திறந்த நிலை மார்க்சியம் நூல் என்ன தேவைக்கானது?- ஓர் விமர்சனம்

திறந்தநிலை மார்க்சியம் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரை இதற்கு எதிர்வினையாக

((Open Marxism) நான்கு தொகுதிகள் வெளியானதை குறிப்பிட்டுள்ளனர் அவர்களின் குறிப்பே கீழே.

Open Marxism 1 - Dialectics and History (1992), Open Marxism 2 - Theory and Practice (1992), Open Marxism 3 - Emancipating Marx (1995), Open Marxism 4 - Against a Closing World (2020) என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியான 4தொகுதிகளும் திறந்தநிலை மார்க்சியம் என்ற தலைப்பில், 1. இயக்கவியலும் வரலாறும், 2.கோட்பாடும் செயல்பாடும், 3.மார்க்சின் விடுவிப்பு,  4. மூடப்படும் உலகத்துக்கு எதிராக என தமிழில் மொழிபெயர்த்து என்.சி.பி.எச் வெளியிட்டுள்ளது அந்த நூலை வாசிக்கும் முன்னர் அவர்கள் நூலை பற்றி தொடர்ந்து இதுவரை தங்களின் இணையபகுதியில் பேசியவற்றின் அடிப்படையில் இவர்களின் நோக்கம் மார்க்சியத்தை வளர்தெடுக்க அல்ல அன்று திருத்தல்வாதிகளும் சந்தர்ப்ப வாதிகளும் ஓடுகாலிகளும் கலைப்பு வாதிகளும் செய்த அந்தப் பணியினை செய்யவே இந்த நூலினை கொணர்ந்துள்ளனர் நூலினை முழுமையாக வாசித்து அடுத்த கட்டுரை வளமையோடு வெளிவரும் தோழர்களே.

திறந்தநிலை மார்க்சியம் தன்னையே விமர்சிக்கும் கட்டுரைகளையும் இந்தத் தொகுதிகளில் சேர்த்துள்ளதன் மூலம் விமர்சனபூர்வமான அணுகுமுறையைஒவ்வொருவரும் தம்மை நோக்கியே திருப்பிக் கொள்வதற்கு முன்மாதிரியாக உள்ளது ன்கின்றனர் வெளியீட்டாளர். அப்படியெனும் பொழுது இவை கட்டுடைக்கும் வேலையல்லவா? ன்கிறேன் நான்.

திறந்தநிலை மார்க்சியம் தொகுதிகளில் அடங்கிய சுமார் 30 கட்டுரைகள், கோட்பாட்டை புறநிலையுடன் பொருத்தி விமர்சனக் கண்ணோட்டத்தோடு விவாதிக்கவும், 21-ம் நூற்றாண்டில் இந்தியாவில் மார்க்சியத்தை புரட்சிகர ஆயுதமாக ஏந்துவதற்கான பாதையின் தத்துவார்த்த அடித்தளத்தை வலுப்படுத்தவும்,இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஆதரித்து புரட்சிகரப் பாதையில் பயணிக்கவும்,கோட்பாட்டில் தேக்கத்தை உடைத்து புரட்சிகர நடைமுறையை உயிரோட்ட மானதாக்கவும்,பின்நவீனத்துவத்தையும்,வரலாற்றின் முடிவு என்ற முனைவையும் மார்க்சியத்தின் மீதான முதலாளித்துவ கொச்சைவிமர்சனத்தையும் மார்க்சிய தத்துவரீதியாக எதிர்கொள்ளவும், மார்க்சியத்தை அறிவியலாகப்பயிலவும், பின்னை மார்க்சியம், ஃபிராங்க்ஃபர்ட் பள்ளி போன்ற மார்க்சிய பள்ளிகளை விமர்சன பூர்வமாக அணுகவும் வாசகர்களுக்குவழிகாட்டுவதாக உள்ளன ன்கின்றனர் வெளியீட்டாளர்.

நான் வைக்கும் விமர்சனம்.

இந்த புத்தகம் எதை குறித்தான கேள்விக்கு ழுப்புகிறது என்று அதன் மொழிபெயர்பாளார் மா.சிவக்குமாரின் வார்த்தைகள் விளக்கப்படுத்தி இணைய பகுதியில் பேசியதை முன்வைத்தே இந்த பகுதியை எழுதியுள்ளேன். அதன் குறிப்பான விசயங்களுக்குள் போவது நுனிபுல் விசாரணையாக மாறிவிடும். ஏன் இந்த புத்தகத்தையே சுற்றி சுற்றி வர வேண்டும் என்று விரும்ப வேண்டும். சமூகமாற்றத்துக்கான என்ன தீர்வை இவைமுன்வைத்துள்ளது? எந்த மார்க்சிய கேள்விகளுக்கு இது மறு விசாரணையை  கோருகிறது. மார்க்சிய-லெனினியத்தை மறுத்து அதன் மீது கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பிவிட்டுபிறகு மார்க்சிய வேசம் எதற்கு?எந்த வழியில் நின்று தீர்வு காணப்போகிறீர்கள்?. இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை நூலினை வாசித்து அடுத்தப் பகுதியில் வைக்க முயற்ச்சிகிறேன்.

இறுதியில அறிந்தோ அறியாமலோ முதலாளித்துவமுறைகளைமார்க்சியத்தின் எதிர்நிலை வழிமுறைகளையே கைக்கொள்ளவேண்டி வரும் உங்களின் நோக்கம் புரட்சி முன்னெடுத்து செல்லவல்ல என்பது திண்ணம்.

சரி இதே நிலைப்பாட்டை கொண்டிருந்தவர்களை லெனின் விமர்சனம் செய்தார் ஏன் தெரியுமா? நீங்கள் வைக்கும் இதே விமர்சனத்தை அன்று வைத்தவர்களை பார்த்து அவர்களின் நிலைபாடு என்னவென்பதனை லெனின் தெளிவுப்படுத்தியுள்ளார் நேரம் உள்ளவர்கள் வாசித்து கருத்திடுங்கள் காத்திருக்கிறேன்.

 இன்று பின்நவீனத்துவவாதிகளும், காண்ட் ஹெகைல வாசிக்க அழைக்கும் திறந்த நிலை மார்க்சியம் பேசுவோரின் நிலைக்கு எதிராக அவர்களின் நிலைப்பாடு மார்க்சியம் அல்ல என்பதனை விவரிக்க நமது ஆசானின் லெனின் கட்டுரை பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் பகுதியிலிருந்து எடுத்து கையாளுகிறேன்.

மேலும் திறந்த நிலை மார்க்சியம் குறித்து தொடர்கட்டுரைகள் இலக்கு இணையப்பகுதியில் வெளிவரும் தோழர்களே. அதில் இவர்கள் நடத்தும் இணையவழி உறையாடல்கள் கணக்கில் கொண்டே அமையும்.

எங்கிருந்து தொடங்குவது?, என்ன செய்ய வேண்டும்?ஓரடி முன்னால் ஈரடி பின்னால்,மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்றுஉள்ளடக்கூறுகளும், பொருள் முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்,இடதுசாரி சீர்குலைவுவாதம் ஒரு இளம்பிள்ளை கோளாறு, ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம், அரசும் புரட்சியும்,சமூக புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு உத்திகள், பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுட்ஸ்கியும் போன்ற நூல்களில் மேதை லெனின் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்.

அனைத்து நாட்டு விடுதலைக்கும் ஏற்றதொரு ஆயுதங்களை தமது நூல்களில் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார் புரட்சியாளர் லெனின்.

ஜார்மன்னர்கள் முற்றாக ஒழிந்து விடுவதில்லை; ஒவ்வொரு நாட்டிலும் பலவடிவில் பிறந்துகொண்டுதான் இருப்பார்கள். அவர்களை ஒழித்துக்கட்ட லெனினியத்தால் தான் முடியும்.. ஆக இந்த மார்க்சியம் அல்லாத குப்பைகளை அவர்கள் வழி நின்று அகற்ற முற்ச்சிக்கும் பணியின் சிறிய முயற்ச்சியே இந்த கட்டுரை.

லெனின் பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்என்ற நூலை 1908-ஆம் ஆண்டு பிப்ரவரி துவங்கி அக்டோபர் மாதத்தில் எழுதி முடித்தார். 1909-ஆம் ஆண்டு அந்நூல் பிரசுரமாகி வெளிவந்தது. மிகவும் சிக்கலான தத்துவப் பிரச்னைகளை மையமாகக்கொண்டு எழுதப்பட்ட நூல் இது.

இந்த நூல் வெளிவந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரஷ்யாவில் பிற்போக்கு முதலாளித்துவ ஆட்சி தூக்கியெறியப்பட்டு,புதிய தொழிலாளி விவசாயிகளின் வர்க்கஅரசு ஆட்சிக்கு வந்தது. அந்த அரசுக்கு லெனின் தலைமை ஏற்றார். இந்த காலங்கள் முழுவதும் புரட்சிக்கான தயாரிப்பு பணிகளும் போராட்டங்களும் நிறைந்த காலமாக இருந்த நிலையில் ஒரு தத்துவ நூல் எழுத வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?அதிலும்புரட்சியின்தலைமையில் நின்று, முழுமூச்சாக செயல்பட்டு வந்த லெனின், அந்தப் பணியை ஏன் மேற்கொண்டார்?அன்றையகாலக்கட்டத்தில் எழுந்த தத்துவப் பிரச்னைகள் புரட்சி வெற்றியோடு இணைந்த பிரச்னைகள் என்று லெனின் கருதினார்.தத்துவப் பிரச்னைகளில் அக்கறை செலுத்தாமல் அவற்றைக்கைவிட்டால்,புரட்சி  முன்னேற்றம் அடையாது என்ற ஆபத்தினை அவர் உணர்ந்ததால்தான் இந்தக் கடினமான பணியில் ஈடுபட்டார். மார்க்சிய நோக்கிலான அவரது தீர்க்கதரிசனம் பின்னர் உண்மையானது.தத்துவத் துறையில் மார்க்சிய தத்துவத்தை திரித்து குழப்பம்விளைவித்துக்கொண்டிருந்தோரின் கருத்து நிலைபாடுகளோடு இந்த நூல் வலிமையான கருத்து யுத்தத்தை நடத்தி, அந்தக் கருத்துக்களை முறியடித்தது.அதன் விளைவாக ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் மார்க்சிய தத்துவத்தின் உயிர்நாடியான இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை இறுகப் பற்றிகொண்டு புரட்சியை நோக்கி முன்னேறியது.

சமுக மாற்றத்தில்,புரட்சியில் நம்பிக்கை கொண்டவர்கள்தத்துவத்தைகைவிடக்கூடாது என்ற பாடத்தை இந்த வரலாற்று அனுபவம் எடுத்துரைக்கிறது.தொழிலாளி மற்றும் உழைக்கும் வர்க்கங்களிடம் வர்க்க தத்துவப் பிரச்சாரத்தை செய்வதும், முதலாளித்துவ தத்துவ நிலைகள், மதப்பழமைவாதங்களின்  குரலாக ஒலிக்கிற உலகப் பார்வைகள் போன்றவற்றிற்கு எதிராக தத்துவப் போராட்டம் மேற்கொள்வதும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவசியமனது. இந்த நூல் உணர்த்தும் உன்னதமான லெனினிய அறிவுரை.

19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்,20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் ஐரோப்பாவில் எர்னஸ்ட் மாக் பெயரால் மாக்கிம் எனவும், அனுபவவாத விமர்சனம்என்றும் அழைக்கப்பட்ட தத்துவம் பரவியிருந்தது. எர்னஸ்ட் மாக், அவேனரியஸ் உள்ளிட்ட இந்த தத்துவவாதிகள் தாங்களது தத்துவமே ஒரே அறிவியல் தத்துவம் என்று சொல்லிக் கொண்டனர்.இதற்கு அவர்கள் பல வாதங்களை முன்வைத்தனர்.

தத்துவம்,கருத்துமுதல்வாதம்,பொருள்முதல்வாதம் என்ற இரண்டு முகாம்களாக பிரிந்துள்ளது. இரண்டும் வெவ்வேறு பக்கமாக சாய்ந்திருக்கும் பிரிந்திருக்கும் நிலையை தாங்கள் சரிசெய்து செழுமையாக்கி,அனுபவவாதவிமர்சனம்தத்துவத்தைப் படைத்திருப்பதாக பெரிதாக ஆரவாரம்செய்துநூல்களைவெளியிட்டனர்.

அன்றைய சமுக ஜனநாயக இயக்கத்தில் இருந்தமார்க்சியர்ள்பலரும் ,”அனுபவவாத விமர்சனம்என்பது அறிவியல் உலகின் ஒரு புதிய சிந்தனையாக பார்க்க முற்பட்டனர்.சிலர் மார்க்சிய தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதத்திற்கு மாற்றான தத்துவம் என்று நினைக்கும் அளவிற்கு கூட சென்றனர். இந்த கூட்டத்தோடு  சில முக்கியமான அறிவியலாளர்களும் சேர்ந்து கொண்டனர்.

அன்று சோசலிஸ்ட் கட்சிகளைக் கொண்ட சர்வதேச அகிலம் இயங்கி வந்தது.அது பிரெடரிக் எங்கெல்சின் அரும்பெரும்பணியால்உருவானது.ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு சந்தர்ப்பவாதிகள் நிறைந்த அமைப்பாக மாறிப் போனது.அகிலத்தின் தலைவராக இருந்த கார்ல் காவுத்ஸ்கி ஜெர்மானிய சமுக ஜனநாயகத்தின் செல்வாக்கான தலைவராகவும் விளங்கியவர்.தத்துவ உலகில் மார்க்சியத்தை பின்னுக்குத் தள்ளுகிறவகையில்பரவிக்கொண்டிருக்கும் மாக்கிசத்திற்கு பதிலடி கொடுக்க சர்வதேச அகிலம் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.

ஒரு கட்டத்தில் காவுத்ஸ்கி மார்க்சிய தத்துவம், எர்னஸ்ட்மாக்கின் தத்துவத்தோடு எந்த வகையிலும் முரண்படவில்லை என்று அறிவித்தார். இது மேலும் பல ஐரோப்பிய சோஷலிச கட்சிகளிடையே அனுபவாத விமர்சனத் தத்துவம் பரவிட வழிவகுத்தது.

ஐரோப்பாவில் இந்த சூழல் நிலவியபோது ரஷ்யாவிலும்கருத்தியல்போராட்டத்திற்கான தேவை அதிகரித்தது.1905-07-ஆம் ஆண்டுகளில் ஜாராட்சிக்கு எதிராக எழுந்த புரட்சிகடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டது. புரட்சி தோல்வியில் முடிந்ததையொட்டி ஜார் அரசாங்கம் புரட்சியாளர்களை வேட்டையாடியது.பல்லாயிரக்கணக்கானோர் தூக்கிலடப்பட்டனர்.

ரஷ்ய அறிவுஜீவிகள் மத்தியில் மார்க்சியம்மீதும்,இயக்கவியல்,வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் மீதும் நம்பிக்கை குறையத் தொடங்கியது.சமூகப் பிரச்னைகளை ஒதுக்கி வைத்துவிட்டு கடவுளை நாடும் போக்கு அதிகரிக்கத் துவங்கியது.”கடவுள்நாடுவோர்எனும்பெயரில் கடவுள் பிரசாரம் செய்யப்பட்டு கிறித்துவத்தின் மீது புதிய ஆர்வம் தூண்டப்பட்டது.எல்லாவற்றுக்கும் மேலாக, ரஷ்யகம்யுனிஸ்ட்கட்சியான போல்ஷ்விக் கட்சியில் இருந்த சிலர் இந்தக் கருத்துக்களுக்கு இரையானதுதான் பெரும் ஆபத்தாக உருவெடுத்தது. போக்தானாவ், பசாராவ், லூனாசார்ஸ்கி போன்றோர் மார்க்சியத்தையும் எர்னஸ்ட் மாக்கின் தத்துவத்தையும் இணைத்துப் பேச முற்பட்டனர்.மார்க்சியத்தைவளர்க்கிறோம் என்ற பெயரில் இது நடந்தது.

ஆக, புரட்சிகர கட்சியின் தத்துவ அடித்தளத்தை வேரோடு சாய்த்திடும் வேலை நடந்து வந்தது.இந்த நிலையை லெனின் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பாரா?மார்க்சியத்தின் மீதான தாக்குதல்களை முறியடித்து, மார்க்சியத்தை பாதுகாத்திடும் கருத்துப் போரில் இறங்கினார். அதன் விளைவாகவே பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்நூல் பிறப்பெடுத்தது.

பொருளே முதன்மையானதுபொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் என்ற தலைப்பிலேயே தனது முக்கிய குறிக்கோளைலெனின்வெளிப்படுத்துகிறார்.  ஆழ்ந்து நோக்கினால் இது புலப்படும்.

தத்துவத்தில்பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் என இரண்டு பிரிவுகள்தான் உண்டு.எந்த பெயர்களில் எந்த தத்துவம் எழுந்தாலும் இந்த இரண்டுக்குள் தான் அடக்கம். எனவே ஒருபுறம் பொருள்முதல்வாதம் எனில்மற்றொருபுறம் அனுபவவாத விமர்சனம்என்ற பெயர் கொண்டாலும் அது கருத்துமுதல் வாதம்தான்.ஆனால்,அனுபவவாதவிமர்சன தத்துவ ஆசிரியர்கள் தங்களை கருத்து முதல்வாதிகள்என்றுஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், அவர்களுடைய வாதங்கள் அனைத்தும் பழைய கருத்துமுதல்வாதமே என்று லெனின் நூலில் ஆணித்தரமாக நிறுவுகிறார்.புலனறிவு,பொருளின் இருப்பு, அறிவு போன்ற அடிப்படை தத்துவார்த்த பிரச்னைகளில்மார்க்சியத்தின்பார்வையையும் மாக்கியவதிகள் விமர்சித்துள்ளனர். ஒவ்வொரு கருத்தையும் அலசி ஆராய்ந்து தகர்க்கின்றார் லெனின்.

அனுபவவாதவிமர்சனதத்துவ ஆசிரியர்கள் தத்துவத்தின் இரு பிரிவுகளில் உள்ள குறைகளை நீக்கி ஒரு புதிய தத்துவ முறையைபடைப்பதாக கூறிக்கொண்டனர். இந்தக் கூற்றினைத் தகர்த்து அவர்களின் புதிய முறை என்பது  பழைய  17௦௦-ஆம் ஆண்டுகளில் ஜார்ஜ் பெர்க்லியின் கருத்துமுதல்வாதம்தான் என்று லெனின் நிறுவுகிறார்.பெர்க்லியின் வாதங்களும், முந்தைய கருத்துமுதல்வாதிகளின் கருத்துக்களும் மாக், அவனேரியஸ் போன்றோர்களின் கருத்துக்களோடு எவ்வாறு ஒத்துப் போகின்றன என்பதை லெனின் அம்பலப்படுத்துகிறார்.(இங்கேயும் அதையைதான் திறந்தநிலை மார்க்சியம் பேசுவோர் செய்துள்ளனர் என்று தெளிவாக கூறமுடியும்).

தத்துவத்தில் இரண்டு வேறுபட்ட நிலைகளான பொருளா,கருத்தா என்ற முகாம்களில் நான் எதிலும் சாராதவர் என்று சொல்லி வருகின்றார், அனுபவாத விமர்சகர்,வித்தியாசமானநிலைஎன்னுடையது என்று உள்ளே புகுந்து வாதிடுகிறார். புலன் உணர்வுகளின் தொகுதியே பொருள் என்று பேசுகின்றார் அவர். புதிய பார்வை என்ற பெயரால் மாக் புகுத்துகிற கருத்தை அம்பலப்படுத்துகிறார்லெனின் .கருத்துதான்அடிப்படை பொருளின் இருப்பை கருத்தே நிர்ணயிக்கிறது எனும்பழைய தத்துவத்தைத்தான்  “புலன் உணர்வுகளின் தொகுதிஎன்று மாக் புது பெயர் சூட்டி அழைகின்றார்.(இங்கேயும்அதேநிலைதான் கோட்பாட்டை உடைகிறார்களாம் எதற்கு என்பது தெரிந்தே செய்கின்றனர்)

பொருள் மனிதனின் புலன் உணர்வில் பிரதிபலிக்கிறது. பிறகு அது மனித மூளையால் பெறப்பட்டு    பொருள்  பற்றிய அறிவு உருவாகிறது.உதாரணமாக,பச்சை நிறம் கொண்ட திராட்சையை பார்க்கும் ஒருவர் அதன் நிறத்தை தனது புலன் உறுப்பினால் (கண்பார்வை) புலன் உணர்வு பெறுகின்றார்..அந்த புலன் உணர்வு மூளைக்கு அனுப்பப்பட்டு அந்தப் பொருள் பச்சை நிறம் கொண்ட திராட்சை என்று அறிதலுக்கு வருகின்றார்.

பொருளின் கூறுகள் மனிதரின் புலன் உணர்வுகளோடு கலந்து வினையாற்றும் போதுதான் புலனறிவு ஏற்பட்டு அறிவு பெறும் நிகழ்வு நடப்பதை லெனின் விளக்குகிறார். பச்சை நிறம் கொண்ட திராட்சையின்நிறம்எப்படி உணரப்படுகிறது? ஒளி அலைகள் கண்ணின் கருவிழிகளில் பட்டு, அந்த உணர்வுகள் மூளையில் பதிகின்றன.அதன் விளைவாக பச்சை நிறம் என்ற புலன் அறிவும்,பிறகு பொருளின் (பச்சை நிறம் கொண்ட திராட்சை) முழுத்தன்மை சார்ந்த அறிவும் தோன்றுகிறது.இதில் பொருள் மட்டுமல்ல, ஒளி அலைகளும் பொருளாகவே லெனின் காண்கின்றார்.நம்மைச் சுற்றியுள்ள, வெளியுலகம்அனைத்துமே பொருட்களால் ஆனது: அனுபவவாத விமர்சகர்கள் பொருள் அல்லாதவைகளின் இருப்பு பற்றி பேசுவதைலெனின் நிராகரிக்கிறார்.இதனை புலனுணர்ச்சிகளின் தொகுதி என்பது போன்ற எந்தப் பெயர்களை அவர்கள் கொடுத்தாலும் அது உண்மையல்ல. எனவே பொருள், அதன் தன்மைகள் அனைத்தும் மனிதமனதிற்கு அப்பாற்பட்டு சுயேச்சையான இருப்பு கொண்டவை. இதுவேமார்க்சியஇயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் அடிப்படை என்கிறார் லெனின். இதுவே உலகை சரியாக அறிந்து   கொள்ளவும்,புரிந்து கொள்ளவும் உதவிடும்.

வண்டியை குதிரைக்கு முன்னால் நிறுத்தி

அனுபவவாத விமர்சகர்கள் பொருளை அருவமானஅடையாளம்என்றுவரையறுக்கின்றனர். இந்த சொல்லாடலைப் பயன்படுத்தி குழப்புவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். “அருவமானஅடையாளம் என்றால் நிலையான புலன் உணர்வுகளின் தொகுதிதான் உண்மையாக இருக்கிறது; பொருள் அல்ல என்பது அவர்களது வாதம்.இது அவர்களை எங்கு கொண்டு சேர்க்கிறது? பொருள் என்பதே மனித உணர்வில் தோன்றி உருவாகும் கருத்தாக்கம்என்பதுதான்அனுபவவாதிகளின் உண்மையானநிலை என்று வெளிப்படுத்திய லெனின், அதனால் அவர்கள் கருத்துமுதல்வாதத்தில்தான் கரைந்து போகிறார்கள் என்று எடுத்துரைக்கின்றார்.பொருள், புலனுணர்வு, அறிவு ஆகியவற்றில் புலன் உணர்வுகளை முதன்மையாக அடிப்படையாக பார்ப்பது கருத்துமுதல் வாதம்.புலன் உணர்வுகளிருந்துபெறப்படும் எண்ணங்கள் மேலும் செழுமைப் படுத்தப்பட்டு அறிவு உண்டாகிறது என்பது கருத்துமுதல்வாதத்தின்நிலை. ஆனால், புலன் உணர்வுக்கும் அதையொட்டி ஏற்படும் அறிவுக்கும் அடிப்படை பொருள்தான்என்பது பொருள்முதல்வாதம்.

மேலும் லெனின் விளக்குகிறார்:

பொருள்முதல்வாதத்திற்கும்கருத்துமுதல்வாதத்துக்கும் இடையே உள்ள எதிர்நிலைதத்துவத்துறையில் இரண்டு அடிப்படையான போக்குகளுக்கும் இடையேஉள்ளவேறுபாடேபிரச்சனையாகும். நாம் பொருட்களில் இருந்து புலனுணர்வுக்கும் சிந்தனைக்கும் போவதாஅல்லது நாம் சிந்தனை மற்றும் அறிந்துணர்ந்துகொள்ளலில் இருந்து, புலனுணர்விலிருந்து பொருட்களுக்கு போவதா?முதல் போக்கைஅதாவது பொருள்முதல்வாத போக்கை ஏங்கெல்ஸ் பின்பற்றுகிறார்.இரண்டாவதுபோக்கைஅதாவது கருத்துமுதல்வாத போக்கை மாக் கடைப்பிடிக்கிறார்.பொருட்கள்புலனுணர்வுகளின் தொகுதிகள் என்ற ஏ. மாக்கின் கோட்பாடு அகநிலைக் கருத்துவாதம் (Subjective Idealism); பெர்க்லிவாதத்தின் எளிமையான புத்துருவாக்கம் என்ற தெளிவான,மறுக்க முடியாத உண்மையை எந்தப் போலித்தனமும் எந்த குதர்க்கமும் (அப்படி ஏராளமானவற்றை நாம் இனிமேல் சந்திக்க வேண்டியிருக்கும்) அகற்ற முடியாது.”

மாக்கின் வாதப்படி உலகப் பொருட்கள் எல்லாமே  “புலனுணர்வுகளின் தொகுதிகள்என்பது மொத்த உலகமே கருத்து அல்லது சிந்தனையில்தான் உள்ளது என்பதாகவே முடிகிறது. அவருக்கு முன்பு,பெர்க்லி புலனுணர்வுகளின் ஒன்று சேர்த்தல்கள்என்ற சொற்றொடரை பயன்படுத்தி உணர்வு மட்டுமே உண்மை, பொருள் உண்மையானது அல்ல என்று கூறியிருந்தார். இந்த வாதத்தை நீட்டினால் எதார்த்தத்தில் உலகமோ அல்லது பொருட்களோ இல்லை, ஒவ்வொருவரின் தனிப்பட்ட உணர்வு மட்டுமே உண்மையானது என்ற முடிவிற்கு வர வேண்டியிருக்கும்.

லெனின் இந்த விநோத வாதங்கள் எங்கு கொண்டுசெல்கிறதுஎன்பதைவிளக்குகிறார்: “…இத்தகைய வாதங்களிலிருந்து தொடங்கினால்தன்னைத் தவிர மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பதைக் கூட ஒப்புக்கொள்ள இயலாது;… இது, ஒருவரின் சொந்த எண்ணம்  மட்டுமே உள்ளது எனக்கூறும் ஆன்மீக நித்தியவாதம் (Solipsism) ஆகும்.”

அனுபவவாத விமர்சகர்கள் மீது லெனின் வைக்கும் அடிப்படை குற்றச்சாட்டு இதுதான்.:பொருள்அடிபடையானது,பொருலிருந்தே சிந்தனை தோன்றுகிறது என்ற உண்மையை அனுபவவாத விமர்சகர்கள் மறுக்கிறார்கள்.அதாவது, வண்டியை குதிரைக்கு முன்னால் நிறுத்தி வண்டியை ஓட்ட முயற்சிக்கிறார்கள்.

லெனினது வரையறை: இந்த விவாதத்தில் லெனின் சிந்தனை அல்லது,கருத்து,அல்லது எண்ணங்கள் ஆகியவற்றின்பங்கையும் மறுக்கவில்லை, வறட்டு பொருள்முதல்வாதிகள் அத்தவறை செய்தனர்.மிக உயர்ந்த அளவில் வளர்ச்சி பெற்றுள்ள உயிர்ப்பு நிலையில்(organic)உள்ள பொருளின் குணம்தான் உணர்வு, சிந்தனை, கருத்து போன்றவை என்கிறார் லெனின்.(இந்த குணம்கொண்ட பொருளாக மனிதர்களிடம் மனிதமூளை இயங்குகிறது). இந்த குணம் மனிதர்கள் மற்றும் உயிரினங்களின் தங்கள் வாழ்வின் சுற்றுப்புற இயற்கை நிகழ்வுகளையும்,சமுக சூழல்களையும் அறிந்துகொள்ளதுணை புரிகிறது,இவ்வாறு அறிந்து,தகுந்த முறையில் எதிர்வினைகள், செயல்பாடுகளை அமைத்துக்கொள்ள உதவுகிறது.

மார்க்சிய இயக்கவியல் பொருள்முதல் வாதம்தான்பொருளுக்கும்சிந்தனைக்குமான இந்த தொடர்பை சரியான முறையில் விளக்குகிறது.கருத்துமுதல்வாதம்பொருளின் அடிப்படைப் பங்கினை மறுக்கிறது. அது,சிந்தனைதான் பொருளின் அடிப்படை என்று பார்க்கிறது.கருத்துமுதல்வாதத்தின் நீட்சியாக ஆன்மிகவாதம் மகத்தான சிந்தனையானகடவுள்தான்,இந்தஉலகத்தின் பொருட்கள், இயற்கை, பிரபஞ்சம் அனைத்துக்கும் ஆதாரம் என்று வாதிடுகிறது.இந்த வாதம் உண்மைக்கு மாறானதுமட்டுமல்ல,இயற்கை ,பொருட்கள்,சமுகம்ஆகியனவற்றின்நிலைமைகளை உணர்ந்து ,அவை பற்றிய அறிவினைப் பெற்று அந்த நிலைமைகளை மாற்றும் வல்லமையை மனிதர்கள் பெற்றிடாமல் தடுத்திடத் தூண்டுகிறது. பொருள்முதல் வாதம்,கருத்துமுதல்வாதம்இரண்டிலிருந்தும் நாங்கள் வித்தியாசப்பட்டவர்கள் என்று முன்வந்த அனுபவாத விமர்சகர்கள் கருத்துமுதல்வாதசரக்கையே உருமாற்றிக் கொடுத்தனர். (இங்கே இதன் பொருத்த பாட்டினை புரிந்துக் கொள்ளுங்கள்)

பொருள்முதல்வாதிகள் பொருள் முதன்மையானது என்று பேசுகிறார்கள்; ஆனால் பொருளின் உண்மையான தன்மை என்ன என்பதை வரையறுக்க யாரும் முயற்சிக்கவில்லைஎன்று அனுபவாத விமர்சகர்கள் பொருள்முதல் வாதிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

அதிலும் குறிப்பாக வளர்ந்து வரும் இயல்பியல் அறிவியல், பொருளைப் பற்றி பல கண்டுபிடிப்புக்களை வெளியிட்டு வருகிறது;(19-ஆம் நூற்றாண்டு இறுதியில்) அணுவையும் தாண்டி பல துகள்கள் (particles) கண்டுபிடிக்கப்பட்டது.இதனால் பொருள் என்று ஒன்று உண்டா என்று பொருளின் இருப்பே கேள்விக்குள்ளாகி யுள்ளது; இந்தகண்டுபிடிப்புக்களைப்  பற்றி எந்த கவனமும் செலுத்தாமல் சொன்னதையேசொல்லிக்கொண்டு,   பொருளைப் பற்றிய வரையறை எதுவும் செய்யாமல் இருகின்றனர் பொருள் முதல்வாதிகள்என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டினர்.

லெனின் அவர்களது வாதங்களை எதிர்கொண்டார்.பொருளின் முதன்மையை பொருள்முதல்வாதிகள்வலியுறுத்துகின்றனர். இந்த வாதம் தத்துவ உலகில் விவாதிக்கப்படும் விஷயமாக நீடிக்கிறது. பொருள்பற்றிய  பல்வேறு  தன்மைகளை விளக்குவதும், மேலும் மேலும் ஆராய்ந்து புதியகண்டுபிடிப்புக்களை உருவாக்குவதும் அவசியம்.இது இடையறாது நடைபெற வேண்டிய துறை அறிவியல்துறை ஆகும்.

பல அறிவியல் கண்டுபிடிப்புக்கள் யாருடையஉணர்வையும்  சிந்தனையையும் சாராமல், சுயேச்சையாக,   பொருளின்இருப்பும்,இயக்கமும்இருப்பதைஎடுத்துரைக்கின்றன.பொருளின்இந்தபுறநிலைஎதார்த்தத்திலிருந்துதான்  அறிவியலுக்கு பொருளை ஆராய்ந்திட  வழி ஏற்படுகிறது.பொருளின் சுதந்திர இருப்பினை மறுத்தால் அறிவியலுக்கான கதவுகள் மூடப்படும் அறிவியலுக்கு வாய்ப்பற்ற நிலையைத்தான் கருத்து முதல்வாதம்ஏற்படுத்துகிறது.அதையேதான் அனுபவவாத விமர்சகர்களும் செய்கின்றனர்,ஆனால் நாசூக்காக தாங்கள் அறிவியலின் துணையோடு நிற்பதாகக் காட்டிக்கொண்டு பிற்போக்குத்தனத்தை புகுத்துகின்றனர்.

பொருளுக்கான வரையறை இல்லை என்றவர்களிடம் வாதப்போரில் ஈடுபட்ட லெனின், வாதங்களின் ஊடாக அற்புதமான,பிரசித்திபெற்ற பொருள் பற்றிய ஒரு வரையறையை வழங்கினார்; பொருள் என்பது தத்துவரீதியான ஒரு கருத்தினம் (category). இது புறநிலையான எதார்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது. இந்த எதார்த்தம் மனிதரின் புலன் உணர்வுகளுக்குகொண்டுசெல்லப்படுகிறது. புலன் உணர்வுகளின் பிரதிபலிப்பால் அங்கு அது காப்பி எடுக்கப்படுகிறது;நிழல் படம் எடுக்கப்படுகிறது; (இவை அனைத்தும்) பொருள் புலன்களுக்கு அப்பால் சுயேச்சையாக இருக்கும் நிலையில் நிகழ்கிறது.”

இந்த விரிவான வரையறை மனிதன்,புற உலகு இரண்டுக்குமான தொடர்பினை துல்லியமாக விளக்குகிறது.பொருள் முதன்மையானது,,பொருளிலிருந்துதான்  சிந்தனை தோன்றுகிறது  என்ற கோட்பாடுகளை இந்த வரையறை கொண்டுள்ளது.

தத்துவத்தின் கருப்பொருள் மனிதன்,புற உலகு இரண்டுக்குமான தொடர்பினை விளக்குவதுதான். எனவே இந்த வரையறையில் பொருளை தத்துவத்தின் கருத்தினம் என்று லெனின் துவங்குகிறார். பொருளின் உள்ளே இயங்கும் தொடர்புகளையும்,உள்ளிருக்கும் அணு, துகள்கள், எலேக்ட்ரோன் போன்றவை அனைத்தும் இயல்பியல் உள்ளிட்ட அறிவியல் பிரிவுகளின் ஆராய்ச்சிக்கு உட்பட்டவை. அந்த அறிவியல்  வளர்ந்து கொண்டே வருகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் முக்கியமான பல கண்டுபிடிப்புக்கள் அறிவியல் துறையில் நிகழ்ந்தன.

எக்ஸ்ரே (1895)ரேடியோக்டிவிட்டி(1896),எலக்ட்ரான்கண்டிபிடிப்பு(1897)ரேடியம்கண்டிபிடிப்பு(1898), க்வாண்டம் கோட்பாடு(quantum thoery-1900). சார்பியல் தத்துவம் (theory of relativity-1905),வேதியல் பொருட்கள் ஒன்று மற்றொன்றாக மாற்ற முடியும் என்பது உள்ளிட்ட இந்த கண்டுபிடிப்புக்கள் அறிவியலில் பெரும் புரட்சிகர மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன. இந்த கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் தத்துவத்துறையில் இயக்கவியல் பொருள் முதல்வாத நிலைபாடுகளை மேலும் மேலும் உறுதி செய்தன. ஒப்பீட்டளவில் அளவில் பார்த்தால் இன்று இந்த ஆராய்ச்சிகள் மேலும் பிரம்மாண்டமான முன்னேற்றத்தை அடைந்துள்ளன.

இந்த அறிவியல் வளர்ச்சி  வரலாறும் லெனின் வாதிட்ட இயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் முக்கிய கோட்பாட்டை உறுதி செய்கின்றன. இயற்கை, பிரபஞ்சத்தில் இன்னும் அறியப்படாதவை எராளமாக இருக்கின்றன; ஆனால் அவை அனைத்தும் இன்னும் அறியப்படவில்லை என்பதுதானே தவிர அறியமுடியாதது என்று எதுவுமில்லை அனைத்தையும் அறிதல் சாத்தியம்.

அடுக்கடுக்கான தாகுதல்களை எதிர்கொண்டு

**லெனினது வாதங்கள் அனுபவாத விமர்சகர்களின் கருத்துக்கள் பலவற்றை முறியடித்து மார்க்சிய தத்துவத்தின் மேன்மையை உயர்த்திப் பிடித்தது. வில்லியம் ஆச்ட்வால்த் என்ற அறிவியலாளர் எதார்த்தம் என்பது பொருளோ சிந்தனையோ அல்ல;ஆற்றல் மட்டுமே உண்மையான எதார்த்தம் என்று வாதிட்டார்.இது கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் இரண்டையும் எதிர்ப்பதாகக் கூறும் அனுபவாத விமர்சனத் தத்துவத்திற்கு ஆதரவாக இருந்தது.

லெனின் பொருளில்லாமல் ஆற்றல் இருக்க முடியாது எனவும்,பொருள் இயக்கத்துடன் இணைந்திருக்கிறது என்பதையும் விளக்குகிறார். பொருள் இல்லாமல்இயக்கம்இல்லை; அதேபோன்று இயக்கம் இல்லாமல் பொருள் இல்லை. இரண்டும்ஒன்றிணைந்த முழுமையாகவே உள்ளது. வெறும் ஆற்றல்தான் என்பது இயல்பியலில் கருத்துமுதல்வாதத்தை புகுத்துவதாகும் என்று லெனின் எச்சரிக்கிறார்.

**நம்பிக்கை அடிப்படையில் அறிவைப் பெறமுடியும் என்று வாதிட்ட அனுபவவாத விமர்சனஅறிவுக் கோட்பாட்டையும்லெனின்கண்டித்தார்.இது மூடநம்பிக்கைகளுக்கு கொண்டு செல்லும் என்றார்.போகடனாவ் போன்றவர்கள் உண்மை பற்றிய கோட்பாடு என்ற பெயரில் இக்கருத்தை முன்வைதத்த போது, பாரம்பர்ய மார்க்சியத்தின் சமரசமற்ற நாத்திகத்தை அரித்து,மதப் பழைமைக்கு இடமளிக்கும் என்று எச்சரித்தார்.

**அனுபவவாத விமர்சகர்கள் ரஷ்ய மார்க்சிஸ்ட்டான பிளக்கனாவ் கருத்துக்களை தாக்கி வந்தனர்.அவர்களது தாக்குதல்களை எதிர்கொண்டு நூல் முழுவதும்பிளக்கனாவின்பொருள்முதல்வாதக்கருத்துக்களை ஆதரித்து எழுதினார் லெனின்.ஆனால் பிளக்கனாவின் ஒரு கருத்தோடு அவர் முரண்படுகின்றார்.

பிளக்கனாவ் புலன் உணர்வு என்பது புற எதார்த்தத்தின் ஒரு சித்திரம்தான் ( hieroglyph ) என்றும் புறஉலகு பற்றி ஒருவர் நிழல் போன்ற  ஒரு குறியீட்டை மட்டுமே பெற இயலும் என்றும் எழுதினார். லெனின் இதனைமறுத்தார். எதையும் முழுமையாக அறிய முடியாது என்ற அறியொணாக் கோட்பாட்டை பிளக்கனாவ் கூறுவதாக சாடினார். உண்மையான எதார்த்த உலகம், இயற்கை ஆகியன  மனித அறிவுக்கு எட்டாதவை என்ற கருத்தை பிளக்கனாவ் முன்வைக்கின்றார்.

மாறாக புலன் உணர்வுகள்   புறஉலகை பிரதியெடுத்தும், படமெடுத்தும், உண்மை எதார்த்தத்தை தரஇயலும் என்று வாதிட்டார்லெனின்.உலகை மாற்றுவதற்கு உலகை அறிந்திட வேண்டும்.இதற்கு உலகை அரிய முடியும் என்ற பொருள்முதல்வாதக் கோட்பாடு உதவுகிறது.

**ரஷ்ய போல்ஷ்விக்காக இருந்த லூனாசார்ஷியும் கூட தத்துவ குழப்பத்தில் ஆளாகி,”நாத்திக மதம்என்று உருவாக வேண்டுமெனவும்,அது உயர்ந்த மனித ஆன்மாவாகவிளங்கிடும் என்ற வகையில் கருத்துக்களை வெளியிட்டார். கடவுள்-கட்டும்இந்த வேலையை கடுமையாக சாடினார் லெனின். பாரம்பர்யமான மதமூட நம்பிக்கைகளுக்கு பதிலாக அந்த இடத்தில்அதேமாதிரியானநம்பிக்கைகளை புதிய வகையில் புகுத்தும் முயற்சி என்று விமர்சித்தார்.

**அனுபவவாத விமர்சகர்கள்  மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்திலும் தலையிட்டனர்.வரலாற்று நிகழ்வுகளை ஆராயும்போது உயிரியல்ரீதியான காரணங்கள், சமூகவியல்ரீதியான அம்சங்களை விவாதிக்க வேண்டும் என்றனர். மார்க்சியம் சமுக நிகழ்வுகளின் அனைத்துப்பரிமாணங்களையும்ஆராய்கிறது என்றாலும்,பொருளியல் அடிப்படையை வலியுறுத்துகிறது. இந்த அடிப்படையை நிராகரிப்பதாக அனுபவவாத விமர்சகர்கள் பார்வைஉள்ளது என்று குறிப்பிடுகிறார் லெனின்.

**சமுக உணர்வினை நிர்ணயிப்பதில் சமுக இருப்பு அல்லது எதார்த்தம் அடிப்படையானது என்பது மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதம்.இதை மறுக்கும் வகையில் போகடானாவ் இரண்டையும் ஒன்றுபடுத்துவதாக கூறி ஒரு ஒருமைக் கோட்பாட்டை உருவாக்கினார்.இதில் சமுக சிந்தனையை முதன்மையாக்கி அந்த சிந்தனையை நிர்ணயிப்பதில்,பொருளியல்அடிப்படைகளின் முதன்மைப் பங்கினை  போகடானாவ் கைவிட்டதாக லெனின் குற்றம் சாட்டினார்.

**அனுபவாத விமர்சகர்களின் தத்துவம், பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் என்ற இரண்டு எல்லைகளையெல்லாம் தாண்டிய நடுநிலையான தத்துவம் என்று தங்களது தத்துவத்தை அவர்கள் பாராட்டிக்கொண்டனர்.இந்தகருத்தினையும் லெனின் தாக்கினார்.ஒரு தத்துவவாதி நடுநிலை என்ற நிலையை தத்துவப் பிரச்னைகளில் எடுக்க முடியாது. ஏனென்றால்,பொருளா?கருத்தா?எதுஅடிப்படை என்பதுதான் தத்துவத்தின் அடிப்படைப் பிரச்னை.எது அடிப்படை என்ற நிலையெடுத்து தனது தத்துவத்தை விளக்கிட வேண்டும்.இதில் நடுநிலை இருக்க இயலாது.அப்படி இருப்பதாக கூறிக் கொள்வது ஏமாற்று வித்தை. மார்க்சியம் எந்த தயக்கமும் இல்லாமல் தனது சார்புத்தன்மையை அறிவிக்கிறது. பொருள்தான் அடிப்படை என்ற இயக்கவியல்பொருள்முதல்வாதத்தினைப் பற்றி நிற்கிறது.

லெனின் நூலில் எழுதுகிறார்:

துவக்கத்திலிருந்து கடைசி வரை மார்க்சும் எங்கெல்சும் தத்துவத்தில் சார்பு கொண்டவர்களாகவேஇருந்தனர்.பொருள்முதல்வாதத்திலிருந்து திசைமாறுகிற ஒவ்வொரு விலகலையும் அவர்களால் கூர்ந்து கண்டுபிடிக்க முடிந்தது. ஒவ்வொரு புதிய போக்குகள் உருவெடுக்கும் போதும் அது கருத்துமுதல் வாதத்திற்கும் மத விசுவாசத்திற்கும் எவ்வாறு இடமளித்து சலுகைகள்  கொடுக்கிறது என்பதை நுணுகி கண்டறிந்தனர்…..”

எனவே தத்துவம் என்பது  எதோ சில அறிவுஜீவிகளின் மயிர் பிளக்கும் வாதங்களுக்கான களமாக லெனின் பார்க்கவில்லை.பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவத்திற்கு எதிராக நடத்தும் வாழ்வா,சாவா போராட்டத்தின் மற்றொரு களமாகவே லெனின் தத்துவத்தை அணுகினார்.

லெனின் எழுதிய சில நூல்கள் மட்டுமே பரவலாக அறிமுகமாகியுள்ளன.அதிகம் அறியப்படாத நூல்கள் பல உள்ளன. அதிலும் குறிப்பாக தத்துவம் பற்றிய நூல்களை பலர் வாசிப்பதில்லை.அதற்கு முக்கிய காரணம்,அன்றாட அரசியல் தேவைகளுக்கு தத்துவம் உதவிடாது என்ற எண்ணம் பலரிடம் நீடிப்பதுதான்.ஆனால் எட்டு மாதங்கள் முழுமையாக செலவிட்டு இடைவிடாது எழுதி முடித்தபொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்புரட்சிகர அரசியலுக்கு உதவிகரமாக அமைந்தது.

அந்த நூலை எழுதி முடித்தவுடன் லெனின் அந்நூல் உடனே வெளியாக வேண்டும் என்று அவசரம் காட்டினார் என்பது அவரது கடிதங்களில் தெரிய வருகிறது. பதிப்பகத்தாருக்கு அவர் எழுதிய ஒரு கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

“…..(1909) ஏப்ரல் முதல் வாரத்தில் நூல் வெளிவர வேண்டும்;இதற்கான வகையில் எல்லா திருத்தங்களையும் செய்து முடித்துக்கொடுத்துவிட்டேன்…..இதில்  ஒரு நூல் பங்களிப்பு என்ற நோக்கம் மட்டுமல்லாது ;இந்நூல் வெளிவருவது, முக்கியமான அரசியல் விளைவுகளோடு தொடர்புடையது ……”

இவ்வளவு  அவசரமும் ஆர்வமும் அவர் கொண்டிருந்ததற்குக் காரணம், நூலின் கருத்துக்கள் பாட்டளி வர்க்கத்திடம் இயக்கத்தினரிடம்செல்லவேண்டுமென்பது தான். ரஷ்ய புரட்சிகர அரசியல் மாற்றத்திற்கு அந்த நூல் பயன்படும் என்று உறுதியாக நம்பினார்.

அவரதுநம்பிக்கை வீண்போகவில்லை . பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும்அன்றுஅந்தமாற்றத்திற்கான பணியை நிகழ்த்தியது. இந்நூல் வெளியான பிறகு ரஷ்யாவில் பரவலாக வாசிக்கப்பட்டது.இதையொட்டிய ரகசியக் வாசிப்புக் கூட்டங்கள், விவாதங்கள் நடைபெற்றன.ரஷ்யாவில் மட்டுமல்லாது பாரிஸ் நகரத்தில் தொழிலாளர் கூட்டங்கள் நடந்தன. நாடு கடத்தப்பட்டவர்கள், சிறையிலிருப்பவர்கள் என பலரிடம் நூல் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பல்வேறு தோழர்களின் கருத்தை இணையத்திலிருந்து எடுத்து தொகுத்துள்ளேன்.

+++++++++++++++++++++++++++++++

தொடரும் அடுத்த இதழில்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்