இலக்கு 87 இணைய இதழ்

உழைக்கும் மக்கள் அவர்களின் எந்த பிரசினைக்கு போராடினாலும், போலிஸின் குண்டாந்தடிதான் முதலில் சட்டம் ஒருங்கு என்ற பெயரில் வருகிறது, ஆனால் சம்பந்தபட்ட துறைசார்ந்தவர்கள் வருவதில்லை; தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வருவதில்லை! ஆனால் தங்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் ஓடோடி வருகின்றனர் ஏன்? அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் அதிகாரம் இவர்களுக்கு. அதேபோல் உத்தரவு போடும் போலிஸ் அதிகாரிகளும்; நீதி வழங்கும் நீதிபதிகளும்; சிறை கொட்டடியின் அதிகாரிகளும் மக்களினால் தேர்ந்தெடுக்கபட்டவர்களா!?உழைக்கும் மக்களை தண்டிக்கும் உரிமை எப்படி அவர்களுக்கு? உழைக்கும் மக்களுக்கும் அவர்களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இவர்கள் மக்களின் அன்றாட வாழ்வை ஆட்டிப்படைப்பதாக உள்ளது. இந்த அரசு அதிகாரம் படைதவர்கள்தான் இந்த தனிஉடமையை பாதுகாக்கும் பணமுதலைகளின் காவல் தெய்வங்கள். உழைக்கும் வர்க்கத்தின் தேவை அறியாத சுரண்டும் முதலாளிகளின் தேவை அறிந்து செயல்புரிபவர்களாகவும் உள்ளனர். இவர்கள் உழைக்கும் மக்களின் விரோதிகளே. சொத்துடைய வர்க்கத்தின் காவலர்களே. ஆக அரசும் அரசாங்கமும் வர்க்க அடிப்படையில் ஆளும் வர்க்கமாய் உள்ளவற்றின் நலன் சார்ந்தவையே! 

இந்த இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்

இந்த இதழை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்துங்கள் தோழர்களே

1).  அரசும் அரசியலும் சாதரண அறிமுகம்

2).சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியோஷோசி பாகம் 10

3).ஐ.நா மன்றம் உருவாக்கத்தில் ஸ்டாலினுடைய செயல்தந்திரம், வரலாற்றுப்பொருள்முதல்வாத கண்ணோட்ட வகைப்பட்டதே.-தேன்மொழி

4).பெரும் பணக்காரர்கள் மேலும் மேலும் பெரும் பணக்காரர்கள் ஆகிறார்கள்! தமிழாக்கம் -ஞானசூரியன்

5).திருத்தல்வாதம் செங்யென்சீ பாகம் 4

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றமும் பாராளுமன்றமும் அரசாங்கமாகும். இந்த அரசாங்கம்தான் சட்டங்களை போடுகிறது. இந்த சட்டங்களை நிறைவேற்றுவது அரசு அதிகாரிகள் அடங்கிய அரசு நிர்வாகம் ஆகும். இந்த அரசுதான் ஆயுதம் தாங்கிய போலீஸ் மற்றும் இராணுவத்தைக் கொண்டுள்ளது. இந்த அரசுதான் உழைக்கும் மக்களை வன்முறைகொண்டு அடக்குகிறது. போலீஸ்தான் போராடும் மக்களை தடிகொண்டு தாக்குகிறது, துப்பாக்கியால் சுடுகிறது. போராடும் மக்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. நீதிமன்றங்கள்தான் போராடிய மக்களை குற்றவாளி என்று சொல்லி சிறைக்கு அனுப்புகிறது. சிறைச்சாலையில்தான் சிறைத்துறை அதிகாரிகள்தான் சிறைக்குள் போராடிய மக்களை கொடுமைக் குள்ளாக்குகிறது. மக்களின் நலன்காக்கும் அரசுத்துறைகள்யாவும் மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்றால் அதனை மக்கள் தட்டிக்கேட்டால் அவர்கள் போலீசைக்கொண்டு மக்களை தாக்குகிறார்கள்.

இந்த அரசு அதிகாரிகள் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில்லை, ஆனால் செல்வந்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்கள். மக்களை இவர்கள் கால்தூசுக்கு கூட மதிப்பதில்லை. இதற்கு காரணம் இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. இவர்களை மக்களே தேர்ந்தெடுக்கவும் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் மக்களுக்கு இருக்குமானால் இந்த அரசு அதிகாரிகள் மக்களுக்கு எதிராக நடக்கமாட்டார்கள். ஒரு கம்யூன் வடிவத்திலான பாட்டாளிகளின் அரசில்தான் அதிகாரிகளை மக்கள் தேர்ந்தெடுக்கும் முறை செயல்படுத்தப்படும். ஆகவே அரசு அதிகாரிகளை மக்கள் தேர்ந்தெடுக்கவும் பதவிநீக்கம் செய்யவும் மக்களுக்கு அதிகாரம் கொண்ட கம்யூன் ஆட்சிமுறைதான் உழைக்கும் மக்களுக்குத் தேவை.

இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால் எல்லா கட்சிகளின் ஆட்சியிலும் நிரந்தரமாக அதிகாரத்தில் இருக்கின்ற நிறுவனம்தான் அரசு அதிகாரிகளைக் கொண்ட அதிகார வர்க்க அரசு என்ற நிறுவனமாகும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த அரசு அதிகாரிகளின் கைகளிலுள்ள அதிகாரத்தை யாராலும் பறிக்க முடியாது. ஒரு கட்சியிடமுள்ள ஆட்சி அதிகாரத்தைக்கூட ஒரு தேர்தலில் பறித்துவிட்டு வேறு ஒரு கட்சியிடம் ஆட்சி அதிகாரத்தை தேர்தல்மூலம் மக்களால் கொடுக்கமுடியும். ஆனால் எப்போதும் ஒரு அரசு அதிகாரியிடமிருந்து அதிகாரத்தை மக்களால் பறிக்கவும் முடியாது வேறு ஒருவருக்கு அதிகாரத்தை கொடுக்கவும் முடியாது. ஆகவேதான் இங்கே அரசு அதிகாரிகள் அவர்கள் நினைத்ததை யெல்லாம் செய்துகொண்டு ஆட்டம்போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

அரசு என்கின்ற இந்த ஏற்பாடு (நீதி, நிர்வாகம், இராணுவம், போலிஸ் ) ஏன் எதற்கு எப்போது தோன்றியது? என்பதை நாம் அறிந்து கொண்டிருப்பீர் ஆக உழைக்கும் மக்களுக்கான அரசு எப்படி இருக்கும் என்பதனை பாரீஸ் கம்யூன் நமக்கு அளித்துள்ளது அவைதான் உழைக்கும் மக்களுக்கான அரசு வடிவமாக இருக்க முடியும். அதனைதான் லெனின் அவர்களும் ஏப்ரல் அறிக்கையில் தெளிவுப்படுத்தி இருப்பார்.

கம்யூனிஸ்டுகள் சுரண்டல் அற்ற சமூகத்தை விரும்புவர்கள். சுரண்டலும் ஒடுக்குமுறையும் இல்லாத.... எல்லாச் செல்வமும் எல்லோருக்கும் கிடைக்க கூடிய வகையில்... ஒருவர் மீது எல்லோரும், எல்லோர் மீது ஒருவரும் அக்கறை செலுத்தக் கூடிய... சமூகம் படைப்பதே இலட்சியமாக கொண்டவர்கள். இதனை அடைய இந்த அரசு கண்ணை மூடியிருக்குமா?

மக்களின் வறுமை, வேலையில்லா கொடுமைகளுக்கு போராடினாலே குண்டாந்தடியை காண்பிப்போர் அவர்களை இல்லாதொழிக்க சம்மதிப்பார்களா? மலைப்போல் மூலதனத்தையும் அதிகார பலத்தையும் கொண்டுள்ளோரை சிறுதுளியே ஆனால் கடல் அளவுள்ள பெருத்த எண்ணிக்கையில் உள்ள உழைப்பாளிகள் தங்களின் விடுதலைக்கு இவர்களை இல்லாதொழிக்க ரசிய சீன படிப்பினைகள் வேண்டும் என்பதே... அவை நீண்ட பணிதான், இருந்தும் அவையின்றி உழைக்கும் மக்கள் இந்த அரசால் பயன் பெறா!

1). சோசலிசம் மற்றும் கம்யூனிச சமுதாயத்தை அடைவதே கம்யூனிஸ்டுகளின் இலட்சியம் ஆகும். இந்த இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் ரஷ்யாவிலும், சீனாவிலும் கம்யூனிஸ்டுகள் அதற்கு தடையாக இருந்த எதிரிகளை எதிர்த்துப் போராடி வீழ்த்தி சோசலிசத்தைப் படைத்தனர். எனினும் சோசலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் எதிரான எதிரிகள் மிகவும் பலம்வாய்ந்தவர்களாக இப்போதும் நீடிக்கின்றதை நாம் பார்க்கிறோம். இந்த பலம்வாய்ந்த எதிரிகளை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து போராட வேண்டியது அவசியமாகவே இன்றும் உள்ளது. அது அவ்வளவு எளியது அல்ல. கம்யூனிஸ்டுகளும் முதலாளித்துவத்தால் பாதிக்கப்படும் மக்களும் வாழ்வின் ஒவ்வொரு அரங்கிலும் இந்த எதிரிகளை எதிர்த்துப் போராடி இந்த எதிரிகளை அடியோடு வீழ்த்தி சவக்குளிக்குள் புதைக்க வேண்டும். அப்போதுதான் நாம் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் கொண்டுவர முடியும். அது ஒரு நீண்ட நெடிய கடினமான போராட்டத்தின் மூலமே உழைக்கும் மக்கள் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் அடைய முடியும். இத்தகைய நீண்ட நெடிய போராட்டமின்றி கம்யூனிசத்தை எளிதாக அடையவே முடியாது. இத்தகைய நீண்ட போராட்டத்தின் அவசியத்தைப் புரிந்துகொண்டு செயல்படுபவர்தான் சிறந்த கம்யூனிஸ்டாக முடியும். ஆனால் சில பேர்வழிகள் உடனடியாக தங்களின் வாழ்வியல் பிரச்சனைகள் தீரவில்லை என்பதால் சோர்வடைந்து கம்யூனிச கொள்கையின் மீதே நம்பிக்கை இழந்து உடனடியாகச் சில சலுகைகள் வழங்குபவர்களை நம்பி அவர்கள் பின்சென்று அவர்களின் துரோகத்துக்குப் பலியாகிறார்கள். உதாரணமாக மக்களுக்கு திமுக நன்மை செய்யும் என்று நம்பி அவர்களுக்கு ஓட்டுப்போட்டு பதவி கொடுத்தனர்.

2). பல நாடுகளில் கம்யூனிஸ்டுக் கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டு கம்யூனிஸ்டுகளால் பலவிதமான போராட்டங்கள் நடத்தப்பட்டு அந்தப் போராட்டங்களுக்கு கம்யூனிஸ்டுகள் தலைமைதாங்கி வழிகாட்டினார்கள் என்பது வரலாறாகும். எனினும் இத்தகைய கம்யூனிஸ்டுகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தற்போது திருத்தல்வாதிகளாகவும் கலைப்புவாதிகளாகவும் குறுங்குழுவாதிகளாகவும் மாறிவிட்டனர். இதற்கு சமூக காரணங்கள் இருக்கிறது. சமூகத்தில் ஏகாதிபத்திய முதலாளிகளும் பாசிஸ்டுகளும், நிலப்பிரபுக்களும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் உழைப்பின் பலனை சுரண்டி உழைக்கும் மக்களை ஒடுக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் சுரண்டல் தற்போது எந்தளவுக்கு நடக்கிறது என்றால் உழைக்கும் மக்கள் அவர்கள் உயிர்வாழ்வதே மிகவும் கடினமான நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய சூழலில் உழைக்கும் மக்களுக்குப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற சூழல் நிலவுகின்றது. இந்த சூழலைப் புரிந்துகொண்ட கம்யூனிஸ்டுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூழ்நிலையை விளக்கி இந்தக் கொடுமைகளுக்கு காரணம் ஏகாதிபத்திய முதலாளிகளும் அவர்களின் நலனுக்காகச் செயல்படும் அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகள்தான் என்பதை விளக்கி உழைக்கும் மக்களை போராடுவதற்கு அணிதிரட்டுகிறார்கள். ஆகவே மனித சமுதாயத்தில் முதலாளிகளின் சுரண்டல் நீடிக்கும்வரை உழைக்கும் மக்களின் போராட்டங்கள் தொடரவே செய்யும். அதற்கு கம்யூனிஸ்டுகள் தலைமை கொடுப்பதும் தவிர்க்க முடியாது. எனினும் முதலாளி வர்க்கமானது சூழ்ச்சி செய்து கம்யூனிஸ்டுகளிடையே தொழிலாளி வர்க்க சீமான்களை உருவாக்கி அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து அந்த கம்யூனிஸ்டுகளை துரோகிகளாக மாற்றி வர்க்கப் போராட்டத்தை திசைதிருப்பி முதலாளிகள் அவர்களை காப்பாற்றிக்கொள்ளலாம். ஆனால் இதன் மூலம் முதலாளிகள் தற்காலிகமாக வெற்றிபெறலாம். ஆனால் உண்மையான கம்யூனிஸ்டுகள் உருவாவது காலத்தின் கட்டாயமாகும். வருங்காலத்தில் சிறந்த கம்யூனிஸ்டுகளும் சிறந்த கம்யூனிஸ்டுக் கட்சியும் உருவாகி பசி பட்டினியால் செத்து மடிந்துகொண்டிருக்கும் மக்களைத் திரட்டி புரட்சி நடத்தி சுரண்டலுக்கு முடிவுகட்டுவார்கள். அதற்குத் தேவையான மார்க்சிய அறிவை மக்களிடம் வளர்ப்பது நமது முதன்மையான பணியாகும். ஒருபுறம் மானிட இன வரலாற்றிலேயே மகத்தான லட்சியமாக கம்யூனிசம் விளங்குகிறது; முன் எப்போதும் இல்லாதவாறு அது சுரண்டலையும் வர்க்கங்களையும் ஒரேயடியாக ஒழித்துக்கட்டி மனித குலத்தை விடுவித்து மகிழ்ச்சியான ஒளிவீசும் எழில்மிக்க உலகத்தை கொண்டுவருவதாக விளங்குகிறது; ஆனால், இன்னொரு புறமோ, பிரம்மாண்டமான கடமை மனித குலத்தின் முன் இருக்கிறது. மானிட இன வரலாற்றிலேயே மிகவும் சோதனையான கடமையாக கம்யூனிசம் விளங்குகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்; வரலாற்றிலேயே நீண்டகால, கசப்பான நெளிவு சுழிவான போராட்டத்தின் மூலமாகவே சுரண்டும் வர்க்கங்கள் அனைத்தையும் ஒழித்துக்கட்ட முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

3). மனிதகுல வரலாற்றிலேயே மிகமிக மகத்தான லட்சியம்தான் கம்யூனிச சமூகமாக சமுதாயத்தை மாற்றும் லட்சியமாகும். இந்த லட்சியத்தை எப்போதும் மனதில் நிறுத்திக்கொண்டு செயல்படுபவர்கள்தான் சிறந்த கம்யூனிஸ்ட் ஆவார். இந்த லட்சியத்தை மனதார ஏற்றுக்கொண்டு அது பற்றிய மார்க்சிய ஆசான்களின் போதனைகளை மக்களிடம் பரப்புவதையே லட்சியமாகச் செயல்பட்டுக்கொண்டு இருப்பதுதான் இலக்கு இணையதளப் பத்திரிக்கையாகும். கம்யூனிச லட்சியத்தை அடைவதற்கு முதலில் நாம் செய்ய வேண்டிய பணி என்பது, சுரண்டலையும் வர்க்கங்களையும் நாம் ஒழிப்பதற்கு பாடுபட வேண்டும். இந்த சுரண்டலையும் வர்க்கங்களையும் ஒழித்துவிட்ட பின்புதான் மனித குலமானது அனைத்துவகையான நெருக்கடிகள், இழிவுகளிலிருந்து விடுதலை பெற்று மகிழ்ச்சியான ஒளிவீசும் உலகத்தைப் படைத்து அதில் வாழ முடியும். அத்தகைய கம்யூனிச உலகத்தைப் படைப்பது அவ்வளவு எளிதானதல்ல. அதற்காக மனிதகுலம் கடுமையாகப் பாடுபட வேண்டும்.

இங்கே சிலர் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டு மனிதர்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனைகளை தீர்ப்பதே ஒரு மிகப் பெரிய சாதனையாக கருதுகிறார்கள். ஆனால் கம்யூனிஸ்டுகளின் லட்சியம் அன்றாடப் பிரச்சனைகளை தீர்ப்பதோடு சுரண்டலை ஒழிப்பதற்கான பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்பதே ஆகும். சுரண்டல் ஒழிப்பு பணி என்பது ஒரு நீண்டகாலப் பணியாகும். அதற்கான கொள்கைகளை தொடர்ந்து மக்களிடம் பிரச்சாரம் செய்துகொண்டே மக்களிடம் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். சுரண்டலை ஒழிப்பதற்காகத் திட்டமிட்டு மக்கள்திரள் போராட்டங்களை முதலாளிகளுக்கு எதிராக நடத்த வேண்டும். சுரண்டலை பாதுகாக்கும் அரசை தகர்த்துவிட்டு சுரண்டலை ஒழிப்பதற்கான அரசமைக்க நாம் தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும். இந்த வகையில் கம்யூனிஸ்டுகளின் கடமையானது பிற அரசியல்வாதிகளைப் போல் அல்லாமல் மிகவும் கடுமையானதாகவும் பல சோதனை எதிர்கொள்வதாகவும் உள்ளது என்பதை இங்குள்ள பல கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்ளவில்லை. சுரண்டலை ஒழிக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் பிரச்சாரத்தை துவங்கியவுடனேயே கடுமையான தாக்குதல்களை முதலாளித்துவ அரசிடமிருந்து எதிர்நோக்க வேண்டிவரும். சுரண்டலை ஒழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட பல கம்யூனிஸ்டுகள் அரசுப் படையால் படுகொலை செய்யப்பட்டு தியாகியான வரலாறு நாம் அறிந்ததே. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்ன? நெளிவு சுழிவான முறையிலேயே கம்யூனிஸ்டுகள் போராட வேண்டியுள்ளது. அதற்காக எதிரிகளிடம் நாம் சரணடைவது மிகவும் தவறாகும். எதிரி பலவீனமாக இருக்கும் போது நாம் தாக்க வேண்டும், எதிரி பலமாக இருக்கும் போது நாம் நமது மக்களிடம் அரசியல் பிரச்சாரம் செய்து நம்மைப் பலப்படுத்த வேண்டும். அதற்கு மாறாக எதிரி விரும்பும் வகையில் நமது போராட்டத்தை நடத்தி எதிரியுடன் சரணடையக் கூடாது. நமது எதிரியை அரசியல் அதிகாரத்திலிருந்து வீழ்த்திவிட்டு நமக்கான சோசலிச அரசை உருவாக்கியவுடன் நமது பணி முடிந்துவிடாது. அத்தகைய அரசின் மூலம் நீண்டகாலத்துக்கு சமூகப் பொருளாதாரம்மற்றும் பண்பாட்டுத் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவருவதற்கு தொடர்ந்து விடாப்பிடியாகப் பாடுபட வேண்டும். ஆகவே கம்யூனிஸ்டுகள் சோசலிச மற்றும் கம்யூனிச சமுதாயத்தைப் படைக்க மிகவும் கடுமையான சோதனையான பாதையில்தான் பயணம் செய்தாக வேண்டும். இந்தப் பாதையில் செல்வதற்கு தயங்குபவர்களால் கம்யூனிஸ்டாக நீடிக்க முடியாது.ஆகவேதான் நோகாமல் நொங்குதிண்ண விரும்பும் பயந்தாங்கொள்ளிகளைப் பார்த்து “நாங்கள் செங்குத்தான பாதையில் சென்று மலை உச்சிக்கு செல்ல விரும்புகிறோம், ஆனால் சிலர் சதுப்புக்குளி வழியாகச் செல்ல வேண்டும் என்கிறார்கள், அவர்கள் விரும்பும்சதுப்புக்குளிக்கே அவர்கள் செல்லலாம் ஆனால் எங்களது கைகளைவிட்டுவிடுங்கள்” என்று லெனின் கேலி செய்தார். ஆகவே வேதனையான பாதையில் கம்யூனிஸ்டுகள் பயணம் செய்தால் மட்டுமே சமூகத்திலுள்ளதீயவைகளை ஒழித்து நல்லவைகளை நிலைநாட்ட முடியும் என்றுமார்க்சிய ஆசான்கள் போதித்துள்ளார்கள். இந்த வேதனையான பாதையில்நாம் செல்லும்போது நமது தோழர்களில் சிலர் நம்மை எதிர்த்து தாக்குதல்கள் நடத்துவார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் இதுநடைமுறை சாத்தியமில்லாதது என்பார்கள். இது கற்பனையானதுஎன்பார்கள். இவ்வாறு சொல்லி நமது மன உறுதியை தகர்க்க முயற்சி செய்வார்கள். அவர்களது சதிக்குப் நாம் பலியாகாமல் நமது நீண்டகால லட்சியமான சோசலிசம், கம்யூனிசம் பற்றிய கருத்தை மக்களிடம்தொடர்ந்து பிரச்சாரம் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவோம். நாம்நடத்தும் அன்றாடப் பொருளாதாரப் போராட்டத்திற்காக வைக்கப்படும்பொருளாதார முழக்கங்களோடு அரசியல் முழக்கங்களையும் முன்வைத்துபுரட்சிகரமான அரசியல் மாற்றத்திற்காவும் போராடுவோம். நமது லட்சியங்களை ஒருபோதும் குறுக்கிக்கொள்ள மாட்டோம். நமது லட்சியம் மிகவும் உயர்ந்த உன்னதமான சோசலிசம் மற்றும் கம்யூனிச லட்சியமாகும். இந்த உயர்ந்த லட்சியத்தை அடையும் நோக்கத்திலேயே எமது பிரச்சாரங்களையும் போராட்டங்களையும் அமைத்துக்கொள்வோம். சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் அடையும்வரை எங்களது போராட்டங்கள் ஓயாது என்று உறுதி ஏற்கிறோம்.

கம்யூனிஸ்ட் கட்சியானது பாட்டாளி வர்க்கத்தவர்கள் மற்றும் அடக்கி ஒடுக்கி சுரண்டப்படும் திரளான மக்களைச் சார்ந்து நின்று மார்க்சிய லெனியத்தினுடைய வழிகாட்டலில் கம்யூனிசம் என்ற மகத்தான இலட்சியத்தை இலக்காகக் கொண்டு புரட்சிப் போராட்டங்களை நடத்திச் சென்று மொத்த சமுதாயத்தையும் உந்தித் தள்ளி இறுதி வெற்றி கிட்டும் வரை விடாப்பிடியாக கொண்டு செல்லும். சமூக வளர்ச்சியின் வரலாற்றுப்பூர்வமான விதிகள் மொத்த மனித சமுதாயமும் கம்யூனிசத்தை நோக்கி முன்னேறிச் சொல்வதை தவிர்க்க முடியாததாக்கி உள்ளன என்பதே இதற்குக் காரணம். 

முழுமையாக இதழில் வாசிக்க தோழர்களே...

இலக்கு 87 இணைய இதழ் PDF வடிவில் இந்த இணைப்பில் அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே


இலக்கு இணைய இதழ் வெளியீடுகளாக விரைவில் வரவுள்ளவை

 1) அரசு பற்றி -லெனின் நூலுக்கு விளக்கமுடன். ஆசான் லெனின் நூலை விளக்கி கொண்டு வந்துள்ளோம். இன்றைய ஏகாதிபத்தியம் உலகையே தன் மூலதன ஆதிக்கதால் அடிமைப் படுத்தும் கொடூரத்தை புரிந்துக் கொள்ள, இந்த அரசை திருத்த சமரச படுத்த முனோவோரை அம்பலப்படுத்தி மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதலை புரிந்துக் கொள்ள ஒரு முயற்சியே தோழர்களே- இந்த நூலை Pdf வடிவில் இணையத்தில் பகிர்ந்துக் கொள்ளவுள்ளோம் அதே நேரத்தில் நூல் வடிவில் பிர்ண்ட் வெர்சன் கொண்டுவரும் முயற்சியிலும் உள்ளோம். நூலின் பக்கம் 140. குறைவான விலையில் கொண்டுவரவுள்ளோம். தேவைப்படுவோர் விருப்பம் தெரிவித்தால் அதற்கேற்றவகையில் print செய்து அனுப்ப நினைக்கிறோம். 

வரவுள்ள நூல். அரசு பற்றி லெனின் விளக்கவுறையுடன்.

இன்று தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கும் தூய்மைபணியாளர்கள் செவிலியர் மற்றும் பல்வேறு தொழிலாளர்கள் இன்று இந்த அரசாங்கத்தை எதிர்த்து போராடுகின்றனர். ஆனால் அரசான போலிஸ் அவர்களை அச்சுறுத்துகிறது. ஆக அரசை புரிந்து கொள்ள வேண்டிய தேவை நமக்கிருக்கிறது.

உழைக்கும் மக்கள் அவர்களின் எந்த பிரசினைக்கு போராடினாலும், போலிஸின் குண்டாந்தடிதான் முதலில் சட்டம் ஒருங்கு என்ற பெயரில் வருகிறது, ஆனால் சம்பந்தபட்ட துறைசார்ந்தவர்கள் வருவதில்லை; தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வருவதில்லை! ஆனால் தங்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் ஓடோடி வருகின்றனர் ஏன்? அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் அதிகாரம் இவர்களுக்கு. அதேபோல் உத்தரவு போடும் போலிஸ் அதிகாரிகளும்; நீதி வழங்கும் நீதிபதிகளும்; சிறை கொட்டடியின் அதிகாரிகளும் மக்களினால் தேர்ந்தெடுக்கபட்டவர்களா!? உழைக்கும் மக்களை தண்டிக்கும் உரிமை எப்படி அவர்களுக்கு? உழைக்கும் மக்களுக்கும் அவர்களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இவர்கள் மக்களின் அன்றாட வாழ்வை ஆட்டிப்படைப்பதாக உள்ளது

அடுத்த நூல் சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? நூல் அடுத்தது இதனை நமக்கான தேவையை முன்னிலப்படுத்தி எழுதப்பட்டுள்ளது இதன் பக்கங்கள் 192. விரைவில் PDF மற்றும் PRINT கொண்டுவரவுள்ளோம்.

2).மார்க்சிய ஆசான்கள் ஏராளமான போதனைகளை நமக்கு வழங்கியுள்ளார்கள். அந்த போதனைகளை நாம் படித்துப் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் லியுஷாவோகி எழுதிய சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி என்ற நூலை நாம் படித்து புரிந்துகொள்வோம். அன்றைய சீனாவைப் போலவே இங்கும் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியமைத்து உறுதிப்படுத்தும் நிலையிலேயே நாம் உள்ளோம். மேலும் கம்யூனிஸ்டுகள் பல பிரிவாக பிரிந்திருக்கும் நிலையிலேயே நாம் உள்ளோம். ஆகவே இத்தகைய மோசமான நிலையிலுள்ள நாம் ஒவ்வொருவரும் நமது மார்க்சிய லெனினிய அறிவை வளர்த்துக் கொள்வதும் அதனை திடப்படுத்துவதும் மிகமிக அவசியம் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

 3). சாதி அன்றும் இன்றும் மார்க்சிய பார்வையில் நூல் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம்.

சாதி ஒழிப்பு போராளிகளாய் களத்தில் உள்ளோர் சாதியின் தோற்றம் இன்று சாதியின் இருப்பை புரிந்துக் கொள்ளாமல். மந்திரத்தில் மாங்காய் வரவழைப்பது போல் சாதியை ஒழிக்க கிளம்பியுள்ள இவர்கள் எதையெதையோ பேசி உழைக்கும் மக்களை ஏமாற்றுகின்றனர். உழைக்கும் மக்களுக்கு தேவையான சமூக அறிவை புகட்ட வேண்டியவர்களே தங்களுக்கான சமூக அறிவின்றி உள்ளனர். மத கோட்பாடுகள் பின்னும் இச்சமூக அறிவுஜீவிகளான அம்பேத்கர் பெரியார் போன்றோரை முன்னிலை படுத்தியும் சமூக இயக்கத்தை புரிந்துக் கொள்ளாமல் சாதியின் இருப்பையும் ஒழிப்பையும் எங்கே நிகழ்த்த போகின்றனர்? ஆகையால் கம்யூனிஸ்டுகள் தங்களை ஆயத்த படுத்திக் கொள்ளும் ஒரு முயற்சிதான் இந்த நூல். இந்த நூல் சென்னை புத்த கண்காட்சிக்கு கொண்டுவர முயலுவோம். தேவைப்படுவோர் தொடர்ப்பு கொள்ளவும்.

4). ஏகாதிபத்தியம் பற்றிய புரிதலில் உள்ள குழப்பத்தை விரிவாக விவாதிக்க

தோழர்களே,

தன்னை கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரின் முதல் கடமை மார்க்சிய லெனினியத்தை பாதுகாத்து வளர்த்தெடுப்பது, அதன் மீது தொடரும் தாக்குதல்களை முறியடிப்பது; இரண்டாவது மார்க்சிய லெனினியத்தை தனது சொந்த நாட்டுக்குப் பொருத்தி சமூக மாற்றத்தை முன்கொண்டு செல்வது. இப்பணிகளை முன்கொண்டு செல்வது கம்யூனிசத்தை நேசிப்பவர்களின் உண்மையான பணியாக இருக்கும். அதனால்தான் கம்யூனிஸ்டு ஒருங்கிணைப்பு குழு மற்றும் இலக்கு இணையதளம் ஒன்றிணைந்து மார்க்சிய லெனினிய கல்விக் கழகம் என்ற அமைப்பை நிறுவியுள்ளோம். மார்க்சிய அடிப்படைகளை புரிந்துக் கொள்ளவும் நம்மிடையே உள்ள பல்வேறு குழப்பங்களுக்கு விடைகாணவும் சில சிறிய வெளியீடுகள் கொண்டுவர தொடங்கியுள்ளதன் அடிப்படையில் இந்த நூலைக் கொண்டு வருவதை முதன்மையாக கருதுகிறோம். அதன் அடிப்படையில் சில வெளியீடுகளை வரிசையாக கொண்டுவர முயன்றுள்ளோம். அதன்படி இந்த வெளியீடு உங்கள் முன்அரைக்காலனி மறுகாலனி புதியகாலனி குழப்பமும் தெளிவும் நூலை வைத்துள்ளோம். இதனை வாசித்து விவாதிக்க அனைவரையும் அழைக்கின்றோம் தோழர்களே.

எமது இணையதளத்தில் வெளியிடும் கருத்துகளை இணைய இதழ்களை, வெளியீடுகளை படித்து ஆதரவு நல்கியும் விமர்சனங்களை முன்வைத்த தோழர்களின் அணுகுமுறை எமக்கு மேலும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் ஊட்டுகிறது. அதே சமயம் சிலர் எமது வெளியீடுகளை படித்துவிட்டு கருத்துச் சொல்லாமல் இருப்பது எமக்கு வருத்தம் அளிப்பதாகவும் உள்ளது சில தோழர்கள் படித்துவிட்டு இவர்களுக்கெல்லாம் பதில் சொன்னால் நமது இமேஜ் என்னாவது என்று மௌனம் காத்து வருகின்றனர். சில தோழர்கள் நூல்களை புரட்டிப் பார்த்துவிட்டு அமைப்பில் விவாதித்துவிட்டு கருத்து சொல்வதாக கூறுகின்றனர். ஆனாலும் ஒன்று மட்டும் உண்மை. “மரம் ஓய்வு நாடினாலும் காற்று விடுவதில்லை” என்ற புகழ்பெற்ற வரிகளை மறந்து விட வேண்டாம்.

5). communist international வரலாற்று பக்கங்களிலிருந்து

கம்யூனிஸ்ட் அகிலமும் வரலாற்று வழியில் அகிலங்களின் தோற்றமும் மற்றும் களைப்பும் தோழர்கள் ஸ்டாலின் மாவோ மீதான ட்ராட்ஸ்கிய வாதிகளின் அவதூறு கருத்துகளுக்கு பதிலும். சர்வதேச அளவில் ஏகாதிபத்திய சக்திகள் மேலோங்கியுள்ள நிலையில் சோசலிச சக்திகள் பின்னடைந்தும் இருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் பல பிரிவுகளாக பிரிந்து நின்று ஆளும் கும்பலை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கின்ற காலகட்டம். மார்க்சியம் தோற்றுவிட்டது சோசலிசம் சாத்தியமில்லை என்று ஏகாதிபத்திய சக்திகள் கூப்பாடு போடும் காலகட்டத்தில் சிலர் கம்யூனிஸ்ட் அகிலம் மற்றும் தோழர் ஸ்டாலின் தோழர் மாவோ மீது எதிரிகள் கூட சொல்லத் துணியாத வார்த்தைகளான, துரோகிகள் என்றும் கலைப்புவாதிகள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். இதன் மூலம் அவர்கள் சர்வதேச மார்க்சிய லெனினிய இயக்கத்தின் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர். உண்மையான மார்க்சிய லெனினிய சக்திகள், ட்ராட்ஸ்கியவாதிகளின் கருத்தை வன்மையாக கண்டிக்க வேண்டும். அதற்கான வெளிப்பாடே இந்த சிறுநூல்.

6). NGO கள் யார்அறிவோம்

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில், “ஐரோப்பாவை கம்யூனிச பூதாம் ஆட்டுவதாக…..” கூறும் ஆசான்கள் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் முதலாளித்துவ புனித கூட்டணி பற்றி பேசியிருப்பர். ஆனால் முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரின் பின்னரான கம்யூனிஸ்டுகளின் வளர்ச்சி சோசலிச புரட்சியின் நூற்றாண்டாய் இருக்கவே ஏகாதிபத்தியம் தன்னை இழக்காமல் நிரந்தரமாக கட்டிக்காக்க தன் எதிரி முகாமில் செய்தவை பற்றி பல்வேறு தகவல்கள் நம் முன் உள்ளன. அதன் அடிப்படையில் இந்த தேடல் தொடரும்.

ஒரு காலத்தில் தமிழகத்தில் செயல்பட்டுக்கொண்டு இருந்த இடதுசாரி அமைப்பின் மற்றும் முதலாளித்துவ அமைப்பின் தலைவர்களால் ஏமாற்றப்பட்டுக்கொண்டு இருந்த மக்கள் அந்த அமைப்புகளிலிருந்து வெளியேறி புரட்சிகரமான அமைப்புகள் மார்க்சிய லெனினிய அமைப்புகள்தான் என்று கருதி அந்த அமைப்புகளில் இணைந்து செயல்பட முன்வந்தனர். கலாச்சாரத் தளத்திலும் சித்தாந்தத் தளத்திலும் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் ஏகாதிபத்திய மற்றும் நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை எதிர்க்க வேண்டும். அதேபோலவே ஏகாதிபத்திய மற்றும் நிலப்பிரபுத்துவ சித்தாந்தம் மற்றும் சிந்தனைமுறையை எதிர்த்துப் போராட வேண்டும். இந்த நிலையில் ஏகாதிபத்தியத்தியத்தோடும் இங்குள்ள பெருமுதலாளிகளோடும், நிலப்பிரபுத்துவ பிற்போக்கு கிராமப்புற ஆதிக்க சக்திகளோடும் தொடர்பு வைத்திருக்கும் அவர்களுக்காகவே பாடுபடும் அரசியல் சக்திகளோடு உறவுகொண்டும். அவர்களின் கொள்கை மற்றும் அரசியலை ஏற்றுக்கொண்டு செயல்படுவதன் மூலம் ஏகாதிபத்திய மற்றும் நிலப்பிரபுத்துவ கருத்துக்களையும் அதன் ஆதிக்கத்தையும் நாம் எதிர்த்துப் போராட முடியாது. அப்படி போராடுவது நமக்கு எதிர்விளைவையே தரும். ஆகவே ஏகாதிபத்தியத்தையும் நிலப்பிரபுத்துவத்தையும் எதிர்த்த நமது போராட்டத்துக்கு மார்க்சிய லெனினியம் மட்டுமே ஒரே தத்துவ வழிகாட்டுதலாக இருக்க முடியும். இந்த உண்மையை உணர்ந்துகொண்ட இளைஞர்கள் மார்க்சியத்தை கற்றுக்கொள்ளவும், அதனை ஏற்றுக்கொண்டு செயல்படவும் முன்வந்தனர். ஆனால் பல குழுக்களாகப் பிளவுபட்டிருந்த மார்க்சிய லெனினியக் குழுக்களிலுள்ள தலைவர்கள் அமைப்பில் இணைந்த இளைஞர்களுக்கு மார்க்சியத்தின் அடிப்படைகளை கற்றுக்கொடுக்க பிடிவாதமாகமறுத்துவிட்டார்கள். இதன் காரணமாக திருத்தல்வாத அமைப்பிலும் மார்க்சிய லெனினியக் குழுக்களிலும் உள்ள தோழர்கள் மார்க்சியத்தின் அடிப்படைகளை புரிந்துகொள்ளவில்லை. இந்த அமைப்புகளிலெல்லாம் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு கடைபிடிப்பதே இல்லை. அதிகார மையம் என்ன உத்தரவிடுகிறதோ அதனை செயல்படுத்த வேண்டியதுதான் ஊழியர்களின் கடமையாகும். தலைவர்களை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என்ற நிலையே உள்ளது. இதன் காரணமாக மார்க்சிய லெனினியக் குழுக்களின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். இந்தச் சூழலில் மார்க்சிய லெனினியக் குழுக்கள் மேலும் மேலும் பிளவுண்டு சிறு குழுக்களாக மாறிக்கொண்டு இருக்கும்போது; சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகளின்தலைவர்கள் தம்முடைய கட்சிதான் பிளவுபடாமல் பெரிய கட்சியாக நீடிக்கிறது என்றும் இந்தக்கட்சியை எதிர்த்து குறைசொல்பவர்கள் எல்லோரும் துரோகிகள் என்ற கருத்தை அணிகளிடம் பரப்பி அவர்களது அமைப்பைபாதுகாத்துக்கொள்ள முயல்கிறார்கள். எனினும் இந்தத் தலைவர்கள் செய்யும் தவறுகளை எதிர்த்துப் போராட முடியாதவர்கள் இந்தக்கட்சியிலிருந்து வெளியேறி திமுக, அதிமுக போன்ற பிற்போக்கு முதலாளித்துவ கட்சியில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். இந்தநிலையை மாற்றுவதற்கு ஒரேவழி கட்சியிலுள்ளவர்களுக்கு மார்க்சியத்தின் அடிப்படைகளை போதித்துசித்தாந்த பலமுள்ளவர்களாக மாற்றுவதே முதன்மையான பணியாகும். இன்றையசூழல் தொடர்ந்து நீடித்தால்பாசிச கட்சியின் வளர்ச்சியை கம்யூனிஸ்டுகளால் தடுத்துநிறுத்த முடியாது. பாசிசக் கொள்கைகளை முறியடிக்கும் வலிமை மார்க்சிய லெனினியத்துக்கு மட்டுமே உள்ளது. வரலாற்றில் பாசிசத்தை வீழ்த்தியது மார்க்சிய லெனினியமே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே கம்யூனிசத்தை நேசிப்பவர்கள் கட்சித் தலைவர்களின் மீது நம்பிக்கை கொள்வதைக்காட்டிலும் மார்க்சிய ஆசான்களது போதனைகளின் மீது நம்பிக்கைவைத்து அதனை கற்றுபின்பற்ற வேண்டும்.

இதனை மறுத்து தங்கள் மனம்போன போக்கில் எழுதும் மார்க்சியம் அற்ற போக்கும் ஏகாதிபத்திய எஜெண்டுகள் NGO யார் அவர்களின் பணி என்ன ஒரு தேடல்தான் இந்த நூல்.

ஆகையால் தோழர்களே... மார்க்சியம் எனும் கடலில் முத்தெடுக்க மார்க்சியம் கற்று தேறவேண்டியுள்ளோம். உண்மையில் மார்க்சிய ஆசான்கள் போதித்ததையே ஏற்க மறுத்து குழப்புவோர்களை முறியடிக்க ஆசான்களின் எழுத்துகளை முன் வைத்து நமது நாட்டிற்குறிய குறிப்பான பொதுவான நிலைகளை புரிய புரிந்துக் கொள்ள முயன்றூள்ளோம் தோழர்களே.

தேவை படுவோர் 7010134299 என்ற பகுதியில் தொடர்பு கொள்க pdf நூல்கள் பதிவேற்றம் செய்தவுடன் அனுப்பவும் அல்லது printed நூல் வேண்டுமென்றாலும் தெரிவிக்க தோழர்களே.  

இன்னும் பின்னர் எங்களின் வெளியீடுகளை உங்கள் முன் வைக்க உள்ளோம் தோழர்களே.

மார்க்சியமும்- மார்க்சியம் அல்லாத போக்குகளும்-1

தோழர்களே,

மார்க்சியமும் மார்க்சியல் அல்லாத போக்குகள் பற்றி தொடர் எழுத நினைப்பதன் நொக்கம் மார்க்சியவாதிகளே, மார்க்சிய வார்த்தைகளை பயன்படுத்திக் கொண்டே மார்க்சிய விரோத போக்கில் செயல் படுகின்றனர். அவர்களை அம்பலப்படுத்துவதோடு நமக்கான புரிதலை உருவாக்குவதே எமது நோக்கம்.

இன்று அரசு பற்றி சற்று புரிந்துக் கொள்ள முயலுவோம் ... 

 மார்க்சியம் எனும் உலக கண்ணோட்டம் தனிசொத்துடமையின் கோர வடிவமான சுரண்டலை ஒழித்து தனிச்சொத்தை சமூகத்தின் பொது சொத்தாக சுரண்டல் அற்ற சமூகம் படைப்பதே.

சுரண்டலற்ற சமூகத்தை படைக்க சுரண்டல் சமூகத்தை அகற்ற சொல்கிறது மார்க்சியம். இதனை நடைமுறையில் பாரிஸ் கம்யூன் படிப்பினைகளின் அடிப்படையில்  ரசீய சீன மற்றும் பல நாடுகளில் ஏற்பட்ட புரட்சி சாட்சியம் பகிர்கின்றது.  

மார்க்சியம் உலக தத்துவமாக பல நாடுகளில் புரட்சியின் மூலம் சாதித்துவிட்டது. அதனை வழிபற்றி நடக்க தவறியவர்கள் தோல்வி கண்டனர். மார்க்சியத்தை மறுக்கும் சிதைக்கும் திருத்தும் போக்கானது நம்மவர்களிடையே இன்று மலிந்து கிடப்பதற்கு காரணம் மார்க்சியம் தியாகத்தையும் போராட்டத்தையும் கோருகிறது; மார்க்சியம் அல்லாதவை சீர்திருத்தவாதம், திருத்தல்வாதம் ஆளும் வர்க்கத்தோடு இணக்கமாக கூடிவாழ்ந்து சமரசமாக அடிமயாக வாழ சொல்கிறது.

புரட்சிக்கான பாதை என்பது தியாகத்தையும் உயரிய இலட்சியத்தையும் கொண்டது. ஆனால் சீர்திருத்தவாதம் திருத்தல்வாதம் ஆளும் வர்க்கதிடம் அண்டி பிழைக்கும் சமரச பாதை கொண்டது.

நம் சமூகத்தில் நடைமுறையில் புரிந்துக் கொள்ள முயலுவோம்!

இன்று தமிழகத்தில் போராடிக் கொண்டிருக்கும் தூய்மைபணியாளர்கள் செவிலியர் மற்றும் பல்வேறு தொழிலாளர்கள் இன்று இந்த அரசாங்கத்தை எதிர்த்து போராடுகின்றனர். ஆனால் அரசான போலிஸ் அவர்களை அச்சுறுத்துகிறது. ஆக அரசை புரிந்து கொள்ள வேண்டிய தேவை நமக்கிருக்கிறது.

பாராளுமன்ற சட்டமன்ற தேர்தலின் போது பொய்யான வாக்குறுதி தந்து மக்களின் ஓட்டை வாங்கி அரசாங்கத்தை அமைத்த பின்னர் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உழைக்கும் மக்களின் சம்பள உயர்வை வழங்காமல் வஞ்சிக்கும் இதே அரசினால்தான் கோடிக்கோடியாய் சில தனிநபர்களான முதலாளிகளுக்கு வாரி வழங்குகின்றனர் அது எப்படி?

ஓட்டுவாங்க பல்லிளித்து வரும் எல்லா ஓட்டு கட்சிகள் பல முன்னனி பெயரில் இணைந்துள்ள கட்சிகள் வெட்கம் மானம் சூடு சொரனை எதுவும் இன்றி, கொள்கை கோட்பாடற்ற நிலையில் ஓட்டு மட்டுமே குறிக்கோளாய் உழைக்கும் மக்களை ஏய்து முதலாளிகளுக்கானவர்களே இங்குள்ள எல்லா ஓட்டு கட்சிகளும் உள்ளதை காணலாம்!

உழைக்கும் மக்கள் அவர்களின் எந்த பிரசினைக்கு போராடினாலும், போலிஸின் குண்டாந்தடிதான் முதலில் சட்டம் ஒருங்கு என்ற பெயரில் வருகிறது, ஆனால் சம்பந்தபட்ட துறைசார்ந்தவர்கள் வருவதில்லை; தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வருவதில்லை! ஆனால் தங்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் ஓடோடி வருகின்றனர் ஏன்? அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் அதிகாரம் இவர்களுக்கு. அதேபோல் உத்தரவு போடும் போலிஸ் அதிகாரிகளும்; நீதி வழங்கும் நீதிபதிகளும்; சிறை கொட்டடியின் அதிகாரிகளும் மக்களினால் தேர்ந்தெடுக்கபட்டவர்களா!?உழைக்கும் மக்களை தண்டிக்கும் உரிமை எப்படி அவர்களுக்கு? உழைக்கும் மக்களுக்கும் அவர்களுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இவர்கள் மக்களின் அன்றாட வாழ்வை ஆட்டிப்படைப்பதாக உள்ளது. இந்த அரசு அதிகாரம் படைதவர்கள்தான் இந்த தனிஉடமையை பாதுகாக்கும் பணமுதலைகளின் காவல் தெய்வங்கள். உழைக்கும் வர்க்கத்தின் தேவை அறியாத சுரண்டும் முதலாளிகளின் தேவை அறிந்து செயல்புரிபவர்களாகவும் உள்ளனர். இவர்கள் உழைக்கும் மக்களின் விரோதிகளே. சொத்துடைய வர்க்கத்தின் காவலர்களே. ஆக அரசும் அரசாங்கமும் வர்க்க அடிப்படையில் ஆளும் வர்க்கமாய் உள்ளவற்றின் நலன் சார்ந்தவையே!

ஆகவே அரசு என்றால் என்ன? அதன் இயக்கத்தையும் புரிந்துக் கொள்வோம்.

இங்கே உள்ள அட்டை படம் வாயிலாக அரசு என்பது என்ன என்பதனை புரிந்திருப்பீர் என்று நினைக்கிறேன், அதாவாது மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர் பற்றிபேசும் எல்லா அறிவு ஜீவிகளும் ஏனோ மக்களால் தேர்ந்தெடுக்கபடாத எப்பொழுதும் மக்களின் மீது ஆளுமை செய்யும் போலிஸ், இராணுவம், நீதிமன்றம், நிர்வாகம் பற்றி தவறியும் வாய் திறப்பதில்லை! அதன் செயல்பாட்டின் முழுமையை புரிந்துக் கொள்ளாமையே அதன் சூட்சமம். யார் ஆட்சிக்கு வந்தாலும் இவர்கள் ஆளூமையே தொடர்கிறது!

அரசு என்கின்ற இந்த ஏற்பாடு (நீதி, நிர்வாகம், இராணுவம், போலிஸ்)ஏன் எதற்கு எப்போது தோன்றியது என்பதனை குறித்து சுருக்கமாக அறிவோம்.

வரலாற்று பக்கம் தேடினால், மனித இனம் தோன்றி பல லட்சம் வருடங்கள் ஆகின்றன. ஆனால் எழுத்து வடிவிலான வரலாறோ எழுதி சில ஆயிரம் வருடங்களே ஆகின்றன, மனிதன் முதன் முதலாக தோன்றியது ஆப்பிரிக்கக் கண்டத்தில்தான் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அங்கிருந்த காட்டுமிராண்டிக்கு அரசு தேவைபடவில்லை தண்ணீரும் உணவும் தேடி குழுக்களாக கூட்டம் கூட்டமாக நடக்க தொடங்கிய ஆதிகால மனிதன் கூட்டாக வேட்டையாடி கூட்டமாக பகிர்ந்துண்டனர். அப்போது வேட்டையாடும் மிருகம் மற்றும் பழம் கிழங்கு ஒரே நாளில் தின்றுவிடவோ அல்லது அடுத்த நாள் தேவைக்கு சேமிக்கவோ தெரியாத அவர்கள் சமமாக பங்கிட்டுக் கொண்டனர், அங்கே தனி மனித வாழ்க்கையோ அல்லது தனி சொத்தோ பாதுகாக்கபடவில்லை அன்றோ எல்லாம் பொதுசொத்தாக இருந்தது எல்லோரும் சமமாக நடத்தபட்டனர். இதனை ஆதிகால பொதுவுடைமை சமூகம் என்பர். ஆணும் பெண்ணும் சேர்ந்தே வேட்டையாடினர், பிரசவகாலங்களில் பெண்கள் குகையில் தங்க நேரிடும். அப்போது மரம் செடி கொடிகளை கவனித்து பயிரிட கற்று தேர்ந்த மக்கள் விவசாயம் செய்ய தொடங்கினர். குகையைவிட்டு காட்டை நோக்கி நடந்த மனித சமூகம் காட்டை அழித்து விவசாயம் செய்யவும்; அவன் ஆடு மாடுகளையும் வளர்க்கவும் தெரிந்து கொண்டான். அவன் விளைசலின் தணியங்கள், பண்டங்களையும் சேமிக்க அதன் வழி அவையே “தனி சொத்தாகி” காட்டை வளைத்துப்போட்டு தனியுடைமையாக்குகிறான். இயற்கை கொடுத்த பொதுவுடமையை மனிதன் “தனியுடைமையாக்குகிறான்”. பொதுவுடைமை காலத்தில் எந்த மரத்திலும் கனிகாய்களை பறிக்கலாம் ஆனால் தனியுடைமை காலத்தில் சண்டையும் அடித்து கொள்ளவும் தொடங்கினர். சொத்துடையவன் சொத்தற்றவன் அதாவது உடைமையுள்ள ஒரு கூட்டம் உடைமை அற்ற பெரும் கூட்டம் உழைத்தால் மட்டும் வாழமுடியும் என்ற நிலை உருவானது.

இரண்டும் நேர் எதிரான சமூக பிரிவு. அதாவது காடுகளையெல்லாம் ஒரு சிலர் வளைத்து போட மற்றவர்கள் உழைத்து வாட ஏங்கும் நிலை உருவானது. சொத்துள்ளவன் உடைமை கூட்டத்தினன்(வர்க்கம்), உடைமையற்ற உழைப்பாளர்கள் உழைக்கும் வர்க்கம்(கூட்டம்). ஒருவர் மற்றவருடன் மோதல் உருவானது அதனை நிர்வகிக்க நிர்வாகம், சட்டம், நீதி என்ற அரசின் தூண்கள் தோன்றின... (இது ஒரு நீண்டகால வளர்ச்சியில் தோன்றியது).

இப்படியாக தனிசொத்து என்ற ஒன்று வந்த பிறகுதான் அதைப் பாதுகாப்பதற்காக நீதி, நிர்வாகம், இராணுவம்,போலிஸ், ஜெயில் எல்லாம் வந்தது, சொத்தை பாதுகாக்க அதாவது உள்ளவனை இல்லாதவனிடமிருந்து பாதுகாக்க உருவாக்க பட்டதே இந்த அரசு.

இதனை மார்க்சிய மொழியில் சொல்வதென்றால் ”வர்க்கப் பகைமைகள் இணக்கம் காண முடியாதவை ஆனதன் விளைவாய்த் தோன்றியதே அரசு”-என்றார் லெனின்.

“அரசு என்பது ஒரு ஒழுங்கு செய்யப்பட்ட வன்முறைக் கருவி”- என்றார் லெனின்.

ஆதிகாலத்தில் இயற்கையோடு போராடியபோது மனிதர்கள் எல்லோரும் ஆயுதங்களை வைத்திருந்தார்கள், தனியுடைமை (சொத்துடைமை) சமூகம் அரசை உருவாக்கி செய்த முதல்வேலை பொது மக்களிடமிருந்த ஆயுதங்களை பறித்ததுதான். பின்னர் இராணுவமும் போலிசும் சீருடை அணிவித்து தன் சேவைக்கு (உடைமையாளர்களின் பணிக்குதான் என்பதனை அறியாமலே எதிரிக்காக அடியாளாக பல்லாயிரம் இராணுவத்தினர் மடிந்து கொண்டுள்ளனர்) வைத்து கொண்டது.

“ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை ஒடுக்குவதற்கான உறுப்பே அரசு”...

இப்பொழுது ஒட்டு சீட்டு அரசியலுக்கு வரலாம், “டாட்டா, பிர்லா, அம்பானி, அதானி போன்ற பெரு முதலாளிகளுக்கும் ஒரு ஓட்டுதான், உழைத்தால்தான் உணவு என்று வாழ்கின்ற உழைப்பாளிக்கும் ஒரு ஓட்டுதான், இதனால் இருவரும் சமம் ஆகிவிடுமா?”, இதை ஜனநாயக நாடு எனலாமா? அல்லது பணநாயகமா? அதாவது முதலாளிகளுக்கான ஜனநாயகம்!

இதைவேரு வார்த்தையில் சொன்னால்,” 1947ல் ஆங்கிலேயர் கையிலிருந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது 200 கோடிக்கு அதிபதியாய் இருந்த பெரும் முதலாளி (இதனை உச்சாணியில் இருந்த தரகு முதலாளிகள்) கூட்டம் இன்றோ பல லட்சம் கோடிகளுக்கு அதிபதிகள் மறுபக்கம் இரண்டு வேலை உணவுகூட இல்லாமல் வாடும் கூட்டம்”. இதனை புரியும் படி சொன்னால், அந்த பெரு முதலாளிகளின் தேவைக்காக நாட்டின் சட்டம் ஒழுங்கு நீதி மற்றும் இராணுவம் நெகிழ்ந்து போகவும், மொத்த மக்களின் உழைப்பை அந்த முதலாளிகளுக்கு காணிக்கையாக்கதான் அரசின் மொத்த இயந்திரமும் இயங்கி கொண்டுள்ளது”.

இன்றைய ஒன்றிய அரசின் செயலை கண்மூடி கண்டுக் கொள்ளாமல் இருக்கும் ஊடகங்கள் ஊமைகளாகிக் கொண்டிருக்கும் நிலையில் உண்மையை அறிவதே அரிதாய் உள்ள நிலையில். நேரடியாக பல லட்சம் கோடிகள் காணமல் போவதும் அவை பெரும்முதலாளிகள் பெற்றுக் கொண்டு ஏமாற்றுவதும் அரசாங்கமே மனம் உவந்து அவர்களின் கடனை ரத்து செய்வது ஏழை உழைக்கும் மீது உழைப்பால் சேர்க்கும் ஒரு ஒரு ரூபாயின் மீதும் வரி போட்டு சுரண்டுவதும் எதற்கு யாரின் நலனுக்கு? புரிந்துக் கொண்டுள்ளீர்தானே?

எந்த அரசு முதலாளிகளின் தேவையை முன்னிருத்துகின்றதோ?

எந்த அரசு ஏகாதியபத்தியத்தை முன்னிருத்துகின்றதோ? எந்த அரசு மக்கள் நலன் இன்றி முதலாளிகளின் சிறுபான்மையினரின் உயர்வை தூக்கிபிடிக்கிறதோ?

அவை எல்லா மக்களின் அரசாக இருக்க முடியாது. உழைக்கும் மக்கள் போராடினாலே அவர்களை அடக்க ஓடோடி வரும் போலிஸ் மற்றும் இராணுவம் பிரிட்டனில்தான் முதன்முதலில் தோன்றியது17 மற்றும் 18 நூற்றாண்டுகளில். இன்று நிலையான இராணுவம் இல்லாத நாடே கிடையாது. (மூன்றாவது வில்லியத்திற்கு முந்திய காலத்தில் நிரந்தர இராணுவம் இல்லை) இன்று போலீஸ் இல்லாத நாடே இல்லை. அப்படியானால் எப்பொழுது இது முதன் முதலில் தோன்றியது? 18 ஆம் நூற்றாண்டில் முன் அரைப் பகுதியில் பிற்காலத்தில் இங்கிலாந்தில், சர் ரோபேர்ட் பீல் உள்நாட்டு மந்திரியாக இருந்தபோது தோன்றியது. ஒரு பொலீஸ் படையை தோற்றிவைப்பதற்கான மசோதாவைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது அவரேயாகும்.

நாம் இன்று காணும் அரசானது மிக அண்மை காலதியதே; நினைவிற்கு எட்டாத காலத்திற்கு முன்னர் இருக்கவில்லை என்பதை இது தெளிவாக நிரூபிக்கின்றது.

அடிமை சமுக காலக்கட்டத்தில் அடக்குமுறை இயந்திரம் பெரிய அளவில் வளர்ச்சியடையவில்லை. அடிமைகள் மிகக் கடுமையான கசையடி மூலமும், பிரமாண்டமான சுதந்திர மனிதர்களின் படையுடனும் கோரமாக அடக்கியாளப்பட்டனர். ஆனால், வர்க்க முரண்பாடுகள் கூர்மையடைந்து சமுதாயம் அடுத்த கட்டமான நிலபிரபுத்துவத்திற்கு வளர்ச்சியடைந்ததும் மேலும் மோசமான அடக்குமுறை அரசு இயந்திரத்தின் தேவை உணரப்பட்டது. நிலையான இராணுவம் ஸ்தாபிக்கப்பட்டது. ஒரு நீதித் துறையும் சிறைச்சாலைகளும் தோன்றின. சிறிது சிறிதாக அரசு இயந்திரம் வளர்ந்து வர்க்க முரண்பாடு மிக உச்சக் கட்டத்தில் கூர்மையடைந்துள்ள முதலாளித்துவ சமுதாயத்தில் உயர் இராணுவ மயமாக்கப்பட்ட இன்றைய அரசாங்கம் தோன்றியது இருக்கிறது.

இந்திய அதிகார வர்க்கத்தின் சில உதாரணங்களுடன் விளக்கலாம். ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் இராணுவ அதிகாரியான சிலர் பின்னர் இராணுவ ஜெனரல்களாகவும், முன்னர் ICS லும் பின்னர் IAS ம் பதவி வைத்தவர்கள் நிரந்தரமாக எப்படி தொடர்கின்றனர். அதாவது நமது நாட்டில் ஐந்து வருட முக்கியமான மந்திரிப் பதவிக் காலத்தில் செயலாளராக இருந்தவர் ஆட்சி மாறினாலும் அடுத்த ஆட்சியிலும் நிரந்தர செயலாளராக எப்படி தொடர முடிகிறது?

ஆங்கில ஏகாதிபத்தியத்தால் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவ, போலீஸ் அதிகாரிகளும் அடிப்படையில் அவ்வாறே இருக்கின்றனர். அவர்கள் அதே எஜமானர்களுக்கு, அதே நலன்களுக்குச் சேவை செய்கின்றனர். அந்த அதிகாரம் படைத்த மனிதர்கள்தான் உண்மையில் ஆட்சி செய்கிறார்கள். எந்த அரசாங்கம் என்றாலும் ஆட்சி என்னவோ இந்த அரசு இயந்திரம்தான் நடத்துகிறது.

இவ்வாறான ஓர் ஒடுக்குமுறை முதலாளித்துவ அரசு இயந்திரம் இல்லாமல் சுரண்டல் ஒரு நிமிடத்திற்குமேல் நிலைக்காதென்பது நிச்சயமாகத் தெளிவாகின்றது. ஆயுதப் படையினரதும், போலீஸ் படையினரதும் கரங்களில் துப்பாக்கியில்லாவிட்டால் சுரண்டும் வர்க்கங்கள் சுரண்டப்படுவோரைக் கீழே போட்டு மிதிக்க முடியாது.

அவர்கள் முதலாளியின் உயிரையும், உடமையையும் பாதுகாக்க வந்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் ஆயுதந்தாங்கியவர்களாக உள்ளார்கள். அவர்களின் கரங்களில் உள்ள துப்பாக்கிகளே முதலாளியையும், அவனது வர்க்கத்தையும் பாதுகாக்கின்றது. அந்தத் துப்பாக்கிகள் இல்லாவிட்டால் தொழிலாளர்கள் சுரண்டலுக்கு ஒரு நாள்கூட இடங்கொடுக்க மாட்டார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கபடாத, மக்களுக்கு கட்டுப்படாத எப்பொழுதும் மக்களின் மீது ஆளுமை செய்யும் போலீஸ், இராணுவம், நீதிமன்றம், நிர்வாகம் பற்றி தவறியும் வாய் திறப்பதில்லை ஏன்?. அவைதான் மக்கள் மீது அதிகாரம் செழுத்தும் அரசே ஆகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றமும் பாராளுமன்றமும் அரசாங்கமாகும். இந்த அரசாங்கம்தான் சட்டங்களை போடுகிறது. இந்த சட்டங்களை நிறைவேற்றுவது அரசு அதிகாரிகள் அடங்கிய அரசு நிர்வாகம் ஆகும். இந்த அரசுதான் ஆயுதம்தாங்கிய போலீஸ் மற்றும் இராணுவத்தைக் கொண்டுள்ளது. இந்த அரசுதான் உழைக்கும் மக்களை வன்முறைகொண்டு அடக்கு கிறது. போலீஸ்தான் போராடும் மக்களை தடிகொண்டு தாக்குகிறது, துப்பாக்கியால் சுடுகிறது. போராடும் மக்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. நீதிமன்றங்கள்தான் போராடிய மக்களை குற்றவாளி என்று சொல்லி சிறைக்கு அனுப்புகிறது. சிறைச்சாலையில்தான் சிறைத்துறை அதிகாரிகள்தான் சிறைக்குள் போராடிய மக்களை கொடுமைக்குள்ளாக்குகிறது. மக்களின் நலன்காக்கும் அரசுத்துறைகள் யாவும் மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்றால் அதனை மக்கள் தட்டிக்கேட்டால் அவர்கள் போலீசைக்கொண்டு மக்களை தாக்குகிறார்கள்.

இந்த அரசு அதிகாரிகள் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில்லை, ஆனால் செல்வந்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்கள். மக்களை இவர்கள் கால்தூசுக்கு கூட மதிப்பதில்லை. இதற்கு காரணம் இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை. இவர்களை மக்களே தேர்ந்தெடுக்கவும் பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் மக்களுக்கு இருக்குமானால் இந்த அரசு அதிகாரிகள் மக்களுக்கு எதிராக நடக்கமாட்டார்கள். ஒரு கம்யூன் வடிவத்திலான பாட்டாளிகளின் அரசில்தான் அதிகாரிகளை மக்கள் தேர்ந்தெடுக்கும் முறை செயல்படுத்தப்படும். ஆகவே அரசு அதிகாரிகளை மக்கள் தேர்ந்தெடுக்கவும் பதவிநீக்கம் செய்யவும் மக்களுக்கு அதிகாரம் கொண்ட கம்யூன் ஆட்சிமுறைதான் உழைக்கும் மக்களுக்குத் தேவை.

இந்தியாவில் எத்தனையோ கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால் எல்லா கட்சிகளின் ஆட்சியிலும் நிரந்தரமாக அதிகாரத்தில் இருக்கின்ற நிறுவனம்தான் அரசு அதிகாரிகளைக் கொண்ட அதிகாரவர்க்க அரசு என்ற நிறுவனமாகும். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த அரசு அதிகாரிகளின் கைகளிலுள்ள அதிகாரத்தை யாராலும் பறிக்க முடியாது. ஒரு கட்சியிடமுள்ள ஆட்சி அதிகாரத்தைக்கூட ஒரு தேர்தலில் பறித்துவிட்டு வேறு ஒரு கட்சியிடம் ஆட்சி அதிகாரத்தை தேர்தல்மூலம் மக்களால் கொடுக்கமுடியும். ஆனால் எப்போதும் ஒரு அரசு அதிகாரியிடமிருந்து அதிகாரத்தை மக்களால் பறிக்கவும் முடியாது வேறு ஒருவருக்கு அதிகாரத்தை கொடுக்கவும் முடியாது. ஆகவேதான் இங்கே அரசு அதிகாரிகள் அவர்கள் நினைத்ததை யெல்லாம் செய்துகொண்டு ஆட்டம்போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

அரசு என்கின்ற இந்த ஏற்பாடு (நீதி, நிர்வாகம், இராணுவம், போலிஸ் ) ஏன் எதற்கு எப்போது தோன்றியது? என்பதை நாம் அறிந்துகொண்டிருப்பீர் ஆக உழைக்கும் மக்களுக்கான அரசு எப்படி இருக்கும் என்பதனை பாரீஸ் கம்யூன் நமக்கு அளித்துள்ளது அவைதான் உழைக்கும் மக்களுக்கான அரசு வடிவமாக இருக்க முடியும். அதனைதான் லெனின் அவர்களும் ஏப்ரல் அறிக்கையில் தெளிவுப்படுத்தி இருப்பார்.

கம்யூனிஸ்டுகள் சுரண்டல் அற்ற சமூகத்தை விரும்புவர்கள். சுரண்டலும் ஒடுக்குமுறையும் இல்லாத.... எல்லாச் செல்வமும் எல்லோருக்கும் கிடைக்க கூடிய வகையில்... ஒருவர் மீது எல்லோரும், எல்லோர் மீது ஒருவரும் அக்கறை செலுத்தக் கூடிய... சமூகம் படைப்பதே இலட்சியமாக கொண்டவர்கள். இதனை அடைய இந்த அரசு கண்ணை மூடியிருக்குமா?

மக்களின் வறுமை, வேலையில்லா கொடுமைகளுக்கு போராடினாலே குண்டாந்தடியை காண்பிப்போர் அவர்களை இல்லாதொழிக்க சம்மதிப்பார்களா? மலைப்போல் மூலதனத்தையும் அதிகார பலத்தையும் கொண்டுள்ளோரை சிறுதுளியே ஆனால் கடல் அளவுள்ள பெருத்த எண்ணிக்கையில் உள்ள உழைப்பாளிகள் தங்களின் விடுதலைக்கு இவர்களை இல்லாதொழிக்க ரசிய சீன படிப்பினைகள் வேண்டும் என்பதே... அவை நீண்ட பணிதான், இருந்தும் அவையின்றி உழைக்கும் மக்கள் இந்த அரசால் பயன் பெறா!

சோசலிசம் மற்றும் கம்யூனிச சமுதாயத்தை அடைவதே கம்யூனிஸ்டுகளின் இலட்சியம் ஆகும். இந்த இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் ரஷ்யாவிலும், சீனாவிலும் கம்யூனிஸ்டுகள் அதற்கு தடையாக இருந்த எதிரிகளை எதிர்த்துப் போராடி வீழ்த்தி சோசலிசத்தைப் படைத்தனர். எனினும் சோசலிசத்திற்கும் கம்யூனிசத்திற்கும் எதிரான எதிரிகள் மிகவும் பலம்வாய்ந்தவர்களாக இப்போதும் நீடிக்கின்றதை நாம் பார்க்கிறோம். இந்த பலம்வாய்ந்த எதிரிகளை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து போராட வேண்டியது அவசியமாகவே இன்றும் உள்ளது. அது அவ்வளவு எளியது அல்ல. கம்யூனிஸ்டுகளும் முதலாளித்துவத்தால் பாதிக்கப்படும் மக்களும் வாழ்வின் ஒவ்வொரு அரங்கிலும் இந்த எதிரிகளை எதிர்த்துப் போராடி இந்த எதிரிகளை அடியோடு வீழ்த்தி சவக்குளிக்குள் புதைக்க வேண்டும். அப்போதுதான் நாம் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் கொண்டுவர முடியும். அது ஒரு நீண்ட நெடிய கடினமான போராட்டத்தின் மூலமே உழைக்கும் மக்கள் சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் அடைய முடியும். இத்தகைய நீண்ட நெடிய போராட்டமின்றி கம்யூனிசத்தை எளிதாக அடையவே முடியாது. இத்தகைய நீண்ட போராட்டத்தின் அவசியத்தைப் புரிந்துகொண்டு செயல்படுபவர்தான் சிறந்த கம்யூனிஸ்டாக முடியும். ஆனால் சில பேர்வழிகள் உடனடியாக தங்களின் வாழ்வியல் பிரச்சனைகள் தீரவில்லை என்பதால் சோர்வடைந்து கம்யூனிச கொள்கையின் மீதே நம்பிக்கை இழந்து உடனடியாகச் சில சலுகைகள் வழங்குபவர்களை நம்பி அவர்கள் பின்சென்று அவர்களின் துரோகத்துக்குப் பலியாகிறார்கள். உதாரணமாக மக்களுக்கு திமுக நன்மை செய்யும் என்று நம்பி அவர்களுக்கு ஓட்டுப்போட்டு பதவி கொடுத்தனர்.

ஆனால் திமுக பதவிக்கு வந்த பின்பு சாம்சங் போராட்டம், துப்புறவுத் தொழிலாளர் போராட்டங்களில் உழைக்கும் மக்களுக்கு துரோகம் செய்ததை நாம் பார்க்கிறோம். சோசலிசம் மற்றும் கம்யூனிசம் என்பது கம்யூனிஸ்டுகளின் கற்பனையான கண்டுபிடிப்பு என்று சிலர் கருதுகிறார்கள். ஆனால் மனிதகுல வரலாற்றைப் பார்த்தால் வர்க்கங்கள் தோன்றியதிலிருந்து வரலாற்றில் பல போராட்டங்களும், போர்களும் நடந்துள்ளது. ஒவ்வொரு போராட்டத்தின் முடிவிலும் உழைக்கும் மக்கள் தோல்வியடைந்தாலும் சமுதாயத்தில் பலவகையான மாற்றங்கள் நடந்துள்ளதை நாம் காணலாம். இத்தகைய வர்க்கப் போராட்டங்கள் அனைத்தும் இறுதியாக வர்க்கங்களை சமுதாயத்திலிருந்து ஒழித்துக்கட்டுவதிலேயே முடிவுறும். அதாவது சமுதாயம் கம்யூனிச சமுதாயமாக மாறுவதிலேயே முடியும். இது சமூக வளர்ச்சி விதியின் தவிர்க்க இயலாததாகும்.

பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தோற்றுவிக்கப்படுவது, போராட்டங்களில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்பது, அவற்றுக்கு ஏற்பாடு செய்வது, அவற்றை வழி நடத்துவது என இவை அனைத்துமே சமூக வளர்ச்சியின் விதிகளுக்குப் பொருத்தமான நிகழ்ச்சிப் போக்குகள்தான்.

அரசை புரிந்துக் கொள்ளும் நோக்கம் கொண்டதே இந்தப் பகுதி

தொடரும்... 

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்