இங்கிலாந்தைச் சேர்ந்த தோழர் மாரிஸ் கார்ன்ஃபோர்த், “மார்க்சிய மூல நூல்களுக்கான வாசகர் வழிகாட்டி” என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலில் மார்க்சிய லெனினியத்தை எப்படிக் கற்பது என்பதையும், அரசியல்- பொருளாதார- சித்தாந்தப் பிரச்சினைகளை மார்க்சிய லெனினியத்தின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான வழிமுறையை மார்க்சிய மூல நூல்களில் இருந்து எப்படி கற்றுக்கொள்வது என்பதைப் பற்றியும் விரிவாக விளக்குகிறார்.
இந்த நூலில் “பாட்டாளி வர்க்கக் கட்சி” என்ற தலைப்பில் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க
வேண்டும் என்பதை மார்க்சிய ஆசான்களின் நூலில் இருந்து எப்படி கற்றுக் கொள்வது
என்பதை விளக்கியிருக்கிறார். ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியின் முக்கியத்துவம் மற்றும்
தன்மைகளை மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் உள்ளிட்ட மார்க்சிய ஆசான்களின் நூல்களில் இருந்து
எடுத்துக்காட்டி, அந்நூல்கள் குறித்து அறிமுகப்படுத்துகிறார்.
இந்நூலின் 5ம் அத்தியாயமான “பாட்டாளி வர்க்கக் கட்சி” என்ற பகுதியை இங்கே காண்போம் அதில் உள்ள பகுதியை வாசிக்க விவாதிக்க எழுத்து வடிவில் இங்கே வெளியிடுகிறோம்.
பாட்டாளி
வர்க்கக் கட்சி
முன்னுரை
மார்க்சியம், பாட்டாளி
வர்க்கம் தனக்கென்று ஒரு கட்சியின்றி முதலாளித்துவத்தைத் தோற்கடிக்கவோ, அதிகாரத்தை
வெல்லவோ, சோசலிசத்தைக்
கட்டியமைக்கவோ முடியவே முடியாது என்று கற்பிக்கிறது.
மார்க்சும் எங்கெல்சும் சுதந்திரமான
பாட்டாளி வர்க்கக் கட்சியின் தேவையை எல்லாவற்றிற்கும் மேலாக வலியுறுத்தி வந்தனர். முதலாம்
அகிலத்தில் அவர்களால் வகுக்கப்பட்ட விதி ஒன்று “தனக்கென்று தனித்தன்மையுடைய ஒரு கட்சியை, உடைமையாளர்களது
பழைய கட்சிகளனைத்திற்கும் எதிராக கட்டியமைத்தாலன்றி ஒருபோதும் ஒரு வர்க்கமாகச்
செயல்பட முடியாது” என்கிறது.
மார்க்சும், எங்கெல்சும்
பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தோற்ற காலத்தில் எழுதி வந்தவர்கள். அவர்களது
பார்வை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பின்வருமாறு தொகுக்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகள்
பிற பாட்டாளி வர்க்கக் கட்சிகளுக்கெதிராக ஒரு கட்சியைக் கட்டவில்லை. மாறாக, அவர்கள்
ஒரு பொது அரசியல் திட்டத்தின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்தை ஒன்று திரட்டி
அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்திற்காக முனைகிறார்கள்.
மார்க்சும் எங்கெல்சும் கட்சிக்குள்
முதலாளித்துவ, குட்டி
முதலாளித்துவக் கருத்துக்கள், கோட்பாடுகளை கடத்தி வர முனைவதை அதை ஒரு வர்க்க
சமரசப் போக்கிற்கு உட்படுத்துவதை விடாப்பிடியாக எதிர்த்தனர். கட்சியைப்
புரட்சிகர மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிறுவவும், அவற்றிற்கு
தொழிலாளி வர்க்க நிறுவனங்களை வென்றெடுக்கவும் முயன்றனர். இதுதான்
அவர்களின் அரசியல் செயற்பாடாக இருந்தது. மேலும் அவர்கள் பாட்டாளி வர்க்கம் எவ்வகைப்
போக்கை பிற வர்க்கங்களின் மீது கடைப்பிடிக்க வேண்டும் என்பதை குறிப்பாக விவசாயி
வர்க்கத்தை, பாட்டாளி வர்க்கத்தின்
மிக முக்கியத் துணைவர்களாகக் கருதி வரையறுப்பதில் கவனம் செலுத்தினர்.
லெனின் போல்சுவிக் கட்சியை ஏகாதிபத்திய
சகாப்தத் தொடக்கத்தில் கட்டினார். மேற்கத்திய நாடுகளின் சோசலிசக் கட்சிகளின் “அமைதியான” வளர்ச்சி
கொண்ட பல பத்தாண்டுகளின் முடிவில் சந்தர்ப்பவாதப் போக்குகள் தலைவிரித்தாடின. அகிலத்தின்
ஒட்டு மொத்த செயற்பாட்டையும் பரிசோதித்துச் சரி செய்வதும் சந்தர்ப்பவாதத்தை
முற்றாக நிராகரிப்பதும் மிக முக்கியத் தேவையானது. போல்சுவிக்
கட்சியை அவர் புதிய வகையானதாக முதலாளித்துவத்தை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தை
ஒன்றிணைத்துத் தலைமை தாங்குவதாகக் கட்டியமைத்தார். இக்கட்சி
ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை, சுய
ஒழுங்கை உள்ளடக்கி, புரட்சிகர மார்க்சிய கோட்பாடுகளின்
அடிப்படையிலானதாய் அக்கோட்பாடுகளைப் பயன்படுத்தி, முன்னெடுத்துச்
செல்லக்கூடியதாய் இருந்தது.
அப்படிப்பட்ட
கட்சி புரட்சிகர
தத்துவ அடிப்படையிலமைந்து பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்
படைப்பிரிவாய் அதிகாரத்தை வெல்ல, சோசலிசத்தைக் கட்டியமைக்க, தொழிலாளி வர்க்க இயக்கங்களை ஈர்த்து, வழி நடத்தி, தலைமை
தாங்கிச் செல்வதால், பாட்டாளி வர்க்கத்தின் மிக உயர்ந்த
அமைப்பு வடிவமாக இருக்கிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கான ஒரு
கருவியாக உள்ளது. ஒற்றுமையை, ஒழுங்கைக்
காப்பதாக, எந்த
குழுப்போக்கும் அதன் ஒற்றுமையைக் சிதைந்துவிடாது இருக்கும்படி காக்கிறது. தானே
சந்தர்ப்பவாதிகளை வெளித்தள்ளி தூய்மை அடைகிறது. போராட்டத்தின்
ஒவ்வொரு கட்டத்திலும் தனது கொள்கையை எந்த எதிரிக்கு மரண அடி கொடுப்பது என்பதை
நிர்ணயிப்பதாக தாக்குதல் திசைவழியை அமைத்துக் கொள்கிறது. அனைத்து
கூட்டாளி வர்க்கங்களையும் இந்த எதிரிக்கு எதிரான போராட்டத்தில் சாத்தியமான எல்லா
நட்பு சக்திகளையும் ஒன்றிணைக்கிறது.
போல்சுவிக் கட்சி பாட்டாளி வர்க்க
இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்திற்கெதிரான புரட்சிகர மார்க்சியத்தின் போராட்டத்தில்
பிறந்தது. அதன்
திட்டங்களும், அமைப்புக்
கோட்பாடுகளும், தொழிலாளிகள்
பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு போராட வேண்டும் என்னும் “பொருளாதாரவாதத்”திற்கெதிரானதாக அமைந்தது. அவர்களோடு
கட்சியில் வர்க்கக் கூட்டிணைப்புக் கோட்பாடுகளைப் புகுத்தி அமைப்பைப்
பலவீனப்படுத்தி ஒற்றுமையைக் குலைக்க முயன்ற மென்ஷ்விக்குகளுக்கு எதிரானதாக, கட்சியை
மக்களிடமிருந்தே பிரித்து, நட்புச்
சக்திகளை நிராகரித்து, போராட்டத்தின் வளர்ச்சிக்கட்ட
அடிப்படையிலான கோட்பாட்டுக்குப் பதிலாக “வெற்றுப்
புரட்சிகர” வாய்வீச்சில் இறங்கிய “இடதுசாரி”களுக்கெதிரானதாக
இருந்தது.
லெனின் இரண்டாம் அகிலத்தின்
சந்தர்ப்பவாதத் தலைவர்களை எதிர்த்து அம்பலப்படுத்தி வந்தார். இத்தலைவர்கள்
1914-18-ல்
ஏகாதிபத்தியப் போரில் அகிலத்தையே காட்டிக் கொடுத்தவர்கள். லெனின்
நியாயமான, நியாயமற்ற
போர்களுக்கிடையிலான வேறுபாட்டை விளக்கி போரைப் பற்றிய பாட்டாளி வர்க்க
நிலைப்பாட்டை உருவாக்கினார்.
லெனினது போதனைகள், புதிய
பாணி கட்சியைக் கட்ட கம்யூனிஸ்டுக் கட்சிகளால் ஏற்கப்பட்டு ஸ்டாலினால் மேலும்
வளர்த்தெடுக்கப்பட்டன.
இந்தப் பகுதியில் நாம் மார்க்சு, எங்கெல்சு, லெனினின்
கட்சியைப் பற்றி சிறப்பாக அதன் பங்கு, அமைப்பு, கொள்கை
குறித்த படைப்புகளில் என்ன சொல்கிறார்கள் என்று கவனம் செலுத்துவோம்.
ஆனால்
மார்க்சிய – லெனினியக்
கோட்பாடுகளின் முழுமையே வழிகாட்டும் தத்துவமாகவும், பாட்டாளி
வர்க்கத்தின் போரில், போர்த்தந்திர வரையறுப்பாகவும் அமைகின்றது.
இந்நூலின் இரண்டாம் பகுதியில் ஏற்கெனவே
கட்சியைப் பற்றிய அடிப்படை விசயங்கள் விளக்கப்பட்டுள்ளன. இப்பிரச்சினை
குறித்து, முதலில்
மாணவர்கள் போல்சுவிக்
கட்சி வரலாறு, லெனினியத்தின் அடிப்படைகள் 1, 8 அத்தியாயங்கள், கம்யூனிஸ்டு
கட்சி அறிக்கை ஆகியவற்றைக் கற்க வேண்டும்.
அதன்பின் லெனின் எழுதிய “என்ன
செய்ய வேண்டும்?”, “இடதுசாரிக் கம்யூனிசம் ஒரு இளம்பருவக்
கோளாறு” என்னும்
இரு நூல்களும் மிக அவசியமானவை. இவற்றோடு “ஓரடி
முன்னே இரண்டடி பின்னே” என்ற நூலையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஸ்டாலினின் 17,18-ம்
சோவியத் ரசியக் கம்யூனிஸ்டுக் கட்சி காங்கிரசில் தந்த அறிக்கைகள் முக்கியமாகப்
படிக்க வேண்டியவை.
இதற்குப் பின் ‘மாணவர்’ இரண்டாம்
அகிலத்தின் சந்தர்ப்பவாதத்தைப் பற்றி லெனின் எழுதியவற்றைப் படிக்க வேண்டும். (இந்தப்
பகுதிகள் லெனினும், பிரிட்டனும் என்ற நூலிலும், மார்க்சு – எங்கெல்சு
– மார்க்சியம்
என்ற நூலிலும் லெனின் தேர்வு நூல்களிலும் உள்ளன). பாட்டாளி
வர்க்கம் ஏகாதிபத்தியப் போரைப் பற்றிக் கொண்டிருக்கும் நிலைப்பாடு என்ன என்பதற்கு
சோசலிசமும் போரும், போரும் தொழிலாளர்களும் என்ற நூல்களையும் இறுதியாக கம்யூனிஸ்ட்
அகிலத்தை தோற்றுவிக்க அதன் வேலைகள் குறித்து லெனின் எழுதியவையும் படிக்கப்பட
வேண்டும்.
மார்க்சிய மாணவர் தம் தொடக்க கட்டத்தில்
லெனினும் ஸ்டாலினும் கட்சியைப் பற்றி எழுதியுள்ளவற்றைப் படித்த பின் மார்க்சு
எங்கெல்சு எழுதியவற்றைப் படித்தால் அவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தைப் புரிந்து
கொள்ள முடியும். அவை
அனைத்தும் (பிரிட்டன்
பற்றிய எங்கெல்சின் கட்டுரைகள் தவிர) சிறிய நூல்கள் தான் மார்க்சு எங்கெல்சு தேர்வு
நூல்களின் இரு தொகுதிகளில் அடங்கியுள்ளன.
கட்சி பற்றிப் படிக்க வேண்டிய இந்தக்
கட்டுரைகளை நான்கு தலைப்புகளில் பின்வருமாறு கொடுக்கிறோம்.
(i) மார்க்சு – எங்கெல்சு
கட்சி பற்றிக் கூறியது
(ii) லெனினும்
புதுப்பாணியிலான கட்சியும்
(iii) இரண்டாம்
அகிலத்தில் சந்தர்ப்பவாதத்துக்கெதிரான போராட்டம்.
(iv) கம்யூனிஸ்ட்
அகிலம்.
மார்க்சிய மூல நூல்களுக்கு வாசகர் வழிகாட்டி – மாரிஸ்
கார்ன்ஃபோர்த்
பாகம் 2
அ. பாட்டாளி வர்க்கத்தின் தனிக்கட்சி
கட்சி
பற்றி: மார்க்சு – எங்கெல்சு
மார்க்சு: சர்வதேச
தொழிலாளிகள் கழகத்திற்காற்றிய தொடக்க உரை
இப்பேச்சு
மார்க்சு 1864-ல்
முதலாம் அகிலத்தை உறுதிப்படுத்த தெரிவு செய்த பொதுத்திட்டத்தை விளக்குவது ஆகும். முதலாளி
வர்க்கத்தின் அதிகரிக்கும் செல்வச் செழிப்பின் பொருள் பாட்டாளி வர்க்கத்தின்
அதிகரித்த துயரம் என்பதை மார்க்சு வலியுறுத்துகிறார்.1
முதலாளித்துவத்தை முழுமையாகத் தோற்கடிக்க
அரசியல் போராட்டத்தால் மட்டுமே முடியும். தொழிலாளிகள் “வெற்றியின்
ஒரு கூறான பெருந்திரளான எண்ணிக்கையைக் கொண்டுள்ளனர். ஆனால்
இந்த எண்ணிக்கை ஒன்றுபட்டதாக அறிவால் தலைமை தாங்கப்படுவதாக இருந்தால் மட்டும்
வெற்றியடைய முடியும்” என்று மார்க்சு கூறுகிறார்.
ஒவ்வொரு தேசத்திலும், ஒட்டுமொத்த
உலகிலும் பாட்டாளி ஒன்றுபட வேண்டும், அப்பொழுதுதான் உழைப்பின் விடுதலை சாத்தியம். அவர்களின்
வலிமை முழுதும் முதலாளித்துவ அரசுகளின் கொள்ளையிடுகிற அந்நியக் கொள்கைகளுக்கும்
போர்வெறிக்கும் எதிராகச் செலுத்தப்பட வேண்டும்.
சர்வதேச உழைப்பாளிகள் கழகத்திற்காக
மார்க்சு வகுத்த பொது விதிகளில் தொழிலாளி வர்க்கக் கட்சி விதிகள் உள்ளடக்கி உள்ளன.
(i) தொழிலாளர்
வர்க்கத்தின் விடுதலை அதன் வேலையாகவே இருக்க வேண்டும்.
(ii) முதலாளித்துவத்திடமிருந்து
பாட்டாளிகளை விடுவிப்பதை மட்டுமே அனைத்து அரசியல் இயக்கங்களும் தங்களது இறுதி
முடிவாகக் கொள்ள வேண்டும்.
இதைச் சாதிக்க உலகப் பாட்டாளி வர்க்கம்
ஒன்றுபட வேண்டும்.
பாட்டாளி வர்க்கம் தானொரு வர்க்கமாகச்
செயல்பட பழைய கட்சிகளுக்கெதிராக ஒரு தனித்தன்மையுடைய அரசியல் கட்சியைக்
கட்டியமைத்தால் மட்டுமே முடியும். அப்படிப்பட்ட கட்சி சோசலிச புரட்சிக்கும், அனைத்து
வர்க்கங்களையும் ஒழிக்கவும் இன்றியமையாத தேவையான கருவி.
பொருளாதாரப் போராட்டங்கள் வாயிலாகச்
சாதித்த தொழிலாளி வர்க்க ஒற்றுமையை நெம்புகோலாகப் பயன்படுத்தி முதலாளித்துவ
வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை எதிர்த்துப் போராடவும் அரசியல் அதிகாரத்தைப்
பாட்டாளி வர்க்கம் கைப்பற்றவும் வேண்டும்.2
மார்க்சின் தொடக்க
உரையும் சர்வதேச
உழைப்பாளர் கழகத்தின் பொதுவிதிகளும் பல்வேறு பாட்டாளி வர்க்க இயக்கங்களின்
ஒன்றிணைப்புகளின் அடிப்படைகளாய் விளங்கின. இக்கழகத்தின்
தொடக்கம் பல அமைப்புகளால், சட்டவிரோதப் புரட்சிகரக் குழுக்கள் தொடக்கம்
ஏற்கனவே “மதிப்புக்குரியனவாய்” இருந்த
பிரிட்டன் தொழிற்சங்கங்கள் வரை ஆதரிக்கப்பட்டது. இக்கழகத்தில்
அடைந்த ஒற்றுமையையும் பொதுத் திட்டத்தையும் பயன்படுத்தி முழுப் பாட்டாளி
வர்க்கத்தையும் ஒரு அரசியல் படையாக ஒன்றிணைக்கும் அடிப்படைகளை மார்க்சு அமைக்க
முயன்றார்.
எங்கெல்சு – அதிகாரத்துவம்
பற்றி
இச்சிறு பிரசுரம் அராஜகவாதிகளுக்கெதிராக 1874-இல்
இத்தாலியப் பத்திரிகை ஒன்றில் வந்தது. இது மத்தியப்படுத்தப்பட்ட ஒழுங்கான தொழிலாளி
வர்க்க அரசுக்கு இட்டுச் செல்லும் பாட்டாளி வர்க்கக் கட்சியின் அவசியத்தை
உணர்த்தியது.
இக்கட்டுரையோடு அராஜகவாதிகளுக்கெதிரான
போராட்டம்3 பற்றி, மார்க்சு – எங்கெல்சு
எழுதிய கடிதங்களைப் படிக்கலாம். இவை மார்க்சு – எங்கெல்சு
தேர்வு நூல்களின் இரண்டாம் தொகுதி மாஸ்கோ பதிப்பில் (Vol. II) உள்ளன. இக்கடிதங்கள்
மார்க்சு – போல்டேவுக்கு
1871-ல்
எழுதியது. எங்கெல்சு
குனோவுக்கு 1872-இல்
எழுதியது.
எங்கெல்சு: மார்க்சும்
நியுரெனிஷ் கெஸட்டும்
இந்தப் பிரசுரம் 1884-இல்
எழுதப்பட்டது. எவ்வாறு
தொழிலாளி வர்க்கப் பத்திரிகை புரட்சிகர காலகட்டத்தில் நடத்தப்பட வேண்டும் என்று
விளக்குகிறது.4 மார்க்சு 1848-49-இல்
ஆசிரியராக இருந்து வந்த “நியூ ரெனீஷ் கெஸட்” நாளிதழ்
அனுபவத்தை எடுத்துக்காட்டுகிறது.
இந்தப் பத்திரிகை, மார்க்சு
ஒரு பத்திரிகையின் அவசியத்தை உணர்ந்ததால் தொடங்கப்பட்டது. அதன்
பதாகை ஜனநாயகத்தினுடையது. அது சமகாலத்திய ஜனநாயகத்துக்கான புரட்சிகரப்
போராட்ட இயக்கத்துக்கான தலைமை இயக்கத்தைச் சாதகமான உயர்ந்த கட்டத்துக்கு எடுத்துச்
செல்லவும், அதற்கு
மேல் நகர்த்திச் செல்லவும் விழைந்தது. இந்தக் கொள்ளைக்கு மாற்று என்ன இருக்க முடியும்? எங்கெல்சு
சொன்னார் – அது “செயலில் இறங்கியுள்ள” மிகப்பெரிய
கட்சியின் மிகப் பெரிய பத்திரிகையாக இருக்காது; “குறுங்குழு
ஒன்றின் சிறிய பிராந்திய பத்திரிகையாகவே” அமையும்.
மார்க்சு – எங்கெல்சு
சுற்றறிக்கைக் கடிதம்
இக்கடிதம் 1879-இல்
மார்க்சு – எங்கெல்சால்
ஜெர்மன் சமூக ஜனநாயகவாதக் கட்சியின் முன்னணி உறுப்பினர்களுக்கு எழுதப்பட்டது; பாட்டாளி
வர்க்கத்தை வர்க்க சமரசத்திற்கு இட்டுச் செல்லும் குட்டி முதலாளித்துவப்
பிரிவுகளுக்கெதிரான கண்டனமாக எழுதப்பட்டது.
கட்சியின்
மூன்று முக்கியத் தலைவர்கள் (மார்க்சு – எங்கெல்சு
இவர்களை “ஜூரிச்சின்
மூன்று சோதகர்கள்” (Three Censors of Zurich) என்று அழைத்தனர்) ஒருதலைப்பட்சமான
”பாட்டாளிகளின்
கட்சிக்கு”ப் பதிலாக
“அனைத்துத்
தரப்புக் கட்சியாக” மாற்றப்பட வேண்டுமென்றும், “உடைமை
வர்க்கத்தின் கற்றறிந்த பிரதிநிதிகள் கட்சித் தலைமையில் பங்கேற்க வேண்டுமென்றும், பார்லிமெண்ட்
பிரதிநிதிகளாக விளங்க வேண்டும்” என்றும் கூறி வந்தனர். மேலும்
முதலாளிகளைப் பயமுறுத்துவதோ எதிரிடையாகக் கொண்டு மிகைப்படுத்தப்பட்ட தாக்குதலோ
கூடாது என்றும், அவர்களைப்
போராடாது “வென்றெடுக்க
வேண்டும்” என்றும்
கூறினர்.
மார்க்சும் எங்கெல்சும் இத்திட்டத்தை
மொத்தமாக, குட்டி
முதலாளித்துவ பிரதிநிதிகள் பாட்டாளி வர்க்க இயக்கத்தினுள் புகுந்து கொண்டு முன்
வைப்பதாகக் கூறி நிராகரித்தனர்.5 வர்க்கப் போராட்டத்தை நிராகரிக்கும்
எவரோடும் ஒரே கட்சியில் இணைந்து செயல்பட முடியாது என்று உறுதியோடு உரைத்தனர். முதலாம்
அகிலத்தின் பழைய போர் முழக்கத்தைச் சார்ந்தே இயங்க வேண்டுமென்றனர். “தொழிலாளி
வர்க்க விடுதலையே அதன் வேலையாகவும் இருக்க வேண்டும்” என்ற
முழக்கமே சரியானது என்றனர். மனம் மாறி வருகின்ற முதலாளித்துவவாதிகளைக் கட்சி
வரவேற்கிறது என்றபோதும் அது அவர்கள் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தை முழு மனதோடு
ஏற்க வேண்டும்; தங்கள்
குட்டி முதலாளித்துவக் கருத்துக்களை உள்ளே கொண்டு வரக்கூடாது என்ற நிபந்தனையின்
அடிப்படையில் மட்டுமே.
எங்கெல்சு: “லேபர்
ஸ்டாண்டர்ட்”
இதழ் கட்டுரைகள்
1881-இல்
எங்கெல்சு, லண்டன்
வர்த்தகக் கவுன்சிலின் ‘லேபர் ஸ்டாண்டர்ட்’ இதழுக்கு
எழுதிய 10 சிறு
கட்டுரைகள் பின்னால் “பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கம்” என்ற
பெயரில் வெளிவந்தன.
இக்கட்டுரையில் அவர் தொழிலாளி
வர்க்கத்தின் கடமை தனது நிலைமையைத் தக்க வைத்துக் கொள்வதோ முதலாளித்துவத்தின் கீழ்
சீர்திருத்தங்கள் கோருவதோ அல்ல; மாறாக, அதிகாரத்துக்குப் போராடுவதும், முதலாளித்துவத்தை
முடிவுக்கு கொண்டு வருவதும் ஆகும் என்றார். மேலும்
அவர் பிரிட்டனின் தனித்த சுதந்திரமான பாட்டாளி வர்க்கக் கட்சி ஒன்றை இங்கிலாந்தில்
தொடங்க வேண்டியதின் அவசியத்தையும் அதற்கு தொழிற்சங்கங்கள் தங்களது அமைப்புச்
சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்6.
எங்கெல்சு: “ஜெர்மனியில்
விவசாயப் போர்” என்ற நூலின் முன்னுரைக் குறிப்பு
இந்த குறிப்பு 1874-இல்
எழுதப்பட்டதும் மிக முக்கியமானதும் ஆகும். ஏனெனில்,
(i) இது
தொழிலாளி வர்க்கம் பிற வர்க்கங்களால் நகர்ப்புற குட்டிமுதலாளிகள், லும்பன்
பாட்டாளிகள் (உதிரிப்
பாட்டாளிகள்) சிறு
விவசாயிகள், கூலி
விவசாயிகள் மீது கடைப்பிடிக்க வேண்டிய போக்கை, நடைமுறையை
விவாதிக்கிறது.
(ii) ஜெர்மன்
தொழிலாளி வர்க்கத்திற்கு வழங்கிய அறிவுரையில் எங்கெல்சு தொழிலாளி வர்க்க
இயக்கத்தின் சர்வதேசக் கடமைகளை வரையறுக்கிறார். அதில்
அவசியமானவைகளாக
அ. பழைய
உலகப் பார்வையிலிருந்து விடுபட்ட தெளிவான தத்துவப் பார்வை, சோசலிசம்
ஒரு விஞ்ஞானமாகி விட்டதால் அது பயிலப்பட வேண்டும்.
ஆ. அரசியல்
மற்றும் தொழிற்சங்க அமைப்புகளை உறுதிப்படுத்த வேண்டும்.
இ. நாடாளுமன்றத்தின்
உள்ளும் வெளியிலும் போராட்டத்தை நடத்த வேண்டும்.
ஈ. சர்வதேச
எழுச்சியுணர்வைப் பாதுகாக்க வேண்டும்.
எங்கெல்சு: “பிரான்சிலும்
ஜெர்மனியிலும் விவசாயப் பிரச்சினை”
1894-இல்
எழுதப்பட்ட இக்கட்டுரை விரிவாக தொழிலாளி வர்க்கத்திற்கும் விவசாய வர்க்கத்திற்கும்
இடையிலான உறவையும் இரண்டிற்குமிடையிலான கூட்டணியின் அவசியத்தையும் விளக்கி
நிரூபிக்கிறார்.7
எங்கெல்சு
முதலாளித்துவத்தின் வளர்ச்சி சிறு விவசாய உற்பத்தியின் அழிவை ஏற்படுத்துவது
தவிர்க்க இயலாதது என்று நிரூபிக்கிறார். இருந்தபோதும் இந்த விவசாய வர்க்கம் மீதான
வெறுப்பு எதிர் புரட்சிக்கே துணை செய்யும். அரசியல்
அதிகாரத்தை வெல்ல பாட்டாளி வர்க்கம் “முதலில் கிராமப் புறத்துக்குச் சென்று அங்கே ஒரு
சக்தியாக கட்டாயம் மாற வேண்டும்”. பரிதாபத்துக்குரிய விவசாயிகளை, பொய்யான
பாதுகாவலர்கள் கையில் விட்டுக் கொடுத்து, ஆலைத் தொழிலாளர்களின் எதிரிகளாய் அவர்கள் மாறிப்
போகும்படி தொழிலாளி வர்க்கம் விட்டுவிட முடியாது என்கிறார் எங்கெல்சு.
எங்கெல்சு பாட்டாளி வர்க்கம் தான்
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தருவதன் மூலம் விவசாயிகளை வென்றெடுக்க முயலவே
கூடாது என்று வலியுறுத்துகிறார். சிறு விவசாயிகளின் உடைமைகளைப் பாதுகாக்கிறோம்
என்று வாக்குறுதி அளித்த பிரெஞ்சுக் கட்சியைக் கடுமையாக விமர்சிக்கிறார் எங்கெல்சு. அத்தகைய
வாக்குறுதி சோசலிச லட்சியங்களுக்கு எதிரானது மட்டுமல்ல, நிறைவேற்ற
முடியாததுமாகும். அழிந்துபோகும்
சிறு உடைமையைப் பாதுகாப்பது முடியாத செயல் என்கிறார்.
இதில் முக்கியமான விசயம் விவசாயிகளுக்கு
தங்கள் வீடுகளை நிலங்களைப் பாதுகாப்பது அவற்றை கூட்டுடமைகளாய், கூட்டாக
இயக்கப்படுவனவாய் மாற்றினால் மட்டுமே சாத்தியம் என்பதை விளக்குவதுதான். அதே சமயம்
பாட்டாளி வர்க்கம் இதை வலுக்கட்டாயமாக செய்ய முயலவே கூடாது என்கிறார்.
விவசாய வர்க்கத்தை பல்வேறு பிரிவுகளாகப்
பகுப்பதை எங்கெல்சு மிக முக்கியமானது என்கிறார். சிறு
விவசாயிகள் பாட்டாளி வர்க்கத்தின் மிக முக்கிய நண்பர்கள்; அதே
வேளையில் நடுத்தர பெரிய விவசாயிகளை வென்றெடுக்க அல்லது சமப்படுத்த முடியும். பெரும்
பண்ணைகளைப் பொறுத்தவரை பாட்டாளி வர்க்கத்தின் கொள்கை நிலப்பிரபுக்களை உடமை நீக்கம்
செய்வது (அவசியமானால்
விலைக்கு வாங்குவது) நிலத்தை கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு கூட்டு உழைப்புக்குப்
பகிர்ந்தளிப்பதுதான் என்கிறார்.
குறிப்புகள்
1. பார்க்க, மூலதனம், தொ.1
2. பார்க்க, கம்யூனிஸ்டுக் கழகத்திற்கு
மையக் குழுவின் உரை
3. மேலும் பார்க்க, ஸ்டாலின், அராஜகவாதமா? சோசலிசமா?; லெனின், அரசும் புரட்சியும்; பார்க்க, ஸ்பெயினில் புரட்சி.
4. பார்க்க லெனின், என்ன செய்ய வேண்டும்; சோ.யூ.பொ.க.(போ)யின் வரலாறு, அத்.5, பிரிவு 2
5. பார்க்க, லெனின், கார்ல் மார்க்சின்
போதனைகளுக்கு வரலாற்றில் விதிக்கப்பட்ட எதிர்காலம், மார்க்சியமும்
திரிபுவாதமும், ஐரோப்பியத் தொழிலாளர் இயக்கத்தில் கருத்து வேறுபாடுகள்.
6. மேலும் பார்க்க, லெனினும் பிரிட்டனும்
7. பார்க்க, லெனின், “மக்களின் நண்பர்கள்” என்போர் யார்… சமூக ஜனநாயகத்தின் இரண்டு
போர்த்தந்திரங்கள், ருஷ்யப் பொதுவுடைமைக் கட்சியின் போர்த்தந்திரங்கள் பற்றி
கம்யூனிஸ்ட் அகிலத்தின் மூன்றாவது பேரவைக்கான ஆய்வறிக்கை, விவசாயப் பிரச்சினை பற்றிய
ஆய்வுகள்; ஸ்டாலின், லெனினியத்தின் அடிப்படைகள், அக்டோபர் புரட்சி, சோ.யூ.பொ.க(போ)யின் 14-வது, 15-வது பேரவைகளுக்கான
அறிக்கைகள், விவசாயிகள்
பிரச்சினை பற்றி கட்சியின் மூன்று அடிப்படை முழக்கங்கள், வெற்றி மயக்கம், கூட்டுப்பண்ணை அதிரடி
ஊழியர்களுக்கு ஆற்றிய உரை, சோ.யூ. அரசியலமைப்புச் சட்ட நகல் குறித்து, சோ.யூ.பொ.க (போ) வரலாறு.
(தொடரும்)
நன்றி வினவு இணையதளதிற்கு
No comments:
Post a Comment