மாவோவின் சிந்தனைகள்-தொடர் வாசிப்பு(20-06-2026)

இந்த ஆதார உரையானது மார்க்ஸிஸ-லெனினிஸக் கொள்கைகளைப் பாதுகாப்பதையும், நவீன திரிபுவாதத்திற்கு எதிரான சித்தாந்தப்


போராட்டத்தையும் விரிவாக விளக்குகிறது. லெனின் மற்றும் ஸ்டாலின் காலத்து வெற்றிகளைத் தொடர்ந்து, தற்போது தோழர் மாஓசேதுங் மற்றும் என்வர் ஹோஜா ஆகியோரின் தலைமையிலான புரட்சிகரப் பாதை முன்னிறுத்தப்படுகிறது. சோவியத் யூனியனில் குருசேவ் காலத்தில் புகுத்தப்பட்ட மாற்றங்கள், சோசலிசத்தை வீழ்த்தி மீண்டும் முதலாளித்துவத்தை மீட்டெடுத்துள்ளதாக இந்த உரை கடுமையாக விமர்சிக்கிறது. வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டு ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துகொள்ளும் போக்கைச் சாடும் இக்கட்டுரை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. உண்மையான கம்யூனிசவாதிகள் பாராளுமன்றப் பாதையை நிராகரித்து, ஆயுதம் தாங்கிய புரட்சிப் பாதையே விமோசனம் அளிக்கும் என்பதை உறுதியாகக் கொள்ள வேண்டும் என இது போதிக்கிறது. இறுதியில், நவீன திரிபுவாதம் வீழ்த்தப்பட்டு உலகப் புரட்சி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இந்த உரை அமைகிறது....

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இணைப்பை அழுத்தவும் தோழர்களே

மாவோவின் சிந்தனைகள்-தொடர் வாசிப்பு

தனது காலத்தில் லெனின் திரிபுவாதிகளுக்கு எதிராக நடத்திய சித்தாந்தப் போராட்டமும், ரஷியாவில் அது ஈட்டிய வெற்றியும் அக்டோபர் புரட்சியை சாத்தியமாக்கியது போல, ஸ்டாலின் ட்ருெஸ்கியவாதத்துக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் வெற்றி சோவியத் யூனியனில் சோஷலிஸம் நிர்மாணிப்பதையும், மிலேச்சத்தனமான ஹிட்லரின் பாசிஸ் ஆக்கிரமிப்புக்கு எதிராக அதைப் பாதுகாப்பதையும் சாத்தியமாக்கியது. இவ் வெற்றி தனி ஒரு நாட்டின் எல்லைகளைக் கடந்து, சோஷலிஸம் வியாபிப்பதை யும், அது ஒரு உலக சக்தியாக மாறுவதையும், இவ்வாறு உலக புரட்சியின் எதிர்கால வெற்றிக்கு அடிக்கல் நாட்டுவதையும் சாத் தியமாக்கியது.

இன்று சர்வதேசிய கம்யூனிஸ, புரட்சி இயக்கத்தில் நிகழும் மூன்றுவது மகத்தான வாதப்பிரதிவாதத்தின் மத்தியில் நாம் வாழ் கின்ருேம். இந்த மாபெரும் சித்தாந்தப் போராட்டம் ஒருபுறம், தமது சகாப்தத்தின் மிகப் பெரும் மார்க்ஸிஸம்-லெனினிஸவாதி யாக விளங்கும் தோழர் மாஒசேதுங் அவர்கள் தலைமையிலுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி, மாபெரும் மார்க்சிஸம்-லெனினிஸவாதி தோழர் என்வர் ஹோஜா அவர்கள் தலைமையிலுள்ள அல்பேனிய தொழில் கட்சி, இதர மார்க்ஸிஸம்-லெனினிஸ கட்சிகள், குழுக் கள் அனைத்தும் தலைமை தாங்கும் மார்க்ஸிஸம்-லெனினிஸம் மாஓசேதுங் சிந்தனைச் சக்திகளுக்கும், மறுபுறம், சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சியை பிரதான மையமாகக் கொண்ட நவீன திரிபுவாத சக்திகளுக்கும், நவீன திரிபுவாதிகளின் பல்வேறு கோஷ்டிகளுக்கும் இடையில் நிகழும் ஒரு மாபெரும் போராகும்.

இரண்டாவது உலக யுத்த முடிவில் சர்வதேசிய கம்யூனிஸ இயக்கமும், தொழிலாளர் வர்க்க இயக்கமும் ஈட்டிய மகத்தான வெற்றிகளோடு, அவற்றுக்குள் ஒரு எதிரோட்டமும் தோன்றியது. இதை முதலில் அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா ளராக இருந்த ஏர்ல் பிருெளடர் பிரதிநிதித்துவப்படுத்தினன். அவன் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்வதற்காக வர்க்க ஒத்துழைப்புக் கருத்துகளை உபதேசம் செய்து வந்தான். ஆனல், சகோதரக் கட்சிகளின் உதவியால் அவனுடைய முயற்சிகள் விரைவில் முறியடிக்கப்பட்டுவிட்டன. இதைத் தொடர்ந்து டீட் டோவின் திரிபுவாதக் கருத்துகள் அம்பலத்துக்கு வந்தன. உட்டோ நீண்ட காலமாக கம்யூனிஸ் இயக்கத்துக்குள் மறைந்தி ருந்த, ஏகாதிபத்தியம், முதலாளி வர்க்கம் ஆகியவற்றின் ஏஜண்டு ஆவான். ஆனல், தோழர் ஸ்டாலின் அவர்களின் சக்திமிக்க தலைமையில் இருந்த சர்வதேசிய கம்யூனிஸ்ட் இயக்கத்திலிருந்து அவன் தூக்கி வீசப்பட்டான்.

ஸ்டாலின் அவர்களின் மறைவுக்கு பின்னர், சோவியத் கம்யூ னிஸ்ட் கட்சியின் அபகீர்த்திமிக்க எதிர்ப் புரட்சி 20வது, 22வது காங்கிரஸ்"களில் தான், குருசேவ் என்பவன் பழைய கால திரிபுவா தத் தத்துவங்கள் எல்லாவற்றையும் ஒன்று திரட்டி, முழுமையான ஒரு தத்துவமாக்கி, உலகத்துக்குக் காட்டினன். ஹிட்லர் பாசிஸத் துக்கு எதிரான கீர்த்திமிக்க சாதனைகளால் சோவியத் யூனியன் பெற்றிருந்த மலைபோன்ற புகழை தவருகப்பயன்படுத்தி, லெனின், ஸ்டாலின் ஆகியோரின் நாடு, அக்டோபர் புரட்சியின் தாயகம், முதலாவது தொழிலாளர் அரசின் பிறப்பிடம் என்ற பெருமை யைத் துஷ்பிரயோகம் செய்து, குருசேவ் தனது தவருன நவீனதிரிபுவாத தத்துத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் பலவற்றின் மீது திணிக்க சோவியத் ஆணைக்கோலை உபயோகித்தான். தனது நோக் கம் பலிக்காத இடங்களில் பிளவுகளை உண்டாக்கினன். ஸ்டாலின் காலம் முதல் இருந்து வந்த சர்வதேசிய கம்யூனிஸ் இயக்கத்தின் ஒற்றைப் பாதை போன்ற ஒற்றுமையை உடைத்தெறிந்தான்.

பெரும் சந்தடியுடனும், ஏகாதிபத்தியவாதிகளும், முதலாளித் துவப் பத்திரிகைகளும் கொடுத்த மறைமுக ஆதரவுடனும், அவன் ஏகாதிபத்தியத்துடன் சமாதான சகவாழ்வு, முதலாளித்துவத்து டன் சமாதானப் போட்டி, சோஷலிஸத்துக்கு பாராளுமன்றத்தின் மூலம் சமாதான மாற்றம் ஆகிய தத்துவங்களை எக்காளத்துடன் பிரசாரம் செய்தான். மானங்கெட்ட தனது அமெரிக்க விஜயத்தின் மூலம் அவன் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அரசியல் ரீதியில் கூட்டுச் சேரும் சகாப்தம் ஒன்றைத் தொடக்கி வைத்தான். இதன் விளைவாக தேசிய விடுதலை இயக்கங்கள் அனைத்தையும் காட்டிக் கொடுத்தான். பொருளாதார ரீதியில், சோவியத் யூனியனிலும், நவீன திரிபுவாதிகள் ஆட்சி செலுத்தும் இதர நாடுகளிலும் இன்று முதலாளித்துவ மீட்சிக்கு வழிகோலிய கொள்கைகளைத் தொடக்கி வைத்தான்.

இன்று சோவியத் யூனியனும், நவீன திரிபுவாதிகள் ஆளும் இதர நாடுகளும் சோஷலிஸ் நாடுகள் அல்ல. அங்கெல்லாம் முதலா ளித்துவம் மீட்கப்பட்டு விட்டது; புதிய ரக முதலாளி வர்க்கம் தோன்றி விட்டது.

கூட்டுறவு விவசாயிகளுக்குச் சொந்தமான தனியார் நிலங்கள் இரட்டி மடங்காகி விட்டன. இவ்வாறு நாட்டுப் புறத்திலும் முத லாளித்துவ வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப்படுகின்றது. தொழில் துறையில் லாபத் தூண்டுதல், பொருளாயத நலன்கள் என்ற முத லாளித்துவ கோட்பாடு புகுத்தப்பட்டு, அதன் விளைவாக வேலை நிறுத்தங்களும், தொழில் குழப்பங்களும் தலைவிரித்தாடுகின்றன.

அந்நிய ஏகபோக முதலாளித்துவம் சோவியத் மக்களைச் சுரண் டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத் திய வங்கிகளின் பின்பலமுடைய, இத்தாலி பியட் கம்பெனி போன்ற ராட்சஸ சர்வதேசிய ஏகபோகங்கள் சோவியத் யூனியனில் தொழிற்சாலைகள் திறப்பதற்கும், சோவியத் தொழிலாளரைச் சுரண்டுவதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. யப்பானிய ஏக போக நலன்கள் சைபீரியாவின் செல்வாதாரங்களைக் கொள்ளை யடிக்கவும் பச்சை விளக்குக் காட்டப்பட்டுள்ளது.

யூகோஸ்லாவிய பொருளாதாரம் அமெரிக்க, பிரிட்டிஷ் மூல தனமின்றி ஒருநாள் கூட இயங்க முடியாது என்பது உலகப் பிர சித்தமான ஒரு இரகசியம். ராட்சஸ அமெரிக்க ஏகபோக முதலா ளித்துவம்-உதாரணமாக ஹில்டன் கம்பெனி-ஹங்கேரியில் பலாட் டூன் வாவிகளில் அதன் பிரசித்தமான ஹோட்டல் வரிசையில் ஒன்றைக் கட்டுகின்றது. குறுப்ஸ் கம்பெனி போலந்தில் தொழிற் சாலை ஒன்றை நிர்மாணிக்கின்றது. இப்படி ஏராளமான உதார ணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

இந்த நாடுகளில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மக்கள் அனைவரின் சர்வாதிகாரம் என்ற சுலோகத்தின் கீழ் புதிய முதலா ளித்துவ சர்வாதிகாரமாக மாற்றப்பட்டு விட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பாத்திரம் கைவிடப்பட்டு விட்டது. பாராளு மன்றம், பல கட்சி முறை ஆகிய அலங்காரங்களுடன் முதலாளித் துவ ஜனநாயக முறையைப் புகுத்துவதற்கும் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டு விட்டன.

கலாசாரத்துறையில், நசிந்து உழுத்துப்போன மேலை நாட்டு முதலாளித்துவ கலாசாரம் அனைத்துக்கும் கதவுகள் அகலத் திறந்து விடப்பட்டுள்ளன. ஜாஸ் இசை, டுவிஸ்ட் போன்ற பைத்திய நட னங்கள், துர்நாற்றம் வீசும் திரைப்படங்கள், இலக்கியங்கள், மக ளிர் அலங்கார அணி வகுப்புகள், அழகு ராணிப் போட்டிகள் முத லியவை எல்லாம் காலத்தின் கோலமாகி விட்டன.

அமெரிக்க ஏகாதிபத்தியம், இதர பிற்போக்கு சக்திகள் எல்லா வற்றுடனும் கள்ளக் கூட்டுச் சேர்ந்து, புரட்சி இயக்கங்கள் அனைத் தையும் காட்டிக் கொடுக்கும் வெளிநாட்டுக் கொள்கை, உள்நாட் டில் சகல துறைகளிலும் முதலாளித்துவ மீட்சியை அடிப்படை யாகவும், அதன் விளைவாகவும் அமைந்துள்ளது.

ஆனல், குருசேவின் காட்டிக் கொடுப்பும், துரோகமும் சர்வ தேசிய கம்யூனிஸ் இயக்கத்தில் சவாலை சந்திக்காமல் இல்லை. ஆழ்ந்த கருத்துகளுக்கும். சிந்தனைத் தெளிவுக்கும் பிரசித்திபெற்ற பிரகாசமான வாதப்பிரதிவாதப் படைப்புகள் பலவற்றில், சீன கம்யூனிஸ்ட் கட்சி, குருசேவும், மேற்கு ஐரோப்பிடி கம்யூனிஸ்ட் கட்சிகளின் சில தலைவர்களும் எடுத்த போலியான நவீன திரிபு வாத நிலைகளை கண்டித்து, நிராகரித்துள்ளது. வீரமிக்க சின்னஞ் சிறு அல்பேனியா 1957 மாஸ்கோ மாநாட்டிலும், 1960 புக்கா றெஸ்ட் மாநாட்டிலும் குருசேவ் மீது காரி உமிழ்ந்துள்ளது.

சித்தாந்த வேற்றுமைகளை நாட்டு உறவுகளுக்குள் விஸ்தரித் ததுதான் இவற்றுக்குக் குருசேவ் கொடுத்த பதிலாகும். அவன் அல்பேனியாவுடன் வைத்திருந்த சகல தொடர்புகளையும் துண்டித் தான். பொருளாதார உடன்படிக்கைகள் அனைத்தையும் கிழித் தெறிந்தான். சோவியத் நிபுணர்கள் எல்லாரையும் திருப்பி அழைத்தான். ராஜிய தந்திர உறவுகளைக் கூட முறித்தான்.

என்வர் ஹோஜா அவர்கள் தலைமை தாங்கும் அல்பேனிய அரசாங் கத்தைத் தூக்கி எறியும்படி பகிரங்கமாக குரல் எழுப்பினன்.

**குருசேவுக்கு முழந்தாளிட்டு அடி பணிவதிலும் பார்க்க, நாம் புல் லைப் புசித்து வாழ்வோம்" என்பது அல்பேனிய மக்கள் கொடுத்த வீரம் கொப்புளிக்கும் பதிலாகும். தோழர் என்வர் ஹோஜா அவர் கள் முன்னிலும் பார்க்க மேலும் உறுதியாக தமது பதவியில் அமர்ந்திருக்கும் அதே வேளையில், இத்தகைய அர்த்தமற்ற அச்சுறுத்தல்கள் விடுத்த கோமாளி குருசேவ் மானங்கெட்ட முறையில் அதிகார பீடங்களிலிருந்து உதைத்து, உருட்டிக் கவிழ்க்கப்பட்டது உண்மையில் விகடத்துக்கு ஒரு துணுக்காக விளங்குகின்றது.

அல்பேனியாவுக்கு எதிராக தனது மிரட்டல் தந்திரோபாயங் கள் பலன் அளிக்கத் தவறியதைக் கண்டு குருசேவ் சும்மா இருக்க வில்லை. சில ஆண்டுகளின் பின்னர் பொருளாதார நிர்ப்பந்தங்கள் மூலம் அரசியல் ரீதியில் ராட்சஸ் சீனவை அடிமைப்படுத்தும் வீண் முயற்சியில், இதே தந்திரோபாயங்களை மீண்டும் பாவித்தான். மீண்டும் மண் கவ்வினுன் குருசேவ். தோழர் மாஓசேதுங் அவர்க ளின் விவேகமான வழிகாட்டலில் தீய விஷயத்தை நல்ல விஷய மாக மாற்றி, சீன கம்யூனிஸ்ட் கட்சி, தம் மீது நம்பிக்கை வைக்கு மாறும், சுயசார்பு மூலம் ஆற்றலின் பிரமாண்டமான ஊற்றைத் திறக்குமாறும் 70 கோடி சீன மக்களுக்கும் போதனையளித்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி, அல்பேனிய தொழில் கட்சி இரண்டி னதும் உறுதியான மார்க்ஸிஸம்-லெனினிஸ் நிலைப்பாடு, சோவியத் யூனியனுக்கு அடி பணிய மறுத்த இதர சகோதர கட்சிகளின் ஆதர வையும் பெற்றது. இவற்றில் இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி, தாய்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி, பர்மிய கம்யூனிஸ்ட் கட்சி, மலாயா கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி முதலிய வற்றை விசேஷமாகக் குறிப்பிடலாம். ஆரம்பத்தில் மார்க்ஸிஸ்ம்லெனினிஸ நிலைப்பாட்டை எடுத்த, ஆனல் பின்னர் பல்வேறு வித மான சோவியத் மிரட்டல்களுக்குப் பலியாகி, நவீன திரிபுவாதத் தின் போலி நிலைகளில் தஞ்சம் புகுந்த சில கட்சிகளும் இல்லாமல் இல்லை. ஆணுல், நவீன திரிபுவாதிகளின் ஆதிக்கத்துக்கு உள்ளான ஏறக்குறைய எல்லா கட்சிகளிலும், மார்க்ஸிஸம்-லெனினிஸம்மாஒசேதுங் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட புதிய புரட் சிகரக் குழுக்கள் அல்லது கட்சிகள் இன்று தோன்றி விட்டன. ஆஸ்திரேலிய (மார்க்ஸிஸம்-லெனினிஸ) கம்யூனிஸ்ட் கட்சி, இத்தாலி (மார்க்ஸிஸம்-லெனினிஸ்) கம்யூனிஸ்ட் கட்சி, பிரெஞ்சு (மார்க்ஸி ஸம்-லெனினிஸ) கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய சிலவற்றை இதற்கு உதாரணம் காட்டலாம்.

நமது காலத்தின் மிகப் பெரிய இந்த விவாதத்தில் சம்பந்தப் பட்ட அடிப்படைப் பிரச்சினைகளில் நாம் சிறிது ஆழமாய்ச் செல் வோமாக. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாஒ சேதுங் ஆகிய சர்வதேசிய கம்யூனிஸ் புரட்சி இயக்கத்தின் மாபெரும் தலைவர்களின் போதனைகளை நாம் சுருக்கிக் கூறினல், பின்வருமாறு தொகுக்கலாம்:-

நாம் எல்லாரும் வர்க்க சமுதாயத்தில் வாழ்கிழுேம். சமு தாயத்தில் ஒரு வர்க்கம் இன்னுெரு வர்க்கத்தை அடக்கி ஒடுக்கு கின்றது; சுரண்டுகின்றது. இன்னுெரு வர்க்கத்தை அடக்கி ஒடுக்கி, நசுக்கும் ஒரு வர்க்கம் அதன் ஒடுக்குமுறைக்கும் சுரண் டலுக்கும் உதவியாக ஒரு யந்திரத்தைப் பெரும் செலவில் கட்டியமைத்திருக்கிறது. இந்த யந்திரம் அரசு யந்திரம் என அழைக்கப்படுகின்றது. இதன் பிரதான பகுதி ஆயுதப் படை கள். அரசு யந்திரத்தின் பிரதான பணி சுரண்டலைப் பாது காப்பது சுரண்டும் வர்க்கங்களுக்கு எதிராக அடக்கி ஒடுக்கப் பட்ட வர்க்கங்கள் கொந்தளித்து எழும்போது அவற்றைத் தடுத்து நசுக்குவது. சுரண்டும் வர்க்கங்களின் காவல் நாய் களின் கரங்களில் துப்பாக்கிகள் இல்லாவிட்டால், சுரண்டல் ஒரு கனம் கூடத் தொடர்ந்து நடக்க முடியாது. ஆகவே, டக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் தம்மை விடுதலை செய்து கொள்ள விரும்பினல், தம்மை நசுக்குகின்ற அடக்குமுறை அரசு யந்திரத்தை ப்லாத்காரத்தால் சுக்கு நூருக்கவேண்டும்; அதாவது, அவர்கள் புரட்சியை நடத்தி, அடக்குமுறை முத லாளித்துவ அரசு யந்திரத்துக்குப் பதிலாக தொழிலாளர் வர்க் கத்தின் அரசு யந்திரத்தை அமைக்க வேண்டும். இதைத்தான் மார்க்ஸ் அவர்கள் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று வருணித்தார்.

கடைசியாக, இதைப் புரட்சியால் அன்றி, பாராளுமன்ற வழிகளில் சமாதான மாற்றத்தின் மூலம் செய்ய முடியாது. பாராளுமன்றம் என்பது மூலதனத்தின் அம்மணமான சர் வாதிகாரத்தை அலங்கரிக்க, நமது வர்க்க உணர்வை மழுங் கடிக்க, நம்மைக் குழப்பிப் பேய்க்காட்ட, ஆயுதப் படைகள் என்ற உண்மையான அதிகாரபீடத்திலிருந்து நமது கவனத்தைத் திசைதிருப்பு, பிற்போக்குவாதிகள் கண்டுபிடித்த ஒரு ஆயுதம். இது ஆயுதப் போராட்டத்துக்குப் பதில் சொற் போராட்டத்தை வைக்கும் ஒரு முயற்சி. எனவே, இந்தப் பாராளுமன்ற மாயைகளால் நாம் ஏமாந்துவிடக்கூடாது. நாம் பாராளுமன்றப் பாதையை உறுதியுடன் நிராகரித்து, புரட்சிப் பாதை ஒன்றே அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் அளிக்கும் பாதை எனக் கொள்ளவேண்டும்.

இந்த கருத்துகளை யார் ஏற்றுக்கொள்கிருர்களோ, அவர் கள் புரட்சிவாதிகள்; மார்க்ஸிஸம்-லெனினிஸவாதிகள். யார் ஏற்றுக்கொள்ளவில்லையோ, யார் எதிர்க்கிருர்களோ அவர்கள் திருத்தல்வாதிகள்; திரிபுவாதிகள், இதுதான் மார்க்ஸிஸம்லெனினிஸவாதிகளையும், நவீன திரிபுவாதிகளையும், புரட்சிவாதி களையும், திருத்தல்வாதிகளையும் பிரித்துக் காட்டும் எல்லைக் கோடாகும்.

இவற்றிற்குப் பதில், ஒரு மத்திய பாதையைக் காண, நடு வழியைக் காண முயல்கின்ற, பாலங்கள் அமைக்க, மார்க்ஸிஸம்-லெனினிஸம்-மாஒசேதுங் சிந்தனைக்கும், நவீன திரிபு வாதத்துக்கும் இடையில் சமரசம் கொண்டுவர முயல்கின்ற சிலரும் இருக்கின்றனர். இது சந்து செய்ய முடியாதவற்றை சந்து செய்ய முயல்கின்ற, நீரையும் நெய்யையும் கலக்கின்ற ஒரு முயற்சியன்றி வேறல்ல.

நவீன திரிபுவாதம் என்பது மார்க்ஸிஸம்-லெனினிஸம் மாசேதுங் சிந்தனையின் எதிர்த் தத்துவமாகும். எனவே, ཞི་ டுக்குமிடையில் எவ்வித சமரசமும் ஏற்பட முடியாது. ஆரர் பத்தில் சரியான மார்க்ஸிஸம்-லெனினிஸ் நிலைப்பாட்டை எடுத்த ய்ப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி, கொரிய தொழிலா ளர் கட்சி போன்றவையும், வியட்நாம் தொழிலாளர் கட்சி யின் சில தலைவர்களும்கூட இன்று ‘ஐக்கியம்’ கொண்டு வரு வது பற்றிப் பிதற்றுகின்றனர். இது யதார்த்தத்தில் நவீன திரிபுவாதத்துக்குச் செல்லும் சரிவுப் பாதையில் ஏற்கெனவே அடி எடுத்து வைத்துவிட்ட தைக் காட்டுகின்றது.

நவீன திரிபுவாதம் என்பது உலக ஏகாதிபத்தியம் தான் அழியும் காலத்தில் ஒரு முண்டாகச் சேவை செய்ய தொழி லாளர் வர்க்க இயக்கத்திலிருந்து இழுத்தெடுத்த இறுதிப் பல மாகும். உழுத்துப்போன மரத்துக்கு ஒரு முண்டு தேவைப் படுவது அதன் பலத்தின் அறிகுறியல்ல, பலவீனத்தின் அறி குறியாகும். அந்த முண்டை வெட்டி வீழ்த்தும் முயற்சி மரத்தை வீழ்த்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். ஆகவேதான், நவீன திரிபுவாதத்தை எதிர்த்துப் போராட்டாத அதேவேளையில், உலக ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிடுவது அசாத்தி யம். யார் நவீன திரிபுவாதத்தை எதிர்க்கவில்லையோ, அவர் இன்றே நாளையோ ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதை நிறுத்து வது நிச்சயம். இந்த விஷயத்தில் மயக்கம் இருக்கக்கூடாது. லெனின் தமது காலத்தில், திரிபுவாதம் என்பது தொழிலா ளர் வர்க்க இயக்கத்தில் முதலாளிவர்க்க இயக்கத்தின் செல் வாக்கே என்று தெளிவாக விளக்கியுள்ளார்.

உலக ஏகாதிபத்தியத்தைப் போல, நவீன திரிபுவாதமும் அழிவது திண்ணம். நவீன திரிபுவாதிகள் எவ்வளவுதான் காட்டிக் கொடுத்த போதிலும், உலகப் புரட்சி இயக்கம் தொடர்ந்து முன்னேறுகின்றது. மரம் அமைதியை விரும்பு கின்றது; ஆனல் காற்று ஒய்வதில்லை. அதேபோல நவீன திரிபு வாதிகள் சமாதான சகவாழ்வு, சமாதான போட்டி, சோஷ லிஸத்துக்கு சமாதான மாற்றம் ஆகியவை பற்றி எவ்வளவுக் குச் செபம் செய்தாலும், வர்க்கப் போராட்டத்தின் உண்மை கள் வாழ்வை வேறு திசையில் செலுத்துகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான உலக ஏகாதிபத்தியம், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியை பிரதான மையமாகக் கொண்ட நவீன திரிபுவாதம், பிற்போக்குவாதம் இவற்றுக்கெதிரான புரட்சிப் போராட்டங்களின் வேகம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.

இவை நவீன திரிபுவாதிகள் மத்தியிலே அக முரண்பாடுகளை மீண்டும் கொண்டு வருகின்றன. அவர்கள் இன்று ஒன்றுபோல ஐக்கியப்பட்டிருக்கவில்லை. அல்பேனிய தொழில் கட்சியின் ஐந்தா வது மாநாட்டிற்குச் சமர்ப்பித்த தமது அறிக்கையில் தோழர் என் வர் ஹோஜா அவர்கள் துலாம்பரமாகச் சுட்டிக்காட்டியதாவது:- ‘இன்று திரிபுவாத முன்னணி அதன் அத்திவாரத்திலேயே தகர்ந்து விட்டது. அது ஒன்றை ஒன்று கீறிக் கிழிக்கத் தயாராக உள்ள பசித்த ஒநாய்க் கூட்டம் போல் இருக்கின்றது. இசையாசிரி யனின் ஆணைக்கோல் இனிமேல் திரிபுவாதக் கூட்டிசையை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது." அவர் மேலும் கூறியதா வது:- 'திரிபுவாதத்தின் பல்வேறு ரகங்கள் செல்வாக்குப் பிராந்தி யங்களுக்காக பரஸ்பரம் சண்டையிடுகின்றன. டாலரைச் சார்ந் திருப்பதற்காக, ரூபிள்களிலிருந்து இயன்ற அளவு சுதந்திரமும் சுயாதீனமும்பெறக் கோருகின்றன.'

சோவியத் சமூக ஏகாதிபத்தியமும் அதன் சகபாடிகளும் செக் கோஸ்லவாக்கியா மீது தொடுத்த ஆக்கிரமிப்பு இந்தச் சச்சரவை மேலும் உயர்த்தி, நவீன திரிபுவாதத்தின் வீழ்ச்சியை கிட்டிவரச் செய்துள்ளது. சட்ட விரோதமான கம்யூனிஸ்ட் கட்சிகளின் சர்வ தேசிய மாநாட்டைக் கூட்ட எவ்வளவு முயற்சி எடுத்தாலும், இந்த உடைவைச் சீர்செய்ய முடியாது. மார்க்ஸிஸம்-லெனினிஸத் தின் இறுதி வெற்றி நிர்ணயமாகி விட்டது.

லெனின் அவர்கள் தமது காலத்தில் திரிபுவாதிகளுக்கு எதி ராக நடத்திய சித்தாந்தப் போராட்டத்தின் வெற்றி அக்டோபர் புரட்சியின் வெற்றியைச் சாத்தியமாக்கியது போல, ஸ்டாலின் அவர்கள் ட்ருெஸ்கிய வாதத்துக்கு எதிராக நடத்திய போராட் டத்தின் வெற்றி சோவியத் யூனியனில் சோஷலிஸ் நிர்மாணத் தைச் சாத்தியமாக்கியது போல, இன்றைய மகத்தான சித்தாந் தப் போராட்டத்தில் மார்க்ஸிஸம்-லெனினிஸவாதிகளின் வெற்றி உலகப் புரட்சியின் வெற்றியைச் சாத்தியமாக்குவது நிச்சயம்..


தொடர்புடைய கட்டுரைகள்:

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்