மார்க்சிய லெனினிய தத்துவம் பயில்வதற்கு அடிப்படை-5

 மார்க்ஸீயத்துனால்‌ தத்துவத்தில்‌ விளைக்கப்பட்டபுரட்சிகர மாற்றம்‌

 மார்க்ஸீய-லெனினீயத்‌ தத்துவ விஞ்ஞானம்‌ அகுற்கு முன்பு இருந்த தத்துவம்‌, தற்கால பூர்ஷ்வாத்‌ தத்துவம்‌ ஆகியவை எல்லாவற்றிலுமிருந்து பண்பளவில்‌ வேறுபட்டது ஆகும்‌. கார்ல்‌ மார்க்ஸ்‌, பிரெடெரிக்‌ எங்கெல்ஸ்‌, இருவராலும்‌ உருவாக்கப்‌ பட்டு விளாதீமிர்‌ இல்யீச்‌ லெனினால்‌ விரிவுபடுத்தப்பட்ட இந்தத்‌ தத்துவம்‌ பொருள்முதல்வாதத்தையும்‌ இயக்கவிலையும்‌ இணையுறுப்புக்களாகப்‌ பொருத்துகிறது. இயற்கை, சமூகம்‌, சிந்தனை ஆகியவற்றுக்கு உரிய நிகழ்ச்சிகளை அறிவதற்கு, ஒன்றான இயக்கஇயல்‌-பொருள்முதல்வாதச்‌ சித்தாந்‌தாந்தமும்‌ முறையும்‌ இதில்‌ கையாளப்பட்டன. முழுமையான, செப்பமாக அமைந்த விஞ்ஞானரீதியான இந்தக்‌ தத்துவக்‌ கண்ணோட்டம்‌ தொழிலாளி வர்க்கத்தினதும்‌ உழைப்பாளி மக்‌கள்‌ அனைவரதும்‌ புரட்சிப்‌ போராட்டத்தின்‌ நோக்கங்களுக்கு வரலாற்றில்‌ முதன்‌முறையாகத்‌ தொண்டாற்றலாயிற்று. மார்க்ஸீயம்‌ 19 நூற்றாண்டின்‌ 40க்களில்‌ ஜெர்மனியில்‌ உதயமாயிற்று. விஞ்ஞானம்‌, சமூக-வரலாற்று நடைமுறை ஆகியவை அனைத்தினுடையவும்‌ வளர்ச்சியின்‌ விதிமுறைக்கு ஏற்ற விளைவாக விளங்கியது அது. அந்தக்‌ காலத்திற்குள்‌ பூர்ஷ்‌வாச்‌ சமூகத்தில்‌ முதலாளித்துவ உற்பத்திமுறையின்‌ ஆழ்ந்த முரண்பாடுகள்‌ வெளிப்பட்டுவிட்டன. அதே சமயம்‌ பாட்டாளி வர்க்கத்தைச்‌ சுறண்டலிலிருந்து விடுவிப்பதற்கான எதார்த்தச்‌ சூழ்நிலமைகள்‌ உருவாகியிருந்தன. பாட்டாளி வர்க்கத்துக்‌ கும்‌ பூர்ஷ்வா வர்க்கத்துக்கும்‌ இடையே வர்க்கப்‌ போராட்டம்‌ இந்த அடிப்படையில்‌ வளர்ந்து தீவிரம்‌ அடைந்தது. அதன்‌ நோக்கங்கள்‌ போதிய தெளிவுடன்‌ நிச்சயிக்கப்பட்டன. தொழிலாளி வர்க்கம்‌ தனது பொருளாதார, அரசியல்‌ உரிமைகளுக்காக ஊக்கத்துடன்‌ போராடியது. லியோன்‌ நகரில்‌ பிரெஞ்சுத்‌ தொழிலாளர்களின்‌ கிளர்ச்சி (1871, 1884), ஜெர்மனியில்‌ ஸைலேஷிய நெசவாலைத்‌ தொழிலாளர்களின்‌ கிளர்ச்சி (1844), இங்கிலாந்தில்‌ சார்ட்டிஸ்டுகளின்‌ இயக்கம்‌ (1880-1840) ஆகியன இதற்குச்‌ சான்று பகிர்கின்றன.

பாட்டாளி வர்க்கத்தின்‌ வர்க்கச்‌ சுதந்திரப்‌ போக்கு, பூர்ஷ்வாச்‌ சமூகத்தின்‌ சமுதாய வாழ்க்கை நியமங்களை ழிப்பதுபற்றிய அதன்‌ அசையா உறுதி ஆகியவற்றை அதனுடைய வரலாற்று முக்கியத்துவம்‌ வாய்ந்த போராட்டங்கள்‌ காட்டின. புரட்சிகரத்‌ தொழிலாளி இயக்கத்துக்குத்‌ தேவையாக இருந்தவை உழைப்பாளி மக்களது போராட்டத்தின்‌ குறிக்‌ கோள்கள்‌, கடமைகள்‌ ஆகியவற்றுக்கு உரிய விஞ்ஞான அடிப்படையை நிறுவுவதும்‌ முதலாளித்துவ அமைப்பை ஒழித்துப்‌ புதிய சமூகத்தை நிறுவுவதற்கு ஏற்ற வழிகளையும்‌ சாதனங்களையும்‌ நிச்சயிப்பதுமே. நவீனச்‌ சமூகத்தின்‌ மிகப்‌ புரட்சிகரமானதும்‌ எல்லா உழைப்பாளி மக்களின்‌ நலன்களுக்காகவும்‌ த்தியைந்த முறையில்‌ போராடுவதுமான பாட்டாளி வர்க்கத்‌தின்‌ மூலாதார நலன்களின்‌ சித்தாந்த வெளியீடாக விளங்கியது மார்க்ஸீயம்‌. மார்க்ஸீயக்‌ கண்ணோட்டத்தின்‌ உதயம்‌ அதற்கு முந்திய விஞ்ஞானச்‌ சாதனைகளுக்கு மறுப்பாக அர்த்தப்படவில்லை. சாஸ்திரீய ஜெர்மானியத்‌ தத்துவமும்‌ (இ. கான்ட்‌, கி. ஹெகல்‌, ௮. பாயர்பாக்‌)), ஆங்கில அரசியல்‌ பொருளாதாரமும்‌ [ஆதம்‌ ஸ்மித்‌, டேவிட்‌ ரிக்கார்டோ (David Ricardo) ], பிரெஞ்சுக்‌ கற்பனா சோஷலிஸமும்‌ [அன்ரீ ஸான்‌-ஸிமோன்‌ Henri Saint-Simon), சாரலஸ் பூரியே (Charles Fourier)] மார்க்‌ ஸீயத்தின்‌ சித்தாந்த ஊற்றுக்கண்கள்‌ என வி. இ. லெனின்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

தனக்கு முந்திய வரலாற்று வளர்ச்சிக்‌ காலம்‌ முழுவதிலும்‌ முற்போக்குச்‌ சமூகச்‌ சிந்தனையால்‌ உருவாக்கப்பட்ட சிறந்தவற்றை எல்லாம்‌ மார்க்ஸீயம்‌ தன்‌னுள்‌ நிறைத்துக்கொண்டது. “மார்க்ஸீயம்‌ பூர்ஷ்வாச்‌ சகாப்தத்தில்‌ பெறப்பட்ட மதிப்பு மிக்க சாதனைகளைச்‌ சற்றும்‌ நிராகரித்து ஒதுக்கவில்லை. மாறாக, மனிதச்‌ சிந்தனை, பண்பாடு ஆகியவற்றின்‌ இரண்டாயிரம்‌ அண்டுகளுக்கு மேற்பட்ட வளர்ச்சியில்‌ இருந்த விலைமதிப்புள்ள அம்சங்களை எல்லாம்‌ ஏற்றுக்கொண்டு சீர்படுத்திக்‌கொண்டது. புரட்சிகரப்‌ பாட்டாளி வர்க்கத்தின்‌ கொள்கைவாதம்‌ என்ற முறையில்‌ மார்க்ஸீயம்‌ உலக வரலாற்று முக்கியத்துவம்‌ பெற்றதற்குக்‌ காரணம்‌ இதுவே” (வி. இ. லெனின்‌. முழு நூல்திரட்டு, தொகுதி 47, பக்கம்‌ 337) இவ்வாறு எழுதினார்‌ லெனின்‌.

இயக்க இயல்‌, வரலாற்றுப்‌ பொருள்முதல்வாதம்‌ உருவாக்கப்பட்டது மார்க்ஸீயத்தின்‌ வேறு இரண்டு உள்ளுறுப்புக்களான மார்க்ஸீயப்‌ பொருளாதாரப்‌ போதனை, விஞ்ஞான சோஷலிஸத்தின்‌ சித்தாந்தம்‌ ஆகியவை உருவாக்கப்பட்டதுடன்‌ துணிக்க முடியாதவாறு தொடர்பு கொண்டிருந்தது. அரசியல்‌ பொருளாதாரம்‌ அனைத்தையும்‌ அதன்‌ அடிப்படையிலிருந்து தொடங்கிச்‌ செப்பம்‌ செய்வதற்கும்‌ வரலாற்றுக்கும்‌ இயற்‌கை விஞ்ஞானத்துக்கும்‌ தத்துவத்துக்கும்‌ தொழிலாளி வர்க்கத்தின்‌ அரசியலுக்கும்‌ செயல்முறைக்கும்‌ பொருள்முதல்வாத இயக்க இயலைப்‌ பயன்படுத்துவதுதான்‌ மார்க்ஸுக்கும்‌ எங்கெல்ஸாக்கும்‌ எல்லாவற்றையும்‌ விட அதிகஅக்கறைக்கு உரியனவாக விளங்குகின்றன.  அவர்கள்‌ உட்புகுத்தியயாவற்‌றிலும்‌ முக்கியமான, யாவற்றிலும்‌ புதிய அம்சங்கள்‌ இவையே. புரட்சிகரச்‌ சிந்தனையின்‌ வரலாற்றில்‌ அவா்களது மேதை வாய்ந்த முன்னடிவைப்பு இவற்றிலேயே உள்ளது” (வி.இ.லெனின்‌. முழு நூல்திரட்டு, தொகுதி 24, பக்கம்‌ 264) என்று எழுதினார்‌ வி. இ. லெனின்‌.

வரலாறு இயக்கஇயல்‌-பொருள்முதல்வாத முறையில்‌ புறிந்து கொள்ளப்பட்டது, முதலாளித்துவத்தின்‌ ஆழ்ந்த முரண்பாடுகளும்‌ அதன்‌ வளர்ச்சிக்குரிய விதிமுறைகளும்‌ திறந்து காட்டப்பட்டது, இவற்றின்‌ விளைவாக முதலாளித்துவம்‌ தவிர்க்க இயலாமல் மடிந்து ஓழியும்‌, அடுத்துவரும்‌ சோஷலிஸப்‌ புரட்சியில்‌ அது அழிக்கப்படுவது வரலாற்று ரீதியில்‌ இன்றியமையாது என்ற முடிவு முன்‌ ஒருபோதும்‌ இல்லாத அளவு தெளிவாகிவிட்டது. மார்க்ஸும்‌ எங்கெல்ஸும்‌ மிகச்‌ செயலூக்கத்துடன்‌ பங்கு கொண்ட தொழிலாளி வர்க்கப்‌ போராட்டம்‌ அவர்‌களது தத்துவத்துக்குப்‌ புரட்சிகர உள்ளடக்கத்தைத்‌ தந்தது.

 

கம்யூனிஸ உலகக்‌ கண்ணோட்டத்தின்‌ பொதுச்‌ சித்தாந்த அடிப்படையாகத்‌ தங்கள்‌ தத்துவ முறையை உருவாக்கியதன்‌ வாயிலாக மார்க்சும்‌ எங்கெல்சும்‌ கருத்துமுதல்வாத இயக்கவியல், மாரறாநிலைவாதப்‌ பொருள்முதல்வாதம்‌ ஆகியவற்றின்‌ கோளாறுகளையும்‌ குறைகளையும்‌ அகற்றுவதிலும்‌ முந்திய த்துவத்தில்‌ இயக்க இயல்வியல் பொருள்முதல்வாத்துக்கும்‌ இடையே நிலவிய பிளவை நீக்குவதிலும்‌ மிகப்‌ பெரிய தொண்டு ஆற்றினார்கள்‌.

நாம்‌ ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போல, மார்க்ஸீயத்துக்கு முற்பட்ட பொருள்முதல்வாதம்‌ இயக்கவியல்‌ தொடர்பு அற்றதாக, வரலாற்றுக்‌ தொடர்பு அற்றதாக இருந்‌து. வளர்ச்சியை அது மிக எளிய வகையில்‌ புரிந்துகொண்ட.து. வளர்ச்சி பற்றிய போதனை பிரதானமாக ஹெகலின்‌ இயக்க இயல்‌ வாதத்தில்‌ உருவாக்கப்பட்டது, ஆனால்‌ அது கருத்துமுகல்‌ வாத நோக்கு கொண்டிருந்தது. எங்கெல்ஸ்‌ குறிப்பிட்டது போல, “ஹெகலின்‌ இயக்கஇயலில்‌ இருந்த திரிபின்‌ அடிப்படை என்னவென்றால்‌, ‘ஹெகலின்‌ கருத்துப்படி அது கருத்தின்‌ சுயவளர்ச்சியாகஇருக்க வேண்டும்‌ என்பதே. இதன்படி, பொருள்களின்‌ இயக்க இயல்‌ கருத்தின்‌ பிரதிபலிப்பே ஆகும்‌. உண்மையிலோ, நமது மூளையில்‌ தோன்றும்‌ இயக்க இயல்‌, இயற்கைப்‌ பிரபஞ்சத்திலும்‌ மனித சமூகத்திலும்‌ ஏற்படுவதும்‌ இயக்க இயல்‌ வடிவுக்கு உட்பட்டதுமான எதார்த்த வளர்ச்சியின்‌ பிரதிபிம்பமே.” (கார்ல்‌ மார்க்ஸும்‌ பிரெடெரிக்‌ எங்கெல்ஸும்‌. நூல்திரட்டு, தொகுதி 38, பக்கம்‌ 177).  மார்க்ஸீயத்தின்‌ ஸ்தாபகர்கள்‌ ஹெகலின்‌ கருத்துமுதல்வா இயக்க இயல் மீது விமர்சன ரீதியில்‌ மீண்டும்‌ சிந்தனை செலுத்தி, பொருள்முதல்வாத இயக்க இயவியலை உருவாக்கினார்கள்‌. இது பண்பளவில்‌ புதிய இயக்க இயல்‌ வாத முறையாகும்‌. “எனது இயக்க இயல்வா முறைதன்‌ அடிப்படையில்‌ ஹெகலின்‌ முறையிலிருந்து வேறானது மட்டும்‌ அல்ல, அதன்‌ நேர்‌ எதிர்நிலை ஆகவும்‌ விளங்குகிறது” (கார்ல்‌ மார்க்ஸும்‌ பிரெடெரிக்‌ எங்கெல்ஸும்‌. மூல தினம்‌”, நூல்திரட்டு, தொகுதி 24, பக்கம்‌ 21) என்று எழுதினார்‌ மார்க்ஸ்‌.

பொருள்முதல்வாத இயக்க இயவியலைச்‌ செவ்வையாக உருவாக்குகையில்‌ மார்க்ஸும்‌ எங்கெல்ஸும்‌ 19ம்‌ நூற்‌றாண்டின்‌ மிகப்‌ பெரிய இயற்கை விஞ்ஞானக்‌ கண்டுபிடிப்புக்‌களை ஆதாரமாக எடுத்துக் கொண்டார்கள்‌. அங்கஜீவிகளின்‌ உயிரணுக்‌ கட்டமைப்பு பற்றிய சித்தாந்தம்‌, ஆற்றலின்‌ அழியாமையையும்‌ மாற்றத்தையும்‌ பற்றிய விதி, விலங்கினங்‌கள்‌, தாவர இனங்கள்‌ ஆகியவற்றின்‌ தோற்றத்தையும்‌ வளர்ச்சியையும்‌ குறித்த டார்வினது போதனை, இவற்றை அவர்கள்‌ முதன்மையாக ஆதாரமாக எடுத்துக்கொண்டார்கள்‌. பொருளியல்‌ பிரபஞ்சம்‌ ஏதோ சதா சர்வ காலத்திற்கும்‌ நிலைத்திருப்பது என்றும்‌ மாறுதல்‌ அற்றது என்றும்‌ கருதிய மாறாநிலைவாகக்‌ கண்‌ ணோட்டத்தை இந்தக்‌ கண்டுபிடிப்புக்கள்‌ அதாரத்துடன்‌ மறுத்து விட்டன. பிரபஞ்சத்தின்‌ பொருள்களும்‌ நிகழ்ச்சிகளும்‌ மாறுதலும்‌ வளர்ச்சியும்‌ கொண்டவை, ஒன்றானவை, பரஸ்பரத்‌ தொடர்பு உள்ளவை என்ற இயக்க இயலின்‌ அடிப்படைக்‌ கோட்பாடுகளை இவை உறுதிப்படுத்தின்‌. இந்தக்‌ கண்டுபிடிப்புக்‌களின்‌ தத்துவ முக்கியத்துவம்‌ முதன்மையாக இவ்விஷயத்‌தில்‌ தான்‌ அடங்கியுள்ளது. மார்க்ஸீயகத்‌ தத்துவப்‌ பொருள்முதல்வாகமும்‌ பழைய பொருள்முதல்வாதத்தின்‌ மறு உயிர்ப்பாக மட்டுமே இருந்து விடவில்லை. 19ம்‌ நூற்றாண்டின்‌ இயற்கை விஞ்ஞானக்‌ கண்டு பிடிப்புக்களைப்‌ பயன்படுத்திக்கொண்டு மார்க்ஸும்‌ எங்கெல்ஸும்‌ பழைய, மாறாநிலைவாதப்‌ பொருள்முதல்வாகத்தை அடி யோடு மாற்றிச்‌ சீரமைத்தார்கள்‌. பொருள்முல்வாதத்தை இயக்க இயவியலுடன்‌ ஒன்றிணைத்து இயக்க இயல்‌ பொருள்‌ முதல்வாதத்தை அவர்கள்‌ உருவாக்கினார்கள்‌. பிரபஞ்சத்தை மாற்றி அமைப்பதற்கான சித்தாந்தக்‌ கருவி என்ற வகையில்‌ இயக்க இயல்‌ பொருள்முதல்வாதம்‌ உருவாக்கப்பட்டது தத்துவச்‌ சிந்தனை தோன்றிய காலம்‌ முதற்கொண்டு அதன்‌ வரலாறு முழுவதிலும்‌ அதனுடைய மிகப்‌ பெரும்‌ நிறைவேற்றமாகவும்‌ தத்துவத்தில்‌ புரட்சிகர மாற்றமாகவும்‌ திகழ்த்தது.

பழைய பொருள்முதல்வாதத்தின்‌ வரையறுத்த இயல்பு மாறாநிலைவாதத்‌ தன்மை கொண்டிருந்ததில்‌ மட்டுமே அடங்கி யிருக்கவில்லை. அது கடைசிவரை த்தியைந்ததாகவும்‌ இருக்க வில்லை, ஏனெனில்‌ மார்க்ஸீயத்துக்கு முந்திய பொருள்முதல்‌ வாதிகள்‌ அதைச்‌ சமூக நிகழ்ச்சிகளுக்குப்‌ பொருந்தச்‌ செய்யத்‌ திறனற்றவர்களாக இருந்தார்கள்‌. மார்க்ஸும்‌ எங்கெல்ஸும்‌ பொருள்முதல்வாதக்தகை உச்சிவரை நிறுவிப்‌ பூர்த்தி செய்தார்கள்‌”. அவர்கள்‌ வரலாற்று ரீதியான பொருள்முதல்‌ வாத்தை உருவாக்கினார்கள்‌. சமூக வளர்ச்சிக்குரிய மிகப்‌ பொதுவான விதிகள்‌ பற்றிய விஞ்ஞானம்‌ இது. தத்துவத்தில்‌ அவர்கள்‌ நிகழ்த்திய புரட்சிகரமான மாறுதலின்‌ வெளியீடாக இதுவும்‌ விளங்கியது. மார்க்ஸீயத்‌ தத்துவம்‌ வெவ்வேறு வர்க்கங்களின்‌, மூதன்‌ மையாகத்‌ தொழிலாளி வர்க்கத்தின்‌ வாழ்க்கைக்குரிய சமூக நிலைமைகளை எல்லாக்‌ கோணங்களிலிருந்தும்‌ ஆராய்ந்து, வரலாற்றில்‌ உழைப்பாளி மக்கள்‌ ஆற்றியுள்ள உண்மையான பங்கையும்‌ அவர்களது புரட்சிகரச்‌ செயல்களின்‌ முக்கியத்‌துவத்தையும்‌ காட்டியது. மார்க்ஸீயத்தின்‌ தோற்றத்துக்குப்‌ பின்‌ தத்துவம்‌ விரிவான மக்கள்‌ திரளின்‌ உடைமை, கோடானு கோடி மக்களது போராட்டக்‌ கொடி ஆகிவருகறது. விஞ்ஞானச்‌ சித்தாந்தத்தையும்‌ புரட்சி நடைமுறையையும்‌, தத்துவத்தையும்‌ அரசியலையும்‌ மார்க்ஸீயம்‌-லெனினீயம்‌ இணையுறுப்புக்களாக ஓன்று சேர்த்துவிட்டது. மார்க்ஸியத்‌ த்துவத்தின்‌ புரட்சிகரமான மாற்றியமைக்கும்‌ பங்கு கார்ல்‌ மார்க்ஸின்‌ பின்வரும்‌ கருத்துக்களில்‌ வெளியிடப்பட்டுள்ளது. முந்திய தத்துவ அறிஞர்கள்‌ வெவ்வேறு விதமாகப்‌ பிரபஞ்சத்‌தை விளக்க மட்டுமே செய்தார்கள்‌; உண்மையிலோ, பிரபஞ்‌சத்தை மாற்றுவது தத்துவ அறிஞனின்‌ வேலையில்‌ அடங்கியது. மார்க்ஸீயத்‌ த்துவத்தின்‌ வலிமையும்‌ உயிரோட்டமும்‌ சமூகத்தைப்‌ புரட்சிகரமாகப்‌ புதுக்கி அமைப்பதற்குரிய திட்ட வட்டமான கடமைகளுடன்‌ அதன்‌ தொடர்பிலேயே உள்ளன. பிரபஞ்சத்தை அறிவதற்கும்‌ மாற்றி அமைப்பதற்குமான முறை என்ற வகையில்‌ மார்க்ஸீயத்‌ தத்துவ விஞ்ஞானம்‌ மக்கள்‌ திரளின்‌ புரட்சிப்‌ போராட்ட அனுபவம்‌, விஞ்ஞானமும்‌ நடைமுறையும்‌ அளிக்கும்‌ மதிப்புயர்ந்த படிப்பினைகள்‌ ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ இடையறாது வளர்ச்சியும்‌ வளமும்‌ பெற்று வருகிறது. தனது இயல்பு காரணமாகவே அது படைப்புக்‌ தன்மை கொண்ட விஞ்ஞானமாக விளங்குகிறது.

மார்க்ஸீயத்தின்‌ பொதுச்‌ சித்தாந்த அடிப்படையான இயக்கவிலை, வரலாற்று ரீதியான பொருள்முதல்வாதம்‌ உட்பட அதன்‌ எல்லா உறுப்புப்‌ பகுதிகளையும்‌ மேற்கொண்டு விரிவும்‌ வளமும்‌ படுத்தியவர்‌ ரஷ்ய, சர்வதேசப்‌ பாட்டாளி வர்க்கத்‌ தலைவரும்‌ ரஷ்யக்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியையும்‌ சோவியக்‌ அரசையும்‌ ஸ்தாபித்தவருமான விளாதீமிர்‌ இல்யீச்‌ லெனின்‌ ஆவார்‌.

மார்க்ஸீயத்‌ தத்துவத்தில்‌ லெனினது காலக்‌ கட்டம்‌ பாட்டாளி வர்க்கச்‌ சர்வாதிகாரத்தின்‌ பொருட்டும்‌ சோஷலிஸத்தின்‌ வெற்றியின்‌ பொருட்டும்‌ தொழிலாளி வார்க்கத்தின்‌ தலைமையில்‌ உழைப்பாளி மக்கள்‌ திரளின்‌ போராட்டத்தில்‌ புதிய வரலாற்றுச்‌ சகாப்தத்தைக்‌ குறிக்கிறது. பொருள்முதல்வாத இயக்கஇயலையும்‌, தத்துவப்‌ பொருள்முதல்வாதத்தையும்‌ அறிதல்‌ சித்தாந்தத்தையும்‌ வி. இ. லெனின்‌ படைப்புத்‌ தன்மையுடன்‌ விரிவும்‌ வளமும்‌ படுத்தினார்‌. 19ம்‌ நூற்றாண்டின்‌ இறுதியிலும்‌ 20ம்‌ நூற்றாண்டின்‌ தொடக்கத்திலும்‌ விஞ்ஞானம்‌ பெற்ற மிகப்‌ புதிய சாதனைகளை அவர்‌ பொதுமைப்படுத்தினார்‌. ஏகாதிபத்தியக்‌ கட்டத்தில்‌ முதலாளித்துவச்‌ சமூக்த்தில்‌ நிகழும்‌ சமூக-பொருளாதாரச்‌ செயல்முறைகளை ஆழ்ந்து பகுத்தாய்ந்தார்‌. சோஷலிஸப்‌ புரட்சி பற்றிய மார்க்ஸீயச்‌ சித்தாந்தத்தைப்‌ புதிய நிலைமைகளுக்குப்‌ பொருந்தும்‌ வகையில்‌ அவர்‌ சீர்திருத்தி, அதைச்‌ செயல்படுத்‌துவதற்குரிய வழிகளையும்‌ சாதனங்களையும்‌ விஞ்ஞான ரீதியாகத்‌ திட்டப்படுத்தினார்‌. இந்த வழிகளும்‌ சாதனங்களும்‌ ரஷ்யாவிலும்‌ பின்னார்‌ அனேக பிற நாடுகளிலும்‌ வெற்றிகரமாகக்‌ கையாளப்பட்டன. தற்காலக்‌ கட்டத்தில்‌ சோஷலிஸத்திற்கான போராட்டத்தின்‌ நடைமுறை லெனினது கருத்துக்கள்‌ சரியானவை என்பதையும்‌ அவற்றின்‌ வலிமையையும்‌ உறுதிப்படுத்துகிறது. புரட்சி நிகழ்முறையின்‌ இயக்க இயல்‌, பொருளாதாரத்துக்கும்‌ அரசியலுக்கும்‌ உள்ள பரஸ்பரக்‌ தொடர்பு, புதிய சோஷலிஸச்‌ சமூகத்தின்‌ வளர்ச்சிக்கும்‌ அது கம்யூனிஸச்‌ சமூகமாகப்‌ பரிணமிப்பதற்கும்‌ உரிய விதிமுறைகள்‌ ஆகியவை பற்றிய லெனினது கருத்துக்கள்‌ சிறப்பான முக்கியத்துவம்‌ உள்ளவை. மிக மிக வெவ்வேறான வரலாற்றுச்‌ சூழ்நிலைகளில்‌ பொருளாதார, அரசியல்‌ பிரச்சினைகளுக்குத்‌ தீர்வு காண்பதற்கு இயக்கஇயல்‌ கையாளப்படுவதற்கான சிறந்த மாதிரிகள்‌ வி. இ. லெனினுடைய பல்தொகை நூல்களில்‌ தரப்பட்டுள்ளன. சோவியத்‌ யூனியன்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சியும்‌ பிற நாடுகளிலுள்ள மார்க்ஸீய-லெனினீயக்‌ கட்சிகளும்‌ உலகப்‌ புரட்சி இயக்கம்‌ குறித்த தற்காலப்‌ பிரச்சினைகளைத்‌ தீர்க்கவும்‌ சோஷலிலம்‌, கம்யூனிஸம்‌, இவற்றின்‌ நிர்மாணச்‌ செயல்களை நிறைவேற்றவும்‌ மார்க்ஸீயத்தைக்‌ கையாள்தற்கான விரிவுபடுத்துகின்றன. மார்க்ஸீய-லெனினீயத்‌ தத்துவம்‌ ஆழ்ந்த கட்சித்தன்மை கொண்ட விஞ்ஞானம்‌ ஆகும்‌. அதாவது இந்தத்‌ தத்துவம்‌ வர்க்கத்தன்மை கொண்டது, தொழிலாளி வர்க்கத்துக்கு, உழைப்பாளி மக்களுக்குக்‌ தொண்டு ஆற்றுகிறது. எந்தத்‌ த்துவமும்‌ ஏதாவது ஓரு வகையில்‌ ஒரு குறிப்பிட்ட வர்க்கத்‌தின்‌ நோக்கையும்‌ நலன்களையும்‌ வெளியிடுகிறது. அனால்‌ தொழிலாளி வர்க்கத்தின்‌ நலன்கள்‌ பூர்ஷ்வாக்களின்‌, சுறண்டுவோரின்‌ நலன்களிலிருந்து பண்பில்‌ வேறுபடுகின்றன. தற்காலச்‌ சமூகத்தில்‌ தனது எதார்த்த நிலை காரணமாக, சுற்றியுள்ள உண்மை நிலைமையைச்‌ சரியாக, விஞ்ஞானரீதியில்‌ புரிந்து கொள்வதிலும்‌ அதைப்‌ புரட்சிகரமாக மாற்றி அமைப்பதிலும்‌ அக்கறை கொண்ட ஓரே வர்க்கம்‌ பாட்டாளி வர்க்கமே. எனவே மார்க்ஸீய-லெனினீயத்‌ தத்துவத்தில்‌ கட்சித்தன்மை உண்‌ மையான விஞ்ஞான எகதார்த்தத்துடன்‌ முற்ற முழுக்கப்‌ பொருந்துகிறது. தொழிலாளி வர்க்கத்தின்‌ புரட்சிகர உலகக்‌ கண்ணோட்டம்‌ எல்லாம்‌ வல்லது, ஏனெனில்‌ அது சரியானது. மார்க்ஸீய-லெனினீயகத்‌ தத்துவத்துக்கு மாறாக பூர்ஷ்வாத்‌ தத்துவமும்‌ மொத்தத்தில்‌ பூர்ஷ்வாக்‌ கொள்கைவாகும்‌ அனைத்துமே சுறண்டும்‌ வர்க்கங்களின்‌ நலன்களுக்குத்‌ தொண்டாற்றுகின்றன. திரிபான பிரபஞ்ச அறிவு இந்த வர்க்கங்களுக்குச்‌ சாதகமானது. தனித்‌ தனி பூர்ஷ்வாக்‌ கொள்கைப்‌ பிரசாரகர்‌களின்‌ அகநிலை விருப்பங்களோ முயற்சிகளோ இதற்கு அவ்‌ வளவு காரணம்‌ அல்ல. சுறண்டுவோர்‌ சமூகத்தில்‌ அவர்கள்‌ வகிக்கும்‌ எதார்த்த நிலைகளே இதற்கு முக்கியக்‌ காரணம்‌. இந்த உண்மைக்குக்‌ தெட்டத்‌ தெளிவான உதாரணங்களாக விளங்‌குகின்றன தற்கால பூர்ஷ்வாத்‌ தத்துவமும்‌ சமூக இயலும்‌. இவை புறநிலை விஞ்ஞானங்களாக இருந்த காலம்‌ எப்போதோ போய்விட்டது.

முதலாளித்துவச்‌ சமூகத்தின்‌ பிற்போக்குச்‌ சக்திகளின்‌ மக்கள்‌ விரோதக்‌ கொள்கையை நியாயப்படுத்துவகுற்கு இவை போட்டி போட்டுக்கொண்டு முயல்கின்றன. நிகழ்ச்சிகள்‌ வர்க்க நோக்கில்‌ மதிப்பிடப்பட வேண்டும்‌ என்றும்‌ கம்யூனிஸ எதிர்ப்பின்‌ எல்லாவகைத்‌ தோற்றங்களுக்‌கும்‌ எதிராக, பூர்ஷ்வாக்‌ கொள்கைவாதத்துக்கும்‌ அதன்‌ சந்தர்ப்பவாதக்‌ குற்றேவலர்களான வலதுசாரி “இடதுசாரித்‌ திரிபுவாதிகளுக்கும்‌ எதிராகச்‌ செயலூக்கத்துடன்‌ இடையறாத போராட்டம்‌ நடத்தப்பட வேண்டும்‌ என்றும்‌ மார்க்ஸீயத்‌ தததுவத்தின்‌ கட்சித்தன்மைக்‌ கோட்பாடு கோருகிறது.




No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்