ரசிய புரட்சியும் லெனின் வாழ்வும்


கல்வி அதிகாரிக்கு மகனாகப் பிறந்தவர் விளாடிமிர் இலியீச் உல்யானவ், லெனின் என்பது அவரது புனைப்பெயர். சைபீரியாவில் ஓடும் நதியில் மனம் பறிகொடுத்த லெனின், அதன் பெயரைத் தனக்குச் சூட்டிக் கொண்டார். சட்டக் கல்வி படித்தார். சமூகம் படித்தார். படிப்பது தான் அவருக்குப் போதை தந்தது. படித்தார். படித்துக் கொண்டே இருந்தார். பிறமொழி படைப்புகளை மொழிபெயர்த்தார். எழுதினார். எழுதிக்கொண்டே இருந்தார். எழுதும் போதும், படிக்கும் போதும் தூக்கம் வந்தால் எழுந்து சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வார். தூக்கம் கலைந்ததும் மீண்டும் படிப்பார். எழுதுவார். பொதுவாக புத்தகப் புழுக்கள் புரட்சி செய்ய முடியாது என்பார்கள். வார்த்தைகளில் வடை சுடுபவர்கள் வர்க்கப் போராட்டத்துக்கு லாயக்கு வர மாட்டார்கள் என்பார்கள். ‘இவர் எப்போதுமே எழுதிக்கொண்டே இருக்கிறார். இவர் எழுத்தாளர் தான். இவர் எழுத்தால் புரட்சி வராது’ என்று சைபீரிய காவல்துறை அறிக்கை அனுப்பியது. ஆனால் இந்த இலக்கணம் மீறிய இலக்கியம் லெனின்.

மார்கஸ் எழுதிய மூலதனத்தை லெனினுக்கு முன்னால் கையில் வைத்திருந்தவர் அவரது அண்ணன் அலெக்சாண்டர். ஜார் ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்ததாகக் கைதான அலெக்சாண்டர் தூக்கிலிடப்பட்டார். அப்போது லெனினுக்கு வயது 17. அண்ணனின் போராட்டம் லெனினைக் கவனிக்க வைத்தது. அந்த தியாகம் லெனினை யோசிக்க வைத்தது. அரசுக்கு எதிராக மக்களை அணி திரட்டாமல் தனிமனிதத் தியாகங்கள் இளம்பிள்ளைவாதமாகத் தான் முடியும் என்பது லெனினுக்கு சிறுவயதிலேயே தோன்றியது. அதனால்தான் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான போராட்டக் கழகம் என்ற அமைப்பை (1895-ம் ஆண்டு) தொடங்கினார் லெனின். உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு 14 மாதங்கள் சிறை வைக்கப்பட்டார். அந்த அமைப்பின் பெயரே அவரை கைது செய்ய வைத்தது.

கிழக்கு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். ஒரு புரட்சியாளனாக அவர் வளர்ந்த இடம் அதுதான். படித்தார். எழுதினார். எழுதியதைத் திருத்தினார். நடைபயிற்சி செய்தார். மல்யுத்தம் கற்றுக் கொண்டார். சுவாசப் பயிற்சி மேற்கொண்டார். வேட்டையாடினார். மீன் பிடித்தார். சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொண்டார். ஏழைகளுக்கு சட்ட ஆலோசனைகள் சொன்னார். தன்னைப் போலவே சிந்தித்த குரூப்ஸ்கயாவை காதலித்தார். அவரும் அரசாங்கத்தால் கைதானபோது, அவரையும் தன்னோடு தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டார். இருவரும் இணைந்து வாழ்ந்தார்கள். சமூகத்துக்கு சேர்ந்து யோசித்தார்கள். ‘‘நாங்கள் இருவரும் சந்தித்தபோதே புரட்சிகர மார்க்சியவாதிகளாக இருந்தோம். சமூக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை இரண்டுமே ஒன்றுதான் என்று நினைத்தோம்” என்று சொன்னார் குரூப்ஸ்.

இவர்கள் இருவருமே தண்டனைக் காலம் முடிந்து ரஷ்யாவுக்குள் வந்தார்கள். 1900-ம் ஆண்டின் தொடக்க ஆண்டுகளில் தொழிலாளர்கள் போராட்டம் ரஷ்யா முழுவதும் வேகம் எடுத்தது. வறுமை, பஞ்சம், தொழிலாளர்கள் வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு போன்றவை இதனைத் தூண்டியது. இதற்குக் காரணம் லெனின் தான் என்று சொல்லி நாடு கடத்தினார்கள். 1905-ம் ஆண்டில் இருந்து சுமார் 9 ஆண்டு காலம் பல்வேறு நாடுகளில் தலைமறைவாக இருந்தார் லெனின். மொத்த சோவியத் புரட்சிக்கான அடித்தளம் வெளிநாட்டில் இருந்துதான் போடப்பட்டது. சுவிட்சர்லாந்து, லண்டன், ஜெனிவா, பின்லாந்து, ஆஸ்திரியா என பல நாடுகளில் வாழ்ந்து வந்தார் லெனின். வெளிப்புறச் சக்திகளால் அல்ல, உட்புறச் சக்திகளால் மட்டும் தான் புரட்சி சாத்தியம் என்ற இலக்கணத்தையும் இந்தப் புரட்சித் தலைவர் உடைத்தார்.

தன்னுடைய சிந்தனைகள் அனைத்தும் ரஷ்யாவுக்குள் கொண்டு செல்லும் வாகனமாக பத்திரிகைகளை நினைத்தார் லெனின். ‘கட்சியை எங்கிருந்து தொடங்குவது?’ என்று கேட்டபோது, ‘ஒரு நாளிதழை உருவாக்கு, அதில் இருந்து தொடங்குவோம்’ என்றார் லெனின். அப்படி உருவானது தான், ‘தீப்பொறி’ நாளிதழ். அதன் பிறகு, ‘புதுவாழ்வு’ இதழைத் தொடக்கினார். ‘உண்மை’ இதழ் தொடங்கினார். ‘சமூக ஜனநாயகவாதி’ இதழையும் தொடங்கினார். இந்த நான்கு இதழ்களும் தான் சோவியத் புரட்சிக்கு அடித்தளம் அமைத்தன. இதில் பலநூறு கட்டுரைகளை லெனின் எழுதினார்.

தத்துவம், தத்துவ விமர்சனம், வரலாறு, வரலாற்று விமர்சனம், கட்சி, கட்சியின் நடைமுறை.... என்று லெனின் எழுதிய கட்டுரைகள் ஒவ்வொரு பாட்டாளியையும் ஒரு பாட்டாளி வர்க்க கட்சியையும் உருவாக்கியது. ஜார் ஆட்சியை வீழ்த்துவதைக் குறைந்தபட்ச செயல்திட்டமாகவும், அதே இடத்தில் சோசலிச அமைப்பை உருவாக்குவதை அதிகபட்சத் திட்டமாகவும் கொண்ட ரஷ்ய சமூக ஜனநாயக் கட்சியை உருவாக்கினார். இந்த லட்சியத்தை நோக்கி சோவியத்துகளை அணி திரள எழுதினார். ஆயுதப் புரட்சியால் மட்டுமே ஜாரை வீழ்த்த முடியும் என்ற முடிவுக்கு (1905-ம் ஆண்டு) வந்தார்.

லெனின் வகுத்துக் கொடுத்த திட்டம். பாதிக்கப்பட்ட மக்களை கோபம் கொள்ள வைத்து, உணர்த்தி, அவர்களைத் தத்துவார்த்த அடிப்படையில் வென்றெடுத்த பிறகு போராட்டக் களத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்தார் லெனின். ஆயுதப் போராட்டத்தையும், அரசு நிறுவனங்களைக் கைப்பற்றுவதையும் மிகமிக இறுதிக்கட்டத்தில் தான் கையில் எடுத்தார். ரஷ்ய பாராளுமன்றத் தேர்தல் நடந்தபோது போல்ஷ்விக்குகளை தேர்தலில் போட்டியிட லெனின் அனுமதி தந்தார். மன்னரை எதிர்க்கும் அனைத்து தரப்பையும் முதலில் சேர்த்துக் கொண்டு போராடி, பின்னர் பாட்டாளிகளை வர்க்கதிற்கு தலைமை அளித்தார்.

இப்படி தனது அறிவார்ந்த அனுபவத்தின் மூலமாக தியரியை உருவாக்கி, அதனை நடைமுறைப்படுத்திப் பார்த்தவர் லெனின். ‘‘அவர் பேசும்போது பேசுவது போல் இல்லை. வரலாறு ஆணையிடுவது போல் இருக்கும்” என்று கார்க்கி சொல்வது இதனால் தான். லெனின் எளிமையாகச் சொன்னார். ஆணையிடுவது போல இருந்தது. இந்த எளிமையும் இனிமையும் தான் புரட்சியின் அடையாளமாகவும் மாறியது.

லெனின் தன் நாட்டில் புரட்சிக்கு முன் செய்ய வேண்டியதை மிக துள்ளியமாக நுண் அறிவோடு அணுகி அதற்கான பணியினை செய்தார். அதனை இங்கு பொருட்படுத்தாத இடதுசாரிகள் எப்படி புரட்சி விதிகளை புரிந்துக் கொள்ளாமலே புரட்சியை நடத்துவர்? சரி தொடர்ந்து விவதிப்போம்.

கற்றலில் இருந்துதான் அனைத்துமே துவங்குகிறது. ஒரு புரட்சியை சாதிக்கவல்லவராக வளர்ந்த லெனின், முதலில் மார்க்சியத்தை எவ்வாறு கற்றறிந்தார் என்பதைப் புரிந்து கொண்டால்தானே அவர் புரட்சியை எவ்வாறு சாதித்தார் எனக் கற்றுக் கொள்ள முடியும். லெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார் என்பதை விளக்குகிறார் குரூப்ஸ்கையா.

விளாதிமீர் இல்யீச் (லெனின்) இவற்றைத் (மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துக்களை) தமது நூல்களில் பயன்படுத்தினார், இவற்றைத் திரும்பத் திரும்பப் படித்தார், இவற்றில் தமது குறிப்புகளை எழுதினார். அவர் மார்க்ஸை நன்றாகக் கற்றறிந்து மட்டும் இருக்கவில்லை; அவரது சித்தாந்தத்தை நன்றாகப் பகுத்தாராய்ந்தும் இருந்தார்.” என்கிறார் குரூப்ஸ்கையா.

நாம் புரட்சிகரமான ஒரு கோஷ்டியாக மட்டுமல்லாமல், புரட்சிகர வர்க்கத்தின் கட்சியாகவும் இருக்க வேண்டுமாயின், வெகுஜனங்கள் நம்மைப் பின்தொடர வேண்டுமென விரும்புவோமாயின் (இவ்விருப்பம் சாதனையாகாத வரை வெறும் வாய்ச் சவுடால் காரர்களாகி விடும் அபாயம் நம்மை எதிர்நோக்குகிறது), -- லெனின், இடதுசாரிக் கம்யூனிசம் இளம்பருவக் கோளாறு.

நம் நாட்டில் இன்று புரட்சிக்கு எதிரான காரணிகள்...

கம்யூனிசம் பேசுபவர்கள் எல்லாம் ஓர் அமைப்பில் இல்லை. நூற்றுக்கணக்கான அமைப்புகளில் பிளவுண்டு சிதறி இருக்கிறார்கள்.

லெனினிடம் நாம் கற்க

முதல் உலகப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த நேரம் அது! பிளக்கானோவ், காவுத்ஸ்கி உள்ளிட்ட ‘மாபெரும்தலைவர்களை உள்ளடக்கிய கம்யூனிஸ்ட் அகிலத்தின் பெரும்பான்மையினர் தங்களது “தந்தையர் நாட்டைபோரில் ஆதரிப்பது என முடிவெடுத்தனர்.போர் உருவாக்கியிருந்தபேய்த்தனமான தேசிய வெறியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சமயம் அது.முதல் உலகப் போரை,ஏகாதிபத்தியங்கள் காலனிகளை தங்களுக்குள் மறுபங்கீடு செய்ய நடத்தும் ஆக்கிரமிப்புப் போர் என்று கூறி,பரந்துபட்ட மக்களுக்கு போர் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பை முன் வைத்து    ஒரு உள்நாட்டுப் போராக இதை உருவாக்கி புரட்சி செய்ய வேண்டும் என்றார் லெனின்.ஏகாதிபத்தியங்களின் காலடியில் மண்டியிட்டு கிட்டத்தட்ட தம்மையே அவர்களிடம் அர்ப்பணித்த இரண்டாம் அகிலத் தலைவர்களை கடுமையாகச் சாடினார் லெனின்.இந்தப் போராட்டத்தை நடத்தும்போது,மொத்த அகிலத்திலும் லெனின்    சிறுபான்மையானவர் தான்.

லகின் முதல் சோசலிசக் குடியரசை அமைத்த பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின். ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கியெறிந்ததோடு முதலாளித்துவ சுரண்டலையும் துடைத்தெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியை அமைத்தவர் தோழர் லெனின்.

மார்க்சிய சித்தாந்தத்தை ரசிய நிலைமைகளுக்கு ஏற்றவாறு பருண்மையாகப் பிரயோகித்துபுரட்சியை சாதித்தது மட்டுமல்லாதுஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை இயங்கியல்பூர்வமாக அன்றைய நிலைமைகளையொட்டி      வரையறுத்தவர் தோழர் லெனின்.

அவரது காலத்தில் ரசிய சமூக ஜனநாயகக் கட்சிகள் கொண்டிருந்த தொழிலாளி வர்க்கக் கட்சி குறித்தப் பார்வையை விமர்சனப் பூர்வமாக அணுகி புரட்சியை சாதிப்பதற்கு ஏற்ற ஒரு கட்சியையும் அதற்கான கோட்பாடுகளையும் வகுத்தார்.

லெனினுக்கு முன்னரே பிளக்கனோவ் உள்ளிட்ட பல்வேறு மார்க்சிய அறிஞர்கள் இருந்தாலும் லெனினால் மட்டும் எப்படி ஒரு புரட்சியை சாதிக்க முடிந்தது எது அவரை புரட்சியை சாதித்த மாபெரும் தலைவராக உயர்த்தியது அவரது சமகாலத்திய பிற மார்க்சிய அறிஞர்களுக்கும் லெனினுக்கும்என்ன வித்தியாசம் இக்கேள்விகளுக்கு தோழர் லெனினின் வாழ்க்கைத் துணைவர்தோழர் நதேழ்தா க்ரூப்ஸ்கையாலெனின் மார்க்ஸை எவ்வாறு கற்றார் ?” என்ற நூலில் பதிலளிக்கிறார்.

மார்க்ஸை நன்றாகக் கற்றறிந்து மட்டும் இருக்கவில்லைஅவரது சித்தாந்தத்தை நன்றாகப் பகுத்தாராய்ந்தும் இருந்தார்ஒரு விசயத்தைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் அதனை அதன் அனைத்துக் கோணங்களில் இருந்தும் பார்த்தால்தான் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.

அதே போலமார்க்சிய சித்தாந்தத்தைப் படிக்கும் போதும் அதனை அனைத்துக்  கோணங்களில் இருந்தும் படித்து தர்க்கரீதியில் அதனைப் புரிந்து கொள்ளவேண்டும் என்கிறார் லெனின்.

புரட்சி குறித்த மார்க்ஸ் எங்கெல்ஸின் கருத்துக்களை அன்றைய சமூக ஜனநாயகவாதிகள் அப்படியே ரசியாவிற்குப் பொருத்த முயன்றதை வன்மையாகக் கண்டித்தார் லெனின்ரசியநிலைமைகளையும் சர்வதேச அளவில் முதலாளித்துவம் அடைந்த மாற்றத்தையும் எதார்த்த நிலைமையில் இருந்து மார்க்சிய கண்ணோட்டத்தோடு ஆய்வு செய்து தீர்வை முன் வைத்தார். அதன் மூலம்தான் ரசியப் புரட்சி சாத்தியமானது.மார்க்சியத்தின் மூல ஆசான்கள் அவர்களது காலத்திய முதலாளித்துவத்தை எந்தக் கண்ணோட்டத்திலிருந்து-ஆய்வு முறையிலிருந்து  பரிசீலித்தார்களோஅந்தக் கண்ணோட்டத்தை அந்தஆய்வுமுறையைமார்க்ஸ்  எங்கெல்ஸின்  எழுத்துக்களில்  இருந்து லெனின்   கற்றுக் கொண்டார்.

மார்க்சும் எங்கெல்சும் அவர்களது சமகாலத்து முதலாளித்துவம் குறித்து எழுதியதை அப்படியே பெயர்த்தெடுத்து ரசியாவில் அதனை லெனின் நடைமுறைப்படுத்தவில்லைஒருவேளை லெனின் அப்படியே எடுத்துப் பொருத்தியிருந்திருப்பாரெனில்வரலாறு ஒரு பிளக்கனோவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தோடு மட்டுமே லெனினையும் கடந்து சென்றிருக்கும்இன்று அவர் பாட்டாளி வர்க்க ஆசானாக அறியப்பட்டிருக்கமாட்டார்.இன்று புரட்சியின் நாயகனாக முதலாளித்துவத்தாலேயே தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய இடத்தில் லெனின் நிற்பதற்கான காரணம்அவர் தமது நாட்டினையும்உலக முதலாளித்துவத்தையும் பரிசீலிப்பதில் சரியான சமூகஅறிவியலைமார்க்சியத்தை பிரயோகித்தார்அத்தகைய சமூக அறிவியல்பூர்வமான ஆய்வுதான் ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின்உச்சகட்டம்எனும் லெனின் எழுதிய நூல்.

முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்ததை முன்வைத்ததோடு லெனின் நின்றுவிடவில்லைஏகாதிபத்தியமாக வளர்ந்த முதலாளித்துவத்தின் தன்மைகளையும்அதன் பலவீனமான கண்ணியையும் கண்டறிந்தார்அதன் விளைவுதான் ரசிய சோசலிசப் புரட்சி.ரசிய நிலைமைகளில் மார்க்சியத்தைப்பிரயோகிப்பதைவெளிபடுத்தினார் லெனினின்.

“… (1905ம் ஆண்டுபுரட்சி தோல்வியடைந்ததையடுத்து ருஷ்யாவில் எழுந்த பிரச்சினைகளை பற்றி மார்க்ஸ் கூறியவற்றையும்இயங்கியல் மற்றும் வரலாற்றுரீதியான பொருள் முதல் வாதத்தையத்த விஷயங்களையும் அதே சமயத்தில் ஆராய்ந்த லெனின் வரலாற்றுரீதியான வளர்ச்சியைக் கற்றறிய இயங்கியல் பொருள்முதல்வாதத்தை எவ்வாறு உபயோகிப்பது என்பதை மார்க்ஸிடமிருந்து கற்றறிந்தார்.”

“……இவ்வாறு மார்க்ஸை கற்கும் இந்த முறைதான்மார்க்சியத்தைத் திரித்துரைப்பதை எதிர்த்துப் போராடவும்அதன் புரட்சிக் கருத்துக்களை உறிஞ்சி சாரமற்றதாக்கும் முயற்சிகளைத் தடுக்கவும் லெனினுக்கு உதவியதுஅக்டோபர் புரட்சிக்கு ஏற்பாடு செய்வதிலும் சோவியத் ஆட்சியை நிலைநாட்டுவதிலும் லெனினது அரசும் புரட்சியும்என்ற நூல் எத்தகைய பிரமாண்டமான பங்கு வகித்தது என்பது நமக்குத் தெரியும்அரசு பற்றிய மார்க்ஸின் புரட்சிகர போதனையை ஆழ்ந்து கற்றதின் அடிப்படையில் தோன்றியதே இந்த நூல்.” 

ஒரு பொருளை முழுமையாக வரையறுக்கும்போது மனித குலத்தின் முழு அனுபவத்தையும் பயன்படுத்த வேண்டும்இந்த அனுபவம் உண்மையின் அளவுகோலாகவும்அப்பொருளுக்கும் மனிதனின் தேவைகளுக்குமிடையே உள்ள தொடர்பை நடைமுறையில் நிர்ணயிக்கவும் பயன்படுகிறது.(இங்கு லெனின் பொதுவான சொல்லாடலாகபொருள்எனும்பதத்தைப் பயன்படுத்தியுள்ளார். நமது சமூக நிலைமைகள்கட்சிபுரட்சி என அனைத்தையும் அந்தச் சொல்லில் பொருத்தி புரிந்து கொள்ளலாம்).

என்ன செய்ய வேண்டும் நூலிலிருந்து சில பகுதி;-மார்க்சியத்தை,விமர்சன வழியில் அணுக வேண்டும் என்று சொல்கிற இவர்களின் கோரிக்க என்ன வென்றால்? காலம் மாறிப் போச்சு, அதனால், கம்யூனிச கட்சி, புரட்சிரகமானதாக இருப்பதை விடுத்து, சமூகச் சீர்திருத்தங்களுக்கான கட்சியாக மாற வேண்டும். இது தான் இந்தப் புதிய போக்கினரின் அடிப்படை நோக்கம்.

விமர்சனம், சுய விமர்சனம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அனைத்தையும் சுய விமர்சனம் செய்து மேம்படுத்திக் கொள்வது என்பது கம்யூனிஸ்டுகளின் போக்கு. ஆனால் இந்தப் புதிய போக்கினருக்கு விமர்சனம் என்றால் வேறு பொருள். அது என்னவென்றால்..,மார்க்சியஅடிப்படைகளைச் சிதைப்பதற்கு விமர்சன சுதந்திரம் வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். காலம்மாறி போச்சு, மார்க்சியஅடிப்படைகள்காலாவதியாகிவிட்டது என்பதே இந்தப் புதிய போக்கினர் கருத்து.புரட்சியைக் கைவிட்டு சீர்திருத்தத்துக்கு மாறுகிற, ஜனநாயகக் கட்சியாக மாற்றுவதற்கான சுதந்திரம், கம்யூனிசத்தில், முதலாளித்துவக் கருத்துக்களையும், முதலாளி வர்க்கப் போக்குள்ளவர்களையும்புகுத்துவதற்கான சுதந்திரம்.இந்தச் சந்தர்ப்பவாதிகளின் இறுதி நோக்கம் என்னவென்றால், கம்யூனிசத்தில் உள்ள புரட்சிகரத் தன்மையை நீக்கி சீர்திருத்த பாதைக்கு அழைத்துச் செல்வதே ஆகும்.

சீர்திருத்தத்தால் புரட்சிகரச் சமூக மாற்றத்தை சாதிக்க முடியாது. என்பது தான் நிதர்சனமான உண்மை. புரட்சிகரமான கோட்பாடு இல்லாமல் புரட்சிகரமானஇயக்கம் இருக்க முடியாது.

உழைக்கும் மக்கள் தமது இயக்கத்தின் நிகழ்வு போக்கிலே தாங்களாகவே ஒரு சுதந்திரமான சிந்தாந்தத்தை வகுத்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை ஆதலால் ஒன்றுதான் தேர்ந்தெடுக்க வேண்டும் முதலாளித்துவ சித்தாந்தமா அல்லது பொதுவுடைமை சித்தாந்தமா என்று!!! நடு வழி ஏதும் கிடையாது.

ஏனெனில் மனித குலம் ஒரு மூன்றாம் சித்தாந்தத்தை படைக்கவில்லை. மேலும் வர்க்கப்பகைமைகளால் பிளக்கப்பட்டுள்ள ஒரு சமுதாயத்தில் வர்க்கதன்மையற்ற சித்தாந்தமோ? வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட சித்தாந்மோ என்றைக்கும் இருக்க முடியாது.

எனவே மார்க்சிய சித்தாந்தத்தை எந்த விதத்தில் சிறுமைப்படுத்தினாலும் அதிலிருந்து இழையளவேனும் விலகிச் சென்றாலும்முதலாளித்துவ சித்தாந்த்தை பலப்படுத்து வதாகவே பொருள். மாமேதை லெனின்(என்ன செய்ய வேண்டும் நூல் பக்கம்- 61,62).

இந்திய நிலைகளை லெனின் எழுத்தின் வாயிலாக அறிவோம்.

புரட்சிகரமான கோட்பாடு இல்லாமல் புரட்சிகரமான இயக்கம் இருக்க முடியாது. புரட்சிகரமான இயக்கம் இல்லாமல் புரட்சிகரமாக,சமூக மாற்றத்தை சாதிக்க முடியாது.அதனால் சீர்திருத்த போக்கை கடுமையாக விமர்சிக்க வேண்டும்

கம்யூனிசத்தின் புரட்சிகரத் தன்மையைக் கைவிட்ட இந்தப் பழைய மார்க்சியவாதிகளின்,திருத்தல் போக்கை அம்பலப்படுத்த வேண்டும்சீர்திருத்தத்தால் புரட்சிகரச் சமூக மாற்றத்தை சாதிக்க முடியாது. என்பது தான் நிதர்சனமான உண்மை.

பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கத்தை முடக்குவது,தன்னியல்பை வழிபடுவதாகும்.

பொருளாதாரப் போராட்டங்கள் தொழிலாளர்களின் முழுமையான விடுதலைக்கு   உதவிடாது,அதனால்,பொருளாதாரப் போராட்டத்தை,வர்க்கப்போராட்டமாக,முதலாளிதுவத்தைத் தூக்கி எறிவதற்கான போராட்டமாக மாற்ற வேண்டும்.இன்றுநமதுநாட்டில்,தொழிலாளர்களிடம் செயற்படுகிற கம்யூனிஸ்டுகள் இந்தத் தொழிற்சங்கப் போராட்டத்தைக் கடந்து வர்க்கப் போராட்டத்திற்கு வழிகாட்டுகிறார்களா? என்பது நம் முன் உள்ள கேள்வி

பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கத்தைச் சுருக்கிக் கொள்வது,இறுதியில் அது தொழிலாளி வர்க்கத்தை, முதலாளித்துவ  வர்க்க  தத்துவத்திற்கு  ஆட்படுத்துவதில்  போய்முடியும்

கம்யூனிஸ்டுகளின் பணி தன்னியல்பை   எதிர்த்துப்போராடுவதேயாகும்.முதலாளி வர்க்கத்தின் அரவணைப்பின் கீழ் செல்லும்இந்தத்தன்னியல்பான,தொழிற்சங்கவாத முயற்சியில் இருந்து தொழிலாளி வர்க்க இயக்கத்தைத்திசைமாற்றி,புரட்சிகரமான கம்யூனிசத்தின் அரவணைப்பின் கீழ் கொண்டுவருவதேயாகும்உழைக்கும்மக்கள்,தாம் சந்திக்கிற பிரச்சினைகளுக்கு உடனடியாக எதிர்ப்புத் தெரிவித்துப் போராடுவது தன்னியல்பு,இந்தத்தன்னியல்பு,அந்தப் பிரச்சினை ஏன் வந்தது,அதனை எப்படி முழுமையாக நீக்குவது என்பது பற்றி எல்லாம் சிந்திக்காது,அந்தப் பிரச்சினையைத் தனித்துப் பார்த்து அதனைப் போக்குவதற்காகப் போராடுகிறது.அதனால் தான் அதற்குத் தன்னியல்பு போராட்டம் என்று பெயர்

இந்தத் தன்னியல்பு போராட்டம் ஒரு அரசியல்போராட்டம்தான்,கருவடிவிலான வர்க்கப்போராட்டம்தான். ஆனால் இது கம்யூனிச அரசியல் போராட்டம்கிடையாது,முழுமையான வர்க்கப் போராட்டம் கிடையாதுதன்னியல்பான போராட்டம்,பிரச்சினையின் அடிப்படையைப் புரிந்துகொள்ளாது,வடிவத்துடன்போராடுகிறது.குறிப்பிட்டஇந்தப்பிரச்சினை,எதனடிப்படையில் தோன்றியது என்பதை அது அறியாது.தொடர்ந்து  வருகிற  இந்தப்  பிரச்சினையை  நிரந்திரமாகத்  தீர்ப்பதற்கு அது முயலாது

உண்மையில் இந்தப் பிரச்சினை முதலாளித்துவ உற்பத்தி முறையில் காணப்படுகிறது.இந்தப்பிரச்சினை,திரும்பத்திரும்ப வராமல் முழுமையாக நீக்க வேண்டும் என்றால்,இந்த உற்பத்தி முறையையே போக்க வேண்டும்

ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியாகப்பார்க்கக்கூடாது.அன்றையஉற்பத்தி உறவுகளில் இருந்து தான் அனைத்துப் பிரச்சினைகளும் தோன்றுகின்றன என்கிற புரிதல் வேண்டும்

அந்தப் புரிதல் ஏற்பட்டால் தான் கூலி உயர்வுக்காணப் போராட்டத்தை, “கூலி முறைஒழிப்பதற்கானப் போராட்டமாக வளர்த்தெடுக்கமுடியும்.கருவடிவிலான வர்க்கப் போராட்டம்,முழுமையான வர்க்கப் போராட்டமாக,சமூகத்தையேமாற்றுகிற,புரட்சிகரப்  போராட்டமாக மாற்றமுடியும்.  

கூலி உயர்வுக்கான போராட்டத்துடன் நின்றிபோவது,தொழிற்சங்க  அரசியலுடன் நின்று போவது இவைகள் அனைத்தும்,தன்னியல்பு வழிபாடாகும்தொழிற்சங்கத்தில் இணைந்து போராடுவது ஒரு அரசியல்தான்,ஆனால் அது கம்யூனிச அரசியல் அல்ல,அரு ஒரு முதலாளித்துவ அரசியல்.ஏன்என்றால்,கூலி உயர்வுக்காக மட்டும் போராடுவதுஎன்பது,முதலாளித்துவஉற்பத்திமுறைக்குள்நின்று கொண்டு போராடுவதாகும்.இந்தப்போராட்டம்,பழைய உற்பத்திமுறையைவீழ்த்தி,புதிய உற்பத்தி முறையை ஏற்படுத்தாது

பொருளாதாரவாதிகள்,அதாவது பொருளாதாரப் போராட்டத்துடன் தொழிற்சங்கப் போராட்டத்தை நிறுத்திக்கொள்பவர்கள்,அரசியலை முழுதாக நிராகரிப்பது இல்லை.அவர்கள் கம்யூனிச அரசியலில் இருந்து தான் விலகுகிறார்கள். 

தொழிற்சங்கப் போராட்டம் ஒரு வகை அரசியல்போராட்டம்தான்.ஆனால் அது கம்யூனிஸ்டுகளின் அரசியல் என்று கூறிவிடமுடியாது

பொருளாதாரப் போராட்டத்தை லெனின்மறுக்கவே இல்லை. அந்தப் போராட்டத்தை, கம்யூனிசம் பரப்புவதற்கான, தொடக்கமாகப் பயன்படுத்தும்படி வலியுறுத்துகிறார்

கம்யூனிச கருத்துக்களைப் பரப்புவதற்கானதொடக்கப் புள்ளியாகப் பொருளாதாரப் போராட்டத்தை லெனின்கருதுகிறார். இந்தக் கருவடிவில் காணப்படும் வர்க்கப் போரட்டமான,பொருளாதாரப் போராட்டத்தை, முழுமையான கம்யூனிச வழிப்பட்ட,வர்க்கப் போராட்டமாக மாற்ற வேண்டும்இதுதான் கம்யுனிச அரசியல். கம்யூனிசக்கருத்துக்கள்,அந்தரத்தில் இருந்து உருவாக்கப்படவில்லை,முதலாளித்துவ உற்பத்தி முறையின் உள்முரண்பாடுகளில் இருந்தும் தான் கண்டு அறியப்பட்டது.அதாவது.கம்யூனிசக்கருத்து,சமூகத்திற்கு அப்பால் இருந்து உருவாக்கப்படவில்லை.இந்த முதலாளித்துவச் சமூகத்தின். வளர்ச்சியின் விளைவாக உருவாகியது

கம்யூனிஸ்டுகள் பொருளாதாரப் போராட்டத்தை நடத்துவதோடு நின்றுவிடக் கூடாது என்பது மட்டுமல்ல,பொருளாதார  அம்பலப்படுத்தல்களை  முறையாகத்  திரட்டிச் செய்வதை,அவர்களின் நடவடிக்கையின்  மிக  மேலோங்கிய  பகுதியாகிவிட அனுமதிக்கக் கூடாது. நாம் தொழிலாளி வர்க்கத்திற்கு அரசியல் கல்வி அளிப்பதையும், அவ் வர்க்கத்தின்  அரசியல் உணர்வை வளர்ப்பதையும் தீவிரமாகச் செய்ய வேண்டும்” 

பொருளாதாரப் போராட்டமே போதுமானப் போராட்டம் அல்ல. அது  முதலாளித்துவ உற்பத்தி முறையைத் தூக்கி எறிவதற்கான முழுமையான வர்க்கப் போராட்டமாக வளர்க்க வேண்டும், என்பதைத் தான் லெனின் வலியுறுத்துகிறார்கம்யூனிச அரசியல் உணர்வு பெறுவதற்கு, பொருளாதாரவாதிகளைப் போல்,தொழிற் சங்கப் போராட்டத்துடன் நிறுத்திக்கொள்ளாக்கூடாது.தொழிலாளர்கள்மற்றமக்களின்நடவடிக்கைகளையும்,வர்க்க சக்திகளின்  அணிச் சேர்க்கையையும்  பார்ப்பதற்குத்  தொழிலாளர்  திறமை பெற வேண்டும் இதற்குக் கம்யூனிஸ்டுகள் உதவ வேண்டும்

தெளிவானசித்திரத்தைஎந்தப்  புத்தகங்களில்  இருந்து பெற  முடியாது  என்று  லெனின்கூறுகிறார்.சுற்றி நடைபெறுவதைக் காண வேண்டும், இன்னின்ன நிகழ்ச்சிகள், இன்னின்ன புள்ளி விவரங்கள், இன்னின்ன நீதி மன்ற தீர்ப்புகள் ஆகியவற்றை, நெருங்கி  சென்று பார்க்க வேண்டும்

அப்போதுதான்,தொழிலாளி,தம்மை ஒடுக்குகின்ற அதே தீய சக்திகள் தாம் மற்றவர்களையும் ஒடுக்குகிறது என்று அறிவார்.அப்படி அறியும் போது தான்,ஆதிக்க சக்தியை ஒழிப்பதற்குப் போராட வேண்டும்என்கிற,அடக்க முடியாத ஆர்வம் தொழிலாளர்களிடம் ஏற்படும் என்று லெனின் கூறுகிறார்

கம்யூனிஸ்ட் ஆவது கடினமான பணியே. ஒரு கம்யூனிஸ்ட்  பலவற்றை  அலசி ஆராயவேண்டிஇருக்கிறது.இந்தப் பொருளாதாரவாதிகள்,அதாவது  தொழிற்  சங்கவாதிகள்வெற்றி பெற்றதற்குக் காரணம் என்னவென்றுபார்த்தால்,அது  தொழிலாளர்களின்  உணர்களுக்குத் தக்கபடி தங்களைச் சரிசெய்துகொண்டதுதான்அதாவது  தொழிலாளர்களின்  சிந்தனைக்குத் தக்கபடி, தங்களைத் தாழ்த்திக் கொண்டது தான்இத்தகைய போக்கு, தொழிலாளியை. ஒரு கம்யூனிச  சிந்தனை  உள்ளவராக  மாற்றுகிற  முயற்சியைத் தடுத்துவிடுகிறது. ஆனால், புரட்சிகரக் கம்யூனிஸ்ட், தொட்டறியத்  தக்க  பலன்களை  மட்டும் கோருகிறகோரிக்கைகளை,சீற்றத்துடன் நிராகரிப்பான். பகுதிக்கான  பிரச்சினை. முழுமையில் இருந்தே வந்தது என்பதைக் கம்யூனிஸ்ட் அறிந்துளான். அதனால், பகுதிக்கான போராட்டத்தை முழுமைக்கான போராட்டமாக மாற்றுவான்இத்தகைய அறிவுபெற்ற கம்யூனிஸ்டுகளையே தொழிலாளர்கள்விரும்புவர்கள்.அவ்வாறு விரும்பினால் தான் அவர்களுக்கு முழுமையான விடுதலை கிடைக்கும்

எங்கள் நடவடிக்கையைத் “தட்டியெழுப்பும்தகுதி உங்களுக்கு இல்லை.ஏனெனில்,நடவடிக்கை எனும் விஷயந்தான் உங்களிடம் பூஜ்ஜியமாயிருக்கிறது.கனவான்களே,தன்னியல்புக்கு அடி பணிவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்,உங்கள் சொந்த நடவடிக்கையைத் தட்டியெழுப்புவது பற்றி மேலும் சிந்தியுங்கள்!”

தொழிலாளர்களுக் வேண்டியது என்னவென்பதை லெனின் தொகுத்துத் தந்துள்ளார். மேலே லெனின் கூறியதை சுருக்கமாகப் பார்ப்போம்.

பொருளாதாரப் போராட்ட அரசியல் என்கிற,நீர்த்துப்போனகஞ்சி மட்டும் ஊட்டம் பெறுவதற்கு நாங்கள் குழந்தைகள் அல்ல,அறிவாளிகள் தெரிந்து கொண்டுள்ள அனைத்தையும் நாங்கள் அறிய வேண்டும்.இதையே நாங்கள் விரும்புகிறோம்.அதனால் கம்யூனிஸ்ட் என்கிற அறிவாளிகள் ஏற்கெனவே நாங்கள் தெரிந்து வைத்திருப்பதைப் பற்றிப் பேசுவதைக்குறைத்துக்கொண்டு,எங்களுக்குஇன்னமும்தெரியாமல்இருக்கும்,எங்கள் தொழிற்சாலை அனுபவத்தில் இருந்தும்பொருளாதாரப் போராட்டத்தில் இருந்தும் என்றைக்கும் கற்றுக் கொள்ள முடியாத,கம்யூனிச அரசியலை  அதிகமாகப் பேச வேண்டும்.

லெனின் இங்கே தொழிலாளர் பார்வையில் கூறப்பட்டது மிகவும் கடுமையான கண்ணோட்டத்தில்இருக்கிறது.மிகவும் காட்டமாகத்தான் இருக்கிறது

நமதுநாட்டின்,இன்றைய நிலையைக் கணக்கில்கொண்டால்,தொழிலாளர்களிடம் காணப்படும் அரசியல் விழிப்புணர்வுகூடப் பல கம்யூனிஸ்டுகளிடம் காணப்படவில்லை என்பதே உண்மையாகும். தற்கால இயக்கத்தின் பலம் மக்களின் விழிப்புணர்வில் அடங்கி இருக்கிறது.இயக்கத்தின் பலவீனம் புரட்சிகரமான தலைவர்களின் உணர்வு இன்மையிலும், முன்முயற்சி இன்மையிலும் அடங்கி இருக்கிறது

இங்கே நம் நாட்டுக் கம்யூனிஸ்டுகள்,எதையும் சந்தேகப் படவில்லை என்கிற மோசமான நிலையில் தான் நாம் இருக்கிறோம்

பொருளாதாரப் போராட்டம் மட்டுமே, மக்களை  அரசியலில்  ஈடுபடுவதற்குக்  காரணமாகும் என்ற கருத்தையும் லெனின் மறுத்துள்ளார்மார்க்சியத்தை வறட்டுத்தனமாகப் புரிந்து கொண்டவர்கள் பொருளாதாரப் போராட்டம் மட்டுமே அரசியலுக்கு உகந்தது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.ஆனால் அது தவறானதாகும்ஒரு பெண்,தான் பெண் என்ற காரணத்திற்காக ஒடுக்கப்படுவதை எதிர்த்து அந்தப் பெண் அரசியலில்ஈடுபடலாம்.அது கம்யூனிச அரசியலாக இல்லாமல் இருக்கலாம்,ஆனால் அந்தப் பெண் தனக்கும்,தமது பெண் இனத்திற்கும் ஏற்பட்ட ஒடுக்கு முறைக்கு முதலில் குரல் கொடுக்க அரசிலுக்கு வரலாம்,அப்படிவந்தபிறகு,தான்ஒடுக்கப்படுவதுஆணாதிக்கத்தால் மட்டுமல்ல,வர்க்க சமூகத்தில் சொத்துடைமையின்அடிப்படையில்தான் ஒடுக்க முறை நிகழ்கிறது.அதனால் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும்என்றால்,வர்க்கத்தை ஒழிக்க வேண்டும் என்ற புரிதலுக்கு வரலாம்

கம்யூனிஸ்டுகள் பொருளாதாரப் போராட்டத்துடன் முடங்கிப் போகாமல்,அனைத்து ஒடுக்கு முறைக்கும் எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்

லெனின் பொருளாதாரப் போராட்டத்தைத் தவிர்த்த மற்ற பிரச்சினைகளில் இருந்தும் மக்கள் அரசியலுக்கு வருவார்கள் என்று கூறுகிறார்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்