சாதி என்பது இந்தியப் பாணியிலான சமூகத்தின் அடிப்படைச் சமூக அலகு என பலகாலமாக பரிந்துரைக்கப்பட்டு வரும் மக்கள் மன பிரிவினைத் தோற்றம் ஆகும். இதன் தனித்தன்மை பிறப்பின் அடிப்படையிலான வேலைப் பிரிவினையேயாகும்.
இது இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நிலவுகிறது. ஒருவரின் சாதி அவரின் பிறப்பைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டு வருகிறது. ஆகவே இதனை வெளியேற்ற வழியற்று சமூக அவலங்களைச் சகித்துக்கொண்டு மக்கள் வாழக் கற்றுக்கொண்டார்கள். அதிலிருந்தும் தோன்றிய அரசுகள் போன்றவற்றால் இது பாதுகாக்கப்படுகிறது.
சாதியின் தோற்றம்
முன்பு தொழில் வாரியான வகுப்புகள் இருந்தன, தொழில் மாறலாம் தீண்டாமையில்லை, பாகுபாடு இல்லை. பின் தொழிலை வாரிசு ரீதியாக செய்ய தொடங்கினர். பின் தொழிலின் அடிப்படையில் பிரிவினை (சாதி) தோன்றி குறிப்பிட்ட காலம் இணக்கமாக இருந்த இந்த பிரிவினை சுரண்டலை அடிப்படையாக கொண்டதன் தொடர்ச்சியாக உழைப்பை சுரண்டுவதற்கான கோட்பாட்டு நியாயம் அதனை நடைமுறை படுத்தும் அமைப்பு வடிவம், அமைபிற்கான கோட்பாட்டுகள் இவ்வாறாக ஒற்றுமையாக இருந்தவர்களே வெவ்வேறாக பிரிந்து உயர்வு தாழ்வுகள் முதல் தீண்டாமை வரை கற்பிக்கப்பட்டன. ஒரே தொப்புழ் குடி உறவான மனிதன் தனக்குள்ளே உயர்நிலை தாழ்நிலை என்ற பிரிவினை அதற்கேற்ற மதங்களின் வரவும் அதனை உயர்தி பிடிக்கும் மத ஆச்சார்யர்கள்(மத போதகர்கள்), தெய்வம் படைப்பு போன்றவற்றை எதிர்த்தும் கலகம் செய்த காலமும் உண்டு.
பக்தவத்சல பாரதியின் கூற்று
சாதியின் தோற்றம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் பல்வேறுபட்ட அறிஞர்களால்
முன்வைக்கப்பட்டுள்ளன. சாதியின் தோற்றம் குறித்து பக்தவச்சல பாரதியின் மானிடவியல் கோட்பாடுகள்[1] என்ற நூலில் விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. சாதியின்
தோற்றம் குறித்து இந்தப் பகுதியில் இடம்பெறும் தகவல்கள் அந்த நூலையே அடிப்படையாகக்
கொண்டவை. அதில் சாதியத்தின் தோற்றத்தை விளக்கும் ஆறு கோட்பாடுகள்
குறிப்பிடப்பட்டுள்ளன. அவை:
- மரபுக்
கோட்பாடு (traditional theory)
- தொழிற்
கோட்பாடு (occupational theory)
- சமயக்
கோட்பாடு (religious theory)
- அரசியற்
கோட்பாடு (political theory)
- இனக்
கோட்பாடு (racial theory)
- படிமலர்ச்சிக்
கோட்பாடு (evolutionary theory)
அம்பேத்கரின் கூற்று
ஒரே சாதிக்குள் நடைபெறும் அகமண முறையே சாதியின் தோற்றத்துக்குக் காரணம் என்று
கூறுகிறார்.[2]
மரபுக் கோட்பாடு
சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்பதுவே மரபுக் கோட்பாடு ஆகும்.[சான்று தேவை] ரிக் வேதம், மனு தர்மம், பகவத்கீதை ஆகியவை சாதி இறைவனால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு
என்றே கூறுகின்றன. பகவத்கீதை குணத்தின் அடிப்படையில் சாதி அமைகின்றது எனக்
குறிப்பிட்டாலும், பிற பிறப்பின் அடிப்படையிலேயே சாதி அமைகின்றது என்பதை வலியுறுத்துகின்றன.
சமுதாய அமைப்பே சாதியை உருவாக்கியது என்றும் மதத்திற்கும் சாதிக்கும் தொடர்பில்லை
என்றும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகின்றார்.[3][4]
தொழிற் கோட்பாடு
சாதி மக்கள் குழுக்கள் செய்யும் தொழில் அடிப்படையில் அமைந்தது என்பதுவே தொழிற்
கோட்பாடு. தொழில்களின் தன்மை காரணமாக 'தூய்மை' 'தீட்டு' வரையறை செய்யப்பட்டன.
பிறப்பு ரீதியிலான தமிழ் சமூக அமைப்பை மறுக்கும் பலர்,
தொழில் ரீதியிலான தமிழ் சமூக அமைப்பு இயல்பான என்றும்
கருத்தாக்கம் செய்துள்ளார்கள்.
சமயக் கோட்பாடு
சாதி முறைக்கு அடிப்படை சமயமே என்பது சமயக் கோட்பாடு. குறிப்பாக இந்து சமய
சூழலே சாதி முறையைத் தோற்றுவித்தது.
அரசியற் கோட்பாடு
உயர் சாதியினர் தமது சலுகைகளைத் தக்கவைக்க ஏற்றவாறு அமைத்துக்கொண்ட அமைப்பே
சாதி என்பது அரசியற் கோட்பாடு.
இனக் கோட்பாடு
ஆரியர்கள் இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த போது தொல் திராவிடர்களை
அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக் கோட்பாடு.
"குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில்
பொலிவானவர்களாகத் திகழ்ந்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டைக்
காட்டத் தொடங்கினர்."[5]
இதனை விட கூடுதலாக நாம் புரிந்துக் கொள்ள வேண்டியிருக்கிறது ஏனெனில் நம்மவர்களிடையே பயன்பாட்டில் உள்ளதால் அதனையும்தெரிந்துக் கொள்வோம்.
1. தொழில்சார் கோட்பாடு (Occupational Theory) 🔨
இக்கோட்பாட்டின்படி, தொடக்கத்தில் சாதி என்பது வெறும் உழைப்புப் பிரிவினை (Division
of Labour) மட்டுமே. ஒரு
குறிப்பிட்ட தொழிலைச் செய்பவர்கள் ஒரு குழுவாக உருவெடுத்தனர். காலப்போக்கில்,
அந்தத் தொழில்கள் பரம்பரையாக மாற்றப்பட்டபோது,
தொழில் சார்ந்த குழுக்கள் சாதியக் குழுக்களாக மாறின.
2. அரசியல் கோட்பாடு (Political Theory)
அபி துபே (Abbe Dubois) போன்றவர்கள் முன்வைத்த இந்தக் கருத்தாக்கம், சாதி என்பது திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு சமூகப் படிநிலை என்கிறது. சமூகத்தின் மேல்மட்டத்தில் இருந்தவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், மற்றவர்களைக் கட்டுப்படுத்தவும் வகுத்த விதிகளே சாதியமைப்பாக மாறியது என்பது இவர்களின் வாதம். இதனை பற்றி ஆங்கிலேயர்கள் பற்றி விரிவான பகுதியில் பார்ப்போம்.
3. இனவழிக் கோட்பாடு (Racial Theory)
ஹெர்பர்ட் ரிஸ்லி (Herbert Risley) போன்ற ஆய்வாளர்கள், வெவ்வேறு இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் மற்றும் குடியேற்றங்களே சாதிக்கு அடிப்படை என்கிறார்கள். ஒரு இனம் மற்றொரு இனத்தை அடக்கி ஆளும்போது, வென்றவர்கள் தங்களை உயர்ந்தவர்களாகவும், தோற்றவர்களைத் தாழ்ந்தவர்களாகவும் நிலைநிறுத்திக் கொண்டனர். இதனை 1964-66 ஆகிய UNSECO தீர்மானங்கள் கண்டனம் தெரிவித்து ஆவணங்களை வெளியிட்டுள்ளன. (இதனையும் இனக்கோட்பாடு எனும் பகுதியில் பார்ப்போம்.)
4. மார்க்சியக் கோட்பாடு (Marxist Theory)
இது சாதியை ஒரு பொருளாதார வர்க்கத்தின் வெளிப்பாடாகப் பார்க்கிறது. நிலம்
மற்றும் உற்பத்திச் சாதனங்கள் யாரிடம் இருக்கின்றனவோ,
அவர்களே சாதியப் படிநிலையிலும் உயரத்தில் இருக்கிறார்கள்.
உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்த சாதி ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தக் கோட்பாடுகள் சாதி உருவான விதத்தை வெவ்வேறு கோணங்களில் விளக்குகின்றன.
நாம் மேற்கொண்டு விவாதிக்க, உங்களுக்கு மிகவும் நெருக்கமான அல்லது நீங்கள் ஆய்வுக்கு உட்படுத்த விரும்பும்
ஒரு பகுதியைத் தேர்ந்தெடுக்கலாம்:
* பொருளாதார
வேர்கள்: நிலம் மற்றும் தொழிலாளர் உறவுகள் எவ்வாறு சாதியைக் கட்டமைக்கின்றன?
(மார்க்சிய மற்றும் தொழில்சார்
பார்வை) 🌾
* அதிகாரக்
கட்டமைப்பு: சமூகத்தில் ஒரு குழு மற்றொன்றை ஒடுக்குவதற்கு சாதி எவ்வாறு
கருவியாகிறது? (அரசியல்
மற்றும் வரலாற்றுப் பார்வை) 📜
* நவீன மாற்றம்: இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழலில் இக்கோட்பாடுகள் எந்தளவுக்குப் பொருந்தும்?
·இந்த 10 மண்டலங்களில் இரண்டு முதல் ஏழு வரையான மண்டலங்கள் மிகப்பழமையான பாடல்களைக் கொண்டவை எனவும் முதலாம் பத்தாம் மண்டலங்களில் காணப்படும் பாடல்கள் பெரும்பாலும் பிந்தையவை எனவும் கூறுகிறார் கா. கைலாசநாத குருக்கள் (வடமொழி இலக்கிய வரலாறு, கா.கைலாசநாத குருக்கள், காலச்சுவடு பதிப்பகம், நவம்பர் - 2012, பக்:48.). முதல் ஒன்பது மண்டலங்களை விட, பத்தாவது மண்டலத்தின் சொற்பிரயோகம் பிற்காலத்தைச்சேர்ந்தது என அறிஞர் அனைவரும் கருதுகின்றனர் என்கிறார் இராகுல்ஜீ (ரிக்வேதகாலஆரியர்கள்,இராகுல சாங்கிருத்தி யாயன் (Ragula Sankrityayan), அலைகள் வெளியீட்டகம், டிசம்பர் –2004, பக்:39.). ஆகவே பத்தாவது மண்டலம் பிற்காலத்தது என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். முதல் ஒன்பது மண்டலங்களில் நால் வருணங்களைப் பற்றிய குறிப்பேதும் இல்லை. ஆனால் பிற்காலத்தைய பத்தாவது மண்டலத்தின் 90ஆவது சூக்தம் நால் வருணம் பற்றிப் பேசுகிறது.
புருடன் என்பவன் பிரபஞ்சம் தோன்றியதற்கு மூலகாரணமாக இருந்தவன். பிராமணன் என்பவன் கடவுளுக்குத் துதிகளைக்கூறும் வாயாக இருந்தான். இராசன்யன் என்பவன் அதிகாரத்தையும், ஆயுதங்களையும் கையாள்பவன். வைசியன் என்பவன் வர்த்தகன், வேளாண்மை செய்பவன். ஏனையோர் என்பவர்கள் சூத்திரர்கள், திடம், வலிமை, செயல்திறன் கொண்டவர்கள், இவர்கள் உழைப்பால்தான் முழு சமுதாயமும் வாழ்கிறது எனவும், ரிக் வேதத்தில் இப்பாடல் ஒன்றுதான் வருணங்கள் குறித்துப் கூறுகிறது எனவும் விளக்கம் தரப்பட்டுள்ளது. இப்பாடல் புருசசூக்தம் என அழைக்கப்படுகிறது எனவும் இப்பாடல் வேத காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டிருக்கலாம் எனவும் பொருள் விளக்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆகவே 10ஆவது மண்டலம் பிற்காலத்தது என்பதும் இந்த புருடசூக்தம் வேத காலத்திற்குப்பின் எழுதப்பட்டிருக்கலாம் என்பதும் இதைத்தவிர வேறு எந்த பாடலும் வருணம் குறித்துப் பேசவில்லை என்பதும் இப்பாடல் பிற்காலத்தில் இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டது என்ற கருத்தை வலியுறுத்துகிறது.
ரிக் வேத காலத்தில் தொழில்பிரிவுகள் இல்லை:
ரிக் வேதத்தில் புருச சூக்தம் ஒன்றைத்தவிர வேறெந்தப் பகுதியிலும் சாதி குறித்த குறிப்புகள் இல்லை எனவும் அக்காலத்தில் தந்தை தாய் மகன் ஆகிய மூவரும் வேறு வேறான தொழில்களில் ஈடுபடுவர் எனவும் அக்கால மக்கள் பரம்பரையாகத் தொழில் செய்து வந்தனர் என்ற கொள்கை பொருந்தாது எனவும் கூறுகிறார் கா. கைலாசநாத குருக்கள்(வடமொழி இலக்கிய வரலாறு, கா.கைலாசநாத குருக்கள், காலச்சுவடு பதிப்பகம், 2012, பக்: 59.20. பக்:63,64.). இரிக் வேத காலம் என்பது மேய்ச்சல் நில வாழ்வை அடிப்படையாகக் கொண்ட இனக்குழு காலம். அப்பொழுது தொழில்பிரிவுகளோ, வருணம் எனப்படும் வகுப்புகளோ தோன்றும் அளவு தொழில் வளர்ச்சி என்பது இருக்க இயலாது.
ரிக் வேதப்பாடல்கள் தொடக்கம் முதல் இன்றுவரை ஓரளவு அதிக மாற்றம் இல்லாது உள்ளன. ஆனால் பிராமணங்கள், அதர்வண வேதம் முதலிய வேத இலக்கியங்கள் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்குப் பின் புருடன் என்பவன் பிரபஞ்சம் தோன்றியதற்கு மூலகாரணமாக இருந்தவன். பிராமணன் என்பவன் கடவுளுக்குத் துதிகளைக்கூறும் வாயாக இருந்தான். இராசன்யன் என்பவன் அதிகாரத்தையும், ஆயுதங்களையும் கையாள்பவன். வைசியன் என்பவன் வர்த்தகன், வேளாண்மை செய்பவன். ஏனையோர் என்பவர்கள் சூத்திரர்கள், திடம், வலிமை, செயல்திறன் கொண்டவர்கள், இவர்கள் உழைப்பால்தான் முழுசமுதாயமும் வாழ்கிற பெருத்த மாறுதல்களுக்கும், திருத்தங்களுக் கும் இடைச்செருகல்களுக்கும் உள்ளாகியுள்ளன என்பதில் ஐயமில்லை. ஆகவே அவற்றில் உள்ள தரவுகள் நம்பிக்கைக்குரியன அல்ல.
சொத்துரிமையும், வகுப்புகளும், தொழில்பிரிவுகளும் உருவாகும் பொழுதுதான் கண அமைப்பும் அழிந்து போகிறது. ஆக மேலே செல்வோம், இந்த அறிவிற்குபொருந்தா கருத்தை விட்டொழித்து.
இனக்கோட்பாடு:- ஆரியர்கள் இந்தியாவுக்குப் புலம் பெயர்ந்த போது இங்கிருந்த பூர்வகுடிகளை அடிமைப்படுத்தி நிறுவிய அமைப்பே சாதி அமைப்பு என்கிறது இனக்கோட்பாடு. "குடியேறிய ஆரியர்கள் இங்கிருந்தவர்களைக் காட்டிலும் உடல் தோற்றத்தில் பொலிவானவர்களாகத் திகழ்ந்ததால் அதனைப் பயன்படுத்தி அவர்கள் வருணப் பாகுபாட்டைக் காட்டத்தொடங்கினர். இன்றைய சடங்குகள் சம்பிரதாயங்களில் சமயம் சார்ந்த சிந்தனை வடிவம் என்பது புரையோடிப் போயுள்ளது. தொல்குடி பழக்க வழக்கங்களும், வழிபாட்டு சடங்குகளும் சிதைந்தும் உள்ளது. அந்த இடத்தில் பக்தி இலக்கியத்தின் பின்னராக காலத்தில் நிறுவனமயப்பட்ட சடங்குள் என்பது நுழைந்துவிட்டதும், வர்ணாசிரமச் சிந்தனை உள்நுழைந்து விட்டது. மக்களின் பண்பாடுகளை சனாதன தர்மத்தில் அமைந்ததாக இட்டுக்கட்டப்படும் கருத்தியல் என்பது வெகு வேகமாக சமூகத்தில் பரப்பப்படுகின்றது, ஆழமான சமூக விதியாக மறுபடி மறுபடி கற்பிக்கப்படுகின்றது.
ஆனால் இன்றைய சமூகக் கட்டமைப்பை இன்றைய நிலையில் இருந்து சமூகத்தை அணுகும் போக்கும் இன்று மதவாத, சாதியத்தினுள் இருந்து சமூகத்தின் நீதிநெறி சிந்தனைகளை, சடங்குகளை நியாயப்படுத்தும் போக்கே பழமைவாதிகளால் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் இவை பிற்காலவரவு என்பதனையும் இதனை பற்றி விரிவாக தேடுவோம்-ஆரிய திராவிட இனவியல் மற்றும் ஆரியர் வரவு மற்றும் பிரிட்டிஷ் கொடையான இந்த அமைப்பின் முன் வடிவம் விரிவாக விவாதிப்போம்.
அம்பேத்கரின் கோட்பாடு:-
ஒரே சாதிக்குள் நடைபெறும் அகமணமுறையே சாதியின் தோற்றத்துக்குக் காரணம் என்று கூறுகிறார்.
‘இந்தியாவில் சாதிகள்' என்ற கட்டுரை, கொலம்பியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற மானுடவியல் கருத்தரங்கில் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையாகும். இக்கட்டுரையில் சாதியின் தோற்றம், அதன் தொடக்கப்புள்ளி எது அல்லது யார்? அது எவ்வாறு பரவியது? என்பனவற்றை அவர் கண்ணோட்டத்தில் தெளிவுபடுத்துகிறார்.
சாதி என்பதன் சாரமாக புறமணமுறையின் மீதான தடையும், கறாரான அகமணமுறையும் இருக்கின்றன. இந்தியாவை தவிர்த்து பிற நாடுகளில் அகமணக்குழுக்கள் பரவலாக இருந்தாலும், அங்கெல்லாம் சாதிகள் தோன்றவில்லையே என்ற கேள்வி எழலாம். அந்தச் சமூகங்களுக்கும் இந்தியாவிலுள்ள சாதியச் சமூகத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், பிற சமூகங்கள் தனித்தனி பண்பாட்டைக் கொண்ட வெவ்வேறு இனக்குழுக்களாக அமைந்தவை. இந்தியாவில் உள்ள நிலை என்னவெனில், ஒரே பண்பாடும், வாழ்முறையும் கொண்ட ஒரே மக்கள் சமூகத்தை அகமணமுறையின் மூலம் செயற்கையாகத் தனித்தனி அலகுகளாகத் துண்டாடிய நடைமுறை என அம்பேத்கர் விளக்குகிறார்.
அடிப்படையில் இந்தியச் சமூகம் புராதன காலப்பழக்கங்களைப் பேணுகின்ற ஒருசமூகமாகும். புறமணமுறை (தனது சாதிக்கு வெளியே மணம் செய்வது) என்பதுதான் புராதன காலச் சமூகப் பழக்கம். இப்போதும் கூட இந்தியாவில் புறமணமுறைக்குச் சாதகமான சட்டதிட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ரத்த உறவுடையோர் திருமணம் செய்யக் கூடாது என்பது மட்டுமின்றி, ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களிடையே திருமணம் செய்வதுகூடாது, தெய்வ நிந்தனைக் குரியது என்பதுதான் இந்து சமூகத்தின் நடைமுறை. எனவே, அகமண முறை என்பது இடையிலே வந்து சேர்ந்த இந்தியாவுக்கு அந்நியமான நடைமுறை என நிறுவுகிறார் அம்பேத்கர்.
புறமணமுறைக்குப் பதிலாக அகமணமுறையைப் புகுத்தியதன் விளைவாகவே சாதி தோன்றியது. அவ்வாறு அகமண முறைக்கு ஒரு சமூகத்தை மாறச் செய்து, அகமணமுறையிலேயே அச்சமூகத்தை நிலைத்திருக்கச் செய்யவேண்டுமெனில் ஆண், பெண் சம எண்ணிக்கை பேணப்படுவது அவசியமான ஒன்றாக இருக்கிறது. இவ்வாறான சம எண்ணிக்கையைப் பேணும் நோக்கத்திலேயே கணவன் இறந்தவுடன் மனைவியை எரிக்கும் சதிப்பழக்கம் தோன்றியது என்கிறார் அம்பேத்கர். தேவைக்கு அதிகமாக இருக்கும் பெண்களை எரிப்பது போல், வலுவுடையவனாகவும், சட்டத்தை வகுப்பவனாகவும் உள்ள ஆணை எரிக்க முடியாது என்பதால், அவனுக்குத் துணையாகத் திருமண வயதை எட்டாத சிறுமிகளை மணம் முடிக்கும் பழக்கமும் தோன்றியது என்கிறார்.
தந்திரமான புகழுரைகள் மூலம் சாதி இந்து அறிஞர்கள் இவற்றைக் கடைப்பிடிப்பது புனிதமானது, வணக்கத்துக்குரியது என்று கூறினர். இதன் விளைவாக தோற்று விக்கப்பட்ட சாதி அப்படியே நிலை நிறுத்தப்பட்டு விட்டது. சாதியின் தோற்றுவாய் அல்லது தொடக்கப் புள்ளியாகப் பார்ப்பனர்களே விளங்கினர் என்பது, அம்பேத்கர் அடுத்ததாக நிறுவுகிற செய்தி.
· சாதி என்பது தன்னைச் சுற்றி அரண் அமைத்துக் கொண்ட வர்க்கங்களின் தொகுப்பு. அவ்வாறு தன்னைச் சுற்றி அரணிட்டுக் கொண்ட முதல் வர்க்கமாகப் பார்ப்பனச் சாதி அல்லது பூசாரி வர்க்கமே இருந்தது. அகமண முறையைப் பேணும் மேற்கூறிய பழக்கங்கள் அனைத்தும் வழங்கப் படுகிற ஒரே சாதியாகப் பார்ப்பன சாதி மட்டுமே விளங்குகிறது. பார்ப்பனர் அல்லாத சாதிகளிடம் இப்பழக்கங்கள் காணப்பட்டாலும் அவை வெளியிலிருந்து பெறப்பட்டதாகவும், கறாராகவும் முழுமையாகவும் கடைப்பிடிக்கப்படாத நிலையிலும்தான் இருக்கின்றன. பார்ப்பன சாதியிலிருந்து ஒரு சாதி எவ்வளவு தூரத்துக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறதோ, அதைப் பொருத்த அளவுக்கு இப்பழக்கங்களிலிருந்து விலகி இருக்கின்றன. எனவே, சாதியின் தோற்றுவாய் பார்ப்பனரே என்கிறார்.
இந்து சமூகத்தில் அறிவாளி வர்க்கமாகவும், செல்வாக்கு மிகுந்தவர் களாகவும் இருந்த பார்ப்பனர், தன்னை தனியே மூடுண்டதாக ஆக்கிக் கொண்டு சாதியாக மாறியது. அவர்களைப் போலச் செய்வதின் மூலம் பார்ப்பனர் அல்லாத பிறரிடமும் சாதி பரவியது. அதோடு இவர்களால் சமூக விலக்கம் செய்யப்பட்ட, இவர்களின் கொடுங்கோன்மையோடு ஒத்துப் போகாதவர்களும்–தனிசாதியாக உருவெடுக்க வேண்டிய அவலம் நிகழ்த்தப்பட்டது. அன்றைக்கு தீண்டத்தகாத மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்கு முறைகளையும் வன்முறைகளையும் பட்டியலிட்டு, சான்றுகள்காட்டி, தீண்டத்தகாதாரைப் போன்ற உங்கள் சொந்த நாட்டு மக்கள் பொதுப் பள்ளியில் சேர முடியாமல், பொதுக் கிணறுகளில் நீர் எடுக்க முடியாமல், எல்லா விதக்கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கும் போது, நீங்கள் அரசியல் சீர்திருத்தம் செய்ய தகுதியானவர்களா என அரசியல் சீர்திருத்தம் பேசியவர்களிடம் கேள்வி எழுப்பினார் அம்பேத்கர்.
இந்து சமூகத்தில் அன்றைக்கு இருந்த சமூக சீர்திருத்தவாதிகளை அடுத்ததாகப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறார். அன்றைக்கு இருந்த சமூக சீர்திருத்தவாதிகள், படித்த மேட்டுக்குடி இந்துக்களாக இருந்தனர். அவர்கள் சாதி ஒழிப்பில் அக்கறை காட்டவில்லை. அதற்குப் பதிலாக இந்துக் குடும்பத்தை சீர்திருத்துவதையே சமூக சீர்திருத்தமாக வரித்துக் கொண்டனர். தங்கள் குடும்பங்களில் தாங்கள் உணர்ந்திருந்த குழந்தைத் திருமணம், சாதி, விதவை முறை போன்றவற்றை நீக்கவே உத்வேகம் கெண்டனர். எனவே, அரசியல் சீர்திருத்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மிக எளிதாக இவர்களை வென்று விட்டனர்.
பொருளாதாரச் சீர்திருத்தமே இன்றியமையாதது என்கிற சோஷலிஸ்டுகள், அய்ரோப்பாவிலுள்ள தங்கள் தோழர்களைப் பின்பற்றி வரலாற்றின் பொருளாதார விளக்கங்களை, இந்தியாவிலுள்ள உண்மைகளோடு பொருத்த முனைகிறார்கள் என அம்பேத்கர் விமர்சிக்கிறார். ஒரு தனி மனிதனின் சமூக நிலை அதிகாரத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது. கோடீஸ்வரர்கள், பக்கிரிகளுக்கும் சாதுக்களுக்கும் ஏன் கீழ்ப்படிய வேண்டும்? என்று கேள்வி எழுப்பி இதை விளக்குகிறார். இந்தியாவில் நீதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை விட, சாமியாரிடம் அதிக அதிகாரம் இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறார்.
இன்றைய அய்ரோப்பாவில் அதிகாரத்தின் ஊற்றுக்கண்ணாக சொத்து இருப்பதை வைத்து, நேற்றைய அய்ரோப்பாவிலும் இன்றைய இந்தியாவிலும் சொத்துதான் அதிகாரத்தின் ஊற்றுக் கண்ணாக இருக்க முடியும் என நம்புவது சோசலிஸ்டுகளின் தவறு. மதம், சமூக அந்தஸ்து, சொத்து ஆகியவை அதிகாரம் மற்றும் ஆதிக்கத்தின் ஊற்றுக் கண்களாக இருப்பவை. ஒவ்வொரு சமயத்திலும் இவற்றில் ஒவ்வொன்று மேலோங்கி அதிகாரமளிப்பதாக இருக்கும். எனவே, மதச்சீர்திருத்தம் மற்றும் சமூக சீர்திருத்தத்தின் (சாதி ஒழிப்பின்) அவசியத்தை அவர்கள் உணர வேண்டும் என்கிறார்.
மேலும், கீழ்க்கண்ட கேள்விகளை சோசலிஸ்டுகளுக்கு அவர் முன்வைக்கிறார். அவை, இந்தியப் பாட்டாளியும், புரட்சியும் பற்றியவை.
1. இந்தியப் பாட்டாளிகள் ஒன்றுபட்டு புரட்சி செய்வார்களா?
2. அதற்கு அவர்களைத் தூண்டுவதாக எது இருக்கும்?
3. இந்தியப் பாட்டாளியிடம் ஏழை, பணக்காரன் என்பதைத் தவிர சாதி, மதம், அந்தஸ்து, மேல், கீழ் என வேறு வேறுபாடுகள் எதுவும் கிடையாதா?
4.அவ்வாறு வேறுபாடுகள் இருக்கு மெனில், அவர்களை ஒன்றுபடுத்து வதாக எது இருக்கும்?
இதுபோன்ற கேள்விகளை எழுப்பி, சாதியை எதிர்கொள்ளாமல் புரட்சியை நடத்த முடியாது என உறுதியாகக் கூறுகிறார் அம்பேத்கர்.
இன்றைக்கு இருக்கிற நவீன மநுவாதிகள் போல் அன்றைக்கு இருந்த மநுவாதிகள் சாதியை நியாயப்படுத்தினர். சாதி என்பது உழைப்புப் பிரிவினைதான். அதில் தீங்காக எதுவும் இல்லை. இனத் தூய்மையையும் ரத்தத் தூய்மையையும் காப்பதுதான் சாதியின் நோக்கம் என்றெல்லாம் இவர்கள் பசப்பினர். சாதி என்பது உழைப்புப் பிரிவினையன்று; உழைப்பாளர்களின் பிரிவினை. உழைப்பாளர்களைப் பிரிவினை செய்து அவர்களைப் படிநிலை அமைப்பில் நிரந்தரமாகப் பூட்டிவிடும் ஏற்பாடு. அவ்வாறே, சாதியால் ரத்தத் தூய்மையையும் இனத் தூய்மையையும் காக்கமுடியாது. உண்மையில் இனங்களும் ரத்தமும் கலந்த பிறகுதான் சாதி தோன்றியது. அதோடு வளர்ச்சி குன்றிய, உடல் சத்து வேண்டிய குள்ளர்களான மூன்றாம் தர மனிதர்களைத்தான் இந்தியாவிலுள்ள சாதிகள் தந்திருக்கின்றன. பத்துக்கு ஒன்பது பேர்கள் ராணுவத்துக்கு தகுதியற்றவர்கள் என்று அறிவிக்கப்பட்ட நாடு இந்தியா. எனவே, இன மேம்பாட்டியலின் அடிப்படையில்தான் சாதி செயல்படுகிறது என்பது அபத்தம்.
நாலாயிரம் சாதிகளுக்குப் பதிலாக நான்கு வர்ணங்களாக சமூகத்தை மறுகட்டமைப்பு செய்து, சமூக சீர்த்திருத்தம் செய்து விடலாம் என்பது ஆரிய சமாஜிகளின் கருத்து. வர்ணாசிரம தர்மம் பிறப்பின் அடிப்படையில் இருந்ததை எல்லாரும் எதிர்த்ததால், தாங்கள் கட்டியெழுப்பவிருக்கும் நான்கு வர்ண அமைப்பில் வர்ணத்தை குணத்தின் அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்றனர். நீங்கள் சொல்லும் புதிய நால்வர்ண அமைப்பு பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற பழைய பெயர்களிலேயே ஏன் அமைய வேண்டும்? புதிய நம்பிக்கைகளை வளர்த்தெடுக்க வேண்டுமெனில் புதுப்பெயர்கள் இடப்பட வேண்டாமா? சாதியில் உயர்ந்த நிலையை அனுபவிக்கும் ஒருவன், குணத்தின் அடிப்படையில் அவனுக்கு அளிக்கப்படுகிற கீழ் நிலைக்குப்போக எப்படி ஒப்புக்கொள்ளுவான்? அவனைக் கட்டாயப்படுத்த முடியுமா?
வர்ணமுறையை நடைமுறைப்படுத்த வேண்டுமெனில், சாதியை உடைக்க வேண்டும் அல்லவா? நவீன அறிவியல் குணங்களின் அடிப்படையில் சில வகுப்புகளாகப் பிரித்து, தொகுப்புகளாக அவர்களை குவிக்க முடியும் என்பதை ஏற்கவில்லை அல்லவா? சதுர்வர்ணத்தை பரிந்துரைப்பவர்கள் மக்களை வெற்றிகரமாகப் பகுத்து, அவற்றை மீறுவோர் மீது மநுதர்மம் விதிக்கும் தண்டனைகளைச் செயல்படுத்தத் தூண்டுவோம் என உறுதி கூறுவார்களா? சதுர்வர்ண அமைப்பில் பெண்களின் நிலை என்ன? இவை போன்ற கேள்விகளை எழுப்பி, பிறவி முட்டாளைத் தவிர வேறெவனும் நால்வர்ணத்தை வெற்றிகரமாக உயிர்ப்பிக்க முடியும் என நம்ப மாட்டான்.
அதை நடைமுறைப்படுத்த முடியும் என்றே வைத்துக் கொண்டாலும், இந்த ஏற்பாட்டில் சூத்திரன் தனது அடிப்படைத் தேவைகளுக்காக ஏன் பிறரை நம்பியிருக்க விடப்படுகிறான்?
அவனுக்கு எதிராக பிற வர்ணத்தார் ஒன்றுபட்டோ, தனித்தனியாகவோ திரண்டாலோ, அவனைக் காக்க வேண்டிய தமது கடமைகளைக் கைவிட்டாலோ என்ன நடக்கும்? அதனால் சதுர்வர்ணம் கொடுமை யானது. புதிதாய் இருந்தாலும் சரி, பழையதாக இருந்தாலும் சரி என ஆரிய சமாஜிகளின் வாதத்தை நிராகரிக்கிறார் அம்பேத்கர்.
சாதிப்பிரச்சனை குறித்து நடுநிலை அணுகுமுறையைக் கைக் கொள்பவர்களில், சாதியில் வினோதமான வெறுக்கத்தக்க எதுவுமில்லை என்பவர்களின் வாதத்தை எடுத்துக் கொள்கிறார் அம்பேத்கர். இவர்கள், இந்து மதத்தில் மட்டுமா சாதி இருக்கிறது; முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள் என்பவர்களிடமும் கூடத்தான் சாதி இருக்கிறது என்று சாக்கு சொல்வார்கள். இந்துக்களிடம் இருக்கிற சாதியும், இந்துவல்லாத பிற சமூகங்களில் இருக்கிற சாதியும் அடிப்படை யிலேயே வேறுபட்டிருப்பதைச்சுட்டிக் காட்டுவதோடு, அவ்வேறுபாடுகளையும் பட்டியலிடுகிறார்:
1.இந்துக்களை ஒன்றிணைக்கும் பிணைப்புகள் என்று எதுவும் இல்லை. இந்து அல்லாதோரிடம் அவ்வாறான பிணைப்புகள் நிறைய உள்ளன.
2.இந்துக்களிடம் சாதிக்கு இருக்கும் சமூக முக்கியத்துவம் இந்து அல்லாதவர்களிடம் இல்லை. சாதி விதிகளை மீறியதற்காக ஒரு முஸ்லிமையோ, சீக்கியரையோ சாதியில் இருந்து விலக்கி வைக்க மாட்டார்கள்.
3.பிற மதத்தினரிடையே சாதியைக் கடைப்பிடிப்பது என்பது ஒரு புனிதமான மதக்கடமையாக இல்லை. இந்துக்களிடமோ அது கட்டாயக் கடமை. பிற மதத்தினரிடையே சாதி என்பது வெறுமனே ஒரு பழக்கம். பிற மதத்தவர் சாதியை ஆரம்பித்து வைக்கவில்லை. சாதி அவர்களிடம் மிஞ்சி இருக்கிறது அவ்வளவுதான். எனவே, சாதிப் பிரச்சனையில் நடுநிலைமை வகிப்பது என்பது, உண்மையில் சாதிக்கு ஆதரவான நிலையை எடுப்பதுதான் என அவர் நிறுவுகிறார்.
சாதியை ஒழிக்கும் வழியாக சாட்பட் தோடக் மண்டல் அமைப்பினர் தேர்ந்து கொண்ட சாதி மறுப்புத் திருமணத்தை அம்பேத்கர் பாராட்டினாலும், அம்முறையில் பெரிய வெற்றி கிடைத்து விடாது என்கிறார். சாதி மறுப்புத் திருமணங்களும் சமபந்தி விருந்துகளும் ஏன் இந்துக்களிடம் பெரிய அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை என்றால், அவற்றுக்குத் தடையாக இந்து மதத்தின் சாஸ்திரங்கள் இருக்கின்றன. சாஸ்திரங்களுக்கு விரோதமான ஒன்றைச் செய்வது மதவிரோதம். எனவேதான் இந்துக்களிடம் அது வரவேற்பைப் பெறவில்லை. சாதி மறுப்புத் திருமணங்கள் பரவலாகாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நடப்பதால் பெரிய பயன் எதுவும் விளையப் போவதில்லை.
எனவே, உண்மையிலேயே சாதி ஒழிக்கப்பட்டு சமூக மாற்றம் வர வேண்டுமானால், சாதிக்கு ஆதாரமாக இருக்கிற சாஸ்திரங்களோடு, இந்து மதத்தையும் ஒழிக்க வேண்டும். இந்து மதம் என வழங்கப்படுவது உண்மையில் ஒரு மதமே அல்ல. கட்டுப்பாடுகளையும், தடைகளையும் விதிக்கின்ற ஒரு சட்டங்களின் தொகுப்புதான். எனவே அதை ஒழிக்க வேண்டும் என்பதில் மதவிரோதம் என்று எதுவுமில்லை. எனவே, நான் மதம் மாற முடிவு செய்து விட்டேன் என்று தனது உரையை முடிக்கிறார்.
(அம்பேத்கர் 1916 இல் எழுதியிருக்கிறார் - இந்தப் பகுதி அம்பேத்கார் சாதியம் என்ற பகுதியிலிருந்து எடுத்தாளாப்பட்டுள்ளது).
பிரிட்டிஷ் காலனிய ஆட்சியும் சாதி கோட்பாடுகளும்
· காலனிய ஆதிக்கவாதிகள் இந்தியா எனும் கருத்து உருவாவதற்கு எவ்வாறு தூண்டப்பட்டனர் என்று அறிவோம். இந்தியா எனும் கருத்து உருவாக்கத்தில் ஒரு முக்கியகூறு உண்டு இந்திய மரபு என்பதாகும். காலனி ஆட்சியாளர்கள் இந்திய நாகரீகம் பற்றியும் இந்தியாவைப் பற்றியும் காலணி நிர்வாக அறிக்கைகளும் தேசிய கற்பிதங்களும் பிரிட்டிஷ் ஆட்சியை கட்டியமைக்க பயன்படுத்தினர்.
ஆங்கிலேயர்கள் சாதிகளின் இருப்பை தீவிரமாக பரிசீலித்தனர். அடுத்தடுத்து குடிமதிப்புகளில் இந்திய மக்கள் அனைவரையும் சாதியாகவே பாகுபடுத்த முயன்றனர். எல்லோரும் ஏதோ ஒரு சாதியை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்றும் சாதி அடையாளமே உண்மையான அடையாளம் என்றும் கருதினர். இத்தகைய முன்னெடுப்பால் சாதி உண்மையானதாகவும் மேலும் வலுப்பெற்றதாகவும் மாறியது. (சாதி தோற்றம் வளர்ச்சியும் ஓர் அறிமுகம் சுரிந்தர் எஸ் ஜோத்கா தமிழில் பக்தவத்சல பாரதி நூல் பக்கம் 22 - 23 காலச்சுவடு பதிப்பகம்).
· இவ்வகையாக மிஷனரிகளும் காலனி அதிகாரிகளும் வெவ்வேறு வகையில் சாதி உருவாக்கத்தில் கருத்துகளில் பங்களித்துள்ளனர். இந்திய சமூகத்தைப் புரிந்து கொள்வதற்காக இந்து மதநூல்களையும் அந்நூலை விளங்கிக் கொள்ள அன்றைய பண்டிட்டுகளையும் சாஸ்திரிகளையும் பயன்படுத்திக் கொண்டார்கள். 'இப்பனூல்களின் கருத்து ஏற்பது என்பது இந்திய சமூகம் சமூகம் அசைவற்றது காலங்களை கடக்காதது காலத்தால் மாற்றமுறாதது..... இந்திய சமூகம் பற்றிய பல்வேறு பிரதேசங்களை இடையிலான வேறுபாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை' (மேல் அதே நூல் பக்கம் 23) .
சாதிப்பற்றிய தூய்மோனின் கோட்பாடு இந்தியா பற்றிய அவர்களின் மேற்கத்தியர் கோட்பாட்டை வலுப்படுத்துகிறது. இந்தியாவின் ஒட்டு மொத்தத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் அதன் தனித்துவமான சிந்தனை முறை அல்லது நடைமுறையை விளக்குகிறது. இன்னொரு வகையில் சொல்வதனால் இந்திய சமூக பண்பாட்டு வாழ்வின் பகுதியாக அமைகிறது என்பதனை சாதி எனசுருக்கலாம். இந்தியாவின் இந்த பல பனுவல்கள் தருவது சாதி அமைப்பை கொண்ட இந்திய சமூகம் காலம் காலமாகவே அதன் அகமுரண்பாடுகளோடு மாறாமல் வந்துள்ளதாக இப்பனுவல்கள் சொல்கின்றன. இந்த தேசத்தின் பூர்வீக மக்கள் மாற்றத்திற்கான எந்த முகாமையும் கொண்டிருக்கவில்லை எனும் தோற்றம் ஏற்படுகிறது. இத்தகைய வாதங்கள் மேற்குலகம் இந்தியாவே காலனியாக மாற்றியதற்கான நியாயப்படுத்துவதற்கு வழங்கப்பட்டன (அதே மேல் நூல் பக்கம் 33 -34 ).
மேலும் காலனி ஆதிக்காலத்தில் சாதி உருவாக்கம் எப்படி இருந்தது என்பதை பற்றி ஒரு சிறிய புரிதலுக்கு.பொதுவாக இன்று காலனி ஆதிக்க காலத்தில் சாதி அமைப்பில் ஒரு நெகிழ்ச்சியையும் சனாதன சிந்தனையின் செல்வாக்கில் இருந்து வீழ்ச்சி ஏற்படுத்தியதாக நம்பப்படுகின்றது. ஆனால் நாம் அனுமானிப்பதை விட மிகத் தீவிரமான வித்தியாசமான முறையில் சாதி அமைப்புடன் காலனியம் வினையாற்றி உள்ளது என்கிறார் நிக்ட்ரக்ஸ் (ஆங்கில ஆவண எழுத்தர்).காலனி அரசு புதிய வடிவிலான சிவில் சமூகம் ஒன்றை அறிமுகம் செய்தது என்றாலும் இந்த முந்தைய ஆட்சி எச்சங்கள் வடிவங்களை நவீன சிவில் சமூகத்தில் இருந்து விலக்கி வைத்து, அவற்றில் இடையீடு செய்வதில்லை என்ற பாவனையில் அவற்றில் காலத்தால் நிகழ்த்திருக்கக் கூடியதான மாற்றங்களைத் தடுத்து அவற்றின் முந்தைய வடிவம் என்ற பெயரில் சாதி பற்றிய அசைவியக்கமான நோக்கங்களை தவிர்த்து சனாதன(பார்ப்பனிய) நோக்கிலான உறைநிலை நோக்கத்தை அதிகாரப்பூர்வமாக்கியது. (சாதியை ஒரு மாறா நிலை கண்ணோட்டத்தில் நிறுத்திய பெருமை இவர்களை சாரும்)
சாதி பற்றிய அசைவியக்கமான நோக்கங்களை தவிர்த்து சனாதன(பார்ப்பனிய) நோக்கிலான உறைநிலை நோக்கத்தை அதிகாரப் பூர்வமாக்கியது. (சாதியை ஒரு மாறாநிலை கண்ணோட்டத்தில் நிறுத்திய பெருமை இவர்களைசாரும்).இவர்கள் செய்த இந்தப் பார்வை கோளாறு பாரதூரமான விளைவுகளை உருவாக்கியுள்ளன. அதனை பற்றி தொடர்ந்து பார்ப்போம். இதனை பேச மறுப்பவர்களே இங்குள்ள சீர்திருத்தவாதிகளும் ஆட்சியாளர்களும்.
1857-ல் எழுச்சிக்குப் பிறகு ஆங்கிலேயே அதிகாரிகள் சாதி ரீதியாக மக்களை பிரித்தாளும் கொள்கையை நடைமுறைப்படுத்தி ராணுவத்திலும் சாதியாக,பிரதேசமாக தனித்தனியாக பிரித்து பணியில் அமர்த்துவது. நாட்டில் ஆங்கிலஆட்சி தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்க அவசியமென இராணுவதளபதி எச்டி டக்கர் வலியுறுத்தினர் (இந்தியாவில் சாதியும் இனமும் ஜி எஸ் குர்யே பக்கம் 296).இந்தியாவில் ஆங்கிலே ஆதிக்கத்தை தக்க வைப்பதற்கு இந்திய மக்களை சாதிரீதியில் பிளவு படுவது அவசியமாக இருந்தது. அரசியல் எழுச்சியை தடுத்திட சாதி பயனுள்ளதாக இருப்பதாக சர் லேபிள் கிரிபின் போன்ற அதிகாரிகள் கருதினர்.ஒட்டுமொத்தத்தில் சாதியின் இருப்பு நமது ஆட்சி நீடித்திருப்பதற்கு சாதகம் இல்லாததாக தோன்றலாம். மதிநுட்பத்துடன் நிதானமாகும் அதனை கையாண்டால் அதை நமக்கு சாதகமாக மாற்ற முடியும். அதன் உள்ளடக்கம் தேசிய ஒற்றுமைக்கு எதிரானது என 1865 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஜேம்ஸ் கேர் எழுதினார். இதுபோன்ற வரலாற்று ஆசிரியர்களும் பத்திரிக்கையாளர்களும் அதிகாரிகளும் பிரித்தாலும் கருத்தையே போதித்து வந்தனர்.(அதே நூல்).
பிரித்தாளும் கொள்கை பொதுக் கோட்பாடாக திருச்சபைகளும் கிறிஸ்தவ தேவாலயங்களும் பயன்படுத்தியன (அதே நூல் பக்கம் 297).
பல்வேறு முரண்பாடுகளால் பிரிந்து கிடக்கும் மக்கள் தங்கள் நாட்டின் தேசத்தின் தேவையொட்டி ஒன்றுபட்டு போராடும் நிலையை தகர்க்க அவர்களுக்கு இடையிலே பல்வேறு விதமான முரண்பாடுகளை கையாண்டு சாதிரீதியான இடஒதுக்கீடு சட்டமன்றங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் கொணர்ந்தவை. ஒரே மொழிபேசும் பல்வேறு சாதிகள் தங்களுக்கு இடையிலான சாதிசங்கங்களை அமைத்துக் கொண்டது. இதனால்
1. அதன் சமூகத் தகுதியை காப்பதற்கு.
2.பள்ளி கல்லூரியில் பயிலும் தமது சாதி ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க நிதி அமைப்பைஉருவாக்குவது.
3. சாதி உறுப்பினர்களின் பழக்கவழக்கங்களை முறைப்படுத்துவது (மேல் காணும் அதே நூல் பக்கம் 311).
ஆங்கில ஆட்சி இறுதியில் மதத்தின் ஆட்சியின் அடிப்படையில் மக்களை சாதி சமூகமாக ஒன்றுக்கொன்று எதிராக சுயநலக் குழுக்களாக உருவாக்கி வைத்திருந்தது. இவைதான் ஆங்கிலேயர் கள் இந்தியாவை உருவாக்கி வைத்தவை என்பதனை ஆங்கிலேயர் களே எழுதியுள்ள ஆவணங்களில் தேடிக்கிடப்பவை. மேலும் மக்களை சாதிகளா இன்றுள்ள அடைப்புக்குள் எப்படி ஆங்கிலேயர் கொணர்ந்தனர் பாருங்கள்.
· 1.பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் 1870-களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினர். அவர்களின் நோக்கம் அனைத்து சாதிகளிலும் உள்ள ஏழை எளிய மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. தங்களின் ஆட்சிகுகந்த வகையில் இந்த சாதிய முறையை பயன்படுத்திக் கொள்ள விளைந்தனர் எனலாம். தங்கள் காலனிய ஆட்சி நீடிக்க பிரித்தாள, மக்களை சாதிய ரீதியாக மட்டுமல்ல, மத ரீதியாகவும் மோதவிட்டு தங்களின் ஆட்சியினை தக்க வைத்துக் கொள்ள இவை பயன்பட்டது எனலாம்.
2. 1920-களில் இட ஒதுக்கீடு கொள்கை அளவில் ஏற்கப்பட்டது.1927-ல் வேலைவாய்ப்பில் பதிவு துறையில் இட ஒதுக்கீடு அமல் படுத்தப்பட்டது. மொத்த மக்கள் தொகையில் மிக அற்பமாக அந்த இட ஒதுக்கீடு வழங்கியது. மக்கள் மத்தியில் சாதியாக ஒன்றிணைய தேவையை ஏற்படுத்தியது பல்வேறு பிரிவுகளாக இருந்த மக்கள் சாதி அடிபடையில் குறிபிட்ட அட்டவணைக்குள் அடக்கப்பட்டனர். இன்றுகாணும் சாதிசங்கங்கள் அன்றைய பல சாதியின் கலவை தொகுப்பே என்பேன். அதனை ஒருங்கிணைத்து ஒற்றைமுத்திரை குத்தும் பணி அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் செய்தனர்.
3.1970-களில் திமுக ஆட்சியில் சட்டநாதன் என்பவர் தலைமையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது சம்பந்தமாக ஆய்வு செய்ய கமிஷன் நியமித்தனர். முதல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சட்டநாதன் கமிஷன்.அது கூறிய தீர்வு என்ன?
(அ) இதுவரை பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு சலுகைகளை வெறும் 9 சாதிகள் மட்டுமே உறிஞ்சி எடுத்துக் கொண்டது. அந்த 9 சாதி பெயரை வெளியிட மாட்டேன் என்றார்.
(ஆ) மற்றொரு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் பெயரை இந்த கமிஷன் அறிக்கையில் வெளிப்படையாக கூறினார். இந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒரு சதவீதம் கூட இன்று வரை இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்றார்.