இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள் கீழ்வருவன
1). ஆசிரியர் தலையங்கம்
2).சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியோஷோசி பாகம் - 13
3). ஈரான் மீதான அமெரிக்காவின் கொலைக்கார போர்
4). சந்தர்ப்பவாதம் திருத்தல்வாதம் மார்க்சியமா?
இலக்கு: மார்க்சிய லெனினிய புரட்சி மற்றும் ஈரான் போர் விவாதம்
இந்த ஆதாரங்கள் இலக்கு என்ற மார்க்சிய-லெனினிய இதழிலிருந்து எடுக்கப்பட்டவை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் முறைகளையும்,
அதற்கு எதிராக ஈரான் போன்ற நாடுகள் முன்னெடுக்கும் தற்காப்புப் போராட்டங்களையும் இவை விரிவாகப் பேசுகின்றன. லெனினியம் மற்றும் மாவோயிசக் கோட்பாடுகளின் அடிப்படையில், போர்களின் தன்மைகளையும் கம்யூனிஸ்டுகள் கடைபிடிக்க வேண்டிய உயர்வான பண்புகளையும் இக்கட்டுரைகள் விளக்குகின்றன. குறிப்பாக, ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் எவ்வாறு சுயநலமற்று மக்கள் நலனுக்காகத் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. தேர்தல் அரசியலில் உள்ள ஏமாற்றுகளைத் தவிர்த்து, உழைக்கும் மக்களின் உண்மையான விடுதலைக்காகப் புரட்சிகரப் பாதையில் பயணிக்க வேண்டிய அவசியத்தை இந்த இதழ் சுட்டிக்காட்டுகிறது. இறுதியில், ஆதிக்க சக்திகளின் புதிய காலனியத்துவத்தை வீழ்த்த உலகளாவிய ஒற்றுமை தேவை என்பதை இது பறைசாற்றுகிறது.
ஈரான்-அமெரிக்க மோதலை ஒரு தேசபக்திப் போராகப் பார்ப்பது ஏன்?
ஒரு சிறந்த கம்யூனிஸ்ட் வளர்த்துக் கொள்ள வேண்டிய பண்புகள் யாவை?
புதிய காலனி ஆதிக்கத்தில் 'பெட்ரோ-டாலர்' அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது?
இந்த இதழை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்திகேட்கவும் தோழர்களே
சவூதி ஆட்சியாளர்களுக்கு அமெரிக்க ராணுவ பாதுகாப்பு கிடைக்கும் என்பதே. இதன் விளைவாக, உலக நாடுகள் எண்ணெய் வாங்க வேண்டுமானால் டாலரைச் சேமித்து வைக்க வேண்டிய கட்டாயம் உருவானது. இது அமெரிக்காவுக்குத் தன்னிச்சையாகப் பணத்தை அச்சடிக்கும் அதிகாரத்தையும், உலகப் பொருளாதாரத்தைத் தன் பிடிக்குள் வைத்திருக்கும் வலிமையையும் வழங்கியது.
யாரெல்லாம் டாலரின் இந்த ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறார்களோ, அவர்கள் அனைவரும் அமெரிக்காவால் ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டனர்: சதாம் உசேன் டாலருக்குப் பதிலாக யூரோவில் (Euro) எண்ணெய் விற்க முயன்றார். விளைவு: 'அணு ஆயுதப் பொய்' கூறி ஈராக் அழிக்கப்பட்டது. சதாம் தூக்கிலடப்பட்டார். முஅம்மர் கடாபி ‘தங்கத் தினார்' (Gold-backed Dinar) என்ற ஆப்பிரிக்க நாணயத்தை உருவாக்க முயன்றார். விளைவு: நேட்டோ படைகளால் கொல்லப்பட்டார். நிக்கோலஸ் மதுரோ: சமீபத்தில் (ஜனவரி 2026), அமெரிக்கா "Operation Absolute Resolve" என்ற பெயரில் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி, மதுரோவைக் கைது செய்துள்ளது. இது 'போதைப்பொருள் ஒழிப்பு' என்று சொல்லப்பட்டாலும், இதன் உண்மையான நோக்கம் வெனிசுலாவின் 300 பில்லியன் பேரல் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதும் டாலரின் சரிவைத் தடுப்பதும் மட்டுமே.
இந்த வரிசையில் அமெரிக்காவின் மிக முக்கிய இலக்காக இருந்தது ஈரான் மற்றும் அதன் உச்சத் தலைவர் அலி கமேனி. அமெரிக்காவின் 'Pattern' படி, ஒரு நாட்டை அழிக்கும் முன்பு அதன் தலைவரை 'சர்வாதிகாரி' எனச் சித்தரித்து கொல்வது. அப்படியே அணு ஆயுத பொய் ஒன்றுடன் அலி கொமேனிய கொல்லப்பட்டார். மேலும் ஈரான் ஏன் அமெரிக்காவால் குறிவைக்கப்படுகிறது? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். ஈரான் தனது வங்கித் துறையைத் தேசியமயமாக்கி, மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து விலகியுள்ளது. அலி கமேனியின் தலைமையில் ஈரான் தனது எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்க டாலரில் செய்யப் பிடிவாதமாக மறுத்து வருகிறது. ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதாக உலகைப் பயமுறுத்துவதும், அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதும் அமெரிக்காவின் பழைய 'கதைகள்' படி நடக்கும் வேலைகள்தான். அலி கமேனியை ஒரு சர்வாதிகாரியாகச் சித்தரித்து, அந்நாட்டின் மீது ராணுவ பலத்தைப் பிரயோகித்து, ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவி, ஈரானின் எண்ணெயை மீண்டும் டாலருக்குக் கொண்டு வருவதே அமெரிக்காவின் இறுதித் திட்டம். அமெரிக்கா இன்று ஒரு "உலகச் சண்டியராக" வலம் வரக் காரணம் டாலர் மட்டுமே.
ஆனால், தற்போது சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் பிரிக்ஸ் (BRICS) நாடுகள் டாலருக்கு மாற்று வழிகளைத் தேட ஆரம்பித்துவிட்டன. எப்பொழுது பெட்ரோ-டாலர் அமைப்பு முழுமையாகச் சிதைகிறதோ, அப்போது அமெரிக்காவின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் செல்லும். புதியகாலனிய சுரண்டல் என்ன வடிவம் எடுக்கும் பொறுத்திருந்து பார்ப்போம்.
இதனை நாம் லெனின் வரையறையிலிருந்து நாம் புரிந்துக் கொள்வோம், “தாங்கள் நாடுகளின் விடுதலைக்காக போரிடுவதாகக் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள்; உண்மையில் அவர்கள் தாங்கள் அநியாயமாகக் கைப்பற்றிய காலனிகளைத் தக்கவைத்துக் கொள்ளவே போரிடுகிறார்கள், “ஒரு பெரிய வல்லரசுக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக் கொள்ளப் போரிடும் போது, யார் முதலில் தாக்கினார்கள் என்பது முக்கியமல்ல. அந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்டவர்களின் வெற்றிக்காகவும், விடுதலைக்காகவும் இருந்தால், அது ஒரு "தற்காப்புப் போர்" மற்றும் "நீதியான போர்" ஆகும். இதன்படி ஈரானின் போர் நீதிக்கான போரே!
இலக்கு இணைய இதழ் பிடிஎப் வடிவில் இந்த இணைப்பில் தோழர்களே அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள்
No comments:
Post a Comment