எந்த போராட்டமும் உள்ள அமைப்புமுறையின் மாற்றம் புரட்சியின் மூலமாம சீர்திருத்தம் மூலமாக என்பதிலிருந்தும் ஆளும் வர்க்க எந்த உடமை சமூக தேவையை ஒட்டி நிகழ்கிறது என்பதிலிருந்தே ஒரு பொதுவுடமைவாதி புரிந்துக் கொள்வான்.
இந்தியாவில் ஆங்கிலேய காலனியாதிக்க ஒடுக்குமுறை அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் இருவேரு வர்க்க தேவையினை ஒட்டியே நடந்தேறியது என்றால் மிகையில்லையே... ஒருபுறம் அதுவரை இருந்த மன்னர்கள் நிலகிழார்கள் மற்றும் வசதிபடைத்த சீமான்கள் இவர்களிடையே தோன்றிய ஆங்கிலேய கல்வி பயின்ற புதிய ரக மேட்டுகுடிகள் கல்வியாலும் வசதியாலும் தங்களின் இருப்பை ஆங்கிலேய அரசின் பங்காளியாகவோ ஏவளாலியாக வாழும் நிலை இன்னொருபுறம் வாழ வழியற்ற அடிமைகளாக கூலிகளா அன்றாம் காட்சிகள் தன் வாழ்வாதர தேவைக்கு போரிட்டனர்... ஆக இங்கே வர்க்க ரீதியாக ஏதுமற்ற பிரிவினர் ஒருபக்கம் என்றால் உடைமை பறிக்கப்பட்ட இழந்தவர்களும் இவர்களுடன் வந்து சேரும் பொழுது அந்த போராட்ட களத்தில் சில முற்போக்கு பாத்திரம் ஆற்றுகின்றனர்.
பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கமும் அதற்கு எதிராக எழுந்த மிகப்பெரிய மக்கள் எழுச்சியான சுதந்திரப் போராட்டமும் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான காலமாகும். தற்கால இந்திய சமுதாயத்தில் நிலுவையிலுள்ள பல சிந்தனை ஓட்டங்கள் மேற்கண்ட காலத்தில் உருவானதுதான். இந்திய தேசிய போராட்டத்தின் துவக்கமும் 1885இல் அமைக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் உருவாக்கம் மற்றும் அதன் வளர்ச்சியோடு பொதுவாக இணைத்து பார்க்கப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நாடுதளுவிய அளவிலான ஒரு இயக்கம் உருவானதற்கு(இன்று நம்முனுள்ள பல்தேசங்களை கண்டுகொள்ளாமல் பொது எதிரியான ஆங்கிலேயனுக்கு ஒன்று திரண்ட நிலை) பல அரசியல் சமுதாய கலாச்சார மற்றும் பொருளாதார காரணங்கள் உள்ளன இதன் பின் அணியில் உருவானதே அதனை மார்க்சிய கண்ணோட்டத்தில் அணுக நமக்கான மார்க்சிய அறிவு அவசியம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பொதுக்கல்வி முறை துவங்கப்பட்டது. இதனால் ஆங்கிலக் கல்வி பெற்ற உயரடுக்கு இந்தியர்கள் உருவானார்கள். இவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தை சார்ந்தவர்களாகவும், உயர் சாதியை சார்ந்தவர்களாகவும் இருந்தனர். பெரும்பாலான அரசாங்க வேலைகள் முதல் பெருவியாபாரம் வரை ஆங்கிலேயர்களின் ஆதிக்கம்தான் நீடித்தது. இந்த நடுத்தர வர்க்க நுண்ணறிவு உள்ளவர்களின் எண்ணிக்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல மடங்காக உயர்ந்தது. அவர்கள் பெரும்பாலும் இந்தியா முழுவதிலும் இருந்த ராஜதானி தலைநகரங்களில் காணப்பட்டனர். இந்த நடுத்தர வர்க்க நுண்ணறிவு உள்ளவர்களின் அபிலாசைகள்தான் இந்திய தேசிய காங்கிரஸ் உருவானதற்கான பிரதான காரணம்.
அக்காலம் இந்திய முதலாளித்துவம் வலுபெறாத காலம். இந்திய முதலாளிகள் தன்னைத்தானே ஒரு வர்க்கமாக திரள வேண்டும் என்ற ஒரு யோசனை உருவான காலம். வரலாற்று அறிஞர் சுமித் சர்க்கார் கூறுகையில் ”1860களில் பிரிட்டிஷ் ஆட்சி நிறுவப்பட்ட பிறகு ஆங்கிலேய முதலாளிகளுக்கு தங்கள் வியாபாரத்தை நிறுவுவதற்கும் செயல்படுத்துவதற்கும் பணியாளர்கள் தேவைப்பட்டனர். இந்தத் தேவையை பூர்த்தி செய்தவர்கள்தான் அப்போது இருந்த இந்திய முதலாளிகள். 1920கள் வரை இந்திய முதலாளி வர்க்கம் பெரும்பாலும் தரகு முதலாளிகளாகதான் இருந்தார்கள். 1905ல்தான் முதன்முதலாக சுதேசி இயக்கம் வங்காளத்தில் நடைபெற்றபோது வெள்ளையர் பொருட்கள் புறக்கணிப்பு, இந்தியப் பொருட்கள், இந்திய கல்வி, இந்திய வியாபாரம் போன்ற முழக்கங்கள் ஒலித்தன. அப்போதுதான் இந்திய முதலாளிகள் முதல்முறையாக சுய உற்பத்தியினால் லாபம் கண்டனர்” என்கிறார்.
அந்த கட்ட போராட்ட வடிவங்களையும் அதன் நோக்கங்களையும் காணும் பொழுது நமக்கான பல்வேறு படிப்பினைகள் கிடைக்கும்.
கம்யூனிஸ்டுகளின் போராட்ட யுக்தி
உலகமெங்கும் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த நாடுகளிலெல்லாம், 1917இல் தோழர் லெனின் தலைமையில் நடந்த ரஷ்ய புரட்சி உத்வேகத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. இந்தியாவிலும் ரஷ்ய புரட்சியின் கருத்தோட்டங்களின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது. இந்தியாவில் பெரும்பான்மையாக இருந்த விவசாயத் தொழிலாளர்களுக்கும் நகர்ப்புற தொழிலாளர்களுக்கும், தங்களின் கோரிக்கைகளுக்காக போராடுவதற்கு ரஷ்யப் புரட்சி உத்வேகம் அளித்தது. தொழிற்சங்கங்கள் பிறந்தன. தொழிலாளர்களின் போராட்டங்கள் வளர்ந்தன. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவாயிற்று. நாடெங்கும் கட்சி கிளைகள் உருவாயின. கம்யூனிஸ்ட் தோழர்களின் செயல்பாடு வெகுஜனங்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு கண்டது. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்து செயல்பட்டனர். கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தின் தாக்கம் பொதுவெளியில் மட்டும் அல்லாமல், காங்கிரஸ் இயக்கத்திற்குள்ளேயும் வலுவடைந்தது. இளம் காங்கிரஸ்காரர்கள் மார்க்சிய சித்தாந்தத்தினால் ஈர்க்கப்பட்டனர். முதல்முறையாக அகில இந்திய அளவில் மாணவர் அமைப்பும், தொழிற்சங்கங்களும் உருவாகின. இப்படியான ஒரு அரசியல் சூழல் குறித்து இந்திய முதலாளி வர்க்கம் அச்சம் கொண்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில், காலனிய நாடுகள் குறித்த ஆரம்ப ஆய்வு அறிக்கையில் காலனிய நாடுகளில் நடைபெறும் போராட்டம் பின்தங்கிய நாடுகளில் ..... பெரும்பகுதி மக்கள்,,,, பூர்ஷ்வா முதலாளித்துவ உறவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும்.... மேலும், பெரும்பாலான நேரங்களில் ஒடுக்கப்பட்ட நாடுகளின் முதலாளி வர்க்கம், தேசியப் போராட்டத்தை ஆதரிக்கிறார்கள். அதேசமயம், அந்த வர்க்கம் அந்நிய முதலாளிகளுடனும் நல்லிணக்கத்தோடு செயல்படுகின்றன. அதாவது புரட்சிகர இயக்கங்களும், புரட்சிகர வர்க்கங்களும் வலுவடையும்போது உள்நாட்டு முதலாளிகளும் ஏகாதிபத்தியமும் ஒன்றிணைந்து எதிர்க்கும் என்றும் லெனின் எச்சரித்தார்.
ஆகவே, முதலாளித்துவ ஜனநாயக இயக்கத்திற்கு உள்ளே புரட்சிகர சக்திகளையும் சீர்திருத்தவாதிகளையும் வேறுபடுத்தி காட்ட வேண்டிய அவசியம் உள்ளது. தேசிய முதலாளிகளுக்கு அவர்களின் நாட்டு விடுதலைக்கான போராட்டத்தில் ஒரு முக்கிய பங்கு உள்ளது என்கிற வகையில், காலனிய நாடுகளின் முதலாளித்துவ விடுதலைப் போராட்டங்களை புரட்சிகரமானதாக உள்ளவரை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க வேண்டும் என்றார் லெனின்.
முதலாளிகளுக்கு சாதகமான செயல்திட்டம்
"காந்தி எந்த ஒரு போராட்டம் அறிவித்தாலும், இயக்கத்தின் தலைமை மற்றும் போக்கு குறித்து மிக கவனமாக இருப்பார். 1920இல் ஒத்துழையாமை இயக்கம் அறிவித்தார். தொழிலாளர்களும் பெருமளவில் பங்கெடுத்தார்கள். தொழிலாளர்களின் போராட்டம் குறிப்பிட்ட எல்லைவரை கவலை கொள்ளமாட்டார். ஆனால் தொழிலாளர்களின் போராட்டம் பெரும் தீயாக மாறி ஒட்டுமொத்த வர்க்க எதிரிகளான முதலாளிகளுக்கு எதிராக நடக்கும்போது, உடனடியாக ஏதாவது காரணத்தை காட்டி போராட்டத்தை வாபஸ் பெற்று விடுவார். இதுதான் 1921இல் பம்பாய் நகரில் நடைபெற்ற தொழிலாளர்கள் போராட்டத்தின்போதும் நடந்தது. எனவே, காந்தியினுடைய போராட்ட வடிவமும், நிலைபாடும் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கும் இந்திய முதலாளிகளுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக இருந்தது. அதனால்தான் தேசிய நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் காங்கிரஸ் இயக்கத்தோடு காந்தியோடு எந்தவிதமான தத்துவார்த்த ரீதியான, செயல்பாட்டு ரீதியான பிரச்சினையையும் இருந்ததில்லை. அப்படியே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் காங்கிரஸ் கமிட்டிக்கு உள்ளேயே விவாதித்து தனக்கு சாதகமான முடிவை எடுக்கும் அளவிற்கு முதலாளிகள் வலுவாக இருந்தனர். காந்தியின் வருகைக்குப் பிறகு தேசியப் போராட்டம் வெகுஜனப் போராட்டமாக உருவானது. ஆனால், அந்தப் போராட்டத்தின் உள்ளடக்கம், அதை வழிநடத்திய நுண்ணறிவு உள்ளவர்களின் சிந்தனையோட்டமும் குணாம்சமும் முதலாளித்துவத்திற்கு சாதகமாகவே இருந்தது” என்கிறார் பேராசிரியர் இர்பான் அபிப்.
முற்போக்கா சமரசமே!
இந்திய விடுதலை என்பது ஆங்கில ஏகபோக முதலாளித்து வர்க்கத்திற்கும், இந்திய நிலப் பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நடந்த ஒரு சமரசம் ஆகும். இந்திய முதலாளிகள் சுதந்திரத்திற்குப் பிறகும் நாட்டின் பொருளாதார, அரசியல், சமுதாய, கலாச்சார வளர்ச்சியை முதலாளித்துவப் பாதையிலேயே உருவாக்க விரும்பினர். அதற்காக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பாதையிலேயே நிலப்பிரபுத்துவத்தையும் முதலாளித்துவத்திற்கு முந்தைய நிறுவனங்களையும் அடிப்படையாகக் கொண்டு, அப்பொழுது மேலோங்கியிருந்த பிற்போக்கான ஆதிக்க வர்க்கங்களின் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்த நிலைமை உருவானதற்கான காரணத்தை அறிய சுதந்திர போராட்டத்தின் துவக்க காலங்களுக்கு செல்ல வேண்டும். “இந்திய விடுதலைப் போராட்டத்தின் தலைமை பூர்சுவா தேசியவாதிகளாக இருந்தமையால் அவர்களால் அவர்களின் வர்க்க நலனை மீறி பார்க்க இயலவில்லை. இத்தகைய நிலைப்பாடு அவர்களின் சமுதாய பொருளாதார தத்துவங்களை வழி நடத்தியது. சமுதாயத்தில் நிலவிய பல்வேறு பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு காணுவதில் திறன் அற்றவர்களாக இருந்ததுதான் இந்தியாவின் தேசிய பிரச்சினைகளுக்கு காரணம்.” என்கிறார் இ.எம்.எஸ்
இ.எம்.எஸ். சுதந்திரப் போராட்டத்தின் தலைவர்களின் சமுதாய சிந்தனையை மேலும் விளக்குகிறார். “சுதந்திர போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில் (துவக்ககால மதப்பழமைவாத) தீவிரவாத தேசியவாதம் என்பது, உண்மையில் ஒரு பழமைவாத சக்தி. அவர்கள் நாட்டினுடைய காலாவதியான அனைத்து சமுதாய கலாச்சார விஷயங்களையும் பாதுகாக்க முற்பட்டனர். நவீனத்துவத்தின் உந்து சக்தியாக இருக்க வேண்டியே முதலாளித்துவ வளர்ச்சி அன்றைய ஆட்சியாளர்களுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டது” என்கிறார் இ.எம்.எஸ்.
மேலும் மிதவாத தேசியவாதிகளுக்கும் தீவிரவாத தேசியவாதிகளுக்குமான வேறுபாட்டையும் சமூக கலாச்சார சிந்தனைப் போக்கையும் அவர் விளக்குகிறார். மிதவாதிகளை நவீனத்துவவாதிகள் என்றும், அவர்கள் இந்தியாவையும் பிரிட்டன் நாட்டைப்போல ஒரு முதலாளித்துவ நவீனத்துவப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணினர். ஆங்கிலேயர்கள் அதை செய்ய தவறுவதன் மீதே அவர்களது கோபமிருந்தது. தீவிரவாத தேசியவாதிகளுடன் ஒப்பிடுகையில் மிதவாதிகள் சமுதாய கலாச்சார அம்சத்தில் முற்போக்கானவர்களே. தீவிரவாத தேசியவாதிகள் நாட்டில் காலாவதியான அரசியல் மற்றும் சமூக கலாச்சார நிறுவனங்களை அன்னிய முதலாளித்துவத்திற்கு எதிராக பாதுகாத்தனர். தேசியப் போராட்டம் இந்த தீவிரவாத தேசியவாதிகளால் தலைமை தாங்கப்பட்டதால், பிற்போக்கான சமூக அம்சங்கள் மறையாமல் பாதுகாக்கப்பட்டன. இதுவே ஆங்கிலேயே ஏகபோக முதலாளித்துவத்திற்கு, இந்திய நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே சுதந்திர இந்தியாவில் உருவான சமரசத்திற்கான அடிப்படை என்கிறார் இ.எம்.எஸ்.
இதிலிருந்து அன்றைய தலைவர்கள் போராட்ட வடிவம் பற்றி நாம் புரிந்துக் கொள்வது போலவே நம்மிடையே உள்ள பல தலைவர்கள் காங்கிரஸ் வழி தோன்றல்களே என்றாம் மிகையில்ல அப்படி பட்ட சிலரை பற்றி தொடர்ந்து பேசவே இந்த முன்னுரை...
மேலும் நாம் தெளிவுப்பெற நமது ஆசான் எங்கெள்ஸின் கம்யூனிச கோட்பாடுகள் என்ற பகுதியிலிருந்து அப்படியே...
(1) கம்யூனிசம் என்றால் என்ன?
கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கம் ஆகும்.
(2) பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன?
பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாகத் தனது உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பமும் துன்பமும், வாழ்வும் சாவும், இதன் இருப்பும்கூட உழைப்புக்கான தேவையின் மீதே சார்ந்திருக்கின்றன. அதன் காரணமாக, மாறிக்கொண்டே இருக்கும் வணிக நிலைமையின் மீதும், கட்டுப்பாடற்ற வணிகப் போட்டியின் புரியாத போக்குகளின் மீதும் சார்ந்திருக்கின்றன. ஒரு சொல்லில் கூறுவதெனில், பாட்டாளி அல்லது பாட்டாளி வர்க்கம் என்பது 19-ஆம் நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கத்தைக் குறிக்கிறது
(16) தனியார் சொத்துடைமையை சமாதான முறையில் ஒழிப்பது சாத்தியமா?
தனியார் சொத்துடைமையைச் சமாதான முறையில் ஒழிப்பது நடைபெறக்கூடும் எனில் அது விரும்பத்தக்கதே. இதைக் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் எதிர்க்க மாட்டார்கள். சதித்திட்டங்கள் எல்லாம் பயனற்றவை என்பது மட்டுமின்றிக் கேடு விளைவிப்பவை என்பதையும் கம்யூனிஸ்டுகள் நன்றாக அறிவார்கள். புரட்சிகள் திட்டமிட்டோ தன்னிச்சையாகவோ உருவாக்கப்படுவதில்லை என்பதையும், மாறாக அவை எங்கும் எப்போதும், தனிப்பட்ட கட்சிகள் மற்றும் மொத்த வர்க்கங்களின் விருப்பம் அல்லது கட்டளையைச் சாராத முற்றிலும் சுதந்திரமான புற நிகழ்வுகளின் இன்றியமையாத விளைவே என்பதையும் அவர்கள் மிக நன்றாகவே அறிவார்கள்.
ஆனால், அதே வேளையில், ஏறத்தாழ எல்லா நாகரிகமடைந்த நாடுகளிலும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி பலவந்தமாக அடக்கப்படுகிறது என்பதையும், இந்த வகையில் கம்யூனிசத்தின் எதிராளிகள் தங்களின் முழுப் பலத்தோடு ஒரு புரட்சி உருவாவதற்கே பாடுபடுகிறார்கள் என்பதையும் கம்யூனிஸ்டுகள் காண்கிறார்கள். ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் இறுதியில் ஒரு புரட்சியை நோக்கித் தள்ளப்படுமானால், கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள், பாட்டாளிகளின் நலன்களைப் சொல்மூலம் பாதுகாத்து வருவதைப்போல் செயல்மூலமும் பாதுகாத்து நிற்போம்.
இன்னும் பின்னர்
No comments:
Post a Comment