கலை இலக்கியம் யாருக்கானது? - சிபி

 தோழர்களே இலக்கு இதழ் தொடங்கியதிலிருந்து சமூகத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை மார்க்சிய ஆய்வில் வெளி கொணர்வதும் அதை விவாதிற்கு உடபடுத்தி சரியானவற்றை கற்று தேர்வதையும் நோக்கமாக கொண்டே இதழை நடத்தி வருகிறோம். இது வரை 21 இணைய இதழ்கள் வந்து விட்டது அதில் பல்வேறு அடிப்படை மார்க்சிய புரிதலுக்காக முயற்சி என்பதனை வாசித்தால் அறிந்துக் கொள்வீற்கள்.

நமது தோழர்கள் சினிமாவை சினிமாவாக பாருங்கள் கலையை கலையாக பாருங்கள் என்று பேசுவது உண்மையில் எவ்வளவு அபத்தமானவை என்று விளக்கவே நான் நீண்ட நெடிய கட்டுரை தொடரை எழுதினேன். அதில் நமது முன்னோடிகளின் கருத்துகளையும் பதிவு செய்து இலக்கு இதழில் கொணர்ந்தேன் ஏனோ நமது தோழர்களுக்கு ஏற்புடையவையாக இல்லாமையால் எழுதுவதை தவிர்த்து விட்டேன். நான் அன்று எழுதிய கட்டுரைகளை மீண்டும் உங்கள் முன் வைக்கிறேன் வாசிக்கவும்..

என் எழுத்து முற்றும் முடிவு என்றோ நான் சொன்னவை மட்டுமே சரியானவை என்றோ நான் வாதிடவில்லை. ஒரு மார்க்சிய பார்வையில் எப்படி உற்று நோக்குவது என்பதே என் எழுத்தின் நோக்கம் தோழமைகளே.

இலக்கு 4 இணைய இதழ் கட்டுரையே சினிமா பற்றிஇந்த இணைப்பை தொட்டால் உள்ளே சென்று வாசிக்கலாம் தோழர்களே. 

கலை இலக்கியம் என்ன?

கலை  தெய்வீகமானது மர்மமானது புரிந்து கொள்ள முடியாத புதிரானது.  கலைஞன் தெய்வீகப் பிறவி என்று கூறுவது யாவும் வெறும் பொய்மையே.

நிலவுடைமை சமூகத்தில் பல்வேறு பிரிவு மக்கள் தமக்கான கலைகளை தங்கள் வாழ்வியலோடு வளர்த்து வந்தனர் (துன்பவியலை பேசும் ஒப்பாரி பாடலும் கூட்டு உழைப்பில் ஈடுபடும் பொழுது கூட்டு பாட்டுகலும் இதில் அடங்கும்) ஆனால் நிலவுடைமை சமூகம் தன் கட்டுக்கோப்புக்குள் கலைகளை கட்டிக் காத்தது.

ஆனால் இன்றைய வளர்ந்துள்ள இச்சமூகத்தில் கலைகள் பல வடிவங்களாக விரிவடைந்து சில சுதந்திரமான கண்ணோட்டத்தில் வளர்ந்து வந்துள்ளது.

இன்று

கலை அமைப்பு பணி பற்றிய நுட்பங்களை கற்காமலே கலைஞர்கள் கலைகளை படைப்பதும், சாதாரண மக்களும் அவற்றை சுவைப்பதையும் காணலாம் . இதுவே கலையின் இன்றைய தனிச்சிறப்பு ஏனெனில் கலைகள் யாவும் மனித உணர்வுகளின் தொகுப்பாகும் மனித உழைப்பில் இருந்தே கலைகள் தோன்றுகின்றன கலையை சுவைபவனும் (ரசிபவனும்) மனிதனே.

"கலையும் விஞ்ஞானமும் சமூக உழைப்பில் இருந்து தோன்றியவை; இரண்டும் ஒன்றுக்கொன்று ஆதாரமாக உள்ள இருவகைப்பட்ட வடிவங்கள்; இவை இரண்டும் மானிட உழைப்பிலே வேர்கொண்டுள்ளன" என மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் தாம்சன் கூறுகிறார்.

கலைஞனும் சமூகத்தில் வாழ்வதால் எத்தனை கற்பனையாக கலையை படைத்தாலும் தன்னிச்சையாக படைத்தாலும் அது சமுதாயத்தை ஒட்டியதாக இருப்பதை காணலாம். அக்கலை சமுதாயத்துடன் தொடர்பு கொண்டு சமூகத்தில் காணும் இன்ப துன்ப நிகழ்வுகளை உணர்வுபடுத்தி உழைக்கும் மக்கள் தன் சக்தியை மீண்டும் பெற முயல வேண்டும்.

கலையும் கலைஞனின் சமூக பங்களிப்பும்

கலைஞனுடைய  படைப்பு சமுதாய உணர்வு மட்டத்தில் ந் நிலையில் உள்ளது என்பது முக்கியமாகும்.சமுதாயத்தில் சமத்துவம் சமூக நீதியை நிலைநாட்டி மனிதரது உழைப்பில் ஆர்வம் காட்டி  மேலும் உழைப்பிற்கு உந்துசக்தியாக உயர்த்தி பிடித்து எல்லா ஒடுக்குமுறைகளையும் தகர்க்கும் போராட்டத்தை தொடங்கி வைக்கும் கலை படைப்பே உயர்ந்த கலை படிப்பாகும்.

ஒரு கலைஞன் கலையை படைக்கும் பொழுது எல்லா உருவகத்திலும் புரட்சியை வேண்டியே நிற்காதுஇருந்தாலும் அவை எந்த வர்க்க நலனில் உள்ளது என்பதை கணக்கில் கொண்டு பார்த்தால்,அவர்கள் நோக்கம் ஒடுக்கப்பட்ட வர்க்க நலன் சார்ந்ததா அல்லது ஆளும் வர்க்க நலன் சார்ந்ததா என்று விமர்சகர்கள் தன்னுடைய விமர்சனக் கண்ணோட்டத்தில் இருந்து அணுக வேண்டும்.

கலையும் ரசிகனும்

தனிநபர்கள் சினிமாவின் கதையோடு தமது வாழ்க்கை சம்பவத்தை இனங்கண்டு ஒன்றிவிடலாம்.உதாரணமாக காதலில் தோல்வியுற்ற ஒருவர் சில சினிமாக்கள் ஒருதலை காதல்,காதல் தோல்வி பேசும் படங்களோடு தன்னுடைய வாழ்க்கையோடு ஒன்றிபோவதை ஏற்று கொள்வதை போன்றே பல்வேறு ஒடுக்குமுறை ஆளாகும் பலரும் தன் மீது இழைக்கப்பட்ட குற்றங்களை சினிமாவில் பார்க்கும் பொழுது அந்த வலிகளை இதன் ஊடாக தன்னை உருவகப்படுத்திக் கொள்ளலாம் அதன் வடிகாலாக இதனை காணும் அவருக்கு தீர்வாகஎன்ன சொல்வது என்பதே கலைஞனின் வெற்றி அடங்கி உள்ளது.

மார்க்சிய ஆசான்கள் பேசும் எதார்த்தம்

 "எதார்த்தம் என்பது உண்மை.Realism என்ற ஆங்கில பதத்தையே எதார்த்தம் என கலை இலக்கிய விமர்சனங்களின் போது தமிழில் பயன்படுத்துவது மரபாகிவிட்டது என்கிறார்", தோழர் செ. கணேசலிங்கம் அவர்கள்.

எதார்த்தம் என்பது மார்க்ஸ் எங்கெல்ஸின் வழிவந்த வார்த்தையாகும் . எங்கெல்ஸ் ஒரு கடிதத்தில் குறிப்பிட்டதை பின்வருமாறு பேராசிரியர் க. கைலாசபதி அவர்கள் விளக்குகிறார், "யதார்த்த நெறி என்பது நுணுக்க விபரங்களின் உண்மையுடைமை தவிர, வகை மாதிரிக்கு பொருத்தமான பாத்திரங்களை நிலைமைகளுக்கு இணங்க மெய்மை குன்றாத வகையில் சித்தரித்தலாகும்"என்பதே ஏங்கெல்ஸ்  மணிமொழி என்கிறார்.

மேலும்

"யதார்த்தவாதம் சமுதாய முரண்பாடுகளும் அவற்றுக்குக் காரணமான பௌதீக நிலைமைகளுமே வாழ்க்கையின் தன்மைக்குக் காரணம் எனக் கண்டு "துன்பமே இயற்கை "என்னும் சொல்லை மாற்ற முயலும் உள்ளங்களின் நம்பிக்கைக் குரல்" என்று .கைலாசபதியே கூறுகிறார்.

கலை இலக்கியம் பற்றி இலக்கு 1 ல் வந்த கட்டுரை இந்த லிங்கை அழுத்தி வாசியுங்கள் தோழர்களே

இனி சினிமா பற்றி

சினிமாவானது முதலாளித்துவ ஆதிக்கத்தின் விற்பனை பொருளாகவே இன்றும் உள்ளன.இங்கு நிலபிரபுத்துவ சிந்தனைகளும் மதிப்புகளும் இன்றும் ஆதிக்கம் பெற்று இருப்பதால் அவற்றை கலை இலக்கியம் மூலமாக முதலாளித்துவம் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கிறது.

சமுதாய உணர்வை கருத்தில்கொண்டு சமுதாயத்தை மாற்றி மைக்கக்கூடிய புரட்சிகர சினிமா பிற கலை இலக்கியங்களை ஆக்கி மக்களுக்கு வழங்க கூடிய பொருளாதார வாய்ப்புகள் இன்னும் முற்போக்கு இடதுசாரி சிந்தனையாளர்கள் இன்னும் முன்னேறவில்லை.

இந்த நிலையில் மக்கள் முதலாளித்துவ சந்தையின்பொருட்களை வாங்குவது போலவே முதலாளிகள் வழங்கும் கலை இலக்கியங்களையும்  ரசிக்க வேண்டிய கட்டத்தில்தான் உள்ளனர் என்றால் மிகையாகாது என்பேன்.

டால்ஸ்டாய் புரட்சிகளை ஏற்ற புரட்சிகர எழுத்தாளர் அல்ல ஆயினும் தோழர் லெனின் ரஷ்ய நிலப்பிரபுத்துவக் கொடுமைகளை டால்ஸ்டாயின் எழுத்துக்கள் மூலமே அறிந்தேன் என்று கூறினார் இதுவே நாம் எதிர்பார்க்கும் விமர்சனப் போக்கு இங்கேதான் கலைஞனின் படைப்பு உள்ளது.

கலை இலக்கியம் கருத்தியல் சார்ந்தவை மேற்கட்டுமானத்தை சார்ந்த ஒன்று.  மதம் பற்றி மார்க்ஸ் கூறும் போது "மக்களின் அபினி " என்று மட்டும் கூறவில்லை "ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு இதயமற்ற உலகின் இதயம்" "ஆத்மா அற்ற நிலையின் ஆத்மா" என்றும் கூறிய பின்னரே "மதம் மக்களின் அபின்" என்று சொன்னார்.

அபினி வெறும் மயக்கம் மட்டும் தருவதல்ல ஒரு பொய்மையான தற்காலிக சந்தோஷத்தையும் தருவதாகும் .இதை ஒழித்து எதார்த்தமான நிரந்தர மகிழ்வு ஏற்படுத்துவதற்கு பொய்மையின் தேவையை விடுவிப்பதற்கேற்ற சூழலை, கடப்பாடுகளை மன நிலைமைகளை நாம் ஏற்படுத்த வேண்டும்.

பெரும்பாலான மக்கள் சினிமாவின் பல்வேறு  கலை வடிவங்களில் மயங்கி விடுகின்றனர். தற்காலிக பொய்மை மகிழ்வில் மயங்கி  ஆர்ப்பரிக்கின்றனர்.

எப்படி கோயில் ஆராதனைகளில் கோயில் பூஜைகளில் தன்னை மறந்து ஏதேதோ வார்த்தைகளை கூறி அங்கே மயங்கிக் கிடப்பது போல சினிமாவில் காட்டப்படும் பல்வேறு கற்பனைகளில் மூழ்கி கிடப்பதும் மதம் கடவுள் போன்ற கற்பனைகளே அன்றி வேறென்ன?.

மீண்டும் நாம் மார்க்சின் கூற்றுப்படி வருவோம் மதம் என்ற அபினி மூலம் மக்களை பிரித்தும் மோதவிட்டும் தற்காலிக திருப்தி பெறுவதிலேயே இன்றும் மதவாதிகளும் ஓட்டு அரசியல்வாதிகளும் குறியாக உள்ளனர். மக்களுக்கு இதை உணர்த்தி நிரந்தர மகிழ்ச்சியுடன் சேர்ந்து நல்வாழ்வு கிடைப்கேற்ற சூழலை கடப்பாடுகளை மன நிலைகளை ஏற்படுத்தி பொய்மைகளிலிருந்து அவர்களை விடுவிக்கும்.முயற்சிகளில் மக்களை நாம் ஈடுபடுத்த முயல வேண்டும்.

மார்க்சியம் எல்லாத்துறைகளிலும் குறுகிய நோக்கத்திற்கு விரோதமானது. உலக நாகரிகம் என்னும் வளர்ச்சிப்பாதையில் மார்க்சியம் தோன்றி முன்னேற்றம் அடைகிறது.எல்லா காலங்களிலும் வாழ்ந்து மறைந்த மூளை கூர்மையுடையோர்  மூளைகள் எழுப்பி உள்ள வினாக்களுக்கெல்லாம் விடை கூறுவது மார்க்சியம்- லெனின் ( மார்க்சிய அழகியல்- பேரா. நா. வானமாமலை பக்கம் 6).

இனி இச் சினிமா மீதான என் விமர்சனம் தொடரும்

நான் இதற்க்கு முன் வைத்த விமர்சனமானது ஒரு கலையை எப்படி ரசிப்பது அதற்கான அளகோல் மற்றும் படம் பெயர் சம்பந்தமான விளக்கம் கொடுத்தேன் இந்த இணையத்தில் காணலாம் (https://ilakkaithedi.com/1666-2/) ஒவ்வொரு நபரும் அக்குறிப்பிட்ட கலையைப் பற்றிய அறிவு அனுபவத்தை முன்வைத்து பேசுவது அவரின் ரசனை மட்டம் அளவில் தன்மையும் வேறுபட்டு இருக்கும் என்பதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.        

மேலும் இப்பொழுது எழுதுவதன் நோக்கம் இன்று சில படங்களை தூக்கி  நிறுத்தி கொண்டாடிக் கொண்டிருக்கும் இடதுசாரிகளின் (என்போரின்) அரசியல் வருமையை கருத்தில் கொண்டு எழுதும் கட்டாயத்தில் உள்ளேன்.

தங்களை மார்க்சியவாதிகளாகவும் முற்போக்குவாதிகளாகவும் காட்டிக் கொள்ளும் இவர்கள் எப்படி இந்த பின் நவீனத்துவ அடையாள அரசியலில் சிக்குண்டு கொண்டனர் என்பதனை தேடுவதே இந்தப் பதிவின் நோக்கம்.

அப்படியெனில் படத்தை பற்றி விமர்சனம் இல்லையா என்பவர்களுக்கு, அந்த இயக்குனர் தான் சொல்லிவிட்டாரே இந்த படம் முழுக்க கற்பனையானதே, அன்றைய ஜெய்பீம் விமர்சனம் நேரத்தில். (https://www.facebook.com/watch/?v=906975503267650

இன்றுவிடுதலைபடம்பற்றிஆர்பரிக்கும்  இந்த சிவப்பு சித்தாந்தவாதிகள் அடையாள அரசியல் என்ற பின் நவீனத்துவ குப்பைக்குள் மூழ்கி சிக்கி திக்குமுக்காடுவதோடு தனது அணிகளையும் குழப்பி சந்தர்பவாத அரசியலில் வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர் கலை இலக்கியத்தை கூட இவ்வளவு மலிவாக கொண்டு போய் விட்டனர்

முதலாளிதுவ வாதிகள் கூட copy right, royalty என்னும் பொழுது யாரின் கதையை பேசினாரோ அவருக்கான பங்களிப்பு செய்யும் பொழுது, இங்கே நீங்கள் பேசும் புரட்சியாளரின் பங்களிப்பு என்ன?

நான் பேச வந்தவை மார்க்சியவாதிகள் கலை பற்றிய புரிதலுக்காக மேலும் இயன்ற வரை என் கருத்துகளை முன் வைத்துள்ளேன் நீங்கள் உங்களின் கருத்துகளை முன் வைத்து வாதிட வாருங்கள் தோழர்களே.... பின்னர் பேசுவோம் விவாதித்தின் உடாக....





No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்