சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் வரவுள்ள நிலையில் பல்வேறு ''கணிப்புகள்'' வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத் தேர்தல் அரசியலை மார்க்சிய-லெனினியக் கண்ணோட்டத்தில் மிகக்கடுமையாக விமர்சிக்கிறது. திமுக, அதிமுக மற்றும் தவெக போன்ற கட்சிகள் வழங்கும் வாக்குறுதிகளும் இலவசங்களும் உழைக்கும் மக்களின் உண்மையான வர்க்கப் போராட்டத்தைத் திசைதிருப்பும் "அபினி" போன்ற கவர்ச்சித் திட்டங்கள் என்று இது வாதிடுகிறது. குறிப்பாக, சினிமா பிம்பங்களை அடிப்படையாகக் கொண்ட அரசியல் இளைஞர்களின் தன்னிச்சையான அதிருப்தியைப் பயன்படுத்திக் கொள்கிறதே தவிர, அவர்களிடம் அரசியல் தெளிவை உருவாக்குவதில்லை எனச் சுட்டிக்காட்டுகிறது. தற்போதைய நாடாளுமன்ற ஜனநாயக முறை ஒரு போலித் திரை என்றும், அதற்குப் பதிலாக மக்கள் தங்களை அதிகாரப்படுத்திக் கொள்ளும் "கம்யூன்" அல்லது "சோவியத்" முறையே உண்மையான தீர்வாகும் என்றும் கட்டுரை
யார் வெற்றிபெற்றாலும் தோல்வி அடைவது வாக்காளர்களான உழைக்கும் மக்களே! அதனை பற்றி விவாதிப்போமே!
முந்தைய பிரதமர்கள் யாரும் செய்யாத வகையில், மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள் மட்டுமின்றி, மாநகராட்சித் தேர்தல்களுக்காகக் கூடப் பிரதமர் வீதிக்கு வந்து பிரச்சாரம் செய்யும் கலாச்சாரத்தை மோடி உருவாக்கியிருக்கிறார். உழைக்கும் மக்களை வெறும் ஓட்டு இயந்திரமாய் மாற்றி அவர்கள் ஓட்டு போடாவிட்டால் EVM போட வைக்க கூட முயல்வார்கள் ஆனால் உழைக்கும் மக்கள் தங்களின் வாழ்வாதர பிரச்சினை பேசினால் குண்டாந்தடிகள்தான் உருகின்றது அதனை பேசத தேர்தல் களத்தை சற்று இன்று தேர்தல் திருவிழாவில் வெற்றி பெறப்போவது யார் என்று காத்திருக்கும் வேளையில் நாம் நமக்கான அரசியலை தேடுவோம் தோழர்களே.
இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
நீண்ட காலமாக ஆட்சியில் உள்ள திராவிட கட்சிகளை எதிர்த்த தமிழர்களின் உரிமைக்காக போராடுவதாக கூறும் சீமான் அவர் தான் முன்வைக்கிற 'கொள்கைகளை' நிறைவேற்றுவதற்குத் தேவையான கட்சி அமைப்பைக் கட்டவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் தமிழ் உணர் கொண்டோர் விஜய் அரசியலுக்கு வரும்வரை, தமிழ்த்தேசிய இன உணர்வுள்ள இளைஞர்கள் சீமானுக்கு ஆதரவாக நின்றார்கள். இவர்கள் சிறுபான்மையினர்தான். இங்கே மார்க்சிய லெனினியம் பேசும் குழுக்கள் கணக்கிலே இல்லை அவர்கள் அரசியல் அதிகார போட்டியில் இல்லை எனலாம்!
சினிமா கவர்சி நாயகன் விஜய் அரசியலுக்கு வந்தபிறகு . . . இளைஞர்கள் பெரும்பான்மையினர் (திமுக, அதிமுக கட்சிகளைச் சாராத இளைஞர்கள்) நிபந்தனையின்றி விஜய்க்கு ஆதரவாக 'தேர்தல் அரசியலில்' பங்கேற்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது. இவர்கள் திமுக, அதிமுக கட்சிகளுக்கு எதிராகத் தேர்தல் அரசியலில் நிற்கிறார்கள்! தமிழகத்தின் பிரச்சினையையோ அரசியல் பொருளாதாரம் மற்றும் தமிழ்த்தேசியம் போன்றவற்றைப் பற்றியெல்லாம் இவர்கள் கணக்கில் கொள்வதாகவே தெரியவில்லை! இவர்களின் ஒரே நோக்கம் . . . விஜயை ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவதே ஆகும்..
பிம்பங்களின் அரசியலும் அபினி மயக்கமும்:
இன்றைய சமூகத்தில் சினிமா மற்றும் ஆன்மீகம் ஆகியவை மக்களை
மார்க்சிய உளவியல் ரீதியாக ஒருவித 'அபினி' மயக்கத்தில் வைத்துள்ளன. உழைக்கும் மக்களின் வர்க்க உணர்வை மழுங்கடித்து,
அவர்களை எதார்த்தப் போராட்டங்களிலிருந்து திசைதிருப்பவே
இந்த பிம்பங்களின் அரசியல் ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்படுகிறது.
இலவச அரசியலும் தேர்தல் கவர்ச்சியும்:
தமிழகத் தேர்தல் களத்தில் உண்மையான வர்க்கப்
போராட்டத்திற்குப் பதிலாக, சாதி அரசியலும் ஓட்டுக்கட்சிகளின் இலவசங்களுமே முன்னிறுத்தப்படுகின்றன.
உழைக்கும் மக்களின் உண்மையான தேவைகளைத் தீர்ப்பதற்குப்
பதிலாக,
வெறும் கவர்ச்சித் திட்டங்கள் மூலம் அவர்களை வாக்கு
வங்கிகளாக மட்டும் சுருக்கிப் பார்க்கும் இந்த முறை மார்க்சியத்திற்கு முற்றிலும்
எதிரானது.
கம்யூனிஸ்டுகளின் தத்துவச் சீரழிவும் த.வெ.க ஆதரவும்:
இந்திய கம்யூனிஸ்டுகள் இன்று எத்தகைய தத்துவ மற்றும்
நடைமுறை நெருக்கடியில் சிக்கியுள்ளனர் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்,
திரைக்கவர்ச்சியை மட்டுமே மூலதனமாகக் கொண்டுள்ள த.வெ.க (T.V.K)
போன்ற கட்சிகளுக்கு சில கம்யூனிஸ்ட் அமைப்புகள் (உதாரணமாக,
கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பார்ட்டி ஆப் இந்தியா)
ஆதரவளிப்பதாகும். இது பாட்டாளி வர்க்கப் பாதையிலிருந்து விலகி, கவர்ச்சிவாதத்திற்குப் பலியாகும் சந்தர்ப்பவாதப் போக்கையே
அப்பட்டமாகக் காட்டுகிறது.
லெனினிய விமர்சனம்: லெனின் தெளிவாகச் சுட்டிக்காட்டியபடி,
தொழிலாளர்களின் வாக்குகளைக் கவர்வதற்காக வெறும் கவர்ச்சியான
"தேர்தல் முழக்கங்களை" மட்டும் முன்வைப்பது பாட்டாளி வர்க்கத்திற்கு
செய்யும் துரோகமாகும். முதலாளித்துவ அமைப்பை வீழ்த்தும் உண்மையான நோக்கமின்றி,
முதலாளிகளுக்கு முன்னால் மௌனம் சாதித்து,
நயநாகரிகமாகச் சரணடையும் கவுத்ஸ்கி போன்றவர்களின்
திருத்தல்வாதமே இந்த கவர்ச்சி அரசியல்.
ஆகவே,
கவர்ச்சிவாதம் என்பது முதலாளித்துவ
ஜனநாயகத்தின் போலித்திரையைத் தக்கவைக்கும் ஒரு தந்திரமே தவிர,
அது ஒருபோதும்
பாட்டாளி வர்க்க விடுதலையை வென்றெடுக்கும் மார்க்சியமாக முடியாது.
உண்மையான பாட்டாளி வர்க்க அதிகாரம் என்பது மக்கள் தங்களைத்
தாமே நிர்வகித்துக்கொள்ளும் 'கம்யூன்' முறை போன்ற அமைப்புகளின் மூலமே சாத்தியப்படும்.
திரைக்கவர்ச்சியும் ஆன்மீகமும் எவ்வாறு 'அபினி' ஆக செயல்படுகின்றன?
லெனின் தனது புகழ்பெற்ற 'என்ன செய்ய வேண்டும்?' (What is to be
Done?) என்ற
நூலில் 'தன்னியக்கவாதம்' (Spontaneity) மற்றும் 'உணர்வுப்பூர்வமான அரசியல்' (Consciousness) ஆகியவற்றுக்கு இடையேயான முரண்பாட்டை மிக விரிவாக
விளக்கியுள்ளார்.
இன்றைய தமிழகச் சூழலில், குறிப்பாக தமிழக வெற்றி கழகம் (தவெக) போன்ற புதிய வரவுகளை
லெனினியக் கண்ணோட்டத்தில் அணுகும்போது, இந்தத் 'தன்னியக்கவாதம்' கீழ்க்கண்டவாறு பொருந்துகிறது:
1. தற்காலிக அதிருப்தியின் வெளிப்பாடு (Spontaneity
of Discontent)
லெனினின் பார்வையில், தற்போதைய அதிகார வர்க்கத்தின் மீதான அதிருப்தியால் மக்கள் தன்னிச்சையாகத்
திரள்வது 'தன்னியக்கவாதம்'.
- தவெக-வில் இதன் பங்கு: பல ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் திராவிடக் கட்சிகள்
மற்றும் தற்போதைய அரசியல் சூழல் மீது இளைஞர்களுக்கு இருக்கும் ஒருவித
சலிப்பும், கோபமுமே தவெக போன்ற கட்சிகளுக்கான அடித்தளம்.
- இது ஒரு
தத்துவார்த்தத் தேடலால் உருவானது அல்ல; மாறாக, "இவர்கள் வேண்டாம், புதிதாக யாராவது வரட்டும்" என்ற தன்னிச்சையான (Spontaneous)
மனநிலை. இதைத்தான் லெனின்
'தொடக்கநிலை அரசியல்'
என்று அழைக்கிறார்.
2. தத்துவார்த்த வெற்றிடம் மற்றும் 'வாலறுவை வாதம்' (Tailism)
லெனின் எச்சரித்த மிக முக்கியமான விஷயம்: தன்னிச்சையான மக்கள் எழுச்சியில் 'உணர்வுப்பூர்வமான அரசியல் கல்வி'
(Scientific Socialism/Theory) இல்லையென்றால்,
அது மீண்டும் முதலாளித்துவச் சிந்தனைக்கே அடிமையாகிவிடும்.
3. நுகர்வு அரசியலில் இருந்து வர்க்க அரசியலுக்கு
தவெக போன்ற கட்சிகள் இளைஞர்களை ஒரு 'நுகர்வோராக' (அதாவது நட்சத்திர பிம்பத்தை ரசிப்பவர்களாக) மட்டுமே
வைத்திருக்கின்றன.
- கம்யூன்களின் பங்கு: கம்யூனிஸ்டுகள் இந்த இளைஞர்களிடம் சென்று,
"உன் தலைவன்
உனக்கு என்ன செய்வான்?" என்று கேட்காமல், "உன் வர்க்கத்திற்காக நீயும் உன்னைப் போன்ற இளைஞர்களும்
சேர்ந்து என்ன செய்யப் போகிறீர்கள்?" என்ற கேள்வியை எழுப்ப வேண்டும்.
- கார்ப்பரேட்
மயமாகிவிட்ட கல்வி மற்றும் மருத்துவச் சூழலில், 'மக்கள் பள்ளிகள்'
மற்றும்
'மக்கள் மருந்தகங்களை'
கம்யூன் அடிப்படையில்
நடத்துவது இளைஞர்களுக்கு ஒரு நேரடி அரசியலைக் கற்றுத்தரும்.
ஆக யார் ஆட்சிக்கு வந்தாலும் நடக்கப்போவது என்ன? தொடர்ந்து பார்ப்போம்!
நமக்கான படிப்பினைகளை தேடி
மார்க்சிய-லெனினிய விமர்சனமும் தீர்வும்
லெனின் தெளிவாகச் சுட்டிக்காட்டியபடி,
நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது ஒரு
போலித் திரையாகும். "சட்டத்தின் முன் சமத்துவம்",
"பத்திரிகை சுதந்திரம்" போன்ற
முழக்கங்கள் அனைத்தும் உழைக்கும் மக்களை ஏமாற்றும் மாயைகளே.
வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்கள் தங்கள் அடிமைத்தலையை
உடைத்து எழ முயலும்போது, "பொது ஒழுங்கு" என்ற பெயரில் ராணுவத்தை ஏவி அவர்களை
ஒடுக்குவதற்கே இந்த முதலாளித்துவ ஜனநாயகம் உத்தரவாதம் அளிக்கிறது.
கவுத்ஸ்கி போன்றவர்கள் முதலாளிகளுக்கு முன்னால் மௌனம்
சாதித்துச் சரணடையும் திருத்தல்வாதப் போக்கையே இது காட்டுகிறது.
இந்த ஊழல் மலிந்த நாடாளுமன்ற முறைக்குப் பதிலாக, 'பாரிஸ் கம்யூன்' போன்ற அமைப்புகளே உண்மையான பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தை நிறுவ முடியும். அங்கு பிரதிநிதிகள் வெறும் சட்டம் இயற்றுபவர்களாக மட்டும் இல்லாமல், தாமே சட்டங்களைச் செயல்படுத்தி, தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு நேரடியாகப் பொறுப்பு கூறும் உண்மையான மக்கள் அதிகாரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே மார்க்சிய-லெனினிய நிலைப்பாடாகும்.
இன்றைய நிலை: போலி ஜனநாயகமும் தத்துவ நெருக்கடியும்
இன்றைய சூழலில், நாடாளுமன்றத் தேர்தல் என்பது உழைக்கும் மக்களின் அதிகாரத்தை
மழுங்கடிக்கும் ஒரு கருவியாகவே முதலாளித்துவத்தால் மாற்றப்பட்டுள்ளது.
இன்றைய கம்யூனிஸ்டுகள் கடுமையான தத்துவ மற்றும் நடைமுறை நெருக்கடியில்
சிக்கியுள்ளனர். தேர்தல் களத்தில் சாதி அரசியல், ஓட்டுக்கட்சிகளின் இலவச அரசியல் ஆகியவற்றில் மூழ்கிப்போனது
மட்டுமன்றி, த.வெ.க
போன்ற கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் அளவிற்குத் தங்களின் நிலைப்பாட்டைச் சுருக்கிக்
கொண்டுள்ளனர். சினிமா
மற்றும் ஆன்மீகம் போன்ற பிம்பங்களை 'அபினி' போலப் பயன்படுத்தி மக்களை மயக்கத்தில் வைத்திருக்கும்
தற்போதைய அரசியல் சூழலுக்கு எதிராகப் போராடுவதை விடுத்து,
தேர்தல் சீர்திருத்தம் என்ற மாயைக்குள் சிக்கியுள்ளனர்.
மார்க்சிய-லெனினியப் பார்வையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் போலித்தனங்களை அம்பலப்படுத்தி, உண்மையான பாட்டாளி வர்க்கப் புரட்சியை உயர்த்திப் பிடிக்கும் வகையில் ஒரு விரிவான தத்துவ புரிதல் கொண்ட ஒரு புரட்சிகர கட்சி வேண்டும் அவை...
இளைஞர்களின் இந்த அதிருப்தி இன்று விஜய் அல்லது சீமான் போன்ற தனிநபர்களை
நோக்கித் திரும்புவதற்குக் காரணம், உண்மையான புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் மக்கள் மத்தியில் இல்லை அப்படியே இருப்பவர்கள் 'மாற்று அரசியல் கலாச்சாரத்தை' கொண்டு செல்வதில் ஏற்பட்ட தேக்கநிலையே ஆகும்.
- அமைப்புரீதியான பலவீனம்: தேர்தல் அரசியலுக்கு அப்பால்,
அரசின் அடக்குமுறைகளைத்
துணிச்சலுடன் எதிர்கொள்ளக்கூடிய ஒரு வலுவான இரகசிய மற்றும் பகிரங்கக் கட்சி
அமைப்பை (Clandestine and Open Party Structure) தமிழகத்தில் நிலைநிறுத்தத் தவறிவிட்டது.
- இளைஞர்களுடனான தொடர்பு துண்டிப்பு: பழைய காலப் போராட்ட முறைகளிலேயே முடங்கிப்போனது, இன்றைய நவீன கால இளைஞர்களின் மொழியிலும், அவர்களின் வாழ்வாதாரச் சிக்கல்களிலும் (வேலையில்லாத் திண்டாட்டம், டிஜிட்டல் சுரண்டல்) தலையிட்டு அவர்களின் பிரச்சினைகளை அதற்கான காரணங்களை விளக்க செயல்படாமையே இது போன்ற நினைக்கு காரணம் எனலாம்.
- சித்தாந்தப் பரப்பல்: "அரசியல் பொருளாதாரம்" என்பது வெறும் புத்தக
அறிவாக மட்டும் தங்கிவிட்டது. அது சாமானிய இளைஞனுக்குத் தன் வாழ்வைச்
சிதைக்கும் 'சுரண்டும் வர்க்கத்தின்' சூழ்ச்சி என்பதைப் புரியவைக்க நாம் தவறிவிட்டோம்.
அதனால்தான், அவர்கள் விஜயை ஒரு 'மீட்பராக' பார்க்கிறார்கள்.
2. மார்க்கிய-லெனினிய இயக்கம் செய்ய வேண்டியது என்ன?
இளைஞர்களின் இன்றைய எழுச்சி வரவேற்கத்தக்கது என்றாலும்,
அது சரியான திசைவழியின்றி இருப்பது வேதனைக்குரியது. இதைச்
சரி செய்யப் புரட்சிகர இயக்கங்கள் பின்வருவனவற்றைச் செய்ய வேண்டும்:
அ) பிம்ப அரசியலைத் தகர்த்தல்:
விஜய் போன்ற நடிகர்கள் அல்லது சீமான் போன்ற உணர்ச்சிப் பேச்சாளர்கள் இறுதியில்
"ஆளும் சுரண்டும் வர்க்கத்தின் பிரதிநிதிகளே" என்பதைத் தரவுகளுடன்
அம்பலப்படுத்த வேண்டும். தனிநபர் வழிபாட்டுக்கு மாற்றாக 'கூட்டுத் தலைமை' மற்றும் 'உழைக்கும் மக்களுக்கான அதிகாரம்' என்னும் கருத்தாக்கத்தை இளைஞர்களிடம் கொண்டு செல்ல
வேண்டும்.
ஆ) அரசியல் பொருளாதாரத் தெளிவு:
வெறும் 'இலவசங்கள்'
மட்டும் தீர்வாகாது; மாறாக, உற்பத்திக் கருவிகள் மக்கள் வசம் இருக்க வேண்டும்
என்பதையும், கல்வி
மற்றும் மருத்துவம் ஏன் பொதுவுடமையாக்கபட (அரசுமயமாக்கப்பட) வேண்டும் என்பதையும் வர்க்கப் ரீதியாக
விளக்க வேண்டும்.
இ) உறுதியான கட்சி அமைப்பு:
எல்லா பிரச்சினைகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட, கட்டுக்கோப்பான கேடர்களை (Cadres) உருவாக்க வேண்டும். தேர்தல் என்பது ஒரு மேடை மட்டுமே,
அதுவே இலக்கல்ல என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.
ஈ) தமிழ்த்தேசியமும் வர்க்கப் போராட்டமும்:
தமிழ்த்தேசிய உணர்வை வெறும் இன உணர்வாக மட்டும் பார்க்காமல், அதை ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் விடுதலையாகவும், வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவும் இணைத்துப் பேச வேண்டும். சீமான் முன்வைக்கும் அமைப்புசாராத் தமிழ்த்தேசியத்திற்கு மாற்றாக, பாட்டாளி வர்க்கத் தமிழ்த்தேசியத்தை முன்வைக்க வேண்டும்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டாமல், பழைய அரசு இயந்திரத்தை ஒழித்துக்கட்டாமல் சோசலிசம் சாத்தியமில்லை. "சமாதானப் பரிணாம வளர்ச்சி" என்ற பெயரில் முதலாளித்துவத்தை நோக்கித் திரும்புவது (உதாரணம்: அன்றைய யூகோஸ்லாவியா) புரட்சிக்கு இழைக்கப்படும் துரோகம். எதிர்காலத் தலைமுறையினர் இந்த வரலாற்றுத் தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்.
ஆக இறுதியாக
கம்யூனுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையில் வேறுபாடு உள்ளது என்றார்
மார்க்ஸ். கம்யூனானது செயலாற்றும் உறுப்பாக இருக்கும் என்றார் மார்க்ஸ். அதாவது
முதலாளித்துவ நாடாளுமன்றமானது செயலாற்றும் உறுப்பு அல்ல. சட்டம் இயற்றும் அதிகாரம்
கொண்டதுதான் நாடாளுமன்றமாகும். சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரம் அதிகார வர்க்க
நிறுவனமான நிர்வாகத்துறை நீதித்துறை போன்ற அரசுக்குத்தான் உண்டு. ஆனால் கம்யூனானது
அல்லது சோவியத்தானது சட்டம் இயற்றுவதோடு கூடவே அதனை செயல்படுத்தும் அதிகாரம்
கொண்டதாகும் என்றார் மார்க்ஸ். மார்க்சின் இந்த போதனையைத்தான் காவுத்ஸ்கி
சிந்திக்கவே இல்லை என்றார் லெனின். உண்மையில் காவுத்ஸ்கி இந்த மார்க்சின் இந்த
போதனையை ஏற்றுக்கொள்ளவும் இல்லை, பிடிவாதமாக மறுத்தார்
என்பதே வரலாறாகும். காவுத்ஸ்கியைப் போலவே இந்தியாவில் உள்ள இடதுசாரிகளும்
மார்க்சின் இந்த போதனைகளை சிந்தித்துப் பார்க்கவில்லை. அதன் மூலம் நாடாளுமன்ற
ஆட்சி முறைக்கும் கம்யூன் ஆட்சி முறைக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை இங்குள்ள
இடதுசாரிகள் புரிந்து கொள்ளவில்லை, அல்லது மக்களுக்கு இதனை புரியவைக்கவே இல்லை. ஆகவே தான்
இடதுசாரிகள் நாடாளுமன்றத்துக்குள்ளேயே பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியும்
என்று நம்புகிறார்கள், மேலும் அவர்களின் திருத்தல்வாத நம்பிக்கையை மக்களுக்கும் ஊட்டி நிலவுகின்ற
நாடாளுமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
நாடாளுமன்ற ஆட்சி முறைக்கு மாற்றாக கம்யூன் ஆட்சி முறைக்காக அவர்கள் பாடுபடவே
இல்லை. கம்யூன் ஆட்சியை அமைப்பதற்காக மக்களை திரட்டி மக்களை தயாரிக்கவும் இல்லை.
உண்மையில் கம்யூன் ஆட்சியை உருவாக்க பாடுபட மறுக்கிறார்கள்.
முதலாளித்துவ அரசும் தனிவுடமையை பாதுகாக்கும் கொள்கையையே அடிப்படையாகப் பின்பற்றியது. நவீன முதலாளித்துவ நாடுகளில் விவசாயிகளில் சிலர் தனிவுடமை கொண்டவர்களாக மாறிவிட்டனர். பண்ணையார்கள் தங்களது நிலத்தை விவசாயிகளுக்கு விற்றுவிட்ட போதும் அவர்களுக்கு கிடைத்த பணத்தையும் அவர்களது சொத்துக்களாயும் முதலாளித்துவ அரசு பாதுகாத்தது என்கிறார் லெனின். இவ்வாறு ஆரம்ப காலத்தில் முதலாளித்துவ அரசானது சமூக முன்னேற்றத்திற்கு முக்கியமான பங்காற்றிற்று. தொழிலாளர்களில் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. தொழிலாளர்களுக்குத் தேவையான வருமானம் கிடைத்தது. தொழிலாளர்களுக்கு நல்ல வாழ்க்கை ஏற்பட்டது. இருந்த போதிலும் முதலாளித்துவமானது முதலாளிகளின் சுரண்டலை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் சுரண்டலை அதிகரிக்க முதலாளிகள் வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்கினார்கள். அதன் காரணமாக தற்காலத்தில் தொழிலாளர்களில் பலர் வேலைவாய்ப்பின்றி வறுமையில் வாடும் நிலை ஏற்பட்டது. தொழிலாளர்களின் போராட்டங்கள் அதிகரித்து முதலாளிகள் பெயரளவிலான ஜனநாயகத்தையும் மறுக்கத் தொடங்கிவிட்டனர்.இவ்வாறு சொத்துடமையாளர்களின் சொத்துக்களை பாதுகாத்த போதும் முதலாளித்துவ அரசானது சொத்தில்லாதவர்களை சொத்துள்ளவர்களுக்குஅடிபணியச் செய்தது. முதலாளித்துவவாதிகள் பண்ணையடிமைத்தனத்தை எதிர்த்துப் போரிட்டாலும் மூலதனத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்ட உழைப்பாளர்களை ஒடுக்கும் அரசாகவே இருக்கிறது. ஆகவே உழைக்கும்மக்களுக்கு முதலாளித்து சமூக ஆட்சி முறையிலும் சுதந்திரம் கிடைக்கவில்லை. இந்தியாவில் குறிப்பாக வெள்ளையன் வெளியேறிய பின்பும் இந்திய பெருமுதலாளிகளுக்குத்தான் சுதந்திரம் கிடைத்தது. உழைக்கும் மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதே எதார்த்தமான உண்மையாகும். பெருமுதலாளிகளின் ஆட்சியை தூக்கியெறிந்துவிட்டு உழைக்கும் மக்களுக்கான சோவியத்து அரசமைப்பில்தான் உழைக்கும் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும். இருப்பினும் ஏழை குடியானவர்களையும் தொழிலாளி வர்க்கத்தையும் அடிபணிய வைப்பதில் முதலாளிகளுக்கு உதவும் ஓர் இயந்திரமாக அரசு தொடர்ந்து இருந்து வந்தது. ஆனால், வெளித் தோற்றத்தில் அது சுதந்திரமானதாக இருந்தது. வர்க்க அரசை தெரிந்திருந்தால் நாம் ஒடுக்கும் அரசு எந்திரத்தை புரிந்துக் கொள்ள முடியும்.
இன்று யார் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் இன்னும் ஒருமுறை உழைக்கும் மக்கள் தோல்வி அடையப்போகின்றனர்.
ஆம் தாங்கள் வாழ வேலையை தேடியும் குழந்தைகளின் கல்விக்காக தங்களின் மருத்துவதிற்காக தனியார் கார்ப்ரேட்களின் கைகளில் சிக்குண்டு வாழும் அவலம் தொடரத்தான் உள்ளது. ஆட்சி அமைப்போர் பல்வேறு வரிகள் மூலம் மக்களை சுரண்டதான் போகின்றனர். ஆக உழைக்கும் மக்களின் வாழ்க்கைக்கான தேர்தல் இவை அல்ல அவை சோவியத் வகைப்பட்ட, கம்யூன் வகைபட்ட அமைப்பு மட்டுமே உழைக்கும் மக்களுக்கான அமைப்பாக இருக்கும் அதனை பற்றி பேசுவோம் செயல்படுவோம் தொழர்களே!!!
தொடர்புடைய கட்டுரைகள்:
இதற்கு முந்தைய கட்டுரைகளை கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.