முதலாளித்துவ ஜனநாயகமும் பாட்டாளி வர்க்க ஜனநாயகமும்
l இந்த பகுதி எழுதுவதன் நோக்கம் லெனின் தன்நாட்டில் புரட்சிக்கு முன் தத்துவார்த்த தளத்தில் புரட்சிக்கு எதிரான புரட்சியை காட்டிக் கொடுக்கும் திருத்தல்வாத போக்கை அம்பலப்படுத்தினார் இன்று நமது நாட்டில் அதே காவுத்ஸ்கியவாதம் மேலோங்கியுள்ளது அதனை விவரிக்க இந்த தொடர். ஜனநாயம் என்று பொதுவாக பேசுவதும் பாராளுமன்றம் மூலம் உழைக்கும் மக்களுக்கு ஏதோ செய்வதாக பேசுவதும் உண்மையில் மார்க்சிய வகைப்பட்டதா?
முந்தைய இதழின் தொடர்ச்சி. முதலாளித்துவ ஜனநாயகமும் பாட்டாளி வர்க்க ஜனநாயகமும்
காவுத்ஸ்கி மிகவும் வெட்கக்கேடான முறையில் குளறுபடி செய்துள்ள விஷயம் உண்மையில் பின் வருமாறு: .
நாம் பொது அறிவையும் வரலாற்றையும் கேலிக்கு ஆளாக்காதிருக்க வேண்டுமானால் பல்வேறு வர்க்கங்கள் நிலவுகின்ற வரையில் ‘தூய ஜனநாயகம்’ பற்றிப் பேச முடியாது, வர்க்க ஜனநாயகம் மட்டுமே பேச முடியும் என்பது கண்கூடு. (தூய ஜனநாயகம் என்பது வர்க்கப் போராட்டம் மற்றும் அரசின் இயல்பு ஆகிய இரண்டை பற்றியும் அறிவில்லாத ஓர் அப்பாவித்தனமான தொடர் மட்டுமல்ல அதோடு உச்ச அளவிலான வெற்று தொடரும் ஆகும். காரணம் கம்யூனிஸ்ட் சமுதாயத்தில் ஜனநாயகம் மாற்ற மடையும் போக்கில் ஒரு பழக்கமாக மாறி உலர்ந்து உதிரும் ஆனால் என்றுமே தூய ஜனநாயகம் என்பது இருக்காது என்று இடைமுறிப்பாகச் சொல்லி வைப்போம்.)
தூய ஜனநாயகம் என்பது தொழிலாளர்களை ஏய்க்க விரும்பும் ஒரு மிதவாதியின் பொய்யான தொடராகும். நிலப் பிரபுத்துவ முறையின் இடத்தை எடுத்துக் கொள்ளும் முதலாளித்துவ ஜனநாயகத்தையும் முதலாளித்துவ ஜனநாயகத்தின்இடத்தை எடுத்துக் கொள்ளும் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தையும் வரலாறு அறியும்.
மத்திய கால நிலவரத்துடன் ஒப்பிடும்போது முதலாளித்துவஜனநாயகம்முற்போக்கானது எனவும் பாட்டாளி வர்க்கம் முதலாளித்து வர்க்கத்தை எதிர்த்த தனது போராட்டத்தில் அதைப் பயன்படுத்த தவறக் கூடாது எனவும் சாற்றும் உண்மையினை ‘நிரூபிக்க’ காவுத்ஸ்கி டஜன் கணக்கான பக்கங்களை எழுதித் தள்ளுவது உண்மையில் தொழிலாளர்களை ஏமாற்றும் உத்தேசம் கொண்ட வெறும் மிதவாத பிதற்றலே.
காவுத்ஸ்கி மார்க்சியத்தில் இருந்து மிதவாதிகளுக்கு முதலாளிகளுக்கு ஏற்புடையவற்றை எடுத்துக்கொள்கிறார். மார்க்சியத்தில் முதலாளிகளுக்கு ஏற்புடைய அல்லாதவற்றை அவர் நிராகரிக்கிறார்.
அவை குறித்து எதுவும் சொல்லாது மௌனமாகிறார் பூசி மெழுகுகிறார்.
தவிர்க்கவே முடியாத வகையில் முதலாளித்துவவர்க்கத்தின்அடிவருடியாகிறார். ( பக்கம் 28- 29 ).
மத்திய கால நிலையுடன் ஒப்பிடும்போது முதலாளித்துவ ஜனநாயகம் ஒரு மாபெரும் வரலாற்று முன்னேற்றமாக இருந்த போதிலும் அது எப்போதும் முதலாளித்துவத்தின் கீழ் கட்டாயமாகும் வரையறுக்கப்பட்ட மொட்டையான பொய்யான போலியான ஒன்றாகவும் செல்வந்தர்களுக்கு ஒரு சொர்க்கமாகவும் சுரண்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு மாயப்பொறியாயும் மோசடியாகவும் நிலவும். மார்க்சின் போதனைகளில் மிகவும் முக்கியமான பகுதியாக விளங்கும் இந்த உண்மைனைத்தான் மார்க்சியவாதி காவுத்ஸ்கி புரிந்து கொள்ள தவறிவிட்டார்.(30)
புராதன மற்றும் நிலப்பரப்புத்துவ அரசுகள் மட்டுமின்றி நவீன பிரதிநிதித்துவ அரசும் மூலதன கூலிஉழைப்பைச் சுரண்டுவதற்கான ஒரு கருவியே (எங்கெல்ஸ் அரசு பற்றிய தமது நூலில்) விரோதிகளை பல பிரயோகம் மூலம் அடக்கி வைப்பதற்கு போராட்டத்தில் புரட்சியில் பயன்படுத்தப்படும் ஓர் இடைக்கால நிறுவனம் மட்டுமே அரசு. ஆகையால் சுதந்திரமான மக்கள் அரசு குறித்து பேசுவது மிகவும் முட்டாள் தனமானதாகும். பாட்டாளி வர்க்கத்துக்கு அரசு இன்னும் தேவைப்படுகிறது எனில் அது சுதந்திரத்தின் நலன்களுக்காக தேவைப்படுவதில்லை மாறாக அதன் விரோதிகளை அடக்கி வைப்பதன் பொருட்டே தேவைப்படுகிறது சுதந்திரம் குறித்து பேசுவது சாத்தியமானவுடன் அரசு என்பது இல்லாது போகிறது (எங்கெல்ஸ் 1875 மார்ச் 28 இல் பெபெலுக்கு எழுதிய கடிதத்தில்). உண்மையில் அரசு என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான ஒரு இயந்திரமே தவிர வேறு எதுவும் அல்ல. இது முடியரசில் போலவே சற்றும் குறையாத அளவில் ஜனநாயக குடியரசிலும் கண்கூடு (மார்க்ஸ் எழுதிய பிரான்சில் உள்நாட்டு போர் எனும் நூலுக்கு எங்கெல்ஸ் எழுதிய முகவுரையில்).
காவுத்ஸ்கி வெட்கக்கேடான முறையில் முதலாளித்துவ ஜனநாயகத்தை அலங்காரம் செய்து காட்டுகிறார். அமெரிக்காவிலும் ஸ்விஸ்லாண்டிலும் ஆக ஜனநாயகவாதி களான குடியரசுவாத முதலாளித்துவ வர்க்கத்தினர் வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு எதிராக எப்படி நடக்கிறார்கள் என்பதை குறிப்பிடாமல் விட்டு விடுகிறார். அறிவாளியும் படிப்பாளியுமான காவுத்ஸ்கி. இவற்றைப் பற்றி எல்லாம் மௌனம் சாதிக்கிறார்! இந்த விஷயத்தில் மௌனம் சாதிப்பது வெறுக்கத்தக்கது என்பது அந்த படிப்பாளி அரசியல்வாதி உணரவில்லை!.
என்ன அற்புதமான அறிவாழம் முதலாளித்துவ வர்க்கத்திடம் எத்தகைய நயநாகரிகமான அடிமைத்தனம் முதலாளிகள் முன்னால் எத்தகைய தன்மதிப்பிழந்த எத்தகைய கெஞ்சி மன்றாடல்(33).
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எதிர்த்து பிரசாரம் எழுதுதல் 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் இருந்த விக்குகளையும் டோரிகளையும் குறித்து பேசுதல் ஜனநாயகம் என்பது சிறுபான்மை பாதுகாப்பது என்று அடித்துக் கூறி அதே சமயத்தில் ஜனநாயக குடியரசான அமெரிக்காவில் சர்வதேசிவாதிகளை எதிர்த்து நடக்கும் இனக்கொலைகள் குறித்து மௌனம் சாதித்தல் இவையெல்லாம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு செய்யப்படும் அடிவருடி சேவைகள் அல்லவா?(33)
பாட்டாளி வர்க்க ஜனநாயகம் எந்த ஒரு முதலாளித்துவ ஜனநாயகத்தை விட மில்லியன் மடங்கு அதிக ஜனநாயகம் ஆனது;சோவியத் ஆட்சி அதிகாரம் ஆக ஜனநாயகமான முதலாளித்துவ குடியரசை விட மில்லியன் மடங்கு அதிக ஜனநாயகம் ஆனது.
இந்தப்பகுதி தேவைகருதி நிறுத்திக் கொள்கிறேன் அடுத்த இதழில் சுருண்டப் படுவோருக்கும் சுரண்டுவோருக்கும் இடையே சமத்துவம் இருக்கவே முடியாது. தொடரும் .. .. .. சிபி
++++++++++++++++++++++++++++++++++++++++++++