ஊழியர் கோட்பாடுகளும் மற்றும் தலைமையின் வழிமுறைகள் சம்பந்தமான சில சிக்கல்களும்- சிபி

 

முந்தைய இதழின் தொடர்சியே

முதலில் கட்சி அமைப்பு முறை பற்றிய நமது ஆசான்களின் கருத்துக்களை பார்ப்போம்.

கட்சி என்பது ஒரு வர்க்கத்தின் அரசியல் ரீதியான உணர்வு பெற்ற வளர்ச்சி அடைந்த பிரிவாகும்; இது அந்த வர்க்கத்தின் முன்னணி படையாகும். அந்த முன்னணி படையின் வலிமை அதில் உள்ளவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் ஒரு 100 மடங்கு அதிகமானதாகும்.... நூறு மடங்கு அதிகமானதாகும்.( லெனின் தொகுப்பு நூல்கள் தொ 19. ப 406 ).

வரலாற்றில் தனக்குரிய பாத்திரத்தை உணர்ந்து கொள்கிற பாட்டாளி வர்க்கம், மற்ற சுரண்டப்படும் வர்க்கங்களின் முன்னணி படையாக தன்னை அமைத்துக் கொள்கிறது. இந்த வர்க்கங்களில் முதன்மையானது குட்டி முதலாளி வர்க்கமாகும். பாட்டாளி வர்க்கம் அவ்வர்க்கங்களுக்குரிய தலைமையை வழங்குகிறது ; அவர்களது ஆதரவை வென்றெடுக்கிறது அதேவேளை அந்த வர்க்கங்கள் தம்முடன் இயக்கத்துக்குள் கொண்டு வரும் ஊசலாட்டங்களையும் திசை விலகல்களையும் எதிர்க்கிறது. பாட்டாளி வர்க்கமே ஒரு சுதந்திரமான பாட்டாளி வர்க்க கட்சியின் தலைமையின் கீழ் அமைப்புக்குள்ளாக்கப்பட்டு இருந்தால் தான் அதை சாதிக்க முடியும். (லெனின் தொகுப்பு நூல்கள் தொ 7 , ப 415 ).

முன்னணி படை என்ற வகையில் தன் கடமையை நிறைவேற்றுவதற்காக கட்சியானது பாட்டாளி வர்க்கத்துக்கும் குட்டி  முதலாளி வர்க்கத்திற்கு உள்ள பல்வேறு பிரிவுகளுக்கும் இடையே உள்ள உறவுகளையும் பாட்டாளி வர்க்கத்திற்கு உள்ளே இருக்கிற பல்வேறு பிரிவுகளுக்கு இடையே உள்ள உறவுகளையும் சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும். (லெனின் தேர்வு நூல்கள் தொ 31, ப 74 ).

ஜனநாயக மத்தியத்துவம் 

கட்சிக் கட்டுப்பாடு மத்தியத்துவப் படுத்தப்பட்ட தலைமையின் கீழ் உள்ள ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.  இம்முறையில் விவாத சுதந்திரமும் விமர்சன சுதந்திரம் செயல் ஒற்றுமையுடன் இணைக்கப்படுகின்றன. கீழ் அமைப்புகள் மேல் அமைப்புகளை தேர்ந்தெடுக்கின்றன ,மேல் அமைப்புகளுக்கு கட்டுப்படுகின்றன. பெரும்பான்மையோர் முடிவுக்கு எல்லோரும் கட்டுப்பட வேண்டும். ஒவ்வொரு வர்க்க உணர்வு உள்ள தொழிலாளியும் தொழிற்சங்கப் போராட்டத்தில் பெற்ற அனுபவத்துக்கு பொருத்தமாக கோட்பாடுகள் அமைகின்றன.

செயல் ஒற்றுமை விவாத சுதந்திரம் விமர்சன சுதந்திரம் இத்தகைய கட்டுப்பாடு தான் வளர்ச்சி அடைந்த வர்க்கத்தின் ஜனநாயக கட்சியின் மதிப்புக்கு  உகந்தது. பாட்டாளி வர்க்கத்தின் வலிமை அதன் அமைப்பில் பொதிந்துள்ளது. மக்கள் திரளினர் அமைப்புக்குள் கொண்டுவரப்படாவிட்டால் பாட்டாளி வர்க்கம் ஒன்றும் இல்லாததாக இருக்கும்...

அமைப்பு என்பது செயல் ஒற்றுமை நடைமுறை காரியங்களில் ஒற்றுமை எனவே விவாதிப்பதற்கும் விமர்சிப்பதற்கான சுதந்திரம் இல்லாத செயல் ஒற்றுமை என்பதை பாட்டாளி வார்க்கம் ஏற்றுக் கொள்வதில்லை. (லெனின் தேர்வு நூல்கள் தொ 11, ப 320).

குட்டி முதலாளித்துவ வர்க்கமானது பாட்டாளி வர்க்கத்திடமிருந்து வேறுபடுத்தி காட்டுகிற பல்வேறு பலவீனங்களை கொண்டுள்ளது என்பது மட்டுமல்ல; பாட்டாளி வர்க்க தலைமையை இழக்கும் போது தாராளவாத முதலாளி வர்க்கத்தின் செல்வாக்கின் கீழ் அது அடிக்கடி திசை மாறி வீழ்ந்து அவர்களது கைதியாகிறது.

கட்சிக்கு வெளியே உள்ள குட்டி முதலாளிய மக்கள் திரளுடன் உறுதியான பரந்த நேச அணியை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் ஒரு புறம் அவர்களை கையாளுவதில் இணங்கிப் போக வேண்டும் . மறுபுறம் அவர்களுடன் நமக்குள்ள கூட்டை வலுப்படுத்துவதற்காக பொருத்தமான கல்வியை அவர்களுக்கு வழங்க வேண்டும் (மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் தொ 3, ப 214 ).

பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையே இன்னொரு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் முதலில் இந்தப் பக்கமும் பிறகு அந்தப் பக்கமும் சாய்வார் இது எல்லாப் புரட்சிகளும் எப்போதும் நிகழ்ந்துள்ளது.  பெரும் உடமையாளர்களால் அவன்  சுரண்டப்படுவதன் காரணமாக அவன் நாசம் அடைந்து பாட்டாளி வர்க்கத்தினுள் தூக்கி ஏறியப்படும் ஆபத்தில் இருக்கிறான் . போட்டியிடும் இரண்டு முதன்மையான வர்க்கங்களுக்கு இடையே நிலையற்ற இடத்தை பெற்றுள்ள அவனிடம் ஊசலாடும் போக்கு உள்ளது. ஆக பாட்டாளி வர்க்கம் ஒரு தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமாக குட்டி முதலாளித்துவ போக்கிற்கு எதிரான போராட்டம் அவசியமாகின்றது.  

ஆக தோழர்களே மேலுள்ள நமது ஆசான்களின் கருத்தின் அடிப்படையில் கீழ் காணும் விவாதம் அவர்களின் எழுத்துகளிலிருந்தே.

கம்யூனிஸ்ட்களாகிய நாம் எப்பணியை செய்தாலும் கட்டாயம் செயல்படுத்த வேண்டிய இரு முறைகள் இருக்கின்றன. ஒன்று பொதுவானதை குறிப்பானதுடன் இணைப்பது; இன்னொன்று தலைமையை மக்கள் திரளுடன் இணைப்பதாகும்.

எந்த ஒரு கடமையிலும் பொதுவான பரந்து விரிந்த அறைக் கூவல் வெளியிடாமல் இருக்குமானால் பரந்த மக்கள் திரள் செயலுக்கு திரட்டப்பட இயலாது.

"பொருள்களின் வளர்ச்சிக்கான அடிப்படை காரணம் அப்பொருளுக்கு வெளியே இல்லை; ஆனால், அவற்றுக்குள்ளேயே, அவற்றின் உள் முரண்பாடுகளிலேயே உள்ளது". என்று இயக்கஇயல் பொருள்முதல் வாதம் கூறுகிறது. மூலதனத்தின் பிரதான சக்தி அதன் சொந்த பலத்தில் அதாவது அரசு இயந்திரத்தை தலையாய அங்கமாய் கொண்டிருக்கின்ற அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் அடங்கியுள்ளது. அதுபோலவே உழைப்பின் சக்தியும் அந்த சொந்த பலத்திலேயே அதாவது பாட்டாளி வர்க்க கட்சியை தலையாய அங்கமாய் கொண்டுள்ள அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் அடங்கியுள்ளது.

ஆனால் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவெனில் உழைப்பாளரில் ஒரு பகுதியினரை கொண்டதே பொதுவுடமைக் கட்சி எனவே சமுதாயத்தை மாற்ற புரட்சி நடத்துவது என்பது கட்சி மட்டுமே செய்யக்கூடியது அல்ல உழைப்பாளர் அனைவரும் ஒட்டுமொத்தமாக செய்வதாகும். பொதுவுடைமைக் கட்சி புரட்சிக்கு சித்தாந்த தலைமை அளிக்கிறது ஆனால் அது தனது சொந்த பலத்தை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெறுவது ஒரு போதும் முடியாது. எனவே பொதுவுடமை கட்சி என்ற தேரானது மக்கள் திரள் என்ற அச்சாணியை உறுதியாக கொண்டிருக்க வேண்டும். ஒரு பொதுவுடைமை கட்சி அல்லது குழு பரந்துபட்ட மக்களிடமிருந்து தனிமைப்பட்டு பணியாற்றுமானால் அது அச்சாணி அற்றத்தேர் போன்றதாகும். அதன் இதரப் பகுதிகள் எவ்வளவு அழகாக மிக சரியாகவும் இருந்தாலும் உண்மையான பொருள் அது தேராகாது அதாவது பரந்துபட்ட மக்களிடமிருந்து பிரிந்து தனிமைப்பட்ட ஒரு கட்சி பொதுவுடமை கட்சியே அல்ல.மக்களைப் பயிற்றுவிப்பதிலும் அமைப்பு ரீதியாக திரட்டுவதிலும் என்ன முறைகள் கையாளப்பட வேண்டும்?

மக்களிடையே ஆன பணி சரிவர செய்ய கம்யூனிஸ்டுகள் மக்களுடன் அய்க்கியப்படுவது முழு முதல் தேவையாகும். கம்யூனிஸ்டுகளாகிய நாம் விதை போன்றவர்கள் மக்கள் மண் போன்றவர்கள் நாம் செல்லும் இடம் எங்கும் மக்களிடம் அய்க்கியப்பட்டு வேரூன்றி பூத்துக் குலுங்க வேண்டும் (மாவோ). மக்கள் தம்மில் ஒருவனாக ஏற்றுக் கொள்கிறார்களா, இல்லையா மக்கள் அவருடைய கருத்துக்களை தம்முடையவையாக கருகிறார்களா இல்லையா இதுதான் ஒரு கம்யூனிஸ்ட் மக்களுடன் ஐய்க்கியப்படுகிறார்களா இல்லை என்பதை அறிவதற்கான அளவுகோல். மக்களிடையே வேலை செய்வதும் அவர்களின் போராட்டங் களில் (அரசியல் சமூக பொருளாதார போராட்டங்களில்) பங்கெடுத்துக் கொள்வதும் அவ்வாறு செய்யும்போது புரட்சியின் அவசியம் பற்றி அவர்களுக்கு போதிப்பதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற அவர்களை தயார் படுத்துவதும் ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டின் கடமையாகும். ஒன்றிணைவது என்பது கம்யூனிஸ்ட் என்ற ரீதியில் ஒன்றிணைவதாகும். சாதாரண நபர்கள் ரீதில் ஒன்றிணைவது அல்ல. மக்களின் பின்னால் வால் பிடித்து செல்வதன் மூலம் அவர்களோடு கலப்பது என்பது மிக எளிது ஆனால் அவை பயன் அளிக்காது.

அவர்களுக்கு தலைமை அளிப்பது மற்றும் விஞ்ஞான சோசலிச அடிப் படையில் அவர்களை கருத்தாயுத மாக்குவதாகும் (ஆயுத்தமாக்குவதாகும்). மக்களிடையே பணிக்கும் ஊழியர்களை உருவாக்கும் பணிக்கும் இடையிலான வேறுபாட்டை இங்கே குறிப்பிடுவது அவசியம் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஊழியர்கள் வானத்திலிருந்து வீழ்வதில்லை எந்த ஒரு மார்க்சியவாதியும் மக்கள் மத்தியில்இருந்து எந்த ஒரு ஊழியரையும் நாம் விரும்பியபடி பொறுக்கி எடுக்க முடியாது. போராட்டத்தின் வாயிலாகவே உண்மையான பொதுவுடமை ஊழியர்கள் வளர்ச்சி அடைகின்றனர். போராட்டத்தில் பாட்டாளி வர்க்க உணர்வு உலக கண்ணோட்டமே வளர்த்தெடுக்கபடுகிறது.

எதார்த்த நடைமுறையில் மக்கள் அனைவரின் உணர்வு மட்டம் சீராக ஒன்று போல் இருக்கும் என்று எண்ணுவது சரியல்ல.

"குறிப்பிட்ட எந்த இடத்து பொதுமக்கள் மத்தியிலும் ஒப்பீட்டு வகையில் உற்சாகிகள், நடுநிலையாளர்கள், ஒப்பீட்டு வகையில் பின்தங்கியவர்கள், என்ற மூன்று பகுதியினர் இருப்பர். எனவே தலைவர்கள் சிறிய தொகையினராக உள்ள உற்சாகிகளைத் தலைமை சூழ ஐய்க்கியபடுத்தி அவர்களை முதுகெலும்பாக கொண்டு, மத்திய பகுதியின் தரத்தை உயர்த்தி பின்தங்கியவர்களை வென்றெடுப்பதில் தேர்ச்சி பெற வேண்டும் "(மாவோ).நடைமுறையில் நிகழக்கூடியது என்னவெனில் தோழர்கள் முன்னேறிய சக்திகள் மீது மட்டும் கவனத்தை செலுத்துவதும் மற்றவர்களை பற்றி மறந்து விடுவதும் இது சரியல்ல. மக்களை பிளவுபடுத்தாதீர்கள் ஐய்க்கியப்படுத்துங்கள் தேவையற்ற குழுக்களையும் உதிரி குழுக்களையும் உருவாக்குவதை தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரையும் முழுமையாக நோக்கி ஐய்கியப்படுத்த வேண்டும்.மக்களிடையே பணியாற்றுதல் ஒரு சரியான வேலை முறை இல்லாமல் வெறுமனே இத்தகைய போக்குகளை மட்டும் கடைப்பிடித்தால் போதுமானது அல்ல.

தலைமையின் வழிமுறைகள் சம்பந்தமான சில சிக்கல்கள் (ஜூன் 1 1943 பக்கம் 155 வால்யும் 3 ).

சரியான மார்க்சிய லெனினியத்தை தேடிய பயணமே "இலக்கு" இணைய இதழின் தொடக்கம் இதுவரை 12 இணைய இதழ்கள் வந்துள்ளன இப்பொழுது இவை 13ம் இதழ். எங்கள் கட்டுரைகள் தேடுதல்கள் ஒரு சரியான கட்சி ஒரு புரட்சிக்கான வித்தாக இருக்க வேண்டும் அதற்க்கான முயற்ச்சியாகவே இதனை தொடர்கிறோம். விமர்சனம் சுயவிமர்சனம் என்ற ஆயதம் கொண்டு சரியான வழியில் பயணிப்போம்.எல்லா மனிதர்களும் கட்டாயம் இறக்க வேண்டும்; ஆனால் இறப்பு அதனுடைய முக்கியத்துவத்தில் மாறுபடலாம். மக்களுக்காக இறப்பது டாங்கு மலையை விட கனமானது ஆனால் பாசிஸ்ட்டுகளுக்காக வேலை செய்வதும் சுரண்டல்கலாளர்களுக்காக ஒடுக்குமுறையாளர்களுக்காக இறப்பதும் லேசானது.

நம்மிடம் குறைபாடுகள் உள்ளதெனில் அவற்றை சுட்டிக் காட்டவும் விமர்சிக்கவும் பயப்படக்கூடாது. ஏனெனில் நாம் மக்களுக்கு சேவை செய்கிறோம். எவரும், அவர் யார் என்பது முக்கியமல்ல, நமது குறைபாடுகளை சுட்டிக் காட்டலாம். அவர் குறிப்பிடுவது சரியாக இருக்குமாயின் அவற்றை சரி செய்து கொள்வோம். அவர் எடுத்துச் சொல்வது எதுவும் மக்களுக்கு பயனளிக்குமா என்பதை கணக்கிலெடுத்து அதன்படி செயல்படுவோம். சிறந்த துருப்புகளும் எளிய நிர்வாகமும் என்ற கருத்தை முன்வைத்த திரு லியோ டீம் என்பவர் கம்யூனிஸ்ட் அல்ல, அவர் வழங்கிய. சிறந்த ஆலோசனை மக்களுக்கு நன்மையை அளிப்பதாக இருந்தால் அதை பின்பற்றுவோம்.

ஒரு பொதுவான புரட்சிகர நோக்கத்திற்காக நாட்டின் அனைத்து மூலை முடுக்குகளில் இருந்தும் வந்து ஒன்றாக இணைந்து விட்டோம். இந்த நோக்கத்திற்கான பாதையில் நம்முடன் பயணிக்க பெரும்பான்மையான மக்கள் நமக்கு தேவைப்படுகிறார்கள். இவை போதுமானதாக இல்லை. தேசம் முழுவதையும் விடுவிப்பதற்கு ஏராளமானோர் தேவைப்படுகிறார்கள். கஷ்டமான நேரங்களில் நமது சாதனைகளை பார்க்க வேண்டும் ;ஒளிமயமான எதிர்காலத்தை பார்க்க வேண்டும் ; நமது தைரியத்தை துணிவால் மேற்கொள்ள வேண்டும். மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள் அவர்களை காப்பாற்றுவது நமது கடமையாகும். நம்மைப் போராட்டத்தில் முனைப்புடன்ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எங்கே போராட்டம் இருக்கிறதோ அங்கு தியாகமும் இருக்கும். இறப்பு என்பது பொதுவான நிகழ்ச்சியாகும். ஆனால் மக்களுடைய நலன்களையும் மிகப் பெரும்பான்மையர் களுடைய துன்பங்களையும் இதயத்தில் வைத்துள்ளோம். நாம் மக்களுக்காக சாகும் பொழுது அது போற்றத்தக்க சாவாகிறது. எனினும் தேவையற்ற தியாகங்களை தவிர்ப்பதற்கு நம்மால் இயன்றவரை செய்ய வேண்டும். நமது ஊழியர்கள் ஒவ்வொரு படை வீரர்களுக்கும் அக்கறை காட்ட வேண்டும் புரட்சிகர அனி வரிசையில் உள்ள அனைவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கவும் ஒருவருக்கு ஒருவர் உதவுவதும் ஒருவரோடு ஒருவர் அக்கறை காட்டுவதும் வேண்டும் . (செப்டம்பர் 6 , 1944 பக்கம் 233 மாவோ தேர்ந்தெடுத்த படைப்புகள் தொகுப்பு மூன்று ).

                                                                                   -----------------------

பாட்டாளி வர்க்கம் பிறரை இடையறாது மாற்றி அமைத்துக் கொண்டு தன்னையும் மாற்றி அமைத்துக் கொள்கிறது. விமர்சனம் சுயவிமர்சனம் இரண்டில் ஒவ்வொரு நேரங்களில் ஒவ்வொன்று முதன்மையாக இருக்கும் எனினும் கட்சி என்ற விதத்தில் புரட்சியின் அகசக்தி என்ற விதத்தில் சுய விமர்சனமே முதன்மையானது. இதுவே மாற்றி அமைப்பது பற்றிய உட்கட்சி இயங்கியல் அணுகுமுறை.

புற உலகமானது மனிதர்களது விருபத்திற்கு அப்பாற்பட்டு மாறிக் கொண்டே இருக்கிறது. அடிப்படை சமூக மாற்றமான புரட்சிக்கு தலைமை தாங்க முன்வரும் கட்சி அடிப்படை சமூக அமைப்பு மாறாமல் இருக்கும் போதே சூழ்நிலைகள் மாறி வருவதை கணக்கில் எடுத்துக் கொண்டு அவ்வப்போதைய குறிப்பான கடமைகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். பொருளானது என் நேரமும் மாறிக் கொண்டே இருக்கின்றது என்ற விதத்தில் புரிந்து கொள்வதே சரியான பொருள் முதல்வாத கண்ணோட்டம். வளர்ச்சியின் விதிகளோடு சேர்த்தே பொருளைப் புரிந்து கொள்வதே இயங்கியல் பொருள்முதல்வாதம்.

இயங்கியல் பார்வையும் பொருள்முதல்வாத சித்தாந்தமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதவை ; ஒன்றைஒன்று நிறைவு செய்பவை.

இந்தியத் தத்துவம் எளிய அறிமுகம் –(11) மீமாம்சை - அ.கா.ஈஸ்வரன்

 


வேதத்தைப் பற்றி பார்த்தோம். வேதம் நான்கு ஆகும். ஒவ்வொரு வேதமும் சம்கிதை, பிராமணியம், ஆரண்யம், உபநிடதம் என்ற நான்கு உட்பிரிவுகளாக தொகுக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டும் கர்மகாண்டம் பின்னால் உள்ள இரண்டும் ஞான காண்டம் என்று அழைக்கின்றனர். கர்ம காண்டத்தில் இருந்து குறிப்பாக. வேத சம்கிதையில் இருந்து ஒரு மதம்-தத்துவம் எழுமானால் அது மீமாம்சையாகத் தான் இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம்.

தங்களை வேத மதமாகக் கூறிக் கொள்ளும் சைவமோ, வைணவமோ, அதே போல வேதாந்தமாகக் கூறும் அத்வைத தத்துவமோ வேதத்தில் உள்ள பழைய சம்கிதையை பின்பற்றவில்லை என்பதே உண்மையாகும். சைவமும் வைணமும் உருவ வழிபாட்டை ஏற்றுக் கொள்பவை, ஆனால் பழைய ரிக் வேத சம்கிதைகள் சிலை வழிபாட்டை ஏற்காது, சைவத்தில் உள்ள அருவுருவான லிங்கத்தையும் ஏற்காது. அதனால் மீமாம்சையின் தனித்தன்மையை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா:-

"ஒரு தத்துவம் என்ற வகையில் வேதங்கள் இல்லாமல் மீமாம்சையைக் காண்பது சாத்தியமில்லை. இது வேதத்தினால் வளர்ந்தது. இதனுடைய அறிவு ஆதாரங்கள் அனைத்தும் வேதத்திலிருந்து கிடைக்கப் பெற்றவை. வேதத்தை சரியாகப் புரிந்துகொள்ள இதைக்காட்டிலும் வேறோன்றும் இல்லை என்பது இதன் முக்கியமான பங்களிப்பாகும். உண்மையில் வேதத்தை நியாயப்படுத்துவதே அன்றி மீமாம்சை வேறொன்றும் அல்ல."

(மதமும் சமூகமும், பக்-115)

இங்கே வேதம் என்பது சம்கிதைப் பகுதியே ஆகும். வேத சம்கிதையை நியாயப்படுத்துவதே மீமாம்சையின் அடிப்படையாகும்.

மீமாம்சை என்றால் ஆராய்ந்து ஏற்றல் என்று பொருள்படும். ஆராய்ச்சி என்றால், வேதம் கூறியது சரியா? தவறா? என்ற ஆராய்ச்சிஅல்ல. வேதங்களுக்கு கொடுக்கப்படும் விளக்கங்கள் சரியா? தவறா? என்று மீமாம்சை ஆராய்கிறது.

பிற்காலத்திய மீமாம்சை வேத சம்கிதையை மட்டும் பின்பற்றியதாக கூறிட முடியாது. அதனைத் தொடர்ந்து ஆராய்ந்தவர்கள் என்று கூறலாம். ஏன் என்றால் ரிக் வேத சம்கிதை காலத்தின் கருத்தோடு மீமாம்சகர் பலவற்றை வளர்த்தனர்.

மீமாம்சை தத்துவத்தைப் பேசும் நூலில் முக்கியமானது ஜைமினி எழுதிய “மீமாம்சை சூத்திரம்”. இந் நூல் சுமார் கி.மு. 400ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இந்த நூல் பன்னிரண்டு அத்தியாயங்களையும் 2,500 சூத்திரங்களையும் கொண்டுள்ளது.

வேதம் மனிதனால் படைக்கப்பட்டதல்ல. அதனால் வேதத்தை அபௌர்ஷேயம் என்று கூறினர். அபௌர்ஷேயம் என்றால் புருஷனால் படைக்கப்பட்டதல்ல, புருஷன் என்றால் மனிதன், வேதம் மனிதனால் படைக்கப்பட்டதல்ல என்பதே மீமாம்சையின் கருத்து. அதுமட்டும் அல்லாது, வேதம் தெய்வத்தால் படைக்கப்பட்டது என்று கூறுவதையும் மீமாம்சையினர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏன் என்றால் அவர்கள் கடவுளை ஏற்றுக் கொள்ளவில்லை. வேதம், என்றும் இருப்பது என்பதே அவர்களின் நம்பிக்கை.

மீமாம்சம் பற்றி “ஜனசக்தி” இதழில் சென்ற வாரம் (மே29 – ஜீன்04-2022) எஸ்.தோதாத்ரி எழுதியதில் ஒரு பகுதியை பார்ப்போம்.

“மீமாம்சை என்ற சொல்லுக்கு ஆராய்தல் என்று அர்த்தம். இவர்கள் வேதங்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினர்.அதேசமயத்தில் வேதங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். இவ்வாறு ஆராயும்போது இவர்கள் மிகச் சிறப்பாக மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இவர்களது கருத்துப்படி எந்த ஒரு சொல்லையும் அது குறிக்கும் பொருளில் இருந்து காணமுடியாது. உதாரணமாக மலர் என்ற சொல் அந்தப் பொருள் இல்லாமல் உருவாக முடியாது. இதில் பொருள்முதல்வாதத் தன்மை இருந்தாலும் மீமாம்சவர்கள் அதிக அளவு சொல்லுக்கே (முக்கியத்துவம்) கொடுத்தனர். மீமாம்சகர்கள் வேதம் கடவுளால் படைக்கப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. வேதமானது மனிதனாலும் படைக்கப்படவில்லை. இது அவர்களது கொள்கை.”

வேதம் இயற்கையானது என்று மீமாம்சையினர் கருதியதால், வேதத்தில் கூறப்பட்டதை ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கருதினர். வேதத்தில் உள்ளவற்றுக்கு கூறப்படும் பொருள் சரியானதா என்ற ஆராய்ச்சியைத்தான் மீமாம்சையினர் செய்தனர்.

வேத வாக்கியங்களை எப்படி அணுகுவது என்று வகைப்படுத்தியுள்ளனர். தனி வாக்கியங்கள் பொருள் கொடுக்கவில்லை என்றால், கூட உள்ள வாக்கியங்களை சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். தனி வாக்கியங்கள் பொருள் தருமாயின் அதனை அப்படியே பொருள் கொள்ள வேண்டும். சில வாக்கியங்களில் பொருள் முழுமையற்று இருக்கும், அதாவது புரிந்து கொள்ளும் வகையில் வாக்கியம் இல்லை என்றால், அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப அதனைப் பொருள் கொள்ள வேண்டும்.

சொல் பொருளோடு இணைந்தது, பொருளில்லாத சொல் என்பது கிடையாது. சொல்லை உச்சரிக்கும் போது உருவாகும் ஒலியையும் மீமாம்சையினர் ஆராய்ந்தனர். “ஓ” என்ற சொல்லை ஒருவர் பலமுறை உச்சரித்தாலும், பலர் ஒருமுறை உச்சரித்தாலும் அதன் பொருள் ஒன்றே. ஒருவன் உச்சரித்தாலும் உச்சரிக்காவிட்டாலும் அந்த சொல்லில் அந்த ஒலி இருக்கிறது. ஒலி நித்தியமானது. இதன் தொடர்ச்சியாக மொழி நித்தியமானது என்று மீமாம்சையினர் கூறினர். இறுதியாக வேதம் நித்தியமானது என்ற முடிவுக்கு வந்தனர்.வேதத்தில் கூறப்பட்டதை கடைப்பிடிப்பது மீமாம்சகரின் தர்மம் ஆகும். தர்மம் என்றால் வேதத்தில் கூறப்பட்ட அறநெறியை கடைபிடித்தல் என்று பொருள் கொள்ளக்கூடாது. வேதத்தில் எதைச் செய்ய வேண்டும்?. எதைச் செய்யக்கூடாது? என்று கூறுகிற கட்டளைகளை பின்பற்றுவதே தர்மம் என்கின்றனர்.

வேதத்தில் கூறப்பட்ட நித்திய கருமங்கள், நைமித்திக கருமங்கள் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். நித்திய கருமங்கள் என்றால் அன்றாடம் செய்ய வேண்டிய கருமங்கள் அதாவது செயல்கள், நைமித்திக கருமம் என்றால் சிறப்பு (விஷேச) காலங்களில் மேற்கொள்ள வேண்டிய கருமங்கள்.

உலகம் இறைவனால் படைக்கப்பட்டது என்பதை தொடக்ககால மீமாம்சை ஏற்கவில்லை. பிரபஞ்சம் என்றும் உள்ளது என்பதே மீமாம்சையின் கருத்து.

வி.ஏ.ராமசாமி ஐயர்:-

"பிரபஞ்சத்திற்குத் தோற்றக் கேடுகள் இல்லை என்பது பூர்வ மீமாம்சையின் கருத்தாகும். பிரபஞ்சம் இருந்தது, இருக்கும், இன்று உள்ளதுபோல் என்றுமுள்ளதாகும். படைப்போ அல்லது பிரபஞ்சத்தின் முற்றழிவோ இல்லை. ஆதலால் பிரபஞ்சத்தின் தோற்றக் காரணமாக இறைவன் கருதப் பெறுவதற்கு இல்லை. வேதங்களின் தலை சிறந்த தலைமையினைக் குறிக்கும் எக்கொள்கையினையும், பூர்வ மீமாம்சகர்கள் ஏற்பதற்கில்லை."

(கீழை மேலை நாடுகளின் மெய்ப்பொருள் இயல் வரலாறு, தொகுதி 1- பக்)

உலகில் நூறாண்டு காலம் வாழ வேண்டும் என்கிறது வேத சம்கிதை. வேதாந்தத்தைப் போல உலகையும், குடும்ப உறவுகளையும் துன்பமயமாகக் கருதாமல் உலகில் சிறப்பாக வாழ்வது பற்றியே வேத சம்கிதை பேசுகிறது.தொடக்கக் காலத்தில் சொர்க்கம் பற்றிய கருத்து மீமாம்சையிடம் இல்லை என்றாலும் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது. வேதக் கடமைகளை சரியாக செய்வதின் மூலம் இறப்புக்குப் பிறகு சொர்க்கத்தில் இன்பங்களை அனுபவிக்கலாம் என்ற கருத்து நுழைந்தது.

வேதாந்தத்தில் குறிப்பாக அத்வைத வேதாந்தத்தில் ஞான யோகமே வலியுறுத்தப்படுகிறது, அதாவது உலகத்தை மறுத்து முக்திக்கு வழிகாட்டுகிறது. மற்ற வேதாந்தத் தத்துவமான துவைதம், விசிட்டாத்வைதம் ஆகிய இரண்டும்கூட உலகம் துன்பமயமானதாக, சம்சார சுழற்சி கொண்டதாக கருதி, ஆத்ம முக்தியே அனைத்துக்குமான விடுதலை என்று கூறுகிறது. ஆனால் வேத சம்கிதையை அடிப்படையாக ஏற்கும் மீமாம்சை முக்தியை பற்றி தொடக்கக் காலத்தில் ஏற்றுக் கொள்ளாது, உலகில் இன்பமாக வாழ்வதையே தமது கடமையாகக் கொண்டிருந்தது.

இல்வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளுக்காகவே வேள்விகளை மீமாம்சையினர் செய்தனர். வேள்வியை முறைப்படி செய்து அதனால் கிட்டும் பலனை அனுபவிக்கவே மீமாம்சையினர் விரும்பினர்.

உலகாயதர்களின் இன்ப நாட்டத்தை வைதீகர்கள் (வேதாந்திகள்) இழிவாகக் கருதுவார்கள், ஆனால் உலகாயதரைப் போலவே இந்த மீமாம்சையினரும் உலகில் கிடைக்கும் இன்ப நாட்டத்திலேயே கவனம் செலுத்தினர்.

பத்மன் கூறியதைப் பார்ப்போம்.

“ஒருவகையில், நாத்திகர்களான லோகாயதர்களுக்கும் ஆத்திகர்களான மீமாம்சகர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இரு சாராரின் பொது நோக்கமும் இன்ப நாட்டமே. ஆன்மா இல்லை என்று கூறும் முன்னவர்கள் இகத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்து அதிலே இன்பத்தை அனுபவிப்பதுதான் வாழ்வின் இலக்கு என்று கருதினால், ஆன்மா உண்டு என்று ஏற்கும் பின்னவர்கள் இகத்தில் மட்டுமில்லாது பரத்திலும் இன்பம் அனுபவிப்பதுதான் பிறவியின் இலக்கு என்று கருதுகிறார்கள்.பின்னவர்களான இந்த மீமாம்சர்களின் பரமானது முக்தி அல்ல, சொர்க்க போகமே. இருப்பினும் பிற்காலத்தில் வேதாந்தத்தின் செல்வாக்கு காரணமாக முக்தியை ஏற்றுக் கொண்டாலும், வெறும் ஞானத்தால் முக்தி கிடைத்து விடாது, கர்மங்களைக் கைவிடாமல் நிறைவேற்றினால் மட்டுமே அது கிடைக்கும் என்று புதிய வியாக்கியானம் (விளக்கம்) கொடுத்தார்கள்.”

(தத்துவ தரிசனங்கள், பக்-177)

மீமாம்ச சூத்திரத்துக்கான மிகவும் பழைமையான விளக்கவுரை கி.மு. முதல் நூற்றாண்டில் சபரர் என்பவரால் எழுதப்பட்டது. இந்த விளக்கவுரைக்கு பிற்காலத்தில் குமாரிலபட்டர், பிரபாகரர் ஆகிய இருவர் விளக்கவுரை எழுதினர்.

அறிவு பெறும் வழியாக பிரமாணங்கள் உள்ளன என்று ஏற்கெனவே பார்த்தோம். 1.பிரத்தியட்சம் (புலனுணர்வு), 2.அநுமானம் (உய்த்துணர்வு), 3.ஆப்தவாக்கியம் (உரைச்சான்று), 4.உபமானம் (ஒப்புநோக்கு), 5.அர்த்தாபத்தி (சூழ்நிலைசார் உய்த்துணர்வு), 6.அனுபலப்தி (எதிர்மறைச் சான்று). இந்த ஆறு பிரமாணங்களையும் குமாரிலபட்டர் ஏற்கிறார். பிரபாகரர் முதல் ஐந்து பிரமாணங்களை மட்டுமே ஏற்கிறார். ஆறாவதான அனுபலப்தி என்கிற பிரமாணத்தை ஏற்கவில்லை.

அணுக்களே அனைத்துக்கும் அடிப்படை என்பதை மீமாம்சையினர் ஏற்றுக் கொள்கின்றனர். இந்த அணுவை மற்றவர்கள் காண முடியாத நிலையாக இவர்கள் கருதவில்லை. அணுக்கள் காணக்கூடியது என்பதே மீமாம்சையினரின் கருத்து.

வேதத்தை மட்டுமே பிரபாகரர் ஏற்கிறார். குமாரிலபட்டர் வேதத்தோடு வேத உண்மைக்கு இணையான வாக்கியங்களையும் ஏற்கிறார்.

ஜைமினி எழுதிய “மீமாம்சை சூத்திரம்” என்ற நூலில் கடவுள் பற்றி எதுவும் கூறவில்லை. தொடக்ககால மீமாம்சைகடவுளை ஏற்கவில்லை என்பது தெரிகிறது. மீமாம்சை சூத்திரத்துக்கு பிற்காலத்தில் சபரர் எழுதிய விளக்கவுரையிலும் கடவுள் மறுப்பே காணப்படுகிறது.

குடம் செய்வதற்கு களிமண்ணும், அதற்கான துணை கருவிகளும் இருந்தால் மட்டும் போதாது, அதனை செய்து முடிக்க குயவன் தேவை. அதே போல உலகப்படைப்புக்கான பொருட்கள் இருந்தால் மட்டும் போதாது அதனை ஒழுங்காகப் படைக்க வேண்டும் என்றால் உணர்வுள்ள சக்தியான கடவுள் தேவை என்பதை மீமாம்சையினர் மறுக்கின்றனர். உலகில் காணப்படும் தனிப்பொருட்கள் உருவாவதும் அது அழிந்து போவதும் உண்மையே. இதனை வைத்து உலகம் படைக்கப்பட்டதாக கருதிட முடியாது என்பதே மீமாம்சையினரின் முடிவு.

யவனின் பானைப் படைப்பை, ஒப்பிட்டு உலகப் படைப்புக்கு கடவுள் தேவை என்பதை குமாரிலபட்டர் மறுக்கும் விதத்தைப் பார்ப்போம். பானையை படைத்தவன் குயவன் என்றால் இந்தப் படைப்பை கடவுள் நிகழ்த்தவில்லை என்றாகிறது. அதுபோலவே அனைத்துப் பொருட்கள் உருவாவதற்கு கடவுள் காரணமல்ல என்கிற முடிவுக்கு வருகின்றார்.

கடவுள் உலகை படைத்தார் என்றால் அவர் ஓர் உடலைப் பெற்றிருக்க வேண்டும். கடவுள் உடலைப் பெற்றிருந்தார் என்றால் உடலைக் கொண்ட கடவுளைப் படைத்தது யார்? என்ற கேள்வி எழும். இப்படியே கேட்டுக் கொண்டிருந்தால் முடிவே இருக்காது. மேலும் ஒருவர் ஒன்றைப் படைக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். துக்கமயமான இந்த உலகத்தை, அனைத்து சக்தியும் பொருந்திய கடவுள் படைத்திருக்க மாட்டார். முக்காலங்களையும் அறிந்த சக்தி பொருந்திய படைப்பாளன், இன்று காணும் துக்கமயமான உலகத்தை எப்படி படைத்திருக்க முடியும் என்று மீமாம்சையினர் கேட்கின்றனர். நோக்கம் இன்றி எதையும் யாரும் படைக்க விரும்பமாட்டார்கள், இத்தகைய துன்பமயமான உலகை எப்படி கடவுள் படைதிருக்க முடியும்? என்று கேள்வியை மீமாம்சையினர் எழுப்புகின்றனர்.தேவி பிரசாத் சட்டோபாத்யாயா:-

"ஆத்திக நிலைப்பாட்டில் காணப்படும் பல முரண்பாடுகளை குமாரிலர் எள்ளி நகையாடுகிறார். உடல் இல்லாத ஆத்மா எதையும் படைக்க முடியாது. அப்படி படைக்க வேண்டுமானால், படைப்பு கர்த்தா அல்லது பிரஜாபதிக்கு ஒரு உடல் அவசியமாகிறது. ஆனால், ஒருவர் தனது உடலை படைத்துக் கொள்ள முடியாது. படைப்பு கர்த்தாவின் உடலைப் படைக்க வேறொரு படைப்புக் கர்த்தா தேவைப்படுகிறது. இவ்வாறு முடிவில்லாமல் கூறிக் தொண்டே போக முடியும். அத்துடன் ஒர் அறிவற்றவன் கூட நோக்கம் எதுவுமின்றி எதையும் செய்ய மாட்டான். அப்படி இருக்கும் போது, துன்பமும் வலியும் காணப்படும் உலகை சர்வ வல்லமையுள்ள சகலத்தையும் அறிந்த கடவுள் ஏன் படைக்கப் போகிறார்? வேதாந்தம் கூறும் படைப்புத் தத்துவத்தைக் கூட குமாரிலர் எதிர்த்தார்."

(இந்தியத் தத்துவம் ஓர் எளிய அறிமுகம், பக்-86)

வேத சம்கிதையில் தேவர்களைப் பற்றி பேசப்பட்டுள்ளது. அந்த தேவர்களை மகிழ்விக்க வேள்வி செய்யப்படுகிறதா? என்ற கேள்விக்கு “இல்லை” என்பதே மீமாம்சையினரின் பதிலாகும். அதிலும் குறிப்பாக சபரர் இதனை விரிவாக ஆராய்ந்துள்ளார். உண்மையான வடிவம் கிடையாது, அதாவது உடல் கிடையாது. அப்படியிருக்க அளிக்கப்பட்ட உணவை தேவர்கள் எப்படி உண்டு மகிழ்வு அடைவர். அதனால் தேவர்கள் உண்டு மகிழ்ந்து பலனை தருகிறார் என்பதை ஏற்க முடியாது. தேவர்களுக்கு இந்த உலகப் பொருட்களின் மீதான எந்தவிதமான அதிகாரமும் கிடையாது என்பதே சபரரின் முடிவாகும்.

வேதங்களில் கூறப்பட்டுள்ள வேள்வியில் ஓதப்படும் தேவர்கள் என்பது வெறும் பெயர்களே ஆகும் என்கிறார் சபரர். கடவுளின் தேவையை மீமாம்சையினர் தொடர்ந்து மறுத்துவந்துள்ளனர்.வேள்வியின் பலன் தேவர்களால் கிடைப்பதில்லை, வேள்வியின் சக்தியினாலேயே கிடைக்கிறது. முறைபடி செய்கின்ற வேள்வியே அதற்குரிய பலனை கொடுக்கும் என்பதே மீமாம்சையினரின் கருத்து. மீமாம்சையினர் வேதகால தேவர்களை கடவுள்களாக ஒப்புக் கொள்ளவில்லை. வேதகால வேள்வி என்பது பழங்குடியினரிடம் காணப்பட்ட மாயவித்தையின் சிதைவாகவே காணப்படுகிறது. இறைவனிடம் வேண்டி இறைஞ்சுவதாக வேதப் பாடல்கள் காணப்படவில்லை என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். வேத சம்கிதைகள் மாயவித்தையின் சிதைவாகக் காணப்படுவதனால், இதில் மதத்தின் தன்மையோ, தத்துவத்தின் தன்மையோ காண முடியவில்லை என்பதே உண்மையாகும்.

இதுபற்றி ஓ.ரா.ந.கிருஷ்ணன் கூறுவதைப் பார்ப்போம்.

“வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள வேள்விகளும் சடங்குகளும் ஒரு தத்துவ அடிப்படையை வழங்கி அவற்றிற்கு முதன்மையும் முக்கியத்துவம் அளித்து புரோகிதத் சடங்கு மரபையும் புரோகிதர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கின்றது மீமாம்ச ஞான மரபு. இதன் தத்துவ சிந்தனைகள் மெய்யறிவு என்பது கிஞ்சித்தும் இல்லை. மெய்ஞான தரிசனம் என்று கூறப்படும் இந்த மீமாம்ச தத்துவத்தில் எல்லாமே கற்பனையாக புனைந்து உருவாக்கப்பட்ட கருத்துக்களாக உள்ளன.”

(இந்திய ஞான மரபுகள் பௌத்தத்தின் பார்வையில்)

மாவைவித்தையின் சிதைவு வர்க்க சமூகத்தில் வேறுவிதமாக உருப்பெற்றது. என்பதைப் பற்றி தேவி பிரசாத் சட்டோபாத்யாயா கூறுவதைப் பார்ப்போம்.

"மாயவித்தை புராதனகால, வர்க்கத்துக்கு முந்திய சித்தாந்தம் என்ற வகையில் புராதன சமுதாயத்தில் சில செயல்பாடுகள், குறிப்பாக கூட்டு உழைப்பு என்ற அம்சத்தில் அதன் பொருத்தப்பாட்டை நினைவு கூர்வது அவசியமாகும். மாறாக, வேத யக்ஞம் - மாயவித்தையைத் தவிர வேறொன்றும் இல்லாதாதாக இருப்பினும் - அது வர்க்கமாகப்பிளவுபட்ட சமூகத்துக்கு மாற்றப்பட்டது. அது மாயவித்தையின் செயல்பாட்டை நேரெதிராக மாற்றியது. உண்மையான தொழில்நுட்பத்துக்கு உதவுகின்ற மாயையான தொழில்நுட்பமாக இருப்பதற்குப் பதிலாக இது ஒட்டுமொத்தப் பொருளாதார விரயமானது. ஒட்டுண்ணித் தனமான மதகுரு வர்க்கம் மட்டும் கொழுத்தது.

அதற்குமேல் வேத வேள்வியில் மிஞ்சி இருப்பது என்ன? கடவுள் - அல்லது எதார்த்தமாக உள்ள வேத தெய்வங்கள் என்ற அனுமானத்தை ஒழித்தாகிவிட்டது. வேதகால மதகுருவின் சித்தாந்தம் அதன் சரியான அர்த்தத்தில் மீமாம்சை என எளிதில் அறியப்படுகிற பூர்வ மீமாம்சைத் தத்துவமாக உருப்பெற்றுவிட்டது."

(மதமும் சமூகமும், பக்-114-115)

கடவுளை தர்க்க வழியில் மீமாம்சை மறுத்தது. சக்தி பொருந்திய கடவுள் இந்த உலகத்தைப் படைத்திருந்தால், இங்கே இவ்வளவு அநீதிகளும், தீமைகளும் நிறைந்து இருக்குமா என்று கேள்வி எழுப்புகிறது என்று ஏற்கெனவே பார்த்தோம். கடவுளுக்கு வடிவம் இருக்கிறது என்பதையும், கடவுளுக்கு படைத்த உணவை அவர் சாப்பிட்டார் என்பதையும் நீருபிக்க முடியாது என்கிறார் சபரர்.

மிகமிக பிற்கால மீமாம்சையினர் அல்லது மீமாம்சை கோட்பாடுக்குள் நுழைந்தவர்கள், பிற்கால வைசேஷிகர் கூறியது போலவே “அதிர்ஷ்டம்” செயல்படுவதற்கு ஒரு கடவுள் தேவை என்று கூறினர். பிற்காலங்களில் பிற தத்துவங்களின் தாக்கத்தால் முக்தி பற்றிய கருத்து மீமாம்சையினரிடம் வந்தது என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால் மீமாம்சையை ஆன்மீகமயமாக்க முயற்சித்தவர்களே முக்தியைப் பற்றிய கருத்தை மீமாம்சை தத்துவத்தில் நுழைத்தனர் என்று கருதுவதே சரியானதாக இருக்கும்.உலகில் இன்பமாக வாழ்வது பற்றியே மீமாம்சை கவனம் செலுத்தியது. இதுதான் உண்மை. இந்தியத் தத்துவங்களில் ஒன்றாக கூறப்படும் மீமாம்சையின் உண்மையான நிலை இதுவே. வேத சம்கிதை காலம்வரை சொர்க்கம் என்ற கருத்துக்கூட கிடையாது. பிற்காலங்களில் சொர்க்கம் என்ற கருத்து சேர்க்கப்பட்டது, சொர்க்கத்தை அடைவதே முக்தி என்று பிற்காலத்தில் கூறப்பட்டது. முக்தியைப் பற்றி பேசினால் அங்கே ஆத்மாவும் வந்துவிடும்.

பிற்காலத்தில் மீமாம்சை தத்துவத்தில் ஆத்மா என்ற கருத்து நுழைந்தது. உடல் உறுப்புகளுக்கு அப்பாற்பட்டது ஆத்மா, இந்த ஆத்மா இறப்புக்குப் பின்பும் இருக்கும். இந்த ஆத்மா அணுத்தன்மை அற்றது. இந்த ஆத்மா பல என்பதே மீமாம்சையின் கருத்து.

முக்தி என்கிற கோட்பாட்டை ஜைமினி, சபரர், பிரபாகரர் ஆகியோர் ஏற்றுக் கொள்ளவில்லை. குமாரிலரும் அவரது சீடர்களும் முக்தியை மீமாம்சையில் நுழைத்தனர். முக்தி பெற்ற நிலையில் ஆத்மாவுக்கு உடல், புலன் அறிதல் போன்றவை இல்லாது போகிறது. பிறவிகளால் உருவான கர்மங்களை (வினைகளை) முற்றிலும் தீர்த்த பிறகே முக்தி கிட்டும் என்று கருதினர்.

தற்காலத்தில் பூர்வ மீமாம்சத்தைப் பின்பற்றுபவர்கள் எவரும் இல்லை. உண்மையில் வேத சம்கிதையை அடிப்படையாகக் கொண்ட மதம் நம் நாட்டில் முற்றிலும் இல்லாது போய்விட்டது என்பதே உண்மையாகும்.

இது பற்றி தேவி பிரசாத் சட்டோபாத்யாயா கூறுவதைப் பார்ப்போம்.

"இந்த நாட்டிலுள்ள ஏராளமான புண்ணியத்தலங்கள், கோயில்கள் எதிலும் பெரும் வேதக் கடவுள்கள் ஏதுமில்லை. வருணன் பற்றிப் பேசும் லூயிஸ் ரெனு, “இந்திய எல்லைக்கு அப்பால் வெகு தொலைவிலுள்ள பாலி தீவில்தான் அவருக்கான ஒரு கோயிலை நம்மால் இன்று கண்டறிய முடியும்” எனக் குறிப்பிடுகிறார். வேதங்கள் ஒரு மதம் என்ற வகையில் இந்தியாவில் அழிந்து போய்விட்டன. வேதமதம் இல்லாத ஒன்றாகிவிட்டது. சில சடங்குகளில் பயன்படுத்தப்பட்டு வருகிற வெகு சில அபூர்வமான வாக்கியங்கள் அல்லது அரைகுறை வாக்கியங்களுக்கு அப்பால், வேதம் என்ற வார்த்தை மட்டுமே இன்று எஞ்சியுள்ளது."

(மதமும் சமூகமும், பக்-112)

இன்று சைவம், வைணவம் போன்ற மதங்களை உள்ளடக்கிய இந்து மதமானது வேத வழியில் வந்தவை கிடையாது. அவை சிந்துவெளி நாகரீகத்தில் இருந்த சிலை வழிபாடு, சிறு தெய்வ வழிபாடு ஆகியவற்றில் இருந்து தோன்றியது. இது பற்றி தேவி பிரசாத் சட்டோபாத்யாயா சிறப்பாக கூறியுள்ளார்.

"அவை அவர்களுக்கு பண்டைய ஹரப்பாப் பண்பாட்டுக் காலத்திலிருந்து மரபுவழியாகக் கொண்டிருந்த சிறு தெய்வங்கள் மற்றும் பல புதிய உள்ளூர் தெய்வங்கள் மூலமாகக் கிடைத்தன. இவ்வாறுதான் வேதம் என்ற வார்த்தை பரந்த வேத இலக்கியம் முழுவதிலும் இருந்து வந்தது. ஆனால், இவை, இன்று வறிய நிலையிலுள்ள மதகுருமார்களுக்கு வருமானத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளவை. ஸ்ராதம் (Sradha) போன்ற வீட்டுச் சடங்குகளே இவற்றில் பயன்படுத்தப்பட்டு வருகிற சில வாக்கியங்கள் அல்லது அரைகுறை வாக்கியங்களுக்கு அப்பால் வேறு எந்த முக்கியத்துவத்தையும் அவை பெறுவதில்லை. அதற்குமேல் வேதம் இந்தியாவின் உண்மையான மதத்துக்கு எந்தப் பங்களிப்பும் செய்துவிடவில்லை.

இது ஓர் எளிய உண்மையை வெளிப்படுத்துகிறது. வேத அணுகுமுறையிலான அர்த்தத்தில் இன்று மதம் என்று ஏதுமில்லை “வேத மதம்” என்பது வெறும் மாயைதான் என்ற உண்மை வெளிப்படுத்தப்பட்டுவிடுகிறது."

(மதமும் சமூகமும், பக்-151)

வேத சம்கிதை அடிப்படையில் ஒரு மதம்-தத்துவம் வளர்ச்சி அடைகிறது என்றால் அது பூர்வ மீமாம்சமாகத்தான் இருக்கும் என்பதை ஆதாரத்தோடு பார்த்தோம். அந்த பூர்வ மீமாம்சை தத்துவத்தையோ, மதத்தையோ கடைபிடிப்பவர்கள் இன்று யாரும் இல்லை. இன்று வேத மதம் என்பது சட்டோபாத்யாயா கூறுவது போல் மாயையானதே, அதாவது இல்லாததே.

ஆனால், வைதீகவாதிகள் வேத சம்கிதையின் சாரமே உபநிடதம். உபநிடதமே வேதாந்தம், அதாவது வேதத்தின் இறுதி முடிவுகள் என்று ஆதாரமற்று கூறிவருகின்றனர். உண்மையில் வேத மதம் அழிந்துவிட்டது. இந்து மதம் வேத சம்கிதைக்கு மாறான அடிப்படைகளைக் கொண்டுள்ளது. இன்றைய இந்து மதத்துக்கும் வேத சம்கிதைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், மீமாம்சை ஆகியவைகளே ஐந்து தரிசனங்கள் ஆகும். இந்த ஐந்து தரிசனங்களும் உபநிடத தத்துவப் போக்குக்கு மாறானது, ஏதிரானது என்றுகூட சொல்லாம். இந்த மீமாம்சையை பூர்வ மீமாம்சை என்றும் தங்களை உத்திர மீமாம்சை என்று பிற்காலத்தில் வைதீகர்கள் கூறிக் கொண்டு, ஐந்தாவது தரிசனமான மீமாம்சையில் ஒட்டிக் கொண்டனர். ஓட்டிக் கொண்டதோடு மட்டுமில்லாது, இந்த ஐந்தையும் வைதீகத் தத்துவம் என்று ஆதாரமற்று கூறிவருகின்றனர். என்ன செப்பிடுவித்தை செய்தாலும் ஐந்து தரிசனங்களும் வேதாந்தத்தோடு முரண்படுவதை வைதீகர்களால் மறுத்திட முடியாது.

ஐந்து தரிசனங்களும் வைதீக சிந்தனைக்கு மாறான, எதிரான போக்கு உடையவை என்பதையே ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.

இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நாம் எப்படி பார்த்து, எப்படி மதிப்பீடு செய்வது?-தேன்மொழி

 
மக்களின் நலனை தனது லட்சியமாகக் கொண்ட மக்கள் அரசானது, அனைத்து மக்களுக்கும்,கல்வி மற்றும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதை தனது லட்சியமாகக் கொண்டிருக்கும்.

இத்தகைய லட்சியத்தை கொண்டிருப்பதோடு, அதற்காக திட்டமிட்டு செயல்படக் கூடியஅரசைத்தான் மக்களின் அரசு என்று சொல்ல முடியும்.

அனைத்து மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதை லட்சியமாகக்கொண்ட அரசாக இருந்தாலும், அந்த அரசினால் உடனடியாக அனைத்து மக்களுக்கும் கல்விமற்றும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது என்பது எதார்த்த நடைமுறைஉண்மையாகும். ஆகவே அத்தகைய மக்கள் அரசும் திட்டமிட்டு தொடர்ந்து அதற்காகசெயல்பட்டு கல்வி மற்றும் வேலை வாய்ப்யை சிறிது சிறிதாக ஏற்படுத்தி பல காலங்களுக்குப்பிறகுதான் அனைத்து மக்களுக்கும் முழுமையாக கல்வி, வேலை வாய்ப்பை வழங்க முடியும்.

இவ்வாறு சிறிது சிறிதாக கல்வி வேலை வாய்ப்பை மக்கள் அரசு ஏற்படுத்தும் போது,உருவாக்கப்பட்ட சிறிய அளவிலான கல்வி மற்றும் வேலைக்கான நிறுவனங்களில், அனைத்துமக்களுக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாத சூழலில், கல்வி, வேலை வாய்ப்பில் யாருக்குமுன்னுரிமை கொடுப்பது என்ற பிரச்சனை எழுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் இப்பிரச்சனையில் காலங்காலமாக சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டு கல்வி, வேலை வாய்ப்புமறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்என்ற முடிவைத்தான் மக்கள் அரசு எடுக்க வேண்டும். அதுதான் சமூக நீதியாகும். இதில்எவ்விதமான சந்தேகமும் வேண்டாம். அதே வேளையில் இந்த முன்னுரிமையானது மக்கள் அரசுதொடர்ந்து கல்வி, வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்காக திட்டமிட்டு செயல்பட்டு ஒரு கட்டத்தில்அனைத்து மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நிலையை அடையவேண்டும். அனைத்து மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பைஏற்படுத்திக் கொடுக்கும் வரைஒடுக்கப் பட்ட சாதியினருக்கு முன்னுரிமை கொடுக்கும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை தொடரவேண்டும். ஒரு அரசு மக்கள் நலன் காக்கும் மக்கள் அரசாக இருக்குமானால் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை இந்த கண்ணோட்டத் தில்தான்செயல்படுத்தும். மக்கள் அரசின் நீண்டகாலலட்சியம், அனைத்து மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பை வழங்குவது. அதன் குறுகியகால லட்சியம் அந்த அரசால் உருவாக்கப்படும் கல்வி, மற்றும் வேலைக்கான நிறுவனங்களில்ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்றுவது. ஆகவே மக்கள் அரசானது குறுகியகால மற்றும் நீண்டகாலலட்சியங்களை செயல்படுத் தினால் மட்டுமே அது மக்கள் அரசாக இருக்க முடியும்.

லெனின், மற்றும் ஸ்டாலின் தலைமையிலான ரஷ்ய சோசலிச சோவியத் அரசானதுரஷ்யாவிலுள்ள அனைத்து மக்களையும் கல்வி அறிவு பெற்ற மக்களாக வளர்த்தது. அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த சாதனைகளின் மூலம் ரஷ்யசோசலிச சோவியத்து அரசானது ஓர் அரசானது அனைத்து மக்களுக்கும் கல்வி வேலை வாய்ப்பைஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பதை நடைமுறையில் சாதித்துக் காட்டியது. இத்தகைய ரஷ்ய சோசலிச சோவியத்து அரசைத்தான் மக்கள் அரசு என்று சொல்வதற்கான தகுதி பெற்ற அரசாகும்.

ஆகவே இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நாம் பரிசீலித்து விவாதிக்கும்போது, இந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையை கொண்டுவந்து நடைமுறைப்படுத்தும் அரசையும், அதன்கொள்கைகளையும் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்.

இந்தியாவை ஆண்ட அரசுகளான,பிரிட்டீஷ் ஆட்சி தொடங்கி, பிரிட்டீஷார் வெளியேறிய பின்பு உருவான நேரு தலைமையிலான காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், ஆட்சிகளும், தற்போதைய பாரதிய ஜனதா கட்சி ஆட்சிவரை இவர்கள் அனைவரும் மக்களுக்கு எதிரானஆட்சியாளர் களாகவே இருந்தார்கள், இருக்கிறார்கள். என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இத்தகைய மக்களுக்கு எதிரான அரசுகள் தான் இடஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும்.

இரண்டாம் உலகப் போர் முடிந்தபோது கிழக்கு ஐரோப்பியாவிலுள்ள பல நாடுகளிலும், சீனாவிலும் நடந்துகொண்டிருந்த மக்களுக்கு எதிரான ஆட்சிகள் வீழ்த்தப்பட்டுகம்யூனிஸ்டு களின் ஆட்சி உருவானது. மேலும் ஏகாதிபத்தியவாதிகளின் சொந்த நாட்டில் உழைக்கும் வர்க்கங்கள் அந்த ஆட்சிக்கு எதிராக கம்யூனிச ஆட்சியை உருவாக்கப் போராடினார்கள். ஏகாதிபத்தியவாதிகளின் காலனி, அரைக்காலனி, புதிய காலனி நாடுகளில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்து கொண்டிருந்தது. இந்த சூழலில் உலகம் முழுவதும் கம்யூனிச நாடுகளாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏகாதிபத்தியவாதிகளிடம் ஏற்பட்டது. மேலும் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட பல ஏகாதிபத்திய நாடுகள் அவர்களது மூலதனத்தை இழந்து நெருக்கடியிலிருந் தார்கள். அவர்களது நெருக்கடியிலிருந்து மீளவும்,கம்யூனிச அபாயத்திலிருந்து அவர்களை பாதுகாத்துக்கொள்ளவும் அதுவரை அவர்கள் பின்பற்றிய தனியார்மயக் கொள்கையை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு அரசு தலையிடும் கொள்கையான கீன்சிய பொருளாதாரக் கொள்கையை ஏகாதிபத்திய வாதிகள் அவர்களது நாடுகளிலும் அவர்களை சார்ந்து இருக்கும் காலனி நாடுகளிலும் பின்பற்றினார்கள்.

இந்தியாவிலும் ஆட்சியிலிருந்த புதிய காலனிய தாசர்களின் ஆட்சியிலும் இதே கொள்கை பின்பற்றப்பட்டது. அதன் காரணமாகவே நேருவின் ஆட்சியில் பல கல்வி நிலையங்களும், பொதுத்துறை தொழில் நிறுவனங்களும் துவங்கப்பட்டது. இதன் நோக்கம் அனைத்து மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதல்ல, மாறாக மக்கள் கம்யூனிஸ்டுகளின் பக்கம்போய்விடாமல்தடுப்பதற்கும், மக்கள் இவர்களது ஆட்சியை எதிர்த்து போராட விடாமல் திசை திருப்புவதற்கும், பெருமுதலாளி களும், அந்நிய நிதிமூலதன முதலாளிகள் அவர்களது மூலதன நெருக்கடியிலிருந்து மீண்டுவரவும் அரசு மூலதனத்தை முதலாளிகள் பயன்படுத்திக் கொள்வதற்காகவே கீன்சியப் பொருளாதாரக் கொள்கையை இந்த ஆட்சியாளர்கள்கடைபிடித்தார்கள். அப்போதுதான் ஒடுக்கப்பட்ட சாதி யினருக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கையான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பிரபலப்படுத்தி இந்த அரசை மக்களுக்கானஅரசாகக் காட்டி மக்களை இந்த அரசியல்வாதிகள் ஏமாற்றினார்கள்.

அதற்குப் பின்பு இந்த முதலாளிகள் நெருக்கடியிலிருந்த மீண்ட பின்பு உலகில் மூன்றில் ஒரு பகுதில் ஆட்சியிலிருந்த கம்யூனிச அரசுகள் வீழ்ந்த பிறகு, இந்த ஏகாதிபத்திய வாதிகளை தட்டிக்கேட்க்கவும், எதிர்த்துப் போராடவும் யாரும் இல்லாத சூழலில் இவர்கள் இதுவரை கடைபிடித்துவந்த கீன்சிய கொள்கையை கைவிட்டுவிட்டு, தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்றகொள்கையை முன்கொண்டுவந்து வெளிப்படையாகவே மக்களுக்கு எதிரான ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் அரசே கல்வி நிறுவனங்களை நடத்தும் கொள்கை கைவிடப்பட்டு, கல்வியை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டார்கள். ஆகவே இனிவரும் காலத்தில் மக்களுக்கு இலவசமாக கல்வி கொடுப்பதற்கு இந்த ஆட்சியாளரிடம் எதுவும்இருக்காது. ஆகவே இட ஒதுக்கீட்டின் மூலம் மக்களுக்கு கல்வி வாய்ப்பை இந்த ஆட்சியாளர்களால் ஏற்படுத்திக் கொடுக்க முடியாது. அதேபோல் பொதுத்துறை தொழில் நிறுவனங்களையும் தனியார் வசம் ஒப்படைத்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆகவே மக்களுக்குவேலை வாய்ப்பை வழங்கவும் இவர்களால் இனிமேல் முடியாது. ஆகவே மொத்தத்தில்இடஒதுக்கீட்டு கொள்கை என்பது பெயரளவில் மட்டுமே இருக்கும் நடைமுறை செயலில், அது இருக்காது. இத்தகைய மோசமான சூழலை ஏற்படுத்தியதற்கு காரணம் இந்த அரசானது மக்களின்நலனை லட்சியமாகக் கொண்ட மக்கள் அரசு அல்ல. மாறாக ஏகபோக முதலாளிகள் மற்றும்அந்நிய முதலாளிகளின் நலன் காக்கும் மக்கள் விரோத முதலாளிகள் அரசாக இருக்கின்றது.

பொதுவாக முதலாளிகள், குறிப்பாக கார்ப்பரேட் முதலாளிகள், தொழிலாளர் களுக்கு குறைந்தகூலியை கொடுத்து அதிக லாபம் பெறுவதையே விரும்புவார்கள். அதற்கு தொழிலாளர்களில் பலர் வேலையில்லாத வர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலை தொழிலாளர்களிடையே ஏற்பட்டு, அவர்களுக்கு வேலை கிடைத்தால் போதும் கூலி எவ்வளவு குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று இந்த முதலாளிகளிடம் வேலைக்குச்சேருவார்கள். அதன் மூலம் முதலாளிகள் மிகமிக அதிக லாபத்தை அடைவார்கள். ஆகவே இந்த முதலாளிகள் அவர்களது நலன் காக்கும் அரசுகளை மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவிடாமல் தடுப்பார்கள். இந்த முதலாளித்துவ ஆட்சியாளர்களும் முதலாளிகளின் பேச்சைக் கேட்டு, மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டங்களை உருவாக்காமல் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைகளை செய்வார்கள்.

ஆகவே நிலவுகின்ற முதலாளித்துவ ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பிரச்சனை ஒருபோதும் தீர்க்கப்பட மாட்டாது. அதாவது வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பிரச்சனைஎப்போதும் நிலவிக்கொண்டே இருக்கும்.

இதே போலவே மக்கள் அனைவரும் கல்வி அறிவு பெற்று எது சரி, எது தவறு என்று சிந்திக்கும் திறன் பெற்றவர்களாக வளருவதை இந்த முதலாளிகள் விரும்புவதில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் சிந்திக்கும் திறன் பெற்ற அறிவாளிகளாக மாறிவிட்டால், இந்த முதலாளிகளின் பொய்களையும், சூழ்ச்சி களையும் மக்கள் புரிந்துகொண்டு இந்த முதலாளிகளுக்கு எதிராகவும் அவர்களது ஆட்சிக்கு எதிராகவும் போராடுவார்கள் என்று இந்த முதலாளிகள் கருதுகிறார்கள்.மேலும் பெரும்பான்மையான மக்கள் மூடர்களாக இருந்தால்தான் அவர்களை ஏமாற்றி குறைந்தகூலி கொடுத்து அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்றும் கருதுகிறார்கள். ஆகவே இந்த முதலாளிகள் பெரும்பான்மையான மக்களை கல்வி அறிவற்ற மூடர்களா கவே வைத்துக்கொள்ள விரும்பு கிறார்கள். ஆகவே முதலாளித்துவ நலன் காக்கும் இந்த ஆட்சியாளர்களை கட்டாயப்படுத்திமக்களுக்கு கல்வி வழங்கும் அரசின் கொள்கையை செயல்படுத்தவிடாமல் தடுக்கிறார்கள். அதேவேளையில் பணம் படைத்த செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதன் மூலம்,அவர்களைக் கொண்டு இந்த ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள்.

ஆகவேதான் அரசுக் கல்வி நிலையங்களை மூடுவதன் மூலம் ஏழைகளுக்கு கல்வி கற்க்கும் உரிமையை பறிக்கிறார்கள். அதே வேளையில் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் கல்வி கொள்கையை செயல்படுத்துகிறார்கள். மேலும் இந்த தனியார்மயக் கல்விக் கொள்கையின் மூலம் கல்வி நிறுவனங்களை நடதும் முதலாளிகள் கோடிகோடியாக கொள்ளையடித்துக்கொண்டு இருக்கி றார்கள். இந்த சூழலில் இட ஒதுக்கீட்டின் மூலம் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு கல்விகொடுப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் இந்த அரசு இழந்துவிட்ட பின்பு, இந்த அரசு எங்கிருந்து ஒடுக்கப்பட மக்களுக்கு கல்வி கொடுக்க முடியும்? உழைக்கும் மக்களும் ஜனநாயகவாதிகளும் சிந்திக்க வேண்டும்.

பிரிட்டீஷார் நம்மை அடிமைப் படுத்துவதற்கு முன்பு இங்கு மன்னராட்சி, மற்றும் ஜமீந்தார்களின் ஆட்சி நடந்துவந்தது. அந்த ஆட்சிகளில் பார்ப்பனர்களும், சைவ வேளாளர்களும் அரசுப் பணிகளில் இருந்தனர். அவர்களின் பணி என்பது மன்னர்களின் நலனுக்காகவும் நிலவுடமையாளர்களின் நலனுக்காகவும் மக்களை அடக்கிஒடுக்கும் பணியாகவே இருந்தது அதன் மூலம் இந்த உயர்சாதியினர் செல்வாக்கோடு வளமான வாழ்க்கை வாழ்ந்தனர்.

பிரிட்டீஷார் நம்மை அடிமைப்படுத்திய பின்பு ஆரம்ப காலங்களில் அவர்களின் அரசில் பார்ப்பனர்கள் பங்குவகித்தார்கள். அதனால் உயர் சாதியினரான சைவ வேளாளர்கள் முன்பு இருந்த அரசு பதவிகளில் பங்குவகித்தல் என்ற நிலையை இழந்தனர். ஆகவே பிரிட்டீஷ் அரசுப் பதவிகளில் பார்ப்பனர்களுக்கு இணையாக தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று போராடிப் பெருவதற்காகவே பார்ப்பனர் அல்லாத இயக்கத்தை கட்டியமைத்தார்கள். அதனை சாதிப்பதற்காக உயர்சாதி சைவ வேளாளர்களோடு பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியனரையும் சேர்த்துக் கொண்டு இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முன்வைத்தார்கள். இதுதான் சமூக நீதி என்று சொல்லி நீதிக் கட்சியை கட்டியமைத்தார்கள். இந்த கொள்கையை பிரிட்டீஷ் ஆட்சியாளர்களும் ஏற்றுக்கொண்டனர், இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நீதிக் கட்சியினர் ஆட்சியை கைப்பற்றி நடைமுறைப்படுத்தினர். இதற்கு முன்பு சாதி மத அடிப்படையிலான வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையின் மூலம் சிறுபான்மை மதப் பிரிவினருக்கு சட்டமன்ற பதவிகளில் தனித் தொகுதி முறையை பிரிட்டீஷார் நடைமுறைப்படுத்தி வந்தனர். அதன் தொடர்ச்சிதான் இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையாகும். இந்த கொள்கையை நடைமுறைப்படுத்தி ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு நன்மை செய்வது பிரிட்டீஷாரின் நோக்கம் அல்ல. மாறாக மக்களை சாதி மத அடிப்படையில் பிளவுபடுத்தி பிரித்தாளும் கொள்கையின் மூலம் இந்த நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆளுவதுதான் பிரிட்டீஷாரின் நோக்கமாகும். இத்தகைய பிரித்தாளும் கொள்கையின் மூலமே பிரிட்டீஷார் இந்தியாவை பல ஆண்டுகாலம் அடிமைப்படுத்தி ஆள முடிந்தது. பிரிட்டீஷாரின் பிரித்தாளும் கொள்கைக்கு துணைபோனவர்கள்தான் நீதிக்கட்சினர் ஆவார்கள். பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலிருந்தும் அதற்குப்பின்பும் அரசு ஆட்சி அதிகாரத்தில் பார்ப்பனர்களை ஒப்பிட்டு தங்களுக்கும் அதாவது பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கும் பங்கு வேண்டும் என்பதுதான் நீதிக் கட்சியின்

கொள்கையாகவும், நீதிக்கட்சியின் வாரிசுகளின் கொள்கையாகவும் இருந்தது,இருக்கிறது.

ஏகாதிபத்தியவாதிகளின் நலன் காக்க உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கு அரசு அதிகாரத்தில்பங்கு கேட்ப்பதுதான். நீதிக் கட்சி மற்றும் நீதிக்கட்சி வாரிசுகளின் கொள்கையாகும். இவர்கள்எப்போதும் நிலவுகின்ற அரசு ஆட்சியின் தன்மை பற்றியும், அதன் நோக்கம் முதலாளிகளின் நலனுக்காக உழைக்கும் மக்களை முதலாளிகள் சுரண்டுவதற்கும், ஒடுக்குவதற்கும் துணை போவதுதான் என்ற உண்மையைப் பற்றி பேச மாட்டார்கள். மாறாக இந்த அரசு இட ஒதுக்கீடு போன்ற சீர்திருத்தங்களை செய்து மக்களுக் காகவே பாடுபடுவதாக பொய் சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். எனினும் நீதிக் கடசியின் வாரிசுகளாக இருப்பவர்களில்

மக்களின் நலனில் ஆர்வம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டுக் கொள்கையானது ஒடுக் கப்பட்ட சாதி மக்களின் நலனுக்கானதா? அல்லது முதலாளிகளின் பிரித்தாளும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதா என்பதை நேர்மையான நீதிக்கட்சியின் வாரிசுகள் சிந்திக்க வேண்டும்.

நிலவுகின்ற கார்ப்பரேட் நலன் காக்கும் அரசிற்கு இட ஒதுக்கீட்டுக் கொள்கையை

நடைமுறைப்படுத்தி ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பைவழங்கும் நோக்கம் ஏதும் இல்லை. இந்த ஆட்சியாளர்களின் நோக்கமெல்லாம் உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களை பாதுகாப்பதே நோக்கமாகும். எனினும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை செயல்படுத்துவதாக நடித்துக்கொண்டே நடைமுறையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் நிலவுகின்றமுதலாளித்துவ அரசின் வஞ்சக நாடகமாகும். இத்தகைய நாடகத்தை நடத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். மக்களும்இவர்களின் நாடகத்தை புரிந்துகொள்ளாமல், இந்த அரசையும், இந்த ஆட்சியை நடத்தும் தலைவர்களின் மீது நம்பிக்கை வைத்து ஏமாந்துகொண்டு இருக்கிறார்கள்.

இதே போலவே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி பெரும்பான்மை மக்களின்வாக்குகளை பெற்று பெரும் பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் இங்கு ஆட்சியை நடத்துகிறது என்று மக்களை நம்பவைத்து இது ஜனநாயகப் பூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட மக்களாட்சி என்று சொல்லி மக்களை நீண்டகாலமாக ஏமாற்றி வருகிறார்கள். ஆனால் நடைமுறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வரும் எந்த கட்சியும் ஆட்சிக்கு வரும் முன்பு அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவோம் என்று பல வாக்குறுதிகளை கொடுப்பார்கள், ஆனால் ஆட்சிக்குவந்தவுடன் இந்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற மாட்டார்கள். ஆனால் திரைமறைவில் முதலாளிகளுக்கு இவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள். உழைக்கும் மக்களுக்கு எதிராக போலீசை வைத்து மக்களின் மீது அடக்குமுறையை ஏவுவார்கள்.

உதாரணமாக குடிசை வாழ் மக்களை அவர்களது வாழ்விடத்திலிருந்து அப்புறப் படுத்துவது போன்றவைகளாகும். இவ்வாறுதான் பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி உலகெங்கிலும் நடக்கிறது, என்று சொல்லி இந்த பாராளுமன்ற ஆட்சிகளின் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்று கம்யூனிஸ்டுகள் மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று லெனின் சொன்னார். ஆனாலும் இந்த பாராளுமன்ற ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கும்வரை இந்த பாராளுமன்றத்தில் தேர்தல்கள் மூலம் கம்யூனிஸ்டுகள் பங்கு பெறவேண்டும் என்றும் லெனின் சொன்னார்.

இந்த பாராளுமன்றத்திற்குள்ளும் இந்த பாராளுமன்றத்தால் மக்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்காது என்ற உண்மையை தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்யவேண்டும் என்றும், நடைமுறையில் இந்த பாராளுமன்றம் மக்களுக்கு எதிரானது என்ற உண்மையை மக்களுக்கு பாராளுமன்ற நடைமுறையின் மூலமும் கம்யூனிஸ்டுகள்மக்களுக்குபுரியவைக்க வேண்டும் என்றார் லெனின். மேலும் மக்கள் நடைமுறையில் இந்த பாராளுமன்றம் தங்களுக்கானது இல்லை என்று புரிந்துகொண்டால் ஒரு புரட்சியின் மூலம் இந்த பாராளுமன்ற ஆட்சி முறையை அகற்றிவிட்டு உண்மை யிலேயே மக்களுக்கு ஜனநாயத்தை வழங்கக் கூடிய ஓர் அரசமைப்பை மக்கள் உருவாக்குவார்கள் என்றார் லெனின். ஒரு சரியான கொள்கையையும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மக்களின் வழியிலேயே சென்று மக்களுக்கு உண்மையை கம்யூனிஸ்டுகள் புரியவைக்க வேண்டும் என்பதே லெனின் கம்யூனிஸ்டுகளுக்கு காட்டும் வழியாகும். ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும், பாடுற மாட்டை பாடிக் கறக்கணும் என்பது நமது முன்னோர்களின் வழிகாட்டுதலாகும். இந்த வழிகாட்டுதலை பின்பற்றித்தான் மக்களுக்கு உண்மையை புரியவைக்க வேண்டும்.

பாராளுமன்ற ஆட்சிமுறையை அம்பலப் படுத்தி மக்களால் நடத்தப்படும் புரட்சியின் மூலம் எப்படி முடிவிற்கு கொண்டுவருவதற்காக கம்யூனிஸ்டுகள் என்ன முறையை கையாள வேண்டுமோ அதேமுறையிலேயே இந்த போலியான இட ஒதுக்கீட்டு முறையை அம்பலப் படுத்தி உண்மையான இட ஒதுக்கீட்டு முறையை எப்படி, எத்தகைய சூழலில் கொண்டுவர வேண்டும் என்ற உண்மையை மக்களுக்கு கம்யூனிஸ்டு கள் புரியவைக்க வேண்டும். அதற்காக இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஆதரிக்கின்ற ஜனநாயக சக்திகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பாராளுமன்ற ஆட்சியானது மக்களை ஏமாற்றும் ஆட்சி முறை என்பதை கம்யூனிஸ்டுகள் புரிந்து வைத்துள்ளார்கள், ஆனால் இந்த உண்மை மக்களுக்கும், ஜனநாயக சக்திகளும் தெரிந்து கொள்ள வில்லையோ, அது போலவே நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டுக்கொள்கையானது மக்களைஏமாற்றுகின்ற போலியான கொள்கை என்பதை கம்யூனிஸ்டுகள் புரிந்து வைத்துள்ளார்கள், எனினும் மக்களும், ஜனநாயக சக்திகளும் இந்த உண்மையை

புரிந்துகொள்ளவில்லை. மேலும் இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கை உண்மையானது என்று மக்களும், ஜனநாயக சக்திகளும் நம்புகிறார்கள். ஆகவே மக்களாலும் ஜனநாயக சக்திகளாலும் உண்மை என்று நம்பப்படும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முற்றிலும் புறக்கணித்து அதனை கைவிட வேண்டும் எனற கருத்தை கம்யூனிஸ்டுகள் மக்களிடம் முன்வைக்கக் கூடாது. மக்களின்

உணர்வுகளுக்கு மதிப்பளித்து இட ஒதுக்கீட்டுக் கொள்கையை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க வேண்டும். அதே வேளையில் இந்த கொள்கையை ஆட்சியாளர்கள் உண்மையில் நடைமுறைப் படுத்தாமல் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்ற உண்மையை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அரசுக் கல்வி நிலையங்களை மூடுவதன் மூலமும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதன் மூலமும் நிலவுகின்ற இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு மூடுவிழா நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே கம்யூனிஸ்டுகள் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பாதுகாப்பதற்கான போராட்டங் கள் நடத்துவதோடு கூடவே கல்வி நிலையங்களை தனியார் முதலாளிகள் நடத்துவதை கைவிட்டு தனியார் கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று மக்களைத் திரட்டிப் போராட வேண்டும். அப்போதுதான் இட ஒதுக்கீட்டுக்

கொள்கையின் மூலம் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கு கல்வியில் இடம் கிடைக்கும்.

அதுபோலவே பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று போராட வேண்டும் அப்போதுதான் இட ஒதுக்கீட்டின் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். தொடர்ந்து புதிய கல்வி நிலையங்களையும், தொழில் நிலையங் களையும் அரசு உருவாக்கி நடத்திட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு தொடர்ந்து இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வியும் வேலைவாய்ப்பும் தொடர்ந்து கிடைக்கும். மேலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பெருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும். தற்போதுள்ள இட ஒதுக்கீட்டுக்கொள்கையை பல ஆண்டுகள்நடைமுறைப் படுத்தியும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களில் மிகச் சிலரே பயனடைந்துள்ளனர். இந்த நிலை மாறி அனைத்து ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கும் கல்வி, மற்றும் வேலை வாய்ப்பில் இடம் கிடைக்க வேண்டுமானால் இந்த அரசானது தொடர்ந்து புதிய கல்வி நிலையங் களையும், புதிய தொழில் நிலையங் களையும் உருவாக்கி நடத்த வேண்டும். இந்த கோரிக்கையை முன்வைத்து உழைக்கும் மக்களைத் திரட்டி கம்யூனிஸ்டுகள் போராட வேண்டும். இந்த கொள்கையை நிலவுகின்ற முதலாளித்துவ அரசு நடைமுறைப் படுத்தாது என்று கம்யூனிஸ்டுகளுக்கும் ஜனநாயகவாதிகளுக்கும் நன்றாகவே தெரியும், எனினும் மக்களுக்கு இந்த உண்மையை புரிய வைப்பதற்காக இத்தகைய போராட்டங்களை நடத்த வேண்டும். அதன் மூலம் மக்கள் உண்மையைப் புரிந்துகொண்டால் இந்த மக்களுக்கு எதிரான அரசை அகற்றிவிட்டு உண்மையான மக்கள் அரசை உருவாக்குவார்கள்.

 அத்தகைய உண்மையான மக்கள் அரசுதான் தொடர்ந்து புதிய கல்வி நிலையங் களையும், தொழில் நிலையங்களையும் உருவாக்குவார்கள். அத்தகைய மக்களாட்சியில்தான் தற்காலிகமாக இடஒதுக்கீட்டுக் கொள்கையானது உண்மையில் நடைமுறையில் பின்பற்றப் படும். மேலும் அனைத்துமக்களுக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை ஒரு கட்டத்தில் ஏற்படுத்தி இட ஒதுக்கீட்டுக்கொள்கை இனி தேவையில்லை என்ற நிலையை அடைய முடியும்.

இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால், இட ஒதுக்கீட்டுக் கொள்கை பற்றி இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்பதை எடுத்துக்கொண்டு சட்டவாதம் செய்வதால் மட்டும் போதாது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் என்ற வாதமும் போதுமானது அல்ல. இந்த அரசு பார்ப்பனர்களின் அரசு என்ற வாதமும் போதுமானதல்ல. இந்த அரசாங்கம்சாதிய வர்ணக் கோட்பாட்டை நிலை நிறுத்துகின்ற அரசாங்கம் என்ற வாதமும் போதுமானதல்ல. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அனைவருக்கும் இதனால் பயன் கிடைக்கவில்லை என்றாலும் ஒரு சிலருக்காவது பயன் கிடைக்கிறதே என்ற வாதம் போதுமானதல்ல. இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அனைவருக்கும் பயன் கிடைத்து, அவர்கள் அனைவருக்கும் வளமான வாழ்வு கிடைக்க வேண்டும். அதற்கு என்ன வழி? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வாதம் செய்வதே மிமிக அவசியமாகும். இதற்கு மாறாக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு சிலருக்காவது நன்மை கிடைக்கட்டும் என்று வாதம் செய்வது ஒடுக்கப்பட்ட சாதி மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு நாம் துரோகம் செய்கிறோம் என்றே பொருள்படும்.

ஆகவே ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும், அதற்கு என்ன வழி என்பது பற்றி விவாதிப்போம். மக்களுக்காக பாடுபடுவதை லட்சியமாகக் கொண்ட மக்கள் அரசுதான் இதனை சாதிக்கும் என்பது எமது கருத்தாகும். அது பற்றி விவாதிப்போம். சரியான முடிவிற்கு வருவோம்.

தற்போது மக்கள் தங்களது குழந்தைகளின் கல்விக்காக தனியார்கல்வி நிலையங் களையே நாடுகிறார்கள். உதாரணமாக ஸ்ரீமதி என்ற மாணவி ஒரு தனியார் பள்ளியில் கொலைசெய்யப்பட்டாள் என்று பெரும்பான்மையான மக்கள் உணருகிறார்கள். எனினும் அந்த மக்களில் பெரும்பாலோர் தங்களது குழந்தைகளை அதே பள்ளியில்தான் மீண்டும் சேர்த்துள்ளனர்.

மக்களுக்கு தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை தற்போதைய ஆட்சியாளர்கள் உருவாக்கிவிட்டார்கள். இல்லம் தேடிவரும் கல்வியின் மூலம் அரசானது பள்ளிகளை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது வருங்காலத்தில் அரசுபள்ளிகளே இருக்காது என்ற நிலையை நோக்கி ஆட்சியாளர்கள் பயனிக்கிறார்கள். ஆகவே இனிவருங்காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கு முழுமையாக கல்வி மறுக்கப்பட்டுவிடும்.

பணம் இருப்பவர்கள் மட்டுமே அவர்களது குழந்தைகளுக்கு கல்வி யைப் பெற முடியும். வேலை வாய்ப்பை பொருத்தமட்டில் இதுவரை பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் ஒடுக்கப் பட்டசாதியைச் சேர்ந்த மக்களுக்கு ஓரளவு வேலை வாய்ப்பை இந்த அரசு ஏற்படுத்தி கொடுத்தது. தற்போது இந்த பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் கொள்கை யை ஆட்சியாளர்கள் தீவிரமாக செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார் கள். இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை இனி வரும் காலங்களில் இந்த அரசால் கொடுக்க முடியாது என்ற நிலை ஏற்படும். எனினும் இந்த அரசு அமைப்பில் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான அரசு அதிகாரிகள், நடுத்தர மற்றும் கடைநிலை பணியாளர்களை உருவாக்குவது இந்த அரசுமுறை நீடித்து இருப்பதற்கு அவசியமாகும். ஆகவே இந்த அரசுப் பணிகளில் மட்டும் இந்த ஆட்சியாளர்களால் வேலை வாய்ப்பை ஏற்பாடு செய்து கொடுக்க முடியும். மக்களை ஒடுக்கும் அரசு நிறுவனங்களான போலீஸ்துறை, நீதித்துறை, சிறைத்துறை, நிர்வாகத் துறை போன்ற நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆட்களை எடுப்பார்கள். இதிலும் கூட காலியிடங்கள் அனைத்தும்

நிரப்பக் கூடாது என்ற உலகவங்கியின் கட்டளைக்கு ஏற்ப அனைத்து காலியிடங்களையும் நிரப்பாமல் சில இடங்களை மட்டுமே நிரப்புவார்கள். இந்த வகையில் ஆட்சியாளர்களால் மிகவும் குறைந்த அளவிலான வேலை வாய்ப்பை மட்டுமே அதிலும் குறிப்பாக அரசுத் துறைகளில் மட்டுமே வேலை கொடுக்க முடியும் என்ற நிலையை நோக்கி இந்த அரசு நகர்ந்துகொண்டு இருக்கிறது. மேலும் இராணுவத்திற்கு பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்குசிறிது காலமே பணியில் இருக்க முடியும் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஆகவே ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கு இராணுவத்தில் வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால் ஒடுக்கப்பட்ட சாதியினர் மட்டும் பாதிக்கப்படவில்லை, உயர்சாதியைச் சேர்ந்தவர்களும் பாதிப்புகளை சந்திக்கிறார்கள். அதாவது வேலை வாய்ப்பு எண்ணிக்கை குறையும் போது உயர் சாதியினருக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு எண்ணிக்கையும் குறையும் அல்லவா. இந்த அரசானது கார்ப்பரேட் நலனுக்கான அரசாக இருப்பதால், கார்ப்பரேட் நலன்களை பாதுகாப்பதில் ஆர்வமுள்ளவர்களாக உயர் சாதியினர் குறிப்பாக பார்ப்பனர்கள் இருப்பதால் பார்ப்பனர்களின் பாதிப்பை ஈடுகட்டுவதற்காகவும், வட மாநிலங்களில் சில மாநிலங்களில் பார்ப்பனர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களின் ஓட்டுகளை பெறுவதற்காகவும் உயர் சாதியினருக்கு 10 சதவீதம் என்ற சட்டத்தை கொண்டுவருகிறார்கள்.

இவர்கள் என்னதான் தந்திரங்களை கையாண்டாலும் இவர்களால் மக்கள் தொகை

பெருக்கத்திற்கு ஏற்ப வேலை வாய்ப்பை வழங்க மாட்டார்கள். நடைமுறையில் இவர்கள் மக்களிடம் அம்பலப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆகவே இந்த ஆட்சியாளர்களின் ஏமாற்று வேலைகளை அம்பலப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் கம்யூனிஸ்டுமற்றும் ஜனநாயகவாதிகளின் பணியாகும். தேன்மொழி

அன்றைய இடஒதுகீடு புரிந்துக் கொள்ள... இன்று பலர் பேசும் தவறான தகவல்களை புறம்தள்ள..




இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்