"சமூக வலைத்தளங்கள் இன்று வெறும் பொழுதுபோக்குக் கருவி மட்டுமல்ல; அவைதான் இன்று இசட்-தலைமுறையினரின் அரசியல் வகுப்பறைகள்.
அவர்கள் ஒரு வேட்பாளரை ஆதரித்தால், தர்க்கரீதியாகச் சிந்திக்காமல்தங்களது 'ரோல் மாடல்' சொல்கிறார் என்பதற்காகவே வாக்களிக்கும் 'ஹீரோ வழிபாடு' இவர்களை வழிநடத்துகிறது. சமூக வலைதளங்களில் ஒரு விஷயம்'ட்ரெண்ட்' ஆனால், அதன் உண்மைத் தன்மையை ஆராயும் முன்பே ஜென்-சி இளைஞர்கள் அதில் குதித்துவிடுகிறார்கள்.
'ஒருவரை ‘ஹீரோ' ஆக்குவதும், அடுத்த நிமிடமே அவரை ‘சமூக விரோதி' ஆக்குவதும் (Cancel Culture) மிக வேகமாக நடக்கிறது. இந்த வேகம் நிதானமான அரசியல் முடிவுகளுக்குத் தடையாக இருக்கிறது. "
" உலக அளவில் ஜென்-சி என்று அழைக்கப்படும் இன்றைய இளைய தலைமுறை, அநீதிக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும், கார்ப்பரேட் ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராடும் விழிப்புணர்வு பெற்ற தலைமுறையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டு ஜென்-சி தலைமுறை தற்குறிகளாக மாற்றப்பட்டுள்ளது. தங்களுக்கான வழிகாட்டியாக ஒரு “நிழலை” (பிம்பத்தை) தொடர்கிறது.
குறுந்தகவல்களால் மூழ்கடிக்கப்படும் இன்றைய இளைஞர்களுக்கு, திரையில் அவதரிக்கும் பிம்பத்தை ஆதரிப்பது எளிதான மனக்குறுக்குவழியாக (Mental Shortcut) அமைகிறது.
நடிகர்கள் உருவாக்கும் உணர்ச்சி அரசியல் (Populism) இவர்களைக் கவர்கிறது. பெரியாரையோ, அம்பேத்கரையோ, காரல் மார்க்ஸையோ ஆழமாக வாசிக்காத இளைஞர்களுக்கு, 'நல்லாட்சி - ஊழல் எதிர்ப்பு - தமிழ்ப்பெருமை- வாரிசு அரசியல் எதிர்ப்பு' என்கிற மேலோட்ட அரசியல் வசதியாக உள்ளது. அதனால்தான் திரையில் கவர்ச்சிகரமானவர்களாகவும், வெற்றியாளர்களாகவும் தெரியும் திரைநட்சத்திரங்கள் அரசியலிலும் அவ்வாறாகவே இருப்பார்கள் என்று இந்த 'மூளைகள்' நம்புகின்றன.
திராவிட அரசியலின் வரலாறு சினிமாவையும் அரசியலையும் பிணைத்தது. ஊழலாலும், வேலையின்மையாலும் விரக்தியடைந்துள்ள இன்றைய இளைஞர்கள். 'சர்கார்' அல்லது 'கத்தி' போன்ற படங்களின் கதாநாயகன் விஜய் தனி ஆளாகவே கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தை அழிப்பதைப் பார்க்கும்போது, அந்தத் திரை பிம்பத்தை நிஜத்துடனும் ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். நிஜ உலகில் தோற்கும் இளைஞனின் திரைநாயகன் படத்தில் வெல்கிறான். இந்த பிம்பத்தையே நிஜம் என கற்பித்துக் கொண்டு அந்த பிம்பத்துக்கு வாக்களிக்கவும் தயாராகிறான். "
"மூலதனத்தின் புதிய உற்பத்திப் பொருளா? வர்க்கப் போராட்டத்தின் எதிர்கால சக்தியா?
மார்க்ஸ் சொன்னதுபோல், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் வர்க்கத்தின் கருத்துகளே ஆதிக்கம் செலுத்தும் கருத்துகளாகின்றன. அந்த அடிப்படையில், ஜென்-சி தலைமுறை என்பது இயல்பாக உருவான சமூகக்குழு அல்ல; மாறாக, புதிய தாராளவாதத்தால் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தலைமுறை. டிஜிட்டல் உலகின் பூர்வகுடி (digital native) என்றால் அது ஜென்-சி தலை முறைதான். ஆனால் இந்த தொழில்நுட்பம், யாருடைய சொத்து? யாருடைய கட்டுப்பாட்டில்? யாருடைய லாபத்துக்காக? கூகுல், மெட்டா, அமேசான் போன்ற கார்ப்பரேட் மூலதனங்கள்தான் தகவலின் உற்பத்தி சாதனங்களை கைப்பற்றி வைத்துள்ளன.. பெருமளவு தகவலை நுகரும் வர்க்கம் என்கிற வகையில் அவர்கள் நுகரும் தரவுகளால் இவர்களே பெருமளவு சுரண்டப்படுகிறார்கள். இது புதியவகை தொழிலாளர் சுரண்டல். எந்தச் சுரண்டலையும் ஜென்-சி தலைமுறை எதிர்க்கிறது. ஆனால் அந்த எதிர்ப்பு 'ஹேஷ்டாக்'குகளில் முடிகிறது. 'ப்ரொஃபைல் பிக்சர்' களில் சுருங்குகிறது. வைரல் வீடியோக்களாக கரைகிறது.
உற்பத்தி உறவுகளை அசைக்காத எந்த எதிர்ப்பும் மூலதனத்திற்கு அபாயமில்லாத எதிர்ப்பு. சாதி, இனம், பாலினம் இவை யாவும் உண்மையான ஒடுக்குமுறைகள்தான். ஆனால், அவை வர்க்கச் சுரண்டலிலிருந்து பிரிக்கப்படும்போது, மூலதனம் அவற்றை எளிதில் உள்வாங்குகிறது. அனைத்து அடையாளங்களையும், பன்முகத்தன்மைகளையும் (Rainbow capitalism, Diversity branding) ஒடுக்குமுறையையும்கூட லாபத்தின் மொழியாக மாறுகிறது.
நிரந்தர வேலை இல்லாமல், ஒப்பந்த வேலைகளில், ஆப் -கள் கட்டுப்படுத்தும் உழைப்பில் சிக்கியுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் மீதான இந்த சுரண்டல் நெகிழ்வு - சுதந்திரம் அவர்கள் நுகரும் தரவுகளால் இவர்களே பெருமளவு சுரண்டப்படுகிறார்கள். இது புதியவகை தொழிலாளர் சுரண்டல். எந்தச் சுரண்டலையும் ஜென்-சி தலைமுறை எதிர்க்கிறது. ஆனால் அந்த எதிர்ப்பு 'ஹேஷ்டாக்'குகளில் முடிகிறது. 'ப்ரொஃபைல் பிக்சர்' களில் சுருங்குகிறது. வைரல் வீடியோக்களாக கரைகிறது. உற்பத்தி உறவுகளை அசைக்காத எந்த எதிர்ப்பும் மூலதனத்திற்கு அபாயமில்லாத எதிர்ப்பு. சாதி, இனம், பாலினம் இவை யாவும் உண்மையான ஒடுக்குமுறைகள்தான். ஆனால், அவை வர்க்கச் சுரண்டலிலிருந்து பிரிக்கப்படும்போது, மூலதனம் அவற்றை எளிதில் உள்வாங்குகிறது. அனைத்து அடையாளங்களையும், பன்முகத்தன்மைகளையும் (Rainbow capitalism, Diversity branding) ஒடுக்குமுறையையும்கூட லாபத்தின் மொழியாக மாறுகிறது.
நிரந்தர வேலை இல்லாமல், ஒப்பந்த வேலைகளில், ஆப் -கள் கட்டுப்படுத்தும் உழைப்பில் சிக்கியுள்ள புதிய தொழிலாளர் வர்க்கத்தின் மீதான இந்த சுரண்டல் நெகிழ்வு - சுதந்திரம் (Flexibility-Freedom) என்ற பெயரில் மூடி மறைக்கப்படுகிறது. இதுதான் புதியதாராளவாதம் (neo liberalism) வலை (internet) விரிக்கும் சூழ்ச்சி.
வேலைவாய்ப்பின்மை, கடன், மனஅழுத்தம் இவை அனைத்துமே சமூக அமைப்புச் சிக்கல்கள். அதாவது இந்த முதலாளித்துவ கட்டமைப்பு, நிதி மூலதனம் உருவாக்கியுள்ள சிக்கல். ஆனால் ஜென்-சிக்கு அவை தனிநபர் தோல்வியாகச் சொல்லப்படுகின்றன. இதன் மூலம் வர்க்கக் கோபம் அரசியலற்றதாக (Apolitical) மாற்றப்படுகிறது.
இன்றைய மூலதனத்தின் நவீன தயாரிப்பாக உருவானாலும், இன்றைய கார்ப்பரேட் மூலதனத்தின் பொருளாதார அரசியல் சமூக சூழலில்தான் இந்தத் தலைமுறையும் வாழ்கிறது.
அதிகாரத்துக்கு எதிரான, அரசுக்கெதிரான அவர்களின் கோபம் வர்க்கக் கோபமாக, வர்க்க அரசியலாக மாற்றப்பட்டால் அவர்களின் தொழில்நுட்ப பேராற்றல், போராட்ட ஆயுதமாக மாற்றப்பட்டால் 21ஆம் நூற்றாண்டின் வர்க்கப்போரின் முன்னணி சக்தியாக ஜென்- சி தலைமுறை மாறும் "
புதிய கலாச்சாரம் இதழில் இருந்து --இளங்கோ
புதிய கலாச்சாரம்பிப்- ஏப் 2026
பதிவர்: ஆ பகலவன்
+++++++++++++++++++++++++++++++++
குறுந்தகவல்களால் மூழ்கடிக்கப்படும் இன்றைய இளைஞர்களுக்கு, திரையில் அவதரிக்கும் பிம்பத்தை ஆதரிப்பது எளிதான மனக்குறுக்குவழியாக (Mental Shortcut) அமைகிறது.
நடிகர்கள் உருவாக்கும் உணர்ச்சி அரசியல் (Populism) இவர்களைக் கவர்கிறது. பெரியாரையோ, அம்பேத்கரையோ, மற்றும் அறிவியல் பூர்வமான மாற்று சிந்தனையான காரல் மார்க்ஸையோ ஆழமாக வாசிக்காத இளைஞர்களுக்கு, 'நல்லாட்சி - ஊழல் எதிர்ப்பு - தமிழ்ப்பெருமை- வாரிசு அரசியல் எதிர்ப்பு' என்கிற மேலோட்ட அரசியல் வசதியாக உள்ளது. அதனால்தான் திரையில் கவர்ச்சிகரமானவர்களாகவும், வெற்றியாளர்களாகவும் தெரியும் திரைநட்சத்திரங்கள் அரசியலிலும் அவ்வாறாகவே இருப்பார்கள் என்று இந்த 'மூளைகள்' நம்புகின்றன.
திராவிட அரசியலின் வரலாறு சினிமாவையும் அரசியலையும் பிணைத்தது. ஊழலாலும், வேலையின்மையாலும் விரக்தியடைந்துள்ள இன்றைய இளைஞர்கள். 'சர்கார்' அல்லது 'கத்தி' போன்ற படங்களின் கதாநாயகன் விஜய் தனி ஆளாகவே கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தை அழிப்பதைப் பார்க்கும்போது, அந்தத் திரை பிம்பத்தை நிஜத்துடனும் ஒப்பிட்டுக் கொள்கிறார்கள். நிஜ உலகில் தோற்கும் இளைஞனின் திரைநாயகன் படத்தில் வெல்கிறான். இந்த பிம்பத்தையே நிஜம் என கற்பித்துக் கொண்டு அந்த பிம்பத்துக்கு வாக்களிக்கவும் தயாராகிறான். "
இப்படியான நடிகரின் படங்களுக்கு (நிதி மூலதனத்தின் பகுதியாக) ஃபைனான்ஸ் செய்வதே கார்ப்பரேட் நிறுவனங்கள் என்பதை கூட அறியாமல் இருக்கும்
தமிழக இளைஞர்கள். இதற்கு யார் பொறுப்பு?