பாட்டாளி வர்க்க கட்சியும் அமைப்பு பிரச்சினை மற்றும் ஊழியர் கோட்பாடுகளும்- சிபி

 




ஒரு பாட்டாளி வர்க்க கட்சி தனது திட்டத்தையும் செயல் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டுமானால் அது ஒரு சரியான அமைப்பு கோட்பாட்டை பெற்றிருக்கவேண்டும் கட்சியின் வேலை திட்டம் செயல்தந்திரம் அமைப்பு கோட்பாடுகளை ஏற்று கட்சியின் ஒரு அமைப்பில் உறுப்பினராக செயல்படுத்தி கட்சி உறுப்பினர் தகுதியும் ஆகும். ஆக பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகவும் முன்னேறிய முதல் படைப்பிரிவாகவும் கட்சியானது நிலவுகின்ற சூழ்நிலைகளுக்கும் கட்சியுனுடைய நடவடிக்கைக்களின் குறிக்கோளாகும். ஒரு நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவது என்பது அந்தந்த நாட்டின் சமூக பொருளாதார நிலைமைகளுடன் புரட்சியின் யுத்த தந்திரத்துடன் இணைக்கப்பட்ட விஷயமாகும் . நாடுமுழுவதும் அதற்கான அரசியல் தயாரிப்பு கட்டம் ஒன்று தேவைப்படுகிறது.

யுத்த தந்திரம் செயல் தந்திரம்

பாட்டாளிவர்க்க இயக்கமானது இரு பக்கங்களை பெற்றுள்ளது ஒன்று அகவயமானதுமற்றொன்றுபுறவயமானது. இயக்கத்தின் புறவய நிகழ்ச்சிப் போக்கானது மார்க்சியத் தத்துவத்தினாலும் மார்க்சிய திட்டத்தினாலும் முதலாவதாக ஆராயப்படுகின்றது. யுத்த தந்திரம் செயல்தந்திரம் ஆகியவற்றின் செயல் களமானது இயக்கத்தின் அகவயத்தோடு நின்று விடுகிறது. எனவே யுத்த தந்திரமானது மார்க்சிய தத்துவத்தினாலும் மார்க்சிய வேலை திட்டத்தினாலும் அளிக்கப்படுகின்ற விவரங்களை அடிப்படையாக கொள்ள வேண்டும்.

போர்தந்திரமானது பாட்டளி வர்க்கம் தனக்கான இறுதி லட்சியமான பொதுவுடைமை சமூகத்தை அடைய வகுக்கும் நீண்டகால யுத்தியாகும், செயல்தந்திரமானது குறைந்தகால நடவடிக்கையின் அடிப்படையில் அமைந்தவையாகும்.

ஊழியர்களுக்கும் அமைப்பிற்கும் இடையே உள்ள உறவு

அமைப்பிற்கு அப்பாற்பட்டு ஒரு ஊழியர் இருப்பதாக நம்மால் சிந்திக்க முடியாது. ஏனெனில் ஊழியர் அமைப்பின் ஓர் அங்கமாகவே இருக்கின்றார். ஒரு ஊழியர் ஒரு திட்டவட்டமான அமைப்பிற்குள்தான் ஒரு அமைப்பாக இயங்குகின்ற ஒரு நிறுவனத்தில்தான் வாழ்கின்றார், இயங்குகின்றார். ஆகையால் ஊழியரை பற்றிய பரிசீலனை அமைப்பை பற்றிய பரிசீலனையை யிலிருந்தே துவங்க வேண்டும்.

அமைப்பு மக்களால் தான் உருவாக்கப்படுகின்றது மக்கள் தான் ஒரு அமைப்பின் பிரதான அம்சமாக இருக்கின்றனர். ஒர் அமைப்பு மக்கள் இன்றி இயங்க முடியாது. மக்களின் ஒரு படைப்பாக இருக்கின்ற அமைப்பு, அவ்வமைப்புற்குட்பட்ட மக்களையும் அவர்களுடைய குணாதிசயங்களையும் மற்றும் அவர்களின் திறமைகளையும் சார்ந்து இயங்குகின்றது . மறுபுறம் ஒரு அமைப்பு அது நிலைத்திருப்பதற்கான உரிமை பெற்ற ஒரு தனிப் பொருளாக ஆகிவிட்ட பிறகு அதுவே மக்களின் மீது ஒரு தீர்மானகரமான பாதிப்பை ஏற்படுகின்றது. அமைப்பைச் சேர்ந்தவர் கள் எவரெவர் என்னென்ன செய்ய வேண்டும். அதன் செயல் பாட்டிற்கான நிறுவனத்தில் ஒருவர் எந்த இடத்தில் வைக்கப்பட வேண்டும் இப் பணியை ஆற்ற வேண்டும் என்பதை தீர்மானிக் கின்றது. அவ்வமைப்பைச் சேர்ந்தவர் களின் செயல்பாட்டின் திசையையும் இலக்கையும் முன்கூட்டியே அது வரையறை செய்கின்றது. அவர்களை இயக்குவிக்கின்றது. ஒருவர் என்ன செய்ய வேண்டும் அல்லது எதை செய்யக் கூடாது என அவருக்கு பணிக்கிறது.

ஒரு அமைப்பு அதனுடைய செயல்பாட்டின் மூலமாக அவ்வமைப்பு சேர்ந்தவர்களிடம் ஒரு திட்டவட்டமான குணாம்சத்தை தரத்தை ஏற்படுகின்றது. அது அவர்களைப் பயிற்றுவிக்கின்றது.

மக்களின் செயலாற்றும் திறனும் பண்பும் அவர்களின் அமைப்பு திறனைப் பொறுத்தே இருக்கின்றது. அமைப்பு ஒரு புதிய பண்பை(தரத்தை) உண்டாக்குகிறது என்றார் மார்க்ஸ்.

அமைப்பு பற்றிய மேற்கூறப்பட்டவை அனைத்தும் ஊழியர் பிரச்சினைப் பற்றியப் பரிசீலனை செய்தல் மற்றும் அதற்கு தீர்வு காணுதல் ஆகியவற்றோடு நேரடியான தொடர்புடையதாகும். உதாரணமாக கட்சி ஊழியர்களின் பலமான அம்சங்களைப் பற்றியும் அல்லது பலவீனமான அம்சங்களைப் பற்றியும் நாம் பரிசீலனை செய்யும்போது அமைப்பு பற்றி பிரச்சினைகளிலிருந்து பிரித்து தனியாக ஊழியர்களின் தத்துவ அரசியல் தரத்தைப் பற்றி பரிசீலனை செய்வோமானால் ஊழியர் மீது அமைப்பு செலுத்தும் செல்வாக்கையும் பாதிப்பையும் நாம் பார்க்கத் தவறினால் ஊழியர் பிரச்சினை பற்றிய சரியான பரிசீலனை செய்வதற்கு தீர்வு காண்பதற்கும் தேவைப்படுகின்ற ஒரு முக்கியமான ஆதாரத்தை நாம் புறக்கணிப்போர் ஆவோம்.

ஒரு பலமான கட்சிக்கிளையும் ஒரு பலமான கட்சி நிர்வாகக் குழுவும் வலுவான கட்சி உறுப்பினர்களும் ஊழியர்கள் தோன்று வதற்கு வாய்ப்பு அளிக்கின்றது. எங்கெல்லாம் கட்சிக்கிளையும் நிர்வாகக் குழுவும் சீராக செயல்படவில்லையோ அங்கெல்லாம் உறுப்பினர்களும் ஊழியர் களும் போராட்ட வலிமை குன்றி தரங்கெட்டு பின்னடைந்து போவதற்கு ஏதுவாகின்றது. இதற்கு நேர் எதிராக கட்சி உறுப்பினர்கள் ஊழியர்களின் செயலற்ற தன்மையில் கட்சியமைப்புகளும் சீரழிந்து போவதும் நடக்கக்கூடிய ஒன்றுதான் . ஏனெனில் கட்சி ஊழியர்களுக்கும் அமைப்பிற்கும் இடையிலான உறவில் ஊழியர்கள் (ஒரே நேரத்தில் விளைவாகவும் காரணமாக இருக்கின்றார்கள்) காரணியாக இருக்கும் போது விளைவாகவும் இருக்கின்றார். எப்படி இருப்பினும், அமைப்பின் ஸ்திரத்தன்மை யற்ற நிலைக்கு ஒரு தனிநபரே காரணம் இருந்தாலும் கூட சாராம்சத்தில் அது ஒரு அமைப்பு பிரச்சினையேயாகும். ஏனெனில் அன்நிலைக்குக் காரணமாக இருக்கும் அந்த நபர்கள் அமைப்பின் உறுப்பினர் களாக இருந்தும் அமைப்பின் தேவை களுக்கு எதிராக சிந்தித்து செயல் படுகின்றார்கள் என்றால் அவ்வமைப்பு....


அமைப்பு தனது செயல்பாட்டிற்கு தேவையான அளவு கோல்களை ( தகுதிகளை) அல்லது விதிமுறைகளை உத்தரவாதம் செய்து கொள்ளவில்லை அல்லது அமைப்பின் முடிவுகளையும் தீர்மானங்களையும் செயல்படுத்தும் படி அந்த நபர்களை நிர்ப்பந்திக்கும் வலிமை அமைப்பதற்கு இல்லை என்பதே காரணமாகும். எனவேதான் ஊழியர் பிரச்சினை பற்றிய பரிசீலனை தீர்வும் அமைப்பிலிருந்து துவங்க வேண்டும் தனிநபர் பிரச்சினையும் சாரம்சத்தில் ஒரு அமைப்பை பிரச்சினை ஆகும் என நாம் உணர வேண்டும் தனிநபர்களின் பொறுப்பை தீர்மானிக்கும் போது நாம் அவ்வமைப்பின் தேவைகளையும் அவ்வமைப்பின் அளவு கொள்கை களையும் கோட்பாடுகளையும் அவ்வமைப்பின் கொள்கைகளை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் இதுவே கோட்பாட்டு ரீதியில் அமைந்த வேலை முறையாகும் .

அதற்கு முற்றிலும் விசுவாசமாக இருப்பவர்களை அதை ஆழமாக புரிந்து கொண்டு வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவதற்கு போரிட உறுதிபூண்ட வர்களை கட்சியின் முன்வைக்கப்பட வேண்டும். அனைத்து கடமைகளை நிறைவேற்றுவதற்கு உறுதிபூண்டவர் களை கட்சியின் வழி அல்லது கோட்பாட்டு அடிப்படையில் திடசித்தத்துடன் மதிநுட்பத் துடன் ஆக்கபூர்வமான முறையில் கையாளும் திறமை உள்ளவர்களை ஊழியர்கள் பெரும் தொகையில் பெற்றிருப்பது அவசியமானதாகும். ஒரு நபரின் வலிமை அமைப்பில் தான் தங்கியிருக்கின்றது தனிநபர்களின் வலிமையில் கூட்டுத் தொகையை விட தரத்தில் முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய வலிமையை அமைப்பு உருவாக்குகின்றது இப்பிரச்சினையில் உள்ள இயக்கவியல்.

பின்வரும் கற்றலில் அடங்கி இருக்கின்றது. ஒரு வலுவான அமைப்பு தனிநபர்களின் வலிமையை உத்தரவாதம் செய்கின்றது. தனிநபர்களின் வலிமை அமைப்பை வலுவானதாக ஆக்குகின்றது.

ஒவ்வொரு மனிதனுக்கும் தனி குணாதி சயமும் திறமையும் உண்டு. ஆகவே தான் ஒரு அமைப்புக்குள் தனிநபர்களுக்குபாத்திரம் இல்லை என நாம் கூற முடியாது ஒரு அமைப்பில் உள்ள உறுப்பினர் அனைவரும் எத்திறனுமற்றவர்களாக இருப்பார்கள் என்றால் அந்த அமைப்பு நிலைத்திருக்க முடியாது. ஏனெனில் ஒரு அமைப்பு உண்மையில் பல நபர்களின் சேர்க்கையாகவே இருக்கின்றது. உண்மையில் உறுப்பினர்கள் ஆற்றல் அற்றவர்களாக இருப்பார்களானால் அவ்வமைப்பின் கூட்டுத்திறன் எங்கிருந்து கிடைக்கும்.

உட்கட்சி இயங்கியலும் ஜனநாயக மத்தியத்துவமும்.

பாட்டாளி வர்க்கம் பிறரை இடையறாது மாற்றி அமைத்துக் கொண்டு தன்னையும் மாற்றி அமைத்துக் கொள்கிறது. விமர்சனம் சுயவிமர்சனம் இரண்டில் ஒவ்வொரு நேரங்களில் ஒவ்வொன்று முதன்மையாக இருக்கும் எனினும் கட்சி என்ற விதத்தில் புரட்சியின் அகசக்தி என்ற விதத்தில் சுய விமர்சனமே முதன்மையானது இதுவே மாற்றி அமைப்பது பற்றிய உட்கட்சி இயங்கியல் அணுகுமுறை .

புற உலகமானது மனிதர்களது விருபத்திற்கு அப்பாற்பட்டு மாறிக் கொண்டே இருக்கிறது. அடிப்படை சமூக மாற்றமான புரட்சிக்கு தலைமை தாங்க முன்வரும் கட்சி அடிப்படை சமூக அமைப்பு மாறாமல் இருக்கும் போதே சூழ்நிலைகள் மாறி வருவதை கணக்கில் எடுத்துக் கொண்டு அவ்வப்போதைய குறிப்பான கடமைகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் . பொருளானது என் நேரமும் மாறிக் கொண்டே இருக்கின்றது என்ற விதத்தில் புரிந்து கொள்வதே சரியான பொருள் முதல்வாத கண்ணோட்டம். வளர்ச்சியின் விதிகளோடு சேர்த்தே பொருளைப் புரிந்து கொள்வதே இயங்கியல் பொருள்முதல்வாதம்.

இயங்கியல் பார்வையும் பொருள்முதல்வாத சித்தாந்தமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதவை ; ஒன்றைஒன்று நிறைவு செய்பவை. இயங்கியல் பார்வையற்ற மாறா நிலையில் இருந்து பொருளை பரிசீலிக்கும் போது நாம் புறப்பொருளை சரியாக புரிந்து கொள்ளாததுடன் புறவய விதிகளில் இருந்து இல்லாமல் நமது அகவய விருப்பங்கலிருந்து கட்சியை கட்டுவது முதல் கடமைகளை வகுத்து கொள்வது வரை நடக்கின்றன .இது தத்துவத் துறையில் கருத்துமுதல் வாதத்திற்கு இடம்கொடுக்கிறது. அதேபோல் பொருள் முதல்வாத அடிப்படையில் இருந்து பிரித்து இயங்கியலை பிரியோகிப்பதால் அது மாறாநிலை கண்ணோட்டத்தையே பலப்படுத்துகிறது. இது கட்சிக்குள் நிகழும் மாற்றங்கள் பற்றியது. கட்சியின் வழியை செயல்படுத்துவதில் வளர்ச்சியும் பின்னடைவும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி கிடைக்கின்றன. இவை பின்னிப் பிணைந்து வெளிப்படுகின்றன. இவற்றை சரியாக பரிசீலித்து ஆய்வு செய்து அனுபவத்தை தொகுக்க வேண்டுமெனில் கீழே இருந்து மேல் வரை தகவல்கள் அளிக்கும் முறையும் மேலிருந்து கீழ்வரை கமிட்டி முறையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் நிஜ விவரங்களிலிருந்து உண்மைகள் காண இயலும் .

எனவே ஒரு அமைப்பு வலுவானதாக இருக்க வேண்டுமானால் அது வலுவான நபர்களை பெற்றிருக்கவேண்டும். ஒரு அமைப்பு ஒரு சரியான பாட்டாளிவர்க்க அமைப்பாக இருக்க வேண்டுமானால் அது சரியான பாட்டாளி வர்க்க சிந்தனையாளர்களை தனது உறுப்பினர்களாகக் கொண்டு இருக்க வேண்டும் .

இது நம்மை ஜனநாயக மத்தியத்துவ பிரச்சினைக்கும் அமைப்பு கோட்பாடுகளுக்கும் இட்டுச்செல்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு பொருள் என்ற விதத்தில் இயங்கு இயல் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் கட்சி அமைப்பிற்கான கோட்பாடுகளை வகுப்பது அவசியமாகிறது .

ஜனநாயக மத்திய துவ கோட்பாட்டின் நான்கு விதிகளான.

1). தனிநபர் கமிட்டிக்கு கட்டுப்படல்.

2).சிறுபான்மை பெரும்பான்மைக்கு கட்டுப் படல்.

3). கீழ் கமிட்டி மேல் கமிட்டிக்கு கட்டுபடல்.

4).அனைத்தும் மத்திய கமிட்டிக்கு கட்டுப்படல்.

என்பவற்றை நாம் அறிவோம் இவற்றை எப்படிப் பார்ப்பது ஜனநாயக மத்தியத்துவம் என்றால் என்ன? ஜனநாயகத்திற்கும் மத்தியதுவத்திற்கும் உள்ள உறவு யாது ?

கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்கத்தின்தலைசிறந்த முன்னோடிகள் மனப்பூர்வமாக இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுகின்ற அமைப்பாதலால் கொள்கை வழிப்பட்ட அரசியலால் வழி நடத்தப்படுவது அவசியமாகிறது .

உறுப்பினர்களின் புரட்சிகர நடவடிக்கை களை மையப்படுத்தி ஒருமுகப்படுத்துவதே ஜனநாயக மத்தியதுவம் அல்லது மத்தியதுவப்பட்ட ஜனநாயகம். நடவடிக்கையில் இயங்குவதற்கான ஜனநாயகமும் ஒருமுகப் படுத்த படுகின்ற மத்தியதுவமும் இணைந்து ஒரு முழுமையாகின்றது. இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதது ஒன்று மற்றொன்று நிறைவு செய்கின்றது. மத்தியதுவம் என்பது உண்மையிலே நிலவ வேண்டுமெனில் அந்த மையப்படுத்தப்பட்ட தலைமை கட்சியின் பரந்துபட்ட உறுப்பினர்கள் தமது கூட்டு நடவடிக்கையில் போராட்டங்களில் மிகவும் சிறப்பாக பயன் தருகின்ற கருவியாக உணரும்போதே தாமும் கூட மக்களுக்கு சிறப்பாக தலைமை அளிக்க இயலும். அப்போது தான் உண்மையான அரசியல் மத்தியதுவம் இருக்கும் . இது உறுப்பினர்களுக்கு உட்கட்சி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் போதே சாதிக்க முடியும் . ஜனநாயகத்தில் இருந்து பிரிக்கப்படாமல் மத்தியதுவம் தனது உயிர் பண்பான வழிகாட்டும் திறனை இழந்துவிடுகிறது . அப்போது அது பாட்டாளி வர்க்க மத்தியதுவமாக இராமல் உத்தரவு போடுகின்ற அதிகாரவர்க்க முறையாக முதலாளித்துவ எதேச்சதிகாரமாக அதீத மத்தியதுவமாக மாறிவிடுகிறது. அதேபோல உட்கட்சி ஜனநாயகம் என்பது உண்மையிலே நிலவ வேண்டுமெனில் நிலைமைகளை புரட்சிகர திசையில் மாற்றிக்கொண்டே நெளிவு சுளிவாகவும் செயலாற்றும் திறன் மிக்க வலுவான தலைமை உருவாகி கட்சியின் நடவடிக்கைகளில் ஒருமுகப்படுத்துவது அவசியம். திட்டவட்டமான ஒரு கொள்கை வழிப்பட்ட அரசியல் வழி காட்டப்படும் போது உறுப்பினர்கள் தமது நடவடிக்கைகளில் முன் முயற்சியை கை கொள்வதும் நடைமுறையில் எழுகின்ற பிரச்சினைகளை கோட்பாட்டின் அடிப்படையில் வரையறுத்து தீர்ப்பதும் சாத்தியமாகிறது. இதுதான் பாட்டாளி வர்க்க ஜனநாயகம் ஆகும். எந்த கருத்து வேண்டுமானாலும் கொண்டுஇருக்கலாம் என்று சம்பிரதாயமாக கூறுகின்ற பூர்சுவா ஜனநாயக நடைமுறையில் கட்சியின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரான கருத்தை கொண்டிருக்கும். உண்மையான ஜனநாயக மத்தியதுவம் தொடர்ச்சியான கூட்டு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான கூட்டுப் போராட்டத்திலும் தான் அடைய முடியும் .

இதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? கட்சியினுள் இயங்கும் அமைப்புகளுக்கும் உறுப்பினர்களுக்கும் இடையேயும் மற்றும் கட்சிக்கு வெளியில் உள்ள மக்கள் திரளுக்குமிடையேயும் உயிருள்ள இணைவுகளையும் பரஸ்பர உறவுகளை வளர்த்து பராமரிப்பது இதனை உறுதிப்படுத்துவதற்கான அவசியமும் நிபந்தனைகள் ஆகும். என அகிலத்தால் நிறைவேற்றப்பட்ட கட்சி அமைப்பு கோட்பாடுகள் கூறுகின்றது. இதைத்தான் கட்சியினுள் வெகுஜன மார்க்கம் என மாவோ பெயரிடுகிறார் .

அதாவது உண்மையில் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு அமைப்பில் உறுப்பினராக இருக்கும்போது அவரது கடமைகள் மட்டுமின்றி உரிமைகளும் உறுதிப் படுத்தப்படுகின்றன.

மற்றவை பற்றி வரும் இதழில் காண்போம் முதலில் ஊழியர் கொள்கை பற்றி இந்த இதழில் தொடர்ந்து விவாதிப்போம்.

ஊழியர் கொள்கை

நமது கட்சி தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டுமானால் திறமையுடன் அரசியல் நேர்மை கொண்ட பெரும்தொகையான தலைசிறந்த தலைமை ஊழியர்கள் அதற்கு தேவைப்படுகின்றது. நமது கட்சியின் ஊழியர்கள் தீரமிக்கவர்களாகவும் அர்ப்பணிப்பு உடையவர்களாக இருந்தால் மட்டும் போதாது. தங்களை எதிர்நோக்கும் புரட்சி பணிக்கு ஈடு கொடுப்பவர் களாகவும் அதிலும் குறிப்பாக புரட்சியின் ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஆற்ற வேண்டிய அரசியல் பணிகளில் உள்ளடக்கத்தை உணர்ந்து அதை நிறைவேற்றும் திறமை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் புரட்சியின் ஒவ்வொரு கட்டமும் தனக்கே உரித்தான குணாம்சங்களை பெற்றிருப்பதுடன் அதன் ஒவ்வொரு காலப்பகுதியிலும் அரசியல் பணியில் உள்ளடக்கம் வேறுபட்டதாக இருக்கிறது. ஆகையால் கட்சி ஒரு சரியான ஊழியர் கொள்கையை வகுத்துக் கொள்வதற்கு; இக்கட்டத்தில் ஆற்றவேண்டிய புரட்சி பணிகளின் உள்ளடக்கம் தன்மை மற்றும் அதன் இயல்பையும் புரிந்து கொண்டால் மட்டும் போதாது, இந்தியப் புரட்சியின் யுத்த தந்திர போர்த்தந்திர கோட்பாடுகளையும் புரட்சியின் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஆற்றவேண்டிய அரசியல் பணிகளில் உள்ளடக்கத்தையும் அதன் தேவைகளை பற்றி ஒரு சரியான புரிதலையும் பெற்றிருக்க வேண்டும் . இத்தகைய புரிதல் ஊழியர் பிரச்சினையைப் பற்றிய பரிசீலனை செய்வதற்கும் அதற்கு ஒரு சரியான தீர்வைக் காண்பதற்கும் தீர்மானகரமான அம்சமாக இருக்கின்றது. ஆகையால் தான் "அரசியல் மார்க்கம் தீர்மானிக்கப்பட்டதும், ஊழியர்கள் ஒரு தீர்க்கமான அம்சம் " என மாவோ கூறினார் .

ஊழியர்களுக்கும் அரசியல் வழி மற்றும் கடமைகளுக்கும் இடையில் ஊழியர் களுக்கும் இயக்கத்திற்கும் இடையிலும் மிக நெருங்கிய ஒரு இயங்கியல் ரீதியான தொடர்பு உண்டு. இத்தகைய பன்முக உறவுகளின் வரம்பிற்குள்தான் ஒரு ஊழியரின் வாழ்வும் இயக்கவும் அமைகின்றது. இத்தகைய உறவுதான் ஒருவரை உண்மையில் ஒரு ஊழியராக ஆகின்றது.

ஊழியர்களுக்கும் அரசியல் வழி மற்றும் கடமைகளுக்கும் இடையிலான உறவு ஒரு சரியான அரசியல் வழி சிறந்த ஊழியர்களை உருவாக்குகின்றது. ஒரு சரியான வழிகளில் ஊழியர்களுக்கு நன்கு பயிற்சி பெற்று முதிர்ச்சி அடைகின்றனர். இது ஊழியர் பிரச்சினையில் உள்ள ஒரு அம்சமாகும். ஊழியர்கள் ஒரு அரசியல் வழியை உருவாக்குவதிலும் அதை வளர்த்தெடுப்பதிலும் பங்கு கொள்கிறார் கள். அவ்வழியை ஒரு எதார்த்தமாக்கு வதற்கு உத்தரவாதம் செய்கின்றார்கள் .இது ஊழியர் பிரச்சினையில் உள்ள மற்றொரு அம்சமாகும்.

கட்சி ஒரு சரியான அரசியல் வழியை வகுத்துக் கொண்டாலும் கூட அவ் வழியை நடைமுறைப்படுத்துவதற்கு (செயல் படுத்துவதற்கு) திறமையான ஊழியர்களை பெற்று இருக்காவிட்டால் அவ்வழி ஒரு வெற்று உரையாகிவிடும் .பயனற்றதாகிவிடும். ஊழியர்கள் மோசமானவர்களாக இருந்தால் அவர்கள் அவ்வழிக்கு தீங்கு விளைவிப்பார்கள். கட்சியின் ஊழியர்கள் நல்லவர்களாக வல்லவர்களாக இருந்தால் அவர்கள் அரசியல் வழியை ஒரு ஆக்கபூர்வமான முறையில் நிறைவேற்றத் துணை புரிவதுடன் அவ்வழியை வளர்ப்பதற்கும் பங்காற்றுவார்கள் .

கட்சியின் அரசியல் வழியே அமைப்பின் தன்மையும் வளர்ச்சியையும் ஊழியர் களின் வர்க்க சிந்தனையையும் ஒழுக்க நெறிகளையும் ஆற்றலையும் தீர்மானிப் பதில் தீர்க்கமான அம்சமாக இருக்கின்றது. எந்த ஒரு அரசியல் வழியையூம் ஊழியர்கள் நன்கு புரிந்துகொண்டு அதை தனதென கருதி தன்னலமின்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் திறமையுடன் நிறைவேற்ற உறுதி பூண்டிருந்தால்தான் அதை செயல்படுத்த முடியும்.எனவே தான் சிறந்த ஊழியர் களை பெற்றிருப்பதற்கு ஒரு சரியான அரசியல் முன்நிபந்தனையாகும்.

ஒரு சரியான அரசியல் வழியினால் உருவாக்கப்பட்ட இயக்கமானது வலிமையான வெகுஜன இயக்கமாக கட்சியால் உருவாக்கப்பட்டு இருந்தால் பெரும்பான்மையான கட்சி ஊழியர்கள் கட்சியின் சரியான அரசியல் வழியில் நின்று உறுதியாக போராடினால் கட்சி ஊழியர்களை தீய போக்குகள் எடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைக்கப் படுவதுடன் அத்தீய போக்குகள் கட்சி ஊழியர்களால் தனிமைப்படுத்தப்பட்டு அவை இயக்கத்திலிருந்து தூக்கி எறியப்படும். இதற்கு மாறாக அரசியல் வழியிலேயே பிழைகள் செய்யப் படுமானால் நிலைமைகள் வேரொன்றாகிவிடும். தவறான வழி ஊழியர்களை ஒரு சரியான திசையில் இருந்து விலக்கி அவர்களை "பொருளாதார வாதம், வர்க்க சமரசம், அராஜகவாதம், தன்னெழுச்சி போக்கு, சந்தர்ப்பவாதம் , சகாசவாதம்" போன்ற தவறான பாதைக்கு கொண்டு செல்லும். அணிகளுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் . ஏராளமான ஊழியர்களை தவறுகளை செய்வதற்கு தள்ளிவிடும். இத்தகைய சூழ்நிலையில் சரியானது தவறான பிரித்துப்பார்க்க சரியானதை எடுத்துக்காட்டி எச்சரிக்கை செய்து உண்மையாக போராடுவோர் நிச்சயமாக இருப்பார்கள் ஆயினும் புரட்சி இயக்கத்தை மீண்டும் ஒரு சரியான பாதைக்கு கொண்டு வருவது இயக்கம் ஒரு உயர்ந்த விலையை செய்து செலுத்த வேண்டியிருக்கும்.

அமைப்பு பணியின் உள்ளடக்கம் மற்றும் குணாம்சம் அதன் வாய்ப்பெல்லை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் அமைப்பு பிரச்சினை முழுவதையும் வெறும் ஊழியர் பிரச்சினையாக எளிமைப்படுத்தி பார்த்து விட முடியாது. அமைப்பு அதற்கே உரித்தான சுயேட்சையான பாத்திரத்தை வகுக்கின்றது ஊழியர்கள் வாழ்விலும் அது ஒரு தீர்மானகரமான முக்கியத்துவமுடைய பாத்திரத்தை வகிக்கின்றது. இப் பிரச்சனையை அமைப்புப் பிரச்சனையை பற்றி விவாதிக்கும் போது எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் .

ஊழியர்கள் வழியை நிறைவேற்றுபவோர் என்ற முறையில் அவர்கள் ஒரு வழியில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்களாக இருக்கின்றார்கள் என கூறலாம். வழியை அமல்படுத்துவதற்கு ஆக்கபூர்வமான பயனுள்ள முறையில் அமைப்பு படுத்துவதன் மூலம் அவர்கள் பெற்றிருக்கும் செழுமையான அனுபவத்தை அபிவிருத்தி செய்வதற்கும் வளர்த்தெடுப்பதற்கு மற்றும் அதை சரியான ஒன்றாக ஆக்குவதற்கு தங்களை பங்களிக்கின்ற இவ்வாறு செய்வதுதான் ஒரு ஊழியரிடம் என்று கூறப்படும் ஒரு முக்கியமான தகுதியாகும். இவ்வாறு செய்வது தான் ஒரு ஊழியருக்கு இருக்க வேண்டிய ஒரு முக்கியமான தகுதியாகும்.

ஊழியர்கள் பிரச்சினை பற்றிய பரிசீலனையும் தீர்வும் அரசியல் வழியில் இருந்தே துவங்க வேண்டும் இவ்வாறு கூறுவதன் பொருள் என்னவென்றால் நமது ஊழியர் தொடர்பான பணியும் ஊழியர் கொள்கையும் இவ்வழியை வெற்றிகரமாக அமல்படுத்துவதை உத்தரவாதம் செய்வதாக இருக்க வேண்டும் . இதன் பொருள் இந்த அரசியல் வழியை எதார்த்தம் ஆக்குவதற்கு திறமை பெற்ற ஊழியர்களை அதற்கு முற்றிலும் விசுவாசமாக இருப்பவர்களை அடையாளப்படுத்தி புரிந்துகொண்டு வெற்றிகரமாகடைமுறைப் படுத்துவதற்கு போரிட உறுதி பூண்டவர்களை கட்சியின் வழியை ஒரு கோட்பாட்டு அடிப்படையிலும் திட சித்தத்துடனும் மதிநுட்பத்துடனும் ஆக்கப்பூர்வமான முறையிலும் கையாளும் திறமை உள்ளவர்களை ஊழியர்களாக பெரும் தொகையில் பெற்றிருப்பது அவசியமானதாகும் என்பதேயாகும். இதன் பொருள் ஊழியர்களை நியமித்தல் பயிற்றுவித்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றி லிருந்து ஊழியர்களை மதிப்பீடு செய்தல் உயர்த்துதல் ஆகிய வரை எல்லா அம்சங்களிலும் நமது ஊழியர் கொள்கையையும் ஊழியர் தொடர்பான பணியும் மேற்கூறப்பட்ட அவற்றை பிரதான அளவுகோலாகக் கொண்டு இருக்க வேண்டும் என்பதேயாகும். இதன் பொருள் ஊழியர் பிரச்சினையை ஒரு குறிப்பிட்ட முறையில் பரிசீலனை செய்யவேண்டும். பண்பாடு அல்லது வர்க்க நிலைப்பாடு பற்றிய பொதுவாக கருத்துக்களுக்கு நாம் திருப்திக் கொள்ளக் கூடாது என்பதே ஆகும் .

வர்க்க நிலைப்பாடும் புரட்சிகர பண்புகளும்

வரலாற்று வளர்ச்சியின் விதிகளுக் கேற்ப்ப புரட்சியின் மூலம் உலகையும் சமூகத்தையும் மற்றும் மனிதனை மாற்றி அமைக்கும் தத்துவமாக விளங்கும் மார்க்சிய-லெனினிய சீடர்கள் என்ற முறையில் நாம் ஒழுக்க நெறிகளை ஒழுக்கநெறிகள் ஆகவே கருதவில்லை வர்க்க நிலைப்பாட்டையும் நாம் சரியாக ஒரு விஞ்ஞான ரீதியில் பொருள் புரிந்து கொள்ள வேண்டும் .

வர்க்கம் என்பதை நாம் தனித்தனியான நபர்களின் கூட்டுத் தொகையாக கருதவில்லை அதற்கு மாறாக சமுதாய உற்பத்தி முறையில் ஒரு திட்டவட்டமான இடத்தை வகிக்கும் ஒரு சமூகக் குழுவே வர்க்கம் என நாம் கருதுகிறோம். பாட்டாளி வர்க்கம் கூட அது தானேயான ஒரு வர்க்கமாக இருந்ததில் இருந்து தனக்கேயான ஒரு வர்க்கமாக மாறிய பிறகே அதாவது அது வர்க்க உணர்வு பெற்ற பிறகே பாட்டாளி வர்க்கம் என்ற வர்க்கமாக ஆக உருவெடுத்தது .

இந்த உணர்வும் கூட தனிநபர் உணர்வுகளின் ஒரு எளிமையான கூட்டுத்தொகை அல்ல அதற்கு மாறாக இது முழு வர்க்கத்தின் வரலாற்று ரீதியான நிலைமையையும் மற்றும் அதன் கடமையும் பற்றிய உணர்வே ஆகும். ஆகையால் வர்க்க நிலைப்பாடு என்பது அவ்வர்க்கதத்தின் அரசியல் நிலைப்பாடு ஆகும். வர்க்க உணர்வு என்பது அவர்களின் ஒட்டுமொத்தமான அடிப்படையான மற்றும் நீண்ட கால நலன்களைப் பற்றிய உணர்வும் இந்த நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கு அது கொண்டுள்ள திடமான உறுதியும் ஆகும்.

தொழிலாளி வர்க்கத்தை பொறுத்த மட்டில் அது தனது வரலாற்று ரீதியான நிலையையும் கடமையை உணர வேண்டுமானால் அது தன்னை மார்க்சிய-லெனினியதால் ஆயுத்தம் செய்துகொள்ள வேண்டும். சமூக வளர்ச்சி விதிகளை சரியாக பிரதிபலிக்கின்ற மா-லெ தொழிலாளி வர்க்கத்தின் தத்துவமாக இருப்பதுடன் தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நிலைப்பாட்டின் உண்மையான விஞ்ஞானபூர்வமான உள்ளடக்கமாகவும் அமைந்திருக்கின்றது. தொழிலாளர் இயக்கம் மார்க்சிய-லெனினியத்துடன் இணையும் போதுதான் அது பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் கட்சியாக அமைகின்றது. தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க உணர்வும் வர்க்க நிலைப்பாடும் அதி உயர்ந்த முழுமையான முதிர்ச்சி அடைந்த நிலையின் வெளிப்பாடுதான் கட்சி அமைப்பாகும். முன்னேறிய தத்துவமான மா -லெ ஆயத்தம் செய்யப்பட்ட ஒரு கட்சியின் மூலம் மட்டுமே தொழிலாளி வர்க்கம் புரட்சி தலைமை பாத்திரத்தை வழங்கும் ஒரு முன்னோடி வர்க்கமாக திகழ முடியும். அத்தகைய நிலையில்தான் தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க நிலைப்பாடு உண்மையாக உருவாக முடியும். மா-லெ பற்றியும் புரட்சிகர விஞ்ஞானத்தைப் பற்றிய ஒரு தெளிவான அறிவு இன்றி தொழிலாளி வர்க்கத்தின் நிலைப்பாடு முன்னோடி வர்க்கத்தின் நிலைப்பாடாக இருக்க முடியாது. எனவே தொழிலாளி வர்க்கத்தின் வர்க்க நிலைப்பாடு என்பது மா-லெ நிலைபாடு ஆகும். தவிர இந்தத் தத்துவத்தினால் ஆயத்தம் செய்யப்பட்ட கட்சியின் அரசியல் வழியும் நடவடிக்கைகளும் தான் அந்த நிலைப்பாட்டின் குறிப்பானா தெளிவானவெளிப்பாடுகளாகும். சுருங்கக்கூறின் வர்க்க நிலைப்பாடு என்பது மார்க்சிய லெனினியத்தால் ஆயத்தம் செய்யப்பட்ட பாட்டாளி வர்க்க கட்சியின் அரசியல் வழியையும் அவ்வழியை நடைமுறைப்படுத்துவதற்கான புரட்சிகர நடவடிக்கைகளையும் சரியான புரட்சிகர முறைகளையும் உள்ளிட்டதே ஆகும்.

ஒரு தன்னெழுச்சியான இயக்கத்தின் மூலம் தொழிலாளி வர்க்கம் தொழிற்சங்க உணர்வை தான் பெறமுடியும். லெனின் வார்த்தையில் கூறினால் "தொழிற்சங்க வாதம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் தத்துவார்த்த ரீதியில் முதலாளித் துவத்திற்கு அடிமைப்படுத்துவதேயாகும்".

தொழிலாளர்களிடையே தன்னெழுச்சி யாக பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர நிலைப்பாட்டை அடைய முடியாது என்றால் விவசாயிகளால் எளிய நிலமற்ற விவசாயிகள் இருந்தாலும் சரி நிலமற்ற கூலி விவசாயிகளாக இருந்தாலும் சரி தன்னெழுச்சியாக தொழிலாளி வர்க்க நிலைப்பாடு பெற்றுவிட முடியாது. கட்சியின் வழியை அமல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் புரட்சிகர நடவடிக்கை கள் மற்றும் சரியான புரட்சிகர முறைகளின் மூலம் மட்டுமே ஏழை நிலமற்ற விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தொழிலாளி வர்க்க நிலைப்பாட்டை அடைய முடியும்.

வர்க்க நிலைப்பாட்டையும் ஏதோ ஒரு காலத்திற்கும் களத்திற்கு அப்பாற்பட்ட பொதுவான ஒன்றாக நம் கருதக்கூடாது. வர்க்க நிலைப்பாட்டை நாம் ஒரு குறிப்பான வரலாற்று ரீதியான கண்ணோட்டத்தில் இருந்து கிரகித்துக் கொள்ள வேண்டும்.

நமது நிலைப்பாடும் மா-லெ- யத்தால் வகுக்கப்பட்டுள்ள சமுதாய வளர்ச்சி பற்றி விதிகளின் அடிப்படையில் தான் வெல்ல முடியும். இதுவே நமது வர்க்க நிலைப்பாட்டிற்கும் ஒழுக்க நெறி பற்றிய கருத்தாக்கம் அடிப்படையாக அமையும்.

எனவே புரட்சியின் இன்றைய கட்டத்தில் தன்னலம் கருதாமல் நாட்டின் விடுதலைக் காகவும் மக்களின் ஜனநாயகதிற்காகவும் பிறப்பால் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் மனிதனை மனிதன் இழிவுபடுத்தும் சாதிமுறை ஒழித்து நாட்டு மக்களுக்கிடையில் சமத்துவத்தை நிலை நாட்டுவதற்காகவும் ஆண் ஆதிக்கத்தை ஒழித்து பெண்களுக்கு விடுதலை பெறுவதற்காகவும் மக்களின் நல் வாழ்விற்காகவும் போராடுவதில்தான் வர்க்க நிலைப்பாடும் ஒழுக்க நெறியும் அடங்கியிருக்கின்றது.

வேறுவிதமாக கூறினால் நமது வர்க்க நிலைப்பாடும் ஒழுக்க நெறியும் ஏகாதிபத்தியத்தினதும் பெரு முதலாளிகளின் சர்வாதிகாரத்தை எதிர்த்து அவர்களின் கூட்டு சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்துவிட்டு பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான மக்கள் ஜனநாயக சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போரிடுவதில்தான் அடங்கி இருக்கிறது.

நமது கட்சியின் அனைத்து வழிகளும் கொள்கைகளும் இந்த இலக்கை அடைவதையே தனது நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். எனவேதான் நமது கட்சியின் வர்க்க நிலைப்பாடும் ஒழுக்க நெறியும் உண்மையிலே கட்சியின் வழியையும் கொள்கையையும் கட்சியின் முன்வைக்கப்படும் கடமைகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றி முடிப்பதற்கான போராடுவதில்தான் அடங்கி இருக்க வேண்டும். விவாதங்களின் தேவையை ஒட்டி தொடரும் (பயன்படுத்தப் பட்ட நூலகள் லெனின் ஸ்தபன கோட்பாடுகள், 88 சிறப்பு கூட்ட அறிக்கை- மக்கள் யூத்தம்(த.நா) நகல் அறிக்கை மற்றும் பொதுவுடைமை மா-லெ கருத்தியல் இதழ்) .

சோவியத் ரஷ்யாவில் ஏகாதிபத்தியத்தின் மூலதனத்தை சாராத சுயேச்சையான சோசலிச பொருளாதார வளர்ச்சி - பிரேமச்சந்திரன்

 


முதல் உலகயுத்தத்திற்கு பிறகு கடும் பொருளாதாரப் பேரழிவுக்கு உள்ளான ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளில் அமெரிக்காவின் பொருளாதார ஆதிக்கத்திற்கான நோக்கத்தில் பொருளாதரா கடன்வழங்கி தனது கட்டுப்பாட்டுக்க திட்டமான மார்ஸல் திட்டம் செயல் படுத்தப்பட்டு யுத்தத்தினால் ஏற்பட்ட சீரழிவு சீரமைக்கப்பட்டு கீன்சியம் செயல்படுத்தப்பட்ட காலக்கட்டத்தில் தோழா் ஸ்டாலின் அந்நாட்டு அரசாங்கங்களின் பொருளாதாரக் கொள்கையை பற்றி கூறுகையில்:

“தற்போதைய முதலாளித்துவ அரசாங்கங்களின் கொள்கையானது மக்களின் நல்வாழ்வை மேம்படுத்து வதற்கானது அல்ல. மாறாக ஏகபோகங்களுக்காக உற்பத்தியாளா் களிடமிருந்து உச்சப்பட்ச லாபத்தை பிழிந்தெடுப்பதே ஆகும்.”

அவா் மேலும் கூறுகையில் “ஏகபோக மூலதனத்தின் நோக்கம் ஏதேனும் லாபத்தை பெறுவதல்ல. மாறாக உச்சபட்ச லாபத்தை அடைவதே அதன் முதன்மையான நோக்கம். அதுதான் நவீன முதலாளித்துவத்தின் அடிப்படையான பொருளாதார விதியாகும். நவீன முதலாளி த்துவத்தின் அடிப்படை பொருளாதார விதியின் முக்கியமான அம்சங்கள் மற்றும் தேவைகளை கீழ்க்காணும் வகையில் வகைப் படுத்தலாம். சுரண்டலின் மூலமாக அதிக்படியான முதலாளித்துவ லாபத்தை பெறுவது, குறிப்பிட்ட நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வை அழித்து ஏழ்மைக்கு உள்ளாக்குவது, பிற நாடுகளின் மக்களை அடிமைப்படுத்தி கொள்ளையை நிறுவனமாக்குவது, குறிப்பாக பின்தங்கிய நாடுகளை மற்றும் கடைசியாக தேசிய பொருளாதாரத்தைபோர் மற்றும் இராணுவமயமாக்குவது. அவற்றை உச்சபட்ச லாபத்தை பெறுவதற்கு பயன்படுத்துவது” என்றார். ஏகபோக முதலாளித்துவத்தின் இந்த அடிப்படை விதிகளை கீன்சியத்தால் மாற்றி விட முடியாது. அதே வேளையில் “முற்போக்கு முதலாளித்துவத்தின்” துவக்கமாக கீன்சியத்தை பிரதிநித்துவப் படுத்தவும் முடியாது. அது “அழுகிப் போன முதலாளித்துவ அமைப்பின் பிற்போக்கு வடிவமாகும். உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் பொதுநெருக்கடியில் உருவான கீன்சியத்தால் நெருக்கடியை தீா்க்க முடியாது. மாறாக தீவிரப் படுத்தவே செய்தது”. இதுதான் வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட உண்மையுமாகும்.

அதே சமயத்தில் முதல் உலகப் போருக்கு யுத்தத்தில் பங்கு கொண்ட அனைத்து ஏகாதிபத்தியங்களும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கும் போது சோவியத் ரஷ்யாவானது எந்த அந்நிய ஏகாதிபத்தியத்தின் துணையின்றி மற்றும் எந்த நாட்டையும் அடிமைப் படுத்தி எந்தவிதமான சுரண்டலில் கொள்ளையடித்தலில் ஈடுபடாமல் ஒரு சுயேச்சையான தொழிலாளா் விவசாயிகளுக்கான ஒரு வளா்ச்சி பெற்ற சோசலிச சமூகத்தை வெற்றிகரமாக கட்டியமைத்து கொண்டிருந்தது. ஒரு நாடு பிறநாட்டைச் சுரண்டாமலும் தன்னை பிறநாடுகள் சுரண்ட அனுமதிக்காத நிலையில் சுதந்திரமான பொருளாதார வளா்ச்சியை அடையமுடியும் என்று மார்க்ஸியம் முன்வைத்த வரலாற்று வளா்ச்சியை பற்றிய கோட்பாட்டை ரஷ்யாவில் குறிப்பாக செயல்படுத்தி நடைமுறை ரீதியில் மெய்ப்பித்ததை தோழா் ஸ்டாலின் இவ்வாறு கூறுகிறார்.

“முதலளித்துவ பொருளாதார வளர்ச்சிக்காக முதலாளித்துவம் தேர்ந்தெடுத்த பாதைகளான குறிப்பாக ஒன்று, காலனிகளை கைப்பற்றி மற்றும்கொள்ளையடித்து பொருளாதார வளர்ச்சியை அடைந்த பிரிட்டனைப் போலவோ, இரண்டாவதாக, ஒரு நாட்டை மற்றொரு நாட்டை படைபலத்தால் தோற்கடித்து தோல்வியடைந்த நாட்டின் மீது அபராதம் போட்டு தனது தொழிற் துறையை வளர்த்த ஜெர்மனியைப் போலவோ, மேலும் மூன்றாவதாக ,மூலதனத்தில் பின்தங்கிய நாடுகள் மூலதனத்தில் முன்னேறிய நாடுகள் கடுமையான நிபந்தனையின் அடிப்படையில் கொடுக்கும் கடனைக் கொண்டும் நமது பொருளாதாரத்தை வளர்க்க முடியாது எனவும் , ஏனென்றால் அவை அனைத்தும் பெருவாரியான உழைப்பாளி மக்களை கொள்ளையடிப்பதன் மூலமாகவும் அவர்களைச் சுரண்டுவதன் மூலமாகவும் வளர்ந்து செல்லக் கூடிய பாதை. எல்லா வழிகளும் முதலாளித்துவ தொழிற்துறை அரசுகள் உருவாவதை நோக்கியே செல்கின்றன. “பழைய வழியிலான தொழில்மயமாக்கப் பாதைகள் எதுவும் நமக்கு ஏற்புடையதல்ல என்ற நிலையில் அடிமைத்தனமான நிபந்தனைகள் எதுவுமின்றி புதிய முதலீடுகள் உள்வரவு என்பது கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் சோவியத் அரசு என்ன செய்யும்?

தோழர் ஸ்டாலின் இவ்வாறு கூறுகிறார்

“சோவியத் அரசாங்கம் ஒரு புதிய பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். வேறு எந்த நாடுகளாலும் பரிசோதிக்கப்படாத பாதை. அந்நிய கடன்களின்றி பெருவீத தொழிற்துறையை வளர்ச்சி அடையச் செய்யும் பாதை. அந்நிய முதலீடுகளின் உள்வரவு அவசியமின்றி நாட்டை தொழில் மயமாக்கும் பாதை. லெனின் தன்னுடைய “மிகச்சிலது ஆனால் சிறந்தது” என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ள பாதை. “தொழிலாளர்கள் தங்களின் சமூக உறவுகளில் மட்டுமீறிய செலவினங் களைக் குறைத்து சிறந்த முறையில் சிக்கனத்தை கடைபிடிப்பதன் மூலம் விவசாயிகளின் நம்பிக்கையைதக்கவைத்துக்கொண்டுள்ள ஒரு அரசை, தொழிலாளர்கள், விவசாயிகள் மீதான தங்களது தலைமையை தக்கவைத்துக் கொண்டுள்ள ஒரு அரசை உருவாக்குவதற்கு நாம் கட்டாயம் முயற்சிக்க வேண்டும்”. என்று லெனின் கூறுகிறார்.

“நாம் நம்முடைய அரசு இயந்திரத்தை மிக அதிகப்பட்சமான சிக்கனத்திற்கு கொண்டுவர வேண்டும். பொருளாதார வாழ்வில் சாத்தியமான அளவிற்கு அதிகபட்ச சிக்கனத்தை கடைபிடித்து தொழிலாளி வர்க்கம் விவசாயிகள் மீதான தன்னுடைய தலைமையை தக்கவைத்துக் கொள்ள இயலுமானால் நாம் சேமிக்கும் ஒவ்வொரு கோப்பெக்கையும் (ரஷ்ய நாணயம்) நம்முடைய பெருவீத தொழிற்துறை வளர்ச்சிக்கும், மின்மயமாக்கலை மேம்படுத்தவும் பயன்படுத்த முடியும்”.

“இந்த ஒரு பாதையைத்தான் நம் நாடு ஏற்கனவே தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளது. நம்முடைய பெருவீத தொழிற்சாலைகள் வளர்ச்சி பெற வேண்டும் என்றாலும் நம் நாடு தன்னை பலம் வாய்ந்த தொழில் வளமிக்க பாட்டாளிவா்க்க அரசாக மலரச்செய்யவேண்டுமானாலும் அது இந்த பாதையில் தான் தொடா்ந்து முன்னேற முடியும்.

“தேசியமயமாக்கப் பட்ட நிலம், தேசியமயமாக்கப் பட்ட தொழிற்துறை தேசியமயமாக்கப் பட்ட போக்குவரத்து, கடன்கள், அந்நிய வா்த்தகத்தில் ஏகபோகம், அரசாங்கத்தால் ஒழுங்கு படுத்தப்பட்ட உள்நாட்டு வா்த்தகம் இவை அனைத்தும் “உபரி” மூலனதனத் திற்கான புதிய ஆதாரங்களாக உள்ளன. இவற்றை நாம் நாட்டின் தொழிற் வளா்ச்சிக்கு பயன்படுத்த முடியும். இந்த ஆதாரங்களை இதுவரையில் எந்த முதலாளித்துவ அரசும் பெற்றிருக்கவில்லை. பாட்டாளிவா்க்க அரசு ஏற்கனவே இதை பயன்படுத்துவதோடு இது போன்ற புதிய ஆதாரங்களை நமது தொழிற்துறை வளா்ச்சிக்கு பயன் படுத்தியும் வருகிறது. என்பதை நீங்கள் அறிவீா்கள்.

இந்தவழியின் மூலம் நாம் ஏற்கனவே சில வெற்றிகளை ஈட்டியுள்ளோம் என்பது சாதாரண முக்கியத்துவம் உடையது அல்ல. அதனால்தான் முதலாளித்துவ அரசுகளுக்கு எந்த வளா்ச்சி பாதை சாத்தியமற்றதோ “அது” பாட்டாளி வா்க்க அரசுக்கு எவ்வளவுதான் இடா்பாடுகளையும் சோதனைகளையும் உண்டாக்கினாலும் அது முழுவதும் சாத்தியமானதே. அதாவது ஒரு சோசலிச பொருளாதாரத்தை கட்டியமைப்பது என்பது பற்றிய பிரச்சினை தேசியப் பொருளாதாரம் முழுவதையும் தழுவியது. அதாவது தொழிற்துறையையும் விவசாயத்தை யும் சரியான முறையில் ஒன்றிணைபது பற்றிய பிரச்சினையாகும். சோசலிச சமூகம் என்பது தொழிற்துறையிலும் விவசாயத் துறையிலும் பங்கு பெற்றள்ள உற்பத்தியாளா்கள் மற்றும் நுகா்வாளா்களின் கூட்டமைப்ப ஆகும். ஆனால் இந்த கூட்டில் தொழிற்துறையுடன் அதற்கு மூலப் பொருள்களையும் உணவையும் கொடுத்து அதனுடைய உற்பத்தி பொருட்களை உள்வாங்கிக் கொள்ளும் விவசாயத்துறையை இணைக்காவி்ட்டால் தொழிற் துறையும் விவசாயமும் ஒரே முழுமையாக மாறாவிட்டால் எந்தவிதமான சோசலிசத்திற்கும் வாய்ப்பில்லை.

தேசியமயமாக்கப்பட்ட தொழிற்துறையை விவசாயத்துடன் இணைப்பதன் மூலம் கிராமப் புறங்களில் கூட்டுறவு நிறுவனங்களை அமைப்பதன் மூலமும் விவசாய பொருளா தாரத்தை சோவியத் வளா்ச்சி முறையின் பொதுவான அமைப்பு முறைக்குள் கொண்டு வருவதன் மூலம் சோவியத்துக்களை புத்துணா்ச்சி செய்வதன் மூலம் புதிய பண்பாட்டை உருவாக்கவதன் மூலமும் ஒரு புதிய சமூகவாழ்வை மலரச்செய்வதன் மூலமும் நாம் ஏற்கனவே சோசலிசத்தை கட்டியமைத்து வருகிறோம். சந்தேமில்லாமல் இந்த வழியில் நாம் ஏராளமான இடா்பாடுகளை முகங்கொள்ள வேண்டியதிருக்கும். எண்ணிலடங்கா சோதனைகளைின் வழியே நாம் செல்ல வேண்டியதிருக்கும்”.

அவா் கூறியது போலவே அனைத்து சோதனைகளையும் மற்றும் இடா்பாடு களையும் கடந்து ஏகாதிபத்திய வாதிகள் வியக்கவும் அச்சம் கொள்ளும் அளவுக்கு அமெரிக்காவை விட பொருளாதாரத்தில் பன்மடங்கு வளா்ச்சி பெற்ற சமூகமாக ரஷ்யா மாற்றம் கண்டது இந்த உலகத்தில் .உழைப்பாளி மக்களின் சொர்க்க பூமியாக ரஷ்யா மாற்றம் கண்டது.

இரண்டாம் உலக யுத்தமும் பாசிசத்தின் வீழ்ச்சியும்.

ஏகாதிபத்திய நாடுகளில் 1929-ம் வருட பிற்பகுதியில் ஆரம்பித்த பொருளாதார நெருக்கடி 1933-ம் முடிவுவரையில் நீடித்தது. அதன் பிறகு முதலாளித்துவ உற்பத்தி தேக்கமுற ஆரம்பித்து. சிறிது காலம் தேங்கி நின்ற பிறகு இயந்திரத் தொழில்கள் ஓரளவு உயிர் பெற்று தலைதூக்கின. ஆனால் தலைதூக்கி எழுந்த இந்தப் போக்கு முதலாளித்துவ பொருளுற்பத்தியில் உள்ள முரண்பாட்டின் காரணமாக 1929-ம் வருடத்திய பொருளுற்பத்தி அளவைக்கூட எட்டிப்பிடிக்க முடியாமல் திண்டாடின. அந்த அளவில் நூற்றுக்கு 93 அல்லது 96 பங்கைத்தான் 1937ம் வருடத்தில் அவற்றால் எட்டிப்பிடிக்க முடிந்தது. இந்த நிலைமையில் 1937 ம் வருட பிற்பகுதியில் மீண்டும் ஒரு புதிய பொருளாதார நெருக்கடி ஆரம்ப மாகிவிட்டது. இது பிரதானமாக முதலில் அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் பாதித்தது. 1937-ம் வருட முடிவிற்குள் அமெரிக்காவில் வேலை இல்லாமல் திண்டாடியவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக அதிகரித்தது. கிரேட் பிரிட்டன் மற்றும் பாசிசம் கட்டியமைக்கப் பட்ட நாடுகளிலும் வேலை இல்லாத திண்டாட்டம் வேகமாக அதிகரித்துக் கொண்டிருந்தது.

இவ்விதம் முதல் உலகயுத்தத்தால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட நாசத்திலிருந்து மீள்வதற்குள் முதலாளித்துவ நாடுகள் புதிய பொருளாதார நெருக்கடியால் சூழப்பட்டன. இதன் விளைவாக முதலாளிகளுக்கும் பாட்டாளிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் தீவிரப்பட்டது போலவே ஏகாதிபத்திய நாடுகளுக் கிடையிலான முரண்பாடுகளும் தீவிரமாயின. இதன் காரணமாக மிகவும் பலவீனமான நாடுகளில் சுரண்டுவதன் மூலம் தங்களது உள்நாட்டில் பொருளாதார நெருக்கடியால்ஏற்பட்ட நஷ்டங்களை ஈடுசெய்து கொள்ளும் பொருட்டு ஆக்கிரமிப்புகாரர்களின் பாசிச அரசுகள் ஜப்பான், மற்றும் ஜெர்மனி முன்னைவிட மும்மடங்கு தீவிரமாக முயற்சியில் ஈடுபட்டன முதல் உலக யுத்தத்தில் சகயுத்தக் கூட்டாளிகளான பிரிட்டனாலும் பிரான்சாலும் வஞ்சிக்கப்பட்டதால் இந்த தடவை பாசிச இத்தாலியானது ஜெர்மனி, ஜப்பான் ஆகிய சகஅயோக்கிய பாசிச ஆக்கிரமிப் பாளர்களுடன் சேர்ந்து கொண்டது.

உலகத்தையே ஆரிய இனம் ஆளவேண்டும் என்று இனவாதம் பேசிய ஹிட்லருக்கு “40 நாடுகளில் இத்தாலிய ரோமசாம்ராஜ்யத்தை அமைப்பேன்” என்று கூறிய முசோலினியுடனும் “ஆசியா முழுவதும் நாங்கள்தான் ஆட்சி செய்வோம்” என்ற ஜப்பானிய பாசிஸ்டுகளுடன் உலகச்சந்தையை பங்குபோடுவதற்கு நடக்கும் யுத்தத்தில் கூட்டணி சேர எந்த ஆரிய இனவெறியும் அவனை தடுக்க வில்லை. அதுபோல “உலகத்தில் உன்னத இனம் ஆரியஇனம்தான்” “ஆரியா்களாகிய நாங்கள்தான் உலகத்தை ஆள்வோம்” என்று கூறிய ஹிட்லரோடு கூட்டணி சேர ஜப்பான் நிதிமூலதனக் கும்பலுக்கோ இத்தாலிய நிதிமூலதனக் கும்பலுக்கோ எந்த தயக்கமும்இல்லை. யுத்தத்தில் ஈடுபடும் அந்தந்த நாட்டு நிதிமூலதனக் கும்பலின் நலனுக்குத்தான் யுத்தம் நடக்கிறது என்று யுத்தத்தில் பங்குபெற்ற அனைத்து ஏகாதிபத்தியவாதிகளுக்கும் காலனிய ஆதிக்கவாதிகளுக்கும் தெரியும். அப்பாவி மக்களுக்குத்தான் தெரியாது. அவா்கள்தான் இனவெறிக்கும் மதவெறிக்கும் மற்றும் தேசிய வெறிக்கும் பலிகடா ஆகிறார்கள் மற்றும் ஆக்கப்படுகிறார்கள்.

இந்த இடத்தில் பாசிச சித்தாந்தமானது பச்சோந்தி தனத்தை கொண்டது என்பது பற்றி தோழா் டோக்ளியாட்டி கூறியதை நினைவு கொள்வது சரியாக இருக்கும்.

அவா் கூறுகிறார்…“பாசிச சித்தாந்த மானது பல்வேறு கதம்பக் கூறுகளை தன்னுள் கொண்டுள்ளது. இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த சித்தாந்தம் எந்த நோக்கத்திற்காக செயல்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள இது உதவுகிறது.

மேலும் உழைக்கும் வெகுஜன பகுதியினா் மீது சா்வாதிகாரத்தை திணிப்பதற்கான போராட்டத்தில் பலதரப்பட்ட கோஷ்டிகளை இணைப்பதற்கும் இதன்பொருட்டு ஒரு பரந்த இயக்கத்தை உருவாக்குவதற்கும் இது பயன்படுகிறது. பாசிச சித்தாந்தம் இத்தகைய சக்திகளை பிணைப் பதற்கான கருவியாக அமைந்துள்ளது. இந்த சித்தாந்த்தின் ஒரு பகுதி தேசியவாத பகுதி. நேரடியாகவே முதலாளித்துவ வா்க்கத்திற்கு தொண்டு செய்கிறது. மற்றொரு பகுதி பிணைப்பாக செயல்படுகிறது. பாசிச சித்தாந்தம் மிக உறுதியான, முழுமையான ஒரே சீரான சித்தாந்தம் என்று கருதும் போக்கிற்கு எதிராக உங்களை எச்சரிக்கிறேன்.

பச்சோந்தியைப் போல தோற்றமளிக்க கூடிய பாசிச சித்தாந்தத்தை விட வேறெந்த சித்தாந்தமும் இருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டைக் கூறி பாசிசம்“ எய்த விரும்பும் குறிக்கோள்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பாசிச சித்தாந்தத்தை மதிப்பிடாதீா்கள்” என்றார்.

1935-ம் வருடத்தில் இத்தாலி பாசிஸ்டுகளுக்கு சகஜமாகிவிட்ட அதாவது வழக்கப்படி யுத்தப்பிரகடணம் செய்யாமல் கொள்ளைக்காரனைப் போல் அபிசீனியாவைத் தாக்கி அடிமைப்படுத்தியது. பாசிஸ்டு ஜெர்மனி ஏகாதிபத்தியங்களால் அதன்மீது திணிக்கப்பட்ட வெர்சைல்ஸ் ஒப்பந்தந்தை தன்னிச்சையாக கிழித்தெறிந்தது. 1936-ம் வருடத்தில் ஜப்பான் பாசிஸ்டு இராணுவ வெறியர்கள் சீனாவின் பீக்கிங் மற்றும் ஷாங்காய் நகரத்தை கைப்பற்றினர். இதன் மூலமாக சீனாவில் மறைமுகமாக காலனி ஆதிக்கம் செய்து வந்த பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸிற்கு பெருத்த அடியைக் கொடுத்தனர். ஆக்கிரமிப்பு யுத்தத்திற்கு வசதியாக இத்தாலி, ஜப்பான், மற்றும் ஜெர்மனி முதல் உலகயுத்தத்திற்கு பின் யுத்தத்தில்பங்கு பெற்ற அனைத்து நாடுகளையும் கொண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச சங்கத்திலிருந்து வெளியேறியது.

கீன்சிய பொருளாதாரத்தை கடைபிடித்து ஏராளமாக யுத்த தளவாடங்களை செய்து குவித்தன. . படைகளை குவித்தது. உற்பத்தி இராணுவத்தை நோக்கியே இருந்தது. ஐரோப்பாவின் அரசியல் பூகோள படத்தை பலவந்தமாக திருத்துவதற்கு ஒரு திட்டத்தை தயாரித்தது.

1939ல் ஜெர்மனியானது முதலில் ஆஸ்திரியாவையும் பின் செக்கோஸ்லோவேகியாவையும் அதன் பின் போலந்தையும் பிடித்தனா். . இன்னொரு ஏகாதிபத்திய யுத்தம் உண்மையிலேயே ஆரம்பித்து விட்டது என்பதையே இவையனைத்தும் காட்டியது. யுத்தபிரகடணம் எதுவும் இல்லாமல் பாசிஸ்டுகளால் யுத்தம் துவங்கப்பட்டது. இந்த யுத்தமானது ஆங்கில, பிரெஞ்சு, அமெரிக்க முதலாளித்துவ நலன்களுக்கு விரோதமாகவே துவங்கப்பட்டது என்பது விளங்கும். அதாவது முதல்உலக யுத்தத்தால் பங்குபோடப்பட்ட உலகச்சந்தையை மறுபங்கீடு செய்வதே நோக்கம். ஏனெனில் “ஜனநாயக நாடுகள்” என்று கூறப்பட்ட தேசங்களுக்கு நஷ்டமும், ஆக்கிரமிப்பாளர் நாடுகளுக்கு லாபமும் ஏற்படக்கூடிய வகையில் உலகத்தை புதிய முறையில் திருத்தி பங்கிடுவதும், செல்வாக்கு மண்டலங்களை திருத்தி அமைப்பதுமே இந்த யுத்தத்தின் லட்சியம்.

கீன்சியபொருளாதாரம் பொருளாதார நெருக்கடியை தீர்த்து சுபிட்சத்தை கொண்டுவரும் என்று ஏகாதிபத்திய பொருளாதார வல்லுனர்களால் பிரபலப்படுத்தப்பட்ட அக்கொள்கையானது அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளில் மேலும் பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்தி சந்தையை மறுபங்கீடு செய்வதற்காக அந்நாடுகளை இரண்டாம் உலகயுத்தத்தில் கொண்டு போய் நிறுத்தியது.

பாசிசநாடுகளின் நடவடிக்கைகளை ஆரம்பத்தில் ”ஜனநாயக நாடுகள்” என்று அழைக்கப்பட்ட அமெரிக்கா , பிரிட்டன் மற்றும் பிரான்சு வரவேற்றன. அது முதலாளித்துவ நெருக்கடியை தீர்க்கும் அருமருந்து என்றுதான் பார்த்தன.

வெளிப்படையாகவே கம்யூனிசம்தான் எதிரி, சோவியத் யூனியன்தான் எதிரி , அதை ஒழித்தே தீருவேன் என்று வெளிப்படையாகவே ஹிட்லர் அறிவித்திருந்ததால் அமெரிக்காவும் வெளிப்படையாகவே கம்யூனிசம் முதன்மையாக ஒழித்துக் கட்டப்படவேண்டிய எதிரிதான் என்பதை அமெரிக்காவும் அறிவித்திருந்தது. அனைத்து எகாதிபத்தியங்களும் ஹிட்லர் சோவியத் மீது படையெடுத்து சோசலிசத்தை அழிக்கட்டும் என காத்திருந்தனர்.

அவர்கள் பாசிசத்தைவிட அதிகமாக ஐரோப்பிய தொழிலாளர் வர்க்க இயக்கத்தையும் ஆசியாவின் தேசிய விடுதலை இயக்கங்களையும் மற்றும் சோவியத் ரஷ்யாவிலுள்ள பாட்டாளி வா்க்க சா்வாதிகாரத்தை கண்டுதான் மிகுதியாக பயந்தன. சீனத்தில் போல்ஸ்விக் முறையில் கட்சி கம்யூனிஸ்டு கட்சிகட்டப்பட்டு நிலபிரபுத்துவ ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆயதம்தாங்கிய போராட்டம் தீவிரமாக நடந்து வந்தது. அதனால்தான் இந்த “அபாயகரமான இயக்கங்களை” எதிர்த்து தணிப்பதற்கு ஏற்ற “அபூர்வமான மருந்து” என பாசிசத்தைப் அந்த “ஜனநாயக நாடுகள்” கருதின.

ஆனால் அவர்கள் கருத்துக்கு மாறாக ஹிட்லர் பெல்ஜியத்தையும் ஹாலந்தையும் பிரான்சையும் வெகுவிரைவாக தாக்கி அடிமை படுத்தினான். அதன் பிறகுதான் அதுவரை அச்சுநாடுகளின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பிரிட்டன் தன்மீது ஹிட்லர் படையெடுத்து அழிப்பான் என்று பயந்தே பிரிட்டன் ஜெர்மன் மீது யுத்தபிரகடனம் செய்தது. அமெரிக்காவின் ஒத்துழைப்பை தேடிச் சென்றது. வாய்ப்பை எதிர்பார்த்து இருந்த ஆயுதவிற்பனைக்காகவும் காலனிய மறுபங்கீடு யுத்தத்தில் தான் ஆதாயம் அடைவதற்காகத்தான் பிரிட்டனுடன் அமெரிக்கா சேர்ந்தது.அமெரிக்காவிற்கு அப்போது ஜெர்மனியால் எந்த ஆபத்தும் இல்லை. அது தனது பொருளாதார ஆதாயத்திற்காகவே சந்தையில் மறுபங்கீட்டிற்காகவே பிரிட்டனுடன் இணைந்தது.

பிரிட்டன் முதல் உலகயுத்தத்திற்கு பிறகு பலவீனம் அடையத் துவங்கிஇருந்தது. 1935க்கு பிறகு பிரிட்டனின் ஒருசில காலனிய நாடுகள் பாசிச நாடுகளால் (ஜெர்மன்,இத்தாலி மற்றும் ஜப்பான்) ஆக்கிரமிக்கப்பட்டதன் காரணமாக பிரிட்டன் அமெரிக்காவுடன் கூட்டணி சேர விரைந்தது. பாசிசத்தை ஒழிக்க அல்ல. தன்னையும் தனது காலனிகளையும் தற்காத்துக்கொள்ளவே. அன்று அமெரிக்காதான் பலமான பொருளாதாரப் பலத்தைக்கொண்டு முதன்மையான ஆயுத உற்பத்தியாளனாகவும் ஆயுத வியாபாரியாகவும் இருந்தது. முதல் உலக யுத்தத்தில் நேரடியாக பங்கு பெறாமலேயே யுத்தத்தில் ஈடுபட்ட நாடுகளுக்கு கடன் உதவி மற்றும் ஆயுத விற்பனை செய்து மிகுதியாக கொள்ளையடித்து வந்தது.

லத்தீன் அமெரிக்கா நாடுகளுக்கு அதிக அளவு கடன் கொடுத்து பொருளாதாரத் துறையில் அவைகளை அடிமைப் படுத்தியது. அதாவது நவீனகாலனிய முறையில் அதாவது நேரடி காலனியாதிக்கம் செய்யாமலேயே பொருளாதார ஆதிக்கம் செய்து அந்நாடுகளை சுரண்டிவந்தது. அன்று பொருளாதாரத் துறையிலும் இராணுவத் துறையிலும் பலமான நாடாக அமெரிக்க தான் இருந்தது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள மூலப்பொருள்களையும் உழைப்பையும் கொள்ளையடித்து வந்தது. பல தொழில்களில் முதலீடு செய்துவந்தது நேரடியாக காலனியாதிக்கம் செய்யாமல் மறைமுகமாக தனது கைப்பாவைகளை தரகர்களைக் கொண்டு தனது நிதிமூலதனச் சுரண்டலை நடத்தி வந்தது.. பசிபிக் பிராந்தியத்திலுள்ள பிலிப்பைன்ஸையும் கடன்கொடுத்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. 1940களிலிலேயே அதை தனது படைநிறுத்தும் தளமாக மாற்றியது.

தனது நேரடி காலனிய ஆதிக்கம் இல்லாமலேயே அந்த நாடுகளை ஒட்டச்சுரண்டி வந்தது. பொருளாதார ரீதியாக அடிமைப்படுத்தி விட்டால் அந்த நாட்டை அரசியல் ரீதியாக அடிமைப் படுத்தி விடலாம் என்ற அடிப்படை உண்மையை தனது பொருளாதார நடவடிக்கைகளின் வழியே அறிந்து கொண்டது .

பிரிட்டன் தனது காலனிகளை இழந்து வருவதையும் அனைத்து காலனிய நாடுகளிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் பலமாக நடப்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஏனைய ஏகாதிபத்தியங்களின் காலனிகளையும் புதிய காலனிகளாக மாற்றியமைத்து அதாவது ஏகாதிபத்தியங்களின் நேரடி ஆதிக்கத்தை ஒழித்து மறைமுகமான காலனிய ஆதிக்கத்தை ஏற்படுத்தி அக்காலனிய நாடுகளில் லத்தீன் அமெரிக்கநாடுகளை மாதிரிகளாக கொண்டு தனது சுரண்டலையும் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது. மேலும் காலனிகளை மட்டும் அல்ல 2 ஆம் உலகயுத்தத்தில் பொருளாதார பலத்தை இழந்த ஏகாதிபத்திய நாடுகளையும் உள்ளடக்கி உலகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற பேராசை கொண்டிருந்தது. கூடவே எல்லாவற்றுக்கும் மேலாக ரஷ்யாவின் சோசலிச வளர்ச்சியை முன்மாதிரியாகவும் தூண்டுதலாகக் கொண்டு உலகம் முழுவதிலும் உள்ள உழைப்பாளி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வந்த மற்றும் உலகமுதலாளிகள் கூட்டத்திற்கு கடும் அச்சுறுத்தலாக இருக்கிற கம்யூனிசத்தை அடியோடு ஒழிக்க வேண்டும் என்ற வெறியும் இருந்தது.முதலில் அட்லாண்டிக் சார்ட்டர் என்னும் அரசியல் ஒப்பந்தத்தை தயாரித்தது. பிரிட்டன் அமெரிக்காவிடம் யுத்தக் கூட்டணிக்காக முற்படும் போது, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களையும் கம்யூனிசத்தை நோக்கி மக்கள் திரளுவதையும் கம்யூனிசத்தையும் சுட்டிகாட்டி காலனிய கொள்ளையடிப்பை தொடர்ச்சியாக நடத்த வேண்டுமானால் இனி பழைய முறையில் காலனிகளை ஆளவோ சுரண்டவோ முடியாது என்றும் நேரடி காலனியா திக்கத்தை கைவிட்டு பொருளாதார ரீதியில் அடிமைப் படுத்தி மறைமுகமாக ஒடுக்கிசு் சுரண்டுவதுதான் பாதுகாப் பானது என்றும் ஏனைய ஏகாதிபத்திய வாதிகளுக்கு போதனை செய்தது.

அவ்வாறு செயல்படவில்லையென்றால் காலனிய நாடுகள் அனைத்தும் கம்யூனிசத்தின் செல்வாக்கில் விழுந்துவிடும் மேலும் ஏகாதிபத்திய நாடுகள் சோசலிசமாக மாறிவிடும் என சுட்டிக்காட்டியது. தனது புதிய காலனிகளான லத்தீன் அமெரிக்க நாடுகளை உதாரணம் காட்டி அமெரிக்காவானது அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட வைத்தது. பிரிட்டன் உட்படஏனைய ஏகாதிபத்தியங்களும் நேரடி காலனிய ஆதிக்கத்தை கைவிட ஒத்துக்கொண்டது. காலனிய நாடுகள் (பெயரளவிளான) சுதந்திரநாடுகளாக, ஜனநாயக நாடுகளாக வேடம் போடச்செய்து ஏகாதிபத்தியங்களால் புதிய காலனிய முறையில் அதாவது முன்னிலும் கொடூரமான சுரண்டலுக்கும் கொள்ளைக்கும் மற்றும் ஒடுக்கு முறைக்கும் உட்படுத்தவே. முதலில் இந்த உலகயுத்தமானது “சந்தைகளை மறுபங்கீடு செய்வதற்கான போர்தான்” என தெளிவாக தெரிந்திருந்த சோவியத் ரஷ்யாவானது யுத்தத்தில் பங்கு பெறாமல் விலகியே இருந்தது. 1941ல் பரஸ்பர தாக்குதல் கூடாது என்ற ஒப்பந்தத்ததை ஜெர்மனியிடம் ஏற்படுத்தியிருந்தது. அவ்வொப்பந்தத்தையும் மீறி ஜெர்மன் ரஷ்யாவை தாக்க முற்பட்ட போதுதான் ரஷ்யாவானது தனது சோசலிச நாட்டு தற்காப்பிற்காக பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்காவுடன் பாசிசஎதிர்ப்பு யுத்த அணியில் இணைந்தது.

அட்லாண்டிக் சார்ட்டர் ஒப்பந்தம் உருவாகி ஒரு மாதத்திற்கு பிறகு சோவியத் ரஷ்யாவும் தனது சொந்த நாட்டு பாதுகாப்பை கருதியும் ஜெர்மன் பாசிசத்தை ஒழித்து கட்டவும் என்ற நோக்கில் அதில் கையெழுத்திட்டது.

இதற்கிடையில் நான்காண்டுகள் ஜெர்மனுக்கும் ரஷ்யாவிற்கும் யுத்தம் நடந்து வந்ததை பிரிட்டனும் அமெரிக்காவும் வேடிக்கைதான் பார்த்தன. ரஷ்யா கடும் பொருளாதார சேதத்திற் குள்ளானது. மூன்று ஐந்தாண்டு திட்டங்களில் அடைந்த அனைத்து பயனும் போயின. தொழிற்நகரமான ஸ்டாலின் கிராடு உட்பட பலவேறு நகரங்கள்பாசிச ஜெர்மானியின் இராணுவ தாக்குதலினால் படுநாசத்திற் குள்ளானது. சுமார் இரண்டு கோடி ரஷ்யர்கள் தங்களது சொந்த தேசத்தை பாதுகாக்கவும் பாசிசத்தை வீழ்த்தவும் கம்யூனிசத்தை பாதுகாக்கவும் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர்.

1945 ஆம்ஆண்டு நடந்த இறுதியுத்தத்தில் ஜொ்மன் நாஜிப்படை சோவியத் செம்படையின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்கமுடியாமல் பின்வாங்கி தான் புறப்பட்டுவந்த பொ்லினை நோக்கி புறமுதுகிட்டு தலைதெறிக்க உயிரை கையில்பிடித்து கொண்டு தறிகெட்டு ஓடியது. இந்த உலகத்தை ரைஸ்டாக் (ஜொ்மன் பாராளுமன்றம்) ஆயிரம் ஆண்டு காலம் ஆட்சி புரியும்” என்று சவால்விட்ட, கம்யூனிசத்தை இழிவு படுத்தியவனும் ரஷ்யாவில் சோசலிசத்தை வீழ்த்தியே தீருவேன் என்று வீரவசனம் பேசிய ஹிட்லா் ரஷ்ய செம்படை பொ்லினில் நுழைந்து ஹிட்லரின் கோட்டையில் செங்கொடி ஏற்றிய செய்தியை கேள்விப் பட்டவுடனேயே தனது காதலியுடன் சயனைடு விஷம் சாப்பிட்டும், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டும் கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டான். பொ்லினிலிருந்த செம்படை ஹிட்லா் கைப்பற்றியிருந்த அனைத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் அந்தந்த நாட்டு கம்யூனிஸ்டு கட்சிகளிடம் ஒப்படைத்துவிட்டு மாஸ்கோ திரும்பியது.

இரண்டாம் உலகயுத்தத்தில் இத்தாலி கேவலமான முறையில் தோற்றுப் போனது. தனது காலனி நாடுகள் அனைத்தையும் இழந்தது. யுத்தத்தின் மூலம் 40 நாடுகளை அடிமைப் படுத்தி “ பழைய ரோம சாம்ராஜ்யத்தை நிறுவுவேன்” என்ற பாசிஸ்டு முசோலினியின் கனவு தவிடு பொடியானது. இத்தாலியை விட்டு தப்பித்து ஓடுகையில் அந்நாட்டிலிருந்த பாசிச எதிர்ப்பு கம்யூனிஸ்டு குழுவிடம் பிடிபட்டு அவர்களால் அடித்தே கொல்லப்பட்டு தொங்கவிடப்பட்டான் முசோலினி. இதுவே வரலாற்றில் பாசிசத்திற்கும் பாசிஸ்டுகளுக்கும் ஏற்பட்ட கதியாகும்.

ஆதலால்தான் தோழர் டிமிட்ரோவ் கூறும் போது,

“,பாசிசம் ஒரு கொடிய ஆனால் நிலையற்ற ஆட்சி அதிகாரம் ஆகும். பூர்ஸ்வா வர்க்கத்தின் பாசிச சர்வாதிகாரம் ஒரு கொடிய ஆட்சி அதிகாரம் ஆகும் ஆனால் அது நிலையற்றது. ” என்கிறார்.

பாசிச சர்வாதிகாரத்தின் நிலையற்ற நிலைமைக்கான முக்கியமான காரணங்கள் என்ன?

"பாசிசம் முதலாளித்துவ சமூகத்திற்குள்ளேயே உள்ள பிணக்கங்களையும் பகைமையையும் சமாளித்து சரிப்படுத்துவதாக பொறுப் பேற்ற போதிலும் உண்மையில் பாசிசம் அந்த பகைமைகளை மேலும் அதிகமாகத் தான் செய்தது. பாசிசம் இதர அரசியல் கட்சிகளை வன்முறையாக அழிப்பதன் மூலம் தனது அரசியல் ஏகபோக ஆதிக்கத்தை ஸ்தாபிக்க முயற்சிக்கிறது . ஆனால் முதலாளித்துவ அமைப்பு நிலையில் இருப்பது பலவேறு வரக்கங்களும் வர்க்க முரண்பாடுகள் கூரிய நிலையில் இருப்பது தவிர்க்க முடியாதபடி பாசிசத்தின் அரசியல் ஆதிக்கம் சீழறுந்து அழிவை நோக்கியும் திடீரென்று வெடித்து நாசமடைவதை நோக்கியும் கட்டாயம் செல்லத்தான் செய்யும்".

"ஒரு பாசிஸ்டு நாட்டில் பாசிஸ்டுகளின் கட்சி அதனுடைய ஏகபோக ஆதிக்கத்தை நீண்டநாள் நிலைத்து வைத்திருக்க முடியாது. காரணம் அது வரக்கங் களையும் வர்க்க முரண்பாடு களையும் ஒழிப்பதை தனது கடமையாக கொள்ள முடியாது. அது பூர்ஸ்வா கட்சிகள் சட்டபூர்வமாக இருப்பதற்கே ஒரு முடிவு கட்டி விடுகிறது. ஆனால் பல கட்சிகள் மறைவாக இருந்து செயல்படுகின்றன. இன்னும் கம்யூனிஸ்டு கட்சி தடைசெய்யப்பட்ட நிலையிலும் தொடர்ந்து பணியாற்றி மேலும் பலமடைந்து முன்னேறுகிறது.

மேலும் உறுதிப்பட்டு வார்த்தெடுக்கப்பட்டு பாசிச சர்வாதிகாரத்திற்க எதிராக பாட்டாளி வரட்க்கத்தின் போராட்டத்தை தலைமைதாங்கி நடத்துகிறது. எனவே வர்க்க முரண்பாடுகளின் அடிதடுகளில் பாசிசத்தின் அரசியல் ஏகபோபக ஆதிக்கம் நிச்சயம் வெடித்தே உடைந்தே தீரும்.

” பாசிச சர்வாதிகாரத்தின் நிலையற்ற தன்மைக்கு மற்றொரு காரணம்“ அதனுடைய முதலாளித்துவ எதிர்ப்பு வாய்ச்சவுடால்களுக்கும் மிகவும் படுமோசமாக கொள்ளையடிக்கும் ரீதியில் ஏகபோகமுதலாளித்துவம் கொள்ளை லாபம் அடிப்பதற்கான அதனுடைய கொள்கைக்கும் இடையில் உள்ள நேர்எதிரான வேறுபாடு காரணமாய் பாசிசத்தின் வர்க்கத்தன்மை அமபலமாகி அதன் வெகுஜன அடிப்படை குறுகிக்குறுகி ஆட்டம் கண்டு அழிவதை நோக்கி சென்றுவிடுகிறது.

மேலும் பாசிசத்தின் வெற்றி மக்களிடம் ஆழமான வெறுப்பையும் கோபா வேசத்தையும் கிளப்பி விடுகிறது. மக்களை புரட்சிகரமாக்குவதற்க உதவி செய்கிறது. பாசிசத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கிய முன்னணிக்கு ஒரு வலுவான உத்வேகத்தை அளிக்கிறது. ”

வரலாற்றில் பாசிசம் என்பது தற்காலிக மானதுதான் நிலையற்றது தான் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. இந்த பாசிச எதிர்ப்பு யுத்தத்தில், பாட்டாளிவா்க்க அரசை பாதுகாக்கும் யுத்தத்தில் இரண்டு கோடி ரஷ்ய உழைப்பாளி மக்கள் உயிர்த்தியாகம் செய்தனா். ஐந்தாண்டு திட்டங்களின் மூலம் உழைப்பாளா்களின் உழைப்பு மூலம் வளா்ந்திருந்த ரஷ்யாவின் சோசலிச பொருளாதார வளா்ச்சி படுநாசத்திற்கு உள்ளானது. ஆனால் தோழா் ஸ்டாலின் தலைமையிலான போல்ஸ்விக் கட்சியின் வழிகாட்டுதலின் காரணமாக சோவியத் உழைப்பாளி மக்கள் மற்றும் செம்படையின் வீரம் செறிந்த போராட்டம் மற்றும் ரஷ்ய மக்களின் கடுமையான தியாகத்தின் காரணமாகவே பாசிசம் வீழ்த்தப்பட்டது. அதே சமயத்ததில் மூன்றாம் அகிலத்தின் வழிகாட்டுதலுக்கேற்ப ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் கம்யூனி்ஸ்டு கட்சியின் தலைமையில் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி கட்டப்பட்டிருந்து.

அதன் தலைமையில் பாசிசத்ததால் ஒடுக்கப்படுகிற வா்க்கங்களை திரட்டி பாசிச எதிர்ப்பு போராட்டம் நடந்ததும் பாசிசம் வீழ்த்தப்படுவதற்கு முக்கிய காரணமாகும்

1941 ஆம் ஆண்டு முதல் 1945 வரை நான்கு ஆண்டு காலம் ரஷ்யாவானதுஜொ்மனியின் பாசிச இராணுவத் தாக்குதலை தனி ஒரு நாடாக எதிர் கொண்டு இறுதியில் முறியடித்தது. கடுமையான பொருளாதார நாசத்திற்கும் உயிரிழப்பிற்கும் உள்ளானாலும் வெகுவிரைவிலேயே பழைய வளா்ச்சியை எட்டிபிடித்தது. 1949ல் அணுகுண்டு சோதனையை நடத்தியது. ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. விண்வெளியில் ராக்கெட்டை ஏவியது. இவையெல்லாம் ஏகாதிபத்தியத்தின் துணையின்றி சுயேச்சையான சோசலிச பொருளாதார வளா்ச்சியின் சாதனையாகும். இதன் மூலம் ஒரு நாடு எந்த ஒரு ஏகாதிபத்தியத்தின் மூலதனத்கைச் சாராமலேயே அந்நிய தொழில் நுட்பம் சாராமலேயே சொந்த நாட்டு உழைப்பாளி மக்களின் உழைப்பை மட்டும் கொண்டு ஏகாதிபத்திய நாடுகளை காட்டிலும் அனைத்து துறைகளிலும் பயங்கரமான வளர்ச்சியை எட்டமுடியும் என்பதை உலகத்தின் முன் முதன்முதலாக சோவியத் ரஷ்யா நிரூபித்தது. இதைத் தொடர்ந்து சோசலிச சீனமும் 1949க்கு பிறகு சுயேச்சையான வளர்ச்சியை நிரூபித்த மற்றொரு நாடாகும்.

இத்தகைய நிலையை அடைய அந்நிய ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை ஒழித்து உண்மையான சுதந்திரத்தை அடைவதும் மேலும் சொந்த நாட்டில் முதலாளித்துவ தனிச்சொத்துடமையும் சுரண்டலையும் ஒழித்து உற்பத்தி சாதனங்களில் சமூகவுடமையை அடிப்படையாகக் கொண்ட உண்மையான மக்கள் ஜனநாயக சர்வாதிகார ஆட்சியை நிறுவவதும் முன்நிபந்தனையாகும்.


இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்