தேர்தல் பற்றிய ஒலி(நூலகம்) வடிவ தொகுப்பு- பல்வேறு ஒலி வடிவ பகுதி ஒரே இடத்தில்

இந்த பகுதியில் ஒவ்வொரு பகுதியின் தலைபின் கீழ் உள்ள இணைப்பை அழுத்தினால் அந்தப்பகுதி ஒலி வடிவில் கேட்க முடியும் தோழர்களே. வாசிக்க நேரமில்லாதோர் ஒலி வடிவில் உங்கள் மௌபைல் போனில் அந்த இணைப்பை அழுத்தி அந்தப் பகுதியை ஒலி வடிவில் எப்பொழுதும் நீங்கள் கேட்க முடியும். ஆகையால் இந்த ஒலி வடிவ முறையை கொண்டு வந்துள்ளோம்.  இதனை கேட்க எளிதான வழி தோழர்களே.

தேர்தல் பற்றிய பல்வேறு விவாத கட்டுரைகளின் ஒலி வடிவ தொகுப்பு இவை.

தோழர்களே வணக்கம்
இந்தப் பதிவிலுள்ள பல்வேறு கட்டுரைகளின் ஒலி வடிவத் தொகுப்பைக் கொண்டு, அந்தத் தரவுகளின் சாராம்சத்தை உள்ளடக்கி கீழே ஒரு தொகுப்புக் கட்டுரை வழங்கப்பட்டுள்ளது. இது உங்களுக்கு வாசிக்க எளிதாகப் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

தேர்தல் அரசியல்: மார்க்சிய - லெனினியப் பார்வையில் ஒரு விரிவான அலசல்

இன்றைய இந்தியச் சூழலில், தேர்தல் என்பது வெறும் வாக்குப் பதிவு முறை மட்டுமல்ல; அது உழைக்கும் மக்களின் அதிகாரத்தை மழுங்கடிக்கும் ஒரு கருவியாக மாற்றப்பட்டுள்ளது. 'இலக்கு' இணைய இதழ் மற்றும் பல்வேறு மார்க்சிய சிந்தனையாளர்களின் விவாதங்களை உள்ளடக்கிய இந்த ஒலி வடிவத் தொகுப்பு, தேர்தல் அரசியலின் பின்னுள்ள வர்க்கப் போராட்டத்தையும், வரலாற்று உண்மைகளையும் மிகத் தெளிவாக விளக்குகிறது.

இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாறும் தியாகமும்

இந்தியக் கம்யூனிச இயக்கம் என்பது பல்லாயிரக்கணக்கான தோழர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் செங்குருதியால் எழுதப்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தெபாகா எழுச்சி, தெலங்கானா ஆயுதப் போராட்டம், கீழத்தஞ்சை விவசாயிகள் போராட்டம் என வீரம் செறிந்த ஒரு வரலாறு நமக்கு உண்டு. 1947-ல் அதிகாரம் கைமாறிய பிறகு, ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி, புரட்சிகரப் பாதையைக் கைவிட்டு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்குள் மட்டும் கம்யூனிஸ்டுகள் தங்களைச் சுருக்கிக் கொண்டது ஒரு வரலாற்றுத் துரோகமாகவே பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற ஜனநாயகம் - ஒரு போலித் திரை

லெனின் சுட்டிக்காட்டியபடி, முதலாளித்துவ ஜனநாயகம் என்பது உழைக்கும் மக்களை ஏமாற்றும் ஒரு கருவி. சட்டத்தின் முன் சமத்துவம், பத்திரிகை சுதந்திரம் போன்ற முழக்கங்கள் "பொது ஒழுங்கு" என்ற பெயரில் உழைக்கும் மக்களின் எழுச்சியை ஒடுக்கவே பயன்படுகின்றன.

  • கம்யூன் முறை: நாடாளுமன்ற முறைக்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நேரடியாகத் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்குப் பொறுப்பு கூறும் 'பாரிஸ் கம்யூன்' போன்ற அமைப்புகளே உண்மையான ஜனநாயகத்தை வழங்க முடியும்.

  • பிம்பங்களின் அரசியல்: சினிமா மற்றும் ஆன்மீகம் எவ்வாறு மார்க்சிய உளவியல் ரீதியாக மக்களை ஒருவித 'அபினி' மயக்கத்தில் வைத்துள்ளது என்பது குறித்த ஆய்வுகள் இந்தப் பதிவில் முக்கியத்துவம் பெறுகின்றன.

தொகுப்பிலுள்ள முக்கியக் கட்டுரைகளின் சாரம்:

இந்த ஒலி நூலகத்தில் இடம்பெற்றுள்ள 21-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் பின்வரும் கோணங்களில் விவாதங்களை முன்வைக்கின்றன:

  1. தேர்தல் சீர்திருத்தம்: "ஜனநாயகத்திற்காகப் போராடுவோம்" என்ற முழக்கத்தின் பின்னுள்ள ஓட்டைகளை விமர்சித்தல்.

  2. வர்க்கப் போராட்டம்: மனித சமூகத்தின் கட்டமைப்பு மற்றும் பொருளாதார உறவுகளின் அடிப்படையில் தேர்தலை அணுகுதல்.

  3. தமிழக அரசியல்: தமிழக தேர்தல் களத்தில் நிலவும் சாதி அரசியல், இலவசங்கள் மற்றும் த.வெ.க போன்ற கட்சிகள் மீதான கம்யூனிசப் பார்வைகள்.

  4. சர்வதேசப் பாடங்கள்: சோவியத் அமைப்பு, பாரிஸ் கம்யூன் மற்றும் திருத்தல்வாதத்திற்கு எதிரான லெனினது போராட்டங்களிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்.

முடிவுரை

தேர்தல் அரசியலைப் புரிந்து கொள்ள விரும்புவோருக்கும், உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் போராடும் தோழர்களுக்கும் இந்த ஒலி வடிவத் தொகுப்பு ஒரு சிறந்த வழிகாட்டியாகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் போலித்தனத்தை உடைத்து, பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை நிலைநாட்ட மார்க்சிய-லெனினிய வழிகாட்டுதல்களை ஆழ்ந்து படிப்பது கேட்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.


கீழ்காணும் ஒவ்வொரு பகுதியின் கீழ் உள்ள இணைப்பை அழுத்தினால் அந்தப்பகுதி ஒலி வடிவில் கேட்க முடியும் தோழர்களே. வாசிக்க நேரமில்லாதோர் ஒலி வடிவில் உங்கள் மௌபைல் போனில் அந்த இணைப்பை அழுத்தி அந்தப் பகுதியை ஒலி வடிவில் எப்பொழுதும் நீங்கள் கேட்க முடியும். ஆகையால் இந்த ஒலி வடிவ முறையை கொண்டு வந்துள்ளோம்.  இதனை கேட்க எளிதான வழி தோழர்களே.

2). பிம்பங்களின் அபினி: சினிமா மற்றும் ஆன்மீகத்தின் மார்க்சிய உளவியல் ஆய்வு

இந்தப்பகுதியயை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

வீடியோ வடிவில் காண இந்தப்பகுதியை அழுத்தவும் தோழர்களே 

3). இந்திய கம்யூனிஸ்டுகளின் தத்துவ-நடைமுறை நெருக்கடி பற்றிய விரிவான அலசலும் இடம்பெற்றுள்ளது

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்துங்கள் தோழர்களே

இந்தப்பகுதியைவீடியோவில் காண இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

4). தேர்தல் களத்தில் பேசாத அரசியல்!- ஒலி வடிவில்

இந்தப்பகுதியை முழுமையாக ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

வீடியோ வடிவில் கேட்க காண இந்தப்பகுதியை அழுத்தவும் தோழர்களே

5). மனித சமூகத்தின் கட்டமைப்பு, வர்க்கப் போராட்டம் மற்றும் பொருளாதார உறவுகளைப் பற்றி விரிவான தேடல்- ஒலி வடிவில்

இந்தப்பகுதியயை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

வீடியோவை காண இந்த இணைப்பை அழுத்தி கேளுங்கள் தோழர்களே

6). தேர்தல்பற்றி மார்க்சிய லெனினிய கண்ணோட்டம்-01- ஒலி வடிவில்

இந்த முழுப்பகுதியயையும் ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

இந்தப்பகுதியை வீடியோ வடிவில் காண இந்த இணைப்பை அழுத்துங்கள் தோழர்களே

 7). தேர்தல்தான் என்ன? கம்யூனிஸ்டுகள் தேர்தலில் செய்ய வேண்டியவை என்ன?

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே

வீடியோ வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

 8). "தேர்தல் சீர்திருத்தம் - ஜனநாயகத்திற்காகப் போராடுவோம்!!" - என்ற கருத்தின் மீதான விமர்சனம்

இந்தப் பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

இந்தப் பகுதியை ஒலி மற்றும் ஒளி வடிவில்(வீடியோ)

 9). திருத்தல்வாதத்திற்கு எதிரான லெனினது போராட்டம்- ஒலி வடிவில்

ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்துங்கள் தோழர்களே

வீடியோ ஆடியோவாகக் காண இந்த இணைப்பை அழுத்துங்கள் தோழர்களே

10). த.வெ.கவிற்கு கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பார்ட்டியாப் இந்தியா ஆதரவு பற்றிய விமர்சனம்-ஒலி வடிவில்

இந்த விவாதத்தை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்துங்கள் தோழர்களே

 இந்தப்பகுதியை வீடியோ வடிவில் காண youTUBE ல் காண இந்த இணைப்பை அழுத்துங்கள் தோழர்களே

 11). தமிழக தேர்தல் களம்-ஒலி வடிவில்

ஒலி வடிவில் கேட்க இந்த இனைப்பை அழுத்துங்கள் தோழர்களே 

யூ டூப் வழியாக காண இந இணைப்பை அழுத்தவும் தோழர்களே

12). தேர்தல் அரசியலை புரிந்துக் கொள்ள- ஒலி வடிவில்

இந்த பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

 13). தமிழக தேர்தல் களத்தில் ஓட்ரசியல் கட்சிகளின் இலவசம்பற்றிய அறிக்கைகளும் உண்மையில் உழைக்கும் மக்கள் தேவை என்ன?

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

14). பாரிஸ் கம்யூன் படிப்பினைகள்- ஒலி வடிவில்

பாரிஸ் கம்யூன் படிப்பினைகள் ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

 15). தமிழக இன்றைய வர்க்க சமூகத்தில் அடிதளம் மேற்கட்டுமாணம் பற்றி ஒரு தேடல்- ஒலி வடிவில்

இந்தப்பகுதியை இலி வடிவில் கேட்க இந்த இணைப்பைஅழுத்தி கேட்கவும் தோழர்களே

வீடியோவாகாண கேட்க இந்த இணைப்பை அழுத்துங்கள் தோழர்களே

16). தேர்தலும், தேர்தல் பற்றி மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டலும்

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே

17). தமிழக தேர்தலும் சாதி அரசியலும்-03 (05-04-2026) விவாதம்

இந்த விவரங்களை முழுமையாக ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும்

வீடியோ வடிவில் கேட்க பார்க்க இந்த இணைப்பை அழுத்தி பார்க்கவும் தோழர்களே

18). தேர்தல் தேடலில்-02 சோவியத் அமைப்பு: மக்கள் அதிகாரமும் நிர்வாக முறையும்

iஇந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்கவும் இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே

வீடியோ வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே

 19). இந்திய பாராளுமன்றமுறையும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொடையும்-01

இந்தப்பகுதியை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

20). மார்க்சிய பார்வையில் நாடாளுமன்ற ஜனநாயகமும் பாட்டாளி வர்க்கப் புரட்சியும்- ஒலி ஒளி வடிவில்

 ஒலி வடிவி கேட்க இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

வீடியோ வடிவில் காண இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே

21). தேர்தல் பற்றிய மார்க்சிய புரிதல்- இலக்கு 93 இதழில்

இந்த இதழின் சாரம்ச ரீதியாக ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்தி கேட்கவும் தோழர்களே

யூடூப் வீடியோ வடிவில் காண இந்த இணைப்பை அழுத்தவும் தோழர்களே 


அன்றிலிருந்து இன்றுவரையிலான இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாறானது பல்லாயிரக்கணக்கான தோழர்கள்கோடிக்கணக்கான விவசாயிகள்தொழிலாளர்களின் அளப்பரிய தியாகமும் அவர்கள் சிந்திய செங்குருதியும் நிறைந்ததாகும்.

அன்றைக்குகம்யூனிசக் கொள்கையின் ஈர்ப்பினால் உந்தப்பட்ட தோழர்கள் தலைமையில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராகவும் நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கெதிராகவும் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் ஏராளம். வங்காளத்தில் தெபாகா விவசாயிகள் எழுச்சிமகாராஷ்டிராவில் உள்ள தானேவில் வார்லி பழங்குடி மக்களின் எழுச்சிகேரளத்தில் வயலாறு-புன்னப்புரா தொழிலாளர் போராட்டம்தமிழ்நாட்டில் கீழத்தஞ்சை கூலி விவசாயிகளின் செங்கொடி இயக்கம்தபால் தந்தி ஊழியர் போராட்டம்மும்பை துறைமுகத் தொழிலாளர் போராட்டம்மும்பை கப்பற்படை எழுச்சி என்று எண்ணற்ற மக்கள் போராட்டங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முன்னணிப் பங்காற்றின. கம்யூனிஸ்டுகள் தலைமையில் உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்துப் போராடுவதைக் கண்டு அஞ்சிய ஆர்.எஸ்.எஸ்-இன் மூதாதையர்கள்இந்து மதவெறியைத் தூண்டிவிட்டு மக்களைப் பிளவுபடுத்தினர்பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்தனர். காங்கிரசு கட்சியோ ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களை ‘அகிம்சை வழிப் போராட்டம்’ என்ற பெயரில் மழுங்கடித்தது. எனினும்இவற்றையெல்லாம் மீறி கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் 1942-இல் மூண்டெழுந்த கப்பற்படை எழுச்சி, 1946-இல் முன்னேறிய தெலுங்கானா விவசாயிகளின் போராட்டம் போன்ற போராட்டங்கள் மக்கள் மத்தியில் போராட்டங்கள் வளர்வதைக் கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்அதன் கொள்ளைக்குத் துணை போன இந்திய தரகு முதலாளிகள்நிலப்பிரபுக்களின் கூட்டுச் சதியின் விளைவாக, 1947-இல் ஆட்சி அதிகாரத்தை அவர்களின் அடிமைகளிடம் ஒப்படைத்ததோடு மத அடிப்படையில் நாட்டை துண்டாடி வெளியேறினர். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்றுதெலுங்கானாவில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் மிகச் சிறப்பான முறையில் அரசை நடுநடுங்க செய்த போராட்டமாகும். இதனை அடுத்து பல்வேறு சதி வழக்குகளையும் கொடூரமான அடக்குமுறையையும் கம்யூனிஸ்டுகள் மீது நடத்தியது இந்திய ஆளும் வர்க்கம் அதன் பின்னணியில் அரசின் அராஜகத்திற்கு அடிப்பணித்து கட்சியானது புரட்சிக்கான வழிமுறையை கைவிட்டு தங்களின் இருப்புக்கான வழிமுறையை கையிலெடுத்து உள்ள அமைப்பில் தனக்கான இடம் தேடி பாராளுமன்றம் மட்டுமே தனக்கான இடமாக சுருக்கிக் கொண்டது என்பதுதான் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் சுருக்கமான வரலாறாகும். ஆரம்பகால இந்திய கம்யூனிஸ்டுகளின் வரலாறு தியாக வரலாறாகும். தெலுங்கான புரட்சிப் பாதையை கைவிட்டபின்புள்ள வரலாறு துரோக வரலாறாகும். இந்த வரலாற்றை நாம் படித்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதுஇன்றைய நிலைகளை புரிந்துக் கொள்ள.

முதலாளித்துவ சமுதாயத்தின்‌ ஊழல்‌ மலிந்த நாற்றம்‌பிடித்த நாடாளுமன்ற முறைக்குப்‌ பதிலாய்‌கம்யூனனது கருத்‌துச்‌ சுதந்திரமும்‌ விவாதச்‌ சுதந்திரமும்‌ ஏமாற்று வித்தையாய்ச்‌ சீரழிந்துவிடாத உறுப்புக்களைத்‌ தோற்றுவிக்கிறதுஎப்படியெனில்‌ நாடாளுமன்றத்தினர்‌ தாமே வேலை செய்யவும்‌தாம்‌ இயற்றும்‌ சட்டங்களைத்‌ தாமே செயல்படுத்தவும்‌உண்மையில்‌ சாதிக்கப்‌ பெற்ற பலன்களைத்‌ தாமேசோதித்துப்‌ பார்க்கவும்‌தம்மைத்‌ தேர்ந்தெடுத்த தொகுதியோருக்கு நேரடியாகத்‌ தாமே பொறுப்புக்‌ கூறவும்‌ வேண்‌டியதாகிறது. பிரதிநிதித்துவ உறுப்புக்கள்‌ தொடர்ந்து நிலவுகின்றனஆனால்‌ நாடாளுமன்ற முறை ஓரு தனிவகை அமைப்பாய்‌சட்டமியற்றுவதற்கும்‌ செயல்படுத்துவதற்கும்‌ இடையிலான உழைப்புப்‌ பிரிவினையாய்‌பிரதிநிதிகளது தனிச்‌சலுகை நிலையாய்‌ நிலவவில்லை. பிரதிநிதித்துவ உறுப்புக்கள்‌ இல்லாமல்‌ ஜனநாயகத்தைபாட்டாளி வர்க்க ஜனநாயகத்தையும் கூட கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆனால்‌ நாடாளுமன்ற முறை இல்லாமல்‌ ஜனநாயகத்தைக்‌ கற்பனை செய்து பார்க்க முடியும்‌கட்டாயம்‌ பார்க்கவும்‌ வேண்டும்‌. முதலாளித்துவ சமுதாயத்தை நாம்‌ விமர்சித்துக்‌ கண்டிப்‌பது வெறும்‌ சொல்‌ அளவிலான விமர்சனமாய்‌ நின்று விடக்‌ கூடாதெனில்‌முதலாளித்துவ வர்க்கத்தின்‌ ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டுமென்ற விருப்பம்‌மென்ஷிவிக்குகள்‌சோஷலிஸ்டு-புரட்சியாளர்கள்‌ விவகாரத்திலும்‌மற்றும்‌ ………………. விவகாரத்திலும்‌ இருப்பது போல தொழிலாளர்களுடைய வாக்குகளைக்‌ கவருவதற்கான வெறும்‌ தேர்தல் முழக்கமாயிராது நமது இடமான உள்ளப்‌ பூர்வமான விருப்பமாய்‌ இருந்தால்‌ கட்டாயம்‌ நாம்‌ இவ்வாறே செய்ய வேண்டும்‌.

கம்யூனுக்கும்‌ பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கும்‌ அவசியமான அந்த அதிகாரிகளின்‌ பணிகள்‌ குறித்துப்‌ பேசுகையில்‌ மார்க்ஸ்‌ அவர்களை எந்த ஒரு முதலாளியின்‌ ஊழியர்களுடன்‌அதாவது சாதாரண முதலாளித்துவத்‌ தொழில்‌ நிலையத்தின்‌ தொழிலாளர்கள்‌போர்மன்கள்‌கணக்கர்‌களுடன் ஒப்பிடுவது கருத்தூண்றிக்‌ கவனிக்கத்தக்கதாகும்‌.

இவையை புரிந்துக் கொள்ள

சுதந்திரம்பத்திரிகை சுதந்திரம், "சட்டத்தின் முன் எல்லாக் குடிமக்களின் சமத்துவம்இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் - ஒவ்வொரு இருபத்திகளிலும் நேர்மையானவர்க்க உணர்வுடைய எல்லாத் தொழிலாளர்களுக்கும் நன்கு தெரிந்த முதலாளித்துவ ஜனநாயகத்தின் போலித்தனத்தின் அறிகுறிகளைக் காணலாம். "பொது ஒழுங்கு மீறப்படும் போதுஉள்ளபடியே காணப்படும் வர்க்கம் தனது அடிமை நிலையை "மீறிஅடிமைத்தனம் அற்ற முறையில் நடக்க முயலுமானால் தொழிலாளர்களுக்கு எதிராகப் படைகளை அனுப்பவும்ராணுவச் சட்டம் பிரகடனம் செய்யவும்இன்னபிறவற்றை அமுலாக்க முதலாளித்துவ வர்க்கத்துக்கு உத்தரவாதம் செய்வதற்கான நுழைவிடங்கள் அல்லது தனி உரிமைகளை ஒதுக்கீடு செய்யாத எந்த ஒரு தனி அரசும் - எவ்வளவுதான் ஜனநாயகத்தன்மையுடையதாயினும் சரி - கிடையாது.                        

அறிவாளியும் படிப்பாளியுமான கவுத்ஸ்கி இவற்றைப் பற்றி எல்லாம் மெளனம் சாதிக்கிறார்! இந்த விஷயத்தில் மெளனம் சாதிப்பது வெறுக்கத்தக்கது என்பதை அந்தப் படிப்பாளி அரசியல்வாதி உணரவில்லை.என்ன அற்புதமான அறிவாழம்! முதலாளித்துவ வர்க்கத்திடம் எத்தகைய நயநாகரிகமான அடிமைத்தனம்! முதலாளிகள் முன்னால் எத்தகைய தன்மதிப்பிழந்த சரணாகதி! எத்தகைய கெஞ்சி மன்றாடுதல்!               

இங்குள்ளோர் நிலையை புரிந்துக் கொள்ள ஒவ்வொன்றாக கேட்கவும் புரிந்துக் கொள்ளவும் தோழர்களே! 

***

எமது இலக்கு இணைய இதழ்-ன் மார்க்சிய லெனினிய சிந்தனைகளைத் தொடர்ந்து வாசிக்க எம்மைப் பின்தொடரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்