தத்துவமும் நடைமுறையும் இணைந்ததே மார்க்சீயம்
பிற தத்துவங்களிருந்து மார்க்சியத்தை அடிப்படையில்
வேறுபடுத்துவது – மார்க்சியத்தில் தத்துவமும் நடைமுறையும் பின்னிப் பிணைந்தவை
என்பதாகும். ஃபாயர்பாக் என்ற ஜெர்மானிய மெய்யியலாளர் தொடர்பான தனது 13 கருத்துருக்களில் மார்க்ஸ் முன்வைத்த ஒரு
மிக முக்கியமான கருத்துரு, “இதுவரை மெய்யியலாளர்கள் உலகை
வியாக்கியானம் செய்வதில்தான் முனைந்தனர். ஆனால், விஷயம்
என்னவெனில், உலகை மாற்றவேண்டும் என்பதுதான்” என்பதாகும்.
இந்த அடிப்படையில் தனது தத்துவ நிலைபாட்டில் இருந்து சமூகத்தை ஆய்வு செய்து,
அதன் அடிப்படையில் களம் இறங்கி செயல்படுவதும், அச்செயல்பாட்டின் வாயிலாக படிப்பினைகளைப் பெறுவதும், பெற்ற படிப்பினைகளை மார்க்சிய தத்துவத்தை
வலுப்படுத்தவும் செழுமைப் படுத்தவும் பயன்படுத்துவதும் மார்க்சிய அணுகுமுறையின்
இன்றியமையாத அம்சங்களாகும். நடைமுறைக்கு வழிகாட்டியாக
தத்துவம் இருப்பதும், நடைமுறை மூலம் தத்துவம் மேன்மேலும்
செழுமை அடைவதும் இணைந்தது தான் மார்க்சியம்.
தோழர்களே, நாங்கள் நடைமுறையில் இருக்கிறோம் என்பவர்களே!!!
ரசியாவில் மார்க்சிய தத்துவத்தை நடைமுறை படுத்தியவர்
லெனின். மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் போல்ஷ்விக் கட்சியை கட்டி மார்க்சிய
தத்துவத்தினை நடைமுறையாக்கி புரட்சியை சாதித்தார் லெனின்.
சீனாவில் மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின் வழிகாட்டிய
தத்துவத்தின் அடிப்படையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறையில்தான் நாட்டின்
புரட்சியின் ஊடாக செஞ்சீனமாக்கினார் மாவோ .
ஆக அங்கே மார்க்சிய தத்துவத்தை நடைமுறையில் அவர்கள்
புரட்சியை சாதித்தனர். ஆனால் இங்கு நிலை
என்ன? ஆளும் வர்க்கத்தில் பங்குதாரர்களாக உள்ளவர்கள் தனியுடமையின் காவல்காரர்கள் உள்ளவர்கள்
எந்த வர்க்க பிரதிநிதிகள்? இவர்களின் தத்துவ நடைமுறையில் மார்க்சிய
லெனினிய இருக்கிறது என்றால் தனியுடமை சேவகம் செய்யும் ஆளும்
வர்க்க செயலுக்கு வால் பிடிக்கும் போதே உழைக்கும் வர்க்க விரோதிகளே.
வர்க்க சமூகத்தில் வர்க்கம் அல்லாதவை எவையும் இல்லை எனும்
பொழுது! ஏன் ஏகாதிபத்தியம்
உள்ளவரை போர் தவிர்க்க முடியாதவை என்ற லெனின் வார்த்தையின் புரிதல் இல்லையோ?
தத்துவமும் நடைமுறையும் என்ற இடத்தில் தத்துவத்தை
நடைமுறையோடு உரசி பார்க்க வேண்டும் என்பதே நமது மார்க்சிய ஆசான்களின்
வழிகாட்டுதல்.
இங்கே தத்துவம் இல்லாத எந்த நடைமுறையும் இல்லை அப்படியெனும்
பொழுது பல போக்கில் ஏன் உள்ளனர் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?
அப்படியெனும் பொழுது இங்கு நடைமுறையில் உள்ள தத்துவங்களும்
இங்குள்ள கருத்துகளும் ஆளும் வர்க்கத்து தத்துவங்களே அது மக்களுக்கான
விடுதலைக்கானவை அல்ல.
மேலும் இவை இங்குள்ள அமைப்பு முறையை கட்டி காப்பதற்கான
வழிமுறையை போதிப்பதோடு சுரண்டப்படும் மக்களை ஒடுக்கவும் அடக்கவும் சில நேரங்களில்
சில சலுகைகள் மூலம் மக்கள் கொந்தளிப்பை மட்டுபடுத்தவும் செய்யும் சீர்திருத்தம்
சில சட்டங்கள் என்ற பெயரில் காட்டும் கரிசனம்தான்.
இவை மக்களுக்கு விடுதலைபாதையை தவிர்த்து
ஆன்மீகவாதிகளை போல போதனை தருகிறது. மதம் சம்பந்தமோ மத எதிர்ப்போ பேசி உழைக்கும்
மக்களின் வீரியமான போராட்டத்தை திசைதிருப்பும் இந்த அனைத்து முறைகளும் உழைக்கும் மக்களை ஏதோவகையில் அடங்கி ஒடுங்கி ஆளும் வர்க்கம் கொடுக்கும் சன்மானம்
பெற்றுக் கொண்டு தாங்கள் வளமாக வாழ முற்பொக்கு வேடமணிந்து
ஏய்க்கும் போதகர்கள் யாரின் நலன் காக்க ஓடிக்கொண்டுள்ளனர்? ஆளும்
வர்க்க சேவையில் அவர்களின் அடியொற்றி வாழ்வதுதான் மேன்மையானது
என்கின்றனர் அவைதான் அவர்களின் நடைமுறையாகவும் உள்ளது.
தத்துவம் நடைமுறை என்ற இடத்தில் இங்கு பலரும் நாங்கள்
நடைமுறையில் உள்ளோம் என்கின்றனர்.
ஆனால் அவர்கள் எந்த தத்துவத்தின் அடிப்படையில் நடைமுறையில்
உள்ளார்கள் அப்படி என்னும் பொழுது இதற்கான மூலத்தை அறிய வேண்டும் அல்லவா?
மார்க்சியத்திற்கு முந்தைய தத்துவங்கள் எல்லாம் சமூகத்தில்
உள்ள பிரச்சனைகளை பேசியது மார்க்சியம் மட்டும்தான் பிரச்சனைக்கான காரணத்தையும்
பிரச்சனையை தீர்ப்பதற்கான வழிவகை கூறியது. அப்படியெனும் பொழுது மார்க்சியதிற்கு முந்தைய எல்லா
தத்துவங்களும் உள்ள அமைப்பு முறையை தக்கவைத்துக் கொள்ள விரும்பியது. அதாவது
தனியுடமையை சுரண்டலை ஏற்றதாழ்வை ஏற்றே வாழ சொன்னது ஆனால்
மார்க்சியம் இந்த அமைப்பு முறைதான் இந்த பிரச்சினைகளுக்கான காரணம் இதனை மாற்றி
அமைக்க வேண்டும் என்றனர். அதற்கான வழிவகையை கூறினர். அதனை அடிவொற்றி ரசிய சீன புரட்சி நடந்தது. உலக நாடுகளுக்கு
வழிகாட்டியது பல நாடுகளில் புரட்சி நடந்தேறியது இன்று அவை நமக்கான
படிப்பினைகள்தான்...
இதனை
எதையையும் ஏற்காமல் ஏகாதிபத்திய சதியால் வளர்க்கப்பட்ட பல்வேறு நடைமுறைகள் முற்போக்கு
முலாம் பூசி மக்கள் மத்தியில் பரப்புவோர் எதற்காக செய்கின்றனர்? அவர்களின் செயல் எந்த
வர்க்க நலன் சார்ந்தவை நாம் தெரிந்துக் கொள்ள வேண்டாமா?
தொடரும்....
No comments:
Post a Comment