புரட்சியின் படிப்பினைகளைத் தொகுத்தல்
இன்றுள்ளதைப் போல வெளிப்படையாக தெளிவாக உணரத்தக்க வகையில் உள்ள தேக்கம் உள்ள
ஒரு நேரத்தில் புரட்சியின் முந்தைய காலத்தைப் பற்றி விளக்கிக் கூறுவதற்கு,
போராடிக் கொண்டிருந்த
கட்சிகளின் குண இயல்புகள், இந்த கட்சிகளின் நிலைநிற்பையும் போராட்டத்தையும்
நிர்ணயிக்கும் சமுதாய உறவுகள் பற்றி விளக்கிக் கூறுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள
வேண்டும்.
— காரல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கல்ஸ்
1).இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே- தோல்வியின் பாடங்கள்
2).இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே ஒரு புரட்சி இன்னொன்றாக வளர்தல்
3).லண்டனில் அகதியாக இருந்த காலத்திய பணிகள் இந்த இணைப்பில் ஒலி வடிவில்
4).புரட்சித் தோல்வியும் அரசியல் வியூகமும் ஒலி வடிவில் இந்த இணைப்பில்
லண்டனில் இருந்த முதல் மாதங்கள்
மார்க்ஸ் லண்டனுக்கு வந்து சேரும் காலத்திற்குள்ளாக எல்லா
ஐரோப்பிய நாடுகளிலும் மூர்க்கத்தனமான பிற்போக்கு சக்திகள் தங்களை நிலைப்படுத்திக்
கொண்டன. அல்லது நிலைப்படுத்திக் கொண்டிருந்தன. அந்த நாடுகளில் சமீப காலத்தில்தான்
பெரும் புரட்சி அலைகள் அடித்திருந்தன. 1849 ஜூன் 13 சம்பவங்களுக்குப் பின்னர் பிரான்ஸில் இரு மன்னரீகக்
கட்சிக் கோஷ்டிகளான - லெஜிட்டிமிஸ்டுகளும் ஓர்லியனிஸ்டுகளும் - சேர்ந்து ஆளும்
பொறுப்பில் இருந்த "ஒழுங்குமுறைக் கட்சி"யின் எதிர்ப்புரட்சிக்
கொள்கைகள் ஒரு போனபார்ட்டிஸ்ட் சர்வாதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கு பாதையை
செப்பனிட்டுக் கொண்டிருந்தது. 1849 கோடை காலத்தில் ஜெர்மனியில் கடைசியான புரட்சி மையங்கள்
அமுக்கப்பட்ட பின்னர் ஹங்கேரியப் புரட்சியும் ஜாரிஸ்டு துருப்புகளின் உதவியுடன்
நசுக்கப்பட்டது. இத்தாலிய புரட்சி இயக்கமும் ஐரோப்பிய எதிர்ப்புரட்சியின் கூட்டு
சக்திகளினால் நெரித்துக் கொல்லப்பட்டது.
1848-49 புரட்சிகளின் தோல்வி மார்க்ஸின் ஆற்றலைத் தணித்து
மூழ்கடித்துவிடவில்லை. அல்லது ஐரோப்பாவில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும் என்னும்
நம்பிக்கையை அசைத்துவிடவுமில்லை. உண்மையில் அத்தகைய மாற்றத்தைக் கொண்டுவருவதில்
கேந்திரமான பங்கை ஆற்றுவதற்குத் தொழிலாளி வர்க்கத்திற்கு உள்ள ஆற்றலைப் பற்றி
அவருக்கு இருந்த
நம்பிக்கை மேலும் மேலும் அதிகரித்தது. புரட்சிக் காலத்திலேயே அதன் நிகழ்வுப்
போக்கிலேயே பல்வேறு வர்க்கங்களின் நடத்தையே அவருடைய நம்பிக்கை அதிகரிப்பதற்கு
ஆதாரமாக இருந்தது.
இந்தத் தோல்விகள் நஷ்டங்கள் ஆகியவற்றைச் சகிப்புகள்
அனைத்திற்கும் மார்க்ஸ் மிகவும் தெளிவாக அறிந்திருந்தார். 1848,
1849 போராட்டங்கள்
வீணாகிவிடவில்லை. அவை பல நாடுகளிலும் நிலப்பிரபுத்துவ மன்னராட்சி முறையின்
அடித்தளத்தையே அசைத்து விட்டிருந்தது. முதலாளித்துவத்தின் நிறுவனத்தையும் வளர்ச்சி
யையும் முன் எடுத்துச் சென்றிருந்தது. பாட்டாளி வர்க்கத்தினுடைய உணர்வு நிலையையும்
ஸ்தாபனத் தன்மையையும் மேலும் வளர்ப்பதற்கு நல்ல களத்தைத் தயாரித்தது. மக்கள்
தங்களுடைய பிரமைகளிலிருந்து விடுபடுவதற்கான தொடக்கத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு
வகையான தனி மாதிரியான குட்டி பூர்ஷ்வா சோஷலிசத்திற்கும் சரியான அடி கொடுத்தது.
விஞ்ஞான கம்யூனிஸத் தத்துவத்தின் அடிப்படையில் உள்ள கொள்கையின்,
எவரும் ஆட்சேபிக்க
முடியாத, மேலான
தன்மையைப் பிரகடனம் செய்தது.
பகிரங்கமான புரட்சிப் போராட்டத்தில் ஒரு நிர்ப்பந்தமான
இடைவேளை ஏற்பட்டிருக்கிறது என்னும் நிலைமையை மார்க்ஸ் கண்டார். அத்துடன் அந்தப்
புரட்சி நாடகத்தின் இரண்டாவது காட்சி நிச்சயம் பின்தொடரும் என்பதையும் அவர்
கண்டார். அந்த இடைவேளை அதிகநாள் நீடிக்காது என்பதற்கான சூசகங்கள் ஏராளமாகத்
தென்பட்டன. இதற்கு சற்று முன்னதாகவே உடனடியான புரட்சிகர எழுச்சி ஏற்படும்
என்பதற்கான நம்பிக்கை இல்லை என்பதை மார்க்ஸ் உணர்ந்திருந்தார். ஆனால் இடைவேளை
குறுகியதாகவே இருக்கும் என்னும் நம்பிக்கை இருந்த போதிலும்,
குடியேறியுள்ளவர்களுடைய
பூர்ஷ்வா மற்றும் குட்டி பூர்ஷ்வா மயக்கத்தில் மருட்சியிலிருந்து மார்க்ஸ் தெளிவாக
விடுபட்டிருந்தார். ஆனால் அந்த பூர்ஷ்வா, குட்டி பூர்ஷ்வா நபர்களோ எந்த நேரத்திலும் அவர்கள்
அழைக்கப்பட்டு மக்களின் காலப்பயணத்தின் வழிகாட்டல் அவர்கள் கையில் கொடுக்கப்பட்டு
அதிகாரத்திற்கு வருவார்கள் என்று நிச்சயமாக மயக்கம் கொண்டிருந்தார்கள்.
சம்பவங்களின் திருப்பங்கள் எப்படியிருந்த போதிலும்,
பிற்போக்கு சக்திகளின்
காலம் நீண்டோ அல்லது குறுகியோ அது எப்படி இருந்தாலும் இப்போது நெறிச் சிதறிக்
கிடக்கக்கூடிய புரட்சிகர சக்திகளை ஒன்றுபடுத்துவதற்கு,
விடுபட்டுப் போன
தொடர்புகளை மீண்டும் உண்டாக்குவதற்கு, சோர்வுற்று நம்பிக்கையிழந்து செயலில்லாமல் விழுந்து
கிடப்பவர்களை மீண்டும் தட்டி எழுப்பி இணைத்து
அத்தியாயம் - 6
பாட்டாளி வர்க்க ஊழியர்களைத் திரட்டி பயிற்சி கொடுத்து
உருவாக்கவும் இன்னும் பெரும் அளவில் வேலை செய்ய வேண்டியிருந்தது என்பதை அவர்
தெளிவாக உணர்ந்திருந்தார். இத்தகைய அவசர அவசியமான அமுக்கிக் கொண்டிருந்த நடைமுறைக்
கடமைகள் மார்க்ஸை, அவர் நாடு கடத்தப்பட்டு லண்டனுக்கு வந்து குடியேறிய முதல்
சில மாதங்களில் எதிர்நோக்கி முன்நின்றன.
கம்யூனிஸ்ட் லீகை மீண்டும் புத்துயிரூட்டி அதைத்தான்
பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காரர்களை ஒன்றுபடுத்துவதற்கான ஸ்தாபன வடிவமாக ஆக்க
வேண்டியிருந்தது. கம்யூனிஸ்ட் லீகைத் தான் எதிர்காலத்தில் மற்றும் பெரும் அளவிலான
பாட்டாளி வர்க்கக் கட்சியின் அச்சு மையமாக மார்க்ஸ் கருதினார். புதிய நிலைமையில்
நடைமுறை புரட்சிப் பணியானது லீகினுடைய சட்டபூர்வமான முறைகளுக்கப்பால் உள்ள ரகசிய
நடவடிக்கையில் தான் மீண்டும் அப்போது மையப்படுத்த வேண்டியிருந்தது. ஏங்கல்ஸ்
கீழ்க்கண்டவாறு எழுதினார்: "இன்றைய நிலைமையில் 1848 ஆம் ஆண்டிற்கு முன்பு இருந்ததைப் போல் ஒரு பாட்டாளி
வர்க்கத்தின் ஸ்தாபனத்தை பகிரங்க ஸ்தாபனமாக வைத்துக் கொள்ள முடியாது என்பதையே
காண்பிக்கிறது; எனவே நாம் மீண்டும் ரகசியமாகவே ஸ்தாபனத்தை உருவாக்க
வேண்டும்."¹ லீக் ஸ்தாபனமே மீண்டும் புனரமைக்கப்பட வேண்டியிருந்தது;
உறுதிப்படுத்த
வேண்டியிருந்தது. மத்தியக் கமிட்டி அநேகமாக செயல்படவேயில்லை. பல கிளை அமைப்புகளும்
மாவட்ட அமைப்புகளும் விழுந்துவிட்டன. லீகினுடைய பல முக்கிய ஊழியர்களும்
போராட்டத்தில் கொல்லப் பட்டார்கள் அல்லது கைது செய்யப்பட்டார்கள். இதர பலர்
இயக்கத்திலிருந்து பின்வாங்கிக் கொண்டார்கள். பல விலாசங்களும்,
தொடர்புகளும் மறைந்து
போய்விட்டன.
மார்க்ஸ் லண்டனுக்கு வந்தவுடனேயே கம்யூனிஸ்ட் லீகின்
வழிகாட்டும் மையத்தை மீண்டும் ஸ்தாபித்து விட்டார். அதற்குள்ளாக பழைய மத்தியக்
கமிட்டியின் பல உறுப்பினர்கள் லண்டனுக்கு வந்து விட்டார்கள். இதில் ஏங்கல்ஸ்,
ஸ்காப்பர்,
மோல் ஆகியோர்
வரவில்லை. மோல், பின்னர் பேரரசு அரசியல் சாசனத்திற்கான,
(Imperial Constitution) இயக்கத்தில்
கொல்லப்பட்டார். மார்க்ஸ் வற்புறுத்தியதன் பேரில் ஏங்கல்ஸ் ஸ்விட்சர்லாந்தை
விட்டுக் கிளம்பி லண்டனுக்குப் புறப்பட்டார். அங்கு நவம்பர் 10 ஆம் தேதி வந்து சேர்ந்தார். அவர் லண்டன் வந்து சேருவதற்கு
நீண்ட நாள் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது. அவர் ஸ்விட்சர்லாந்திலிருந்து ஜெனோவா
வழியாகப் புறப்பட்டு ஜிப்ரியன் தீபகற்பத்தைச் சுற்றி பிஸ்கே
வளைகுடாவைக் கடந்து
ஐந்து வார காலம் கப்பல் பிரயாணம் செய்து லண்டன் வந்து சேர்ந்தார். அவர் உடனடியாக
மத்தியக் கமிட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஸ்காப்பர் விஸ்பேடனில்
சிறைவைக்கப்பட்டிருந்தார். அதனால் அவர் லண்டனுக்கு 1850 ஜூலை தொடக்கம் வரையிலும் வந்து சேர முடியவில்லை. அதன்
பிறகு அவரும் மத்தியக் கமிட்டி உறுப்பினர் ஆனார். புதிய உறுப்பினர்களில் ஆகஸ்ட்
வில்லிச் என்பவரும் ஒருவர். அவர் பாடன் மற்றும் பாலட்டினேட் பகுதியில் நடைபெற்ற
போராட்ட இயக்கத்தில் மிகவும் திறமையான தளபதி என்று பெயரெடுத்தார். அவர்,
மார்க்ஸினுடைய பிரேரணையின்
பேரில் 1849
அக்டோபரில் மத்தியக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர்
ஸ்விட்சர்லாந்திலிருந்து ஏங்கல்ஸின் பேரில் லண்டன் வந்து சேர்ந்தார். மற்றொரு
புதிய உறுப்பினர் கோன்ராட் ஸ்க்ராம். அவர் 1848-49 ஜெர்மன் புரட்சியில் மிகவும் ஊக்கத்துடன் பங்குகொண்டவர்.
அவர் 1849
செப்டம்பரில் ஒரு பிரஷ்யன் கோட்டைச் சிறையிலிருந்து மிகவும் துணிச்சலுடன் தப்பி
வந்தவர். மிக முக்கியமான பிரபலமான லீக் உறுப்பினர்களான ஜார்ஜ் இக்கேரியஸ்,
காரல் ப்பாண்டர்
ஆகியோரும் கமிட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
1849 செப்டம்பர் ஆரம்பத்தில் மார்க்ஸ் லண்டனில் உள்ள ஜெர்மன்
தொழிலாளர் கல்விக் கழகத்தில் சேர்ந்தார். அது கம்யூனிஸ்ட் லீகுடன் மிகவும்
நெருக்கமான தொடர்பு கொண்டது. அவர் தொழிலாளர்களின் தத்துவார்த்தப் பயிற்சிக்கு
மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். 1849 நவம்பரிலிருந்து 1850 இலையுதிர் காலம் வரையிலும் அவர் கல்விக் கழகத்தில் அரசியல்
பொருளாதாரத்தைப் பற்றியும் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைப் பற்றியும்
வகுப்புகள் எடுத்தார்.
புரட்சிகரமான, நாடு கடத்தப்பட்ட குடியேற்றக்காரர்களுக்கு உதவி செய்வது
என்பது சிதறிக் கிடக்கும் புரட்சிகர சக்திகளை ஒன்று சேர்ப்பதற்கு மிகவும் அவசியமான
விஷயங்களாகும். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான அரசியலால் நாடு கடத்தப்பட்டவர்கள்
லண்டனுக்கு வந்து சேர்ந்தார்கள். தங்கள் தாய்நாட்டில் இருந்த அடக்குமுறை
அட்டூழியங்களிலிருந்து தப்புவதற்காக அவர்கள் இங்கிலாந்திற்கு வந்தார்கள். அங்கு
மற்ற இடங்களை ஒப்பிடும்போது ஓரளவு அரசியல் சுதந்திரம் அதிகமாக இருந்தது. எனினும்
அவர்கள் மிகவும் கொடுமையான ஏழ்மையிலும் எவ்வித கௌரவமும் இல்லாமல் தங்குவதற்கும்
கூட இடமின்றி, மிகக் குறைந்தபட்ச தேவைகளுக்கான சின்னஞ்சிறு வசதிகள்கூட
இல்லாமல், மிகவும் தாழ்ந்த நிலையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர்.
மார்க்ஸே கூட மிகவும் கொடுமையான வறுமையால் கஷ்டப்பட்டார். 1849 செப்டம்பர் 3 ஆம் தேதி அவர் ஃப்ரிலிகிராத்திற்கு எழுதினார்: "நான்
உண்மையிலேயே மிகவும் கஷ்டமான நிலையில் இருக்கிறேன்;
எனது மனைவிக்குப்
பிரசவம் ஆகும் சமயம்; நிறை கர்ப்பமாக இருக்கிறாள். 15 ஆம் தேதி அவள் பாரீஸை விட்டுப் புறப்பட வேண்டும். அவள்
இங்கு வந்து சேருவதற்கு வேண்டிய கட்டணத்திற்கும் இங்கே ஒரு வீடு அமர்த்துவதற்கும்
குறைந்தபட்ச அளவு தேவையான பணத்திற்கும் என்ன செய்வது என்றே தோன்றவில்லை."¹ மிகவும் அதிகமான கஷ்டத்தில் பணம் கிடைத்தது. செப்டம்பர்
மத்தியில் ஜென்னியும் மூன்று குழந்தைகளும் லண்டனுக்கு வந்து சேர்ந்தனர்.
அவருக்குச் சொந்தமாக எவ்வளவோ கஷ்டங்கள் இருந்தபோதிலும் மார்க்ஸ் இதர புரட்சிப்
போராட்ட வீரர்களை வறுமையிலிருந்தும் சில வேளைகளில் கொடுமையான சாவிலிருந்தும்
தப்புவிப்பதற்குத் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தார்.
1849 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி ஜெர்மன் தொழிலாளர் கல்விக் கழகத்தின் கூட்டத்தை
புதிதாக வந்திருக்கும் நாடு கடத்தப்பட்டவர்களையும் சேர்த்து மார்க்ஸ் ஏற்பாடு
செய்திருந்தார். அக்கூட்டத்தில் நாடு கடத்தப்பட்டோர் உதவிக்குழு ஒன்று
தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் மார்க்ஸையும் ஒரு உறுப்பினராக இருந்தார். அந்த
உறுப்பினர்களில் குட்டி பூர்ஷ்வா ஜனநாயக வாதிகளும் கம்யூனிஸ்ட் லீக்
உறுப்பினர்களும் இருந்தார்கள்.
அரசியல் காரணங்களுக்காக நாடு கடத்தப்பட்டவர்கள்,
எத்தகைய கொள்கைக்
கருத்துக்கள் கொண்டவர்களாக இருந்தாலும் சரி அல்லது எந்தக் கட்சியினராக இருந்தாலும்
சரி எல்லோருக்கும் உதவி செய்வதுதான் இதன் நோக்கம் என்பதை அக்குழு அறிவிப்பு
செய்திருந்தது. ஆனால் நாடு கடத்தப்பட்டு குடியேறியுள்ளவர்களுக்கிடையில் உள்ள
பல்வேறு கோஷ்டிகளுக்கிடையில் வேறுபாடுகளும் போராட்டங்களும் எழுந்தன. அந்த உள்
தகராறுகள் உதவிக் குழுவிலும் பரவியது. அவசியமானவர்களுக்கு உதவி செய்வது என்னும்
ஒரு நற்பணியில் பல்வேறு கோஷ்டிகளின் சூழ்ச்சிகள் உள்ளே நுழைவதை அனுமதிக்க மறுத்து
மார்க்ஸும் அவரைச் சேர்ந்தவர்களும் குட்டி பூர்ஷ்வா ஜனநாயகத் தலைவர்களிடமிருந்து
விடைபெற்றுக் கொண்டு பிரிந்து விடுவது என்று தீர்மானித்தனர். 1849 நவம்பர் மாதம் நடைபெற்ற ஜெர்மன் தொழிலாளர்
கல்விக்கழகத்தின் பொதுப்பேரவைக் கூட்டத்தில் குழு திருத்தியமைக்கப்பட்டது. சமூக
ஜனநாயக நாடு கடத்தப்பட்டோர் குழு என்னும் பெயரில் மறுசீரமைக்கப்பட்டது;
அதில் கம்யூனிஸ்டுகள்
மட்டுமே இருந்தார்கள். மார்க்ஸ் அதன் அமைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்;
ஏங்கல்ஸ்,
பவுல் ப்பாண்டர்,
வில்லிச் ஆகியோர்
அக்குழுவில் இருந்தனர். இக்குழுவின் மூலம் கொடுக்கப்படும் உதவி நாடு கடத்தப்பட்டு
குடியேறியுள்ளவர்களின் பாட்டாளி வர்க்கப் பகுதியினர் மற்றும் சோஷலிஸ்டுகள் ஆகிய
பகுதியினருக்குத்தான் செல்லும் என்பதைக்குழு அறிவித்தது.
"நியூ ரெயினிஷி ஜீட்டுங் பொலிட்டிசி - எக்கனாமிஸ்சி
ரெவ்யூ" ஆரம்பித்தல்
தொழிலாளி வர்க்க இயக்கத்தின் முன்புள்ள நடைமுறைக்கடமைகளை
ஒரே சமயத்தில் மிக விரிவான தத்துவார்த்த வேலையுடன் சேர்த்து வைத்து சமாளிக்க
வேண்டும், அதன் மூலம் 1848 ஆம் வருஷத்திய புரட்சிகரப் போராட்டங்களின் படிப்பினைகளை
பாட்டாளி வர்க்க வெகுஜனங்கள் கற்றுக் கொள்ள உதவி செய்ய வேண்டும் என்றும்,
அகல்முகமான அடுத்த
காரியங்களை ஆற்றுவதற்கு இன்னும் சிறந்த முறையில் தயாராக இருக்க முடியும் என்றும்
மார்க்ஸ் உறுதியாகக் கருதினார். புரட்சிப் போராட்டத்தின் ஆண்டுகளில் தோன்றி எழுந்த
கருத்துக்களின் தொகுப்பு முறையை ஒன்று சேர்ப்பதற்கான அவசியம்,
பல்வேறு நாடுகளின்
வர்க்கப் போராட்டத்தின் போக்கு, அவை பற்றி ஒரு புதிய பார்வைக்கான அவசியம்,
அதிலிருந்து அவசியமான
தத்துவார்த்த முடிவுகளுக்கு வரவேண்டிய தேவையும் அதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தின்
புரட்சிகரமான தத்துவக்கொள்கை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியமும்
ஏற்பட்டுள்ளது.
1848 புரட்சியைப் பற்றி மார்க்ஸின் தத்துவார்த்த ரீதியில்
பொதுமைப்படுத்தியதைப் பற்றி லெனின் குறிப்பிட்டுக் கீழ்க்கண்டவாறு எழுதினார்:
"இங்கு, இதர எல்லா இடங்களையும் போலவேயே அவருடைய தத்துவம்
அனுபவத்தின் தொகுப்புரையாகும். அது ஒரு தெளிவான தத்துவஞான உலகக்
கருத்துருவத்தினாலும் வரலாற்றைப் பற்றி ஒரு மிகச் செழிப்பான ஞானத்தினாலும்
ஒளிவூட்டப்பட்டு இருக்கிறது."¹
புரட்சியின் விளைவுகளைப் பற்றி விஞ்ஞான விளக்கமாக
பொதுமைப்படுத்த வேண்டும் என்றால் மற்றும் புரட்சித் தத்துவம் வளர்க்கப்பட்டு
மேலும் பரப்பப்பட வேண்டுமானால் ஒரு பாட்டாளிவர்க்க சக்திகளையே மீண்டும் வெளியிட
வேண்டியது மிகவும் அவசியமானது; முக்கியமானது, என்று மார்க்ஸ் நம்பிக்கை கொண்டிருந்தார். தற்காலிகமாக அதை ஒரு பத்திரிகை வடிவத்தில்
வெளியிட வேண்டியதிருந்தது. இது பற்றி அவர் நியூ ரெயினிஷி ஜீட்டுங் மூடப்பட்ட
காலத்திலிருந்தே சிந்தித்துக் கொண்டிருந்தார். புதிய நிலைமைகளில் இப்பத்திரிகை
அதனுடைய போர்க்குணமிக்க புரட்சிகரமான கொள்கை வழியைத் தொடர்ந்து பின்பற்ற
வேண்டியதும் கம்யூனிஸ்ட் லீக் உறுப்பினர்களுக்கும்,
அதனுடன் சேர்ந்து
நிற்கும் பாட்டாளிகளுக்கும் சித்தாந்தக் கல்வியும் தத்துவார்த்தப் பயிற்சியும்
கொடுக்கக்கூடிய கருவியாகவும் பயன்பட வேண்டியதும் அவசியமாகும். அது கம்யூனிஸ்ட்
லீகினுடைய அதிகாரபூர்வமான பத்திரிகையாகவும் குரலாகவும்,
அதன் கருத்துக்களின்
குரல் கருவியாகவும் இருக்க வேண்டும். அதன்படி அத்தகைய ஒரு பத்திரிகைக்கு நியூ
ரெயினிஷி ஜீட்டுங் பொலிடிஸ்சி-எக்கனமிஸ்சி ரெவ்யூ என்று பெயரிடுவது என்று
தீர்மானிக்கப்பட்டது. இந்தப் பெயர் நினைவுபடுத்திக் காட்டுவது,
பாட்டாளிவர்க்கப்
புரட்சிகரப் பத்திரிகை போலீஸ் அடக்குமுறையால் மூடப்பட்டது பற்றி ஆசிரியர்களின்
மனவேதனை இன்னும் தீரவில்லை; அவர்கள் அமைதியடையவில்லை;
எவ்வளவு விரைவில்
முடியுமோ அவ்வளவு விரைவில் பத்திரிகையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று அவர்கள்
தயாராக இருந்தார்கள் என்பதையே அது காட்டியது.
மார்க்ஸ் 1849 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தையும் குளிர் காலத்தையும்
பத்திரிகை வெளியிடுவதற்கான தீவிரமான தயாரிப்பிலேயே கழித்தார். அவர் தன்னுடைய பல
நண்பர்களையும் அறிமுகமானவர்களையும் அணுகினார். பணத்திற்கும் வெளியிடுவதற்கு உதவி
செய்யவும், எழுதுவதற்கும் சந்தா சேர்ப்பதற்கும் உதவி செய்யவும்
பங்குகளை விற்பனை செய்யவும் அவர்களிடம் பேசினார்.
1849 ஆம் ஆண்டு இறுதியில் பத்திரிகை வெளியிடுவது பற்றியும்,
வினியோகம் பற்றியும்
கோஹ்லர் என்பவருடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அவர் ஹாம்பர்க்கிலுள்ள
அச்சகத்திற்கும், ஸ்குபர்ட் அன் கோ என்னும் புத்தக விற்பனை நிலையத்திற்கும்
உரிமையாளராக இருந்தார்.
1849 டிஸம்பர் 15 ஆம் தேதி மார்க்ஸும் ஏங்கல்ஸும் "நியூ ரெயினிஷி
ஜீட்டுங் பொலிடிஸ்சி-எக்கனாமிஸ்சி ரெவ்யூ வெளியிடப்படுவது பற்றிய அறிவிப்பை
"செய்தார்கள். அந்த அறிவிப்பு 1850 ஜனவரி முதல் காரல் மார்க்ஸை ஆசிரியராகக் கொண்டு
அப்பத்திரிகை வெளியிடப்படும் என்று கூறியது. அது "அரசியல் இயக்கம் முழுவதன்
அடிப்படையாக அமைந்துள்ள பொருளாதார உறவுகளைப் பற்றி ஒரு விவரமான விஞ்ஞானப் பூர்வமான
தொகுப்புப்பார்வை
சொல்வதற்கான ஒரு வாய்ப்பைப்" அளிப்பதாக இருக்கும்.
எனினும் அவர்களுடைய வேகமான தீவிரமான முயற்சிகள் இருப்பினும்
மார்க்ஸினுடைய நண்பர்கள் தயாரிப்புக்கான தேவையான பணத்தைச் சேர்க்க முடியவில்லை.
மார்க்ஸாலுங்கூட அது வசதித்து முடிக்கப்படவில்லை. பத்திரிகையின் முதல் இதழ் 1850 மார்ச் மாதம் 6 ஆம் தேதி ஹாம்பர்க்கில் வெளிவந்தது. அதன்
அட்டைப்பக்கத்தில் லண்டன் பெயர் குறிக்கப்பட்டிருந்தது. லண்டனில் மார்க்ஸும்
ஏங்கல்ஸும் குடியிருந்தார்கள். ஹாம்பர்க் நிறுவனப் பெயர் இருந்தது;
அங்குதான் பத்திரிகை
அச்சிடப்பட்டது. நியூயார்க்கினுடைய பெயரும் இருந்தது;
அங்கு 1848
- 49 புரட்சிகளில்
பங்குகொண்ட பலர் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் குடியேறியிருந்தார்கள்.
அவர்களிடமிருந்து பல வாசகர்களை மார்க்ஸும் ஏங்கல்ஸும் எதிர்பார்த்தார்கள்.
1850 ஆம் ஆண்டில் ஆறு இதழ்கள் வெளிவந்தன. குறுகிய இடைவெளிகளில்
மார்க்ஸ் ஏங்கல்ஸால் பத்திரிகையை வெளியிட முடியவில்லை;
கடைசியாக வந்த இரட்டை
இதழ் எண் 5-ம், 6-ம் 1850 நவம்பர் இறுதியில் வெளிவந்தது. ஜெர்மனியில் போலீஸ் தொல்லை,
பணப்பற்றாக்குறை
ஆகியவை காரணமாக பத்திரிகையைத் தொடர்ந்து வெளியிட முடியாத நிலை ஏற்பட்டது.
ரெவ்யூவிற்குத் தேவையான விஷயங்களில் பெரும்பகுதியை
மார்க்ஸும் ஏங்கல்ஸும் எழுதினார்கள். அவைகளில் மார்க்ஸ் எழுதிய பிரான்சில்
வர்க்கப் போராட்டம், லூயி நெப்போலியனும் 1848-ஆம் படுகொலைகளும், ஏங்கல்ஸ் எழுதிய "ஒரு இலட்சியப் (பேரரசு) அரசியல்
சாசனத்திற்காக ஜெர்மன் கிளர்ச்சி இயக்கம், ஜெர்மனியில் விவசாயிகள் போர்,
இங்கிலாந்தில் பத்து
மணி நேர வேலை மசோதா ஆகியவைகளும் இன்னும் இருவரும் சேர்ந்து கூட்டாக எழுதிய பல
விமர்சனங்களும் கட்டுரைகளும் சர்வதேசப் பிரச்சனை களைப் பற்றிய ஆய்வுகளும் இருந்தன.
ரெவ்யூவில் பணியாற்றுவதற்கு மார்க்ஸும் ஏங்கல்ஸும் சேர்ந்த
ஆட்களில் விக்கெல்லாம் ஒன்றும் ஜார்ஜ் இக்கேரியஸும் இருந்தனர். மார்க்ஸ் ஜார்ஜ்
இக்காரியத்திற்கு பெரிய அளவில் உதவி செய்து "லண்டனில் தையல் தொழில் அல்லது
சிறிய முதலாளித்துவத்திற்கும் பெரிய முதலாளித்துவத்திற்கும் இடையிலான
போராட்டம்" என்னும் தலைப்பில் நீண்ட பெரிய கட்டுரை எழுதச் செய்தார்.
முக்கியமான தலைமைத் தொழிலாளர்களை பத்திரிகைக்கு எழுதும்படி அவர்களுக்கு மார்க்ஸ் ஊக்கமூட்டினார்.
அவர்கள் எல்லாரும் தாங்கள் கிரகித்துக் கொண்டிருக்கின்ற பொருள் முதல் வாதக்
கண்ணோட்டத்தின் அடிப்படையில் உண்மை விவரங்களை அலசி ஆராய்வதில் மிகவும் கூர்மையுடன்
பரிசீலனை செய்து ஆழ்ந்த கருத்துடன் தேர்ச்சி பெற்றவர்களாகத் தங்களை நிரூபித்துக்
காட்டிவிட்டார்கள். எக்காரியஸினுடைய கட்டுரைக்கு மார்க்ஸும் ஏங்கல்ஸும் தலையங்கக்
குறிப்பு எழுதியபோது "பாட்டாளி வர்க்கம் போர்த்தடைகளிலும் போர்க்கள
அணிவரிசைகளிலும் வெற்றி பெறுவதற்கு முன்னால், அதனுடைய ஆட்சியின் வருகையை தொடர்ந்த பல அறிவுத்துறை
வெற்றிகளின் ஓசையுடன் அறிவிக்கிறது."¹
அப்பத்திரிகை மிகவும் குறுகியக் காலம்தான் இருந்திருந்த
போதிலும் மார்க்ஸும் ஏங்கல்ஸும் வகுத்த கடமைகளை அது நிறைவேற்றி விட்டது. அதனுடைய
ஒப்பீட்டில் சிறிய ஆறு இதழ்களும் பலவேறுபட்ட தத்துவார்த்த மற்றும் வரலாற்றுப்
பிரச்சினைகளைப் பற்றியதும் மிகச் சிறந்த கருத்துச் செல்வத்தைக் கொண்டதுமாக இணையற்ற
முறையில் இருந்தன.
பிரான்ஸில் வர்க்கப் போராட்டம்
புரட்சியின் விளைவுகளைப் பற்றி தொகுத்துக் கூறுவதற்காக
மார்க்ஸ் எழுதிய ஆக முக்கியமான நூல்களில் இது ஒன்றாகும். அவர் பிரான்ஸ் பக்கம்
திரும்புவதற்கு நல்ல காரணம் இருந்தது. மகத்தான பிரெஞ்சு பூர்ஷ்வாப் புரட்சி
காலத்திலிருந்து பிரான்ஸ் ஐரோப்பிய வரலாற்றில் மிகவும் தலைமையான ஒரு பங்கை ஆற்றிக்
கொண்டிருந்தது. அங்கு வர்க்கப் போராட்டம் ஆகத்தெளிவான கூர்மையான வடிவங்களை
எடுத்தன. தொழிலாளி வர்க்கம் வீரத்திலும் தீரத்திலும் வேகத்திலும் பிரான்ஸில் 1848-49 புரட்சியில் தலைசிறந்து விளங்கியதைப் போல எங்கும் எந்த
நாட்டிலும் செய்து காட்டப் பட்டதில்லை.
பிரான்ஸில் வர்க்கப் போராட்டம் என்னும் நூலில் மார்க்ஸ் ஒரு
வரலாற்று காலகட்டம் முழுவதையும் படித்தாராய்வதற்கு முதல் தடவையாக பொருள்
முதல்வாதத் தர்க்கவியல் வழிமுறையைப் பயன்படுத்தினார். 1848 ஆம் வருடத்திய பிரெஞ்சு பூர்ஷ்வா - ஜனநாயகப் புரட்சியின்
காரணங்கள், விளைவுகள், குண விசேஷங்கள், நிகழ்ச்சிப் போக்குகள் ஆகியவைகளைப் பற்றி ஈடு இணையற்ற
முறையில் தலைசிறந்த வகையில் தொகுத்தாய்ந்து விளக்கினார். மேலும் தெளிவான திண்ணிய
முறையில் அக்கருத்துக்களை உருவாக்கி வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் ஆக
முக்கியமான கருத்துக்களை மேலும் அதிகமான அளவில் விரிவுபடுத்தி விளக்கினார்:
அடிப்படைக்கும் மேல்கட்டுக்கோப்பிற்கும் இடையிலுள்ள பரஸ்பர தொடர்பு,
அதன் இணைப்பும்,
சமுதாய வாழ்வில்
பொருளாதார அடிப்படையின் திட்டவட்டமான தீர்மானமான பங்கு,
வர்க்கங்கள்,
கட்சிகள் ஆகியவற்றின்
போராட்டத்தின் முக்கியத்துவம், வரலாற்றில் புரட்சியின் பங்கு,
அதில் மக்களுடைய
தீர்மானமான பாத்திரம், வரலாற்று வளர்ச்சிப் போக்கில் அரசாங்கம் மற்றும் சமுதாயக்
கருத்துக்களின் பாத்திரம் ஆகியவற்றை மேலும் விரிவாக விளக்கினார். அவருடைய
வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கருத்தோட்டத்தை மார்க்ஸ் ஒரே மாதிரியான முறையில்
எல்லா இடங்களுக்கும் சர்வாம்ச முறையில் பயன்படுத்தவில்லை. அவர் அதை ஸ்தூலமான
தொகுப்பாய்விற்கு ஒரு வழிகாட்டியாகவே பயன்படுத்தினார். பொருளாதாரத்தின் மிகக்
கேந்திரமான முக்கியத்துவத்தை அங்கீகரித்த அதே சமயத்தில்,
அவர் அரசியல் மற்றும்
சித்தாந்த மேல்கட்டுக்கோப்புகளின், அதாவது அரசாங்கம், அரசியல் கட்சிகள் சித்தாந்த கருத்துப் போக்குகள் தலைசிறந்த
தனிநபர்கள் ஆகியோர்களின் பங்கை எந்தவகையிலும் அவர் புறக்கணிக்கவில்லை. உண்மையில்
கூறப்போனால் மேல்கட்டுக்கோப்பானது அதாவது அரசியலும் சித்தாந்தக் கருத்துக்களும்
வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் மிகவும் செயலாக்கத்துடன் தனது செல்வாக்குப்
பிரயோகத்தைச் செலுத்தும் ஸ்தூலமான வடிவங்களைப் பற்றித் தெளிவுபடுத்திக் கூறுவதற்கு
அது அவருக்கு உதவி செய்தது. அதே சமயத்தில் பூர்ஷ்வா எண்ண முதல்வாத வரலாற்று
ஆசிரியர்களுக்கு நேர்மாறாக மார்க்ஸ் அந்த செல்வாக்கின் வரம்புகளைப் பற்றி மிகவும்
தெளிவாகக் கண்டார். மற்றும் பலவேறுபட்ட பௌதிகப் பொருளாயத மற்றும் வர்க்க
நலவுரிமைகளின் மீது பலவேறு கட்சிகள், சித்தாந்த வாதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் எடுக்கும்
மனப்பான்மையைச் சார்ந்தும் இருக்கின்றன என்பதையும் தெளிவாகக் கண்டார். அப்பௌதீகப்
பொருளாயத மற்றும் வர்க்க நலவுரிமைகள் சமுதாய உற்பத்தியின் வளர்ச்சியின்
போக்குகளில் பிரதிபலிக்கின்றன. அந்த சமுதாய உற்பத்தி முறை இறுதியில் வரலாற்றின்
வளர்ச்சிப் போக்கை நிர்ணயிக்கின்றன.
புரட்சிகரமான கால கட்டங்கள் விதி முறைகளால் நிர்வகிக்கப்
படுகின்றன, அவை சமுதாய வாழ்க்கையில் பிரம்மாண்டமான அளவு முக்கியத்துவம்
கொண்டிருக்கின்றன. புரட்சியில் சமுதாய முன்னேற்றத்திற்கு மிக வலுவுள்ள உந்து
சக்திகளாக உள்ளன என்னும் கருத்துக்களுக்கு ஒரு முழுமையான அனைத்து அம்சங்களையும்
உள்ளிட்ட விரிவான விளக்கத்தை மார்க்ஸ் தருகிறார். அவர் அவைகளை "வரலாற்றை முன்
எடுத்துச் செல்லும் உந்து வண்டி" என்று அழைக்கிறார். காரணம் அவை வரலாற்று
வளர்ச்சிக்கு அளவு கடந்த அளவுக்கு ஒருதன் போக்கைத் தொடருகிறது;
அது மக்களையுடைய
சுதந்திரத் தடையிடல்கள் பெருகிக் கொண்டே உள்ள ஆக்கபூர்வமான வரலாற்றை மேலும் மேலும்
பெருக்கி உயர்த்துகிறது. மக்கள் இப்போது அரசியல் துறையில் மிகவும்
செல்வாக்குள்ளவர்களாக ஆகிவிடுகிறார்கள்; பழைய சமுதாய உறவுகளை உடைத்தெறிகிறார்கள்;
ஒரு புதிய,
வரலாறு பூர்வமாக ஒரு
முற்போக்கான சமுதாய வாழ்வை உண்டாக்குகிறார்கள். “இந்த நிகழ்ச்சி போன்ற இயக்கத்தில்,
குறைந்த நலிவு காலம்
கொண்டிருக்கும் பதைப் போன்ற சூழ்நிலைகளில், இந்த வேதனைமிக்க வரலாற்றுக் கிளர்ச்சியின் அமைதியின்மையான
நிலையில் புரட்சிகரமான வேக உணர்ச்சிகள், நம்பிக்கைகள், ஏமாற்றங்கள் நிறைந்த நாடகக்காட்சி போன்று வந்துசெல்கிறது.
அவைகளின் வேகமான வீழ்ச்சியும் நிறைந்த நிலையில் பிரெஞ்சு சமுதாயத்தின் பல்வேறுபட்ட
வர்க்கங்கள் முன்னால் அரை நூற்றாண்டு காலம் எண்ணிக் கொண்டிருந்த தலைகளை இப்போது
அவர்களுடைய வளர்ச்சியின் சகாப்தங்களை ஒரு சில வாரங்களுக்குள் எண்ணி முடிக்க
வேண்டியதிருக்கிறது.”¹ Marx and Engels, Selected Works, Vol. I, pp.
253-54.
புரட்சிக் காலத்தில் ஐரோப்பிய பூர்ஷ்வா வர்க்கத்தைப் பற்றி
மார்க்ஸ் ஒரு முடிவுக்கு வந்திருந்தார். ஐரோப்பிய பூர்ஷ்வா வர்க்கம் ஒரு காலத்தில்
நிலப்பிரபுத்துவ முறைகளை எதிர்த்து செயல்படக்கூடிய போராட்டத்தை நடத்தியது;
இப்போது அது அந்தக்
காலத்திய புரட்சிகர பாரம்பரியத்தை மேலும் மேலும் அதிகமாகக் கைவிட்டுக்
கொண்டிருக்கிறது என்னும் முடிவுக்கு அவர் வந்திருந்தார். பிரெஞ்சு அனுபவம்
மார்க்ஸினுடைய இந்த முடிவைத் தெளிவாக ஊர்ஜிதம் செய்கிறது. பிரெஞ்சு பூர்ஷ்வா
வர்க்கம் பிற்போக்கில் மூழ்கிவிட்டதை ஒட்டி, அதனுடைய அரசியல் சீரழிவைப்பற்றிய காட்சியை அவர் அசாதாரணமான
ஆற்றலுடன் வரலாறு பூர்வமாக ஊடுருவிக்கண்டு நமக்குக் காட்டுகிறார்;
அதனுடைய
எதிர்ப்புரட்சி குணாம்சம், பாட்டாளி வர்க்க இயக்கத்தின்பால் அதற்குள்ள மனப்பான்மையில்
மிகத் தெளிவாக வெளிக்காட்டப்பட்டிருந்தது. புரட்சி வெடித்தவுடனேயே பூர்ஷ்வா
வர்க்கம், பாட்டாளி வர்க்கத்தின் பிரயாண பூர்வமான எதிரியாக
செயல்பட்டது என்பது மாத்திரமல்ல, 1848 ஜூன் பேரெழுச்சிப் போராட்டத்தைத் தூண்டிவிட்டு பின்னர் அதை
ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது மட்டுமல்ல, நாட்டின் முன்னேற்றத்தை புரட்சிகரமான ஜனநாயகபூர்வமான
வழிகளில் செல்வதற்குத் தடையாக இடையூறாக உள்ள ஒரு பிற்போக்கு சக்தியாக மாறிவிட்டது.
இந்த நிலைமைகளில் தொழிலாளி வர்க்கம்,
புரட்சிகர இயக்கத்தின்
மற்றும் வரலாற்று முன்னேற்றத்தின் பிரதான சக்தியாக ஆகிவிட்டது;
பூர்ஷ்வா ஜனநாயகப்
புரட்சியை அதனுடைய இறுதிவரை கொண்டு செல்லும் கடமையையும் பாட்டாளி வர்க்கம்
எதிர்நோக்கி நிற்கிறது; அத்துடன் அதன் பின்னர் அதனுடைய சோஷலிஸக் கடமைகளுக்குத்
தீர்வு காண்பதற்கும் செல்ல வேண்டியதிருக்கிறது.
பிரான்ஸில் முதலாளித்துவ உறவுகள் போதுமான அளவு
வளர்ச்சியடையாத நிலைமையில் எழும் பக்குவமின்மையின் காரணமாகப் பிரெஞ்சுப் பாட்டாளி
வர்க்கம், புரட்சியின் முதல் கட்டத்தில் அதனுடைய வர்க்கக் கடமைகளைப்
பற்றி போதுமான அளவில் தெளிவான உணர்வு இல்லாமல் இருந்தது,
பூர்ஷ்வாப் பிரமைகளின்
கீழ் பாடுபட்டுக் கொண்டிருந்தது. பிப்ரவரி வெற்றி பூர்ஷ்வா வர்க்கத்தின்
நலவுரிமைகள், பாட்டாளி வர்க்க மக்கள் கூட்டத்தின் நலவுரிமைகள் ஆக
இரண்டையும் பாதுகாத்து நிற்கும் ஒரு சமுதாயக் குடியரசை ஸ்தாபித்திருக்கிறது என்று
நம்பிக் கொண்டிருந்தது; பாட்டாளி வர்க்கம் பூர்ஷ்வா எதிர்ப்புகட்கு எதிரான ஜீவமரணப்
போராட்டத்தில்தான் தன்னுடைய சொந்த வர்க்க நலவுரிமைகளைப் பற்றித் தெளிவாக உணர்ந்து
அறிந்து கொள்ள முடியும் என்பதை மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். பாரிஸில் ஏற்பட்ட 1848 ஜூன் எழுச்சிப் போராட்டம்தான் பிரெஞ்சுப் பாட்டாளி
வர்க்கத்திற்கும் பெரும்பாலும் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்திற்கும் கூட வர்க்க
உணர்வு நிலையை உருவாக்குவதற்குத் திரும்புமுனையாக இருந்தது. “நவீன சமுதாயத்தைக்
கூறாகப் பிரிக்கும் இரு வர்க்கங்களுக் கிடையிலான முதலாவது மிகப் பெரிய மகத்தான
போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.”¹ Marx and Engels, Selected Works, Vol. 1, p.
225.
போராட்ட எழுச்சி வீரர்கள் தோல்வியடைந்த போதிலும்,
அதைத் தொடர்ந்து
காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைப் படுகொலை நடந்த போதிலும் இந்த எழுச்சிப்
போராட்டத்தில் ஆக முக்கியமான ஆக்கபூர்வமான பலன் பிரெஞ்சுப் பாட்டாளி வர்க்கம்
அதனுடைய பிரமைகளிலிருந்து பெற்ற விடுதலைதான் என்று மார்க்ஸ் நம்பிக்கை
கொண்டிருந்தார்; இந்தத் தோல்வி உண்மை நிலைக்கு தொழிலாளி வர்க்கத்தின்
கண்களைத் திறந்துவிட்டது. அந்த உண்மை ஒரு பூர்ஷ்வாக் குடியரசின்
கட்டமைப்பிற்குள்ளிருந்து கொண்டே சுரண்டலிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும்
என்னும் நம்பிக்கை வெறும் கற்பனையே என்பதாகும். ஜூன் தோல்விக்குப் பிறகுதான்,
மார்க்ஸ் எழுதினார்:
“புரட்சிப் போராட்டத்தின் அந்தத் துணிவான கோஷம் தோன்றியது: பூர்ஷ்வா வர்க்கத்தைத்
தூக்கி எறிதல்! தொழிலாளர் வர்க்கத்தின் சர்வாதிகாரம்.”²
Marx and Engels, Selected Works, Vol. 1, p. 226.
பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள் புரட்சியில் பாட்டாளி
வர்க்கத்தின் நேசசக்திகள் என்னும் கேள்விக்கு ஒரு வரலாறு பூர்வமாக
வரம்புகட்டப்பட்ட தெளிவான விடையைக் கொடுத்தது. 1848-49 புரட்சியின் சற்று முன்பும் அப்புரட்சியின் காலத்திலும்
தொழிலாளி வர்க்கத்திற்கு உழைக்கும் மக்களின் இதர பாட்டாளி வர்க்கமல்லாத பகுதிகளின்
ஆதரவையும் திரட்ட வேண்டியது அவசியமானது என்னும் கருத்தை மார்க்ஸ் பல்வேறு
வடிவங்களில் வெளிப் படுத்தினார். புரட்சி ஆண்டுகளின் படிப்பினைகள் இந்தக் கருத்தை
தெளிவாகவும் முழுமையாகவும் அனைத்து அம்சங்களும் உள்ளடக் கவும் உருவாக்கப்பட்ட
கருத்தாய்வுப் பொருளாக மாற்றுவதற்கு அவருக்கு உதவி செய்தன. இந்தக் கருத்தாய்வுப்
பொருள் பாட்டாளி வர்க்கப் புரட்சியைப் பற்றியும் பாட்டாளி வர்க்கத்தினுடைய
புரட்சிகரமான போராட்டத்தின் வியூகம் உபாயங்களைப் பற்றியுமான மார்க்ஸிய தத்துவக்
கொள்கையின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. பாட்டாளி வர்க்கத்தின் பக்குவமின்மை
ஒருபக்கமிருந்தாலும் ஜூன் எழுச்சிப் போராட்டத்தின் தோல்விக்குப் பிரதான காரணமாக
இருந்தது விவசாயிகளும் நகரப்புற குட்டி பூர்ஷ்வாப் பகுதிகளும் தொழிலாளர்களுக்கு
ஆதரவு கொடுக்கத் தவறியதாகும். எனினும் இது ஒரு தற்காலிகமான இடைக்கால
மனப்பான்மையேயாகும். இது மாறக் கூடியதாகும்; அது அவர்களுடைய சொந்த நலவுரிமைகளுடன் மோதுவதாகும் என்று
அவர் உறுதியான கருத்துக் கொண்டிருந்தார். வர்க்கப் போராட்டம் முன்செல்லச் செல்ல
“விவசாயிகள், குட்டி பூர்ஷ்வாக்கள், பொதுவாக நடுத்தரப் பகுதியினர் அனைத்தும் பாட்டாளி
வர்க்கத்துடன் சேர்ந்து நடந்து அதிகாரபூர்வமான குடியரசுடன் பகிரங்கமாக மோதுவதில்
கொண்டுபோய் தள்ளப்படுகிறார்கள்; அக்குடியரசும் இவர்களைத் தங்கள் பகைவர்களாகக்
கருதுகிறார்கள்.”¹ Marx and Engels, Selected Works, Vol. 1,
p. 280.
விவசாயிகள் தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் சேருவதற்குத்
தூண்டப்படுகிறார்கள்; காரணம் அவர்களும் பொதுவான சுரண்டல் காரர்களால் -
மூலதனத்தால், அது மாறுபட்ட வழிமுறைகளில் என்றாலும்கூட,
சுரண்டப்பட்டார்கள்.
“முதலாளித்துவத்தின் வீழ்ச்சி தான் விவசாயிகளை உயர்த்த முடியும்;
ஒரு முதலாளித்துவ
எதிர்ப்பான, பாட்டாளிவர்க்க சர்க்கார்தான் விவசாயிகளின் பொருளாதார அவல
நிலையையும் சமுதாய இழிவையும் உடைத்துத் தகர்க்க முடியும்.”²
Marx and Engels, Selected Works, Vol. 1, p. 277. இவ்வாறாக பிரெஞ்சுப் புரட்சி மார்க்ஸிற்கு இந்தக்
கேந்திரமான தத்துவார்த்த அரசியல் முடிவை குறிப்பிட்டுக் கூறியது.
அதாவது பாட்டாளி வர்க்கம் தனது பக்கம் முதலாளித்துவத்தை
எதிர்த்துள்ள போராட்டத்தில் தங்களுடைய தலைமையாக ஏற்றுக் கொள்ளும் விவசாயிகள்,
குட்டி பூர்ஷ்வா
வெகுஜனப் பகுதிகளை வைத்துக் கொள்ளாமல் பூர்ஷ்வா அமைப்பு முறைகளின் மூட்டுகளை
எடுத்துவிட்டு மனக்குழப்பத்தை ஏற்படுத்த முடியாது.
நகரப்புற குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தையும் பாட்டாளி
வர்க்கத்தின் நேசசக்தியாக மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். ஆனால் அதே சமயத்தில்
அவர்களுடைய அரசியல் பிரமுகர்களையும் சித்தாந்த வாதிகளையும் மிகவும் கடுமையாக
விமர்சனம் செய்தார். 1849 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் தேதியன்று குட்டி பூர்ஷ்வா மோன் டேனியர்¹ களுடைய செயலை மேற்கோள்காட்டி,
புரட்சிகரப்
போராட்டத்தில் ஒரு சரியான தலைமை கொடுப்பதற்கு எவ்வாறு அவர்கள் லாயக்கற்றவர்களாக
இருக்கிறார்கள் என்பதை மார்க்ஸ் எடுத்துக் காட்டினார்.
1848 - 49 ஆம் ஆண்டு புரட்சி, குட்டி பூர்ஷ்வா ஜனநாயகம் மற்றும் குட்டி பூர்ஷ்வா கற்பனா
சோஷலிஸம் ஆகிய இரண்டையும் அம்பலப்படுத்திற்று. பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள்
பாட்டாளி வர்க்கமல்லாத சோஷலிஸக் கருத்துப் போக்குகளைப் பற்றி மிகவும் தெளிவான
வகையில் விமர்சனம் செய்தது; அவை தத்துவம் மற்றும் நடைமுறை ஆகிய இருவகையிலும்
லாயக்கற்றவை என்று எடுத்துக் காட்டியது. லூயி பிளாங்கினுடைய குட்டி பூர்ஷ்வா
சோஷலிஸத்தைப் பற்றி ஒரு முழு அளவிலான தொகுப்பாய்வை மார்க்ஸ் கொடுத்தார்.
புரட்சியின் போது பிளாங்கினுடைய நடத்தை பூர்ஷ்வா தற்காலிக சர்க்காரில் அவர்
பங்கெடுத்துக் கொண்டது ஆகியவை எல்லாம், வர்க்கங்களுக்கிடையில் சமரசமான ஒத்துழைப்பு மூலமும்
தொழிலாளர் கூட்டமைப்புகளுக்கு பூர்ஷ்வா சர்க்காரின் பக்க உதவி மூலமும் சோஷலிஸத்தை
அடைய முடியும் என்னும் தவறான தத்துவக் கூற்றிலிருந்து எழுந்ததேயாகும். சோஷலிஸ
ஜனநாயகத்தின் தலைவர் என்னும் அந்தஸ்து தனக்கு வேண்டும் என்று கேட்டுக்கொண்டு
பிளாங்க் உண்மையில் பூர்ஷ்வா வர்க்கத்தின் கொப்புகளைப் பிடித்துத் தொங்கிக்
கொண்டிருப்பவராகத்தான் செயல்பட்டார். அவர்கள் “கையில் உள்ள விளையாட்டுப்
பொம்மையாகவே இருந்தார்.”² தொழிலாளர்களின் பிரச்சனைகள் பற்றிய கமிஷனில் (லக்சம்பர்க்
கமிஷன்) அதன் அவைத்தலைவர் என்ற முறையில் அவர் இரண்டாவது குடியரசில் இருந்த
பூர்ஷ்வா எஜமான்களைப் பற்றியும் “ஸ்தாபன ரீதியில் திரண்டுள்ள தொழிலாளர் மூலம்”
சமுதாயப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு மிகவும் அக்கறையுடன் முனைந்து அவர்கள்
தயாரிப்பு செய்வதாகவும் பாட்டாளி வர்க்கத்தினரிடையில் மிகவும் மோசமான படுதீங்கு
விளைவிக்கக்கூடிய பிரமைகளைப் பரப்பினார். மார்க்ஸ் லக்ஸம்பர்க் கமிஷனைப் பற்றி அது
ஒரு “சோஷலிஸ்ட் பஜனைமடம்” என்றும் “கையாலாகாத அமைச்சரவை,
போலித்தனமான வெறும்
வார்த்தை அளவிலான விருப்பங்களை மட்டும் கொண்ட அமைச்சரவை”¹
Marx and Engels, Selected Works, Vol. 1, pp. 212, 213. என்றும் கூறினார்; மேலும் அதனுடைய தவறுகள்,
பிளாங்கினுடைய
கற்பனாவாத தத்துவக் கொள்கை மற்றும் சமரசவாத உபாயங்களின் வீழ்ச்சியைப் பற்றி
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தது.
வர்க்கப் போராட்டத்தைப் புறக்கணித்த பல்வேறு குருட்டுக்
கோட்பாட்டு வாத சோஷலிஸ்டு முறைகளுக்கு எதிராக மார்க்ஸ் புரட்சிகரமான சோஷலிஸத்தை
முன் வைத்தார். அதில் அவர் முன் வைத்த பிரதான கருத்து வர்க்கப் போராட்டத்தின்
நிகழ்ச்சிப் போக்கில் தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்கிறது;
பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரத்தை நிறுவுகிறது அது உண்மையான மெய்யான சமுதாய மாற்றத்தின் கருவியாக
அமைகிறது. மார்க்ஸ் கீழ்க்கண்டவாறு எழுதினார்: “இந்த சோஷலிஸம் புரட்சியின் நீடித்த
நிலையின் பிரகடனமாகும்; பொதுவான முறையில் வர்க்க வேற்றுமைகளை ஒழிப்பதற்கும்,
அவ்வேற்றுமைகளுக்கு
ஆதாரமாக உள்ள எல்லா உற்பத்தி உறவுகளையும் ஒழிப்பதற்கும்,
இந்த உற்பத்தி
உறவுகளுக்கு இசைவாக உள்ள எல்லா சமுதாய உறவுகளை ஒழிப்பதற்கும் இந்த சமுதாய
உறவுகளின் விளைவாக இருந்த எல்லாக் கருத்துக்களையும் புரட்சிகரமான முறையில்
மாற்றுவதற்கும் அவசியமான மாறுவதற்கான மையமாக உள்ள பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க
சர்வாதிகாரத்தின் பிரகடனமாகும்.”² Marx and Engels, Selected Works, Vol. 1, pp. 282.
இங்குதான் மார்க்ஸ் முதன்முதலில் அச்செழுத்துக்களில்
“பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரம்” என்னும் பதத்தைப் பயன்படுத்தினார்;
அது வெறும் கருத்து
நுட்பமான மெருகிடப்பட்ட பதப்பிரயோகம் மட்டுமல்ல;
அது பாட்டாளி
வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தைப் பற்றிய கருத்தின் மிகத்தெளிவான விளக்கமாகும்;
அது மிகவும் ஆழமாகச்
செல்லும் புரட்சிகரமான வளர்ச்சிப் போக்கின் விளைபலனாகும் என்றும் அதை மேலும்
வளர்ப்பதற்கான ஒரு கருவியும் ஒரு வடிவமுமாகும் என்றும் மார்க்ஸ் வலியுறுத்திக்
கூறினார். 1848-ல் அவர், மக்களுடைய புரட்சிகரமான சர்வாதிகாரம் ‘சூழ்ச்சித்
திறம்மிக்க எதிர்ப்புரட்சிக்காரர்களை அடக்கி ஒடுக்குவதற்குச் சக்திபடைத்த ஒரு
கேவலமான தீவிரமான அரசியல் அதிகாரம்; பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியை இறுதிவரை இட்டுச் செல்வதற்குத்
தேவையானதாகும்’ என்னும் முடிவுக்கு வந்தார். தொழிலாளி வர்க்கத்தின் ஒரு
சர்வாதிகாரம் இன்னும் இதைக் காட்டிலும் கடுமையான ஏக்களைத் தீர்க்கக் கூடிய மேன்மை
மிக்க கம்பீரமான கடமைகளை நிறைவேற்ற வேண்டியதை எதிர்நோக்கி நிற்பது,
இத்தகைய திறமையை
இன்னும் அசாதாரண அளவில் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்;
இந்த வழிகளில்தான்
மார்க்ஸின் சிந்தனை அதன் மூலம் கம்யூனிஸ்ட் புரட்சியின் தத்துவக் கொள்கையின்
சாரத்தை உருவாக்கினார்.
பிரான்ஸின் வர்க்கப் போராட்டங்கள் சமுதாயத்தின் பொருளாதார
மாற்றத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அடிப்படையான கடமைகளைப் பற்றி ஒரு
சுருளூன விஞ்ஞான பூர்வமான கருத்து வாசகத்தைக் கொண்டிருந்தது: “உற்பத்திச்
சாதனங்களை எடுத்து சமுதாய உடைமையாக்கி அவைகளை கூட்டமைப்பிலுள்ள தொழிலாளி
வர்க்கத்தின் கீழ் கொண்டுவருவதும் மற்றும் அதன் காரணமாய் கூலி உழைப்பையும் மூலதன
ஆதிக்கத்தை அவைகளின் பரஸ்பர உறவுகளையும் ஒழித்தல்.”¹
¹ Marx and Engels, Selected Works, Vol. 1, p. 234.
கம்யூனிஸ்ட் லீக் ஸ்தாபனத்தை மீண்டும் புனரமைப்பதற்கான
முயற்சிகள்; மத்தியக் கமிட்டியின் மார்ச் அறிக்கை உரை
கம்யூனிஸ்ட் லீகின் திருத்தியமைக்கப்பட்ட மத்தியக்கமிட்டி
விரைவில் லீகின் ஸ்தல கிளைகளைப் புனரமைப்பதற்குத் தொடங்கியது. 1850 ஆரம்பத்தில் மார்க்ஸ் பீட்டர் ரோஸருக்கு ஒரு கடிதம்
அனுப்பினார்; பீட்டர் ரோஸர் கோலோனில் உள்ள லீக் உறுப்பினர்;
அக்கடிதத்தில்
அங்குள்ள கிளையைத் திரும்பவும் அமைக்கும்படியும்,
ரைன் மாகாணத்தில் உள்ள
இதர நகரங்களிலும் கிளைகளை அமைப்பதற்கு தன்னால் இயன்ற முயற்சி அனைத்தும்
செய்யும்படியும் அவரை கேட்டுக் கொண்டார்.
லீகைப் புனரமைப்பதில் மிகவும் முக்கியமானது அதற்கு மத்தியக்
கமிட்டி கொடுத்த அறிவிப்பு அறிக்கை உரைகளாகும்;
அவைகள் மார்க்ஸ்,
ஏங்கெல்ஸால்
எழுதப்பட்டவை. அந்த அறிக்கைகள் லீகின் உறுப்பினர்களுக்கு எல்லாவற்றிற்கும் மேலாக
ஜெர்மனியில் இருந்த உறுப்பினர்களுக்கு செயல்பாட்டிற்கான வேலைத்திட்டத்தை வகுத்துக்
கொடுத்தன; பல்வேறு நாடுகளில் இருந்த கிளைகளில் நிலைமைகளைப் பற்றி
அவர்களுக்குத் தகவல்கள் தெரிவித்தன; பொருத்தமான கோஷங்களையும் கோரிக்கைகளையும் வகுத்துக்
கொடுத்தன.
இத்தகைய அறிக்கை உரைகளில் முதலாவது உரை - கம்யூனிஸ்ட்
லீகிற்கு மத்தியக் கமிட்டியின் அறிக்கை உரை 1850 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எழுதப்பட்டது - லீகை மீண்டும்
அமைப்பதற்கான முயற்சிகளுக்கு சித்தாந்த அடிப்படையாக இருந்தது. ஆனால் அதன்
முக்கியத்துவம் அந்தக் காலத்தில் இருந்த லீகின் நடவடிக்கைகளுக்கும் அப்பால்
வெகுதூரம் வரை சென்றிருக்கிறது; காரணம் மார்க்ஸும், எங்கெல்ஸும் 1848-49 புரட்சியின் அனுபவங்களைத் தொகுத்தும்,
வரக்கூடிய போராட்டக்
களங்களில் பாட்டாளி வர்க்கத்தின் உபாயங்களை வகுத்தும் உள்ள நூல்களில் இதுவும்
ஒன்றாகும்; அது மார்க்ஸிய தத்துவக் கொள்கையின் வேலைத்திட்டம்;
உபாய அம்சங்கள்
ஆகியவற்றின் வளர்ச்சியில் பிரதிபலித்தன. இதன் முக்கியத்துவம் பாட்டாளி
வர்க்கத்தின் விடுதலைப் போராட்டத்தின் பிந்தைய கட்டங்களில்தான் முழுமையாக
வெளியிடப்பட்டது. “அது மிகவும் சிறந்த வகையில் நமது கவனத்தைத் தூண்டுவதாகவும்
அக்கறை ஏற்படுத்தச் செய்வதாயும் விளக்கமாக அறிவுறுத்துவதாகவும் இருந்தது”¹
¹ V. I. Lenin, Collected Works, Vol. 8, p. 467. என்று லெனின் கூறினார்;
லெனின் அவைகளை
பாட்டாளி வர்க்கக் கட்சிக்கு பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியில் புரட்சிகரமான உபாய
வழியை உருவாக்கி வகுத்துக் கொள்வதற்கும் அது ஒரு சோஷலிஸப் புரட்சியாக வளருவதற்கான
தத்துவத்தை சாரப்படுத்தி செழுமையாக்குவதற்கும் ஒரு அடிப்படையாகப் பயன்படுத்தினார்.
அந்த அறிக்கையுரை பாட்டாளி வர்க்கம் சித்தாந்தத்திலும்
ஸ்தாபன வழிகளிலும் குட்டி பூர்ஷ்வா ஜனநாயகவாதிகளுடன் தெளிவான ஒரு எல்லைக்கோட்டை
வகுத்துக் கொண்டு தன்னுடைய சுயேச்சையான அரசியல் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள
வேண்டிய அவசியத்தைப் பிரகடனப்படுத்தியது. இது அப்போது மிகவும் முக்கியமான விஷயமாக
இருந்தது; காரணம் ஜெர்மனியில் வரப்போகும் புரட்சியானது,
லிபரல் பூர்ஷ்வா
வர்க்கம் எந்தவித சக்தியுமின்றி சூன்யமாகிவிட்டதால்,
குட்டி பூர்ஷ்வா
ஜனநாயகவாதிகளை அதிகாரத்தில் அமர்த்தக்கூடும். குட்டி பூர்ஷ்வா ஜனநாயக அரசியல்
சட்டவாதிகள் மற்றும் குடியரசுவாதிகளுடைய அரசியல் தத்துவக் கொள்கையும் நடத்தையும் 1848-49-ல் புரட்சி மிக ஆழமாக வளர்ச்சியடைவதை அவர்கள் தடுப்பார்கள்
என்பதும், லிபரல் பூர்ஷ்வாக்கள் 1848-ல் செய்ததைப் போலவே இவர்களும் மக்களுக்கு
துரோகமிழைப்பார்கள் என்பதும் மிகவும் தெளிவாக நிரூபிக்கப்பட்டு விட்டது;
அதனால்தான் பாட்டாளி
வர்க்கத்திற்கு அங்கே அப்பொழுதிருந்த கடமை ஏற்பட்டது. அதாவது தன்னை குட்டி
பூர்ஷ்வா ஸ்தாபனங்களில் ஈடுபடுத்துவதற்கும் பூர்ஷ்வா ஜனநாயக வாதிகளைப் மனம்போன
போக்கில் காட்டுத்தனமாக ஆதரிக்கும் இரண்டாம் தம்பலமாக மாற்றுவதற்குமான எந்த
முயற்சிகளையும் உறுதியாக எதிர்த்து நிற்கவேண்டிய கடமை அப்போதே ஏற்பட்டது. ஜெர்மன்
தொழிலாளி வர்க்கத்திற்கு முன்பு குறிப்பாக கம்யூனிஸ்ட் லீகிற்கு முன்பிருந்த
பிரதான கடமை ஜெர்மனியில் ஒரு சுயேச்சையான தொழிலாளி வர்க்க ஸ்தாபனத்தை அமைப்பது;
ரகசிய ஸ்தாபன அமைப்பு
முறையும் அதிகாரபூர்வ ஸ்தாபனமும் நிறுவுவது; அத்துடன் ஒவ்வொரு லீக் கிளை அமைப்பையும் சட்டபூர்வமான
தொழிலாளர் கூட்டமைப்புகளின் மையமாகவும் அச்சான உட்கிளையாகவும் மாற்றுவது
ஆகியவைகளாகும்.
எனினும் மார்க்ஸும் ஏங்கல்ஸும் எந்த வகையிலும்
செக்டேரியனிஸத்தை (தனித்த போக்கை) வெளிப்படுத்தவில்லை;
போராட்டத்தின் ஒரு
குறிப்பிட்ட கட்டத்தில் தொழிலாளர்களும் குட்டி பூர்ஷ்வா ஜனநாயகவாதிகளும் சேர்ந்து
கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எந்தவகையிலும் எந்த
அர்த்தத்திலும் உணர்விலும் மறுக்கவில்லை; அந்த அறிக்கை உரை, எதிர்ப்புரட்சி சக்திகளை எதிர்த்துப் போராடுவதற்கு பாட்டாளி
வர்க்கத்தின் கட்சி குட்டி பூர்ஷ்வா ஜனநாயகவாதிகளுடன் தற்காலிகமாக கூட்டு அல்லது
அணியோ சேரலாம் என்றும் ஆனால் அதே சமயத்தில் அது எப்போதும் சுயேச்சையாக செயல்பட
வேண்டும் என்றும் குட்டி பூர்ஷ்வா ஜனநாயகவாதிகளிடமிருந்து மிகவும் தெளிவாக
வேறுபட்டு ஒரு புரட்சிகரமான கொள்கையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதையும்
விளக்கிக் கூறியது; அதே வெளிச்சத்தில்தான் மார்க்ஸும் எங்கல்ஸும் தொழிலாளர்கள்,
மத்திய பிரதிநிதித்துவ
ஸ்தாபனங்களுக்கும் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் நடைபெறும் தேர்தல்களில் பங்கெடுத்துக்
கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு வலியுறுத்தினார்கள்;
குட்டி பூர்ஷ்வா
ஜனநாயகவாதிகளுக்கு எதிரிடையாக தொழிலாளர்கள் எல்லா இடங்களிலும் தங்களது சொந்த
வேட்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும்; கூடுமானவரை கம்யூனிஸ்ட் லீக் உறுப்பினர்களிடமிலிருந்து
நியமிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கூறினார்கள்;
குட்டி பூர்ஷ்வா
ஜனநாயகவாதிகள் புரட்சியை அத்தோடு நிறுத்திக் கொண்டு அதிவிரைவில் ஒரு சில
சீர்திருத்தங்களோடு தங்கள் வேலையை நிறுத்திக் கொள்ள விரும்பினார்கள் என்றும்,
பாட்டாளி வர்க்கம்தான்
புரட்சியை நிரந்தரமாக்கி அதை அதனுடைய ஆழத்திற்கு வளர்ப்பதில் அக்கறை கொண்டுள்ளது
என்றும் அதில் அதன் நலவுரிமைகளும் அடங்கி உள்ளன என்றும் மார்க்ஸும் ஏங்கல்ஸும்
விளக்கிக் கூறினார்கள்.
மார்க்ஸ் தனது முந்தைய நூல்களில் நிரந்தரமான புரட்சி
என்னும் தன்னுடைய தத்துவக் கொள்கையை வகுத்திருந்தார்;
ஆயினும் மார்ச்
அறிக்கைவுரையில்தான் அதை முழுமையாக உருவாக்கியிருந்தார்.
நிரந்தரமான புரட்சி என்னும் மார்க்ஸினுடைய தத்துவக் கொள்கை
சாராம்சத்தில், புரட்சிகரமான வளர்ச்சிப்போக்கு பல்வேறு கட்டங்களைக் கடந்து
செல்ல வேண்டியதிருந்தது என்றும் புரட்சியின் பூர்ஷ்வா ஜனநாயகக் கட்டத்திற்கும்
பாட்டாளி வர்க்கக் கட்டத்திற்கும் இடையில் கட்டாயமாக நீண்ட காலமான அமைதியான
புரட்சிகரமானதல்லாத வளர்ச்சி நிலை இருக்கும் என்பதில்லை என்றும் பொருள்பட்டது;
அதற்கு நேர்மாறாக
மார்க்ஸும் ஏங்கல்ஸும் பூர்ஷ்வாப் புரட்சியிலிருந்து பாட்டாளி வர்க்கப்
புரட்சிக்கு ஒப்புநோக்கில் வேகமான மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியப்பாடு உண்டு
என்னும் கருத்தை அனுமதித்தார்கள். மக்களுடைய புரட்சிகரமான ஆற்றல் அதிகரித்துக்
கொண்டே செல்வதால் இந்த மாற்றம் துரிதப்படுகிறது;
பூர்ஷ்வாக்களும்
குட்டி பூர்ஷ்வா நபர்களும் அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்பட்டு பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரம் ஸ்தாபிக்கப்படுவதால் இந்த மாற்றம் துரிதமாகிறது;
சம்பவங்களின் இந்தத்
திருப்பங்கள் உழைக்கும் மக்களுக்கும் வரலாற்று பூர்வமான முன்னேற்றம் முழுவதற்கும்
மிகவும் சாதகமானது என்று அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்;
“ஏறத்தாழ உடமை
வர்க்கங்கள் அனைத்தும் அவர்களுடைய ஆதிக்க நிலையிலிருந்து நிர்ப்பந்தமாக
வெளியேற்றப்படும்வரை, பாட்டாளி வர்க்கம் அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றும் வரை
புரட்சியை நிரந்தரமாக ஆக்குவது நமது நலவுரிமையும் நமது கடமையுமாகும்.....
நமக்குள்ள பிரச்சனை தனிச்சொத்துடைமையை மாற்றித் திருத்தி அமைப்பதாக இருக்க
முடியாது; ஆனால் அது முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும்;
வர்க்கப் பகையை
வழுவழுப்பாக்கி பூசி மெழுகுவதல்ல, வர்க்கங்களை அமைப்பதாகும்;
இன்றுள்ள சமுதாயத்தை
அபிவிருத்தி செய்வதல்ல ஒரு புதிய சமுதாயத்தை அமைப்பதாகும்.”¹
¹ Marx and Engels, Selected Works, Vol. I, p. 179.
அவ்வாறாக அவர்கள் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு
மாற்றுவதற்கான நிலைமைகளை உறுதிப்படுத்துவதற்காக பாட்டாளி வர்க்கத்தின்
செயல்பாட்டிற்கான வேலைத்திட்டத்தை வகுத்தார்கள்.
புரட்சி வெற்றி பெற்றால் அமைக்கப்பட வேண்டிய புதிய
அதிகாரமுள்ளவை குட்டி பூர்ஷ்வா சர்க்காருடன் சேர்ந்து அதில் பங்காளிகளாக
தொழிலாளர்கள் அவர்களுக்கான சொந்த புரட்சிகர அரசாங்கங்களை அமைக்க வேண்டும்;
அவை ஸ்தல அளவிலான
நகராட்சிப் பொது சர்க்காரின் அதிகார அமைப்புகளின் வடிவத்திலோ அல்லது தொழிலாளர்
கிளைப்புகள் மற்றும் கமிட்டிகள் வடிவத்திலோ இருக்க வேண்டும்;
அதன் மூலம் தான்
பூர்ஷ்வா ஜனநாயக சர்க்காரின் நடவடிக்கைகளை மீது ஆதிக்கம் செலுத்த முடியும்;
அத்துடன் அவர்கள்
எல்லா இடங்களிலும் தங்களை ஆயுத பாணிகளாக்கிக் கொள்ள வேண்டும்;
பாட்டாளி வர்க்கப்
பாதுகாப்பால் படைப்பகுதி ஒன்றை தங்களது சொந்த எழுத்து ஸ்தாபனங்களை அமைத்துக் கொள்ள
வேண்டும். “தொழிலாளர் சர்க்கார்களுடன்”, ராஜ்ய ஸ்தாபனங்களுக்கு இந்த புரட்சிகரமான அரசியல்
நெருக்கடியை அகலத்திலும் ஆழத்திலும் அதிகப்படுத்தி முன்செல்லடையச் செய்வதற்கு
சக்தி படைத்தது என்று மார்க்ஸும் ஏங்கல்ஸும் நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்த
“சர்க்கார்களை” பாட்டாளி வர்க்கத்தின் எதிர்கால புரட்சிகர அதிகாரத்தின்
வித்துக்கள் என்று அவர்கள் கண்டார்கள்.
அந்த அறிக்கை உரை விவசாயப் பிரச்சனைகளில் பாட்டாளி
வர்க்கத்தின் உபாயங்களைப் பற்றியும் விவரித்தது;
ஜெர்மன் கம்யூனிஸ்ட்
கட்சியின் கோரிக்கைகளில் உருவாக்கியிருந்த கருத்துரை வாசகங்களை விரிவாக விளக்கி
மார்க்ஸும் எங்கல்ஸும் கூறினது; பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி வெற்றி பெற்றவுடனே தொழிலாளர்கள்,
பறிமுதல் செய்யப்பட்ட
பெரிய நிலப்பிரபுத்துவ பண்ணைகளை எல்லாம் அரசாங்க சொத்தாக மாற்றுவதற்குப் பார்க்க
வேண்டும்; குட்டி பூர்ஷ்வா ஜனநாயகவாதிகள் திட்டமிட்டது போல் அதைப் போல
அந்நிலத்தை விவசாயிகளிடையில் பங்கு போட்டுக் கொள்ளக் கூடாது;
இந்த நிலங்கள்
சோஷலிசப் பாட்டாளி வர்க்கத்தின் கட்டமைப்புகளால் நடத்தப்படக் கூடிய பெரிய அளவிலான
பண்ணைகளாக அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்;
இது
தொழிலாளர்களுக்குள் ஏழைகளாக உள்ள தட்டுப்போட்டிப் பகுதிகளில் ஆகக் கடுமையாகக்
காணப்படும் பகுதிகளுக்குள் இடையில் உள்ள பிணைப்பைப் பலப்படுத்தும்;
இது சோஷலிஸப்
புரட்சியின் வெற்றிக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது என்று மார்க்ஸும்
ஏங்கல்ஸும் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்; விவசாயிகளின் இதர பகுதிகளுக்கு கூட்டுப் பண்ணைக்
கோட்பாடுகளின்படி அமைக்கப்படும் பெரிய அளவிலான பண்ணைகளின் அனுகூலங்களைப் பற்றிய
தெளிவான உதாரணங்களைக் காட்ட வேண்டும்.
மார்க்ஸும் ஏங்கல்ஸும் அவர்களுடைய அறிக்கையுரையில் விவசாயப்
பிரச்சனை மீதான ஒரு முழு அளவிலான வேலைத்திட்டத்தை முன்வைக்கும் கடமையை அமைத்துக்
கொள்ளவில்லை. புரட்சியின் இரண்டாவது கட்டத்தில் பாட்டாளி வர்க்க கட்டத்தில்
அவசியமாக எழும் பிரச்சனைகள், கடமைகளைப் பற்றி அதில் சில அம்சங்களை வலியுறுத்திக்
காட்டுவதற்கே அவைகளை கூறியுள்ளார்கள். இருப்பினும் அது தொழிலாளி வர்க்கத்திற்கும்
விவசாயிகளுக்குமிடையில் கூட்டணி என்னும் மகத்தான கருத்தைப் பற்றிய சில
பிரச்சனைகளைப் பிரதிபலித்தன. மார்க்ஸும் ஏங்கல்ஸும் இந்த அம்சத்தை அவர்களுடைய நிரந்தரமான
புரட்சி என்னும் தத்துவக் கொள்கைக்கு ஒரு முக்கிய அம்சமாகக் கருதினார்கள். ஜனநாயக
வாதிகள் ஒரு கெட்டியான குட்டி பூர்ஷுவா விவசாயிகள் வர்க்கத்தை ஸ்தாபிக்க
வற்புறுத்தினர். அதற்கு நேர்மாறாக அவர்கள், ஒரு நிரந்தரமான புரட்சிதான் விவசாயத்தில் பூர்ஷுவா உறவுகளின்
விளைவுகளிலிருந்து - மேலும் மேலும் ஏழ்மையடைவது,
வளர்ந்து கொண்டு
செல்லும் கடன் சுமை - ஆகியவற்றிலிருந்து ஜெர்மன் விவசாயிகளை விடுவிக்க முடியும்
என்பதைத் தெளிவுபடுத்தினர். அதனால்தான் ஜெர்மன் விவசாயிகள்,
பிரான்ஸிலுள்ள ஏராளமான
அவர்களுடைய சகோதர விவசாயிகளையும் தப்புவிக்க வேண்டுமானால்,
பாட்டாளி வர்க்கத்தின்
வெற்றியில் புறநிலையாகவே அக்கறை கொண்டிருந்தார்கள். மேலும் தொழிலாளி
வர்க்கத்திற்கு நாட்டுப்புறங்களில் ஒரு காலத்தில் பிரபுக்களுக்குச் சொந்தமாக
இருந்த நிலங்களில் பெரிய அளவிலான கூட்டுப் பண்ணைகள் அமைப்பது உள்பட பலமான தளங்கள்
இருக்க வேண்டியது அவசியம்.
இந்த அறிக்கையுரையில் கீழ்க்கண்டவாறு கருத்து ஆதிக்கம்
கொண்டிருந்தது: பாட்டாளி வர்க்க ஆட்சி ஸ்தாபிக்கப்படும் வரை கூடுமான வரையிலும்
புரட்சி தொடர்ச்சியாக முன் எடுத்துச் செல்லப்பட வேண்டும். தொழிலாளர்களின் தீவிரமான
கோஷம் "நிரந்தரமான புரட்சி" என்று இருக்க வேண்டும்.
இந்த அறிக்கை உரை ஹீன்றீச் பாயரிடம் கொடுக்கப்பட்டது. அவரை
மத்தியக் கமிட்டி 1850 மார்ச் கடைசியில் ஜெர்மனிக்கு லீக்கை புனரமைக்கும் வேலையை
துரிதப்படுத்துவதற்காக அனுப்பியது. கோலோன் மற்றும் இதர கிளைகளின் உறுப்பினர்களுடைய
பக்க உதவியுடன் அந்த ஆவணத்தைப் பிரதிகள் எடுத்து விரிவாக வினியோகிப்பதில் வெற்றி
கண்டார்.
பாயருடைய பயணப்பணி வெற்றிகரமாக முடிந்தது. கோலோனிலும் அது
தவிர மற்றும் பிராங்க்பர்ட் ஆன் - மெயின், ஹணவ், மெயின்ஸ், வீஸ்பேடன், ஹாம்பர்க், ஸ்வெரின், பெர்லின், பிரஸ்லாவ், கோட்டின்ஜென், லீக்னிட்ஸ், கிளோகோவ், லீப்ஜீக்,சிவுார்பர்க், சூலிக், பாம்பர்க், உலீம்பர்க், பைல்பெக்ட், ஸ்டட்கார்ட் இன்னும் இதர பல இடங்களிலும் லீக் கிளைகள் ஒன்று
புனரமைக்கப்பட்டன அல்லது ஸ்தாபிக்கப்பட்டன. லீகினுடைய கிளைகள் பல சட்டபூர்வமான
தொழிலாளர் ஸ்தாபனங்களில் தங்கள் செல்வாக்கைப் பலப்படுத்தினார்கள். கம்யூனிஸ்ட்
லீக் மக்களுடைய மிக நெருக்கமான தொடர்புகளை ஸ்தாபித்துக் கொள்வதில் வெற்றி
பெற்றால்தான் சட்டபூர்வமான தொழிலாளர் ஸ்தாபனங்களைத் தங்களுடைய முக்கிய ஆதரவுகளாக
மாற்றிக் கொண்டால்தான் பலமாக இருக்க முடியும்,
சரியான சக்தியாகச்
செயல்பட முடியும் என்பதை மார்க்ஸும் ஏங்கல்ஸும் வலியுறுத்தினார்கள்.
மார்க்ஸ் கம்யூனிஸ்ட் லீகை இதர நாடுகளிலும் மீண்டும்
புனரமைப்பதற்கான நடவடிக்கையை எடுத்தார். குறிப்பாக ஸ்விட்ஜர்லாந்திற்கு எர்னஸ்ட்
டி ரோல்ஃபி தூதுச் செய்தியாளராகச் சென்றிருந்தார். ஆனால் அங்கு
குடியேறியாளர்களுக்கிடையில் பலமான குட்டி பூர்ஷுவா செல்வாக்கு நிலை
கொண்டிருந்ததால் அவருடைய தூதுப்பணி அவ்வளவு தூரம் வெற்றி பெறவில்லை.
1850 ஜூன் ஆரம்பத்தில் மார்க்ஸும் ஏங்கல்ஸும் கம்யூனிஸ்ட்
லீகிற்கு மத்தியக் குழுவின் இரண்டாவது அறிக்கையுரையை எழுதினார்கள். அதில் ஜெர்மனி,
பெல்ஜியம்,
ஸ்விட்ஜர்லாந்து,
பிரான்ஸ்,
இங்கிலாந்து ஆகிய
நாடுகளில் உள்ள லீகின் ஸ்தாபனங்களின் நிலைமைகளைப் பற்றிய விவரங்களைக் கொடுத்து
அங்கிருந்த ஸ்தாபனத் தலைவர்களுக்கு ஸ்தாபனப் பிரச்சனைகள்,
உபாயங்கள் பற்றிய
ஆலோசனைகளைக் கூறியிருந்தார்கள். லீகினுடைய தூதுச் செய்தி யாளர் ஒரு அரவையாளர்,
(கிரைண்டர்) வில்ஹெல்ம்
கிளின் என்பவர் மூலம் ஜெர்மனியில் வினியோகம் செய்வதற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
லண்டனில் இருந்த சமூக-ஜனநாயக நாடு கடத்தப்பட்டோர் குழுவின்
செயல்பாடுகள் புரட்சிகர சக்திகளை ஒன்றுதிரட்டி உறுதிப்படுத்துவதில் மிக அதிகமான
முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன. காரணம் இந்தக் குழு,
எதிர்புரட்சியினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்க உதவி செய்வதுடன் அதற்கு மேலும் பல காரியங்களைச்
செய்தது. அது மேலும் அதிகமாக அரசியல் பணிகளில் ஈடுபட்டது. கம்யூனிஸ்ட் லீகை
புனரமைப்பதற்கு உதவியது. குடியேறியுள்ள அன்னிய அரசியல்வாதிகளில் மிகச்
சிறந்தவர்களையெல்லாம் இதில் ஈடுபடுத்திப் பணியாற்ற வைத்தது.
குழுவின் எல்லா அறிக்கை உரைகள்,
அறிக்கைகள்,
கொள்கை அறிக்கைகள்,
செய்தி அறிக்கைகள்
ஆகியவையெல்லாம் ஆங்கிலப் பத்திரிகைகளில் மட்டுமல்லாமல் ஜெர்மன் ஜனநாயகப்
பத்திரிகைகளிலும்
வெளியிடப்பட்டன. வெளிநாடுகளில் உள்ள புரட்சிகர சக்திகள் எல்லாம் சும்மா
வாளாவிருக்கவில்லை என்பதை யும், புதிய போராட்டங்களுக்குத் தயாரித்துக் கொண்டிருந்தார்கள்
என்பதையும் ஜெர்மனியில் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துப் பேசுவோர் அனைவருக்கும்
நினைவுபடுத்திக் கொண்டிருந்தது. மற்றொரு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால்
குழுவின் எல்லா ஆவணங்களும் மார்க்ஸின் கையொப்பத்தோடுதான் வெளியே சென்றன. மார்க்ஸ்
புரட்சிகர வட்டாரங்களில் மிகவும் நன்கு அறிமுகமானவராக இருந்தார்.
மார்க்ஸும் அவருடைய சீடர்களும் கம்யூனிஸ்ட் லீகை
புனரமைப்பதற்கு எடுத்த எல்லா முயற்சிகளும் குறிப்பாக ஜெர்மனியில் மிகவும் பலன்
தரத்தக்கதாகவே இருந்தன. 1850 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ஒரு சில பின்னடைவுகள்
ஏற்பட்டிருந்த போதிலும் லீகானது மிகவும் சிறந்த முறையில் ஸ்தாபன ரீதியாக
அமைக்கப்பட்ட சுமூகமாகச் செயல்படும் ஸ்தாபனமாக,
நம்பிக்கைக்குரிய
நல்லபடியான ஸ்தலக் கிளை அமைப்புகளுடன் செயல்பட்டுக் கொண்டிருந்தன.
கம்யூனிஸ்ட் புரட்சிக்காரர்களின் உலக தழுவிய ஸ்தாபனம்
விரைவில் மற்றொரு ஐரோப்பியப் புரட்சி நிகழும் என்று
மார்க்ஸ் எதிர்பார்த்தார். அப்போது பல்வேறு நாடுகளிலிருக்கின்ற தொழிலாளி
வர்க்கத்தின் புரட்சிகரமான பிரதிநிதிகளைக் கொண்ட அனைத்துலக சங்கம் அப்புரட்சியின்
வெற்றிக்கு உதவி செய்யும் என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். 1850 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் இடதுசாரி சார்ட்டிஸ்டுகள்,
நாடு கடத்தப்பட்டுள்ள
பிளாங்கிஸ்டு அகதிகள் ஆகியோருடைய உதவியைச் சேர்த்து ஒரு விரிவான சர்வதேசப்
பாட்டாளி வர்க்க ஸ்தாபனத்தை உருவாக்குவதற்கு முயற்சித்தார். அந்த ஸ்தாபனத்திற்கு
கம்யூனிஸ்ட் லீக் மையக்கருவாக இருக்கப்பாடுபட்டார். இது லீகினுடைய சர்வதேச
முக்கியத்துவத்தை அதிகப்படுத்துவதாக இருந்தது. அது ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சுத்
தொழிலாளி வர்க்க இயக்கத்தில் விஞ்ஞானக் கம்யூனிஸக் கருத்துக்களைப் பரப்புவதற்கு
உதவி செய்தது.
சார்ட்டிஸ்டுகளுடனும் பிளாங்கிஸ்டுகளுடனும் ஒரு நெருக்கமான
கூட்டணியை உருவாக்குவதற்கு மார்க்ஸ், அவர்கள் தொழிலாளி வர்க்க விடுதலைப் போராட்டத்தில் பங்கு
கொண்டதைப் பற்றிய ஞானத்தால் கவர்ந்திழுக்கப்பட்டார். அதே சமயத்தில் அவர்களுடைய
பலவீனத்தையும் புரிந்து கொண்டிருந்தார். ஹார்னே,
ஜோன்ஸ் மற்றும்
இதர இடதுசாரி சார்ட்டிஸ்டுகள் 1848 புரட்சிக்கு முன்பே கூட விஞ்ஞான கம்யூனிஸத்தின் பக்கம்
சாய்ந்து நிற்பதை வெளிப்படுத்திக் காட்டினார்கள். இங்கிலாந்தில் பாட்டாளி வர்க்கப்
போராட்டம் பொதுவாக வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த நேரத்திலும் கூட அவர்கள்
ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் புரட்சிகரமான போக்கின் குரலைத் தொடர்ந்து
கிளப்பிக் கொண்டிருந்தார்கள். பிரெஞ்சு சோஷலிஸ்டு குழுக்கள்,
போக்குகள் அனைத்திலும்
பிளாங்கிஸ்டுகள்தான் விஞ்ஞான கம்யூனிஸத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தார்கள்.
பிளாங்கி தன்னுடைய கருத்தோட்டங்களும் அவருடைய மிக நெருக்கமான கூட்டாளிகளுடைய
கருத்தோட்டங்களும் மொத்தத்தில் பாபோவிஸ்டின் கற்பனாவாத கம்யூனிஸத்தோடு
வரையறுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் 1830 ஆம் ஆண்டு காலத்திய ரகசியமான புரட்சிக் குழுக்களின் ரகசிய
சதித்திட்ட முறை உபாயங்களைத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து அதற்குச் சாதகமாகவே
இருந்தனர். இருப்பினும் மார்க்ஸ் பிளாங்கியை ஒரு தலைசிறந்த அரசியல் போராட்ட வீரர்
என்று கருதினார். அவருடைய நடைமுறை அனுபவம் மற்றும் புரட்சிகரமான தன்னுணர்வு
ஆகியவற்றிற்கு அளவு கடந்த மதிப்பை வைத்திருந்தார். புரட்சி நடந்த காலத்தில்
பிளாங்கி ஜனநாயக இயக்கம் மற்றும் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் இடதுசாரி பக்கம்
நின்றார். அவர் எதற்கும் விட்டுக் கொடுக்காமல் உறுதியான நிலையில் இருந்ததால்
பூர்ஷுவா வட்டாரங்கள் அனைத்தின் கடுமையான வெறுப்புக்கு ஆளானார். 1848 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் பத்து ஆண்டுகால சிறை தண்டனை
பெற்றார். மார்க்ஸும் ஏங்கல்ஸும் அவரை “புரட்சிகரமான கம்யூனிஸத்தின் மிக மேன்மையான
தனிச்சிறப்புமிக்க தியாகி” என்று குறிப்பிட்டனர். பிரான்ஸில் வர்க்கப்
போராட்டங்கள் இந்த தீரம் மிக்க புரட்சிவீரனுக்கு மிகப் பெரிய புகழ்மாலையையும் அரிய
பாராட்டையும் சூட்டியது. மார்க்ஸ் அவருடைய சீடர்களுடன் சேர்ந்து வேலை செய்வதற்கான
வழிகளுக்கு முயற்சிசெய்தார். * Marx, Engels, Werke,
Bd. 7, S. 568.
1850 ஏப்ரல் மத்தியில் லண்டனில் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டு
அதன்படி கம்யூனிஸ்ட் புரட்சிக்காரர்களின் உலகு தழுவிய ஸ்தாபனம் அமைக்கப்பட்டது.
அதில் கம்யூனிஸ்ட் லீக் சார்பில் மார்க்ஸ், ஏங்கல்ஸ், வில்லிச் ஆகியோர் கையெழுத்திட்டனர். இடதுசாரி
சார்ட்டிஸ்டுகளின் சார்பில் ஹார்னேயும், நாடு கடத்தப்பட்டவர்கள் பிளாங்கிஸ்ட் சார்பில் விடில்,
ஆதாம் ஆகியோர்கள் அந்த
உடன்படிக்கையில் கையெழுத்திட்டார்கள். அதன் வகுத்து சார்ந்து அந்த ஸ்தாபனத்தின் வேலைத்திட்டத்தின்
முதல் பிரிவில் அடங்கின. அது கூறுவதாவது: “இந்த ஸ்தாபனத்தின் நோக்கம் சலுகை பெற்ற
வர்க்கங்கள் அனைத்தையும் தூக்கியெறிவதும், ஒரு நிரந்தரமான புரட்சியைத் தாங்கிப்பிடிப்பதன் மூலம்
கம்யூனிஸத்தை ஸ்தாபிக்கும் வரை இந்த வர்க்கங்களை முழுதும் பாட்டாளிகளின்
சர்வாதிகாரத்தின் கீழ் மடக்குவதாகும். இதன் வழியில்தான் அமைப்பதுதான்
மனிதகுலத்தின் கடைசி சமூக அமைப்பாகும்.” * Marx, Engels,
Werke, Bd. 7, S. 553.
அதன் பலனாக, அந்த அமைப்பின் வேலைத்திட்டத்தில் விஞ்ஞான கம்யூனிஸத்தின்
சில அடிப்படையான கருத்துக்கள் - நிரந்தரமான புரட்சி,
பாட்டாளி வர்க்க
சர்வாதிகாரம் ஆகியவை அடங்கியிருந்தன.
எனினும் பிளாங்கிஸ்டுகளுடன் இருந்த பிணைப்பு மிகவும்
தொய்வானதாகவே இருந்தது என்பது நாளாவட்டத்தில் தெரிந்தது. விரைவில் அவர்கள்
ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை மீறத் தொடங்கினர். குட்டி பூர்ஷுவா ஜனநாயகக்
கூட்டணியுடன் பந்தங்களை உருவாக்கிக் கொள்வதற்கு முயற்சித்தனர். அந்த குட்டி
பூர்ஷுவா ஜனநாயகக் கூட்டணி உலகு தழுவிய ஸ்தாபனம் ஒப்புக் கொள்ளப்பட்ட
ஒப்பந்தத்தின் முதல் சரத்தின் கருத்துக்கு முற்றிலும் புறம்பான கம்யூனிஸக் காரிய
நோக்கத்தின் பால் மிகவும் தீவிரமான பகைமை மனப்பான்மையைக் கொண்டிருந்தது. குறிப்பாக
பின்னர் நாடு கடத்தப்பட்டிருந்த பிளாங்கிஸ்ட் தலைவர்கள் பகிரங்கமாகவே
மார்க்ஸிற்கும் அவர்களுடைய இயக்கத்திற்கும் எதிராகக் கிளம்பினார்கள். அதன் விளைவாக,
மார்க்ஸும் ஏங்கல்ஸும்
1850 இலையுதிர் காலத்தில் பிளாங்கிஸ்டுகளுடனிருந்த ஒப்பந்தத்தை
ரத்து செய்தார்கள்.
இடதுசாரி சார்ட்டிஸ்டுகளுடன் இருந்த அவர்களுடைய உறவுக்கள்
வேறு விதமாகத் திரும்பின. ஒப்பந்தம் கையெழுத்தானதற்குப் பின்னே,
மார்க்ஸும் ஏங்கல்ஸும்,
அந்த இயக்கத்தின்
முன்னணித் தலைவராக இருந்த ஓ’கோனர் என்பவரைச் சுற்றியிருந்த சீர்திருத்தவாத சமரசக்
கோஷ்டிக்கு எதிராக நடத்திய போராட்டத்திற்கு மிகப்பலத்த உதவி செய்ய பெரிய அளவில்
காரியங்கள் செய்தார்கள். அவர்கள் ஹார்னேக்கு டெமாக்ரட்டிக் ரீவியூ என்னும்
பத்திரிகை வெளியிடுவதற்கும் அதன் மூலம் புரட்சிகரமான கருத்துக்களைப்
பரப்புவதற்கும் பெரிய அளவில் உதவி செய்தார்கள். உலகு தழுவிய அமைப்பு
உருவாக்கப்பட்டதை ஒட்டி மார்க்ஸ் ஏங்கல்ஸிற்கும் இடதுசாரி சார்ட்டிஸ்டுகளுக்குமிடையிலிருந்த பிணைப்பு மேலும்
பலப்படுத்தப்பட்டது. 1850 ஆம் ஆண்டில் டெமாக்ரட்டிக் ரீவியூ மற்றும் ரெட்
ரிபப்ளிக்கன் ஆகிய இரு பத்திரிகைகள், அவைகள் இரண்டுக்கும் ஹார்னேதான் ஆசிரியராக இருந்தார்.
அவற்றில், மார்க்ஸின் ‘பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்களின்’ சில
பகுதிகளும், ஏங்கல்ஸினுடைய கட்டுரையான ‘பத்துமணி நேரப் பிரச்சனையும்’,
கம்யூனிஸ்ட் கட்சியின்
அறிக்கையின் முதலாவது முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளியிடப்பட்டன.
எனினும் 1851 வசந்த காலத்தில் ஹார்னே,
குட்டி பூர்ஷுவா
ஜனநாயகவாதிகளுடன் மிகவும் நெருக்கமாகக் கூட்டு வைத்துக் கொண்டு,
சார்ட்டிஸ்டுகளின்
புரட்சிகரமான பகுதியுடன் உற்ற உறவை முறித்துக் கொண்டார். மார்க்ஸும் ஏங்கல்ஸும்
இதை மிகவும் கடுமையாகக் கண்டனம் செய்தார்கள். எனினும் அவர்கள் தொடர்ந்து
ஜோன்ஸிற்கு முழுமையான ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஜோன்ஸ் தொடர்ந்து
புரட்சிகரமான சார்ட்டிஸ்ட் மரபுகளுக்கு விசுவாசமாக இருந்தார். அவர் மார்க்ஸினுடைய
தத்துவக் கொள்கையில் சில அம்சங்களை ஏற்றுக் கொண்டு,
சார்ட்டிஸ்ட்
இயக்கத்தை ஒரு சோஷலிஸ்டு அடிப்படையில் புதுப்பிப்பதற்காக வேலை செய்து
கொண்டிருந்தார். ஜோன்ஸினுடைய முன் முயற்சியின் மூலமாக 1851-ல் நடைபெற்ற சார்ட்டிஸ்ட் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட
வேலைத்திட்டத்தில் சார்ட்டிஸத்தின் வரலாற்றில் முதல் தடவையாக அதிகாரபூர்வமாக
சோஷலிஸ லட்சியங்கள் பிரகடனம் செய்யப்பட்டன.
1851 மற்றும் 1852 ஆண்டுகளில் ஜோன்ஸ் வெளியிட்டுக் கொண்டிருந்த மக்களுக்குள்ள
குறிப்புகள் (நோட்ஸ் டு தி பீப்பிள்) என்னும் வாரப்பத்திரிகைக்கு மார்க்ஸும்
ஏங்கல்ஸும் மிகுந்த செயலாக்கத்துடன் எழுதிக் கொண்டிருந்தார்கள். அப்பத்திரிகையில் 1851 கோடை காலத்தில் மார்க்ஸினுடைய கட்டுரை “1848 நவம்பர் 4 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட பிரெஞ்சு குடியரசின் அரசியல்
சாசனம்” வெளிவந்தது. பல பிரச்சனைக் குறிப்புகளில் அது பிரான்ஸில் வர்க்கப்
போராட்டங்கள் என்னும் நூலில் அரசியல் சாசனத்தைப் பற்றி அவருடைய குற்ற விமர்சன
பூர்வமான தொகுப்பாய்வுக்குத் துணை அனுபந்தமாக இருந்தது. கூட்டுறவு சங்கங்கள்
சம்பந்தமாக தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி வெளியிடுவதற்கு ஜோன்ஸிற்கு மார்க்ஸ்
உதவினார். அந்தக் கட்டுரைகள், பாட்டாளி வர்க்கத்தின் சமூக நோய்களை முதலாளித்துவ அமைப்பின்
கீழேயே உற்பத்தியாளர்கள் உபயோகிப்போர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் குணப்படுத்திவிட
முடியும் என்னும் கற்பனாவாதக் கருத்துக்களையெல்லாம் அம்பலப்படுத்தி
உடைத்தெறிந்தார்.
இவைகள் சமுதாய மாற்றத்தின் கருவியாக செயல்படுவது என்பது
தொழிலாளி வர்க்கத்தின் கையில் அரசியல் அதிகாரம் வரும்போது தான் சாத்தியம் என்பதைத்
தெளிவுபடுத்தி விளக்கினார். இந்தக் கட்டுரைகளை மீண்டும் நினைவுபடுத்தி 1864-ல் மார்க்ஸ் கூறினார்: அவரும் ஜோன்ஸும் “தொழிலாளர் பிரச்சனை
பற்றிப் பூர்ஷுவா தத்துவவாதிகளான ஷூல்ஜி-டெலிட்ச் போன்றவர்கள் வெளியிட்டிருந்த
கட்டுரைகளின் கருத்துக்கு எதிராக வாதப் பிரதி வாதங்களை எதிர்நோக்க
வேண்டியிருக்கும் என்று சாராம்சத்தில் எதிர்பார்த்தார்கள். அவர்களை
அம்பலப்படுத்தியதில் லூசலே முழு உரிமையைக் கொண்டாடினார்.
சார்ட்டிஸ்ட் இயக்கத்தின் சுயேச்சைத் தன்மையின் கோட்பாட்டை
நிலைநாட்டி நிற்பதற்கும் அதனுடைய பாட்டாளி வர்க்க குணத்தினின்றும் அதைப்
பிரித்தெடுத்து வேறுபடுத்தி அக்குணத்தை இழக்கச் செய்யவும்,
பூர்ஷுவா தீவிரவாத
செல்வாக்கின்கீழ் அதை உட்படுத்தவும் சீர்திருத்தவாதிகள் செய்த முயற்சிகளை
எதிர்த்து நிற்கவும் ஜோன்ஸிற்கு மார்க்ஸும் ஏங்கல்ஸும் உதவினர்.
நியூ ரெய்னிformatting ஷ்ஷி ஜீட்டுங், பொலிட்டிங்ஷி - எக்கனாமிஸ்சி ரெவ்யூவில் விமர்ஸன ஆய்வுகள்
சித்தாந்தத்தின் மீது புரட்சிகரமான சம்பவங்களின் பதிவைப்
பற்றி விளக்குவது என்பது புரட்சியின் படிப்பினைகளைக் கற்றுக் கொள்வதில் ஒரு
முக்கியமான பகுதியாகும் என்று மார்க்ஸ் நம்பிக்கை கொண்டிருந்தார். ஏங்கல்ஸுடன்
சேர்ந்து அவர் 1849 மற்றும் 1850 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பூர்ஷுவா மற்றும் குட்டி
பூர்ஷுவா எழுத்தாளர்கள் எழுதியிருந்த புத்தகங்களைப் பற்றிய பல விமர்சனங்கள்
ஆய்வுரைகள் எழுதினார்; இவைகள் ரெவ்யூவின் மூன்றாவது நான்காவது இதழ்களில்
வெளிவந்தன. பாட்டாளி வர்க்கத்தின் சித்தாந்தப் பகைவர்களால் 1848-49 ஆம் வருடத்திய புரட்சிகர சம்பவங்களைப் பற்றியும்
வரலாற்றில் புரட்சிகளின் பங்கைப் பற்றியும் கொடுக்கப்பட்ட வியாக்கியானத்தை
விமர்ஸனம் செய்தார். அவர்கள் மிகவும் சமீபகாலத்திய பூர்ஷுவா வர்க்கத்தின்
வரலாற்றுக் கருத்துருவங்களையும் பொய்யான போலி சோஷலிச தத்துவங்களையும் அலசி ஆராய்ந்து
அவைகளின் வர்க்க முக்கியத்துவத்தையும் அரசியல் முக்கியத்துவத்தையும் புரட்சிகரமான
பாட்டாளி வர்க்க இயக்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து வெளிக்கொண்டு வந்தனர்.
மிகவும் கூர்மையான கருத்தாழமிக்க பார்வையுடன் மார்க்ஸும்
ஏங்கல்ஸும் 1848 மற்றும் 1849 புரட்சிகளை ஒட்டி பூர்ஷுவா சித்தாந்தத்தின் வளர்ச்சியின்
திரும்பு முனை தொடங்கியது என்பதை உணர்ந்தனர். அத்துடன் பாட்டாளி வர்க்கத்தின் இயக்க,
போராட்ட நடவடிக்கைகளை
அதன் மோதலை நேரிட்டுக் கொண்டிருந்ததால் ஒரு காலத்தில் மிகவும் முற்போக்கான
பூர்ஷுவா வரலாற்று ஆசிரியர்களாக இருந்தவர்கள் கூட விஞ்ஞான பூர்வமான புறநிலையான
காரண காரிய ஆராய்ச்சி செய்வதற்கான சக்தியை ஆற்றலை இழந்து விட்டனர். இன்னும்
உண்மையில் அவர்கள் தங்களுடைய சொந்தப் பகுத்தறிவுக் கருத்துக்களைக்கூட நிராகரித்து
மறுத்து விட்டனர் என்பதையும் எடுத்துக் காட்டினர்.
மார்க்ஸும் ஏங்கல்ஸும் இதை பிராங்கோயிஸ் குயிஜோ என்பவருடைய
“இங்கிலாந்தின் புரட்சி வெற்றிகரமாக முடிந்தது ஏன்?”
என்னும் பிரசுரத்தைப்
பற்றிய அவர்களுடைய விமர்சன பூர்வமான தொகுப்பாய்வின் மூலம் விவரமாக எடுத்துக்
காட்டினார்கள். குயிஜோ ஒரு கன்சர்வேட்டிவ் (பழைமைவாதியான) பூர்ஷுவா அரசியல்வாதி.
‘மறு வருகையாட்சி’ முறையின் தலைசிறந்த வரலாற்று ஆசிரியர்களில் ஒருவர். தற்காலத்திய
பூர்ஷுவா சமுதாயத்தின் அமைப்பு முறையில் வர்க்கப் போராட்டத்தின் பங்கைப் பற்றி
ஏற்றுக் கொண்டவர். அவர் 1848 புரட்சியின் விளைவாக மேலும் அதிகமான அளவில் வலதுசாரி
பக்கம் போய்விட்டார். அவர் சமீபத்தில் ஆங்கிலேயப் புரட்சியைப் பற்றி எழுதிய
பிரசுரம் 1850-ல் வெளியிடப் பட்டது. அதில் அவர் எடுத்துக்
காட்டியுள்ளதாவது: “பிரெஞ்சுப் புரட்சி (1789) நிகழ்வதற்கு முற்பட்ட காலத்தில் இருந்த மிகவும்
திறமையானவர்கள் கூட, வரலாறு சம்பந்தமான துறைகளில் அவர்களுடைய சொந்த வகையான
திறமைகளைக் கொஞ்சமும் மறுக்க முடியாத அளவில் உள்ளவர்கள்கூட,
காலக்கேடான பிப்ரவரி
சம்பவங்களின் விளைவாக நிலைதடுமாறி குழம்பி திகைத்து நிற்கும் நிலைக்கு கொண்டு
வரப்பட்டார்கள். அந்த விஞ்ஞானத்தைப் பற்றிய அறிவனைத்தையும் புரிந்து கொள்ளும்
திறன் அனைத்தையும் இழந்துவிட்டார்கள். அவர்களுடைய சொந்த முந்தைய காலக் காரியங்களை
நடத்தைச் செயல்களைக் கூட கிரகித்துப் புரிந்து கொள்வதற்குக் கூட இப்போது
தவறுகிறார்கள்.”¹ * K. Marx and F. Engels, Articles On
Britain, Moscow, 1971, p. 89.
குயிஜோ முன்பு, புரட்சிகளை இயல்பான நிகழ்ச்சிகள் என்று
அங்கீகரித்திருந்தார். ஆனால் இப்போது அதன் வரலாற்று முக்கியத்துவத்தைக்
குறைத்துவிடப் பார்த்தார். அவருடைய காலத்தில் புரட்சிகரமான செயல்கள் தற்செயலான
விபத்துக்கள் என்று நிரூபிக்க முயற்சித்தார். கடந்த காலத்தில் புரட்சிகரமான
சம்பவங்களின், எவையெல்லாம் மரபு வழியான நிறுவனங்களை கொஞ்சம்கூட உலைக்காமல்
பழைய கட்டுப்பாடுகளுடன் இன்றியமையாததாக கட்டுப்படுத்தி வைத்திருந்தனவோ எவையெல்லாம் ஒரு சமரசத்தில்
முடிந்தனவோ அவற்றை மட்டுமே முழு நிறையானது சீரானது என்று குயிஜோ முன்வைத்து
வலியுறுத்திக் கூறினார்; ஆனால் இவைகளைக் கூட அவர் அவைகளின் பௌதீகப் பொருணயாதக்
காரணங்களையும் வர்க்கக் காரணங்களையும் அடையாளம் காணுவதற்கான முயற்சி எதனைச்
செய்யாமல் எண்ண முதவாத முறையிலேயே வியாக்கியானம் செய்தார்.
இங்கிலாந்தின் 17 ஆம் நூற்றாண்டு புரட்சியானது “வெற்றிகரமாக நிறைவேறியது”
என்றும் இனி அடுத்து எவ்விதமான புரட்சிகரமான எழுச்சிமிக்க போராட்டங்கள்
கிளர்ச்சிகள் இல்லாமல் நாட்டின் மேலும் அடுத்தபடியான அரசியல் சட்டபூர்வமான
வளர்ச்சிக்கு உத்திரவாதப் படுத்தியுள்ளது என்றும்,
காரணம் நாசகரமான
பிரெஞ்சுப் புரட்சிக்கு நேர்மாறாக அது மத சம்பிரதாய மானதாகவும் நிதானத் தன்மை
கொண்டதாகவும் இருந்தது என்றும் குயிஜோ கூறியது மிகவும் அர்த்தமற்ற அபத்தம் என்று
மார்க்ஸும் ஏங்கல்ஸும் எடுத்துக் காட்டினார்கள். ஆங்கில நாட்டுப் புரட்சியைக்
காட்டிலும் பிரெஞ்சுப் புரட்சி சகல விதத்திலும் மேலானது மிக உயர்ந்த தன்மையது
என்று அவர்கள் நிரூபித்தார்கள். ஆங்கிலேய புரட்சி பாதிவழinterfaceக்குத்தான் சென்றது. முழுமைக்கு மிகவும் பெரிய அளவில்
குறைபாடு கொண்டதாக இருந்தது. இங்கிலாந்தினுடைய சட்டபூர்வமான மன்னரீக முறையை
அப்படியே பாதுகாத்து நீடிக்க வைத்தது. பிரிட்டிஷ் பூர்ஷுவா வர்க்கத்திற்கும்
பெரும்பாலான பெரிய நிலவுடைமையாளர்களுக்குமிடையில் நீண்டகாலத்திற்கு நிலைபெற்று
நிற்கும்படியான கூட்டணி அமைத்துக் கொள்ளப்பட்டிருந்தது. அந்தப் பெரிய
நிலவுடைமையாளர்கள் தங்களுடைய நிலப்பண்ணைகளை முதலாளித்துவ முறையிலான பண்ணைகளாக
மாற்றிக் கொண்டனர். இதற்கு நேர்மாறாக பிரெஞ்சுப் புரட்சி பெரிய அளவிலான,
அடிப்படையில்
நிலப்பிரபுத்துவத் தன்மை கொண்ட எஸ்டேட்டுகளைத் தீவிரமான வேகமான புரட்சிகரமான
நடவடிக்கைகள் மூலம், பல சிறு பகுதிகளாகப் பிரித்து உடைத்து அழித்தொழித்தது.
குயிஜோவினுடைய பிரசுரத்தைப் பற்றிய விமர்ஸனம் கீழ்க்கண்ட
வாசகங்களுடன் முடிவடைந்தது. “பூர்ஷுவா வர்க்கத்திற்கு இடையிலுள்ள தன்னாற்றல்
மிக்கவர்கள் காலமாகி மறைந்து விட்டார்கள்.” இந்த முடிவு அவர்களுடைய மற்றொரு
விமர்ஸன நூல் மூலமாகவும் மிகவும் தெளிவாக வெளி வருகிறது. தாமஸ் கார்லைல் என்பவரும்
ஒரு பிரபலமான ஆங்கிலேய வரலாற்றாசிரியர், பிரபல பிரச்சார எழுத்தாளர். அவருடைய கருத்துக்களும் இவ்வாறு
படிப்படியாக வலதுசாரி பக்கம் பரிணாமமடைகிறது. அவருடைய புத்தகம் ‘பின்னாள்
பிரசுரங்கள்’ அதையும் மார்க்ஸும் ஏங்கல்ஸும் விமர்ஸன ஆய்வு செய்தார்கள். அவருடைய வரலாற்றைப் பற்றிய
அகநிலையான எண்ணமுதல்வாதக் கருத்துருவத்தை, அக்கருத்து பிற்போக்குத்தனமான ‘வீரர்கள்
வழிபாடு’களினடிப்படையில் ‘அறிவாளிகளும் மேன்மைக்குணமான’ தலைவர்கள்,
மற்றும் ஜனக்கூட்டம்
என்று வகை பிரித்து அடுத்தடுத்து வைப்பதனடிப்படையில் அமைத்திருப்பதை அதன் வெறும்
ஊக்கத்தைக் குத்தி இறக்கி அவர்கள் உரித்துக் காட்டுகிறார்கள். வீரர் வழிபாட்டின்
திரையின் பின்னே கார்லைல் உண்மையில் “பூர்ஷுவாக்களின் பெரும் பழி பாவங்களையெல்லாம்
நியாயப் படுத்துகிறார், இன்னும் கூறப்போனால் வெகுவாக மிகைபடவும் கூறுகிறார்.”¹
* Marx, Engels, Werke, Bd. 7, S. 264-65.
குட்டி பூர்ஷுவா ஜனநாயகவாதிகளும் கூட பல்வேறு தனி நபர்களின்
பங்கைப் பற்றி குறிப்பாக பூர்ஷுவா, குட்டி பூர்ஷுவா எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி வெறும்
ஊத்தமான வகையில் மிகைப்படுத்தியும் அதிகப்படுத்தி விரித்தும் கூறினார்கள். இது
பற்றியும் மார்க்ஸும் ஏங்கல்ஸும் இரு புத்தகங்களைப் பற்றிய அவர்களுடைய விமர்சன
ஆய்வுகளில் அம்பலப்படுத்துகிறார்கள். அந்த இரு புத்தகங்கள் பிரான்ஸின் புரட்சி
இயக்கத்தைப் பற்றி அடால்ப் செனு, லூசியன் டி லா ஹோடி ஆகியோர்கள் எழுதியதாகும். அவர்கள்
இருவரும் போலீஸ் ஏஜெண்டுகள், அவ்விமர்ஸன ஆய்வில் மார்க்ஸும் ஏங்கல்ஸும் கீழ்க்கண்டவாறு
எழுதினார்கள்: “இயக்கத்தின் கட்சியின் தலைமையில்-அவர்கள் ரகசிய சங்கங்களிலோ அல்லது
பத்திரிகைகளிலோ, புரட்சிக்கு முன்னரோ அல்லது பின்னரோ அதிகாரபூர்வமான
ஸ்தாபனங்களில் இருந்தோ பணியாற்றிய நபர்கள் கட்டாயம் அவர்களுடைய முழுமையான
வலுவடிவில் (தலை சிறந்த டச்சு ஓவியரான) ரெம்பிராண்ட்டினுடைய அழுத்தமான வண்ணங்களில்
தீட்டிக் காட்டப்பட வேண்டியது மிக மிக அவசியமாகும்,
அதைவிட
விரும்பத்தக்கது வேறு எதுவுமில்லை. இது வரையில் இந்த ஆசாமிகள் அவர்களுடைய உண்மையான
வடிவில் விவரித்துக் காட்டப்படவில்லை. அவர்கள் தங்களுடைய அதிகார பூர்வமான அந்தஸ்து
வடிவத்தில்தான் காட்டப்பட்டிருக்கிறார்கள், அவர்களை உயரமாகத் தூக்கிக் காட்டும் காலணிகளுடனும்
அவர்களுடைய தலைகளில் ஒளிவீசும் தலைப்பாகைகளுடனும்தான் சித்திரித்துக்
காட்டப்பட்டிருக்கிறார்கள். இந்த அதீதமான ரபேலின் ஓவிய பாணியிலான வர்ணனை உண்மை
கொஞ்சம் கூட இல்லாத உருவத் தீட்டுதலாகும்.”² Marx, Engels,
Werke, Bd. 7, S. 266.
இதில் வரும் இரு
பெயர்கள் ரெம்பிராண்ட், ரபேல் இருவரும் தலைசிறந்த ஓவியர்கள். ரெம்பிராண்ட் (1606
- 1669) புகழ்மிக்க டச்சு
ஓவியர், அவர்
உபயோகித்த வண்ணங்கள்
பழுத்தவை, அழுத்தமானவை; அதிகமான ஒளியும், அழுத்தமான நிழலும் கொண்டவை. ரபேல் இத்தாலிய வண்ண ஓவியர் (1483
- 1520). இவர் எதையும்
பூாகாரமான வண்ணத்தில் காட்டுபவர் - (தொ-க்.)
இந்த விமர்ஸன ஆய்வு புரட்சி இயக்கத்தில் அதி தீவிரவாதம்,
செக்டேரியனிஸம்,
தனித்துணிச்சல் போக்கு,
சதித்திட்ட உபாய
முறைகள் போன்றவற்றின்பால் பாட்டாளி வர்க்க புரட்சிக்காரர்களின் சரியான
மனப்பான்மையைப் பற்றிய ஒரு வலுவான கருத்து வெளிப்பாடாகும். அத்தகைய தவறான அசட்டுப்
போக்குகளை மார்க்ஸும் ஏங்கல்ஸும் எவ்வளவு கடுமையான கிண்டலுடன் கண்டித்தார்கள்
என்பதை இவ்விமர்ஸன உரை காட்டுகிறது. சதி வேலைக்காரர்கள்,
‘அந்த ரஸவாதப்
புரட்சிக்காரர்கள்’ உண்மையான புரட்சிப் போராட்டங்களை உருவாக்கும் எண்ணங்
கொண்டவர்கள் அல்ல; ஆனால் வெறும் வன்முறைகளால் புரட்சியை தூக்குச்சியால்
துண்டிவிட்டு குத்திக் கிளப்புவதில் நம்பிக்கை கொண்டு காரியத்தில் ஈடுபடுபவர்கள்.
“செயற்கை முறையில் நெருக்கடியை உண்டாக்கி, திடீரென்று தன் போக்கில் புரட்சியைக் கொண்டு வருவது,
புரட்சிக்கான
நிலைமைகளை தயாரிப்புகளைச் செய்யாமல் துள்ளி எழுவது.”¹
* Marx, Engels, Werke, Bd. 7, S. 273.
ஜெர்மானிய மத நூலானர் டவுமர் என்பவர் புதிய காலத்தின் மதம்
என்னும் தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். இதைப் பற்றியும் மார்க்ஸும்
ஏங்கல்ஸும் விமர்ஸன ஆய்வு செய்துள்ளனர். அந்த ஆய்வில் அந்த ஜெர்மானிய குரிசல்
நாட்டக்காரரின் புரட்சியைக் கண்டு பயந்து நடுங்கமுறிலிருந்த அந்த வேடதாரியின்
சித்தாந்தத்தின் படுதோல்வியை பிட்டுக் காட்டுகின்றனர். பொருள் முதல்வாத
வெளிச்சத்தில் அவர்கள் மதத்தை சமுதாய உணர்வு நிலையின் ஒரு வடிவம் என்றும்,
அவ்வுணர்வு நிலையே
வரலாற்றில் மதத்தின் பங்கைப் பற்றித் தீர்மானமாக நிர்ணயிக்கிறது. மக்கள் சமுதாய
வளர்ச்சியின் மெய்யான விதி முறைகளைப் பற்றிய ஞானத்தை மக்கள் பெறும்போது மதம்
மறைந்துபோவது தவிர்க்க முடியாததாகும் என்றும் அவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.
அவர்கள் மேலும் கூறினார்கள், மத மூட நம்பிக்கைகளை அகற்றி வெல்வதற்கு அவசியமான
முன்தேவைகளில் ஒன்று இயற்கை விஞ்ஞானங்கள், சமூக விஞ்ஞானங்கள் ஆகிய இரண்டிலும் பொருள் முதல்வாதக்
கண்ணோட்டம் வெற்றி கொள்ள வேண்டியதாகும்.
விஞ்ஞான விரோதமான விஞ்ஞான பூர்வமல்லாத சமுதாயக்
கருத்தோட்டங்களை இடைவிடாமல் உறுதியாக விடாப்பிடியாக இருந்து அம்பலப்படுத்துவது என்பது பாட்டாளி வர்க்கப்
போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கு சித்தாந்தப் பயிற்சியும் கல்வியும் கொண்டு
வருவதற்கு ஒரு வழி முறையாகும் என்பதை மார்க்ஸும் ஏங்கல்ஸும் நிச்சயமாக
நம்பினார்கள்.
சர்வதேச நிலையைப் பற்றிய பொது மதிப்பாய்வு புரட்சிக்கான
வருங்கால வாய்ப்பைப் பற்றி மதிப்பீடு செய்தல்
1850 ஆம் ஆண்டின் நிகழ்ச்சிப் போக்கில் மார்க்ஸும் ஏங்கல்ஸும்
சர்வதேச நிலைமையைப் பற்றி மூன்று பொது மதிப்பாய்வுக் கட்டுரைகள் எழுதினார்கள்.
அவைகள் நியூ ரெய்னிformatting ஷ்ஷி ஜீட்டுங். பொலிட்டிformatting
ஷ்ஷி எக்கனாமிformatting
சி ரெவ்யூவின்
இரண்டாவது, நான்காவது மற்றும் கடைசி இதழ்களில் வெளிவந்தன. அவைகளில்
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் அன்றைய நிகழ்கால அரசியல் மற்றும் பொருளாதார
சம்பவங்களைப் பற்றிய ஒரு மிகத்தெளிவான தொகுப்பாய்வு அடங்கியிருந்தது. அந்தத்
தொகுப்பாய்வும் முன் மதிப்பீடுகளும் பின்னர் நிகழ்ந்த வரலாற்று வளர்ச்சிப்
போக்கினால் மிகவும் சரியானவை என்று எடுத்துக் காட்டப்பட்டன. 1848-49 அனுபவங்கள் மார்க்ஸையும் ஏங்கல்ஸையும் பொருளாதாரத்துறையில்
மிகவும் ஆழ்ந்த அக்கறைமிக்க கருத்தூன்றிய கவனத்தைச் செலுத்துவதற்குத் தூண்டின.
இந்த சம்பவங்களின் அடி ஆழமான காரணங்களை மார்க்ஸ் ஆராய்ந்து அறிய முற்படும்போது
பொருளாதார நிகழ்ச்சி வளர்ச்சிப் போக்குகளைப் பற்றி ஒரு முழு நிறைவான
படிப்புவாராய்ச்சி செய்ய வேண்டிய அவசியத்தை மேலும் மேலும் அதிகமாக உணரத்
தலைப்பட்டார்.
அவர்களுடைய சர்வதேச நிலைபற்றிய பொது மதிப்பாய்வுகளில்
பொருளாதார நெருக்கடி புரட்சிகரமான நெருக்கடிக்குத் தூண்டுகோலாக இருக்கின்றது.
மற்றும் அதற்கு நேர்மாறாக பொருளாதார சுபீட்சம் புரட்சியின் வேகத்தைக் குறைக்க
முற்படுகிறது, பிற்போக்குச் சக்திகளை உறுதிப்படுத்துவதற்கான களத்தை
உண்டாக்குகிறது என்னும் கருத்தோட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்தக் கருத்து
பிற்காலத்தில் அவர்களுடைய கடிதங்களில் விரிவாக வெளிப்படுத்தப்பட்டது. அது பற்றி
லெனின் கீழ்க்கண்டவாறு கண்டறிந்துள்ளார்: "நெருக்கடி பாட்டாளி வர்க்கத்தின்
போராட்ட நடவடிக்கைக்கு (தாக்குதலுக்கு குதிரைப் படையைப் போல) வழியைச்
செப்பனிடுகிறது.”¹ * V.I. Lenin, Synopsis of the
"Correspondence of K. Marx and F. Engels, 1844-1883", Moscow 1959, p.
29 (Russ. ed.).
நீண்டகால சுபீட்சம்
சோர்வான நிலைமைகளை உண்டாக்கியுள்ளது என்று ஏங்கல்ஸ் குறிப்பிட்டதைப் பற்றி லெனின்
வலியுறுத்திக் கூறியது: "சமாதானமான ஒரு சூழலினால் தொழிலாளர்களிடம் ஏற்பட்ட
சோர்வு.”¹ * V.I. Lenin, Synopsis of the
"Correspondence of K. Marx and F. Engels, 1844-1883", Moscow 1959, p.
32 (Russ. ed.).
1850 மத்தியவரையிலும் மார்க்ஸும் ஏங்கல்ஸும் புரட்சி விரைவில்
மீண்டும் வரும் என்று நிச்சயமாக நம்பினார்கள். ஐரோப்பாவில் அதிவிரைவில் மற்றொரு
பொருளாதார நெருக்கடி வெடிக்கும்; அது ஒரு புதிய புரட்சியைப் பொசுத்திவிடும் என்று
நம்பினார்கள். இந்தக் கருத்தோட்டம் அவர்களுடைய முதலாவது,
இரண்டாவது சர்வதேச
பொது மதிப்பாய்வுகளில் பிரதிபலித்தன. எனினும் அவர்கள் பின்னர் தங்களுடைய
பொருளாதாரக் கண்ணோட்டத்தை மிகவும் ஆழமாக உருவாக்குவதற்கான படிப்புவாராய்ச்சியைப்
பெருக்கி வளர்க்கும்போது அந்தப் பழைய கணிப்புக்கு நியாயமில்லை என்று காணத்
தொடங்கினார்கள். ஐரோப்பிய சமுதாய வளர்ச்சியைப் பற்றிய உடனடியான வருங்கால
வாய்ப்புகளைப் பற்றி வேறுபட்ட முடிவுகளுக்கு வந்தார்கள்.
மார்க்ஸும் ஏங்கல்ஸும் மறுநீதிப் பார்வையில் புரட்சியைப்
பற்றிய போதுமான பக்குவமில்லாத கணிப்பைச் செய்த காரணம் அந்த சமயத்தில் அவர்களிடம்
முதலாளித்துவத்தின் முற்றிய தன்மை பற்றியும், பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான ஆற்றல் பற்றிய பக்குவ
நிலை பற்றியும் அதிகப்படியாக மதிப்பிடும் ஒரு பொதுவான போக்கு நிலவியிருந்தது.
அதனால் அவர்கள் அடுத்து வரக்கூடிய புரட்சி ஒரு சோஷலிஸப் புரட்சியாக இருக்கும்
என்று எதிர்பார்த்தார்கள்.
மார்க்ஸினுடைய பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள் நூலுக்கு
எழுதிய முன்னுரையில் ஏங்கல்ஸ் 1895-ல் கீழ்க்கண்டவாறு எழுதினார்: "நாங்களும்,
எங்களைப்போல்
சிந்தித்தவர்களையும் தவறு என்று வரலாறு திருத்தி விட்டது. ஐரோப்பா கண்டத்தில்
அன்றிருந்த பொருளாதார வளர்ச்சி நிலை நீண்டகாலத்திற்கு முதலாளித்துவ உற்பத்தி
முறையை ஒழிப்பதற்கு இன்னும் பக்குவமடையவில்லை என்பதைத் தெளிவாக்கிவிட்டது.”²
* Marx and Engels, Selected Works, Vol. I, pp. 191-92.
1850 கோடை காலத்தில் மார்க்ஸ் முந்தைய பத்தாண்டுகளின் பொருளாதார
வளர்ச்சியைப் பற்றி ஒரு படிப்புவாராய்ச்சி நடத்தியிருந்தார். அதன் மூலம் 1847 பொருளாதார நெருக்கடி உண்மையில் 1848 ஆம் ஆண்டில் நிகழ்ந்த புரட்சிகரமான சம்பவங்களுக்கான வழியை
செப்பனிட்டுக் கொடுத்திருக்கிறது; பெரிய பங்கை ஆற்றியிருந்தது;
பொருளாதார நெருக்கடி
இராசியானு பரவுவதும் மறைந்து விட்டது; புரட்சி நிகழ்ந்து கொண்டிருக்கின்றபோதே ஒரு புதிய பொருளாதார
செழிப்பான களம் திறந்து கொள்ளப்பட்டது என்பதை மார்க்ஸ் கண்டார். 1849 ஆம் 1850 ஆம் ஆண்டு இந்தச் செழிப்பு மிகவும் உச்ச மட்டத்திற்கு
உயர்ந்தது; அதன் மூலம் ஐரோப்பிய எதிர்புரட்சி சக்திகள் வலுவாகக்
காலூன்றுவதற்கு அது உதவி செய்தது. இந்த முடிவு,
மார்க்ஸும் ஏங்கல்ஸும்
1850 இலையுதிர் காலத்தில் எழுதிய மூன்றாவது சர்வதேச நிலை
பற்றியது. பொது மதிப்பாய்வை இன்னும் விளக்கமாகச் செழுமைப் படுத்தப்பட்டது;
அந்தக் கட்டுரை
இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள
ரியல் வர்க்கக் கட்டமைப்புகாக ஏராளமான புள்ளி விவரங்களைக் குவித்தது;
எனவே ஒரு தற்காலிகமான
புரட்சியிலலாத காலம், முதலாளித்துவ சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்து
விட்டுள்ளது என்று குறிப்பிட்டது. “இந்தப் பொதுவான சுபீட்சத்தின் கீழ் பூர்ஷுவா
சமுதாயத்தின் உற்பத்தி சக்திகள் பூர்ஷுவா உறவுகளின் கட்டமைப்புக்குள்ளேயே எந்த
அளவுக்கு அதிகபட்சமாக முடியுமோ அந்த அளவு செல்வம் கொழிக்க வளரச்செய்து
கொண்டிருப்பதை ஒட்டி உண்மையான ஒரு புரட்சி என்பதற்கு இடமில்லை. அத்தகைய ஒரு
புரட்சி இந்த இரு அம்சங்களும் அதாவது நவீன உற்பத்தி சக்திகளும் பூர்ஷுவா உற்பத்தி
வடிவங்களும் ஒன்றுக்கொன்று எதிராக முரண்பாட்டுச் செல்லும் காலங்களில் தான்
சாத்தியம்... அடுத்த ஒரு புரட்சி அடுத்த ஒரு நெருக்கடிக்குப் பிறகு தான் சாத்தியம்;
ஆனால் அதுவும்
பிந்தையதைப் போலவே தவிர்க்க முடியாததாகும்.”¹ * Marx, Engels,
Werke, Bd. 7, S. 440.
புரட்சிகரமான வருங்கால வாய்ப்புகளைப் பற்றிய இந்த
மறுபரிசீலனை மார்க்ஸையும் ஏங்கல்ஸையும் கம்யூனிஸ்ட் லீக்கின் உபாயங்களைப் பற்றி
மறு ஆய்வு செய்வதற்கு இட்டுச் சென்றது. கம்யூனிஸ்ட் லீகை அப்போது உடனடியான
எதிர்காலத்தில் ஒரு புரட்சி எழுச்சியை நோக்கி வழி செலுத்துவதற்கு முடியாதநிலை
இருந்தது. நீண்ட காலத்திற்குப் பிற்போக்கு ஆட்சிகள் நீடித்திருக்கும் என்பதை
உத்தேசித்து கட்சியின் நடவடிக்கைகளுக்கு புதிய வடிவங்களை பரிசீலித்துப் பார்க்க
வேண்டியதிருந்தது. அதில் முக்கியமாக இருந்த சிக்கல் லீகின் இதர உறுப்பினர்களை
முக்கிய மையமான தலைமைத் தோழர்களை இந்த நிலைக்கு ஒப்புக்கொள்ளச் செய்வது
என்பதாகும். மீண்டும் இங்கும் மார்க்ஸும் ஏங்கல்ஸும் மிகப் பெரிய கஷ்டங்களை
எதிர்நோக்கினார்கள்.
வில்லிச் - ஸ்சாப்பர் செக்டேரியன் அதிதீவிரவாதக் குழுவை
எதிர்த்துப் போராட்டம்
1850 கோடைகாலத்தில் கம்யூனிஸ்ட் லீகிற்குள் அதிதீவிர “இடதுசாரி”
குழு வளர்ச்சியடைந்தது. அதன் தலைமையில் இருந்தவர்களில் ஆகஸ்ட் வில்லிச் ஒருவர்.
அவர் தன்னுணர்விலே தான் கம்யூனிஸ்டாக இருந்தார். மற்றொருவர் காரல் ஸ்சாப்பர். இவர்
ஆரம்பகால தொழிலாளி வர்க்க இயக்கத்தின் செக்டேரியன் - சதி வேலைமுறை மரபுகளிலிருந்து
முற்றிலும் விடுபடத்தவறியவர். வில்லிச், ஸ்சாப்பர் மற்றும் அவர்களுடைய சீடர்கள் புதிய வரலாற்று
நிலைமையில் உள்ள விசேஷமான குறிப்பிட்ட அம்சங்களைப் புரிந்து கொள்ள முடியாமல்
இருந்தார்கள். தொழிலாளி வர்க்க இயக்கத்தின் உபாயக் கடமைகளை உருவாக்குவதில்
அவைகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவும் திறனற்றவர்களாக இருந்தார்கள். அவர்கள்
சாராம்சத்தில் அதி தீவிரவாத உபாயங்களையே முன்வைத்து வாதிட்டார்கள். அத்தகைய
உபாயங்கள் புரட்சிகர இயக்கம் தணிந்து கொண்டிருக்கும் நேரத்தில் மிகவும்
குறிப்பிடத்தக்க ஆபத்து நிறைந்ததாகும்.
மார்க்ஸிற்கும் வில்லிச்சிற்கும் ஏற்கெனவே 1849-50 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் மோதல் ஏற்பட்டிருந்தது.
லண்டனில் ஜெர்மன் தொழிலாளர் கல்விக் கழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை
பற்றி மார்க்ஸ் சொற்பொழிவுகள் ஆற்றிக் கொண்டிருந்தபோது அந்த மோதல்
ஏற்பட்டிருந்தது. அந்த சொற்பொழிவுகளில், கம்யூனிஸம் என்பது பட்டென்று ஒரே நாளில்
சாதிக்கக்கூடியதன்று என்றும் புரட்சிகரமான வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களின் மூலம்
செல்ல வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் மாற்றங்களுக்குப் போவதற்கு முன்பாக பூர்ஷுவா
ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை நிறைவேற்றி முடிக்க வேண்டியுள்ளது என்றும் மார்க்ஸ்
கூறினார். வில்லிச்சிற்கு சமுதாய வளர்ச்சி விதிகளைப் பற்றியும் புரட்சிகரமான
வளர்ச்சிப் போக்கை நிர்வகிக்கும் விதிமுறைகளைப் பற்றியும் எந்தவித ஞானமும் இல்லை.
கம்யூனிஸத்தை ஸ்தாபிப்பதற்கு பௌதீகப் பொருளாயத முன் தேவைகள் அவசியம் என்பதை
மறுத்தார். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரின் முன்முயற்சியின் மூலம் ஒரே
பாய்ச்சலில் கம்யூனிஸத்தை அமைத்துவிட முடியும் என்று நம்பிக் கொண்டிருந்தார்.
இந்த வேறுபாடுகள், மார்க்ஸ் விரைவில் ஒரு புரட்சிகரமான வெடிப்பு ஏற்படும்
என்று நம்பிக்கை கொண்டிருந்தவரை வெளிப் படையாக வராமல் பின்னணியில் இருந்து
கொண்டிருந்தது. ஆனால் அவரும் ஏங்கல்ஸும் 1850 கோடைக் காலத்தில் ஒரு தற்காலிகமான
புரட்சிகரமல்லாத ஒரு
காலகட்டம் ஐரோப்பாவில் தொடங்கியுள்ளது பற்றி அவர்கள் முடிவுக்கு வந்த பின்னர்
லீகினுடைய உபாயங்களில் அது சம்பந்தப்பட்ட அவசியமான பொருத்தமான சில மாற்றங்களைக்
கொண்டுவந்த பின்னர் நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. ஒரு தவிர்க்க முடியாத
புரட்சி நிகழும் என்னும் வியூகத்தைக் கொண்ட கொள்கை வழியை முன் நிறுத்திக் கொண்டே
அவர்கள் அன்றைய சூழ்நிலையில் பிரதான கடமை பாட்டாளி வர்க்க ஊழியர்களைப் பாதுகாத்து
சேர்ந்து ஒன்றாக இணைத்துக் கொண்டுவர வேண்டியதும்,
அடுத்துவரக் கூடிய
போராட்டங்களுக்கு தத்துவார்த்த களங்களைத் தயாரித்து அவர்களுக்குக் கொடுப்பதுமாகும்
என்று அவர்கள் நம்பிக்கைக் கொண்டிருந்தார்கள்.
வில்லிச், ஸ்சாப்பர் மற்றும் அவர்களுடைய சீடர்கள் முதலியோர் புதிய
உபாயங்களுக்குக் கடுமையான ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். ஜெர்மனியில் தன்னுணர்வான
வகையில் உடனடியாக ஒரு புரட்சியைக் கிளப்பும் குறிக்கோளுடன் நிர்த்தாட்சண்யமாக
எதையும் பொருட்படுத்தாமல் நடவடிக்கைகளில் லீகைத் தள்ளி விடுவதற்கு முயற்சி
செய்தார்கள். இது கேடுமிக்கதாகும், அதி தீவிரமான அசட்டுத் துணிச்சலான செயலாகும். வரக்கூடிய
புரட்சிப் போராட்டங்களுக்குப் போதுமான கவனமாக தயாரிப்புகள் செய்யாமல் அதற்குப்
பதிலாக “புரட்சியுடன் விளையாடுவதாகும்.”
1850 செப்டம்பர் மாதத்திற்குள் வில்லிச்-ஸ்சாப்பர் கோஷ்டி
லண்டனில் லீகினுடைய வேலையைச் சீர்குலைவு செய்தார்கள். லீகினுடைய விதிகளுக்கு
விரோதமாக ஜெர்மன் தொழிலாளர் கல்விக்கழகத்திலும் லீகினுடைய லண்டன் கமிட்டியின்
பேரவைக் கூட்டங்களிலும், சமூக-ஜனநாயக நாடு கடத்தப்பட்டோர் குழுவிலும் மத்தியக்
குழுவின் முடிவுகளை எதிர்க்கத் தொடங்கினார்கள். மத்தியக் குழுவில் சிறுபான்மையாக
இருந்து கொண்டு கம்யூனிஸ்டு கட்சியின் அறிக்கை மற்றும் மத்தியக் குழுவின் அறிக்கை
உரைகள் ஆகியவற்றிற்கு விரோதமாக அதை எதிர்த்து மோதிக் கொண்டு தொழிலாளர்களுக்கிடையில்
எதிரான கருத்துக்களைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள்.
1850 செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி நடைபெற்ற மத்தியக் குழுவின் சிறப்புக்
கூட்டத்தில் பிளவு ஏற்பட்டது. பெரும்பான்மையான பிரதிநிதிகள்-மார்க்ஸ்,
ஏங்கல்ஸ்,
ஸ்ஸராம்,
ப்பாண்டர்,
பாயர்,
இக்காரியஸ் - அனைவரும்
கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். சிறுபான்மையினர் பிரதிநிதிகளான வில்லிச்,
ஸ்சாப்பர்,
லெஹ்ரமான்,
பிராங்கெல்
முதலியோரால் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.
இந்தக் கூட்டத்தில் வில்லிச்-ஸ்சாப்பர் குழுவினர்
தேசியவாதக் கருத்துக்களைப் பரப்பி வருவதை அம்பலப்படுத்தினார். இந்த பிளவின் போது
வில்லிச்-ஸ்சாப்பரின் கருத்துக்களும், மார்க்ஸின் கருத்துக்களும் எந்த அளவு ஒன்றுக்கொன்று
முரண்பட்டிருந்தன என்பதைப் பற்றி, அந்த வேறுபாடுகள் தனிப்பட்ட அளவில் உள்ள குரோதங்களினால்
ஏற்பட்டவை அல்ல; அவை முற்றிலும் வர்க்கக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்
அமைந்திருந்த வேறுபாடுகள் என்பதை விளக்கி மார்க்ஸ் பின்வருமாறு பேசினார்:
“லண்டனில் உள்ள மத்தியக் குழுவினர் உண்மை நிலைமைகளுக்குப் பதில் அந்தப் புரட்சிகரமான
உணர்வுகளையே முன்னிறுத்தி நின்றார்கள். தன் விருப்பப் போக்கினால் தோன்றும் அகநிலை
அம்சங்களை புரட்சியின் பிரதான இயக்க விசையாகக் கருதினார்கள். ஆனால் நாம் அவர்களை
நோக்கி அறிவுறுத்தினோம், கூறியது: தேசியவாதக் கொள்கைக்குப் பதிலாக சர்வதேசப்
பாட்டாளி வர்க்கக் கொள்கையை முன்வைக்கிறோம்; ஜெர்மன் தொழிலாளர்களின் தேசிய உணர்வுகளைப் பற்றி
தற்புகழ்ச்சியாகப் பேசி அவர்களை ஜெர்மன் தேசியக் கருத்துக்களாகக் காண்கிறோம்;
அதேசமயத்தில்
பொருள்முதல் வாதக் கருத்தோட்டங்களுக்கு எதிராக அகநிலையான எண்ண முதல்வாதக்
கருத்துக்களைக் காண்கிறோம். புரட்சிக்குப் பிரதான விஷயமாக உண்மையான
உறவுநிலைகளுக்குப் பதிலாக மனவிருப்பத்தை ஆசையைத்தான் மூலதனமாக வைக்கப்படுகிறது
என்றது. நாம் தொழிலாளர்களிடம், நிலைமைகளை மாற்றி நீங்கள் அதிகாரத்தை அடைவதற்கான ஆற்றலைப்
பெறுவதற்கு 15, 20, அல்லது 50 ஆண்டுகாலம் உள்நாட்டுப் போர்களில் நடுவில் சென்று வாழ
வேண்டும் என்று கூறினோம். ஆனால் இதற்குப் பதிலாக அவர்கள்,
அதிகாரத்தை உடனடியாக
நாம் அடைய வேண்டும் அல்லாவிட்டால் பேசாமல் போய் படுத்துத் தூங்குங்கள் என்று
கூறினார்கள்.”¹ * Marx, Engels, Werke, Bd. 8, S. 598.
தன் விருப்பச் செயல்முறை,
அகநிலைப்பாங்கு ஆகியவை
அவர்களுடைய அதி தீவிரவாத அசட்டுத் துணிச்சல் கொள்கைக்கும் செக்டேரியன் உபாய
முறைகளுக்கும் சித்தாந்த அடிப்படையாக இருக்கின்றன என்றும் அவை வாழ்க்கை நிலைகளைப்
புறக்கணித்தன என்றும் மார்க்ஸ் நிரூபித்தார். வில்லிச்-ஸ்சாப்பர் குழுவினர்
வாதிட்டு முன்வைத்தக் கருத்தை அதாவது ஜெர்மன் தொழிலாளி வர்க்கம் தன்னுணர்வில்
பட்டென்று அதிகாரத்தைக் கையில் எடுக்க லில் நம்பிக்கை கொண்டு திட்டமிட்ட வேண்டும்
என்னும் கருத்தை மார்க்ஸ் பெரும்பான்மை உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் உறுதியாக
நின்று நிராகரித்தார்.
மார்க்ஸ் மிகவும் சரியாகவே ஊகித்தார்,
மத்தியக் குழுவின்
பெரும்பான்மைக்கு சிறுபான்மை பிரதிநிதிகளை லீகிலிருந்து நீக்குவதற்கு சட்ட
விதிகளின்படி அதிகாரம் இருந்தது. காரணம் அந்த சிறுபான்மை யினரின் கருத்துக்கள்
லீகின் கோட்பாடுகளுக்கு எதிராக மோதின. ஆனால் அதைச் செய்வதற்கு மார்க்ஸிற்கு
விருப்பம் இல்லை. காரணம் சம்பவங்களின் அனுபவம் அவர்களை தங்களுடைய தவறுகளை
உணரவைக்கும் என்று மார்க்ஸ் நம்பினார். அதே சமயத்தில் அந்த குழுவினருடன்
சித்தாந்தத் துறையில் வேறுபட்டுப் பிரிந்து நிற்க வேண்டிய அவசியமும் இருக்கிறது
என்று அவர் நம்பினார். அதனால் அதற்காக ஒரு எல்லைக்கோடு வகுத்துக் கொள்வதற்கான ஒரு
சூத்திரத்தை அவர் பிரரேபித்தார். அதன் மூலம் லீகில் பிளவு ஏற்படுவதைத் தடுக்கவும்,
செக்டேரியன் நபர்கள்
லீகை கைப்பற்றிக்கொள்வதைத் தடுக்கவும் முடியும் என்றும் அவர் நம்பினார். அவருடைய
பிரேரணை, மத்தியக்
குழு தன்னுடைய அதிகாரங்களை கோலோன் மாவட்டக் குழுவுக்கு மாற்றிவிட வேண்டும்,
லண்டனில் இரு தனியான
மாவட்டக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும், அதில் ஒன்று மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோர்களை ஆதரிக்கக் கூடியவர்களைக் கொண்டிருக்க
வேண்டும். மற்றொன்று வில்லிச் மற்றும் ஸ்சாப்பர் ஆகியோரை ஆதரிப்ப வர்களைக்
கொண்டதாக இருக்க வேண்டும். இரு மாவட்டங்களிலும் ஒரே லீகின் உறுப்பினர்களாக இருக்க
வேண்டும். இரு பகுதிகளும் ஒரே மத்தியக் குழுவின் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும்.
மத்தியக் குழுவுடன் ஒவ்வொன்றும் தனித்தனியாக சுயேச்சையாக தொடர்பு வைத்துக் கொள்ள
வேண்டும். அதனுடைய முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நிற்க வேண்டும்,
லீகை ஒற்றுமைப்படுத்தி
வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தப் பிரேரணையைக் கூறுவதாக மார்க்ஸ்
வலியுறுத்தினார்.
கோஷ்டிக் கூட்டத்திற்காகப் பேசிய ஸ்சாப்பர் மார்க்ஸினுடைய
திட்டத்தை நிராகரித்தார். விவாதம் முடிந்த பொழுது வில்லிச்சும் லெஹ்ரமானும்
வெளிநடப்பு செய்தார்கள், ஸ்சாப்பர் கூட்டத்திலேயே இருந்தார்,
ஆனால் அவர்
ஓட்டளிக்காமல் நடுநிலை வகித்தார். இதர எல்லோரும் மார்க்ஸினுடைய பிரேரணைகளுக்கு
ஓட்டளித்தார்கள்.
வில்லிச், ஸ்சாப்பர் மற்றும் கோஷ்டி கூட்டத்தின் நபர்களும் மத்தியக்
குழுவின் முடிவுகளுக்குக் கட்டுப்பட மறுத்து விட்டார்கள். லீகினுடைய லண்டன்
மாவட்டத்தின் பொதுமகாசபைக் கூட்டம் ஒன்றைத் தனியாகக் கூட்டினார்கள். தங்களுடைய
சொந்தமான தனி மத்தியக் குழு அமைத்துக் கொள்ளவும் லீகிலிருந்து மார்க்ஸையும்
ஏங்கல்ஸையும் அவர்களுடைய ஆதரவாளர்களையும் நீக்குவதற்கும் தீர்மானம் எடுக்க முடிவு
செய்தார்கள். அவர்கள் இதை சாதிப்பதற்காக அவதூறுகளை கிளப்பி விட்டார்கள்,
வசைமாரியை
வீசினார்கள். பல லீக் உறுப்பினர்களுக்கிடையில் தனித்தனி வேலைப் பிரிவினைப்பாட்டை
உருவாக்கினார்கள். மேலும் அவர்களைப் போன்றே லண்டன் ஜெர்மன் தொழிலாளர் கல்விக்
கழகத்திலும் குழப்பங்களை ஏற்படுத்த முயன்றார்கள். லீகிலிருந்து வெளியேறிய பிளவாளர்
களுக்கிடையில் அந்த அமைப்புகள் தனிப்பட்ட முறையில் ஒரு சிறு பிரிவை ஏற்படுத்தின.
ஆனால் மார்க்ஸும் ஏங்கல்ஸும் லீகின் உறுதியான தொழிலாளர்கள் இடையே தங்கள் கொள்கையை
விளக்கினார்கள். இதனால் பெரும்பாலான உறுப்பினர்கள் உண்மை நிலையைப் புரிந்து
கொண்டனர். தொழிலாளர் இயக்கத்தில் நிலவிய பல்வேறு குழப்பங்களை மார்க்ஸ் தீவிரமாக
அம்பலப்படுத்தினார். அவர் தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் விழிப்புணர்வை
உயர்த்துவதே முதன்மையான கடமை என்பதை நிலைநாட்டினார்.
இதற்கிடையில் லண்டனில் இருந்த சமூக-ஜனநாயக நாடு
கடத்தப்பட்டோர் குழுவிலும் பிளவாளர் கோஷ்டியினர் பிரிவினையை ஏற்படுத்த முயற்சி
செய்தனர். அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான வில்லிச்,
குழுவின்
சொத்துக்களைக் கையாடல் செய்யத் தொடங்கினார். இதைக் கண்டித்த மார்க்ஸ்,
ஏங்கல்ஸ் மற்றும்
அவர்களது ஆதரவாளர்கள் அந்தக் குழுவிலிருந்து விலகினார்கள். 1850 செப்டம்பர் 15-ல் கோலோனுக்கு மாற்றப்பட்ட மத்தியக் குழுவின் அதிகாரப்பூர்வ
நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றன. மார்க்ஸினுடைய ஆலோசனையின் பேரில் புதிய
மாவட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டன. 1850 செப்டம்பர் 25 ஆம் தேதி லீகின் புதிய விதிகள் நடைமுறைக்கு வந்தன. அதன்படி
லண்டனில் செயல்பட்ட மார்க்ஸ் ஆதரவாளர்களைக் கொண்ட மாவட்டக் குழு,
பிளவாளர்களை
அமைப்பிலிருந்து முறைப்படி நீக்கியது.
உருவாக்குவதற்கும் எக்காரியத்திற்கும்,
ஸ்சாப்பருக்கும்
அதிகாரமளித்தது.
வில்லிச்-ஸ்சாப்பர் குழுவானது கோலோன் மத்தியக் குழுவின்
முடிவுகளுக்குக் கட்டுப்பட மறுத்துவிட்டது. அதைத் தொடர்ந்து மார்க்ஸ்,
ஏங்கல்ஸின்
ஆதரவாளர்களிடையிலிருந்து எக்காரியமினாமல் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த லண்டன்
மாவட்டக் குழு 1850 நவம்பர் 11 ஆம் தேதி கம்யூனிஸ்ட் லீகிலிருந்து சொண்டர் பண்டினுடைய
(சிறப்புக் கூட்டாளிகள்) எல்லா உறுப்பினர்களையும் நீக்கிவிட கோலோன் மத்தியக்
குழுவுக்கு ஒரு பிரேரணையை சமர்ப்பித்தது. கோலோன் மத்தியக் குழு அதை ஒப்புக் கொண்டு
அவர்களை லீகிலிருந்து நீக்கித் தீர்மானம் நிறைவேற்றியது.
கம்யூனிஸ்ட் லீக் பிளவுபட்டதைத் தொடர்ந்து வில்லிச் -
ஸ்சாப்பர் குழு ஒரு குறுகிய தனியான சிறு குழுவாக வளர்ச்சி பெற்றது. பாட்டாளி
வர்க்க இயக்கத்திலிருந்து தனிமைப்பட்டது. குட்டி பூர்ஷுவா நாடு
கடத்தப்பட்டுள்ளவர்களின் வட்டாரங்கள் மூலம் நாளுக்கு நாள் அதிகமாக அதிதீவிரவாத
அசட்டுத் துணிச்சல் திட்டங்களின் பால் இழுக்கப்பட்டார்கள். சொண்டர் பண்ட் (இந்தக்
குழு 1853
ஆரம்பம் வரை தொடர்ந்து இருந்தது) குட்டி பூர்ஷுவா குடியேறியுள்ள வெளிநாட்டவர்களின்
வெறும் தொங்குசதையாக மாறிவிட்டது.
ஏங்கல்ஸ் மான்செஸ்டருக்குச் செல்கிறார் இரு
நண்பர்களுக்குமிடையில் கடிதப் போக்குவரத்து
1850 நவம்பரில் ஏங்கல்ஸ் எர்மன் அண்ட் ஏங்கல்ஸ் கம்பெனியின்
அலுவலகத்தில் வேலை தொடங்குவதற்காக மான்செஸ்டருக்குச் செல்ல வேண்டியதிருந்தது. அவர்
நிர்ப்பந்தமாக வேறுவழியின்றி அந்த “மோசமான தொழிலில்” ஈடுபட வேண்டிய திருந்தது.
அதற்கான முக்கிய காரணம் மார்க்ஸினுடைய குடும்பத்திற்கு தொடர்ந்து பணம் உதவி செய்ய
வேண்டும் என்றும் மார்க்ஸ் தன்னுடைய தத்துவ ஆராய்ச்சி வேலையைத் தொடர்ந்து
நடத்துவதற்கு உதவி செய்யவும் மிகவும் விருப்பம் கொண்டிருந்ததுதான்.
இரு வேறு நகரங்களில் குடியிருந்த இரு பெரிய மனிதர்களும்
தங்களுக்குள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமான ஆன்மீகத் தொடர்பை வைத்துக்
கொண்டிருந்தார்கள். அவ்வப்போது மார்க்ஸ் மான்செஸ்டருக்குப் போவார். ஏங்கல்ஸைப்
பார்த்து விட்டு சில எழுத்துரைகளைக் கூட இருந்து செய்து கொண்டு வருவார் அல்லது
ஓய்வு எடுத்துக் கொள்வார். ஏங்கல்ஸும் வாய்ப்புக் கிடைக்கும்.
இந்தப்பகுதியை
காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு (பக்கம் 447- 486)
;இருந்து எடுக்கப்பட்டது..
தொடர்புடைய கட்டுரைகள்:
***
எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.