கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மாற்றி எழுத துணிந்துள்ள ஒரு மார்க்சிய விரோதிக்கு பதிலளிக்கவே இந்தப்பதிவு.
முதலில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் ஆசான்கள் கூறியுள்ளதை பார்ப்போம். எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னுரையில் எழுதியுள்ள வாசகமே...
"அறிக்கையானது ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை" இவை மூன்று முன்னுரையில் உள்ளன...
ஆனால் மார்க்சியத்தை மறுத்து ஆளும் வர்க்கதின் கைத்தடியாக மாறிப்போன காவுத்ஸ்கியின் வாரிசுகள் கம்யூனிஸ்ட கட்சியில் சொன்னது நடக்கவில்லை அதனால் கம்யூனிஸ்ட் கட்சியை மாற்ற வேண்டும் எனும் ஒருவனை பற்றியே விவாதம்...
தோழர்களே..
லெனின் "சந்தர்ப்பவாதமும் இரண்டாம் அகிலத்தின் தகர்வும்" என்ற கட்டுரையில் இவனின் முன்னோடிகளை வரிசை படுத்தியுள்ளார் இவனும் அவர்களின் வாரிசுதான் என்பதோடு இவனை போன்றோர் அன்றே விமர்சன சுதந்திரத்தின் பெயரில் மார்க்சியத்தை திருத்தம் செய்ய முனைந்த பெர்ன்ஸ்டைனை லெனின் அம்பலப்படுத்தி இருப்பார் என்ன செய்ய வேண்டும் என்ற நூலில் ஆகையால் இவன் அவர்களின் வாரிசுதானே அன்றி வேறல்ல தொடர் விவாதத்தில் இந்த மார்க்சிய விரோதியின் செயலை வன்மையாக கண்டிப்பதோடு இவனை போன்றோரை அம்பலப்படுத்தி அப்புறப்படுத்த வேண்டியுள்ளது
முதலில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் ஆசான்கள் கூறியுள்ளதை பார்ப்போம், பின்னர் அந்த மார்க்சியத்தை மறுக்கும் மார்க்சிய விரோதியின் கருத்தை பார்ப்போம் தோழர்களே...
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை: திருத்தல்வாத எதிர்ப்பு அரண்
இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் அடிப்படை மாறாத தன்மையைப் பாதுகாப்பதே இந்த உரையின் முதன்மை நோக்கமாகும். கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ் ஆகியோரின் கூற்றுப்படி, இந்த அறிக்கை திருத்தப்பட முடியாத ஒரு வரலாற்று ஆவணம் என்பதை ஆசிரியர் வலியுறுத்துகிறார். சமகாலச் சூழலுக்கு ஏற்ப அறிக்கையை மாற்றியமைக்க வேண்டும் என்று கோருபவர்களை மார்க்சியத் துரோகிகளாகவும் திருத்தல்வாதிகளாகவும் இக்கட்டுரை கடுமையாகச் சாடுகிறது. வர்க்கப் போராட்டம் மற்றும் பாட்டாளி வர்க்க விடுதலை குறித்த மூலக் கோட்பாடுகள் இன்றும் செல்லுபடியாகும் என்பதைப் பல்வேறு முன்னுரைகளின் வாயிலாக ஆசிரியர் மெய்ப்பிக்கிறார். புரட்சிகரப் பாதையைக் கைவிட்டு, முதலாளித்துவத்திற்குத் துணைபோகும் சந்தர்ப்பவாதக் கருத்துக்களை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை இவ்வுரை உரக்கச் சொல்கிறது. இறுதியாக, மார்க்சியத்தை அதன் தூய வடிவத்தில் சிதைக்காமல் பின்பற்றுவதே உண்மையான கம்யூனிசப் பணியாகும் என்று இது வாதிடுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை திருத்துவது பற்றி மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் நிலைப்பாடு என்ன?
வர்க்கப் போராட்டம் மற்றும் சமூக விடுதலை குறித்து இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை கருத்துக்கள் யாவை?
நவீன சூழலுக்கு ஏற்ப மார்க்சியத்தை மாற்ற வேண்டும் என்பவர்களின் வாதங்களை இந்த ஆதாரம் எவ்வாறு விமர்சிக்கிறது?
கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையில் கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ் 1872-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரையில்
அறிக்கையானது ஒரு வரலாற்று ஆவணமாகிவிட்டது. இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை. 1847-லிருந்து இன்றுவரையுள்ள இடைவெளியை நிரப்பும் ஒரு முன்னுரையோடு அடுத்து ஒரு பதிப்பு வெளிவரக்கூடும். தற்போது இந்த மறுபதிப்பு மிகவும் எதிர்பாராத நிலையில் வெளியாவதால், இப்பணியைச் செய்துமுடிக்க எங்களுக்கு அவகாசம் இல்லாமல் போய்விட்டது.
கார்ல் மார்க்ஸ், ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்
லண்டன், ஜூன் 24, 1872.
என்று எழுதியுள்ளனரே தவிர வேறென்ன எழுதியுள்ளனர்?
1883-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரை
அந்தோ! தற்போதைய பதிப்பின் இந்த முகவுரைக்கு நான் மட்டும் தனியே கையெழுத்திட வேண்டியுள்ளது. ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த தொழிலாளி வர்க்கம் முழுமையும் வேறு எவரையும்விட அதிகமாகக் கடமைப்பட்டுள்ள அந்த மாமனிதர் மார்க்ஸ் ஹைகேட் இடுகாட்டில் உறங்குகிறார். அவருடைய கல்லறையின்மேல் முதலாவது பசும்புல் ஏற்கெனவே அரும்பிக் கொண்டிருக்கிறது. மார்க்சின் மறைவுக்குப்பின் அறிக்கையைத் திருத்தியமைப்பதும், புதியன சேர்ப்பதும் நினைத்துப் பார்க்கவும் இயலாதது. பின்வருவனவற்றை வெளிப்படையாக மீண்டும் இங்கே எடுத்துரைப்பது முன்னைக் காட்டிலும் அவசியமெனக் கருதுகிறேன்:
அறிக்கையினூடே இழையோடி நிற்கும் அடிப்படையான கருத்து – ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்தின் பொருளாதார உற்பத்தியும், அதிலிருந்து தவிர்க்க முடியாதபடி எழுகின்ற சமுதாயக் கட்டமைப்பும், அந்தந்தக் காலகட்டத்தின் அரசியல், அறிவுத்துறை ஆகியவற்றின் வரலாற்றுக்கான அடித்தளமாக அமைகின்றன. ஆகவே, (புராதன நிலப் பொதுவுடைமை அமைப்பு சிதைந்துபோன காலம்தொட்டே) அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. அதாவது, சமூக வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களிலும், சுரண்டப்படும் வர்க்கத்துக்கும் சுரண்டும் வர்க்கத்துக்கும், ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் ஒடுக்கும் வர்க்கத்துக்கும் இடையேயான போராட்டங்களின் வரலாறாகவே இருந்து வருகிறது. எனினும், இந்தப் போராட்டமானது தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வரும் வர்க்கம் (பாட்டாளி வர்க்கம்), தன்னோடு கூடவே சமுதாயம் முழுவதையும் சுரண்டலிலிருந்தும், ஒடுக்கு முறையிலிருந்தும், வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கத்திடமிருந்து (முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து) ஒருபோதும் தன்னை விடுவித்துக்கொள்ள இயலாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது – இந்த அடிப்படையான கருத்து முற்றிலும் மார்க்ஸ் ஒருவருக்கு மட்டுமே உரியதாகும்.நான் இதனை ஏற்கெனவே பலமுறை குறிப்பிட்டுள்ளேன். என்றாலும், முக்கியமாக இப்பொழுது அறிக்கையின் முகவுரையிலேயே குறிப்பிட வேண்டியதும் அவசியமாகும்.
ஃபிரெடெரிக் எங்கெல்ஸ்
ஜுன் 28, 1883.
இந்தப்பகுதியிலும் எங்கெல்ஸ் "மார்க்சின் மறைவுக்குப்பின் அறிக்கையைத் திருத்தியமைப்பதும், புதியன சேர்ப்பதும் நினைத்துப் பார்க்கவும் இயலாதது" என்கிறார்.
1888-ஆம் ஆண்டின் ஆங்கிலப் பதிப்புக்கு எழுதிய முகவுரையிலிருந்து
1872-ஆம் ஆண்டு ஜெர்மன் பதிப்புக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து எழுதிய முகவுரையிலிருந்து கீழ்க்காணும் பகுதியை இங்குத் தருகிறேன்:
"கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவுதான் மாறியிருந்த போதிலும், இந்த அறிக்கையில் வகுத்துரைக்கப்பட்டுள்ள பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும்போல் இன்றும் சரியானவையே ஆகும். ஆங்காங்கே சில விவரங்களைச் செம்மைப்படுத்தலாம். இந்தக் கோட்பாடுகளின் நடைமுறைப் பயன்பாடு என்பது, இந்த அறிக்கையே குறிப்பிடுவதுபோல, எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்திலும், அந்தந்தக் காலகட்டத்தில் நிலவக்கூடிய வரலாற்று நிலைமைகளைச் சார்ந்ததாகவே இருக்கும். இந்தக் காரணத்தால்தான், இரண்டாம் பிரிவின் இறுதியில் முன்மொழியப்பட்டுள்ள புரட்சிகர நடவடிக்கைகள் மீது தனிச்சிறப்பான அழுத்தம் எதுவும் தரப்படவில்லை. அந்தப் பகுதியின் வாசகத்தைப் பல கூறுகளில் இன்றைக்கு மிகவும் வேறுபட்ட சொற்களில் எழுத வேண்டியிருக்கும். 1848 முதலே நவீனத் தொழில்துறை மகத்தான வளர்ச்சி கண்டுள்ளது; அதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் மேம்பட்ட, விரிவடைந்த அமைப்பு வளர்ச்சி பெற்றுள்ளது [1872-இல் எழுதப்பட்ட முகவுரையின் ஜெர்மன் மூலத்தில் இந்த வாக்கியங்கள் சற்றே மாறுபட்டுள்ளன. பார்க்க இந்நூலின் பக்கம் 2]; முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு அதனினும் முக்கியமாகப் பாட்டாளி வர்க்கம் முதன்முதலாக, முழுதாய் இரு மாதங்கள் அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும் சில நடைமுறை அனுபவங்கள் கிடைத்துள்ளன; - இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங் கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாக ஒன்றை நிரூபித்துக் காட்டியது. அதாவது, ’ஏற்கெனவே தயார்நிலையிலுள்ள அரசு எந்திரத்தைத் தொழிலாளி வர்க்கம் வெறுமனே கைப்பற்றி, அப்படியே தன் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது’. (பார்க்கவும்: ஃபிரான்சில் உள்நாட்டுப் போர் - சர்வதேசத் தொழிலாளர் சங்கப் பொதுக்குழுவின் பேருரை, லண்டன், ட்ரூலவ், 1871. பக்கம் 15-இல் இந்த விவரம் மேலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது). தவிரவும், சோஷலிச இலக்கியத்தைப் பற்றிய விமர்சனம் இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை போதுமானதல்ல என்பது கூறாமலே விளங்கும். ஏனெனில் 1847-ஆம் ஆண்டு வரைதான் அதில் அலசப்பட்டுள்ளது. அதோடு, பல்வேறு எதிர்க்கட்சிகளுடன் கம்யூனிஸ்டுகளின் உறவுநிலை பற்றிய குறிப்புகள் (நான்காம் பிரிவு) கோட்பாட்டு அளவில் இன்றும் சரியானவையே. என்றாலுங்கூட, நடைமுறையில் காலங் கடந்தவையே. காரணம், இன்றைக்கு அரசியல் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. வரலாற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமானது, அப்பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளில் மிகப் பெரும்பாலானவற்றைப் புவிப்பரப்பிலிருந்தே துடைத்தெறிந்துவிட்டது”.
”ஆனாலும் அறிக்கை ஒரு வரலாற்று ஆவணமாக ஆகிவிட்டது, இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை”. மார்க்ஸின் “மூலதனம்” நூலின் பெரும்பகுதியை மொழிபெயர்த்தவரான திரு.சாமுவேல் மூர் தற்போதைய இந்த மொழிபெயர்ப்பினை உருவாக்கியுள்ளார். நாங்கள் இருவரும் சேர்ந்து இதனைத் திருத்தியமைத்தோம். வரலாற்றுக் குறிப்புகளை விளக்குகின்ற சில குறிப்புரைகளை நான் சேர்த்துள்ளேன்.
ஃபிரெடெரிக் ஏங்கெல்ஸ்
லண்டன், ஜனவரி 30, 1888.
”ஆனாலும் அறிக்கை ஒரு வரலாற்று ஆவணமாக ஆகிவிட்டது, இதைத் திருத்துவதற்கான எந்த உரிமையும் இனி எங்களுக்கு இல்லை”. என்கிறார் அதனை உருவாக்கியதில் பங்களித்த எங்கெல்ஸ்.
நவீன முதலாளித்துவச் சொத்துடைமையின் தவிர்க்கவொண்ணாத் தகர்வினைப் பிரகடனப்படுத்துவதையே கம்யூனிஸ்டு அறிக்கை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அறிக்கை எழுதப்பட்ட காலத்தில், இதனை நாங்கள் சோஷலிஸ்டு அறிக்கை என அழைக்க முடியவில்லை. 1847-இல் சோஷலிஸ்டுகள் எனப்பட்டோர் ஒருபுறம், பல்வேறு கற்பனாவாதக் கருத்தமைப்புகளைத் தழுவியோராக அறியப்பட்டனர்: இங்கிலாந்தில் ஓவனியர்கள் (Owenites)[16], ஃபிரான்சில் ஃபூரியேயர்கள் (Fourierists)[17]. இவ்விரு வகையினரும் ஏற்கெனவே வெறும் குறுங்குழுக்கள் நிலைக்குத் தாழ்ந்து, படிப்படியாக மறைந்து கொண்டிருந்தனர். மறுபுறம், மிகப் பல்வேறு வகைப்பட்ட சமூகப் புரட்டல்வாதிகள், மூலதனத்துக்கும் இலாபத்துக்கும் எந்தத் தீங்கும் நேராதபடி, எல்லா வகையான ஒட்டுவேலைகள் மூலம், அனைத்து வகையான சமூகக் குறைபாடுகளையும் களைவதாகப் பறைசாற்றினர். இந்த இரு வகையினரும் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு வெளியே இருந்துகொண்டு, பெரும்பாலும் ''படித்த'' வர்க்கங்களின் ஆதரவையே எதிர்நோக்கியிருந்தனர். தொழிலாளி வர்க்கத்தின் எந்தப் பகுதி, வெறும் அரசியல் புரட்சிகள் மட்டும் போதாது என்பதைத் தெளிவுபட உணர்ந்துகொண்டு, ஒரு முழுமையான சமுதாய மாற்றத்தின் தேவையைப் பறைசாற்றியதோ, அந்தப் பகுதி அன்று தன்னைக் கம்யூனிஸ்டு என்று அழைத்துக்கொண்டது. அது பக்குவமற்ற, செழுமைப்படாத, முற்றிலும் உள்ளுணர்வு வகைப்பட்ட கம்யூனிசமாகவே இருந்தது. என்றாலும், அது மூலாதாரமான கருத்தைத் தொட்டுக் காட்டியது. ஃபிரான்சில் காபேயின் (Cabet)[18], ஜெர்மனியில் வைட்லிங்கின் (Weitling)[19] கற்பனாவாதக் கம்யூனிசத்தைத் தோற்றுவிக்கும் அளவுக்குத் தொழிலாளி வர்க்கத்தின் மத்தியில் ஆற்றல் பெற்றதாக விளங்கியது. இவ்வாறாக, 1847-இல் சோஷலிசம் என்பது நடுத்தர வர்க்க இயக்கமாகவும், கம்யூனிசம் என்பது தொழிலாளி வர்க்க இயக்கமாகவும் இருந்தன. சோஷலிசம், குறைந்தபட்சம் [ஐரோப்பா] கண்டத்தில் ”மரியாதைக்குரியதாக” விளங்கியது. ஆனால், கம்யூனிசம் அதற்கு மிகவும் நேர்மாறானதாக இருந்தது. மேலும், மிகத் தொடக்கத்திலிருந்தே எங்களுடைய கருத்தோட்டம், ''தொழிலாளி வர்க்கத்தின் விடுதலை என்பது தொழிலாளி வர்க்கத்தாலேயே பெறப்பட வேண்டும்'' என்பதாகும். எனவே, இவ்விரு பெயர்களில் [சோஷலிசம், கம்யூனிசம்] நாங்கள் எதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் எவ்வித ஐயமும் இருந்திருக்க முடியாது. அதோடு, அப்போதுமுதல் அப்பெயரை மறுதலிக்கும் எண்ணம் எப்போதும் எங்களுக்கு ஏற்பட்டதில்லை.
அறிக்கையானது எங்களுடைய கூட்டுப் படைப்பாக இருக்கும் நிலையில், இதன் மையக் கருவாக அமைந்த அடிப்படை வரையறுப்பு மார்க்சுக்கே உரியது என்பதைக் குறிப்பிட நான் கடமைப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். அந்த அடிப்படை வரையறுப்பு இதுதான்: வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், அப்போது பொதுவாக நடப்பிலுள்ள பொருளாதார உற்பத்தி முறையும் பரிவர்த்தனை முறையும், அதிலிருந்து தவிர்க்கவியலா வகையில் பெறப்படும் சமூக அமைப்புமுறையும்தான் அடித்தளமாக அமைகின்றன. அதன்மீதே அக்காலகட்டத்தின் அரசியல் மற்றும் அறிவுத்துறை வரலாறு எழுப்பப்படுகிறது. அந்த அடித்தளத்திலிருந்து மட்டுமே அவற்றை விளக்கவும் முடியும். இதன் காரணமாகவே, மனிதகுல வரலாறு முழுமையும் (நிலத்தைப் பொது உடைமையாகக் கொண்டிருந்த புராதனப் பழங்குடி சமுதாயம் சிதைவுற்ற காலம்தொட்டே) வர்க்கப் போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது. அதாவது, சுரண்டும் வர்க்கங்களுக்கும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும், ஆளும் வர்க்கங்களுக்கும் ஒடுக்கப்படும் வர்க்கங்களுக்கும் இடையிலான போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது. இந்த வர்க்கப் போராட்டங்களின் வரலாறானது பரிணாமங்களின் தொடர்வரிசையாக அமைகிறது. அது, இன்றைய காலகட்டத்தில், ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. சுரண்டப்படும், ஒடுக்கப்படும் வர்க்கம் அதாவது பாட்டாளி வர்க்கம், தன்னோடு கூடவே சமுதாயம் முழுவதையுமே எல்லா விதமான சுரண்டல், ஒடுக்குமுறை, வர்க்கப் பாகுபாடுகள், வர்க்கப் போராட்டங்கள் ஆகியவற்றிலிருந்து முற்றாகவும் முடிவாகவும் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்காமல், சுரண்டுகின்ற, ஒடுக்குகின்ற வர்க்கத்தின் அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்திலிருந்து தன்னுடைய விடுதலையைப் பெற முடியாது என்கிற கட்டத்தை எட்டியுள்ளது.
என் கருத்துப்படி, டார்வினுடைய கொள்கை உயிரியலுக்கு ஆற்றிய அதே பங்கினை, இந்த வரையறுப்பு வரலாற்றியலுக்கு ஆற்றப் போவது நிச்சயம். நாங்கள் இருவரும் 1845-க்குச் சில ஆண்டுகள் முன்பிருந்தே இந்த வரையறுப்பை நோக்கிப் படிப்படியாக நெருங்கி வந்துகொண்டிருந்தோம். நான் சுயேச்சையாக எந்த அளவுக்கு இந்த வரையறுப்பை நோக்கி முன்னேறி இருந்தேன் என்பதை, "இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை" (Conditions of the Working Class in England) என்னும் என்னுடைய நூல்மூலம் நன்கு அறியலாம். ஆனால், 1845-ஆம் ஆண்டு வசந்த காலத்தில் புரூசெல்ஸ் நகரில் மார்க்ஸை நான் மீண்டும் சந்தித்தபோது, அவர் இந்த வரையறுப்பைத் தயாராக வகுத்து வைத்திருந்தார். நான் இங்கு எடுத்துரைத்துள்ளது போன்ற அதே அளவு தெளிவான சொற்களில் என்முன்னே எடுத்துவைத்தார்.
மேலே இவை ஆசான் எங்கெல்ஸ் எழுதியதே.
இதனை எதனையும் புரிந்துக் கொள்ளாத ஒரு கழிச்சடை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மாற்ற வேண்டும் எனும் அவனின் வாதம் கீழே:-
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பொதுவுடைமை கொள்கை பிரகடனம் என்றவகையில் காலத்தால் அழியாது..... ஆனால் அதன் அமலாக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை சொன்னது போல் நடக்கவில்லை....
ஐரோப்பிய தொழிலாளி வர்க்கம் புரட்சியின் உந்து சக்தியாக இல்லை...!
இரஷ்ய சீன பாட்டாளிவர்க்கம்புதிய பாதையை காட்டின!
ஆனால் நீடிக்க முடியவில்லை! எனவே கம்யூனிஸ்டுகளுக்கு கொள்கையை நிறைவேற்ற புதிய பாதை தேவை! இதை மறுப்பது பேதமை!!! மார்க்சியம் அறியாமை...!!!
மேலும் அடுத்த எழுத்து அவனுடையதே
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் பொதுவுடைமை சமூக உருவாக்கமும் ஒரு மறு பரிசீலனை...!
1. மனிதகுல வரலாற்றின் வைகறையை உலகுக்கு அறிவித்த அறிவியல் சாசனம், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சொன்னது போல் ஐரோப்பாவில் கம்யூனிசம் 150 ஆண்டுகள் ஆன போதும் வரவில்லை...ஏன்?
2. ஏகாதிபத்தியம், பாட்டாளி வர்க்க புரட்சிகர சகாப்தத்தில் பின்தங்கிய நாடுகளில் பாட்டாளி வர்க்கம் சோஷலிச புரட்சியை நடத்தி வெற்றி கண்டாலும் அதனை கட்டி அமைப்பதில் தோல்வியை சந்தித்து உள்ளோம்....ஏன்?
4. சமூக ஏகாதிபத்தியம் கலைந்து, சீன முதலாளித்துவம் உலக உற்பத்தி கூடமாக்கொத்தடிமைகளின் கூடாரமாக மாறி ஐரோப்பிய தொழில்களை கலைத்தது.... நவதாராளமயத்தை அமல்படுத்தி அமெரிக்காவின் தலைமையில் கார்ப்பரேட் நிலப்பிரபுத்துவம் உருவாக நவீன வாசலாக மாறியது....!
4. அமெரிக்க கார்ப்பரேட் நிலப்பிரபுத்துவ உலக மேலாதிக்க பேரரசை, இரஷ்ய ஏகாதபத்தியமும், சீன கங்காணி ஏகாதிபத்தியமும் எதிர்த்து முறியடிக்குமா...? நவதாராளமய பேரழிவுக்கு மாற்று என்ன.... சிந்திக்க மறுப்பது ஏன்?
4. அகிலம் கலைப்பு, தொழிலாளி வர்க்கம் பிளவு, முதலாளித்துவ உலக ஒழுங்கு ஐ.நா.அவையும் முடக்கம், காரணம் அரசியல்....மேற்கத்திய மார்க்சியம் எனும் ஏகாதபத்திய ஆதரவு அடையாள அரசியல்.... கிழக்கத்திய மார்க்சியத்தின் மூன்றாம் அகிலம் தகர்வு...
கலைப்புவாதமா மார்க்சியமா... தீர்வு என்ன?
5. இன்றைய முதலாளித்துவம் உலகளாவிய முதலாளித்துவம் மட்டுமல்ல....- உற்பத்தி கேந்திர இடமாற்றம்... ஏஐ உடன் வேலை நேரத்தை அதிகரித்தல் எனும் இரட்டை தாக்குதல்; - மேக மூலதனம் நாடுகளின் எல்லையை தகர்ப்பது; - அரசு முதலாளித்துவம் ஒழிப்பு; - சமூகநல அரசு தகர்ப்பு என நவீன ஆதிக்குவிப்பு முதலாளித்துவ பேரழிவு...! கார்ப்பரேட் நிலப்பிரபுத்துவ பேய்களின் சதிராட்டம்....!
நாடாளுமன்ற நிழலிலேயே பாசிசத்தின் உக்கிரம்...!!! மதவெறி, இன வெறி பாசிசத்தின் களியாட்டம்...!!!
6. ஏகாதிபத்தியங்களின் எதிர்ப்புரட்சி வெற்றி, பாட்டாளி வர்க்கத்தின் பயங்கர தோல்வி....!
2025ல் 1970 களின் திட்டம், போர்த்தந்திரம், செயல்தந்திரம் துருபிடித்த ஆயுதங்கள் இன்றைய சூழலுக்கு பொருந்துமா...? சீனாவின் சமரசம் உலக பாட்டாளிகளுக்கு வழியாகுமா?
7. மார்க்சிய, லெனினிய வழியில் இந்த புதிய நிலைமைக்கு உரிய மாற்றை முன் வைக்க கம்யூனிஸ்டுகள் சிந்திக்க தயாரா...?
8. இல்லையேல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும் கூட மாற்றத்துக்கு உள்ளாகும் காலத்தில் அதனை பூஜிப்பது... அதுவும் கைவிலங்காக அல்ல அறிவின் விலங்காகவே மாறும்!
தேவை மார்க்சிய வழியில் புதிய நிலைமைகள் புதிய ஆயுதங்கள்வேண்டும்!
சிவப்பு புத்தகங்களை மறு வாசிப்பு போதாது மாற்றியும் வாசிக்க வேண்டும் சிந்தித்தால் உலகம் விடியும்...!!!
இவனின் இயலாமைக்கு காரணம் லெனின் சொன்னது போல் ,"இரண்டாம் அகிலத்தின் தலைவர்கள் ஏகாதிபத்திய கொள்ளை முறையினை பாதுகாக்கும் தலைமையா" உள்ளதாக (பார்க்க சந்தர்ப்பவாதமும் இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சியும் நூலின் பக்கம் 17) மேலும் இதே நூலில் பக்கம் 23 ல் லெனின் குறிப்பிடுகிறார்,"புரட்சிகர எழுச்சி ஆரம்பித்துவிட்டால் அது ஓர் எதார்த்தாமன மெய்யான புரட்சிக்கு இட்டு செல்லுமா? எப்பொழுது இட்டு செல்லும் என்று யாராலும் கூற முடியாது என்று காவுத்ஸ்கி எதிர்புரட்சிகர கருத்துகளை அலோசனை கொடுத்துக் கொண்டிருந்தார்" என்கிறார் லெனின்.
மார்க்சியத்தின் பெயரால் மார்க்சிய சிதைவை செய்யும் இவர்கள் அன்றைய திருத்தல்வாதிகளான பெர்ன்ஸ்டைன், காவுத்ஸ்கி மற்றும் பிரிட்டிஷ் பேபியன்களையும் மேலும் ரசியாவின் பல எதிர்புரட்சிகர சக்திகளை லெனின் குறிபிட்டிருப்பார். அந்த வரிசையில் இந்த சந்தர்ப்பவாத அரசியல் பேர்ம் இவரையும் சேர்த்துக் கொள்வோம்.
புரட்சி நடத்த புரட்சிகர தத்துவமும் புரட்சிகர கட்சியும் வேண்டும் என்பதே மார்க்சியம் காட்டும் வழிமுறை அதனை மறுத்து ஆளும் வர்க்கத்தின் அடிபணிந்து வாழ்ந்துக் கொண்டே மார்க்சியத்தை குறை கூறும் இவர்களை லெனின் என்ன செய்ய வேண்டும் என்பதில் முதல் அத்தியாயத்தில் விரிவாக விளக்கி இருப்பார் அடுத்து வரும் பகிதியில் அதனை பார்ப்போம். முடிவுரையாக இந்த எதிர்புரட்சியாளன் கம்யூனிஸ்ட் கட்சியின் சாரம் என்ன்வென்றே தெரியாமல் அதன் மீது கல்லெறிவதன் நோக்கம் என்னெ? தன்னை மார்க்சிய புலமை படைத்தவன் என்று காட்டி தன்னை முதலாளித்துவ திடம் மிக உயர்வான விலைக்கு விற்பனை செய்ய செய்யும் தந்திரம் தானே ஒழிய வேறொன்றும் இல்லை, இவனுக்கும் மார்க்சியதிற்கும் எந்த தொடர்பும் இல்லை இவன் தன் பிழைப்புக்காக மார்க்சியம் பேசுகிறான் எனலாம்.
இதனை இன்னும் முன்னேறி வாசிக்க கீழ்காணும் இணைப்பில் செல்க தோழர்களே
ஒலி வடிவில் சந்தர்ப்பவாதமும் இரண்டாம் அகிலதின் தர்வும் இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே
சந்தர்ப்பவாதமும் இரண்டாம் அகிலத்தின் தகர்வும் வாசிக்க கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே
விவாதம் தொடரும்...