உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள் தோழர்களே.
"பாட்டாளி வர்க்கப் பெண்விடுதலை இயக்கமானது முதலாளித்துவப் பெண்கள் இயக்கத்தைப் போன்று அவர்களுடைய சொந்த வர்க்கத்தை சார்ந்த ஆண்களுக்கு எதிராகப் போராடும் இயக்கமாக இருக்க முடியாது. அதனுடைய போராட்டத்தின் இறுதி லட்சியம் அனைத்து ஆண்களுக்கு எதிரான சுதந்திரமான போட்டி அல்ல. மாறாக உழைக்கும் வர்க்க பெண்கள் தமது சொந்த வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்களுடன் தோளோடு தோள் சேர்ந்து இணைந்து நின்று முதலாளித்துவப் பிற்போக்கு சமுதாயத்தை எதிர்த்துப் போராட வேண்டும்" --- கிளாரா ஜெட்கின்
மார்க்சியம் மற்றும் பெண்ணுரிமை: ஒரு சமூகப் புரட்சிப் பாதை
பெண் ஒடுக்குமுறை என்பது தனியார் சொத்துரிமை மற்றும் வர்க்கப் பிரிவினை உருவான காலத்தில் இருந்தே தொடங்கியுள்ளது என்பதை இந்தத் தொகுப்பு விளக்குகிறது. முதலாளித்துவ அமைப்பில் வழங்கப்படும் சில சீர்திருத்தங்களோ அல்லது சலுகைகளோ பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்காது என்று இக்கட்டுரை வாதிடுகிறது. இதற்குத் தீர்வாக, மார்க்சிய மற்றும் சோசலிச சித்தாந்தங்களின் அடிப்படையில் உற்பத்தி சாதனங்கள் பொதுமையாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக, சோவியத் யூனியனில் பெண்கள் வீட்டு வேலைகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, சமூக உற்பத்தியிலும் அரசியலிலும் ஆண்களுக்கு நிகராகப் பங்கேற்றது ஒரு முன்மாதிரியாகக் காட்டப்படுகிறது. பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் மற்றும் சமூக சமத்துவம் நிலைநாட்டப்படும்போது மட்டுமே ஒரு நாடு முழுமையான வளர்ச்சியை எட்ட முடியும் என்பதை லெனின் மற்றும் எங்கெல்ஸின் கருத்துக்கள் மூலம் இது உறுதிப்படுத்துகிறது. இறுதியாக, சர்வதேச பெண்கள் தினம் என்பது வெறும் கொண்டாட்டமல்ல, அது ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஒரு தொடர் போராட்டக் களம் என்பதை இச்சமூகம் உணர வேண்டும் என்று இது கற்பிக்கிறது.
இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தொழர்களே
பெண் அடிமைத்தனத்திற்கும் தனிச்சொத்துரிமைக்கும் உள்ள தொடர்பு என்ன?
சோவியத் ஆட்சி பெண்களின் வீட்டுவேலை சுமையைக் குறைக்க எடுத்த நடவடிக்கைகள் யாவை?
மார்க்சிய பார்வையில் உண்மையான பெண் விடுதலை என்பது எது?
இன்றைய தேர்தல் அரசியலில்
பெண்களுக்கு சில சலுகைகளின் ஏலம் மூலம் தங்களின் தேவைக்கான வாக்கை (ஓட்டை) பெற்றுக் கொள்ள சமுகத்தின் சரிபாதியான பெண்களை ஏய்கின்றனர் என்பேன்.
பெண்களின் வாக்குவங்கியைக்
கருதி பல நிதி உதவியை பற்றி எல்லா ஓட்டரசியல் கட்சிகளும் உதவிகளை அள்ளி வீசுகின்றனர்.
தொடக்கத்தில் ஆயிரம் ரூபாய் என்று தொடங்கி, பின்பு இரண்டாயிரம் ரூபாய், தற்போது 2500 ரூபாய் என இந்த நிதி உதவிகள் அதிகரித்து வருகின்றன. அடுத்து வரும் நாட்களில் இதை விட அதிகத் தொகைகளை காணலாம்!
உண்மையில் இந்த தொகையானது பெண் உயர்விற்கு என்ன வழிவகை செய்துள்ளது ஏதாவது அறிக்கை இவர்கள் சமர்பிக்க முடியுமா?
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் சரிபாதி (50%) இடங்களுக்கான சட்டம் இயற்றபட்டது அவர்களுக்கான பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் கொண்டு வந்துள்ளதா?
பெண் கலெக்டர்கள்- பெண் எஸ்.பிகள் மற்றும் இது போன்ற அதிகாரிகள் நிலை என்னே? (அதிகாரம் படைத்தோர் அவர்களை செயல்பட விடுகின்றனரா?)
இவை அனைத்தும் பெண்களின் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவினாலும், இவை பெண்களை வெறும் 'பயனாளி'களாக (Beneficiaries) மட்டுமே வைத்துக் கொண்டு, அவர்களை இந்த அடிமை சங்கிலியிலிருந்து விடிவிக்காமல் அதனுள்ளே கட்டுண்டிருக்க செய்யும் வேலைதான் இவையென்றால் மிகையல்ல!!!