யுத்த தந்திரம் செயல் தந்திரம்
பாட்டாளிவர்க்க இயக்கமானது இரு பக்கங்களை பெற்றுள்ளது ஒன்று அகவயமானதுமற்றொன்றுபுறவயமானது. இயக்கத்தின் புறவய நிகழ்ச்சிப் போக்கானது மார்க்சியத் தத்துவத்தினாலும் மார்க்சிய திட்டத்தினாலும் முதலாவதாக ஆராயப்படுகின்றது. யுத்த தந்திரம் செயல்தந்திரம் ஆகியவற்றின் செயல் களமானது இயக்கத்தின் அகவயத்தோடு நின்று விடுகிறது. எனவே யுத்த தந்திரமானது மார்க்சிய தத்துவத்தினாலும் மார்க்சிய வேலை திட்டத்தினாலும் அளிக்கப்படுகின்ற விவரங்களை அடிப்படையாக கொள்ள வேண்டும்.
போர்தந்திரமானது பாட்டளி வர்க்கம் தனக்கான இறுதி லட்சியமான பொதுவுடைமை சமூகத்தை அடைய வகுக்கும் நீண்டகால யுத்தியாகும், செயல்தந்திரமானது குறைந்தகால நடவடிக்கையின் அடிப்படையில் அமைந்தவையாகும்.
ஊழியர்களுக்கும் அமைப்பிற்கும் இடையே உள்ள உறவு
அமைப்பிற்கு அப்பாற்பட்டு ஒரு ஊழியர் இருப்பதாக நம்மால் சிந்திக்க முடியாது. ஏனெனில் ஊழியர் அமைப்பின் ஓர் அங்கமாகவே இருக்கின்றார். ஒரு ஊழியர் ஒரு திட்டவட்டமான அமைப்பிற்குள்தான் ஒரு அமைப்பாக இயங்குகின்ற ஒரு நிறுவனத்தில்தான் வாழ்கின்றார், இயங்குகின்றார். ஆகையால் ஊழியரை பற்றிய பரிசீலனை அமைப்பை பற்றிய பரிசீலனையை யிலிருந்தே துவங்க வேண்டும்.
அமைப்பு மக்களால் தான் உருவாக்கப்படுகின்றது மக்கள் தான் ஒரு அமைப்பின் பிரதான அம்சமாக இருக்கின்றனர். ஒர் அமைப்பு மக்கள் இன்றி இயங்க முடியாது. மக்களின் ஒரு படைப்பாக இருக்கின்ற அமைப்பு, அவ்வமைப்புற்குட்பட்ட மக்களையும் அவர்களுடைய குணாதிசயங்களையும் மற்றும் அவர்களின் திறமைகளையும் சார்ந்து இயங்குகின்றது . மறுபுறம் ஒரு அமைப்பு அது நிலைத்திருப்பதற்கான உரிமை பெற்ற ஒரு தனிப் பொருளாக ஆகிவிட்ட பிறகு அதுவே மக்களின் மீது ஒரு தீர்மானகரமான பாதிப்பை ஏற்படுகின்றது. அமைப்பைச் சேர்ந்தவர் கள் எவரெவர் என்னென்ன செய்ய வேண்டும். அதன் செயல் பாட்டிற்கான நிறுவனத்தில் ஒருவர் எந்த இடத்தில் வைக்கப்பட வேண்டும் இப் பணியை ஆற்ற வேண்டும் என்பதை தீர்மானிக் கின்றது. அவ்வமைப்பைச் சேர்ந்தவர் களின் செயல்பாட்டின் திசையையும் இலக்கையும் முன்கூட்டியே அது வரையறை செய்கின்றது. அவர்களை இயக்குவிக்கின்றது. ஒருவர் என்ன செய்ய வேண்டும் அல்லது எதை செய்யக் கூடாது என அவருக்கு பணிக்கிறது.
ஒரு அமைப்பு அதனுடைய செயல்பாட்டின் மூலமாக அவ்வமைப்பு சேர்ந்தவர்களிடம் ஒரு திட்டவட்டமான குணாம்சத்தை தரத்தை ஏற்படுகின்றது. அது அவர்களைப் பயிற்றுவிக்கின்றது.
மக்களின் செயலாற்றும் திறனும் பண்பும் அவர்களின் அமைப்பு திறனைப் பொறுத்தே இருக்கின்றது. அமைப்பு ஒரு புதிய பண்பை(தரத்தை) உண்டாக்குகிறது என்றார் மார்க்ஸ்.
அமைப்பு பற்றிய மேற்கூறப்பட்டவை அனைத்தும் ஊழியர் பிரச்சினைப் பற்றியப் பரிசீலனை செய்தல் மற்றும் அதற்கு தீர்வு காணுதல் ஆகியவற்றோடு நேரடியான தொடர்புடையதாகும். உதாரணமாக கட்சி ஊழியர்களின் பலமான அம்சங்களைப் பற்றியும் அல்லது பலவீனமான அம்சங்களைப் பற்றியும் நாம் பரிசீலனை செய்யும்போது அமைப்பு பற்றி பிரச்சினைகளிலிருந்து பிரித்து தனியாக ஊழியர்களின் தத்துவ அரசியல் தரத்தைப் பற்றி பரிசீலனை செய்வோமானால் ஊழியர் மீது அமைப்பு செலுத்தும் செல்வாக்கையும் பாதிப்பையும் நாம் பார்க்கத் தவறினால் ஊழியர் பிரச்சினை பற்றிய சரியான பரிசீலனை செய்வதற்கு தீர்வு காண்பதற்கும் தேவைப்படுகின்ற ஒரு முக்கியமான ஆதாரத்தை நாம் புறக்கணிப்போர் ஆவோம்.
ஒரு பலமான கட்சிக்கிளையும் ஒரு பலமான கட்சி நிர்வாகக் குழுவும் வலுவான கட்சி உறுப்பினர்களும் ஊழியர்கள் தோன்று வதற்கு வாய்ப்பு அளிக்கின்றது. எங்கெல்லாம் கட்சிக்கிளையும் நிர்வாகக் குழுவும் சீராக செயல்படவில்லையோ அங்கெல்லாம் உறுப்பினர்களும் ஊழியர் களும் போராட்ட வலிமை குன்றி தரங்கெட்டு பின்னடைந்து போவதற்கு ஏதுவாகின்றது. இதற்கு நேர் எதிராக கட்சி உறுப்பினர்கள் ஊழியர்களின் செயலற்ற தன்மையில் கட்சியமைப்புகளும் சீரழிந்து போவதும் நடக்கக்கூடிய ஒன்றுதான் . ஏனெனில் கட்சி ஊழியர்களுக்கும் அமைப்பிற்கும் இடையிலான உறவில் ஊழியர்கள் (ஒரே நேரத்தில் விளைவாகவும் காரணமாக இருக்கின்றார்கள்) காரணியாக இருக்கும் போது விளைவாகவும் இருக்கின்றார். எப்படி இருப்பினும், அமைப்பின் ஸ்திரத்தன்மை யற்ற நிலைக்கு ஒரு தனிநபரே காரணம் இருந்தாலும் கூட சாராம்சத்தில் அது ஒரு அமைப்பு பிரச்சினையேயாகும். ஏனெனில் அன்நிலைக்குக் காரணமாக இருக்கும் அந்த நபர்கள் அமைப்பின் உறுப்பினர் களாக இருந்தும் அமைப்பின் தேவை களுக்கு எதிராக சிந்தித்து செயல் படுகின்றார்கள் என்றால் அவ்வமைப்பு....
அமைப்பு தனது செயல்பாட்டிற்கு தேவையான அளவு கோல்களை ( தகுதிகளை) அல்லது விதிமுறைகளை உத்தரவாதம் செய்து கொள்ளவில்லை அல்லது அமைப்பின் முடிவுகளையும் தீர்மானங்களையும் செயல்படுத்தும் படி அந்த நபர்களை நிர்ப்பந்திக்கும் வலிமை அமைப்பதற்கு இல்லை என்பதே காரணமாகும். எனவேதான் ஊழியர் பிரச்சினை பற்றிய பரிசீலனை தீர்வும் அமைப்பிலிருந்து துவங்க வேண்டும் தனிநபர் பிரச்சினையும் சாரம்சத்தில் ஒரு அமைப்பை பிரச்சினை ஆகும் என நாம் உணர வேண்டும் தனிநபர்களின் பொறுப்பை தீர்மானிக்கும் போது நாம் அவ்வமைப்பின் தேவைகளையும் அவ்வமைப்பின் அளவு கொள்கை களையும் கோட்பாடுகளையும் அவ்வமைப்பின் கொள்கைகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் இதுவே கோட்பாட்டு ரீதியில் அமைந்த வேலை முறையாகும் .
அதற்கு முற்றிலும் விசுவாசமாக இருப்பவர்களை அதை ஆழமாக புரிந்து கொண்டு வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவதற்கு போரிட உறுதிபூண்ட வர்களை கட்சியின் முன்வைக்கப்பட வேண்டும். அனைத்து கடமைகளை நிறைவேற்றுவதற்கு உறுதிபூண்டவர் களை கட்சியின் வழி அல்லது கோட்பாட்டு அடிப்படையில் திடசித்தத்துடன் மதிநுட்பத் துடன் ஆக்கபூர்வமான முறையில் கையாளும் திறமை உள்ளவர்களை ஊழியர்கள் பெரும் தொகையில் பெற்றிருப்பது அவசியமானதாகும். ஒரு நபரின் வலிமை அமைப்பில் தான் தங்கியிருக்கின்றது தனிநபர்களின் வலிமையில் கூட்டுத் தொகையை விட தரத்தில் முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய வலிமையை அமைப்பு உருவாக்குகின்றது இப்பிரச்சினையில் உள்ள இயக்கவியல்.
பின்வரும் கற்றலில் அடங்கி இருக்கின்றது. ஒரு வலுவான அமைப்பு தனிநபர்களின் வலிமையை உத்தரவாதம் செய்கின்றது. தனிநபர்களின் வலிமை அமைப்பை வலுவானதாக ஆக்குகின்றது.
ஒவ்வொரு மனிதனுக்கும் தனி குணாதி சயமும் திறமையும் உண்டு. ஆகவே தான் ஒரு அமைப்புக்குள் தனிநபர்களுக்குபாத்திரம் இல்லை என நாம் கூற முடியாது ஒரு அமைப்பில் உள்ள உறுப்பினர் அனைவரும் எத்திறனுமற்றவர்களாக இருப்பார்கள் என்றால் அந்த அமைப்பு நிலைத்திருக்க முடியாது. ஏனெனில் ஒரு அமைப்பு உண்மையில் பல நபர்களின் சேர்க்கையாகவே இருக்கின்றது. உண்மையில் உறுப்பினர்கள் ஆற்றல் அற்றவர்களாக இருப்பார்களானால் அவ்வமைப்பின் கூட்டுத்திறன் எங்கிருந்து கிடைக்கும்.
உட்கட்சி இயங்கியலும் ஜனநாயக மத்தியத்துவமும்.
பாட்டாளி வர்க்கம் பிறரை இடையறாது மாற்றி அமைத்துக் கொண்டு தன்னையும் மாற்றி அமைத்துக் கொள்கிறது. விமர்சனம் சுயவிமர்சனம் இரண்டில் ஒவ்வொரு நேரங்களில் ஒவ்வொன்று முதன்மையாக இருக்கும் எனினும் கட்சி என்ற விதத்தில் புரட்சியின் அகசக்தி என்ற விதத்தில் சுய விமர்சனமே முதன்மையானது இதுவே மாற்றி அமைப்பது பற்றிய உட்கட்சி இயங்கியல் அணுகுமுறை .
புற உலகமானது மனிதர்களது விருபத்திற்கு அப்பாற்பட்டு மாறிக் கொண்டே இருக்கிறது. அடிப்படை சமூக மாற்றமான புரட்சிக்கு தலைமை தாங்க முன்வரும் கட்சி அடிப்படை சமூக அமைப்பு மாறாமல் இருக்கும் போதே சூழ்நிலைகள் மாறி வருவதை கணக்கில் எடுத்துக் கொண்டு அவ்வப்போதைய குறிப்பான கடமைகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் . பொருளானது என் நேரமும் மாறிக் கொண்டே இருக்கின்றது என்ற விதத்தில் புரிந்து கொள்வதே சரியான பொருள் முதல்வாத கண்ணோட்டம். வளர்ச்சியின் விதிகளோடு சேர்த்தே பொருளைப் புரிந்து கொள்வதே இயங்கியல் பொருள்முதல்வாதம்.
இயங்கியல் பார்வையும் பொருள்முதல்வாத சித்தாந்தமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதவை ; ஒன்றைஒன்று நிறைவு செய்பவை. இயங்கியல் பார்வையற்ற மாறா நிலையில் இருந்து பொருளை பரிசீலிக்கும் போது நாம் புறப்பொருளை சரியாக புரிந்து கொள்ளாததுடன் புறவய விதிகளில் இருந்து இல்லாமல் நமது அகவய விருப்பங்கலிருந்து கட்சியை கட்டுவது முதல் கடமைகளை வகுத்து கொள்வது வரை நடக்கின்றன .இது தத்துவத் துறையில் கருத்துமுதல் வாதத்திற்கு இடம்கொடுக்கிறது. அதேபோல் பொருள் முதல்வாத அடிப்படையில் இருந்து பிரித்து இயங்கியலை பிரியோகிப்பதால் அது மாறாநிலை கண்ணோட்டத்தையே பலப்படுத்துகிறது. இது கட்சிக்குள் நிகழும் மாற்றங்கள் பற்றியது. கட்சியின் வழியை செயல்படுத்துவதில் வளர்ச்சியும் பின்னடைவும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி கிடைக்கின்றன. இவை பின்னிப் பிணைந்து வெளிப்படுகின்றன. இவற்றை சரியாக பரிசீலித்து ஆய்வு செய்து அனுபவத்தை தொகுக்க வேண்டுமெனில் கீழே இருந்து மேல் வரை தகவல்கள் அளிக்கும் முறையும் மேலிருந்து கீழ்வரை கமிட்டி முறையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் நிஜ விவரங்களிலிருந்து உண்மைகள் காண இயலும் .
எனவே ஒரு அமைப்பு வலுவானதாக இருக்க வேண்டுமானால் அது வலுவான நபர்களை பெற்றிருக்கவேண்டும். ஒரு அமைப்பு ஒரு சரியான பாட்டாளிவர்க்க அமைப்பாக இருக்க வேண்டுமானால் அது சரியான பாட்டாளி வர்க்க சிந்தனையாளர்களை தனது உறுப்பினர்களாகக் கொண்டு இருக்க வேண்டும் .
இது நம்மை ஜனநாயக மத்தியத்துவ பிரச்சினைக்கும் அமைப்பு கோட்பாடுகளுக்கும் இட்டுச்செல்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு பொருள் என்ற விதத்தில் இயங்கு இயல் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் கட்சி அமைப்பிற்கான கோட்பாடுகளை வகுப்பது அவசியமாகிறது .
ஜனநாயக மத்திய துவ கோட்பாட்டின் நான்கு விதிகளான.
1). தனிநபர் கமிட்டிக்கு கட்டுப்படல்.
2).சிறுபான்மை பெரும்பான்மைக்கு கட்டுப் படல்.
3). கீழ் கமிட்டி மேல் கமிட்டிக்கு கட்டுபடல்.
4).அனைத்தும் மத்திய கமிட்டிக்கு கட்டுப்படல்.
என்பவற்றை நாம் அறிவோம் இவற்றை எப்படிப் பார்ப்பது ஜனநாயக மத்தியத்துவம் என்றால் என்ன? ஜனநாயகத்திற்கும் மத்தியதுவத்திற்கும் உள்ள உறவு யாது ?
கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்கத்தின்தலைசிறந்த முன்னோடிகள் மனப்பூர்வமாக இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுகின்ற அமைப்பாதலால் கொள்கை வழிப்பட்ட அரசியலால் வழி நடத்தப்படுவது அவசியமாகிறது .
உறுப்பினர்களின் புரட்சிகர நடவடிக்கை களை மையப்படுத்தி ஒருமுகப்படுத்துவதே ஜனநாயக மத்தியதுவம் அல்லது மத்தியதுவப்பட்ட ஜனநாயகம். நடவடிக்கையில் இயங்குவதற்கான ஜனநாயகமும் ஒருமுகப் படுத்த படுகின்ற மத்தியதுவமும் இணைந்து ஒரு முழுமையாகின்றது. இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதது ஒன்று மற்றொன்று நிறைவு செய்கின்றது. மத்தியதுவம் என்பது உண்மையிலே நிலவ வேண்டுமெனில் அந்த மையப்படுத்தப்பட்ட தலைமை கட்சியின் பரந்துபட்ட உறுப்பினர்கள் தமது கூட்டு நடவடிக்கையில் போராட்டங்களில் மிகவும் சிறப்பாக பயன் தருகின்ற கருவியாக உணரும்போதே தாமும் கூட மக்களுக்கு சிறப்பாக தலைமை அளிக்க இயலும். அப்போது தான் உண்மையான அரசியல் மத்தியதுவம் இருக்கும் . இது உறுப்பினர்களுக்கு உட்கட்சி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் போதே சாதிக்க முடியும் . ஜனநாயகத்தில் இருந்து பிரிக்கப்படாமல் மத்தியதுவம் தனது உயிர் பண்பான வழிகாட்டும் திறனை இழந்துவிடுகிறது . அப்போது அது பாட்டாளி வர்க்க மத்தியதுவமாக இராமல் உத்தரவு போடுகின்ற அதிகாரவர்க்க முறையாக முதலாளித்துவ எதேச்சதிகாரமாக அதீத மத்தியதுவமாக மாறிவிடுகிறது. அதேபோல உட்கட்சி ஜனநாயகம் என்பது உண்மையிலே நிலவ வேண்டுமெனில் நிலைமைகளை புரட்சிகர திசையில் மாற்றிக்கொண்டே நெளிவு சுளிவாகவும் செயலாற்றும் திறன் மிக்க வலுவான தலைமை உருவாகி கட்சியின் நடவடிக்கைகளில் ஒருமுகப்படுத்துவது அவசியம். திட்டவட்டமான ஒரு கொள்கை வழிப்பட்ட அரசியல் வழி காட்டப்படும் போது உறுப்பினர்கள் தமது நடவடிக்கைகளில் முன் முயற்சியை கை கொள்வதும் நடைமுறையில் எழுகின்ற பிரச்சினைகளை கோட்பாட்டின் அடிப்படையில் வரையறுத்து தீர்ப்பதும் சாத்தியமாகிறது. இதுதான் பாட்டாளி வர்க்க ஜனநாயகம் ஆகும். எந்த கருத்து வேண்டுமானாலும் கொண்டுஇருக்கலாம் என்று சம்பிரதாயமாக கூறுகின்ற பூர்சுவா ஜனநாயக நடைமுறையில் கட்சியின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரான கருத்தை கொண்டிருக்கும். உண்மையான ஜனநாயக மத்தியதுவம் தொடர்ச்சியான கூட்டு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான கூட்டுப் போராட்டத்திலும் தான் அடைய முடியும் .
இதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? கட்சியினுள் இயங்கும் அமைப்புகளுக்கும் உறுப்பினர்களுக்கும் இடையேயும் மற்றும் கட்சிக்கு வெளியில் உள்ள மக்கள் திரளுக்குமிடையேயும் உயிருள்ள இணைவுகளையும் பரஸ்பர உறவுகளை வளர்த்து பராமரிப்பது இதனை உறுதிப்படுத்துவதற்கான அவசியமும் நிபந்தனைகள் ஆகும். என அகிலத்தால் நிறைவேற்றப்பட்ட கட்சி அமைப்பு கோட்பாடுகள் கூறுகின்றது. இதைத்தான் கட்சியினுள் வெகுஜன மார்க்கம் என மாவோ பெயரிடுகிறார் .
அதாவது உண்மையில் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு அமைப்பில் உறுப்பினராக இருக்கும்போது அவரது கடமைகள் மட்டுமின்றி உரிமைகளும் உறுதிப் படுத்தப்படுகின்றன.
மற்றவை பற்றி வரும் இதழில் காண்போம் முதலில் ஊழியர் கொள்கை பற்றி இந்த இதழில் தொடர்ந்து விவாதிப்போம்.
ஊழியர் கொள்கை
நமது கட்சி தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டுமானால் திறமையுடன் அரசியல் நேர்மை கொண்ட பெரும்தொகையான தலைசிறந்த தலைமை ஊழியர்கள் அதற்கு தேவைப்படுகின்றது. நமது கட்சியின் ஊழியர்கள் தீரமிக்கவர்களாகவும் அர்ப்பணிப்பு உடையவர்களாக இருந்தால் மட்டும் போதாது. தங்களை எதிர்நோக்கும் புரட்சி பணிக்கு ஈடு கொடுப்பவர் களாகவும் அதிலும் குறிப்பாக புரட்சியின் ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஆற்ற வேண்டிய அரசியல் பணிகளில் உள்ளடக்கத்தை உணர்ந்து அதை நிறைவேற்றும் திறமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் புரட்சியின் ஒவ்வொரு கட்டமும் தனக்கே உரித்தான குணாம்சங்களை பெற்றிருப்பதுடன் அதன் ஒவ்வொரு காலப்பகுதியிலும் அரசியல் பணியில் உள்ளடக்கம் வேறுபட்டதாக இருக்கிறது. ஆகையால் கட்சி ஒரு சரியான ஊழியர் கொள்கையை வகுத்துக் கொள்வதற்கு; இக்கட்டத்தில் ஆற்றவேண்டிய புரட்சி பணிகளின் உள்ளடக்கம் தன்மை மற்றும் அதன் இயல்பையும் புரிந்து கொண்டால் மட்டும் போதாது, இந்தியப் புரட்சியின் யுத்த தந்திர போர்த்தந்திர கோட்பாடுகளையும் புரட்சியின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஆற்றவேண்டிய அரசியல் பணிகளில் உள்ளடக்கத்தையும் அதன் தேவைகளை பற்றி ஒரு சரியான புரிதலையும் பெற்றிருக்க வேண்டும் . இத்தகைய புரிதல் ஊழியர் பிரச்சினையைப் பற்றிய பரிசீலனை செய்வதற்கும் அதற்கு ஒரு சரியான தீர்வைக் காண்பதற்கும் தீர்மானகரமான அம்சமாக இருக்கின்றது. ஆகையால் தான் "அரசியல் மார்க்கம் தீர்மானிக்கப்பட்டதும், ஊழியர்கள் ஒரு தீர்க்கமான அம்சம் " என மாவோ கூறினார் .
ஊழியர்களுக்கும் அரசியல் வழி மற்றும் கடமைகளுக்கும் இடையில் ஊழியர் களுக்கும் இயக்கத்திற்கும் இடையிலும் மிக நெருங்கிய ஒரு இயங்கியல் ரீதியான தொடர்பு உண்டு. இத்தகைய பன்முக உறவுகளின் வரம்பிற்குள்தான் ஒரு ஊழியரின் வாழ்வும் இயக்கவும் அமைகின்றது. இத்தகைய உறவுதான் ஒருவரை உண்மையில் ஒரு ஊழியராக ஆகின்றது.
ஊழியர்களுக்கும் அரசியல் வழி மற்றும் கடமைகளுக்கும் இடையிலான உறவு ஒரு சரியான அரசியல் வழி சிறந்த ஊழியர்களை உருவாக்குகின்றது. ஒரு சரியான வழிகளில் ஊழியர்களுக்கு நன்கு பயிற்சி பெற்று முதிர்ச்சி அடைகின்றனர். இது ஊழியர் பிரச்சினையில் உள்ள ஒரு அம்சமாகும். ஊழியர்கள் ஒரு அரசியல் வழியை உருவாக்குவதிலும் அதை வளர்த்தெடுப்பதிலும் பங்கு கொள்கிறார் கள். அவ்வழியை ஒரு எதார்த்தமாக்கு வதற்கு உத்தரவாதம் செய்கின்றார்கள் .இது ஊழியர் பிரச்சினையில் உள்ள மற்றொரு அம்சமாகும்.
கட்சி ஒரு சரியான அரசியல் வழியை வகுத்துக் கொண்டாலும் கூட அவ் வழியை நடைமுறைப்படுத்துவதற்கு (செயல் படுத்துவதற்கு) திறமையான ஊழியர்களை பெற்று இருக்காவிட்டால் அவ்வழி ஒரு வெற்று உரையாகிவிடும் .பயனற்றதாகிவிடும். ஊழியர்கள் மோசமானவர்களாக இருந்தால் அவர்கள் அவ்வழிக்கு தீங்கு விளைவிப்பார்கள். கட்சியின் ஊழியர்கள் நல்லவர்களாக வல்லவர்களாக இருந்தால் அவர்கள் அரசியல் வழியை ஒரு ஆக்கபூர்வமான முறையில் நிறைவேற்றத் துணை புரிவதுடன் அவ்வழியை வளர்ப்பதற்கும் பங்காற்றுவார்கள் .
கட்சியின் அரசியல் வழியே அமைப்பின் தன்மையும் வளர்ச்சியையும் ஊழியர் களின் வர்க்க சிந்தனையையும் ஒழுக்க நெறிகளையும் ஆற்றலையும் தீர்மானிப் பதில் தீர்க்கமான அம்சமாக இருக்கின்றது. எந்த ஒரு அரசியல் வழியையூம் ஊழியர்கள் நன்கு புரிந்துகொண்டு அதை தனதென கருதி தன்னலமின்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் திறமையுடன் நிறைவேற்ற உறுதி பூண்டிருந்தால்தான் அதை செயல்படுத்த முடியும்.எனவே தான் சிறந்த ஊழியர் களை பெற்றிருப்பதற்கு ஒரு சரியான அரசியல் முன்நிபந்தனையாகும்.
ஒரு சரியான அரசியல் வழியினால் உருவாக்கப்பட்ட இயக்கமானது வலிமையான வெகுஜன இயக்கமாக கட்சியால் உருவாக்கப்பட்டு இருந்தால் பெரும்பான்மையான கட்சி ஊழியர்கள் கட்சியின் சரியான அரசியல் வழியில் நின்று உறுதியாக போராடினால் கட்சி ஊழியர்களை தீய போக்குகள் எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைக்கப் படுவதுடன் அத்தீய போக்குகள் கட்சி ஊழியர்களால் தனிமைப்படுத்தப்பட்டு அவை இயக்கத்திலிருந்து தூக்கி எறியப்படும். இதற்கு மாறாக அரசியல் வழியிலேயே பிழைகள் செய்யப் படுமானால் நிலைமைகள் வேரொன்றாகிவிடும். தவறான வழி ஊழியர்களை ஒரு சரியான திசையில் இருந்து விலக்கி அவர்களை "பொருளாதார வாதம், வர்க்க சமரசம், அராஜகவாதம், தன்னெழுச்சி போக்கு, சந்தர்ப்பவாதம் , சகாசவாதம்" போன்ற தவறான பாதைக்கு கொண்டு செல்லும். அணிகளுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் . ஏராளமான ஊழியர்களை தவறுகளை செய்வதற்கு தள்ளிவிடும். இத்தகைய சூழ்நிலையில் சரியானது தவறான பிரித்துப்பார்க்க சரியானதை எடுத்துக்காட்டி எச்சரிக்கை செய்து உண்மையாக போராடுவோர் நிச்சயமாக இருப்பார்கள் ஆயினும் புரட்சி இயக்கத்தை மீண்டும் ஒரு சரியான பாதைக்கு கொண்டு வருவது இயக்கம் ஒரு உயர்ந்த விலையை செய்து செலுத்த வேண்டியிருக்கும்.
அமைப்பு பணியின் உள்ளடக்கம் மற்றும் குணாம்சம் அதன் வாய்ப்பெல்லை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் அமைப்பு பிரச்சினை முழுவதையும் வெறும் ஊழியர் பிரச்சினையாக எளிமைப்படுத்தி பார்த்து விட முடியாது. அமைப்பு அதற்கே உரித்தான சுயேட்சையான பாத்திரத்தை வகுக்கின்றது ஊழியர்கள் வாழ்விலும் அது ஒரு தீர்மானகரமான முக்கியத்துவமுடைய பாத்திரத்தை வகிக்கின்றது. இப் பிரச்சனையை அமைப்புப் பிரச்சனையை பற்றி விவாதிக்கும் போது எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் .
ஊழியர்கள் வழியை நிறைவேற்றுபவோர் என்ற முறையில் அவர்கள் ஒரு வழியில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்களாக இருக்கின்றார்கள் என கூறலாம். வழியை அமல்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான பயனுள்ள முறையில் அமைப்பு படுத்துவதன் மூலம் அவர்கள் பெற்றிருக்கும் செழுமையான அனுபவத்தை அபிவிருத்தி செய்வதற்கும் வளர்த்தெடுப்பதற்கு மற்றும் அதை சரியான ஒன்றாக ஆக்குவதற்கு தங்களை பங்களிக்கின்ற இவ்வாறு செய்வதுதான் ஒரு ஊழியரிடம் என்று கூறப்படும் ஒரு முக்கியமான தகுதியாகும். இவ்வாறு செய்வது தான் ஒரு ஊழியருக்கு இருக்க வேண்டிய ஒரு முக்கியமான தகுதியாகும்.
ஊழியர்கள் பிரச்சினை பற்றிய பரிசீலனையும் தீர்வும் அரசியல் வழியில் இருந்தே துவங்க வேண்டும் இவ்வாறு கூறுவதன் பொருள் என்னவென்றால் நமது ஊழியர் தொடர்பான பணியும் ஊழியர் கொள்கையும் இவ்வழியை வெற்றிகரமாக அமல்படுத்துவதை உத்தரவாதம் செய்வதாக இருக்க வேண்டும் . இதன் பொருள் இந்த அரசியல் வழியை எதார்த்தம் ஆக்குவதற்கு திறமை பெற்ற ஊழியர்களை அதற்கு முற்றிலும் விசுவாசமாக இருப்பவர்களை அடையாளப்படுத்தி புரிந்துகொண்டு வெற்றிகரமாகடைமுறைப் படுத்துவதற்கு போரிட உறுதி பூண்டவர்களை கட்சியின் வழியை ஒரு கோட்பாட்டு அடிப்படையிலும் திட சித்தத்துடனும் மதிநுட்பத்துடனும் ஆக்கப்பூர்வமான முறையிலும் கையாளும் திறமை உள்ளவர்களை ஊழியர்களாக பெரும் தொகையில் பெற்றிருப்பது அவசியமானதாகும் என்பதேயாகும். இதன் பொருள் ஊழியர்களை நியமித்தல் பயிற்றுவித்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றி லிருந்து ஊழியர்களை மதிப்பீடு செய்தல் உயர்த்துதல் ஆகிய வரை எல்லா அம்சங்களிலும் நமது ஊழியர் கொள்கையையும் ஊழியர் தொடர்பான பணியும் மேற்கூறப்பட்ட அவற்றை பிரதான அளவுகோலாகக் கொண்டு இருக்க வேண்டும் என்பதேயாகும். இதன் பொருள் ஊழியர் பிரச்சினையை ஒரு குறிப்பிட்ட முறையில் பரிசீலனை செய்யவேண்டும். பண்பாடு அல்லது வர்க்க நிலைப்பாடு பற்றிய பொதுவாக கருத்துக்களுக்கு நாம் திருப்திக் கொள்ளக் கூடாது என்பதே ஆகும் .
வர்க்க நிலைப்பாடும் புரட்சிகர பண்புகளும்
வரலாற்று வளர்ச்சியின் விதிகளுக் கேற்ப்ப புரட்சியின் மூலம் உலகையும் சமூகத்தையும் மற்றும் மனிதனை மாற்றி அமைக்கும் தத்துவமாக விளங்கும் மார்க்சிய-லெனினிய சீடர்கள் என்ற முறையில் நாம் ஒழுக்க நெறிகளை ஒழுக்கநெறிகள் ஆகவே கருதவில்லை வர்க்க நிலைப்பாட்டையும் நாம் சரியாக ஒரு விஞ்ஞான ரீதியில் பொருள் புரிந்து கொள்ள வேண்டும் .
வர்க்கம் என்பதை நாம் தனித்தனியான நபர்களின் கூட்டுத் தொகையாக கருதவில்லை அதற்கு மாறாக சமுதாய உற்பத்தி முறையில் ஒரு திட்டவட்டமான இடத்தை வகிக்கும் ஒரு சமூகக் குழுவே வர்க்கம் என நாம் கருதுகிறோம். பாட்டாளி வர்க்கம் கூட அது தானேயான ஒரு வர்க்கமாக இருந்ததில் இருந்து தனக்கேயான ஒரு வர்க்கமாக மாறிய பிறகே அதாவது அது வர்க்க உணர்வு பெற்ற பிறகே பாட்டாளி வர்க்கம் என்ற வர்க்கமாக ஆக உருவெடுத்தது .
இந்த உணர்வும் கூட தனிநபர் உணர்வுகளின் ஒரு எளிமையான கூட்டுத்தொகை அல்ல அதற்கு மாறாக இது முழு வர்க்கத்தின் வரலாற்று ரீதியான நிலைமையையும் மற்றும் அதன் கடமையும் பற்றிய உணர்வே ஆகும். ஆகையால் வர்க்க நிலைப்பாடு என்பது அவ்வர்க்கதத்தின் அரசியல் நிலைப்பாடு ஆகும். வர்க்க உணர்வு என்பது அவர்களின் ஒட்டுமொத்தமான அடிப்படையான மற்றும் நீண்ட கால நலன்களைப் பற்றிய உணர்வும் இந்த நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கு அது கொண்டுள்ள திடமான உறுதியும் ஆகும்.
தொழிலாளி வர்க்கத்தை பொறுத்த மட்டில் அது தனது வரலாற்று ரீதியான நிலையையும் கடமையை உணர வேண்டுமானால் அது தன்னை மார்க்சிய-லெனினியதால் ஆயுத்தம் செய்துகொள்ள வேண்டும். சமூக வளர்ச்சி விதிகளை சரியாக பிரதிபலிக்கின்ற மா-லெ தொழிலாளி வர்க்கத்தின் தத்துவமாக இருப்பதுடன் தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நிலைப்பாட்டின் உண்மையான விஞ்ஞானபூர்வமான உள்ளடக்கமாகவும் அமைந்திருக்கின்றது. தொழிலாளர் இயக்கம் மார்க்சிய-லெனினியத்துடன் இணையும் போதுதான் அது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கட்சியாக அமைகின்றது. தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வும் வர்க்க நிலைப்பாடும் அதி உயர்ந்த முழுமையான முதிர்ச்சி அடைந்த நிலையின் வெளிப்பாடுதான் கட்சி அமைப்பாகும். முன்னேறிய தத்துவமான மா -லெ ஆயத்தம் செய்யப்பட்ட ஒரு கட்சியின் மூலம் மட்டுமே தொழிலாளி வர்க்கம் புரட்சி தலைமை பாத்திரத்தை வழங்கும் ஒரு முன்னோடி வர்க்கமாக திகழ முடியும். அத்தகைய நிலையில்தான் தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க நிலைப்பாடு உண்மையாக உருவாக முடியும். மா-லெ பற்றியும் புரட்சிகர விஞ்ஞானத்தைப் பற்றிய ஒரு தெளிவான அறிவு இன்றி தொழிலாளி வர்க்கத்தின் நிலைப்பாடு முன்னோடி வர்க்கத்தின் நிலைப்பாடாக இருக்க முடியாது. எனவே தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க நிலைப்பாடு என்பது மா-லெ நிலைபாடு ஆகும். தவிர இந்தத் தத்துவத்தினால் ஆயத்தம் செய்யப்பட்ட கட்சியின் அரசியல் வழியும் நடவடிக்கைகளும் தான் அந்த நிலைப்பாட்டின் குறிப்பானா தெளிவானவெளிப்பாடுகளாகும். சுருங்கக்கூறின் வர்க்க நிலைப்பாடு என்பது மார்க்சிய லெனினியத்தால் ஆயத்தம் செய்யப்பட்ட பாட்டாளி வர்க்க கட்சியின் அரசியல் வழியையும் அவ்வழியை நடைமுறைப்படுத்துவதற்கான புரட்சிகர நடவடிக்கைகளையும் சரியான புரட்சிகர முறைகளையும் உள்ளிட்டதே ஆகும்.
ஒரு தன்னெழுச்சியான இயக்கத்தின் மூலம் தொழிலாளி வர்க்கம் தொழிற்சங்க உணர்வை தான் பெறமுடியும். லெனின் வார்த்தையில் கூறினால் "தொழிற்சங்க வாதம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் தத்துவார்த்த ரீதியில் முதலாளித் துவத்திற்கு அடிமைப்படுத்துவதேயாகும்".
தொழிலாளர்களிடையே தன்னெழுச்சி யாக பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர நிலைப்பாட்டை அடைய முடியாது என்றால் விவசாயிகளால் எளிய நிலமற்ற விவசாயிகள் இருந்தாலும் சரி நிலமற்ற கூலி விவசாயிகளாக இருந்தாலும் சரி தன்னெழுச்சியாக தொழிலாளி வர்க்க நிலைப்பாடு பெற்றுவிட முடியாது. கட்சியின் வழியை அமல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் புரட்சிகர நடவடிக்கை கள் மற்றும் சரியான புரட்சிகர முறைகளின் மூலம் மட்டுமே ஏழை நிலமற்ற விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தொழிலாளி வர்க்க நிலைப்பாட்டை அடைய முடியும்.
வர்க்க நிலைப்பாட்டையும் ஏதோ ஒரு காலத்திற்கும் களத்திற்கு அப்பாற்பட்ட பொதுவான ஒன்றாக நம் கருதக்கூடாது. வர்க்க நிலைப்பாட்டை நாம் ஒரு குறிப்பான வரலாற்று ரீதியான கண்ணோட்டத்தில் இருந்து கிரகித்துக் கொள்ள வேண்டும்.
நமது நிலைப்பாடும் மா-லெ- யத்தால் வகுக்கப்பட்டுள்ள சமுதாய வளர்ச்சி பற்றி விதிகளின் அடிப்படையில் தான் வெல்ல முடியும். இதுவே நமது வர்க்க நிலைப்பாட்டிற்கும் ஒழுக்க நெறி பற்றிய கருத்தாக்கம் அடிப்படையாக அமையும்.
எனவே புரட்சியின் இன்றைய கட்டத்தில் தன்னலம் கருதாமல் நாட்டின் விடுதலைக் காகவும் மக்களின் ஜனநாயகதிற்காகவும் பிறப்பால் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் சாதிமுறை ஒழித்து நாட்டு மக்களுக்கிடையில் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்காகவும் ஆண் ஆதிக்கத்தை ஒழித்து பெண்களுக்கு விடுதலை பெறுவதற்காகவும் மக்களின் நல் வாழ்விற்காகவும் போராடுவதில்தான் வர்க்க நிலைப்பாடும் ஒழுக்க நெறியும் அடங்கியிருக்கின்றது.
வேறுவிதமாக கூறினால் நமது வர்க்க நிலைப்பாடும் ஒழுக்க நெறியும் ஏகாதிபத்தியத்தினதும் பெரு முதலாளிகளின் சர்வாதிகாரத்தை எதிர்த்து அவர்களின் கூட்டு சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்துவிட்டு பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போரிடுவதில்தான் அடங்கி இருக்கிறது.
நமது கட்சியின் அனைத்து வழிகளும் கொள்கைகளும் இந்த இலக்கை அடைவதையே தனது நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். எனவேதான் நமது கட்சியின் வர்க்க நிலைப்பாடும் ஒழுக்க நெறியும் உண்மையிலே கட்சியின் வழியையும் கொள்கையையும் கட்சியின் முன்வைக்கப்படும் கடமைகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பதற்கான போராடுவதில்தான் அடங்கி இருக்க வேண்டும். விவாதங்களின் தேவையை ஒட்டி தொடரும் (பயன்படுத்தப் பட்ட நூலகள் லெனின் ஸ்தபன கோட்பாடுகள், 88 சிறப்பு கூட்ட அறிக்கை- மக்கள் யூத்தம்(த.நா) நகல் அறிக்கை மற்றும் பொதுவுடைமை மா-லெ கருத்தியல் இதழ்) .