மே தினம் (May Day / தொழிலாளர் தினம்)

 மே தினம் (May Day / தொழிலாளர் தினம்)

 மே தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்

 

மே 1 ஆம் தேதி உலகளாவிய தொழிலாளர் தினம் (International Workers' Day) அல்லது மே தினம் (May Day) என அனுசரிக்கப்படுகிறதுஇது தொழிலாளர்களின் உரிமைகள்நியாயமான வேலைமற்றும் தொழிலாளர்களின் நீதிக்கான போராட்டங்களை நினைவுகூரும் நாள்.  மேலும் தொழிலாளர்களின் லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு சபதம் ஏற்கும் நாள்.

 

ஒரு புறத்தில் உழைப்பை பயன்படுத்துவதற்குரிய உழைப்பு சாதனங்கள் அனைத்துக்கும் சொந்தக்காரர்களான முதலாளிகள்மறுப்புறரத்தில் தம் சொந்த உழைப்பு சக்தியைத் தவிர வேறு எதுவும் சொந்தமாக இல்லாத தொழிலாளிகள்என்ற முக்கியமான இரண்டு பகைமயான இரும்பெரும் வர்க்கங்களாக தற்கால சமுதாயம் பிரிந்துள்ளதுஅருவருப்பான உண்மைகளைஇனிப்பான 

சொற்றொடர்களால் மூடி மறைக்க முடியாதுதொழிலாளி வர்க்கத்தின் உழைப்பனுடைய உற்பத்தி பொருளை இவ்விரு வர்க்கங்களுக்கு இடையே பகிர்நதுகொள்ள வேண்டி இருக்கிறதுஇந்த பகிர்மானம் நியாயமானதாக இல்லை.

 

அரசாங்கத்தின் சட்டத்தின் உதவிகொண்டு செயல்படும் முதலாளித்ததுவத்தை எதிர்த்த போராட்டம் தொழிலாளி வர்க்கம் நடத்திக் கொண்டே இருக்க வேண்டி உள்ளதுஇவ்வளவு உழைப்பு தியாகம் துன்பம் பட்டும் இறுதி விளைவு தொழிலாளர்கள் வறுமையிலேயே இருக்க வேண்டி உள்ளதுதொழிலாளி வர்க்கம் கடைசியில் இந்த விசவட்டத்தை முறிக்குமா?, அன்று கூலி முறையை முற்றிலும் ஒழித்து விடுகிற அந்த இயக்கத்திற்கு முடிவு தேடிக்கொள்ளுமாஎன்று கேள்வி கேட்கிறார்   எங்கெல்ஸ் 1881 ல் The labour standard இதழில்.

 

மே தின வரலாற்றை பார்ப்போம்

 

1. 1886: ஹேமார்க்கெட் சம்பவம் (அமெரிக்கா)- எட்டு மணி வேலை நேரத்திற்கான போராட்டம்:- 19ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்கள் 12–16 மணி நேரம் கடினமாக வேலை செய்தனர். 1 மே 1886இல், அமெரிக்காவின் சிகாகோ நகரில் எட்டு மணி நேர வேலைக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தை கலவரமாக்கி இதில் மே  4 தேதி, 7 போலீஸ் மற்றும் 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். - இதைத் தொடர்ந்து பல தொழிலாளர்    தலைவர்கள் தூக்கிலிடப் பட்டனர். இதன் தொடர்ச்சியாகவே, மே 1ஆம் தேதி இந்த தோழர்களின் நினைவு நாளாக மே தினம் நடைமுறையாகியது.

 

2. 1889: மே தினம் உலகளாவிய அங்கீகாரம் பெற்றது.

 

-இரண்டாம் இன்டர்நேஷனல் (சோசலிசதொழிலாளர் அமைப்பு) மே 1 ஐ உலக தொழிலாளர் தினம் என்று அறிவித்தது.

 

-  மேநாள் கோரிக்கைகள்:

 

- 8 மணி நேர வேலை, நியாயமான ஊதியம், தொழிற்சங்க உரிமைகள்.

 

தொழிலாளர்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்டங்களும் கண்டனமும் உண்டு.

 

3. இந்தியாவில் மே தினம்

 

- முதல் மே தினம்: 1923இல் சென்னையில் (தற்போதைய சென்னை உயர் நீதிமன்றம் முன்பு) எம். சிங்கரவேலர் நடத்தினார்.

 

மே தினத்தின் முக்கியத்துவம்

 

1. தொழிலாளர் உரிமைகள்:

 

- நியாயமான ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல், ஓய்வு நாட்கள் போன்றவற்றை உறுதிப்படுத்துகிறது

 

3.உலகளாவிய ஒற்றுமை:

 

2 150+ நாடுகளில் இன்றும் மே தினம் விடுமுறை நாளாக அனுசரிக்கப்படுகிறது.

 

மே தினம் எவ்வாறு கொண்டாடப்படு கிறது?

 

    ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் (தொழிலாளர் சங்கங்கள் முன்னிலையில்).

 

- அரசு மற்றும் தொழிலதிபர்களின் சலுகைகள் (போனஸ், நன்மைகள்).

 

-கலாச்சார நிகழ்ச்சிகள் (பாடல்கள், நாடகங்கள்).

 

2025 இல் மே தினத்தின் முக்கியம்

 

"தொழிலாளர்களின் ஊதியம், பாதுகாப்பு, மரியாதை"- AI மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களால் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்.

 

மே தினம் தொழிலாளர்களின் தியாகங்களையும், சமத்துவத்திற்கான போராட்டங்களையும் நினைவூட்டுகிறது.


 "எட்டு மணி வேலை, எட்டு மணி ஓய்வு, எட்டு மணி தூக்கம்" என்ற கோரிக்கை இன்றும் பொருத்தமானது. தொழிலாளர்கள் உலகை உருவாக்குகிறார்கள் – அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்!"

நமக்கான புரிதலுக்கு

 

என்ன செய்ய வேண்டும் நூலின் இரணடாவது அத்தியாயத்தில்மக்களின் தன்னெழுச்சியும், சமூக ஜனநாயகவாதிகளின் உணர்வும்என்ற தலைப்பில் மக்களின் தன்னழுச்சியான போராட்டத்தில் கலந்துகொண்டால் போதும், அதன் ஊடாக தொழிலாளர்கள் அரசியலைகற்றுக் கொள்வார்கள்  என்ற பொரளாதார வாதத்தை எதிர்த்து முறியடித்தார். லெனின். "தொழிலாளர்களுக்கு சமூக ஜனநாயகஅரசியல் வெளியிலிருந்துதான் கொணடு செல்லப்பட வேண்டும். எவ்வாறு, அறிவியல் தொழில்நுட்பம் நவீனதொழில்துறைக்கு வெளியில் விஞ்ஞானகளாலும், பொறியியலாளர்களாலும்ஆசிரியர்களாலும் உருவாக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு கொண்டுசெல்லப்பட்டு வளர்ந்து தொழில்துறையில்தொழிலாளர்களால் பயன்படுத்தப்படுகிறதோ, அதே போல  சமூக ஜனநாயக அரசியல் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ பிரிவினரால் வளர்த்தெடுக்கப்பட்டு தொழிலாளி வர்க்கத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் அதாவது போதிக்கப்பட வேண்டும்"   என்று லெனின் வலியுறுத்துகிறார்.

 

மேலும் தொழிற்சங்க அரசியலுக்கும் சமூக ஜனநாயக அரசியலுக்கும் உள்ள வேறுபாடை பற்றி பேசுகிறது.

 

முதல் உள்தலைப்பில் தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சாலை பிரச்சனைகள் பற்றி அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து அவற்றுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கைகளில் தொழிலாளர்கள் இறங்குவது போலவே, இந்தப் பிரச்சனைகளுக்கு எதிரியாக நிற்கும் ஜாரிச எதேச்சதிராகத்தை எதிர்த்த அம்பலப்படுத்தல்களையும் கிளர்ச்சியையும் தொழிலாளி வர்க்கத்துக்கு கற்றுக் கொடுப்பதுதான் தொழிலாளி வர்க்கத்தை அரசியல் படுத்துவது என்பதாகும். இதற்கு சமூகத்தின் ஒவ்வொரு வர்ககமும் எதேச்சதிகாரத்தால் எவ்வாறு ஒடுக்கப்படு கிறது  என்பதை அம்பலப்படுத்தி அவற்றுக்கு எதிராக தொழிலாளர்கள் போராடுவதற்கு வழி நடத்த வேண்டும். அப்போதுதான் தொழிலாளி வர்க்கம் பிற வர்க்கங்களின் தலைமை சக்தியாக புரட்சியின் முன் வரிசையில் நிற்கும்.

 

இவ்வாறு பரந்து விரிந்த அரசியல்தளத்தை விடுத்து தொழிற்சங்க பிரச்சனைகள்மட்டும் என்று  குறுக்குகின்றனர் பொருளாதார வாதிகள். இந்த விவாதத்தின் ஊடாக பொருளாதாரவாதிகளும், பயங்கர வாதிகளும் எவ்வாறு இந்தஅரசியல் அம்பலப்படுத்தல்கள் மூலமாக தொழிலாளர்களை அரசியல்படுததுவதை புறக்கணித்து தன்னெழுச்சியான போக்குகளுக்கு வால் பிடித்து செல்கின்றனர் என்பதை விளக்குகிறார். அதே பகுதியில் பொருளாதாரவாதிகளின் தொழிற்சங்க அமைப்பு முறைஅவர்களது அரசியல் பக்குவமின்மயை பிரதிபலித்து அர்த்தமற்ற ஜனநாயக முறைகளையும், அதிகார வர்க்க நடைமுறைகளையும் கொண்டிருக்கிறது என்று அம்பலப் படுத்துகிறார்”.

 

இங்கே என்ன நடந்துக் கொண்டுள்ளது?

 

ஆளும் வர்க்க கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அதிகாரத்திற்கான பேரம் பேசுவதில் தொடங்கி இன்றைய தொழிலாளர் விரோத எல்லா சட்டங்களை ஏற்றுக் கொண்டே அந்த தொழிலாளிகளின் நலன் பயக்கும் தொழிற் சங்கத்தை கட்ட போவதாக கூறி அந்த தொழிலாளிகளின் என்ன தேவையை பூர்த்தி செய்யப்போகிறது இந்த தொழிற்சங்கம் என்பதுதான் கேள்வி? அவர்களின் உரிமையை  பறிக்கும் இந்த கொடூரம் இவர்களை ஒடுக்கும் ஆட்சியாளர்களின் கையில் உள்ள உலகமயக் கொள்கையின் வெளிப்பாடு அல்லவா? ஆக அதனை பேசாமல் மூடிமறைக்கவே                                  இவை பயன்படும் என்று கூறுகிறேன்.



மார்க்சிய ஆசான்கள்தான் இதற்கான பணியினை செய்தனர் அதனை புரிந்துக் கொள்வோம்.


தொழிலாளர்களின் சர்வதேசச் சங்கமாகிய கம்யூனிஸ்டுக் கழகம் (Communist League) அக்காலத்தில் நிலவிய சூழ்நிலைமைகளில் ஓர் இரகசிய அமைப்பாகவே செயல்பட வேண்டியிருந்தது. 1847 நவம்பரில் லண்டனில் நடைபெற்ற காங்கிரசில் இக்கழகம் கட்சியின் விரிவான கொள்கை மற்றும் நடைமுறை வேலைத்திட்டத்தை வெளியிடுவதற்காக வகுத்துத் தருமாறு மார்க்ஸ், ஏங்கெல்ஸைப் பணித்தது.


1872-ஆம் ஆண்டின் ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முகவுரையிலிருந்து கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நவீனத் தொழில்துறை மகத்தான வளர்ச்சி கண்டுள்ளது; அதனுடன் கூடவே தொழிலாளி வர்க்கத்தின் மேம்பட்ட, விரிவடைந்த கட்சி அமைப்பு வளர்ச்சி பெற்றுள்ளது; முதலில் பிப்ரவரிப் புரட்சியிலும், பிறகு அதனினும் முக்கியமாகப் பாட்டாளி வர்க்கம் முதன்முதலாக, முழுதாய் இரு மாதங்கள் அரசியல் ஆட்சியதிகாரம் வகித்த பாரிஸ் கம்யூனிலும் சில நடைமுறை அனுபவங்கள் கிடைத்துள்ளன; - இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்வோமாயின், இந்த வேலைத்திட்டம் சில விவரங்களில் காலங் கடந்ததாகி விடுகிறது. கம்யூனானது முக்கியமாக ஒன்றை நிரூபித்துக் காட்டியது. அதாவது, ’ஏற்கெனவே தயார் நிலையிலுள்ள அரசு எந்திரத்தைத் தொழிலாளி வர்க்கம் வெறுமனே கைப்பற்றி, அப்படியே தன் சொந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது’. (பார்க்கவும்: ஃபிரான்சில் உள்நாட்டுப் போர் - சர்வதேசத் தொழிலாளர் சங்கப் பொதுக்குழுவின் பேருரை, லண்டன், ட்ரூலவ், 1871. பக்கம் 15-இல் இந்த விவரம் மேலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது). 


1848 இல் கார்ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை தொழில் மயமாக்கலின் பாதிப்பையும் சுரண்டலையும் உணர்த்தி, பல்வேறு நாடுகளின் தொழிலாளர்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியே உலக தொழிலாளர்கள் ஓர் அமைப்பாக இணைந்துள்ளனர்.

1840களில் ஏற்பட்ட விவசாய பாதிப்பு, '1848ல் புரட்சிகள்' என்று அழைக்கப்படும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தன. இதன் விளைவாக, முதல் அகிலம் என்று அழைக்கப்படும் சர்வதேச தொழிலாளர் சங்கம், 1864 ல் லண்டனில் உள்ள தொழிலாளர் சபையில் அனைத்து சோசலிச மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்புகளின் கூட்டணி சங்கமாகப் பிறந்தது.

ஹேமார்க்கெட் விவகாரம் பற்றி தொழிலாளர் ஆய்வுத்துறை அறிஞர் வில்லியம் ஜே. அடெல்மேன் கூறுகிறார்: “சிகாகோ ஹேமார்க்கெட் விவகாரத்தை விட, எந்த ஒரு நிகழ்வும் தொழிலாளர் வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இது மே 4, 1886 அன்று ஒரு பேரணியுடன் தொடங்கியது. ஆனால் அதன் விளைவுகள் இன்றும் உணரப்படுகின்றன. இந்த பேரணி அமெரிக்க வரலாற்று பாடப்புத்தகங்களில் சேர்க்கப்பட்டுள்ளது என்றாலும், மிகச் சிலரே இந்த நிகழ்வைத் துல்லியமாக முன்வைப்பதோடு அதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக் காட்டுகிறார்கள். மார்க்சிய ஆசான்கள் முன்வைத்த முழக்கம், “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்”. நடைமுறையில் உலகெங்கும் நாம் காண்கிறோம்.

நமக்கான முழக்கம், “அனைத்து நாட்டுத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!” என்றும் கூறலாம். எனினும், “உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!” ஆசான்கள் சொன்னதே.

"கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது" என்றனர் மார்க்சிய ஆசான்கள்.

இங்குள்ளோர் என்ன செய்துக் கொண்டுள்ளோம் ஆசான்கள் கூறியுள்ளதை செயல்படுத்தும் கட்சியாக உள்ளனவாக சிந்திக்க தோழர்களே. 

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்