சாதி தீண்டாமைக்கு எதிராக நடத்திய போராட்டம்

 இன்று அடையாள அரசியலுக்குள் புரட்சிகர கட்சிகளே அடைபட்டுகிடக்கும் பொழுது. அன்று சாதியெனும் கட்டமைப்புக்கு சம்மட்டி அடி கொடுத்தவர் பாலன். உன்னதமான தனது வர்க்க அரசியல் மூலம் சாதிகடந்து உழைக்கும் மக்களை ஓரணியில் இணைத்துக் காட்டியவர் பாலன். அன்று அங்கு ஆண்டாண்டு காலமாய் கட்டிக் காக்கப்பட்டு வந்த சாதியம் தகர்க்கப்பட்டது .ஒரு புரட்சிகர இயக்கம் மக்கள் பாதை நடைமுறைப்படுத்தி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது மக்கள் ஜாதியை கடந்து ஒன்றுபடுகிறார்கள் என்பது அன்றைய களநிலவரம். அன்றைய தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் இன்றும் சாட்சிகளாக உள்ளன.

இன்று கம்யூனிஸ்ட்டுகளுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருக்கும் NGOகள் புரிந்துக் கொண்டேதான் செயல்புரிகிறார்கள் அவர்களின் பணி உழைக்கும் ஏழை எளிய மக்கள் உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைந்து விடக்கூடாது அவர்களை சாதிகளாக பிரித்து வைத்து மோதவைபதற்காக இவர்கள் பயிற்றுவிக்க பட்டவர்கள் இவர்களின் பணி தவறியும் வர்க்க ஒற்றுமை ஏற்பட்டு விட கூடாது அதனை இந்த பகுதியை வாசித்தலே புரிந்துக் கொள்வீர்.

1980ஆம் ஆண்டுகளில் அன்றைக்கிருந்த மக்கள் திரள் அமைப்பு(RYL) என்று அழைக்கப்பட்ட நக்சல்பாரிகட்சியின் தலைமறைவு அமைப்பால் வழிநடத்தப்பட்டவீரமிகுபோராட்டங்கள் மோதல்கள் என்ற பெயரால் பல்வேறு முன்னணி தோழர்கள் கொன்றொழிக்கபட்டார்கள். அன்றைய தமிழக ஆட்சியாளர்களால் இருண்ட பகுதி என வர்ணிக்கப்பட்ட தர்மபுரி பகுதியில் ஏழை எளிய விவசாய மக்கள் நிலபிரபுத்துவ கொடுங்கோலர்கள் கந்துவட்டி கட்டப்பஞ்சாயத்து போன்ற கொடுமைகளால் கஷ்டப்பட்டார்கள் நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மைக்கு எதிராக தோழர்பாலன் தலைமையிலான வாலிபர் சங்கம் மக்களை திரட்டி எவ்வாறு போராடியது. மக்கள் திரள் போராட்டங்களால் விழிபிதுங்கி நின்ற ஆட்சியாளர்கள் பாலன் மற்றும் முன்னணி தோழர்களை கொன்றுவிட்டால் புரட்சியை நசுக்கி விடலாம் என்று எண்ணி பல்வேறு சூழ்ச்சிகளில் முன்னணி தோழர்களை கொன்றனர். 

அன்று அங்கு ஆண்டாண்டு காலமாய் கட்டிக் காக்கப்பட்டு வந்த சாதியம் தகர்க்கப்பட்டதுஒரு புரட்சிகர இயக்கம் மக்கள் பாதை நடைமுறைப்படுத்தி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது மக்கள் ஜாதியை கடந்து ஒன்றுபடுகிறார்கள் என்பது அன்றைய களநிலவரம். அன்றைய தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் இன்றும் சாட்சிகளாக உள்ளன. தர்மபுரி மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமைக்கு எதிராகவும் தனிக்குவளை வைப்பதற்கு எதிராகவும் புரட்சிகரக் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுத்த போராட்டங்கள் வர்க்க ஒற்றுமையை அனைத்து சாதியினருக்கும் இடையில் ஏற்படுத்தியது. ஆனால் அன்று கொடிகட்ட பறந்த புரட்சிகர காலத்தோடு ஒப்பிடும் போது இன்றைய நாசகார கொடூரமான காலத்தை எவ்வாறு சகித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது நம்முன் உள்ள கேள்வியாக இருக்கிறது.

நக்சல்பாரி அமைப்புகளை அரசுமட்டுமா அழித்தது?

இன்றுள்ள சாதிகட்சிகளின் பங்களிப்பு இல்லையோ? போராட்டத்திலே சாவதெல்லாம் நம்ம இளைஞர்கள் தலைமையிலிருந்து கொண்டு பெயர் வாங்குவது, பேட்டிக் கொடுப்பதெல்லாம் மேல்சாதி இந்துக்கள் என்று பரஸ்பர குற்றம் சுமத்தி தத்தமது சாதி இளைஞர்களுக்கு நக்சல்பாரிகள் மீது சந்தேகத்தையும், அவநம்பிக்கையையும் உண்டு பன்னியவர்கள் இந்த சாதி கட்சிகளின் தலைவர்கள் இல்லையோ?

நக்சல்பாரிகளுக்குப்_பயந்துஎங்ககிட்டஎந்_வம்புதும்பும்இல்லாம_இருந்தாங்க. அந்தக்கட்சி காலப்போக்கில இல்லாமல் போனதும், இளவரசன் கல்யாணத்தை சாக்கா வெச்சு இப்படிப் பண்ணிட்டாங்கஇது தருமபுரி தாக்குதல் பற்றி ஆனந்த விகடன் வெளியிட்டிருந்த கட்டுரையில் தாக்குதலுக்கு ஆளான அண்ணாநகரைச் சேர்ந்த வசந்தா என்ற பெண் அப்போது கூறியிருந்தது.

நக்சல்பாரி இயக்கம் ஒடுக்கப்பட்டதனால்தான் சாதிய அமைப்புகள் தலையெடுத்திருக்கின்றனஎன்று அச்சம்பவத்தை ஒட்டி பல பத்திரிகைகளும் அப்போது எழுதியிருந்தன. இன்றைய நிலையை பாருங்கள். நக்சல்பாரிகள் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? அன்று தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடந்தால் அதை எதிர்த்து போராடுபவர்களில் ஆதிக்க சாதியை சார்ந்த வாட்டாக்குடி இரணியன்கள், சீனிவாசராவுகள் போன்ற தலைவர்களும் தோழர்களும் தான் முன்ணனியில் நிற்ப்பார்கள்என்றைக்குமே அனைத்து சாதியிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி, உயர்சாதி திமிர் ஒழித்து, உழைக்கும் மக்களாய் அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் இழந்த உரிமைகளை பெறமுடியும் என அப்போது அவர்களுக்கு தெரிந்திருந்தது. அதை வென்றும் காட்டினார்கள். நக்சல்பாரிகள்தான் உழைக்கும் மக்களின் நண்பர்கள், உண்மையான சாதி எதிர்ப்பாளர்கள் என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தததால் அவர்கள் புரட்சியாளர்களை நம்பினார்கள். நக்சல்பாரி இயக்கத்தில் திரண்டார்கள். பிறப்பால் தலித்தாகவே இருந்தாலும், பிழைப்புவாதிகளை நிராகரித்தார்கள். நக்சல்பாரிகளும் அவர்களை அப்போது காப்பாற்றினார்கள். இன்று பாருங்கள். நிலைமை அப்படியே தலைகீழ். ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு கட்சி. தருமபுரியில் மட்டுமல்ல; தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் எந்த ஊரிலும் ஏன் கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு செலுத்துவதில்லை? அந்த இடத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனுங்களும், அடையாள அரசியலை உயர்த்தி பிடிக்கும் அமைப்புகளும் ஒரு பக்கம் என்றால், இன்னொறுபுறம் பாமக போன்ற சாதிவெறி கட்சியும் தான் இருக்கின்றன. ஏனென்றால் எதை, எப்போது, யாரை எப்படி ஒடுக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அரசுக்கு தெரியும். தொண்டு நிறுவனங்களுக்கு தெரியும். வர்க்கமாக தவறியும் ஒன்றிணையாமல் இருக்க சாதிவெறி அமைக்களுக்கு தெரியும். ஒடுக்கப்பட்ட மக்கள் வர்க்க உணர்வு கொஞ்சம் விழிப்புணர்வு பெறுகிறார்களா உடனே அவர்களை ஒருபுறம்ஆண்ட பரம்பரை பெருமை கொள்ளவை, ஒவ்வொருத்தரையும் தனக்கு கீழ் இருப்பவர்களை ஒடுக்கவை. சண்டை மூட்டு. குடிசையை கொழுத்து, பின் கொஞ்சம் சலுகை கொடு. தேவையற்ற தத்துவங்களை,அமைப்புகளை தலையில் ஏற்றிவிடு. தேர்தல் அரசியலுக்குள் இழு. மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு செல்.இதுதான் 1980களில் நக்சல்பாரிகள் பின்னடவை சந்தித்ததிலிருந்து இப்போதுவரை தமிழகத்தில் நடக்கும் நடைமுறையாக இருக்கிறது. இதில் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட வர்க்க மக்களின் மத்தியில் இயங்கி கொண்டிருக்கும் பல்வேறு அமைப்புகள், அவர்கள் அவர்களது எல்லைக்குள்தான் இயங்க முடியும் ஆதிக்க சாதி அமைப்புகளுக்கு மரண பயத்தை உண்டாக்காது. அன்று அங்கு ஆண்டாண்டு காலமாய் கட்டிக் காக்கப்பட்டு வரும் சாதியம் தகர்க்கப்பட்டது .ஒரு புரட்சிகர இயக்கம் மக்கள் பாதை நடைமுறைப்படுத்தி வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது மக்கள் ஜாதியை கடந்து ஒன்றுபடுகிறார்கள் என்பது அன்றைய களநிலவரம். அன்றைய தர்மபுரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் என்றும் சாட்சிகளாக உள்ளன

அதேபோன்று 1976 ல் தோழர் சீராளன் அவர்கள் வடஆற்காடு மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் பல்வேறு போராட்டங்களை எடுத்து நடத்தி வந்தார். அவர் நிலப்பிரச்சினை, நிலப்பரப்பு ரவுடிகள் பஞ்சாப் ஆதிக்கத்துக்கு எதிராக, தீண்டாமையை எதிர்த்துப் பிரச்சாரம், நிலப்பிரபுக்களின் அடியாட்களுடன் மோதல் இவ்வாறு பல போராட்டங்களை கண்டார்.
பொன்னேரி பகுதியில் இருவேறு ஜாதிகள் இடையில் உள்ள மக்களை ஒன்றிணைத்து பட்டியலின மக்கள் வீடுகளில் உணவு வருந்தவும் அவர்களுடன் ஒன்றுபட்டு போராடுவதும் அவர் நடைமுறை ஆக்கினார். நிலப்பிரபுக்களும் ஆதிக்கமும் போலீஸின் அடாவடியும் அங்கே ஒடுக்கப்பட்டது இதை கண்ட இந்திய ஆளும் வர்க்கம் சீராளனை 1976 ல் கொன்றது. கூட்டக் குழுவின் வழிகாட்டுதலில் செயல்பட்ட சீராளன் கொல்லப்பட்டது அப்பகுதி மக்களியடையே பெரும் தாக்கத்தை உண்டாகியது.

தர்மபுரி மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமைக்கு எதிராகவும் தனிக்குவளை வைப்பதற்கு எதிராகவும் புரட்சிகரக் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுத்த போராட்டங்கள் வர்க்க ஒற்றுமையை அனைத்துசாதியினருக்கும் இடையில் ஏற்படுத்தியது. ஆனால் அன்று கொடிகட்ட பறந்த புரட்சிகர காலத்தோடு ஒப்பிடும் போது இன்றைய நாசகார கொடூரமான காலத்தை எவ்வாறு சகித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது நம்முன் உள்ள கேள்வியாக இருக்கிறது. தமிழகத்தில் இன்று அடையாள அரசியலுக்குள் புரட்சிகர கட்சிகளே அடைபட்டுகிடக்கும் பொழுது. அன்று சாதியெனும் கட்டமைப்புக்கு சம்மட்டி அடி கொடுத்தவர் பாலன். உன்னதமான தனது வர்க்க அரசியல் மூலம் சாதிகடந்து உழைக்கும் மக்களை ஓரணியில் இணைத்துக் காட்டியவர் பாலன். நச்சல்பாரியின் விதைநெல்லாய் விளங்கும் தோழர் அப்பு பாலன் அவர்களின் படிப்பினை பெறத்தக்க வாழ்வானது இன்றைக்கும் புரட்சிகர இளம் தலைமுறைக்கு படிப்பினை தரத்தக்கதாகும்.தன்னார்வ தொண்டு நிறுவனுங்களும், அடையாள அரசியலை உயர்த்தி பிடிக்கும் அமைப்புகளும், பாமக போன்ற சாதிவெறி கட்சிகளும் தான் இருக்கின்றன. ஏனென்றால் எதை, எப்போது, யாரை எப்படி ஒடுக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அரசுக்கு தெரியும். தொண்டு நிறுவனங்களுக்கு தெரியும். சாதிவெறி அமைக்களுக்கு தெரியும். ஒடுக்கப்பட்ட மக்கள் கொஞ்சம் விழிப்புணர்வு பெறுகிறார்களா உடனே அவர்களை ஆண்ட பரம்பரை பெருமை கொள்ள வை, ஒவ்வொருத்தரையும் தனக்கு கீழ் இருப்பவர்களை ஒடுக்க வை. சண்டை மூட்டு. குடிசையை கொழுத்து, பின் கொஞ்சம் சலுகை கொடு. தேவையற்ற தத்துவங்களை, அமைப்புகளை தலையில் ஏற்றிவிடு. தேர்தல் அரசியலுக்குள் இழு. மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு செல்.இதுதான் 1980களில் நக்சல்பாரிகள் பின்னடவை சந்தித்ததிலிருந்து இப்போதுவரை தமிழகத்தில் நடக்கும் நடைமுறையாக இருக்கிறது.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்