எங்களின் 40 ம் இதழ் வெளிவரும் இந்த வேளையில் எங்களின் ஆய்வுகளிலிருந்து பெற்ற படிப்பினைதான் இந்த தலையங்கள்
ஆசிரியர் பகுதி
இன்று மார்க்சியம் பேசும் இடதுசாரி கட்சிகள் மற்றும் புரட்சி பேசும் இயக்கங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஏகாதிபத்தியம் திணிக்கும் மார்க்சிய விரோத போக்குகளை தங்களின் செயலில் வரிந்துக் கட்டிக் கொண்டு செயல்படும் பொழுது அவை ஆளும் வர்க்கத்தின் தேவைக்காக துணைப் போகின்றன. சட்டவாதம் பாராளுமன்றவாதம் பேசுவோர் சமரசவாதம், சீர்திருத்தவாதம், திருத்தல்வாதம் பொன்ற நோக்குகளோடு ஏகாதிபத்தியம் பரப்பியுள்ள கொள்ளை நோயான பின்நவீனதுவம் தொடங்கி அடையாள அரசியல் என்ற புதை சேற்றில் சிக்கி கட்சியையே சின்னாபின்னமாக்கி உள்ள நிலையில் அங்கே பேசப்படுவது புரட்சியோ சமூக மாற்றமோ அல்ல இந்த அமைப்புமுறைக்குள்ளே சீர்திருத்தம் கோரிநிற்கும் இழிநிலை இதற்கு மாற்று மார்க்சிய லெனினிய சித்தாந்ததை கற்பதும் போதிப்பதுமே அவசியம் அவைதான் இடதுசாரிகளின் எதிர்காலமும்.
புரட்சி பேசி களமாடும் அணிகளும் அதன் சார்பாளர்களும் இன்று மார்க்சியத்தை விட அம்பேத்கார் பெரியார் கருத்துகளை பரப்பும் வேலையில்முனைப்பாகசெயல்படுகின்றனர் (விதிவிலக்குகளை பேசவில்லை) இவர்களே தங்களின் ஆரம்ப நிலையில் எழுதிய எழுத்துகளும் இன்று இவர்களுக்கு முரணாக தெரியவில்லை மார்க்சியத்தை பேசிக்கொண்டே கலைப்புவாத கருத்துகளை அணிகள் மத்தியில் கொண்டுவந்த இவர்கள் மார்க்சியவாதிகளா சிந்திப்பீர் உண்மையில் மார்க்சிய லெனினியத்தை உயர்த்தி பிடிக்க மார்க்சிய லெனினிய போதனைகளை கற்று தேறுவோம் தோழர்களே.
வேலையின்மையை ஒழித்தது ரஷ்ய சோவியந்து ஆட்சி. அதன் கொள்கை அனைவருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் கடமையாக இருந்தது. அந்தக் கொள்கையை நடைமுறையில் சாதித்தது. ஆனால் முதலாளித்துவ சீர்திருத்த வாதிகள் அனைவருக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்க முடியாது என்றே கருதுகின்றனர். உண்மையில் இந்த முதலாளித்துவ சீர்திருத்தவாதிகளுக்கு அனைவருக்கும் கல்வி வைலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில் சிறிதும் விருப்பம் இல்லை ஏனெனில் ஆளும் வர்க்கத்தின் நோக்கம் அனைவருக்கும் கல்வி வேலை வாய்ப்பு என்பது கிடையாது ஏனெனில் முதலாளிகளால் தொழிலாளர்களுக்கு குறைந்த கூலி கொடுத்து சுரண்ட முடியாது. ஆகவே முதலாளித்துவ சீர்திருத்தவாதிகள் முதலாளிகளின் நலன்களிலிருந்து அனைவருக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று பேசமாட்டார்கள். அதற்கு மாறாக இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பேசி மக்களை ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
--------------------------------------------
சாருமஜூம்தார் தலைமையில் எம்.எல். கட்சி உருவானபோது மக்கள் திரள் அமைப்புகள் முக்கிமான பங்காற்றியது. குறிப்பாகவிவசாயிகளால் நக்சல்பாரியில் நடத்தப்பட்ட போராட்டம் மிகவும் முக்கியமானது. மேலும் சி.பி.ஐ, மற்றும் சி.பி.எம். அமைப்புகளில் செயல்பட்ட புரட்சியாளர்கள் ஒன்றுகூடி புரட்சியாளர் ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி சித்தாந்தப் பணியை மேற்கொண்டதன் மூலம் 70 ஆம் ஆண்டு திட்டத்தை உருவாக்கினார்கள்.இவ்வாறுபுரட்சியாளர்களால் செயல்படுத்தப்பட்ட சித்தாந்தப் பணியும், மக்களை வர்க்க அமைப்புகளில் திரட்டி நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டதன் மூலம் இந்திய அளவில் சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற திருத்தல்வாதிகளுக்கு மாற்றாக ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டுக் கட்சியை தோழர் சாருமஜூம்தார் அவர்களால் கட்ட முடிந்தது.
இந்த புரட்சிகர கட்சி உடைந்து சீரழிந்ததற்கு என்ன காரணம்?
எம்.எல். கட்சி உருவானதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றான மக்கள்திரள் அமைப்புப் பணிகளை புறக்கணித்து அழித்தொழிப்புப் பாதையை தேர்ந்தெடுத்து செயல்பட்டது. அதன் மூலம் மக்களிடமிருந்து அன்னியப்பட்டது. தொடர்ந்து இதுவரை எம்.எல். கட்சியை ஆதரித்துவந்த மக்கள் எம்.எல். கட்சியைப் புறக்கணித்தார்கள். அதனால் எம்.எல். கட்சியானது தனது சொந்த பலத்தை இழந்தது.
புரட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட 70 ஆம் ஆண்டு திட்டம் விஞ்ஞானப் பூர்வமானது இல்லை என்று அமைப்பிற்குள் இருந்த தோழர்களே விமர்சனம் செய்தார்கள். மேலும் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களும் விமர்சனம் செய்திருந்தார்கள். இந்த விமர்சனங்களை கட்சி முழுவதற்கும் கொண்டு சென்று விவாதங்கள்நடத்துவதற்கு சாருமஜூம்தார் தவறினார். இதன் விளைவாக இந்திய சமூகத்தை மாற்றுவதற்கான ஒருவிஞ்ஞானப்பூர்வமான திட்டத்தை எம்.எல். கட்சியால் உருவாக்கவே முடியவில்லை. தவறான திட்டத்தைக் கொண்டு செயல்பட்டதால் சமூக மாற்றத்தை எம்.எல். கட்சியால் சாதிக்க முடியவில்லை. மாறாக கட்சியானது பல குழுக்களாக பிளவுபட்டுப் போனது.
இந்த வரலாற்றுப் படிப்பினை எதைக் காட்டுகிறது?
ஒருபக்கம் மக்களிடமான தொடர்பை துண்டித்தது, மறுபக்கம் சித்தாந்தப் பணியைப் புறக்கணித்தது ஆகிய இரண்டு தவறுகளை செய்ததால்தான் எம்.எல். கட்சி பிளவுபட்டு இன்றுவரை அந்தப் பிளவுகள் நீடிக்கிறது.
குழுக்கள் ஒன்றுபட நாம் செய்ய வேண்டியது என்ன?
சார்மஜூம்தார் காலத்தில் நாம் செய்த தவறை களைந்து மக்களிடம் நாம் செல்ல வேண்டும். அதற்கு மக்கள்திரள் அமைப்புகளில் இணைந்து அதனை புரட்சிகரமானதாக மாற்ற வேண்டும் அல்லது புரட்சிகரமான வர்க்க அமைப்பை நாம் உருவாக்கி மக்களிடம் உயிரோட்டமான தொடர்பை வளர்க்க வேண்டும். அடுத்தது. இந்திய சமூகத்தை புரட்சிகரமாக மாற்றுவதற்கான சித்தாந்தப் பணியை நாம் துவங்கி நடத்த வேண்டும். அதற்கு நாம் மார்க்சிய லெனினிய கல்வி இயக்கத்தை தொடங்கி நடத்த வேண்டும். இத்தகைய இரண்டு பணிகளை நாம் திறம்பட செயல் படுத்துவதன் மூலமே நாம் ஒரு ஒன்றுபட்ட புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சியைக் கட்டி இந்திய சமூகத்தை புரட்சிகரமாக மாற்ற முடியும்.
எம் எல். கட்சி செய்த தவறுகளிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இதனை கருதுகிறோம். இதனை புரிந்து கொண்டு செயல்படத்தவறுகிறவர்கள் தொடர்ந்துகுறுங்குழுவாகவே நீடிப்பார்கள். அவர்களால் ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்ட முடியாது என்றே கருதுகிறோம்.
ஐகியதிற்கான முதல் பணி சித்தாந்த போராட்டம் சிந்தாந்த போராட்டம் நீர்த்து போகாமல் இருக்க தத்துவபணியை முதனைமையாகுவதோடு சரியான மார்க்சிய லெனினிய பாதையில் கண்ணோட்டத்தில் பயணிப்போம் தோழர்களே. தொடர்ச்சி பக்கம் 25ல்…
இப்படிக்கு இலக்கு ஆசிரியர் குழு
===========================================
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் பின்னர் தோன்றிய மார்க்ஸ்ட் கட்சி மற்றும் மா-லெ கட்சி பற்றியும் ஒரு தேடுதல் இவை இங்குள்ள கட்சி பற்றிய புரிதலுக்கு பயன்படும்....
அமிர்தசரஸில் ஏபரல் 1958-ல் நடைபெற்றசி.பி.அய்யின் மாநாடு, ”கேரளா வழிகாட்டுகிறது என்ற சி.பி.அய்யின் வழியில் சி.பி.எம்மும் பாராளுமன்ற சமாதான சுகவாழ்வு என்ற முதலாளித்துவ பாதைக்கு குருசேவின் வழி ஒற்றி புரட்சிக்கு முரணாக உள்ள அமைதியான சரணாகதி பாதையில் வர்க்க கூட்டுக்கும், வர்க்க சரணாகதிக்கும் இட்டு சென்றது. தொழிலாளிகள், விவசாயிகள், பிற உழைக்கும் மக்கள் ஆயுதப் போராட்டத்தின் மூலமாக அதிகாரத்தைக் கைபற்றுவார்களா? அல்லது வாக்குபெட்டி மூலமாக அதிகாரத்தைக் கைபற்றுவார்களா? என்பதுதான்மார்க்சிய லெனின்யத்திற்கும், வலதுசந்தர்ப்பவாததிற்க்கும்இடையேயான அடிப்படை வேறுபாடாக இருந்தது. இந்தியாவிலும்பிறநாடுகளிலும்நடைபெற்ற போராட்டங்களின் அனுபவம் தெளிவாக காட்டுவதைப் போல கேரளாவின் பாதையைப் பின்பற்றுவதன் மூலமாக அரசாங்கங்கள் மட்டுமே மாற்றபட முடியும், ஆனால் அனைத்துவகையான அநீதி, சுரண்டல், ஒடுக்குமுறை ஆகியவற்றுக்கு ஆணி வேராக உள்ள தற்போதைய பொருளாதார, அரசியல் அமைப்பை மாற்றமுடியாது. வன்முறை புரட்சியின் மூலம் மட்டுமே தற்போதுள்ள ஆளும் வர்க்கமும் அவர்களுடை அரசும் தூக்கியெறியப்படும் ஒரு புதிய பொருளாதார, அரசியல் அமைப்பு உருவாக்க முடியும் என்பதுதான் மார்க்சியம், “வன்முறைதான் புதிய சமூகத்தை பிரசவிக்கப் போகும் பழைய சமூகத்தின் மருத்துவச்சியாக உள்ளது,” என்றார் மார்க்ஸ்.
இதனை வியட்நாம் புரட்சியிலிருந்து புரிந்துக் கொள்வோம்….
வியட்நாமிய பாட்டாளி வர்க்கம் உருவான பின்னர், தம் கட்சியின் தலைமையில், சுதந்திரம், ஜனநாயகம்,சோஷலிசம் ஆகிய புரட்சிகர இலக்குகளுக்காக,தமது நாட்டின் அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்த செழுமைமிக்க பாரம்பரியத்தை மேலும் வளர்த்தெடுத்து தேசந்தழுவிய எழுச்சியையும், மக்கள் யுத்தத்தையும்,மிக உயர்ந்த மட்டத்திற்கு வளர்த்தெடுத்தார்கள்.
ஜப்பானியஏகாதிபத்தியத்தையும், பிரெஞ்சு காலனியவாதிகளையும் அவர்கள் முறியடித்தார்கள்.அமெரிக்கஏகாதிபத்தியத்தை முறியடித்தார்கள்; தங்கள் நாட்டின் வரலாற்றை சிறப்புமிக்க பக்கங்களால்நிரப்பிக்கொண்டுள்ளார்கள். இந்தோனெசியா, தென் கிழக்காசியா மற்றும் உலக மக்களின் புரட்சிக்கான தனது பங்களிப்பை தந்தார்கள்.
ஏகாதிபத்தியம் மற்றும் காலனியாதிக் கத்தை எதிர்த்த,இருபதாம் நூற்றண்டின் காட்டுமிராண்டித்தனமானஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்த வியட்நாம் தனது வெற்றிகரமானபோராட்டத்தின்மூலமாக,முறியடிக்கமுடியாதபோர்க்குணத்திற்கும்,ஆக்கபூர்வமானஅறிவிற்கும், இராணுவ வலிமைக்கும், மக்கள் யுத்த முறையின் மேன்மைக்கும் அடையாளமாக விளங்குகின்றது.இருபதாம் நூற்றண்டின் மிகச் சிறந்த அம்சமாக வியட்நாமிய மக்கள்யுத்தம்விளங்குகின்றது. வியட்நாம் மக்கள் பின்வரும் ஒளிரும் உண்மையை உலக மக்களுக்குப் புலப்படுத்துகிறர்கள். அதாவது ஒரு சிறிய, பரந்த பரப்பில்லாத, மக்கள் தொகை அதிகமில்லாத, பொருளாதார வலிமை இல்லாத நாடு திடமனதுடன் ஒன்றுபட்டு, சரியான புரட்சிகர மார்க்கத்தைக் கொண்டு, நாடு தழுவிய ஆயுத எழுச்சி மற்றும் மக்கள் யுத்தம் பற்றியமார்க்சிய-லெனினியகோட்பாட்டை தங்கள் நாட்டுக்குரிய வகையில் பிரயோகித்து, முற்போக்கான மனித இனம் மற்றும் சகோதர சோஷலிச நாடுகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் முதன்மையான ஏகாதிபத்திய அரசான அமெரிக்கா உள்ளிட்ட வலுமிக்க ஆக்கிரமிப் பாளர்களை முறியடிக்க முடியும்.
வியட்நாம்நாட்டுக்குரியபுரட்சிக்கும், புரட்சிப் போருக்குமான சரியான மற்றும் ஆக்கபூர்வமான மார்க்கத்தை தமது கட்சியானது வகுத்தெடுக்க, சமூக வளர்ச்சியின் விதிகளையும், தமது நாட்டின் புரட்சிப் போரின் வளர்ச்சி விதிகளையும், புரட்சிகர வன்முறையின் வளர்ச்சி விதிகளையும் கண்டறிந்து அவற்றைக் கற்றுத் தேர்ந்து புரட்சிகர வன்முறை என்ற விதியின் சாரம் அரசியல்சக்திகளைஆயுதப் படைகளுடன் இணைப்பதும்,அரசியல் போராட்டங்களை ஆயுதப்போராட்டங்களுடன்இணைப்பதும்,ஆயுத எழுச்சியை புரட்சிப் போருடன் இணைப்பது மாகும்.
நாடுதழுவியஆயுதஎழுச்சியையும், மக்கள் யுத்தத்தையும் வழிநடத்திச் செல்கையில் கட்சி, பாட்டாளி வர்க்கத் தலைமையில் பாட்டாளி-விவசாயி கூட்டின் அடிப்படையிலமைந்த ஒரு தேசியஐக்கியமுன்னணியைஅமைத்துள்ளது.தம் கட்சி பரந்துபட்ட மக்களின் அரசியல்சக்திகளைஒழுங்கமைத்தது; மக்களின்வலிமையான ஆயுதப்படைகளைக் கட்டியது.இவற்றுள்புரட்சிச்சேனை, பரந்துபட்ட மக்களின் ஆயுதப்படை இரண்டும் அடங்கும்.எதிரியைமுறியடிக்கவும், அதிகாரத்தைக்கைப்பற்றிப்பாதுகாக்கவும், காலனியாதிக்கத்தையும் அதன் அடிவருடி களையும்தூக்கியெறியவும், ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புப் போரை முறியடிக்கவும்,தமதுமக்கள்ஆக்கபூர்வமானஅனைத்துப்போராட்ட வடிவங்களையும் கையாண்டார்கள்தாக்குதல்களையும், எழுச்சிகளையும் இணைத்தார்கள் மலைப்பகுதி, சமவெளிப் பகுதி, நகரப் பகுதி ஆகிய மூன்று விதமான யுத்த முக்கியத்துவம்வாய்ந்த கேந்திரங்களிலும் போர்த்தந்திர ரீதியான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
தேசப் பாதுகாப்பு ஆகியவற்றினூடே மக்களின்ஆயுதப்படைகள்தோன்றின; வேகமாக முதிர்ச்சியடைந்தன; பல வெற்றிகளைப் பெற்றன. எதிரியை முறியடித்து நாட்டைப் பாதுகாக்க ஒவ்வொரு வியட்நாமிய தேசபக்தனும் எழுந்தான். ஒவ்வொரு குடிமகனும் போராளியாவது? என்ற தம் பழம் மரபு புதிய வடிவம் பெற்றது. மக்கள் சேனையும் நாடெங்கிலும் போராடும் மக்களின் ஆயுதம் தாங்கிய படைகளும் கட்டப்பட்டன. திறமையான போராளிகள் இரவும் பகலும் தன்னலமின்றி சுதந்திரத்துக்காய் போராடினார்கள் நாட்டைஒன்றுபடுத்தவும், சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும், சோஷலிசத்திற்காகவும் நம் காலத்திய முதன்மையான ஏகாதிபத்தியமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முறி யடிக்க அவர்கள் உறுதி பூண்டிருந்தார்கள்.
இவை இங்கேயும் நடந்ததை தேடும் முன் நமது ஆசான் லெனினிடம் செல்வோம்.
இடதுசாரி கம்யூனிசம் - இளம் பருவக் கோளாறு என்ற நூலில் ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ரஷ்யப் புரட்சியின் அனுபவத்தி லிருந்து ஒரு நாட்டில் புரட்சிகர மான கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவதற்கு மார்க்சிய சித்தாந்த அறிவை நாம் பெற வேண்டிதன் அவசியம் குறித்து கூறியுள்ளதையும்,ரஷ்யாவில்கம்யூனிஸ்டு கட்சி உருவாகி வளர்ந்து புரட்சியை சாதித்த வரலாற்றிலிருந்தும் மார்க்சிய சித்தாந்தஅறிவை நாம்பெற வேண்டியதன் அவசியம் குறித்து நாம்புரிந்து கொள்ள முயற்சிசெய்வோம். இடதுசாரி கம்யூனிசம் - இளம் பருவக்கோளாறு எனும் நூலில் லெனின் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
“1917-20-ல் முன்பின் கண்டிராத மிகக் கடினமானநிலைமைகளில்போல்ஷ்விசமானது மிகவும் கண்டிப்பான மத்தியத்துவத்தையும் உருக்கு உறுதி வாய்ந்த கட்டுப் பாட்டையும் நிறுவி அவற்றை வெற்றிகரமாக கட்டிக்காக்க முடிந்ததற்கு ரஷ்யாவின் வரலாற்றுச் சிறப்பியல்கள் பலவும் தான் காரணம்.
ஒருபுறத்தில், மார்க்சியத் தத்துவம் எனும் உறுதி மிக்க அடித்தளத்தின் மீது 1903-ல் போல்ஷ்விசம் உதித்தெழுந்தது. இந்தப் புரட்சிகரத் தத்துவம் பிழையற்றதாகும் என்பது, இது ஒன்று மட்டும்தான் பிழையற்றதாகும்என்பது, பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுவதிலுமான உலக அனுபவத்தால் மட்டுமின்றி, இன்னும் முக்கியமாய் ரஷ்யாவில் புரட்சிகரச் சிந்தனையின்விசாரங்கள்,ஊசலாட்டங்கள், தவறுகள், ஏமாற்றங்கள் ஆகியவற் றின் இந்தஅனுபவத்தாலும்நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் மிகவும் கொடிய, மிகவும் பிற்போக்கான ஜாரிசத்தால் ஒடுக்கப்பட்டுவந்தமுற்போக்குச் சிந்தனை சுமார் அரைநூற்றாண்டாய் -- கடந்த நூற்றாண்டில் ஏறத்தாழ நாற்பதாம் ஆண்டுகளிலிருந்து தொண்ணூறாம் ஆண்டுகள் வரையில்--பிழையற்ற புரட்சிகரத் தத்துவத்தை ஆவலுடன் தேடி வந்தது; இத்துறையில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்; இறுதி முடிவாகக் கருதக் கூடியவை ஒவ்வொன்றையும் கண்ணும் கருத்துமாய், தளர்வில்லா ஊக்கத்துடன்கவனித்துவந்தது. ஈடிணையற்ற துன்பமும் தியாகமும், ஈடிணையற்ற புரட்சிகர வீரமும், நம்புதற்கரிய முனைப்பும், அயராததேடலும், ஆராய்ச்சியும்,நடைமுறைச் சோதனையும், ஏமாற்றமும்,சரிபார்த்தலும்,ஐரோப்பிய அனுபவத்துடனான ஒப்பிடலும் நிறைந்த அரை நூற்றாண்டுக்காலத்தில் அனுபவித்த வேதனையின் வாயிலாய் ரஷ்யாவானது, பிழையற்ற ஒரேயொரு புரட்சித் தத்துவமானமார்க்சியத்தை வந்தடைந்தது.
ஜாரிசத்தால் அரசியலாளர்கள் நாடுகடத்தப்பட்டு வந்ததன் விளைவாய், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புரட்சிகர ரஷ்யா, வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத அளவுக்கு வளமான சர்வதேசத் தொடர்புகளும், உலகப்புரட்சிஇயக்கத்தின்வடிவங்களையும் தத்துவங்களையும் பற்றிய அருமையான தகவல் ஞானமும் பெறலாயிற்று.
தத்துவமெனும் இந்தக் கருங்கல் அடித்தளத்தின்மீதுஎழுந்தபோல்ஷ்விசமானது, மறுபுறத்தில்,உலகில் வேறு எங்கும் ஒப்புவுமை காண இயலாத அனுபவச் செழுமை வாய்ந்த பதினைந்து ஆண்டுகால (1903 - 17) நடைமுறை வரலாற்றினைக் கடக்கலாயிற்று. அந்த பதினைந்துஆண்டுகளின் போது இந்நாடு கண்ட புரட்சிகர அனுபவத்துக்கும், அதிவேகமாகவும்பல்வேறு வகைப்பட்ட தாகவும் வரிசையாக வந்த வெவ்வேறு இயக்க வகைகளுக்கும் -- சட்டப் பூர்வமானதும் சட்டவிரோதமானதும், அமைதியானதும் புயலின் மூர்க்கம் கொண்டதும், தலைமறைவானதும் பகிரங்கமானதும், சிறுகுழுக்களின் அளவிலானதும் பரந்த வெகுஜன வீச்சு கொண்டதும், நாடாளுமன்ற வடிவிலானதும்பயங்கரவாதவடிவிலானதும் ஆகிய விதவிதமான இயக்க வகைகளுக்கும் -- ஏறத்தாழ ஒப்பானவற்றையுங்கூட வேறு எந்த நாடும் கண்டதில்லை. வேறு எந்தநாட்டிலும் நவீனச் சமுதாயத்தின் எல்லாவர்க்கங்களுக் குறிய போராட்டத்தின் இத்தனை விதமான வடிவங்களும் வகைகளும் முறைகளும் இவ்வளவுகுறுகியகால வரம்பினுள் ஒன்று குவிந்ததில்லை. இந்தப் போராட்டம் நாட்டின் பிற்பட்ட நிலை காரணமாகவும், வியக்கத்தக்க வேகத்தில் முதிர்ச்சியுற்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் அனுபவத்தின்; இறுதி முடிவாகக்; கருதக் கூடியவற்றுள் பொருத்தமானவற்றை மிகுந்த ஆவலுடனும்,வெற்றிகரமாகவும்கிரகித்துக் கொண்டது” (லெனின் தேர்வு நூல்கள், தொகுதி 10, பக்கம் 190) 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி நடத்தி வெற்றி பெற்றதற்கு, ரஷ்யாவின் சிறப்பு இயல்புகள்தான் காரணம் என்கிறார் லெனின். அந்த சிறப்பு இயல்புகள் என்ன? ஒரு புறத்தில், மார்க்சியத் தத்துவம் எனும் உறுதி மிக்க அடித்தளத்தின் மீது 1903-ல் போல்ஷ்விசம் உதித்தெழுந்தது என்கிறார் லெனின். அதாவது மார்க்சியம் என்ற சித்தாந்தத்தை உள்வாங்கி, அறிவு வளர்ச்சி பெற்ற புரட்சிகர சக்திகளின் கூட்டு முயற்சியால் தான் அங்கே போல்ஷவிசம் என்ற தொழிலாளர்களின் கட்சி உறுவானது என்கிறார். இதனையே புரட்சிகர தத்துவம் இல்லாமல் ஒரு புரட்சிகர இயக்கம் இல்லை என்ற கோட்பாட்டை லெனின் நமக்கு வகுத்துக்கொடுத்தார். இதன் மூலம் ஒரு கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்கு வதற்கு மார்க்சிய தத்துவப்புரிதல் எவ்வளவு அவசியமானது என்பதை இங்கே லெனின் விளக்குகிறார். ஆனால் இந்தியாவில் அடிப்படையான மார்க்சிய அறிவு வளர்ச்சி குறைவானவர்கள் எல்லாம் தங்களை கம்யூனிஸ்டுகள் என்றும், தங்களுக்குத் தெரியாத விசயங்கள் எதுவுமே இல்லை என்றும் தலைகனம் மிக்கவர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்களே. இது சரியா? சிந்திக்க வேண்டும். இத்தகைய அரைகுறையாக மார்க்சியத்தை தெரிந்துகொண்டு பிரச்சனைகளை மார்க்சிய தத்துவவெளிச்சத்தில் பார்க்காமல்,அகநிலையாகபிரச்சனைகளை பார்த்து அவர்களது உணர்வுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பார்த்து முடிவுகள் எடுத்து செயல்படு வதால், பிரச்சனைகளை தீர்க்க முடிவதில்லை. பிரச்சனைகளை தீர்க்க முடிவதில்லைஎன்றஅனுபவத்திலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ளாமல்,தொடர்ந்து அகநிலைவாத கண்ணோட்டத்தில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் இவர்களால் சமூகப் பிரச்சனையை பலஆண்டுகாலம் ஆன பிறகும் தீர்க்க முடிய வில்லை.
ரஷ்யப் புரட்சியின் அனுபவத்தி லிருந்தும் இவர்கள் பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ரஷ்ய கம்யூனிஸ்டுகட்சியின் வரலாற்றை இவர்கள் படிப்பதே இல்லை. இன்னும் சிலர் ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சியின் அனுபவம் இங்கேபொறுந்தாது என்கிறார்கள்.
மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புரட்சிகரத் தத்துவம் பிழையற்றதாகும் என்பதும், இது ஒன்று மட்டும்தான் பிழையற்றதாகும் என்பதும், பத்தொன்பதாம்நூற்றாண்டுமுழுவதிலுமான உலக அனுபவத்தால் மட்டுமின்றி, இன்னும் முக்கியமாய் ரஷ்யாவில் புரட்சிகரச்சிந்தனையின் விசாரங்கள், ஊசலாட்டங்கள், தவறுகள், ஏமாற்றங்கள் ஆகியவற்றின் இந்த அனுபவத்தாலும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது என்கிறார் லெனின்.
உருவாக்கப்பட்ட புரட்சிகர தத்துவம் (திட்டம், போர்த்தந்திரம், செயல் தந்திரம் அமைப்புக்கோட்பாடுகள்)பிழையற்றதாகும் என்றார் லெனின். அது பிழையற்றது என்பது உலகம் முழுவதிலுமுள்ள பல நாடுகளின் அனுபவத்திலிருந்தும், ரஷ்யாவின் அனுபவத்திலிருந்தும் நடைமுறையில் நிருபிக்கப்பட்டுவிட்டது என்கிறார் லெனின். மேலும் ரஷ்யாவில் இந்ததத்துவத்திற்கு எதிராக போராடியவர்கள், ஊசலாடியவர்கள்,தவறு செய்தவர்கள்,மக்களைஏமாற்றியவர்களின் எதிர்ப்பிரச்சாரங்களாலும் இந்த தத்துவத்தை தோற்கடிக்க முடியவில்லை என்கிறார் லெனின். இதன் மூலம் அங்கு உருவாக்கப்பட்ட திட்டமானது மார்க்சியம் பற்றிய தெளிவான கண்ணோட் டத்திருந்து உருவாக்கப்பட்டதால் அந்த திட்டம் பிழையற்றதாக இருந்தது என்பதையே லெனின் இதன் மூலம் நமக்கு எடுத்துக்காட்டுகிறார். ரஷ்யாவில் மிகவும் கொடிய, மிகவும் பிற்போக்கான ஜாரிசத்தால்ஒடுக்கப்பட்டு வந்த முற்போக்குச் சிந்தனை சுமார் அரை நூற்றாண்டாய் --கடந்த நூற்றாண்டில் ஏறத்தாழ நாற்பதாம் ஆண்டுகளிலிருந்து தொண்ணூறாம் ஆண்டுகள் வரையில் --- பிழையற்ற புரட்சிகரத் தத்துவத்தை ஆவலுடன் தேடி வந்தது என்கிறார் லெனின் அதாவது ஜாரின் கொடூரமான சர்வாதிகாரஆட்சி நடந்து கொண்டிருக்கும் போதுதான்ரஷ்யாவிலுள்ள தொழிலாளர்களும், அறிவுஜீவிகளும், சமூகத்தை மாற்றுவதற்கான முற்போக்கு சித்தாந்தத்தைஆவலுடன்தேடிக்கொண்டிருந்தார்கள் என்கிறார் லெனின். அத்தகைய முற்போக்கான தத்துவம்தான் மார்க்சியம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்றும் அதற்காக பல காலம் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்கிறார் லெனின்.
அந்த காலங்களில் மார்க்சும் எங்கெல்சும் முதலாளித்து சமூக அமைப்பை ஆய்வு செய்து மார்க்சிய தத்துவத்தை படைத் திருந்தார்கள். அந்த மார்க்சிய தத்துவமானது ஐரோப்பிய நாடுகளில் மக்களின் செல்வாக்கைப் பெற்றுக் கொண்டு இருந்தது. ரஷ்யாவிலும், மார்க்சிய தத்துவங்களை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்து தொழிலாளர் களிடமும், அறிவுஜீவிகளிடமும் தோழர் பிளக்னோவால் பரப்பப் பட்டுக் கொண்டு இருந்தது.
இந்த சூழலில்தான், ஐரோப்பாவில் இந்த தத்துவத்தைசெயல்படுத்தியஅனுபவத்தில் ஏற்பட்டவெற்றிமற்றும்தோல்விகளிலிருந்தும், இதனை சோதிக்க எடுத்த முயற்சிகளிலிருந்தும், ரஷ்யாவில் இதற்காக நடந்த போராட்டங்கள், தியாகங்கள்,போன்றவற்றிலிருந்தும் புரட்சிகரமான தத்துவமான மார்க்சியத்தை புரிந்து கொண்டோம் என்கிறார் லெனின். ஆகவே ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சியின் வரலாற்றில் ஜாரின் எதேச்சிகாரத்தை மீறியும், அதன் கொடுமைகளை தாங்கிக் கொண்டும் ரஷ்யாவிலுள்ள புரட்சிகர சக்திகள் மார்க்சியத்தின்அடிப்படைகளை பல காலம் முயற்சி செய்து பாடுபட்டுக் கற்றுக்கொண்டார்கள் என்பதை லெனின் இங்கே சுட்டிக்காட்டுகிறார். இதுபோன்ற வரலாற்று அனுபவம் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்கோ, இங்குள்ள புரட்சிகர சக்திகளுக்கோ இதுவரை இல்லை என்பதே இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாறாகும். அதற்கு காரணம் என்ன? தொடரில் பார்ப்போம். ஜாரிசத்தால் அரசியலாளர்கள் நாடுகடத்தப்பட்டு வந்ததன் விளைவாய், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புரட்சிகர ரஷ்யா, வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத அளவுக்கு வளமான சர்வதேசத் தொடர்புகளும், உலகப் புரட்சி இயக்கத்தின் வடிவங்களையும்தத்துவங்களையும் பற்றிய அருமையான தகவல் ஞானமும் பெறலாயிற்று என்கிறார் லெனின்.
அதாவது ஜாரிசத்தின் கொடுமையால் ரஷ்யாவிலுள்ள புரட்சிகர சக்திகள் பலர் நாடுகடத்தப்பட்டார்கள். அதன் காரணமாகவே பல்வேறுநாடுகளுக்குச் சென்ற புரட்சியாளர்கள் பல நாடுகளின் அனுபவங்களைப் பெற்றனர். இத்தகைய அனுபத்தை பெற்ற நாடு உலகில் வேறு எங்கும் அப்போது இல்லை. உலகம் முழுவதிலுமுள்ளபுரட்சிகரஅனுபவத்தினாலும், பல்வேறு தத்துவங்கள் பற்றிய புரிதல் மூலம், இறுதியாக மார்க்சிய தத்துவ அறிவில் நல்ல வளர்ச்சியைப் பெற்றார்கள். இது ரஷ்யாவிலுள்ள புரட்சியாளர்களுக்கு ஒரு சிறப்பான கம்யூனிஸ்டு கட்சியை உருவாவதற்கு சாதகமாகிற்று.
இந்த மார்க்சிய தத்துவ கருங்கல் அடித்தளத்தின் மீதுதான் ரஷ்ய கம்யூனிஸ்டுகட்சி 1903ல் கட்டப் பட்டது. அதற்குப் பின்பு அதாவது 1903லிருந்து 1917வரைகட்சியானதுபலபோராட்டங்களை நடத்தி, அதன் மூலம் கிடைத்த அனுபவங்களை மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் அலசி ஆராய்ந்து சிலவேளைகளில் ரகசியமாக செயல்படுவது சில வேளையில் பயிரங்கமாக செயல்படுவது போன்ற பல்வேறுவிதமான முறைகளை கையாண்டு இறுதியில் ஜார் அரசாங்கத்தையும், அதற்குப் பின்பு உருவான கெரன்சிக்கின் ஆட்சியையும் வீழ்த்தி தொழிலாளி வர்க்க அரசு உருவாக்கப்பட்டது. இந்த சாதனைக்கு முதன்மையானகாரணம்,ரஷ்யகம்யூனிஸ்டுக் கட்சி ஊழியர்களும், தலைவர்களும் மார்க்சியத்தை கற்றுத் தேர்ந்ததே ஆகும்.
அவர்களுக்கு மார்க்சிய அறிவும் சர்வதேச புரட்சி இயக்கங்களின் வரலாற்று அறிவும் இல்லை என்றால் அவர்களால் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்க முடியாது.
ரசியாவில்புரட்சிகரகட்சியைகட்டுவதற்க்கு முன்பே பல்வேறு புரட்சிகர குழுக்கள், மார்க்சியவாசகர்வட்டங்கள்தோன்றியிருந்தன, 1895-ல்தொழிலாளர் விடுதலைக் கான போராட்ட குழு லெனினால் தோற்றிவிக்கப் படுகிறது. பல குழுக்கள் ஏதேசதிகாரத்தை தனித் தனியாக போராடி ஒன்றும் சாதிக்க முடியாது் என்றும் ஒன்றுபட்ட ரசிய புரட்சிகர கட்சியால் மட்டுமே சாதிக்க முடியும் என்றும் முடிவுக்கு வரும் லெனின், பலம் வாய்ந்த கட்சியை கட்ட புரட்சிகர குழுக்கள் சமூக ஜன நாயக சக்திகள் இவ்வாறு பல்வேறு குழுக்களை ஒற்றுமைபடுத்தநிலவும்முரண்பாடுகளையும் குழப்பங்களையும் தீர்த்து , சித்தந்த ஒற்றுமை என்பது கட்சியின் வேலை திட்ட அடிப்படையில் அடைய வேண்டும்., என்று கூறுகிறார் லெனின். கட்சி கட்டப் பட்ட பின்னரே கட்சிக்குள் பல்வேறு போக்குகள் வருவதை தடுக்க லெனின் மேற்கொண்ட நடவடிக்கை பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் இங்கோ இன்று வரை அந்த வகையில் கட்சி கட்டப் பட்வேயில்லை.
மூன்றாம் அகில வழிகாட்டுதல் படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகிலத்தின் வழிகாட்டுதலை அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி, ஏகாதிபத்திய பிற்போக்கு சக்திகளை தூக்கி எறிந்து மக்கள் ஜனநாயக அரசை நிறுவும்படியும், அதற்கு உடனடியாக பிரிந்து கிடக்கின்ற கம்யூனிசகுழுக்களையும்,தனிநபர்களையும் இணைத்து பலம் வாய்ந்த ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவும்படி திரும்ப திரும்ப வலியுறுத்தியது. ஆனால் இன்றுவரைஇந்தப்பணிநிறைவேறவில்லை.இந்தியாவின் இடதுசாரி பிரிவான ஒன்று கம்யூனிசத்தின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளை புறகணித்து, அதாவது மூன்றாம்அகிலத்தின் நிலைப்பாடுகளுக்குஎதிராகசெயல்பட்டன ;அதாவது அகிலத்தின்வழிகாட்டுதலை புறகணித்தது. பொருளாதாரபோராட்டங்களும்,முதலாளித்துவ தேர்தலுக்கு மட்டுமே தயாரிப்பு செய்வதாகும். இவர்கள் மக்களை அரசியல் படுத்தாமல் வெறும் ஓட்டு சீட்டிற்காக என்பதாகி போனது.
இன்னொறுபுறம் மார்க்சியத்தின் புரட்சிகர ஆன்மாவை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் வைத்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புரட்சிகர கட்சியின் தலைமையளிக்க முன்னெடுத்த இயக்கம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உயர்த்திப் பிடித்து, புரட்சியின் மூலம் சுரண்டும் வர்க்க அரசைத் தகர்ப்பது, சோசலித்துக்கான அமைதிவழி மாற்றத்தை நிராகரித்து, புரட்சிகரபலாத்காரத்தை ஏற்றல், பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக கம்யூனிஸ்ட் கட்சியை மாற்றியமைத்தல், புதியஜனநாயகப் புரட்சி, தொழிலாளி, விவசாயிகள் கூட்டணி அமைத்தல் போன்ற அரசியல் நிலைப்பாடுகளை அங்கீகரித்தது. ஆனால் வலது திருத்தல்வாத போக்குகளுக்கு சித்தாந்தரீதியில்பலத்தஅடிகொடுக்காமலும்,கம்யூனிஸ்ட்கட்சிகள்இயங்குவதற்கான நெறிமுறைகள் மூன்றாம் அகிலத்தினால் உருவாக்கப் பட்டத்தை கவனத்தில் கொள்ளாமலும் கட்சி தொடங்கிய காலத்தில் குருச்சேவ் திருத்தல்வாதத்தை எதிர்த்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவப் போராட்டமான மாபெரும் விவாதத்தின் நிலைப்பாடுகளை கிரகித்துக் கொள்ளாமலும் கட்சி கட்டப்பட்டது. கொரில்லாப் போரைத் தவிர மற்ற எல்லா போராட்ட வடிவங்களும் அமைப்பு வடிவங்களும் நிராகரிக்கப்பட்டன.இடதுகுறுங்குழுவாதத்தை புரட்சி வழியாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது. இன்று ஒருகட்சிக்கு பதிலாகபலகுழுக்கள்இயங்கிக்கொண்டிருக்கின்றன. அனுபவத்தின் வாயிலாகவும், அரைகுறையாக கோட்பாடுகளை கிரகித்துக் கொண்டதன் மூலம் இன்று அறியப்படும் நிலைப்பாடுகள்.
ஒருகம்யூனிஸ்டுக் கட்சி செய்ய வேண்டிய பணிகளின் பன்முகத் தன்மையைபுரிந்துகொள்ளாமல் இன்று வரை செயல்பட்டுக் கொண்டு இருப்பதுதான் தவறானது என்று கருதுகிறோம்.கட்சியைகட்டிய பிறகாவது ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி கடந்துவந்த பாதையைப் புரிந்துகொண்டு மார்க்சிய கல்வியை கட்சிக்கு போதித்து கம்யூனிஸ்டுகட்சி உறுப்பினர்களை மார்க்சியசித்தாந்தவாதிகளாகவளர்த்திருக்க வேண்டும். அதனை இந்திய கம்யூனிஸ்டுகள் செய்யவில்லை. நமது நோக்கம் ரஷ்யாவில் நடந்தது போல் ஒரு புரட்சியின் மூலம் உழைக்கும் வர்க்கத்தின் அரசை உருவாக்க வேண்டும் என்பதாகும். அத்தகைய புரட்சியை நடத்திட உழைக்கும் மக்கள் ஒரு கொள்கையின் கீழ் திரட்டப்பட வேண்டும். அத்தகைய ஒரு கொள்கையை உருவாக்க புரட்சிகர சக்திகளுக்கு இடையே கருத்துப் போராட்டம் நடத்தி ஒரு பொதுக் கருத்தை நாம் வந்தடைய வேண்டும். அத்தகைய பொதுக்கருத்தை வந்தடைவதற்கான கருத்துப் போராட்டம் நடத்துபவர்களுக்கு மார்க்சிய லெனினிய தத்துவ அறிவை வளர்க்க வேண்டும், அதன் மூலம் மட்டுமே அவர்கள் சரியாக கருத்துப் போராட்டத்தை நடத்த முடியும்.இத்தகைய தத்துவ அறிவை வளர்ப்பது மட்டுமே நமது பணி என்று செயல்பட கூடாது.
இந்திய பொதுவுடமை இயக்க வரலாறின் இன்றைய நிலை அதற்கு அனுமதிக்காது. ஏனெனில் புறநிலையில் கம்யூனிச இயக்கத்தின்வளர்ச்சியைகணக்கிலெடுத்தால், மார்க்சியம் பற்றிய கல்வி போதனை மிகமிக அவசியம் என்ற போதிலும் மேலும் பல பணிகளை செய்வதன் மூலமே இங்கே ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சியை கட்ட முடியும். தத்துவங்களை போதனை செய்வது, சமூகத்தைப் பற்றிய அரசியல் பொருளாதாரஆய்வுகள் செய்வது, வர்க்கங்களைத் திரட்டிப் போராடுவதன் மூலம் வர்க்கங் களைப் பற்றிபுரிந்து கொள்ளவது, புரட்சிகர கலை இலக்கியங் கியங்களைப் படைப்பது, தேர்தல்களில் பங்கேற்று இந்த பாராளுமன்ற போலி ஜனநாயகத்தை அம்பலப் படுத்துவது, அவ்வப்போது ஆட்சியாளர்கள் மக்களின் மீது நடத்தும் தாக்குதல்களிலிருந்து மக்களை பாதுகாப்பது,இதுபோன்ற பல பணிகளை செய்து அதில் கிடைக்கும் அனுபவங்களையும் கணக்கில் எடுத்து மார்க்சிய கண்ணோட்டத்திலிருந்து ஒரு விஞ்ஞானப் பூர்வமான திட்டத்தை பலவகையான புரட்சிகர சக்திகளிடமும் விவாதித்து ஒரு பொதுக் கருத்தை உருவாக்கி, ஒரு காங்கிரசின் மூலம் ஒரு ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சியை நாம் உருவாக்க வேண்டும்.
ஆகவே நாம் செய்ய வேண்டிய பல பணிகளை வேலைப்பிரிவினையாக எடுத்துக்கொண்டு,ஒவ்வொரு பணி செய்யக்கூடிய தகுதிபடைத்தவர்களை இனம் கண்டு, அவர்களைக் கொண்டு தனிதனியாக குழுக்களை உருவாக்கி இந்தப் பணிகளை செய்வதன் மூலம் நம்மால் ரஷ்யாவில்கட்டப்பட்டது போன்ற கம்யூனிஸ்டு கட்சியை இங்கே கட்டமுடியும். ஆனால் இங்கே பல குழுக்களாகவும் கட்சிகளாகவும் பிரிந்து நிற்பவர்கள், ஒரு ஒன்றுபட்டகட்சியை கட்டமுடியாது என்று நம்பிக்கை இழந்துள்ளனர். இன்னும் சிலர் இங்கே பாசிச ஆட்சிநடக்கிறது என்றும் அதனை வீழ்த்திவிட்டு ஒரு சமூக நல அரசை கொண்டுவந்தால் மட்டுமே இங்கே ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சியை கட்ட முடியும் என்கிறார்கள். இவர்கள் ரஷ்யாவில் கொடூரமான ஜாரின் சர்வாதிகார ஆட்சி நடந்துகொண்டிருந்த போதுதான் அங்கு கட்சிகட்டப்பட்ட வரலாற்றை மறந்து விடுகிறார்கள். ஆகவே இங்கே ஒரு ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சியை கட்டுவதற் கான பல பணிகளை செய்வதற்கு முயற்சி செய்வோம், அதில் மிகவும் முதன்மையான பணியானது கம்யூனிசத்தின் அடிப்படை கொள்கை கோட்பாடு களை மக்களிடம் கொண்டு சென்று கல்வி புகட்டுவதாகும்.
மார்க்சிய தத்துவம் எனும் கருங்கல் அடித்தளத்தின் மீது ரஷ்யாவில் கம்யூனி்ஸ்டு கட்சிகட்டப்பட்டதால், அங்குள்ள முன்னணிகளுக்கு மார்க்சிய தத்துவ அறிவு கொடுத்து வளர்க்கப் பட்டிருந்ததனால், மார்க்சியத்தின் அடிப்படையில்லெனினால் வைக்கப்பட்ட கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொண்டு புரட்சிநடத்தினார்கள். போல்ஷ்விக்குகளும் எவ்விதமான பிளவுகளையும்சந்திக்காமல்ஒற்றுமையாக இருந்து தங்களை பலப்படுத்திக் கொண்டார்கள். அதே வேளையில் டிராட்ஸ்கி, மற்றும் மென்ஷ்விக்குகளின் கருத்துக்கள்மார்க்சியத்தைஅடிப்படையாக கொள்ளாததை புரிந்துகொண்டு மக்களும் முன்னணிகளும்அதனைபுறக்கணித்தார்கள். இந்த வரலாற்று உண்மையிலிருந்து மார்க்சிய தத்துவ கல்வியின் அவசியத்தை நாம்புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்குமாறாகஇந்திய கம்யூனிஸ்டுகளின் வரலாற்றில் கம்யூனிஸ்டுகள் மார்க்சிய கல்வி போதனைக்கு முக்கியத்துவம் கொடுக்க தவறியதன் விளைவாக கம்யூனிச அமைப்புகள் பல குழுக்களாக சிதறிவிட்டது. மேலும் மார்க்சியத்திற்கு அன்னியமான, பின்நவீனத்துவம், அடையாள அரசியல், டிராட்ஸ்கியம் போன்ற பிற்போக்கு சித்தாந்தங்கள் கம்யூனிஸ்டு கட்சிக்குள் புகுந்து விளையாடவழிஏற்பட்டுவிட்டது.
இப்போதாவது ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சியின் அனுபவங்களை உள்வாங்கி நமது பணிகளை தீர்மானிக்க வேண்டும்.
ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி நமக்கு ஏன் வேண்டும்?. ஒரு கம்யூனிஸ்டு கட்சியானது புரட்சிகர கட்சியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?. உலகத்தில் வாழம் உழைக்கும் மக்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்கள் உழைக்கும் மக்களை ஒடுக்குகின்றனர்.அம்மக்கள் எதிரியினுடைய ஒடுக்குமுறையினைத் தூக்கியெறிந்திடவேவிரும்புகின்றனர். முதலாளியமற்றும் ஏகாதிபத்திய காலகட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சி போன்ற ஒரு கட்சியே தற்போது தேவைப் படுகிறது. அதனைப் போன்ற ஒரு கட்சியில்லாமல் எதிரியின் ஒடுக்குமுறையை மக்களால் தூக்கியெறிந்திட முற்றிலும் சாத்திய மற்றதாகும். நாம் கம்யூனிஸ்டுகள். எதிரியைத் தூக்கியெறிவதில் மக்களுக்கு வழிகாட்ட விரும்புகிறோம். ஆகவேநமதுபடையின் அணிவகுப்புகளைச் சிறந்த நிலையில் வைத்தாக வேண்டும். நாம் ஒழுங்காக அணிவகுத்துச் சென்றாக வேண்டும். நமது துருப்புகள் அதாவது நமது கட்சி உறுப்பினர்களைதேர்ந்தெடுத்து அது தேர்ந்தெடுக்கப்பட்ட துருப்புகளாக இருக்க வேண்டும். நமது ஆயுதங்களும் சிறந்த ஆயுதங்களாக இருக்க வேண்டும். அதாவது நமது கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள்விஞ்ஞான முறையின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். அத்தகைய தத்துவஆயுதம்தான் நமது ஆயுதமாகும். இந்த நிலைமைகள் இல்லாமல் எதிரியை நம்மால்தூக்கியெறிய முடியாது. -மாவோ-
இப்படிக்கு
ஆசிரியர் குழு இலக்கு
--------------------------------------------------------------------------
No comments:
Post a Comment