இரண்டு நாட்களுக்கு முன்னர் முகநூல் விவாதத்தில் ஆரிய இனம் திராவிட இனம் பற்றி பேசியிருந்தனர் அங்கே கேட்ட கேள்விகள் எவ்வளவு குறுகிய அறிவுடையவை என்பதனை புரிந்துக் கொள்ள நான் தேடிய பொழுது கிடைத்த சில சான்றுகள்.
மனித குல வளர்சியை புரிந்துக் கொள்ள ஒரு குழந்தையின் தேடுதலும் ஆழ்ந்த விருப்பமும் இருந்தால் மட்டுமே இவை சாத்தியம் என்று நினைக்கிறேன் தோழர்களே...
பூமியில் வாழும் பாலூட்டிகளில் மிகவும் முன்னேற்றம் அடைந்து அறிவு வளர்ச்சியடைந்தத விலங்கு மனிதன். பிற விலங்குகளிடமிருந்து மாறுபட்டு எழுந்து நிற்கவும், நடக்கவும் மனிதனால் முடியும். சிந்திக்கும் திறன் மனிதனில் சிறந்து விளங்குபவையாகும். மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி குறித்து பலர் கருத்துக் கணிப்புகளை கூறியுள்ளனர். குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பர். ஆனால் அது முற்றிலும் சரியானதன்று. ஏனெனில் மனிதனைப் போன்றே காணப்படும் உராங் உட்டான், சிம்பன்சி, கொரில்லா ஆகிய இனக் குரங்குகளின் ஒட்டு மொத்தச் சேர்க்கைக் கூறுகளாகவே மனிதன் விளங்குகின்றான். உராங்க்- உட்டாங்கின் மூளை, சிம்பன்ஸியின் மண்டையோடு, கொரில்லாவின் கைகள் ஆகியவை மனித இனத்தைப் போன்றது. எனவே மனித இனத்தோடு தொடர்புடைய இந்த மூன்று குரங்கினங்களைக் காட்டிலும் மேம்பட்ட உறுப்பமைப்புகளை (கைகள்- சிந்தனை, குரல்வளம் போன்றவை) பெற்றிருப்பவன் மனிதன். எனவே, மனிதனும் குரங்கும் ஒரே மாதிரி வடிவமைப்புடைய விலங்கிலிருந்து - பொதுவான ஒரு மூதாதையிலிருந்து பரிணமித்திருக்கலாம் என்று கொள்வதே பொருத்தமாகும். எனவே மனிதனின் மூதாதையர்கள் குரங்குகள் அல்ல. ஆனால் குரங்குகளைப் போன்ற விலங்குகளே என உறுதிபடக் கூறலாம்.
மனித இனம் எப்போது தோன்றியது என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. வாலிலா மனிதக் குரங்குகள் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின என்றும் பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் பெரிய மூளையையும், கூர்மையான கண்களையும், திறமையான கைகளையும் கொண்ட ஆதி மனிதன் தோன்றினான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
பதினான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் தாடை எலும்புகள் இந்தியாவில் சிவாலிக் குன்றுகளிலும் வடமேற்கு கென்யா நாட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சுமார் 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனித இனச் சான்றுகள் ஜாவா தீவிலுள்ள சோலோ நதிக் கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ருடால்ஃப் மனிதன் ( Rudolph man) சுமார் மூன்று மில்லியன் ஆண்டுகட்கு முன் வாழ்ந்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கற்களால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்திய மனித இனச் சான்றுகள் தென் ஆப்பிரிக்காவின் ட்ரான்ஸ்வால் பகுதியில் கிடைத்துள்லன.
நன்கு நிமிர்ந்து நடந்த ஹோமோ எரெக்டஸ் ( Homoerectus) என்னும் மனித இனச் சான்றுகள் ஜாவா தீவில் கிடைத்துள்லன.
ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நியான்டர்தால் மனிதனின் எஞ்சிய அழிவுச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இம்மனித இனம் குகைகளில் வாழ்ந்ததாகவும், தோல் ஆடைகளை உடுத்தியதாகவும், தீயால் சமைக்கத் தெரிந்ததாகவும் அறிந்து கொள்ள முடிகிறது.
நியான்டர்தால் மனித இனம் அழிந்த பின் தோன்றிய இனம் தான் இன்றைய மனிதனின் மூதாதை எனக் கருதப்படும் குரோமன்யான் மனிதன் ஆவான்.
கற்கருவிகளைப் பயன்படுத்திய குரோமன்யான் மனிதன் வேட்டையாடிய பழைய கற்கால மனிதன் ஆவான்.
குரோமன்யான் மனிதனுக்குப் பின் தோன்றியவனே புதிய கற்கால மனிதன் (நியோ லித்திக் ). இவனே மனித நாகரிக இனத்தின் தொடக்கமாகக் கருதப்படுபவன்.
செக்கோஸ்லேவாகியா நாட்டின் லார்ச் நகருக்கு அருகில் உள்ள ஒரு குகையில் 35,000 ஆண்டுகட்குமுன் வாழ்ந்த இன்றைய மனிதத் தோற்றத்தை ஒத்த மனித எலும்புக் கூடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றைக்கு சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் முழுமையான நாகரிகமடைந்த மனிதன் தோன்றி வாழ்ந்தான் என்று புதைபொருள் வரலாற்றறிஞர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்.
மனித இனப் பாகுபாடு
மங்கோலிய இனம்
காக்கேசிய இனம்
நீக்ரோ இனம்
++++++++++++++++++++++++++++++++
மனித இனப் பாகுபாடு
புது எகிப்து இராச்சியத்தின் (கிமு 1550 – கிமு 1077) பதினெட்டாம் வம்சத்தின் பார்வோன்முதலாம் சேத்தி கல்லறையில் வரையப்பட்ட உலகின் நான்கு இன மக்களின் சித்திரங்கள்: லிபியர்கள், நூபியர்கள், லெவண்டியர்கள் மற்றும் எகிப்தியர்கள்
மனிதனின் உடல் தோல், தலைமயிர் அமைப்பு, கண்களின் நிறம், மண்டையோட்டு அமைப்பு, இரத்தத் தொகுதி ஆகியவற்றின் அடிப்படையில் மனித இனம் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை
மங்கோலிய இனம் (Mongoloids)
காக்கேசியஸ் இனம் (Caucas)
அமெரிக்க நீக்ரோ (American Negro)
No comments:
Post a Comment