பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காரல் மார்க்சு, என்றி மெயின் ஆகியோர் எதிரான கருத்துக்களை வழங்கினர். இவைஇந்தியாவில் தேக்க நிலை உருவாவதற்கு தலையாய காரணம்என்றனர். நீண்ட காலமாக, பல ஆய்வாளர்கள் ஏற்றுப் பயன்படுத்தி வரும் இக்கருத்தோட்டத்தில் இரு மையக் கருத்துக்கள்உள்ளன :
(1) கிராமங்களில் நிலவிய சமூக நில உடைமை ;
(2)பொருளாதார மற்றும் சமூகத்தன்மை அல்லது கிராமத்தன்னிறைவு. உழவார்களோடு பிற தொழில் வகுப்பார்கிராமத்தில் தங்களை இணைத்துக் கொண்டதும் அவர்களிடம் இருந்த தொழில் பகிர்வும் கிராமத் தன்னிறைவை ஏற்படுத்தித் தந்தன. இவற்றில் முதல் கருத்தை பேடன் பாவெல் மறுக்கின்றார்.
இவரால் வெளியிடப்பட்ட ஆங்கிலேய இந்தியாவின்நிலவுடைமை முறைகள் பற்றிய சிறந்த நூலில் அதற்கானகாரணங்களைத் தருகின்றார். இந்தியாவில் நீண்ட காலமாகநிலவி வரும் தனியார் நில உடைமையைச் சுட்டிக் காட்டிஅவற்றின் வரலாற்று முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். இவரது கருத்துக்களை நாம் முழுமையாக ஏற்கஇயலாது. எனினும் சமூக நில உடைமை ,;இந்தியக்கிராமங்களில் மிகப் பழங்காலத்திலிருந்து பத்தொன்பதாம்நூற்றாண்டு வரை நிலவி வந்தது என்ற கருத்து இவர் திரட்டிய சான்றுகளால் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது.
இரண்டாவது கருத்தான,கிராமத்தன்னிறைவு பற்றிச்சில திறனாய்வுகளே இதுகாறும்வெளிவந்துள்ளன.இவற்றுள் உருப்படியான முதல்திறனாய்வு சமூக மானிடவியலரால்தரப்பட்டது. வட இந்தியக் கிராமங்களில் “ஜஜ்மானிய” என்ற முறை இருந்ததை 1930களில் 14.11. வைசர் என்பவர் கண்டறிந்தார். இது சாதிப் பாகுபாட்டினை அடிப்படையாகக் கொண்டு,உள்ளூர் மக்கள் சமூக, பொருளாதாரக் கூட்டுச் சார்புத் தன்மைபெறும் முறையாகும். கிராம எல்லைகளைக் கடந்தும் இம்முறைஇயங்கியது.1? இந்தியாவின் பல்வேறு கிராமங்களில்,1950களில் நடத்தப்பெற்ற கள ஆய்வுகள் பல ஊர்கள் இந்தப்பொருளாதார சமூகத் தன்னிறைவு பெறுவதற்குத் தேவையானஅனைத்து சாதிப் பிரிவுகளையும் பெற்றிருக்கவில்லை என்பதைத் தெளிவாக்கியது. பல ஊர்கள்அடங்கிய வட்டாரங்கள்அளவிலேயே பல சாதிகளிடையே தொழில் பகிர்வு நிகழமுடிந்தது. அதாவது ஒவ்வொரு கிராமமும் ஒரு குட்டிக் குடியரசு என்ற நம்பிக்கை பொய்த்துப் போனது1960களில் அலிகார் மற்றும் தில்வியைச் சார்ந்த முகலாயவரலாற்று ஆய்வாளர்களால், இரண்டாவது திறனாய்வுஉருவானது. உரைவிடப் பெரிய ஒரு நிலப்பரப்பின் முக்கியத்துவம்இங்கு வலியுறுத்தப்பட்டது.இப்பெரு நிலப்பரப்பு ஏறக்குறைய ஒரு தயாதிக் கூட்டத்தின் நிலப்பரப்பாகும்.2! மேற்கண்டகருத்தையே பர்டன் ஸ்டெயின் வலியுறுத்தினார். இவர் பண்டைய தென்னிந்திய உழவர் சமூக அமைப்பின் தன்மைகளைப்புரிந்து கொள்ள முயற்சிகள் மேற்கொண்டாலும்”கிராமசமூகம்பற்றிய முழுமையான ஓராய்வை மேற்கொள்ளவில்லை.
பல்லவசோழர்தமிழ்க்கல்வெட்டுக்களின்அடிப்படையில்கிருஷ்ணசுவாமி அய்யங்கார் முதலிய பலர் கிராம சமூகம்குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டனர். எனினும்,இவ்வாய்வுகள் தேக்கநிலை சமூகக் கொள்கையினைக்குறித்துஓத்த கருத்தினையோ எதிர்ப்பையோ தெரிவிக்க முற்படவில்லை. மாறாக பரம்பரையாக வரும் சமூக அமைப்பினைப்புகழ்ந்திடும் நோக்கில்பிரமதேய ௪ளர்களில்குடியாட்சி முறைநிலவியது என நிறுவ முற்பட்டனர்.
ஆகவே, மேற்குறிப்பிட்ட இரண்டு கருத்துக்களும்பழங்காலத் தென்னிந்தியக் கிராம நிலமைகளுக்குப் பொருந்திஇருந்தனவா என்பதைக் காண இதுவரை எந்த ஆய்வும்நடத்தப் பெறவில்லை. இவ்விரு கருத்துக்களில் இரண்டாவதுகருத்தான பொருளாதார சமூகத்தன்னாட்சி அல்லது தன்னிறைவு பெற்ற கிராமங்கள் பற்றிய ஆய்வு சோழர் காலக்கல்வெட்டுக்களின் அடிப்படையில் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு தஞ்சைப் பெரிய கோயிலின் இரண்டு பெரியகல்வெட்டுக்களும் (தெ. 11, எண்கள் : 4, 5)24, கங்கை கொண்டசோழபுரத்துக் கோயிலின் ஒரு கல்வெட்டும் (தெக. 11/, எண் :524)அடிப்படை ஆதாரமாகும்.இம்மூன்று கல்வெட்டுக்களும்நீண்ட கல்வெட்டுக்கள். மூன்றாவது மிகவும் சிதைந்துள்ளது.
அரச ஆணையுடன் தொடங்கும் தஞ்சாவூர்க் கல்வெட்டுக்கள்முதலாம் இராஜராஜனின் 29வது ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டவை. இவ்வரசன் தஞ்சைக்கோயிலுக்கு தேவதானமாகவழங்கிய ஊர்களிலிருந்து வசூலிக்கப்பட வேண்டிய நிலவருவாயான காணிக்கடன் குறித்த விவரங்களைத் தெரிவிக்கும்இக் கல்வெட்டுக்களைக் கோயில் சுவர்களில் பொறிக்கஆணையிட்டதை இவை பதிவு செய்கின்றன. இவற்றில்
கீழ்க்கண்ட விவரங்கள் தரப்பட்டுள்ளன: (௮) உளரின்பரப்பளவு;( ஆ இறையிலியாகக் கழிக்கப்பட வேண்டியநிலங்களின் விவரங்கள் மற்றும் அவற்றின் பரப்பளவு :(இ)நிலவரி செலுத்த வேண்டி௰ எஞ்சிய பகுதிகளின் பரப்பளவு; (ஈ)நிலவரியாகச் செலுத்தவேண்டிய நெல் அல்லது பணத்தின்அளவு. இவ்வரசாணையைத் தொடர்ந்து சோழ மண்டலத்திலிருந்து கொடையாக அளிக்கப்பட்ட 40 ஊர்கள் பற்றிய விவரங்கள் மேற்குறிப்பிட்ட வரிசையில் தரப்பட்டுள்ளன . கங்கைகொண்ட சோழமபுரத்துக் கல்வெட்டு (இனிமேல் ௧. சோழபுரம் ஏழு பகுதிகளைக் கொண்டி ருக்கலாம். ஒவ்வொரு பகுதியும் வீரராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியடன் தொடங்கு - கிறது. இவனாலும் இவனது முன்னோர்களாலும் அளிக்கப்பட்ட தேவதான ௫ஊஎர்களைப் பற்றி விவரிக்கிறது. கல்வெட்டு மிகவும் சிதைந்துள்ளதால் எத்தனை ர்கள் இக்கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ளன என்பதை அறிய இயலவில்லை. மேலும் சில கொடைகள் எவ்விதத்தில் கங்கை கொண்ட சோழபுரத்துக் கோயிலுடன் தொடர்புடையவை என்பதையும் தெரிந்து கொள்ள இயலவில்லை. எனினும் ௧. சோழபுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்கள் பற்றிய விவரங்கள் யாவும் தஞ்சைக் கல்வெட்டு வரிசையிலேயே உள்ளன. எனினும் ௧. சோழபுரத்தில் பலவகை இறையிலி நிலங்களின் பரப்பளவுகள், பயிர்களின் தன்மைக்கு ஏற்ப இறை நிலங்களை வகைப்படுத்திமை ஆகியவை விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. ஊரின் மொத்தப் பரப்பளவிலிருந்து கழிக்கப்படவேண்டிய இறையிலி நிலங்களைக் குறிப்பிடும் பகுதியில் தான் கிராமப் பொருளாதார மற்றும் சமூகத் தன்னிறைவு பற்றிய முக்கிய விவரங்கள் அடங்கியுள்ளன . தஞ்சைக் கல்வெட்டு அரச ஆணையில் கீழ்க்கண்ட நிலங்கள் தரப்பட்டுள்ளன: ௨ர் நத்தம் (ஊராரின் குடியிருப்புப் பகுதி,?? ஸ்ரீகோயில்கள், குளங்கள், ஊளடறுத்துப்போன வாய்க்கால்கள், பறைச்சேசரி, கம்மாணச்சேரி மற்றும் சுடுகாடு. ஆயினும் அரச ஆணையில் தரப்பட்டுள்ள அனைத்து இறையிலி நிலங்களும் ஓவ்வொரு ௫ளரிலும் உள்ளதாகச் சொல்லப்படும் இறையிலி நிலங்களும் மாறுபடுகின் றன . அதாவது அரசாணையில் தரப்படும் எல்லாவகை இறையிலி நிலங்களும் தனித்தனி ஊர்களில் சொல்லப்படும் இறையிலி நிலங்களில் காணப்படவில்லை. மேலும் பல கிராமப் பதிவுகளில் வேறு சில வகையான நிலங்களைப் பற்றிய செய்திகள் தரப்பட்டுள்ளன. எல்லா ஊர்களிலும் விவரிக்கப் பட்ட இறையிலி நில விவரங்கள் குறித்துக் கீழ்வரும் அட்டவணையின் துணையோடு உன்றிப் பார்க்கலாம். இவ் அட்டவணையில் தஞ்சைக் கல்வெட்டு ஊர்களில் 40இல் ஒரு 7 ஊர்கள் தவிர்த்து எஞ்சிய 33 ஊர்களும் க. சோழபுரத்தில் 7 ஊர்களும் சேர்த்து 40 ஊர்கள் பற்றிய விவரங்கள் பகுத்துத்தரபட்டுள்ளன
ஊர் வகைகளும் பரப்பளவும்
அரச ஆணையில் “ஊர்:என்ற பொதுச்சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தஞ்சைக் கல்வெட்டில்கூறப்பட்டுள்ள 33 ஊர்களில் மூன்று களர்கள் (எண்கள் : 12, 33,40) 'நகரம்' என்ற வகையாகும். வணிக களர்களே நகரம்:எனப்பட்டன. இவற்றுடன் ஐந்து ஊர்கள் (34 - 38) ஒருநகரத்துடன் (33) இணைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.
எனவே, இவ்வைந்து ஊர்களையும் நகரங்களாகக்கொள்ளலாம். ௧. சோழபுரத்தில் கூறப்பட்டுள்ள 7 ௪ளர்களில்'நகரம்' எவையும் இல்லை. மேலே குறிக்கப்பட்டுள்ளநகரங்களைத் தவிர தஞ்சைக் கல்வெட்டில் இரண்டு வகைஊர்கள் சொல்லப்பட்டூுள்ளன. அவற்றில் ஒன்று (39)சாலாபோகமாகும்.இஅறச்சாலைகளுக்கு கொடையாகத்தரப்பட்ட ௫௨ஊர்) ; மற்றொன்று (16) பள்ளிச்சந்த (பெளத்தஅல்லது சமணப் பள்ளிகளுக்கு மானியமாக அளிக்கப்பட்டஊர்) வகையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகும்.இவை தவிரஉள்ள பிற ஊர்களின்வகை பற்றிய குறிப்பு இல்லை.எனவேஅவைகளை இயல்பான ஊர்களாகக் கரத வேண்டும்.
அதாவது அவை வெள்ளான் வகை எர்களாகும்.2” இத்தரவுகள் எவையும் பிரமதேய ஊர்களைக் குறிப்பிடவில்லைஎன்பது இங்கு நோக்கத்தக்கது.
அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 40 ஊர்களுள் 37உளர்களுக்குப் பரப்பளவு கிடைக்கிறது. அவற்றின் பகுப்புகீமுள்ள அட்டவணையில் காட்டப்படுகிறது.
அட்டவணை 5
நிலப்பரப்பு(வேலிகளில்) ஊர்களின் எண்ணிக்கை
1-10
11-20
21-30
31-40
41-50
51-60
61-70
81-90
111-120
131-140
151-160 Ql
மொத்தம்
அட்டவணைப்படி. 100 வேலிகளுக்கும் மேற்பட்டதாகச் சிலளர்கள் விளங்கினாலும் பெரும்பான்மையான எ௭ர்கள் 60வேலிக்கும் குறைவான பரப்பு உடையன என்பது உறுதி.2எனினும் இவற்றுள்ளும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன என்பதைக் கவனிக்க வேண்டும். இறையிலி நிலங்களின்பரப்பளவுகளும் பெரிதும் வேறுபட்டுள்ளன .
ஊரிருக்கைப் பகுதிகீழ்க்கண்ட மூன்றுவகை அ௫ளரிருக்கைப் பகுதிகளை அரசஆணை குறிப்பிடுகிறது: ஊர் நத்தம், பறைச்சேரி (பறையர்குடியிருப்புப் பகுதி, கம்மாணச்சேரி (கம்மாளர் குடியிருப்புப்பகுதி). இருப்பினும் தனித்தனி ஊர்களை விவரிக்கையில் வேறுசிலவகைக்குடியிருப்புப்பகுதிகளும்சொல்லப்பட்டுள்ளன .அவையாவன :குடியிருக்கை (குடிகள் வாழும் பகுதி), ஈழச்சேரி(கள் இறக்குவோர் வாழும் பகுதி), தீண்டாச்சேரி (தீண்டத்தகாதவர் என்போர் வாழும் பகுதி), தலைவாய்ச்சேரி (ர்செல்லும் தலைவாய்களைக் கட்டுப்படுத்துவோர் வாழும் பகுதி),தளிச்சேரி (கோயில் குடியிருப்பு). இறுதியில் கூறப்பட்ட மூன்றுகுடியிருப்புப் பகுதிகளும் சில ஊர்களில் மட்டுமேகாணப்படுவதால் அட்டவணையில் பிற என்ற தலைப்பில்வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 8ஆம் எண்ணுடைய ஊர்ச்செய்திகள் கல்வெட்டில் சிதைந்துள்ளமையால் அட்டவணையில்சேர்க்கப்படவில்லை. இவ்வூரில் வண்ணாரச் சேரிவெளுப்போர் குடியிருப்பு) இடம் பெற்றுள்ளது. எனவே அரசஆணையில்கூறப்பட்டுள்ள மூன்று குடியிருப்பு வளாகங்களைத்தவிர, பிறவகைக் குடியிருப்புப் பகுதிகள் பலவும் ஊரில்இருந்துள்ளமை தெளிவு.
அரச அணையில் பறைச்சேரி சொல்லப்பட்டிருந்தாலும்தஞ்சையின் 33 ஊர்களில் 19 ஊர்களில் மட்டும் பறைச்சேரிகள்இருந்துள்ளன. ஆனால் ௧. சோழபுரத்தில் 7 ஊர்களில்ஒருஊரில்மட்டுமே பறைச்சேரி காணப்படுகிறது. தஞ்சையில் 7ஊளர்களில் மட்டுமே கம்மாணச்சேரி இருந்துள்ளது. ௧.சோழபுரத்தில் ஒரு ஊரில் கூட இது இல்லை. மூன்றில் இருபங்கு ஊர்களில்ஊர்நத்தமும்மற்றவற்றில்ஊரிருக்கையும்காணப்படுகின்றன. தஞ்சைக் கல்வெட்டில் ஒர் ஊரில் (எண்:23) இவ்விரு சொற்களும் சேர்க்கப்பட்டு ஊரிருக்கை நத்தம்என்ற சொல்லால் அப்பகுதி குறிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டுசொற்களுக்கும் உள்ள முக்கியப் பொருள் மாறுபாடு தெளிவாகஇல்லை”? என்றாலும் இவ்விரு பகுதிகளையும் ஊராரின்குடியிருப்புப் பகுதிகளாகக் கொள்ளலாம். எனினும்,தஞ்சையில்இரண்டு ஊர்களில்ஊர்நத்தமோ ஊரிருக்கையோஅல்லது வேறு வகைக் குடியிருப்போ காணப்படவில்லை. இவ்விரண்டு ஊர்களின் பரப்பளவும் மிகக் குறைவானதாக முறையே 6,3 வேலிகள்) உள்ளதும் இதற்குக் காரணமாகலாம். மேலும் இவ்வுூர்கள் வேறொரு ஊரின் பிடாகையாக இருக்கலாம். அப்பெரிய ஊரில் ஊர் நத்தம் அல்லது ஊரரிருக்கை இருந்திருக்கலாம். தஞ்சையில் மூன்று ஊர்களில் “குடி யிருக்கை: காணப்படுகிறது. “குடி. என்ற சொல்லுக்கு உமுகுடி,, ஒரு குடும்பம் அல்லது மக்கள் தொகுதி என்று பல வகையில பொருள் கொள்ளலாம். மேற்கூறப்பட்ட மூன்று ௫௪ளர்களில் குடி யிருக்கையுடன் உளர் நத்தமும் பறைச்சேரியும் இருந்துள்ளன. எனவே இவ்விடத்தில் குடி என்பது குத்தகைதாரராக உள்ள உ.முகுடிகளைக் குறிப்பிடலாம். இவர்கள் பொருளாதார, சமூக நிலைகளில் ஊராரிலிருந்தும் பறையர்களிலிருந்தும் வேறானவர்கள். சோதிடர்களுக்கு அளிக்கப்பட்ட 'கணிமுற்றூட்டு' என்ற பகுதி ஊர்க் குடியிருப்பு வளாகத்தில் எப்பகுதியில் இருந்தது? என்று கல்வெட்டில் குறிப்பிடவில்லை. எனினும் ௪ளர்ப்பரப்பில் இது உள்ளடங்கியதாக தஞ்சை ஊர் எண் : 1 தெரிவிக்கிறது. இதேபோன்று உர் எண் :2இல் மருத்துவர்களுக்கு அளிக்கப் பட்ட மருத்துவப்பேறு என்ற பகுதி இருந்தது. இதிலிருந்து சோதிடர், மருத்துவர் ஆகியோர் அவவுர்களில் வசித்தனர், என்றாலும் அவர்களுக்கெனத் தனிக் குடியிருப்பு வளாகங்கள் இல்லை என அறியலாம். ஊர் எண் :28இல் பறைச்சேரி உழப்பறையரிருக்கும் கீழைச்சேரி' என்றும் “உழப்ப்றையரிருக்கும் மேலைப் பறைச்சேரி' என்றும் குறிப்பிடப்படுகிறது. அவ்வுரில் வாழ்ந்த பறையர்கள் உழமுதொழிலில் ஈடுபட்டி ருந்தனர் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது . நீர்ப்பாசன வசதிகள் தஞ்சை அரச ஆணையில் குளம், வாய்க்கால் என்ற இரு சொற்கள் நீர்ப்பாசன வசதிகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள் ளன. இருப்பினும் ஊர்க் குடியிருப்புப் பகுதிகளைப் போன்று இச்சொற்களும் அனைத்து ஊர்களிலும் காணப்படவில்லை. தஞ்சையின் 22 ஊர்களிலும் ௧. சோழபுரத்தின் 7 ஊர்களிலும் குளம் இருந்துள்ளது. மேலும் சில ஊர்களில் உள்ள நீர் நிலைகள் சில அடைகளோடு : விவரிக்கப்பட்டுள்ளன: புலத்திற்குளம் (உழு நிலங்களின் நடுவில் உள்ள குளம்); கழனிக் குளம் (நெல் பயிரிடப்பட்ட நிலத்தில் உள்ள குளம்) ; ஊருணிக் குளம் (ஊருக்குப் பொதுவாக அமைந்த குடிநீர்க் குளம்);திருமஞ்சனக் குளம் (புனிதக் குளம்); பறைக்குளக் குழி பறையர்கள் பயன்படுத்தும் நீர்க்குட்டை3். எனவே தேவையான அடைமொழி இல்லாத 'குளம்' வேளாண்மைக்காகவா அல்லது குடி நீருக்காகவா அல்லது பிற வசதிகளுக்கானதா என்பது குறித்துத் தெளிவாகக் கூற முடியாது. எனினும் 23, 28 எண்ணு டைய உஊளர்களில் குடி நீர்க் குளம் மட்டும் குறிப்பிடப் பட்டுள்ளது. உளர் எண் :22இல் ஒரு கோயில் குளம் கூறப்பட்டுள்ள;. இந்த மூன்று ஊர்களிலும் பாசனக் குளங்கள் குறித்து ஒன்றும் சொல்லப்படவில்லையாதலால் அதனைக் காட்ட அட்டவணை யில் முக்கோணக் குறியீடு இடப்பட்டுள்ளது. “கரை: என்ற சொல் 11 ஊர்களில் காணப்படுகிறது. இச்சொல் 9 இடங்களில் “குளம்' என்பதையடுத்து வந்துள்ளது. எனவே, இங்குக் கரை என்பது குளக்கரையைக் குறிப்பிடலாம். பிற இடங்களில் இச்சொல் வாய்க்கால் அல்லது ஆற்றின் கரை எனக்கொள்ளலாம். அரச ஆணையில் வாய்க்கால்களைப் பற்றிய சொற்றொடரில் ஊடறுத்துப்போன வாய்க்கால்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும், ளர்கள் பகுதியில் வாய்க்கால்களைக் குறிப்பிடும் பொழுது “இவ்வுர் நிலத்தை ஊடறுத்துப் புற ஊர்களுக்கு நீர் பாயப்போன வாய்க்கால்: என விவரிக்கப்பட்டுள்ளது. 16ஆம் எண்ணுடைய எஉஊஊரில் “கீழ் நாட்டுக்கு நீர் பாயப்போன: என்று விவரிக்கப்பட்டுள்ளது. மற்றவகை நீர் வழிகள் ஆறு, வாய், ,நீரோடு கால் என் பனவாகும். மூன்று சளர்களில் (தஞ்சை எண் : 16, 26; ௧. சோழபுரம் 212) ஆறு பற்றியும், இரண்டு ஊர்களில் (தஞ்சை எண்கள் 10, 21) வாய் பெரிய வாய்க்கால்) பற்றியும், ஒரு ஊரில் (தஞ்சை எண் :27), நீரோடு கால்: (சிறிய வாய்க்கால் பற்றியும் கூறப்பட்டுள்ளன. மேற்கூறப்பட்ட இந்த ஆறு அளர்களில் இரண்டில் வாய்க்கால் பற்றிக் கூறப்படவில்லை. இது அட்டவணையில் முக்கோணம் இட்டு காட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள நான்கு ௪ஊளர்களில் குறைந்தது ஒரு வாய்க்காலாவது உள்ள ஊர்கள் வட்டம் மற்றும் கத்திக் குறியுடன் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளன. பெரிய பரப்பளவு கொண்ட மற்றொரு ஊரில் கிணறும் தொட்டியும் கூறப்பட்டுள்ளன . கோயில்கள் அரச ஆணையில் இவை பொதுவாக 'ஸரீகோயில்கள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளன . எனினும் ஒவ்வொரு ஊரிலும் இப்பகுதியில் மூலவர் பற்றியும் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. அவற்றுள் சொல்லப்பட்ட தெய்வங்களாவன : மகாதேவர்,பிடாரி, காளாபிடாரி, அய்யன், காடுகசேட்டை. அட்டவணையில் கோயில்கள் என்ற தலைப்பில்அனைத்துக் கோயில்களும் சேர்க்கப்பட்டுள்ளன. கீழே உள்ளபட்டியலில் கோயில்களின் பகுப்பு தரப்பட்டுள்ளது.30
அட்டவணை 6
கோயில் ஊர்களின் எண்ணிக்கை
ஸ்ரீ கோயில் 11+
மகாதேவர் ஸ்ரீ கோயில் 4
காளாபிடாரி ஸ்ரீ கோயில் 2
பிடாரி ஸ்ரீகோயில் 2+
பிடாரி கோயில் 8
அய்யன் கோயில் 5+
காடுகாள் கோயில் 2
துர்க்கையார் கோயில்
சேட்டைக் கோயில் 1
22 ஊர்களில் குறைந்தபட்சம் ஒரு கோயிலாவது உள்ளது.இவற்றுள் 14 ஊர்களில் ஒன்றுக்கு மேற்பட்ட கோயில்கள்உள்ளன. எட்டு ஊர்களில் ஸ்ரீ கோயில் அல்லது ஸ்ரீ கோயில்கள்என்று மட்டும் காணப்படுகிறது குஞ்சையில் மூன்றும் ௧.சோழபுரத்தில் ஐந்தும். மற்ற 14 ஊர்களில் ஸ்ரீ கோயில் என்றசொல் நான்கு ஊர்களில் இடம் பெறவில்லை; பத்து ஊர்களில்பிற கோயில்களுடன் அல்லது பிற கடவுளர்களுடன்இணைத்துக் கூறப்பட்டுள்ளது.
பத்து ஊர்களில் பிடாரி ப்ரீ கோயில் அல்லது பிடாரிகோயில் காணப்படுகிறது.இரண்டு ௪ளர்களில்பிடாரி கோயில்மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. மேலும் மூன்று பிடாரிகோயில்கள் ஓரே ௪௭ரில் இருந்துள்ளன (எண் 31). ஐந்துஊர்களில் அய்யன் கோயில்கள் இருந்துள்ளன. எல்லாஇடங்களிலும் இக்கோயில் பிற கோயில்களுடன் இணைத்தேசொல்லப்பட்டுள்ளது. காளாபிடாரி ஸ்ரீ கோயிலும் காடுகாள்கோயிலும் இரண்டிரண்டு ஊர்களில் இருந்துள்ளன.துர்க்கையார் கோயிலும்சேட்டைக்கோயிலும்ஓர்ஊரில்மட்டுமே இருந்துள்ளன.பல உஊளர்களில் கோயிலோடு சேர்த்துத் திருமுற்றம்(கோயிலின் முன் உள்ள திறந்த வெளி) குறிப்பிடப்பட்டுள்ளது.
இது இறையிலி நிலமாகும்.சுடுகாடு தஞ்சையின் 19 ஊர்களிலும் ௧. சோழபுரத்தின் 5 ஊளர்களிலும் ஒன்று அல்லது இரண்டு சுடுகாடுகள் இருந்துள்ளன. எனவே மொத்தம் 40 ஊர்களில் 24 ஊர்கள் மட்டுமே சுடுகாடுகளைப் பெற்றிருந்தன. இச்சுடுகாடுகள் ஊரின் பரப்பளவு வீதத்தைப் பொறுத்து அமைந்திருந்தன வாகத் தெரியவில்லை. ஏனெனில் 2,5 எண் ஊர்கள் 51 வேலிக்கும் அதிக நிலப்பரப்பை உடையன. எனினும், சுடுகாடுகள் அவ்வுர்களில் இல்லை. ஆனால் 10, 30 எண் ஊர்கள் 10 வேலிக்கும் குறைவான பரப்புடைய சிற்றூர்கள். இவை சுடுகாடுகளைப் பெற்றிருந்தன . சுடுகாடுகளைக் கொண்ட 24 ஊர்களில் 8 ஊர்களில் வேளாளருக்கும் பறையருக்கும் தனித் தனியான சுடுகாடுகள் சொல்லப்பட்டுள்ளன. இதனால் அவ்வுர்ச் சமூகத்தில் வேளாளரும் பறையரும் ஒதுங்கி வாழ்ந்தனர் என்பதைக் காட்டுகிறது. இந்த எட்டு ஊர்களும் முக்கோணம் இட்டு காட்டப்பட்டுள்ளன . பறைச்சேரியினைக் கொண்டிருந்த எல்லா அளர்களிலும் பறைச் சுடுகாடு இருந்ததாக நம்மால் கூற இயலவில்லை. தீண் டாச்சேரி இருந்த இரண்டு ஊர்களிலும் ஈழச் சேரி இருந்த ஆறு ஊளர்களிலும் அவர்களுக்கெனத் தனிச் சுடுகாடுகள் இருந்தன என்று கல்வெட்டு. கூறவில்லை. 7 ஊர்களில் கம்மாளர்கள் குடியிருப்பு உள்ளதைக் குறித்து அரச ஆணையில் குறிக்கப் பட்டாலும் எந்த ஊரிலும் அவர்களுக்குத் தனியாகச் சுடுகாடு இருத்தமை பற்றிக் குறிப்பு இல்லை. பிறவகை இறையிலி நிலங்கள் மேலே ஆய்வு செய்யப்பட்டவைகளுடன் கீழ்க்கண்டவைகளும் இறையிலியாக அவ்வவ் கிராமப் பகுதியில் கூறப்பட்டுள்ளன . இவ்விவரங்கள் அரச ஆணையில் கூறாது விடுபட்டுள்ளன. அவையாவன : ஐந்து ஊர்களில் ஊர்க் களம் தானியம் அடிக் கும் களம், oor எண்கள் : 21, 26, 27, 29, 32) ; நான்கு களர்களில் கொட்டகாரம் கூனியக் களஞ்சியம், எண்கள் : 23, 25, 30, 32) ; ஓர் ஊளரில் கன்று மேய் பாழாய்க் கிடந்த நிலம் மேய்ச்சல் நிலம், எண் :28) ; இரண்டு ஊர்களில் வழி (எண் : 15, 28) ; மூன்று ஊர் களில் திருநந்தவனம் (எண்கள் 17, 29, 39) ; மற்றும் ஓர் கரில் இருந்த கற்கிடை (கற்களின் குவியல், எண் : 21). தரவுகளின் நம்பகத் தன்மை மேற்கூறப்பட்ட அனைத்துச் சான்றுகளையும் பகுப்பாய்வு செய்வதற்கு முன் இவற்றின் நம்பகத் தன்மையைக் கண்டறியவேண்டும். மேலும், முடிவுகளை எவ்வளவு தூரம் பொதுமைப்படுத்தலாம் என்பதையும் கருத வேண்டும். முதலில், அரச ஆணை, தனித்தனி சர் விவரணை ஆகியவற்றுக்கிடையே உள்ள முரண்பாடு பற்றிக் கவனிக்க வேண்டும். ஏழு வகையான இறையிலி நிலங்களை அரசாணை தெரிவிக்கின்றது. ஆயினும், இவை அனைத்தும் ஒவ்வொரு ஊளரினையும் பற்றிக் குறிப்பிடும் பகுதியில் இடம் பெறவில்லை. எடுத்துக்காட்டாக மொத்தம் 40 ஊர்களில் 6 ஊர்களில் மட்டுமே கம்மாணச்சேரி கூறப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, அரச ஆணையில் தெரிவிக்கப்பட்ட ஏழு வகை இறையிலி நிலங்கள் அல்லாத பிற வகை இறையிலி நிலங்களும் ஊர்களின் விளக்கப் பகுதியில் சொல்லப்பட்டுள்ளன . எனவே அரசாணை யில் குறிப்பிடப்பட்ட இறையிலி நிலங்கள் எடுத்துக்காட்டாகச் சொல்லப்பட்டன என்று தெரிகிறது. மேலும் ஒவ்வொரு ஊளரிலும் இறையிலி நிலங்கள் குறித்துத் தரப்படும் விவரங்கள் அவ்வவ்வுரில் நிலவிய உண்மை நிலைமைகளைப் பிரதிபலிப்ப. தாகக் கொள்ள வேண்டும் என்றாகிறது. இறையிலி நிலங்கள் பற்றிய விவரங்கள் ஊருக்கு ஊர் மாறுபடுகின்றன என்ற உண்மையையும் இங்கே குறிப்பிட வேண்டும். இதுவரை நாம் கண்ட முடிவுகளை எந்த அளவு பொதுமைப் படுத்த முடியும்? இக்கேள்விக்கு விடைகாண வேண்டின் அந்த 40 ஊர்களின் வருவாய்த்தீர்வை மற்றும் அவவுர்களின் இடப்பரவல் ஆகியவற்றை இங்கு ஆய்வு செய்ய வேண்டும். தஞ்சையின் 26 களர்களில் நிலவரி அல்லது காணிக்கடன் வேலிக்கு! 95 - 100 கலம் என்ற குறுகிய விகித எல்லைக்குள் உள்ளது. ஓர் களரில் மட்டுமே இத்தீர்வை 1 வேலிக்கு 77 கலம் நெல்லாக விதிக்கப்பட்டுள்ளது. எனினும் ௧. சோழபுரத்தில் கூறப்பட்ட 7 ஊர்களில் காணிக்கடன் தீர்வை வேலிக்கு 16 கலத்திலிருந்து 52 கலம் வரை மாறுபடுகிறது. தஞ்சையின் ஊளர்களையும் க. சோழபுரத்தின் ஊர்களையும் கூர்ந்து நோக்கினால் வேலிக்கு 95 கல நெல்லுக்கு மேல் விதிக்கப்பட்ட ஊரர் நிலங்கள் யாவும் நெல் விளையும் இரு பூ (இரு போகம்) நிலங்களாகும். ஒரு வேலிக்கு சுமார் 50 கலம் வசூலிக்கப்படும் ௧. சோழபுரத்தின் இரண்டு ஊர்களில் ஒரு பூ மற்றும் இரு பூ நிலங்கள் கலந்து கிடந்தன. 30 கலத்துக்குக் கீழ்ப்பட்ட தீர்வை வழங்கிய 5 உஊரர்களில் வரகு விளைச்சல் இருந்தது. இதிலிருந்து ௧. சோழபுரத்தின் 7 ஊர்களின் இயற்கைச் சூழலும் தஞ்சை ஊர்களின் சூழலும் வேறுபட்டவை என்று தெரிகிறது. முப்பத்து மூன்று ஊர்களின் இடப்பரவல் நிலப்படம் 3இல் காட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் தஞ்சைக் கல்வெட்டில்கூறப்பட்டுள்ள 26 ஊர்கள த1, த2, த3, த4, த6 என்றும் ௧. சோழ புரத்தின் 7 ஊர்கள் ௧3௮, ௧7 என்றும்காட்டப்பட்டுள்ளன . மீதமுள்ள தஞ்சையின் 8 ஊர்களில் நெல்லுக்கு மாறாகப் பொன்னாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று ஊர்கள் நகரங்களாகும். மற்றவை இம்மூன்று நகரங்களில் ஒன்றுடன் இணைந்த அஉளர்களாகும். இங்கு வரிவீதம் 1 வேலிக்கு 5.32 கழஞ்சு பொன்னிவிருந்து 9.92 கழஞ்சு பொன் வரை உள்ளது. இந்த 8ஊர்களும் நிலப்படத்தில் த1, த4, த5 என்ற பகுதிகளாகக் காட்டப்பட்டுள்ளன. இவ்வுர்களின் அமைவிடம் மூலமே இவவுர்களின் நிலத்தன்மையை ஊகிக்க முடியும். மேற்கூறப்பட்ட 40 ஊர்களும் கீழ்க்கண்ட மூன்று வகைகளில் வேறுபட்டுள்ளன: (1) தஞ்சைக் கல்வெட்டு ஊர்கள் பெரும்பாலும் சமமான செழிப்புத் தன்மை கொண்டவை எனினும் மாறுபட்ட இயற்கைச் சூழல் கொண்ட கஊரர்களைக கொண்டிருந்தன. (2) இவ்வூர்கள் சோழ மண்டலத்தில் நன்கு பரவிக் கிடந்தன. (3) இவ்வூர்களின் பரப்பளவு ஒன்றுக் கொன்று வேறுபட்டுள்ளன. எனவே, இங்கு முடிவுகள் சோழமண்டல ஊர்களை, குறிப்பாக சோழமண்டலத்து மையப் பகுதி ஊர்களைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம். எப்படியும் இத் தரவுகளில் ஒரு சார்புத் தன்மை இல்லை எனலாம். பிரமதேய ஊர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதைக் குறிக்க வேண்டும். அரசரின் கொடைகளால் ஏற்படுத்தப்பட்ட இவை சிறப்புச் சலுகைகளைப் பெற்ற ளர்கள், பொருளாதார வளர்ச்சி மிக்க பகுதியுமாகும். எனவே, பிரமதேயங்களை இவ் ஆய்விலிருந்து விலக்கியதால் ஆய்வு முடிவுகளில் குறைபாடு ஏதும் ஏற்படாது. மாறாக, அக்கால இயல்பான ஊர்களின் நிலைமைகளை அறிய முற்படும் இவ் ஆய்விற்கு கூடுதல் வலிவு கிடைக்கும். பகுப்பாய்வு பல உஎளர்களில் பலவேறு குடியிருப்புப் பகுதிகள் இருந்தமையை நாம் காண்கிறோம். அரசாணையில் தரப்பட்ட குடியிருப்புப் பகுதிகள் உளர் நத்தம் (ஊரிருக்கை), கம்மாணச்சேரி மற்றும் பறைச்சேரி என்பன. வண்ணாரச்சேசரி, ஈழச்சேரி, தீண்டாச்சேரி, தலைவாய்ச்சேரி மற்றும் தளிச்சேரி ஆகிய குடியிருப்புப் பகுதிகளும் அமைந்திருப்பதிலிருந்து அவ்வவ் ரில் பல வகுப்பார் உண்மையாகவே வாழ்ந்திருந்தனர் என்று அறியலாம். மேற்கண்ட வகுப்பாரது பெயர்களிலிருந்து இவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டி ருந்தனர் என்பதும் தெளிவு. அதாவது வேளாண்மை, கருவிகள் செய்தல், வெளுத்தல், கள் இறக்குதல் மற்றும் இதுபோன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட்டி ருந்தனர். சிற் சில வகுப்பார் சேர்ந்து வாழ்ந்த இவ்வூர்களில் சாதி அடிப்படையில் தொழில் பகிர்வு இருந்தது என்பது இதிலிருந்து விளங்கும். ஒரு வகையில் இச்சான்றுகள் இந்திய அஉர்கள் குட்டிக் குடியரசுகளாக இருந்தன; அவற்றுள் வேளாண்மையும் கைவினைத் தொழிலும் பிணைந்து சமூக உற்பத்திக்கு வழி வகுத்தன என்ற கொள்கைக்கு உரம் கூட்டுகின்றன . உளரில் அனைத்து வகையான குடியிருப்பு வளாகங்களும் அமைந்திருக்கவில்லை என்னும் முக்கிய உண்மை ஈண்டு நோக்கத்தக்கது. எடுத்துக்காட்டாக, கம்மாணச்சேரி சில ஊர்களில் மட்டுமே இருந்துள்ளது; இவ்வாறே பறைச்சேரியும்; ஆராய்ந்த 40 ஊர்களில் பாதி ஊர்களில் மட்டுமே இருந்துள்ளது... மாறாக ஊர் நத்தம் அல்லது ஊரிருக்கை தான் பல ஊர்களில் இருந்த ஒரே குடியிருப்புப் பகுதியாகும். கோயில்கள், சுடுகாடுகளின் பரவல் தன்மையும் மேலே கண்ட கருத்தையே நமக்குத் தெளிவுறுத்துகின்றது. பல ஊர்களில் வாழ்ந்த மக்கள் வேறு ஒரு ஊரிலிருந்த கோயிலிலோ அல்லது சுடுகாடுகளிலோ கூடி முறையே நன்மை தீமைச் சடங்குகளைச் செய்திருக்க வேண்டும். மேற்சென்ற கருதல் நம்மைக் கீழ்க்கண்டவாறு சொல்லத் தாண்டுகிறது. சமூகப் பெருக்கம் நிலை .பெற்ற முதன்மை மையங்களாகக் கிராமங்கள் விளங்கவில்லை. மேலும் அவற்றுக்குள்ளேயே கிராம மக்களின் இயக்கம் முடங்கி -யிருக்கவில்லை; கிராமத்தைவிட ஒரு பெரிய நிலக் கூறிலேயே சமூகப் பெருக்கம் நடை பெற்றிருக்கக் கூடும். மற்றுமொரு கருதல் நீர்ப் பயன்பாடு ஆகும். மழை நீரைத் தேக்கி வைக்க உயர்ந்த கரைகள் கொண்ட குளங்கள் பெரும்பாலான உஊர்களில் இருந்துள்ளமை. வேளாண்மை ஊர்கள் எனினும் குளங்கள் பற்றிய தகவல்களைக் கூர்ந்து நோக்கும்பொழுது இக்குளங்களில் சில வெறும் குடிநீர் அல்லது நீராடும் குளங்களாகவே இருந்தன; பாசனத்துக்குப் பயன் படவில்லை எனத் தெரிகிறது. மேலும் பாதி ஊர்களில் அவற்றினூடே சென்ற வாய்க்கால்கள் பிற ச௪ளர்களுக்குப் பாசனத்தைக் கொடுத்தன; கீழுள்ள' வேறு நாட்டுக்குக் கூட அவை பாய்ந்தன. ஆகவே நீர்ப்பங்கீட்டின் பொருட்டு ஒர் ஊரின் மக்கள் பிறிதொரு ௨ர் மக்களோடு மட்டுமன்றி, பக்கத்து நாட்டு மக்களுடனும் இணைந்து செயல்பட்டி GSS வேண்டும். ஆய்ந்தவற்றில் பாதி ஊர்களில் மட்டுமே ஆறு அல்லது வாய்க்கால்கள் ஊரின் குறுக்கே செல்கின்றன. இதனால் பிற ஊர்களில் எவ்வித நீர்வழிகளும் இல்லை என்று கூற இயலாது. ஊர்களின் அல்லது நாடுகளின் எல்லைகளாக விளங்கும் வாய்க்கால்களோ அல்லது ஆறுகளோ பொதுவாகவரிவிலக்களிக்கப்படுவதில்லை. ஆகவே, நீர்ப்பயன்பாட்டு முறைகள் ஊரைவிடப் பெரிய நிலப்பரப்பில் வாழ்ந்த மக்களின் கூட்டுறவினால் வேளாண்மை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது எனக் காட்டும். அதாவது சமூகப் பெருக்கம் உளரைவிட பரந்துபட்ட நிலப்பகுதியில் நடைபெற்றது என்பது உறுதியாகிறது. முடிவாக, நிர்வாக அலகு என்ற வகையில் கிராமத்தின் முக்கியத்துவத்தைப் புறக்கணிக்க முடியாது.3£ ஆயினும் சமூகப் பெருக்கத்தைப் பொறுத்தவரை மெயினும், மார்க்சும் இவர்கள் வழி வந்த வரலாற்றாசிரியரும் கருதியதற்கு மாறாக சோழராட்சியின் இடைப்பகுதியில் சோழமண்டலத்திலிருந்த கிராமங்கள் தன்னிறைவு பெற்றுத் தனித்தியங்கவில்லை என் பது மேற்கண்ட நாற்பது ஊர்கள் பற்றிய உண்மைகளிவிருந்து போதரும்.ப்ப்ஆஆ
கல்வெட்டுக்களை வரலாற்று ஆய்வுக்குப் பயன்படுத்துவதில் முந்தைய வரலாற்றாசிரியர்கள் எந்த முறையையும் பின் பற்றியதாகத் தெரியவில்லை. இத்தகைய நெறிசாராப் போக்கினால் தென்னிந்திய வரலாற்றுப் படைப்புக்களில் தேக்கம் ஏற்பட்டுவிட்டது. இந்தத் தேக்கத்தை நீக்கப் புதிய அணுகு முறைகள் கையாளப்பட வேண்டும். இந்த நோக்கத்தில் சோழர் காலக் கல்வெட்டுக்களில் காணப்படும் ஆஅள்பெயர், பட்டம், பதவிநிலைகளைப் பற்றிய தரவுகளைத் தொகுத்துப் புள்ளியியல் முறையில் ஆராயும் ஒரு திட்டம் 1973-75இல் தோக்கியோ ஆசிய, ஆஃப்ரிக்க மொழிகள் மற்றும் பண்பாடுகள் ஆய்வு நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டது.33 சோழர் காலத்தின் சமூக அமைப்பைப் பற்றியும் அக்கால நிர்வாக முறையைப் பற்றியும் கண்டறிதல் இத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களாக இருந்தன. இத்திட்டத்தின் வழி கண் .டறிந்த சில முக்கிய முடிவுகள் மட்டும், சுருக்கமாகக் கீழே தரப்படுகின் றன . சோழராட்சியின் முக்கிய இரு மண்டலங்களான சோழ மண்டலம் (தோராயமாக, தஞ்சாவுர், திருச்சிராப்பள்ளி, தென் ஆர்க்காடு மாவட்டங்கள்), ஜெயங்கொண்ட சோழ மண்டலம் (செங்கல்பட்டு, வட ஆர்க்காடு, சித்தூர், நெல்லூர் மாவட்டங்கள்) ஆகிய நிலப்பகுதிகளிலிருந்து தொகுத்து பாடத்தோடு வெளியிடப்பட்ட 3543 கல்வெட்டுக்கள் இத்திட்டத்துக்கு அடிப்படைச் சான்றுகளாகப் பயன்படுத்தப் பட்டன. இக்கல்வெட்டுக்களிலிருந்து மொத்தம் 9590 பெயர்கள் தொகுக்கப்பட்டு அவை முதலில் துளைபிரி அட்டைகளைக் (hole-sort cards) கொண்டும், இரண்டாம் நிலையில் கணிப்பொறி உதவி கொண்டும் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
above pages are from 6 chapter up to pages 70
No comments:
Post a Comment