தமிழகத்தில் சமணம் பௌத்தத்தை விட காலத்தால் முந்தையது என்றாலும் அது எப்பொழுது இங்கு அறிமுகமாகி வளர்ப்பது என்றும் காலகட்டத்தை அறுதிவிட்டுக் கூற முடியவில்லை. சமணம் தமிழகத்தில் கிமு 3 முதல் கிபி 7 வரையிலும் பௌத்தம் கிமு 2 முதல் கிபி 6 வரையும் மிகவும் செல்வாக்குடன் இருந்தன எனலாம். பௌத்தத்தை காட்டிலும் சமணம் தமிழகத்தில் மேலும் சில காலம் செல்லாக்குடன் இருந்தது என்றாலும் சைவ வைணவ எழுச்சிக்கு பின் அது வீழ்ச்சி அடைந்தது. தமிழகத்தில் இன்று பெரும்பான்மை நயினார் என்ற பட்டத்துடன் காணப்படும் சமணத்தைப் பின்பற்றுவோர் தமிழகத்தில் வடதமிழகத்தில் உள்ளனர்.
முந்தைய பகுதியின் தொடர்ச்சி
ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பில் சுரண்டுவோர்க்கு உரியதாக உள்ள அதிகாரத்தை பேணும் பொருட்டு வடிவமைக்கப்பட்டதே ஜாதியம்.
அவ்வாறு ஜாதி தோன்றுவதற்கு முன்னரே ஜாதிகள் தோன்றுவதற்கான அடிப்படைகள் உருவாகிவிட்டது. நிலவி வந்து வாழ்வியல் முறையில் (ஜாதியின்) வேற்றுமையில் ஒற்றுமையாக வாழும் இயங்கு நிலைக்கான கருத்தியலை தோற்றுவித்தது அந்தக் கருத்திலே வழங்கியவர்கள் சனாதனவாதிகளே.
நில பிரபத்துவ அமைப்பை வடிவமைக்கும் கருத்தியலை கட்டமைப்பதில் கிபி3 ஆம் நூற்றாண்டில் தொகுத்து வடிவமைக்கப்பட்ட மனுதர்ம சாஸ்திரத்திற்கு பெரும் பங்கு உண்டு. மேலும் வர்ண தருமத்தை பேணுவதற்காக பகவத் கீதை இறைவனால் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இவை கி.பி 3-4ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டு பின்னர் மகாபாரத இதிகாச கதைகளுடன் இணைக்கப்பட்டது. நிலப்பரபுத்துவ உடன்பாடான கடவுள் கோட்பாட்டையும் அதற்கான பக்தி கோட்பாட்டையும் வடிவமைத்திருந்த கீதையும் மனுஸ்மிருதியும் பண்பாட்டுத்தளத்தில் வலுவான மாற்றங்களை ஏற்படுத்தியது நிலப் பிறப்புத்துவத்தை உறுதிப்படுத்த வடிவமைத்தது சனாதனத்தை கட்டியமைத்தவர்களே. கிபி 4ஆம் நூற்றாண்டு தொடங்கி கிபி 8ஆம் நூற்றாண்டில் சங்கரரின் அத்வைதம், பகவத் கீதை, மனுதர்மம் ஆகியவை நிலப் பிரபுத்துவ உறுதிப்பாட்டை நிலைநிறுத்தவும் பூசர்களானவர்ள் பிராமணர்கள் என்ற மேல்நிலை ஆதிக்கத்திற்கு வழிகோறியது.
காலவோட்டத்தில் வேதங்களைப் போற்றவும் ஏற்பட்ட புதிய வர்க்கப் பிரிவு பிரதேச பூசர்களுடன் இணைந்து உருவான பிரிவுதான் பிராமணர்கள் ஆரியர்கள் என்ற கோட்பாடு.
பகவத் கீதை வடிவமைப்பதற்கு முந்திய ஆதி இயற்கை கடவுள் குலதெய்வ கடவுளுக்கும் நிலப்பரப்புத்துவ தேவையொட்டி உறுதிப்பட்ட எல்லா தெய்வங்களையும் கட்டுப்படுத்தும் முறையில் பரம்பொருள் கோட்பாடுகள் கிபி 4ம் நூற்றாண்டில் தோன்றி வளரலாயிற்று .
அதற்கான முழு முதற் பரம்பொருட் கோட்பாடு சங்கரின் அத்வைதம் உயர்வடிவம் பெற்றது. பல்வேறு குலக்கடவுள்களை உள்வாங்கி ஆறு கடவுளை ஏற்றுக்கொண்டு ஆறு மதங்களை சனாதன நெறிக்குரியனவாக வடிவப்படுத்தி அக் கடவுள்களை சங்கரர் தனது மடத்தில் எழுந்தருளவும் செய்தார். அவையெல்லாம் மாயையுடன் இயைந்த பிரபஞ்சத்துத் தேவர்களே.
இவ்வாறு நிலப்பிரபுத்துவம் உறுதி அளித்த வேலை மனுதர்மம் பகவத் கீதை சங்கரர் அத்வைதம் ஆகியன சனாதன ஆன்மீக தலைமை வலுவடை செய்ததோடு. ஜாதிகள் ஒவ்வொன்றுக்கும் தத்தமது தொழில்களை மாறுபாடின்றிச் செய்தொழுகும் வாழ்நெறிக்கு தெய்வ அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தன.
அவ் வர்ணாசிரம நெறியைச் சமூகம் பிறழ்வின்றித் தொடர்வதற்கான கண்காணிப்பை அரசருக்கான பணியாக்கி அதற்கு ஏதுவாகக் கடவுளின் மனித உருவாக அரசர்கள் விளங்குவார் என்ற கருத்தியலை சனாதனிகள் விதைத்தனர்.
வர்ணங்கள் தமக்குள் கலந்து தூய்மை கேட்டு உறுப்பெற்றவையே ஆயிரக்கணக்கான ஜாதிகள் என்று மனுதர்மம் சொல்வதும். இனக்குழு கடந்த மண உறவுகள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. இனக் குழுக்களுக்கிடையே அகமணத்திற்கு மேலாக புறமணமும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இவ்வாறாக நிலவுடமை சமூகம் உறுதிப்படுவதற்கு முன் இருந்த நிலை மாறி நிலப் பிரபுத்துவ அமைப்பை கட்டிக் காப்பதற்காக தெய்வீக அங்கீகாரம் பெற்ற அரசு தொழில் ரீதியாக உழைப்பவர்களை நிலத்துடன் இறுகப் பிணைக்கப்பட்ட வம்சாவழியாக அரசு கண்காணிப்பை மேற்கொண்டது.
இவ்வாறாக நிலப்பிரப்புதுவ சமூகத்தில் அரசர் பூசையார் (பிராமணர்) ஆகியோர் கைவினை சாதிகள் மற்றும் பண்ணையடிமை ஜாதிகளை ஒடுக்கி வந்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு தேவையொட்டியே பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவர்களது சுருண்டல் வெவ்வேறு தளங்களில் அவர்களுக்கு உகந்த வகையில் நடத்தினர். ஆங்கிலேயர்கள் மிக நுட்பத்துடன் ஜாதியை கட்டமைப்பை தமக்கு வசதியான முறையில் கையாளவும் செய்தனர். ஆங்கிலேயர்கள் தேவையை ஒட்டி மேட்டுக்குடியினர் காலனி எஜமானர்களுக்கு நெருக்கமாகி ஆங்கிலம் கற்று அரசு பணிகளில் ஆதிக்கம் செலுத்தினர். அதில் முக்கியமாக பிராமணர் பிராமணர் அல்லாதோர் பிரிவினருக்கு இடையேயான முரண்பாடும் நவீன சமூகத்தில் எல்லா ஜாதிகளும் மேல்நிலை நோக்கிய வர்க்க அமைப்பு உருவாகியது ஒவ்வொரு ஜாதியிலும் வர்க்கங்களாக பிளவுண்டு கிடக்கிறது.
ஜாதியின் இருப்பு
ஜாதிகளும் மதங்களும் உழைக்கும் வர்க்கத்தை பிரிப்பது என்பதால் அது நீடிக்கவே ஆளும் வர்க்கம் விரும்புகிறது.ஜாதிகளும் மதங்களும் மக்களின் வாழ்வாதார பிரச்சனையிலிருந்து அவர்களது கவனத்தைத் திசை திருப்புவதால் ஆளும் வர்க்கம் இதனை ஆழமாக வேண்டி நிற்கிறது.ஜாதியின் ஓர் அம்சம் என்னவென்றால் தீண்டாமை. தீண்டாமை சட்ட விரோதமாகி சட்டம் கொண்டுவரப்பட்டது ஆனால் ஜாதி நிலைத்து நிற்பதற்கு ஜாதியத்தின் அடித்தளங்கள் விரிவாக்கப்படுத்தப்பட்டது. ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது ஜாதி அடையாளங்களை மீட்டுருவாக்கவே செய்கின்றது ஜாதியை வலுப்படுத்தவும் செய்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை சமூகப் பண்பாட்டு மாற்றத்திற்கான கோட்பாட்டில் சமஸ்கிருத மயமாதல் மட்டும் முன் வைக்கவில்லை மாறாக அதற்கு கேள்விக்குள்ளாக்கும் தரவுகளை முன்வைக்கிறது .பண்பாட்டு அளவில் தென்னிந்திய பிராமணர்களும் வட இந்திய பிராமணர்களும் வேறுபடுத்துவதும் பிராமணர்களின் வாழ்வு நெறி என்றும் மாறாதது என்றோ அவர்கள் வேத புராணங்களில் கூறப்பட்டுள்ள முறைப்படி மாறாமல் வாழ்ந்து வந்துள்ளனர் என்று கூறும் அளவிற்கு அனைத்து பிராமணர்களும் ஒரு வழிபட்ட வாழ்வியல் நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை இன்னும் சொல்லப்போனால் பிராமணர்களின் மற்றமே மற்றொரை காட்டிலும் விரைந்து நிகழ்ந்து இருக்கிறது.
வேதகால பிராமணர்கள் சோமம் என்னும் போதை தரும் மதுவை பருகினார்கள் மாட்டுக்கறி உண்டார்கள் தெய்வங்களுக்கு உயிர் பலியை செய்தார்கள் இந்த நிலை வேதகாலத்திற்கு பிந்தைய நாளில் ஜெயன புத்த சமயங்களின் தாக்கத்தினால் மாறியது என்றாலும் இன்றும் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக காஷ்மீர் வங்காள மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பிராமணர்கள் மாமிச உணவு உண்கிறார்கள். கி.பி ஆறாம் நூற்றாண்டில் எழுந்த சமணத்தின் செல்வாக்கால் பிராமணர்கள் புலால் உண்ணுவதை நிறுத்திக் கொண்டார்கள் என்பது குறிப்பு . இன்னும் கூட புலால் உண்ணும் பழம் மரபின் எச்சம் பிராமணர்களிடம் காணப்படுகிறது ஆந்திராவில் கர்னூல் மாவட்டம் கம்பம் மாவட்டத்திலும் மாதங்கி வழிபாட்டின் போது தாழ்த்தப்பட்ட மக்களான மாதிகர் வீட்டில் எருமை கறி சமைத்து அதனை பரிமாறுவதும் பிராமணர்கள் உண்பதும் ஆண்டுக்கு ஒரு முறை சடங்காக நிகழ்கிறது. (தமிழர் மானுடவியல் பத்வத்சல பாரதி பக்கம் 170 171 அடையாளம் வெளியீடு ).
இவ்வாறான வாழ்க்கை முறையை கொண்ட பிராமணர்கள் காலம்தோறும் மாறி வந்துள்ளது மனுதர்மம் யக்ஞவல்கியம் போன்றவை சுட்டிக் காட்டுகின்றன. வேதகால சமூக சட்டதிட்டங்களை விவரிக்கும் இந் நூல்கள் சமுதாயத்திற்கு ஒவ்வாத தீமைகளை ஏற்படுத்துகின்ற ஆசாரங்களை அகற்றிவிட்டு அவற்றுக்கு மாறாக புதியவற்றை புகுத்தி உள்ளதையும் நாம் காண வேண்டும். காலத்துக்கேற்ப வாழ்க்கை முறை மாறி வந்துள்ளதை சுட்டிக்காட்டுவது அல்ல மேற்கூறிய தரவுகளின் நோக்கம் பிராமணர்களின் வாழ்வியல் முறை எந்த ஒரு காலகட்டத்திலும் மாறாமல் வரவில்லை என்பதையும் மாற்றத்துக்கு எந்த வகையான வேத புராணங்களும் துணை நிற்கவில்லை என்பதின் சுட்டிக்காட்டுவது தரவுகளின் நோக்கமாகும். (அதே நூல் பக்கம் 171 ).
நவீன கல்வி தொழில் மயமாக்கும் நகரமயமாக்கும் போன்றவற்றை உள்ளடக்கிய மேற்கத்திய பண்பாட்டுகளோடு அனைத்து பண்பாடுகளும் ஆட்டம் கண்டு இருக்கிறது. நவீனத்துவமும் பிராமணர்களின் நகர்வும் மற்ற ஜாதியினரின் சமூகம் மாற்றத்திற்கான மையமாக மட்டும் பிராமணர்களின் வாழ்க்கை முறை என்று எல்லை இடுவது சமஸ்கிருத மயமாதல் கோட்பாட்டின் முரண்பாடாகும் (மேல் அதேநூல் பக்கம்171).
ஆரியர்களின் தனித்தன்மை சமண புத்த சமயங்களின் தாக்கம் எவ்வாரெல்லாம் மாறி வந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள சில விளக்கம் ... பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சைவ சித்தாந்தமும் பன்னிரண்டாம் நூற்றாண்டு தோன்றிய லிங்காயத் இயக்கமும் பிராமணியத்துக்கு எதிரான மாற்றுக் கருத்துகளை முன் வைத்தன ... அப்படி என்னும் பொழுது சைவ உணவு முறை தமிழ் பண்பாடு என்று கூறப்படும் பல்வேறு பழக்கவழக்கங்கள் இன்று பிராமணியமாக ஊகிக்க இயலாத அளவிற்கு பண்பாட்டு உருவாக்கத்தின் கலவையாக அமைந்துள்ளது.
இதனைப் புரிந்து கொள்ள சங்ககாலத்திற்கு பிந்திய காலத்தோடு தொடர்பு படுத்துவது பொருத்தம். கிபி ஆறாம் நூற்றாண்டில் பல்லவர் ஆட்சி யின் ஆதிக்கம் எழுச்சி மேலோங்கி இருந்த தென்னிந்தியாவில் சகாப்தம் முடிந்தது கல்வெட்டுகளை காணும் பொழுது கிபி 6-9 நூற்றாண்டு காலகட்டங்களில் பல்லவர்களும் பாண்டியர்களும் தம்மிடையேயும் தக்காண அரசுகளோடும் போரிட்டுக் கொண்டும் இணக்கம் கண்டும் வாழ்ந்த காலகட்டத்தில் ஏற்பட்ட பண்பாட்டு மறுமலர்ச்சி ..அக்காலகட்டத்தில் ஏற்பட்ட பரஸ்பர போக்கில் பிராமணர்கள் தமிழ்வாய மாக்களும் தமிழர்கள் சமஸ்கிருதமயமாக்களும் ஏற்பட்டன. (174).
மேல் ஜாதியினரின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றி கீழ் ஜாதியினர் தங்கள் தகுதிகளை உயர்த்துக் கொள்ளும்போது சாதி சமூகத்தின் உயர் குடியாக்கும் எனும் கருத்தமைவு கீழ்குடியினர் தங்கள் பழக்க வழக்கங்களை வாழ்க்கை முறைகளை மாற்றிக்கொண்டு உயர்குடியாக மாற வேண்டும் என்ற எண்ணம் தகுதி உயர்வை ஏற்படுத்திக் கொண்டால் அவர்கள் அனைவரும் மேல் ஜாதியினராக மாறிவிட முடியுமா?
பிராமணர்கள் அல்லது மேல் சாதி அடிப்படையில் மேல் உள்ளவர்கள் தங்களின் சொந்த நலனுக்காக சில கீழ் ஜாதியில் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து தங்களோடு இணைத்து வளர்த்து விடுவதனால் என்ன மாற்றம் ஏற்பட்டது பார்ப்போம்.
இடைக்காலத்தில் சோழர் ஆட்சியின் பொழுது ராமானுஜர் பிராமணர் அல்லாதவரை வைணவ சமயத்திற்கு ஈர்ப்பதற்காக சமய சடங்குகள் செய்து பூணூல் அறிவித்து வைணவப் பிராமணராக மாற்றினார். அதேபோல் இடைக்கால மன்னர்கள் பாவ நிவர்த்திக்காகவும் இறைவனருள் பெற வேண்டியும் இலட்சக்கணக்கான பிராமணர்களுக்கு விருந்தளிக்க வேண்டியதாக இருந்தால் பிற வகுப்புலிருந்து ஏராளமானவர்கள் பிராமணராக மாற்றப்பட்டனர் . இன்னும் பிராமணர் பற்றி எழுத்து வரலாற்றில் இடம்பெறும் இன்னொரு செய்தி கவனிக்கத்தக்கது கடம்ப குலத்தை சார்ந்த மயூரவர்மனுடைய ஆட்சி காலத்தில் சில ஆந்திர பிராமணர்கள் தென் கன்னடத்திற்கு அழைத்துவரப்பட்டார்கள் யாகத்திற்கு போதுமான அளவு பிராமணர் கிடைக்காத காரணத்தினால் அவ்வாறு அழைத்து வரப்பட்ட ஆந்திர பிராமணர்கள் பிராமணர்கள் இல்லாத ஜாதின் பல குடும்பங்களை தேர்வு செய்து பிராமணர் ஆக்கி அவர்களுக்கு குடும்பப் பெயரையும் தந்துள்ளனர். (மேல் அதேநூல் பக்கம்181)
ஆக மன்னர்கள் அதிகாரத்தளம் சர்வ வல்லமை பெற்ற தாயினும் வல்லமையின் தளம் தொடர்ந்து தாக்கப்பட /உயர்த்தப்பட பிராமணர்களின் சடங்கியல் தளத்தை அது கோரி நிற்பதால் இங்கு அதிகாரம்(Power) தகுதி (status) ஆக இரண்டும் தன்னியல்புகளுடன் நிலைபெறாமல் பிராமணர்களின் சடங்கு தகுதி மன்னர்களின் சர்வாதிகாரத்தை தன்வசம் உச்செரித்துக் கொள்கின்றது. இவ்வாறு அதிகாரம் தகுதியாகிய இரண்டும் தனித்தியங்கும் கூறுகள் ஒன்றோடு ஒன்று ஒத்திசைவு பெறாமல் எதிர்நிலையில் ஒன்றை ஒன்று மறுதலித்துக் கொண்டு ஒன்று மற்றொன்று தன்வயப்படுத்திக் கொண்டது என்பதே ஜாதி சமூகத்தின் படிநிலை தர்க்கமாக வாய்ப்பாடாக அமைந்தது (மேல் அதேநூல் பக்கம்179).
தொடரும்...
+++++++++++
No comments:
Post a Comment