திருமா தூய்மை பணியாளர்பற்றி பேசியதை எதிர்த்து

பல்வேறு தோழர்களின் முகநூலில் பதியப்பட்டவையே கீழே 

பணி நிரந்தரம் என்பதை திருமாவளவன் அவருடைய கணோட்டத்திலிருந்து விளக்கம் கொடுத்துவிட்டு, பணி நிரந்தரம் என்பதை ஒரு குறிப்பிட்ட பணியில் நிரந்தரமாக ஒருவர் ஈடுபட வேண்டும் என்று பார்க்கிறார். ஆகவே குப்பை அள்ளும் தொழிலையே ஒருவர் நிரந்தராகச் செய்ய வேண்டும் என்று பார்க்கிறார். குப்பை அள்ளும் தொழிலில் ஈடுபடும் ஒரு தொழிலாளிக்கு வேறு ஒரு தொழில் தெரிந்திருக்குமானால் அவருக்கு தெரிந்த அந்தத் தொழிலுக்கு பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என்பதை அவரால் முன்வைக்க முடியவில்லையே ஏன்? பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வு கொடுக்கும் கண்ணோ்டம் அவரிடம் இல்லை, அதனால் இந்தப் பிரச்சனைக்கு ஒரு சரியான விஞ்ஞானப்பூர்வமான தீர்வை அவரால் கொடுக்க முடியவில்லை. சமூகத்தில் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு முதலாளித்துவ வர்க்கங்கள் என்ன தீர்வை முன்வைக்கிறார்களோ அதே தீர்வைத்தான் ஆட்சியிலுள்ளவர்களும் அடுத்து ஆட்சிக்கு வருவதற்கு முயற்சிசெய்யும் அரசியல் கட்சிகளும் திருமாவளவன் போன்ற அரசியல்வாதிகளும் முன்வைக்கிறார்கள். ஆனால் ஒரு சிறந்த மார்க்சியவாதியால் மட்டுமே விஞ்ஞானப்பூர்வமான தீர்வை கொடுக்க முடியும். ஒவ்வொரு தொழிலையும் விஞ்ஞானப்பூர்வமாக மாற்றுவதும் தொழில்களுக்கு இடையிலான இழிவு தன்மையை அகற்றுவதும் உடனடியாகச் செய்யவேண்டியது அவசியமாக உள்ளது. எனினும் இது நிரந்தரமானதல்ல. மேலும் விஞ்ஞானப்பூர்வமாக வளர்க்கப்பட வேண்டும். ஒவ்வொரு சூழ்நிலையின் போதும் புதிய புதிய வழிமுறைகள் நாம் பின்பற்ற வேண்டும். இதனை ஓர் அரசு மூலம்தான் செய்ய முடியும். இதனை சாதித்த பெருமை ரஷ்ய சோவியத்து சோசலிச அரசுக்கு உண்டு. இத்தகைய சூழலில் துப்புறவுத் தொழிலாளர்களுக்கு அரசு வேலை கொடுத்ததை ஒழித்துவிட்டு கார்ப்பரேட்டுகள்தான் வேலைகொடுக்கும் என்ற அயோக்கியத்தனமான கொள்கையை எதிர்க்காமல் பணி நிரந்தரம் என்று பேசி பிரச்சனையின் அடிப்படையை மூடிமறைத்துவிட்டு திருமாவளவன் திசைதிருப்புகிறார். நாட்டிலுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் வேலை ஏற்படுத்திக்கொடுப்பது அரசின் கடமையாகும். அதனை செயல்படுத்தாத எந்த அரசும் மக்களுக்கான அரசு அல்ல. மக்களுக்கான கடமை செய்யாத அரசு அது எதுவாக இருந்தாலும் மக்கள் அதனை தூக்கியெறிய வேண்டும். மக்களுக்கான கடமையை மக்களின் விருப்பதிலிருந்து செய்யக்கூடிய அரசுதான் இதுபோன்ற பிரச்சனைகளை விஞ்ஞானப்பூர்வமாகத் தீர்க்கும் அத்தகைய அரசு எப்படி இருக்கும் சிந்தியுங்கள், விவாதிங்கள் முடிவுக்கு வாருங்கள் தோழர்களே.(தோழர் ரவீந்திரன் பதிவே)

+++++++++++++++++++++++++

கடுகளவு மூளை இருப்பவன் கூட இவ்வளவு மட்டமான ஒரு கருத்தை முன்னிறுத்த மாட்டான். இந்த கேவலமான கருத்திற்கு திருமாவளவன் அம்பேத்காரை எல்லாம் துணைக்கு அழைப்பது தான் உச்சபட்ச நகைப்புக்குரியது.

இங்கு எந்த தூய்மை பணியாளரும் தனது வாரிசுகள், இனிவரும் தலைமுறைகளுக்கு எல்லாம் சேர்த்து இதே பணியை உறுதி செய்யும் வகையில் பணிநிரந்தம் கேட்டு போராடவில்லை. மாறாக நாங்கள் பத்து, இருபது வருடங்களுக்கு மேலாக இந்த பணியையே நம்பி வாழ்ந்துவிட்டோம், திடீரென எங்களையும், எங்கள் உரிமைகளையும் முதலாளிகளுக்கு தாரைவார்த்துக் கொடுப்பது எந்த வகையில் நியாயம் என்று கேட்டு தான் போராடி தங்களுக்கான பணி நிரந்தரத்தை கோரினார்கள்.
தற்போது தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள் ஓரளவு பணி பாதுகாப்போடு நல்ல நிலையில் இருந்தால் அல்லவா அவர்கள் குடும்பம், பிள்ளைகள் எல்லாம் முறையான கல்வி பெற்று அடுத்தகட்டம் நோக்கி வளர்ந்து செல்வார்கள் என்பது திருமாவளவனுக்கு தெரியாதா ?
தற்போது பணியில் உள்ள தூய்மை பணியாளர்களின் பிள்ளைகள், குடும்பங்கள் எல்லாம் அவர்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றி அடுத்தகட்ட நிலையை அடைவதற்கு இந்த அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்று கேட்பதற்கு திருமாவளவனுக்கு முதுகெலும்பு உள்ளதா ?
தூய்மை பணியில் ஈடுபடுபவர்களில் பலரின் இறப்பு அவர்கள் பணி காலத்திலேயே ஏற்படுகிறதே, இதற்கான காரணம் என்ன, இதனை தடுப்பதற்கு அரசிடம் ஏதாவது ஆய்வுகள், நடவடிக்கைகள் ஏதாவது உள்ளதா என்று திருமாவளவன் அரசை நோக்கி கேள்வி எழுப்புவாரா ? அல்லது தூய்மை பணியாளர்களின் பணியின் விளைவாக ஏற்படும் முன்கூட்டிய இறப்பு குறித்தாவது திருமாவளவனுக்கு குறைந்தபட்சம் தெரியுமா ?
தினம் தோறும் சாதியின் பெயரால் கொன்று குவிக்கப்படும் சாதிய கொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம் ஏற்றவாவது திருமாவளவனால் இந்த அரசிற்கு அழுத்தம் கொடுக்க முடியுமா ?
இதில் எதுவும் திருமாவளவனால் முடியாது. ஏனெனில் இவர்கள் கூட்டணி கொள்கை சார்ந்தது அல்ல, மாறாக எந்தவித நிபந்தனையும் இன்றி பதவி கிடைத்தால் மட்டுமே போதும் என்கிற அடிமை மனப்பான்மையில் அமைத்துக்கொண்ட கூட்டணி.(Bright Singh Johnrose முகநூலில்)

சென்னை தூய்மைப் பணியாளர் போராட்டம் அடுத்து மதுரைக்கு பரவுகிறது. மட்டுமல்லாது ஒப்பந்த தொழிலாளர் முறை என்பதை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இது சாதி தாண்டிய பாட்டாளிவர்க்க ஒற்றுமையை வளர்த்தெடுப்பதாகும்.
இந்த ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலேயே திருமா பேசுகிறார். அவருக்கு பாட்டாளிவர்க்க ஒற்றுமை அவசியமில்லை என்பதுதான் அரசியல்.

திருப்பூர் குணா (முகநூலில்)



தோழர் மாதவ் (முகநூலில்)

சென்னை மாநகராட்சி தொழிலாளர்நிரந்தரம் பற்றி
திரு. திருமாவளவன் கருத்து
உலகமயமாக்கல்
தாராளமயமாக்கல்
சேவகர்களின் கருத்து...
திமுக தலைமைக்கு
எசப்பாட்டு...
இது
அப்பட்டமான
அறிவுசார் அடியாள் வேலை...



ஆக ஆளும் வர்க்கதிற்கு அணி சேர்பதுதான் இவரின் பணியாக உள்ளது உழைக்கும் வர்க்கதின் தேவைக்கானவர் அல்ல

















ஏகாதிபத்திய காலகட்டத்தில் வர்க்க அரசியலை மூடிமறைக்கும் தந்திரம்

 ஏகாதிபத்திய காலகட்டத்தில் வர்க்க அரசியல் புரிந்துக் கொள்ளும் ஒரு முயற்சியே

"பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.

             உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!"
-கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலிருந்து
என்ற மார்க்சிய ஆசான்களின் வழிமுறையை புரிந்துக் கொள்ள.... பாட்டாளி வர்க்கதிற்குப் புரட்சிக்கு மாற்றாக அதனின் வேறாக ஒன்றிருப்பதாக மார்க்சிய ஆசான்கள் வழிகாட்டவில்லை.
வர்க்கப்போராட்டத்தின் நிகழ்முறைகளை ஆராய்ந்த மார்க்சிய ஆசான்கள் அதனை சமூக அறிவியலாக வரலாற்று பொருள்முதல்வாதம் என்ற தத்துவ போதனையை போராடும் உழைக்கும் மக்களுக்கு வழிகாட்டியாக்கினர்.
" பாட்டாளி வர்க்கம் தன் துன்ப துயரங்களுக்கு காரணத்தை அறிந்துகொள்ளவும், தன்னை பற்றிய உணர்வு கொள்ளுமாறு அவர்கள் போதித்தார்கள்",
மேலும் "கனவுகள் இருந்த இடத்தில் அறிவியலை நிலைநாட்டினார்கள்!" என்று கூறிய லெனின் தன் நாட்டில் உள்ள நிலைமைகளையோடு அன்று வளர்ந்து நின்ற ஏகாதிபத்தியம் மற்றும் புரட்சிக்கான கட்சி செயல்பாடுகளை முன்வைத்து புரட்சியை சாதித்தது மட்டுமல்லாமல் உலகிற்கும் வழி காட்டினார்.
ஆனால் ரசிய புரட்சியும் அதன் தாக்கத்தால் ஏற்பட்ட உலகில் ஏற்பட்ட சோசலிச தேவைகளையும் உணர்ந்த கொள்ளைகார ஏகாதிபத்தியம் விரித்துள்ள வலையில் சிக்குண்டு கிடக்கிறது இன்றைய கம்யூனிஸ்ட் கட்சிகள் என்றால் மிகையில்லை!
மார்க்சியத்தையே திரித்து புரட்டுவது தொடங்கி இன்று மார்க்சியம் காட்டிய வழிமுறைகளை மறுத்து ஏகாதிபத்திய வழிகாட்டுதலை தலையாய பணியாய் செயல் படுத்துவோர் எப்படி மார்க்சியவாதியாக இருக்க முடியும்!
நம் மத்தியில் உள்ள இடதுசாரிகள் தொடங்கி பன்நாட்டு நிறுவனங்களின் வளர்ப்பு பிராணிகள் வரை இங்கே மக்கள் மத்தியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு அதரவு கொடுப்பதுபோல் ஓடோடி வருகின்றன உண்மையில் அவர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அந்த பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகள் அவர்களை கவ்வி பிடிக்கிறது ஆனால் அந்த செயல்பாட்டாளர்கள் அடுத்த பிரச்சினை வந்த உடன் இந்த பிரச்சினையை அம்போ என்று கைவிட்டுவிட்டு அடுத்த பிரச்சினைக்கு தாவி விடுகின்றனர்.
உண்மையில் இதற்கு பின்னால் அவர்கள் மூடிமறைக்க நினைப்பதை நாம் புரிந்துக் கொள்ள சில படங்கள் ஏகாதிபத்திய காலகட்டத்தில் எந்த சமூக அமைப்பாக இருந்தாலும் அவனின் மூலதன ஆதிக்கதால் உலக நாட்டு மக்கள் அவன் வலை பின்னலில் வீழ்ந்தே ஆக வேண்டும்.
ஏகாதிபத்தியம் தனக்கான அடிமைகளை உருவாக்குவாக்குவது அதன்படி வாழ்வதையையே விரும்புகிறது அதற்கு விலைபோகும் கூட்டம் இங்குள்ளஅமைப்பை ஒருதுளி அசைவையும் விரும்புவதில்லை.
ஆட்டி வைப்பதை ஏற்கும் அடிமைகளுகானதே இந்த அமைப்புமுறை இதனை எதிர்பவர்கள் சொர்பம் அவர்களே வரலாற்றை மாற்றி அமைகின்றனர். உள்ள அமைப்புமுறைக்கு முதுகு சொரியும் வேலை ஏழை எளிய மக்களை அடிமைகளாக வாழ சொல்வதே சீர்திருத்தவாதம் இன்னும் பல....
வர்க்க அரசியல் புரிந்துக் கொள்ளவிட்டால் இதோ இந்த ஆட்டிற்கு தெரியாமல் கசாப்பு கடைமுன்னே தான் கொல்லப்படுவதற்கு காத்துகிடப்பது போல்...
வர்க்க சமூகத்தில் ஆளும் வர்க்க தேவைகானதே மதம் சட்டம் அரசியல் ஏன் இங்குள்ள எல்லாமே!!!
பிஜேபியின் இந்துத்துவ மத அரசியல் எப்படி மக்களை ஏய்கிறது பாருங்கள்
"என்ன எடுத்து வந்தாய் என்ன எடுத்துபோக" என பேசும் இந்த பெண் பேச்சாளர் சொகுசான வண்டியில் வலம் வந்துக் கொண்டே ஏழை எளிய மக்களை அடிமைகளாக வாழ சொல்வதே இந்த அமைப்புமுறையின் அயோக்கிய தனம். இவைதானே சீர்திருத்தவாதம் பேசுவோரின் நிலையாகவும் உள்ளது இந்த சமூகத்தில் தனக்கான இடம் தேடி அதில் தானும் சொகுசாக வாழத்துடிக்கும் இவர்கள் தங்க்களுக்கு இந்த பிற்போக்கு சமூகத்தில் இடர்பாடு ஏற்படும் பொழுது "குய்யோ முய்யோ" என்று கத்துகின்றனர். உண்மையில் இந்த சமூக அவலம்தானே இவை. இதனை துடைத்தெறியச் சொல்வதுதானே மார்க்சியம் அதனை ஏற்காமல் என் பிரச்சினை மட்டுதான் பிரதானமானது என்பவர்கள் சமூகத்தில் உள்ள மற்றவற்றை புரிந்துக் கொள்ள தயார் இல்லை!
அன்றிலிருந்து இன்று வரை பாராளுமன்றத்திற்கு வெளியே நிலவிய உழைக்கும் மக்களைச் சுரண்டும் முறையானது எந்த அளவிலாவது குறைக்கப்பட்டுள்ளதா? திட்டவட்டமான பதில் இல்லை என்பதேயாகும். ஏனெனில் சுரண்டலைப் பாராளுமன்றம் பாதுகாக்கவில்லை. பாராளுமன்றத்திற்கு வெளியே சுயேச்சையாக இயங்கும் முதலாளித்துவ அரசாங்க இயந்திரமே சுரண்டலைப் பாதுகாக்கிறது
உழைக்கும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதார பிரச்சினையுடன்
கூடிய அரசியல் பேசாமல்- தனித்தனியான போராட்டங்கள்! எதற்கு யாருக்கு? எந்த வர்க்க நலனுக்கு? யாரை பாதுகாக்கின்றது?.
ஏகாதிபத்திய பன்நாட்டு கம்பெனிகளின் காலடியில் இன்றைய ஆட்சியாளர்கள்.
பன் நாட்டு அடிமைகளாக அவர்களின்
நுகர்வோராக வாழ மட்டுமே உரிமை! இவை என்ன சமூகம்?
பன்நாட்டு கம்பெனிகள் கொள்ளையடிக்க அரசு துறையின் எல்லா நிர்வாக அமைப்பையும் தனியாருக்கு திறந்து விட்டு கல்வி, மருத்துவம் வேலைவாய்ப்பு இப்படி எல்லாம் தனியாரிடம் கொடுத்த அரசு அதனை உன்னதமாக நினைப்போர் யார்?
ஏகாதிபத்திய காலகட்டதில் நம் சமூகத்தை புரிந்துக் கொள்ளவே இயலாத மார்க்சிய புரிதல் அற்ற பதர்கள் மட்டுமே!

முந்தைய தத்துவங்கள் அனைத்தும் உலகத்தை விமரிசிக்க மட்டுமே செய்தன. ஆனால் மார்க்சியம் மட்டுமே உலகத்தை விமரிசிக்கச் செய்வதோடு மாற்றவும் செய்கின்றது என மார்க்ஸ் கூறினார்.

தத்துவம், அரசியல், பொருளியல், மதம், அறிவியல், சமூகம், கலை, இலக்கியம் ஆகிய அனைத்தையும் விளக்குவதாக மட்டுமின்றி அத்துறைகளில் மாற்றம் ஏற்படுத்துவதாகவும் ஆன தத்துவம் தான் மார்க்சியம் ஆகும்.

சரி இன்று மார்க்சியமல்லாத போக்கு ஏன் மலிந்துக் கிடக்கிறது என்றால் உலகில் எங்கும் சோசலிச நாடுகள் இல்லை ஏகாதிபத்தியம் சோசலிசத்தை வரவிடாமல் தடுக்க தன்னால் இயன்றவரை மார்க்சியதிற்கு எதிரான கருத்துகளை பரப்புவதும் மார்க்சியத்தை திரிபதும் குழப்புவதும் அவர்களின் வேலையாக உள்ளது ஏனெனில் தவறியும் உழைக்கும் ஏழை எளிய மக்கள் ஒன்றினையக் கூடாது. அதற்கான வேலையை மிக கட்சிதமாக செய்து முடிகின்றனர். அதற்கு சாதக சூழல் நிலவுகிறது

ஜார்ஜ் பொலிட்சரின் வார்த்தைகள் கீழே...."வர்க்கப் போராட்டத்தைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் சோறு கிடைக்க போராடினால் போதும் அரசியல் போராட்டம் தேவை இல்லை என்று சிலர் நினைக்கின்றனர் புரட்சிகரமான தெருச் சண்டை நடத்தினால் போதும் நிறுவனம் கட்சி ஒன்றும் தேவையில்லை என்று சிலர் நினைக்கின்றனர் அரசியல் போராட்டம் ஒன்று தான் இந்த வர்க்கப் போராட்ட பிரச்சினைக்கு பரிகாரம் தொழிற்சங்க இயக்கம் முதலான மற்றும் வேண்டியதில்லை என்று சிலர் எண்ணுகின்றனர்.ஆனால் ஒரு மார்க்சியவாதி இந்த வர்க்கப் போராட்டத்தை எப்படிப் பார்க்கிறான் மூன்று அம்சங்களை கொண்ட ஒரே ஒரு பிரச்சினையாக பார்க்கிறான்.

1).பொருளாதார போராட்டம் 

2).அரசியல் போராட்டம் 

3).தத்துவ அறிவு போராட்டம் என்ற மூன்று அம்சங்களைக் கொண்ட வர்க்கப் போர் என்று மார்க்சியவாதி கருதுகிறான்.

ஆனால் சீர்திருத்தவாதிகளை புரிந்துக் கொள்ள...

சீர்திருத்தவாதத்துக்கும் மார்க்சியத்திற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருப்போர் பற்றி

வர்க்கப் போராட்டத்தில் அங்கிருப்பதோடு நிற்காமல் இதனை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு அங்கீகரிக்கவும் எடுத்துச் செல்வர் மட்டுமே மார்க்சியவாதி ஆவார் (அரசும் புரட்சியும் லெனின்,பக்கம் 49).

 முதலாளித்துவ அரசுகள் வடிவத்தில் பலதரப்பட்டவை ஆனால் இவற்றின் சாராம்சம் ஒன்றுதான். வடிவம் எப்படி இருப்பினும் இந்த அரசுகள் எல்லாம் முடிவாய் பார்க்குமிடத்து தவிர்க்க முடியாதபடி முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரம் ஆகும் (அதேநூல் பக்கம் 51). 

பாரிஸ் கம்யூனில் தலைமையானது அடிப்படையான ஒரு படிப்பினையை கம்யூனிஸ்ட் அறிக்கையில் ஒரு முக்கிய திருத்தமாய் புகும்படி அவ்வளவு பிரம்மாண்டமான முக்கியத்துவம் உடையதாய் மார்க்சும் எங்கெல்சும் கருதினர்."கம்யூனானது முக்கியமாய் ஒரு விவரத்தை அதாவது ஏற்கனவே உள்ள அரசு பொறியமைவைத் தொழிலாளி வர்க்கம் அப்படியே கைப்பற்றித் தனது சொந்த நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டு விட முடியாது என்பதை நிரூபித்துக் காட்டிற்று". இந்த வாசகத்தில் ஒற்றை மேற்கோள் குறிப்பிட்டு காட்டப்படும் சொற்களை ஆசிரியர்கள் மார்க்ஸ் எழுதிய பிரான்சில் உள்நாட்டுப் போர் என்ற நூலிலிருந்து அப்படியே எடுத்து கையாளுகின்றனர்இவ்வாறாக பாரிஸ் கம்யூனில் தலைமையானது அடிப்படைதுமான ஒரு படிப்பினையை கம்யூனிஸ்ட் அறிக்கையில் ஒரு முக்கிய திருத்தமாய் புகுத்தும்படி அவ்வளவு பிரம்மாண்டமான முக்கியத்துவம் உடையதாய் மார்க்சும் எங்கெல்சும் கருதினர் இந்த முக்கிய திருத்தம் சந்தர்ப்பவாதிகளால் திரித்துப் புரட்டப் பெற்றிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது கம்யூனிஸ்ட் அறிக்கையின் வாசகர்களில் பத்தில் ஒன்பது பேருக்குஏன் நூற்றில் தொண்ணூற்று ஒன்பது பேருக்கும் கூட இதன் பொருள் அனேகமாக தெரிந்து இருக்காது எனலாம்இந்தப் புரட்டலைப் பிற்பாடுபுரட்டல்களுக்கென்றே ஒதுக்கப்பட்டுள்ள ஒரு தனி அத்தியாயத்தில் நாம் பரிசீலிப்போம்மார்க்சியத்தின் புகழ்மிக்க வாக்கியத்திற்கு தற்போது சகஜமாய் அளிக்கப்படும் கொச்சையான வியாக்கியானத்தை மட்டும் இங்கு குறிப்பிடுவதோடு நிறுத்திக் கொள்கிறோம் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு மாறாய் மெதுவாய் பையப்பைய வளர்ச்சி காணும் கருத்தினை இங்கு வலியுறுத்துகிறார் என்பதாய் விளக்கம் அளிக்கப்படுகிறதுஆனால் இதற்கு நேர் எதிரானது உண்மை. " ஏற்கனவே உள்ள அரசு பொறியமைவைத்தொழிலாளர்கள் கைப்பற்றுவதோடு மட்டும் நிற்காமல் அதை அழித்தொழித்திடவும் நொறுக்கவும் வேண்டும் என்பதே மார்க்ஸ் கூறும் கருத்து .(அரசும் புரட்சியும் நூலிலிருந்து பக்கம் 52-52) சிலர் நினைப்பது போல் தனிநபர் களை தாக்குதோ தூக்கி பிடிப்பதோ எந்த பயனும் இல்லைஉண்மையில் அவர்களின் சித்தாந்தம் என்ன என்பதே நமது கேள்வியாக இருக்க வேண்டும்

 

ஒரு குடியரசு மிகமிக ஜனநாயக தன்மையுடைய குடியரசாக கூட எந்த வேஷம் போட்டாலும் இது முதலாளித்துவ குடியரசாக இருக்குமானால், இதில் நிலம், ஆலைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மீது தனியுடமை நிலவுமானால் சமுதாயம் முழுவதையும் தனிப்பட்ட மூலதனம் கூலி அடிமை நிலையில் வைக்குமானால், அப்பொழுது இந்த அரசு சிலர் மற்றவர்களை அடக்கி வைப்பதற்காக உள்ள இயந்திரமே ஆகும்.


உளவியலாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய இன்னொரு புத்தகம்

 உளவியலாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய இன்னொரு புத்தகம்.

நாம் செய்யும் செயல்களை நாம் ஏன் செய்கிறோம்?
இதற்கு உளவியலாளர்கள் இரண்டு உந்துதல்களைச் (Drive)சொல்கிறார்கள்
1. Biological Drives- உயிரியல் ரீதியான காரணங்கள். பசி ,தாகம், காமம் போன்ற இயற்கை உந்துதல்களால் தூண்டப்பட்டு நாம் செயலாற்றுகிறோம்.
2. Extrinsic Drives - புறச்சூழலில் உள்ள உந்துதல்கள் - பணம், புகழ், அந்தஸ்து போன்றவை. இவை மறைமுகமாக உயிரியல் தேவைகளை நிறைவேற்றுகின்றன. ஆகவே இவற்றை நோக்கி நாம் செல்கிறோம்.
ஆனால் இவ்விரண்டும் தாண்டிய மூன்றாவது ஒரு உந்துதல் மனித உயிர்களுக்கு இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். சிம்பன்ஸி போன்ற குரங்குகளுக்கும்கூட இந்த உந்துதல் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
அது அறிவுப்பூர்வமான ஒரு சவாலான செயலில் ஈடுபட்டு தனது திறமையைப் பயனுள்ள முறையில் வெளிப்படுத்தி நிறைவடைவது.
இதனை Intrinsic Motivation என்கின்றனர். கிட்டத்தட்ட ஆத்ம திருப்தி என்கிறோமே அதே தான்.
ஒரு செயலைச் சிறப்பாகச் செய்தால் கிடைக்கும் நிறைவுக்காகவே அதனைச் செய்வது.
பணம், புகழ், பசி, தாகம் எல்லாம் மறந்து சில விஷயங்களில் ஈடுபடுவது இதனால்தான். கலைக்காகவே கலை என்போமே. அது இதுதான்.
பரிசுகளை எதிர்பார்த்து ( Reward Dependance) இல்லாமல் செயலாற்றுவது.
இதுபோல் ஆத்ம திருப்தி அளிக்கும் வேலைகளில் இருப்பவர்கள் அதிக உற்பத்தித்திறன் உள்ளவர்களாகவும் மகிழ்ச்சி உடையவர்களாகவும் இருக்கின்றனர். பணியாளர்களின் Intrinsic Motivation உக்கு தீனி போடும் நிறுவனங்களே வெற்றி பெறுகின்றன.
ஆனால் ஒரு விஷயம் !
அடிப்படைத் தேவைகள் ஓரளவாது நிறைவேறிய பின்னரே இத்தேவை முக்கியத்துவம் பெறுகிறது.
ஆப்ரஹாம் மாஸ்லோ என்னும் உளவியலாளர் மனிதனின் தேவைகளை ஐந்து அடுக்குகளாகப் பிரித்தார்
1. பசி, காமம் போன்ற உடல்தேவைகள்
2. உறைவிடம் போன்ற பாதுகாப்பு தேவைகள்
3. அன்பு காதல் போன்ற தேவைகள்
4. சமூக அந்தஸ்து
5. இறுதியாக வாழ்வின் நோக்கம் என்னும் தன்னை அறியும் தேவை ( Self Actualization). கிட்டத்தட்ட இதுதான intrinsic Motivation எனப்படுவதும்.
குழந்தை வளர்ப்பிலும் இக்கருத்துகள் பயன்படுகின்றன. ஒரு நல்ல செயலைச் செய்தால் சாக்லேட் அல்லது ஒரு பரிசினை அளித்தால் அது சரியான வழிமுறை அல்ல. ஒரு செயல் தரும் உள்ளார்ந்த நிறைவுதான் அதைச் செய்ய வைக்க வேண்டிய உண்மையான உந்துதல். அக்குழந்தையையே அந்தச் செயலின் மதிப்பை உணர்ந்து செய்ய வைப்பதுதான் சிறந்த வழிமுறை
Must Read
டாக்டர் ஜி ராமானுஜம்
(2024 இல் எழுதியது)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடக்கம் முதல் இன்றைய குழுக்கள் வரை சிறிய தேடல்

இந்தியாவில் கம்யூனிச இயக்கங்களின் நிலையைப் பற்றி கூறவேண்டும் என்றால் நமக்கு  ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைதான் நினைவுக்கு வருகிறது. அங்கே ஒரு புரட்சிகர கட்சி உருவாகிய பொழுது அவை எதிர்க் கொண்ட சித்தாந்த போராட்டங்களை இங்கே கணக்கில் கொள்ளவே இல்லை. லெனின் அங்கிருந்த பல்வேறு போக்குகளை எதிர்த்து போராடி சாதித்தார் லெனின் வழிவந்தவர்களாக கூறிக் கொள்வோர் அவரின் எந்த வழிக்காட்டுதலையும் புரிந்துக் கொள்ளவே இல்லை. லெனின் தன் நாட்டில் மட்டுமின்றி உலக நாடுகளின் புரட்சிக்கான தத்துவ நடைமுறையை மார்க்சிய லெனினியவாதிகளுக்கு முன் வைத்துள்ளார் அதனை ஏற்றுக் கொள்ளாத பலரும் பல்வேறு வகையில் மார்க்சியவாதிகளாக வலம் வருகின்றனர்.

அதில்  நவீன திருத்தல்வாதல்வாதமும் அடங்கும்

நவீன திருத்தல்வாதத்தின் ஆணி வேர் எங்கு உள்ளது? ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரசில் குருசேவ்வால் முன்வைக்கப்பட்ட அறிக்கைதான் நவீன திருத்தல்வாதத்தின் அடிப்படையாகும்.

குருச்சேவ் தலைமையிலான 20வது காங்கிரஸ் அறிக்கையில், உலக நிலைமைகளில் “புரட்சிகர மாற்றங்கள்” ஏற்பட்டுள்ளன என்ற சாக்குப்போக்கின் அடிப்படையில், குருச்சேவ் “சமாதான வழியில் மாற்றம்” என்ற கோட்பாட்டை முன்வைத்து, “பாராளுமன்றப் பாதையின் மூலம்” முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச் செல்வது சாத்தியமாகியுள்ளது என்று கூறினார்.

சாராம்சத்தில் இந்தத் தவறான கோட்பாடு, அரசு மற்றும் புரட்சி பற்றிய மார்க்சிய லெனினிய போதனைகளின் தெளிவான திரிபு ஆகும். இதன் தொடர்ச்சியாக ஏகாதிபத்தியம், போர், அமைதி பற்றிய லெனினிய போதனைகளைக் கேள்விக்குள்ளாக்கி “அமெரிக்க அரசாங்கமும்; அதன் தலைமையும் யுத்தத்தை எதிர்க்கும் சக்திகளேயன்றி, அவை யுத்தத்தை உருவாக்கும் ஏகாதிபத்தியச் சக்திகளின் பிரதிநிதிகள் அல்ல” என்று கூறித் தனது ஏகாதிபத்தியத் தாசத் தன்மையை வெளிப்படுத்தினார் குருச்சேவ்.
குருச்சேவ்வின் நவீன திருத்தல்வாதத்திற்கு இரையாகி உலக முழுவதிலும் உள்ள கம்யூனிச இயக்கங்கள் பெரும் பின்னடைவும், பிளவும் சந்தித்தன. இதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விதிவிலக்கல்ல.

மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேசப் போக்கைக் குறித்து ஒரு சரியான திசை வழியை முன்வைத்து, ஸ்டாலின் எதிர்ப்பு என்ற பெயரால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைக் கைவிட்டு, மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளை திருத்தியதன் மூலம் தனது ஏகாதிபத்திய ஆதரவை வெளிப்படுத்திய குருச்சேவ்வின் நவீன திருத்தல்வாதத்தை முறியடித்து மார்க்சிய லெனினியத்தை உயர்த்திப் பிடித்து முன்வைக்கப்பட்ட மாபெரும் கருத்தாயுதம்தான் இந்த “மாபெரும் விவாதம்” நூல். இதனை இந்திய கம்யூனிச இயக்கங்கள் எவையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும் இல்லை அதனை செயல்படுத்தவும் முனையவும் எந்த கட்சியும் தயார் இல்லை.

சி.பி.ஐ கட்சி 1925 டிசம்பர் 28- 30-ஆம் நாட்கள் தோன்றியது.

புரட்சிக்கான தயாரிப்பில் பல்வேறு குழுக்களாகவும் பல்வேறு பிரிவினர்களாகவும் ஆரம்பத்தில் தோன்றிய கம்யூனிஸ்டுகள் ஆனது தாஸ்கன்டில் 1920 இல் மற்றும் பல்வேறு பிரிவுகள் தோன்றியிருந்தாலும்; பிரிட்டிஷ் இந்தியாவில் நாடு தழுவிய ஒரே கட்சியாக 1925 டிசம்பரில் தான் தோன்றியது.


அதன் ஆரம்ப கால பணியானது பல்வேறு நிறுவனங்களில் தனது கலைகளை கட்டியதும் உணர்வுபூர்வமாக கம்யூனிச சமூகத்தை படிப்பதற்கான முயற்சியாகவும் இருந்தது. இருந்தும் இவர்கள் முறையாக மார்க்சிய வகைப்பட்ட புரட்சியை முழுமையாக ஏற்றுக் கொண்டோ அல்லது மூன்றாம் அகிலம் காலனி நாடுகளுக்கு காட்டிய வழிமுறையில் பின்பற்றி ஒரு திட்டம் சம்பந்தமான பணியில் முழுமையாக செயல்படாத தான் விளைவுகள் தான் பல்வேறு விதமான தோல்விக்கு முதன்மையான காரணமாகும். சோவியத் ரஷ்யாவின் திருத்தல்வாத போக்கை எதிர்த்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (ரசிய - சீன) கம்யூனிஸ்டுகளுக்கு இடையிலே நடந்த விவாதங்களை கிரகித்துக் கொள்ளவே இல்லை.


இருந்தும் நாடு தழுவிய பல்வேறு விதமான போராட்டங்களையும் தியாகங்களையும் உண்மையான ஒரு கம்யூனிஸ்டுகளில் பாரம்பரியத்தை பதிந்து செய்ய துணிந்து செயல்பட்டார்கள்.  அவை முழுமையாக மார்க்சியத்தை கற்றுத் தேர்ந்ததின் பணியாக இல்லாமல் மார்க்சியத்தை அவர்களின் தேவையை ஒட்டியே பயன்படுத்தினார்கள்.


தரகு வர்க்க ஆளும் வர்க்க கட்சியான காங்கிரஸ் உடன் ஆரம்பத்திலிருந்து தன் திடமான நிலைப்பாட்டை வைக்காததன் விளைவு தான் காங்கிரசை இடதுசாரிகள் ஒரு முற்போக்காக இன்றும் கருதுவதில் வெளிப்பாடையாக தெரிந்துக்கொள்ளலாம்.

குருசேவின் வழியை பின்பற்றி 1960 ன் தொடக்கத்திலேயே "வர்க்கப் போராட்டத்தை கைவிட்டு சமாதான வழியில் சோசலிசத்தை அடைவது என்ற நோக்கில் நடை போட்டாலும் 1964 ல் அமைப்புத்துறையில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களை முன்வைத்து கட்சிக்குள் எதிர்ப்பு தோன்றியது. திருத்தல் வாதத்தை எதிர்ப்பதாக 1964 ஏப்ரல் 11 ல் கூடிய தலைமை குழு கூட்டத்தில் 32 உறுப்பினர்கள் கூட்டு அறிக்கையை ஒன்றை பத்திரிகைகளுக்கு  அளித்தனர் அது கட்சி உடைவதற்கான காரணமாக அமைந்தது எனலாம்.


இரு குழுக்களின் பிரதிநிதிகளும் ஜூலை 14 1964 அன்று டில்லியில் கூட்டினர். அக்கூட்டத்தில் சித்தாந்த பிரச்சனையோ அரசியல் பிரச்சினையோ பேசப்படாமல் அமைப்பு பிரச்சினை மட்டுமே விவாதிக்கப்பட்டது.


கட்சியின் செயலகத்தை கட்சி இயந்திரத்தை யார் நிர்வகிப்பது  என்பதுதான் முதன்மையான பிரச்சினையாக இருந்தது. இந்தப் பிரச்சினை ஒற்றுமைக்கு வழி வகுக்கவில்லை .


டாங்கேவுக்கு எதிரான போட்டி குழு ஆந்திராவில் உள்ள  தெனாலியில் ஒரு மாநாட்டு கூட்டியது. 


இ.எம்.எஸ் சின் ஆலோசனைப்படி மாற்றத்திற்கான வடிவங்கள் மற்றும் அமைதியான கூட்டு வாழ்வு போன்ற அரசியல் சித்தாந்த பிரச்சனைகளை விவாதிக்கப்பட்டு திட்ட முன்வரையுடன் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. 


30 டிசம்பர் 1964 அன்று கட்சியின் ஐந்து தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதும் சிபிஎம் இன் உண்மையான முகம் இந்திய அரசுக்கு கொடுத்த கடிதத்தில் தெரிந்தது. "கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் மயக்குவதற்காக பேசப்பட்ட வீரவசனங்கள் புதுடெல்லியில் உள்ள எஜமானர்களுக்கு முன் வெறும் முனங்களாக மாறின " சிபிஐ எப்படி அவர்கள் குருசேவின் சகாக்கள் என்று கூறி வெளியேறி வந்த சிபிஎம் அதே கடந்தெடுத்த குருசேவ்வாதிகளாக மாறி உள்ளதை காண முடிந்தது.


சோசலிசத்தை நோக்கி அமைதியான மாற்றம் என்ற அடிப்படையில் நிலவுகின்ற அமைப்பு முறைக்குள்ளேயே தங்களுக்கான இடத்தை தேடிக்கொண்டார்கள். 


நன்னடத்தை கடைப்பிடிப்பதாக உறுதிமொழி வழங்கிய பிறகும் கூட புதிய கட்சியின் பல்வேறு தலைவர்களும் ஊழியர்களும் டிசம்பர் 1964 இறுதிவாக்கிலும் 1965 தொடக்கத்திலும் கைது செய்யப்பட்டார்கள். சிலர் தலைமுறைவாக சென்றதன் மூலம் கைதியிலிருந்து தப்பித்துக் கொண்டார்கள்.  இவ்வாறாக தொடங்கிய சி.பி.எம் ன் ஆரம்ப காலம் .


புரட்சி நிறைவேற்றுவதை விட அதனை தடுப்பது தான்  சி.பி.ஐ மற்றும் சிபிஎம் இன் நோக்கமாக இருந்தது.


இத்தகைய சூழலில் தான் நக்சல்பாரி எழுச்சியும் பின்பு இந்தியாவில் நிலவி அதற்கான அமைப்பு ரீதியான ஆயத்த பணிகள் 1967 மேற்குவங்க ஐக்கிய முன்னணி அமைச்சரவை பதிவேற்ற சிறிது காலத்தில் தொடங்கின.

 

நக்சல்பாரியின் தோற்றம் 


1957ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கேரளாவில் சிபிஐ தலைமையில் கூட்டணி அரசாங்கம் அமைக்கப்பட்டது. சோசலிசத்தை அடைவதற்கான வழியாக கேரளா பாதையில் புரட்சிக்கு பதில் அமைதியான பாராளுமன்ற பாதையை அன்றைய சிபிஐயும் பின்னர் சிபிஎம் -மும் பின்பற்றி கொண்டது.


பாராளுமன்ற பாதை என்பது சுரண்டலும் அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் நிறைந்த அமைப்புகுள் புரட்சிக்கு பதில் சமரச பாதையை வர்க்க கூட்டை போதித்தது.

இதனை எதிர்த்து உருவான புரட்சிக்கான கட்சியாக மாவோ வின் சிந்தனையை உயர்த்திப் பிடித்து தெள்ளத் தெளிவாக சோசலிசத்திற்கான பாதையை கடைப்பிடிப்பதற்கு உரக்க அறிவித்தது. நக்சல்பாரியும் அதன் தொடர்சியும் அதற்கான படிப்பினைகள் நமக்கு தெரிந்தவை தான்.


தமிழக cpi ml அரசியல்


L. அப்பு 1970 செப்டம்பர் 28 -30-ம் தேதிகளில் கொல்லப்பட்ட பின்னர் ஏஎம்கே தமிழக பிரிவுக்கு தலைமை பொறுப்பேற்றார். அவர் சாரு இறக்கும் வரை அவரை சந்திக்கவில்லை. AMK அழித்தொழிப்பு நடைமுறை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் தலைமை பொறுப்பில் அதற்கான செயல்பாட்டில் இருந்தார். அவரின் கொள்கை கோட்பாட்டில் ஊசலாட்டமும் நடைமுறை செயல்பாடும் அவர்களின் ஆவணத்தில் உள்ளன. 


1972 ஜூலை 28 சாரு கொல்லப்பட்டதோடு இந்திய தழுவிய கட்சியின் செயல்பாடும் ஒற்றுமையும் சிதந்தது போலவே தமிழ்நாட்டில் அதன் தமிழக அணி 1972 நவம்பரில் தஞ்சையில் கூடியது. அதில் பல்வேறு விவாதங்கள் இருந்தாலும் AMK வை செயலாளராக கொண்டு செயல்படும் அமைப்பு முறை தொடர்ந்தது.


அதற்கிடையே பல்வேறு விதமான கருத்துக்கள் தோன்றினாலும் அதன் அமைப்பில் இருந்துதான் மற்றவை தோன்றின.


1973 ல் மாநில குழுவில் மூன்றுவித போக்கு முன்னுக்கு வந்தது.


1). கூட்டகுழு நிலையை தோழர்கள் தமிழரசன், தமிழ்வாணன் சின்னதுரை ஆகியோர் பின்பற்றினர்.


2). அழித்தொழிப்புநிலையை பழனியப்பன் மற்றும் தாத்தா பாண்டியன் பின்பற்றினர்.

இவை பிவிஎஸ் தலைமையில் வினோத் மிஸ்ரா குழுவில் இணைகிறாது.


3). கனி வலது சந்தர்ப்பவாத நிலையை எடுத்தார்.

கனியின் நிலைப்பாடே கோவை மாவட்டத்தில் தோன்றிய மேற்கு பிராந்திய குழுவின் நிலைப்பாடும் ஆகும். இதில் தோழர்கள் ராமானுஜம், ராகவன் ஆகியோர் அழித்தொழிப்பை எதிர்த்து வெளியேறியது 1974 பின்னர். அதன் சுருக்கம் கீழே.


3-1). தமிழக மா-லெ அமைப்பில் முதல் உடைப்பு 1974 தோன்றிய மேற்கு பிராந்திய குழு இதில் தோன்றியது அதன் பிரிவில் உண்டாகிய பல்வேறு பிரிவுகள் 1975 அமைப்பு கமிட்டி, 1976 (31 டிசம்பர் 1976- 01 ஜனவரி 1977 மாநில அமைப்பு கமிட்டி(SOC)) நவம்பர் 1979 மா.நி.அ பிளவு, 1981 TNOC(ML) தோற்றம் 1983 TNOC(ML) மாற்றம் TNOC யாக.

கூட்ட குழுவில் பயணித்தவர்கள் 1980 களில் ஆந்திர குழுவுடன் இணைந்து செயல்பட தொடங்கினர். அவர்கள் பல்வேறு வெகுஜன அமைப்புகளை கட்டினர். அதற்கு முன்னர் இவர்கள் வழிவந்தவர்களே தர்மபுரி வடற்காடு மாவட்டங்களில் பண்ணையார்களுக்கு எதிரான போராட்டங்களில் தீரமுடன் செயல்பட்டனர்.


தொடரும்..................


இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்