செப்டம்பர் 12 தியாகிகள் தின உரை 12.09.26

செப்டம்பர் 12 தியாகிகள் தின உரை 12.09.26

அன்பார்ந்த தோழர்களே செவ்வணக்கத்தை செழுத்தி எனது உரையைத் துவங்குகிறேன்.

இன்று செப்டம்பர் 12ஆம் நாள் தியாகத் தோழர் பாலன் அவர்களின் நினைவுநாள். இந்த நாளை இந்தியாவில் சுதந்திரத்துக்காகவும் இந்திய உழைக்கும் மக்கள் மற்றும் தலித் மக்களின் விடுதலைக்காக ஆதிக்க சக்திகளையும் அரசின் அடக்குறையையும் எதிர்த்துப் போராடி உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து தியாகிகள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் இங்கு கூடி தோழர் எல்.அப்பு மற்றும் பாலன் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து அவர்களின் தியாகத்தை நினைவுகூறுகிறோம்.

எல்.அப்பு, பாலன், சீராளன், தமிழரசன் போன்ற என்னற்ற கம்யூனிசப் போராளிகளும் ஏராளமான விவசாயிகளும், தொழிலாளர்களும், மாணவர்களும், இளைஞர்களும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகத்துக்கு என்ன பலன் கிடைத்தது சிந்தித்துப் பாருங்கள். இந்தியாவில் எப்படி தியாகங்கள் நடைபெற்றதோ அதே போலவேதான் ரஷ்யாவிலும் போல்ஷ்விக் கம்யூனிஸ்டுகளும், ரஷ்ய தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒன்றுபட்டுப் போராடி பல லட்சக்கணக்கானவர்கள் உயிர்தியாகம் செய்தார்கள். அவர்களின் தியாகத்துக்கு பலன் கிடைத்தது. அவர்கள் பாட்டாளி வர்க்க அரசை உருவாக்கி அனைத்து மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், குடியிருக்க வீடுகள், மற்றும் பெண்ணடிமைத்தனத்தை ஒழித்து பெண்களை விடுதலை செய்தார்கள். அவர்களது சாதனையோடு வேறு எந்த நாட்டோடும் ஒப்பிட முடியாது. அவர்களால் அத்தகைய சாதனையை நிகழ்த்தியபோது இங்குள்ள நாமும் நம்மை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு செயல்பட்ட பல கம்யூனிஸ்டுகளையும் பலிகொடுத்துவிட்டு இப்போதும் வறுமையிலும் பட்டினிச் சாவிலும் வேலையில்லாத் திண்டாத்தையும் எதிர்நோக்கொண்டிருக்கும் இழிவான நிலையிலேயே வாழ்ந்துவருகிறோம் இந்த இழிவான நிலை தொடர்வதற்கு என்ன காரணம் என்று நாம் சிந்தித்துப் பார்த்தது உண்டா? நமது தியாகத் தலைவர்கள் உட்பட நாம் மக்களுக்காகப் பல போராட்டங்களை நடத்தினோம். ஆனால் அரசு ஒருமுறை நம்மை தாக்கிவிட்டால் நாம் அதனை எதிர்கொள்ள முடியாமல் நமது நம்பிக்கையை இழந்து சோர்ந்து போகிறோம். நாம் ஒன்றுபடுவதற்கு எதிராகப் பலக்குழுக்களாக பிளவுபட்டுள்ளோம். நமது தியாகத் தலைவர்களின் தியாகத்தையெல்லாம் வீணடித்துக்கொண்டுள்ளோம். இதற்கு என்ன காரணம். நாம் என்ன தவறு செய்தோம், இப்போதும் என்ன தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா? தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினால் மட்டும் போதாது நாம் தொடர்ந்து தோல்வியடைவதற்கு என்ன காரணம், நாம் தொடர்ந்து பிளவுபடுவதற்கு என்ன காரணம் என்பதை இந்த நாளில் ஒன்றுகூடியுள்ள நாம் சிந்திக்க வேண்டும். அதுவே நமது தியாகத் தலைவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.

சர்வதேச அளவில் குருஷேவின் திருத்தல்வாதம் உருவானபோது அதனை எதிர்த்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சிப் போராடும்போதும் அந்த தத்துவப் போராட்டத்தை உன்னிப்பாக கவனிக்காமல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் உட்கட்சிப் போராட்டம் துவங்கியது. உட்கட்சிப் போராட்டம் என்றால் உட்கட்சி சித்தாந்தப் போராட்டம் என்ற புரிதலோடு நடத்தி கருத்தொற்றுமைக்கு வருவதற்கு மாறாக கட்சியை அதன் தலைவர்கள் பிளவுபடுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து உருவான சிபிஎம் கட்சித் தலைவர்களும் குருஷேவின் திருத்தல்வாதத்தையே ஏற்றுக்கொண்ட பொழுது கட்சியிலுள்ள புரட்சியாளர்கள் எதிர்த்த போதும் உட்கட்சி சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி ஒரு ஒன்றுபட்ட முடிவுக்கு வராமல் கட்சியை தலைவர்கள் பிளவுபடுத்தினார்கள்.

அதற்குப் பிறகு தோன்றி எம்எல் கட்சியிலும் அதன் அழித்தொழிப்பு கொள்கையை எதிர்த்தும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் விமர்சனம் குறித்தும் எம்எல் கட்சித் தலைமையானது உட்கட்சி சித்தாந்தப் போராட்டத்தை நடத்த தவறியது. தோழர் சாருமஜும்தாரின் மரணத்திற்குப் பிறகு எம்எல் கட்சி பலக் குழுக்களாகப் பிளவு பட்டது. அப்போதும் சித்தாந்தப் போராட்டத்தை தலைவர்கள் நடத்தவில்லை. பிறகு பல குழுக்களிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றி பல சிறுகுழுக்களாகச் சிதறுண்டு போனார்கள். ஆனாலும் இந்த தியாகிகள் நினைவு நாளில் மட்டும் பெயரளவுக்கு சடங்குத்தனமாக சில குழுக்கள் ஒன்றுசேர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி சுய திருப்தி அடைகிறார்கள்.

இந்த வரலாற்றிலிருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டியது என்ன?

1. இந்திய பொதுவுடமையாளர்கள் ஒருபோதும் உட்கட்சி சித்தாந்தப் போராட்டத்தை நடத்தவில்லை.

2. சிலசமயம் உட்கட்சிப் போராட்டத்தை நடத்தினாலும் அங்கெல்லாம் அற்ப பிரச்சனைகளையே விவாதித்தனர். சித்தாந்த அடிப்படையிலான விவாதங்களை நடத்தியதில்லை.

3. அவர்கள் சித்தாந்தப் போராட்டத்தை நடத்த வேண்டுமானால் அவர்களுக்கு மார்க்சிய தத்துவ அறிவு வேண்டும் ஆனால் அவர்களிடம் மார்க்சிய அறிவு குறைபாடே இருந்தது. மேலும் மார்க்சியத்தைப் பயன்படுத்தி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற உணர்வே தலைவர்களிடம் இல்லை.

4. மார்க்சிய அடிப்படை அறிவை இவர்கள் அணிகளுக்கோ மக்களுக்கோ ஊட்டவே இல்லை. அணிகளையும் மக்களையும் தலையாட்டி பொம்மைகளாகவும் ஆட்டுமந்தை கூட்டங்களாகவுமே வைத்திருந்தார்கள்.

இந்த சித்தாந்த பலவீனத்தாலேயே கம்யூனிசத் தலைவர்கள் பல தியாகங்கள் செய்தும் அதற்கான பலனை அடைய முடியவில்லை.

ஒரு தனி மனிதனது மூளை சரியாக வேலை செய்தால் மட்டுமே அவனால் சிறப்பாக சிந்திக்கவும் செயல்படவும் முடியும். மூளை சரியாக வேலை செய்யவில்லை என்றால் அவனால் சரியாக சிந்திக்கவோ செயல்பட முடியாது உயர்ந்த கட்டமான அந்த மனிதன் பைத்தியக்காரனாகவும் மாறும் நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதுபோலவே ஒரு பாட்டாளிவர்க்க அமைப்புக்கு மார்க்சிய தத்துவ பலம் மிகவும் அவசியமாகும். ஆகவேதான் லெனின் புரட்சிகரமான தத்துவம் இல்லாமல் ஒரு புரட்சிகர இயக்கம் இல்லை என்று சொல்லி தத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். காரல்மார்க்சும் புரட்சிகரமான தத்துவம் மக்களிடம் சென்றால் அது ஒரு பொருள்வகை சக்தியாக மாறும் என்றார். ஆனால் நாமும் நமது தலைவர்களும் மார்க்சிய ஆசான்களது போதனைகளை பின்பற்றி நமது மார்க்சிய விஞ்ஞான அறிவை வளர்த்து அதனை நமது நடைமுறை செயல்பாட்டுக்குப் பயன்படுத்தியிருந்தால் இந்த நாட்டில் நாம் வறுமை, வேயில்லாத் திண்டாட்டம், சாதி தீண்டாமை கொடுமை, பெண்ணடிமைத்தனம், சுரண்டல் போன்ற கொடுமைகளை ஒழித்து மக்கள் அனைவரும் தோழர்களாக ஒன்றுசேர்ந்து உன்னதமான வாழ்வை அடைந்திருக்கலாம். ஆகவே நமது வாழ்வை சிறக்க புதியதோர் பொன்னுலகை படைக்க மார்க்சியத்தை கற்று அதனை நடைமுறையில் பயன்படுத்துவோம் என்று இந்த தியாகிகள் நாளில் சபதமேற்ப்போம். ஆகவே தோழர்களே கம்யூனிஸ்டுகளாகிய நாம் பல தவறுகளை செய்துள்ளோம். இப்போதும் தவறுகள் செய்துகொண்டிருக்கிறோம். நமது தவறுகளை வெளிப்படையாக சுயவிமர்சனம் செய்துகொண்டு நமது தவறுகளை களைந்து நம்மை மாற்றிக்கொள்ளாதவரை நம்மால் மக்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை என்பதை நாம் உணர்ந்தால் மட்டுமே நாம் கம்யூனிஸ்டாக ஆக முடியும்.. ஆகவே இந்த தியாகிகளின் நினைவுநாளில் நமது தவறுகளை திருத்திக்கொள்வோம் என்று உறுதிமொழி ஏற்ப்போம். அதுதான் தியாகிகளுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.

கம்யூனிஸ்டுகளின் லட்சியங்களை மக்களிடம் கொண்டுசென்று பிரச்சாரம் செய்வோம்.

  • உற்பத்திச் சாதனங்களை சமூகமயமாக்குவது. அதாவது முதலில் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களை தனியாரிடமிருந்து பறிமுதல் செய்து பொதுச் சொத்தாக மாற்றுவது.
  • லாபத்தின் அடிப்படையிலான உற்பத்தியை ஒழித்துவிட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தியை வளர்ப்பது.
  • மத நிறுவனங்களிடமுள்ள தேவைக்கு அதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்து மக்களின் உடமையாக மாற்றி அதனை மக்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பயன்படுத்துதல்.
  • முதலாளிகளிடமுள்ள அரசியல் அதிகாரம் ஒழிக்கப்பட்டு பரந்துபட்ட மக்களிடம் அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படும்.
  • கிராமங்களில் நிலச்சீர்திருத்தம் செய்யப்படும். பெரும் பண்ணையார்களிடமிருந்து நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மக்களின் சொத்தாக மாற்றப்பட்டு அரசுக் கூட்டுப்பண்ணையை நிறுவும். அதன் பலன்கள் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
  • சிறு மட்டும் நடுத்தர விவாசிகளிடம் கூட்டுப் பண்ணையின் அவசியத்தை விளக்கி அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கூட்டுப் பண்ணைகளை நிறுவி சோசலிச அரசானது விவசாயிகளுக்கு நவீன கருவி, உரங்கள், விதை பொருட்களை வழங்கி விவசாயிகளுக்கு உதவி செய்யும்.
  • கூட்டுப்பண்ணையில் விளைவித்த பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க சோசலிச அரசு ஏற்பாடு செய்யும்.
  • விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சோசலிச அரசாங்கமே கூட்டுறவு வணிக நிறுவனங்களை அரசே நிறுவி கொள்முதல்செய்யும். அதன் மூலம் சோவியத்து அரசானது உற்பத்தியையும் விநியோகத்தையும் மக்களின் நலனிலிருந்து கட்டுப்படுத்தும்.
  • அனைத்து மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி ஆகியவற்றை வழங்குவதற்கான பொறுப்பை சோசலிச அரசே மேற்கொள்ளும்.
  • சோசலிச அரசானது தொழில்நுட்பத்தை வளர்க்கும். அதன்பயனாக வேலைவாய்ப்பை குறைப்பதற்கு மாறாக அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்கி தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைத்து அவர்களின் சம்பளத்தை உயர்த்தும்.
  • வேலை வாய்ப்பு உரிமையை மக்களின் உரிமையாக அறிவித்து சோசலிச அரசாங்கம் செயல்படும்.
  • சோசலிச அரசு ஒவ்வொரு மனிதர்களுக்கும் வேலைசெய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து அவர்கள் சுதந்திரமாகவும் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு ஏற்பாடு செய்யும்.
  • சமூகத்தில் நிலவும் பிற்போக்கு கருத்துக்கள், சிந்தனைமுறைகள், பழக்கவழக்கங்களை ஒழிக்க விஞ்ஞானப்பூர்வமான கல்வியை அனைத்து மக்களுக்கும் சோசலிச அரசு வழங்கும்.
  • நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபடுவதற்கான சூழலை சோசலிச அரசு உருவாக்கிக் கொடுக்கும்.
  • பெண்கள் மீது தாக்குதல் தொடுப்பதை கண்காணிப்பதற்கு கண்கானிப்பு குழுக்களை அமைத்து கண்கானித்து தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பே அதனை தடுத்து நிறுத்துவதற்கு மக்களைத் திரட்டி சோசலிச அரசு நடவடிக்கை எடுக்கும்.
  • சாதித் தீண்டாமை கொடுமைகளில் ஈடுபடுபவர்களை கண்கானித்து அவர்களை எச்சரித்து தீண்டாமை கொடுமைகள் நடக்கவிடாமல் தடுத்து தலித் மக்களை பாதுகாப்பதற்கான குழுக்களை உருவாக்கி சோசலிச அரசு செயல்படும்.
  • பெண்களுக்கும் ஆண்களைப் போல் சமூக உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பதோடு அவர்களுக்கும் ஆண்களுக்கு சமமான சம்பளம் கிடைக்க சோசலிச அரசு ஏற்பாடு செய்யும்.
  • பெண்கள் செய்யும் வீட்டு வேலைகள் சமயல், துணி துவைத்தல் போன்ற பணிகளை நிறுவனங்களின் மூலம் செய்து பெண்களை வீட்டு வேலைச் சுமையிலிருந்து சோசலிச அரசு விடுவிக்கும்.
  • குழந்தைகளையும் வயதானோர்களையும் பராமரிக்கும் பொறுப்பை சோசலிச அரசே ஏற்றுக்கொண்டு செயல்படும்.
  • அரசியல் அதிகாரம் கீழிருந்து செயல்படும் விதமாக மாற்றப்படும். அதாவது மக்கள் நிர்வாக குழுக்கள் கீழிருந்து சட்ட திட்டங்களை விவாதித்து மேல்மட்ட மக்கள் நிர்வாகக் குழுவுக்கு அனுப்பி சட்டம் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
  • சோசலிச அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பதற்கு உழைக்கும் மக்களுக்கு உரிமை வழங்கப்படும். அதற்கு பதில் சொல்லவேண்டியது மக்கள் நிர்வாகக் குழுவினரின் கடமையாகும்.
  • மக்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்களை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் தவறு செய்தால் எந்த நேரத்திலும் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.
  • தவறு செய்பவர்கள் மற்றும் சமூக விரோதிகளை மக்கள் முன்பு வெளிப்படையாகவே விசாரிக்கப்பட்டு பெரும்பான்மையான மக்களின் சாட்சியத்தின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்படும்.
  • தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்படும். தேசிய இனங்கள் பிரிந்துபோக விரும்பினால் ஒரு தேர்தலை நடத்தி பெரும்பான்மையான மக்கள் பிரிந்துபோக விரும்பினால் அந்த தேசம் பிரிந்துபோவதற்கு உரிமை உண்டு என்பதை சோசலிச அரசு ஏற்றுக்கொள்ளும்.
  • மதம் அரசிடமிருந்து முற்றிலும் துண்டிக்கப்படும். மத நம்பிக்கை என்பது தனி மனிதனின் உரிமையாகும். தனி மனிதனின் மத நம்பிக்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அதே நேரத்தில் ஒரு தனி மனிதர் மதத்தைப் பரப்புவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • சுரண்டலை ஆதரித்தோ மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் பிரச்சாரம் மற்றும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படும். தடையை மீறி செயல்படுபவர்களை மக்கள் நீதிமன்றம் தண்டிக்கும்.
  • மக்களிடையே உள்ள பிற்போக்கு கருத்துக்களையும் சிந்தனை முறைகளையும் பழக்கவழக்கங்களையும் போக்கி விஞ்ஞான அடிப்படையிலான கருத்துக்களையும் சிந்தனை முறைகளையும் பழக்கவழக்கங்களையும் வளர்ப்பதற்கு தேவையான மார்க்சிய கல்வி நிலையங்களை தெருவெங்கும் உருவாக்கி வளர்த்து மக்களை விஞ்ஞான சிந்தனையாளர்களாகவும் உழைக்கும் வர்க்கப் பண்பாளர்களாகவும் வளர்ப்பதற்கு கம்யூனிஸ்டுகள் பாடுபட வேண்டும்.

இத்தகைய கொள்கைகளை முதலாளித்துவ பிற்போக்கு அரசியல்வாதிகளோ, பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சியாளர்களோ மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் கார்ப்பரேட் முதலாளிகளோ ஏற்றுக்கொண்டு செயல்படுத்த மாட்டார்கள். ஆகவே உழைக்கும் மக்கள் தங்களது சொந்த முயற்சியாலேயே இத்தகைய மக்கள் நலக் கொள்கையை செயல்படுத்த வேண்டும். அதற்காக சில அரசியல்தலைவர்களை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது அது தலைமை வழிபாட்டு முறையாகும். அதற்காக ஒரு கட்சியை மட்டும் நம்பக்கூடாது. ஏனெனில் ஒரு கட்சியால் மட்டும் இதனை சாதித்துவிட முடியாது. ஆகவே மக்கள் அவர்களின்சொந்த முயற்சியின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். அதாவது மக்களின் கூட்டு முயற்சியின் மூலமே இதனை சாதிக்க முடியும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே இந்த கொள்கைகளை மக்களிடம் தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்து இந்தக் கொள்களை ஏற்றுக்கொள்பவர்களை ஓர் அணியில் திரட்ட வேண்டும் மக்களை அமைப்பாக்கி மக்களோடு இணைந்து போராடவேண்டும் என்பதே இன்றைய கம்யூனிஸ்டுகளின் முதன்மையான பணியாகும். புரட்சி பற்றி மார்க்சியம் நமக்கு போதிப்பது என்ன? 1. பிரச்சாரம் அதன் மூலம் அமைப்பை உருவாக்குவது. 2. கிளர்ச்சி, இதன் மூலம் பொது மக்களை அணிதிரட்டுவது. 3. செயல் அல்லது ஆணை. இதன் மூலம் புரட்சி செய்து முதலாளித்துவ அரசை வீழ்த்தி பாட்டாளி வர்க்க அரசை உருவாக்க வேண்டும் என்கிறது மார்க்சியம். இந்தியாவில் சமூக மாற்றத்தை ஒரு புரட்சியின் மூலம் சாதிப்பதற்கான புரட்சிகரமான கட்சி இல்லாத இன்றைய நிலையில் அத்தகைய புரட்சிகரமான கட்சியை கட்டுவதற்கான பிரச்சாரக் கட்டத்திலேயே தற்போது இயக்கம் உள்ளது. இதனைப் புரிந்துகொண்டு கம்யூனிஸ்டுகளின் லட்சியத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டியதே இன்றைய முதன்மையான கடமையாகும். ஆகவே தோழர்களே நாம் மார்க்சியத்தை கற்று மார்க்சிய சிந்தனையாளர்களாக நம்மை வளர்த்துக்கொள்வோம். மக்களையும் மார்க்சிய சிந்தனையாளர்களாக வளர்ப்போம். மார்க்சியத்தின் அடிப்படையில் சமூகத்தைப் புரிந்துகொண்டு சமூகத்தை மாற்றுவதற்கான வழிமுறைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்து அணிதிரட்டி அமைPப்பாக்குவோம். அதன் அடிப்படையில் மக்களோடு இணைந்து போராடி ஒரு பொன்னுலகத்தைப் படைப்போம் என்று தியாகிகளின் நினைவு நாளில் சபதம் ஏற்போம்.

***************************.


தொடர்புடைய கட்டுரைகள்:



***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம்: இந்தியச் சூழலில் ஒரு ஒப்பீட்டு ஆய்வு

மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம்: இந்தியச் சூழலில் ஒரு ஒப்பீட்டு ஆய்வு

முன்னுரை

இந்திய அரசியல் சிந்தனை வரலாற்றில் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகிய மூன்று சிந்தனைப் போக்குகளும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளன. இவை மூன்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், ஒடுக்குமுறையின் மூலகாரணம் என்ன, அதை எவ்வாறு களைய வேண்டும் என்ற கேள்விகளுக்கு முற்றிலும் வேறுபட்ட பதில்களை வழங்குகின்றன. இந்தக் கட்டுரை, மார்க்சிய-லெனினியப் பார்வையிலிருந்து இந்த மூன்று சிந்தனைகளுக்கும் இடையிலான உறவு, முரண்பாடு, நடைமுறைக் கூட்டணி ஆகியவற்றை விரிவாக ஆராய்கிறது; இறுதியில் இதற்கு எதிரான கண்ணோட்டங்களையும் தருகிறது.

1. வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் இந்தியச் சமூகத்தின் தனித்துவமும்

மார்க்சியம் ஒரு பொருளாதாரக் கோட்பாடு மட்டுமல்ல; அது வரலாற்றுப் பொருள்முதல்வாதம் (Historical Materialism), இயக்கவியல் பொருள்முதல்வாதம் (Dialectical Materialism) ஆகிய தத்துவார்த்த அடிப்படைகளைக் கொண்ட ஒரு முழுமையான உலகப் பார்வையாகும். மார்க்ஸ்-எங்கெல்ஸ் முன்வைத்த அடித்தளம் (Base) – மேல்மாடம் (Superstructure) கோட்பாட்டின்படி:

  • அடித்தளம்: உற்பத்தி உறவுகள், பொருளாதார அமைப்பு.
  • மேல்மாடம்: அரசு, மதம், சாதி, தத்துவம், கலாச்சாரம்.

மேல்மாடம் அடித்தளத்தின் வெறும் பிரதிபலிப்பு அல்ல; அது அடித்தளத்தின் மீது எதிர்வினையும் (Reciprocal Action) ஆற்றக்கூடியது என்பது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் முக்கிய உட்பொருள்.

இந்தியாவில் சாதி என்பது வெறும் கலாச்சார அம்சம் அல்ல; அது வரலாற்றுரீதியாக உற்பத்தி உறவுகளையும், நிலவுடமை அமைப்பையும் தீர்மானித்த சக்தி. சாதி அமைப்பு உழைப்புப் பிரிவினையை (Division of Labour) மட்டுமன்றி, உழைப்பாளர்களின் பிரிவினையையும் (Division of Labourers) நிர்ணயித்தது. இன்று சட்டப்படி எந்தச் சாதியினரும் எந்தத் தொழிலையும் மேற்கொள்ளலாம் என்ற நிலைமை உருவாகியிருந்தாலும், உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்த சுரண்டும் வர்க்கங்கள் சாதியை ஒரு கருவியாக இன்றும் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றன.

2. பெண் அடிமைத்தனம்: தனிச்சொத்துடமையா, பார்ப்பனீயமா?

பெண் ஒடுக்குமுறையின் தோற்றம் குறித்து எங்கெல்ஸ் தமது "குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" எனும் நூலில் விளக்கியுள்ளார்.

அம்சம் மார்க்சியப் பார்வை பெரியாரியப் பார்வை
மூலக் காரணம் தனிச்சொத்துரிமையின் தோற்றமும், வம்சாவளிக் கைமாற்றத் தேவையும் மத நம்பிக்கை, கற்பு சார்ந்த பார்ப்பனீய கருத்தியல்
தீர்வு தனிச்சொத்துடமையை ஒழிப்பது, உற்பத்தி உறவுகளை மாற்றுவது பார்ப்பனீயத்தையும் இந்து மதத்தையும் எதிர்த்த பகுத்தறிவுப் பிரசாரம்

மார்க்சியக் கண்ணோட்டத்தில், இந்தியாவில் அகமணமுறை (Endogamy) மற்றும் சாதியமைப்பு ஆகியவை தனிச்சொத்துரிமையையும் நிலவுடமையையும் பாதுகாக்கும் கருத்தியல் கருவிகளாக இயங்கின. சாதியைத் தக்கவைக்கப் பெண் அடக்குமுறை ஒரு கட்டாய அங்கமாக இருந்தது. எனவே, மேல்மாடத்தில் இருக்கும் சாதியக் கருத்தியலை எதிர்த்துப் போராடுவதும் மார்க்சியப் போராட்டத்தின் இயல்பான பகுதியே; இதற்குத் தனியே பெரியார்-அம்பேத்கார் கருத்தியல் தேவைப்படவில்லை என்பது இக்கட்டுரையின் மையவாதம்.

3. மூன்று சிந்தனைகளின் ஒப்பீடு

மார்க்சியம் பெரியாரியம் அம்பேத்கரியம்
முதன்மை எதிரி முதலாளித்துவம் & நிலவுடமை (வர்க்கம்) பார்ப்பனீயம் & ஆரியக் கருத்தியல் சாதியமைப்பு & பிராமணிய இந்துத்துவம்
முக்கியக் கருவி வர்க்கப் போராட்டம் & பாட்டாளி வர்க்கப் புரட்சி சுயமரியாதை இயக்கம் & பகுத்தறிவுப் பிரசாரம் அரசியல் சாசன உரிமை, ஜனநாயகம், கல்வி
இறுதி இலக்கு வர்க்கமற்ற, அரசற்ற கம்யூனிச சமூகம் சாதியற்ற, பகுத்தறிவுச் சமூகம் சமத்துவம்-சகோதரத்துவம்-சுதந்திரம் கொண்ட ஜனநாயகம்

மார்க்சியப் பார்வையில் இந்த ஒப்பீட்டிலிருந்து எழும் விமர்சனம்: முதலாளித்துவ உற்பத்தி அமைப்பையும் தனிவுடைமையையும் தகர்க்காமல் சாதியையோ, பெண் அடிமைத்தனத்தையோ முழுமையாக ஒழிக்க முடியாது. பெரியாரியமும் அம்பேத்கரியமும் முதலாளித்துவ அமைப்பை முழுமையாக நிராகரிக்காமல், ஜனநாயக/சீர்திருத்தச் சட்டகங்களுக்குள் தீர்வுகளைத் தேடுகின்றன என்பதே இக்கண்ணோட்டத்தின் முக்கிய விமர்சனம்.

4. திருத்தல்வாதமும் நடைமுறைக் கூட்டணியும்: எல்லைக்கோடு எங்கே?

மார்க்சிய-லெனினியக் கோட்பாட்டின்படி சித்தாந்த சமரசமும், தந்திரோபாயக் கூட்டணியும் (Tactical Alliance) வேறு வேறானவை. லெனின் தமது "இடதுசாரி கம்யூனிசம்: ஒரு இளம்பருவக் கோளாறு" எனும் நூலில், இலக்கை அடைய தற்காலிக கூட்டாளிகளையும் வெகுஜன அமைப்புகளையும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்கியுள்ளார்.

இதன் அடிப்படையில்:

  • ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதை இயக்கங்களுடனும், சாதி எதிர்ப்புப் போராட்டங்களுடனும் நடைமுறையில் கைகோர்ப்பது இந்தியச் சூழலில் தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவை.
  • ஆனால் இந்த நடைமுறைக் கூட்டணியின் போது மார்க்சியத்தின் தனித்துவமான வர்க்கக் கண்ணோட்டத்தைக் கைவிட்டு, வெறும் சீர்திருத்தவாதப் போக்குகளுக்குள் மூழ்குவது திருத்தல்வாதம் (Revisionism) எனப்படுகிறது.

இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்வதே, "கூட்டணி தேவை, ஆனால் சமரசம் ஆபத்தானது" என்ற நிலைப்பாட்டின் தத்துவார்த்த அடிப்படை.

5. சாதியும் வர்க்கமும்: பொருளாதார அடித்தளம் கொண்டது

பாரம்பரிய சீர்திருத்தவாதிகள் சாதியை வெறும் மதப் பிரச்சனையாகவோ, மனநிலைச் சிக்கலாகவோ பார்க்கும்போது, மார்க்சிய-லெனினியப் பார்வை அதை நிலவுடமை மற்றும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளோடு பிணைக்கிறது:

  • உழைப்பின் பிரிவினையும் உழைப்பாளர்களின் பிரிவினையும்: சாதி அமைப்பு உழைக்கும் வர்க்கத்தைப் பிரித்து வைக்கும் கருவியாகவும் இயங்குகிறது.
  • நிலமும் சாதியும்: நிலமற்ற விவசாயக் கூலிகளும் ஏழை விவசாயிகளும் பெருமளவில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்; நிலவுடமையாளர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் ஆதிக்கச் சாதியினர்.
  • அரை-நிலப்பிரபுத்துவச் சுரண்டல்: கிராமப்புறங்களில் சாதிய அடக்குமுறையும் தீண்டாமையும் நிலப்பிரபுத்துவச் சுரண்டலைத் தக்கவைக்கும் ஆயுதங்களாகப் பயின்று வந்துள்ளன.

எனவே சாதி எதிர்ப்புப் போராட்டங்களை வர்க்கப் போராட்டத்திலிருந்து வேறுபடுத்தி பார்க்க முடியாது; அவை புதிய ஜனநாயகப் புரட்சியின் (New Democratic Revolution) தவிர்க்க முடியாத கூறுகள் என்பது M-L இயக்கங்களின் நிலைப்பாடு.

6. வரலாற்றுச் சான்றுகள்: ஆந்திரா, தெலங்கானா, பீகார்

ஆந்திரப் பிரதேசம் (1968–1978):

  • ஸ்ரீகாகுளம் ஆதிவாசி விவசாயிகள் போராட்டம் (1968–71) — நிலப்பிரபுக்கள் மற்றும் வட்டிக் கடன் கொடுப்போருக்கு எதிராக சவர ஆதிவாசிகள் நடத்திய போராட்டம்.
  • ஜகத்தியா-கரீம்நகர் விவசாயிகள் இயக்கம் (1978) — 'வெட்டி' (சம்பளமில்லா அடிமை வேலை) முறைக்கு எதிரான போராட்டம்; 1978-இல் நடைபெற்ற "ஜகத்தியா ஜெயத்ராத்ரா" பேரணியில் பல்லாயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

பீகார்:

  • போஜ்பூர் எழுச்சி (1970-கள்) — மேல்சாதி நிலப்பிரபுக்களின் தலித் பெண்கள் மீதான வன்முறைக்கும் தீண்டாமை அடக்குமுறைக்கும் எதிராக மார்க்சிய உணர்வுள்ள தலித் இளைஞர்கள் திரண்டனர்.
  • இஜத் (சுயமரியாதை) மற்றும் கூலிப் போராட்டங்கள் — சட்டப்பூர்வ குறைந்தபட்சக் கூலியும் உபரி நிலப் பங்கீடும் கோரி நடத்தப்பட்டவை.
  • அர்வால் படுகொலை (1986) — அமைதியாகக் கூடிய விவசாயிகள் மீதான காவல்துறைத் தாக்குதலும், 'ரன்பீர் சேனா' நடத்திய தலித் கிராமப் படுகொலைகளுக்கு எதிரான M-L இயக்கங்களின் எதிர்ப்பும்.

இவை, சாதி எதிர்ப்புப் போராட்டமும் வர்க்கப் போராட்டமும் கள மட்டத்தில் ஒன்றிணைந்ததற்கான வரலாற்றுச் சான்றுகளாக முன்வைக்கப்படுகின்றன. இந்த வரலாற்றின் அடிப்படையில், "கம்யூனிஸ்டுகள் சாதிக் கொடுமைக்கு எதிராகவோ தலித் சுயமரியாதைக்காகவோ போராடவில்லை" எனும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது எனும் வாதம் இக்கண்ணோட்டத்தில் முன்வைக்கப்படுகிறது.

7. முடிவுரை: மார்க்சியக் கண்ணோட்டத்தின் தொகுப்பான வாதம்

இந்தக் கட்டுரையில் முன்வைக்கப்பட்ட மார்க்சிய-லெனினியப் பார்வையின்படி:

  1. மார்க்சியம் என்பது சமூக மாற்றத்திற்கான ஒரு முழுமையான, விஞ்ஞானப்பூர்வமான உலகப் பார்வை.
  2. இந்தியாவில் சாதிப் போராட்டமும் வர்க்கப் போராட்டமும் பிரிக்க முடியாதவை.
  3. கார்ப்பரேட் முதலாளித்துவமும் நிலவுடமையும் நிலவும் வரை சாதிய அடக்குமுறை உழைக்கும் மக்களைப் பிரிக்கும் கருவியாகவே தொடர்ந்து செயல்படும்.
  4. எனவே, சாதிய அடக்குமுறையையும் பெண் ஒடுக்குமுறையையும் புரிந்துகொள்ள பெரியார்-அம்பேத்காரின் பங்களிப்புகளைப் பரிசீலிக்கலாம்; ஆனால் அவற்றை இறுதித் தீர்வாகக் கருதுவது வழிகாட்டலுக்குப் பதிலாகக் குழப்பத்தையே அதிகரிக்கும் என்பது இந்நிலைப்பாட்டின் மைய முடிவு.

.


தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

சாதி ஒழிப்பும் வர்க்கப் போராட்டமும்: அம்பேத்கர் – பெரியார் கோட்பாடுகளின் போதாமைகளும் இன்றைய சமகாலப் பின்னடைவுகளும்

இந்த ஆதாரம் சாதி ஒழிப்பு மற்றும் வர்க்கப் போராட்டம் குறித்து அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கோட்பாடுகளை மார்க்சிய வர்க்கப்

பார்வையில் ஆய்வு செய்கிறது. சாதி என்பது வெறும் கலாச்சார அல்லது சட்ட ரீதியான சிக்கல் மட்டுமல்ல, அது நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுடன் பின்னிப்பிணைந்த ஒரு பொருளாதார அடித்தளம் என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. பெரியார் மற்றும் அம்பேத்கரின் சீர்திருத்தங்கள் சாதியின் மேல்கட்டுமானத்தை மட்டுமே மாற்ற முயன்றதால், அவற்றால் சாதியத்தின் வேர்களை முழுமையாக அகற்ற முடியவில்லை என்று இது விமர்சிக்கிறது. குறிப்பாக, நிலப்பகிர்வு மற்றும் உழுபவனுக்கே நிலம் போன்ற அடிப்படைப் பொருளாதார மாற்றங்களை முன்னெடுக்காதது தலித் மற்றும் உழைக்கும் மக்களின் விடுதலையை முடக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதைய தனியார்மயம் மற்றும் அடையாள அரசியல் சூழலில், இடஒதுக்கீடு போன்ற சலுகைகள் சாதி உணர்வை நீர்த்துப்போகச் செய்வதற்குப் பதிலாக அதைத் தீவிரப்படுத்தியுள்ளன. எனவே, சாதியை வேரறுக்க தீவிர விவசாயப் புரட்சியும் வர்க்க ரீதியான அணிதிரட்டலும் அவசியம் என்பதே இந்த உரையின் முக்கியச் செய்தியாகும்.

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்துங்கள் தோழர்களே


சாதி ஒழிப்பும் வர்க்கப் போராட்டமும்: அம்பேத்கர் – பெரியார் கோட்பாடுகளின் போதாமைகளும் இன்றைய சமகாலப் பின்னடைவுகளும்

முன்னுரை

இந்தியத் துணைக்கண்டத்தில் சாதியமும் தீண்டாமையும் நூற்றாண்டுகளைக் கடந்தும் தன் கொடூரக் கோரமுகத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. தீண்டாமைக்கு எதிராகவும் சாதி ஒழிப்புக்காகவும் தீவிரமாகக் களமாடிய முன்னோடிகளான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் பங்களிப்புகள் நவீன குடிமை உரிமைகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு போன்ற குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை ஈட்டித் தந்துள்ளன.

இருப்பினும், சமகாலத்தில் சாதிய வன்கொடுமைகள், ஆணவக் கொலைகள், தேர்தல் அடையாள அரசியல் மற்றும் சமூகப் பிளவுகள் குறையாமல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன. இதற்கு மூலக்காரணம், இவ்விரு தலைவர்களும் சாதியத்தை அதன் பொருளாதார அடித்தளமான "நிலப்பிரபுத்துவ-முதலாளித்துவ உற்பத்தி உறவுகளோடு" இணைத்துப் பார்க்காமல், பெரும்பாலும் மேற்கட்டுமான ரீதியான சித்தாந்த, சட்டவாத சீர்திருத்த எல்லைக்குள்ளேயே அணுகியதாகும். இன்றைய நவதாராளவாத, தனியார்மயக் காலகட்டத்தில் அவர்களது கோட்பாடுகள் சாதி அமைப்பை வேரறுக்க முடியாமல் தேங்கி நிற்பதற்கான காரணங்களை வர்க்கப் பார்வையில் ஆய்வு செய்வது புரட்சிகர அரசியலின் முதன்மைத் தேவையாகும்.


1. அடித்தளத்தை அசைக்காத மேற்கட்டுமானப் போராட்டம்

மார்க்சிய மெய்யியலின்படி, சமூகம் என்பது பொருளாதார உற்பத்தி உறவுகளாகிய 'அடித்தளத்தின்' (Base) மீதும், அதன் மீது எழும் சட்டம், மதம், சாதி, தத்துவம், அரசு போன்ற 'மேற்கட்டுமானத்தின்' (Superstructure) மீதும் இயங்குகிறது.

  • பெரியாரின் கருத்தியல் எல்லை: பெரியார் சாதியை முதன்மையாக மத, கடவுள், பிராமணிய ஆதிக்கக் கருத்தியல் சார்ந்த வெளிப்புறப் பண்பாட்டுப் பிரச்சினையாக அணுகினார். "ஜாதிக்களுக்கிடையில் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவம் வந்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும்" என்ற அவரது பார்வை, சாதியைப் பாதுகாக்கும் கிராமப்புற நிலவுடைமை உறவுகளைத் தகர்ப்பதற்கான பொருளாதாரப் போராட்டத்தைக் கட்டமைக்கவில்லை.

  • அம்பேத்கரின் சட்டவாத எல்லை: அம்பேத்கர் சாதியை அகமணமுறை, மத சாஸ்திரங்கள் மற்றும் பிராமணியத்தின் விளைவாகக் கண்டதோடு, ஜனநாயக அரசமைப்பின் மூலமாகவும் சட்டங்கள், இடஒதுக்கீடு, கல்வி மூலமாகவும் சாதியை அகற்றிவிட முடியும் என நம்பினார். ஆனால், சாதியம் என்பது வரலாற்றுரீதியாக பல்லவர், சோழர் காலம் தொட்டு கிராமிய நிலவுடைமை முறையில் உழைக்கும் அடித்தட்டு மக்களைச் சுரண்ட உருவான இறுக்கமான வேலைப்பிரிவினையின் வடிவம் என்பதை முதன்மைப்படுத்தத் தவறினார்.

அடித்தளமான நிலவுடைமை முறையையும் நில உறவுகளையும் தகர்க்காமல் வெறும் மத, சட்ட சீர்திருத்தங்களை மட்டுமே முன்னிறுத்தியதால், இவர்களது கோட்பாடுகள் சாதியத்தை அதன் வேரிலிருந்து அசைக்கத் தவறிவிட்டன.


2. நிலப்பிரச்சினையும் "உழுபவனுக்கே நிலம்" முழக்கப் புறக்கணிப்பும்

கிராமப்புறங்களில் சாதிய ஆதிக்கமும் தீண்டாமையும் நிலைத்திருப்பதற்கு நிலத்தின் மீதான ஏகபோக உரிமையே மூலகாரணம். தலித் உழைக்கும் மக்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் நிலமற்ற விவசாயக் கூலிகளாகவே உழல்கின்றனர்.

  • ஒட்டுமொத்த தலித் மக்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தாலும், ஏழை விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் முதன்மைக் கோரிக்கையான "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற அடிப்படை நிலப்பகிர்வு முழக்கத்தை அம்பேத்கர் தனது இயக்கத்தின் முதன்மைப் போர்க்கோரிக்கையாக மாற்றவில்லை.

  • அம்பேத்கரின் வழிவந்த தாதாசாகேப் கெய்க்வாட் போன்றோர் முன்னெடுத்த நில மீட்புப் போராட்டங்களைப் பிற தலித் தலைவர்கள் "கம்யூனிசப் போக்கு" என்றும், "அரசியல் சட்ட ஆட்சியில் இத்தகைய மக்கள் போராட்டங்கள் அராஜக வழி" என்றும் நிராகரித்தனர். நிலப்பிரச்சினையைச் சட்டரீதியாக நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமே தவிர, வீதியில் இறங்கி நிலப்பறிப்புப் போராட்டம் நடத்தக் கூடாது என்ற பாராளுமன்றவாத மாயை, உழைக்கும் தலித் மக்களின் அடிப்படைப் பொருளாதார விடுதலையை முடக்கியது.

  • வரலாற்றுரீதியாக கீழ்வெண்மணியிலும், இலங்கையிலும், தமிழகத்தின் வடஆற்காடு-தருமபுரி பகுதிகளிலும் கம்யூனிஸ்ட்டுகள் சாதி கடந்து விவசாயத் தொழிலாளர்களை வர்க்கமாகத் திரட்டிப் பண்ணையடிமைத்தனத்தை எதிர்த்தனர். ஆனால், அத்தகைய வர்க்கப் போராட்டப் பாதையைத் தவிர்த்து, சலுகைகள் மற்றும் அதிகாரப் பங்கீட்டை மட்டுமே கோரும் பாதையை இக்கோட்பாடுகள் தேர்ந்தெடுத்தன.


3. தனியார்மயமும் இடஒதுக்கீட்டின் எல்லையும்: நவதாராளவாதச் சூழலின் பின்னடைவு

அம்பேத்கரிய மற்றும் திராவிட இயக்கங்கள் முன்வைத்த மிக முக்கியமான தீர்வு 'இடஒதுக்கீடு' மற்றும் 'அரசு வேலைவாய்ப்பு' ஆகும். சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் இது ஒரு குறிப்பிட்ட அளவிலான நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியது உண்மை. எனினும், இன்றைய சூழலில் இக்கொள்கை பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது:

  • அரசு வேலைகளின் சுருக்கம்: 1990களுக்குப் பின் அமல்படுத்தப்பட்ட தாராளமயம், தனியார்மயம், உலகமயமாக்கல் கொள்கைகளால் அரசு நிறுவனங்கள் யாவும் தனியாருக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. நாட்டில் உள்ள உழைக்கும் மக்களில் மிகக் குறைந்த சதவீதத்தினருக்கே அரசுத்துறையில் வேலைவாய்ப்பு சாத்தியமாக உள்ள சூழலில், 90%-க்கும் அதிகமான வேலைகள் தனியார் வசம் உள்ளன. தனியார் துறையில் இடஒதுக்கீடு இல்லாத நிலையில், வெறும் அரசுப் பணி இடஒதுக்கீட்டை மட்டுமே நம்பியிருப்பது பெரும்பான்மை எளிய இளைஞர்களுக்குக் கானல் நீராகிவிட்டது.

  • சாதிச் சங்கங்களின் திசைதிருப்பல்: அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்கத் தவறிய ஆளும் வர்க்க அரசுக் கட்டமைப்பை நோக்கி கேள்வி எழுப்புவதற்குப் பதிலாக, சாதி அரசியல் கட்சிகள் "நமது இடஒதுக்கீட்டை அடுத்த சாதிக்காரன் பறித்துவிட்டான்" என்று இளைஞர்களிடையே பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டு சாதிக் கலவரங்களைத் தூண்டுகின்றன. இடஒதுக்கீடு சீர்திருத்தங்கள், சாதி உணர்வை மறையச் செய்வதற்குப் பதிலாகப் பலவீனமடையச் செய்யாமல், மாறாக சலுகைகளுக்காகச் சாதி அடையாளத்தைத் தீவிரமாகப் பற்றிக்கொள்ளும் அவல நிலையை ஏற்படுத்தியுள்ளன.


4. சாதிக்குள் உருவான புதிய நடுத்தர வர்க்கமும் அடையாள அரசியலும்

1950களுக்குப் பிந்தைய சீர்திருத்தங்களின் விளைவாக, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்குள் கல்வி கற்று, அரசு அதிகாரிகளாகவும், வணிகர்களாகவும், குட்டி முதலாளிகளாகவும் ஒரு புதிய நடுத்தர வர்க்கம் உருவானது.

  • வர்க்க நலனும் சாதி அடையாளமும்: இந்த மேல்நிலை வர்க்கத்தினர் தங்களது தனிப்பட்ட வர்க்க நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், ஆளும் வர்க்கத்துடன் பேரம் பேசவும் தங்களது சாதி மக்களை வாக்கு வங்கியாகவும் அரணாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

  • வர்க்க ஒற்றுமைச் சிதைவு: ஒரே சாதிக்குள் இருக்கும் ஏழைத் தொழிலாளி, அதே சாதியைச் சேர்ந்த முதலாளியையோ ஆளும் வர்க்கப் பிரதிநிதியையோ தன் வர்க்க எதிரியாகப் பார்க்காமல், "தன் சொந்த சாதிக்காரன்" என்று மயங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். இதன் விளைவாக, வெவ்வேறு சாதியிலுள்ள உழைக்கும் ஏழை எளிய மக்கள் தங்களுக்கான பொதுவான வர்க்க எதிரிகளுக்கு (கார்ப்பரேட்டுகளுக்கும் நிலப்பிரபுத்துவக் கூறுகளுக்கும்) எதிராக ஒன்றுபடுவது தடுக்கப்பட்டு, உழைக்கும் மக்களிடையே சாதியப் பிளவுகள் ஆழமாகின்றன.

  • திராவிட இயக்கத்தின் சமரச அரசியல்: பெரியாரின் சமூக சீர்திருத்த வழியில் வந்த திராவிட இயக்கக் கட்சிகள், தேர்தல் அரசியலில் தலித் அல்லாத இடைநிலைச் சாதியினரின் ஆதரவை இழந்துவிடக் கூடாது என்பதற்காக, கிராமப்புறங்களில் நிலவும் தீண்டாமைக்கு எதிராக உறுதியான அரசியல் நடவடிக்கைகளை எடுக்காமல், வெறும் "சமபந்தி போஜனம்", "சமத்துவபுரம்" போன்ற அடையாள சமரச நடவடிக்கைகளோடு தங்களைச் சுருக்கிக்கொண்டன.


5. கலை, ஊடகம் மற்றும் என்.ஜி.ஓ (NGO) அரசியலின் போலித் தீர்வுகள்

சமகாலத்தில் தலித்திய மற்றும் முற்போக்குச் சிந்தனைகள் கலை இலக்கியத் தளங்களிலும் என்.ஜி.ஓ (NGO) வட்டாரங்களிலும் பெரும் விவாதப் பொருளாகியுள்ளன.

  • மாமன்னன் போன்ற சமகாலத் திரைப்படங்கள் அடித்தட்டு மக்கள் மீதான அதிகார வர்க்கத்தின் வன்முறையைத் திரையில் தோலுரித்துக் காட்டினாலும், அதற்கான தீர்வாகப் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து அதிகாரப் பகிர்வு பெறுவதையே முழுமுதல் தீர்வாகச் சித்திரிக்கின்றன.

  • ஆளும் முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அமைப்புகளோடு சமரசம் செய்துகொண்டு ஏதேனும் ஒரு முதலாளித்துவக் கூட்டணியில் அங்கம் வகிப்பதே தலித் இயக்கங்களின் இன்றைய நடைமுறைப் போக்காக மாறிவிட்டது.

  • "அடித்தால் திருப்பி அடி" போன்ற தனிநபர் அகநிலைவாத முழக்கங்கள், மக்களைச் சாதி கடந்து வர்க்கமாக அணிதிரட்டுவதைத் தடுத்து, சாதிக்கு எதிராகச் சாதியை நிறுத்தும் ஆபத்தான திசைவழிக்கு இட்டுச் செல்கின்றன.


தீர்வு: புதிய ஜனநாயகப் புரட்சியும் கலாச்சாரப் புரட்சியும்

அம்பேத்கர் மற்றும் பெரியாரின் சட்டவாத, பண்பாட்டுச் சீர்திருத்தங்கள் அடித்தளத்தை அசைக்காமல் வெறும் வெளிப்பூச்சு மாற்றங்களையே தந்துள்ளன. இன்றைய புதிய காலனிய, அரை-நிலப்பிரபுத்துவ இந்தியச் சூழலில் சாதியும் தீண்டாமையும் நீடித்திருப்பதற்குப் பன்னாட்டு கார்ப்பரேட் ஏகாதிபத்தியமும், பெருமுதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ ஆதிக்கக் கூட்டணிகளுமே ஆதரவளிக்கின்றன.

இதற்கான உண்மையான தீர்வு:

  1. விவசாயப் புரட்சியும் நிலப்பகிர்வும்: நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை ஒழித்து, உழுபவனுக்கே நிலத்தை உரிமையாக்கும் தீவிர விவசாயப் புரட்சி மூலமே சாதிய உற்பத்தி உறவுகளின் பொருளாதார அடித்தளத்தைத் தகர்க்க முடியும்.

  2. வர்க்க அணிதிரட்டல்: உழைக்கும் ஏழை எளிய மக்கள் தங்களைச் சாதி அடையாளங்களை இழந்து, பாட்டாளி வர்க்கமாக அணிதிரண்டு மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவப் போராட வேண்டும்.

  3. தொடர்ச்சியான கலாச்சாரப் புரட்சி: பொருளாதார அடித்தளத்தை மாற்றியமைப்பதோடு நின்றுவிடாமல், சாதியையும் தீண்டாமையையும் உயர்த்திப் பிடிக்கும் அகமணமுறை, சடங்குகள், பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் சனாதனக் கலாச்சாரத்திற்கு எதிராகத் தொடர்ச்சியான கலாச்சாரப் புரட்சிகளை முன்னெடுப்பதன் மூலமே புதிய ஜனநாயகப் பண்பாட்டையும் முழுமையான சாதி ஒழிப்பையும் எட்ட முடியும்.
  4. இன்று நமது சமூகத்தில் ஜாதி  என்ற நோய் நீடித்திருபதற்கு காரணம் நிலரபுத்துவ சமுக அமைப்பின் மிச்ச சொச்சங்களே என்றாலும் உண்மையில் இன்னும் சில காரணிகள் உள்ளன அதில் ஒன்றை இதில் பார்ப்போம்.

இ இன்று நாம் வாழும் சமூகத்தில் ஜாதி என்ற கோட்பாட்டு அடிப்படையில் யார் மிகவும் கொடூரமாக அடக்கி ஒடுக்கப்படுகிறாரோ அவர்களும் இந்த ஜாதியை விட்டொழிய  முன் வராமையே சாபக்கேடு அவை ஏன் என்ன என்று ஆராய்ந்தோமானால் சாதி ஒழிப்பு முன்வைத்த அம்பேத்கர் ஆகட்டும் பெரியார் ஆகட்டும் அவர்கள் முன்வைத்த கோரிக்கையானது  ஜனநாயகத்தின் பெயரில் பாராளுமன்ற வாதம் மேலோங்கி இதற்குள்ளே சீர்திருத்த முறையில் மாற்றத்தை வேண்டி நின்றது தான் சமூகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்த மக்களின் நிலையை உயர்த்த கொண்டுவரப்பட்ட பல்வேறு சட்டதிட்டங்கள் என்ன என்பதை ஆராய்வது அல்ல இங்கு சமூகத்தால் மிகவும் அடக்கி ஒடுக்கப்பட்ட தாழ்ந்த நிலையில் இருந்த மக்களை எந்த வகையில் பயன்பட்டது என்பதை விட இதன் மூலம் சாதியின் உச்சாணிக்கொம்பில் உள்ளவரும் இட ஒதுக்கீடு வழங்கும் முறை வந்துவிட்டது. ஆனால் அந்த இட ஒதுக்கீடு எந்த அளவிற்கு மக்களுக்கு பயன்படுகிறது என்பதல்ல பிரச்சனை ... இந்த இட ஒதுக்கீடு என்ற பெயரில் வாழும் ஜாதி கட்சிகள் தங்கள் ஜாதி மக்களுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு என்ன செய்து கொண்டுள்ளன புரிந்து கொள்ளுங்கள்.

இ ஒதுக்கீடு கொள்கையால் ஜாதி நிலைத்து நிற்கிறது அதன் பெயரால் ஜாதி கட்சிகள் தழைத்தோங்குகிறது. படித்தால் வேலை: படிக்கவும் இட ஒதுக்கீடு; ஜாதி ரீதியாக இட ஒதுக்கீடு , இப்படிப் பேசப்படும் இட ஒதுக்கீடானது. உண்மையில் அதன் தேவையை நிராகறித்து விட்ட பின் 

     இங்கு எல்லாமே தனியார்மயமாகிவிட்டது அரசின் நிர்வாகத் துறையை தவிர்த்து. அப்படி இருக்கும் பொழுது ஒரு சில சதவீத மக்களுக்கு கூட வேலை வாய்ப்பை தர முடியாத நிலையில் உள்ளது அரசாங்கம் . நாட்டில் 78% அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிரந்தரப் பணியில் உள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது.  அப்படி எனும் பொழுது இட ஒதுக்கீடு கொள்கைப்படி எல்லோருக்கும் வேலை வாய்ப்பு என்பது கானல் நீராக அல்லவா உள்ளது?. அந்தந்த குறிப்பிட்ட ஜாதியில் இதற்கு முன்னரே மேல் நிலையில் உள்ளவர்களுக்கானதாக தான் அந்த இட ஒதுக்கீடு இன்று பயன்படுகிறது. அப்படி எனும் பொழுது அந்த ஜாதியில் உள்ள மற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பு என்பது எட்டாக்கனியாக உள்ளது. அதனை செய்ய வேண்டிய அரசு தனியாரிடம் கை காட்டுகிறது இங்கு வேலை இன்றி திரியும் இளைஞர்களை ஜாதி கட்சிகள் தனக்கான ஒதுக்கீடை அடுத்த ஜாதிகாரன் அபகரித்து விட்டான் அதனால்தான் நமது இளைஞர்களுக்கு வேலை இல்லை என்று ஒருத்தர் மீது இன்னொருத்தர் அபாண்டமாக பொய்யாக பழி சுமத்துகின்றனர். உண்மையில் வேலையை கொடுக்க வேண்டிய அரசு நிர்வாகம் அதற்கான எந்த விதமான பணியும் செய்யாமல் உள்ள பொழுது எப்படி மற்றவர்கள் இதற்கு காரணம் ஆவார்கள்?

ஆ இந்த மக்களின் வேலை வாய்ப்பையும் இந்த மக்களின் வாழ்வாதாரத்தையும் பறிக்கும் இந்த அரசு தான் இவர்களின் முக்கியமான எதிரி ஆனால் உண்மையில் நடைமுறையில் என்ன உள்ளது?

      இங்கு இருக்கும் அமைப்பு முறையை தாங்கிப்பிடித்து அதனுடன் இயந்து நிலையான ஜாதியின் கணிசமான அடையாளத்தை காட்டுகோப்போடு இருப்பது சிலருக்கு வாய்ப்புகளையும் பலருக்கு இழப்புகளையும் ஏற்படுத்துகிறது. சாதியானது தேய்வதற்கு பதிலாக அதன் இருப்பு பொதுவெளியில் வளர்ந்து வருகிறதோ என்ற கண்ணோட்டம் எழுகிறது.ஜாதி ஒழிபிற்கு பெரியார் வழி

 ஜாதி ஒழிப்பு பற்றி பெரியாரின் இரண்டு போக்குகள் ஒன்று ஜாதிகளுக்கு இடையில் சமத்துவம் வேண்டுமென்றதே ஜாதி ஒழிப்பு. ஜாதிகளுக்கு இடையில் உயர்வு தாழ்வு காணாமல் இருந்தால் சரிநிகர் சமமாகிவிடும். ஆக ஜாதி இல்லாமல் போகிவிடும் இதுவே சாதி ஒழிப்பாகும்.

பெரியாரின் பல்வேறு கட்ட போராட்டங்கள் மதிக்கத்தக்கவையாக இருந்தாலும் அவை ஜாதி ஒழிப்பிற்கு பயன்படவில்லை என்றே கூறுவேன். ஏனெனில் அவர் ஜாதியை வெறும் கருத்தியல் அம்சமாக மட்டுமே கண்டார் அதாவது வெளிப்புற அம்சங்களாக உள்ளதை மட்டும் புறக்கணிக்க முற்பட்டார். 

ஜாதி ஒழிபிற்கு அம்பேத்கார்வழி

சாதியத்திற்கு, நிலப்பிரபுத்துவ உற்பத்தி உறவுகளே அடித்தளமாக விளங்குகிறது. அடித்தளத்தை அசைக்காமலே, அதன் மேற்கட்டுமானத்தை - சாதி முறையை ஒழிக்கமுடியும் என்பது அம்பேத்கரின் நிலைபாடாக இருந்தது. சாதிய ஒழிப்புக்கு இந்துமதச் சீர்திருத்தமே வழி என்று கருதினார்.

விரிவாக ஜாதி ஒழிப்பு பற்றி அம்பேத்கார் பெரியார் கருத்துகளை இங்கே அழுத்தி வாசிக்க முடியும்

ஏகாதிபத்திய எதிர்ப்புப் பேசி, வர்ணாஸ்ரம தர்மத்தை ஆதரித்த காந்தியாரும்; வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்த்தும், சாதி ஒழிப்புக்கு, மதம் கடவுள், பார்ப்பனன் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொன்ன பெரியாரும்; வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்த்து, சாதி ஒழிப்புக்கு இந்துமதச் சீர்திருத்தமே வழி என்று கருதிய அம்பேத்காரும், ஆக இம்மூவரும் வெவ்வேறு நிலைபாடுகளைக் கொண்டவர்களாக இருந்தாலும், சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில், சாதியத்திற்கு அடித்தளமான நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்த போராட்டத்தை நடத்தாமலே மேற்கட்டுமானத்திற்கு எதிரான போராட்டம் நடத்தியதில் ஒரே கருத்தைக் கொண்டிருந்தனர்.

ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக அம்பேத்கர் உரிமைக் கொண்டாடினாலும் அவர், தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், மற்றும் தொழிலாளி வர்க்கம் ஆகியோர் மீதான சுரண்டலுக்கு அடிப்படையாக இருந்த காரணிகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கிய இயக்கத்தை வழி நடத்தவில்லை. தாழ்த்தப்பட்டோரில் 90 சதவீதத்திற்கும் அதிகமாகவுள்ள விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் அடிப்படைக் கோரிக்கையான "உழுபவருக்கு நிலம் சொந்தம்" என்கிற கோரிக்கையை எழுப்பவில்லை. தாழ்த்தப்பட்டோரில் புதிதாகத் தோன்றி உருவாகி கொண்டிருந்த குட்டிமுதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களைப் பிரதிபலிக்க கூடிய, தனித்தொகுதி ஒதுக்கீடு, அரசாங்க வேலைகளில் ஒதுக்கீடு, உதவித் தொகை கோருதல் போன்ற கோரிக்கைகள் (இக்கோரிக்கைகள் ஒட்டுமொத்தமான தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பயன்படும் என்று சொன்னாலும் கூட) மட்டுமே எழுப்பப்பட்டன. அவை தாழ்த்தப்பட்ட சாதியிலுள்ள நடுத்தர வர்க்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளை திடப்படுத்தக் கூடியவைதான். அம்பேத்கரின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் நடைமுறையை வைத்துப்பார்க்கும்பொது, அவர் தாழ்த்தப்பட்ட சாதியில் உருவாகிவந்த நடுத்தர வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதியாகத்தான் இருந்தார் என்பது தெளிவாகிறது.

அம்பேத்கரின் வழிவந்தவர்களில் முக்கியமானவரான கெய்க்வாட், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, நிலப்பகிர்வுக் கோரிக்கையே முக்கியமானது என்று எடுத்துக்கொண்டு போராடினார். பெருந்திரளான தாழ்த்தப்பட்ட மக்களை இந்தப் போராட்டம் கவ்விப்பிடித்துக் கவர்ந்தாலும், மற்ற 'தலித்' தலைவர்களின் பார்வை வேறுவிதமாக இருந்தது. இந்தப் போராட்டம் கம்யூனிஸ்ட் வழிப்பட்டது என்று கூறி, கெய்க்வாட்டின் போராட்டத்தினை ஏற்கவில்லை. அம்பேத்கரின் செயல்திட்டத்தில் இத்தகைய போராட்டங்களுக்கு இடமில்லை என்றும், அறிவித்தார்கள். அரசியல் சட்டப்படியான ஆட்சியில், பொதுமக்களின் போராட்டம் என்பது அராஜகவழி. எனவே நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இதற்கு இடமளிக்க கூடாது என்ற அம்பேத்கரின் கருத்தை அவர்கள் உயர்த்திப்பிடித்தார்கள். நிலப்பிரச்சனை முக்கியமானது என்றால், சட்டபூர்வமாக உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். என்று அவர்கள் வாதிட்டனர். இவ்வாறு, அம்பேத்கர், வழிவந்தவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிலப்பகிர்வுக்கான போராட்டங்களை ஏற்க மறுத்துவிட்டார்கள். தலித் இயக்கத்தினர் தற்போது நிலவும் பாராளுமன்ற முறையின் மூலம், முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ அரசதிகார அமைப்புகளில் இடம் பிடிக்கும் நோக்கத்துடன், ஏதாவது ஒரு ஆளும் வர்க்க அரசியல் கட்சிக் கூட்டணியில் சேர்வது நடைமுறைப் போக்காக ஆகிவிட்டது. இத்தகைய நிலைமைகளில் தலித் அமைப்புகள் - சாதிச் சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, சாதி ஒழிப்பு என்பனவற்றை முன்னணிப்படுத்தாமல், இடஒதுக்கீடு, அதிகாரப்பகிர்வு, சலுகைகள் பெறுவது ஆகியவற்றைக் கோருவது என்பதை முழுமுதல் நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன..…

அண்மையில் மாமன்னன் என்றோரு சினிமா வந்திருந்தது அதில் இயக்குனர் இன்று தலித்திய சிந்தனையாளர்களுக்கு நன்றாக தீனிபோட்டார் ஆனால் உண்மையில் அந்த கொடூரமான ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் தீர்வாக பாராளுமன்றத்தில் பங்கெடுப்பதை காட்டியிருப்பார். இதனை புரிந்துக் கொள்ளாத NGO களும் தலித்தியவாதிகளும் அந்த சினிமாவின் வியாபார நோக்கத்தையும் உழைக்கும் மக்களை பற்றி துளியும் அறிவில்லை என்று கூறியவுடன், என்னுடன் நட்பிலிருந்த ஒரு புரட்சிகரா இயக்கத்தை சார்ந்தவரின் எழுத்தை பாருங்கள் "அடித்தால் திருப்பி அடி" என்றார். உண்மையில் அகநிலைவாதியாக அவர் எழுதியதை நான் ஏற்க முடியவில்லை. அந்த முழக்கம் தோழர் சீனிவாசராவ் கீழதஞ்சையில் உழைக்கும் கூலி விவசாயிகளை ஒன்றினைத்து பண்ணையார்களுக்கு எதிராக ஆணையிட்டார். அதே போல் 1960 களில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக அனைத்து ஜாதியிலும் இருந்த உழைக்கும் (பாட்டளிகளை) மக்களை ஒன்றினைத்து போராட்டகளில் ஜாதி தீண்டாமைக்கு முடிவுகட்டினர் தனிகுவலை கோயில் நூழைவு மற்றும் இன்னும் சில... தமிழகத்தில் வடஆற்காடு தருமபுரி பகுதிகளில் புரட்சிகர அமைப்புகள் செய்தன பல்வேறு ஜாதியில் இருந்த உழைக்கும் மக்களை ஒன்றினைத்து. இவர்கள் ஜாதிக்கு எதிராக ஜாதியை நிறுத்துவது மக்கள் வர்க்கமாக அணி திரளக்கூடாது அவ்வளுவே.    .

ஆக தலித்துகளை காப்பாளர்களாக வலம் வரும் கட்சிகள் தினம் தினம் தலித்துகள் படும் அவலங்களை பற்றி துளியும் அக்கரை இன்றி தனது ஓட்டரசியலை மையமாக கொண்டே செயல்படுகின்றனர். வேங்கைவயல் தொடங்கி இதுவரை பல பிரச்சினைகளை இவர்கள் கையாண்ட விதமும் அன்று கீழ்வெண்மணியிலாகட்டும், தருமபுரி வடஆற்காடு பகுதியிலாக்கட்டும் அன்று ஜாதி தீண்டாமை ஒடுக்குமுறைக்கு எதிராக உழைக்கும் ஏழை எளிய மக்களை ஒன்றிணைத்து அன்றைய கம்யூனிஸ்ட்டுகள் போராடினர் அவர்கள் அன்று சாதித்தும் காட்டினர். இன்றுள்ள தலித்தியவாதிகள் பேசுவது போலவோ அல்லது NGOகள் பேசுவது போலவோ திட்டம் தேடிக் கொண்டிருக்கவில்லை செயல்பாட்டில் காட்டினர்கள். இன்று புரட்சிகர கட்சி இல்லாத நிலையில் ஏகாதிபத்திய எதிர்புரட்சிகர சக்திகள் மேலோங்கி உள்ள நிலையில் வர்க்க அரசியலை பேச வக்கற்ற இவர்கள் அடையாள அரசியலில் சிக்குண்டுகிடகின்றனர்

பல்லவர்கள் காலம் தொட்டு சோழர்கள் காலம் வரை உருவாக்கி திடப்படுத்தப்பட்ட ஜாதிய முறையும் அதனுடன் நுழைந்த தீண்டாமையும் நிலஉடமை கிராம சமுதாயத்தில் ஓர் இருக்கமடைந்த வேலை பிரிவினையை உணர்த்துகிறது. இவை ஆரியர்களால் உருவாக்கப்பட்டதோ அன்றி திராவிடர்களால் உருவாக்கப்பட்டதோ என காண்பதை விட கிராமிய நிலவுடமை முறையின் சமூகத்தின் வடிவம் என காண்பதே பொருந்தும். இவற்றை செழுமைப்படுத்துவதில் சனாதன இந்து மதத்தின் கருத்து உருவாக்கும் பணி முதன்மையாக இருக்கிறது.

அரசு அதிகாரம் கோயில் அதிகாரம் மையமாக கொண்ட நிலவுடமை கிராமிய சமூகத்தில் இரண்டும் அதிகாரத்திலிருந்தும் தீண்டதாகாதவர் விலக்கி வைக்கப்பட்டு ஊருக்கு வெளியே தனித்து இருத்தப்பட்டனர்.

சமூக உற்பத்தியின் அடிநிலை மக்களான இவர்களை குறிப்பிட்டு அந்தணரில் இருந்து புல்லு பறிக்கிற பரமன் வரை என கூறும் கல்வெட்டாகட்டும்.புலைச்சேரி கூறும் கூரைக் குடிவாழ் மனிதர்களான இவர்கள் எந்தவித பொது உரிமையைகளும் இன்றி இருந்தனர். விளை நிலங்கள் விற்பனையாகும் பொழுது இவர்களும் சேர்ந்து விற்கப்பட்டனர். (கி.பி 1184- தலித்தியம் கோ.கேசவன் நூல் பக்கம் 57).

மேலும் தமிழகத்தில் ஏற்பட்ட சீர்திருத்த வழியிலான மாற்றம் பற்றி கோ.கேசவன் கூறியிருப்பார்.

1950பின் கொண்டுவரப்பட்ட நிலசீர்திருத்தம், கல்வியில் வேலை வாய்ப்பு, இடஒதுக்கீடு, வரியவர்களுக்கான கடன்உதவி, ஐந்து ஆண்டு திட்டங்களில் தலித்துகளுக்கான நிதி உதவிஆகியவைசமூகத்தில் சலனப்படுத்தியது.அதுவரை சமூகத் கட்டமைப்புக்குள் கவுரவமான இடத்தை வகிக்காத தலித்துகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் ஆகியோர்அத்தகைய இடத்துக்கு வர வாய்ப்புகள் ஏற்படுத்தியது.கல்வி கற்று ஏதேனும் நிரந்தர பணியில் அமர முடிகிறது. ஒரு பாதுகாப்பாக நடுத்தர வாழ்க்கை வாழமுடிகிறது.நிலவுடமை முறையைஅழித்துவிட்டு முதலாளியம் உருவாவதாலும் சுய மூலதனம் இட்டு முதலாளிம் உருவாகாததாலும் இங்கு ஏற்பட்ட தொழில்மயமாதல் நகர மயமாதல் ஆகியவற்றின் தன்மைகள் மாறியே உருவெடுத்தன.அமைப்பு ரீதியான தொழிலாளர்கள் உருவாவதற்கு பதிலாக அவர்களை சிறுபான்மையினராக கொண்டு உதிரிப்பாட்டாளிகளை பெரும்பான்மையான கொண்ட நகர்மயமாதல் உருவாயிற்று.1950இல் தொடங்கிய ஏற்பட்ட இத்தகைய மாற்றங்கள் தல அளவில் அதன் தன்மைக்கு ஏற்ப வேறுபாடுகளையும் கொண்டிருந்தது.தென் தமிழகத்தில் இத்தகைய மாற்றங்கள் தலித் ஜாதியில் குறிப்பாக தேவேந்திர குலவேளாளர் ஜாதியில் ஒரு குறிப்பிட்ட நிலையில் ஏற்பட்டன.அரசியல் பொருளாதார சீர்திருத்தங்களை பெற்றுக் கொள்வதில் அரசாங்கத்தோடு அதைநடத்தும் ஆளுங்கட்சியோடு இயைந்தே இருந்தனர். ஜாதிய சமூகத்தில் ஏற்பட்ட இத்தகைய வர்க்க மாறுதலுக்கு ஒரு வரம்பு இருந்தது. இது ஒரு ஜாதியை குறுக்கும் நெடுக்கமாக பிளந்து விடவில்லை.

தி இந்து (30/05/1997)பத்திரிக்கை ஆதாரத்தின்அடிப்படையில்தேவேந்திரர் ஆதிதிராவிடர் அருந்ததியர் ஆகிய தலித் மக்கள் தத்தம் பகுதியில் தனித்தனியே கிளர்ந்து எழுந்தனர். முக்குலத்தோர் நாயுடு நாடார் ஆகிய சாதிகளை சேர்ந்தோர் இத்தகைய எழுச்சிகளை தாங்கிக் கொள்ள இயலாமல் செயல்பட்டனர்.கோயில் விழாக்களில் சமஉரிமை மறுக்கப் பட்டது. பிற ஜாதியினர் தலித்துகள் சமூக அளவில் தனிமைப் படுத்தப்பட்டனர். தேர்தலில் வெற்றி பெற்ற தலித்துகளை செயல்பட விடாமல் தடுத்தனர். செயல்பட்டோரை கொல்லவும் துணிந்தனர்.தலித்துகள் விரோதமாக எல்லாவிதமான சமூக கட்டுப்பாடுகளையும் விதித்தனர்.எங்கெல்லாம்எதிர்ப்பாற்றும்அதை பயன்படுத்தற்குரிய களமும் இருந்தனவோ அங்கெல்லாம் மோதல்கள் நிகழ்ந்துள்ளன.எழுச்சிக் கொண்ட தலித் சாதியினரும் எழுச்சியை அடக்க முயன்ற  முக்குலத்தோரும் வசிக்கும் கிராமங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து இருந்தும் அவை அனைத்திலும் கொந்தளிப்பு இருப்பினும் தலித் எழுச்சிகள் சிறிது சிறிதாகவே நடந்தேறின.

அரசாங்கம் இதை ஓர் அடிப்படையான சமூக சிக்கலாக காண்பதை விட சட்டம் ஒழுங்கு சிக்கலாக காண்பதில் பிரதான கவனம் செலுத்தியது.காவல்துறை நிர்வாக துறையின் கடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டன. 1989ல் பதிவு செய்யப்பட்ட பல குற்றங்களின் அடிப்படையில் தென் தமிழகத்தின் காவல்துறையில் முக்குலத்தோர் கனிசமாக இருக்கின்றது என்பதும் தலித் அல்லாத சாதிகளில் இருக்கும் எவராயினும் அவர்கள் ஒரு சார்பாகவே நடந்து கொள்கின்றனர் என்பதும் உண்மை அறியும் குழுக்களின் தகவல்களாகும்.

இவ்வாறாக

அரசியல் கட்சியில் இத்தகைய நிகழ்வுகளை தத்தம் அரசியல் லாபக் கண்ணோட்டத்தில் அணுகின சமூக சீர்திருவாத இயக்கமாக தொடங்கிய திராவிடர் இயக்கம் பார்ப்பனர்அல்லாதவர்களிடம் ஏற்படும் இத்தகைய  மோதல்களை கையாளக் கூட எவ்வித கருத்துருவாற்றலும் இன்றி இருந்தது. எனினும் நடைமுறையில் தலித் அல்லாத சாதிகளிடம் தமக்குள் ஆதரவு இழந்து விடாமல்,தலித்துகளிடம் அனுதாபமும் தோய்ந்த உபகாரங்களை காட்டின.மனித சங்கிலி, சமபந்தி என்ற பழைய நடைமுறைகளே கையாளப்பட்டன. ஊரையும் சேரியையும் வேறுபடுத்தும் அடிப்படைகளை கண்டுகளையாமல் சமத்துவபுரம் எனும் தனி ஊரையே நிர்மாணிக்க அறிவித்தது.பல அரசியல் கட்சிகள் தங்களின் நடைமுறை சார்ந்த வாக்கு வங்கிகளை விரிவுபடுத்தும் நோக்கம் கொண்டதாகவே அமைந்தன

இது மட்டுமல்லாமல் தீண்டாமை ஒழிப்பதற்கான காந்திய தத்துவ கட்டமைப்புக்குள்ளேயே இது இயங்கியது. தீண்டாமை எதிர்த்து தலித்துகளின் போராட்ட நியாயத்தை பற்றியோ எவ்வித அரசியல்நிலைப்பாடும் எடுக்காமல் ஆதிக்க சாதிகள் தம் சாதி ஆதிக்க மனநிலை கைவிட  வேண்டும் என்ற  உயர் ஜாதி தாராள மனநிலையோடு இவை இயங்கின.திராவிட இயக்கம் அரசு நிர்வாக அமைப்பின் மூலம் மேலிருந்து வழங்கிய சீர்திருத்தங்கள் தல அளவிலான சுயமரியாதை தலித்துகளுக்கு வழங்க இயலவில்லை என்கிற பொழுது அந்த இயக்கங்கள் தலித்துகளுக்கு பயனடையாது போய்விட்டது. புதிய இளைய தலைமுறையின் பிழைப்புவாதிகளை மட்டுமே இந்த கட்டமைப்புகள் ஏற்றுக் கொள்ள முடிந்தன.

ஒரே ஜாதிக்குள் தோன்றிய புதிய வர்க்கங்கள் தனது ஜாதி அடையாளத்தை இழந்து விட முயற்சிக்கவில்லை. தனது ஜாதி மக்களின் பலத்துடன் தனது வர்க்கத்திற்கு என்று புதிய கோரிக்கை முன்வைக்கபயன்படுத்திக்கொண்டுள்ளனர்.அதாவது அந்தந்த ஜாதிகளில் தோன்றிய புதிய வர்க்கத்தினர் அதிகாரியாகவும் முதலாளியாகவும் வணிகர்களாகவும் ஏன் ஆளும்வர்க்கத்தின் பிரதிநிதிகளாகவும் வளர்ந்துள்ளனர்.பல்வேறு ஜாதிகளில் தோன்றிய புதியவர்க்கங்கள்தேவைப்படும்நேரத்தில்ஒருங்கிணைந்துசெயல்பாட்டையும்மேற்கொள்கின்றனர்.புதிய மேல்நிலை வர்க்கங்கள் ஜாதிகளை கடந்து தமக்குள் ஒருங்கிணைவு ஏற்படுத்திக்கொள்கின்றனர்.இதுவே பிராமணர் அல்லாதவர் என்ற  பெயரிலும் ஒளிந்துக்கொள்கின்றனர்.தேவைப்படும்போது பிராமணர் இடத்தில் மட்டுமல்லாது  எல்லா மேல்நிலை  வர்க்கத்தோடும் உறவு கொள்ள தவறுவதும் இல்லை.

இந்த நிலையில் உழைக்கும் ஏழை எளிய பல்வேறு ஜாதிகள் உள்ள மக்கள் ஒன்றுபடுவதற்கு தடையாக இதே மேல் நிலையில் உள்ள  ஜாதியில் உள்ள ஒடுக்கும் வர்க்க பிரதிநிதிகளே என்றால் மிகையில்லை.

ஒரே ஜாதிக்குள் இருக்கும் முதலாளியை, அதிகாரியை ஆளும் வர்க்கபிரதிநிதியை…….முதலாளியாகவும் அதிகாரியாகவும் ஆளும் வர்க்க பிரதிநிதியாகவும் பார்க்காமல் தன் ஜாதிகாரனாக மட்டுமே பார்க்கும்படி பாமர மக்கள் பழக்கப்படும் வரையில் ஜாதியையும் வர்க்கத்தையும் புரிந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் உடைபடாமல் இதிலிருந்து பாமர மக்கள் விடுபட முடியாது.

புதியக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ இந்திய சமுதாயத்தில் சாதியும், தீண்டாமையும் நிலவுவதற்குக் காரணம் நிலப்பிரபுத்துவத்திற்கு முதலாளித்துவத்திற்கு முந்தைய (எல்லா உற்பத்தி உறவுகள் நீடித்திருப்பதற்கு) ஏகாதிபத்தியமும் பெருமுதலாளித்துவமும் ஆதரவு தருவதே ஆகும். புரட்சிகரமான முறையில்  பெருமுதலாளிகள் மற்றும் பன்நாட்டு கம்பெனியின் அரசை ஒழித்து ஒரு மக்கள் ஜனநாயகக் குடியரசு நிறுவுவதன் மூலமே ஏகாதிபத்திய ஆதிக்கத்தை ஒழிக்க முடியும். ஏகாதிபத்தியமும், பெரு்முதலாளித்துவமும், தரும் ஆதரவுக்கு முடிவு கட்ட முடியும். நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்திமுறை மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கு முந்தைய உற்பத்திஉறவுகளை ஒழிப்பதால், சாதிமுறைக்கும், தீண்டாமைக்கும் ஆதாரமாக இருக்கும் பரம்பரை தொழில் பிரிவினையை ஒழிக்க முடியும். மக்கள் ஜனநாயகக் குடியரசும் புரட்சிகர மக்களும் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக கலச்சாரப் புரட்சிகளை நடத்தி சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்திரவாதம் செய்கின்ற பிற அம்சங்களான அகமணமுறை, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்தல், படிநிலை முறை, பரம்பரைச் சடங்குகள் ஆகியவற்றின் அடித்தளத்தைத் தகர்த்துவிட்டு ஒரு புதிய ஜனநாயகப் பண்பாட்டை உருவாக்க முடியும்

.


தொடர்புடைய கட்டுரைகள்:



***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செப்டம்பர் 12 தியாகிகள் தின உரை 12.09.26

செப்டம்பர் 12 தியாகிகள் தின உரை 12.09.26 அன்பார்ந்த தோழர்களே செவ்வணக்கத்தை செழுத்தி எனது உரையைத் துவங்குகிறேன். இன்று செப்டம்பர் 12 ஆம் ...

செய்தியை சார்ந்த அலசல்