நாம் வாழும் இந்த சமூகத்தில் எப்படியாவது சொத்து சேர்த்து நாமும் சுகபோகமாக வாழ்ந்து விடலாம் என்று எல்லோரும் ஓடிக் கொண்டுதான் உள்ளார்கள் அதுதான் இந்த சமூகத்தின் தத்துவமாக உள்ளது. ஆனால் எல்லோரும் முன்னேறி விடுகிறார்களா? ஏன் இல்லை? என்பதை நீங்களே தேடிக் கொள்ளுங்கள்!
ஆக பெரும்பான்மையான மக்களை ஏமாற்றி சிறுபான்மையான சொத்து சேர்பதற்கு உழைக்கும் மக்களை ஏய்பதற்காக உருவானது தான் இந்த தத்துவம் நாம் வாழும் சமூகத்தின் ஆளும் சுரண்டும் வர்க்கத்தின் தத்துவம்.
ஏதோ ஒரு வகையில் இதற்குள்ளே சுழன்று சுழன்று அடிமையாக வாழ வைப்பது தான் இந்த தத்துவத்தின் மகிமை.
இதைப் புரிந்து கொள்ளாமலே பெரும்பானமையிலான உழைக்கும் ஏழை எளிய மக்களும் ஓடிக்கொண்டுதான் உள்ளார்கள் எப்படியாது இதில் வாழ வேண்டும் என்று. ஆனால் அவர்களை ஒட்ட சுரண்டுவதுதான் இந்த தனிஉடமை சமூகத்தின் தத்துவம் என்பதனை அறியாமலே இதற்குள்ளே ஓடியோடி தேய்ந்து ஓய்ந்துப்போவதைதான் காண்பீர் இவையை நாமும் புரிய வைப்பதில் தூரமாகவே உள்ளோம். ஏனென்றால் நாம் கை கொள்ள வேண்டிய தத்துவம் மார்க்சிய தத்துவம், அவை தனி உடமையற்ற பொதுவுடமை நோக்கியதாக உள்ளது. அப்படி என்னும் போது இந்த சிறு உடைமை வர்க்கம் அதை விட்டு ஓடி வந்து விடுமா அவர்களை எப்படி நீங்கள் கரை சேர்க்கப் போகிறீர்கள்? அவர்கள் பின் ஓடப்போகிறீர்களா அல்லது அவர்களின் இந்த கொடூரமான சுரண்டல்முறைக்கான காரணத்தை விளக்கி இந்த அவலங்களுக்கு முற்று புள்ளி வைக்க போகிறீர்களா?
அதில் தான் அடங்கி உள்ளது உங்களது செயலும் பணியும் அதுதான் தத்துவம் நடைமுறையும் என்கிறேன்.அதனைதான் மார்க்சிய இயங்கியல் போதிக்கிறது.
தொடர்ந்து விவாதத்தின் நோக்கம் இங்கு சிலர் கூறுவது போல் நாங்கள் நடைமுறையில் உள்ளோம் என்பவர்கள் எந்த வகையான தத்துவத்தில் நடைமுறையில் உள்ளார்கள் என்பதை கேள்வி?
சாதாரண மக்கள் கூட பேசுகிறார்கள் "ஜான் ஏறினால் முலம் சறுக்குகிறோம்" என்பர். அவர்கள் வாழ நினைக்கும் வாழ்க்கையை பற்றி சலித்துக் கொள்கிறார்கள். உண்மையிலே அவர்களுடைய நோக்கம் தனி சொத்து உடைமையை பாதுகாக்க தன்னுடைய போராட்டம் தானே சொத்து சேர்க்க போராடும் முறை தானே அப்படி என்னும் பொழுது அவர்களுடைய நோக்கமானது இந்த தனி உடைமை சமூகத்தில் தானும் ஒரு இடம் தேடுவது தானே சமூகத்தில் உள்ள இந்த போக்கானது எல்லார் மத்தியிலும் ஏதோ ஒரு வகையில் பீடித்து உள்ளதுதானே?
சொத்துக்காக சேர்க்க தனியுடமை தத்துவம் கூறுவது போலவே தனது அமைப்பும் தனது கட்சி மட்டுமே உண்மையான தத்துவ தளத்தில் உள்ளதாக கூறுபவர்களும் செயல்படுகிறார்கள் ஆக மார்க்சிய தத்துவமானது தனி உடைமையின் விவரங்களை அம்பலப்படுத்துவதோடு அந்த தனி உடமையை உடைத்தெறிந்து பொதுவுடமையை நோக்கிய நமது பயணத்துக்கான வழிகாட்டி நிற்கிறது. ஆனால் நமது மார்க்சிய தத்துவப்புரிதலில் உள்ள கோளாறு தான் நமது செயல்பாடுகளை சீரழிக்கிறது என்பேன்.
ஒட்டுமொத்த சமூகமும் சுரண்டப்பட்டும் சூறையாடப்பட்டும் ஒடுக்கப்பட்டும் அடக்கப்பட்டும் கிடக்கும் பொழுது இதற்குள்ளே சிலரின் அல்லது சில முழக்கங்களின் அடிப்படையில் செயல்படுவது எவ்வகையான சமூக மாற்றத்திற்கு பயன்படும்.
ஆகவே மார்க்சிய தத்துவம் ஒட்டுமொத்த சமூகத்தில் உள்ள சீர்கேடுகளை அம்பலப்படுத்தி அதற்கு விடுதலைக்கான பாத்திரத்தை புரட்சிகர கட்சிக்கு வழங்குகிறது.
அந்த புரட்சிகர கட்சி ஆனது தனது செயல்பாட்டை மார்க்சியத்தின் துணை கொண்டு செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
அப்பொழுதுதான் மார்க்சிய தத்துவமானது நடைமுறையில் செயல்பட முடியும் ஆகவே தத்துவம் நடைமுறை என்பது மார்க்சிய தத்துவத்தை தான் கூறுகின்றோம்,
மார்க்சியமல்லாத பல்வேறு தத்துவங்களை பிடித்துக் கொண்டு அவை நடைமுறை ஆக்குவதால் உண்மையாலுமே சுரண்டப்பட்டும் அடக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருக்கும் மக்களுக்கு எவ்வித விடுதலைகளையும் தராது
மார்க்சியத்தின் உயிராதரமான தத்துவத்தை புரிந்து கொள்வதில் லெனில் மிகத் தெளிவாக செயல்பட்டார். மார்க்சியத்தை நிலை நாட்டுவதில்ஒரு புரட்சிகர கட்சியின் அவசியத்தையும்அந்தப் புரட்சிகர கட்சியின் செயலையும்அதே நேரத்தில் புரட்சிக்கு விரோதமானநிலையில் உள்ளவற்றையும் உள்ளவர்களையும் அம்பலப்படுத்தினார்.
அதே நேரத்தில் பறந்து கிடந்த தன் நாட்டில் பல்வேறு வகையான வர்க்கங்களை வர்க்க சக்திகளை இனம் கண்டு புரட்சிக்கானவர்களை ஒருங்கிணைத்தார் புரட்சிக்கு எதிரானவர்களை அம்பலப்படுத்தினார்.
அவ்வகையில் மக்கள் மத்தியில் தனது கட்சி ஒன்றுபட்டு செயல்பட வேண்டிய அவசியத்தை பறைசாற்றினார். அந்த நடைமுறையை தான் புரட்சி சாதித்தது. இதேபோன்று பின் தங்கிய நாடான சீனத்தில் தனது நாட்டின் நிலைமை கேட்ப ஒன்றுபட்ட கட்சியின் அவசியமும் பகுதி வாரியான செயல்பாடுகளையும் ஒரு கட்சி செய்ய வேண்டிய பணியையும் மிகத் தீவிரமாக மாவோ ஆராய்ந்தார் அதன் அடிப்படையில் ரஷ்ய புரட்சியில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் தனது நாட்டில் புரட்சியை நடத்துவதற்கான மார்க்சியத்தை உள்வாங்கி அந்த தத்துவத்தை நடைமுறை ஆக்கும் பணியை கட்சிக்கு விதித்தார். அவை தான் அந்த சீனாவில் இருந்த பிற்போக்குத்தனங்களை உடைத்தெறிந்து ஒரு புரட்சிகர சமூகத்தை படைத்தது. அதில் தான் மார்க்சிய தத்துவமும் நடைமுறையும் அடங்கி உள்ளது.
இங்குள்ள சிலர் சொல்லுவது போல் நடைமுறை எந்த தத்துவத்தின் அடிப்படையில் என்பதை தெளிவுபடுத்தாமல் ஏதோ ஒரு வகையில் ஓடிக்கொண்டு உள்ளார்கள் அவை தான் நடைமுறை என்று!.
உண்மையாலுமே நடைமுறை என்பது மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை ஆகவே தத்துவம் நடைமுறை என்பது ஒரு சமூக மாற்றத்திற்கான தத்துவமான மார்க்சிய வகைபட்டவையும் அதை நடைமுறைப்படுத்துவதற்கான பணியும் தான் என்பதை புரிந்து கொண்டு மேலும் தொடர்வோம்....
சமுகமாற்றத்தில், புரட்சியில் நம்பிக்கை கொண்டவர்கள் தத்துவத்தை கைவிடக்கூடாது என்ற பாடத்தை வரலாற்று அனுபவம் எடுத்துரைக்கிறது. தொழிலாளி மற்றும் உழைக்கும் வர்க்கங்களிடம் வர்க்க தத்துவப் பிரச்சாரத்தை செய்வதும்,முதலாளித்துவ தத்துவநிலைகள்,மதப்பழமைவாதங்களின் குரலாக ஒலிக்கிற உலகப் பார்வைகள் போன்றவற்றிற்கு எதிராக தத்துவப் போராட்டம் மேற்கொள்வதும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவசியமனது என்று லெனினிய அறிவுரை.
தத்துவத்தில் பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் என இரண்டு பிரிவுகள்தான் உண்டு. எந்த பெயர்களில் எந்த தத்துவம் எழுந்தாலும் இந்த இரண்டுக்குள்தான் அடக்கம். எனவே ஒருபுறம் பொருள்முதல்வாதம் எனில் மற்றொருபுறம்“அனுபவவாதவிமர்சனம்”என்றபெயர்கொண்டாலும்அதுகருத்துமுதல்வாதம்தான். ஆனால்,அனுபவவாத விமர்சன தத்துவ ஆசிரியர்கள் தங்களை கருத்துமுதல்வாதிகள் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும், அவர்களுடைய வாதங்கள் அனைத்தும் பழைய கருத்துமுதல்வாதமே என்று லெனின் நூலில் ஆணித்தரமாக நிறுவுகிறார்.புலனறிவு,பொருளின் இருப்பு,அறிவு போன்ற அடிப்படை தத்துவார்த்த பிரச்னைகளில் மார்க்சியத்தின் பார்வையையும் மாக்கியவதிகள் விமர்சித்துள்ளனர்.ஒவ்வொரு கருத்தையும் அலசி ஆராய்ந்து தகர்க்கின்றார் லெனின்.
தொடருவோம்....
No comments:
Post a Comment