முந்தைய பாராளுமன்ற உரையில் நிதி அமைச்சர் என்ற நிலையில் நிர்மலா அவர்கள் 11-03-2025 அன்று பேசியதை பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்தார்களா தெரியவில்லை ஆனால் அதனை எதிர்த்து கமல் பேசியதை கேட்டேன்... இதனை பற்றியதே இந்தப்பதிவு...
நம்மிடையே காணும் பலர் தங்களை தமிழையும் தமிழர்களின் உயர்வுக்காக பாடுபடுவதாக பேசுகின்றனர் ஆனால் இந்த கமலஹாசன் பேசிய அளவிற்கு கூட பேசியதாக தெரியவில்லை இவை ஏன் சொல்வார்களா?
எமது கேள்வி மிக எளிது, பல்வேறு தேசியங்களின் சிறைகூடமாக உள்ள இந்தியாவின் பாராளுமன்றத்தில் என்ன திமிரில் என்ன அகங்காரத்தில் ஒரு அமைச்சர் ஒரு மொழியின் மீது வன்மம் கொண்டு பேசினார்? அது யார் பேசியதாக இருக்கட்டும்! அவர் அதை அங்கு பேச வேண்டிய தேவை என்ன??? தமிழர்களின் வரியை பிடிங்கும் இவர்கள் தமிழர்களின் கல்வி வேலைவாய்ப்பு மருத்துவம் எதனையும் வழங்காது காட்டுமிரண்டிகால தனது சனாதனத்தையும் ஏகாதிபத்திய கார்ப்ரேட் கொள்ளைக்கு வழி செய்ய நினைக்கும் இவர்கள் உழைக்கும் மக்களின் உதிரத்தை குடிப்பதுடன் மொழியாலும் இழிவுப்படுத்தி அவர்களின் வாழ்வுரிமையை கொச்சப்படுத்த அதிகாரம் தந்தது யார்? ஓட்டு கேட்க வேண்டிய தேவையில்லை பின்வாசல் வழியாக மந்திரியாகி விடலாம் என்பதனால்தானே? இவரை போன்ற மக்கள் விரோதிகளை அம்பலப்படுத்தி எத்தனை பேர் பேசியுள்ளனர் தெரியவில்லை ஆனால் இவை வன்மையாக கண்டிக்க தக்கவை இவரை போன்றோரை மக்கள் மன்றத்தில் தண்டிக்க வேண்டும்...
++++++++++++++++
கீழே சில தோழர்களின் பதிவு புரிதலுக்கே...
தோழர் அ.பகலவன் முகநூல் பதிவு இவை:- நான் தமிழ் மொழியை இழிவாக சொல்லவில்லை பெரியார் சொன்னதைத்தான் நான் மேற்கோளாக சொன்னேன் ,
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரியாரே மேற்கோளாகத்தான் சொன்னார்.
சரி , தமிழை மதிக்கிற பாஜக சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கும் நிதி அளவுக்கு , தமிழ் மொழிக்கும் நிதி ஒதுக்குங்கள் நீதிமன்ற மொழியாக ,
ஆட்சி மன்ற மொழியாக, அனைத்து நிலையிலும் தமிழ் ஆட்சி மொழியாக வருவதற்கு தடையாக இருப்பது யார்...?
அவர்களை அம்பலப்படுத்தி விட்டு, தமிழை அறியணையில் ஏற்றிவிட்டு அப்புறம் விமர்சியுங்கள். அப்புறம் விமர்சியுங்கள் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்...
+++++++++++++++++++++++++++++++++++ எமது சில வினாக்கள் விளக்கங்கள்
இந்தியாவிலுள்ள
தேசங்களை உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் சுரண்டும் நோக்கத்திலிருந்தே அடிமைப்படுத்தி
ஒடுக்குகிறார்கள். அவர்களுக்கு இந்தியாவை மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் அரசியல்வாதிகள்
துணைபோகிறார்கள். ஆகவே தேசங்களின் மீதான ஒடுக்குமுறைக்கு முடிவுகட்ட உள்நாட்டு
வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டலை ஒழித்துக்கட்டவும் அவர்களுக்கு துணைபோகும்
ஆட்சியாளர்களை புறக்கணித்து ஒவ்வொரு தேசங்களும் சுதந்திரமான தேசிய அரசுகளை
உருவாக்க வேண்டும்.
கார்ப்பரேட்டுகளின்
சுரண்டலை ஒழிக்காமல் சுதந்திர தேசிய அரசுகளால் அதன் சுதந்திரத்தை நீண்டகாலம்
பாதுகாக்க முடியாது. இங்கே சிலர் தமிழர்களாகிய நாம் ஆங்கிலம் கற்றுக்கொள்வதில்
என்ன தவறு இருக்கிறது என்று அப்பாவித்தனமாக கேள்வி எழுப்புகிறார்கள். தமிழ் மக்களில்
சிலருக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கலாம், அவர்கள் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதை நாம் தடுக்கவில்லை.
அவர்களுக்கு ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதற்கு உரிமை உண்டு என்பதை நாங்கள்
ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் தமிழர்கள் அனைவரும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமா? தேவையில்லை என்பதுதான் எமது கருத்தாகும். ஆங்கிலத்தை கற்றுக்கொண்டால்
தமிழர்களுக்கு வேலை கிடைக்கும் என்பது கடைந்தெடுத்த பொய்யாகும். ஆங்கில கல்வி
பெற்ற பல ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு வேலை இல்லை என்பதைத்தான் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. வேலையின்மைக்கு இந்த முதலாளித்துவ உற்பத்திமுறைதான் காரணம் ஆகும். முதலாளிகள் இலாப
நோக்கத்தில் செயல்படுவதால் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை எந்தளவுக்கு அதிகரிக்கிறதோ
அந்தளவுக்கு அவர்கள் கூலியை குறைத்துகொடுத்து சுரண்டி இலாபத்தை பெருக்கமுடியும்
என்பதால் இங்கு அனைவருக்கும் வேலை கிடைக்கவில்லை.
இந்த
முதலாளித்துவ உற்பத்திமுறையை ஒழிக்காமல் நம் அனைவருக்கும் வேலை கிடைக்காது என்ற
உண்மையை மூடிமறைத்துவிட்டு ஆங்கிலம் படித்தால் வேலை கிடைக்கும் என்று திராவிட
அரசியல்வாதிகளும், இந்தி படித்தால்
வேலை கிடைக்கும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக அரசியல்வாதிகளும் பிரச்சாரம் செய்து நம்மை
ஏமாற்றுகிறார்கள். எனினும் இந்த அயோக்கியர்கள் எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம் என்ற நிலையை உருவாக்கி ஆங்கிலம் படிக்க
வேண்டியதை கட்டாயமாக
செயற்கையாக மாற்றியுள்ளனர். அதேபோலவே எங்கும் இந்தி எதிலும் இந்தி
என்ற நிலையை உருவாக்கி இந்தியை படித்தே தீரவேண்டும் என்ற நிலையை
உருவாக்கியுள்ளார்கள். இதன் மூலம் இவர்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்
கொடுப்பதை தொடர்ந்து மறுத்து மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். மேலும்
இவர்கள் பணமில்லாதவர்களுக்கு கல்வியே இல்லை என்ற நிலையை உருவாக்கிவிட்டு ஆங்கிலம்
படித்தால் வேலை, இந்தி படித்தால்
வேலை என்று நாடகமாடுகிறார்கள். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் நாம் ஆங்கிலத்தை படிக்கலாமே என்று அப்பாவித்தனமாக எண்ணுபவர்கள் உண்மையைப்
புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் அனைவரும் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டும்
என்றும் இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அயோக்கியத்தனம் மட்டுமல்ல
அடக்குமுறையும் ஆகும்.
நிர்மலா அம்மையார் பேச்சு இந்த இணைப்பில்
இந்த தகவல்களை நக்கீரன் இணையத்தில் காண
கீழ்காணும் பகுதி தோழர் துரை சண்முகம் முகநூலிருந்தே...
அமெரிக்க உஞ்சவிருத்தி!
........................................................
"தமிழ் படித்தால்
பிச்சை கூட
கிடைக்காது!"
ஏகாதிபத்திய பிச்சையின்
அசரீரி ஒலிக்கிறது
ஆங்கிலம் படித்தாலும் அமெரிக்காவின்
காலைப் பிடிக்க வேண்டும்;
பிள்ளை மொழி
இனிதானாலும்
பிரிட்டிஷ்காரன்
தாள் பணிந்து
பிச்சை எடுக்க
உதவியது மொழி மட்டுமல்ல,
பிழைப்பதற்கான வழி!
செம்மொழியாகக் கூட இருக்கலாம்!
உற்பத்தி உறவுகளின்
செய் மொழியாக இல்லாவிட்டால்
எம்மொழியும்
'பத்து பைசாவுக்கு'
பயன் இல்லை!
இது
மொழிக் குற்றம் அல்ல
ஆளும் அடிமைகளின்
அரசியல் வழிக் குற்றம்.
இருப்பினும்
அம்மணி சொல்வது போல்
"தமிழ் பிச்சை எடுக்க உதவாது!"
ஊஞ்ச விருத்திக்கு
என்று
உயர்வான மொழி
இது அல்லவே!
'பஞ்ச' ரத்தின கீர்த்தனைகளின்
ஊஞ்ச விருத்திக்கு
நெஞ்சை நிமிர்த்திப்
பாடுங்கள் நிம்மி,
டிரெம்ப்பின் தாள் பணிந்து
பிச்சை எடுக்க உதவும்
பிழைப்பு மொழி
ஏதாதிபத்திய
பக்தி மொழிதான்!
ஒத்துக் கொள்கிறோம்.
திருவையாறு
தியாகராஜர்
ஆராதனைக்கும்,
திருவாட்டி
பட்ஜெட்
தீபாராதனைக்கும்
பெரிதாக
சுருதி பேதமில்லை..
இரண்டின்
திசையும்
இனி,
உஞ்சவிருத்தி!
பஞ்ச ரத்ன கீர்த்தனை
பட்ஜெட் ராகத்தில்,
" எந்தரோ..மகானு..பாவுலு
எல்லாமே..தனியாருலு!
ராமா!..மானமு லேதா?
தனவாடனி..அபிமானமு லேதா!"
இரயில்..மின்சாரம்..
வங்கி..பொதுத்துறை
அந்த..ராமனும்
இனி..
தனியார் இலாபத்துக்கு
தோதா!
- துரை. சண்முகம்.
++++++++++++++++++++
விவாதம் தொடரும்....
No comments:
Post a Comment