Showing posts with label மார்க்சிய நூல்கள். Show all posts
Showing posts with label மார்க்சிய நூல்கள். Show all posts

மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி

மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி மாரிஸ் கார்ன்ஃபோர்த்

ங்கிலாந்தைச் சேர்ந்த தோழர் மாரிஸ் கார்ன்ஃபோர்த்மார்க்சிய மூல நூல்களுக்கான வாசகர் வழிகாட்டி என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலில் மார்க்சிய லெனினியத்தை எப்படிக் கற்பது என்பதையும், அரசியல்- பொருளாதார- சித்தாந்தப் பிரச்சினைகளை மார்க்சிய லெனினியத்தின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான வழிமுறையை மார்க்சிய மூல நூல்களில் இருந்து எப்படி கற்றுக்கொள்வது என்பதைப் பற்றியும் விரிவாக விளக்குகிறார்.

இந்த நூலில் பாட்டாளி வர்க்கக் கட்சிஎன்ற தலைப்பில் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை மார்க்சிய ஆசான்களின் நூலில் இருந்து எப்படி கற்றுக் கொள்வது என்பதை விளக்கியிருக்கிறார். ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியின் முக்கியத்துவம் மற்றும் தன்மைகளை மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் உள்ளிட்ட மார்க்சிய ஆசான்களின் நூல்களில் இருந்து எடுத்துக்காட்டி, அந்நூல்கள் குறித்து அறிமுகப்படுத்துகிறார்.

இந்த நூல் கீழைக்காற்று வெளியிட்டகத்தில் கிடைக்கும்.

இந்த நூலின் பிடிஎப்தான் கீழே உள்ளன

மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி மாரிஸ் கார்ன் ஃபோர்த் நூலை PDF ல் இந்த லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளலாம் தோழமைகளே 


பாட்டாளி வர்க்கக் கட்சி

முன்னுரை

மார்க்சியம், பாட்டாளி வர்க்கம் தனக்கென்று ஒரு கட்சியின்றி முதலாளித்துவத்தைத் தோற்கடிக்கவோ, அதிகாரத்தை வெல்லவோ, சோசலிசத்தைக் கட்டியமைக்கவோ முடியவே முடியாது என்று கற்பிக்கிறது.

மார்க்சும் எங்கெல்சும் சுதந்திரமான பாட்டாளி வர்க்கக் கட்சியின் தேவையை எல்லாவற்றிற்கும் மேலாக வலியுறுத்தி வந்தனர். முதலாம் அகிலத்தில் அவர்களால் வகுக்கப்பட்ட விதி ஒன்று தனக்கென்று தனித்தன்மையுடைய ஒரு கட்சியை, உடைமையாளர்களது பழைய கட்சிகளனைத்திற்கும் எதிராக கட்டியமைத்தாலன்றி ஒருபோதும் ஒரு வர்க்கமாகச் செயல்பட முடியாதுஎன்கிறது.

மார்க்சும், எங்கெல்சும் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தோற்ற காலத்தில் எழுதி வந்தவர்கள். அவர்களது பார்வை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பின்வருமாறு தொகுக்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகள் பிற பாட்டாளி வர்க்கக் கட்சிகளுக்கெதிராக ஒரு கட்சியைக் கட்டவில்லை. மாறாகஅவர்கள் ஒரு பொது அரசியல் திட்டத்தின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்தை ஒன்று திரட்டி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்திற்காக முனைகிறார்கள்.

மார்க்சும் எங்கெல்சும் கட்சிக்குள் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவக் கருத்துக்கள், கோட்பாடுகளை கடத்தி வர முனைவதை அதை ஒரு வர்க்க சமரசப் போக்கிற்கு உட்படுத்துவதை விடாப்பிடியாக எதிர்த்தனர். கட்சியைப் புரட்சிகர மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிறுவவும், அவற்றிற்கு தொழிலாளி வர்க்க நிறுவனங்களை வென்றெடுக்கவும் முயன்றனர். இதுதான் அவர்களின் அரசியல் செயற்பாடாக இருந்தது. மேலும் அவர்கள் பாட்டாளி வர்க்கம் எவ்வகைப் போக்கை பிற வர்க்கங்களின் மீது கடைப்பிடிக்க வேண்டும் என்பதை குறிப்பாக விவசாயி வர்க்கத்தை, பாட்டாளி வர்க்கத்தின் மிக முக்கியத் துணைவர்களாகக் கருதி வரையறுப்பதில் கவனம் செலுத்தினர்.

லெனின் போல்சுவிக் கட்சியை ஏகாதிபத்திய சகாப்தத் தொடக்கத்தில் கட்டினார். மேற்கத்திய நாடுகளின் சோசலிசக் கட்சிகளின் அமைதியானவளர்ச்சி கொண்ட பல பத்தாண்டுகளின் முடிவில் சந்தர்ப்பவாதப் போக்குகள் தலைவிரித்தாடின. அகிலத்தின் ஒட்டு மொத்த செயற்பாட்டையும் பரிசோதித்துச் சரி செய்வதும் சந்தர்ப்பவாதத்தை முற்றாக நிராகரிப்பதும் மிக முக்கியத் தேவையானதுபோல்சுவிக் கட்சியை அவர் புதிய வகையானதாக முதலாளித்துவத்தை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தை ஒன்றிணைத்துத் தலைமை தாங்குவதாகக் கட்டியமைத்தார். இக்கட்சி ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை, சுய ஒழுங்கை உள்ளடக்கி, புரட்சிகர மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையிலானதாய் அக்கோட்பாடுகளைப் பயன்படுத்தி, முன்னெடுத்துச் செல்லக்கூடியதாய் இருந்தது.

அப்படிப்பட்ட கட்சி புரட்சிகர தத்துவ அடிப்படையிலமைந்து பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படைப்பிரிவாய் அதிகாரத்தை வெல்ல, சோசலிசத்தைக் கட்டியமைக்க, தொழிலாளி வர்க்க இயக்கங்களை ஈர்த்து, வழி நடத்திதலைமை தாங்கிச் செல்வதால், பாட்டாளி வர்க்கத்தின் மிக உயர்ந்த அமைப்பு வடிவமாக இருக்கிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கான ஒரு கருவியாக உள்ளது. ஒற்றுமையை, ஒழுங்கைக் காப்பதாக, எந்த குழுப்போக்கும் அதன் ஒற்றுமையைக் சிதைந்துவிடாது இருக்கும்படி காக்கிறது. தானே சந்தர்ப்பவாதிகளை வெளித்தள்ளி தூய்மை அடைகிறது. போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது கொள்கையை எந்த எதிரிக்கு மரண அடி கொடுப்பது என்பதை நிர்ணயிப்பதாக தாக்குதல் திசைவழியை அமைத்துக் கொள்கிறது. அனைத்து கூட்டாளி வர்க்கங்களையும் இந்த எதிரிக்கு எதிரான போராட்டத்தில் சாத்தியமான எல்லா நட்பு சக்திகளையும் ஒன்றிணைக்கிறது.

போல்சுவிக் கட்சி பாட்டாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்திற்கெதிரான புரட்சிகர மார்க்சியத்தின் போராட்டத்தில் பிறந்தது. அதன் திட்டங்களும், அமைப்புக் கோட்பாடுகளும், தொழிலாளிகள் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு போராட வேண்டும் என்னும் பொருளாதாரவாதத்திற்கெதிரானதாக அமைந்ததுஅவர்களோடு கட்சியில் வர்க்கக் கூட்டிணைப்புக் கோட்பாடுகளைப் புகுத்தி அமைப்பைப் பலவீனப்படுத்தி ஒற்றுமையைக் குலைக்க முயன்ற மென்ஷ்விக்குகளுக்கு எதிரானதாக, கட்சியை மக்களிடமிருந்தே பிரித்து, நட்புச் சக்திகளை நிராகரித்து, போராட்டத்தின் வளர்ச்சிக்கட்ட அடிப்படையிலான கோட்பாட்டுக்குப் பதிலாக வெற்றுப் புரட்சிகரவாய்வீச்சில் இறங்கிய இடதுசாரிகளுக்கெதிரானதாக இருந்தது.

லெனின் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத் தலைவர்களை எதிர்த்து அம்பலப்படுத்தி வந்தார். இத்தலைவர்கள் 1914-18-ல் ஏகாதிபத்தியப் போரில் அகிலத்தையே காட்டிக் கொடுத்தவர்கள். லெனின் நியாயமான, நியாயமற்ற போர்களுக்கிடையிலான வேறுபாட்டை விளக்கி போரைப் பற்றிய பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை உருவாக்கினார்.

லெனினது போதனைகள், புதிய பாணி கட்சியைக் கட்ட கம்யூனிஸ்டுக் கட்சிகளால் ஏற்கப்பட்டு ஸ்டாலினால் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டன.

தொடரும்...



மார்க்சிய ஆசான் லெனின் நினைவு நாளில் அவரின் எழுத்துகள்-4

 

கார்ல் மார்க்ஸ்(மார்க்சியத்தைப் பற்றிய விரிவுரையுடன்அமைந்த வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்)

முன்னுரை

இன்று தனியாக அச்சேறி வெளிவரும் கார்ல் மார்க்ஸ் பற்றிய கட்டுரையை நான் (என் நினைவுக்கு எட்டியவரையில்) 1913-ஆம் ஆண்டில் கிரனைட் என்ஸைக்ளோபீடியா என்ற கலைக் களஞ் சியத்திற்காக எழுதினேன். அந்தக் கட்டுரையின் முடிவில் மார்க்ஸ் பற்றி வெளிவந்த, பெரும்பாலும் வெளிநாடுகளைச் சேர்ந்த நூல்களை ஓரளவுக்கு விரிவாகக் குறிக்கும் பட்டியலையும் இணைத்திருந்தேன். இந்தப் பதிப்பில் இந்த நூல் பட்டியல் விடப்பட்டுள்ளது. மார்க்ஸ் பற்றிய கட்டுரையின் இறுதிப் பகுதி அவருடைய புரட்சிகரமான போர்த்தந்திரங்களை விளக்கும் பகுதியாகும். தணிக்கை முறையை உத்தேசித்துக் கலைக்களஞ்சியத்தின் ஆசிரியர்கள் அந்த இறுதிப் பகுதியைத் தாங்களாகவே வெட்டியெடுத்து விட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக அந்தப் பகுதியை மீண்டும் வெளியிட இயலாத நிலைமையில் இருக்கிறேன். காரணம், அதன் முதல் நகல் கிராக்கள் நகரில் அல்லது ஸ்விட்சர்லாந்தில் எங்கோ என் தஸ்தாவேஜுகளுடன் தங்கிவிட்டது. ஒன்றுதான் எனக்கு நினைவு இருக்கிறது: அக்கட்டுரையின் கடைசிப் பகுதியில், மற்ற விஷயங்களைச் சொன்னது போக, 1856-ஆம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி மார்க்ஸ் எங்கெல்சுக்கு எழுதிய கடிதத்திலுள்ள ஒரு வாசகத்தை மேற்கோள் காட்டியிருந்தேன். அதில் மார்க்ஸ் எழுதியதாவது: ‘ஜெர்மனியின் நிலைமையெல்லாம் விவசாயப் போர் இரண்டாம் தடவையாக ஏற்பட்டுப் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பின்புலம் அளிக்க வாய்ப்பு ஏற்படுமா என்பதைத்தான் பொறுத்திருக்கிறது. அப்படி ஏற்படுமேயானால் நிலைமை அற்புதமாக இருக்கும்.’ சோஷலிசத்துக்கு முற்றாகத் துரோகம் செய்வதிலும், முதலாளி வர்க்கத்தின் பக்கம் கட்சி மாறிச் சென்று விடுவதிலும் இன்று இறங்கியிருக்கும் நமது மென்ஷிவிக்குகள் இதைத்தான் 1905ம் ஆண்டு முதல் புரிந்து கொள்ளத் தவறினார்கள்.

மாஸ்கோ,   நி. லெனின்

1918, மே. 14

கார்ல் மார்க்ஸ் (ரைனிஷ் பிரஷ்யாவிலுள்ள) டிரியர் நகரில் 1818ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதியன்று பிறந்தார். அவரது தகப்பனார் ஒரு வழக்குரைஞர், ஒரு யூதர்; 1824ம் ஆண்டில் புரோட்டஸ்டென்ட் மதத்தில் சேர்ந்தார். இக்குடும்பம் வசதியான நிலையில் இருந்தது; நாகரிகப் பண்பாடு மிக்கதாய் இருந்தது. ஆனால் புரட்சி மனப்பான்மை கொண்டதல்ல. டிரியரில் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த பிறகு சட்டவியலைப் படிக்க மார்க்ஸ் முதலில் பான் பல்கலைக்கழகத் திலும் பிறகு பெர்லின் பல்கலைக்கழகத்திலும் சேர்ந்தார். ஆனால் முக்கியமாய் வரலாறும் தத்துவஞானமும் பயின்றார். 1841ம் ஆண்டில் படிப்பை முடித்து, எபிக்யூரஸ் தத்துவஞானத்தைப் பற்றி பல்கலைக்கழகப் பட்டத்திற்கு வேண்டிய தமது ஆராய்ச்சியுரையைச் சமர்ப்பித்தார். அந்தக் காலத்தில் தமது கருத்துப் போக்குகளில் மார்க்ஸ் ஹெகல் வகைப்பட்ட கருத்து முதல் வாதியாக இருந்தார். (புரூனோ பௌவர் என்பவரும் மற்றவர்களும் சேர்ந்திருந்த) “இடதுசாரி ஹெகல் வாதிகளின்” குழுவில் மார்க்சும், பெர்லினில் இருக்கையில், சேர்ந்திருந்தார். ஹெகலுடைய தத்துவஞானத்திலிருந்து நாத்திக முடிவுகளுக்கும் புரட்சிகரமான முடிவுகளுக்கும் வர இந்தக் குழுவினர் முயன்று வந்தார்கள்.

Karl Marx - Communist Manifesto, Theories & Beliefs - HISTORY

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு மார்க்ஸ் பான் நகருக்குச் சென்றார். பேராசிரியராய்ப் பணியாற்றலாம் என்று நினைத்துத்தான் அவர் அங்குச் சென்றார். ஆனால் ஜெர்மன் அரசாங்கத்தின் கொள்கை பிற்போக்கானதாக இருந்தது. 1832-ல் அது லுட்விக் ஃபாயர்பாஹைப் பேராசிரியர் பதவியிலிருந்து நீக்கியது; மீண்டும் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு 1836-ல் அவர் திரும்பி வருவதை அனுமதிக்க மறுத்துவிட்டது. இளம் பேராசிரியராகிய புரூனோ பௌவர் பான் பல்கலைக் கழகத்தில் உரை நிகழ்த்தாதபடி அது 1841ல் தடை செய்தது. இந்தப் பிற்போக்கான கொள்கையின் காரணமாக, மார்க்ஸ் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றலாம் என்ற கருத்தைக் கைவிட வேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் இடதுசாரி ஹெகல் வாதக் கருத்துக்கள் ஜெர்மனியில் வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருந்தன. குறிப்பாக 1836ம் ஆண்டுக்குப் பின் லுட்விக் ஃபாயர்பாஹ் இறையியலை விமர்சிக்கவும் பொருள்முதல்வாதத்தின் பக்கம் திரும்பவும் தொடங்கினார். 1841ல் அவரிடம் பொருள்முதல்வாதம் மேலோங்கி விட்டது (அவர் எழுதிய கிறித்தவ சமயத்தின் சாராம்சம் என்ற நூலைப் பார்க்க). எதிர்காலத் தத்துவஞானத்தின் கோட்பாடுகள் என்று தலைப்பிட்ட அவருடைய நூல் 1843ல் வெளியாயிற்று. இந்த நூல்களைப் பற்றி எங்கெல்ஸ் பின்னால் எழுதும் போது, இவை ‘தளை அறுத்து விடுவிப்பனவாய் இருந்ததை அவரவர் தாமே அனுபவித்து உணர வேண்டிய ஒன்றாகும்’ என்று எழுதினார். ‘நாங்கள் எல்லோரும்’ (அதாவது, மார்க்ஸ் உள்ளிட்ட இடது சாரி ஹெகல்வாதிகள்) ‘உடனே ஃபாயர்பாஹ்வாதிகளானோம்’ என்கிறார் எங்கெல்ஸ். அந்தக் காலத்தில் இடதுசாரி ஹெகல்வாதிகளுடன் சில விஷயங்களில் நெருங்கியிருந்த தீவிரவாத ரைனிஷ் முதலாளித்துவ வர்க்கத்தினர் (பூர்ஷ்வாக்கள்) கொலோன் நகரில் ஓர் எதிர்க்கட்சிப் பத்திரிகையை நிறுவினர். அதன் பெயர் Rheinische Zeitung (ரைனிஷ் பத்திரிகை) என்பதாகும் (1842 ஜனவரி 1ம் தேதி அதன் முதல் இதழ் வெளியாயிற்று. அதில் முக்கிய விஷயதானம் அளிப்பவர்களாக இருக்கும்படி மார்க்சும் புரூனோ பௌவரும் அழைக்கப்பட்டார்கள். 1842 அக்டோபர் மாதத்தில் மார்க்ஸ் அதன் தலைமை ஆசிரியராகி பான் நகரிலிருந்து கொலோன் நகருக்குப் போனார். மார்க்ஸ் ஆசிரியராய் இருந்த போது அந்தப் பத்திரிகையின் புரட்சிகரமான-ஜனநாயகப் போக்கு மேலும் மேலும் வெளிப்படையாயிற்று. அரசாங்கம் அந்தப் பத்திரிகையை இரட்டைத் தணிக்கைக்கும் மும்முறைத் தணிக்கைக்கும் முதலில் உட்படுத்தி, பிறகு 1843 ஜனவரி 1ம் தேதியன்று அதை அடியோடு தடை செய்து விடுவதென்று முடிவு செய்தது. அந்தத் தேதிக்கு முன்பே மார்க்ஸ் தமது ஆசிரியர் பதவியை விட்டு விலக வேண்டியதாயிற்று. ஆனால் அவர் விலகியுங்கூட அந்தப் பத்திரிகையைக் காப்பாற்ற முடியவில்லை . 1843 மார்ச்சு மாதத்தில் அது மூடப்பட்டுவிட்டது. Rheinische Zeitung என்ற பத்திரிகைக்கு மார்க்ஸ் எழுதிய முக்கியமான கட்டுரைகளில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவற்றோடு கூட (பார்க்க: நூல் பட்டியல்) மோசெல் பள்ளத்தாக்கில் திராட்சை பயிரிடும் விவசாயிகளின் நிலைமையைப் பற்றிய ஒரு கட்டுரையையும் எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார், பத்திரிகை வேலை, அரசியல் பொருளாதாரத் துறையில் அவருக்குப் போதிய பழக்கம் இல்லை என்று மார்க்சுக்குக் காட்டியது. அவர் அதைக் கண்ணுங்கருத்துமாகப் பயில்வதிலே முனைந்தார்.

1843ம் ஆண்டில் கிரைட் ஸ்நாக் நகரில் ஜென்னி வான் வெஸ்ட்ஃபாலன் என்ற மங்கையை மார்க்ஸ் மணம் புரிந்தார். பிள்ளைப் பிராயத்திலேயே அவ்விருவரும் நண்பர்களாக இருந்தவர்கள்; மார்க்ஸ் மாணவராக இருந்த காலத்திலேயே இருவரும் மண உறுதி ஒப்பந்தம் செய்திருந்தனர். அவரது மனைவியார் பிரஷ்யப் பிரபுத்துவ வம்சத்தின் ஒரு பிற்போக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர். திருமதி மார்க்சின் தமையனார் மிகப் பிற்போக்கான கட்டமான 1850-58ல் பிரஷ்யாவின் உள்நாட்டு அமைச்சராக இருந்தார். 1843 இலையுதிர் காலத்தில் மார்க்ஸ் பாரிஸ் நகருக்குச் சென்றார், அர்னேல்டு ரூகே (பிறப்பு 1802, மறைவு 1880; ஓர் இடதுசாரி ஹெகல்வாதி; 1825-30ல் சிறை வாசம், 1848க்குப் பின் அரசியல் காரணங்களுக்காக நாடுகடத்தப்பட்டவர்; 1886-70க்குப் பின் பிஸ்மார்க்கின் ஆதரவாளர்) என்பவருடன் சேர்ந்து தீவிரப் போக்குள்ள ஒரு சஞ்சிகையை வெளி நாட்டில் வெளியிடுவதற்காகத்தான் மார்க்ஸ் பாரிசுக்குப் போனார். Deutsch-Franzosische Jahrbicher (ஜெர்மன் – பிரெஞ்சு ஆண்டுச் சஞ்சிகை) என்ற இந்தச் சஞ்சிகையின் முதல் இதழ் மட்டும்தான் வெளியாயிற்று. ஜெர்மனியில் இரகசியமாக அந்தச் சஞ்சிகையை வினியோகம் செய்வதிலிருந்த கஷ்டத்தின் காரணமாகவும், ரூகேயுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டதின் காரணமாகவும் அந்தச் சஞ்சிகை நிறுத்தப்பட்டது. அதில் மார்க்ஸ் வரைந்த கட்டுரைகள் அவர் ஏற்கெனவே ஒரு புரட்சியாளராக இருந்தார் என்பதைக் காட்டின. ‘போராட்ட மூலம் விமர்சனம்’ செய்ய வேண்டும். நடப்பில் இருந்து வருகிற எல்லாவற்றையும் ஈவிரக்கமின்றி விமர்சனம் செய்ய வேண்டும்’, என்று அவர் வாதித்தார். பொது மக்களுக்கும், பாட்டாளி வர்க்கத்துக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

1844 செப்டம்பர் மாதத்தில் பிரெடெரிக் எங்கெல்ஸ் சில நாட்கள் தங்குவதற்கு என்று பாரிசுக்கு வந்தார். அது முதலாய் அவர் மார்க்சின் உயிருக்குயிரான நண்பரானார். பாரிசில் இருந்த புரட்சிகரக் குழுக்களின் கொந்தளிப்பான அன்றைய வாழ்வில் இருவரும் மிகத் தீவிரமாகப் பங்கு கொண்டார்கள் (அந்நாளில் புரூதோனின் போதனை சிறப்பான முக்கியத்துவம் பெற்றிருந்தது; 1847ல் வெளிவந்த மெய்யறிவின் வறுமை என்ற தமது நூலிலே மார்க்ஸ் இதைத் தகர்த்தெறிந்தார்). குட்டி முதலாளித்துவ சோஷலிசத்தின் பல்வேறு போதனைகளைத் தீவிரமாக எதிர்த்துப் போர் புரிந்தபடியே அவர்கள் புரட்சிகரமான பாட்டாளி வர்க்க சோஷலிசத்தின் அல்லது கம்யூனிசத்தின் (மார்க்சியத்தின் தத்துவத்தையும் போர்த்தந்திரங்களையும் உருவாக்கினார்கள். (நூல் பட்டியலில் 1844-48 காலப்பகுதியைச் சேர்ந்த மார்க்சின் நூல்களைப் பார்க்க.) பிரஷ்ய அரசாங்கத்தின் விடாப்பிடியான கோரிக்கையின் பேரில் மார்க்ஸ் ஓர் ஆபத்தான புரட்சியாளர் என்று 1845ல் பாரிஸ் நகரிலிருந்து நாடு கடத்தப்பட்டார். அவர் பிரஸ்ஸெல்ஸ் நகரம் போய்ச் சேர்ந்தார். 1847 வசந்த காலத்தில் மார்க்கம் எங்கெல்சும் ‘கம்யூனிஸ்டுகளின் லீக்’ என்ற இரகசியமான பிரச்சார சங்கத்தில் சேர்ந்தார்கள். (லண்டன் மாநகரில் 1847 நவம்பர் மாதத்தில் நடந்த அச்சங்கத்தின் இரண்டாம் பேராயத்தில் இருவரும் மிக முக்கியமான பங்குகொண்டு, அச்சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் புகழ் பெற்ற கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கையை எழுதி முடித்தனர். அது 1848 பிப்ரவரி மாதத்தில் வெளியாயிற்று. இந்த நூல் மாமேதைக்குரிய தெளிவுடனும் பெருந்திறமையுடனும் ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை விவரிக்கிறது; சமுதாய வாழ்வுத் துறையையும் அணைத்து நிற்கும் முரணற்ற பொருள் முதல் வாதம், வளர்ச்சியைப் பற்றிய மிகவும் முழுமையான ஆழ்ந்த போதனையான இயக்கவியல், வர்க்கப் போராட்டத்தைப் பற்றியும், புதிய, கம்யூனிச சமுதாயத்தின் படைப்பாளி என்கிற வகையில் பாட்டாளி வர்க்கத்தின் உலக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, புரட்சிகரமான பாத்திரத்தைப் பற்றியும் அமைந்த ஒரு தத்துவம் ஆகியவை இந்த உலகக் கண்னேட்டத்தில் அடங்கியவை.

1848 பிப்ரவரி புரட்சி மூண்ட போது மார்க்ஸ் பெல்ஜியத்திலிருந்து நாடுகடத்தப்பட்டார். அவர் பாரிசுக்குத் திரும்பி வந்து, மார்ச்சு மாதப் புரட்சிக்குப் பிறகு அங்கிருந்து ஜெர்மனிக்கு , கொலோன் நகருக்குப் போனார். அங்கே 1848 ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து 1849 மே பத்தொன்பதாம் தேதிவரை Die Neue Rheinische Zeitung புதிய ரைனிஷ் பத்திரிகை) என்ற பத்திரிகை வெளியாகியது. மார்க்ஸ்தான் அதன் தலைமை ஆசிரியர். 1848-49ம் ஆண்டுகளில் நடந்த புரட்சி நிகழ்ச்சிகளின் போக்கு இப்புதிய தத்துவத்தை மிகச்சிறந்த முறையில் நிரூபித்து உறுதிப்படுத்தியது. அதேபோல் அக்காலம் முதல் உலக நாடுகளனைத்திலும் நிகழ்ந்த பாட்டாளி வர்க்க, ஜனநாயக இயக்கங்கள் எல்லாம் அதை மெய்ப்பித்து உறுதிப்படுத்தியுள்ளன. வெற்றி பெற்ற எதிர்ப்புரட்சியாளர்கள் முதலில் மார்க்ஸ் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் தூண்டிவிட்டார்கள் (1849 பிப்ரவரி 9ம் தேதி வழக்குத்தள்ளப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டார். பிறகு அவர் ஜெர்மனியிலிருந்து (1849 மே 18ம் தேதியன்று) நாடுகடத்தப்பட்டார். மார்க்ஸ் முதலில் பாரிசுக்குச் சென்றார், அங்கே 1849 ஜூன் 13ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னால் மீண்டும் நாடுகடத்தப்பட்டார். பிறகு அவர் லண்டன் நகருக்கு வந்தார். மறைவெய்தும் நாள்வரை அவர் லண்டனிலேயே வாழ்ந்து வந்தார்.

Monthly Review | Organisms and Objectifications

அரசியலுக்காக நாடுகடத்தப்பட்டு அவர் வாழ்ந்த வாழ்க்கை மிகவும் கடுமையானது. (1913-ல் வெளியான) மார்க்ஸ், எங்கெல்ஸ் கடிதப் போக்குவரத்து இதைத் தெளிவாகக் காட்டுகிறது. மார்க்சும் அவர் குடும்பத்தினரும் கொடிய வறுமையில் சிக்கித் துன்பப்பட்டார்கள். எங்கெல்ஸ் மட்டும் தன்னலமறுப்புடன் எப்போதும் பண உதவி செய்து கொண்டே இருந்திராவிட்டால் மார்க்ஸ் மூலதனம் என்ற நூலை எழுதி முடித்திருக்க முடியாது என்பது மட்டுமல்ல, தவிர்க்க முடியாதபடி அவர் வறுமையால் மடிந்திருப்பார். மேலும் குட்டி முதலாளித்துவப் போக்குடைய சோஷலிசத்தின், பொதுவாகவே பாட்டாளி வர்க்கச் சார்பற்ற சோஷலிசத்தின் போதனைகளும் தத்துவப் போக்குகளும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலைமையில் மார்க்ஸ் ஓர் இடையறாத, ஈவிரக்கமற்ற போரை நடத்திக் கொண்டிருக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்; சில சமயங்களில் தமக்கெதிரான மிகவும் காட்டுமிராண்டித்தனமான, வெறித்தனமான தனிப்பட்ட முறையிலான தாக்குதல்களையும் (Her Yog) அவர் முறியடிக்க வேண்டியிருந்தது. அரசியலுக்காக நாடு கடத்தப்பட்டுள்ளவர்களின் வட்டாரங்களிலிருந்து ஒதுங்கி இருந்துகொண்டு மார்க்ஸ் தமது பொருள்முதல்வாதத் தத்துவத்தை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்களில் (பார்க்க: நூல் பட்டியல்) விவரித்தார். அரசியல் பொருளாதாரத்தை ஆராய்ந்து அறிவதில் முதன்மையாகத் தமது முயற்சிகளை ஈடுபடுத்தி வந்தார். இந்த விஞ்ஞானத்தை மார்க்ஸ் புரட்சிகரமானதாக்கினார் ‘மார்க்சின் போதனை’ என்கிற பகுதியைக் கீழே பார்க்க). அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனவரைக்குச் செலுத்தும் ஒரு பங்கு (1850) என்ற நூல் வாயிலாகவும், மூலதனம் (முதல் தொகுதி, 1867) என்ற நூல் வாயிலாகவும் இதைச் செய்தார்.

1850-60 வருடங்களின் இறுதிக் கட்டமும் 1860-70க்கும் இடைப்பட்ட காலகட்டமும் ஜனநாயக இயக்கங்கள் புத்தெழுச்சி பெற்ற ஆண்டுகளாகும். அவை மார்க்சை மறுபடியும் நடைமுறை இயக்க வேலைகளில் ஈடுபடும்படி செய்தன. 1848ல் (செப்டம்பர் 28ம் தேதி) லண்டன் நகரில் ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கம்’ – இதுதான் புகழ் பெற்ற முதலாவது அகிலம் – நிறுவப்பட்டது. மார்க்ஸ் இச்சங்கத்தின் இதயமாகவும் ஆன்மாவாகவும் விளங்கினார். அதன் முதல் அறிக்கையையும் எண்ணற்ற தீர்மானங்களையும், பிரகடனங் களையும், கொள்கையறிக்கைகளையும் அவர்தான் வரைந்தார். பல்வேறு நாடுகளின் தொழிலாளர் இயக்கத்தை ஒன்றுபடுத்தியும் (மாஜினி, புரூதோன், பக்கூனின், இங்கிலாந்திலுள்ள மிதவாதத் தொழிற்சங்கவாதம், ஜெர்மனியில் லஸ்ஸால் வாதிகளின் வலதுசாரிப் பக்கமான ஊசலாட்டங்கள் முதலான) பாட்டாளி வர்க்க ரீதியில் அமையாத, மார்க்சுக்கு முந்திய சோஷலிசத்தின் பல்வேறு வடிவங்களைக் கூட்டு நடவடிக்கைப் பாதையில் செயல்வழிப்படுத்த முயற்சித்தும், இந்தப் பிரிவுகள், போக்குகள் ஆகிய யாவற்றின் தத்துவங்களை எதிர்த்துப் போராடியும், பல்வேறு நாடுகளிலும் உள்ள தொழிலாளி வர்க்கப் பாட்டாளி போராட்டத்திற்குரிய ஒரே மாதிரியான போர்த்தந்திரங்களை மார்க்ஸ் உருவாக்கினர். பாரிஸ் கம்யூன் வீழ்ச்சியுற்றதை (1871) அடுத்தும் – இக்கம் யூனைப் பற்றி மார்க்ஸ் மிகவும் ஆழமாகவும், தெட்டத் தெளிவாகவும், ஒப்பற்றவகையிலும், பயன்மிக்கதான புரட்சிகரப் பகுத்தாராய்வை அளித்தார் (1871ல் வெளிவந்த பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலில்)- பக்கூனின் வாதிகள் முதலாவது அகிலத்தைப் பிளவுபடுத்தியதை அடுத்து இச்சங்கம் ஐரோப்பாவில் இருப்பது சாத்தியமில்லாமற்போயிற்று. (1872ல்) ஹேக் நகரில் நடந்த அதன் காங்கிரசுக்குப் பிறகு மார்க்ஸ் அதன் பொதுக் குழுவை (ஜெனரல் கவுன்சில்) நியூயார்க் நகருக்கு மாற்ற ஏற்பாடு செய்தார். முதலாவது அகிலம் தனது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை நிறைவேற்றிவிட்டது. உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் தொழிலாளர் இயக்கம் அளவிடற்கரிய முறையில் மாபெரும் வளர்ச்சி பெறுவதற்கான காலப்பகுதிக்கு அது வழிகோலிவிட்டது. இந்தக் காலப்பகுதி உண்மையிலே தொழிலாளர் இயக்கம் விரிவடைந்து வளர்ந்த காலப்பகுதியாகும்; தனித்தனி தேசிய அரசுப் பகுதிகளில் திரளான சோஷலிச தொழிலாளர் கட்சிகள் நிறுவப்பட்ட காலப்பகுதியாகும்.

அகிலத்தில் மார்க்ஸ் ஆற்றிய கடுமையான பணியும், அதைவிடக் கடுமையாக அவர் தத்துவத்துறையில் ஆற்றிய பணிகளும் அவருடைய உடல்நிலையை அடியோடு பலவீனப்படுத்திவிட்டன. அவர் அரசியல் பொருளாதாரத்துக்குப் புத்துரு அளித்திடும் பணியையும் மூலதனம் நூலை எழுதி முடிக்கும் பணியையும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இவற்றுக்காக ஏராளமான புதிய விவரங்களைச் மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் 37 சேகரித்தார், பல மொழிகளைப் (எடுத்துக்காட்டாக, ருஷ்ய மொழியை) பயின்று வந்தார். ஆனால் அவரது மோசமான உடல்நிலை மூலதனம் நூலை முழுமை செய்ய முடியாதபடி தடுத்துவிட்டது. 181ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதியன்று அவருடைய மனைவியார் காலமானார். 1883 மார்ச்சு 14ம் தேதியன்று நாற்காலியில் சாய்ந்தவாறே அமைதியோடு மார்க்ஸ் இயற்கை எய்தினார். லண்டனிலுள்ள ஹைகேட் இடுகாட்டில் அவர் தம் மனைவியின் கல்லறைக்கருகே அவரது சடலம் அடக்கம் செய்யப்பட்டது. லண்டனில் கொடிய வறுமையால் அவர் குடும்பம் அல்லலுற்ற காலத்தில் மார்க்சின் குழந்தைகளில் சில இறந்து போயின. மூன்று புதல்வியர் ஆங்கிலேய , பிரெஞ்சு சோஷலிஸ்டுகளை மணந்து கொண்டனர். இப்புதல்வியர் வருமாறு: எலியனோர் ஏவ்லிங், லௌரா வஃபார்க், ஜென்னி லொங்கே. ஜென்னி லொங்கேயின் மகன் பிரெஞ்சு சோஷலிஸ்டுக் கட்சியின் அங்கத்தினராக இருக்கிறார்,

மார்க்சிய ஆசான் லெனின் நினைவு நாளில் அவரின் எழுத்துகள்-3

 வரலாற்றில் கார்ல் மார்க்ஸ் தத்துவத்துக்கு விதிக்கப்பட்ட வருங்காலம்

சோஷலிசச் சமுதாயத்தின் சிற்பியாய்ப் பாட்டாளி வர்க்கம் ஆற்றும் வரலாற்றுப் பணியை மார்க்சின் தத்துவம் தெளிவுப்படுத்துகிறது. இதுவே இத்தத்துவத்தின் முதன்மையான சிறப்பு. மார்க்ஸ் இந்தத் தத்துவத்தை விரித்துரைத்த பின் உலகெங்கணும் நடைபெற்றுள்ள நிகழ்ச்சிகளின் போக்கு இத்தத்துவத்தை மெய்ப்பித்திருக்கிறதா?

1844-ல் மார்க்ஸ் இதை முதன் முதல் எடுத்துரைத்தார். 1848ல் வெளியான மார்க்ஸ், எங்கெல்சின் கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை இந்தத் தத்துவத்தை முழுமையாகவும் முறையாகவும் விரித்துரைத்தது. இது நாள் வரை இதுவே தலை சிறந்த விரிவுரையாய் இருந்து வருகிறது. அதன்பின் உலக வரலாறு மூன்று பிரதான காலக்கூறுகளாய்த் தெளிவாய்ப் பிரிக்கப்பட்டிருக்கிறது: 1) 1848-ம் ஆண்டுப் புரட்சியிலிருந்து பாரிஸ் கம்யூன் (1871) வரை; 2) பாரிஸ் கம்யூனிலிருந்து ருஷ்யப் புரட்சி (1905) வரை; 3) ருஷ்யப் புரட்சிக்குப் பின்,

இந்தக் காலக்கூறுகள் ஒவ்வொன்றிலும் மார்க்சின் தத்துவத்துக்கு விதிக்கப்பட்ட எதிர்காலம் என்னவென்பதைக் காண்போம்.

முதலாவது காலக்கூறின் துவக்கத்தில் மார்க்சின் தத்துவம் எவ்வகையிலும் கோலோச்சும் நிலையில் இருக்கவில்லை. சோஷலிசத்தின் எண்ணிறந்த குழுக்கள் அல்லது போக்குகளில் ஒன்ருகவே இருந்தது. உண்மையில் கோலோச்சிக் கொண்டிருந்த சோஷலிச வடிவங்கள் பிரதானமாய் நமது நரோதிசத்தை ஒத்தவை: வரலாற்று இயக்கத்தின் பொருள் முதல்வாத அடித்தளத்தைப் புரிந்து கொள்ளாமை, முதலாளித்துவச் சமுதாயத்தில் ஒவ்வொரு வர்க்கத்துக்குமுள்ள பாத்திரத்தையும் முக்கியத்துவத்தையும் தனித்துப் பிரிக்கும் திறனின்மை, ஜனநாயகச் சீர்திருத்தங்களின் முதலாளித்துவத் தன்மையை மக்கள், ‘நீதி’, ‘உரிமை’ இத்தியாதி குறித்த பல்வேறுபட்ட, அரை – சோஷலிசத் தொடர்களைக் கொண்டு மூடிமறைத்தல் முதலான பலவற்றிலும் இவை நமது நரோதிசத்தை ஒத்தவை.

மார்க்சியத்துக்கு முற்பட்ட சோஷலிசத்தின் இந்தக் கதம்பத்திரளான ஆடம்பர வாய்வீச்சு வடிவங்கள் யாவற்றுக்கும் 1848-ஆம் ஆண்டுப் புரட்சி மரண அடி கொடுத்தது. எல்லா நாடுகளிலும் இப்புரட்சி சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்களையும் செயலில் வெளிப்படச் செய்து புலப்படுத்திக் காட்டிற்று. குடியரசுவாத முதலாளித்துவ வர்க்கம் பாரிசில் 188 ஜூன் நாட்களில் தொழிலாளர்களைச் சுட்டு வீழ்த்தியதானது, பாட்டாளி வர்க்கம் மட்டும்தான் இயற்கையாகவே சோஷலிசத் தன்மையது என்பதை முடிவாய்ப் புலப்படுத்திக் காட்டிற்று. மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தினர் எந்த வகையான பிற்போக்கையும் விட பாட்டாளி வர்க்கத்தின் சுயேச்சையைக் கண்டுதான் நூறு மடங்கு கூடுதலாய் அஞ்சி நடுங்கினர். கோழைகளாய் அண்டிப் பிழைக்கும் மிதவாதிகள் பிற்போக்கிற்கு அடிபணிந்து தண்டமிட்டனர். விவசாயி மக்கள் பிரபுத்துவத்தின் மீதமிச்சங்கள் ஒழிக்கப்பட்டதுடன் திருப்தியடைந்து ஒழுங்கின் ஆதரவாளர்களோடு சேர்ந்து கொண்டனர், எப்பொழுதாவது அரிதாய்த்தான் தொழிலாளர் ஜனநாயகத்துக்கும் முதலாளித்துவ மிதவாதத்துக்கும் இடையே ஊசலாடினர். வர்க்கமல்லாத சோஷலிசம், வர்க்கமல்லாத அரசியல் இவை குறித்த எல்லாத் தத்துவங்களும் அப்பட்டமான அபத்தமே என்பது நிரூபணமாயிற்று.

பாரிஸ் கம்யூன் ஆஃப் 1871 | கண்ணோட்டம் …

முதலாளித்துவ மாற்றங்களுக்குரிய இந்த வளர்ச்சியைப் பாரிஸ் கம்யூன் (1871) நிறைவுறச் செய்தது; வர்க்க உறவுகள் அவற்றின் மிகப் பெருமளவுக்கு ஒளிவுமறைவற்ற உருவில் காட்சி தரும் அரசியலமைப்பு வடிவமான குடியரசு உறுதி பெற பாட்டாளி வர்க்கத்தின் வீரதீரம் மட்டுமே தான் காரணம்.

ஏனைய எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் மேலும் சிக்கலான. நிறைகுறையான வளர்ச்சி இதே விளைவுக்கு இட்டுச் சென்றது முதலாளித்துவச் சமுதாயம் திட்டவட்டமான உருப் பெற்றுவிட்டது. முதலாவது காலக்கூறின் (1848-7I) கடைப் பகுதியில், புயல்களும் புரட்சிகளுமாயிருந்த இப்பகுதியில், மார்க்சியத்துக்கு முற்பட்ட சோஷலிசமானது இறந்துபட்டது. சுயேச்சையான பாட்டாளி வர்க்கக் கட்சிகள் உதித்தெழுந்தன: முதலாவது அகிலம் (1864-72), மற்றும் ஜெர்மன் சமூக-ஜனநாயகக் கட்சி.

இரண்டாவது காலக்கூறு (1872-1904) துவக்கத்திலிருந்தே அதன் ‘சமாதானத்’ தன்மையால், புரட்சிகள் இல்லாத நிலையால் வேறுபடுத்திக் காட்டப் பெற்றது. மேற்குலகு முதலாளித்துவப் புரட்சிகளை நடத்தி முடித்து விட்டது. கிழக்குலகு இன்னும் அவற்றுக்குரிய மட்டத்துக்கு உயர்ந்தாகவில்லை.

வரவிருந்த மாற்றங்களுக்காகச் ‘சமாதான வழியில்’ தயாரிப்புகள் செய்துகொள்ளும் கட்டத்தினுள் மேற்குலகு அடியெடுத்து வைத்தது. அடிப்படையில் பாட்டாளி வர்க்கத் தன்மையதான சோஷலிசக் கட்சிகள் எங்கும் அமைக்கப்பட்டன. இவை முதலாளித்துவப் பாராளுமன்ற முறையை உபயோகித்துக்கொள்ளவும் தமது சொந்த நாளேடுகளை, தமது கல்வி போதனை நிலையங்களை, தமது தொழிற் சங்கங்களை, தமது கூட்டுறவுக் கழகங்களை நிறுவிக்கொள்ளவும் கற்றுக் கொண்டன. மார்க்சின் தத்துவம் முழுநிறை வெற்றி பெற்றுப் பரவத் தொடங்கிற்று. பாட்டாளி வர்க்கத்தினுடைய சக்திகளின் தேர்வாய்வும் அணிதிரட்டலும், வரவிருந்த போராட்டங்களுக்கான அதன் தயாரிப்பும், மெதுவாகத்தான் என்றாலும், இடையறாது முன்னேறின.

மார்க்சியத்தின் தத்துவார்த்த வெற்றியால் நிர்ப்பந்திக்கப்பட்ட அதன் பகைவர்கள், மார்க்சியவாதிகளாய்த் தமக்கு வேஷமிட்டுக் கொண்டனர். -வரலாற்றின் இயக்கவியல் போக்கு அத்தகையதாய் இருந்தது. உள்ளுக்குள் உளுத்துப் போய்விட்ட மிதவாதமானது சோஷலிச சந்தர்ப்பவாதத்தின் வடிவில் தனக்குப் புத்துயிர் அளித்துக் கொள்ள முயன்றது. மாபெரும் போர்களுக்காகச் சக்திகளை ஆயத்தமாக்கிக் கொள்வதற்குரிய இந்தக் காலக்கூறு, இந்தப் போர்கள் கைவிடப் படுதலைக் குறிப்பதாய் அவர்கள் வியாக்கியானம் செய்தனர். கூலி அடிமைமுறையை எதிர்த்துப் போராடுவதற்கு அடிமைகளின் நிலைமைகளில் ஏற்பட்ட மேம்பாடு, இந்த அடிமைகள் சுதந்திரத்துக்கான தமது உரிமையை அற்பக்காசுக்காக விற்றதைக் குறித்ததாய் அவர்கள் கொண்டனர். கோழைத் தனமாய் அவர்கள் ‘சமூக அமைதி’ (அதாவது அடிமை யுடைமையாளர்களுடன் அமைதி), வர்க்கப் போராட்டத்தைக் கைவிடுதல் முதலானவற்றை உபதேசித்தனர். பாராளுமன்றத்தில் சோஷலிச உறுப்பினர்களிடையிலும், தொழிலாளி வர்க்க இயக்கத்தின் பல்வேறு அதிகாரிகளிடையிலும், “அனுதாபங் கொண்ட” அறிவுத்துறையினரிடையிலும் அவர்கள் மிகப் பல ஆதரவாளர்களைப் பெற்றிருந்தனர்.

ஆனால் சந்தர்ப்பவாதிகள் ‘சமூக அமைதி’ குறித்தும் ‘ஜனநாயகத்தில்’ புயல் அவசியமற்றதாகிவிட்டது குறித்தும் வாழ்த்துரைத்துத் தம்மைத் தாமே போற்றிக் கொண்ட மறுகணமே, மாபெரும் உலகப் புயல்களுக்கான ஒரு புதிய ஆதாரம் ஆசியாவிலே உதித்தெழுந்தது. ருஷ்யப் புரட்சியைத் தொடர்ந்து துருக்கியிலும் பாரசீகத்திலும் சீனுவிலும் புரட்சிகள் மூண்டன. புயல்களுக்கும் ஐரோப்பாவில் அவற்றின் “எதிரொலிகளுக்கும்” உரிய ஒரு சகாப்தத்தில் தான் இப்பொழுது நாம் வாழ்ந்து வருகிறோம். மாபெரும் சீனக் குடியரசுக்கு ‘நாகரிகமடைந்த’ பல்வேறு கழுதைப்புலிகளும் இன்று பற்களை நறநறவென்று கடித்துக்கொண்டு இக்குடியரசை எதிர்த்துக் கிளம்புகின்றன ஏற்படும் கதி எதுவாயினும், உலகில் எந்தச் சக்தியாலும் ஆசியாவில் பழைய பண்ணையடிமை நிலையைத் திரும்பவும் நாட்டவோ, ஆசிய நிலை, அரை-ஆசிய நிலை நாடுகளில் பெருந்திரளான மக்களின் வீரம் செறிந்த ஜனநாயகத்தை அழித்தொழிக்கவோ முடியப் போவதில்லை.

வெகுஜனப் போராட்டத்துக்குத் தயார் செய்வதற்கும் அதை வளர்த்துச் செல்வதற்குமான நிலைமைகளில் கவனம் செலுத்தாமலிருந்த சிலர், ஐரோப்பாவில் முதலாளித்துவத்துக்கு எதிரான தீர்மானகரமான போராட்டத்தில் ஏற்பட்ட நீண்டகாலத் தாமதங்களால் நம்பிக்கையற்ற நிலைக்கும் அராஜக வாதத்துக்கும் இழுத்துச் செல்லப்பட்டு விட்டனர். இந்த அராஜகவாத நம்பிக்கையற்ற நிலை எவ்வளவு கிட்டப்பார்வை கொண்டது, நெஞ்சு உரமில்லாதது என்பதை இப்பொழுது நாம் காண முடியும்.

எண்பது கோடி மக்கள் தொகை கொண்ட ஆசியா, இதே ஐரோப்பிய இலட்சியங்களுக்கான போராட்டத்தினுள் ஈர்க்கப்பட்டிருக்கும் இவ்வுண்மை, நமக்கு நம்பிக்கையற்ற நிலையையல்ல, நன்னம்பிக்கையை ஊட்டி ஆர்வமளித்திட வேண்டும்.

ஆசிய நிலைப் புரட்சிகள் மிதவாதத்தின் திராணியின்மையையும் இழிநிலையையும், ஜனநாயக வெகுஜனங்களுடைய சுயேச்சையின் விசேஷ முக்கியத்துவத்தையும், பாட்டாளி வர்க்கத்தாருக்கும் எல்லா வகையான முதலாளித்துவ வர்க்கத்தாருக்கும் இடையிலுள்ள எடுப்பான பிரிவினைக் கோட்டையும் திரும்பவும் நமக்குக் காட்டியுள்ளன. ஐரோப்பா, ஆசியா இரண்டின் அனுபவத்துக்குப் பிற்பாடு, வர்க்கமல்லாத அரசியல் குறித்தும் வர்க்கமல்லாத சோஷலிசம் குறித்தும் பேசுகிறவர் எவரும் கூண்டிலே வைத்து ஆஸ்திரேலியக் கங்காரு அல்லது அதையொத்த ஒன்றின் பக்கத்தில் கண்காட்சியில் காட்டப்பட வேண்டியவரே ஆவார்.

ஆசியாவை அடுத்து ஐரோப்பாவும்-ஆசியநிலை வழியில் இல்லாவிட்டாலுங்கூட-அதிரத் தொடங்கிவிட்டது. 1872-1904ம் ஆண்டுகளின் ‘சமாதானக்’ காலக்கூறு இனி ஒரு போதும் திரும்ப வழியின்றிக் கடந்து சென்றுவிட்டது. உயர்ந்துவிட்ட வாழ்க்கைச் செலவும் டிரஸ்டுகளின் கொடுங்கோன்மையும் என்றுமே கண்டிராத அளவுக்குப் பொருளாதாரப் போராட்டத்தைக் கூர்மையாக்கி வருகின்றன. இந்த நிலைமை, மிதவாதத்தால் மிக அதிகமாய்ச் சீரழிக்கப்பட்டிருக்கும் பிரிட்டிஷ் தொழிலாளர்களையுங்கூட இயக்கத்தில் செயல்பட வைத்திருக்கிறது. ‘வைரம் பாய்ந்த’ பிற்போக்குவாத முதலாளித்துவ-ஜங்கர் நாடான ஜெர்மனியிலுங்கூட அரசியல் நெருக்கடி சூடேறி வருவதைக் காண்கிறோம். ஜன்னிவேகங் கொண்ட படைக்கலப் பெருக்கமும், ஏகாதிபத்தியக் கொள்கையும் தற்கால ஐரோப்பாவை வெடிமருந்துப் பீப்பாயையே அதிகம் ஒத்த ‘சமூக அமைதியாக’ மாற்றி வருகின்றன. இவற்றுக்கிடையில் எல்லா முதலாளித்துவக் கட்சிகளும் அழுகிக் கெடும் நிகழ்ச்சிப் போக்கும் பாட்டாளி வர்க்கத்தின் முதிர்ச்சியும் ஓயாத முன்னேற்றம் கண்டு வருகின்றன.

மார்க்சியம் தோன்றியது முதல் உலக வரலாற்றின் மூன்று பெரும் காலக்கூறுகளில் ஒவ்வொன்றும் மார்க்சியத்துக்குப் புதிய உறுதிப்பாடும் புதிய வெற்றிகளும் கிட்டச் செய்திருக்கிறது. ஆனால் பாட்டாளி வர்க்கத்தின் தத்துவம் என்ற முறையில் மார்க்சியத்துக்கு, வரலாற்றின் வருகிற காலக் கூறினில் இன்னும் பெரிய வெற்றி கிட்டப் போகிறது.

பிராவ்தா , இதழ் 50,  நூல் திரட்டு,

1913 மார்ச் 1        தொகுதி 23,

ஒப்பம். வி. இ.லெனின்.

மார்க்சிய ஆசான் லெனின் நினைவு நாளில் அவரின் எழுத்துகள்-2

 மார்க்சியத்தினுடைய வரலாற்றுவளர்ச்சியின் சில இயல்புகள்

இந்தப் பகுதியில் வி. இ. லெனின் மார்க்சியத்தைப் பற்றி எழுதிய பிரபல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இவை கார்ல் மார்க்ஸ் போதனையின் முக்கிய சாரத்தை வெளிப்படுத்தி பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் இந்தப் போதனையின் விதியைக் காட்டுகின்றன. ‘மார்க்சின் போதனை மெய்யானது, அதனால் தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலுமமைந்த மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது. ஜெர்மானியத் தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோசலிசம் என்ற வடிவத்தில் 19-ஆம் நூற்றாண்டில் மனித குலம் உருவாக்கித் தந்த தலைசிறந்த படைப்புகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம்.’

மார்க்சியத்தின் வெற்றிகள், இதனுடைய எதிரிகளை மார்க்சியப் போர்வைக்குள் புகுந்து கொள்ளுமாறும் மார்க்சின் போதனையைத் திரித்துக் கொச்சைப்படுத்துமாறும் நிர்ப்பந்திக்கின்றன என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகின்றார், ஆனல் இவை வீணான முயற்சிகள்; ஒவ்வொரு புதிய வரலாற்றுச் சகாப்தமும், முரண்பாடுகளையும் கேடுகளையும் உடைய முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிச சமுதாயத் திற்கு மாறிச் செல்லும் பாதையை மனித குலத்திற்குக் காட்டும் தத்துவம் என்ற வகையில் மார்க்சியத்திற்கு மேன்மேலும் அதிக வெற்றியைக் கொண்டு வருகிறது.

இத்தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆகிய கட்டுரைகளில் மார்க்சிய ஆசான்களின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ளது.

மார்க்சியத்தினுடைய வரலாற்று

வளர்ச்சியின் சில இயல்புகள்

‘எங்களுடைய போதனை, செயலுக்கு ஒரு வழி காட்டியே தவிர வறட்டுச் சூத்திரம் அல்ல’ என்கிறார் எங்கெல்ஸ். தம்மையும் புகழ் மிக்க தமது நண்பரையும் குறிக்கும் வண்ணம் எங்களுடைய என்கிறார், மார்க்சியத்தில் அடிக்கடி பலரும் மறந்துவிடும் ஓர் அம்சத்தைக் குறிப்பிடத்தகுந்த வலிவுடனும் பொருள் நிறைவுடனும் இந்த ஒப்புயர்வற்ற வாசகம் வலியுறுத்துகிறது. இதை மறந்து விடுவதின் மூலமாக நாம் மார்க்சியத்தை ஒருதலைப்பட்சமான, உருக்குலைக்கப்பட்டதான, உயிரற்ற ஒன்றாய்த் திரித்துவிடுகிறோம்; உயிர்த்தியங்கி வரும் ஆன்மாவை அதிலிருந்து பறித்து விடுகிறோம்; மார்க்சியத்தின் மூலாதாரத் தத்துவ அடித்தளங்களை அதாவது முரண்பாடுகள் நிறைந்தும் சர்வவியாபகமாயுமுள்ள சரித்திர வளர்ச்சியைப் பற்றிய போதனையாகிய இயக்கவியலை – தளர்த்திப் பலவீனப்படுத்துகிறோம்; நமது சகாப்தத்தில் நம் முன்னுள்ள திட்டவட்டமான நடைமுறைக் கடமைகளுடன், வரலாற்றின் ஒவ்வொரு புதிய திருப்பத்தையும் தொடர்ந்து மாறும்படியான இந்தக் கடமைகளுடன் மார்க்சியத்துக்கு இருக்கும் தொடர்பை நாம் அறுத்தெறிகிறோம்.

நமது காலத்தில், ருஷ்யாவில் மார்க்சியத்தின் கதியைப் பற்றி அக்கறை கொண்டிருப்பவர்களின் மத்தியிலே, மார்க்சியத்தின் இந்தக் குறிப்பிட்ட அம்சத்தை மறந்து விடுகிறவர்களை அடிக்கடி கண்டு வருகிறோம். ஆயினும் சமீப காலத்தில் ருஷ்யா திடீர் மாறுதல்களுக்கு உட்பட்டிருப்பது எல்லோருக்கும் தெளிவாய்த் தெரிந்தே இருக்க வேண்டும். செயலின் சூழ்நிலைமைகளையும், அவற்றின் காரணமாகச் செயலின் குறிக்கோள்களையும் மிகவும் நேரடியாகவும் உடனடியாகவும் நிர்ணயிக்கும்படியான சமுதாய-அரசியல் நிலைமையை வழக்கத்திலில்லாத வேகத்துடனும் வலிவுடனும் மாற்றி விடும் அளவுக்கு இந்த மாறுதல்கள் திடுதிப்பென நிகழ்ந்துள்ளன.

Remembering Lenin, Russia's Marxist revolutionary - Education ...

பொதுப்படையான, அடிப்படையான குறிக்கோள்களை இங்கே நான் குறிப்பிடவில்லை. வர்க்கங்களிடையே நிலவும் அடிப்படை உறவு மாறாமலிருக்கும் வரையில் சரித்திரத்தின் திருப்பங்களினுள் இந்தக் குறிக்கோள்கள் மாறுவதில்லை . ருஷ்ய சமுதாயத்திலுள்ள பல்வேறு வர்க்கங்களிடையே நிலவி வரும் அடிப்படை உறவு, உதாரணமாய், சென்ற ஆறு ஆண்டுகளாக மாறாமலிருந்து வருவதுபோலவே, ருஷ்யாவில் பொருளாதாரத்தில் (பொருளாதாரத்தில் மட்டுமல்ல) காணப்படுகிற பொதுவான பரிணாம வளர்ச்சிப் போக்கும் மாறாமலே இருந்து வந்திருக்கிறது என்பது தெட்டத் தெளிவு.

ஆனால், இந்தக் காலகட்டத்தில் ஸ்தூலமான சமுதாய அரசியல் நிலைமையும், அதுபோல நேரடியான, உடனடியான செயலின் குறிக்கோள்களும் மிகத் தீவிரமாக மாறி வந்திருக்கின்றன. இதன் விளைவாக, மார்க்சியத்திலும் அதன் பல்வேறு அம்சங்கள் முன்னணிக்கு வந்து தீர வேண்டும். ஏனெனில் மார்க்சியம் உயிர்ப்பண்பு கொண்ட போதனையாகும்.

இந்தக் கருத்தைத் தெளிவாக்கும் பொருட்டு, ஸ்தூலமான சமுதாய அரசியல் நிலைமையில் சென்ற ஆறு ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கிற மாறுதலைக் கொஞ்சம் கவனிப்போம். இந்த ஆறாண்டுக் காலப்பகுதி மூன்று மூன்று ஆண்டுகளைக் கொண்ட இரு காலப்பகுதிகளாகப் பிரிவதை எடுத்த எடுப்பிலேயே காண்கிறோம். ஒரு காலப்பகுதி 1907ஆம் ஆண்டின் கோடையுடன் ஏறத்தாழ முடிவடைகிறது; மற்ற காலப் பகுதி 1910-ஆம் ஆண்டின் கோடையுடன் முடிவடைகிறது. முற்றிலும் தத்துவார்த்தக் கண்ணோட்டத்தில், முதல் மூன்றாண்டுக் காலப்பகுதியானது அப்போது ருஷ்யாவில் அரசு அமைப்பு முறையின் அடிப்படையான குணாதிசயங்களில் வேகமாக ஏற்பட்ட மாறுதல்களால் வேறுபடுத்திக் காட்டப்படுகிறது.

இந்த மாறுதல்களின் போக்கு ஒரே சீராக இல்லாமல் அநேக ஏற்ற இறக்கங்களுடன் கூடியதாயிருந்தது; இரு திசைகளிலும் ஊசலாட்டத்தின் வீச்சும் மிகப் பெரிதாயிருந்தது. “மேல் கட்டுமானத்தில்” ஏற்பட்ட இந்த மாறுதல்களின் சமுதாய – பொருளாதார அடிப்படை என்னவெனில் ருஷ்ய சமுதாயத்தின் எல்லா வர்க்கங்களும் மிகப் பல்வேறுபட்ட துறைகளிலும் எடுத்துக் கொண்ட செயல்களே (டூமா சட்டசபைக்குள்ளேயும் வெளியேயும், பத்திரிகைகள், சங்கங்கள், பொதுக் கூட்டங்கள் முதலானவற்றில் நடைபெற்ற செயற்பாடே) ஆகும். சரித்திரத்தில் அடிக்கடி காணக்கிடைக்காத அளவிலே இந்தச் செயல் அவ்வளவு பகிரங்கமானதாயும், எடுப்பாகவும், வெகுஜன வீச்சுடையதாகவும் இருந்தது.

இதற்கு மாறாக இரண்டாம் மூன்றாண்டுக் காலப்பகுதியின் தனி இயல்பு -இங்கே முற்றிலும் தத்துவார்த்த சமூகவியல்’ கண்ணோட்டத்தில் மட்டுமே விஷயத்தைக் கவனித்து வருகிறோம் என்று மீண்டும் சொல்கிறேன்-என்னவென்றால், அநேகமாகத் தேக்கநிலை என்று மதிக்கக் கூடிய அளவுக்குப் பரிணாம வளர்ச்சி மந்தமாயிருந்ததேயாகும். அரசு அமைப்புமுறையில் ஓரளவுகூட முக்கியமான மாறுதல்கள் எவையும் ஏற்படவில்லை . முந்திய காலப்பகுதியில் எந்த அரங்குகளில் நடவடிக்கைகள் வளர்க்கப்பட்டனவோ அவற்றில் பெரும் பாலானவற்றில் வர்க்கங்களுடைய பகிரங்கமான, பல்வகைப்பட்ட நடவடிக்கைகள் எவையும் அநேகமாக நடைபெறவில்லை.

இந்த இரண்டு காலப்பகுதிகளுக்குமிடையே இருந்த ஒற்றுமையம்சம் என்னவெனில், இரண்டு காலப்பகுதிகளிலும் ருஷ்யாவில் முதலாளித்துவப் பரிணாமம் நடைபெற்று வந்தது. இந்தப் பொருளாதாரப் பரிணாமத்துக்கும் பல பிரபுத்துவ, மத்திய காலத்திய அமைப்புகள் நீடித்து இருந்து வந்ததற்கும் இடையேயிருந்த முரண்பாடு நீக்கப்படாமல் தொடர்ந்து இருந்து வந்தது; சில அமைப்புகள் அரைகுறையான பூர்ஷ்வாத் தன்மை பெற்றதனால் இந்த முரண்பாடு தீவிரமடைந்ததே ஒழிய தணிக்கப்படவில்லை.

இந்த இரண்டு காலப்பகுதிகளுக்கிடையே இருந்த வேற்றுமை என்னவென்றால், மேற்குறிப்பிட்ட சீரில்லாத, ஏற்ற இறக்கமான அதிவேக மாறுதல்கள் எந்த வடிவத்தை ஏற்குமென்பது முதலாவது காலப்பகுதியில் வரலாறு படைக்கும் தலைமையான முதற்பெரும் கேள்வியாய் இருந்தது. ருஷ்யாவின் பரிணாம வளர்ச்சி முதலாளித்துவத் தன்மையதாய் இருந்ததால் இந்த மாறுதல்களின் உள்ளடக்கமும் முதலாளித்துவத் தன்மை கொண்டதாய் இருந்து தீரவேண்டியதாயிற்று. ஆனால் முதலாளித்துவ வர்க்கத்தாரில் வெவ்வேறு வகையினர் இருந்தனர். ஏறத்தாழ நிதான மிதவாதப் போக்கை அனுசரிப்பதாய்க் கூறும் நடுத்தர முதலாளிகளும் பெரு முதலாளிகளும் தங்கள் வர்க்க நிலை காரணமாக உடனடி மாறுதல்களுக்கு அஞ்சி நிலவுடைமை அமைப்பிலும் சரி; அரசியல் “மேல் கட்டுமானத்திலும்” சரி, பழைய ஏற்பாடுகளைப் பெருமளவு மிச்சசொச்சங்களை இருந்தவாறே வைத்திருக்க முயற்சித்தார்கள். கிராமப் புறத்திலுள்ள குட்டி முதலாளித்துவ வர்க்கம் “தங்கள் கையால் உழைத்து” ஜீவிக்கிற விவசாயி மக்களுடன் பின்னிப் பிணைந்திருக்கும் காரணத்தால் வேறு வகைப்பட்ட முதலாளித்துவச் சீர்திருத்தங்களுக்காக, அதாவது மத்திய காலத்திய மிச்சசொச்சங்கள் நீடித்திருக்க மிகக் குறைந்த இடமே அளிக்கக்கூடிய முதலாளித்துவச் சீர்திருத்தங்களுக்காக, முயற்சித்துத் தீர வேண்டியிருந்தது. கூலித் தொழிலாளர்கள் தம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை உணர்வு பூர்வமாக அறிந்து கொண்டிருந்த அளவுக்கு இவ்விரண்டு வேறுபட்ட போக்குகளிடையே நடைபெற்ற போரைப் பற்றித் தமக்கேற்ற கண்ணோட்டத்தை வகுத்துக் கொண்டு தீர வேண்டியிருந்தது. இவ்விரண்டு போக்குகளும் முதலாளித்துவ அமைப்பு முறையின் கட்டுக்கோப்பை விட்டு வெளியே செல்லாமல் அதனுள்ளேயே இருந்து, அவ்வமைப்பின் முற்றிலும் வெவ்வேறான வடிவங்களையும், அதன் வளர்ச்சியில் முற்றிலும் வெவ்வேறான வேகங்களையும், அதன் முற்போக்குச் செல்வாக்கில் வெவ்வேறு தரங்களையும் வற்புறுத்தின.

இவ்விதம் முதலாவது காலப்பகுதி போர்த்தந்திரம் பற்றிய பிரச்சனைகளென்று வழக்கமாகக் குறிக்கப்படுகிறவற்றை மார்க்சியத்தின் முன்வரிசையில் கொண்டு வந்து நிறுத்தியது. இது ஏதோ தற்செயலாக நடக்கவில்லை; தேவையின் கட்டாயத்தால் ஏற்பட்டது. இந்தப் பிரச்சனைகள் குறித்துக் கிளம்பிய சர்ச்சைகளும் கருத்து வேற்றுமைகளும் ‘அறிவுத் துறையினரிடையே’ நடக்கிற சர்ச்சைகள்தான் என்றும், ‘பக்குவமடையாத பாட்டாளி வர்க்கத்தின் மேல் செல்வாக்குப் பெறுவதற்காக நடக்கும் ஒரு போராட்டமே’ என்றும், ‘அறிவுத் துறையினர் தங்களைப் பாட்டாளி வர்க்கத்துக்குத் தகவமைத்துக் கொள்வதைக்’ குறிப்பவையே என்றும் பல்வேறு சாயல்களிலுமான வேஹி ஆதரவாளர்கள் நினைக்கிறார்கள்; இதைவிட தவறான கருத்து வேறென்றுமில்லை. இதற்கு நேர்மாறாக இந்தப் பாட்டாளி வர்க்கம், பக்குவம் பெற்று விட்டதனால் தான், அது ருஷ்யாவின் முதலாளித்துவ வளர்ச்சி பூராவிலும் காணப்படும் இவ்விரண்டு வேறுபட்ட போக்குகளிடையே நடக்கிற போர் குறித்து ஏனோதானே என்றிருக்க முடியவில்லை; ஆகவே இந்த வர்க்கத்தின் தத்துவாசிரியர்கள் வெவ்வேறான இவ்விரு போக்குகளுக்கும் (நேர் முகமாகவோ மறைமுகமாகவோ, நேரான பிரதிபலிப்பாகவோ எதிரான பிரதிபலிப்பாகவோ) ஏற்ற வகையில் தத்துவ ரீதியான வரையறுப்புகளை வகுத்துத் தருவதைத் தவிர்க்க முடியவில்லை .

இரண்டாவது காலப்பகுதியிலே ருஷ்யாவின் முதலாளித்துவ வளர்ச்சியின் வெவ்வேறான போக்குகளிடையிலான போர் நிகழ்ச்சி அரங்கில் காணப்படவில்லை, ஏனெனில் இந்த இரண்டு போக்குகளுமே “பழுத்த பிற்போக்கர்களால்” நசுக்கப்பட்டுவிட்டன, பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்வாங்கிக் கொள்ளும்படிச் செய்யப்பட்டன, தற்காலிகமாக மூச்சொடுக்கப்பட்டன. மத்திய காலத்தியப் பழுத்த பிற்போக்கர்கள் முன்னணிக்கு வந்து நின்று கொண்டதோடல்லாமல் முதலாளித்துவச் சமுதாயத்தின் மிக விரிந்த ஜனப்பகுதிகளிடையே வேஹியின் உணர்ச்சிகளை, மனச்சோர்வையும், மறுதலித்துக் கைவிடும் மனோநிலையையும் மேலோங்கச் செய்தனர். இப்போது தலை தூக்கியது பழைய அமைப்பு முறையைச் சீர்திருத்த நிற்கும் இரண்டு வழிமுறைகள் இடையிலான போர் அல்ல; எந்த விதமான சீர்திருத்தங்களிலும் நம்பிக்கையின்மை, “அடிபணிந்துவிடும்”, “பாவ மன்னிப்பு நாடும்” மனப்பாங்கு, சமூக விரோதப் போதனைகளின் மீது மோகம், இறை ஞானப் பித்து இத்தியாதியானவையே இப்போது தலை தூக்கின.

ஆச்சரியப்படத்தக்க முறையில் திடுதிப்பென நிகழ்ந்த இந்த மாறுதல் தற்செயலானதல்ல, ‘வெளிப்புற’ நிர்ப்பந்தத்தினால் மட்டும் ஏற்பட்ட விளைவல்ல. இதற்கு முந்திய காலப்பகுதி, தலைமுறை தலைமுறையாய், பல நூற்றாண்டுகளாய், அரசியல் பிரச்சனைகளிலிருந்து ஒதுங்கி நின்று வந்த, அரசியல் பிரச்சனைகளே இன்னதென்று அறியாமலே இருந்து வந்த ஜனப்பகுதிகளை ஆழ்ந்த முறையிலே உலுக்கி உசுப்பி விட்டது. ஆகவே ‘எல்லா மதிப்புகளையும் திரும்ப மதிப்பிடலும்’, அடிப்படைப் பிரச்சனைகளைப் புதிதாய்ப் பயில்வதும், தத்துவத்தில் அடிப்படைக் கூறுகளில் அரசியல் அரிச்சுவடியில் புதிய அக்கறை காட்டுவதும் இயற்கையாகவும் தவிர்க்க முடியாத வகையிலும் மேலோங்கின. நெடுந்தூக்கத்திலிருந்து திடீரென்று எழுப்பிவிடப்பட்டு மிகவும் முக்கியமான பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியதாகிவிட்ட கோடிக்கணக்கான மக்கள் அதிக காலத்துக்கு இம்மட்டத்தில் இருந்து கொண்டிருக்க முடியாது. இடைவேளை ஓய்வு பெறாமலும், ஆரம்ப அடிநிலைப் பிரச்சனைகளுக்குத் திரும்பாமலும், இணையற்ற பொருள் வளம் செறிந்த படிப்பினைகளை “ஜீரணிக்க” உதவுவதும், ஒப்பிட முடியாத அளவு அதிக விரிவான ஜனத்திரள் முன்னிலும் மிகுந்த உறுதியோடும், உணர்வோடும், நிச்சயத்தோடும், விடாமுயற்சியோடும் முன்னேறுவதைச் சாத்தியமாக்குவதுமான புதிய பயிற்சி பெறாமலும் அவர்களால் மேற்செல்ல முடியவில்லை.

நாட்டின் வாழ்க்கையின் சகல துறைகளிலும் உடனடிச் சீர்திருத்தங்கள் செய்து முடிப்பதுதான் முதலாவது காலப் பகுதியின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்தது. பெற்ற அனுபவத்தை விமர்சித்து ஆராய்வது, இன்னும் அதிக விரிவான ஜனப்பகுதிகள் அந்த அனுபவத்தை ஜீரணிப்பது, சொல்லப் போனால் அந்த அனுபவம் அடிமண்ணுக்குள் எனலாம், அதாவது பல்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த பிற்பட்ட அணிகளுக்குள் ஊடுருவிச் செல்வது-இவைதான் இரண்டாவது காலப்பகுதியின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்தன. காரணம், சரித்திர வளர்ச்சியின் இயக்கவியல் அப்படி அமைந்திருந்தது.

மார்க்சியம் உயிரற்ற வறட்டுச் சூத்திரம் அல்ல; இறுதி முடிவாக்கப்பட்டுவிட்ட, முன்கூட்டியே தயார் செய்து வைக் கப்பட்டுவிட்ட, மாற்றத்துக்கு இடமில்லாது இறுகிவிட்ட போதனை அல்ல அது. செயலுக்கான உயிருள்ள வழிகாட்டி அது; சமுதாய வாழ்க்கை நிலைமைகளில் ஆச்சரியப்படத்தக்க அளவில் திடுதிப்பென நிகழ்ந்த மாறுதல்களை இக்காரணத்தால் நிச்சயமாய் மார்க்சியம் பிரதிபலித்துக் காட்டவே செய்யும். ஆழ்ந்த சிதைவிலும், ஒற்றுமையின்மையிலும், பல வகைப்பட்ட ஊசலாட்டங்களிலும், சுருங்கச் சொன்னால் மார்க்சியத்துக்கு உள்ளேயே ஒரு மிகத் தீவிரமான நெருக்கடியிலும் இந்த மாறுதல் பிரதிபலித்துக் காட்டப்பட்டது. இந்தச் சிதைவை எதிர்த்து மூர்க்கமாகப் போராட வேண்டிய தேவை, மார்க்சியத்தின் அடிப்படைகளுக்காக மூர்க்கமாக, விடாப்பிடியான போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை, மறுபடியும் நிகழ்ச்சி நிரலுக்கு வந்தது. இதற்கு முந்திய காலப்பகுதியில் வர்க்கங்களின் மிகவும் விரிவான பகுதியோர் தமது குறிக்கோள்களை வகுத்துக் கொள்வதில் மார்க்சியத்தைத் தவிர்த்து விலக்க முடியாமற் போகவே, இந்தப் போதனையை அவர்கள் அளவுமீறி ஒருதலைப்பட்சமாகவும் திரித்துக் குலைக்கப்பட்ட பாணியிலும் கிரகித்துக் கொண்டனர். குருட்டுப் பாடமாய்ச் சிற்சில கோஷங்களையும் போர்த்தந்திரப் பிரச்சனைகளுக்கான சிற்சில விடைகளையும்-இந்த விடைகளுக்கான மார்க்சிய அடிநிலைக் கூறுகளைப் புரிந்து கொள்ளாமலே-நெட்டுருப் போட்டு வைத்திருந்தனர். சமுதாய வாழ்வின் பல்வேறு துறைகளிலும் ‘எல்லாப் பண்பு மதிப்புகளையும் மறுபடியும் மதிப்பீடு செய்ய’ நேர்ந்ததைத் தொடர்ந்து, மார்க்சியத்தின் மிகவும் கருத்தியலான. பொதுப் படையான தத்துவவியல் அடிப்படைகள் ‘திருத்தப்பட்டுவிடும்’ ஒரு நிலைமை ஏற்பட்டது. பல்வேறுபட்ட கருத்து முதல் வாதச் சாயல்களிலுமாகிய முதலாளித்துவத் தத்துவவியலின் செல்வாக்கு மார்க்சியவாதிகளிடையே கொள்ளை நோய் போலப் பரவிய மாகியக் கருத்துகளின் வாயிலாய் வெளியாயிற்று. புரிந்து கொள்ளப்படாமலும் சிந்தித்து கிரகிக்கப்படாமலும் போட்டு நெட்டுருச் செய்யப்பட்ட ‘கோஷங்கள்’ திருப்பித் திருப்பிக் கூறப்பட்டதானது வெற்றுச் சொல்லடுக்குகளை வெகுவாய்ப் புழக்கத்துக்கு வரச் செய்தது. இதன் நடைமுறை விளைவு என்னவெனில், பகிரங்கமான அல்லது மறைமுகமான ‘ஒத்சொவிசம்’ அல்லது மார்க்சியத்தின் “சட்டபூர்வ உருவே” ஒத்சொவிசம் என்பதாய்க் கொள்வது போன்ற முற்றிலும் மார்க்சிய விரோத, குட்டி முதலாளித்துவப் போக்குகள் மலிந்து விட்டன.

இன்னொரு புறத்தில், வேஹி சஞ்சிகையின் மனப்பான்மை, கொள்கை துறந்து ஒடும் மனப்பான்மை முதலாளித்துவ வர்க்கத்தாரின் விரிவான பகுதிகளை ஆட்கொண்டு விட்டதுடன் நில்லாமல், மார்க்சியத் தத்துவத்தையும் நடைமுறையையும் நிதானமும் ஒழுங்கும் வழி வரம்புகளுக்குள் அடக்கி வைக்க முயற்சிக்கிற போக்குக்குள்ளும் புகுந்துவிட்டது. கடைசியாக மார்க்சியத்தில் மிஞ்சினதெல்லாம் ‘படி வரிசை முறை’ (hierarchy), ‘தலைமைப் பாத்திரம்’ (hegemony) முதலான வற்றைப் பற்றிய, மிதவாதத்தில் முற்றிலும் ஊறிப்போன வாதங்களில் உபயோகிப்பதற்கேற்ற வெறும் சொற்களே.

இந்த எல்லா வாதங்களையும் பற்றிப் பரிசீலிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. மார்க்சியம் அனுபவித்துவரும் நெருக்கடியின் ஆழத்தைப் பற்றியும், இந்தக் காலப்பகுதியில் நிலவும் ஒட்டுமொத்தமான சமுதாய – பொருளாதார நிலைமைக்கும் அந்த நெருக்கடிக்கும் இடையேயுள்ள சம்பந்தத்தைப் பற்றியும் நாம் மேலே குறிப்பிட்டவற்றைத் தெளிவுப்படுத்த இந்த வாதங்களைக் குறிப்பிட்டாலே போதும். இந்த நெருக்கடி எழுப்பும் பிரச்சனைகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. வாய்ச்சவடால் அடித்து அவற்றை அகற்றிவிட நடக்கிற முயற்சிகள் போல் தீங்கிழைக்கும்படியான, கோட்பாடற்ற செய்கை வேறு எதுவும் இருக்க முடியாது. நெருக்கடியின் ஆழத்தையும் அதை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கும் எல்லா மார்க்சியவாதிகளையும் மார்க்சியத்தின் தத்துவ அடிப்படைகளையும் ஆதார வரையறுப்புகளையும் பாதுகாப்பதற்காக அணி திரட்டுவதைக் காட்டிலும் முக்கியமானது எதுவும் இருக்க முடியாது; ஏனெனில் மார்க்சியத்தின் பலவகைப்பட்ட “சக பிரயாணி”களிடையே முதலாளித்துவச் செல்வாக்கு பரவியுள்ளதால் எதிரெதிரான திசைகளிலிருந்து இவை திரித்துப் புரட்டப் படுகின்றன.

விரிவான ஜனப்பகுதிகளைச் சமுதாய வாழ்க்கையில் உணர்வு பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ளும்படி முதலாவது மூன்றாண்டுக் காலப்பகுதி விழிப்புறச் செய்தது. அவர்களில் பலர் இப்பொழுதுதான் முதல் தடவையாக உண்மையான முறையிலே மார்க்சியத்தைத் தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிருர்கள். இது சம்பந்தமாக முதலாளித்துவப் பத்திரிகைகள் என்றையும் விட அதிகமாகப் பொய்யான கருத்துகளைச் சிருஷ்டித்தும், மிக விரிவாகப் பரப்பியும் வருகின்றன. இந்த நிலைமைகளிலே மார்க்சியவாதிகளின் அணிகளிலே ஏற்படும் சிதைவு மிகவும் ஆபத்தானது. தற்சமயம் இந்தச் சிதைவு தவிர்க்க முடியாதது என்பதற்குரிய காரணங்களைப் புரிந்து கொள்வதும், இந்தச் சிதைவை எதிர்த்து முரணின்றிப் போராடுவதற்காக அணிகளைத் திரட்டி ஒன்று சேர்ப்பதும், மார்க்சியவாதிகளுடைய இந்நாளைய கடமையாகும். இத்தொடரின் மிகவும் நேரடியான, துல்லியமான பொருளில் இந்நாளைய கடமையாகும்.

ஸ்வேஸ்டா, இதழ் 2, நூல் திரட்டு,

1910) டிசம்ப ர் 23 தொகுதி 20,

ஒப்பம் வி. இலியின் பக்கங்கள் 84-89


மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும்

மார்க்சின் போதனை, நாகரிக உலகெங்கிலும் (அதிகாரத் தரப்பினதும், மிதவாதிகளதும் ஆகிய இரு வகையான) முதலாளித்துவ விஞ்ஞானம் அனைத்திடமிருந்தும் அளவற்ற பகைமையையும் வெறுப்பையும் கிளப்பிவிடுகிறது. மார்க்சியம் ஒரு வகையான ‘நச்சுத்தன்மை கொண்ட குறுங்குழுவாதம்’ என்று அது கருதுகின்றது. அதனிடமிருந்து வேறு எந்த விதமான போக்கையும் எதிர்பார்க்க முடியாதுதான். ஏனெனில், வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ள ஒரு சமுதாயத்தில் ஒருசார்பற்ற சமுதாய விஞ்ஞானம் எதுவும் இருக்க முடியாது. அதிகாரத் தரப்பைச் சேர்ந்த விஞ்ஞானம் அனைத்தும், மிதவாதிகளது விஞ்ஞானம் அனைத்தும் ஏதாவதொரு விதத்தில் கூலி அடிமை முறை யை ஆதரிக்கிறது. மார்க்சியமோ கூலி அடிமை முறையை ஈவிரக்கமின்றி எதிர்த்துப் போர்ப் பிரகடனம் செய்துள்ளது. மூலதனத்துக்குக் கிடைக்கும் இலாபத்தைக் குறைப்பதன் மூலம் தொழிலாளர்களின் கூலியை உயர்த்தலாமா என்ற பிரச்சினையில் முதலாளிகள் ஒருசார்பற்றவர்களாய் இருப்பார்களென எதிர்பார்ப்பது எப்படி அசட்டுத் தனமாகுமோ, ஏமாளித்தனமாகுமோ, அப்படித்தான் கூலி அடிமைமுறைச் சமுதாயத்தில் விஞ்ஞானம் ஒருசார்பற்றதாய் இருக்குமென எதிர்பார்ப்பதும் அசட்டுத்தனமாகும், ஏமாளித்தனமாகும்.

இது மட்டுமல்ல. தத்துவஞானத்தின் வரலாறும் சரி, சமுதாய விஞ்ஞானத்தின் வரலாறும் சரி, மார்க்சியத்தில் குறுங்குழுவாதம் போன்றதெதுவும் கிடையாது என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகின்றன. அதாவது, அது ஓர் இறுகிப்போன வறட்டுப் போதனையல்ல; உலக நாகரிக வளர்ச்சியின் ராஜபாட்டையின் வழியே வராமல் அதனின்று விலகி வேறொரு வழியே முளைத்த போதனை அல்ல. மாறாக, மனித குலத்தின் முன்னணிச் சிந்தனையாளர்கள் ஏற்கெனவே எழுப்பியிருந்த கேள்விகளுக்கு மார்க்ஸ் விடைகள் தந்தார் என்பதில் தான் குறிப்பாக அவருடைய மேதாவிலாசம் அடங்கியுள்ளது. தத்துவஞானம், அரசியல் பொருளாதாரம், சோஷலிசம் ஆகியவற்றின் தலைசிறந்த பிரதிநிதிகளுடைய போதனைகளின் நேரடியான, உடனடியான தொடர்ச்சியாகத்தான் மார்க்சின் போதனை எழுந்தது.

கலையகம்: பாரிஸ் கம்யூன் : பிரான்சில் ...

மார்க்சின் போதனை மெய்யானது, அதனால் தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலுமமைந்த மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது. ஜெர்மானியத் தத்துவஞானம், ஆங்கிலேய அரசியல் பொருளாதாரம், பிரெஞ்சு சோஷலிசம் என்ற வடிவத்தில் 19-ஆம் நூற்றாண்டில் மனித குலம் உருவாக்கித் தந்த தலைசிறந்த படைப்புகளின் உரிமை பெற்ற வாரிசுதான் மார்க்சியம்.

இவை மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களாகும், மூன்று உள்ளடக்கக் கூறுகளாகும். இவற்றைச் சுருக்கமாகக் கவனிப்போம்.

1

பொருள்முதல்வாதம்தான் மார்க்சியத்தின் தத்துவஞானமாகும். பொருள்முதல்வாதம் ஒன்றுதான் முரணற்ற தத்துவஞானமாகும். இயற்கை விஞ்ஞானங்களுடைய எல்லாப் போதனைகளுக்கும் ஏற்புடையதாகும். மூட நம்பிக்கைகளுக்கும் பகட்டுக்கும் பசப்புக்கும் இன்ன பிறவற்றுக்கும் தீராப்பகையாகும் என்பது ஐரோப்பாவின் நவீன கால வரலாறு பூராவிலும், இன்னும் முக்கியமாய் மத்திய காலக் குப்பைக் கூளங்களை எதிர்த்தும், நிறுவனங்களிலும் கருத்துகளிலும் ஆட்சி புரிந்த பிரபுத்துவத்தை எதிர்த்தும் நடைபெற்ற முடிவான கடும் போரின் களமாயிருந்த பிரெஞ்சு நாட்டில் 18ம் நூற்றாண்டின் இறுதியிலும் தெளிவாக மெய்ப்பிக்கப்பட்டது. ஆகவே பொருள்முதல்வாதத்தை மறுப்பதற்கும், பலவீனப்படுத்துவதற்கும், பழிப்பதற்கும், ஜனநாயகத்தின் எதிரிகள் முழுமூச்சுடன் முயன்று பார்த்தார்கள். தத்துவஞானக் கருத்து முதல் வாதத்தின் பல வகை வடிவங்களை இவர்கள் ஆதரித்தனர். இவ்வகைக் கருத்துமுதல்வாதம் ஏதாவது ஒரு வழியில் எப்பொழுதும் மதத்தைப் பாதுகாக்கவோ ஆதரிக்கவோதான் செய்கிறது.

மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞானப் பொருள்முதல் வாதத்தை மிகுந்த மனத்திண்மையோடு ஆதரித்துப் பாதுகாத்தனர். இந்த அடிப்படையிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு திரிபும் மிகவும் தவறாயிருப்பதை அவர்கள் அடிக்கடி விளக்கி வந்தார்கள். எங்கெல்ஸ் எழுதிய லுட்விக் ஃபாயர் பாஹ், டூரிங்குக்கு மறுப்பு என்கிற நூல்களில் அவர்களுடைய கருத்துக்கள் மிகத் தெளிவாகவும் முழுமையாகவும் விரித்துரைக்கப்பட்டுள்ளன. கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை என்கிற நூலைப் போலவே இவ்விரண்டு நூல்களும் வர்க்க உணர்வு பெற்ற ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவசியமான கைப்புத்தகங்களாகும்.

18ம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதத்துடன் மார்க்ஸ் நின்றுவிடவில்லை. அவர் தத்துவஞானத்தை முன்னேறச் செய்தார். மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானம் திரட்டிய செல்வங்களைக் கொண்டு, குறிப்பாக ஹெகலின் தத்துவ முறை – இதிலிருந்தே ஃபாயர்பாஹின் பொருள்முதல்வாதம் தோன்றியது – திரட்டிய செல்வங்களைக் கொண்டு, அவர் பொருள்முதல்வாதத்தை வளப்படுத்தினார். இந்தச் செல்வங்களில் பிரதானமாக விளங்குவது இயக்கவியல் தான். இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒரு தலைப்பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கி விவரிக்கும் போதனையாகும், நிரந்தரமாக வளர்ச்சியற்ற வண் ணமுள்ள பருப்பொருளை நமக்குப் பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின் சார்புநிலையை வலியுறுத்தும் போதனையாகும். ரேடியம், மின்னணுக்கள், தனிமங்களில் ஒன்று மற்றொன்றாக மாறுவது-இவை போன்ற இயற்கை விஞ்ஞானத்தின் மிக நவீன கண்டுபிடிப்புகளெல்லாம் மார்க்சின் இயக்கவியல் பொருள்முதல்வாதமே சரியானது என்று வியக்கத்தக்க முறையில் உறுதிப்படுத்தியுள்ளன. அழுகிப்போன பழைய கருத்து முதல்வாதத்தைப் பற்றிய ‘புதிய’ மறு வியாக்கியானங்களைக் கொண்டு முதலாளித்துவத் தத்துவஞானிகள் தந்த போதனைகளால் இதைத் தடுக்க முடியவில்லை .

தத்துவஞானப் பொருள்முதல் வாதத்தை மார்க்ஸ் ஆழமாக்கி வளர்த்து நிறைவு பெறச் செய்தார். இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் விரிவாக்கினார். மார்க்சின் வரலாற்றுத் துறைப் பொருள்முதல்வாதம் விஞ்ஞானச் சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும் அரசியலையும் பற்றிய கருத்துகளில் குழப்பமும் தான் தோன்றித் தனமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இப்போது அவை போய், வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும் உள்ளிணக்கமும் கொண்ட ஒரு விஞ்ஞானத் தத்துவம் வந்துவிட்டது. வரலாற்றுத் துறைப் பொருள்முதல்வாதம் என்ற இந்தத் தத்துவம் காட்டுவதென்ன? உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் விளைவாக ஒரு சமுதாய அமைப்பு முறையிலிருந்து அதைவிட உயர்தரமான இன்னொரு சமுதாய அமைப்புமுறை எப்படி வளர்கிறது என்பதை உதாரணமாக, நிலப்பிரபுத்துவச் சமுதாய அமைப்பு முறையிலிருந்து முதலாளித்துவச் சமுதாய அமைப்புமுறை எப்படி வளர்கிறது என்பதை – அது காட்டுகிறது.

இயற்கை என்பது – அதாவது வளர்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கும் பருப்பொருள் என்பது மனிதனுக்கு அப்பால் சுயமாக இருந்து வருகிறது. இந்த இயற்கையை மனித அறிவு பிரதிபலிக்கிறது. அதே போலதான் மனிதனின் சமுதாய அறிவு எனப்படுவதும் (அதாவது தத்துவஞானம், மதம், அரசியல் முதலானவை சம்பந்தமாக மனிதன் கொண்டிருக்கும் பல்வேறு கருத்துக்களும் போதனைகளும்) சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையைப் பிரதிபலிக்கிறது. அரசியல் நிறுவனங்கள் என்பவையெல்லாம் பொருளாதார அடித் தளத்தின் மீது நிறுவப்பட்ட மேல் கட்டுமானமேயாகும். உதாரணமாக, நவீன ஐரோப்பிய அரசுகளின் பல்வேறு அரசியல் வடிவங்கள் எல்லாம் பாட்டாளி வர்க்கத்தின் மேல் முதலாளி வர்க்கம் செலுத்தி வரும் ஆதிக்கத்தைப் பலப் படுத்த எப்படிப் பயன்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம்.

மார்க்சின் தத்துவஞானம் முழுநிறைவு பெற்ற தத்துவ ஞானப் பொருள்முதல்வாதமாகும். இந்தப் பொருள் முதல் வாதம் மனித குலத்திற்கு, குறிப்பாகத் தொழிலாளி வர்க்கத்துக்கு, மகத்தான அறிவுச் சாதனங்களை வழங்கியிருக்கிறது.

பொருளாதார அமைப்பு முறை என்ற அடித்தளத்தின் மீதுதான் அரசியல் மேல் கட்டுமானம் கட்டப்படுகிறது என்று ஏற்றுக் கொண்டவுடன், மார்க்ஸ் தமது பெரும்பாலான கவனத்தை இந்தப் பொருளாதார அமைப்புமுறையின் மீது செலுத்தினார். மார்க்சின் பிரதான நூலாகிய மூலதனம் நவீன காலத்திய-அதாவது, முதலாளித்துவ சமுதாயத்தின் பொருளாதார அமைப்பு முறையை ஆராயும் நூலாகும்.

மார்க்சுக்கு முற்பட்ட மூலச்சிறப்புள்ள அரசியல் பொருளாதாரம் முதலாளித்துவ நாடுகள் எல்லாவற்றிலும் அதிக வளர்ச்சி பெற்றிருந்த இங்கிலாந்திலே உருவாயிற்று. ஆடம் ஸ்மித்தும் டேவிட் ரிக்கார்டோவும் பொருளாதார அமைப்பு முறையை ஆராய்ந்து மதிப்பு பற்றிய உழைப்புத் தத்துவத்துக்கு அஸ்திவாரமிட்டார்கள். அவர்களுடைய பணியை மார்க்ஸ் தொடர்ந்து நடத்தினார். இந்தத் தத்துவத்தை அவர் திட்டமாக நிரூபித்து முரணற்ற வகையில் விவரித்தார். ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பும் அதை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்பட்ட சமுதாய ரீதியில் அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டுதான் நிர்ணயிக்கப்படுகிறது என்று அவர் விளக்கிக் காட்டினார்,

முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள், பொருட்கள் இடையிலான (ஒரு பண்டம் மற்றென்றுடன் பரிமாற்றம் செய்து கொள்ளப்படும்) உறவு என்பதாக விவரித்ததில் மனிதர்கள் இடையிலான உறவு நிலவுவதை மார்க்ஸ் புலப்படுத்தினார். பண்டப் பரிமாற்றம் தனித்தனியான உற்பத்தியாளர்களிடையே சந்தை மூலமாக ஏற்படும் பிணைப்பைக் காட்டுகிறது. பணம் என்பது இந்தப் பிணைப்பு தனிப்பட்ட உற்பத்தியாளர்களின் பொருளாதார வாழ்க்கை முழுவதையும் பிரிக்க முடியாதபடி முழுமொத்தமாக இணைத்து மேலும் மேலும் நெருக்கமாவதைக் குறிக்கிறது. மூலதனம் என்பது இந்தப் பிணைப்பு மேலும் வளர்ச்சியுறுவதைக் குறிக்கிறது; அதாவது மனிதனின் உழைப்புச் சக்தியே ஒரு பரிமாற்றப் பண்டமாகிவிடுவதைக் குறிக்கிறது. கூலி பெறும் உழைப்பாளி நிலம், ஆலைகள், உழைப்புக் கருவிகள் ஆகியவற்றின் சொந்தக்காரர்களிடம் தனது உழைப்புச் சக்தியை விற்கிறான், தொழிலாளி வேலை நாளின் ஒரு பகுதியைத் தன்னையும் தனது குடும்பத்தையும் பராமரித்துக் கொள்வதற்கு வேண்டிய செலவுக்காக (அதாவது, கூலிக்காக) உழைப்பதில் கழிக்கிறான், மறு பகுதியில் ஊதியமின்றியே உழைத்து முதலாளிக்கு உபரி மதிப்பை உண்டாக்கித் தருகிறன் இந்த உபரி மதிப்புத்தான் இலாபத்துக்குத் தோற்றுவாய், அதுதான் முதலாளி வர்க்கத்தின் செல்வத்துக்குத் தோற்றுவாய்,

உபரி மதிப்பைப் பற்றிய போதனைதான் மார்க்சின் பொருளாதாரத் தத்துவத்துக்கு மூலைக்கல் ஆகும்.தொழிலாளியின் உழைப்பால் உண்டாக்கப்பட்ட மூலதனம் சிறு உற்பத்தியாளர்களை அழித்து வேலையில்லாதோர் பட்டாளத்தைப் படைப்பதின் மூலமாகத் தொழிலாளியை நசுக்குகிறது. தொழில் துறையில், பெருவீத உற்பத்தி பெறுகிற வெற்றி பளிச்சென்று தெரிகிறது. ஆனால், இதே நிகழ்ச்சியை விவசாயத் துறையிலும் நாம் பார்க்க முடியும். பெருவீத முதலாளித்துவ விவசாயத்தின் மேநிலை அதிகமாகிக் கொண்டே போகிறது : விவசாயத்தில் இயந்திரங்களை உபயோகிப்பதும் அதிகரிக்கிறது; பண மூலதனத்தின் சுருக்குக் கயிற்றில் விவசாயப் பொருளாதாரம் சிக்கிக் கொள்கிறது; அது தனது பிற்பட்ட தொழில் நுணுக்கத்தின் சுமையால் அழுத்தப்பட்டு அழிகிறது. விவசாயத் துறையில் சிற்றளவான உற்பத்தியின் சீர்குலைவுக்குரிய வடிவங்கள் வேறாயிருப்பினும், இச்சீர்குலைவு ஏற்படுவது மறுக்கமுடியாத உண்மையாகும்.

மூலதனம் சிற்றளவான உற்பத்தியை ஒழிப்பதன் மூலம், உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதற்கும் பெரிய முதலாளிகளின் கூட்டுகளுக்கு ஏகபோக நிலையைப் படைப்பதற்கும் வகை செய்கிறது. உற்பத்தியே மேலும் மேலும் சமுதாயத் தன்மை பெறுகிறது : ஒரு முறையான பொருளாதார ஒழுங்கமைப்பிலே இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பிணைக்கப்பட்டு விடுகின்றனர். ஆனால் அந்தக் கூட்டு உழைப்பின் உற்பத்திப் பொருளை விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில முதலாளிகள் உடைமையாக்கிக் கொள்கிறார்கள். உற்பத்தியில் அராஜகம் வளர்கிறது; அதேபோல் நெருக்கடிகளும் வளர்கின்றன; சந்தைகளைப் பிடித்துக்கொள்வதற்கான ஆவேச வேட்டையும் அதிகமாகிறது; திரளான மக்களின் வாழ்க்கைக் காப்புறுதியின்மையும் அதிகரிக்கிறது. தொழிலாளர்கள் மூலதனத்தை அண்டிப் பிழைக்க வேண்டிய நிலையை முதலாளித்துவ முறை தீவிரப்படுத்தும் அதே சமயத்தில் ஒன்றுசேர்ந்த தொழிலாளர் எனும் மாபெரும் பலத்தையும் பிறப்பித்துவிடுகிறது.

பரிமாற்றப் பண்டப் பொருளாதாரத்தின் ஆரம்ப வித்துகளிலிருந்து, சாதாரணப் பரிமாற்றத்திலிருந்து தொடங்கி, மிக உயர்ந்த வடிவங்கள் வரையில், பெருவீத உற்பத்தி வரையில் முதலாளித்துவத்தின் வளர்ச்சியை மார்க்ஸ் ஆராய்ந்து காட்டினார்.

பழையவையும் புதியவையும் அடங்கலான எல்லா முதலாளித்துவ நாடுகளின் அனுபவமும் இந்த மார்க்சியப் போதனை பிழையற்றதாகும் என்பதை ஆண்டு தோறும் மேலும் மேலும் கூடுதலான தொழிலாளர்களுக்குத் தெளிவாக நிரூபித்துக் காட்டி வருகிறது.

உலகெங்கும் முதலாளித்துவம் வெற்றி பெற்றுவிட்டது. ஆனால் இந்த வெற்றி முதலாளித்துவத்தின் மீது தொழிலாளர் காணப் போகும் வெற்றியின் முன்னறிவிப்பே ஆகும்.

நிலப்பிரபுத்துவ அமைப்புமுறை வீழ்த்தப்பட்டு “சுதந்திரமான” முதலாளித்துவச் சமுதாயம் இப்பூவுலகில் தோன்றிய பொழுது இந்தச் சுதந்திரம் உழைப்பாளிகளை ஒடுக்கவும் சுரண்டவும் அமைந்த புதியதோர் அமைப்புமுறையையே குறித்தது என்பது உடனே தெளிவாக விளங்கலாயிற்று. இந்த ஒடுக்குமுறையின் பிரதிபலிப்பாகவும் இதற்கான கண்டனமாகவும் பல்வேறு சோஷலிசப் போதனைகள் உடனே தலை தூக்கத் தொடங்கின. ஆனால் ஆரம்ப காலத்திய சோஷலிசம் கற்பனை சோஷலிசமாகத்தான் இருந்தது. அது முதலாளித்துவச் சமுதாயத்தை விமர்சித்தது. கண்டித்தது, சபித்தது; அந்தச் சமுதாயத்தை ஒழிக்க வேண்டும் என்று கனவு கண்டது; அதை விட மேலான ஓர் அமைப்புமுறையைப் பற்றி ஆகாயக் கோட்டை கட்டி வந்தது; சுரண்டுவது ஒழுக்கக்கேடான செயல் என்று பணக்காரர்களுக்கு உணர்த்த முயற்சித்தது.

ஆனால் கற்பனா சோஷலிசத்தினால் விடுதலைக்கான மெய்யான வழியைக் காட்ட முடியவில்லை. முதலாளித்துவத்தில் நிலவும் கூலி அடிமைமுறையின் சாராம்சத்தை அதனால் விளக்க முடியவில்லை. முதலாளித்துவ முறையின் வளர்ச்சி பற்றிய விதிகளை அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு புதிய சமுதாயத்தின் படைப்பாளியாக அமையவல்ல சமுதாயச் சக்தியை அதனால் சுட்டிக் காட்டவும் முடியவில்லை. இதற்கிடையில், நிலப்பிரபுத்துவத்தின் வீழ்ச்சியையும் பண்ணை அடிமை முறையின் வீழ்ச்சியையும் தொடர்ந்து ஐரோப்பா முழுவதிலும், குறிப்பாக பிரான்சில், ஏற்பட்ட புயல் வேகப் புரட்சிகள், வர்க்கங்களின் போராட்டம்தான் எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரமாயும் உந்து விசையாகவும் உள்ளது என்பதை மேலும் மேலும் தெளிவாக வெளிப்படுத்தின.

நிலப்பிரபுத்துவ வர்க்கத்துக்கெதிராய் அரசியல் சுதந்திர இலட்சியத்துக்குக் கிடைத்த எந்த ஒரு வெற்றியும் அவ்வர்க்கத்தின் மூர்க்கமான எதிர்ப்பில்லாமல் கிடைத்து விடவில்லை. முதலாளித்துவச் சமுதாயத்தின் பல்வேறு வர்க்கங்களிடையே ஜீவமரணப் போராட்டம் இல்லாமல் எந்த முதலாளித்துவ நாடும் ஓரளவு சுதந்திரமான, ஜனநாயக அடிப்படையில் வளர்ச்சியுற்று விடவில்லை.

வேறு எவருக்கும் முன்பாக மார்க்சுக்குத்தான் உலக வரலாறு போதிக்கும் படிப்பினையை இதிலிருந்து கண்டறியவும், அந்தப் படிப்பினையை முரணின்றிச் செயல்படுத்தவும் முடிந்தது, இதில் தான் அவருடைய மேதாவிலாசம் இருக்கிறது. வர்க்கப் போராட்டத்தைப் பற்றிய போதனைதான் அந்த முடிபாகும். நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமான ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக்கொண்டேயிருப்பார்கள். இந்த வர்க்கங்களின் எதிர்ப்பைத் தகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன? பழைமையைத் துடைத்தெறியவும் புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்துத் தீரவேண்டிய கட்டாயத்திலிருக்கிறவையுமான சக்திகளை நம்மைச் சூழ்ந்துள்ள இதே சமுதாயத்திற்குள்ளேயே நாம் கண்டுபிடித்து, அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துத் திரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி.

மார்க்சின் தத்துவஞானப் பொருள்முதல்வாதம் ஒன்றுதான் ஒடுக்கப்பட்ட வர்க்கங்களெல்லாம் அது வரை உழன்று கொண்டிருந்த ஆன்மிக அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும் வழியைப் பாட்டாளி வர்க்கத்திற்குக் காட்டியிருக்கிறது. மார்க்சின் பொருளாதாரத் தத்துவம் ஒன்றுதான் பொதுவான முதலாளித்துவ அமைப்பு முறையில் பாட்டாளி வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்கியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து ஜப்பான் வரை, ஸ்வீடனிலிருந்து தென்னாப்பிரிக்கா வரை, உலகமெங்கும் பாட்டாளி வர்க்கத்தின் சுயேச்சையான நிறுவனங்கள் பெருகிக்கொண்டேயிருக்கின்றன. தனது வர்க்கப் போராட்டத்தை நடத்திச் செல்வதன் வாயிலாகப் பாட்டாளி வர்க்கம் அறிவொளியும் கல்வியும் பெற்று வருகிறது; முதலாளித்துவச் சமுதாயத்திற்குரிய சார்புக் கருத்துக்களினின்று தன்னை விடுவித்துக் கொண்டுவருகிறது; தன் அணிகளை நெருக்கமாகத் திரட்டிச் சேர்த்து வருகிறது; தனது வெற்றிகளின் வீச்சை அளந்தறியக் கற்றுக் கொண்டு வருகிறது; தன் சக்திகளை எஃகு போல் திடப்படுத்தி வருகிறது; தடை செய்ய முடியாதபடி வளர்ந்துவருகிறது.

1913 மார்ச்சில் நூல் திரட்டு ,

புரோஸ்வெஷேனியே, தொகுதி 23,

இதழ் 3-ல் வெளிவந்தது பக்கங்கள் 40-48

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்