நேற்றைய வகுபிற்கான எழுத்துகள்
நமது நாட்டில் பலவீனமான பகுதியை உங்கள் முன் வைக்கவும் இங்குள்ள கட்சிகள் மறந்தே போனவற்றை மார்க்சிய ஆசான்களின் வழிக்காட்டுதலை முன் வைத்து விவாதிக்கவே இந்தப்பகுதியை எழுதும் கட்டாயம். இவை எனது எழுத்துகள் அல்ல முன்னோடிகள் தொகுத்தவற்றை நான் உங்கள் முன் வைக்கிறேன். இதற்கு ஆதரமான நூல்களை துணைக்கொண்டு மெய்விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் தோழர்களே.
புரட்சிக்கு பதிலாக சீர்திருத்தமும், அரசியல் போராட்டத்தை மறந்து பொருளாதார போராட்டத்தில் எதிரி வர்க்கத்திடம் மண்டியிட்டு கிடக்கும் அவலங்களை உங்கள் முன் வைப்பதோடு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க மார்க்சிய லெனினிய சித்தாந்த அறிவை பெற்றிருப்பதோடு உழைக்கும் வெகுஜன மக்களோடு இணைந்து செயலாற்ற வேண்டும் அவை அவர்களின் விடுதலைக்காக என்பதனை அவர்களை தட்டி எழுப்ப வேண்டும் எப்படி என்பதனை நமது ஆசான்கள் வழிகாட்டியுள்ளனர். வாருங்கள் முழுமையாக கற்று தேர்வதோடு ஒரு உண்மையான பாட்டாளி வர்க்க கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதனை புரிந்து இங்குள்ள கட்சிகளின் நிலையை அறிவதோடு ஒரு பாட்டாளி வர்க்க கட்சி என்பது எப்படி இருக்க வேண்டும் அறிவோம் செயல்படும் தோழர்களே.
மார்க்சியம், பாட்டாளி வர்க்கம் தனக்கென்று ஒரு கட்சியின்றி முதலாளித்துவத்தைத் தோற்கடிக்கவோ, அதிகாரத்தை வெல்லவோ, சோசலிசத்தைக் கட்டியமைக்கவோ முடியவே முடியாது என்று கற்பிக்கிறது.
மார்க்சும் எங்கெல்சும் சுதந்திரமான பாட்டாளி வர்க்கக் கட்சியின் தேவையை எல்லாவற்றிற்கும் மேலாக வலியுறுத்தி வந்தனர். முதலாம் அகிலத்தில் அவர்களால் வகுக்கப்பட்ட விதி ஒன்று “தனக்கென்று தனித்தன்மையுடைய ஒரு கட்சியை, உடைமையாளர்களது பழைய கட்சிகளனைத்திற்கும் எதிராக கட்டியமைத்தாலன்றி ஒருபோதும் ஒரு வர்க்கமாகச் செயல்பட முடியாது” என்கிறது.
மார்க்சும், எங்கெல்சும் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தோன்றிய காலத்தில் எழுதி வந்தவர்கள். அவர்களது பார்வை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பின்வருமாறு தொகுக்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகள் பிற பாட்டாளி வர்க்கக் கட்சிகளுக்கெதிராக ஒரு கட்சியைக் கட்டவில்லை. மாறாக, அவர்கள் ஒரு பொது அரசியல் திட்டத்தின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்தை ஒன்று திரட்டி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்திற்காக முனைகிறார்கள்.
மார்க்சும் எங்கெல்சும் கட்சிக்குள் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவக் கருத்துக்கள், கோட்பாடுகளை கடத்தி வர முனைவதை அதை ஒரு வர்க்க சமரசப் போக்கிற்கு உட்படுத்துவதை விடாப்பிடியாக எதிர்த்தனர். கட்சியைப் புரட்சிகர மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிறுவவும், அவற்றிற்கு தொழிலாளி வர்க்க நிறுவனங்களை வென்றெடுக்கவும் முயன்றனர். இதுதான் அவர்களின் அரசியல் செயற்பாடாக இருந்தது. மேலும் அவர்கள் பாட்டாளி வர்க்கம் எவ்வகைப் போக்கை பிற வர்க்கங்களின் மீது கடைப்பிடிக்க வேண்டும் என்பதை குறிப்பாக விவசாயி வர்க்கத்தை, பாட்டாளி வர்க்கத்தின் மிக முக்கியத் துணைவர்களாகக் கருதி வரையறுப்பதில் கவனம் செலுத்தினர்.
லெனின் போல்சுவிக் கட்சியை ஏகாதிபத்திய சகாப்தத் தொடக்கத்தில் கட்டினார். மேற்கத்திய நாடுகளின் சோசலிசக் கட்சிகளின் “அமைதியான” வளர்ச்சி கொண்ட பல பத்தாண்டுகளின் முடிவில் சந்தர்ப்பவாதப் போக்குகள் தலைவிரித்தாடின. அகிலத்தின் ஒட்டு மொத்த செயற்பாட்டையும் பரிசோதித்துச் சரி செய்வதும் சந்தர்ப்பவாதத்தை முற்றாக நிராகரிப்பதும் மிக முக்கியத் தேவையானது. போல்சுவிக் கட்சியை அவர் புதிய வகையானதாக முதலாளித்துவத்தை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தை ஒன்றிணைத்துத் தலைமை தாங்குவதாகக் கட்டியமைத்தார். இக்கட்சி ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை, சுய ஒழுங்கை உள்ளடக்கி, புரட்சிகர மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையிலானதாய் அக்கோட்பாடுகளைப் பயன்படுத்தி, முன்னெடுத்துச் செல்லக்கூடியதாய் இருந்தது.
அப்படிப்பட்ட கட்சி புரட்சிகர தத்துவ அடிப்படையிலமைந்து பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படைப்பிரிவாய் அதிகாரத்தை வெல்ல, சோசலிசத்தைக் கட்டியமைக்க, தொழிலாளி வர்க்க இயக்கங்களை ஈர்த்து, வழி நடத்தி, தலைமை தாங்கிச் செல்வதால், பாட்டாளி வர்க்கத்தின் மிக உயர்ந்த அமைப்பு வடிவமாக இருக்கிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கான ஒரு கருவியாக உள்ளது. ஒற்றுமையை, ஒழுங்கைக் காப்பதாக, எந்த குழுப்போக்கும் அதன் ஒற்றுமையைக் சிதைந்துவிடாது இருக்கும்படி காக்கிறது. தானே சந்தர்ப்பவாதிகளை வெளித்தள்ளி தூய்மை அடைகிறது. போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது கொள்கையை எந்த எதிரிக்கு மரண அடி கொடுப்பது என்பதை நிர்ணயிப்பதாக தாக்குதல் திசைவழியை அமைத்துக் கொள்கிறது. அனைத்து கூட்டாளி வர்க்கங்களையும் இந்த எதிரிக்கு எதிரான போராட்டத்தில் சாத்தியமான எல்லா நட்பு சக்திகளையும் ஒன்றிணைக்கிறது.
போல்சுவிக் கட்சி பாட்டாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்திற் கெதிரான புரட்சிகர மார்க்சியத்தின் போராட்டத்தில் பிறந்தது. அதன் திட்டங்களும், அமைப்புக் கோட்பாடுகளும், தொழிலாளிகள் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு போராட வேண்டும் என்னும் “பொருளாதாரவாதத்”திற்கெதிரானதாக அமைந்தது. அவர்களோடு கட்சியில் வர்க்கக் கூட்டிணைப்புக் கோட்பாடுகளைப் புகுத்தி அமைப்பைப் பலவீனப்படுத்தி ஒற்றுமையைக் குலைக்க முயன்ற மென்ஷ்விக்குகளுக்கு எதிரானதாக, கட்சியை மக்களிடமிருந்தே பிரித்து, நட்புச் சக்திகளை நிராகரித்து, போராட்டத்தின் வளர்ச்சிக்கட்ட அடிப்படையிலான கோட்பாட்டுக்குப் பதிலாக “வெற்றுப் புரட்சிகர” வாய்வீச்சில் இறங்கிய “இடதுசாரி”களுக்கெதிரானதாக இருந்தது.
லெனின் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத் தலைவர்களை எதிர்த்து அம்பலப்படுத்தி வந்தார். இத்தலைவர்கள் 1914-18-ல் ஏகாதிபத்தியப் போரில் அகிலத்தையே காட்டிக் கொடுத்தவர்கள். லெனின் நியாயமான, நியாயமற்ற போர்களுக்கிடையிலான வேறுபாட்டை விளக்கி போரைப் பற்றிய பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை உருவாக்கினார்.
லெனினது போதனைகள், புதிய பாணி கட்சியைக் கட்ட கம்யூனிஸ்டுக் கட்சிகளால் ஏற்கப்பட்டு ஸ்டாலினால் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டன.
லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?”, “இடதுசாரிக் கம்யூனிசம் ஒரு இளம்பருவக் கோளாறு” என்னும் இரு நூல்களும் மிக அவசியமானவை. இவற்றோடு “ஓரடி முன்னே இரண்டடி பின்னே” என்ற நூலையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஸ்டாலினின் 17,18-ம் சோவியத் ரசியக் கம்யூனிஸ்டுக் கட்சி காங்கிரசில் தந்த அறிக்கைகள் முக்கியமாகப் படிக்க வேண்டியவை.
கிளப் அவுஸில் பேசியதை ஒலி வடிவில் கேட்க இந்த லிங்கை அழுத்தவும் தோழர்களே
லெனின்: ஓரடி முன்னே ஈரடி பின்னே
(One Step Forward Two Steps Back)
கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்ள இந்நூல் மிக முக்கியமானதாகும். 1904-இல் ருஷ்ய சமூக ஜனநாயகவாதத் தொழிலாளர் கட்சியின் இரண்டாம் காங்கிரசைத் தொடர்ந்து எழுதப்பட்டது. இந்தக் காங்கிரசில்தான் போல்ஷ்விக் – மென்ஷ்விக் பிளவு வெளிப்படையாகக் கட்சிக்குள் தெரிந்தது.1903-இல் ருஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் இரண்டாம் காங்கிரசில் இருவகைப் போக்குகளாக, புரட்சிகரப் போக்கும், சந்தர்ப்பவாதமும் வெளிப்படையாக உணரப்பட்டது. காங்கிரசில் கட்சித் திட்டத்தை ஏற்றுக் கொண்ட பிறகு அதன் விதிகளை ஏற்பதில் பிரச்சினை ஏற்பட்டது. லெனினும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் உறுப்பினராக மூன்று தகுதிகளை முன் வைத்தனர்.
அவை:
(i) கட்சித் திட்டத்தை ஏற்பது
(ii) கட்சிக்குச் செலுத்த வேண்டிய தொகையைத் தருவது.
(iii) கட்சி உறுப்பொன்றில் இருப்பது.
அவரது எதிர்ப்பாளர்கள் 3-ஆம் விதி
கூடாது என்றனர்.
இக்காங்கிரசின் முடிவில் லெனினின் ஆதரவாளர்கள் கட்சி மத்தியக் கமிட்டியிலும், கட்சி இதழான ‘இஸ்க்ரா’ ஆசிரியர் குழுவிலும் பெரும்பான்மை பெற்றனர். எனவேதான் அவர்கள் பெரும்பான்மை எனப் பொருள்படும் போல்சவிக்குகள் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். சிறுபான்மை எனப் பொருள்படும் மென்ஷ்விக் என்ற பெயர் லெனினின் எதிர்ப்பாளர்களுக்கானது. ஆனால் பின்பு மென்ஷ்விக்குகள் இஸ்க்ராவைக் கைப்பற்றினர். கட்சிக்கு எதிரே அது மிகவும் “இறுகிப்” போய் உள்ளது எனத் தாக்கத் தொடங்கினர். கட்சியின் முடிவுகளை தனிநபர் மீறும் “சுதந்திரத்தை” அவர்கள் கோரினர். சந்தர்ப்பவாதிகள் கட்சி விதிகளின் மீதான தாக்குதலை இப்படித் தொடங்கினர்.
லெனின், கட்சி
அமைப்பைப் பலவீனப்படுத்தும் இம்முயற்சி பெரிய அரசியல் விஷயங்களில் சந்தர்ப்பவாதத்
திட்டங்களைத் திணிக்கும் முன்முயற்சி என்று கண்டுகொண்டார். “ஓரடி
முன்னே ஈரடிகள் பின்னே” நூலில் 2-ஆம் காங்கிரசின் அனைத்து நடைமுறைகளையும், ஒட்டுக்களையும்
ஆய்ந்து கட்சியில் இரு பிரிவுகள் உள்ளதைக் காட்டினார். புரட்சிகரப்
பிரிவு, சந்தர்ப்பவாதப்
பிரிவு என்ற இரண்டுமே அவை. இந்த நூலில் மத்தியப்படுத்தப்பட்ட ஒழுங்கமைந்த
கட்சி பாட்டாளி வர்க்கத்தின் தேவை என்பதை லெனின் தெளிவாகக் காட்டுகிறார்.
மார்க்சியமும் திருத்தல்வாதமும் (1908) என்ற
நூலில் திருத்தல்வாதத்தை லெனின் ஆய்கிறார். தங்களை
மார்க்சியவாதிகள் என்றழைத்துக் கொண்டே மார்க்சிய அடிப்படைகளைத் திருத்துகின்ற
சந்தர்ப்பவாதிகளின் தத்துவமே திருத்தல்வாதம். திருத்தல்வாதிகள்
இயக்க இயல் பொருள்முதல்வாதத்துக்குப் பதிலாக முதலாளித்துவ தத்துவத்தின் “மிகப்
புதிய விஷயங்களை” சார்ந்திருப்பதைக் காட்டினார். குறிப்பாக
முதலாளித்துவ அரசியல் பொருளாதாரவாதிகளின் நவீன தத்துவங்களைக் கையிலெடுத்துக்
கொண்டு மார்க்சியத்தைத் “திருத்த” குறிப்பாக
மார்க்சின் “மதிப்பு” பற்றிய
கோட்பாட்டை, முதலாளித்துவ
நெருக்கடிகளின் தவிர்க்க இயலாத தன்மையைத் திருத்த முயன்றனர். ஜனநாயகமும்
பொதுமக்கள் வாக்குரிமையும் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படைகளை அகற்றி விட்டன
என்று அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள்.
திருத்தல்வாதம்
சோசலிச லட்சியங்களைக் கைவிட்டு “பாட்டாளி
வர்க்க அடிப்படை நலன்களை கற்பனையான அல்லது நிஜமான பொருளாதார நலன்களுக்காக தியாகம்
செய்துவிடும்” அளவுக்கு சரிந்தது. பாட்டாளி
வர்க்க இயக்கத்தில் இது குட்டி முதலாளித்துவ போக்கைப் பிரதிபலித்தது.
“ஐரோப்பிய தொழிலாளர் இயக்கத்தில் கருத்து வேற்றுமைகள்” (1910) என்னும் நூலில் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் புலப்படும் மார்க்சிய – விரோதப் போக்குகள் தற்செயலானவை அல்ல, மாறாக, அனைத்து முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் தன்மையைப் பொறுத்தது என்று குறிப்பிடுகிறார். ருஷ்ய சமூக ஜனநாயகவாத இயக்கத்தில் சீர்த்திருத்தவாதக் கருத்துக்களின் தாக்கத்தை முதலாளித்துவப் பிரச்சாரத்துடன் தொடர்புபடுத்துகிறார் லெனின். சோசலிசத்திற்கு எதிராக நேரடியாகப் போராடாமல் முதலாளித்துவம் சீரான, துண்டு துண்டுச் சீர்திருத்தங்களை முன்வைக்கக் கற்றுக் கொண்டு உள்ளது எனக் கூறுகின்றனர். இது முதலாளித்துவத்திற்கு ஒட்டுப் போட முனைவது ஆகும்; அவர்கள் அத்தகைய பிரச்சாரத்தைப் பயன்படுத்தி பாட்டாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்தி வலுவிழக்கச் செய்ய முயலுகிறார்கள்; முதலாளிவர்க்க ஆட்சியை தக்கவைக்கப் பார்க்கிறார்கள். இப்பிரச்சாரம் சீர்திருத்தவாத சித்தாந்தங்கள் வாயிலாக தொழிலாளி வர்க்க இயக்கத்தில் வெளிப்பட ஆரம்பித்து விட்டது – புரட்சிக்குப் பதிலாக சீர்திருத்தங்களை அது முன் வைக்கிறது. (இக் கட்டுரை, ருஷ்யத் தொழிலாளர்கள் ஒருபோதும் புரட்சிப் பாதையை எக்காரணம் முன்னிட்டும் தேர்ந்தெடுக்கக் கூடவே கூடாது என்று பிரச்சாரம் செய்த சீர்திருத்தவாத சோசலிஸ்டுகளைப் பற்றிய பெருந்திரளான விவரங்களுடன் கூடிய வாதத்தை உள்ளடக்கியதாகும்.)
ஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் பிளவும் (1916) என்ற
நூலில் தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதம் நிலவுவதற்கும் அதன்
வலிமைக்கும் அடிப்படைக் காரணங்களைத் தொகுத்து லெனின் உரைக்கிறார். ஏகாதிபத்தியத்தின்
உயர்விகித லாபங்கள் தொழிலாளி வர்க்கத்தின் மேல்தட்டுக்கு லஞ்சம் அளிக்கவும், ஊழல்படுத்தவும்
பயன்படுத்துகின்றன. இதன் விளைவாகப் பூர்ஷ்வா தொழிலாளர் கட்சி எல்லா ஏகாதிபத்திய
நாடுகளிலும் தலை எடுத்தது.
குறிப்பாக பிரிட்டனை ஆய்கின்ற லெனின், அங்கு
சந்தர்ப்பவாதம், முறையான
ஏகாதிபத்தியம் தோன்றுவதற்குப் பல பத்தாண்டுகளின் முன்பே பிறந்து விட்டதாகக்
கூறுகிறார். தொழில்துறையில்
தனியாதிக்கமும் (Industrial
Monopoly) ஏகாதிபத்தியத்துக்கு முந்தைய முதலாளித்துவ வளர்ச்சியிலேயே அது
பிடித்திருந்த செழிப்பான காலனிய நாடுகளும் அவர்களுக்கு உயர் லாபங்களைத்
தோற்றுவித்தன. இது
ஏகாதிபத்தியத் தோற்றத்தின் முன்பே நிகழ்ந்த போதும் தன்னுள் சில ஏகாதிபத்திய
இயல்புகளைக் கொண்டிருந்தது.
இதே கருத்தை லெனின் தனது “இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சி” (1915) என்னும்
கட்டுரையிலும் கையாள்கிறார். இதில் சந்தர்ப்பவாதம் என்றால் என்ன என்று
வரையறுக்கிறார். அதாவது “சிறுபான்மையினரின் தற்காலிக நலன்களின்
பொருட்டு பெருந்திரளான தொழிலாளர்களின் நலன்களை தியாகம் செய்து விடுவது” எனப் பொருளாகும். வேறு
விதமாகச் சொல்வதானால் “தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பிரிவு பெருந்திரளான தொழிலாளி
வர்க்கத்திற்கு எதிராக கூட்டு சேர்வது” ஆகும்.
முதலாளிகள் தொழிலாளிகளுக்கிடையில் ஒரு
பிரிவுக்கு மட்டும் சலுகை அளிப்பதன் மூலம் அவர்களுக்கிடையில் தகுதிபெற்ற தொழிலாளர்
“தட்டு” ஒன்றை
ஏற்படுத்த முடிகிறது என்பதால் சந்தர்ப்பவாதம் தோன்றவும் வலிமையடையவும் வாய்ப்புகள்
உள்ளன. மேலும் “பழக்கங்களின் வலிமை, ஒப்பீட்டளவில்
அமைதியான வளர்ச்சிப் போக்குக்குப் பழகிப் போவது, தேசியத்
தன்னியல்புப் போக்கு (Prejudice) கூரிய பிளவுகளுக்கு அஞ்சுவது, நம்பிக்கையின்மை
முதலியவற்றால் சந்தர்ப்பவாதம் வலிமையடைகிறது என்கிறார் லெனின்.
தொடரும்....
No comments:
Post a Comment