இலக்கு இணைய இதழ்-3

 இலக்கு இதழ்-3


வரலாற்றில் மூன்றாவது அகிலத்தின் இடத்தை லெனின் பின்வருமாறு வரையறுத்தார்.

 

கடந்த ஒரு நூற்றாண்டில் கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் பல ஆயிரங்கள், இலட்சம் போராட்டங்கள் நடத்தியும், பங்கு கொண்டு இருக்கிறது. மக்கள் திரள்களின், சமூக இயக்கங்கள், அரசியல் இயக்கங்களுடன் கம்யுனிஸ்டுகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் – குழுக்கள் இணைந்து இவைகள் நடைபெற்றன. இன்றும் நடைபெற்று வருகின்றன.

இருந்தும் இந்திய கம்யூனிச இயக்கம் இடதுசாரி கட்சிகள் என்பது அதற்கான பணியிலிருந்து வெகுதூரத்தில் உள்ளது அதனை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் இரண்டாம் அகிலத்தில் காவுத்ஸகி போன்ற துரோகிகள் செய்த அந்தப் பெரும் துரோகத்தை இரண்டாம் அகிலத்தில் தவறுகளை களைந்து மூன்றாம் அகிலத்தை லெனின் எப்படி கட்டியமைத்தார் என்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம் என்ற அவாவில் இந்த தொடரை எழுத நினைத்தேன்.

முந்தைய பகுதியின் தொடர்ச்சி இனி....

9).கம்யூனிஸ்ட்ஆங்கிலத்தில் சேர விரும்பும் எந்தஒரு கட்சியும் தொழிற்சங்கங்கள் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஏனைய வெகுஜனதொழிலாளர் அமைப்புகளில் திட்டவட்டமான உணர்ச்சி குன்றாததுமான கம்யூனிஸ்ட் பணிபுரிந்துடுவது கடமையாகும். தொழிற்சங்கங்களில் கம்யூனிச குழுக்களை உருவாக்க வேண்டும் மேலும் இவர்களின் தொடர்ச்சியானதுஉணர்ச்சி குன்றாததுமான பணியின் மூலமாக கம்யூனிசத்திற்குதொழிற்சங்கங்களை கவர்ந்து இழுத்து விட முடியும் . இவை தங்களது அன்றாட நடவடிக்கையில்ஒவ்வொரு பிரிவிலும் சமூக நாட்டுப்பற்று வெறியர்களதுதுரோகத்தையும் மய்யவாதிகளின் ஊசலாட்டத்தை அம்பலப்படுத்த வேண்டும் .இக்குழுக்கள் கட்சி முழுவதுன் கீழ்பூரண கீழ்ப்படிந்து உள்ளவர்களாக திகழ வேண்டும்.

10).கம்யூனிஸ்ட்அகிலத்தை சேர்ந்த எந்த ஒருகட்சியும் மஞ்சள் தொழிற் சாலைகளைக்கொண்ட ஆம்ஸ்டர்டாம் அகிலத்திற்கு எதிராக உறுதியான ஒருபோராட்டத்தை நடத்துவது கடமையாகும். மஞ்சள் ஆம்ஸ்டர்டாம் அகிலத்தைவிட்டு விலகுவது மிகவும் அத்தியாவசியம் என்பதை அமைப்புக் உட்பட்ட தொழிலாளர்களுக்கு இதன் சோர்வு இல்லாத பிரசாரம் காட்டிட வேண்டும்.

வளர்ச்சிபெற்றுவரும் சிவப்பு தொழிற்சங்கங்களின் சர்வதேசகூட்டமைப்பிற்கு இது எல்லா ஆதரவையும்நல்கிட வேண்டும் இந்த தொழிற்சங்கங்கள் எல்லாம்கம்யூனிஸ்ட் அகிலத்துடன் தொடர்பு கொண்டவையாகும்.

11).மூன்றாவதுஅகலத்தில் சேர விரும்பும் கட்சிகள்தங்களது பாராளுமன்ற தொகுதிகளில் உள் அமைப்பை மறுபரிசீலனைசெய்து நம்ப முடியாதவர்களை நீக்கி, கட்சியின் மத்திய குழுக் இந்ததொகுதிகளை கீழ்படிந்திட வேண்டுயது கடமையாகும். ஒவ்வொரு கம்யூனிச பாட்டாளியும்தனது நடவடிக்கைகள் அனைத்தையும் உண்மையிலேயே புரட்சிகர பிரச்சாரத்துக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டும் என்று அவர்கள் கோரிடவேண்டும்.

12).வாராந்திரஅல்லது மாதாந்திரப் பத்ததிரிக்கைகளும் நாளேடுகளும் மற்றும் அனைத்து வெளியீட்டுநிறுவனங்களும் இது போன்று கட்சியின்மத்திய குழுவிற்கு முழுவதற்கும் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். கட்சிசட்ட விரோதமாக இயங்கிறதோ அல்லவோ இது நடைபெற்றாகவேண்டும். தங்களுக்கு அளிக்கப்படும் தன்னாட்சி உரிமையை வெளியீட்டு நிறுவனங்கள்துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்கலாகாது . கொள்கைகளுக்கு முழுவதும் ஒத்துப்போகாத வழியில் நடந்து கொள்ளஅனுமதிக்கக்கூடாது .

13).கம்யூனிஸ்ட் அகிலத்தோடு சார்ந்துள்ள கட்சிகள் ஜனநாயக மத்திய படுத்துதல் என்ற கொள்கையின்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கூரான உள்நாட்டுப் போர்நடக்கும் இக்காலத்தில் கட்சிகள் மிகவும் மையப்படுத்தப்பட்ட முறையில்அமைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே தங்களது கடமைகளை செவ்வனே  செய்திட முடியும். இவைஎஃகு போன்ற கட்டுப்பாடு உடையவர் களாக திகழ வேண்டும் . கிட்டத்தட்ட இது ராணுவக் கட்டுப்பாடு போன்று இருக்க வேண்டும். இவைகளுக்கு வலிமை படைத்த அதிகாரம்பெற்ற கட்சி மையங்கள் இருக்க வேண்டும் . உறுப்பினர்கள் அனைவரின் ஏகோபித்த நம்பிக்கை இவர் பெற்றிருக்க வேண்டும்.

14). கம்யூனிஸ்டுகள்தங்களது பணியினை சட்டரீதியாக செய்யக் கூடிய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள்காலா காலங்களில் உறுப்பினர்களை சோதித்து சோதித்து நீக்கிவிடவேண்டும்.தவிர்க்க முடியாதபடி சிறு முதலாளிய கூறுகள் கட்சிக்குள் ஊடுருவி விடுவதே திட்டமாகநீக்கி விடவே இது செய்யப்படுகிறது.

15). கம்யூனிஸ்ட் அகிலத்தில் சேர விரும்பும் எந்தஒரு கட்சியும் எந்த ஒரு சோவியத் குடியரசிற்கும் எதிராக எழும்பும் எதிர்ப்புரட்சிசக்திகளை எதிர்த்துப் போரிட  தன்னலமின்றி உதவிடவேண்டும் . கம்யூனிஸ்ட் கட்சிகள் சோவியத் குடியரசுகளது விரோதிகளுக்கு அனுப்பப்படும் யுத்த தளவாடங்களை ஏற்றிச் செல்ல தொழிலாளர்கள் மறுத்திட வேண்டும் என்று அவர்கள் மத்தியில் வலுவான பிரசாரம் நடத்திட வேண்டும். அவர்கள் சட்டரீதியானதும், சட்ட விரோதமானதும் ஆன பிரசாரத்தை தொழிலாளர்குடியரசுகளை நசுக்கிட அனுப்பப்படும் ராணுவ வீரர்களுக்கு மத்தியிலும்செய்திட வேண்டும்.

16). இன்னும் சமூக ஜனநாயக நிகழ்ச்சித் திட்டத்தைவைத்துள்ள கட்சிகள் விரைவாக அவற்றைப் திருத்திக்கொள்வது கடமையாகும் . இதற்குப் பதிலாக புதிய கம்யூனிஸவேலை திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும் . இத்திட்டங்கள் அந்தந்த நாடுகளின் தனிப்பட்டசூழ்நிலைக்கு ஏற்ப வரையப்பட வேண்டும். மற்றும் அவை கம்யூனிஸ்ட் அகிலத்தின்முடிவுகளில் தன்மைக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் . கம்யூனிஸ்ட்அகிலத்தை சேர்ந்த எல்லா கட்சிகளும் வேலைத்திட்டங்களும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் முறையான தொரு காங்கிரசாலோ அல்லது அதன் நிர்வாகக்குழுவினரும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது விதியாகும். நிர்வாகக்குழுஅங்கீகாரம் அளித்திட மறுத்திடு மானால், கட்சி கம்யூனிஸ்ட் அகிலத்தின்காங்கிரசிற்கு மேல்முறையீடு செய்ய உரிமை உண்டு.

17). கம்யூனிஸ்ட் அகிலத்தின் காங்கிரஸ்கள் மற்றும் அதன் உள்நாட்டுப் போர் நிலவும் சூழலில் இயங்கிடும் கம்யூனிஸ்ட் அகிலமானது இரண்டாவது அகிலத்தை விட இன்னும் அதிகமாக மையப்படுத்தப்பட்ட தாக இருக்க வேண்டும். இருந்தபோதிலும் கம்யூனிஸ்ட் அகிலம் அதன் நிர்வாகக் குழுவும் அந்தந்த கட்சிகள் இயங்கிடவும் போரிடவும் வேண்டிய வேறுபட்ட சூழ்நிலைகளில் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆகவே இப்படிப்பட்ட முடிவுகள் எங்கெல்லாம் சாத்தியமோஅப்படிப்பட்டவிஷயங்களில் மட்டுமே அனைத்து கட்சிகளும்ஒருங்கிணைந்து செயல்பட முடிவுகள் எடுக்கவேண்டும்.

18). மேலேகூறப்பட்டதிலிருந்து கம்யூனிஸ்ட் அகிலத்தில் சேர விரும்பும் கட்சிகள் தங்களது பெயர்களை மாற்றிட வேண்டும் .இணைந்திடவிரும்பும் எந்த ஒரு கட்சியும்தன்னை அந்த நாட்டின் கம்யூனிஸ்ட்கட்சி என்று அழைத்துக் கொள்ள வேண்டும் . கட்சியின் பெயரானது வெறும் வடிவம் மட்டும்அல்லாமல் மிகுந்த அரசியல் முக்கியத்துவம்உடையது. கம்யூனிஸ்ட் அகிலம் முதலாளிய உலகின் மீது அனைத்து மஞ்சள் சமூகஜனநாயகக் கட்சிகள் மீதும் உறுதியானது ஒருபோர் ஒன்றினை தொடுத்துள்ளது. கம்யூனிஸ்ட்கட்சிகளும் உழைக்கும் வர்க்கத்தின் பாதையைக் காட்டிக் கொடுத்துவிட்ட அதிகாரப்பூர்வ சமூக ஜனநாயக அல்லது சோசலிச கட்சிகளுக்கும் இடையே உள்ள வேற்றுமையை ஒவ்வொரு தொழிலாளியும் தெளிவாக வேண்டும்.

19). கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது உலக காங்கிரசின் முடிவுக்கு பிறகு கம்யூனிஸ்ட் அகிலத்துடன் சேர விரும்பும் எந்தஒரு கட்சியும் வெகுவிரைவில், கட்சி முழுவதின் சார்பில்மேலே கூறப்பட்டுள்ள கடமைகளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ள செய்ய அசாதாரண மாநாடுஒன்றினை கூட்டிடவேண்டும் . கம்யூனிஸ்ட் அகிலத்தில் சேரும் தகுதிகள் பற்றியவரையறை 20 ம் விளக்கி விவாதிக்க வேண்டும்.

20).மூன்றாவது அகிலத்தில் இப்போது சேர விரும்பும்கட்சிகள் தங்களது பழைய நுண்ணிய முறைகளை அடியோடு இன்னும் மாற்றிக்கொள்ளாது இருக்குமானால் , அகிலத்தில் சேருவதற்கு முன்பு மாற்றிக் கொள்ள வேண்டுவது அவசியம் . அந்தந்தமத்திய குழுக்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்குப் பேரும், மற்றெல்லா மத்திய கட்சி ஸ்தாபனங்களில்மூன்றில் இரண்டு பங்கு பேராவதுகம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரசுக்கு முன்பு மூன்றாவது அகிலத்தில் சேருவதற்கு தங்களது ஒப்புதலை பகிரங்கமாகவும் தெரிவிக்க வேண்டும்.

ஆதாரம் :- (Lenin collected works vol. 31)

நமது படிப்பினைக்காக தொகுக்கப் பட்டவை. அகிலம் சம்பந்தமான கட்டுரைகளில் இதன் தொடர்ச்சியை காணலாம். முற்றும்.... சிபி.

இந்திய பாசிசம் ஒரு மார்க்சிய ஆய்வு பகுதி – 1 பிரேமசந்திரன்

 


சென்ற இதழ் தொடர்ச்சி............ஏகாதிபத்திய பொருளாதார அடித்தளத்தின் பிரதிபலிப்பாகவேமேல் கட்டுமானத்தில் பாசிசக் கொள்கை உருவாகிறது.

எனவே பாசிசம் என்ற ஏகாதிபத்தியவாதிகளின் அரசியல் கொள்கையை அவர்களது பொருளியல்உறவுகளின் பிரதிபலிப்பாக பார்க்க வேண்டும். வெறும் கருத்தியலாக பார்க்கக்கூடாது.ஏகாதிபத்தியமானது அந்திமகால முதலாளித்துவம் மற்றும் அழுகிப்போன முதலாளித்துவம்.

அதாவது பிற்போக்கு முதலாளித்துவம். மனிதகுல வரலாற்றில் குறிப்பிட்ட சகாப்தத்தில்முற்போக்கு பாத்திரம் வகித்த அவ்வர்க்கம் 19- ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏகாதிபத்தியம்என்ற முதலாளித்துவத்தின் உச்சகட்ட பொருளாதார வளர்ச்சியை அடையும் போது ஒட்டுமொத்தமனித குலத்திற்கே எதிராகப் போய்விட்டது. இதன் வெளிப்பாடே நிரந்தர பொருளாதாரநெருக்கடி மற்றும் நிரந்தர யுத்தம். அதனால்தான் ஏகாதிபத்தியம் என்றாலே யுத்தம் என்றார்

லெனின். ஏகாதிபத்திய சகாப்தத்தில் பொருளாதார நெருக்கடி நிரந்தரம் என்பதால் அந்நெருக்கடியினால் பாதிக்கப்படுகிற உழைக்கும் மற்றும் ஏனைய பிற வர்க்கங்களுடையபோராட்டங்களும் தொடர்ச்சியானவை மற்றும் தீவிரமானவை என்பதை உணர்ந்து கொண்டஏகாதிபத்தியவாதிகள் அப்போராட்டங்களை திசைதிருப்பவும், ஒடுக்கவும் மற்றும் ஏனையதேசங்களை கைப்பற்றவும் தேசப்பற்று வேண்டும் என்று கூறி நடைமுறையில் பெரும்பாலான  உழைக்கும் திரளினருக்கு தேசிய வெறியை மற்றும் தேசிய மோதல்களை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தேசியவெறிக் கொள்கையே பாசிசம் ஆகும். ஏகாதிபத்தியவாதிகள் தங்களதுவர்க்க உறவுகள் மற்றும் தங்களுடைய லாபங்களை பாதுகாத்துக் கொள்ளவேண்டிய தேவையைவைத்துப் பார்க்கும் பொழுது தொழிலாளர்களின் மீது மிகுந்த நிர்பந்தம் செலுத்துவதற்கான வடிவங்களை முதலாளித்துவ வர்க்கங்கள் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது மேலும், ஏகபோகங்கள்அதாவது முதலாளித்துவ வர்க்கத்தின் தலையாய சக்திகள் மூலதனக் குவிப்பின் மிக உயர்ந்தகட்டத்தை அடைகின்ற பொழுது அப்போது ஆட்சியின் பழைய வடிவங்கள் அவற்றின் விரிவாக்கத்திற்கு தடைக்கற்களாக மாறிவிடுகின்றன. இதனால் முதலாளித்துவ வர்க்கம் தான் உருவாக்கியதற்கு எதிராகவே (ஜனநாயகத்திற்கு எதிராக) திரும்பவேண்டியுள்ளது. ஏனென்றால்ஒரு சமயம் அதனுடைய வளர்ச்சிக்கான அம்சமாக இருந்தது, இன்று முதலாளித்துவ சமுதாயத்தை பாதுகாப்பதற்கு ஒரு இடையூறாகவே இருக்கிறது. இதன் காரணமாகத்தான் ஏகாதிபத்தியவாதிகள் முதலாளித்துவ வர்க்கத்தின் பிற்போக்காளர்களாக மாறி பாசிசத்தை(ஜனநாயக மறுப்பை) கடைபிடிக்கும் நிலைக்குச் சென்றனர். அவர்கள் சொந்த நாட்டில்மட்டுமல்ல தங்களது காலனிய நாட்டிலும் தங்களது அதிகாரத்திற்கு எதிராக போராட்டம்தொடங்கியபோது அந்நாடுகளிலும் பாசிச ஆட்சிமுறையை கட்டியமைப்பதற்கான முயற்சியில்ஈடுபட்டனர்.

அதே சமயத்தில் டிமிட்ரோவ் கூறுகிறார்: பாசிசம் எத்தகைய ஒரு முகமூடியை (இனம், மதம்,தேசம், மொழி......) அணிந்திருந்தாலும் எந்த வடிவத்தில் தன்னை அது காட்டிக்கொண்டாலும்எந்த வழிகளில் அது அதிகாரத்திற்கு வந்தாலும்:

1) பாசிசம் என்பது முதலாளித்துவமானது (நிதிமூலதனம்) உழைக்கும் மக்கள் (தொழிலாளர்கள்,விவசாயிகள்) மீது மிகவும் கொடூரமாக, கோரமாக நடத்தும் தாக்குதல் ஆகும்.

2) பாசிசம் என்பது கடிவாளமில்லாத இனவெறியும், ஆதிக்கவெறியும் பிடித்த யுத்தமாகும்.

3) பாசிசம் என்பது வெறிபிடித்த பிற்போக்குதனமும் எதிர்ப்புரட்சியுமாகும்.

4) பாசிசம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் சகல உழைக்கும் மக்களின் கொடிய விரோதி ஆகும்.

5) பாசிசம் - ஒரு கொடிய ஆனால் ஒரு நிலையற்ற ஆட்சி அதிகாரம் ஆகும்.

6) முதலாளித்துவ வர்க்கத்தின் பாசிச சர்வாதிகாரம் ஒரு கொடிய ஆட்சி அதிகாரம் ஆகும்.

டிமிட்ரோ மேலும் கூறுவதாவது;பாசிசத்தைப் பற்றி பொதுவாக குணாம்சப்படுத்திக் கூறினால் போதாது, அது எவ்வளவு சரியாகஇருந்தாலும் போதாது. பாசிசத்தின் வளர்ச்சி பற்றிய அம்சங்களை தனிப்பட்ட பல நாடுகளில்

அதன் பல்வேறு கட்டங்களில் பாசிச சர்வாதிகாரம் எடுக்கும் பல்வேறு வடிவங்களை கணக்கில்எடுத்துக்கொண்டு அவற்றை விவரமாக படித்தறிய வேண்டியது அவசியமாகும். ஒவ்வொருநாட்டிலும் உள்ள தேசிய தனித்தன்மைகளை, பாசிசத்தின் குறிப்பிட்ட தேசிய அம்சங்களைஆராய்ந்து படித்தறிந்து உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். அதற்குத் தக்கபடி பாசிசத்திற்குஎதிரான சரியான போராட்ட வடிவங்களையும், முறைகளையும் வகுத்துக்கொள்ள வேண்டும்”;காலனி, அரைக்காலனி நாடுகளிலும் கூட விவாதத்தில் குறிப்பிட்டது போல் சில பாசிஸ்டுகுழுக்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அவை எந்த வகையிலும் ஜெர்மனி, இத்தாலி மற்றும் இதர முதலாளித்துவ நாடுகளில் நாம் வழக்கமாக பார்த்திருக்கிற பாசிச வகையைச்சார்ந்தது அல்ல. இங்கு மிகவும் தனித்தன்மையாக உள்ள பொருளாதார அரசியல், வரலாறுநிலைமைகளை படித்தறிய வேண்டும், கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தநிலைமைகளுக்கு தக்கவாறு பாசிசம் தனக்கென ஒரு வடிவத்தை எப்படிஎடுத்துக்கொண்டிருக்கிறது, இனி எதிர்காலத்தில் எவ்வாறு எடுக்கும் என்பதையும் படித்தறியவேண்டும்.;நமது கட்சியின் பாசிஸ்டு எதிர்ப்புப் போராட்டத்தில் ஆகப் பலவீனமான அம்சங்களில் ஒன்று,பாசிசத்தின் வாய்ச்சவடால் பிரச்சாரத்திற்கு போதுமான அளவில் நாம் உடனுக்குடன்பதிலளிப்பதில்லை. நாம் மெதுவாகவே பிரதிபலிக்கிறோம். இன்றுவரையிலும் நாம் பாசிஸ்டுசித்தாந்தத்திற்கு எதிரான போராட்டத்தைப் பற்றிய பிரச்சனைகளை தொடர்ச்சியாகபுறக்கணித்தே வந்திருக்கிறோம். பாசிஸ்டு சித்தாந்தம் பூர்ஷ்வா சித்தாந்தத்திலேயே ஆகப்பிற்போக்கான வகையைச் சேர்ந்தது. அது தனது மதிகெட்ட செயல்களினால் அடிக்கடி வெறிபிடித்த பைத்திய நிலையை எட்டிவிடுகிறது. இத்தகைய படுமோசமான ஒரு சித்தாந்தம்மக்களிடையே செல்வாக்குப் பெற முடியுமா என்று பல தோழர்கள் அதை நம்பக்கூடமறுக்கிறார்கள். இது ஒரு மிகப்பெரிய தவறாகும். முதலாளித்துவ சீரழிவின் முடைநாற்றம் அதன்சித்தாந்தம், கலாச்சார அடிஆழம் ஆகியவற்றின் மையத்திற்கே ஊடுருவிச் சென்றுஅழுகிவிடுகிறது. இந்த அழுகலிருந்து கிளம்பும் விஷக்கிருமிகள், விரக்தி அடைந்து தொல்லைகளில் தவழும் மக்களின் பல பகுதியினரிடத்தில் பரவி தொற்றிக்கொள்கிறது.

எந்தச் சூழ்நிலையிலும் பாசிசத்தின் சித்தாந்தத் தொற்று நோய் சக்தியை குறைத்துக் கணக்கிட்டு விடக்கூடாது. அதற்கு நேர்மாறாக நாம் நமது பக்கத்திலிருந்து தெளிவான,மக்களுக்கான வகையில் எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய வாதங்களின்அடிப்படையில், மக்களின் தேசிய மன இயல்புகள் தனித்தன்மைக்குத் தக்கவாறு ஒரு சரியான,நன்கு சிந்தித்து உருவாக்கப்பட்ட அணுகுமுறைகளின் அடிப்படையில் ஒரு மிக விரிவான சித்தாந்தப் போராட்டத்தை நடத்த வேண்டும்.பாசிஸ்டுகள் ஒவ்வொரு தேசத்தின் வரலாறு முழுவதையும் துருவித்துருவி ஆராய்ந்து தேடி அதில்சில வீரம்மிக்க, சிறப்பாகப் பெயர் பெற்ற பண்டைய சம்பவங்களையும், மரபுகளையும் சுட்டிக்காட்டி, தாங்கள் அதன் நேரடியான வாரிசுகள் என்றும் அந்த மரபின் வழிவந்தவர்கள்என்றும் காட்டிக்கொள்வார்கள். அதே சமயத்தில் மக்களுடைய தேசிய உணர்வுகளுக்குஇழுக்காகவும், பாதிப்பாகவும் உள்ள எந்த ஒரு சிறு விஷயத்தையும்கூட பயன்படுத்திக்கொண்டுபாசிசத்தின் எதிரிகளுக்கு எதிராக தங்கள் சிறப்பாயுதமாகப் பயன்படுத்துவார்கள். ஜெர்மனியில்ஒரே ஒரு நோக்கத்தோடு நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதுஜெர்மன் மக்களின் வரலாற்றைத் திரித்துக்கூறி பொய்யும் புளுகும் சேர்த்து அதற்கு ஒரு பாசிஸ்டுமுகத்தோற்றத்தைக் கொடுக்கிறார்கள்.

புதிதாகப் பொறித்தெடுக்கப்பட்ட தேசிய சோசலிஸ்டு வரலாற்றியலாளர்கள்:” ஜெர்மனியின் வரலாறு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, சில சிறப்பு மிக்க வரலாற்று விதிகளின் குண விசேசத்தினால் ஒரு குறிப்பிட்ட வகைப்பட்ட வளர்ச்சிக்கோடு ஏற்பட்டு, பட்டுச் சரிகை இழையோடி, வரலாற்று அரங்கில் தேசிய; என்றும் ஜெர்மன் மக்களின் மீட்பாளர் என்றும் ஆஸ்திரியாவிலிருந்து பெயர்ந்து வந்த அதிகாரத்தன்மை படைத்தவர்களாகவும்அமைந்துள்ளார்கள் என்று ஜெர்மன் வரலாற்றைச் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். இந்தப்புத்தகங்களில் ஜெர்மன் மக்களின் கடந்த காலத்திய சிறந்த மனிதர்கள் எல்லாம் பாசிஸ்டுகளாகஇருந்தார்கள் என்றும் மகத்தான விவசாயிகளின் பேரியக்கங்கள் எல்லாம் பாசிஸ்டு இயக்கத்தின்முன்னோடிகள் என்றும் வர்ணிக்கப்பட்டிருக்கின்றன.இத்தாலியில் முசோலினி மாவீரன் கரிபால்டியின் பெயரை வைத்து, தான் அவர் வாரிசு என்றுகூறி முதலெடுக்க பெருமுயற்சி எடுக்கிறான். பிரெஞ்சு பாசிஸ்டுகள் வீராங்கனை ஜோன்ஆப்ஆர்க்கை முன்வைக்கிறார்கள், அமெரிக்க பாசிஸ்டுகள் அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தின்பாரம்பரியங்களையும், வாஷிங்டன், லிங்கன் ஆகியோர்களின் மரபுகளையும் முன்வைத்துவேண்டுகோள் விடுக்கிறார்கள். பல்கேரிய பாசிஸ்டுகள் பதினேழாம் நூற்றாண்டின் தேசவிடுதலை இயக்கத்தைப் பயன்படுத்தி மக்களின் பெரும் மரியாதைக்குரிய வாச்சில் லேவ்ஸ்கி, ஸ்டீபன் காரட்ஜா மற்றும் இதர மாவீரர்களையும் அவர்களுடைய பெயர்களையும் உபயோகித்துக்கொள்கிறார்கள்.

கம்யூனிஸ்டுகள், மேற்கூறியவைகளுக்கும் தொழிலாளி வர்க்கத்தின் லட்சியங்களுக்கும் எந்தவிதசம்பந்தமும் இல்லையென்று கருதினால், மக்களுடைய கடந்த காலத்தைப் பற்றிய வரலாற்றுப்பூர்வமாக மிகச் சரியாக, மார்க்சிய - லெனினிய வழியில் தெளிவுபடுத்தி மக்களை ஒளிபெறச் செய்ய வில்லையானால், இன்றைய போராட்டங்களை மக்களுடைய கடந்தகால புரட்சிகரமான பாரம்பரியங்களுடன் இணைப்பதற்கு ஏதும் செய்யாமலிருந்தால் நாமே பாசிஸ்டுபொய்யர்களிடம் தேசத்தின் கடந்தகால வரலாற்றுச் சிறப்புகள் அனைத்தையும் எடுத்துக்கொடுத்து அவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு வழி செய்து கொடுத்தவர்கள் ஆவோம்.

ஆக தோழர் டிமிட்ரோவ் பாசிசத்தின் பொதுப்பண்புகளையும் அதன் பொதுவர்க்க இயல்புகளையும், ஒவ்வொரு நாட்டின் அதன் குறித்த பண்புகளையும் அதன் குறித்த வர்க்க ஆய்வுசெய்து புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் மற்றும் பாசிச இயக்கமானது தனதுவாய்ச்சவடால் மூலமும், பொய் பித்தலாட்டம் மூலமும், வரலாற்றை இட்டுக்கட்டியும் திரித்தும்புரட்டியும் தனது வர்க்க நலனை மறைத்து உழைக்கும் மக்களை எவ்வாறு ஏமாற்றுகிறது என்பதைஅம்பலப்படுத்தி மக்களுக்கு புரிய வைக்கிற ஒரு தொடர்ச்சியான சித்தாந்த போராட்டத்தைநடத்தாமல் பாசிசத்தை வெற்றி கொள்ள முடியாது என்கிறார்.புதிய காலனிய இந்தியாவில் உள்ள இந்துத்துவா பாசிசத்தை அறிந்து கொள்ள, புரிந்துகொள்ளஅதை வரலாற்றுப் பூர்வமாக ஆய்வு செய்வதுதான் சரியானதாக இருக்க முடியும். அதே சமயத்தில்இந்தியா ஒரு நாடாக, ஒரு இந்திய தேசமாக கட்டியமைக்கப்பட்ட வரலாற்றோடு, இந்து,இந்துமதம், இந்து தேசியம் மற்றும் இந்திய தேசியம் என்று பலதரப்பட்ட கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி வரலாறோடும், இணக்கமாக ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக வாழ்ந்த இந்து முஸ்லீம்மக்களை பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் பிளவுபடுத்தி இருதரப்பையும் மோதவைத்துலட்சக்கணக்கில் கொலை செய்த வரலாற்றோடும் இங்குள்ள தேசியஇன மக்களின் (தமிழர்,தெலுங்கர், கன்னடர் மற்றும் மலையாளி......இன்னபிற) தேசியஇன மொழிவாரிஅடிப்படையிலான தேசியத்தை புறக்கணித்துவிட்டு பாசிசம் உருவாவதற்கு அடிப்படையான செயற்கையான, ஆரிய இனம்-திராவிட இனம் என்ற பிரிட்டீஷ் காலனிய ஆதிக்கவாதிகளின் காலனிய இனவியல் மற்றும் மதரீதியான பிளவுவாத கோட்பாடுகள் உருவாக்கப்பட்ட வரலாறோடும் தொடர்புபடுத்தியும் பார்க்க வேண்டும்.

இங்கு 200 ஆண்டுகாலம் ஆட்சி செய்த முகலாயர்கள் மற்றும் 200 ஆண்டுகாலம் ஆட்சி செய்தஆங்கிலேயர்கள் இந்த நாட்டிற்குள் நுழையும்போது இந்தியா ஒரு திட்டவட்டமானஒருங்கிணைந்த நாடாகவோ ஒருங்கிணைந்த தேசமாகவோ ஒருங்கிணைந்த சட்டத்தைக்கொண்டுஆளப்பட்டு இருந்ததில்லை என்பது ஒரு வரலாற்றுப் பூர்வமான உண்மை. அப்படிஉருவாவதற்கான எந்த அடிப்படைத் தேவையும் இங்கு ஏற்பட்டு இருக்கவில்லை.முகலாயர்கள் உட்பட பலதரப்பட்ட அந்நிய பேரரசுகள் மற்றும் பிரிட்டீஷ் உட்பட டச்சு,போர்த்துகீசியர் மற்றும் பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்தியங்கள் வாணிபம் செய்யவந்து பின்னர் சூழ்ச்சியாக இங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அவைகளின் நோக்கமானது ஐரோப்பா கண்டத்து அளவிலான இந்த பரந்து விரிந்து கிடந்த பிரதேசத்தை கொள்கையடிப்பதற்கே ஆகும்.

ஆனால் அதில் ஒரு வித்தியாசம் மொகலாயர்கள் படையெடுத்து அதிகாரத்தை கைப்பற்றிஇங்கேயே வாழ்ந்து வந்தனர். அவர்களது சொத்துக்கள் இங்கேயே இருந்தது. இங்கேயேசெலவழித்தனர். இங்கேயுள்ள கலாச்சாரத்தோடு இயைந்து வாழ்ந்து வந்தனர்.

ஆனால் இங்கு கொள்ளையடித்துவந்த பிற காலனிய போட்டியாளர்களை வென்று இறுதியில்ஆட்சியில் அமர்ந்த பிரிட்டீஷாரோ தொடர்ந்து கொள்ளையடித்து இந்த நாட்டின் செல்வங்கள்அனைத்தையும் தனது சொந்த நாட்டுக்கு எடுத்துச் சென்றனர். அவர்கள் நம்மோடு கலந்துவாழவில்லை. நம்மை தீண்டத்தகாதவர்களாகவும், அடிமைகளாகவும் நடத்தினர். பிரிட்டீஷார்அதற்காக மட்டுமே சட்டதிட்டங்களை வகுத்து இங்குள்ள மக்களைக் கொண்டே ஒருபடையைக்கட்டி ஒரு கொடூர சர்வாதிகார ஆட்சியை நடத்தினர். இந்த பரந்த நாட்டில் அவர்களதுகொள்ளைகளையும் சர்வாதிகாரத்தையும் எதிர்த்து மக்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரைபோராட்டம் நடத்தினர். அவர்கள் ஆட்சியை எதிர்த்து ஒன்றுபட்டு போராடிய அனைத்துதரப்பினரையும் சதித்தனமாக பிளவுபடுத்தி மேலும் சாதி மற்றும் மதக்கலவரத்தின் மூலமும்கொடூர ஒடுக்குமுறையின் மூலமும் லட்சக்கணக்கில் கொன்று குவித்தனர். ......தொடரும்......

 


சினிமா, சின்னதிரை, செல்போன் சீரழிவு கலச்சாரத்தை பரப்பும் ஆளும் வர்க்க கருவிகளாக- சிபி

 



கலை இலக்கியம் பற்றிய கட்டுரை தொடரில் கலையின் வளர்ச்சி அதன் வரலாற்று போக்கில் அவை ஆளும் வர்க்கத்தை தூக்கி நிறுத்துவதை காணலாம். அதாவது நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலப்பிரபுக்களை விட குறைந்தவர்களாகவே கலைஞர்கள் மதிக்கப் பட்டனர். ஏனெனில் அவர்கள் நிலப்பிரபுக்களின் தயவில் வாழும் அடிமைகளாகவே இருந்தனர். இதனால் நிலப்பிரபுக்களின் தேவையை ஒட்டியே கலைகள் படைக்கப்பட்டன. கலைஞர் தன் சொந்த அனுபவ உணர்வுகளையோ,  பரவலான மக்களின் உணர்வுகளையோ, தன் கற்பனைகளையோ, தான் விரும்பியபடி கலைவடிவங்கள் மூலம் வெளிக்கொணர முடியா நிலையில் சுதந்திரமற்ற அடிமை நிலையில் இருந்தே கலை வடிவங்களைப் படைக்க நிர்ப்பந்திக்கப்பட்டான். இன்று நாம் வாழும் சமூகத்தில் ஆளும் வர்க்கத்தின் தேவைகளுக்காகவே சினிமா சின்னதிரை செயலாற்றிக் கொண்டிருக்கிறதென்றால் செல்போனோ நம்மை வேவுபார்பதோடு அதன் பல செயலிகள் பிறந்த குழந்தை முதல் எல்லா வயதினரையும் அடிமையாகவும் ஆக்கி உள்ளதென்றால் மிகையன்று.

ஆளும் வர்க்கம் தனக்கு இருக்கும் கருத்தியல் ஆயுதங்களுடன் இராணுவ அடக்குமுறை கருவிகளுடன் பரந்துபட்ட மக்களின் வரலாற்று தேவைகளை அபகரிக்கிறது. தேவைகளை உணர்ந்து கொண்டு உண்மை நிலையை அறிந்து கொள்வதை தடுக்கிறது. மொத்தத்தில் வர்க்க சமூகத்தில் பரந்துபட்ட பெரும்பாலான மக்களின் தேவைகள் ஆளும் வர்க்கத்தால் மறுக்கப்படுகின்றன. ஒடுக்கப்படும் மக்களின் நியாயமான தேவைகளும், தேவைகளை நிறைவேற்றத் தடையாக இருக்கும் ஒடுக்குதல்களும் இடையிலான முரண்பாடு தீர்க்கப்படும் பொழுதே மனித சமூகம் வளர்ச்சி அடையும்.

இன்று உலகை சுரண்டுகிற ஏகாதிபத்தியம், உலக மக்களின் முன்னால் அதை மறைத்துக் கொள்ள பலவேசம் போடுகிறது. தன் ஆதிக்கத்தின் கீழ் பலவந்தமாக நாடுகளை அடிபணிய வைக்கிறது. அதேசமயம் பல நாடுகளின் பிரச்சினைகளைக் கணக்கில் கொண்டு காரிய சாத்தியமான முறையில் நடந்து கொள்கிற சித்தாந்த கயிறுகளை திரிக்கின்றது. இதற்காக எத்தனையோ விதமான உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், கூட்டு அறிக்கைகள் தங்களை போல தனக்கேற்றது போல அந்த நாடுகளை  மூலதனச் சக்கரத்துக்குள் இழுத்துக்கொள்ளும் ஏகாதிபத்தியம். அதற்காக இரட்டை வேஷம் போடவும் செய்கிறது. ஒன்று நாகரீகமான முகம் மற்றது  கொடூரமான கிரிமினல் முகம்.

நாகரீகமான முகத்தால் மத்தியதர வர்க்கத்தை கவர்ந்து அவர்களுக்கு சமூக ஏணிப்படியில் உயரும் ஆசை கனவு காட்டுகிறது கவர்ச்சியாக அழைக்கின்றது. அனுபவிக்க விதவிதமான ஆடம்பர பொருட்கள் படிப்பு - படித்தவுடன் கை மேல் வேலை இவை அவர்களுக்கு ஓயாது விளம்பரப் படுத்தி அவர்களின் மனதை  ஆக்கிரமித்து விடுகின்றன. ஆனால் ஏழையான எளிய ஒடுக்கப்பட்ட பரந்துப் பட்ட மக்கள் இந்த ஒடுக்கும் அரசோடு மோதல் ஏற்படும் போது அவர்களுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும்  இடையிலான மோதல் கூர்மையடைகிறது, இங்கேதான் ஆளும் வர்க்கத்தின் மக்களுக்கு எதிரான ஜனநாயகம்(ஏன்ற பேசப்படும்) எதிரான ஒரு குரூரமுகம் வெளிப்படுகிறது.

இதனை அவர்கள் மக்கள் மீது எப்படி திணிக்கிறார்கள் என்றால்?

தனிநபர்கள் சினிமாவின் கதையோடு தமது வாழ்க்கை சம்பவத்தை இனங்கண்டு ஒன்றிவிடலாம். உதாரணமாக காதலில் தோல்வியுற்ற ஒருவர் சில சினிமாக்கள் ஒருதலை காதல், காதல் தோல்வி பேசும் படங்களோடு தன்னுடைய வாழ்க்கையோடு ஒன்றிபோவதை ஏற்று கொள்வதை போன்றே பல்வேறு ஒடுக்குமுறை ஆளாகும் பலரும் தன் மீது இழைக்கப்பட்ட குற்றங்களை சினிமாவில் பார்க்கும் பொழுது அந்த வலிகளை இதன் ஊடாக தன்னை உருவகப்படுத்திக் கொள்ளலாம் அதன் வடிகாலாக இதனை காணும் அவருக்கு நாம் என்ன சொல்வது?.

சினிமாவானது முதலாளித்துவ ஆதிக்கத்தின் விற்பனை பொருளாகவே இன்றும் உள்ளன. இங்கு நிலபிரபுத்துவ சிந்தனைகளும் மதிப்புகளும் இன்றும் ஆதிக்கம் பெற்று இருப்பதால் அவற்றை கலை இலக்கியம் மூலமாக முதலாளித்துவம் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கிறது குறிப்பாக ஒளிபடங்களான சினிமா சின்னத்திரையை பயன்படுத்தி கொள்கிறது.

சமுதாய உணர்வை நோக்கி சமுதாயத்தில் மாற்றியமைக்கக்கூடிய புரட்சிகர சினிமா பிற கலை இலக்கியங்களை ஆக்கி மக்களுக்கு வழங்க கூடிய பொருளாதார வாய்ப்புகள் இன்னும் முன்னேறவில்லை. இந்த நிலையில் மக்கள் முதலாளித்துவ நினைவுப் பொருட்களை வாங்குவது போலவே முதலாளிகள் வழங்கும் கலை இலக்கியங்களை பணம் கொடுத்து நுகர்கின்றனர் அதன் ஊடே அதன் அடிமையாகவும் நேரிடுகிறது.

டால்ஸ்டாய் புரட்சிகர எழுத்தாளர் அல்ல ஆயினும் லெனின் ரஷ்ய நிலப்பிரபுத்துவக் கொடுமைகளை டால்ஸ்டாயின் எழுத்துக்கள் மூலமே அறிந்தேன் என்று கூறினார். இதுவே நாம் எதிர்பார்க்கும் விமர்சனப் போக்கு.

கலை இலக்கியம் கருத்தியல் சார்ந்தவை மேற்கட்டுமானத்தை சார்ந்த ஒன்று.  மதம் பற்றி மார்க்ஸ் கூறும் போது "மக்களின் அபினி " என்று மட்டும் கூறவில்லை "ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு இதயமற்ற உலகின் இதயம்" "ஆத்மா அற்ற நிலையின் ஆத்மா" என்றும் கூறிய பின்னரே " மதம் மக்களின் அபின்" என்று சொன்னார்.

அபினி வெறும் மயக்கம் மட்டும் தருவதல்ல ஒரு பொய்மையான தற்காலிக சந்தோஷத்தையும் தருவதாகும் .இதை ஒழித்து எதார்த்தமான நிரந்தர மகிழ்வு ஏற்படுத்துவதற்கு பொய்மையின் தேவையை  விடுவிப்பதற்கேற்றசூழலை,  கடப்பாடுகளை மன நிலைமைகளை நாம் ஏற்படுத்த வேண்டும்.

பெரும்பாலான மக்கள் சினிமாவின் பல்வேறு  கலை வடிவங்களில் மயங்கி விடுகின்றனர். தற்காலிக பொய்மை மகிழ்வில் மயங்கி  ஆர்ப்பரிக்கின்றனர்.

எப்படி கோயில் ஆராதனைகளில் கோயில் பூஜைகளில் தன்னை மறந்து ஏதேதோ வார்த்தைகளை கூறி அங்கே மயங்கிக் கிடப்பது போல சினிமாவில் காட்டப்படும் பல்வேறு கற்பனைகளில் மூழ்கி கிடப்பது மதம் கடவுள் போன்ற கற்பனைகளே.

மீண்டும் நாம் மார்க்சின் கூற்றுப்படி வருவோம் மதம் என்ற அபினி மூலம் மக்களை பிரித்தும் மோதவிட்டும் தற்காலிக திருப்தி பெறுவதிலேயே இன்றும் மதவாதிகளும் ஆளும் வர்க்கமும் குறியாக உள்ளனர். மக்களுக்கு இதை உணர்த்தி நிரந்தர மகிழ்ச்சியுடன் சேர்ந்து நல்வாழ்வு கிடைப்கேற்ற சூழலை கடப்பாடுகளை மன நிலைகளை ஏற்படுத்தி பொய்மைகளிலிருந்து அவர்களை விடுவிக்கும். முயற்சிகளில் மக்களை நாம் ஈடுபடுத்த முயல வேண்டும்.

மார்க்சியம் எல்லாத்துறைகளிலும் குறுகிய நோக்கத்திற்கு விரோதமானது. உலக நாகரிகம் என்னும் வளர்ச்சிப்பாதையில் மார்க்சியம் தோன்றி முன்னேற்றம் அடைகிறது. எல்லா காலங்களிலும் வாழ்ந்து மறைந்த மூளை கூர்மையுடையோர்  மூளைகள் எழுப்பி உள்ள வினாக்களுக்கெல்லாம் விடை கூறுவது மார்க்சியம்- லெனின் ( மார்க்சிய அழகியல்- பேரா. நா. வானமாமலை பக்கம் 6).

சரி நாம் எதிர் நோக்கும் பிரச்சினைகளை பார்ப்போம்

இன்று நம் கையில் உள்ள செல்போன் முதல் சின்னத்திரை சினிமா போன்றவை நமது சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளை காண்போம் .

பண்பாட்டுத் துறையில் சினிமா ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் மிக கொடுமையாது. பண்பாட்டுத் துறையில் பாதிப்புகள் எனும்பொழுது ஆபாசத்தையும் வன்முறையையும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிற காரியத்தை மட்டுமே பார்ப்பதோடு நிறுத்தி விடக்கூடாது. மக்களின் பண்பாட்டு உரிமைகளை பறித்து நசுக்கும் ஆளும் வர்க்கத்தின் பண்பாட்டு ஒடுக்குமுறை கருவியாகதான் சினிமாவும் சின்னத்திரையும் பயன்படுகிறது என்ற அவலத்தை நாம் முக்கியமாகக் கருத வேண்டும்.

இன்று ஊடகத்துறை என்பது நவீன தொழில்நுட்பத்தை பல்வேறு விதங்களில் மக்கள் தொடர்பு சாதனங்கள் மூலமாக மூலை முடுக்கெல்லாம் சென்று. மக்களின் சகல நேரத்தையும் கபளீகரம் செய்து  கொண்டுள்ளதை பார்க்கிறோம். செய்தித்தாள்களும் பல்வேறு விதமான  பத்திரிகைகளும் சினிமா நடிகைகள் சினிமா சம்பந்தமாக செய்திகளை அதீத முக்கியத்துவம் கொடுத்து மக்கள் மத்தியில் கடை பரப்புகிறது.

பெரும்பாலான மக்களின் ஓய்வு நேரத்தை பொழுது போக்கிற்க்காக சினிமா மட்டுமே இருந்த நாள் போய்; இன்று வீட்டிற்குள் சின்னத்திரையும் கைகளில் செல்போனும்; படித்தவர்கள்- படிக்காதவர்கள், ஆண்கள்- பெண்கள் கிராமவாசி- நகரவாசி ,இளைஞர் - முதியவர் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எல்லோரரையும் ஏதோ ஒருவகையில் அவர்களை  ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது என்றால் மிகை அன்று.

பண்பாட்டுச் சீரழிவுகளை முன்னிலைப்படுத்துவது மூலம் இவர்களின் அநீதிக்கு எதிரான எதிர்ப்பு குணத்தை  மழுங்கடித்தும் அடிமை மனப்பான்மை விதைக்கவும் செய்கிறது, சமூகப் பொறுப்பை அழித்து சந்தர்ப்ப வாதத்தை முன்வைக்கிறது. தனிமனித சாகசங்களில்  நம்பிக்கை ஊட்டி கூட்டு செயல்பாடுகளை பின்தங்க வைக்கிறது.

சரி முதற்கண் நாம் இன்று பயன்படுத்தும் செல்போங்கள் பற்றி ஒரு பாமரன் பார்வையில் பார்ப்போம்.

அறிவியல் வளர்ச்சியே இன்றையஸ்மார்ட் போன்கள்அந்த வளர்ச்சியானது செல்போன்களின் பயன்பாட்டை பல மடங்கு அதிகரித்துவிட்டது.

விரல் நுனியில் உலகம், நினைத்த நேரத்தில் தொடர்பு, கருத்துப் பரிமாற்றம், பாதுகாப்பு, செய்திகள்... என செல்போன்களால் பலவித நன்மைகள் இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் பதிலுக்காக பலரின் மனம் ஏங்கிக்கிடக்கின்றனஎன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அழைப்பு ஒலிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வரவில்லையெனில், உடலுக்குள் பதற்றமான சூழ்நிலை (Anxiety) உருவாவதாகக் கூறப்படுகிறது.

மதுவைப்போல செல்போன்களும் போதைப் பொருளாக உருமாறி இருப்பது, இன்றைய காலத்தில் குறிப்பிடப்படவேண்டிய ஒன்று. இருபத்தி நான்கு மணி நேரமும் செல்போன்கள் நமது உடலோடு ஒட்டிக்கொண்டேதான் இருக்கின்றன.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், மேலும் சில செயலிகளைப் பயன்படுத்திய பின்னர், நமது மனநிலையில் உண்டாகும் வித்தியாசமான மாறுதல்களை உணர்ந்திருப்போம். இவையெல்லாம் உடல்நிலையை பாதிக்காமல், மேம்படுத்தவா செய்கின்றன? தொடர்ந்து இப்படிக் காதுகளையும் கண்களையும் அவதிக்குள்ளாக்கினால் இளம் வயதிலேயே அவை சோர்வடைந்துவிடும். ’செல்போனால் உடலும் மனமும் பாதிக்கப்படுகின்றன என்பதற்கு ஆதாரம் வேண்டும்என்று காத்துக்கிடந்தால், உங்கள் உடல்நிலையே விரைவில் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும்.

இன்று முழு நேரமும் செல்போன்களின் துணையுடனேயே வாழ்கிறோம். சிற்சில பாதிப்புகள் இருப்பது தெரிந்தும், அதற்குப் பழகிவிட்டது நமது வாழ்க்கை முறை. ’செல்போன் இல்லாமல் ஒரு நாள் நம்மால் நிம்மதியாக வாழ முடியுமா?’ என்பது நியாயமான கேள்விதான்.

இவை சில சதவீதம் மட்டுமே இன்னும் பல சதவீதம் செல்போனை பற்றி சாதரண மக்கள் புரிந்திருக்கவில்லை என்பேன் இதனை பற்றி வரும் தொடர்களில் விரிவாக விவாதிப்போம்.

இன்றைய சின்னதிரையானது மக்கள் பிரச்சினை பேசுவதை விட தனித்தனியான தனிநபர் பிரச்சினைகளை முன்னிறுத்தும் தொடர்கள் குடும்ப சிக்கலை பேச வரும் பல தொடர்கள் வெறும் நபர்களை மட்டுமே சூத்திரதாரியாக காட்ட முயல்கிறது. இவை மக்களை சமூகத்தில் இருந்து பிரித்து தனிநபர்களை பற்றி பேசும் சின்னதிரை தொடர்கள் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுக்கு காண்பதன் பெயரில் உண்மையில் வர்க்க சமூகத்தில் ஆளும் வர்க்கத்தை காபாற்றும் வேலையை திறமையாக செய்துக் கொண்டுள்ளது. மேலும் பல நிகழ்ச்சிகள் நகைசுவையின் பெயரிலும், நேரடி காட்சிகளிலும் அரங்கேறும் அபாசங்கள் சொல்ல தேவையில்லை.

உழைக்கும் மக்களுக்கு நாட்களை தள்ளுவது (கடந்து போதல்) பெரும்பாடாக உள்ள சூழலில் ஏகாதிபத்தியத்தின் ஏஜென்டுகளான ஆளும் வர்க்கத்தின் கருத்தாக்கங்களை சினிமாக்கள்/சின்னதிரைகள் வெளியிடுகின்றனர் கற்பனையில் வாழ சொல்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் தின போராட்டமே பெரும்பாடாக உள்ளபோது சினிமா மற்றும் சின்னதிரையில் அவர்களின் போராட்டம் துணிச்சல் வாதமாக அரசியல் லாபத்திற்காக கூழைக் கும்பிடு போடுபவர்களாக அரசியல் இலாபத்துக்காக தனிநபர்களோடு  நேருக்கு நேர் மோதுவதாக; தன் குடும்பத்திற்க்கு தீங்கு செய்தவனை மீது பழி வாங்குவதாக, கிடைத்த பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுபவனாக, இச்சமூகத்தில் முன்னேறி சமூகப் பொறுப்பு உள்ளவனாக, கொள்ளைக்காரனாக, விவசாயியாக, நகரத்துப் பொறுக்கியாக காட்டும் காட்சிகள் சமுதாயத்தில் உள்ள முக்கிய முரணை மூடியே மறைக்கின்றது அவனின் சமூக பணியை மடைமாற்றுகிறது.

பணம் சம்பாதிப்பது, தனிநபர்கள் செல்வம் குவிப்பது இவைதான் இந்த ஊடக அடிப்படையான சமூக கோட்பாடுகளாக உள்ளது.

பெண்களுக்கு  இலக்கணமாக இவர்கள் காட்டுவது தெருவோர இளைஞர்கள் கிண்டலடிப்பதும், ரவுடிகள், குண்டர்கள், பெண்களை கேலி செய்யும் காட்சிகளும், ஆணுக்கு பெண் அடிமையாக காட்டுவதும், பெண்களை வெறும் பலாத்கார காட்சிக்கு பயன்படுத்துவதும். இவை அனைத்துமே பாட்டாளிவர்க்க குணங்களுக்கு எதிரானவை இவைதான் சினிமா சின்னதிரையின் அடிப்படையாக உள்ளபோது அவர்கள் உழைக்கும் மக்களுக்கானவர்கள் இல்லைதானே.

இன்று புரட்சிக்கு சாதகமான சூழ்நிலை இருக்கிறது. அதே சமயம் குப்பை சினிமாக்களும் மக்களை முடமாக்கும் சின்னதிரை தொடர்களும் பெருகி இருக்க காரணம் மக்களின் சிந்தனை புரட்சிகரமாக்க படவில்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு தயார் செய்யக்கூடிய புரட்சிகர அணி மக்கள் மத்தியில் ஓரணியில் இல்லை மேலும் பிளவுபட்டுள்ளது.  இங்குள்ள புரட்சிகர இயக்கங்கள் தன்னார்வக் குழுக்களாலும் பல்வேறுவிதமான மார்க்ச்சிய விரோத  திருத்தல்வாத சந்தர்ப்பவாத போக்குகளாலும் பிளவுட்டு கிடக்கின்றன. முன்னணிப் படையாக ஒரே கட்சியாக வடிவெடுக்க வில்லை, அது வடிவெடுக்க வேண்டிய தேவை இன்றுள்ளது அதனை சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று அவர்கள் சிந்தித்தால் சிறப்பு.

இன்று சினிமா சந்தையானது அரசாங்கத்தின் கலாச்சார கொள்கைகளில் மூடிமறைந்துள்ளது அவை ஆளும் வர்க்க பிற்போக்குதனங்களை முழு வேகத்தோடு பிரசாரம் செய்கிறது. ஆளும் பாசிசக் கரங்கள் மக்களை கலாச்சார ரீதியில் அடிமையாக்க சினிமாவை மற்றும் சின்னதிரையை ஒரு வலுவான கருவியாக பயன்படுத்துகின்றன .மேலும் மேலும் அவர்களை சமூக பொருளாதார அரசியல் சித்தாந்த ரீதியில் அடிமைப்படுத்துகின்றன.

குரூரமான சுரண்டலின் விளைவாக மக்களிடம் கொப்பளிக்கும் எதிர்ப்புணர்வுக்கு வடிகால் தான் இத்தகைய திரைப்படங்கள் செயலாற்றுகின்றன அவை மக்களின் சமூக தேவையை முன்நிறுத்தவில்லை முன்னெடுக்க வேண்டிய கட்டாயமும் சமூக பொறுப்புள்ள முற்போக்குவாதிகளும் இதனை உணர்ந்து செயல்படுவார்கள் என்ற நோக்கத்தோடு.

தொடரும்………..

 

பரிவர்த்தனை – சத்யா


 

என்னதான்  நாற்காலிக்கு நாலுகால் இருந்தாலும் தானாக நடந்து சந்தைக்குப் போய் தன்னைத்தானே விற்றுக்கொள்ள முடியாது என்பதுதான் நிதர்சனம்இந்த நிதர்சனம் எல்லா பண்டங்களுக்கும் பொருந்தும்எனவே எல்லா பண்டங்களுக்கும் ஒரு உடைமையாளர் இருக்கிறார்பண்டங்கள் உயிரற்ற பொருட்கள் என்பதால் தங்கள் உடைமையாளர் யார் என்பதை அவற்றால் நிர்ணயம் செய்ய முடியாதுஒரு நாற்காலி தன் மீது யார் ஏற வேண்டும் என்ற முடிவை எடுப்பதில்லைஆனால் யார் நாற்காலி ஏற வேண்டும் என்ற முடிவை மனிதர்கள் எடுக்கிறார்கள் என்பது வேறு விஷயம். அது இந்த பகுதிக்கு சம்பந்தமில்லாததுஆனால் ஒரு பண்டத்தின் உரிமை மனிதர்களால் எடுத்துக் கொள்ளப்படுகிறதுநாற்காலி போன்ற மனித உழைப்பு தேவைப்படும் பண்டமாக இருந்தால்அல்லது பிற கைவினைப் பொருட்களாக இருந்தால் அதை உருவாக்கியவர் அதன் உரிமையாளராகிறார்அல்லது மாணிக்கம் மரகதம் போன்ற ஆபரணக் கற்கள் பண்டமாயிருந்தால் அதைக்கண்டெடுப்பவர் அதன் உரிமையாளராகிறார்எது எப்படியாயினும் தனது உடைமையாளரை பண்டம் தீர்மானிப்பதில்லை.

 

இப்படி இருக்கையில் ஒருபண்டம் இன்னொரு பண்டத்துடன் கொண்ட தொடர்பானது அதன் உரிமையாளர்கள் கொண்ட தொடர்பைப் பொறுத்தே யுள்ளதுஒரு கிராம் தங்கத்துக்கும் ஒரு மூட்டை அரிசிக்கும் உள்ள தொடர்பு அதன் உரிமையாளர்கள் கையிலேயே உள்ளதுஇப்போது கந்தசாமியிடம் ஒருமூட்டை அரிசியும்முனியசாமியிடம் ஒருகிராம் தங்கக்காசும் இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம்ஒரு வேளை முனியசாமியும்கந்தசாமியும் சந்திக்கவேயில்லை எனில் அந்த இரு பண்டங்களுக்கும் எந்த உறவுமின்றிபோகும் வாய்ப்புள்ளதுஒரு வேளை சந்தித்தாலும்இருவருக்கு மிடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படாத வரையில் இவ்விருபண்டங்களுக்கும் இடையே எந்த தொடர்பும் ஏற்படவாய்ப்பில்லைஇது போன்ற ஒரு ஒப்பந்தத்தின் மூலமாகவே பரிவர்த்தனை நிகழ்கிறதுஅந்த ஒப்பந்தம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பெரிய அளவில் இருந்தாலும், ‘ஏம்பாநான் ஒரு கிராம் தங்கத்தை உனக்குதரேன்நீ ஒரு மூட்டை அரிசியை எனக்கு கொடு’ எனும் படி சிறியதாய் இருந்தாலும் ஒப்பந்தம் ஒப்பந்தம்தான்.

ஒருநாள் முல்லா சந்தைக்குப் போனார். அங்கே ஒரு ஏழை விவசாயி சோகமாக அமர்ந்திருந்ததைப் பார்த்தார். உடனே அவனிடம்சென்றுஏனப்பா சோகமாய் இருக்கிறாய்?’ என்று கேட்டார்.

இந்த உதவாக் கரை கழுதையை விற்கலாம் என்றுவந்தேன். நோஞ்சானாய் இருக்கிறது என்று யாரும்வாங்கமாட்டேன் என்கிறார்கள்என்று புலம்பினான் விவசாயி.

சரி வா நான் விற்றுத் தருகிறேன்என்று அவனை கூட்டிக் கொண்டு சந்தைக்கு சென்றார் முல்லா.

சந்தைக்குப் போனதும் முல்லா கழுதையைப்பற்றி இல்லாத பொல்லாத கதைகளை அல்லிவிட்டார், ‘இந்தகழுதை மூணுமூட்டைபொதிசுமக்கும். காலையிலிருந்து இரவு வரை ஓய்வேயின்றி உழைக்கும்அதே நேரம் கொஞ்சமாகவே சாப்பிடும் அதனால்தான் இளைத்துப் போய் உள்ளது’ என்றெல்லாம் என்னென்னமோ சொன்னார்.


முல்லா சொன்னதைக் கேட்டதும் சந்தையில் கழுதைக்கு கிராக்கி அதிகமாகிவிட்டதுஇரண்டு மடங்கு விலை கொடுத்து கழுதையை வாங்கக் கூட மக்கள் முன் வந்தனர்.

கழுதையை விற்க  வந்த விவசாயி வேகமாய் முல்லாவிடம் வந்து கழுதையின் கயிற்றைப்பிடுங்கினான்.

 விடுங்க என் கழுதையைஇவ்வளவு நல்ல கழுதையை என்கிட்ட இருந்து விற்கப்பார்க்கறீங்களா?’ என்று சிடுசிடுத்துவிட்டு கழுதையை ஒட்டிக் கொண்டு வீட்டுக்குப் போனான்.

இந்த கதை வேடிக்கையாய் சொல்லப்பட்டாலும்இதில் ஒரு முக்கியமான விஷயம் உள்ளதுஎந்த ஒரு உரிமையாளரும் தனக்கு தேவையான பண்டத்தை விற்பதில்லைதேவையில்லாத பண்டத்தையே விற்க முற்படுகிறார்நூறு ஆப்பிள் வைத்திருக்கும் ஒருவன்தனக்கு பத்து ஆப்பிள் தேவைப்படுகிற தென்றால் அதை எடுத்துக் கொண்டு மீதியுள்ள தொண்ணூறு ஆப்பிள்களையே விற்பான்நூறையும் விற்று விட்டு மீண்டும் தனக்கு தேவைப்படும் பத்து ஆப்பிள்களைத் தேடி அலையமாட்டான்.  வேறு வார்த்தையில் சொல்வ தென்றால் நூறு ஆப்பிள்களில் தொண்ணூறு ஆப்பிள்கள் அவனுக்கு தேவையில்லாததுஅதைத்தான் பரிவர்த்தனை செய்ய முன் வருவான்அதேபோல் வாங்குபவனும் தனது தேவைக்கு ஏற்பவே பரிவர்த்தனை செய்வான்தொண்ணூறுமாம் பழம் தேவைப்படும் ஒருவன் அதற்கு பதில் தொண்ணூறு ஆப்பிள்களை வாங்க ஒப்புக் கொள்ளமாட்டான்இதை வேறு மாதிரி சொல்வதென்றால்பண்டத்தை விற்பவருக்கு அந்த பண்டத்தால் நேரடி பயன்மதிப்பு இல்லைஅதே நேரம்பண்டத்தை வாங்குபவருக்கு அந்த பண்டத்தால் நேரடி பயன்மதிப்பு உள்ளதுபண்டத்தை விற்பவருக்கு பண்டத்தின் பயன்மதிப்பு அதன் பரிவர்த்தனை மதிப்பு மட்டுமே .அதாவது தொண்ணூறு ஆப்பிளை விற்பவருக்கு அந்த ஆப்பிள் தரும் பயன்மதிப்பு அதைபரிவர்த்தனை செய்து கிடைக்கும் பண்டமேயாகும்அதாவது கந்தசாமி தொண்ணூறு ஆப்பிளை ஒரு பேண்ட் சட்டைக்கு முனியசாமியிடம் விற்கிறார் என்று வைத்துக்கொண்டால்கந்தசாமியைப் பொறுத்தவரை தொண்ணூறு ஆப்பிள்களின் பயன்மதிப்பு  ஒரு பேண்ட் சட்டைதான் அதை தலைகீழாக முனியசாமிக்கும் கொள்ளலாம்.

 எந்த ஒரு உரிமையாளரும் தன்கையிலிருக்கும் பண்டத்தைக் கொண்டே பிறபண்டங்களைமதிப்பிடுவார்.எடுத்துக்காட்டாகநூறுஆப்பிள்வைத்திருப்பவர்அதற்குஇணையாகஐம்பதுகிவிபழங்களையோ,இருநூறுமாம்பழங்களையோ,முன்னூறுஎலுமிச்சம்பழங்களையோமதிப்பிடுவார். இந்த மதிப்பீடு எல்லாவற்றையும் தனது கையிலுள்ள ஆப்பிள் என்ற பண்டத்தை அடிப்டையாகக் கொண்டே செய்வார்இதேபோல் எலுமிச்சம் பழம் வைத்திருப்பவர் எலுமிச்சம் பழத்தைக் கொண்டும்மாம்பழம் வைத்திருப்பவர் மாம்பழங்களைக் கொண்டும் மதிப்பிடுவர்ஆனால், எந்த ஒரு பண்டமும் ஒரு பொதுவான மதிப்பீட்டுக்குள்வராது.மேலே சொன்னது போல் ஒரு ஒப்பீட்டு மதிப்பாகத்தான் அவற்றைக் கொள்ள முடியும் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்இவ்வாறு ஒப்பீட்டு மதிப்புதான் ஒரு பண்டத்தின் மதிப்பை நிர்ணயம் செய்கிறது எனும் போது சமூக பரிவர்த்தனை இல்லாமல் எந்த பண்டத்துக்கும் பொதுவானமதிப்பு இல்லை. ‘சந்தைக்கு வந்தாதான் சாதி மல்லி விலைபோகும்,   செடியிலேயே இருந்தா கருகித்தான் போகும்’ என்பதுதான் அதன் பொருள்.

பண்ட மாற்று முறை மிக எளிமையான  ஒருசூத்திரத்தைக்கடைபிடிக்கிறது. நாம்ஆப்பிள்,மாம்பழம்ஆகியவற்றைஇரண்டுபண்டங்களாகக்கொண்டால் 100 ஆப்பிள்கள்=200 மாம்பழங்கள்என்றுபண்டமாற்றம்செய்கிறோம்என்றால்100 ஆப்பிள்களின்பயன்மதிப்பும் 200 மாம்பழங்களின் பயன்மதிப்பும் ஒன்று. அல்லது ஒரு ஆப்பிளின் பயன்மதிப்பு இருமாம்பழங்களின் பயன்மதிப்புக்கு இணையானதுஅதே நேரம் பண்டமாற்றுமுறையில் எல்லா உரிமையாளர்களும் தங்கள் பண்டங்களை உயர்ந்த மதிப்பிற்கே பரிவர்த்தனை செய்யவேண்டும் என்று விழைகிறார்கள்இதனால் பண்டங்களின் பொதுவான மதிப்பு என்பது இல்லாமலே போகிறது.  இந்த இடத்தில் தான் பணம் என்ற பண்டம் அறிமுகமாகிறதுபணத்தைப் பொறுத்தவரை எப்போதும் எல்லோரிடமும் செல்லக்கூடிய ஒருபொதுவான பண்டமாகவும் அதே நேரம் எந்த பண்டத்துடனும் பரிவர்த்தனைக்குப்பயன் படக்கூடிய பொதுவான மதிப்புடைய பண்டமாகவும் மாறுகிறதுமற்ற பண்டங்களில் இல்லாத சிறப்பம்சம் என்னவெனில் பணத்துக்கு எப்போதுமே பயன்மதிப்பு இருந்துகொண்டிருக்கும் என்பதும், பணத்துக்கு எல்லோரிடம் பயன்மதிப்பு இருக்கும் என்பதுதான்.

 இறுதியாக சொல்வதென்றால்எந்த மரமும் பணத்தைக் காய்ப்பதில்லை, ஆனால் பணத்தால் எந்த மரத்தில் காய்ப்பதையும் வாங்கிவிட முடியும்!”

கலை இலக்கியம்-சிபி

 

 

இத்தொடரின் மூன்றாம் பகுதி இவை.இருவேறு படங்களை இங்கே பகிர்ந்துள்ளேன் அவற்றின் காலமும் களமும் வெவ்வேறானவை இரண்டையும் ஒன்றாக போட்டு குழப்பிக் கொள்வதிலே இன்றுள்ள பிரச்சினை.

இதற்க்கு முன் நாம் கண்டவை சுருக்கமாக:- உண்மையான கலைப்படைப்பு மக்களிடம் உள்ள கலைஞனைத் தட்டி எழுப்புகிறது; அவர்களது உலகக் கண்ணோட்டத்தை மட்டுமல்லாமல், அழகியல்கலையியல் ரசனைகளையும் அவர்கள் உருவாக்கிக் கொள்ள வழி செய்கிறது“.-லெனின்

மாவோ சொல்கிறார்: “எம்முடைய இலக்கியமும் கலையும் அடிப்படையாகத் தொழிலாளர்கள், விவசாயிகள், படைவீரர் களுக்கானவை. பரவலாக்குதல் என்பதன் பொருள் அவர்களிடம் பரவலாக்குதல்; தராதரங்களை உயர்த்துதல் என்பதன் பொருள் அவர்களுடைய தற்போதைய நிலையிலிருந்து, அந்த மட்டத்திலிருந்து முன்னேற்றுவது என்பதாகும். அவர்களுக்குச் சாதகமானதும், அவர்களால் உடனே ஏற்றுக் கொள்ளக் கூடியதும் எதுவோ அதையே நாம் பரவலாக்க வேண்டும். எனவே, அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு முன், அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பணி இருக்கிறது. தராதரங்களை உயர்த்துவதற்கு இது இன்னும் அதிகமாகப் பொருந்தும்அதாவது இலக்கியமும் கலையும் எந்த அடித்தளத்திலிருந்து உயர்த்தப்படுவது? பரந்துபட்ட தொழிலாளர், விவசாயிகள், படை வீரர்களின் அடித்தளத்திலிருந்தே

தன் அனுபவங்களை சமுதாயத்தோடு பகிர்ந்து கொள்வதன் மூலமே அறிவியல் வளர்ச்சியும் ஆராய்ச்சியும் நாம் இன்று வளர்ந்து நிற்பதற்க்கு சாட்சியங்கள்.

ஒவ்வொரு மனிதனிடமும் படைப்பாற்றல் உள்ளது. அது அவனது உழைப்போடு ஒன்றியது. தன் உள்ளுணர்வுகளுக்கு - அனுபவம் மூலம் ஏற்பட்ட உணர்வுகளுக்கு - வடிவம் தரும் ஆற்றல் அவனுக்கு உண்டு. அதே வேளை மற்றவர்களது படைப்புகளை புரிந்து சுவைக்கும் அழகுணர்வும் மனிதனிடம் மட்டுமே உள்ள குணமாகும்.

சமுதாயம் பல உள் முரண்பாடுகளைக் கொண்டது. இம் முரண்பாடுகள் சமுதாயத்தை மாற்றத்தை நோக்கி இயக்கிக் கொண்டேயிருக்கும். இச் சித்தாந்தத்தைத் தாங்கி நிற்பதுவே இயக்கவியல் பொருள்முதல்வாதமாகும்: சமுதாயம் இயக்கமற்றது, நிலையானது என்று கருதுவது கற்பனைவாதமாகும் இவை கருத்துமுதல்வாதிகளின் வேலையே.

அழகுணர்வின் கோட்பாடுகள் யாவும் பொருள் விற்ப்னையை நோக்கியே வளர்க்கப்படுகின்றன. வாணிபக் கலைக்கே (Commercial Arts) முதலிடம் தரப்படுகிறது. கலைக் கல்லூரிகளிலிருந்து வெளியேறியதும் மாணவர்கள் கூலியடிமை வேலைக்கே தேடி அலைகின்றனர். முதலாளித்துவத்தில் கலைஞன் கூலியடிமையாகி பரந்த சந்ததியை நோக்கி கலைப்படைப்பை படைக்கும் படி நிர்ப்பந்திக்கப் படுகிறான். இதனால் அவன் கலை உணர்வை மிகவும் படுமோசமாக்க முயற்சிக்கிறான், கற்பனையை நாடுகிறான் சமூக எதார்த்ததை விட்டு ஆபாசத்தையும் வன்முறையையும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிற காரியத்தை மட்டுமே செய்கிறான். இவை மக்களின் பண்பாட்டு உரிமைகளை பறித்து நசுக்கும் ஆளும் வர்க்கத்தின் பண்பாட்டு ஒடுக்குமுறை கருவியாகதான் சினிமாவும் சின்னத்திரையும் பயன்படுகிறது என்ற அவலத்தை நாம் முக்கியமாகக் கருத வேண்டும் (இன்றைய சமூகத்தில் சினீமா சின்னத்திரையின் சீரழிவு கட்டுரையில் விரிவாக பார்ப்போம்).

கலையின் தோற்றம்:-

கலைஞன் சமுதாயத்தை விட்டு அதீதக் கற்பனையில் தன் படைப்புகளே ஆக்க நேரிட்டது. இதனாலேயே நிலப்பிரபுத்துவ கலைகள், இலக்கியங்கள் யாவும் கற்பனாவாத (Romantism) நிலையில் படைக்கப்பட்டன.

நடுவிலே வேட்டையாடப்பட்ட புலி; அதைச் சுற்றிவந்து ஆடுகின்றனர். அவர்களது கரங்களிலே அம்பு, வில்லு, ஈட்டி, தடிகள். ஆதி மனிதனது ஆயுதங்கள். புலியைச் சுற்றி வந்து குரல் எழுப்புகின்றனர். ஆட்டத்திலே, உடல் அசைவிலே ஒரு ஒழுங்கு: அமைதி குரல் ஒசையிலேயேயும் ஒருவித ஒழுங்கு அமைதி. குகைகளின் முன்னே நடை பெறும் அந்த ஆட்டத்திலும் ஒசையிலும் பெண்கள், குழந்தைகள் கூட பங்கு பற்றுகின்றனர், குரலிலே .. ஒலிகளே. சொற்கள் ஏதும் பிறக்கவில்லை.குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்டவர்களால் நடாத்தப்பட்ட கலை நிகழ்ச்சியல்ல இது. வெற்றிக்களிப்பு உணர்வினுல் உந்தப்பட்ட ஆதி மனிதனின் ஆட்டம்; இசை, இயற்கையானது; இயல்பானது. கலை உணர்வு மனிதனேடு பிறந்தது.

புலியை வேட்டையாடி விட்டனர். அன்றைய உணவுப் பிரச்சனை தீர்ந்துவிட்டது. கைகளில் அவர்கள் வேட்டையாட எடுத்துச் சென்ற கருவிகள். அவைகள் வெற்றியைத் தந்தனமனிதர்களிடை தேவைகள் அதிகரித்து வேலைப் பிரிவினை ஏற்படாத காலம்; சுதந்திரமான ஆதி மக்கள்; சுதந்திரமாக ஆடிப்பாடினர். அவர்களது உடலசைவிலே ஒருவித ஒழுங்குமுறை, கால்களைத் தூக்கி வைப்பதில் ஒருவித அமைதியைக் கண்டோம் . காலப்போக்கில் இதுவே கூத்து, நடனம், இன்றைய பலவித நடனம் இங்கிருந்து வந்தவையே  உடலசைவுக்கலை வடிவங்களாக வளர்ந்தன. குரலிலே ஏற்பட்ட ஒலிநயம், ஓசை அமைதி, வார்த்தைகள் தோன்றிய பின் கவிதையாக, பல்வேறு இசை வடிவங் களாக வளர்ந்து வந்துள்ளன. அன்றைய புலி வேட்டையின் வெற்றிக்களிப்பும் , ஆட்டமும், அக்கணக் குழுவினரது ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துகிறது; தாம் தயாரித்த ஆயுதங்களின் (உற்பத்திக் கருவிகளின்) வளர்ச்சியையும் வன்மையையும் பறைசாற்றுகிறது. மறுநாள் யாவரும் மேலும் ஆர்வத்தோடு வேட்டைக்குச் செல்வதற்கு அக்கலை நிகழ்ச்சி மேலும் உந்து சக்தியாக விளங்குகிறது.ஆகவே அவர்களது புலி வேட்டை ஆகிய உழைப்பின் வெற்றியிலிருந்து இயல்பாகப் பிறந்த கலை நிகழ்ச்சி ஒரு உந்து சக்தியாகி மீண்டும் உழைப்பில் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தி விடுகிறது; உற்பத்திக் கருவிகளின் வெற்றியையும் அவற்றை மேலும் வளர்த்தெடுப்பதில் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.உழைப்பும் கலையும் இணைந்தவை;-மனிதன் சுதந்திரமாக வாழ்ந்தபோது உழைப்பும் கலையும் வாழ்வோடு ஒன்றிணைந்திருப்பதை காணலாம். உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடையாத போதும் உற்பத்தி றவு சுமுகமாக அன்று இருந்தது.

உழைப்போடு கலை உணர்வு இணைந்து உந்து சக்தியாக விளங்கு வதை ஒடம் வலிக்கும்போது மீனவர் கூட்டமாக இசை எழுப்புவதிலிருந்தும் வயலில் உழைக்கும்போது விவசாயிகள் பாடுவதிலிருந்தும் காணலாம்.உணவு, தற்காப்பு இரண்டுமே ஆதி மனிதனது அடிப்படைத் தேவைகளாக இருந்தன. இவற்றில் வெற்றி பெறுவதற்கு மனிதன் கூட்டாக, ஒரே சமூகமாக வாழவேண்டி நேரிட்டது. மனிதனின் தனிச்சிறப்பு சமூக வாழ்வும் சமூக உழைப்புமாகும். இவற்றின் மூலமே இயற்கையின் நுட்பங்களை சிறிது சிறிதாக அறிந்து, அதை வெற்றிகொண்டு, தன் தேவைக்கேற்ப இயற்கையை அடிமைப்படுத்த மனிதன் ஆரம்பித்தான். இப்பெரிய, நீண்ட போராட்டத்திலும் பயணத்திலும் அவனுக்குத் துணையாக நின்றவை அவனது (1) பயிற்சி அல்லது நடைமுறை (2) அனுபவம் அல்லது அனுபவத்தின் தொகுப்பு. உணவிற்கும் தற்காப்பிற்குமாக இயற்கையில் கண்ட கல்லை எடுத்து வீசிய மிருகம் காலப்போக்கில் தன் தேவைகளுக்காக (உணவு, தற்காப்பு) கல்லை கல்மேல் தேய்த்து கூராக்கத் தொடங்கியபோதே மனிதனாக மாறத் தொடங்கினான்.  உற்பத்திக் கருவிகளை உற்பத்தி செய்யும் மிருகமே மனிதன் ஆவான்.  தன் புறத்தேவைகளுக்காக உற்பத்திக் கருவிகளை கூர்மையாக்கிய மனிதன் அக உணர்வு வெளிப்பாடுகளை வெளிப்படுத்த பல்வேறு இசைக்கருவிகளையும் ஆக்கத் தவறவில்லை.புறம், அகம்:- அனுபவ உணர்வு இரு சக்திகளாக வெளிப்படுகிறது. (1) உற்பத்திக் கருவிகள் (2) கலை வடிவங்கள். உற்பத்திக் கருவிகள் அவனது புறத்தேவைகளான உணவு, பாதுகாப்பு, உடை, வீடு நுகர்பண்டங்கள், ஆகியவற்றை ஆக்கி, மேலும் படைக்க உதவுகின்றன. கலை வடிவங்கள் அவனது அக உணர்வுத் தேவைகளை பூர்த்தி செய்து அவனது ஆக்க சக்திக்கு மேலும் உந்து சக்தியளிக்க உதவுகின்றன.மனிதர் ஒவ்வொருவரிடமும் இயல்பாகவே படைப்பாற்றல் உள்ளது. அதன்மூலமே உற்பத்திக் கருவிகளைக் கூர்மையாக்கிதன் புறநிலைத் தேவைகளுக்காக உற்பத்தியைப் பெருக்குகிறான், அக நிலையை, அக உணர்வுகளை, அனுபவ உணர்வுகளை கலை வடிவமாக வெளிக்கொணர்கிறான். இது அவனது உற்பத்தித் திறனோடு ஒட்டியது; அவற்றிற்கு உந்துசக்தி ஆவது. ஆதி மனிதனது வேட்டை ஆடிய வெற்றிக்களிப்பின் ஆட்டத்தில் இதனையே கண்டோம். வேலைப்பிரிவினை ஏற்பட்ட பின்னர் உற்பத்திக் கருவிகளை செய்வதும், கலை வடிவங்களைப் படைப்பதும் ஒருசிலரின் ஆதிக்கத்தில் எவ்வாறு வந்தது என்பதனை பின்னர் பார்ப்போம்.உற்பத்திக் கருவிகள் போலவே கலை வடிவங்களும் நுண்கலைக் கருவிகளும் வானத்திலிருந்து வந்தவையல்ல. மனிதனாலேயே படைக்கப்பட்டவை. தோலிசை (மத்தளம்), நரம்பிசைகள் (மிருகதசைநார்) மனிதனது உணவு வேட்டையிலிருந்து பிறந்த கருவிகளே. வண்டு துளைத்த மூங்கில் குழாயின் ஒலியைக் கேட்டே புல்லாங்குழலைக் கண்டான் மனிதன். பானை வனையத் தொடங்கியதும் கடம் என்ற கருவி தோன்றியதிலும் வியப்பில்லை.

தன் சுற்றுபுறம் ஒட்டிய மிருகம், பறவை, பொருட்களுக்கு குறியீட்டு வடிவமைத்து தந்த மனிதன் காலப்போக்கில் அதை ஓவியக்கலையாக வளர்த்தான். ஒவியம் இரு பரிமாணங்களைக் கொண்ட கலை வடிவமே. பின் அவற்றிற்கு முழு உருவம் தரமுயன்றன். பானை வணையத் தொடங்கியதோடு கழிமண்ணில் உருவங்களை செய்தான். பின்னர் மரம், கல், பளிங்குக்கல், பித்தளை ஆகியவற்ருல் முப்பரி மாண உருவங்களை செதுக்கினன். சிற்பக்கலை வளர்ச்சியடைந்தது.உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியோடுதான் கலைகளும் வளர்ச்சியடைந்தன. கூர்மையான கருவிகள் இன்றி சிற்பக்கலை வளர்ச்சிஉற்பத்தி கருவிகள் வளர்ச்சிபெற மனிதனல் உபரியாக (அடிப் படைத் தேவைக்கு மேலதிகமாக) உற்பத்தி செய்ய முடிந்தது அன்றாட உணவுப் போராட்டம் நீங்க ஓய்வு கிடைத்தது. அவ்வேளை உற்பத்திக் கருவிகளோடு கலைகளையும் வளர்க்கத்தக்க வாய்ப்பு ஏற்பட்டது. அதோடு மனித சமுதாய வளர்ச்சியும் வேகம்பெற்றது. ஆயினும் உபரி உழைப்பு பறிக்கப்படும் நிலையில் உழைப்பிலும் கலையிலும் எவ்வாறு பாதிப்பு(ஏற்பட்டன என்பவை பற்றி பின்னர் ஆராய்வோம்.வெறும் கலை வடிவங்களில் அழகுணர்வு மட்டுமல்ல, மனிதன் தன் தேவைக்காக பண்டங்களைப் படைக்கும்போதும் தன் படைப் பாற்றலையும் கலையுணர்வையும் வெளிப்படுத்துகிறான். பானை வனை வதிலிருந்து பறக்கும் விமானத்தைப் படைக்கும்போதும் அவற்றில் அழகைப் படைத்துக் காட்டுகிறான், சேலைகள், குவளைகள், கூடைகள், விளக்குகள், மேசைகள், நாற்காலிகள், எழுதும் பேணுக்கள் ஆகிய பண்டங்களைப் படைக்கும்போதெல்லாம் புதுமையாகவும், அழகாகவும் மனிதன் படைப்பதை காண்கிறோம். கடைத்தெருவிற்குச் சென்று பண்டங்களை துணிகளை வாங்கும்போது நீங்கள் எவ்வாறெல்லாம் கவரப்படுகிறீர்கள். தேர்ந்தெடுக்க சிரமப்படுகிறீர்கள், காரணம் பண்டங்களை ஆக்குவதில் செலுத்தப்பட்ட கலை உணர்வுக்கும் உங்களது அழகுணர்வுக்கும் ஏற்படும் முரண்பாடாகும்.ஆகவே கலைகளை நாம் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.நுண் கலைகள்: ஒவியம், சிற்பம், கூத்து, நடனம், பல்வேறு இசை வடிவங்கள் (தோல், நரம்பு, குழல், கருவி, குரல் முதலியன) முதலானவை.பயன்படு கலைகள்: சேலைகள், கார், கண்ணுடி வகைகள், வீடு, தளபாடங்கள், நுகர் பண்டங்கள் ஆகியவற்றை படைக்கும்போது காட்டப்படும் தொழில் நுட்பத்தோடு இணைந்த அழகுணர்வு.நுண்கலைகள் மனித உணர்வுகளோடு ஒட்டியவை. பயன்படு கலைகள் அன்றாடம் நாம் காணும், பயன்படுத்தும் பண்டங்களோடு, பண்ட உற்பத்தியோடு சம்பந்தப்பட்டவை. ۔கலை என்பது வேறு; கலை வடிவங்கள் என்பது வேறு உள்ளடக்கமும் உருவமும் கொண்டதே கலை. கூத்து, நடனம், இசைக்கருவி இசைகளுக்கும் (வீணை, மேளம் முதலியன) உள்ளடக்கம் உள்ளது. நுண்கலைகளைச் சார்ந்த இவையும் உள்ளடக்கத்தின் மூலமேகலை என்ற நிலையைப் பெறுகின்றன.

விலங்கு பூட்டிய அடிமைச் சமுதாயத்திலே கலை உணர்வுகளே வெளிப்படுத்தவோ, வளர்க்கவோ அடிமைகளுக்கு வாய்ப்புக்கிட்ட வில்லை. எஜமானர்களுக்கு மட்டுமே சுதந்திரம் அனைத்தும் இருந்தது. எஜமானர்கள் தம் பொழுது போக்கிற்கு பல்வேறு விளையாட்டுகளை வளர்ந்தனர். அடிமைகளை சிங்கம், புலி, எருதுகளுடன் போரிடச் செய்து பொழுது போக்குவது; அடிமைகளை போரிட்டு மடியும் வரை மோதச் செய்து வேடிக்கை பார்ப்பது; அடிமைகளின் இரத்தம் பீறிடுவதைக் கண்டு களித்து ஆர்ப்பரிப்பது ஆகியன அடிமைச் சமுதாயத்தில் வழமையாயிருந்தனஅடிமைகளின் உழைப்பு முழுவதும் எஜமானர்களால் பறிக்கப் பட்டது; அவர்களது உழைப்போடு ஒன்றிய கலை உணர்வுகள் கட்டுப் படுத்தப்பட்டது. இவற்றல் உற்பத்தி குன்றியது. மக்களின் தேவையை ஒட்டி உற்பத்தி இருக்கவில்லை

எஜமானர்களின் தேவையை ஒட்டி மட்டுமே உற்பத்தி இருந்தது உற்பத்திக்கு மேலாக நுகர முற்பட்டனர். மது, கேளிக்கை ஆடம்பரங்களில் எஜமானர்கள் பொழுதை களித்தனர். அடிமை நிலையில் மக்களுக்கு உற்பத்தியில் ஆர்வமிருக்க வில்லை. ஆகவே விலங்கு அடிமைச் சமுதாயம் வீழ்ச்சியுற்றது. மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாத இத்தகைய சமுதாயமும் வீழ்ச்சியடைவது வரலாற்று நியதியாகும்.

நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் அடிமைச் சமுதாயத்திலும் பார்க்க உற்பத்தி வளர்ச்சியடைந்தது. நிலப்பிரபுக்கள் (தம் வர்க்க நலனை முன் வைத்து) கலைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றனர். கலைகள் யாவும் தெய்வாம்சம் பொருந்தியவை; தெய்வத்திற்கே கலைகள் என்றனர். இதற்கு தமிழ் நாட்டையே நாம் நல்ல உதாரணமாகக்காணலாம். சிற்பிகளைக் கொண்டு கோவில்களைக் கட்டினர் தேவதாசி என்ற ஒரு சாதியினரை கோவில் களில் நடனமாடுவதற்கு என கோவில்களோடு பொட்டுக் கட்டி வைத்தனர். (இத்தேவதாசிகள் வேண்டிய வேளையெல்லாம் நிலப்பிரபுக்களின் ஆசைநாயகிகளாக வாழவேண்டிய அடிமை நிலையில் இருந்தனர் என்பது யாவரும் அறிந்ததே) மேளம், மத்தளம், நாதஸ்வரம் ஆகிய இசைக் கருவிகளுக்காக நட்டுவனுர் என்ற ஒரு சாதி மரபையே ஏற்படுத்தினர்.நிலப்பிரபுக்களுக்கு குறைந்தவர்களாகவே கலைஞர்கள் மதிக்கப் பட்டனர். ஏனெனில் அவர்கள் நிலப்பிரபுக்களின் தயவில் வாழும் அடிமைகளாகவே இருந்தனர். இதனல் நிலப்பிரபுக்களின் தேவையை ஒட்டியே கலைகள் படைக்கப்பட்டன. கலைஞரால் தன் சொந்த அனுபவ உணர்வுகளையோ,  பரவலான மக்களின் உணர்வுகளையோ, தன் கற்பனைகளையோ, தான் விரும்பியபடி கலைவடிவங்கள் மூலம் வெளிக்கொணர முடியா நிலையில் சுதந்திரமற்ற அடிமை நிலையில் இருந்தே கலை வடிவங்களைப் படைக்க நிர்ப்பந்திக்கப்பட்டான்.

தொடரும்

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்