அண்மையில் நான் ஒரு செய்திதாளை வாசிக்கும் பொழுது மோடி ஆட்சியில் ஏழைகள் குறைந்து விட்டனர் என்று குறிப்பிட்டு மோடியின் சேவையை உச்சி முகர்ந்திருந்தது அந்த செய்திதாள்.அப்பொழுது வேறு பணியிருந்ததால் உடனடியாக பதில் எழுதமுடியவில்லை அதனால் இப்பொழுது எழுதுகிறேன்.
மோடி மட்டுமல்ல உண்மையில் அந்த உழைக்கும் ஏழை எளிய மக்களின் பிரதிநிதிகளும் உண்மையிலிருந்து வெகுதொலைவில் உள்ளனர்.
செப்டம்பர் 2, 2023, அன்று சென்னை மெரீனா மீனவர்கள் வாழும் பகுதியில் ஒருநாள் இருக்க அனுபவம் பெற்றேன் அந்த மக்களின் வாழ்வியல் சார்ந்து கேட்டு தெரிந்துக் கொண்டாலும் அதனை தேவைப்படும் பொழுது எழுதுவேன். இப்பொழுது இங்கு என் தேடால் மக்களின் வாழ்வாதர பிரச்சினையை கேள்விகேட்காமல் வேறு எதை எதையோ பேசுபவர் உண்மையில் அந்த மக்களின் பிரச்சினையை அணுகுவதில் பின்தங்கியுள்ளனர் அல்லது அவர்களை தங்களின் தேவைக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர் என்பேன்.
அவர்களின் முதன்மையான பிரச்சினை அவர்கள் வாழ வேண்டும் அதற்கேற்ப உணவு பின் இருப்பிடம் மற்ற அடிப்படை வாழ்வியல் தேவைகள். அதற்கான போராட்டங்கள் என்ன நடக்கிறது எனக்கு தெரியவில்லை. ஆளும் கும்பலோடு கூட்டு சேர்ந்துக் கொண்டு அந்த மக்களின் காவலனாக வருபவர்களே அவர்களின் பிரச்சினையை தீர்பதாக நாடகமாடி ஆளும் வர்க்கத்திடம் விலை போகின்றனர். மற்றும் பின்.
பேச வந்தவை மக்கள் எப்படி வசிதி வாய்ப்பை பெற்றுவிட்டனர் என்பதே? உண்மையில் அரசாங்கம் ஏழைகளுக்கான வரையறையையே மாற்றி விட்டது அதாவது மாணவர்கள் 100 மதிப்பெண்ணுக்கு 35 மதிப்பெண் பெற்றாலே பாஸ் என்பதனை நீ 25 எடுத்தாலும் பாஸ் என்று கூறுவது போல் எடுத்துக்காட்டிற்கு கூறுகிறேன். இவர்கள் நீ இவ்வளவு சாப்பிட்டலே நீ பணக்காரன் என்ற வரையறையே ஏமாற்றக இருக்கும் பொழுது இவர்களை பற்றி புரிந்துக் கொள்வோம்.
வறுமை கோடு என்றால் என்ன?POVERTY LINE
வறுமைக் கோடு (Poverty line) என்பது வறுமையை வரையறுக்கப் பயன்படும் ஒரு அளவுகோல் ஆகும். குறைந்த பட்ச நுகர்வுத் தரத்தைக் கூட பெற முடியாதவர்கள் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள் ஆவார்கள். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தரத்தை அடையத் தேவையான குறைந்த பட்ச வருமான வரம்பே வறுமைக்கோடு எனப்படுகிறது. வருமானம் தவிர்த்து ஒருவர் உட்கொள்ளும் உணவின் அளவைப் பொறுத்தும் வறுமைக் கோடு வரையறுக்கப்படுகிறது. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு வறுமைக் கோடு வரையறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
பல பொருளியல் அறிஞர்கள், அரசின் வல்லுநர் குழுக்கள், உலக வங்கி போன்றஅமைப்புகள் வறுமையினை அளவிட முயன்றும், அதையொட்டி பல்வேறு விதமான விவாதங்கள் நடந்தேறியும், எல்லோரும் எற்றுக்கொள்ளுமளவுக்கு எந்த ஒரு வரையறையும், அளவீடும் இன்றுவரை எட்டப்படவில்லை.‘வறுமை’ என்ன அர்த்தத்தை யார் கேள்வி கேட்கின்றார்கள், அதை எப்படி புரிந்து யார் பதிலளிக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும் பொழுது வருமைக்கு காரணமானவர்களே வறுமை பற்றி பெசுவதும் மதிப்பீடு செய்வதும் எப்படி வறுமை பற்றி சரியாக பேசும் ஆகவே,அதிக சர்ச்சைக்கும், ஏன் பொதுமக்களின் எதிர்ப்புக்கும் உள்ளாகியது திட்டக்குழுவின் வரையறையும் மதிப்பீடும்தான் என்பதால் அதனைப் பார்போம்.
திட்டக்குழுவின் வறுமை மதிப்பீடு
அரசுக்காக இந்தியாவின் வறுமையினை மதிப்பிடும் நிறுவனம் திட்டக்குழு ஆகும். வறுமை பற்றிய முறையான மதிப்பீடு முதல் முதலில் 1971 இல் டண்டேகர் மற்றும் ராத் என்ற இரு பொருளியல் அறிஞர்களால் செய்யப்பட்டது. ஒரு நாளைக்கு 2250 கலோரி உணவு பெறத் தேவையான செலவுத் தொகையினை ‘வறுமைக் கோடு’ என அன்றைக்கு வரையறுத்திருந்தார்கள். திட்டக்குழு இதை நகர்ப்புறத்துக்கு 2,400 கலோரி, கிராமப்புறத்துக்கு 2100 கலோரி என 1973-74 இல் மாற்றியமைத்தது; இதனடிப்படையில் அன்றைய விலைவாசியில் தினமும் 2400 கலோரியுள்ள உணவை கிராமங்களில் வாங்க ஒரு மாதத்திற்கு ஒருவருக்குத் தேவைப்பட்ட பணம் ரூ.49.10; நகர்ப்புறத்தில் தினமும் 2100 கலோரி உணவு வாங்க ஒரு மாதத்திற்கு தேவைப்பட்ட பணம் ரூ.56.
இந்த ரூபாய் மதிப்புதான் வறுமைக் கோடு என வரையறை செய்யப்பட்டது. அதாவது, ஒரு மாதத்திற்கு கிராமத்தில் ரூ49.10-ம், நகர்ப்புறத்தில் ரூ56-ம் உள்ளவர்கள் வறுமைக் கோட்டிற்கு மேலும் அப்படி இல்லாதவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழும் வாழ்வதாக பொருள். இந்த வரையறையின்படி, 1973-74-ல் நாட்டின் பாதிப் பேர் வறுமைகோட்டிற்கு கீழே இருந்தனர். 1973-74-ல் நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட உணவுத் தேவையை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட இந்த வறுமைக்கோடு எந்தவித பெரிய மாற்றமும் இன்றி அடுத்த 30 ஆண்டுகளுக்கு தொடந்து கடைப்பிடிக்கப்பட்டது.
ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் விலைவாசி ஏற்றத்துக்குத் தேவையான திருத்தங்கள் மட்டும் இதில் செய்யப்பட்டது. திட்டக்குழுவின் இந்த அணுகுமுறையும், ஒரு மனிதனின் அடிப்படை தேவை வெறும் உணவு மட்டும்தான், அந்த குறைந்தபட்ச உணவிருந்தால் அவன் வறுமைக்கோட்டிற்கு மேலே வந்துவிடுகின்றான் என்ற நிலைப்பாடும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்குள்ளாயின.
யுனிசெப்பின் கூற்றுப்படி, வறுமை காரணமாக ஒவ்வொரு நாளும் 22,000 குழந்தைகள் இறக்கின்றனர். இதற்கு குறைந்த பட்ச நுகர்வு என்கின்றனர்.
குறைந்த பட்ச நுகர்வு என்பது பின்வரும் வழிகளில் மதிப்பிடப்படுகிறது. ஒருவர் உயிர் வாழ்வதற்குத் தேவையான தானியம், பருப்பு வகைகள், பால், சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றின் குறைந்தபட்ச அளவு தீர்மானிக்கப்படுகிறது. இப்பண்டங்களின் விலையைக் கணக்கில் கொண்டு தேவைப்படுகின்ற குறைந்த பட்சப் பொருள்களை வாங்குவதற்கான பணம் மதிப்பிடப்படுகிறது. இதுவே ஒருவரின் குறைந்த பட்ச நுகர்ச்சிச் செலவாகும். இது ஒரு ஆண்டிற்குக் கணக்கிடப்படுகிறது. இதற்குச் சமமான வருவாயைப் பெறாதவர்கள் அல்லது இதற்குக் குறைவான வருவாயைப் பெறுபவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் ஆவார்கள். இந்தியாவில் குறைந்த பட்ச கலோரி உணவுத் தேவையின் அடிப்படையிலும் வறுமைக் கோட்டை வரையறுத்துள்ளனர். நகர்ப்புறங்களில் வாழும் ஒரு நபருக்கு குறைந்த பட்சமாக 2100 கலோரி உணவும், கிராமப் புறங்களில் வாழும் ஒரு நபருக்கு 2400 கலோரி உணவும் தேவைப்படுகிறது. இவ்வுணவுப் பொருள்களை வாங்கத் தேவையான வருமானத்தைப் பெறாதவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் ஆவார்கள்.
ஆட்சியாலர்களின் பார்வையில், சென்னை, புதுடெல்லி, மும்பை, பெங்களூர் ஆகிய பெரு நகரங்களில் 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் மாதச் செலவு ரூ.3,860-ஐத் தாண்டினால் அந்தக் குடும்பத்தை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியலில் சேர்க்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதற்கு தானியங்களுக்காக நாள் ஒன்றுக்கு ரூ.5.50, பருப்பு வகைகள், பால் மற்றும் சமையல் எண்ணெய்க்காக நாள் ஒன்றுக்கு முறையே ரூ.1.02, ரூ.2.33 மற்றும் ரூ.1.55 செலவிட்டால் போதுமானது என்று திட்டக்குழு தெரிவித்துள்ளது.
இதில் ஆச்சரியம் என்ன என்றால், நகரங்களில் வசிப்பவர்கள் வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்துக்காக மாதம் ஒன்றுக்கு ரூ.49.10-க்கும் அதிகமாக செலவு செய்தால், அவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள்.
மாதம் ஒன்றுக்கு மருத்துவச் செலவு மற்றும் கல்விக்காக முறையே ரூ.39.70 மற்றும் ரூ.29.60 செலவிடுபவர்களை ஏழையாக கருத முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த மதிப்பீடு தற்காலிகமானதுதான் என்றும் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் தெண்டுல்கர் குழு அறிக்கைபடி இது நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் திட்டக்குழு தெரிவித்துள்ளது.
இந்த மதிப்பீடு சரிதானா என்றால் ஆரம்ப பள்ளிக் கூடத்தில் படிக்கும் பிள்ளைக் கூட இல்லை என்று சொல்லிவிடும். காரணம், நகரங்களில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவருக்கான ஒரு நாள் செலவு 32 ரூபாயை விட அதிகமாக இருக்கிறது. அந்தக் குழந்தைக்கு ஒரு நாளில் மூன்று வேலை பால் மற்றும் பிஸ்கட், மூன்று வேளை சாப்பாடு, பள்ளிக் கூடத்துக்கு சென்று வரும் போக்குவரத்து செலவு போன்றவற்றை கணக்கில் எடுத்தால் சர்வ சாதாரணமாக 50 ரூபாயை தாண்டிவிடும்.
அடுத்து, வளர்ந்த ஒரு இந்தியரை எடுத்துக் கொண்டால் அவர் நகரங்களில் மதிய வேளையில் ஓரளவுக்கு நல்ல மோசமன சாப்பாடு சாப்பிடவே சுமார் 35 ரூபாய் மேல் தேவைப்படும். இந்த ஒரு வேளை உணவுக்கே திட்டக் கமிஷன் குறிப்பிடும் தொகை செலவாகி விட்டால் மற்ற வேளைகளில் பட்டினியா கிடப்பது?
இந்த அறிக்கையில் கொடுமையான விஷயம் என்னவென்றால் நகர்புறங்களில் வசிப்பவர்களின் வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்து செலவு மாதம் ஒன்றுக்கு 49.10 ரூபாயை தாண்டினால் அவர்கள் பணக்காரர்களாம். சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங்களில் முக்கியமான பகுதிகளில் ஒரு மாதத்துக்கு ஒரு ச.அடியின் வாடகையை என்னவாக இருக்கிறது நீங்களே கணக்கிட்டுக் கொள்ளூங்கள். போக்குவரத்து செலவை பற்றி கேட்கவே வேண்டாம். கூப்பீடு தூரத்துக்கு போக வேண்டும் என்றாலே ஆட்டோவுக்கு குறைந்தது செலவு மற்றும் மருத்துவச் செலவு மற்றும் கல்விக்காக மாதம் 39.70 ரூபாய் செலவு செய்யும் நகர் புற ஆட்சியாளர்களின் பார்வையில் பணக்காரர்களாம். நீங்களும் உங்களின் வரையறைகளும் எவ்வளவு மோசடியானது சொல்ல தேவையில்லை.
மேலும் இதை பேசியுள்ளவற்றையும் பார்ப்போம்.
வறுமை வரம்பு முதன்முதலில் 1963 மற்றும் 1964 க்கு இடையில் மோலி ஓர்ஷான்ஸ்கி என்பவரால் உருவாக்கப்பட்டது. மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கான உணவுத் திட்டத்தின் செலவை எடுத்து அதை மூன்றால் பெருக்குவதன் மூலம் வறுமை வரம்புக்கு வருமானப் பற்றாக்குறையின் அளவீடு என்று அவர் கூறினார்
ஐக்கிய நாடுகள் சபைக்கான டேவிட் கார்டனின் "வறுமை மற்றும் பசியின் குறிகாட்டிகள்" என்ற கட்டுரை, பின்வரும் எட்டு அடிப்படைத் தேவைகளில் ஏதேனும் இரண்டு இல்லாமையே முழுமையான வறுமை என மேலும் வரையறுக்கிறது:
· உணவு: உடல் நிறை குறியீட்டெண் 16க்கு மேல் இருக்க வேண்டும்.
· பாதுகாப்பான குடிநீர்: ஆறுகள் மற்றும் குளங்களில் இருந்து மட்டும் தண்ணீர் வரக்கூடாது, அருகிலேயே இருக்க வேண்டும் (ஒவ்வொரு வழியிலும் 15 நிமிடங்களுக்கும் குறைவான நடைப்பயிற்சி).
· துப்புரவு வசதிகள்: கழிப்பறைகள் அல்லது கழிவறைகள் வீட்டிற்கு அல்லது அருகில் இருக்க வேண்டும்.
· உடல்நலம்: கடுமையான நோய்கள் மற்றும் கர்ப்பத்திற்கு சிகிச்சை பெற வேண்டும்.
· தங்குமிடம்: வீடுகளில் ஒவ்வொரு அறையிலும் நான்கு பேருக்கும் குறைவாக இருக்க வேண்டும். தரைகள் மண், சேறு அல்லது களிமண்ணால் செய்யப்படக்கூடாது.
· கல்வி: அனைவரும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் அல்லது படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
· தகவல்: ஒவ்வொருவரும் வீட்டில் செய்தித்தாள்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், கணினிகள் அல்லது தொலைபேசிகளை அணுக வேண்டும்.
· சேவைகளுக்கான அணுகல்: இந்த உருப்படி கோர்டனால் வரையறுக்கப்படவில்லை, ஆனால் பொதுவாக கல்வி, சுகாதாரம், சட்டம், சமூகம் மற்றும் நிதி ( கடன் ) சேவைகளின் முழுமையான பனோபிலியைக் குறிக்கப் பயன்படுகிறது .
1978 ஆம் ஆண்டில், அடிப்படை தேவைகள் அணுகுமுறையை விமர்சிக்கும் இலக்கியங்களை கைய் ஆய்வு செய்தார்
முழுமையான வறுமை என்பது அடிப்படை வாழ்க்கைத் தேவைகளைப் பாதுகாக்க போதுமான ஆதாரங்கள் இல்லாதது.
இங்கே அடிபடையில் உண்ண உணவின்றி வாழ்கோர் எத்தனையோ கோடி பேர் இதில் வறுமைகோடு என்று ஏமாற்றி மக்களுக்கு உதவது போல் ஏமாற்றி திரியும் கூட்டம்....
இன்னும் பின்னர்...