செப்டம்பர் 12 தியாகிகள் தினத்தில் சபதம் ஏற்ப்போம். 12.09.26

அன்பார்ந்த தோழர்களே செவ்வவணக்கத்தை செலுத்தி எனது உரையைத் துவங்குகிறேன்.

இன்று செப்டம்பர் 12ஆம் நாள் தியாகத் தோழர் பாலன் அவர்களின் நினைவுநாள். இந்த நாளை இந்தியாவில் சுதந்திரத்திற்காகவும இந்திய உழைக்கும் மக்கள் மற்றும் தலித் மக்களின் விடுதலைக்காக ஆதிக்க சக்திகளையும் அரசின் அடக்குமுறையையும் எதிர்த்துப் போராடி உயிரிழந்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து தியாகிகள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் இங்கு கூடி தோழர் எல்.அப்பு மற்றும் பாலன் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து அவர்களின் தியாகத்தை நினைவுகூறுகிறோம்.

எல்.அப்பு பாலன் சீராளன், தமிழரசன் போன்ற எண்ணற்ற கம்யூனிசப் போராளிகளிலும் ஏராளமான விவசாயிகளும், தொழிலாளர்களும் மாணவர்களும் இளைஞர்களும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்துள்ளனர் அவர்களின் தியாகத்துக்கு என்ன பலன் கிடைத்தது சிந்தத்துப் பாருங்கள். இந்தியாவில் எப்படி தியாகங்கள் நடைபெற்றதோ அதே போல்தான், ரஷ்யாவிலும் போல்ஷ்விக் கம்யூனிஸ்டுகளும், ரஷ்ய தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒன்றுபட்டுப் போராடி பல லட்சக்கணக்கானவர்கள் உயிர் தியாகம் செய்தார்கள். அவர்களின் தியாகத்துக்கு பலன் கிடைத்தது அவர்கள்; பாட்டாளி வர்க்க அரசை உருவாக்கி, அனைத்து மக்களுக்கும் கல்வி வேலைவாய்ப்பு மருத்துவம், குடியிருப்பு, வீடுகள் மற்றும் பெண்ணடிமைத்தனத்தை ஒழித்து பெண்களை விடுதலை செய்தார்கள் அவர்களது சாதனையொடு வேறு எந்த நாட்டோடும் ஒப்பிட முடியாது. அவர்களால் அத்தகைய சாதனையை நிகழ்த்தியபோது இங்குள்ள நாமும் நம்மை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு செயல்பட்ட பல கம்யூனிஸ்டுகளையும் பலிகொடுத்துவிட்டு இப்போதும் வறுமையிலும் பட்டினிச் சாவிலும் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் எதிர்நோ்கொண்டிருக்கும் இழிவான நிலையிலேயே வாழ்ந்துவருகிறோம். இந்த இழிவான நிலை தொடர்வதற்கு என்ன காரணம் என்று நாம் சிந்தித்துப் பார்த்தது உண்டா? நமது தியாகத் தலைவர்கள் உட்பட நாம் நம்ம மக்களுக்காகப் பல போராட்டங்களை நடத்தினோம். ஆனால் அரசு ஒருமுறை நம்மை தாக்கிவிட்டால் நாம் அதனை எதிர்கொள்ள முடியாமல் நமது நம்பிக்கையை இழந்து சோர்ந்து போகிறோம். நாம் ஒன்றுபடுவதற்கு எதிராகப் பலக்குழுக்களாக பிளவுபட்டுள்ளோம். நமது தியாகத் தலைவர்களின் தியாகத்தையெல்லாம் வீணடித்துக்கொண்டுள்ளோம் இதற்கு என்ன காரணம் நாம் என்ன தவறு செய்தோம் இப்போதும் என்ன தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா? தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினால் மட்டும் போதாது நாம் தொடர்ந்து தோல்வியடைவதற்கு என்ன காரணம். நாம் தொடர்ந்து பிளவுபடுவதற்கு என்ன காரணம் என்பதை இந்த நாளில் ஒன்று கூடியுள்ள நாம் சிந்திக்க வேண்டும். அதுவே நமது தியாகத் தலைவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.

சர்வதேச அளவில் குருஷேவின் திருத்தல்வாதம் உருவானபோது அதனை எதிர்த்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சிப் போராடும்போதும் அந்த தத்துவப் போராட்டத்தை உன்னிப்பாக கவனிக்காமல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் உட்கட்சிப் போராட்டம் துவங்கியது. உட்கட்சிப் போராட்டம் என்றால் உட்கட்சி சித்தாந்தப் போராட்டம் என்ற புரிதலோடு நடத்தி கருத்தொற்றுமைக்கு வருவதற்கு மாறாக கட்சியை அதன் தலைவர்கள் பிளவுபடுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து உருவான சிபிஎம் கட்சித் தலைவர்களும் குருஷேவின் திருத்தல்வாதத்தையே ஏற்றுக்கொண்ட பொழுது கட்சியிலுள்ள புரட்சியாளர்கள் எதிர்த்த போதும் உட்கட்சி சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி ஒரு முடிவுக்கு வராமல் கட்சியை தலைவர்கள் பிளவுபடுத்தினார்கள்.

அதற்குப் பிறகு தோன்றிய எம்எல் கட்சியிலும் அதன் அழித்தொழிப்பு கொள்கையை எதிர்த்தும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் விமர்சனம் குறித்தும் எம்எல் கட்சிக் தலைமையானது உட்கட்சி சித்தாந்தப் போராட்டத்தை நடத்த தவறியது தோழர் சாருமஜும்தாரின் மரணத்திற்குப் பிறகு எம்எல் கட்சி பலக் குழுக்களாகப் பிளவு பட்டது. அப்போதும் சித்தாந்தப் போராட்டத்தை தலைவர்கள் நடத்தவில்லை. பிறகு பல குழுக்களிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றி பல சிறு குழுக்களாகச் சிதறுண்டு போனார்கள். ஆனாலும் இந்த தியாகிகள் நினைவு நாளில் மட்டும் பெயரளவுக்கு சடங்குத்தனமாக சில குழுக்கள் ஒன்றுசேர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி சுய திருப்தி அடைகிறார்கள்.

இந்த வரலாற்றிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது என்ன?

* இந்திய பொதுவுடைமையாளர்கள் ஒருபோதும் உட்கட்சி சித்தாந்தப் போராட்டத்தை நடத்தவில்லை.

* சிலசமயம் உட்கட்சிப் போராட்டத்தை நடத்தினாலும் அங்கெல்லாம் அற்ப பிரச்சனைகளையே விவாதித்தனர். சித்தாந்த அடிப்படையிலான விவாதங்களை நடத்தியதில்லை.

* அவர்கள் சித்தாந்தப் போராட்டத்தை நடத்த வேண்டுமானால் அவர்களுக்கு மார்க்சிய தத்துவ அறிவு வேண்டும் ஆனால் அவர்களுக்கு மார்க்சிய அறிவு குறைபாடாகவே இருந்தது. மேலும் மார்க்சியத்தைப் பயன்படுத்தி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற உணர்வே தலைவர்களிடம் இல்லை.

* மார்க்சிய அடிப்படை அறிவை இவர்கள் அணிகளுக்கோ மக்களுக்கோ ஊட்டவே இல்லை அணிகளையும் மக்களையும் தலையாட்டி பொம்மைகளாகவும் ஆட்டுமந்தை கூட்டங்களாகவே வைத்திருக்கிறார்கள்.

இந்த சித்தாந்த பலவீனத்தாலேயே கம்யூனிஸ்ட் தலைவர்கள் பல தியாகங்கள் செய்தும் அதற்கான பலனை அடைய முடியவில்லை.

ஒரு தனி மனிதனது மூளை சரியாக வேலை செய்தால் மட்டுமே அவனால் சிறப்பாக சிந்திக்கவும் செயல்படவும் முடியும். மூளை சரியாக வேலை செய்யவில்லை என்றால் அவனால் சரியாக சிந்திக்கவோ செயல்பட முடியாது உயர்ந்த கட்டமான அந்த மனிதன் பைத்தியக்காரனாகவம் மாறும் நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது அதுபோலவே ஒரு பாட்டாளிவர்க்க அமைப்புக்கு மார்க்சிய தத்துவம் மிகவும் அவசியமாகும். ஆகவேதான் லெனின் புரட்சிகரமான தத்துவம் இல்லாமல் ஒரு புரட்சிகர இயக்கம் இல்லை என்று சொல்லி தத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். காரல்மார்க்சும் புரட்சிகரமான தத்துவம் மக்களிடம் சென்றால் அது ஒரு பொருள்வகை சக்தியாக மாறும் என்றார் ஆனால் நாமும் நமது தலைவர்களும் மார்க்சிய ஆசான்களது போதனைகளை பின்பற்றி நமது மார்க்சிய விஞ்ஞான அறிவை வளர்த்து அதனை நமது நடைமுறை செயல்பாட்டுக்குப் பயன்படுத்தியிருந்தால இந்த நாட்டில் நாம் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், சாதி தீண்டாமை கொடுமை, பெண்ணடிமைத்தனம், சுரண்டல் போன்ற கொடுமைகளை ஒழித்து மக்கள் அனைவரும் தோழர்களாக ஒன்றுசேர்ந்து உன்னதமான வாழ்வை அடைந்திருக்கலாம் ஆகவே நமது வாழ்வு சிறக்க புதியதோர் பொன்னுலகை படைக்க மார்க்சியத்தை கற்று அதனை நடைமுறையில் பயன்படுத்துவோம் என்று இந்த தியாகிகள் நாளில் சபதேமேற்போம். ஆகவே தோழர்களே கம்யூனிஸ்டுகளாகிய நாம் பல தவறுகளை செய்தோம். இப்போதும் தவறுகள் செய்துகொண்டிருக்கிறோம் நமது தவறுகளை வெளிப்படையாக சுயவிமர்சனம் செய்துகொண்டு நமது தவறுகளை களைந்து நம்மை மாற்றி கொள்ளாதவரை நம்மால் மக்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை என்பதை நாம் உணர்ந்தால் மட்டுமே நாம் கம்யூனிஸ்ட்டாக ஆக முடியும். ஆகவே இந்த தியாகிகளின் நினைவுநாளில் நமது தவறுகளை திருத்திக்கொள்வோம் என்று உறுதிமொழி ஏற்போம். அதுதான் தியாகிகளுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.

கம்யூனிஸ்டுகளின் லட்சியங்களை மக்களிடம் கொண்டுசென்று பிரச்சாரம் செய்வோம்.

* உற்பத்திச் சாதனங்களை சமூகமயமாக்குவது. அதாவது முதலில் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களை தனியாரிடமிருந்து பறிமுதல் செய்து பொதுச் சொத்தாக மாற்றுவது.

* லாபத்தின் அடிப்படையிலான உற்பத்தியை ஒழித்துவிட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தியை வளர்ப்பது.

* மத நிறுவனங்களிடமுள்ள தேவைக்கு அதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்து மக்களின் உடமையாக மாற்றி அதனை மக்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் சோசலிச அரசு பயன்படுத்தும்.

* முதலாளிகளிடமுள்ள அரசியல் அதிகாரம் ஒழிக்கப்பட்டு பரந்துபட்ட மக்களிடம் அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படும்.

* கிராமங்களில் நிலச்சீர்திருத்தம் செய்யப்படும். பெரும் பண்ணையாளரிடமிருந்து நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மக்களின் சொத்தாக மாற்றப்பட்டு அரசுக் கூட்டுப்பண்ணையை நிறுவும் அதன் பலன்கள் விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.

* சிறு மட்டும் நடுத்தர விவசாயிகளிடம் கூட்டுப் பண்ணையின் அவசியத்தை விளக்கி அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கூட்டுப் பண்ணைகளை நிறுவி சோசலிச அரசாங்கம் விவசாயிகளுக்கு நவீன கருவி, உரங்கள், விதை பொருட்களை வழங்கி விவசாயிகளுக்கு உதவி செய்யும்.

* கூட்டுப்பண்ணையில் விளைவித்த பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க சோசலிச அரசு ஏற்பாடு செய்யும்.

* விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சோசலிச அரசாங்கமே கூட்டுறவு வணிக நிறுவனங்களை அரசே நிறுவி கொள்ளுதல்செய்தும் அதன் மூலம் சோவியத்து அரசானது உற்பத்தியையும் விநியோகத்தையும் மக்களின் நலனிலிருந்து கட்டுப்படுத்தும்.

* அனைத்து மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு மருத்துவ வசதி ஆகியவற்றை வழங்குவதற்கான பொறுப்பை சோசலிச அரசே மேற்கொள்ளும்.

* சோசலிச அரசானது தொழில்நுட்பத்தை வளர்க்கும் அதன்பயனாக வேலைவாய்ப்பை குறைப்பதற்கு மாற்றாக அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்கி தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைத்து அவர்களின் சம்பளத்தை உயர்த்தும்.

* வேலை வாய்ப்பு உரிமையை மக்களின் உரிமையாக அறிவித்து சோசலிச அரசாங்கம் செயல்படும்.

  • சோசலிச அரசு ஒவ்வொரு மனிதர்களுக்கும் வேலைசெய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து அவர்கள் சுதந்திரமாகவும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு ஏற்பாடு செய்யும்.
  • சமூகத்தில் நிலவும் பிறபோக்கு கருத்துக்கள், சிந்தனைமுறைகள், பழக்கவழக்கங்களை ஒழிக்க விஞ்ஞானபூர்வமான கல்வியை அனைத்து மக்களுக்கும் சோசலிச அரசு வழங்கும்.
  • நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிாகவும் பாடுபடுவதற்கான சூழலை சோசலிச அரசு உருவாக்கிக் கொடுக்கும்.
  • பெண்கள் மீது தாக்குதல் தொடுப்பதை கண்காணிப்பதற்கு கண்காணிப்பு குழுக்களை அமைத்து கண்கானித்து தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பே அதனை தடுத்து நிறுத்துவதற்கு மக்களைத் திரட்டி சோசலிச அரசு நடவடிக்கை எடுக்கும்.
  • சாதி தீண்டாமை கொடுமைகளில் ஈடுபடுபவர்களை கண்காணித்து அவர்களை எச்சரித்து தீண்டாமை கொடுமைகள் நடக்கவிடாமல் தடுத்து தலித் மக்களை பாதுகாப்பதற்கான குழுக்களை உருவாக்கி சோசலிச அரசு செயல்படும்.
  • பெண்களுக்கும் ஆண்களைப் போல் சமூக உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பதோடு அவர்களுக்கு ஆண்களுக்கு சமமான சம்பளம் கிடைக்க சோசலிச அரசு ஏற்பாடு செய்யும்.
  • பெண்கள் செய்யும் வீட்டு வேலைகள் சமையல், துணி துவைத்தல் போன்ற பணிகளை நிறுவனங்களின் மூலம் செய்து பெண்களை வீட்டு வேலைச் சுமையிலிருந்து சோசலிச அரசு விடுவிக்கும்.
  • குழந்தைகளையும் வயதானோரையும் பராமரிக்கும் பொறுப்பை சோசலிச அரசே ஏற்றுக்கொண்டு செயல்படும்.
  • அரசியல் அதிகாரம் கீழிருந்து செயல்படும் விதமாக மாற்றப்படும். அதாவது மக்கள் நிர்வாக குழுக்கள் கீழிருந்து சட்ட திட்டங்களை விவாதித்து மேல்மட்ட மக்கள் நிர்வாகக் குழுவுக்கு அனுப்பி சட்டத் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
  • சோசலிச அரசின் நடவடிக்கைகளை விமரிசிப்பதற்கு உழைக்கும் மக்களுக்கு உரிமை வழங்கப்படும் அதற்கு பதில் சொல்லவேண்டியது மக்கள் நிர்வாகக் குழுவினரின் கடமையாகும்.
  • மக்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்களை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுப்பார்கள் அவர்கள் தவறு செய்தால் எந்த நேரத்திலும் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.
  • தவறு செய்பவர்கள் மற்றும் சமூக விரோதிகளை மக்கள் முன்பு வெளிப்படையாக விசாரிக்கப்பட்டு பெரும்பான்மையான மக்களின் சாட்சியத்தின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்படும்
  • தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்படும். தேசிய இனங்கள் பிரிந்துபோக விரும்பினால் ஒரு தேர்தலை நடத்தி பெரும்பான்மையான மக்கள் பிரிந்துபோக விரும்பினால் அந்த தேசம் பிரிந்துபோவதற்கு உரிமை உண்டு என்பதை சோசலிச அரசு ஏற்றுக்கொள்ளும்.

மதம் அரசிடமிருந்து முற்றிலும் துண்டிக்கப்படும் மத நம்பிக்கை என்பது தனி மனிதனின் உரிமையாகும். தனி மனிதனின் மத நம்பிக்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அதே நேரத்தில் ஒரு தனி மனிதர் மதத்தைப் பரப்புவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

* சுரண்டலை ஆதரித்தோ மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் பிரச்சாரம் மற்றும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படும் தடையை மீறி செயல்படுபவர்களை மக்கள் நீதிமன்றம் தண்டிக்கும்.

* மக்களிடையே உள்ள பிறபோக்கு கருத்துக்களையும் சிந்தனை முறைகளையும் பழக்கவழக்கங்களையும் போக்கி விஞ்ஞான அடிப்படையிலான கருத்துக்களையும் சிந்தனை முறைகளையும் பழக்கவழக்கங்களையும் வளர்ப்பதற்கு தேவையான மார்க்சிய கல்வி நிலையங்களை தெருவெங்கும் உருவாகி வளர்த்து மக்களை விஞ்ஞான சிந்தனையாளர்களாகவும் உழைக்கும் வர்க்கப் பண்பாளர்களாகவும் வளர்ப்பதற்கு கம்யூனிஸ்டுகள் பாடுபடுவார்கள்..

இத்தகைய கொள்கைகளை முதலாளித்துவ பிறபோக்கு அரசியல்வாதிகளோ, பிறபோக்கு முதலாளித்துவ ஆட்சியாளர்களோ மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் கார்ப்பரேட் முதலாளிகளோ ஏற்றுக்கொண்டு செயல்படுத்த மாட்டார்கள். ஆகவே உழைக்கும் மக்கள் தங்களது சொந்த முயற்சியாலேயே இத்தகைய மக்கள் நலக் கொள்கையை செயல்படுத்த வேண்டும். அதற்காக சில அரசியல் தலைவர்களை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது அது தலைமை வழிபாட்டு முறையாகும். அதற்காக ஒரு கட்சியை மட்டும் நம்பக்கூடாது. ஏனெனில் ஒரு கட்சியால் மட்டும் இதனை சாதித்துவிட முடியாது. ஆகவே மக்கள் அவர்களின்சொந்த முயற்சியின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். அதாவது மக்களின் கூட்டு முயற்சியின் மூலமே இதனை சாதிக்க முடியும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே இந்த கொள்கைகளை மக்களிடம் தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்து இந்தக் கொள்கைகளை ஏற்றுகொள்பவர்களை ஓர் அணியில் திரட்ட வேண்டும் மக்களை அமைப்பாக்கி மக்களோடு இணைந்து போராடவேண்டும் என்பதே இன்றைய கம்யூனிஸ்டுகளின் முதன்மையான பணியாகும் புரட்சி பற்றி மார்க்சியம் நமக்கு போதிப்பது என்ன? 1. பிரச்சாரம் அதன் மூலம் அமைப்பை(பாட்டாளி வர்க்க கட்சியை) உருவாக்குவது. 2. கிளர்ச்சி, இதன் மூலம் பொது மக்களை அணிதிரட்டுவது 3. செயல் அல்லது ஆணை. இதன் மூலம் புரட்சி செய்து முதலாளித்துவ அரசை வீழ்த்தி பாட்டாளி வர்க்க அரசை உருவாக்க வேண்டும் என்கிறது மார்க்சியம் இந்தியாவில் சமூக மாற்றத்தை ஒரு புரட்சியின் மூலம் சாதிப்பதற்கான புரட்சிகரமான கட்சி இல்லாத இன்றைய நிலையில் அத்தகைய புரட்சிகரமான கட்சியை கட்டுவதற்கான பிரச்சாரக் கட்டத்திலேயே தற்போது இயக்கம் உள்ளது. இதனைப் புரிந்துகொண்டு கம்யூனிசத்தின் லட்சியத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டியதே இன்றைய முதன்மையான கடமையாகும். ஆகவே தோழர்களே நாம் மார்க்சியத்தை கற்று மார்க்சிய சிந்தனையாளர்களாக நம்மை வளர்த்துக்கொள்வோம். மார்க்சியத்தின் அடிப்படையில் சமூகத்தைப் புரிந்துகொண்டு சமூகத்தை மாற்றுவதற்கான வழிமுறைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்து அணிதிரட்டி அமைப்பாக்குவோம். அதன் அடிப்படையில் மக்களோடு இணைந்து போராடி ஒரு பொன்னுலகத்தைப் படைப்போம் என்று தியாகிகளின் நினைவு நாளில் சபதம் ஏற்போம்.

மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்.

கம்யூனிஸ்டு கட்சித்தலைவர்கள் வரலாற்றைப் படைப்பதில் மக்களுக்கு வழிகாட்டும் பங்கையே செய்வார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டி அணிதிரட்டிப் அவர்களோடு இணைந்து போராடுவதன் மூலமே சமூக மாற்றத்தில் பங்களிக்க முடியும்.

எனக்கு அல்லது எங்களது கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்து மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்போம் என்று சொல்லும் தலைவர்களையும் கட்சிகளையும் மக்கள் நம்பாதீர்கள்.

மக்களின் பிரச்சனையை மக்கள் ஒன்றுகூடித்தான் தீர்க்க முடியும். அதற்கு விஞ்ஞானப்பூர்வமான வழிகாட்டி மக்களோடு இணைந்து போராடுபவர்களை மட்டும் நம்புங்கள்.

உழைக்கும் மக்கள் ஒன்றுபடுவோம். எதிரிகளை எதிர்த்துப் போராடுவோம் பொன்னுலகம் படைப்போம்..


தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கம்யூனிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டும்- ஒரு விமர்சனம்

இந்த ஆதாரங்கள் ஒரு நபர் வெறும் அடையாளங்களால் அல்லது கட்சி உறுப்பினர் என்ற அந்தஸ்தால் மட்டுமே உண்மையான கம்யூனிஸ்டாக

மாறிவிட முடியாது என்பதை விளக்குகின்றன. மார்க்சிய-லெனினிய தத்துவத்தின் அடிப்படையில், கம்யூனிசம் என்பது ஒரு அறிவியல் உலகக் கண்ணோட்டம் மற்றும் வர்க்கப் போராட்ட நடைமுறை சார்ந்த விஷயமாகும். வாக்காளர், உறுப்பினர், மற்றும் கேடர் ஆகியவற்றுக்கு இடையேயான நுட்பமான வேறுபாடுகளைப் பட்டியலிடும் இக்கட்டுரை, கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலையை இலக்காகக் கொண்ட முன்னணிப் படையினராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. புரட்சிகர இலக்கைச் சிதைக்கும் திருத்தல்வாதம் மற்றும் சந்தர்ப்பவாதம் குறித்த எச்சரிக்கைகளை லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் பார்வையில் இது முன்வைக்கிறது. இறுதியில், தத்துவ ஞானமும் களப்பணியும் ஒருங்கிணைந்த ஒரு தொடர்ச்சியான அரசியல் செயல்பாடே ஒருவரை உண்மையான கம்யூனிஸ்டாக உருவாக்கும் என்று இந்த ஆவணங்கள் சுருக்கமாகக் கூறுகின்றன..

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

கம்யூனிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டும்: அடையாளத்திற்கும் அரசியல் நிலைப்பாட்டிற்கும் இடையிலான வேறுபாடு — ஒரு மார்க்சிய-லெனினியப் பார்வை

முன்னுரை

அரசியல் சொல்லாடலில் "கம்யூனிஸ்ட்" என்ற பதம் பெரும்பாலும் ஒரு வெளிப்புற அடையாளமாகவே (சிவப்புக் கொடி, சட்டை, முழக்கம், கட்சி அட்டை) புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரின் அடிப்படை நூல்களை ஆராயும்போது, "கம்யூனிஸ்ட்" என்பது ஒரு அடையாளச் சின்னமோ, அமைப்புச் சார்பான உறுப்பினர் அந்தஸ்தோ அல்ல; அது ஒரு வர்க்கப் பார்வை, அறிவியல் உலகக் கண்ணோட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் நடைமுறை ஆகியவை ஒன்றிணைந்த ஒரு வளர்ச்சிநிலை என்பது தெளிவாகிறது. இக்கட்டுரை கம்யூனிஸ்ட் கட்சி என்றால் என்ன, கட்சி உறுப்பினர் யார், உண்மையான கம்யூனிஸ்ட் யார், இவை மூன்றும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை மார்க்சிய மூலநூல்களின் அடிப்படையில் வரையறுக்க முயல்கிறது.

1. அடையாளம் vs அரசியல் நிலைப்பாடு

சிவப்பு நிறம், கொடி, சட்டை, முழக்கம் ஆகியவை அரசியல் அடையாளங்கள் மட்டுமே. அவை ஒருவரின் வர்க்க நிலைப்பாட்டையோ தத்துவப் புரிதலையோ நிரூபிக்க முடியாது. மார்க்ஸ்-எங்கெல்ஸ் Communist Manifesto-வில் கம்யூனிஸ்டுகளை வெளிப்புற அடையாளத்தால் அல்ல, மாறாக அவர்கள் தொழிலாளர் வர்க்கத்தின் ஒட்டுமொத்த நலனை முன்னிறுத்துவதாலும், இயக்கத்தின் வரலாற்றுப் பாதையை தத்துவ ரீதியாகப் புரிந்துகொண்டு நடைமுறையில் முன்னெடுப்பதாலும் வரையறுக்கின்றனர். எனவே முதல் அடிப்படை உண்மை: அடையாளம் கம்யூனிஸ்டை உருவாக்காது; வர்க்கத் தத்துவமும் அதற்கேற்ற நடைமுறையும்தான் உருவாக்குகின்றன.

2. "கம்யூனிஸ்ட்" என்பதன் அடிப்படை வரையறை

எங்கெல்ஸ் 1847-இல் எழுதிய Principles of Communism என்ற நூலின் தொடக்கத்திலேயே கம்யூனிசத்தை "தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்கான நிபந்தனைகள் பற்றிய கோட்பாடு" என வரையறுக்கிறார். இது ஓர் உணர்ச்சியோ, நல்லெண்ணமோ, ஆடை அணிதலோ அல்ல; மாறாக —

  • தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக்கான அறிவியல் புரிதல்,
  • திட்டவட்டமான அரசியல் இலக்கு,
  • வர்க்கப் போராட்ட நடைமுறை

ஆகிய மூன்றும் இணைந்த ஒன்று. மார்க்ஸ்-எங்கெல்ஸின் பார்வையில் கம்யூனிஸ்டுகள் தொழிலாளர் இயக்கத்திலிருந்து தனிவர்க்கமாகப் பிரிந்தவர்கள் அல்ல; அந்த இயக்கத்திலேயே மிகவும் முன்னேறிய, தீர்மானமான, தத்துவ ரீதியாகத் தெளிவான பகுதியினர்.

3. கட்சி உறுப்பினர் தன்மைக்கும் கம்யூனிஸ்ட் தன்மைக்கும் இடையிலான வேறுபாடு

கட்சி உறுப்பினர் என்பது ஒரு அமைப்புச் சட்டப்பூர்வ அந்தஸ்து; கம்யூனிஸ்ட் என்பது ஒரு கருத்தியல்-வர்க்க-அரசியல் நிலைப்பாடு. இவை இரண்டும் தானாகவே ஒன்றுக்கொன்று சமமானவை அல்ல.

லெனின் 1903-இல் முன்வைத்த RSDLP கட்சி விதியின்படி, கட்சி உறுப்பினர் என்பவர் —

  1. கட்சியின் திட்டத்தை ஏற்றுக்கொள்பவர்,
  2. கட்சிக்குப் பொருளாதார ஆதரவு அளிப்பவர்,
  3. கட்சியின் அமைப்புகளில் ஒன்றில் நேரடியாகப் பங்கேற்பவர்.

இந்த மூன்று அளவுகோல்களும் நிறைவேறினால்தான் ஒருவர் கட்சி உறுப்பினர். ஆனால் இந்த அமைப்புச் சேர்க்கை மட்டும் ஒருவரை தானாகவே முழுமையான கம்யூனிஸ்டாக்கிவிடாது. ஏனெனில் ஒருவரின் உலகக் கண்ணோட்டம், வர்க்கப் பார்வை, புரட்சிகர இலக்கு, அமைப்பு ஒழுக்கம், மக்களுடனான உறவு, தனிப்பட்ட நடைமுறை ஆகியவை கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரண்படக்கூடும். இதனாலேயே லெனின் கட்சிக்குள் உள்ள உறுப்பினர்களின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் தொடர்ந்து சோதிக்க வேண்டியதன் அவசியத்தையும், நிரூபிக்கப்படாத உறுப்பினர்களை நீக்க வேண்டியதன் அவசியத்தையும் தனியாக வலியுறுத்துகிறார்.

எனவே: கட்சி உறுப்பினர் என்பவர் ஒரு கம்யூனிஸ்டாக வளர வேண்டிய பொறுப்பு கொண்டவர்; அவர் ஏற்கெனவே முழுமையான கம்யூனிஸ்ட் என்பதை இயந்திரத்தனமாகக் கருத முடியாது.

4. வர்க்க-அரசியல் வளர்ச்சிப் படிநிலைகள்

மார்க்ஸ்-லெனின்-ஸ்டாலின் எழுத்துகளை ஒன்றிணைத்துப் பார்க்கும்போது, தொழிலாளர் வர்க்கத்திலிருந்து கம்யூனிஸ்ட் முன்னணி வரையிலான வளர்ச்சி ஒரு படிநிலையாக விளங்குகிறது. இது சாதிப்பிரிவு போன்ற நிலையான வகைப்பாடு அல்ல; ஒருவரின் அரசியல் வளர்ச்சியைக் குறிக்கும் இயக்கநிலை.

நிலை அடிப்படை அடையாளம் அரசியல் பங்கு
வாக்காளர் கட்சிக்கு வாக்களிப்பவர் தேர்தல் ஆதரவு மட்டும்
ஆதரவாளர் கட்சி/போராட்டத்தை ஆதரிப்பவர் பரந்த மக்கள் ஆதரவு
கட்சி உறுப்பினர் திட்டம் + அமைப்பு + ஒழுக்கம் ஏற்பு ஒழுங்கமைக்கப்பட்ட கட்சிப் பணி
கேடர் பயிற்சி + கொள்கைத் தெளிவு + தொடர்ச்சியான பொறுப்பு இயக்கத்தை வழிநடத்துதல்
புரட்சிகர கேடர் / கம்யூனிஸ்ட் தத்துவம் + அமைப்பு + வர்க்கப் போராட்டம் + மக்கள் இணைப்பு வர்க்கப் போராட்டத்தை புரட்சிகர திசைக்கு உயர்த்துதல்
சந்தர்ப்பவாதி/திருத்தல்வாதி சொல்லுக்கும் நடைமுறைக்கும் இடையேயான முரண்பாடு புரட்சிகர இலக்கை சீர்திருத்தத்தில் கரைத்தல்

ஸ்டாலின் இதையே இன்னும் தெளிவாக்குகிறார்: கட்சி என்பது வெறும் "ஆதரவாளர்களின் கடல்" அல்ல; ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத்தின் முன்னணி அணி. கட்சிக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான எல்லை மறைந்துவிட்டால், கட்சி ஒரு தளர்வான, அமைப்பற்ற கூட்டமைப்பாக மாறிவிடும் என்று அவர் எச்சரிக்கிறார். அதேபோல, முழு தொழிலாளர் வர்க்கமும் கட்சியில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை லெனினும் தெளிவுபடுத்துகிறார் — பெரும்பான்மையான தொழிலாளர் மக்கள் கட்சியுடன் இணைந்து செயல்படலாம், ஆனால் அவர்கள் அனைவரும் கட்சி உறுப்பினர்களாக இருக்க வேண்டியதில்லை.

5. கேடர் என்பவர் யார்?

"கேடர்" என்ற சொல்லை வெறும் "கட்சி உறுப்பினர்" என்று சுருக்கிவிட முடியாது. லெனினின் What Is To Be Done? நூலில் முன்வைக்கப்படும் "தொழில்முறை புரட்சியாளர்" கருத்தின்படி, கேடர் என்பவர் —

  • தொடர்ச்சியான புரட்சிகர நடவடிக்கையில் ஈடுபடுபவர்,
  • அரசியல் பயிற்சி பெற்றவர்,
  • அமைப்பை உருவாக்கும் திறன் கொண்டவர்,
  • அரசியல் தலைமையை வழங்கும் திறன் கொண்டவர்,
  • இயக்கத்தின் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைக்கும் திறன் கொண்டவர்.

இது வெறும் முழுநேர அலுவலகப் பணியைக் குறிக்கவில்லை; மாறாக வேலைக்கான முழுமையான அர்ப்பணிப்பையும் அரசியல் திறனையும் குறிக்கிறது.

6. உண்மையான கம்யூனிஸ்டை அடையாளம் காணும் அளவுகோல்கள்

ஒருவரிடம் சிவப்புக் கொடி இருக்கிறதா என்பது முக்கியமல்ல. மாறாக, பின்வரும் ஐந்து பரிமாணங்களில் அவர் எங்கு நிற்கிறார் என்பதே அளவுகோல்:

தத்துவ ரீதியாக — மார்க்சிய உலகக் கண்ணோட்டத்தையும், வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தையும் புரிந்திருக்கிறாரா?

அரசியல் ரீதியாக — உடனடி கோரிக்கையையும் இறுதி புரட்சிகர இலக்கையும் இணைக்கிறாரா? தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன அரசியலை முன்னிறுத்துகிறாரா?

அமைப்பு ரீதியாக — கூட்டு முடிவுகளுடன் செயல்படுகிறாரா? ஒழுக்கத்தையும் பொறுப்பையும் ஏற்கிறாரா?

நடைமுறை ரீதியாக — மக்களிடையே பணியாற்றி, அவர்களின் அனுபவங்களிலிருந்து கற்று, பிரச்சினையை பிரச்சாரமாக மட்டும் விடாமல் அமைப்பாக்குகிறாரா?

தனிப்பட்ட ரீதியாக — தியாகம் செய்யத் தயாரா? பதவி/புகழை விட இயக்கத்தின் நலனை முன்னிறுத்துகிறாரா? விமர்சனம்-சுயவிமர்சனத்தை ஏற்கிறாரா?

7. சந்தர்ப்பவாதம் / திருத்தல்வாதம்: எதிர்நிலை

ஒவ்வொரு தவறும் சந்தர்ப்பவாதம் அல்ல. ஒரு கம்யூனிஸ்ட் தவறு செய்யலாம், அதைத் திருத்திக்கொள்ளலாம் — இது சாதாரண அரசியல் வளர்ச்சியின் பகுதி. ஆனால் சந்தர்ப்பவாதம் என்பது மார்க்சியத்தின் அடிப்படை வர்க்க இலக்குகளை வாய்வழியாக ஏற்றுக்கொண்டே, நடைமுறையில் அந்த இலக்குகளை தற்போதைய அமைப்பின் வரம்புகளுக்குள் கரைத்துவிடுவதைக் குறிக்கிறது.

லெனின் 1919-இல் இதை தீவிரமாக விமர்சிக்கிறார்: பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொல்லை வாய்வழியாக ஏற்றுக்கொள்வது போதாது; நடைமுறையில் முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் பாராளுமன்ற சமரசத்தின் அரசியலைத் தொடர்ந்தால் அது சுயஏமாற்றமாகிவிடும்.

ஒரு எளிய ஒப்பீடு:

  • புரட்சிகர மார்க்சிய அணுகுமுறை: ஊதிய உயர்வுக்கான போராட்டம் → தொழிற்சங்க அமைப்பு → வர்க்க உணர்வு → அரசியல் போராட்டம் → அரசின் வர்க்கத் தன்மையைப் புரிந்துகொள்வது → அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம்.
  • சந்தர்ப்பவாத அணுகுமுறை: ஊதிய உயர்வு → பேச்சுவார்த்தை → தேர்தல் → சில சட்ட மாற்றங்கள் → அதுவே தொழிலாளர் விடுதலை என்று கருதுதல்.

இரண்டிலும் கோரிக்கை ஒன்றாக இருக்கலாம்; வேறுபாடு இறுதி அரசியல் திசையில் உள்ளது. லெனின் "தன்னெழுச்சியை வால்பிடிப்பதை" சந்தர்ப்பவாதத்தின் அடிப்படையாகவே சுட்டிக்காட்டுகிறார் — தன்னெழுச்சியான போராட்டத்தை அரசியல் உணர்வுள்ள, திட்டமிட்ட வர்க்கப் போராட்டமாக உயர்த்துவதுதான் கட்சியின் பணி; அதற்குப் பதிலாக கட்சி மக்களின் பின்னால் இழுத்துச் செல்லப்பட்டால் அது சந்தர்ப்பவாதமாக மாறிவிடுகிறது.

8. கட்சி தன்னைத் தூய்மைப்படுத்த வேண்டிய அவசியம்

ஸ்டாலின் Foundations of Leninism நூலில், கட்சியின் வலிமை அதன் எண்ணிக்கையில் மட்டும் இல்லை என வலியுறுத்துகிறார். கட்சி முதலாளித்துவ சமூகத்திற்குள் இயங்குவதால், அதற்குள் குட்டி முதலாளித்துவச் சிந்தனை, தயக்கம், சந்தர்ப்பவாதம், சீர்திருத்தவாதம், குழுவாதம் ஆகியவை நுழையக்கூடும். எனவே கட்சி தொடர்ந்து கருத்தியல் போராட்டத்தையும் ஒழுங்கமைப்புப் போராட்டத்தையும் நடத்த வேண்டும்.

லெனினின் 1920 கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனல் நிபந்தனைகளும் இதையே வலியுறுத்துகின்றன: கம்யூனிஸ்ட் கட்சிகள் சீர்திருத்தவாதத்துடன் தெளிவான முறிவை ஏற்படுத்த வேண்டும்; உறுப்பினர்களின் செயல்பாடுகள் புரட்சிகரப் பிரச்சாரத்திற்குக் கீழ்ப்படுத்தப்பட வேண்டும்; கட்சிகள் ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும்; தேவைப்படும் இடங்களில் குட்டி முதலாளித்துவ உறுப்புகளை அகற்றும் பணியும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதன் மூலம் தெளிவாவது: கம்யூனிஸ்ட் கட்சி என்பது ஒரு பெயர்ப்பலகை அல்ல; ஒரு குறிப்பிட்ட வர்க்கத் தத்துவத்தையும் அரசியல் நடைமுறையையும் தொடர்ந்து செயல்படுத்தி, தன்னைத்தானே தூய்மைப்படுத்திக்கொள்ளும் ஒரு போராளி அமைப்பு.

முடிவுரை

இந்த ஆய்வின் அடிப்படையில் மூன்று வேறுபட்ட வகைகளை தெளிவாகப் பிரிக்க முடியும்:

  1. கம்யூனிஸ்ட் கட்சி — மார்க்சிய-லெனினியத் தத்துவத்தை திட்டமாக ஏற்று, ஜனநாயக மத்தியத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டு, தொழிலாளர் வர்க்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட முன்னணி அணியாகச் செயல்படும் அரசியல் அமைப்பு.
  2. கட்சி உறுப்பினர் / ஆதரவாளர் — கட்சியுடன் அமைப்புச் சார்ந்தோ ஆதரவு ரீதியாகவோ இணைந்திருப்பவர்; இது ஒரு தொடக்கநிலை மற்றும் வளர்ச்சிக்கான பொறுப்பு, இறுதி நிலை அல்ல.
  3. உண்மையான கம்யூனிஸ்ட் / கேடர் — தத்துவம், அரசியல், அமைப்பு, நடைமுறை, தனிப்பட்ட அர்ப்பணிப்பு ஆகிய ஐந்து பரிமாணங்களிலும் தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகர வரலாற்றுப் பணியை புரிந்துகொண்டு, அதை வர்க்கப் போராட்டத்தின் நடைமுறையில் தொடர்ந்து முன்னெடுப்பவர்.

இவற்றுக்கு எதிரானது சந்தர்ப்பவாதி/திருத்தல்வாதி — புரட்சிகர மொழியைப் பேசிக்கொண்டே, நடைமுறையில் வர்க்கப் போராட்டத்தை தற்போதைய முதலாளித்துவ அமைப்பின் வரம்புகளுக்குள் கரைப்பவர்.

இறுதியாக, ஒரு வரியில் சொல்வதானால்: "கம்யூனிஸ்ட்" என்பது சிவப்பு நிறத்தின் அடையாளம் அல்ல; அது ஒரு வர்க்க நிலைப்பாடு, அறிவியல் உலகக் கண்ணோட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் நடைமுறை, மற்றும் புரட்சிகர இலக்குடன் ஒன்றிணைந்த தொடர்ச்சியான வாழ்க்கைச் செயல்பாடு ஆகும்.


முதன்மை மூலங்கள்

  • Marx & Engels — The Communist Manifesto, Chapter II
  • Engels — Principles of Communism (1847)
  • Lenin — What Is To Be Done?
  • Lenin — Draft Rules of the RSDLP (1903)
  • Lenin — Terms of Admission into the Communist International (1920)
  • Stalin — Foundations of Leninism: The Party

(குறிப்பு: இக்கட்டுரை மார்க்சிய-லெனினிய மூலநூல்களின் விளக்கத்தை வழங்குகிறது; இது ஒரு அரசியல் தத்துவத்தின் அறிமுக-ஆய்வுரையாக மட்டுமே கருதப்பட வேண்டும்.)



தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

செப்டம்பர் 12 தியாகிகள் தின உரை 12.09.26

செப்டம்பர் 12 தியாகிகள் தின உரை 12.09.26

அன்பார்ந்த தோழர்களே செவ்வணக்கத்தை செழுத்தி எனது உரையைத் துவங்குகிறேன்.

இன்று செப்டம்பர் 12ஆம் நாள் தியாகத் தோழர் பாலன் அவர்களின் நினைவுநாள். இந்த நாளை இந்தியாவில் சுதந்திரத்துக்காகவும் இந்திய உழைக்கும் மக்கள் மற்றும் தலித் மக்களின் விடுதலைக்காக ஆதிக்க சக்திகளையும் அரசின் அடக்குறையையும் எதிர்த்துப் போராடி உயிர்நீத்த அனைத்து தியாகிகளையும் நினைவுகூர்ந்து தியாகிகள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் இங்கு கூடி தோழர் எல்.அப்பு மற்றும் பாலன் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து அவர்களின் தியாகத்தை நினைவுகூறுகிறோம்.

எல்.அப்பு, பாலன், சீராளன், தமிழரசன் போன்ற என்னற்ற கம்யூனிசப் போராளிகளும் ஏராளமான விவசாயிகளும், தொழிலாளர்களும், மாணவர்களும், இளைஞர்களும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடி உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகத்துக்கு என்ன பலன் கிடைத்தது சிந்தித்துப் பாருங்கள். இந்தியாவில் எப்படி தியாகங்கள் நடைபெற்றதோ அதே போலவேதான் ரஷ்யாவிலும் போல்ஷ்விக் கம்யூனிஸ்டுகளும், ரஷ்ய தொழிலாளர்களும் விவசாயிகளும் ஒன்றுபட்டுப் போராடி பல லட்சக்கணக்கானவர்கள் உயிர்தியாகம் செய்தார்கள். அவர்களின் தியாகத்துக்கு பலன் கிடைத்தது. அவர்கள் பாட்டாளி வர்க்க அரசை உருவாக்கி அனைத்து மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், குடியிருக்க வீடுகள், மற்றும் பெண்ணடிமைத்தனத்தை ஒழித்து பெண்களை விடுதலை செய்தார்கள். அவர்களது சாதனையோடு வேறு எந்த நாட்டோடும் ஒப்பிட முடியாது. அவர்களால் அத்தகைய சாதனையை நிகழ்த்தியபோது இங்குள்ள நாமும் நம்மை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொண்டு செயல்பட்ட பல கம்யூனிஸ்டுகளையும் பலிகொடுத்துவிட்டு இப்போதும் வறுமையிலும் பட்டினிச் சாவிலும் வேலையில்லாத் திண்டாத்தையும் எதிர்நோக்கொண்டிருக்கும் இழிவான நிலையிலேயே வாழ்ந்துவருகிறோம் இந்த இழிவான நிலை தொடர்வதற்கு என்ன காரணம் என்று நாம் சிந்தித்துப் பார்த்தது உண்டா? நமது தியாகத் தலைவர்கள் உட்பட நாம் மக்களுக்காகப் பல போராட்டங்களை நடத்தினோம். ஆனால் அரசு ஒருமுறை நம்மை தாக்கிவிட்டால் நாம் அதனை எதிர்கொள்ள முடியாமல் நமது நம்பிக்கையை இழந்து சோர்ந்து போகிறோம். நாம் ஒன்றுபடுவதற்கு எதிராகப் பலக்குழுக்களாக பிளவுபட்டுள்ளோம். நமது தியாகத் தலைவர்களின் தியாகத்தையெல்லாம் வீணடித்துக்கொண்டுள்ளோம். இதற்கு என்ன காரணம். நாம் என்ன தவறு செய்தோம், இப்போதும் என்ன தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டாமா? தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினால் மட்டும் போதாது நாம் தொடர்ந்து தோல்வியடைவதற்கு என்ன காரணம், நாம் தொடர்ந்து பிளவுபடுவதற்கு என்ன காரணம் என்பதை இந்த நாளில் ஒன்றுகூடியுள்ள நாம் சிந்திக்க வேண்டும். அதுவே நமது தியாகத் தலைவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.

சர்வதேச அளவில் குருஷேவின் திருத்தல்வாதம் உருவானபோது அதனை எதிர்த்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சிப் போராடும்போதும் அந்த தத்துவப் போராட்டத்தை உன்னிப்பாக கவனிக்காமல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் உட்கட்சிப் போராட்டம் துவங்கியது. உட்கட்சிப் போராட்டம் என்றால் உட்கட்சி சித்தாந்தப் போராட்டம் என்ற புரிதலோடு நடத்தி கருத்தொற்றுமைக்கு வருவதற்கு மாறாக கட்சியை அதன் தலைவர்கள் பிளவுபடுத்தினார்கள்.

அதைத்தொடர்ந்து உருவான சிபிஎம் கட்சித் தலைவர்களும் குருஷேவின் திருத்தல்வாதத்தையே ஏற்றுக்கொண்ட பொழுது கட்சியிலுள்ள புரட்சியாளர்கள் எதிர்த்த போதும் உட்கட்சி சித்தாந்தப் போராட்டத்தை நடத்தி ஒரு ஒன்றுபட்ட முடிவுக்கு வராமல் கட்சியை தலைவர்கள் பிளவுபடுத்தினார்கள்.

அதற்குப் பிறகு தோன்றி எம்எல் கட்சியிலும் அதன் அழித்தொழிப்பு கொள்கையை எதிர்த்தும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் விமர்சனம் குறித்தும் எம்எல் கட்சித் தலைமையானது உட்கட்சி சித்தாந்தப் போராட்டத்தை நடத்த தவறியது. தோழர் சாருமஜும்தாரின் மரணத்திற்குப் பிறகு எம்எல் கட்சி பலக் குழுக்களாகப் பிளவு பட்டது. அப்போதும் சித்தாந்தப் போராட்டத்தை தலைவர்கள் நடத்தவில்லை. பிறகு பல குழுக்களிலும் கருத்து வேறுபாடுகள் தோன்றி பல சிறுகுழுக்களாகச் சிதறுண்டு போனார்கள். ஆனாலும் இந்த தியாகிகள் நினைவு நாளில் மட்டும் பெயரளவுக்கு சடங்குத்தனமாக சில குழுக்கள் ஒன்றுசேர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்தி சுய திருப்தி அடைகிறார்கள்.

இந்த வரலாற்றிலிருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டியது என்ன?

1. இந்திய பொதுவுடமையாளர்கள் ஒருபோதும் உட்கட்சி சித்தாந்தப் போராட்டத்தை நடத்தவில்லை.

2. சிலசமயம் உட்கட்சிப் போராட்டத்தை நடத்தினாலும் அங்கெல்லாம் அற்ப பிரச்சனைகளையே விவாதித்தனர். சித்தாந்த அடிப்படையிலான விவாதங்களை நடத்தியதில்லை.

3. அவர்கள் சித்தாந்தப் போராட்டத்தை நடத்த வேண்டுமானால் அவர்களுக்கு மார்க்சிய தத்துவ அறிவு வேண்டும் ஆனால் அவர்களிடம் மார்க்சிய அறிவு குறைபாடே இருந்தது. மேலும் மார்க்சியத்தைப் பயன்படுத்தி பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற உணர்வே தலைவர்களிடம் இல்லை.

4. மார்க்சிய அடிப்படை அறிவை இவர்கள் அணிகளுக்கோ மக்களுக்கோ ஊட்டவே இல்லை. அணிகளையும் மக்களையும் தலையாட்டி பொம்மைகளாகவும் ஆட்டுமந்தை கூட்டங்களாகவுமே வைத்திருந்தார்கள்.

இந்த சித்தாந்த பலவீனத்தாலேயே கம்யூனிசத் தலைவர்கள் பல தியாகங்கள் செய்தும் அதற்கான பலனை அடைய முடியவில்லை.

ஒரு தனி மனிதனது மூளை சரியாக வேலை செய்தால் மட்டுமே அவனால் சிறப்பாக சிந்திக்கவும் செயல்படவும் முடியும். மூளை சரியாக வேலை செய்யவில்லை என்றால் அவனால் சரியாக சிந்திக்கவோ செயல்பட முடியாது உயர்ந்த கட்டமான அந்த மனிதன் பைத்தியக்காரனாகவும் மாறும் நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதுபோலவே ஒரு பாட்டாளிவர்க்க அமைப்புக்கு மார்க்சிய தத்துவ பலம் மிகவும் அவசியமாகும். ஆகவேதான் லெனின் புரட்சிகரமான தத்துவம் இல்லாமல் ஒரு புரட்சிகர இயக்கம் இல்லை என்று சொல்லி தத்துவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். காரல்மார்க்சும் புரட்சிகரமான தத்துவம் மக்களிடம் சென்றால் அது ஒரு பொருள்வகை சக்தியாக மாறும் என்றார். ஆனால் நாமும் நமது தலைவர்களும் மார்க்சிய ஆசான்களது போதனைகளை பின்பற்றி நமது மார்க்சிய விஞ்ஞான அறிவை வளர்த்து அதனை நமது நடைமுறை செயல்பாட்டுக்குப் பயன்படுத்தியிருந்தால் இந்த நாட்டில் நாம் வறுமை, வேயில்லாத் திண்டாட்டம், சாதி தீண்டாமை கொடுமை, பெண்ணடிமைத்தனம், சுரண்டல் போன்ற கொடுமைகளை ஒழித்து மக்கள் அனைவரும் தோழர்களாக ஒன்றுசேர்ந்து உன்னதமான வாழ்வை அடைந்திருக்கலாம். ஆகவே நமது வாழ்வை சிறக்க புதியதோர் பொன்னுலகை படைக்க மார்க்சியத்தை கற்று அதனை நடைமுறையில் பயன்படுத்துவோம் என்று இந்த தியாகிகள் நாளில் சபதமேற்ப்போம். ஆகவே தோழர்களே கம்யூனிஸ்டுகளாகிய நாம் பல தவறுகளை செய்துள்ளோம். இப்போதும் தவறுகள் செய்துகொண்டிருக்கிறோம். நமது தவறுகளை வெளிப்படையாக சுயவிமர்சனம் செய்துகொண்டு நமது தவறுகளை களைந்து நம்மை மாற்றிக்கொள்ளாதவரை நம்மால் மக்களுக்கு எவ்விதமான பயனும் இல்லை என்பதை நாம் உணர்ந்தால் மட்டுமே நாம் கம்யூனிஸ்டாக ஆக முடியும்.. ஆகவே இந்த தியாகிகளின் நினைவுநாளில் நமது தவறுகளை திருத்திக்கொள்வோம் என்று உறுதிமொழி ஏற்ப்போம். அதுதான் தியாகிகளுக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.

கம்யூனிஸ்டுகளின் லட்சியங்களை மக்களிடம் கொண்டுசென்று பிரச்சாரம் செய்வோம்.

  • உற்பத்திச் சாதனங்களை சமூகமயமாக்குவது. அதாவது முதலில் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களை தனியாரிடமிருந்து பறிமுதல் செய்து பொதுச் சொத்தாக மாற்றுவது.
  • லாபத்தின் அடிப்படையிலான உற்பத்தியை ஒழித்துவிட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உற்பத்தியை வளர்ப்பது.
  • மத நிறுவனங்களிடமுள்ள தேவைக்கு அதிகமான சொத்துக்களை பறிமுதல் செய்து மக்களின் உடமையாக மாற்றி அதனை மக்களின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பயன்படுத்துதல்.
  • முதலாளிகளிடமுள்ள அரசியல் அதிகாரம் ஒழிக்கப்பட்டு பரந்துபட்ட மக்களிடம் அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படும்.
  • கிராமங்களில் நிலச்சீர்திருத்தம் செய்யப்படும். பெரும் பண்ணையார்களிடமிருந்து நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு மக்களின் சொத்தாக மாற்றப்பட்டு அரசுக் கூட்டுப்பண்ணையை நிறுவும். அதன் பலன்கள் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.
  • சிறு மட்டும் நடுத்தர விவாசிகளிடம் கூட்டுப் பண்ணையின் அவசியத்தை விளக்கி அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் கூட்டுப் பண்ணைகளை நிறுவி சோசலிச அரசானது விவசாயிகளுக்கு நவீன கருவி, உரங்கள், விதை பொருட்களை வழங்கி விவசாயிகளுக்கு உதவி செய்யும்.
  • கூட்டுப்பண்ணையில் விளைவித்த பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க சோசலிச அரசு ஏற்பாடு செய்யும்.
  • விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சோசலிச அரசாங்கமே கூட்டுறவு வணிக நிறுவனங்களை அரசே நிறுவி கொள்முதல்செய்யும். அதன் மூலம் சோவியத்து அரசானது உற்பத்தியையும் விநியோகத்தையும் மக்களின் நலனிலிருந்து கட்டுப்படுத்தும்.
  • அனைத்து மக்களுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி ஆகியவற்றை வழங்குவதற்கான பொறுப்பை சோசலிச அரசே மேற்கொள்ளும்.
  • சோசலிச அரசானது தொழில்நுட்பத்தை வளர்க்கும். அதன்பயனாக வேலைவாய்ப்பை குறைப்பதற்கு மாறாக அனைவருக்கும் வேலைவாய்ப்பை வழங்கி தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைத்து அவர்களின் சம்பளத்தை உயர்த்தும்.
  • வேலை வாய்ப்பு உரிமையை மக்களின் உரிமையாக அறிவித்து சோசலிச அரசாங்கம் செயல்படும்.
  • சோசலிச அரசு ஒவ்வொரு மனிதர்களுக்கும் வேலைசெய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து அவர்கள் சுதந்திரமாகவும் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு ஏற்பாடு செய்யும்.
  • சமூகத்தில் நிலவும் பிற்போக்கு கருத்துக்கள், சிந்தனைமுறைகள், பழக்கவழக்கங்களை ஒழிக்க விஞ்ஞானப்பூர்வமான கல்வியை அனைத்து மக்களுக்கும் சோசலிச அரசு வழங்கும்.
  • நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மக்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபடுவதற்கான சூழலை சோசலிச அரசு உருவாக்கிக் கொடுக்கும்.
  • பெண்கள் மீது தாக்குதல் தொடுப்பதை கண்காணிப்பதற்கு கண்கானிப்பு குழுக்களை அமைத்து கண்கானித்து தாக்குதல் நடைபெறுவதற்கு முன்பே அதனை தடுத்து நிறுத்துவதற்கு மக்களைத் திரட்டி சோசலிச அரசு நடவடிக்கை எடுக்கும்.
  • சாதித் தீண்டாமை கொடுமைகளில் ஈடுபடுபவர்களை கண்கானித்து அவர்களை எச்சரித்து தீண்டாமை கொடுமைகள் நடக்கவிடாமல் தடுத்து தலித் மக்களை பாதுகாப்பதற்கான குழுக்களை உருவாக்கி சோசலிச அரசு செயல்படும்.
  • பெண்களுக்கும் ஆண்களைப் போல் சமூக உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பதோடு அவர்களுக்கும் ஆண்களுக்கு சமமான சம்பளம் கிடைக்க சோசலிச அரசு ஏற்பாடு செய்யும்.
  • பெண்கள் செய்யும் வீட்டு வேலைகள் சமயல், துணி துவைத்தல் போன்ற பணிகளை நிறுவனங்களின் மூலம் செய்து பெண்களை வீட்டு வேலைச் சுமையிலிருந்து சோசலிச அரசு விடுவிக்கும்.
  • குழந்தைகளையும் வயதானோர்களையும் பராமரிக்கும் பொறுப்பை சோசலிச அரசே ஏற்றுக்கொண்டு செயல்படும்.
  • அரசியல் அதிகாரம் கீழிருந்து செயல்படும் விதமாக மாற்றப்படும். அதாவது மக்கள் நிர்வாக குழுக்கள் கீழிருந்து சட்ட திட்டங்களை விவாதித்து மேல்மட்ட மக்கள் நிர்வாகக் குழுவுக்கு அனுப்பி சட்டம் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
  • சோசலிச அரசின் நடவடிக்கைகளை விமர்சிப்பதற்கு உழைக்கும் மக்களுக்கு உரிமை வழங்கப்படும். அதற்கு பதில் சொல்லவேண்டியது மக்கள் நிர்வாகக் குழுவினரின் கடமையாகும்.
  • மக்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்களை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் தவறு செய்தால் எந்த நேரத்திலும் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள்.
  • தவறு செய்பவர்கள் மற்றும் சமூக விரோதிகளை மக்கள் முன்பு வெளிப்படையாகவே விசாரிக்கப்பட்டு பெரும்பான்மையான மக்களின் சாட்சியத்தின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்படும்.
  • தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்படும். தேசிய இனங்கள் பிரிந்துபோக விரும்பினால் ஒரு தேர்தலை நடத்தி பெரும்பான்மையான மக்கள் பிரிந்துபோக விரும்பினால் அந்த தேசம் பிரிந்துபோவதற்கு உரிமை உண்டு என்பதை சோசலிச அரசு ஏற்றுக்கொள்ளும்.
  • மதம் அரசிடமிருந்து முற்றிலும் துண்டிக்கப்படும். மத நம்பிக்கை என்பது தனி மனிதனின் உரிமையாகும். தனி மனிதனின் மத நம்பிக்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. அதே நேரத்தில் ஒரு தனி மனிதர் மதத்தைப் பரப்புவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • சுரண்டலை ஆதரித்தோ மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும் பிரச்சாரம் மற்றும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படும். தடையை மீறி செயல்படுபவர்களை மக்கள் நீதிமன்றம் தண்டிக்கும்.
  • மக்களிடையே உள்ள பிற்போக்கு கருத்துக்களையும் சிந்தனை முறைகளையும் பழக்கவழக்கங்களையும் போக்கி விஞ்ஞான அடிப்படையிலான கருத்துக்களையும் சிந்தனை முறைகளையும் பழக்கவழக்கங்களையும் வளர்ப்பதற்கு தேவையான மார்க்சிய கல்வி நிலையங்களை தெருவெங்கும் உருவாக்கி வளர்த்து மக்களை விஞ்ஞான சிந்தனையாளர்களாகவும் உழைக்கும் வர்க்கப் பண்பாளர்களாகவும் வளர்ப்பதற்கு கம்யூனிஸ்டுகள் பாடுபட வேண்டும்.

இத்தகைய கொள்கைகளை முதலாளித்துவ பிற்போக்கு அரசியல்வாதிகளோ, பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சியாளர்களோ மக்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் கார்ப்பரேட் முதலாளிகளோ ஏற்றுக்கொண்டு செயல்படுத்த மாட்டார்கள். ஆகவே உழைக்கும் மக்கள் தங்களது சொந்த முயற்சியாலேயே இத்தகைய மக்கள் நலக் கொள்கையை செயல்படுத்த வேண்டும். அதற்காக சில அரசியல்தலைவர்களை கண்மூடித்தனமாக நம்பக்கூடாது அது தலைமை வழிபாட்டு முறையாகும். அதற்காக ஒரு கட்சியை மட்டும் நம்பக்கூடாது. ஏனெனில் ஒரு கட்சியால் மட்டும் இதனை சாதித்துவிட முடியாது. ஆகவே மக்கள் அவர்களின்சொந்த முயற்சியின் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். அதாவது மக்களின் கூட்டு முயற்சியின் மூலமே இதனை சாதிக்க முடியும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே இந்த கொள்கைகளை மக்களிடம் தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்து இந்தக் கொள்களை ஏற்றுக்கொள்பவர்களை ஓர் அணியில் திரட்ட வேண்டும் மக்களை அமைப்பாக்கி மக்களோடு இணைந்து போராடவேண்டும் என்பதே இன்றைய கம்யூனிஸ்டுகளின் முதன்மையான பணியாகும். புரட்சி பற்றி மார்க்சியம் நமக்கு போதிப்பது என்ன? 1. பிரச்சாரம் அதன் மூலம் அமைப்பை உருவாக்குவது. 2. கிளர்ச்சி, இதன் மூலம் பொது மக்களை அணிதிரட்டுவது. 3. செயல் அல்லது ஆணை. இதன் மூலம் புரட்சி செய்து முதலாளித்துவ அரசை வீழ்த்தி பாட்டாளி வர்க்க அரசை உருவாக்க வேண்டும் என்கிறது மார்க்சியம். இந்தியாவில் சமூக மாற்றத்தை ஒரு புரட்சியின் மூலம் சாதிப்பதற்கான புரட்சிகரமான கட்சி இல்லாத இன்றைய நிலையில் அத்தகைய புரட்சிகரமான கட்சியை கட்டுவதற்கான பிரச்சாரக் கட்டத்திலேயே தற்போது இயக்கம் உள்ளது. இதனைப் புரிந்துகொண்டு கம்யூனிஸ்டுகளின் லட்சியத்தை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டியதே இன்றைய முதன்மையான கடமையாகும். ஆகவே தோழர்களே நாம் மார்க்சியத்தை கற்று மார்க்சிய சிந்தனையாளர்களாக நம்மை வளர்த்துக்கொள்வோம். மக்களையும் மார்க்சிய சிந்தனையாளர்களாக வளர்ப்போம். மார்க்சியத்தின் அடிப்படையில் சமூகத்தைப் புரிந்துகொண்டு சமூகத்தை மாற்றுவதற்கான வழிமுறைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்து அணிதிரட்டி அமைPப்பாக்குவோம். அதன் அடிப்படையில் மக்களோடு இணைந்து போராடி ஒரு பொன்னுலகத்தைப் படைப்போம் என்று தியாகிகளின் நினைவு நாளில் சபதம் ஏற்போம்.

***************************.


தொடர்புடைய கட்டுரைகள்:



***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம்: இந்தியச் சூழலில் ஒரு ஒப்பீட்டு ஆய்வு

மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம்: இந்தியச் சூழலில் ஒரு ஒப்பீட்டு ஆய்வு

முன்னுரை

இந்திய அரசியல் சிந்தனை வரலாற்றில் மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் ஆகிய மூன்று சிந்தனைப் போக்குகளும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளன. இவை மூன்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், ஒடுக்குமுறையின் மூலகாரணம் என்ன, அதை எவ்வாறு களைய வேண்டும் என்ற கேள்விகளுக்கு முற்றிலும் வேறுபட்ட பதில்களை வழங்குகின்றன. இந்தக் கட்டுரை, மார்க்சிய-லெனினியப் பார்வையிலிருந்து இந்த மூன்று சிந்தனைகளுக்கும் இடையிலான உறவு, முரண்பாடு, நடைமுறைக் கூட்டணி ஆகியவற்றை விரிவாக ஆராய்கிறது; இறுதியில் இதற்கு எதிரான கண்ணோட்டங்களையும் தருகிறது.

1. வரலாற்றுப் பொருள்முதல்வாதமும் இந்தியச் சமூகத்தின் தனித்துவமும்

மார்க்சியம் ஒரு பொருளாதாரக் கோட்பாடு மட்டுமல்ல; அது வரலாற்றுப் பொருள்முதல்வாதம் (Historical Materialism), இயக்கவியல் பொருள்முதல்வாதம் (Dialectical Materialism) ஆகிய தத்துவார்த்த அடிப்படைகளைக் கொண்ட ஒரு முழுமையான உலகப் பார்வையாகும். மார்க்ஸ்-எங்கெல்ஸ் முன்வைத்த அடித்தளம் (Base) – மேல்மாடம் (Superstructure) கோட்பாட்டின்படி:

  • அடித்தளம்: உற்பத்தி உறவுகள், பொருளாதார அமைப்பு.
  • மேல்மாடம்: அரசு, மதம், சாதி, தத்துவம், கலாச்சாரம்.

மேல்மாடம் அடித்தளத்தின் வெறும் பிரதிபலிப்பு அல்ல; அது அடித்தளத்தின் மீது எதிர்வினையும் (Reciprocal Action) ஆற்றக்கூடியது என்பது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் முக்கிய உட்பொருள்.

இந்தியாவில் சாதி என்பது வெறும் கலாச்சார அம்சம் அல்ல; அது வரலாற்றுரீதியாக உற்பத்தி உறவுகளையும், நிலவுடமை அமைப்பையும் தீர்மானித்த சக்தி. சாதி அமைப்பு உழைப்புப் பிரிவினையை (Division of Labour) மட்டுமன்றி, உழைப்பாளர்களின் பிரிவினையையும் (Division of Labourers) நிர்ணயித்தது. இன்று சட்டப்படி எந்தச் சாதியினரும் எந்தத் தொழிலையும் மேற்கொள்ளலாம் என்ற நிலைமை உருவாகியிருந்தாலும், உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்த சுரண்டும் வர்க்கங்கள் சாதியை ஒரு கருவியாக இன்றும் பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றன.

2. பெண் அடிமைத்தனம்: தனிச்சொத்துடமையா, பார்ப்பனீயமா?

பெண் ஒடுக்குமுறையின் தோற்றம் குறித்து எங்கெல்ஸ் தமது "குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" எனும் நூலில் விளக்கியுள்ளார்.

அம்சம் மார்க்சியப் பார்வை பெரியாரியப் பார்வை
மூலக் காரணம் தனிச்சொத்துரிமையின் தோற்றமும், வம்சாவளிக் கைமாற்றத் தேவையும் மத நம்பிக்கை, கற்பு சார்ந்த பார்ப்பனீய கருத்தியல்
தீர்வு தனிச்சொத்துடமையை ஒழிப்பது, உற்பத்தி உறவுகளை மாற்றுவது பார்ப்பனீயத்தையும் இந்து மதத்தையும் எதிர்த்த பகுத்தறிவுப் பிரசாரம்

மார்க்சியக் கண்ணோட்டத்தில், இந்தியாவில் அகமணமுறை (Endogamy) மற்றும் சாதியமைப்பு ஆகியவை தனிச்சொத்துரிமையையும் நிலவுடமையையும் பாதுகாக்கும் கருத்தியல் கருவிகளாக இயங்கின. சாதியைத் தக்கவைக்கப் பெண் அடக்குமுறை ஒரு கட்டாய அங்கமாக இருந்தது. எனவே, மேல்மாடத்தில் இருக்கும் சாதியக் கருத்தியலை எதிர்த்துப் போராடுவதும் மார்க்சியப் போராட்டத்தின் இயல்பான பகுதியே; இதற்குத் தனியே பெரியார்-அம்பேத்கார் கருத்தியல் தேவைப்படவில்லை என்பது இக்கட்டுரையின் மையவாதம்.

3. மூன்று சிந்தனைகளின் ஒப்பீடு

மார்க்சியம் பெரியாரியம் அம்பேத்கரியம்
முதன்மை எதிரி முதலாளித்துவம் & நிலவுடமை (வர்க்கம்) பார்ப்பனீயம் & ஆரியக் கருத்தியல் சாதியமைப்பு & பிராமணிய இந்துத்துவம்
முக்கியக் கருவி வர்க்கப் போராட்டம் & பாட்டாளி வர்க்கப் புரட்சி சுயமரியாதை இயக்கம் & பகுத்தறிவுப் பிரசாரம் அரசியல் சாசன உரிமை, ஜனநாயகம், கல்வி
இறுதி இலக்கு வர்க்கமற்ற, அரசற்ற கம்யூனிச சமூகம் சாதியற்ற, பகுத்தறிவுச் சமூகம் சமத்துவம்-சகோதரத்துவம்-சுதந்திரம் கொண்ட ஜனநாயகம்

மார்க்சியப் பார்வையில் இந்த ஒப்பீட்டிலிருந்து எழும் விமர்சனம்: முதலாளித்துவ உற்பத்தி அமைப்பையும் தனிவுடைமையையும் தகர்க்காமல் சாதியையோ, பெண் அடிமைத்தனத்தையோ முழுமையாக ஒழிக்க முடியாது. பெரியாரியமும் அம்பேத்கரியமும் முதலாளித்துவ அமைப்பை முழுமையாக நிராகரிக்காமல், ஜனநாயக/சீர்திருத்தச் சட்டகங்களுக்குள் தீர்வுகளைத் தேடுகின்றன என்பதே இக்கண்ணோட்டத்தின் முக்கிய விமர்சனம்.

4. திருத்தல்வாதமும் நடைமுறைக் கூட்டணியும்: எல்லைக்கோடு எங்கே?

மார்க்சிய-லெனினியக் கோட்பாட்டின்படி சித்தாந்த சமரசமும், தந்திரோபாயக் கூட்டணியும் (Tactical Alliance) வேறு வேறானவை. லெனின் தமது "இடதுசாரி கம்யூனிசம்: ஒரு இளம்பருவக் கோளாறு" எனும் நூலில், இலக்கை அடைய தற்காலிக கூட்டாளிகளையும் வெகுஜன அமைப்புகளையும் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்கியுள்ளார்.

இதன் அடிப்படையில்:

  • ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதை இயக்கங்களுடனும், சாதி எதிர்ப்புப் போராட்டங்களுடனும் நடைமுறையில் கைகோர்ப்பது இந்தியச் சூழலில் தவிர்க்க முடியாத வரலாற்றுத் தேவை.
  • ஆனால் இந்த நடைமுறைக் கூட்டணியின் போது மார்க்சியத்தின் தனித்துவமான வர்க்கக் கண்ணோட்டத்தைக் கைவிட்டு, வெறும் சீர்திருத்தவாதப் போக்குகளுக்குள் மூழ்குவது திருத்தல்வாதம் (Revisionism) எனப்படுகிறது.

இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்வதே, "கூட்டணி தேவை, ஆனால் சமரசம் ஆபத்தானது" என்ற நிலைப்பாட்டின் தத்துவார்த்த அடிப்படை.

5. சாதியும் வர்க்கமும்: பொருளாதார அடித்தளம் கொண்டது

பாரம்பரிய சீர்திருத்தவாதிகள் சாதியை வெறும் மதப் பிரச்சனையாகவோ, மனநிலைச் சிக்கலாகவோ பார்க்கும்போது, மார்க்சிய-லெனினியப் பார்வை அதை நிலவுடமை மற்றும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளோடு பிணைக்கிறது:

  • உழைப்பின் பிரிவினையும் உழைப்பாளர்களின் பிரிவினையும்: சாதி அமைப்பு உழைக்கும் வர்க்கத்தைப் பிரித்து வைக்கும் கருவியாகவும் இயங்குகிறது.
  • நிலமும் சாதியும்: நிலமற்ற விவசாயக் கூலிகளும் ஏழை விவசாயிகளும் பெருமளவில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்; நிலவுடமையாளர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் ஆதிக்கச் சாதியினர்.
  • அரை-நிலப்பிரபுத்துவச் சுரண்டல்: கிராமப்புறங்களில் சாதிய அடக்குமுறையும் தீண்டாமையும் நிலப்பிரபுத்துவச் சுரண்டலைத் தக்கவைக்கும் ஆயுதங்களாகப் பயின்று வந்துள்ளன.

எனவே சாதி எதிர்ப்புப் போராட்டங்களை வர்க்கப் போராட்டத்திலிருந்து வேறுபடுத்தி பார்க்க முடியாது; அவை புதிய ஜனநாயகப் புரட்சியின் (New Democratic Revolution) தவிர்க்க முடியாத கூறுகள் என்பது M-L இயக்கங்களின் நிலைப்பாடு.

6. வரலாற்றுச் சான்றுகள்: ஆந்திரா, தெலங்கானா, பீகார்

ஆந்திரப் பிரதேசம் (1968–1978):

  • ஸ்ரீகாகுளம் ஆதிவாசி விவசாயிகள் போராட்டம் (1968–71) — நிலப்பிரபுக்கள் மற்றும் வட்டிக் கடன் கொடுப்போருக்கு எதிராக சவர ஆதிவாசிகள் நடத்திய போராட்டம்.
  • ஜகத்தியா-கரீம்நகர் விவசாயிகள் இயக்கம் (1978) — 'வெட்டி' (சம்பளமில்லா அடிமை வேலை) முறைக்கு எதிரான போராட்டம்; 1978-இல் நடைபெற்ற "ஜகத்தியா ஜெயத்ராத்ரா" பேரணியில் பல்லாயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

பீகார்:

  • போஜ்பூர் எழுச்சி (1970-கள்) — மேல்சாதி நிலப்பிரபுக்களின் தலித் பெண்கள் மீதான வன்முறைக்கும் தீண்டாமை அடக்குமுறைக்கும் எதிராக மார்க்சிய உணர்வுள்ள தலித் இளைஞர்கள் திரண்டனர்.
  • இஜத் (சுயமரியாதை) மற்றும் கூலிப் போராட்டங்கள் — சட்டப்பூர்வ குறைந்தபட்சக் கூலியும் உபரி நிலப் பங்கீடும் கோரி நடத்தப்பட்டவை.
  • அர்வால் படுகொலை (1986) — அமைதியாகக் கூடிய விவசாயிகள் மீதான காவல்துறைத் தாக்குதலும், 'ரன்பீர் சேனா' நடத்திய தலித் கிராமப் படுகொலைகளுக்கு எதிரான M-L இயக்கங்களின் எதிர்ப்பும்.

இவை, சாதி எதிர்ப்புப் போராட்டமும் வர்க்கப் போராட்டமும் கள மட்டத்தில் ஒன்றிணைந்ததற்கான வரலாற்றுச் சான்றுகளாக முன்வைக்கப்படுகின்றன. இந்த வரலாற்றின் அடிப்படையில், "கம்யூனிஸ்டுகள் சாதிக் கொடுமைக்கு எதிராகவோ தலித் சுயமரியாதைக்காகவோ போராடவில்லை" எனும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது எனும் வாதம் இக்கண்ணோட்டத்தில் முன்வைக்கப்படுகிறது.

7. முடிவுரை: மார்க்சியக் கண்ணோட்டத்தின் தொகுப்பான வாதம்

இந்தக் கட்டுரையில் முன்வைக்கப்பட்ட மார்க்சிய-லெனினியப் பார்வையின்படி:

  1. மார்க்சியம் என்பது சமூக மாற்றத்திற்கான ஒரு முழுமையான, விஞ்ஞானப்பூர்வமான உலகப் பார்வை.
  2. இந்தியாவில் சாதிப் போராட்டமும் வர்க்கப் போராட்டமும் பிரிக்க முடியாதவை.
  3. கார்ப்பரேட் முதலாளித்துவமும் நிலவுடமையும் நிலவும் வரை சாதிய அடக்குமுறை உழைக்கும் மக்களைப் பிரிக்கும் கருவியாகவே தொடர்ந்து செயல்படும்.
  4. எனவே, சாதிய அடக்குமுறையையும் பெண் ஒடுக்குமுறையையும் புரிந்துகொள்ள பெரியார்-அம்பேத்காரின் பங்களிப்புகளைப் பரிசீலிக்கலாம்; ஆனால் அவற்றை இறுதித் தீர்வாகக் கருதுவது வழிகாட்டலுக்குப் பதிலாகக் குழப்பத்தையே அதிகரிக்கும் என்பது இந்நிலைப்பாட்டின் மைய முடிவு.

.


தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செப்டம்பர் 12 தியாகிகள் தினத்தில் சபதம் ஏற்ப்போம். 12.09.26

அன்பார்ந்த தோழர்களே செவ்வவணக்கத்தை செலுத்தி எனது உரையைத் துவங்குகிறேன். இன்று செப்டம்பர் 12ஆம் நாள் தியாகத் தோழர் பாலன் அவர்களின் நினைவுநாள்...

செய்தியை சார்ந்த அலசல்