ரஷ்யாவில்1883ம் ஆண்டில், முதல் மார்க்சிய குழு தோற்றுவிக்கப்பட்டது. 1895ல் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 20 மார்க்சிய குழுக்கள் செயல்பட்டன. அரசியல் ரீதியாக வளர்ச்சியடைந்திருந்த தொழிலாளர்களுக்கு லெனின் இங்கு மார்க்சியத்தை போதித்தார். 1895ல் 20 மார்க்சிய குழுக்களையும் ஒன்றுபடுத்தி "தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்ட சங்கம்"என்பதனைத் தோற்றுவித்தார் லெனின். இந்தியாவில் 1920 தோன்றிய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுபட்ட கட்சியாக இல்லை அதேபோல் தனக்கான சமூக பணியை ஆற்றவேயில்லை இதுவரை பிளவுண்டு கிடப்பதை விட.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கி நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 1925 டிசம்பர் 26 ஆம் தேதி கான்பூரில் கூடிய மாநாட்டில் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவில் 99 வருடங்கள் கடந்த நெடிய பயணம் ஆனால் அதற்கான பணி நிறைவடையவில்லை.
கம்யூனிஸ்டுகளை தவிர வேறு எந்த அரசியல் இயக்கமும் இவ்வளவு அடக்குமுறைகளுக்கு ஆளானது இல்லை என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது. சட்டப் பூர்வமாக இயக்குவதற்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு அனுமதிக்கவில்லை. கட்சி தொடங்குவதற்கு முன்னாலேயே கடுமையான அடக்குமுறைகளை சந்தித்தது.
அவர்களின் தியாகம் சாதரணமானவை அல்ல. அவர்கள், 3ம் அகிலத்தின் இரண்டாம் காங்கிரஸின் வழிகாட்டுதலை கண்டுக் கொள்ளவிலை. அதன் தொடர்ச்சியே கேரளத்தில் 1957- ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைப் பிடித்தது அரசியல் முடிவுகளை எடுப்பதில் சரியான நிலை ஏற்படாத காரணத்தாலும் , உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஏற்பட்ட பிளவுகளாலும் 1964 இல் கட்சி பிரிவுபட்டது.
பிளவு பட்டவர்கள் மேலும் மேலும் பிளவு பட்டார்கள். எண்ணற்ற உயிரிழப்புக்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, தனிக் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானபோதிலும், விரைவிலேயே அது நவீன திரிபுவாதக் கட்சியாகச் சீரழிந்தது.
அதன் தொடர்ச்சியாக 1967ல் புரட்சியை நேசிப்போர் இவர்களிலிருந்து விலகி ஒரு கட்சியை கட்டினர் அவை நாடு தழுவியநக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு, திரிபுவாத – நவீன திரிபுவாதப் பாரம்பரியங்களை நிராகரித்து, உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உதயமாகி “நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர விவசாயிகளின் போராட்டங்கள் வெடித்தெழுந்ததை தோழர்கள் வாசித்திருப்பீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் இவற்றை வளர்த்தெடுப்பதும், தலைமை தாங்கி வழி நடத்துவதும் நம் கடமை. நாட்டின் பல்வேறு மூலைகளில், தனித்தனியே, மக்கள் போராட்டங்களின் பல்வேறு அரங்குகளில் கட்சிக்கு (மார்க்சிஸ்ட்) உள்ளேயும் வெளியேயும் செயலாற்றி வரும் சக்திகளெல்லாம் ஒன்று படவேண்டும். மார்க்சியம்-லெனினியம் – மா சே துங் சிந்தனையின் ஒளியில் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டும்".
தனது முதல் பிரகடனத்தில் ஒருங்கிணைப்புக் கமிட்டி நாட்டின் பல பகுதிகளிலும் வெடித்திருந்த விவசாயி களின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு புரட்சிகர கட்சியைக் கட்ட வேண்டும் என்று தீர்மானித்தது. ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சார்பில் ‘லிபரேஷன்’ என்ற ஆங்கில பத்திரிகை கொண்டு வரப்பட்டது. இந்தியா அரசியல் சுதந்திரம் பெறாத அரைக் காலனிய – அரை நிலப்பிரபுத்துவ நாடு; இந்தியப் புரட்சியின் இலக்குகள் அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம், தரகு அதிகார வர்க்க முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம்; இந்தியப் புரட்சி, விவசாயிகளின் விவசாயப் புரட்சியை சாராம்சமாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சி; புரட்சிக்கான பாதை நீண்டகால மக்கள் யுத்தப் பாதையே; தேர்தலை புரட்சிக் காலம் முழுவதும்புறக்கணிப்பது போன்ற அரசியல் அடிப்படை நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்புக் கமிட்டி அறிவித்தது. மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனையே சித்தாந்த வழிகாட்டி எனவும் பிரகடனம் செய்தது. நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் இன்றும் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரி களின் கட்சி – இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) – ஏப்ரல் 22, 1969 அன்று பிறப்பெடுத்தது. நக்சல்பாரி பகுதியைப் பொருத்தவரை, அங்கு எழுந்த அந்தப் பேரெழுச்சியை திருத்தல்வாதி களின் தலைமையிலான ஜக்கிய முன்னணி ஏவிய போலீசுத் தாக்குதலால் அப்போதைக்கு ஒடுக்கப்பட்டுவிட்டது. ஆனால் அதன் பிறகு இந்திய நாடு பழைய இந்திய நாடாக ஒருபோதும் நீடிக்க முடியவில்லை.
அதைத் தொடர்ந்து வந்த சங்கிலித் தொடரான விளைவுகளும் எதிர்விளைவு களும் அடங்கிய நிகழ்வுகள் அரசியல்களத்தை மட்டுமல்ல, நாட்டின் பல பகுதிகளிலும் சமூக, பண்பாட்டு சூழலையே குலுக்கி எடுத்துவிட்டது. ஆண்டாண்டு காலமாய் அநீதிக்கும் அக்கிரமங்களுக்கும் இலக்காகி இருக்கும் கூலி ஏழை உழவர்களின் உலகை – அதாவது இந்திய நாட்டின் இருள் சூழ்ந்த மூலை முடுக்குகளுக்கெல்லாம் வெவ்வேறு பகுதிகளில் நாட்டுப்புற ஏழை எளிய மக்கள் நடத்திய அடுத்தடுத்த ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் ஒளிபெறச் செய்தன.
நாடு முழுவதும் அரசு அலுவலர்கள் வேலைகளைத் துறந்து, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவசாயிகளை அணிதிரட்ட கிராமங்களை நோக்கிச் சென்றனர். 1970-களின் துவக்கத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் _ லெனினிஸ்ட்), மற்றும் சிறு குழுக்களின் தலைமையில் நக்சல்பாரி இயக்கம்உச்சநிலையை எட்டியது. ஆனால் போதிய ஆயுதங்களும், பயிற்சியும் இல்லாத உழவர் படைக் குழுக்களுக்கு எதிராக துணை இராணுவமும் போலீசுப் படையும் ஏவி விடப்பட்டபோது, அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டபோது, நக்சல்பாரி இயக்கம் பின்னடைவைச் சந்தித்தது. தலைமையின் செயல்முறை தவறுகளும் இதற்கு இன்னொரு காரணமாக அமைந்தது. நூற்றுக்கணக்கான நக்சல்பாரிகளும், அவர்களின் ஆதரவாளர் களும் போலீசின் சந்தேகத்துக்கு இலக்கான அப்பாவி இளைஞர்களும் “போலீசுடன் மோதல்” என்கிற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர். ஆந்திராவின் காடு-வயல்வெளிகளிலும், கல்கத்தா நகரத் தெருக்களிலும் குண்டு துளைத்த நக்சல்பாரிகளின் பிணங்களை விசிறியடித்து பயபீதி திட்டமிட்டு பரப்பப்பட்டது.
1973-க்குள் 32,000 நக்சல்பாரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளிலும் அடைக்கப் பட்டனர். அவர்களில் பலர்மீது கொலை, கொள்ளை மற்றும் சதி வழக்குகள் போடப்பட்டன. சிறைச்சாலைக்குள் போலீசு சித்திரவதைகளும், துப்பாக்கிச் சூடுகளும் ஒருவழக்கமாகி விட்டன. 1970-72 ஆகிய மூன்றாண்டுக்குள் குறைந்தது பல்வேறு துப்பாக்கிச் சூடுகள் நடத்தி பல நூறுபேரை ஆங்காங்கே நக்சல்பாரிகள் கொல்லப்பட்டனர். 1975-76 அவசர நிலை ஆட்சிக் காலத்திலும் இதே நிலை நீடித்தது. நக்சல்பாரிகளை ஒடுக்குவதற்கென்றே ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்புப் போலீசுப் படையும் சித்தரவதைக் கூடங்களும் உருவாக்கப்பட்டன.
நாடெங்கும் நரவேட்டை அரங்கேறியது. அதில் தலைமை குழுவும் தப்பவில்லை. பலர் தலைமறைவும் சிறைவாசமும் சாரூ கொல்லப்பட்டும் கட்சியின் அடிதளத்தை ஆளும் வர்க்க ஒழித்துக் கட்டியதோடு கட்சியின் தலைமை தன் தியாகத்தை செயலையும் அளப்பறிய செய்தளவு மார்க்சிய லெனினிய சிந்தாந்த வலிமை கொண்டிக்கவில்லை. அதன் வெளிபாடு இன்று நம் முன். அதனை பார்ப்போம்.
நாம் சீனாவின் அனுபவத்தை கூட சரியாக புரிந்து கொள்ளவில்லை ஏனெனில் அங்கு ஆயுதப்போராட்டம் துவக்கத்திலிருந்து போராட்டமாக விளங்கியதேயொழிய அது மட்டுமே ஒரே போராட்ட வடிவமாக இருக்கவில்லை. இங்கு நாம் ஆயுதம் தாங்கிய நடவடிக்கை மட்டுமே வர்க்கப் போராட்டமாக கருதிக் கொண்டு இவை மட்டுமின்றி மக்கள் படை சிறு குழுவிலிருந்து வளர்கிறது என்பதை காண மறுத்து; மக்கள் படையையும் கொரிலா குழுவையும் ஒன்றாக கருதி மக்கள் யுத்தத்தையும் கொரிலா போராட்டத்தையும் ஒன்றாக கருதி செயல்பட்டோம். கட்சியும் படையும் ஒன்றுதான் என்று கருதப்பட்டது ஒரு கொரில்லா நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அதனுடைய தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கட்சி உறுப்பினர்களாக கருதப்பட்டனர். உட்கட்சி முரண்பாடுகள் பகையாக கையாளப்பட்டன .(சீன க.க.யுத்த வரலாறு ஹோகான்சி) உண்மையை உணர்ந்துக் கொள்ளவில்லை.
மேலும் அன்றைய கட்சியின் மீதான விமர்சனம்
1). சர்வதேச சூழ்நிலை பற்றிய இந்த சகாப்தத்தின் தன்மை பற்றி மதிப்பீடு தவறு மூன்றாம் உலக யுத்தம் தொடங்கிவிட்டது என்ற கருத்து தவறு.
2). அகநிலை அம்சத்தை அதாவது மக்களின் தயார் நிலை அமைப்பு வலிமை இவற்றைப் புறக்கணித்து இடது தீவிரவாத வழியை கடைபிடித்தால் முதிர்ச்சியடையாத அறை கூவல்கள் முழக்கங்கள் வைத்தல்.
3).இந்தியாவின் சமச்சீரற்ற வளர்ச்சி பார்க்கா திருத்தல் நகர்புறங்களில் கொரில்லா போராட்டங்களை தொடுத்தல்.
4). அழித்து ஒழிப்பும் ஒரு போராட்ட வடிவம் என்பதற்கு மாறாக அதனை மட்டுமே ஒரே போராட்ட வடிவமாக கருதுதல் வெகுஜன போராட்டங்களையும் வெகுஜன அமைப்புகளை புறக்கணித்தல்.
5). தள பிரதேசங்களை உருவாக்கிய பின்னே ஐக்கிய முன்னணி என்ற கருத்து.
6). அமைப்பு வழியில் அராஜகம்.
இவ்வாறு இருந்தாலும் அமைப்புதுறையில் ஏற்பட்ட அரஜகவாதம் இன்றும் எங்கும்நீங்கமற உள்ளதை நாம் கண்கூடாக காண முடியும்.விமர்சிக்கும் முறையானது விமர்சனம் என்பது நோயை குணப்படுத்துவதாக இருக்க வேண்டுமே ஒழிய நோயாளியை கொல்வதாக இருக்கக்கூடாது. விமர்சனம் சுயவிமர்சனம் மூலம் கட்சியில் உள்ள தவறுகளை களைந்தெறிய போராட வேண்டும் என்று அடிக்கடி பேசப்படுகிறது. தவறு செய்யும் தோழர்கள் விஷயத்தில் அவர்களுக்கு அறிவுறுத்தி அவர்கள் தவறுகளை திருத்திக் கொள்ள உதவி செய்வதே முதன்மையானது. இதனை இங்குள்ள ஒருவரும் ஆம் குறுங்குழுவாதி களும் பின்பற்றுவதாக தெறியவில்லை.
தன் அணிகளை விமர்சித்து விட்டாலே பாய்ந்து வந்து வெறிநாய் போல் கடித்து குதறும் இவர்கள் உண்மையில் மார்க்சிய ஆசான்கள் முன்வைத்துள்ள விமர்சனம் சுயவிமர்சனம் வாசித்திருப்பார்களா என்பதே கேள்வியாக உள்ளது.
1972 சாரு கொல்லப்பட்ட பின்னர் இந்தியா தழுவிய கட்சி தன் பிரதேசம் தழுவிய கட்சிகளாக குழுக்களாக மாறின.
தமிழகத்தில் 1972 நவம்பரில் தஞ்சை மாவட்டத்தில் மாநில குழு கூட்டம் நடைபெற்றது அதில் கட்சியின் அரசியல் வழி மீது மாறுபட்ட கருத்துக்கள் தோன்றின. தோழர் ஏ.எம்.கே அழித்தொழிப்பு வழியையும் சாருவின் அதிகாரத்தை எதிர்த்தார். வெகுஜன மார்க்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தோழர்கள் பி.வி.எஸ், கனி, தமிழ்வாணன், தாத்தா பாண்டியன் ஆகியோர் அழித்தொழிப்பு மற்றும் புரட்சிகர போராட்டங்கள் உள்ளடக்கத்தையும் ஆதரித்தனர். இன்னொருபுறம் தோழர் தமிழரசன் அழித் தொழிப்பு ஒன்றே போராட்ட வடிவம் என்ற கருத்தைக் கொண்டிருந்தார் .
1973 ம் ஆண்டின் கடைசியில் மாநிலக் குழுவில் மூன்று விதமான போக்குகள் நிலவின.
1). கூட்ட குழு நிலையை தோழர்கள் தமிழரசன், தமிழ்வாணன், சின்னதுரை ஆகியோர் எடுத்தனர்.
2). அழித்தொழிப்பு நிலையை தோழர்கள்பழனியப்பன், தாத்தா பாண்டியன் எடுத்தனர்.
3). தோழர் கனி வலது சந்தர்ப்பவாத நிலையில் இருந்தார். 1974 தொடக்கத்தில் இருந்து மேற்கு பிராந்திய குழு என்ற பெயரில் இயங்கி வந்த தோழர்கள் ராமானுஜம், ராகவன் மாநில குழுவிற்கு கீழ் பட்ட பிராந்திய குழு என்று கூறி செயல்பட்டு வந்தனர்.
கூட்ட குழுவானது நிலப்பிரபுத்துவத்தை புரிந்துகொள்ளுதல் குறைபாடு இருந்தது நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை என்பதற்கு பதில் ஒவ்வொரு கிராமத்திலும் நிலபிரபு இருப்பதாக பார்த்தது . அதே நேரத்தில் எஸ் ஓ.சியானது இங்குள்ள சூழ்நிலையி லிருந்து ஆய்வு தொடங்காமல் வெளி நாட்டு வரலாற்று அனுபவத்தை அப்படியே பெயர்த்து பொருத்தும் இணைகோட்பாட்டு வாதம் மேலோங்கி இருந்தது. அவர்கள் இடைநிலை வர்க்கத்திற்கு ஜனநாயக ஐக்கிய முன்னணி ஜங்கர்பாணி போன்றவற்றை ரசிய சீனப்புரட்சி இவற்றிலிருந்த நிலைமைகளுடன் நேரடியாக ஒப்பிட்டுப் பார்த்து முடிவுகளை மேற்கொண்டனர்.
1977 க்கு முன் எஸ்.ஓ.சி எந்த வெகுஜன அமைப்பும் கொண்டிருக்கவில்லை. 1978 இறுதிவரையிலும் ஒன்லி பார்ம் தாங்கள் மட்டும்தான் கட்சி மற்றவையெல்லாம் குழுக்கள் என்று அணுகினர். 1980 களில் வீ.எம் அமைப்பு தன் நிலையை கைவிட்டு வலதுசாரி நிலைக்கு சரிந்து கொண்டிருந்தனர்.
1980 ஏப்ரல் 22 ல் தமிழ்நாடு மாநில குழு ஆந்திர மாநிலத்தில் குழுவும் இணைந்து மக்கள் யுத்தம் என்ற கட்சியை அமைத்தனர்.
இனி வாருங்கள் அவர்கள் நிலைப்பாடு என்னவென்று பார்ப்போம்.
த.நா.மா.லெ மற்றும் ம.க.இ.க இரண்டும் பல்வேறு போக்கில் சென்று இறுதியில் தி.க மற்றும் தி.மு.க வின் பின் நின்றுக் கொண்டு மார்க்சிய லெனினியத்தை பேசுவதை மட்டுமல்ல புரட்சியை கைவிட்டுவிட்டு அம்பேத்கர் பெரியார் இவர்களுக்கு வழிகாட்டியாக உள்ள பொழுது இவர்கள் என்ன புரட்சியாளர்கள் என்பது தெளிவு.இவை அடுத்து ம.ஜ.இ.க வின் உடைவு அதன் தலைமையின் அரஜவாதம்தான் என்பதனை ஏ.எம்.கே மீதான விமர்சனம் அண்மையில் வெளியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) (செங்கதிர்) தமிழ்நாடு வெளியிட்டுள்ளது.
ஆக இந்த குறுங்குழுவாதம் பற்றி பலமுறை சொல்லிவுள்ளவைதான் அதனை பேசுவதை விட இன்று நம்முன் உள்ள கடமையை பேசுவோம்.
ஆகவே அரசியல் பொருளாதார அறிவுள்ளதோடு மார்க்சிய சித்தாந்த அறிவுடன் கூடவே சிறந்த கம்யூனிச பண்புள்ளவர்கள் ஒரு சிலரே ஆயினும் அத்தகைய சிறந்த பண்புள்ளவர்கள் முதலில் ஒன்றுகூடி ஒரு சில குழுவாக உருவாக வேண்டும். அவர்கள் கம்யூனிசத்தை ஆதரிப்பவர்களை ஒன்றுதிரட்டி ஒரு புரட்சிகரமான கட்சியை உருவாக்க கூட்டாக முயற்சி செய்யவேண்டும். அதாவது ஆரம்பத்தில் முதலாளித்துவ வகைப்பட்ட தீய பண்புள்ளவர்களை சேர்த்துக்கொண்டு இயக்கத்தை துவங்கக் கூடாது. தோழர் ஸ்டாலின் சொல்வது போல உன்னதமான தலைவர்களைக் கொண்ட ஒரு சிறு குழுவைத்தான் முதலில் உருவாக்க வேண்டும். அத்தகைய உன்னத மானவர்கள்தான் ஒற்றுமைக்காகப் பாடுபடுவார்கள். அத்தகைய தலைவர்கள்தான் மக்களிடத்திலும் அணிகளிடத்திலுமுள்ள தீய பண்புகளை
களைவதற்கு பொறுமையாக வழிகாட்டுவார்கள். எனினும் இன்றைய கம்யூனிச இயக்கமானது பல குழுக்களாக பிளவுபட்டுள்ளது என்ற எதார்த்தத்தையும் நாம் புறக்கணிக்கக் கூடாது. ஆகவே இருக்கின்ற கம்யூனிச குழுக்களிலுள்ள இத்தகைய அன்னிய வர்க்க தீய பண்புகளை எதிர்த்து உறுதியாகப் போராடுவதற்கான கொள்கை வகுத்து அந்த குழுக்கள் செயல்பட வேண்டும். அன்னிய வர்க்க தீய பண்புகளை எதிர்த்துப் போராடிக்கொண்டே பிற குழுக்களுடன் ஒன்றுபட்டு இந்தியப் புரட்சிக்கான கொள்கை கோட்பாடு களிலுள்ள கருத்து வேற்றுமைகளை சிந்தாந்தப் போராட்டத்தின் மூலம் முடிவிற்கு கொண்டுவந்து ஒரு தெளிவான கருத்தொற்றுமைக்கு வரவேண்டும். அதன் அடிப்படையில் ஒரு கட்டுப்பாடான உறுதிமிக்க கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்க வேண்டும்.
விவாதிப்போம் தொடர்ந்து தோழர்களே....
No comments:
Post a Comment