மார்க்ஸ் ஒரு புரட்சியாளர் ஆவார். முதலாளித்துவ சமூகத்தையும், அதன் அரசு இயந்திரத்தையும் தூக்கியெறிவதற்காகவும், உழைக்கும் மக்களின் நிலைமைகளையும் அவர்களின் தேவைகளையும் மக்களுக்கு உணரச் செய்ததில் காரல்மார்க்சின் பங்கு மிகவும் சிறப்பானதாகும். இதற்காக வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அவர் தம் வாழ்நாள் முழுவதும் போராடினார். மார்க்சை பின்பற்றக் கூடிய கம்யூனிஸ்டுகளும் மார்க்சின் வழியில் மக்களின் நிலைமைகளையும் அவர்களது தேவைகளையும் புரிந்துகொண்டு மக்களுக்கு அதனை எடுத்துச் சொல்ல வேண்டும். மக்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் முதலாளித்துவ சமூக அமைப்பையும் அதனை கட்டிக்காக்கும் அரசு இயந்திரத்தையும் தகர்த்துவிட்டு ஒரு பாட்டாளி வர்க்க அரசுக்காகவும் சமூக அமைப்பிற்காகவும் பாடுபடுபவர்தான், மார்க்சை உண்மையிலேயே பின்பற்றக் கூடிய கம்யூனிஸ்டாக இருக்க முடியும். அதற்காகப் பாடுபடும் அதே வேளையில் உழைக்கும் மக்களின் உடனடியான தேவைகளுக்காக நிலவுகின்ற முதலாளித்துவ அமைப்பு வழங்கியுள்ள சட்டப்பூர்வமான வாய்ப்புகளையும் கம்யூனிஸ்டுகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் சட்டப்பூர்வமான போராட்டங்களையும் சட்ட மறுப்பு போராட்டங்களையும் இணைக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுவே மார்க்சிய லெனினியத்தை பின்பற்றுவதற்கான வழிமுறையாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இலக்கு இதழின் கட்டுரைகள்
செய்தியை சார்ந்த அலசல்
-
கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் எங்கெல்ஸின் ஆரம்பகால தத்துவ மற்றும் அரசியல் எழுத்துகளின் தொகுப்பாக இந்த ஆதாரங்கள் அமைந்துள்ளன. "On t...
-
கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரிட்ரிக் எங்கெல்ஸ் இணைந்து எழுதிய "ஜெர்மன் சித்தாந்தம்" என்ற நூல், வரலாற்றுப் பொருள்முதல்வாதம் என்ற ச...
-
நான் எழுதி மே 2025 வெளிவந்த "சாதி அன்றும் இன்றும் -மார்க்சிய பார்வையில்" என்ற நூலை மீளாக்கம் செய்ய விரும்புகிறேன். ஏனெனில் நான் எ...
-
இந்த ஆதாரமானது வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் அடிப்படையில் சமூக விடுதலையை அடைவதற்கான அறிவியல் ரீதியான அணுகுமுறையை விளக்குகிறது. வெறும் அரச...
-
"NEET வினாத்தாள் கசிவா ? அல்லது கல்வி அமைப்பின் முரண்பாடா ?" பிரச்சினையை தனிநபர் குற்றமாக மட்டும் சுருக்க முடியுமா ? " வி...
-
இந்த ஆவணம் மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் சமூகம், மதம் மற்றும் சாதி குறித்த ஆழமான விவாதத்தை முன்வைக்கிறது. மனித குலத்தின்...
-
CJP போராட்டம் இந்திய ஊடக பசிக்கு நல்ல தீனிப்போட்டு அவர்களின் பசியை போக்கிக் கொண்டுள்ளது ஆனால் அவை உண்மையில் என்ன செய்துக் கொண்டுள்ளது என்பதே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக