பாத யாத்திரை ரத யாத்திரையின் படிப்பினைகள்

இந்தியவில் பல அரசியல் கட்சி தலைவர்கள் இதுவரை சில பாத யாத்திரை செய்துள்ளனர் அதில் முக்கியமானவை அத்வானியின் ரத யாத்திரை பிஜேபியின் ஆட்சிக்கு வித்திட்டது. இன்று அண்ணாமலையின் யாத்திரை ஆட்சி மாற்றத்தை கொணராவிட்டாலும் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவரப் போகிறது. மக்கள் மத்தியில் அவர் விதைக்கப் போகும் மதவாத சிந்தனையும் மக்களை பிரிதாளும் சூழ்ல்சிக்கு வித்திடதான் போகிறது. இங்கு பகுத்தறிவாதம் பேசும் தமிழகத்தில் மக்கள் வாழும் உரிமை அடிப்படை பிரச்சினைக்கு முகம் கொடுக்காமல் மக்களை அவர்கள் மதவாதம் பேசுகின்றனர் இன்னொறுபுறம் மத எதிர்ப்பு பேசுகின்றனர். உண்மையில் மக்கள்  வாழ்வாதர பிரச்சினையை யாரும் பேசுவதில்லை. ஆகையால் மக்களின் வாழ்க்கை பிரச்சினையான மருத்துவம், கல்வி,பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு பற்றி பேசாமல் எதைஎதையோ பேசிக் கொண்டுள்ளனர். இதனை புரிந்துக் கொள்ள வேண்டும். 

அத்வானியும் இரதயாத்திரையும் 

அத்வானி பாபர் மசூதியில் பிரார்த்தனை செய்ய கரசேவகர்கள் அல்லது தன்னார்வலர்களைத் திரட்டுவதற்காக "ரத யாத்திரை" அல்லது ரத யாத்திரையைத் தொடங்கினார் . தேர் போல அலங்கரிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட வேனில் நடத்தப்பட்ட இந்த ரத யாத்திரை, குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் இருந்து தொடங்கி, வட இந்தியாவின் பெரும் பகுதியை பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தடுத்து நிறுத்தும் வரை சென்றது. அது வகுப்புவாத வன்முறைக்கு வழிவகுத்தது. 1991 பொதுத் தேர்தலில் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக பாஜக இரண்டாவது பெரிய இடங்களைப் பெற்றது. யாத்திரையின் போது,யாத்திரையின் தொடக்கப் புள்ளியாக சோம்நாத் தேர்வு செய்யப்பட்டமை, இந்துக்களுக்கு எதிரான முஸ்லீம் கொடுங்கோன்மையின் இலக்கு என்று திரும்பத் திரும்பக் குறிப்பிடப்பட்டதன் மூலம் தெளிவாக்கப்பட்டது... அயோத்தியை வரலாற்று ரீதியாக முஸ்லீம் ஆக்கிரமிப்புப் பரம்பரையாகச் சூழலாக்குவது என்பது நோக்கமாக இருந்தது. -  எல்.கே. அத்வானி, என் நாடு என் வாழ்க்கை. 

1992ல், அத்வானி தனது யாத்திரையை முடித்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கல்யாண் சிங் தலைமையிலானபிஜேபிஅரசுஉச்சநீதிமன்றத்தில் உறுதியளித்த போதிலும் கல்யாண் சிங் அரசாங்கத்தின் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் வகுப்புவாத சக்திகளால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது . ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா, மசூதி இடிப்புக்கு முன் அத்வானி ஒரு ஆத்திரமூட்டும் உரையை நிகழ்த்தியதாகத் தெரிவித்தார்.  பாபர் மசூதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அத்வானியும் ஒருவர்.

1996 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, அதன் விளைவாக குடியரசுத் தலைவரால் ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. இருப்பினும், ஹவாலா ஊழலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில் 1996 தேர்தலில் அத்வானி எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை  அடல் பிஹாரி வாஜ்பாய் மே 1996 இல் பிரதமராகப் பதவியேற்றார். இருப்பினும், அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்கவில்லை, பதின்மூன்று நாட்களுக்குப் பிறகு வாஜ்பாய் ராஜினாமா செய்தார்.

நமது புரிதலுக்கு

பிஜேபியின் பிரபலத்தை அதிகரிக்கவும், இந்துத்துவ சித்தாந்தத்தை ஒருங்கிணைக்கவும், அத்வானி 1987 ஆம் ஆண்டு தொடங்கி நாடு முழுவதும் 6 நீண்ட தூர ரத யாத்திரைகள் அல்லது ஊர்வலங்களை ஏற்பாடு செய்தார். அதன் பயனே இன்றை மோடியின் ஆட்சிக்கு வழிகோலியது.(இது வரை முஸ்லீம் எதிர்ப்பு மட்டுமே பேசும் இந்த ஈனர்கள் நாட்டின் ஏழை எளிய உழைக்கும் மக்கள் மட்டுமல்ல குறு சிறு தொழில் நிறுவனங்களையும் முடக்கியதும் அண்மையில் மணிப்பூரில் நடந்துக் கொண்டிருக்கும் காட்டுமிரண்டிதனமான நடவடிக்கைக்கு தலமையேற்று நடத்திக் கொண்டிருக்கும் ஒரு கட்சி எப்படி சாதரண மக்களுக்கான கட்சியாக இருக்கும் என் கருத்தே).

ஆந்திராவில் 2003 ல் Dr.ராஜசேகர் ரெட்டி பயணம் பற்றி

Dr.ராஜசேகர் ரெட்டி ஏப்ரல் 9, 2003, காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மாநிலத்தின் வறட்சி தொடர்பான பிரச்சனைகளை எடுத்துரைக்க 1,500 கி.மீ. பாதயாத்திரையை மேற்கொண்டபோது, முந்தைய ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச அரசியலின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் குறித்தது. விவசாயிகள் மீது தெலுங்கு தேசம் கட்சியின் அலட்சியம்.  ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவெல்லாவில் தொடங்கிய நடைப்பயணம் இன்று 20 ஆண்டுகளை கடந்துள்ளது.

டாக்டர் ராஜசேகர ரெட்டியின் பாதயாத்திரை ரங்கா ரெட்டி, மேடக், நிஜாமாபாத், கரீம்நகர், வாரங்கல், கம்மம், மேற்கு மற்றும் கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் மற்றும் விஜயநகரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக 11 மாவட்டங்களை உள்ளடக்கியது.

டிஆர் ஒய்எஸ்ஆர் தனது பயணத்தின் போது ஏராளமான பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார், பல்வேறு மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.

இந்த நடைபயணமானது, போதிய வறட்சி நிவாரண நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய தெலுங்கு தேசம் கட்சி அரசாங்கத்தின் குற்றம்சாட்டியது மட்டுமல்லாமல், மாநிலத்தில் காங்கிரஸின் ஆட்சியை மீட்டெடுத்தது. மக்கள் மத்தியில் அவர் ஏற்படுத்திய நம்பிக்கை மிகவும் சக்தி வாய்ந்தது, டாக்டர் ஒய்.எஸ்.ஆருக்கு நன்றி செலுத்தும் வகையில் 2004 ஆம் ஆண்டில் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

இவ்வாறு உள்ள போது அண்மையில் ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை பயனின்றி போகவில்லை ஆனால் அதன் வீரியம் ஊடகங்கள் மறைத்தே விட்டது என்பேன்.

அண்ணாமலையின் வெறுப்பரசியல் தமிழகத்தை கொஞ்சகாலம் ஆட்டதான் போகிறது அதனை எதிர் கொள்ள வேண்டியவர்கள் உண்மையான இடதுசாரி சிந்தனையாளர்கள் மட்டுமே.

போலியான ஏமாற்று பேர்வழிகளும் NGO களும் மக்களின் நல்வாழ்வு பற்றி பேசப் போவதில்லை...

இன்னும் பின்..

இவை ஒரு தோழரின் முகநூல் பக்கதிலிருந்து அப்படியே...

பா ஜ க வின் யாத்திரையை அத்தனை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது, தமிழ்நாட்டில் நுழையவே முடியாது என சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில்தான் கிராமம் தோரும் ஒரு தாமரை பதித்த கொடியாவது பறந்துகொண்டிருப்பதை பார்க்கிறோம்.
உலக சர்வாதிகாரத்தை பார்த்து பயம் கொள்வதை விட மிக மோசமானது இந்தியாவில் இப்போது நடந்துகொண்டிருக்கும் வெறுப்பரசியல்.. அதன் கொடூர முகத்தைதான் இரண்டு இனக்குழுவில் நடந்த மிக மோசமான மனிதத்தன்மையற்ற மணிப்பூர் நிகழ்வுகளாகப் பார்க்கிறோம்.
எங்கோ இதுவரை கேள்விப்பட்ட இனக்கலவரத்தை தேசப்பற்று அல்லது இந்து நலன் என்கிற பெயரில் RSS அதன் கிளைகளை நம்மிடையே பரப்பிக்கொண்டிருக்கிறது என்கிற ஆபத்தை உணர்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
எனது மகன் படிக்கும் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் சக மாணவன் RSS வகுப்பிற்கு சென்று வந்ததை பார்த்து அதிர்ந்து கிடக்கிறான் அதன் ஆபத்தை புரிந்த பெரிய மகன். மிகச் சாதாரணமாக அந்த மாணவன் சொல்லிக்கொண்டிருக்கிறானாம்,
" இந்துக்கள் தாண்டா இந்தியாவில் இருக்கனும், கிருஸ்தவர்களையும் , முஸ்லீம்களையும் நாட்டைவிட்டே துரத்தனும், அவங்கதான் நம்மள வாழவிடாம எல்லாத்தையும் அனுபவிக்கிறாங்க "
-என சொல்லும் அந்த மாணவனின் குரல் இந்த தேசத்தின் நல்லிணக்கத்தை நசுக்கப்போகும் குரல், சகமனிதன் மீது வெறுப்பை விதைக்கும் சூழ்ச்சிக்கு நம் பிள்ளைகளை பழிகொடுக்காமல் காக்கவேண்டிய காலக்கட்டமிது. அரசியல் வேண்டாமென ஒதுங்கிப்போனால் அது நம் வாழ்வை சூழ்ந்துகொண்டு நம்மையே காவுவாங்கும் என நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டியது இப்போது அவசியம் என உணர்ந்து குடும்பத்திலும் அரசியல் பேசுவோம் இனி. எனது மகனைப்போலவே பதில் சொல்லட்டும் எல்லா பிள்ளைகளும்,
இங்கிருக்கும் இஸ்லாமியர்களும், கிருஸ்தவர்களும் யாரோ இல்ல, உன் பாட்டனும் சித்தப்பனும் மாமனும் தானென்று உரத்த குரலில்.
-பா.மகாலட்சுமி-




Marx Engels collectted works in English

 தோழர்களே நான் இதற்கு முன் சேகரித்த பகுதி பணம் கொடுத்து பெற சொல்லி விட்டனர் இனி இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளுங்கள் எப்பொழுது இவையும் பணம் கொடுத்து வாங்க சொல்கிறார்களோ தெரியவில்லை தோழர்களே

MECW_01.pdf (30.07 MB)

MECW_02.pdf (30.05 MB)
MECW_03.pdf (20.94 MB)
MECW_04.pdf (31.55 MB)
MECW_05.pdf (18.93 MB)
MECW_06.pdf (29.68 MB)
MECW_07.pdf (24.89 MB)
MECW_08.pdf (22.1 MB)
MECW_09.pdf (23.98 MB)
MECW_10.pdf (28.15 MB)
MECW_11.pdf (31.56 MB)
MECW_12.pdf (31.27 MB)
MECW_13.pdf (29.89 MB)
MECW_14.pdf (30.06 MB)
MECW_15.pdf (30.85 MB)
MECW_16.pdf (29.72 MB)
MECW_17.pdf (19.52 MB)
MECW_18.pdf (16.88 MB)
MECW_19.pdf (21.89 MB)
MECW_20.pdf (28.81 MB)
MECW_21.pdf (30.81 MB)
MECW_22.pdf (30.36 MB)
MECW_23.pdf (29.83 MB)
MECW_24.pdf (19.95 MB)
MECW_25.pdf (31.21 MB)
MECW_26.pdf (31.61 MB)
MECW_27.pdf (19.12 MB)
MECW_28.pdf (31.79 MB)
MECW_29.pdf (25.19 MB)
MECW_30.pdf (28.26 MB)
MECW_31.pdf (26.62 MB)
MECW_32.pdf (25.59 MB)
MECW_33.pdf (23.16 MB)
MECW_34.pdf (23.29 MB)
MECW_35.pdf (26.48 MB)
MECW_36.pdf (20.16 MB)
MECW_37.pdf (29.46 MB)
MECW_38.pdf (29.68 MB)
MECW_39.pdf (28.19 MB)
MECW_40.pdf (31.48 MB)
MECW_41.pdf (30.21 MB)
MECW_42.pdf (31.75 MB)
MECW_43.pdf (31.85 MB)
MECW_44.pdf (28.17 MB)
MECW_45.pdf (23.37 MB)
MECW_46.pdf (23.68 MB)
MECW_47.pdf (28.3 MB)
MECW_48.pdf (24.61 MB)
MECW_49.pdf (26.82 MB)
MECW_50.pdf (3.58 MB)

இலக்கு 29 இணைய இதழ்

இலக்கு 29 இதழ் வரவுள்ளது அதில் பேசப்பட்டுள்ள கட்டுரைகளே.

இலக்கு 29 pdf வடிவில் இந்த லிங்கில்

இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை

நாட்டுப்புற ஏழை மக்களுக்கு பாகம் – 4. லெனின்.3 ஆம் பாகத்தின் தொடர்ச்சி.

முரண்பாடு பற்றி - மாவோ.பகுதி – 2

மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல்வாதம் பயிலுவோம். பகுதி – 6.

ஜாதியையும் ஜாதி தீண்டாமையும் இந்த சமூக கட்டிக் காக்கிறது எதற்கு ஏன்?.

மார்ச் 27, 2023, அன்று "மணிப்பூர் பழங்குடி சங்கம்" என்ற பாஜக பின்புலத்தில் செயல்படும் சங்கம் தொடுத்த வழக்கின் மீது மணிப்பூர் உயர் நீதிமன்றம் சமவெளியில் வாழும் மெய்தி சமூக மக்களின்  பழங்குடி அந்தஸ்து கோரிக்கையை பரிசீலிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து குக்கி மற்றும் நாகா பழங்குடிகளின் போராட்டம் வெடித்தது. மெய்தி மக்களிடையே பழங்குடி அந்தஸ்து கோரிக்கையை பாஜக தூண்டிவிட்டதன் நோக்கம் எதுவெனில், அவர்களுக்கு பழங்குடி அந்தஸ்து தருவதன் மூலம் அவர்களின் பெயரால் குக்கி பழங்குடிகள் வாழும் மலைப் பகுதிகளில் உள்ள நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்க்கவே ஆகும். திட்டமிட்டு சங்பரிவார கும்பல் போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதுவே தற்போது நடந்து வரும் கலவரங்களின் துவக்கப்புள்ளியாகும்.

பழங்குடிகள் பெரும்பாலும் கிறிஸ்தவர்களாகவும், மெய்திகள் இந்துக்களாகவும் இருப்பதால் மத ரீதியான உணர்வுகளை தூண்டி வருகிறது பாஜக அரசு. இதுவரை 200க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பழங்குடியின பெண்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். 60,000க்கும் மேற்பட்ட மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட கோவில்களும், 300க்கும் மேற்பட்ட தேவாலயங்களும், குக்கி மக்களின் 3000 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் செய்ததை போல பழங்குடிகளின் வீடுகள் அடையாள குறியீடிடப்பட்டு தாக்கப்பட்டுள்ளன. ஆங்கிலோ-குக்கி போரின் நினைவுச் சின்னம் தகர்க்கப்பட்டுள்ளது.வடகிழக்கு மாகாணங்களின் சந்தையை தெற்காசிய நாடுகளின் சந்தையுடன் இணைப்பதற்காகவும், அப்பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதன் பெயரில், அமெரிக்க-ஜப்பான் மேலாதிக்கம் மற்றும் இந்திய துணை மேலாதிக்கத்தை நிறுவவும் கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடாக - புதிய காலனிய மண்டலங்களாக அம்மாகாணங்களை மாற்றுவதற்காகவும், அதை எதிர்த்த பழங்குடிகளின் போராட்டங்களை நசுக்குவதற்காகவும் ஒருபுறம்  இராணுவமயமாக்கி மற்றொருபுறம் அங்கு இன, மத மோதல்களை உருவாக்குவதற்காக மெய்தி லீபன் (Meitei Leepan), அரம்பை தெங்கோல் (Arambai Tengol) உள்ளிட்ட சங்பரிவார குண்டர் படைகளை உருவாக்கியுள்ளது. ஆளும் ப..க கும்பல்




 

நாட்டுப்புற ஏழை மக்களுக்கு பாகம் – 4. லெனின்.

 நாட்டுப்புற ஏழை மக்களுக்கு பாகம் – 4. லெனின்.3 ஆம் பாகத்தின் தொடர்ச்சி.செல்வமும் வறுமையும்,

நாட்டுப்புறத்திலுள்ள சொத்துஉடையவர் களும்தொழிலாளிகளும்.சமூகஜனநாயகவாதிகள் எதை விரும்புகிறார்கள் என்பது இப்போது நமக்குத் தெரியும்.

மக்களை வறுமையிலிருந்து விடுவிக்கப் பணக்கார வர்க்கம் முழுவதையும் எதிர்த்துப் போராட அவர்கள் விரும்புகிறார் கள்.நம் நாட்டுப்புறங்களிலோ,நகரங்களில் இருப்பதற்கு சற்றும் குறையாத,ஒருவேளை அதைவிட அதிகமான வறுமை குடிகொண்டிருக்கிறது.நாட்டுப்புறங்களில் வறுமை எவ்வளவு மிகுந்ததாக இருக்கிறது என்பதைப் பற்றி இங்கு நாம் கூறப்போவதில்லை.நாட்டுப்புறத்துக்கு விஜயம் செய்துள்ள ஒவ்வொரு தொழிலாளியையும்மற்றும் ஒவ்வொரு விவசாயியும் நாட்டுப்புறத்தில் இருக்கும் இல்லாமை,பட்டினி,இழிவு பற்றிமிக நன்றாகத் தெரிந்துகொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் தனது இன்னல்,பட்டினி மற்றும் இழிவுக்குரிய காரணமும் இந்த இல்லாமையிலிருந்துஎப்படி விடுபடுவது என்பதும் விவசாயிக்கு தெரியாது.இதை அறிந்துகொள்ளவேண்டுமானால்,நகரிலும் நாட்டுப்புறத்திலும் உள்ள எல்லாவகை இல்லாமைக்கும் வறுமைக்குமான காரணங்கள்யாவை என்று முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.இதைப் பற்றிச் சுருக்கமாக முன்னரே விவாதித்துள்ளோம்.ஏழையான விவசாயிகளும் நாட்டுப்புறத் தொழிலாளிகளும் நகரத் தொழிலாளி களோடு ஒன்றுசேர வேண்டும் என்பதையும் பார்த்தோம்.

ஆனால் அது மட்டும் போதாது.நாட்டுப்புறங்களில் பணக்காரர்களையும் சொத்துஉடையவர்களையும் எவ்வகையான மக்கள் பின்பற்றுவார்கள் என்பதையும் தொழிலாளிகளை,சமூகஜனநாயகவாதி களை எவ்வகையான மக்கள் பின்பற்றுவார்கள் என்பதையும் கண்டறிய வேண்டும்.நிலப்பிரபுக்களைப் போலவே முதல் சேர்க்கவும்பிறருடைய உழைப்பில் வாழவும் முடிகிற விவசாயிகள் பலர் உண்டா என்பதை கண்டறிய வேண்டும்.இவ்விஷயத்தில் நன்கு அடிவரை அலசிப் பார்க்காமல்,வறுமையைப் பற்றிஎவ்வளவு பேசியும் பயனில்லை;நாட்டுப்புறத்தில் யார் தங்களுக்குள் ஒன்றுசேர்ந்து நின்றுநகரத் தொழிலாளிகளோடு ஐக்கியப்பட வேண்டும் என்பதையும் இதை நம்பகமான ஐக்கியம் ஆக்குவதற்கும் நிலப்பிரபுக்களால் மட்டுமின்றி தமது சொந்த வகைப்பட்ட பணக்காரவிவசாயிகளாலும் விவசாயிகள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதையும் நாட்டுப்புற ஏழை மக்கள் தெரிந்துகொள்ள மாட்டார்கள்.

இதை அலசிப்பார்க்க,நாட்டுப்புறங்களில் நிலப்பிரபுக்கள் எவ்வளவு பலம் படைத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் பணக்கார விவசாயிகள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக உள்ளார்கள் என்பதையும் இப்போது காண்போம்.நிலப்பிரபுக்களைப் பற்றி முதலில் கவனிப்போம். முதலாவதாக, அவர்கள் தனிச்சொத்தாக வைத்திருக்கும் நில அளவினைக் கொண்டு, அவர்களது பலத்தை மதிப்பிடலாம். ஐரோப்பிய ரஷ்யாவில் மொத்த நில அளவு, அதாவது விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்ட துண்டு நிலங்களும் தனியாருக்குச் சொந்தமான நிலமும் உட்பட 24 கோடி தெசியத்தினாக்கள் (ஒரு தெசியத்தினா என்பது 2.7 ஏக்கர்) எனக் கணக்கிடப்பட்டது. (அரசாங்கத்துக்கு சொந்தமான நிலங்கள் இதில்சேர்க்கப்படவில்லை, அவற்றைத் தனியே பின்பு கவனிப்போம்.) மொத்தம் 24 கோடி தெசியத்தினாக்களில் 13.1 கோடி தெசியத்தினாக்கள் விவசாயிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள் வசமிருப்பவை. இவ்விவசாயிகளின் குடும்பங்கள் ஒரு கோடிக்கும் மேல் இருக்கும்.

மாறாக, தனிவுடமையாளர்களின் வசம் 10.9 கோடி தெசியத்தினாக்கள் நிலம் உள்ளது; அவர்களின் குடும்பங்களின் எண்ணிக்கை 5 லட்சத்திற்கும் குறைவுதான். எனவே, சராசரியாக எடுத்துக் கொண்டாலும், ஒவ்வொரு விவசாயிக் குடும்பத்துக்கும் 13 தெசியத்தினாக்கள் நிலம் சொந்தமாக இருக்கிறது; அதே சமயத்தில், ஒவ்வொரு தனிவுடமையாளன் குடும்பத்துக்கும் 218 தெசியத்தினாக்கள் நிலம் சொந்தமாக இருக்கிறது! ஆனால் நிலப் பங்கீடு மேலும் அதிக அசமத்துவம் கொண்டதாக இருக்கிறது என்பதை நாம் இப்போது கவனிக்கப் போகிறோம்.

தனிவுடமையாளர்களுக்குச் சொந்தமான 10.9 கோடி தெசியத்தினாக்களில் எழுபது லட்சம் தெசியத்தினாக்கள் ராஜபூமி, அதாவது அரசக் குடும்பத்தினரின் தனிவுடமையாகும். ஜார் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து நிலப்பிரபுக்களில் முதல்வர் ஆவார். ரஷ்யாவிலேயே மிகப் பெரிய நிலப்பிரபு ஆவார். ஐந்து லட்சம் விவசாயக் குடும்பங்களுக்குச் சொந்தமாக உள்ள நிலத்தை விட அதிகமான நிலம் இந்த ஒரே ஒரு குடும்பத்துக்கு உடமையாக இருக்கிறது! தவிரவும் ஏறக்குறைய அறுபது லட்சம் தெசியத்தினாக்கள் நிலம் மாதா கோவில்களுக்கும் மடங்களுக்கும் சொந்தமாக உள்ளது. சிக்கனம் வேண்டுமென்றும் இச்சைகளை அடக்கியாள வேண்டுமென்றும் நமது பாதிரிகள்விவசாயிகளுக்குப் போதிக்கின்ற னர்; ஆனால் அவர்களோ,நேர் வழிகளிலோ தீய வழிகளிலோ ஏராளமான நிலத்தைக் குவித்துக் கொண்டுள்ளனர்.

மேலும்,நகரங்களுக்கும் பட்டணங்களுக்கும் சொந்தமாக சுமார் 20 லட்சம் தெசியத்தினாக்கள்நிலம் உள்ளது. அதே அளவான நிலம் பல்வேறு வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கும் கம்பெனிகளுக்கும் சொந்தமாக உள்ளது. 90 கோடியே 20 லட்சம் தெசியத்தினாக்கள் நிலம்(கறாராகச் சொல்ல வேண்டுமானால் 91605845; ஆனால் விஷயங்களை எளிதாகச் சுமார்தொகையைத் தருகிறோம்) ஐந்து லட்சத்துக்கும் குறைவான (481358) தனிவுடமையாளர் குடும்பங்களுக்குச் சொந்தமாக உள்ளது. இதில் பாதிக் குடும்பங்கள் மிகவும் சிறிய தனிவுடமையாளர்கள்; இவர்களில் ஒவ்வொருவருக்கும்10 தெசியத்தினாக்களுக் கும் குறைவாகவே நிலம் சொந்தமாக உள்ளது. இவர்கள் எல்லோருக்கும் சேர்த்துப் 10 லட்சம்தெசியத்தினாக்களுக்கும் குறைவான நிலம்தான் சொந்தமாக உள்ளது. ஆனால் அதேசமயத்தில் பதினாறு ஆயிரம் குடும்பங்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் தெசியத்தினாக்களுக்கும் அதிகமான நிலத்தை தமக்குச் சொந்தமாகக் கொண்டுள்ளன. அவற்றுக்குச் சொந்தமானமொத்த நிலங்களின் அளவு ஆறரைக் கோடி தெசியத்தினாக்கள், ஆயிரத்துக்கும் குறைவானபெரிய நிலவுடமையாளர்களின் குடும்பங்கள் (924) ஒவ்வொன்றுக்கும் பத்தாயிரம் தெசியத்தினாக்களுக்கும் மேலான நிலம் சொந்தமாக உள்ளது; இக்குடும்பங்களிடம் உள்ள நிலம் மட்டும் இரண்டு கோடியே எழுபது லட்சம் தெசியத்தினாக்கள் ஆகும்.! 20 லட்சம் விவசாயிக் குடும்பங்களுக்கு எவ்வளவு நிலம் சொந்தமோ, அதே அளவு நிலம் இந்த ஆயிரம் குடும்பங்களுக்குச் சொந்தமாக உள்ளது, இதிலிருந்து பெரிய நிலவுடமையாளர்களிடம் எப்படி மிகப் பெருமளவு நிலம் குவிந்து கிடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

சில ஆயிரம் பணக்காரக் குடும்பங்களுக்கு இவ்வளவு ஏராளமான நிலம் சொந்தமாக இருக்கும் வரை, கோடானுகோடி மக்கள் கட்டாயமாக வறுமையிலும் பட்டினியிலும் உழன்று வருவார்கள். எப்போதும் வறுமையிலும் பட்டினியிலும் உழன்று கொண்டே இருப்பார்கள் என்பது தெளிவு. அரசு அதிகாரிகளும் அரசாங்கம் தானேயும் (அது ஜார் அரசாங்கமாகஇருந்தாலும் கூட) எப்பொழுதும் இந்தப் பெரிய நிலவுடமையாளர்கள் சொல்லியவாறு ஆடும் என்பதும் தெளிவாகிறது. இந்த நிலப்பிரபு வர்க்கத்தை எதிர்த்துக் கடுமையான, விடாப்பிடியான போராட்டத்தை நடத்துவதற்காக நாட்டுப்புற ஏழை மக்கள் ஒன்றுசேர்ந்து ஒரே வர்க்கமாக இணையாதவரை யாரிடத் திலிருந்தும் எந்தப் பகுதியிலிருந்தும் அவர்கள்உதவியை எதிர்பார்க்க முடியாது என்பது தெளிவாகிறது.

இந்த நாட்டில் பல ஆட்கள் (படித்தவர்களில் பலர் கூட) நிலப்பிரபு வர்க்கத்தின் பலத்தைப் பற்றி முற்றிலும் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நாம் கூறியாக வேண்டும். “அரசாங்கத்திற்குமிக அதிக நிலம் சொந்தமாக இருக்கிறது எனஅவர்கள் சொல்கிறார்கள். “ரஷ்ய நிலப்பரப்பின் (அதாவது மொத்த நிலத்தின்) பெரும் பகுதிஅரசாங்கத்திற்கு ஏற்கனவே சொந்தமாக இருக்கிறதுஎன்று விவசாயிகளின் இந்தத் தவறானஆலோசகர்கள் சொல்கிறார்கள் (ரெவல்யுத்சியோனயா ரொசியா பத்திரிக்கையின் இதழ் 8,பக்கம் 8 இலிருந்து இந்த வார்த்தைகள் எடுக்கப்பட்டன) இம்மனிதர்கள் செய்யும் தவறுக்குஅடிப்படை பின்வருமாறு: ஐரோப்பிய ரஷ்யாவில் 150000000 தெசியத்தினாக்கள் நிலம் அரசாங்கத்திற்குச் சொந்தமாக உள்ளது என இவர்கள் கேள்விப்பட்டிருக்கின்றனர். அது உண்மையே. ஆனால் இந்த 150000000 தெசியத்தினாக்கள் அநேகமாக முழுவதுமேஅர்ஹாங்கெல்ஸ்க், வோலக்டா, ஒலொனேட்ஸ், வியாட்கா,பெர்ம் ஆகிய குபேர்னியாக்களில்,அதாவது வட கோடியில் உள்ள பண்படுத்தக் கூடாத தரிசு நிலங்களும் காடுகளும் தான்என்பதை இவர்கள் மறந்துவிடுகின்றனர்.ஆகவே,இன்றுவரை பயிரிடுவதற்கு முற்றிலும் லாயக்கற்ற நிலத்தை மட்டுமே அரசாங்கம் சொந்தமாக வைத்துள்ளது. பயிர் செய்வதற்கு லாயக்கான அரசாங்க நிலம், நாற்பது லட்சம் தெசியத்தினாக்களுக்கும் குறைவானதே யாகும்.

பயிர் செய்வதற்குரிய இந்த அரசாங்க நிலங்கள் கூட (எடுத்துக்காட்டாக இந்த நிலங்கள் குறிப்பாக அதிக அளவில் இருக்கும் சமாரா குபேர்னியாவை எடுத்துக்கொள்வோம்) பணக்காரர்களுக்கு மிகவும் குறைந்த, அற்பத் தொகைக்குக் குத்தகைக்கு விடப்படுகின்றன. இந்த நிலத்தில் ஆயிரக்கணக்கான,பத்தாயிரக்கணக்கான தெசியத்தினாக்கள் நிலங்களைப் பணக்காரர்கள் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு,பிறகு விவசாயிகளுக்கு அவற்றை அளவுகடந்த வாரத்திற்கு உள்குத்தகைக்கு விடுகின்றனர்.

அரசாங்கத்திற்கு பெரிய அளவான நிலம் சொந்தமாக உள்ளது எனச் சொல்லுகின்றவர்கள்விவசாயிக்கு மிகவும் தவறான ஆலோசனை சொல்வோராவார்.உண்மை என்னவென்றால்,நல்ல நிலத்தை ஏராளமாகப் பெரிய தனி நிலவுடமையாளர்கள் (ஜாரும் உட்பட)சொந்தமாகவைத்திருக்கின்றனர்,இப்பெரும் நிலப்பிரபுக்களின் கைகளில்தான் அரசாங்கமே இருக்கிறது.

நாட்டுப்புற ஏழை மக்கள் ஐக்கியமாகி,அதன் மூலம் ஒரு பலமுள்ள சக்தியாக மாறும் வரையில்நிலப்பிரபு வர்க்கத்தின் மிகவும் கீழ்படிதலுள்ள கையாளாகத்தான் அரசாங்கம்இருக்கும்.

வேறு ஒன்றைப் பற்றியும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்: முன்னர் ஏறக்குறைய எல்லாநிலப்பிரபுக்களும்பிரபுவம்சத்தினராக இருந்தனர். அந்த உயர்குடி மக்களுக்கும் இன்றும்பெரும் பகுதி நிலம் சொந்தமாக இருக்கிறது. (1877, 1878 இல் 115000 உயர்குடி மக்களுக்கு7.3 கோடி தெசியத்தினாக்கள் சொந்தமாக இருந்தன). ஆனால் இன்று பணம், மூலதனம் பிரதானச் சக்தியாக மாறிவிட்டது. வியாபாரிகளும் பணக்கார விவசாயிகளும் மிக மிக நிறைய நிலங்களை விலைக்கு வாங்கியுள்ளனர். முப்பதாண்டு காலத்தில் (1863 முதல் 1892 வரை) பிரபுவம்சத்தினர் 60 கோடி ரூபிள்களுக்கும் (ரஷ்ய நாணயம்) மேல் மதிப்புடைய நிலத்தை இழந்து விட்டனர். (அதாவது, வாங்கியதை விட அதிகமாக விற்றனர்) எனக்கணக்கிடப்படுகிறது. வியாபாரிகளும் கௌரவமான குடிமக்களும் 25 கோடி ரூபிள்மதிப்புடைய நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளனர். விவசாயிகள், கஸாக்குகள்,”நாட்டுப்புறத்தில் வாழும் மற்ற அற்பவாதிகள்” (நம் அரசாங்கம் பொது மக்களைக் குறிப்பிடும் போது இச்சொல்லை உபயோகிக்கிறது; இதற்குக் காரணம் நகரத்தில் மண்படாத”,”பெரியமனிதர்களிடம்இருந்து அவர்களை வேறுபடுத்திக் காட்டுவது ஆகும்) 30 கோடி ரூபிள்மதிப்புடையநிலத்தை வாங்கியுள்ளனர். ஆகவே, சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும், ரஷ்யா முழுவதிலும் உள்ள விவசாயிகள் கோடி ரூபிளின் மதிப்புடைய நிலத்தைத் தங்கள் தனிவுடமையாக வாங்குகிறார்கள்.

ஆகவே, பலவகையான விவசாயிகள் உள்ளனர்: சிலர் துன்பத்திலும் பட்டினியிலும் வாழ்கின்றனர். வேறு சிலர் பணக்காரர்களாக மாறுகின்றனர். எனவே, நிலப்பிரபுக்கள் பக்கம் சார்ந்து நின்று, தொழிலாளிகளுக்கு எதிராகப் பணக்காரர்கள் பக்கம் சேரும் பணக்கார விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நகரத் தொழிலாளர்களுடன் ஐக்கிப்பட விரும்பும் நாட்டுப்புற ஏழை மக்கள் இதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்; இத்தகைய பணக்கார விவசாயிகள் அநேகர் இருக்கின்றனரா, அவர்களின் பலம் எவ்வளவு, இந்தச் சக்தியை எதிர்த்துப் போராட எத்தகைய சங்கம் தேவை என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

விவசாயிகளுக்குத் தவறாக ஆலோசனை கூறுவோரை இப்போதுதான் குறிப்பிட்டோம். இந்தமோசமான ஆலோசகர்கள் விவசாயிகளுக்கு ஏற்கனவே ஒரு ஐக்கியம் இருப்பதாகச் சொல்லவிரும்புகிறார்கள். அவர்கள் சொல்லும் அந்த ஐக்கியம் மீர் என்னும் விவசாயிகளின் கிராமச்சமூகம் ஆகும். மீர் ஒரு மாபெரும் சக்தி என்று அவர்கள் கூறுகிறார்கள்; விவசாயிகளை மீர் மிகநெருக்கமாக இணைக்கிறது என்றும் மீரில் திரண்டுள்ள விவசாயிகளின் ஸ்தாபனம் (அதாவதுஇணைப்பு, ஐக்கியம்) மிகவும் மகத்தானது (அதாவது பெரியது, எல்லையற்றது) என்றும்கூறுகிறார்கள்.

இது தவறு, இது கட்டுக்கதையாகும். நல்லெண்ணம் படைத்தவர்களால் கற்பனை

செய்யப்பட்டதாக இருந்தாலும் இது ஒரு கட்டுக்கதையே. கட்டுக்கதைகளைத் கேட்கத்தொடங்கினால் நம்முடைய நோக்கம், நகரத் தொழிலாளிகளோடு நாட்டுப்புற ஏழைகளைஒன்றுசேர்க்கும் நோக்கம் தகர்வுறும். நாட்டுப்புறத்தில் வாழும் ஒவ்வொருவரும் தன்னைச்சுற்றிக் கவனமாகப் பார்க்க வேண்டும். மீர் இணைப்பு, விவசாயிகளின் சமூக ஸ்தாபனம்பணக்காரர்கள் அனைவரையும் பிறரின் உழைப்பில் வாழ்பவர் அனைவரையும் எதிர்த்துப்போராடும் ஏழைகளின் ஐக்கியம் போல உள்ளதா? இல்லை, இல்லவே இல்லை, இருக்கவும் முடியாது. ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு கிராமச் சமூகத்திலும் பல விவசாயக்கூலிகளும் பல வறுமைப்பட்ட விவசாயிகளும் இருப்பதோடு விவசாயக் கூலிகளைத் தாமே வேலைக்கு வைத்துக் கொள்பவர்களும் நிலங்களை நிரந்தரமாகவிலைக்கு வாங்குபவர்களும்ஆன பணக்கார விவசாயிகளும் இருக்கிறார்கள். இந்தப் பணக்கார விவசாயிகளும் இச்சமூகத்தின் உறுப்பினர்களாவர்; அவர்கள் ஒரு சக்தியாக இருப்பதால், கிராமச் சமூகத்தில் ஆதிக்கம் வகிக்கின்றனர். பணக்காரர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு ஐக்கியம் நமக்குத் தேவையா? வேண்டவே வேண்டாம். பணக்காரர்களை எதிர்த்துப் போராட நமக்கு ஒருஐக்கியம் தேவை. எனவே, மீர் ஐக்கியம் நமக்கு எந்தவிதப் பலனும் அளிக்காது.

நமக்குத் தேவை ஒரு சுயவிருப்ப ஐக்கியமே; அது நகரத் தொழிலாளிகளோடு ஒன்றுசேர்ந்து தீரவேண்டும் என்பதை உணர்ந்த மக்களை மட்டுமே கொண்ட ஐக்கியமாகும். அந்த கிராமச்சமூகம் சுயவிருப்ப ஐக்கியம் அல்ல, அரசாங்கத்தினால் கட்டாயப்படுத்தப்பட்டது. கிராமச் சமூகத்தில், பணக்காரர்களுக்கு உழைப்பவர்களும் பணக்காரர்களை எதிர்த்துப்போராடுவதற்கு ஒன்றுசேர விரும்புபவர்களும் மட்டும் இருக்கவில்லை. கிராமச் சமூகம் எல்லாவிதமான மக்களையும் கொண்டது; அவர்கள் அதில் இருக்க விரும்பியதால் அல்ல;அவர்களின் பெற்றோர்கள் அதே நிலத்தில் வாழ்ந்தார்கள், அதே நிலப்பிரபுக்கு உழைத்தார்கள் என்பதால், அதிகாரிகள் அவர்களையும் இச்சமூகத்தின் அங்கத்தினர் களாகப் பதிவு செய்தனர் என்ற காரணத்தால்தான், ஏழை விவசாயிகளுக்கு கிராமச் சமூகத்தை விட்டு விலகும் சுதந்திரம் கிடையாது. ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் நமது ஐக்கியத்திற்குத் தேவைப்படும் ஒரு வெளிமனிதர் போலீசாரால் வேறு ஒரு வோல்ஸ்தில் பதிவு செய்யப்பட்டிருந்ததால், அவரைத் தங்கள் கிரமச் சமூகத்தின் அங்கத்தினராக ஏற்றுக்கொள்ளும் சுதந்திரம் அவர்களுக்கு இல்லை. அது வேண்டாம்; முற்றிலும் வேறுவகையான ஒரு ஐக்கியம் நமக்குத் தேவை. மற்றவர்களுடைய உழைப்பில் வாழுபவர் அனைவரையும் எதிர்த்துப் போராட உழைப்பாளிகளும் ஏழை விவசாயிகள் மட்டுமே விருப்பப்பூர்வமாக சேரும் ஐக்கியம்தான் நமக்குத் தேவை.

மீர் ஒரு சக்தியாக இருந்த அக்காலம் மலையேறிவிட்டது. இனி எப்போதும் அக்காலம் திரும்பாது. விவசாயிகளில் எவரும் விவசாயத் தொழிலாளர்களாகவோ, வேலை தேடி ரஷ்யாவின் நாலா பக்கங்களிலும் அலைந்து திரியும் தொழிலாளர்களாகவோ அநேகமாக இல்லாத, பணக்கார விவசாயிகளே அநேகமாக இல்லாத, அனைவரும் நிலப்பிரபுக்களால்நசுக்கப்பட்டுக் கிடந்த காலத்தில் மீர் ஒரு சக்தியாக இருந்தது. ஆனால் இப்பொழுது பணம்பிரதான சக்தியாக மாறியுள்ளது. இப்பொழுது ஒரே கிராமச் சமூகத்தைச் சேர்ந்தஉறுப்பினர்கள், பணத்திற்காகக் காட்டு விலங்குகளைப் போல ஒருவரோடு ஒருவர் போரிட்டுக் கொள்கிறார்கள். சில சமயங்களில் பணக்கார விவசாயிகள் அதே சமூகத்தைச் சேர்ந்தவிவசாயிகளை நிலப்பிரபுககளைக் காட்டிலும் மிகவும் அதிகமாக ஒடுக்கிக் கொள்ளையடிக்கின்றனர். இன்று நமக்குத் தேவை,மீர் ஐக்கியம் அல்ல,ஆனால் பணத்தின் அதிகாரத்தை எதிர்க்கவும் மூலதனத்தின் ஆட்சியை எதிர்க்கவும் வேண்டிய ஒரு ஐக்கியமாகும்;பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அனைத்து நாட்டுப்புறத் தொழிலாளர்களையும் ஏழ்மையான விவசாயிகளையும் கொண்ட ஐக்கியமாகும்;நிலப்பிரபுக்கள் மற்றும் பணக்கார விவசாயிகள் இரு பகுதியினரையும் எதிர்த்துப் போராட நகரத் தொழிலாளிகளும் நாட்டுப்புற ஏழைகளும்இணைந்த ஐக்கியமாகும்.

நிலப்பிரபுக்கள் எவ்வளவு வலுவாக இருக்கிறார்கள் என்பதைக் கண்டோம். பணக்கார விவசாயிகளை அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்களா என்பதையும் எவ்வளவு பலமாக இருக்கிறார்கள் என்பதையும் இனிக் காண வேண்டும். நிலப்பிரபுக்களின் வலிமையை அவர்களது எஸ்டேட்டுகளின் அளவைக் கொண்டு, அவர்களுக்குச் சொந்தமாக இருக்கும் நிலப்பரப்பைக் கொண்டு நாம் மதிப்பிட்டோம்நிலப்பிரபுக்கள் தங்கள் நிலங்களைச்சுதந்திரமாகக் கையாள்கிறார் கள்; நிலங்களை வாங்கவும்விற்கவும் அவர்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது. ஆகவேதான் அவர்களுக்குச் சொந்தமான நிலஅளவினைக் கொண்டு, அவர்களது சக்தியை மிகக் கறாராகத் தீர்மானிக்க முடிகிறது. ஆனால்தங்கள் நிலங்களைச் சுதந்திரமாகக் கையாளும் உரிமை இன்னமும் விவசாயிகளுக்கு இல்லை.

அவர்கள் இன்றும் அரைப் பண்ணையடிமை களாக,கிராமச் சமூகத்தோடு கட்டுண்டுகிடக்கின்றனர்.ஆகவே பணக்கார விவசாயிகளின் சக்தியை,அவர்களது உடமையாக ஒதுக்கப்பட்டுள்ள நில அளவைக் கொண்டு தீர்மானிக்க முடியாது.தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துண்டு நிலங்களைக் கொண்டு பணக்கார விவசாயிகள் பணக்காரர்கள்ஆவதில்லை:அவர்கள் பெருமளவு நிலங்களை விலைக்குவாங்குகிறார்கள்,”நிரந்தரமாகவும்(அதாவதுதனிச்சொத்தாகவும்)“ஆண்டுகளுக் கும்” (அதாவது குத்தகைக்கும்) வாங்குகிறார்கள்; நிலப்பிரபுகளிடமிருந்தும் வாங்குகிறார்கள், தங்களது சக விவசாயிகளிடமிருந்தும் தங்கள்நிலத்தை விட்டு வெளியேறுபவர்களிடமிருந்தும் தேவை காரணமாகத் தங்கள் துண்டு நிலத்தைக் குத்தகைக்கு விடுபவர்களிட மிருந்தும் வாங்குகிறார்கள். ஆகவே பணக்கார,நடுத்தர,ஏழை விவசாயிகளை அவர்களுக்கு உடமையாக உள்ள குதிரைகளின்எண்ணிக்கையைக் கொண்டு பாகுபாடு செய்வது மிகவும் சரியாகும்.பல குதிரைகளைஉடமையாகக் கொண்ட ஒரு விவசாயி அனேகமாக எப்போதுமே பணக்கார விவசாயியாகஇருப்பான்;அவனிடம் நிறைய உழவுக் கால்நடைகள் இருந்தால்,அவன் நிறைய நிலங்களைப் பயிர் செய்கிறான் என்றும் ஒதுக்கப்பட்ட துண்டு நிலத்தைத் தவிர வேறு நிலத்தையும் சொந்தமாக வைத்திருந்தான் என்றும் அவன் கையில் பணம் சேர்ந்துள்ளது என்றும் அர்த்தம் மேலும், ரஷ்யா முழுவதிலும் (ஐரோப்பிய ரஷ்யா மற்றும், சைபீரியாவையும் காக்கஸசையும்சேர்க்காமல்)பல குதிரைகளைச் சொந்தமாக வைத்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட நம்மால் முடியும்.எப்படியும் ரஷ்யா முழுவதையும் பற்றிப் பேசும் பொழுது சராசரியில்தான் பேசப் போகிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது:வெவ்வேறு உயெஸ்டுகளும் குபேனியாக்களும் பல்வேறுவிதமாக வேறுபடுகின்றன.எடுத்துக்காட்டாக,நகரங்களுக்கு அருகில்,சில குதிரைகளை மட்டுமே வைத்துள்ள பணக்கார விவசாயிகளை அடிக்கடி பார்க்கிறோம்.அவர்களில் சிலர் மிகவும் லாபந்தருவதான தோட்டத் தொழிலில் ஈடுபடுகின்றனர்;மற்றவர்கள் சில குதிரைகளையும்,ஆனால் பல பசுக்களையும் வைத்துக்கொண்டு பால் விற்கின்றனர்.ரஷ்யாவின் எல்லாப் பகுதிகளிலும்,நிலத்தின் மூலமாகப் பணம் சம்பாதிக்காமல் வணிகத் தொழிலில் விவசாயிகள் ஈடுபடுவதைக் காண்கிறோம்.அவர்கள் பாலோடு நிறுவனங்கள்,அரைவை ஆலைகள் மற்றும் இதர தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.நாட்டுப் புறத்தில் வாழும் ஒவ்வொருவனுக்கும்,அவனுடைய சொந்த கிராமத்திலோ,மாவட்டத்திலோ உள்ள பணக்கார விவசாயிகளை நன்றாகத் தெரியும்.

ஆனால் ரஷ்யா முழுவதிலும் எத்தனை பணக்கார விவசாயிகள் இருக்கிறார்கள் என்பதையும் எவ்வளவு சக்தியோடு இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.அப்போதுதான் யூகத்தாலும், குருட்டாம் போக்கிலும் அல்லாமல், சரியாக யார் தனதுநண்பர்கள், யார் தனது எதிரிகள் என்பதை விவசாயி தெரிந்துகொள்ள முடியும்.

நல்லது,குதிரைகளைச் சொந்தமாக வைத்திருக்கும் விஷயத்தில் பணக்காரர்களாகவும்ஏழைகளாகவும் உள்ள விவசாயிகளின் எண்ணிக்கை என்ன என்பதை இப்போது பார்ப்போம்.

ரஷ்யாவில் உள்ள விவசாயக் குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை சுமார் ஒரு கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது என்பதை முன்னமே சொல்லியுள்ளோம். அவர்களுக்கு இப்பொழுது சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சம் குதிரைகள் சொந்தமாக உள்ளன. (ஏறக்குறைய 14ஆண்டுகளுக்கு முன்னர் இந்த எண்ணிக்கை ஒரு கோடியே எழுபது லட்சமாக இருந்தது,ஆனால் இப்போது குறைந்துள்ளது)எனவே சராசரியாக ஒவ்வொரு பத்து குடும்பங்களுக்குப் பதினைந்து குதிரைகள் உடமையாக உள்ளன. ஆனால் உண்மை என்னவென்றால், அவர்களில் சிலர்,மிகச் சிலர்,பல குதிரைகளை வைத்திருக்கின்றனர்;அதே சமயத்தில் மற்றவர்கள்,மிகப் பலர்,குதிரைகளே வைத்திருக்கவில்லை,அல்லது மிகவும் குறைந்த எண்ணிக்கையில் வைத்துள்ளனர். குறைந்தபட்சம் முப்பது லட்சம் விவசாயிகளிடம் குதிரைகள் இல்லை; சுமார் முப்பத்தைந்து லட்சம் விவசாயிகள் ஒவ்வொருவரும் ஒரு குதிரையைத்தான் வைத்திருக்கின்றனர். இவர்களையெல்லாம் முழுதும் நொடித்துப் போனவர்கள் அல்லது மிக ஏழ்மையான விவசாயிகள்.இவர்களைத்தான் நாட்டுப்புற ஏழை மக்கள் என நாம் அழைக்கிறோம்.விவசாயிகளின் மொத்த எண்ணிக்கையான ஒரு கோடியில் இவர்களின் தொகை அறுபத்தைந்து லட்சமாகும். அதாவது ஏறத்தாழ மூன்றில் இரண்டு பாகமாகும்.!

இவர்களை அடுத்து இருப்பவர்கள் நடுத்தர விவசாயிகள்; இவர்களில் ஒவ்வொருவரும் ஒரு ஜோடிக் குதிரைகளை வைத்திருக்கிறார்கள். இந்த விவசாயக் குடும்பங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய அறுபது லட்சமாகும். அவர்களிடம் ஏறத்தாழ நாற்பது லட்சம் குதிரைகள் இருக்கின்றன. அடுத்துப் பணக்கார விவசாயிகள்;அவர்களில் ஒவ்வொருவரும் ஒரு ஜோடி குதிரைகளுக்கு மேல் வைத்திருக்கிறார்கள்.இவர்கள் குடும்பங்களின் எண்ணிக்கை பதினைந்து லட்சம் ஆகும்,ஆனால் அவர்களுக்குச் சொந்தமாக எழுபத்தைந்து லட்சம் குதிரைகள் இருக்கின்றன.ஆகவே,மொத்தக் குடும்பங்களில் ஆறில் ஒரு பகுதியினர் மொத்த குதிரைகளின் எண்ணிக்கையில் சரிபாதியைச் சொந்தமாகக் கொண்டுள்ளனர்.

இதை நாம் அறிவதால்,பணக்கார விவசாயிகளின் சக்தியை ஏறத்தாழச் சரியாக நாம் தீர்மானிக்க முடியும்.எண்ணிக்கையில் அவர்கள் மிகக் குறைவாக உள்ளனர்;பல்வேறான கிராமச் சமூகங்களிலும் பல்வேறு வோலஸ்த்களிலும் ஒவ்வொரு நூறு குடும்பங்களில்அவர்களின் எண்ணிக்கை பத்து முதல் இருபது வரை இருக்கும்.ஆனால் இந்தச் சில குடும்பங்கள்தாம் மிக அதிகப் பணம் வைத்துள்ளன. ரஷ்யா முழுவதையும் எடுத்துக்கொண்டால்,மற்ற எல்லா விவசாயிகளிடத்தும் எவ்வளவு குதிரைகள் உள்ளனவோ, அவ்வளவு குதிரைகள் அவர்களுக்கு மட்டும் உடமையாக இருக்கின்றன. அப்படியென்றால்,விவசாயிகள் பயிரிடும் மொத்த நிலப் பகுதியில் பணக்கார விவசாயிகள் பயிர் செய்யும் நிலம் கிட்டத்தட்டச் சரிபாதி இருக்கும்.அப்படிப்பட்ட விவசாயிகள் தங்களுடைய குடும்பங்களின் தேவைகளுக்கு மேல் அதிகமாக அறுவடை செய்கின்றனர்;பெருமளவு தானியத்தை விற்கின்றனர்.தங்கள் உணவுக்காக மட்டுமின்றி பிரதானமாக விற்பனை செய்வதற்காகவே,பணம் சேர்ப்பதற்காகவே அவர்கள் தானியங்களைப் பயிர் செய்கின்றனர்.இத்தகைய விவசாயிகள் பணத்தைச் சேகரிக்க முடியும்.சேமிப்பு வங்கிகளிலும்,வங்கிகளிலும் அதனை அவர்கள் போட்டு வைக்கிறார்கள்.நிலத்தைச் சொந்தத்துக்கு வாங்குகிறார்கள்.ரஷ்யா முழுவதிலும் உள்ள விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு நிலத்தை வாங்குகிறார்கள் என்பதை முன்னரே சொல்லியுள்ளோம்;இப்படி வாங்கப்படும் நிலத்தில் அநேகமாக.........

 

இங்கே நாம் சராசரியான,தோராயமாக உள்ள புள்ளவிவரங்களையே மேற்கோள் காட்டியுள்ளோம் என்பதை இன்னும் ஒரு முறை திருப்பிச் சொல்கிறோம்.ஒருவேளை,பணக்கார விவசாயிகளின் தொகை சரியாகப் பதினைந்து லட்சமாக இல்லாமல்பன்னிரண்டரை லட்சமாகவோ பதினேழரை லட்சமாகவோ இருபது லட்சமாகவோ இருக்கலாம்.இது பெரும் வித்தியாசம் அல்ல.முக்கியமானது அவர்களது எண்ணிக்கையை ஓர் ஆயிரம் அல்லது ஒரு லட்சம் கூட விடாமல் கணக்கிடுவதல்,பணக்கார விவசாயிகளின் பலம்என்ன,அவர்களுடைய நிலைமை என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதும்,தம்முடைய நண்பர்கள் யார்,பகைவர்கள் யார் என்று நிச்சயமாகக் கண்டுகொள்வதும்,விதம் விதமான கட்டுக்கதைகளாலும் வெற்று வார்த்தைகளாலும் ஏமாற்றப் படாமல்,ஏழைகளின் நிலைமையையும் விஷேசமாகப் பணக்காரர்களின் நிலைமை யையும் துல்லியமாகஅறிந்துகொள்வதுமே.ஒவ்வொரு நாட்டுப்புற உழைப்பாளியும் தனது வோல்ஸ்தையும் அண்டை வோல்ஸ்தையும் நன்றாக ஆராய்ந்து பார்க்கட்டுமே.கணக்கீடு சரியானது என்பதையும் எங்கும் சராசரியாகஅவ்வாறே இருக்கும் என்பதையும் அவன் கண்டுகொள்வான்;ஒவ்வொரு நூறு விவசாயிக்குடும்பங்களிலும் பத்தோ அதிகமானால் இருபதோ பணக்கார குடும்பங்களும் இருபது நடுத்தரவிவசாயக் குடும்பங்களும் மற்றவை எல்லாம் ஏழைக் குடும்பங்களுமாக இருக்கும்.எல்லாவற்றையுமே இந்த சில பணக்கார விவசாயிகள்தான் வாங்குகின்றனர்.நாட்டுப்புற ஏழைகள் நிலம் வாங்குவதை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது;அவர்களுக்குத் தேவையான உணவைத் தேடிக்கொள்வதே பெரிய பிரச்சனையாகும். தங்களுக்கு வேண்டிய தானியங்களை வாங்குவதற்கே பல சந்தர்ப்பங்களில் அவர்களிடம் பணம் இருப்பதில்லை;அப்படி இருக்கும் போது,நிலம் வாங்குவது எங்கனம்எனவே,பொதுவாக எல்லா வகை வங்கிகளும்,குறிப்பாக விவசாய வங்கியும் (சில சந்தர்ப்பங்களில் விவசாயிகளை ஏமாற்ற முயல்வோரும் வெள்ளை உள்ளம் படைத்த அப்பாவிகளும் கூறுவது போல)நிலம் வாங்க எல்லா விவசாயிகளுக்கும்உதவுவதில்லை,ஆனால் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலுள்ள விவசாயிகளுக்கு மட்டிலும், பணக்காரர் களுக்கு மட்டிலும் அவை உதவுகின்றன, ஆகவே நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள,விவசாயிக்குத் தவறாக ஆலோசனை கூறுவோர்,விவசாயிகள் நிலம் வாங்கி வருகிறார்கள் என்று சொல்லும் பொழுதும் மூலதனத்திலிருந்து உழைப்புக்கு நிலம் கைமாறி வருகிறது என்று சொல்லும் பொழுதும் பொய்யைத்தான் சொல்லுகிறார் கள்.உழைப்புக்கு,அதாவது ஏழ்மையான உழைப்பாளிக்கு நிலம் எப்போதும் போய்ச் சேர முடியாது;ஏனென்றால் நிலத்திற்குப் பணம் கொடுக்க வேண்டும்.ஏழைகளுக்கோ எப்போதும் பணம் மீதப்படாது.செல்வந்தர்களான,பணமுள்ள விவசாயிகளுக்கு,மூலதனத்துக்கு,நகரத் தொழிலாளிகளோடு ஒன்றுசேர்ந்து நாட்டுப்புற ஏழைகள் யாரை எதிர்த்துப் போராட வேண்டுமோ, அந்த நபர்களுக்குத்தான் நிலம் போய்ச் சேரும்.

நாம் தெரிந்துகொள்ள வேண்டியது.

1. கம்யூனிஸ்டுகள் ஏழை உழைக்கும் மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக, உழைக்காமல்பிறர் உழைப்பில் வாழ்ந்துகொண்டு மேலும் மேலும் பணத்தைச் சேர்த்துக்கொண்டிருக்கும் பணக்காரர்களை எதிர்த்துப் போராட விரும்புகிறார்கள்.

2.இந்தியாவில் கிராமங்களிலும் நகரங்களிலும்ஏழ்மையிலும் வறுமையிலும்வாடுபவர்கள்தான் எண்ணிக்கையில் மிக மிக அதிகமானவர்களாக இருக்கிறார்கள்.

3. ஏழை உழைக்கும் மக்கள் அனைவரும் வறுமையையும், பட்டினிச் சாவையும், நோய்வாய்ப்பட்டுசாவதையும்,பணக்காரர்களால் இழிவுபடுத்துவதையும் தினம் தினம்சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

4.ஏழை உழைக்கும் மக்கள் சந்திக்கும் வறுமை,பட்டினி,இழிவு போன்ற கொடுமைகளுக்குகாரணம் என்ன,இந்த கொடுமைகளைப் போக்குவதற்கான வழி என்ன என்பதை இந்தஉழைக்கும் ஏழை மக்கள் அறிந்துகொள்ளவில்லை.

5.இந்த கொடுமைகளுக்கு காரணம் என்ன என்பதை அறிந்துகொள்ள வேண்டுமானால்இவர்களதுஇல்லாமைக்கும் வறுமைக்கு மான காரணத்தை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். இதுதான் ஏழை உழைக்கும் மக்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான முதன்மையான பணியாகும்.

6.ஏழை விவசாயிகளும்,ஏழைத் தொழிலாளர்களும் அவர்களது பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டுமானால் ஏழை விவசாயிகளும் ஏழைத் தொழிலாளிகளும்,இந்த சமூக அமைப்பில்பாதிக்கப்பட்டுள்ள அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் முதலில் ஓர் அணியாக ஒன்றுசேர வேண்டும்.

7.கிராமங்களிலுள்ள ஆதிக்க அரசியல் வாதிகளையும் பணக்காரர்களையும் எவ்விதமான மக்கள் அவர்களை பின்பற்றுகிறார்கள்,மற்றும் நகரப் புறங்களில் ஆதிக்க சக்திகளை எவ்வகையான மக்கள் பின்பற்றுகிறார்கள் என்பதை நாம் கண்டறிய வேண்டும்.

8.இதே போல் கிராமங்களிலும் நகரங்களிலும் எவ்வகையான மக்கள் தொழிலாளர்களையும் கம்யூனிஸ்டுகளையும் பின்பற்றுகிறார்கள் என்பதையும் நாம் கண்டறிய வேண்டும்.

9.கிராமங்களிலும் நகரங்களிலும் எவ்விதமான உழைப்பிலும் ஈடுபடாமல் பிறருடையஉழைப்பிலே வாழ்பவர்கள் யார் யார் என்பதை கண்டறிய வேண்டும்.இத்தகைய நபர்களைநாம் அடையாளம் காணாமல் வறுமையை ஒழிக்க முடியாது.

10.கிராமங்களில் வாழும் விவசாய மக்களில் எந்தப் பிரிவினர் நகரத்துத் தொழிலாளர்களும் ஒன்றுபட வேண்டும் என்பதை நாம் கண்டறிய வேண்டும்.

11.கிராமங்களிலுள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஏமாற்றும் பணக்கார விவசாயப் பிரிவினர்களையும் ஆதிக்கம் செய்யும் அரசியல்வாதிகளையும் நாம் இனம்காண வேண்டும்.

12.கிராமங்களிலுள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஏமாற்றுபவர்களை எதிர்த்துப் போராடி, பாதிக்கப்படும் விவசாயிகளை பாதுகாப்பது எப்படி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

13.கிராமங்களிலுள்ள ஏழை விவசாயிகளை ஏமாற்றி பாதிப்புள்ளாக்கு கிறவர்கள் எந்தளவுக்கு பலம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

14.கிராமங்களில் ஆதிக்கம் செலுத்தும் நிலப்பிரபு வர்க்கங்களை அவர்கள் எந்தளவுக்கு நிலம் வைத்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டு நாம் மதிப்பிட வேண்டும்.

15.கிராமங்களில் ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகள் எந்தளவுக்கு நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நாம் மதிப்பிட்டு இந்த வர்க்கங்களின் வாழ்நிலையிலிருந்து இந்த வர்க்கங்களை நாம் வரையறை செய்ய வேண்டும்.

16.கிராமங்களில் ஏழை மக்கள் சிக்கனமாக வாழ வேண்டும் என்று பணக்காரர்கள் போதிக்கிறார்கள்.ஆனால் அவர்கள் ஆடம்பரமாக வாழ்கிறார்கள்.இதன் அடிப்படையில்இருந்து கிராமங்களில் உள்ள வர்க்க வேறுபாட்டை நாம் இனம்காண வேண்டும்.

17.கிராமங்களில் நிலங்களை உடமையாகக் கொள்வதோடு கூடவே வேறுவிதமான வணிகம்மற்றும் தொழில் நிறுவனங்களை நடத்தும் பணக்காரர்களும் உண்டு.இத்தகைய பணக்காரர்களின் வாழ்நிலைகளை நாம் ஆய்வு செய்வதன் மூலம் இவர்கள் ஏழை மக்களுக்குஎதிராக எப்படிச் செயல்படுகிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும்.

18.கிராமங்களிலுள்ள நடுத்தர வர்க்கத்தினர் பொதுவாக உழைக்கும் மக்களின் நண்பர்களாகஇருக்க வாய்ப்புண்டு. அது பற்றிய கள ஆய்வு நாம் செய்ய வேண்டும்.

19.கிராமங்களில் உள்ள நிலங்களில் பெருவாரியான நிலங்கள் ஒரு சிலருக்கு மட்டும் சொந்தமாக இருந்தால் மிகப் பெரும்பாலான விவசாயிகளுக்கு சிறிதளவே நிலம் சொந்தமாக இருக்கும். அதில் பெரும்பாலோருக்கு நிலம் சொந்தமாகவே இருக்காது. இவ்வாறு நிலம்

சொந்தமாக இல்லாதவர்களும் சிறிதளவு நிலம் சொந்தமாக உள்ளவர்களும் வறுமையில்வாடிக்கொண்டு இருக்கிறார் கள்.இத்தகைய வறுமையில் வாடுபவர்களே நகரங்களிலுள்ள தொழிலாளர்களோடு ஐக்கியப்பட முடியும். இந்த ஐக்கியத்தை ஏற்படுத்துவதுதான் நமதுபணியாக இருக்க வேண்டும்.

20.கிராமங்களிலுள்ள பணக்காரர்களது சொல்லையும் ஆதிக்க அரசியல்வாதிகளின்சொற்களை மட்டுமே ஆளும் அரசாங்கமும் (மந்திரிகளும்) அரசு அதிகாரிகளும் கேட்ப்பார்கள். இதற்கு மாறாக ஏழைகளின் பிரச்சனைகளை இந்த ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதே இல்லை என்பதை ஏழை விவசாயிகளுக்கு நாம் சுட்டிக்காட்டி புரியவைக்க வேண்டும்.

21.கிராமங்களிலும் நகரங்களிலும் அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்துஅதனை தனக்கு சொந்தமாக மாற்றிக்கொண்டிருப்பவர்களை நாம் அடையாளம் கண்டு அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும்.

22.கிராமங்களிலுள்ள பாதிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு ஒரு பலமானசக்தியாக மாறாதவரை கிராமங்களிலுள்ள ஆதிக்க மற்றும் பணக்காரர்களால் ஏழைகள்ஏமாற்றப்பட்டும் சுரண்டப்பட்டும் வறுமையில் வாடுவதைத் தவிர அவர்களுக்கு வேறுவழியில்லை. ஆகவே பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவரும் சாதி மதம் கடந்து ஒன்றுபடுவதற்கு நாம் பாடுபட வேண்டும்.

23.பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் சாதி மத வேற்றுமையில்லாமல் ஒரே சகோதரர்களாக ஒன்றுபடாதவரை இந்த ஆட்சியாளர்கள்,அரசு அதிகாரிகள்,பணக்காரர்களுக்கும் அரசியல் ஆதிக்கவாதி களுக்கும்தான் சாதகமாகப் பாடுபடுவார்கள்.உழைக்கும் ஏழை மக்களுக்குஎதிராகவே செயல்படுவார்கள்.என்ற உண்மையைச் சொல்லி அனைத்து சாதி மதத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களை நாம் ஒன்றுபடுத்தப் பாடுபட வேண்டும்.

24.ஒரு காலத்தில் எந்தளவுக்கு ஒருவருக்கு நிலம் சொந்தமாக இருக்கிறதோ அந்தளவுக்குஅவர் பணக்காரராக இருந்தார்.ஆனால் நவீன காலத்தில் ஒருவரிடம் எந்தளவுக்கு பணம் இருக்கிறதோ அந்தளவுக்கு அவர் பணக்காரராகவும் செல்வாக்கு உள்ளவராகவும் பணம் இல்லாத ஏழைகளின் மீது ஆதிக்கம் செலுத்துபவராகவும்,மேலும் மேலும் பணத்தைச்சேர்த்துக்கொண்டு செல்வந்தரா கவும் வாழ்பவராகவும் இருக்கிறார் என்பதை நாம்புரிந்துகொள்ள வேண்டும்.

25.நவீன காலத்தில் பணமும் மூலதனமுமே ஆதிக்கம் செய்கிறது.பணம் இருப்பவரால்எதையும் வாங்க முடியும் பணம் இல்லாதவரால் எதையும் வாங்க முடியாது என்பதை நாம் புரிந்துகொண்டு மக்களிடம் இந்த உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும்.

26, கிராமங்களிலுள்ள நிலங்களை ஏழைகளால் வாங்க முடியுமா? முடியாது என்பதைஅனைவராலும் புரிந்துகொள்ள முடியும்.ஆனால் தற்போது பெரிய வணிகர்களும்,அரசியல்வாதிகளும் கார்ப்பரேட் முதலாளிகள் மட்டும்தான் நிலங்களை வாங்கி சொந்தமாக்கிக் கொள்கின்றனர்.இந்த வகையில் கிராம விவசாயிகள் சொந்த நிலங்களை பறிகொடுத்துவிட்டு ஓட்டாண்டி ஆகின்றனர்.மறுபக்கத்தில் இந்த வணிகர்களும்,அரசியல்வாதிகளும் கார்ப்பரேட் முதலாளிகளும் செல்வந்தர்களாக மாறுகின்றனர்.இதன் காரணமாக மக்களிடம் வறுமை பெருகுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.இந்த வகையில் பெரும் வணிகர்களும்,அரசியல்வாதிகளும்,கார்ப்பரேட் முதலாளிகளும் மக்களின் வறுமைக்கு காரணமானவர்கள் என்ற உண்மையை மக்களிடம் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

27.சிறிய அளவில் வணிகம் செய்பவர்களையும் சிறிய அளவில் தொழில் செய்பவர்களையும் தொடர்ந்து தொழில் செய்யவிடாமல் தடுத்து அதாவது பணமதிப்பு இழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்ற வரிமுறைகளைக் கொண்டுவந்து இந்த ஆட்சியாளர்கள் சிறு தொழில் செய்பவர்களை ஒழித்துக்கட்டிவிட்டு அனைத்து தொழில்களையும் அனைத்து வணிகத்தையும் இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் வசம் ஒப்படைப்பதன் மூலம் சிறு வணிகர்கள் மற்றும் சிறு தொழில் செய்யும் முதலாளிகளையும் ஓட்டாண்டி ஆக்குகிறார்கள்.இவ்வாறு ஓட்டாண்டி ஆக்கப்பட்டவர்களும் வறுமைக்கு ஆளாகிறார்கள் என்ற உண்மையை எடுத்துவைத்து இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட உழைக்கும் மக்கள் அனைவரும் ஓர்அணியில் சேர வேண்டி நாம் பாடுபட வேண்டும்.

28.கிராமங்களிலுள்ள பணம்படைத்த செல்வந்தர்கள் தங்களது சாதியைச் சொல்லி அல்லது மதத்தைச் சொல்லி ஒரு சாதியைச் சேர்ந்த பணக்காரர்களும் ஏழைகளும் ஒன்றுபட வேண்டும் என்று சொல்லி பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான ஐக்கியத்தை ஏற்படுத்தி ஒன்றுபட வேண்டிய ஏழை மக்களை சாதி மத அடிப்படையில் பிளவுபடுத்தி ஏழைகளுக்கு இடையிலேயே மோதல்களை ஏற்படுத்தி மொத்தத்தில் ஏழைகளை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார் கள். இந்த ஏமாற்றுப் பேர்வழிகளிடம் ஏழைகளைக் காப்பாற்ற நாம் அனைத்துசாதி மதத்தைச் சேர்ந்த உழைப்பாளிகளின் ஒற்றுமையின் அவசியத்தைச் பிரச்சாரம் செய்திட வேண்டும்.

29. கிராமச் சமூகத்தில் ஏழைகளும் இருக்கிறார்கள், பணக்காரர்களும் இருக்கிறார்கள். ஆனால் கிராமத்தில் பணக்காரர்களின் ஆதிக்கமே கோலோச்சு கிறது. ஆகவே பணக்காரர்களின்ஆதிக்கம் செலுத்தப்படும் ஏழை பணக்காரர்களின் ஐக்கியம் நமக்குத் தேவையா? வேண்டவே வேண்டாம்.

30. நம்மை ஏமாற்றும் இந்தப் பணக்காரர்களை எதிர்த்துப் போராட நமக்குத் தேவை ஏழைகள் மற்றும் உழைக்கும் தொழிலாளிகள் மற்றும் நடுத்தர மக்களின் ஐக்கியமே நமக்குத் தேவையாகும்.

31.கிராமங்களிலுள்ள பாதிக்கப்பட்ட உழைக்கும் மற்றும் நடுத்தர விவசாய மக்களும் நகரங்களில் பாதிக்கப்படுகின்ற தொழிலாளர்களும் நடுத்தர மக்களின் விருப்பப்பட்டஐக்கியத்திற்காக நாம் பாடுபட வேண்டும்.

32.கிராமங்களில் சாதி அடிப்படையில் பணக்காரர்களையும் ஏழைகளையும் ஒன்றுபடுத்தி ஐக்கியத்தை ஏற்படுத்துவதில் இந்த ஆட்சியாளர்களும் அரசாங்கமும் அரசு அதிகாரிகளும் பின்னணியில் உள்ளனர்.இவர்களது நோக்கம் அனைத்து சாதி மதத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் நடுத்தர மக்களும் ஒன்றுசேர்ந்து உழைக்காமல் பிறரது உழைப்பில் வாழும் செல்வந்தர்களை எதிர்த்தும் செல்வந்தர் களை பாதுகாக்கும் இந்த ஆட்சியாளர்களையும் அரசு அதிகாரி களையும் எதிர்த்து போராடிவிடக் கூடாது என்பதே இவர்களின் நோக்கமாகும்.இந்த நோக்கத்தை நிறைவேற்ற நம்மை ஆண்ட பிரிட்டீஷாரிடமிருந்து இவர்கள் கற்றுக்கொண்ட பாடம்தான் பிரித்தாளும் கொள்கையாகும்.ஆகவே உழைக்கும் மக்கள் சாதி அடிப்படையிலான ஐக்கியத்திற்கு பலியாகி உழைக்கும் மக்களுக்கு இடையில் மோதுவதை தவிர்த்துவிட்டு,அனைத்துச் சாதியைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு நமக்கு இடையில் தோன்றும் பிரச்சனை களை அமைதியாக பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் நாம் நமது பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது என்பதற்கான நடைமுறையை கண்டுபிடித்து செயல்பட வேண்டும்.

33.ஏழை உழைக்கும் மக்கள் அவர்களது சொந்த விருப்பத்தின் காரணமாக சாதிச் சங்கங்களில்பணக்காரர்களோடு சேர்ந்து ஐக்கியப்படுவதில்லை.அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த ஆட்சியாளர்களாலும் ஆதிக்க அரசியல்வாதிகளாலும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.ஆனால் இந்த சாதிச் சங்கங்களில் சேர்ந்து அவர்கள்செயல்படுவதால் எவ்விதமான பயனும் இல்லை.மாறாக ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த செல்வந்தர்களும் ஆதிக்க அரசியல்வாதிகள் மட்டுமே பயனடைகிறார்கள்.ஆகவே இந்த உண்மைகளை பாதிக்கப்பட்ட அனைத்துச் சாதியைச் சேர்ந்த உழைக்கும்  மக்களிடம் நாம் எடுத்துச் சொல்லி அவர்களை புரியவைப்பதற்கு நாம் பாடுபட வேண்டும்.

34.எந்த சாதியை மதத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களுக்கும் அவர்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு சுதந்திரம் இருக்கிறதா? இல்லவே இல்லை.ஒவ்வொரு ஏழைகளும் நடுத்தர மக்களும் இந்த சமூகத்தில் மூலதனத்துக்கும் பணம் படைத்த செல்வந்தர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் அடிமைகளாகவே உள்ளனர்.குறிப்பாக இந்த சமுதாயமே கூலி அடிமைச் சமுதாயமாகவே உள்ளது.ஆகவே இந்த கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுபடாமல் ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் வாழ்வே இல்லை.ஆகவே இந்த கூலி அடிமைத்தனத்தை ஒழித்து விடுதலை பெறுவதற்கு அனைத்து சாதி மதத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் ஒன்றுபடுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதை உழைக்கும் மக்களுக்குப் புரிய வைக்க வேண்டியது நமது கடமையாகும்.

35.தற்போது பணத்தின் ஆதிக்கமாக சமூகம் மாறிவிட்டது.ஆகவே இன்றைய சமூகத்தில் பணத்திற்காக ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக்கொண்டும் அடித்துக்கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.ஒரு சமயம் பணக்காரர்களுக்கு இடையிலும் இந்தப் போட்டியும் சண்டையும் நடக்கிறது.ஆகவே இன்றைய சூழலில் பணத்தின்ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் பணத்தின் ஆதிக்கத்தையும் மூலதனத்தின் ஆதிக்கத்தையும் மூலதனத்தின் ஆட்சியை எதிர்ப்பவர்களுக்கு இடையிலான ஐக்கியமே தற்போதைய தேவையாகும் என்ற கருத்தை மூலதனத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சென்று அனைத்து சாதி மக்களையும் ஒன்றுபடுத்த வேண்டும்.

36.கிராமங்களில் வாழும் விவசாயிகளுக்கு அவர்கள் கிராமத்திலுள்ள பணக்காரர்களின் பலம் எத்தகையது என்பதை தெரிந்துகொண்டு இருக்கிறார்கள்.அதேபோல் ஏழைகளின் நிலையும்அவர்களின் எண்ணிக்கையும் தெரியும்.ஆனால் இந்தியா முழுவதிலுமுள்ள பணக்காரர்களின்எண்ணிக்கையும் அதன் பலமும் கிரமத்திலுள்ள மக்களுக்குத் தெரியாது.அதுபோலவே இந்தியா முழுவதிலுமுள்ள ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் எண்ணிக்கையும் பலமும் அவர்களுக்குத் தெரியாது.ஏழை மற்றும் நடுத்தர மக்களின் எண்ணிக்கையும் அவர்கள் அனைவரும் ஓர் அணியாகத் திரண்டுவிட்டால் அவர்களின் பலம் எப்படி இருக்கும் என்பதைநாம் புரிய வைத்தால் ஒவ்வொரு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஒன்றுபட வேண்டியதன்அவசியத்தைப் புரிந்துகொண்டு அவர்களின் ஒற்றுமையை நாம் சாதிக்க முடியும்.

37.இந்தியாவில் ஏழைகளின் நிலைமையை யும் பணக்காரர்களின் நிலைமையையும் நாம்புரிந்துகொண்டு உழைக்கும் மக்களின் உண்மையான நண்பர்கள் நடுத்தர மக்களும் ஜனநாயக சக்திகளும் சாதி மத அடிப்படையில் ஒடுக்கப்படுவோரும் ஆவார்கள் என்பதையும் உழைக்காமல் பிறர்உழைப்பில் வாழ்பவர்களும், உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளும், மக்களை ஏமாற்றும் அரசியல்வாதி களும்தான் உழைக்கும் மக்களின் எதிரிகள் என்பதையும் உழைக்கும் மக்கள் புரிந்து கொள்ளும் விதமாகநமது பிரச்சாரம் அமையவேண்டும்.

38.பணக்காரர்கள் தங்களுடைய வருமானத்தைவங்கியில் போட்டு சேமிக்கிறார்கள். வங்கிகளில் சேமித்துள்ள நடுத்தர மக்களின் சேமிப்புப் பணத்தையும் வங்கிகளிடமிருந்துபெற்று மிகமிக அதிக லாபம் சம்பாதிக்கின்றனர்.அதாவது இந்த வங்கிகள் நடுத்தர மக்களிடமிருந்து பணத்தைப் பெற்று பெருமுதலாளிகளுக்கு கொடுத்து அவர்களை வாழவைக்கிறது. ஆனால் ஏழை மக்கள் பணத்தை சேமிக்க முடியாது.அவர்களுக்கு கிடைக்கும் வருமானம் அவர்களின் உயிர் வாழ்வதற்குக்கூட பத்தாது.இந்த நிலையில்தான் ஏழைகள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கு நிரந்தரமான முடிவே இல்லையா?

39. பணவசதி படைத்தவர்களால் அவர்களது உணவுத்தேவையோடு கூடுதலாக பல்வேறுவிதமான ஆடம்பரப் பொருட்களை வாங்கி நுகர முடியும். ஆனால் ஏழைகளால் இதுமுடியுமா? இந்த சமுதாயத்தில் முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து மக்களும் அனைத்துவிதமான வசதிகளையும் பெற்று வாழவேண்டும் என்பது அவசியமான ஒன்றுதானே.அத்தகைய வாழ்க்கை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்படியான சமூகமும் அதற்கான சமூக அமைப்பும்தான் உழைக்கும் மக்களுக்குத்தேவை.அத்தகைய சமூக அமைப்பை உழைக்கும் மக்களும் நடுத்தர மக்களின்உணர்வுப்பூர்வமான ஒற்றுமையின் மூலம் மட்டுமே சாதிக்க முடியும்.அதற்காக நாம்உணர்வுப்பூர்வமாக பாடுபட வேண்டும் என்பதே மார்க்ஸ்,எங்கெல்ஸ்,லெனின்,ஸ்டாலின்,மாவோ போன்ற மார்க்சிய லெனினிய ஆசான்களது விருப்பமும் போதனையும் ஆகும். தேன்மொழி

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்