபத்தியவாதிகள் சீனாவை ஆக்கிரமித்த பொழுது ஜப்பானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து ஓர் ஐக்கிய முன்னணியை கட்டி உறுதியாக போராடியபோது சீனக் கம்யூனிஸ்ட் கட்சிதான் சீன மக்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையிலிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தது வரலாறு. ஆகவே ஒரு கட்சியானது தற்போது மக்களின் செல்வாக்கில்லாமல் இருந்தாலும் அந்தக் கட்சியானது மார்க்சிய வழியில் உறுதியாக நின்று பெரும்பாலான மக்களின் நலனுக்காகப் போராடும்போது அந்தக் கட்சியை மக்கள் கட்டாயம் ஆதரிப்பார்கள் அதே போலவே ஒரு கட்சியானது பெரும்பாண்மையான மக்களுக்கு எதிராக செயல்பட்டால் அந்தக் கட்சியை மக்கள் கட்டாயமாகப் புறக்கணிப்பார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே ஒருவரை கட்சி உறுப்பினராக ஆக்கும் போதே அவருக்கு கம்யூனிசத்தை போதிக்கவேண்டும். இல்லையென்றால் அவர் சோதனைக்குரியவராக இருக்கும் போது போதிக்க வேண்டும். கட்சிக்குள் செயல்படும் உறுப்பினர்களை கண்காணித்து அவர்களை அவ்வப்போது செழுமைப்படுத்த வேண்டும். அதற்கு தொடர்ந்து மார்க்சிய கல்வி இயக்கத்தை கட்சி நடத்தவேண்டும். இதன் மூலம் மட்டுமே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை பாதுகாத்து வளர்க்க முடியும்.


இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்