மார்க்சிய வாதிகளுகிடையிலேயான பணி-5-சிபி

 மார்க்சிய வாதிகளுகிடையிலேயான பணி-5

நம்மிடைய இடதுசாரி என்போரின் நிலையினை கணக்கில் கொண்டெ இந்தப் பகுதியை தொடர்சியாக எழுதிக் கொண்டுள்ளேன். இதில் எனது நோக்கம் யாரையும் தாக்குவதல்ல ஒரு சரியான பாட்டாளி வர்க்க சிந்தனை முறை என்ன? பாட்டாளி வர்க்க கட்சியின் பணி என்ன? இன்று இந்தியாவில் CPI, CPM, CPI(ML) என்ற மூன்று பிரிவாக இருந்தாலும் அவர்களின் நோக்கம் என்ன? அவர்கள் பிரிந்துக் கிடப்பது ஏன்? இப்படி பல கேள்விகளை நான் அடுக்கி கொண்டே இருக்க இந்த பகுதியை எழுத தொடங்கவில்லை ஒரு சரியான பொதுவுடமைகட்சி ஆம் பாட்டாளி வர்க்க கட்சி பற்றி நமது ஆசான்களின் முன்மொழிவுகளை நாம் உள்வாங்கமையே இது போன்ற பல்வேறு போக்குகளுக்கு காரணம் எவ்வெவ்வை என்பதனையும்  நான் இந்த தொடரில் அவை  தோடுவோமே!?

மார்க்சியம் அனுபவித்துவரும் நெருக்கடியின் அழத்தைப்பற்றியும் இந்த காலப் பகுதியில் நிலவும் ஒட்டுமொத்தமான சமுதாய பொருளாதார நிலைமைகளுக்கும் அந்த நெருக்கடிக்கும்இடையே உள்ள சம்பவத்தைப் பற்றியும் இந்த நெருக்கடி எழுப்பும் பிரச்சினைகளை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. வாய் சவடால் அடித்து அவற்றை அகற்றி விட நடக்கின்ற முயற்சிகள் போல் தீங்கிழைக்கும் படியான கோட்பாட்டற்ற செய்கை வேறு எதுவும் இருக்க முடியாது.

நெருக்கடியின் ஆழத்தையும் அதை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்திருக்கும் எல்லா மார்க்சியவாதிகளையும் மார்க்சியத்தின் தத்துவ அடிப்படைகள் ஆதார வரையறுப்பு களையும் பாதுகாப்பாக அணிதிரட்டுவதை காட்டிலும் முக்கியமானது வேறு எதுவும் இருக்க முடியாது என்பேன்.

இன்று மார்க்சியவாதிகளிடையே முதலாளித்துவ செல்வாக்கு பரவி உள்ளதால் எதிர் எதிரான திசைகளிலிருந்து மார்க்சியம் திரித்து புரட்டப்படுகின்றன.

ஆக நமது மார்க்சிய கண்ணோட்டத்தை சரிபடுத்த நமது ஆசான் லெனினிடம் செல்வோம்.

உலகின் முதல் சோசலிசக் குடியரசை அமைத்த பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன. ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல்ஆட்சியைத் தூக்கியெறிந்த தோடு முதலாளித்துவ சுரண்டலையும் துடைத்தெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியை அமைத்தவர் தோழர் லெனின். மார்க்சிய சித்தாந்தத்தை ரசிய நிலைமைகளுக்குஏற்றவாறு பருண்மையாகப் பிரயோகித்து புரட்சியை சாதித்தது மட்டுமல்லாது, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை இயங்கியல்பூர்வமாக அன்றைய நிலைமை களையொட்டி வரையறுத்தவர் தோழர் லெனின். அவரின் அடிவொற்றி இன்றுள்ள நிலைமைகளை புரிந்துக் கொள்ள முயற்சிப்போம்.

நமது நாட்டில் கம்யூனிசத்திற்கு ஆளுக்கு ஒரு வகையாக விளக்கம் கொடுத்து மக்களை குழப்புகின்றனர். ஆக மக்கள் கம்யூனிசத்தின் பக்கம் வர தயங்குகின்றனர். நமது கடந்த கால சரி தவறுகளை விமர்சன பூர்வமாக அணுக வேண்டியது இடதுசாரிகளின் நோக்கமாக இருக்க வேண்டும்.

சுய விமர்சனத்தை மேற்கொள்வதும் எவ்வித அவசியமற்ற பயங்களை சந்தேகங்களை ஆகியவை போலிமதிப்பு உணர்வும் இல்லாமல் புரட்சியை வெற்றிகரமாக ஆக்குவதற்கு தேவையான படிப்பினை பெறுவது முதன்மையான கடமையாக உள்ளன. இந்தக் கடமையை வெற்றிகரமாக செய்து முடிப்பது மூலம் மட்டுமே கட்சிக்கு அதனை ன்று நெருங்கி தாக்கிக் கொண்டிருக்கும் தத்துவார்த்த தவறுகள் குழப்பங்கள் ஆகியவற்றிலிருந்து அது விடுபட்டு வெளி வருவதற்கும் நாம் உதவி செய்ய முடியும். ஸ்தாபனத்தை பற்றிய லெனின்ய அடிப்படைகளுக்கு உட்பட்டு ஒரு பலமான கட்சியை கட்டவும் புரட்சிக்கான முன்னெடுத்துச் செல்ல சரியான கட்சியை நோக்கி நடை போட வேண்டாமா?.

இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூன்று வழிகளுமே நட்டாற்றில் விடுபட்டது போல் அல்லவா உள்ளது? தேர்தல் பாதையும், குறுங்குழுவாத பாதையும் ஒரு புரட்சிக்கு வழியல்ல என்பதை அவரவர்கள் சார்ந்து நிற்கும் அமைப்பிலிருந்து புரிந்துக் கொள்ளவில்லையா? அதற்கு லெனினின் பார்வை வேண்டும் அவை நமது நாட்டின் சூழலுகேற்ப்ப பொருத்தி செயல்முறையாக்க வேண்டாமோ தோழர்களே?

கட்சி என்பது ஒரு போராடும் அமைப்பு, முன்னணிப் படையானது வெகுஜன திரளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்க வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் அது தோல்விஅடையநேரிடும். மாவோ தலைமை யில் நடந்த பாட்டாளிவர்க்க கலாச்சாரப் புரட்சியின் போது மாவோ சிந்தனைகளுடன் மக்கள் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டார்கள் அதாவது அதிகாரத்தை கைப்பற்றிய பிறகும்கூட நாமும் மக்கள் திரள் வழியில் தான் செல்ல வேண்டும் .

அவரே சொல்கிறார் நான் சங்காய் நகரத்தில் இருந்தேன் அப்போது நாங்கள் பல கூட்டங்களை நடத்தினோம் நாங்கள் சிறிய எண்ணிக்கையான முன்னணி படையினர் அல்லது ஊழியர்களை திரட்டினோம். நாங்கள் போராட்டத்தின்போது மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் திடீரென தோன்றி துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்வோம். கூட்டம் துவக்கத்தில் கொஞ்சம் பேர் மக்கள் இருப்பார்கள் ஆனால் இறுதியில் சிறிய முன்னணி படை தான் மிஞ்சும், எங்களை ஆளும் வர்க்கம் அடக்க முயன்றபோது நாங்கள் சிறு குழுக்களை அமைத்து அவர்களை தீர்த்துக்கட்டினோம். இவை கொஞ்சம் காலம் தான் செயல்பட்டது எங்களுக்கு பின்னடைவுதான் கொடுத்தது. இந்த நடைமுறை.(1927 காங்செங் தலைமையில் ஏற்பட்ட தோல்வியை குறிப்பிடுகிறார்).

இந்த நிலையிலிருந்து CPI(ML) நிலைப்பாட்டை அறிவோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியானது அன்றைய காலத் தேவைக்காக உருவாக்கப்பட்டது மற்றும் கட்டப்பட்டதும் சரியானதாக தெரிந்தாலும் உண்மையான நாட்டின் சமூக பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கட்சி கட்டப்படவில்லை. சீனாவில் போல இந்திய நிலைகளையும் அனுமானித்து அவற்றை பெயர்த்தெடுத்து இங்கேபொருத்தியதுதவறானதாக காலத்தால் புரிய வைத்துள்ளது. தோழர் சாரு மீதான விமர்சனம் கீழ்வருவன.(1973 SELF CRITICAL REPORT CPI (ML) PW COC).

1). சர்வதேச சூழ்நிலை பற்றிய இந்த சகாப்தத்தின் தன்மை பற்றி மதிப்பீடு தவறு மூன்றாம் உலக யுத்தம் தொடங்கிவிட்டது என்ற கருத்து தவறு.

2). அகநிலை அம்சத்தை அதாவது மக்களின் தயார்நிலை அமைப்பு வலிமை இவற்றைப் புறக்கணித்து இடது தீவிரவாத வழியைக் கடைபிடித்தால் முதிர்ச்சியடையாத அறை கூவல்கள் முழக்கங்கள் வைத்தல்.

3).இந்தியாவின் சமச்சீரற்ற வளர்ச்சியைப் பார்க்காதிருத்தல் நகர்புறங்களில் கொரில்லா போராட்டங்களை தொடுத்தல்.

4). அழித்து ஒழிப்பு மட்டுமே ஒரே போராட்ட வடிவமாககருதுதல் வெகுஜன போராட்டங் களையும் வெகுஜன அமைப்புகளையும் புறக்கணித்தல்.

5). தள பிரதேசங்களை உருவாக்கிய பின்னே ஐக்கிய முன்னணி என்ற கருத்து.

6). அமைப்பு வழியில் அராஜகம்.

இந்த அறிக்கைதான் செழுமைப்படுத்தபட்டு பின் மக்கள் யுத்தப் பிரிவின் 10 ஆண்டுகால அனுபவம் தொகுப்பாக உருப்பெற்றது.

நாம் சீனாவின் அனுபவத்தை கூட சரியாக புரிந்து கொள்ளவில்லை ஏனெனில் அங்கு ஆயுதப்போராட்டம் துவக்கத்திலிருந்து போராட்டமாக விளங்கியதேயொழிய அது மட்டுமே ஒரே போராட்ட வடிவமாக இருக்கவில்லை. இங்கு நாம் ஆயுதம் தாங்கிய நடவடிக்கை மட்டுமே வர்க்கப் போராட்டமாக கருதிக் கொண்டு இவை மட்டுமின்றி மக்கள் படை சிறு குழுவிலிருந்து வளர்கிறது என்பதை காண மறுத்து; மக்கள் படையையும் கொரில்லா குழுவையும் ஒன்றாக கருதி மக்கள் யுத்தத்தையும் கொரில்லா போராட்டத்தையும் ஒன்றாக கருதி செயல்பட்டது. கட்சியும் படையும் ஒன்றுதான் என்று கருதப்பட்டது ஒரு கொரில்லா நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் அதனுடைய தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கட்சி உறுப்பினர்களாக கருதப்பட்டனர். உட்கட்சி முரண்பாடுகள் பகையாக கையாளப்பட்டன .(சீன க..யுத்த வரலாறு ஹோகான்சி) உண்மையை உணர்ந்துக் கொள்ளவில்லை.(பின்னர் விரிவாக பார்ப்போம்).

இனி பாராளுமன்றத்தை கட்டியழும் இடதுசாரிகளின் நிலைப்பாடும் நமது ஆசான்களின் நிலைப்பாடும் ஒப்பிட்டு பார்ப்போம்.

பாராளுமன்றம் வரலாற்று வழியில் தோன்றுவதாகும், முதலாளித்துவப் பாராளுமன்றத்தைக் கலைப்பதற்குப் போதுமானபலமுடையோராகும் வரை நம்மால் அதை அகற்றிவிட முடியாது. குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளில் முதலாளித்துவப் பாராளுமன்றத்தில் உறுப்பினராய் இருந்து கொண்டு தான் முதலாளித்துவ சமுதாயத்தையும் பாராளுமன்றமுறையையும் எதிர்த்துப் போராட்டம் நடத்தமுடிகிறது. போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கம் கையாளும் அதே ஆயுதத்தைப் பாட்டாளி வர்க்கமும் - முற்றிலும் மாறான குறிக்கோள்களுக்காக என்பதைக் கூறத் தேவையில்லை - உபயோகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இவ்வாறு இல்லை என்று உங்களால் சாதிக்க முடியாது. இதனை நீங்கள் நிராகரித்து வாதாட விரும்பினால், உலகின் புரட்சிகர நிகழ்ச்சிகள்அனைத்தின் அனுபவத்தையும் நீங்கள் விட்டொழிக்க வேண்டியிருக்கும்."-(மேல் கூறியது லெனின் பாராளுமன்ற முறை பற்றிய சொற்பொழிவு மூன்றாம் கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது காங்கிரசில் நிகழ்த்தப் பெற்றது 1920, ஆகஸ்டு 2.)

இந்திய பாராளுமன்றம் பற்றிய ஒரு கண்ணோட்டம்

இந்திய அரசானது ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை முன்னிறுத்தி, அதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளை(?) தேர்ந்தெடுத்து ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்து வருகிறது. வெளித்தோற்றத்தில் பார்க்கும் பொழுது இது மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசமைப்புபோல் தோன்றினாலும், இங்கு மக்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மட்டுமே உரிமை உண்டு, அதற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்காக எந்த வேலையையும் செய்யவில்லை என்றாலோ, மக்கள்நலனுக்கு விரோதமான செயலில்இறங்கினாலோ, அவரை ஒன்றும் செய்யஇயலாது. தேர்ந்தெடுக்கப்பட மட்டுமே உரிமை, அவர்களை திருப்பி அழைக்க எந்த வித உரிமையும் இல்லை.

முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்து வப்படுத்தும் கட்சிகள், மேம்போக்காக தொழிலாளர்கள், விவசாயிகள், இதர உழைக்கும் மக்களின் சில சீர்த்திருத்த நலன்கள் குறித்து பேசினாலும் கூட அவை ஆளும் வர்க்கங்களின் நலனுக்கு உட்பட்டே அதை செய்கின்றன. இந்த கட்சிகள் தற்போது நிலவி வரும் சமூக அமைப்பே (சுரண்டல் தன்மையுடைய) அத்தனை சிக்கல்களைத் தீர்த்து வைக்கும் என்றும், தனிச் சொத்துடைமையை பிரதிநிதித்துவப் படுத்தும் முதலாளித்துவ சமூகமே மக்களின் நலன் காக்கும் சமூகம் என்று பறைச்சாற்றி ஆளும் வர்க்கங்களை தாங்கி பிடிக்கின்றன.

வறுமை, வேலை இல்லாத நிலை, விலையேற்றம், ஊழல், இலஞ்சம், அரசின் அடக்குமுறை உள்ளிட்ட காரணங்களால் மக்களிடையே ஒரு எழுச்சிகரமான சூழல் உருவாகும் போது, சாதி, மத, இன, மொழி, வட்டார சிக்கல்களை முன்னுக்கு நிறுத்தி அடித்தட்டு மக்களிடையே பிளவுகளை உருவாக்குகிறது. மேலும் ஆட்சியில் இருக்கும் கட்சியின் அணுகுமுறைதான் சமூக சிக்கல்களுக்கு காரணம் என்று கூறி புதிய கட்சிகளை (முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும்) முன்னுக்கு கொண்டு வந்து அவர்களை ஆட்சி பீடத்தில் ஏற்றி தன்னுடைய வர்க்க நலன்களை முதலாளித்துவ வர்க்கம் காப்பாற்றி கொள்கிறது. இதன் மூலம் முதலாளித்துவமானது தன் மீது இருக்கும் எதிர்ப்பை தற்காலிகமாக மட்டுப்படுத்தி, திசைதிருப்புகிறது. தன்னுடைய வீழ்ச்சியை, அழிவை தற்காலிகமாக தள்ளி வைக்கிறது.

இத்தகைய சூழலில், புரட்சிகர குழுக்கள் பாராளுமன்றத் தேர்தல்களில் பங்கு கொள்வதற்காக குழப்பமடைந்துள்ளன.  பாராளுமன்றத் தேர்தல்களில் பங்கு கொள்வதற்காக சில புரட்சி பேசியோரும் இன்றுகளம்இறங்கியுள்ளனர். பாராளுமன்றப்பாதையில் பங்கெடுத்துக் கொள்வதுகுறித்துபுரட்சிகர கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகின்றன.

சிபிஐ, சிபிஎம் கட்சிகள் முழுக்க முழுக்க பாராளுமன்றப் பாதையிலேயே மூழ்கி விட்டன. பாரளுமன்றத் தேர்தலில் பங்கெடுத்து குரல் கொடுப்பது மட்டுமே பிரதான மற்றும் ஒரே பணியாக கொண்டுள்ளது. மக்களை சமூக மாற்றத்திற்கான அணி திரட்டும் பாதையில் பயணிப்பதற்கான எந்தத் திட்டமும் இந்தக் கட்சிகளிடம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கட்சியின் உயர்மட்டத் தலைவர்களே, அதாவது பொலிட்பீரோ உறுப்பினர்களே தேர்தல் களத்தில் நிற்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டை கட்சி கட்டுப்படுத்த முடிவதில்லை. கட்சியின் அனைத்து நடவடிக்கைகளும் பாராளுமன்ற, சட்டமன்ற நலன்களே தீர்மானிக்கின்றன. கட்சியும் பாராளுமன்றப்பாதையும் ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதபடி பிண்ணிப் பிணைந்துள்ளது. கட்சியின் அடிமட்டத்தில் இருக்கும் ஊழியர்களின் தன்னலங்கருதாத உழைப்பை மேல்மட்டத்தில் இருக்கும் கட்சிப் பொறுப்பாளர்களும், பாராளுமன்ற சட்டமன்றப் பிரதிநிதிகளும் தங்கள் நலனுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர். கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வரும் நிர்வாகிகள் பெரும்பாலும் முதலாளித்துவ சிந்தனையாளர்களாகவே உள்ளனர். சில சீர்த்திருத்த நடவடிக்கைகள் மூலம் மக்கள் திரளை திரட்ட நினைப்பதும், பாராளுமன்றப் பாதை மூலமாகவே சோசலிசத்தை நோக்கி பயணிப்பது மார்க்சிய லெனினியம் அல்ல என்பதனை கீழே பேசுவோம். நமது தேடுதலில் இந்த குழப்பங்களுக்குபதிலளிக்க முயற்சிப்போம்.

லெனின் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதிகளை கண்டித்தார். அவர்கள் பாட்டாளி வர்க்க கட்சியை ஒரு தேர்தல் கட்சியாக ஒரு பாராளுமன்ற கட்சியாக முதலாளிகளின் தொங்கு சதையாக முதலாளித்துவ சர்வாதிகாரத்தை காக்கும் ஒரு கருவியாக மாற்றி விட்டார்கள் பாராளுமன்ற பாதையை ஆதரிப்பதன் மூலம் இரண்டாம் அகிலத்தின் திரிபுவாதிகள் அடைந்த கதியே அவரை பின்பற்றுபவர்களும் அடைவார்கள் என்றார்.

இடது சந்தர்ப்பவாதத்தை எதிர்ப்பதன் பெயரில் 

இடது சந்தர்ப்பவாதம் இடது துணிச்சல் வாதத்தை எதிர்கிறோம் என்று கூறி முழுமையான வர்க்க போராட்டத்தை கைவிட்டுவிட்டு முதலாளித்துவ நாடுகளில் உள்ள பாட்டாளிகள் ஜனநாய உரிமையும் பிறப் போராட்டங்களுக்காக போராடுவதாக கூறுவது எவ்வகையான பாட்டாளி வர்க்க புரட்சி முழக்கம். புரட்சியை எதிர்ப்பதும் மறுதலிப்பதும் தமது திருத்தல்வாதப் பாதையை மூடி மறைப்பதுதான் இடது சந்தர்ப்பவாதத்தை எதிர்பது என்று வலது சந்தர்ப்பவாதிகளை மேலும் தெரிந்துக் கொள்வோம்.

புரட்சி என்பது நமது விருப்பத்தின் பேரில் நடத்தப்பட முடியாதது என்றும் புறநிலையில் புரட்சிகரமான சூழ்நிலை நிலவினால் ஒழிய புரட்சி என்பது சாத்தியமில்லை என்றும் மார்சியவாதிகள் அறிந்தவைதான் அதே சமயத்தில் புரட்சி வெடித்தெழுவதும் வெற்றி பெறுவதும் புரட்சிகர சூழ்நிலை மட்டும் பொருத்தல்ல கூடவே அகநிலையில் புரட்சிகர சக்திகளின் தயாரிப்புகளையும் முயற்சிகளை யும் பொறுத்தது. பாட்டாளி வர்க்க கட்சி புரட்சி நடத்துவதற்கு தேவையான புறவய நிலைமை கள் மற்றும் அகநிலை சக்திகள் அது இரண்டையும் பற்றியும் துல்லியமாக மதிப்பிட வில்லை என்றாலும் நிலைமை கனிந்து வருவதற்கு முன்பே அவசரமாக ஒரு புரட்சி தொடுக்கும் முயன்றாலும் அது "இடது துணிச்சல் வாதம்" ஆகும் ஆனால் பாட்டாளி வர்க்க கட்சி புரட்சிக்கான சூழ்நிலை கனியும் முன்னே அதற்கான செயலூக்கம் உள்ள தயாரிப்புகளை செய்திருக்குமானால் அல்லது புரட்சிகரமான சூழ்நிலை நிலவும் போது நிலைமைகள் கனிந்திருக்கும் போது ஒரு புரட்சியை தலைமை தாங்கி வழிநடத்தி அரசு அதிகாரத்தை கைப்பற்ற துணியாமல் இருக்குமானால் அது வலது சந்தர்ப்பவாதம் அல்லது திரிபுவாதம் ஆகும். அரசு அதிகாரத்தை கைப்பற்றும் நேரம் வரும் வரை புரட்சிகர சக்தி ஒன்று திரட்டும் கடினமான பணியில் முழுமையாக கவனம் செலுத்துவது தான் ஒரு பாட்டாளி வர்க்க கட்சி மிக முக்கியமான அடிப்படை பணியாகும் அன்றாட போராட்டங் களில் அளிக்கப்படும் செயலூக்கம் உள்ள தலைமையானது புரட்சிகர சக்திகளை ஒன்று குவிப்பதையும் சூழ்நிலைகள் கனிந்து வரும்போது புரட்சியில் வெற்றி ஈட்டுவதற்கான தயாரிப்புகளை செய்வதும் தான் தனது மையக் கடமையாக கொள்ள வேண்டும் பாட்டாளி வர்க்க கட்சி பாட்டாளி வர்க்கம் மற்றும் மக்களின் அரசியல் விழிப்புணர்வு அதிகரிக்கவும் தனது சொந்த வர்க்க சக்தியை பயிற்றுவிக்கவும் அதன் போரிடும் தகுதிக்கு பக்குவப்படுத்தும் மேலும் புரட்சிக்கு சித்தாந்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஸ்தாபன ரீதியாக ஒரு இராணுவ ரீதியாகவும் தயாரிப்பதற் காகவும் அன்றாட போராட்டங்களின் பல்வேறு வடிவங்களை பயன்படுத்த வேண்டும் இவ்வாறு செயல்படுவதன் மூலம் மட்டுமே புரட்சிகர சூழ்நிலை கனித்திருக்கும் போதும் வெற்றி வாய்ப்புகளை தவறவிடாமல் இருக்க முடியும். இல்லையெனில் புரட்சிகர மான எதார்த்த நிலைகள் நிலவும் போது பாட்டாளி வர்க்க கட்சி புரட்சி நடத்தும் வாய்ப்பை வெறுமனே நழுவி செல்ல விட்டு விடும்.

புரட்சிகர சூழ்நிலை நிலவாத போது எந்த புரட்சியையும் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் திருத்தல்வாதிகள் புரட்சிகர சூழ்நிலை உருவாவதற்கு முன் அன்றாட புரட்சிகர போராட்டங்களையும் புரட்சிகர சக்திகளையும் ஒன்று திரட்டுவதையும் ஒரு பாட்டாளி வர்க்க கட்சி எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை குறித்து எதுவும் சொல்வதில்லை உண்மையில் புரட்சிகர சூழ்நிலை இல்லாதிருக்கும் போது புரட்சிக் கான தயாரிப்பு செய்வது புரட்சிகர சக்தி களை ஒன்று குவிப்பது ஆகிய கடமைகளை புரட்சிகர சூழ்நிலைகள் இல்லை என்ற சாக்கில் ஒதுக்கி விடுவது மார்க்சிய லெனினியமல்ல திருத்தல்வாதமே.

லெனின் கூறியவைதான்,"புரட்சிகர நெருக்கடி தோன்றும்போது புரட்சிக்காரராக மாறுவதற்கு காவுட்ஸ்கி கூட தயாராக இருக்கிறார் ஆனால் அப்போது ஒவ்வொரு அயோக்கியனும் கூட புரட்சிவாதியாகதான் தன்னை அறிவித்துக் கொள்வான் என்பதை நாம் காண்போம்"," "வெகுஜனங்களின் புரட்சிகரப் போராட்ட முறைகளோடு இணைக்கப்படாத எந்த ஒரு சீர்திருத்தமும் பலன் தரக்கூடியதாக உண்மையானதாக நீடித்து இருக்கக்கூடியதாக இருக்க முடியாது தொழிலாளர் இயக்கத்தின் புரட்சிகர 

முறையுடன் சீர்திருத்திற்கான போராட்டத்தை இணைக்காத ஒரு தொழிலாளர் கட்சி ஒரு குழுவாக மக்களிடமிருந்து துண்டிக்கப் பட்டதாக மாறிவிட கூடும் மேலும் இது உண்மையான புரட்சிகர சோசலிசத்தின் வெற்றிக்கு மிகப்பெரும் அபாயகரமாக இருக்கும்" ( லெனின் நூல் திருட்டு தொகுதி 21 பக்கம் 359 ).

லெனின் மேலும் சொல்லுகிறார் "ஒவ்வொரு ஜனநாயக கோரிக்கையும் வர்க்க உணர்வு பெற்ற தொழிலாளர்களை பொறுத்த வரையில் சோசலிசத்தின் மிக உயர்ந்த நலன்களுக்கு கீழ்ப்பட்டதே" மேலும் அரசும் புரட்சி என்ற நூலில் ஏங்கெல்சை மேற்கோள் காட்டி எழுதுகிறார்,"அன்றாட தற்காலிக நலன்களுக்கான மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிலைப்பாட்டை மறந்து விடுவதும் பின் விளைவுகளைப் பற்றி ஆராய்ந்து பார்க்காமல் அப்போதைய வெற்றிக்காக முயற்சிப்பதும் போராடுவதும் நிகழ்காலத் திற்காக இயக்கத்தின் எதிர்காலத்தை தியாகம் செய்வதும் சந்தர்ப்பவாதம் ஆகும் அதுவும் அபயகரமான சந்தர்ப்பவாதமாகும்". "குறிப்பாக இந்த அடிப்படையில் தான் சீர்திருத்தத்தை புகழ்வது ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு அடிபணிவது புரட்சியை பலிகொடுப்பது, கைவிடுவது ஆகியவற்றிர் காக காவுட்ஸ்கியை விமர்சனம் செய்தார் லெனின்". (லெனின் பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடு காலி காவுட்ஸ்கியும் தேர்வு நூல் தொகுதி 2 பக்கம் 95 ).

ஆக நாம் புரிந்துக் கொள்ள வேண்டியவை

 

 தேர்தலில் பல்லாயிரம் கோடி செலவழிக்கும் அரசியல் கட்சிகள் அடுத்த அய்ந்தாண்டுகளில் அந்த பணத்துடன் இன்னும் பல ஊழல்களுடன் பல கணக்கில்லா கோடிகளை சுருட்டுகின்றன, இதில் கார்ப்ரேட்கள் கொள்ளை வேறு அதாவது தேர்தலில் போட்டியிட கட்சிகளுக்கு கொடுத்த நிதியை வசூலிக்க நாட்டின் வாழ்வாதரங்களை சுரண்டுவது மட்டுமன்றி நாட்டின் வங்கி மற்றும் நிதிதுறைகளையும் சூறையாடி கொண்டுள்ளது [.கா மோடி ஆட்சி பிடிக்க உதவிய அதானி கார்ப்ரேட் இன்றைய அறுவடை பல லட்சம் கோடி] . இந்திய பாரளுமன்றம் வடிவம் மக்களை வாக்கு கூலிகளாகக்கி விட்டது ஆம் பணம் வாங்கி ஓட்டு போடும் நிலைக்கு தரம் தாழ்திவிட்டது. ஊழலில் சாதரண மக்களையும் பொருப்பாளியாக்கும் அல்லது பகிரும் நிலைக்கு வந்துள்ளது அரசு எந்திரம்.

சிபிஐ, சிபிஎம்மின் திருத்தல்வாதத்தை எதிர்த்து உருவான எம் எல் இயக்கமானது பல பிரிவுகளாக பிளவுண்டு, இன்று ஆங்காங்கே பிரதேசம் சார்ந்த - பகுதி சார்ந்த குழுக்களாக உள்ளது. ஒருபுறம் மார்க்சிய அரசியலை மக்களிடையே கொண்டு சென்று அவர்களை அணிதிரட்டுவதில் பின்னடைவை சந்தித்து வரும் வேளையில், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் புரட்சிகர குழுக்கள் பங்கேற்று, அங்கும் சட்டமன்ற- நாடாளுமன்ற அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்த வேண்டும் (ஆனால் அவை சாத்தியமானவையா என்றால் கேள்விகுறியே). சட்டமன்ற - நாடாளுமன்றங்களில் நடைபெறும் மக்கள் விரோத செயல்களை அனைத்து தளப் பிரதேசங்களுக்கும் (புரட்சிகர குழுக்கள் பலவீனமாக உள்ள மற்றும் தளப்பகுதிகள் நிறுவாத இடங்கள்) கொண்டுச் சென்று அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் ஆளும் வர்க்கங்களை அம்பலப்படுத்த வேண்டும். உழைக்கும் மக்கள் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் வரையில், முதலாளித்துவ பாராளுமன்ற முறையில் பங்கெடுத்து அதனை அம்பலப்படுத்த வேண்டும் என்பது புரட்சிகர குழுக்களின் கடமையாகும். நடைமுறையில் இருக்கும் பாராளுமன்ற - சட்டமன்ற முறையானது பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் மக்களுக்கு எந்தவித தீர்வையும் தர இயலாது என்பதை மக்களிடம் பரப்புரை செய்வது தற்போதைய கடமையாகும். 

 

முடிவுரை:- சட்ட விரோதமான மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை இணைப்பதை செயல்தந்திரமாகக் கொண்டுள்ளதாக கூறிக் கொள்ளூம் மா-லெ அமைப்பு பாராளுமன்ற தேர்தலை புரட்சிகர அரசியல் பிரச்சாரத்திற்க்கு பயன்படுத்தி கொள்ளவதும், புரட்சிகர நட்பு சக்திகளை நேச அணிகளை, ஆளும் வர்க்க மற்றிடும் இதர வர்க்க அரசியல் கட்சிகளிடமிருந்து வென்றெடுக்கவும், பரந்த அரசியல் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடவும், புரட்சிகர சக்திகளை தக்கவைக்கவும், வர்க்க போராட்டத்தை வளர்தெடுக்கவும் இந்த தேர்தல் பிரச்சாரம் பயனலிக்கும், மற்றும் பாராளுமந்த்திற்கு வெளியிலான போராட்டங்களிலும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி புடம் போட்டு எடுக்கப் பட்ட தெளிவான அனுபவங்களைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் அவற்றை குறிப்பான சூழல்களுக்குத் தக்கவாறு இயங்கியல் ரீதியாக இணைக்க கற்று கொள்ள வேண்டும்.

இங்கே எழுத உதவிய நூல்கள்:-

(1). மாபெரும் விவாதம் சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் ஆவணங்கள்(1957-70)

(2). இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவ கோளாறு- லெனின்

(3). பாட்டாளி வர்க்க புரட்சியும் ஓடுகாலி காவுட்ஸ்கியும் லெனின்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்