மனித குல ஒற்றுமையை சிதைக்கும் இனவியல் கோட்பாடு-1

 "நம் கருத்துகள் அனைத்தும் நாம் வாழும் சமூகத்தின் கருத்துகளே"

இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க வாய்பில்லை என்றே நினைக்கிறேன் தோழர்களே...நம்மிடையே உள்ள கலாச்சாரம் கல்வி ஒழுக்க நெறிகள் அனைத்தும் இச்சமூக கருத்துகள்தானே?

ஆக இதனை மாற்றியமைக்க முயலுவோர் இதில் உள்ள குறைகளான "அரசியல், கல்வி கலாச்சாரம் இன்னும் பிற சமூக மேல்கட்டுமானத்தில்" மேலாத்திக்கம் செய்யும் கருத்துகளுக்கு வெறும் கருத்தியல் போராட்டமாக இல்லாமல் அவை எப்படி மக்களின் வாழ்வியலில் இருந்துக் கொண்டு பங்காற்றுகிறது என்பதனை புரிய வைக்க முயற்சித்துள்ளதா என்ற இடதில் பல்வேறு முன்னோடிகளின் பங்களிப்பென்பது கவனத்திற்குரியவை. அதில் குறிப்பாக பெரியாரின் கருத்தும் தாக்கமும் இன்றைய அவரின் கருத்தியல் பரிணாமங்கள் ஆய்வுக்குறியவையே... அதில் உள்ள சரிதவறுகளை புரிந்துக் கொள்வதும் சமூக மாற்றம் பற்றி அவரின் பங்களிப்பென்ன என்பதனையும் தெளிவாக புரிந்திருந்தால் அவரின் கொள்கை கோட்பாடுகளின் இன்றைய நிலைக்கு பதில் காண முடியும்.
பொதுவுடமையாளர்களின் நிலையை பேசும் முன் தமிழகத்தில் கடவுள் மறுப்பு இயக்கத்தை தொடங்கி இயங்கிய பெரியார் கருத்துகள் மக்கள் மத்தியில் செயல்பட்டு அவை தமிழகத்தில் அவரின் கருத்தியல் ஏற்புடவையாகி அவரின் வாரிசுகளாக அறிவித்துக் கொண்டவர்கள் ஆட்சி கட்டிலில் உள்ள போதே அவரின் கருத்தியலுக்கு எதிரான கடவுள் ஏற்பு நிகழ்கிறது இவை எப்படி என்று மக்களுக்கு புரிய வைக்க வேண்டியது பொதுவுடமையாளர்களின் பணி அல்லவா? அதனை ஆய்வு செய்ய வேண்டுமென்றால் அவர் அன்று கொண்டிருந்த அவரின் கருத்தியலின் தோற்றுவாய் அதன் தேவை அதன் பின்புலம் இப்படி பல உள்ளன அய்வு செய்ய வேண்டாமா? சொல்லுங்கள் தோழர்களே?
பெரியாரின் அன்றை கொள்கை கோட்பாடுகள் என்ன அவை எங்கிருந்து வந்தது அவை எப்படி மக்கள் மத்தியில் செயல்பட்டது இன்று ஏன் செயலிழந்து நிற்கிறது இந்த ஆய்வுகள் வேண்டாமா?
பெரியாரின் சீர்திருத்தவாதம் என்பது சமூகத்தில் சிலரின் தேவைக்கானது அவை ஆட்சியிலும் இந்த அதிகாரத்திலும் பங்கு கேட்டது மேலும் ஒரு சிலர் வாழவழி கேட்டது அவை நடந்தேறியது இன்று அதில் ஆட்சியில் பங்குதாரர்களாகவும் சமூகத்தில் சில சதவீதத்தினர் பயன் அடைந்தவர்களாகவும் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து பெரியாரின் பெயரை பயன்படுத்துகின்றனர் ஆனால் பெரியார் பேசிய சீர்திருத்த நடவடிக்கைகள் இன்று செயல்பாட்டில் திக்குமுக்காடுகிறது ஏன் என்பதை அறிதல் அவசியம்.தொடர்ந்து பேசுவோம் தோழர்களே...
அதற்கு முன் நமது மானுடவியல் பற்றி சற்று அறிவோம் தோழர்களே.

மனிதன்‌ எதையும் சிந்தித்துப்பார்க்கும் தன்மையைப்பெற்றவன், இத்தன்மையை அறிவு என்கிறோம். உலகத்தை அப்பொருள்கள்யாவையும் சிந்தனையைத் தூண்டக்கூடியனவே. ஆதலால்தான் பல அறிஞர்கள்  சிந்தித்துச் சிந்தித்துப் பலபுதுப் பொருள்களையும், பல புதுஅறிவியல் உண்மைகளையும் கண்டுபிடிக்கின்றனர், இப்படிக் கண்டுபிடிக்கப் படும் பொருள்கள் யாவையும், ஆராய்ந்து பார்க்கப்படும் உண்மைகள் யாவையும் ஒரு தன்மையானவை ௮ல்ல ஆகையால் இப்பொருள்களையும் உண்மைகளையும் பல தலைப்புக்களில்பிரித்துப் பார்க்க வேண்டியிருக்கறது, இப்படிப் பிரிக்கப் பட்ட பிரிவுகளே கலவையியல் (Chemistry), பொருளியல்(economics), உடலியல் , மனவியல்(psychology) என்பனவும் பிறவும். இப்படிப்பட்ட பிரிவுகளில் ஒன்றே மானிடவியல். ஆன்த்சொபோ (Anthropos) மனிதனைப் பற்றிய, அதாவது மனிதனின் ௮ன்றைய, இன்றைய பிறப்பு, 'வளர்ப்பு, வாழ்வு போல்வனவற்றின் உண்மைகளை எடுத்துச் சொல்லும் ஓர் அறிவியல்  என்ற பொருளில் மானிடவியல் எனப்பட்டது.

மனிதன் வாழ்க்கை வரலாற்றைப் புரிந்து(மானுடவியல்)

மனித வளர்ச்சியை தெரிந்து கொள்ளச் செய்யும் முயற்சி ந்த மானுடவியல் வரலாறு கடல் போன்றது எனலாம், ஒரு காலத்தை மட்டுமோ, ஒரு நாட்டை மட்டுமோ, ஒரு கலையை மட்டுமோ, அல்லது ஒரு நாகரிகத்தை மட்டுமோ பற்றியது ௮ன்று இவ்வியல். மனிதன் மிருகத்தன்மையுடையவனாக, நாகரிகம் கொஞ்சமும் அற்றவனாக இருந்த காலத்தையும் ன்கு ஆய்ந்து பார்ப்பதே மானுடவியல்.  எல்லா நாகரிகங்களும், எல்லாப் பண்பாடுகளும், எல்லா நாடுகளும் எல்லா மனிதர்களும், எல்லாப் பழக்க வழக்கங்களும் இவ்வியலுக்குள் அடங்கியவையே.  மனிதனைப் படித்தல் என்றால், மனிதனின் மனப்போக்கு சிந்தனைவுகள் (thoughts) செயல்கள் (deeds) எவ்வெப்படி அமைந்திருந்தன, எவ்வெப்படி. மாற்றமுற்றுள்ளன என்பனவற்றையெல்லாம் நன்கு தெரிந்துகொள்ளவேண்டும் அல்லவா? இவற்றைக் கொண்ட ஓர் றிவே மானிடவியல் என்னலாம். மானிடவியல் ர் இயற்கை வரலாறு {natural history). (in nature) மனிதனின் இயல்பும் ஓர் இடம் பெறுகிறது, எனவே, இவ்வியல்பைத் 'தெரிர்துகொள்ளும் முயற்சியே ஓர் இயற்கை வரலாறு. இவ்வரலாறு மனிதனை மட்டும் தனித்துப் பார்க்காமல் மனிதன் வாழும் சமூகத்தையும் பார்க்கறது. மனித குலத்தின் பல்வேறுவளர்ச்சி போக்கை அவை பார்க்கிறது. எனவே, ஆயிரமாயிரம் ஆண்டு களுக்கு முன்னிருந்த மனிதனின் நிலையையும் இயல்பையும்  கூட இவ்வியல் நமக்குத் கற்று தருகிறது, நாம் இதுவரை "தெரிந்து கொண்டவந்திலிருந்து மனிதன் மிகத் தொன்மையிலிருக்தே, அவன் பிறந்த அந்த நாளிலிருந்தே "ஒருவகைக் கூட்டு அமைப்பில் இருந்து. வருவதையும், வ்வமைப்பு நாளுக்குநாள் சிக்கல் நிரம்பியதாக ஆகி வந்து 'கொண்டிருப்பதையும் றிகின்றோம். ன்னையும் ஆதி மனிதனையும் ஒப்பிட்டால், தனிவகையெனத் தோன்றும்,இன்றைய மனிதனுக்கு புரிதல் வேண்டும்.  30 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆதி மனிதனின் தொடர்சிதான் இன்றைய மனிதன் என்றால் அப்படியே அந்த மனிதனை இங்கே நாம் காண முடியாதுதான். அவை புரிந்துக் கொள்ளமுயலுவோம். அன்றைய மனிதனுக்கு நாகரிகம் எது என்றுகூடக் கேட்கத் தோன்றும். அந்த அளவு மாற்றம் இப்பொழுது ஏற்பட்டுவிட்டது வருங்காலத்தும் இப்பண்பாடு அப்படியே நிலைத்திருக்கப் போவதில்லை.

 ஓர் புரிதலுக்குதாம் (உதாரணம்) அன்றைய உணவுக்கான போரில் கல்லும் கல்லால் ஆன கருவிகளும் பயன்பட்டன். பின்னர் ஆதி குலக்குழுக்கள் வாழ்வியலுக்கு தற்காத்துக் கொள்ள அவர்களுக்கான் போர் கருவிகள் கல்லும் வில்லும் வாளும் இப்படி முன்னேறின… அதில் நாம் காண வேண்டியது ... அந்த போர்‌ உணவுக்காக பின் அடுத்தவர்களின் கால்நடையை கவர்தலும் பின்னர் மன்னை பிடிக்க நடந்த போர்கள்தான் மன்னர் ஆட்சி தொடங்கி இன்றைய ஏகாதிபத்தியம் வரை தொடர்கிறது இதில் போர் ஆயுதம் அதன் வளர்ச்சியை பாருங்கள் அன்றும் போர் புரிந்தனர்; இன்றும் போர் புரிகின்றனர். அப்போருக்கும் இப் "போருக்கும் எத்துனை வேறுபாடு கல்- அம்பாயிற்று; அம்பு வாளாயிற்று ; வாள் துப்பாக்கியும் இன்னும் இயந்திரவகைப்பட்ட துப்பாகியோடு நில்லாது ணுக்குண்டும் ஹைட்ரஜன் குண்டும் இன்னும் எத்தனையோ வகையான குண்டுகள் மனிதனை கொல்ல பயன்படுகிறது…. இந்த வளர்ச்சி மனிதனின் தேவையை எப்படியெல்லாம் மாற்றியுள்ளது. இந்த அழிவும் ஒரு சிலரின் வளர்ச்சியும் ஏற்றதாழ்வான இந்த சமூக அறிவையும் புரிந்துக் கொள்ள மார்க்சிய அரசியல் பொருளாதார இயக்கவியல் பொருள் முதல்வாத தத்துவத்தை கற்றுணர்ந்தவர்கள் எளிதாக புரிந்துக் கொள்ள முடியும் அதற்கான சிறிய முயற்ச்சியே…

ஒரு காலத்தில் வரலாறு என்பது மன்னர்களைப் பற்றியும் அவர்கள் நடத்திய போர்களைப் பற்றியும் வெற்றி பெற்ற நாடுகளில் அவர்கள் செய்த வேலைகளைப் பற்றியும் பேசுவதாக இருந்தது. காலப் போக்கில் வரலாறு மக்களைப் பற்றிப் பேசுவதாக மாற்றம் பெற்றது. என்றாலும் வரலாற்றில் பல 'குள்ளநரி வேலைகள்' நடந்துள்ளமையை மார்க்சிய ஆய்வாளர்கள் மற்றும் முதலாளித்துவ புத்திஜீவிகள் இப்போது எடுத்துக்காட்டி வருகின்றனர்.

வரலாற்றை மறைப்பது, மாற்றுவது, திரிப்பது, பொய்யை மெய்யாக்குவது என்னும் 'திருப்பணிகள்' இந்திய வரலாற்றில் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளமையைக் காணமுடிகிறது. காரணம், வரலாற்றை எழுதியவர்கள் பெரும்பாலோர் ஆளும் வர்க்கதினரே ஆக அவர்களின் தேவையை ஒட்டியே சார்புடையதுமாகவே இருந்துள்ளன. இன்றும் இருகின்றது. அதனை பற்றிதான் பேசப் போகிறோம் தொடர்ந்து….

 ஆரிய திராவிட இனவியல் மட்டுமல்ல உலகில் தோன்றிய மனித குல வரலாற்றையும் பேசுவோம் தொடர் விவாதத்தில்...

தொடரும்...

அடுத்த பகுதியை வாசிக்க விவதிக்க இந்த பகுதியை அழுத்தவும்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்