இலக்கு 53 இணைய இதழ் PDF வடிவில்


இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை

1). சோசலிசமும்‌ முதலாளிய மீட்சியும்‌”-பகுதி-2

2). குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்- எங்கெல்ஸ், பாகம் 3

3).பாட்டாளி வர்க்க கட்சி

4). கட்சித் தலைமை பற்றிய பிரச்சினைகள் – தோழர் ஸ்டாலின்

5). “தண்ணீரும் காற்றும் போல சுயவிமர்சனம் அவசியமானது” -ஸ்டாலின்

6). இந்திய கம்யூனிஸ்டுகள் முன் உள்ள பணி-தொடர்

7). இந்தியாவின் நிதிநிலை அறிக்கை பற்றி


இலக்கு இணைய இதழ் 53 PDF வடிவில் இந்த லிங்கை அழுத்தி பெற்று வாசித்து கருத்திடும் படி அழைக்கிறேன் தோழர்களே 





வயநாடு நிலச்சரிவு: 700 புலம்பெயர் தொழிலாளர்கள் மாயம்!

 கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் மண்ணில் புதைந்து குழந்தைகள், பெண்கள் உட்பட 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில், 700 புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.

கேரளாவின் கொச்சி நகரை தலைமையிடமாகக் கொண்டு ஹாரிசன்ஸ் மலையாளம் பிளான்டேசன் லிமிடெட் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு கேரளாவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தேயிலை, காபி தோட்டங்கள் உள்ளன. 10-க்கும் மேற்பட்ட ரப்பர் தோட்டங்கள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

செய்திதாளின் செய்தியை முழுமையாக வாசிக்க

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதியில் ஹாரிசன்ஸ் மலையாளம் நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலை, காபி தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களுக்காக தேயிலை தோட்டப் பகுதிகளிலேயே தற்காலிக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தன. நிலச்சரிவு, வெள்ளத்தில் இந்த வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து ஹாரிசன்ஸ் மலையாளம் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சுனில் ஜான் கூறும்போது, "எங்களது நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி கிரிஷ், அவரது மனைவி மற்றும் 3 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு இருக்கிறது.

இதன் காரணமாக எங்களது தொழிலாளர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்களது தேயிலை தோட்டத்தில் உள்ள பங்களாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. தொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய முடியவில்லை" என்றார்.

கேரள போலீஸார் கூறியதாவது: இப்போதைய நிலையில் ஹாரிசன்ஸ் மலையாளம் நிறுவனத்தில் பணியாற்றிய 700 தொழிலாளர்களையும் காணவில்லை என்றே கருதுகிறோம். அவர்களில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சுகிறோம். தேயிலை தோட்ட பகுதிக்கு செல்வதற்கான பாலம் இடிந்துவிட்டது. மலைப்பகுதி முழுவதும் மேகமூட்டமாக இருக்கிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

பகலில் மட்டுமே முழுமையாக மீட்புப் பணியில் ஈடுபட முடியும். இரவில் வெளிச்சம் இல்லாத சூழலில் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்படும். தேயிலை தோட்டப் பகுதிக்கு செல்ல தற்காலிக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதன்கிழமை அந்த பகுதிக்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபடுவோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

“சோசலிசமும்‌ முதலாளிய மீட்சியும்‌”-பகுதி-2 இலக்கு 53 இதழிருந்து

சோஷலிசப்புரட்சிதோற்பதில்லை:-1990களில் கிழக்கு ஐரோப்பிய நாடுளில் நடைபெற்ற “மீண்டும் ஜனநாயகத்திற்கு” என்ற கூக்குரலும் "சோஷலிசம் தோற்றுவிட்டது" என்ற பிரச்சாரமும் சாதாரண மக்களுக்கும் சோஷலிச அனுதாபிகளுக்கும் இடையே குழப்பமேற்படுத்தவே செய்தன இன்றும் சிலர் அவை சோசலிச நாடுகள் என்று பேசுவோரும் உள்ளனர்.

ஆனால்மார்க்சிய லெனினியவாதிகள் சோவியத்தில் குருசேவின் தலைமை ஏற்பட்ட காலத்திலிருந்தே மார்க்சிய சித்தாந்தவாதிகள் அங்கு ஏற்பட்டு வரும் திரிபுவாதப் போக்கைப் பற்றி விமர்சித்துக் கொண்டே வந்தனர். பின்னர்-மாவோ ‘சோவியத்திரிபுவாதத்தை  'சமூக ஏகாதிபத்தியம்’ என வர்ணித்தார். பேச்சளவில் சோஷலிசமும் நடைமுறையில் ஏகாதிபத்தியப் போக்கு எனவும் விளக்கம் கொடுத்தார்.

போல்சுவீசி போன்ற மார்க்சிய அறிஞர்கள் சோஷலிச நாடுகள் என்று ரஷ்யா, கிழக்கு ஐரோப்பிய நாடுகளைக் கூறுவதை விட்டு "புரட்சிக்குப் பிந்திய சமுதாயங்கள்” என்று அவற்றைக் குறிப்பிடத் தொடங்கினர்.

பிரெஞ்சு அறிஞர் பெத்தெல்கெம் போன்றோர் சீனகலாச்சாரப் புரட்சியின் தோல்விக்குபின் சீனாவிலும் திரிபுவாதம் ஏற்படுவது பற்றி அச்சுறுத்தினர்.மார்க்சிய அறிஞர்களின் முன்னைய கணிப்பு இன்று இதனை தெளிவாகியுள்ளதைக் தெளிவாகக் காண்கிறோம் அவ்வளவே. சோஷலிசப் புரட்சிகளை சீரழிப்பதற்குத் தலைமை தாங்கிய கொர்பச்சேவை முதலாளித்துவ, ஏகாதிபத்திய நாடுகள் ‘உலகின் வீரபுருஷன் என்று பாரட்டின. அந்த சகாப்தத்தின் வீரபுருஷன் என அமெரிக்க பிரபல வார சஞ்சிகை டைம்" கணிப்பிட்டுள்ளது. அந்நாடுகள் தமது நண்பனாக கொபச்சேவைக் கொள்ளத் தொடங்கி செயல்பட்டதன் விளைவு நாம் அறிந்துள்ளவைதானே?. எதிரிகளின் பாராட்டு முதலாளித்துவத்துக்குத் தலைமைதாங்கும் அமெரிக்கா கனடாவை முன்னர் விழுங்கியது தொடர்ச்சியாக பனமா மற்றும் பல நாடுகளை நசுக்கிக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியம் இக்கொடுங்கோலர் கொபச்சேவைப் பாராட்டுகின்றனர் எனும் பொழுது அவர்கள் யாரென்று சொல்ல வேண்டுமா?உழைக்கும் பெரும் பான்மையான பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காகக் கட்டப்படும் சோஷலிஷமும்-சிறுபான்மை யினரான முதலாளிகளின் வாழ்வுக்காக கட்டிக்காக் கப்படும் முதலாளித்துவமும் பகைமை கொண்ட அமைப்புகள், அவற்றிடையே சமரசம் ஏற்படுவதும் “சோஷலிசத் தலைவனை" முதலாளித்துவம் பாராட்டுவதும் விழிப்போடு கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களே.

நிலப்பிரபுத்துவ உற்பத்திஉறவை உடைத்து கூலி அடிமைச் சமுதாயத்தை நிலை நிறுத்துவதற்கு 200-300 ஆண்டுகள் பிடிந்தன. இக்கால கட்டத்திலேயே எத்தனை ஏற்றத் தாழ்வுகள், யுத்தங்கள், பொருளாதார நெருக்கடிகள், போட்டா போட்டிகள். பல கோடி மனித உயிர்ப் பலிகள் ஏற்பட்டன. இது தவிர பெரும் பான்மையினரான பாட்டாளிகளை அடக்கி ஒடுக்க சிறுபான்மையினரான முதலாளிகள் வன்முறையான அரசை நிலைநாட்டி உயிர்ப் பலிகளை நாள்தோறும் நடத்திக் கொண்டிருக்கினர்.

அன்றைய சோசலிச நாடுகளில் எதிர்பாராது ஏற்பட்ட பகைமை முரண்பாடுகள் பல மடங்குகளாகப் பெரிது படுத்தப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டன/படுகின்றன இன்றும் சில கம்யூனிசவிரோதிகள் செய்கின்றனர்.

முதலாளித்துவம் 2, 3 நூற்றாண்டுகளில் சாதித்ததை சோசலிசப் புரட்சியின் மூலம் சில பத்தாண்டுகளிலேயே சாதிக்க முடிந்ததை வரலாறு மறக்க முடியாது. சோஷலிசத்தின் வளர்ச்சியைக் கண்டு அமெரிக்க ஏகாதிபத்தியமே அஞ்சியதை நாம் கண் கூடாகக் கண்டோம். இன்று எதிரியின் அச்சம் நீங்கி யதோடு எதிர்புரட்சிகர சக்திகளை வளர்ப்பதோடு மார்க்சியத்தை குழப்ப மடை மாற்ற பல்வேறு முன்னால் கம்யூனிஸ்ட்டுகளை தங்களின் ஏவளால்களாக கொண்டு செயல்பட்டுக் கொண்டுள்ளனர்.

ரஷ்யா கிழக்கைரோப்பிய நாடுகள், சீனாவின்சந்தைகள் ஏகாதிபத்திய பன்னாட்டு கம்பெனிகளுக்கு இன்று திறந்துவிடப்பட்டுள்ளன." முன்னால் சோஷலிச நாடுகள்" என்று கூறப்படும் நாட்டுத் தொளிலாளர்கள் முதலாளித்துவ, ஏகாதிபத்திய நாடுகளால் சுரண்டப்பட்டு கொண்டிருகின்றனர். இன்று மூன்றாம் உலகநாடுகளைச் சுரண்டுவதில் அமெரிக்காவுடன் ரஷ்யாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டுள்ளது. ஒருபுறம் தமது தொழிலாளர்களேச் சுரண்ட அனுமதிக்கப்படும் போது மறுபுறம் ஏழைநாட்டுத் தொழிலாளர்களும் சுரண்ட அனுமதிக்கப் படுகின்றனர். இது வேடிக்கையானது மட்டுமல்ல வேதனையானதுமான முரண்பாடே...

சோஷலிசமும் அதன் வீழ்ச்சியும்- போல்சுவீசி கருத்துகள் கீழே:-

1917ல் நடைபெற்ற ரஷ்யப் புரட்சியை முன்வைத்தே நடைமுறையிலுள்ள சோஷலிசம் என்று பெரும்பாலும் பேசுகிருேம். இந்தச் சோஷலிசம் தோல்வியடைந்துவிட்டதாகஇன்று உலகெங்கும்பேசப்படுகிறது. சோஷலிசம் என்பதன் இலக்கணம் வகுக்கும் பிரச்சினையில் இன்றைய பேச்சில் நான் ஈடுபடவிரும்பவில்லை. ஆனால் இன்று நடைமுறையிலுள்ள சோஷலிசம் தோல்வியடைந்துவிட்டது என்று நான் ஒப்புக்கொள்கிறேன். பிரச்சினை யாதெனில், அங்கிருந்து நாம் எங்கே போகிறோம்?

பொதுமையாகப்பேசப்படும்கருத்துயாதெனில், சோஷலிசம் தோல்வியடைந்து போனதால் முதலாளித்துவம் வென்றுவிட்டது என்பதே. ஏனெனில் உலகில் இன்று யதார்த்த வாய்ப்பாக இருப்பது இவ்விரண்டு அமைப்பு களுமேயாகும். தர்க்கரீதியாகவும், அனுபவவாதமாகவும் இது பொய்யாகும். இவ்விரு அமைப்புகளும் (நடைமுறை யிலுள்ளதாகக் கருதப்படும் முதலாளித்துவமும், சோஷலிசமும்தோல்வியடையவேசெய்யும்.)இரண்டும்தோல்வியடைந்துள்ளது என்ற முடிவுக்கு ஆதாரம் தர முடியும்.

முதலாளித்துவத்தைப் பொறுத்தவரையில் மிக நீண்டகால ஏற்றஇறக்க வளர்ச்சியின் பின்னரும் முன்னேறிய நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் வரலாற்று ரீதியில் பார்க்கும்போது உச்சமட்டத்திலேயே இன்றும் உள்ளது; இளம்சந்ததியினர் பயன்தரத்தக்க உழைப்பு வாய்ப்பற்ற எதிர்காலத்தை நோக்கவேண்டியுள்ளது. இதனிலும் மோசமான நிலையில் வளர்ச்சியடையாத நாடுகளின் நிலைஉள்ளன. பெரும்பாலான மக்களின் உண்மை நேர்மையான வருமானமும், வாழ்க்கை நிலையும் 1980 களின் சகாப்தத்தில் குறுக்குவெட்டாக வீழ்ச்சி அடைந்துள்ளன. இதற்கு மேலாக முதலாளித்துவத்தின் தோல்வி பற்றிக் குறிப்பாகக் கூறுவதற்கு எதுவும் வேண்டியதில்லை.

ஒரு சோசலிசப்‌ புரட்சிக்குப்‌ பிந்தைய சமூகத்தின்‌ சோசலிசப்‌பொருளாதார நிர்மாணத்தில்‌ ஏறத்தாழ இருபதாண்டுகள்‌ (1946-1976) நடைமுறை அனுபவம்‌ கொண்ட மாசேதுங்‌, இடையறாத இருவழிப்‌ போராட்டத்தின்‌ ஊடாக முதலாளியச்‌ சிந்தனையாளர்களால்‌ முன்‌மொழியப் பட்ட முதலாளியப்‌ பாதையை அரசியல்‌தளத்தில்‌ வெகுவாக அம்பலப்படுத்தி உள்ளார்‌. மாவோவின்‌ படைப்பு களில்‌ (புரட்சிக்குப்‌ பின்வந்த) சோசலிசஉருவாக்கம்‌ குறித்த பொருளாதாரப்‌ பிரச்சினைகள்‌ நிரம்ப விவாதிக்கப் பட்டிருக்கின்றன. ரசிய அனுபவப்‌களை விமரிசிக்கும்பொழுது (ரசியப்‌ பொருளாதாரம்‌ ஒரு விமரிசனம்‌, மாசேதுங்‌) சீன அனுபவத்தையும்‌ சீனயதார்த்த நிலைகளையும்‌ மட்டுமே பெரிதாக மாவோ மனதில்‌ கொண்டிருந்தார்‌. ரசியாவின்‌ சோசலிச உருவாக்கத்திலிருந்து சீனா எந்தெந்த விதங்களில்‌ வேறுபடவேண்டியுள்ளது என்பதையும்‌ அந்நூலில்‌ மாவோ தொகுத்துக்‌ கொடுத்துள்ளார்‌. இதில்‌முதலாளிய மீட்சி குறித்த ஆய்வு இல்லையெனினும்‌ சீனாவில்‌ சோசலிச உறவின்‌ வடிவங்கள்‌ குறித்த ஆய்வு காணப்படுகின்றது. ஆனால்‌ முதலாளிய மீட்சி குறித்த பொருளாதார, அரசியல்‌ விளக்கங்களை சீனப்‌ பொதுவுடைமைக்‌ கட்சி யூகோஸ்லேவியா குறித்து ரசியப்‌ பொதுவுடைமைக்‌ கட்சிக்கு எழுதிய கடிதத்தில்‌ (மக்கள்‌ தினசரி 26--9-1969, மாபெரும்‌ விவாதம்‌, தமிழ்மொழி பெயர்ப்பு, பக்‌. 842-860; 865-806; 884) காணலாம்‌.

ஸ்டாலினின்‌ தொடக்ககால பங்களிப்பை நடுநிலையுடன்‌ கணித்த பால்‌. எம்‌. சுவீசியின்‌ கூற்று, இங்கு கருதத்‌தக்கது. ஸ்டாலினை,'வன்முறை வெறி மனோபாவம்‌ கொண்ட அரசியல்‌சித்தப்‌ பிரமையாளனாக மட்டுமே வருணித்த குருச்சேவ்‌ முதல்‌ கோர்ப்பச்சேவ்‌' வரை தம்‌ முதலாளியமீட்சி நிலைபாட்டை மறைக்கும்‌ கேடயமாக ஸ்டாலினின்‌ செயலை மிகைவன்முறை என்று காட்டியவை இது ஒரு இழிவான சந்தர்ப்பவாதமாகும்‌-ஸ்டாலினின்‌ பாட்டாளி வர்க்கசர்வாதிகாரத்தை பயன்படுத்தியதை வன்முறை என்று கூக்குரலிடுவதை பால்‌.எம்‌,சுவீசி கண்டிக்கும் அதேவேளையில் ஸ்டாலினின் சோசலிசத்தை வளர்க்கும் பணி உள்ளங்கியுள்ளதை விவரிக்கிறார். அதாவது சோசலிசத்தை காப்பதற்காக அவரின் செயல் மிகை வன்முறை வடிவம்‌ தாங்கியுள்ளது. இந்த வடிவத்தைத்‌ தாக்குபபவர்களை இரண்டு பிரிவுகளாகப்‌ பிரித்துக்‌ காணலாம்‌. ஏகாதிபத்திய அறிவாளிகள் மார்க்சிய லெனினியவாதிகள். குறிப்பீட்ட காலத்திய வரலாற்றுப்‌ பருண்மையோடு இணைத்துக்‌ காணப்பட வேண்டியவையாகும்‌. இவர்கள்‌ முன்‌ வைக்கும்‌ விமரிசனத்தில்‌ உள்ள நியாயத்தை நம்மால்‌ உணர்ந்து கொள்ள முடியும்‌. ஏகாதிபத்திய பிரிவினர்‌, மிகை வன்முறை என்ற வடிவத்தைத்‌ தாக்குவதின்‌ ஊடாக சோசலிச உள்ளடக்கத்தைத்‌ தாக்குவது என்ற இறுதி நோக்குடன்‌ தம்‌ கருத்துகளை முன்‌ வைக்கின்றனர்‌.

இன்றைய நெருக்கடி சோஷலிசத்தின் நெருக்கடியல்ல - திரிபுவாதத்தின்

நெருக்கடி-என். சண்முகதாசன்

சோஷலிச சமுதாயம் என்பது ஆகாயத்திலிருந்து விழுவதில்லே பழைய சமுதாயத்தின்கல்லறையிலிருந்தேவெளிவருகிறது;ஆயிரமாயிரம்ஆண்டுகால வர்க்க சமுதாயத்தில் உருவான தனிச்சொத்துடமை, அதைச் சார்ந்த கருத்தியல்கள், கலாச்சாரங்களை வேரறப்பது என்பது எளிதானதல்ல என்றார் லெனின்.

உற்பத்திச்சாதனங்களை சமூகஉடைமை ஆக்கிய பின்னரும் வர்க்கங்கள், வர்க்க முரண்பாடுகள், போராட்டங்கள் நிலவவே செய்யும் என்றார் மாவோ. சீனாவில் கலாச்சாரப் புரட்சியினூடாக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த மாவோ முயன்றார். 1976 இல் மாவோவின் மரணத்தின் பின் நவீன திரிபுவாதிகள் தோன்றினர்.சோவியத் யூனியனில் ஸ்டாலினின் மரணத்தின் பின் அதிகாரத்துக்குவந்த குருசேவ் நச்சுத்தனமான தத்துவங்களை அறிமுகப் படுத்தினார், முதலாளித்துவப் போக்கை இவர்கள் புகுத்தினர். தனியார் இலாபமே முதலாளித்துவத்தின் முதல் நோக்கு. தனியார் இலாபம் மூலதன திரட்டலுக்கு வழிவகுக்கிறது. இதுவே முதலாளித்துவத்தின் போக்கு; சுரண்டலுக்கானப் பாதை. இதை ஒழிப்பதே சோஷலிசம்.

குருசேவ் இத்தாலிய பியட் கம்பனி முதல் அமெரிக்க ஏகாதிபத்திய வங்கிகள் வரை நாட்டில் நுழைய அனுமதித்தார். ஜப்பான் சைபீரியாவை சுரண்ட இடமளித்தனர். கூட்டு விவசாயம் ஒழிக்கப் பட்டு (நடுத்தர) சிறு பண்ட விவசாய உற்பத்திக்கு வழிவிடப்பட் டது. முதலாளித்துவ பாதைக்கு இதுவே முன்னோடி என மா-லெ போதிக்கும்.

சீனாவில் திரிபுவாதிகள் மாவோவின் மகத்தான சாதணையான கம்யூன்களை ஒழித்து குடும்பங்களுக்கு நிலம் வழங்கினர், முதலாளித்துவத்தில் மக்கள்நலனை ஒட்டிய திட்டமிடல் கிடையாது. தொழிற்சாலைகள், நாடுகளிடை போட்டாபோட்டி, முதலாளித்துவ் நெருக்கடிகள் யுத்தங்கள் நடைபெறுகின்றன. அரசியல் பொருளியல் இதை அறிவர். மத்தியஸ்துவ திட்டமிடல் முறை சோஷலிசத்தில் இப் பிரச்சினையைத் தீர்க்கிறது. மூலதன வளங்களை ஒட்டி மக்கள் தேவைகள் சம நிலைப்படுத்தப்பட்டு அனைத்தும் திட்டமிடப்படுகின்றது.

தவறுகள் ஏற்படலாம். அனுபவம், நடைமுறை மூலம் அவை திருத்தப்படுகின்றன.

'மத்தியதுவம்,ஜனநாயகம்’ ஆகிய இரண்டும் முரண்பாடான இரண்டு அம்சங்கள்: மத்தியதுவ தீர்மானங்கள் அடிமட்டம்வரை பரிசீலனைக்கு அனுப்பப் படும்."அது மீளவும் மத்தியஸ்துவத்தால் பரிசீலிக்கப் படும். ஜனநாயக மத்தியஸ்துவம் என்றும் காப்பாற்றப்பட வேண்டும்”."தனியார் சொத்துடைமை இடையிட்டு வந்ததே. ஆயினும் பல நூற்றாண்டு கால தனிச் சொத்துடைமைச் சமூகஉணர்வுகளை முற்றாக அழிப்பதும் சிரமமே, சோஷலிச நாட்டு மக்களை முதலாளித்துவ பிற்போக்குச் சக்திகள் இழுக்க முயல்கின்றன. காரணம் ஆற்றலின்மை யல்ல. இரு சமூகத்திலும் ஆற்றலின்மை உள்ளன. சோசலிசம் ஆக்கத்தன்மை கொண்டதல்ல என்று கூறுவது அபத்தமானது.லெனின், ஸ்டாலின் தலைமையில் ரஷ்யா கனரக உற்பத்தி தொடக்கம் கலை, கலாசார வளர்ச்சி வரை முதலாளித்துவத்தால் 200 ஆண்டுகளில் சாதிக்க முடியாததை சோஷலிச வளர்ச்சியின் போது 30-35 ஆண்டுகளில் சாதிக்க முடிந்தது.முதலாளித்துவத்தின் இயந்திர உற்பத்தி மூலதனத்திற்கும் வளர்ச்சிக்கும் 200 ஆண்டுகளுக்கு மேலான காலனித்துவ சுரண்டல் பயன்பட்டது. ரஷ்யா, சீன இத்தகைய சுரண்டலின்றியே வளர்ந்தது. கனரக உற்பத்தியில் ரஷ்யா 2 ஆம் உலக யுத்த காலத்தாலும் முதலாளித்துவ பயமுறுத்தலாலும் ஈடுபட நேர்ந்தது. நுகர்பண்ட உற்பத்தியில் இந்நாடுகள் சிறிது பின்னடைவாக இன்று தோன்றலாம். முதலாளித்து வத்தின் 2-3 நூற்றாண்டுகளோடு 4-6 சகாப்தங்களை ஒப்பிட முடியாது.1990களில் அமெரிக்க ஏகாதிபத் தியத்தின் சிதைவு அமெரிக்காவின் ஏற்றத்தையும் வீழ்ச்சியையும் பின்வரும் காலப் பகுதிகளாகப் பிரித்து ஆராயலாம்:-1. 1940கள் 1950ன் ஆரம்ப காலம் வரை முதலாளித்துவ' அமைப்பின் உச்சநிலை.2. உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் வீழ்ச்சியின் அறிகுறிகள். 1960களின் ஆரம்ப காலத்திலிருந்து 1973 - 74பொருளாதார வீழ்ச்சி யும் வியத்நாம் யுத்த தோல்வியும்.3. உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் 1970களின் நடுப்பகுதிவரை யிலான தொடர்ந்த வீழ்ச்சி.4. ரீகனின் காலகட்டம் (1980 - 88) மீண்டு எழும் முயற்சி யின் தொடர்ந்த வீழ்ச்சி.5. 1990களுக்கு பின்னர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சிதைவும் போட்டியுமான வாணிப, நிதிக் குழுக்களின் ஏற்பட்ட நிலையும் உள்ளது.முதலாளித்துவ நாடுகள் தமது இனமாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் மாறுவதைப் பாராட்டுகின்றன.ஏகாதிபத்தியவங்கிகள் போலந்து ஹங்கேரிக்கு போட்டியிட்டு கடன்கள்வழங்குகின்றன. கிழக்கு ஜெர்மனியரை மேற்குஜெர்மனி பணம் கொடுத்து கவர்ந்திழுக்கிறது. கொபச்சேவ் வீழ்ச்சியை மேற்குநாடுகள் அஞ்சுகின்றன. ரஷ்யாவில் சோஷலிசம் கட்டப்படுமானல் முதலாளித்துவம் அஞ்சியல்லவா இருக்கும்.

முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்திற்கான மாற்றம் என்பதன் சாராம்சம் ஒன்றே - பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்.

தாராள ஜனநாயகம், பூர்ஷ்வா ஜனநாயகம் என்பவை முதலாளித்துவ சர்வாதிகாரமே.

ரஷ்யா, சீன மற்றும் கிழக்கு ஐரோப்பாவை ஆகர்சித்திருக்கும் நெருக்கடி சோஷலிசத்தின் நெருக்கடியல்ல; திரிபுவாதத்தின் நெருக்கடியே.

மற்றொரு பாட்டாளி வர்க்கப் புரட்சியினால் மாத்திரமே இந்த நாடுகளில் சோஷலிசத்தை மீள்விக்க முடியும்,’’(நன்றி.வீரகேசரிகட்டுரைச்சுருக்கம் இதில் சில பகுதி அந்த கட்டுரையின் சாரமே)

இனி சோசலிச வீழ்ச்சி குறித்த வேறு கட்டுரைகள்

லெனின்‌ புரட்சிக்கு முன்பும்‌ புரட்சிக்குப்‌ பின்பு சில ஆண்டுகளும்‌ வாழும்‌ வாய்ப்பைப்‌ பெற்றதாலும்‌ புரட்சியில்‌ வீழ்ச்சியடைந்த வர்க்கங்களையும்‌ கட்சியின்‌ புதியவர்க்கத்‌ தன்மையையும்‌ ஓரளவே கண்டுணரும்‌ வாய்ப்பைப்‌ பெற்றதாலும்‌ லெனின்‌ காலத்தில்‌ இத்தகைய நிகழ்வுப்‌ போக்கு யதார்த்தமாகாததாலும்‌ முதலாளிய மீட்சி குறித்த தொடக்கப்‌ புரிதலோடும்‌ வரையறையோடும்‌ மட்டுமே இருக்கநேர்ந்தது. எனினும்‌ ரசியாவின்‌ பழைய வர்க்கங்களிலிருந்து ஒரு புதிய முதலாளிய வர்க்கம்‌ தோன்ற இயலும்‌ எனத்‌ தெளிவாக லெனின்‌ குறிப்பிட்டார்‌ (00/29 : 189). *விந்தையாகத்‌ தோன்றக்கூடிய இந்த உண்மை சரக்கு உற்பத்தியிலும்‌ சிறு உற்பத்தியிலும்‌ புதைந்து கிடப்பதாகவும்‌ இது சாதாரண முதலாளிய ஜனநாயகம்‌ வரை கொண்டு வந்துவிடும்‌ எனவும்‌ ஸ்டாலின்‌ குறிப்பிட்டார்‌ (ஸ்டாலின்‌ தொகுப்பு நூல்‌ 11: 285, 7: 950). ஒருசோசலிசப்‌ புரட்சிக்குப்‌ பிந்தைய சமூகத்தின்‌ சோசலிசப்‌ பொருளாதார நிர்மாணத்தில்‌ ஏறத்தாழ இருபதாண்டுகள்‌ (1916-1976) நடைமுறை அனுபவம்‌ கொண்டமாசேதுங்‌, இடையறாத இருவழிப்‌ போராட்டத்தின்‌ ஊடாக முதலாளியச்‌ சிந்தனையாளர்களால்‌ முன்‌ மொழியப்பட்ட முதலாளியப்‌ பாதையை அரசியல்‌ குளத்தில்‌ வெகுவாக அம்பலப்படுத்தி உள்ளார்‌. மாவோ வின்‌ படைப்புகளில்‌ (புரட்சிக்குப்‌ பின்வந்த) சோசலிச உருவாக்கம்‌ குறித்த பொருளாதாரப்‌ பிரச்சினைகள்‌ நிறையவே விவாதிக்கப்பட்டிருக்கின்றன. ரசிய அனுபவங்களை விமரிசிக்கும் பொழுது (ரசியப்‌ பொருளாதாரம்‌-ஒருவிமரிசனம்‌,மாசேதுங்‌) சீன அனுபவத் தையும்‌ சீன யதார்த்த நிலைகளையும்‌ மட்டுமே பெரிதாக மாவோ மனதில்‌ கொண்டிருந்தார்‌. ரசியாவின்‌ சோசலிச உருவாக் கத்திலிருந்து சீனா எந்தெந்த விதங்களில்‌ ேவறுபட வேண்டியுள்ளது என்பதையும்‌ அந்நூலில்‌ மாவோ தொகுத்துக்‌ கொடுத்துள்ளார்‌. இதில்‌ முதலாளிய மீட்சி குறித்த ஆய்வு இல்லையெனினும்‌சீனாவில்‌ சோசலிச உறவின்‌ வடிவங்கள்‌ குறித்த ஆய்வு காணப்படுகின்றது. ஆனால்‌ முதலாளிய மீட்சி குறித்த பொருளாதார, அரசியல்‌ விளக்கங்களை சீனப்‌ பொதுவுடைமைக்‌ கட்சி யூகோஸ்லேவியா குறித்து ரசியப்‌ பொதுவுடைமைக்‌ கட்சிக்கு எழுதிய கடிதத்தில்‌ (மக்கள்‌ தினசரி 26--9-1969, மாபெரும்‌ விவாதம்‌, தமிழ்மொழி பெயர்ப்பு, பக்‌. 842-860; 865-806; 884) காணலாம்‌.

சீனாவில்‌ லியோசோஷி தலைமையிலான முதலாளியப்‌ பாதையை எதிர்க்கும்‌ காலத்தில்‌ மாவோவின்‌ தலைமையி லான சீனப்‌ பொதுவுடைமைக்‌ கட்சி எழுதிய இக்‌ கடிதத்தில்‌ விவசாயத்திலும்‌ தொழில்துறையிலும்‌ முதலாளியஉறவுகள்‌ மீண்டும்‌ கொண்டுவரப்படும்‌ வடிவங்கள்‌ குறித்து விளக்கப்பட்டுள்ளன. இத்தகைய மீட்சி நிலைக்கு மாவோவுக்குப்‌ பிந்தைய சீனமும்‌ பலியானதையும்‌ வரலாற்றில்‌ காண்கிறோம்‌.

முதலாளிய மீட்சி குறித்த இத்தகைய புரிதல்களோடு முதலில்‌ ரசிய அனுபவத்தைக்‌ காண்போம்‌.உலகில்‌ மிகக்குறைவாக இரத்தம்‌ சிந்தி நடத்தப்பட்ட ரசிய சோசலிசப்புரட்சி, அரசியல்‌-இராணுவ ரீதியில்‌ தன்னை நிலைநிறுத்திக்‌ கொள்ள நான்குஆண்டுகள்‌ ஆயின. அதன்பின்‌ அது பொருளாதார நிலைநிறுத்தலுக்குப்‌ போராடியது. இந்தப்‌ பத்தாண்டுக்‌ காலத்தை (1917-1921) சோசலிசத்துக்குச்‌ செல்வதற்‌கான இடைக்கட்டம்‌ எனலாம்‌. இதையும்‌ இரண்டு துணைக்‌ கட்டங்களாகப்‌ பிரிக்கலாம்‌. 1) கட்டுப்படுத்தப்பட்ட முதலாளியம்‌ மற்றும்‌ போர்க்காலப்‌ பொதுவுடைமை

(நவம்பர்‌ 1917-மார்ச்‌1921)

2) புதிய பொருளாதாரக்‌ கொள்கைக்‌ கட்டம்‌ (1921-1921)

முதல்‌துணைக்கட்டம்‌, உள்நாட்டு யுத்தக்‌காலமாகும்‌; இக்காலத்தில்‌ ஆலைகள்‌, வங்கிகள்‌, வர்த்தகம்‌ ஆகியவை அரசுடைமையாக்கப்பட்டன. பெருநிலவுடைமைபறித்தெடுக்கப்பட்டு,விவசாயிகட்கு நிலங்கள்‌தரப்பட்டன. தொழிலாளிக்‌ குழுக்கள்‌ ஆலைகளை நிர்வகித்தன. விளைபொருள்கள்‌ அரசின்‌ மூலமே விற்கப்பட்டன. இக்கட்டத்தில்‌ உற்பத்தி குறைந்தது; விலைவாசி அதிகமாயிற்று. சர்வதேசச்‌ சந்தையில்‌ ரூபாயின்‌ மதிப்பு 3 ஆண்டுகளில்‌ (1918-1920) 120 மடங்கு வீழ்ச்சியடைந்தது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவும்‌, உள்‌நாட்டுப்‌ போரிலிருந்து கிடைத்த ஓய்வைப்‌பயன்‌படுத்திக்கொண்டு சோசலிசத்துக்கான பொருளாதார அடித்தளம்‌இடவும்‌ புதியபொருளாதாரக்‌கொள்கை உருவாக்கப் பட்டது. லெனின்‌ வார்த்தைகளில்‌ சொன்‌னால்‌ இது இடைக்காலத்திய கலப்புப்‌பொருளாதாரம்‌ ஆகும்‌; அரசுடைமையாக்கப்பட்ட ஆலைகள்‌ சில, முன்னாள்‌ முதலாளிகட்குக்‌ குத்தகைக்குவிடப்பட்டன (மே 1921). அவை நிர்வகிக்கும்‌ தொழிலாளர்‌ குழு கலைக்கப்பட்டு, ஆலைகள்‌ லாபத்தில்‌ இயங்குவதற்குரிய வகையில்‌ நடத்தும்‌ திறன்‌பெற்ற ஒரு நிர்வாக வாரியம்‌ நியமிக்கப்பட்டது உள்நாட்டு வணிகம்‌ முதலாளிகளிடம்‌ ஒப்படைக் கப்‌பட்டது. வெளிநாட்டு வணிகத்தை அரசு நடத்தியது. விவசாயி களிடமிருந்து கட்டாயக்‌ கொள்முதல்‌ நிறுத்தப்பட்டு, பண்ட வடிவிலான வரிவசூலிக்கப்‌ பட்டது. எஞ்சியதை, சுதந்திரமாக சந்தையில்‌ விற்றுக்‌ கொள்ளலாம்‌.இதனடிப்படையில்‌விவசாயிகட்கும்‌தொழிலாளர்கட்கும்‌ இடையில்‌ சுதந்திர சந்தைஉறவுகள்‌ புதுப்பிக்கப் பட்டன. உள்நாட்டில்‌ தொழில்கள்‌ தொட்ங்க அன்னிய முதலாளிகட்கு இசைவு தரப்பட்‌டது. அன்னியத்‌ தொழில்நுட்பம்‌ ஊக்குவிக்கப்பட்டது . இந்தக்‌ காலத்தில்‌ (1921-1920) ஆலை உற்பத்தி 5 மடங்காகவும்‌ விவசாய உற்பத்தி 3 மடங்காகவும்‌ உயர்ந்தன. இந்தப்‌ பொருளாதாரம்‌ முதலாளியக்‌ கூறுகளை உள்ளடக்கியது என்றும்‌ முதலாளிய மீட்சிக்‌ கூறுகள்‌ இதில்‌ உள்ளன என்றும்‌ ஒப்புக்கொண்ட லெனின்‌ இதைப்‌ “பின்‌ வாங்கல்‌” என்று வர்ணித்தார்‌. சிறுவீத பண்ட உற்பத்தியிலிருந்து சோசலிசத்துக்குச்‌ செல்லும்‌ இடைக்கட்டம்‌ (ருது: 3: 349) என வர்ணித்தார்‌. உள்‌நாட்டிலும்‌ உலகளாவிய முறையிலும்‌ முதலாளியத்தைவிட பலவீனமான நிலையில்‌ உள்ளபொழுது இது தவிர்க்க இயலாத பின்வாங்கல்‌ என லெனின்‌ வர்ணித்தார்‌ (51: 515). புரட்சிக்குப்‌ பின்‌ சோசலிசம்‌ கட்டியமைப்பதற்கான தயார்‌நிலையை உருவாக்க 14 ஆண்டுகள்‌ஆயின. இந்த இடைக்கட்டத்தில்‌ நாட்டின்‌ நிலைகள்‌ பின்‌ வருமாறு இருந்தன:

1) உற்பத்தி சாதனங்களில்‌ அரசுடைமை, தனியுடைமை, கூட்டுடைமை இருந்தன. தொழில்‌துறையில்‌ அரசுடைமையும்‌ விவசாயத்துறையில்‌ தனியுடைமையும்‌ பிரதான வடிவங்களாகும்‌.

2) முதலாளியப்‌ பொருளாதார விதிகள்‌ மீது அரசின்‌ கட்டுப்பாடு மிகவும்‌ குறைவு. மதிப்புவிதி, சந்தைப்‌ பொருளாதாரம்‌, பண்டஉற்பத்தி ஆகியவை முதலாளிய நோக்கிலேயே செயல்பட்டன.

3) சிறு விவசாயிகளின்‌ தனியுடைமையே பிரதான உற்பத்தி வடிவம்‌.

4) ஆலைகளை நிர்வகிக்கத்‌ தொழிலாளர்‌ குழுக்கள்‌ என்ற சோசலிச நோக்கிலான நிர்வாகமுறை பின்னுக்குத்‌ தள்ளப்பட்டு, உற்பத்திப்‌பெருக்கு நோக்கிலான நிர்வாக வாரியம்‌நியமிக்கப்பட்டது.

இது சோசலிசக்‌ கட்டமல்ல. சோசலிசத்தைக்‌ கட்டுவதற்கான  சில பொருளாதார முன்னிபந்தனைகளை உருவாக்குவதற்கான காலம்‌ ஆகும்‌.

1928இல்‌ மாபெரும்‌தொழில்மயமாக்கலைத்‌தொடர்ந்து சோசலிசப்‌ பொருளாதாரத்தைக்‌ கட்டியமைக்கும்‌ பணிகள்‌ தொடங்கின. ஒருநாட்டில்‌ சோசலிசத்தின்‌ இறுதிவெற்றி சாத்தியம்‌ என்றும்‌ அதற்கான தேவைகள்‌ ஏற்கனவே ரசியாவில்‌ உருவாகிவிட்டன என்றும்‌ கருத்துடைய ஸ்டாலின்‌ தலைமையில்‌ இந்தப்‌ பணி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது:அதாவது உலகளாவிய ஏகாதிபத்திய வேலைப்‌ பிரிவினையும்‌ வர்க்கங்கள்‌ மற்றும்‌ வர்க்க முரண்பாடுகள்‌ ஆகியவையும்‌ ஏகாதிபத்திய சகாப்தத்தில்‌ ஒரு நாட்டில்‌மீட்கப்பட்டு விடலாம்‌ என்ற கருத்தியலோடு இந்தப்‌பணி தொட்ங்கப்பட்டது:மேலும்‌ கிராமப்புற முதலாளிகட்கும்‌ தொழிலாளி: வர்க்கத்துக்கும்‌இடையில்‌ இணக்கம்‌காாணஇயலா பகைமுரண்கள்‌ இருக்கின்றன என்ற புரிதலோடும்‌ (ஸ்டாலின்‌ தொகுப்பு நூல்‌ 12:82) இதன்‌ தொடக்கத்தைக்‌ காணவேண்டும்‌.ஸ்டாலின்‌ தலைமை யிலான போக்கின்‌ இந்தக்‌கோட்பாட்டு அம்சங்கள்‌ முதன்மையானவை. ரசியா ஒரு சோசலிசநாடாக மலர்வதற்குத்‌ தேவையான மூலதனத்தை உள்நாட்டிலே திரட்டியாகவேண்டும்‌. விவசாயிகள்‌, நகர்ப் பொருள்களுக்கு அதிகவிலைகள்‌ கொடுத்தும்‌ தம்‌ "பொருள்களைக்‌ குறைவான விலைக்கு விற்றும்‌மூலதனம்‌ திரட்டப்பட்டது.இந்த மூலதனத்‌திரட்டல்‌ தொழில் மயத்துக்குறிய மூலதனமாயிற்று. நகரங்களில்‌ ஆலைகளும்‌ தொழிலாளர்களும்‌ பெருமளவில்‌ வளர்ந்து கொண்டு போயினர்‌. தொழிற்சாலைப்‌ பொருள்களின்‌ உற்பத்தி பற்றி பல புள்ளி விவரங்கள்‌ உள்ளன. குத்தகைக்கு விடப்பட்ட ஆலைகள்‌ மீண்டும்‌ அரசுமயமாயின. ஆலைநிர்வாகத்தில்‌ 1923 வரை இருந்த தொழிலாளர்‌ குழு மீண்டும்‌ கொணரப்படாமல்‌ புதிய பொருளாதாரக்‌ கொள்கைக்‌காலத்தில்‌ கொணரப்‌பட்ட நிர்வாகவாரியம்‌ (தொடர்ந்து இருந்தது. இதில்‌ தொழிலாளர்களால்‌ தேர்‌ந்தெடுக்கப்பட்டவர்களும்‌ கட்சியால்‌ நியமிக்கப்பட்டவர்களும்‌ இருந்தனர்‌. இந்த நிர்வாகமுறை முக்கியமானது. புதிய பொருளாதாரக்‌ கொள்கைக்‌ காலத்தில்‌ இருந்த தனியார்‌ முதலாளியத்‌ தையும்‌ அரசு முதலாளியத்தையும்‌ நிர்வகித்த அதேமுறை 'முதலாளியத்தின்‌ ஊடே சோசலிச முறைக்கு’ச்‌ செல்லும்‌ கட்டத்திலும்‌ பயன்பட்டு வந்தது என்பது கவனிக்கத் தக்கது.

சோசலிச உருவாக்கத்தில்‌ ஸ்டாலினின்‌ பங்களிப்பு குறிப்பிட்க்தக்கது. தனியார்‌ முதலாளியத்தைக்‌ கட்டுப்படுத்தி அரசு முதலாளியத்தின்‌ ஊடாக சோசலிசப்‌ பாதைக்குச்‌ சென்றடையும்‌ ஒரு தொலைதூர தோக்கை மட்டுமே லெனின்‌ வகுத்துக்‌ கொடுத்திருந்தார்‌. ஒருநாட்டில்‌ சோசலிசத்‌தின்‌ இறுதிவெற்றி, சோசலிசத்‌ தாக்குதல்‌ காலம்‌, உற்பத்தி சக்திகளின்‌ வளர்ச்சிக்‌ கோட்பாடு. சோசலிச நாட்டில்‌ பகைவர்க்கங்களையும்‌ நட்பு வர்க்கங் களையும்‌ கையாள்வதில்‌ வேறுபாடின்மை ஆகிய ஸ்டாலின்‌ நிலை பாடுகளுக்கு ஊடே மிகை வன்‌முறையுடன்‌ இணைந்த கூட்டுடைமையாக்கமும்‌ ஒரு பாய்ச்சலான வளர்ச்சியுடன்‌ கூடிய தொழில்‌ மயமாக்கமும்‌ நடந்தேறின என்பது உண்மை. சோசலிசத்துக்கான உற்பத்தி நிகழ்வுப்‌ போக்கில்‌ இவை இரண்டுக்கும்‌ வெகுவான மதிப்புகள்‌ உண்டு. லெனினியத்தின்‌ சில அம்சங்களில்‌ இருந்து ஸ்டாலின்‌ விலகியிருப்பினும்‌, இத்தகைய ஆக்கபூர்வமான மதிப்புகளுடன்‌ ஸ்டாலின்‌ இணைத்தும்‌ காணப்‌பட்டாக வேண்டும்‌.அளவற்ற அதிகாரங்களைத்‌ தம்‌கையில்‌ குவித்துக்‌ கொண்டிருந்த அதிகார வர்க்கம்‌ சலுகை பெற்றதாகவும்‌ ஒடுக்கு முறைச்‌ சாதனமாகவும்‌ மாறிக்‌ கொண்டிருந்த ஒரு நிகழ்வுப்போக்கை--சோசலிசத்தைத்‌ தலை கீழாகப்‌ புரட்டி எடுக்கும்‌ திறன்கொண்ட எதிர்மறை அம்சத்தை - தடுத்து நிறுத்துவதற்கான ஒரே சாத்தியம்‌, வர்க்கப்‌ போரட்டத்தை சகலமட்டங்‌ களிலும்‌ விரிவுபடுத்தி தொடர்ந்து நடத்துவதாகும்1935இல்‌ உருவாக்கப்பட்ட அரசியல்‌ சட்டம்‌, பாட்‌டாளி வர்க்க சர்வாதிகாரத்தைத்‌ தளர்த்திக்‌ கொள்ளும்‌ சாத்தியத்தை வரலாற்றுக்கு வழங்கியது.

இந்த சோசலிசஉருவாக்கக்‌காலத்தில்‌ எழுந்த ஆக்கபூர்வமற்ற கூறுகள்‌ அனைத்தும்‌, தம்மைத்‌ தொகுத்துக்‌கொண்டுஒருபுதியகோட்பாட்டு உருவாக்கத்‌தின்‌ கீழ்‌ குருச்சேவ்‌காலத்தில்‌ கனிந்து திரண்டன. இந்தப்‌ புதியகோட்பாடு, மார்க்சியத்தைத்‌ திருத்தி விளக்கியது. சோசலிசத்தைக்‌ கட்டி அமைக்கும்‌ ஸ்டாலினிய முயற்சிகளின்‌ துணைவிளை பொருளான (by product) புதியமுதலாளியவர்க்கத்கை ஆளும்‌வர்க்கமாக நிறுவுவதும்‌ அதற்கு கேற்பசோசலிசத்தை அதிகாரவர்க்க அரசுமுதலாளியமாகக்‌ குறுக்கிக்‌கொள்வதும்‌ புதிய கோட்பாட்டின்‌ இலக்குகளாக இருந்தன. மரபுவழிப்பட்ட முதலானியைப்‌ போல இந்தப்‌ புதிய முதலாளிய வர்க்கத்துக்கு உற்பத்திசாதன உடைமையில்‌ எவ்விதத்‌ தனியுரிமைப்பங்கும்‌ இல்லை. ஆனால்‌ தமக்குள்ள சிறப்பு நிலைகளைக்‌ கொண்டு உற்பத்தி சாதனங்களைத்‌ தம்‌கட்டுப்பாட்டுக்குள்‌ வைத்திருந்தனர்‌. உற்பத்தி நிகழ்வுப்‌ போக்கில்‌ இவர்‌கள்‌-பங்கே தீர்மானகரமானது. உற்பத்திப்‌ பொருள்‌ வினியோகத்தில்‌ இவர்கள்‌ தமக்கென்று ஒரு பெருத்த பங்கை அபகரித்துக்‌ கொள்கின்றனர்‌.இந்தவர்க்கத்‌தினருக்கென்றஉரிமைகளும்‌ வசதிகளும்‌ இவர்களின்‌ இரத்த வாரிசுக்களுக்கு பரம்பரையாகச்‌ சென்றடைய வேண்டும்‌ என்ற சட்டபூர்வ வசதி இல்லையெனினும்‌ இத்தகைய குடும்பங்களிலிருந்து வரும்‌ பெரும்பான்மையினரே இவற்றைத்‌ தொடர்ந்து அனுபவிப்பதற்குரிய ஒரு சூழல்‌ இடையறாது நிலவிக்‌ கொண்டிருக்கிறது.

உற்பத்திச்‌ சாதனங்களின்‌ மிகப்‌பெரும்பான்மை, அரசுடைமையாகவே இருக்கும்‌ பொழுது பண்டப்‌ பரிவர்த்‌தனை, மதிப்புவிதி, சந்தைப்‌ பொருளாதாரம்‌ என்பன போன்ற முதலாளியப்‌ பொருளாதார விதிகள்‌ மீது குறைந்த அளவே கட்டுப்பாட்டை வைத்துக்‌ கொண்டு ஒரு குறிப்பிட்ட சிறுபான்மைத் திரள்‌ அரசியல்‌- நிர்வாக அதிகாரத்தின்‌ துணை கொண்டு உற்பத்தியின்‌ நிகழ்வுப்‌ போக்கையும்‌ உற்பத்திப்‌ பொருள்களையும்‌ தம்‌முழுக்‌கட்டுப் பாட்டில்‌ கொண்டு செயல்படும்‌ பொழுது அது சோசலிசஉறவாக அமையாமல்‌ அதிகார வர்க்க அரசுமுதலாளியஉறவாகவேஉள்ளது.இவர்கள்‌மரபுவழிப்‌பட்டமுதலாளிகளைப்‌ போல உற்பத்திசாதனங்களின்‌மீது தனியுடைமையை அனுபவிக்கவில்லை.

இங்கு மூலதனம்‌ சிதைந்த தன்மையில்‌ இல்லாமல்‌ குவிமையப்‌ பட்டும்‌ (not fragmented but concentrated) உள்ளது. இவையனைத்தும்‌ மரபு வழிப்பட்ட முதலாளியத்திலிருந்து புதிய முதலாளியவர்க்கத்தை வேறுபடுத்தி நிற்கின்றன. ஆனால்‌ இந்த வேறுபாடுகள்‌, இவர்களை முதலாளிய உறவில்‌ உள்ள வர்க்கத்தினரா இல்லையா என்பதனைக்‌ கேள்விக்கு உள்ளாக்கவில்லை. மேலும்‌ இந்த நிகழ்வுப்‌போக்கை, முதலாளியமீட்சி என்று வரையறைப்படுத்துவதை நிறுத்துகிறதா என்பதே இப்போதைய பிரச்சனையாகும்‌.

ஒரு பாட்டாளி வர்க்கப்‌புரட்சி நடந்துமுடிந்து சோசலிச உறவுகள்‌ கட்டியமைக்கப் பட்டு அதன்பின்‌ சீர்குலைவு ஏற்பட்ட சமூகங்களில்‌ முதலாளியமும்‌ இல்லாமல்‌ சோசலிசமும்‌ இல்லாமல்‌ ஒரு புதிய வகை சமுதாயம்‌ தோன்றியிருக்கிறது என்பதைக்‌ குறிப்பிடும்‌ பால்‌. எம்‌. சசுவீசி, மரபு வழிப்பட்ட முதலாளியத்தின்‌ மூன்று தீர்மானகரமான அம்சங்களைக்‌ குறிப்பிரு கின்றார்‌. (புரட்சிக்குப்‌ பிந்திய சமுதாயம்‌, பக்‌, 232).

“புரட்சிக்குப்‌ பிந்திய சமூகத்தில்‌ ஒரு புதிய *அரசு முதலாளியம்‌/கட்சி முதலாளியம்‌ உருவாக இயலும்‌ என்றும்‌ இவற்றை வெட்டிச்‌ சாய்த்துவிட்டு சோசலிசப்‌ பாதையில்‌ பயணம்‌ செய்ய வேண்டுமெனில்‌ அந்தத்‌ திசை நோக்கிலான 41 எத்தவொரு போக்கையும்‌, எல்லாப்‌ போக்குகளையும்‌ எதிர்த்து உறுதியான போராட்டம்‌ தேவை என்னும்‌ மாவோ குறிப்பிட்ட கருத்து அவரது புதுமையான கருத்துகளுள்‌ ஒன்று” எனப்‌ பால்‌, எம்‌.சுவீசி அங்கீகரித்‌ துள்ளமை குறிப்பிடத்தக்கது (74௦ Review. Sept, 1986, ம. 27). உற்பத்தி சாதனங்களின்‌ அரசுடைமையே சோசலிச 'சமூகமாகி விடாது என்பதே சுவீசியின்‌ கருத்‌ தாகும்‌. இதைத்‌ தொடர்ந்து அழுத்தமாகத்‌ தன்‌ கருத்து களை அவர்‌ வைக்கிறார்‌. எல்லோரும்‌ பணக்காரர்களாக ஆவதை உற்சாகப்‌ படுத்துவதே சீனார்வின்‌ அதிகாரப்பூர்வமான கொள்கையாகத்‌ தெரிகிறது. கடின உழைப்பு அவ்வாறு ஆதலுக்குரிய ஒரு வழியாக இருக்கலாம்‌. சீனப்‌ பத்திரிகைகளில்‌ வருவதை நம்பினால்‌ இதற்‌ குப்‌ பல வழிகள்‌-சட்டரீதியாகவும்‌ சட்டவிரோதமாக வும்‌--இருப்பதைக்‌ காணலாம்‌. இவை அனைத்தும்‌ முதலாளிய சமூகங்களில்‌ பழக்கப்பட்டவையாகும்‌ ; இவற்றில்‌ எதுவும்‌ சோசலிசத்தோடு எந்தவொரு சம்பந்தமும்‌ கொண்டுள்ளதாகக்‌ கருதப்படலாகாது. (Monthly Review, Sept. 86, p. 28). இங்கு நமக்கு முக்கியம்‌, சீனாவில்‌ இன்று சோசலிச உறவுகள்‌ இல்லை என்பது மட்டுமல்ல; முதலாளிய சமூகத்துக்குப்‌ பழக்கப்பட்ட பலமுறைகள்‌ சீனாவில்‌ உண்டு என்பதை சுவீசி அங்கீகரித்தலாகும்‌. எனினும்‌ முதலாளியமீட்சியைக்‌ கோட்பாட்டு அளவில்‌ மறுத்‌துரைக்கும்‌ பேரறிஞர்‌ சுவீசியின்‌ கூற்று மிகவும்‌ உன்னிப்‌பாகக்‌ கருதத்தக்கது ஆரும்‌. பால்‌ எம்‌. சுவீசி, முதல்‌ இரண்டு தீர்மானகரமான பண்புகள்‌ ஒழிக்கப்பட்டுவிட்டன என்கிறார்‌. உற்பத்தி? சாதனவுடைமையை சட்டவழிப்பட்ட உரிமையோடு மட்டுமே இணைத்து. எண்ணுவதாகவுள்ளது. மேலும்‌ 42 சீனாவிலும்‌ ரசியாவிலும்‌ இன்றுள்ள நடைமுறைகளைக்‌ காணும்பொழுது சட்டப்படி அரசுடைமையும்‌ (Public Ownership) நடப்பின்படி உண்மையான தனிஉடமையின்(Defacto Private Ownership)இருக்கின்றன. சட்ட வழிப்பட்ட உரிமையை மட்டுமே வைத்துக்‌ கொண்டு முதலாளியமா இல்லையா என முடிவுசெய்து விடல்‌ முடியாது. முதலாளிய உற்பத்திஉறவு என்பது சாராம்சத்தில்‌ கூலிஉழைப்பு அடிப்படையிலான உற்பத்திப்‌ போக்காகும்‌. இந்த உற்பத்திப்‌போக்கு, உற்பத்தியில்‌ ஈடுபடாத மிகச்சிறிய சலுகை பெற்ற வர்க்கத்தின்‌ கட்டுப்பாட்டில்‌ தொழிலாளர்களின்‌ உபரி மதிப்பைச்‌ சுரண்டி பண்டப்பரிவர்த்தனை மூலம்‌ அதை அவர்கள்‌ துய்ப்பதற்கு ஏற்றதாகும்‌. இத்த உற்பத்திப்‌ போக்கு ரசியாவில்‌ ஏற்பட்டுவிட்டதா இல்லையா என்பதே இப்போதைய கேள்வியாகும்‌. இது சோவியத்‌அமைப்பிலும்‌ தங்கியுள்ளது என்பதைப்‌ பால்‌ எம்‌. சுவீசி ஒப்புக்கொண்டாலும்‌, (புரட்சிக்குப்‌ பிந்திய சமுதாயம்‌, பக்‌,218), சோவியத்‌ தொழிலாளர்களுக்கு சட்ட ரீதியான வேலை பாதுகாப்பு உண்டு எனக்‌ குறிப்பிடு கின்றார்‌. ஆனால்‌ இந்த சட்டரீதியான பாதுகாப்பும்‌ நடைமுறையில்‌ நீர்த்துப்‌ போயிருப்பதை ரசிய நிகழ்வுகளே குறிப்பிடுகின்‌ றன . ..

இந்தப்பகுதி பல்வேறு ஆசிரியர்களின் நூல்களின் துணைக் கொண்டு அதன் அடிப்படையில் தொகுக்க பட்டவைதான் இதில் ஏற்பட்டிருக்கும் கருத்து மற்றும் தகவல் பிழை இருக்குமேயாயின் தொகுத்தவரின் குறைபாடுதான் அதனை விமர்சனபூர்வமாக ஏற்கிறோம்- சிபி.

பாட்டாளி வர்க்கக் கட்சி-மாரிஸ் கார்ன் ஃபோர்த் நூல் PDF வடிவில்

 ங்கிலாந்தைச் சேர்ந்த தோழர் மாரிஸ் கார்ன்ஃபோர்த்மார்க்சிய மூல நூல்களுக்கான வாசகர் வழிகாட்டி என்ற நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலில் மார்க்சிய லெனினியத்தை எப்படிக் கற்பது என்பதையும், அரசியல்- பொருளாதார- சித்தாந்தப் பிரச்சினைகளை மார்க்சிய லெனினியத்தின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான வழிமுறையை மார்க்சிய மூல நூல்களில் இருந்து எப்படி கற்றுக்கொள்வது என்பதைப் பற்றியும் விரிவாக விளக்குகிறார்.

இந்த நூலில் பாட்டாளி வர்க்கக் கட்சிஎன்ற தலைப்பில் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை மார்க்சிய ஆசான்களின் நூலில் இருந்து எப்படி கற்றுக் கொள்வது என்பதை விளக்கியிருக்கிறார். ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியின் முக்கியத்துவம் மற்றும் தன்மைகளை மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின் உள்ளிட்ட மார்க்சிய ஆசான்களின் நூல்களில் இருந்து எடுத்துக்காட்டி, அந்நூல்கள் குறித்து அறிமுகப்படுத்துகிறார்.

பாட்டாளி வர்க்கக் கட்சி

முன்னுரை- நமது நாட்டில் பலவீனமான பகுதியை உங்கள் முன் வைக்கவும் இங்குள்ள கட்சிகள் மறந்தே போனவற்றை மார்க்சிய ஆசான்களின் வழிக்காட்டுதலை முன் வைத்து விவாதிக்கவே இந்தப்பகுதியை எழுதும் கட்டாயம். இவை எனது எழுத்துகள் அல்ல முன்னோடிகள் தொகுத்தவற்றை நான் உங்கள் முன் வைக்கிறேன். இதற்கு ஆதரமான நூல்களை துணைக்கொண்டு மெய்விவரங்களை சரிபார்த்துக்கொள்ளலாம் தோழர்களே.

புரட்சிக்கு பதிலாக சீர்திருத்தமும், அரசியல் போராட்டத்தை மறந்து பொருளாதார போராட்டத்தில் எதிரி வர்க்கத்திடம் மண்டியிட்டு கிடக்கும் அவலங்களை உங்கள் முன் வைப்பதோடு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை தீர்க்க மார்க்சிய லெனினிய சித்தாந்த அறிவை பெற்றிருப்பதோடு உழைக்கும் வெகுஜன மக்களோடு இணைந்து செயலாற்ற வேண்டும் அவை அவர்களின் விடுதலைக்காக என்பதனை அவர்களை தட்டி எழுப்ப வேண்டும் எப்படி என்பதனை நமது ஆசான்கள் வழிகாட்டியுள்ளனர். வாருங்கள் முழுமையாக கற்று தேர்வதோடு ஒரு உண்மையான பாட்டாளி வர்க்க கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதனை புரிந்து இங்குள்ள கட்சிகளின் நிலையை அறிவதோடு ஒரு பாட்டாளி வர்க்க கட்சி என்பது எப்படி இருக்க வேண்டும் அறிவோம் செயல்படும் தோழர்களே.

மார்க்சியம், பாட்டாளி வர்க்கம் தனக்கென்று ஒரு கட்சியின்றி முதலாளித்துவத்தைத் தோற்கடிக்கவோ, அதிகாரத்தை வெல்லவோ, சோசலிசத்தைக் கட்டியமைக்கவோ முடியவே முடியாது என்று கற்பிக்கிறது.

மார்க்சும் எங்கெல்சும் சுதந்திரமான பாட்டாளி வர்க்கக் கட்சியின் தேவையை எல்லாவற்றிற்கும் மேலாக வலியுறுத்தி வந்தனர். முதலாம் அகிலத்தில் அவர்களால் வகுக்கப்பட்ட விதி ஒன்று “தனக்கென்று தனித்தன்மையுடைய ஒரு கட்சியை, உடைமையாளர்களது பழைய கட்சிகளனைத்திற்கும் எதிராக கட்டியமைத்தாலன்றி ஒருபோதும் ஒரு வர்க்கமாகச் செயல்பட முடியாது” என்கிறது.

மார்க்சும், எங்கெல்சும் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தோன்றிய காலத்தில் எழுதி வந்தவர்கள். அவர்களது பார்வை கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பின்வருமாறு தொகுக்கப்படுகிறது. கம்யூனிஸ்டுகள் பிற பாட்டாளி வர்க்கக் கட்சிகளுக்கெதிராக ஒரு கட்சியைக் கட்டவில்லை. மாறாக, அவர்கள் ஒரு பொது அரசியல் திட்டத்தின் அடிப்படையில் பாட்டாளி வர்க்கத்தை ஒன்று திரட்டி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்திற்காக முனைகிறார்கள்.

மார்க்சும் எங்கெல்சும் கட்சிக்குள் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவக் கருத்துக்கள், கோட்பாடுகளை கடத்தி வர முனைவதை அதை ஒரு வர்க்க சமரசப் போக்கிற்கு உட்படுத்துவதை விடாப்பிடியாக எதிர்த்தனர். கட்சியைப் புரட்சிகர மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிறுவவும், அவற்றிற்கு தொழிலாளி வர்க்க நிறுவனங்களை வென்றெடுக்கவும் முயன்றனர். இதுதான் அவர்களின் அரசியல் செயற்பாடாக இருந்தது. மேலும் அவர்கள் பாட்டாளி வர்க்கம் எவ்வகைப் போக்கை பிற வர்க்கங்களின் மீது கடைப்பிடிக்க வேண்டும் என்பதை குறிப்பாக விவசாயி வர்க்கத்தை, பாட்டாளி வர்க்கத்தின் மிக முக்கியத் துணைவர்களாகக் கருதி வரையறுப்பதில் கவனம் செலுத்தினர்.

லெனின் போல்சுவிக் கட்சியை ஏகாதிபத்திய சகாப்தத் தொடக்கத்தில் கட்டினார். மேற்கத்திய நாடுகளின் சோசலிசக் கட்சிகளின் “அமைதியான” வளர்ச்சி கொண்ட பல பத்தாண்டுகளின் முடிவில் சந்தர்ப்பவாதப் போக்குகள் தலைவிரித்தாடின. அகிலத்தின் ஒட்டு மொத்த செயற்பாட்டையும் பரிசோதித்துச் சரி செய்வதும் சந்தர்ப்பவாதத்தை முற்றாக நிராகரிப்பதும் மிக முக்கியத் தேவையானது. போல்சுவிக் கட்சியை அவர் புதிய வகையானதாக முதலாளித்துவத்தை எதிர்த்த பாட்டாளி வர்க்கத்தை ஒன்றிணைத்துத் தலைமை தாங்குவதாகக் கட்டியமைத்தார். இக்கட்சி ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை, சுய ஒழுங்கை உள்ளடக்கி, புரட்சிகர மார்க்சிய கோட்பாடுகளின் அடிப்படையிலானதாய் அக்கோட்பாடுகளைப் பயன்படுத்தி, முன்னெடுத்துச் செல்லக்கூடியதாய் இருந்தது.

அப்படிப்பட்ட கட்சி புரட்சிகர தத்துவ அடிப்படையிலமைந்து பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படைப்பிரிவாய் அதிகாரத்தை வெல்ல, சோசலிசத்தைக் கட்டியமைக்க, தொழிலாளி வர்க்க இயக்கங்களை ஈர்த்து, வழி நடத்தி, தலைமை தாங்கிச் செல்வதால், பாட்டாளி வர்க்கத்தின் மிக உயர்ந்த அமைப்பு வடிவமாக இருக்கிறது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கான ஒரு கருவியாக உள்ளது. ஒற்றுமையை, ஒழுங்கைக் காப்பதாக, எந்த குழுப்போக்கும் அதன் ஒற்றுமையைக் சிதைந்துவிடாது இருக்கும்படி காக்கிறது. தானே சந்தர்ப்பவாதிகளை வெளித்தள்ளி தூய்மை அடைகிறது. போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தனது கொள்கையை எந்த எதிரிக்கு மரண அடி கொடுப்பது என்பதை நிர்ணயிப்பதாக தாக்குதல் திசைவழியை அமைத்துக் கொள்கிறது. அனைத்து கூட்டாளி வர்க்கங்களையும் இந்த எதிரிக்கு எதிரான போராட்டத்தில் சாத்தியமான எல்லா நட்பு சக்திகளையும் ஒன்றிணைக்கிறது.

போல்சுவிக் கட்சி பாட்டாளி வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்திற்கெதிரான புரட்சிகர மார்க்சியத்தின் போராட்டத்தில் பிறந்தது. அதன் திட்டங்களும், அமைப்புக் கோட்பாடுகளும், தொழிலாளிகள் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு போராட வேண்டும் என்னும் “பொருளாதாரவாதத்” திற்கெதிரானதாக அமைந்தது. அவர்களோடு கட்சியில் வர்க்கக் கூட்டிணைப்புக் கோட்பாடுகளைப் புகுத்தி அமைப்பைப் பலவீனப்படுத்தி ஒற்றுமையைக் குலைக்க முயன்ற மென்ஷ்விக்குகளுக்கு எதிரானதாக, கட்சியை மக்களிடமிருந்தே பிரித்து, நட்புச் சக்திகளை நிராகரித்து, போராட்டத்தின் வளர்ச்சிக்கட்ட அடிப்படையிலான கோட்பாட்டுக்குப் பதிலாக “வெற்றுப் புரட்சிகர” வாய்வீச்சில் இறங்கிய “இடதுசாரி”களுக்கெதிரானதாக இருந்தது.

லெனின் இரண்டாம் அகிலத்தின் சந்தர்ப்பவாதத் தலைவர்களை எதிர்த்து அம்பலப்படுத்தி வந்தார். இத்தலைவர்கள் 1914-18-ல் ஏகாதிபத்தியப் போரில் அகிலத்தையே காட்டிக் கொடுத்தவர்கள். லெனின் நியாயமான, நியாயமற்ற போர்களுக்கிடையிலான வேறுபாட்டை விளக்கி போரைப் பற்றிய பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை உருவாக்கினார்.

லெனினது போதனைகள், புதிய பாணி கட்சியைக் கட்ட கம்யூனிஸ்டுக் கட்சிகளால் ஏற்கப்பட்டு ஸ்டாலினால் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டன.

லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?”, “இடதுசாரிக் கம்யூனிசம் ஒரு இளம்பருவக் கோளாறு” என்னும் இரு நூல்களும் மிக அவசியமானவை. இவற்றோடு “ஓரடி முன்னே இரண்டடி பின்னே” என்ற நூலையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஸ்டாலினின் 17,18-ம் சோவியத் ரசியக் கம்யூனிஸ்டுக் கட்சி காங்கிரசில் தந்த அறிக்கைகள் முக்கியமாகப் படிக்க வேண்டியவை.

“வரலாற்றில் காரல் மார்க்சின் போதனைகளுக்கு விதிக்கப்பட்ட வருங்காலம்” என்னும் நூலில் (1913) லெனின் தொழிலாளி வர்க்க இயக்கம் இதுவரை மூன்று கட்டங்களைக் கடந்து வந்துள்ளது என்று காட்டினார். முதற்கட்டம் புரட்சிகர எழுச்சிகளின் காலம், 1848 புரட்சிகளில் இருந்து 1871 பாரீஸ் கம்யூன் வரையிலானது, இந்தக் காலப் பகுதியிலேயே பல சுதந்திர தொழிலாளி வர்க்கக் கட்சிகள் முதன் முதலில் தோன்றின. இரண்டாம் கட்டம் 1905 ரஷ்யப் புரட்சி வரையிலானது. “அமைதியான” வளர்ச்சி நிலவிய காலம். இக்காலகட்டத்தில் தொழிலாளி வர்க்க கட்சிகள் வலிமையுற்று, தங்கள் சொந்தக் கட்சி இதழ்களை நடத்தியும், முதலாளியப் பாராளுமன்றத்தை பயன்படுத்தக் கற்றும் உள்ளன. ஆனால் இக்கட்டத்திலேயே சந்தர்ப்பவாதம் “சமூக அமைதி” எனப் பேசிக்கொண்டு, வர்க்கப் போராட்டத்தை நிராகரித்து இயக்கத்துக்குள் புகுந்தது. கடைசிப் பகுதியாக 1905-க்குப் பிற்பட்ட காலம், புதிய பிரச்சினைகள் முளைத்துள்ள இக்கட்டத்தில் சந்தர்ப்பவாதத்தை கட்சியிலிருந்து துரத்தியடித்து புரட்சிகர மார்க்சியத்தின் வெற்றியைப் பாதுகாக்க வேண்டி இருந்தது.

இந்நூலுக்கு முன்பே மார்க்சியமும் திருத்தல்வாதமும் (1908) என்ற நூலில் திருத்தல்வாதத்தை லெனின் ஆய்கிறார். தங்களை மார்க்சியவாதிகள் என்றழைத்துக் கொண்டே மார்க்சிய அடிப்படைகளைத் திருத்துகின்ற சந்தர்ப்பவாதிகளின் தத்துவமே திருத்தல்வாதம். திருத்தல்வாதிகள் இயக்க இயல் பொருள்முதல்வாதத்துக்குப் பதிலாக முதலாளித்துவ தத்துவத்தின் “மிகப் புதிய விஷயங்களை” சார்ந்திருப்பதைக் காட்டினார். குறிப்பாக முதலாளித்துவ அரசியல் பொருளாதாரவாதிகளின் நவீன தத்துவங்களைக் கையிலெடுத்துக் கொண்டு மார்க்சியத்தைத் “திருத்த” குறிப்பாக மார்க்சின் “மதிப்பு” பற்றிய கோட்பாட்டை, முதலாளித்துவ நெருக்கடிகளின் தவிர்க்க இயலாத தன்மையைத் திருத்த முயன்றனர். ஜனநாயகமும் பொதுமக்கள் வாக்குரிமையும் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படைகளை அகற்றி விட்டன என்று அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள்.

திருத்தல்வாதம் சோசலிச லட்சியங்களைக் கைவிட்டு “பாட்டாளி வர்க்க அடிப்படை நலன்களை கற்பனையான அல்லது நிஜமான பொருளாதார நலன்களுக்காக தியாகம் செய்துவிடும்” அளவுக்கு சரிந்தது. பாட்டாளி வர்க்க இயக்கத்தில் இது குட்டி முதலாளித்துவ போக்கைப் பிரதிபலித்தது.

“ஐரோப்பிய தொழிலாளர் இயக்கத்தில் கருத்து வேற்றுமைகள்” (1910) என்னும் நூலில் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் புலப்படும் மார்க்சிய – விரோதப் போக்குகள் தற்செயலானவை அல்ல, மாறாக, அனைத்து முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் தன்மையைப் பொறுத்தது என்று குறிப்பிடுகிறார். ருஷ்ய சமூக ஜனநாயகவாத இயக்கத்தில் சீர்த்திருத்தவாதக் கருத்துக்களின் தாக்கத்தை முதலாளித்துவப் பிரச்சாரத்துடன் தொடர்புபடுத்துகிறார் லெனின். சோசலிசத்திற்கு எதிராக நேரடியாகப் போராடாமல் முதலாளித்துவம் சீரான, துண்டு துண்டுச் சீர்திருத்தங்களை முன்வைக்கக் கற்றுக் கொண்டு உள்ளது எனக் கூறுகின்றனர். இது முதலாளித்துவத்திற்கு ஒட்டுப் போட முனைவது ஆகும்; அவர்கள் அத்தகைய பிரச்சாரத்தைப் பயன்படுத்தி பாட்டாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்தி வலுவிழக்கச் செய்ய முயலுகிறார்கள்; முதலாளிவர்க்க ஆட்சியை தக்கவைக்கப் பார்க்கிறார்கள். இப்பிரச்சாரம் சீர்திருத்தவாத சித்தாந்தங்கள் வாயிலாக தொழிலாளி வர்க்க இயக்கத்தில் வெளிப்பட ஆரம்பித்து விட்டது – புரட்சிக்குப் பதிலாக சீர்திருத்தங்களை அது முன் வைக்கிறது. (இக் கட்டுரை, ருஷ்யத் தொழிலாளர்கள் ஒருபோதும் புரட்சிப் பாதையை எக்காரணம் முன்னிட்டும் தேர்ந்தெடுக்கக் கூடவே கூடாது என்று பிரச்சாரம் செய்த சீர்திருத்தவாத சோசலிஸ்டுகளைப் பற்றிய பெருந்திரளான விவரங்களுடன் கூடிய வாதத்தை உள்ளடக்கியதாகும்.)

ஏகாதிபத்தியமும் சோசலிசத்தில் பிளவும் (1916) என்ற நூலில் தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் சந்தர்ப்பவாதம் நிலவுவதற்கும் அதன் வலிமைக்கும் அடிப்படைக் காரணங்களைத் தொகுத்து லெனின் உரைக்கிறார். ஏகாதிபத்தியத்தின் உயர்விகித லாபங்கள் தொழிலாளி வர்க்கத்தின் மேல்தட்டுக்கு லஞ்சம் அளிக்கவும், ஊழல்படுத்தவும் பயன்படுத்துகின்றன. இதன் விளைவாகப் பூர்ஷ்வா தொழிலாளர் கட்சி எல்லா ஏகாதிபத்திய நாடுகளிலும் தலை எடுத்தது.

குறிப்பாக பிரிட்டனை ஆய்கின்ற லெனின், அங்கு சந்தர்ப்பவாதம், முறையான ஏகாதிபத்தியம் தோன்றுவதற்குப் பல பத்தாண்டுகளின் முன்பே பிறந்து விட்டதாகக் கூறுகிறார். தொழில்துறையில் தனியாதிக்கமும் (Industrial Monopoly) ஏகாதிபத்தியத்துக்கு முந்தைய முதலாளித்துவ வளர்ச்சியிலேயே அது பிடித்திருந்த செழிப்பான காலனிய நாடுகளும் அவர்களுக்கு உயர் லாபங்களைத் தோற்றுவித்தன. இது ஏகாதிபத்தியத் தோற்றத்தின் முன்பே நிகழ்ந்த போதும் தன்னுள் சில ஏகாதிபத்திய இயல்புகளைக் கொண்டிருந்தது.

இதே கருத்தை லெனின் தனது “இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சி” (1915) என்னும் கட்டுரையிலும் கையாள்கிறார். இதில் சந்தர்ப்பவாதம் என்றால் என்ன என்று வரையறுக்கிறார்.

அதாவது “சிறுபான்மையினரின் தற்காலிக நலன்களின் பொருட்டு பெருந்திரளான தொழிலாளர்களின் நலன்களை தியாகம் செய்து விடுவது” எனப் பொருளாகும். வேறு விதமாகச் சொல்வதானால் “தொழிலாளி வர்க்கத்தின் ஒரு பிரிவு பெருந்திரளான தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக கூட்டு சேர்வது” ஆகும்.

முதலாளிகள் தொழிலாளிகளுக்கிடையில் ஒரு பிரிவுக்கு மட்டும் சலுகை அளிப்பதன் மூலம் அவர்களுக்கிடையில் தகுதிபெற்ற தொழிலாளர் “தட்டு” ஒன்றை ஏற்படுத்த முடிகிறது என்பதால் சந்தர்ப்பவாதம் தோன்றவும் வலிமையடையவும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் “பழக்கங்களின் வலிமை, ஒப்பீட்டளவில் அமைதியான வளர்ச்சிப் போக்குக்குப் பழகிப் போவது, தேசியத் தன்னியல்புப் போக்கு (Prejudice) கூரிய பிளவுகளுக்கு அஞ்சுவது, நம்பிக்கையின்மை முதலியவற்றால் சந்தர்ப்பவாதம் வலிமையடைகிறது என்கிறார் லெனின்.

இரண்டாம் அகிலத்தின் தலைவர்களின் சந்தர்ப்பவாதம் 1914-இல் அவர்கள் தத்தம் ஏகாதிபத்தியங்களோடு கைகோர்த்துக் கொள்வதாக முடிந்தது. ஏகாதிபத்தியப் போருக்குத் துணைபோன அவர்களது வாதங்களைக் கிழிக்கிறார் லெனின். சந்தர்ப்பவாதத் தலைவர்களைப் பொறுத்தவரையில் “சொல்லில் சோசலிசம் நடைமுறையில் பூர்ஷ்வாக்களோடு ஒவ்வொரு முக்கியப் பிரச்சினையிலும் கைகோர்த்து கட்சியிலிருந்து வெளித்தள்ளப்பட வேண்டிய நபர்கள் இவர்கள்” என்று தனது கட்டுரையை லெனின் முடிக்கிறார்.

லெனின்: சோசலிசமும் போரும் (1915) என்னும் தமது நூலில் நியாயமான நியாயமற்ற போர்களுக்கிடையிலான வேறுபாட்டை வரையறுக்கிறார். தொழிலாளி வர்க்கம் நியாயமற்ற ஏகாதிபத்தியப் போர் மீது எவ்வகை நிலைப்பாட்டை வைத்திருக்க வேண்டும் என்பது பற்றிய மார்க்சியப் போதனைகளின் தொகுப்பாக இந்நூல் உள்ளது.

லெனின் 1914-இல் எழுந்த போர் இரண்டு ஏகாதிபத்திய முகாம்களுக்கிடையிலான நியாயமற்ற போர் என்று காட்டுகிறார். இத்தகைய போர்களில் அந்த அந்த நாடுகளின் தொழிலாளி வர்க்கங்கள் தத்தம் ஏகாதிபத்தியங்களை எதிர்க்க வேண்டும். “ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக” மாற்ற முயல வேண்டும்.

லெனின் –ஏகாதிபத்திய யுத்தங்கள் மூளும்போதும் நியாயமான சமாதானம் ஏகாதிபத்திய அரசுகளைத் தூக்கியெறியாமல் எட்டக் கூடியது அல்ல என்று காட்டுவதன் மூலம், சமாதானவாதிகளும், தாராளவாதிகளும் போர்களின் போது பரப்பும் “சமாதானம்” பற்றிய அரூபமான (Abstract) முழக்கம் போலித்தனமான ஏமாற்று வேலை என்று நிறுவுகிறார்.

இரண்டாம் அகிலத்தின் “சோசலிஸ்டுகள்’’ போருக்காதரவு அளித்தது சோசலிசத்தையே நேரடியாகக் காட்டிக் கொடுத்தது ஆகும் என்கிறார் லெனின். அவர்களின் கொள்கையை குறிக்க சமூகவெறி (Social Chavunism) என்ற சொல்லை உருவாக்கினார். சமூகவெறி என்பது நியாயமற்ற போரில் தங்கள் தாய் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறிய சோசலிஸ்டுகள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களின் வாதம். சந்தர்ப்பவாதம், சமூக வெறி (Social Chavunism) இரண்டுடனும் சர்வதேசிய அளவில் தொடர்புகளை முறித்துக் கொண்டு மூன்றாம் அகிலம் புரட்சிகர அடிப்படையில் தொடங்கப்பட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.

ஏகாதிபத்தியப் போர் பற்றிய மார்க்சியப் பார்வையை மீண்டும் போர் பற்றி 1917 மே மாதம் தனது பேச்சில் விளக்குகிறார். மீண்டும் நியாயமான, நியாயமற்ற போர்களுக்கிடையிலான வேறுபாட்டை யுணர்த்தி விட்டு, “நாம் எப்பொழுதும் எவ்வர்க்கம் போரை எந்த நோக்கத்திற்காக நடத்துகிறது என்று பார்க்க வேண்டும்” என விளக்குகிறார்.

மற்ற கட்டுரைகளில் உலகப் போரை ஒட்டி யெழுந்த சில சிறப்பான பிரச்சினைகளை ஆய்கிறார்.

“ஐக்கிய ஐரோப்பிய நாடுகள் என்ற முழக்கம்”(1915) என்ற நூலில் தொழிலாளர்கள் இப்படிப்பட்ட முழக்கத்தை ஆதரிக்க முடியாது என்கிறார். ஏகாதிபத்திய சக்திகள் அதிகாரத்தில் உள்ள வரை “ஐக்கிய ஐரோப்பிய நாடுகள் என்பது காலனிகளை, கொள்ளைகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு ஒப்பந்தமே, சோசலிசத்தை கூட்டாக நசுக்கும் ஒரு முகாந்திரமே” என்கிறார்.

சோசலிசம் அதன் வளர்ச்சிப் போக்கில் “உலக ஐக்கிய நாடுகளை” உருவாக்கும். ஆனால் இது இன்றைய நடைமுறைக் குறிக்கோள் அல்ல என்கிறார். சோசலிசத்தின் வெற்றி பல்வேறு நாடுகளிலோ அல்லது ஒரே ஒரு நாட்டிலோ சாத்தியமானதுதான். (இதன் காரணம் முதலாளித்துவத்தின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிதான்) இந்த நாடு அல்லது நாடுகள் பிற முதலாளித்துவ நாடுகள் சூழ்ந்திருக்கும் போதும் நீண்ட காலம் சோசலிசத்தின் மையங்களாக விளங்கவும் முடியும்.

லெனின், தொழிலாளர்களும் சமாதானவாதமும் (பாசிபிசமும்) என்ற நூலில் முழுமையான ஆயுத ஒழிப்பு என்னும் பாசிபிச முழக்கத்தை அம்பலப்படுத்துகிறார். முதலாளித்துவச் சூழலில் அது சாத்தியமற்றது. எனவே அதற்காக பிரச்சாரம் செய்வது உண்மையில் மெய்யான புரட்சிகரப் போராட்டங்களுக்கும் ஏகாதிபத்தியங்களுக்குமிடையிலான பிரச்சினைகளிலிருந்து நழுவுவதற்கானது.

நசுக்கப்படுகிறவர்கள் சமாதானவாதிகள் ஆக முடியாது. மாறாக ஆயுதங்களைக் கையாளவும், அவற்றை நசுக்குபவர்களுக்கெதிராகத் திருப்பவும் தயாராக தொழிலாளி வர்க்கம் இருக்க வேண்டும். ஆயுதங்களைப் பயன்படுத்தாது நசுக்கப்படுவதற்கும் சம்மதிப்பவர்கள் அடிமைகளாக நடத்தப்பட தகுதியானவர்கள்தான். நாம் பாசிபிஸ்டுகளாக இருக்க முடியாது. ஏனெனில் நாம் நியாயமான போர்கள் இருப்பதை ஏற்கிறோம். நசுக்கப்படுபவர்கள் நசுக்குகிறவர்களுக்கு எதிராக நடத்துவதே நியாயமான போர்களாகும்.இதே கருத்தை1916-ல் எழுதிய “பாட்டாளி வர்க்கப் புரட்சியின் போர்த்திட்டம்” என்னும் நூலில் கையாள்கிறார். இதன் முதல் பகுதியில் சோசலிஸ்டுகள் எல்லாப் போர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல.

அவர்கள் அப்படி இருக்கவும் முடியாது என்று விளக்குகிறார். ஏனெனில் நசுக்கப்பட்டவர்கள் விடுதலைக்காகப் போராடுகிறார்கள். உள்நாட்டுப் போர்கள் நடக்கின்றன; சோசலிசத்தைக் கட்டியமைத்த பின் ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கெதிரே தற்பாதுகாப்புக்காகப் போராடி ஆக வேண்டி வரலாம். நசுக்கப்படுபவர்கள் விடுதலைக்காகப் போராடத் தயாராக இருக்க வேண்டும். சோசலிச நாட்டின் மக்கள் தங்கள் தாய்நாட்டைக் காக்கப் போர் நடத்த போராடவே வேண்டும்.

இந்த நூலின் பிற்பகுதிகளில் லெனின் ராணுவப் பயிற்சி, ஆயுதங்கள் மற்றும் அவற்றைப் பயன்படுத்துவது பற்றிய பாட்டாளி வர்க்க நிலைப்பாடுகளை எடுத்துரைக்கிறார்.

மார்க்சும் எங்கெல்சும் பிரிட்டனின் சுதந்திரமான தொழிலாளி வர்க்க இயக்கத்தினைக் கட்டியமைப்பதன் முக்கியத்துவத்தை எப்படி வலியுறுத்தி வந்தனர் என்பதைக் குறிப்பிடுகின்றார். அவர்களின் அணுகுமுறை, மார்க்சியம், சோசலிசத்தையும் வெகுஜன தொழிலாளர் இயக்கத்தையும் ஒன்றிணைத்த தத்துவம் என்ற கோட்பாட்டிற்கு உதாரணமாகத் திகழ்கிறது. மார்க்சும் எங்கெல்சும் பழைய சமூக ஜனநாயகவாதக் கூட்டமைப்பு (Social Democratic Federation) என்னும் அமைப்பு பிரிட்டனில் கையாண்ட குறுங்குழுவாதப் போக்கை, தன்னை வெகுஜன இயக்கத்திலிருந்தே தனிமைப்படுத்திக் கொண்டு இருந்த போதும் வரட்டுத்தனமான “தனித்தன்மை”யைப் பற்றி பேசியதை வன்மையாகக் கண்டனம் செய்தனர்.

சோசலிஸ்டுகள் “தங்கள் குறுகிய குறுங்குழுவாதப் போக்கினைத் தூக்கியெறிந்து தொழிலாளர் இயக்கத்தில் இணைய வேண்டும்” என்று மார்க்சும் எங்கெல்சும் வலியுறுத்தினர். அதேசமயம் தொழிலாளர் இயக்கத்தில் சந்தர்ப்பவாதத்தை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தையும் இயக்கத்திற்கு புரட்சிகரத் தத்துவம் ஒன்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்கள்.

கொள்கை ஒன்றுக்குப் போராட வேண்டியது எவ்வளவு முக்கியமானது என்பதை லெனின் வலியுறுத்துகிறார். தொழிலாளர் கட்சியின் தொடக்கமே “ஒருவகையில் உண்மையில் உணர்வுள்ள பாட்டாளி வர்க்க நிறுவனங்கள் வர்க்கக் கொள்கைக்கும், சோசலிசத் தொழிலாளர் கட்சி நோக்கியும் எடுத்து வைத்திருக்கும் முதல் கட்டம் ஆகும்” எனக் குறிப்பிடுகிறார். ஆனால் 1918-ல் தொழிலாளர் கட்சி பற்றிக் குறிப்பிட்டபோது “இது தொழிலாளர்களை உள்ளடக்கி உள்ளபோதும் எதிர்ப்புரட்சிக்காரர்களால் தலைமை தாங்கப்படுகிறது” என்று கூறுகிறார்.

பிரிட்டனில் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றினைக் கட்ட வேண்டிய தேவையையும் அது தொழிலாளர் கட்சியோடு உறவு கோர வேண்டியதையும் காட்டுகிறார்.( பார்க்க, லெனின், பொதுவுடைமைக் கட்சியின் பாத்திரம்.)

லெனினும் கம்யூனிஸ்ட் அகிலமும்

பிப்ரவரி புரட்சிக்குப் பின் ரசியா திரும்பிய லெனின் ஏப்ரல் 1917-ல் வெளியிட்ட “நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள்” என்ற பிரசுரத்தில் சர்வதேச இயக்கத்தில் நிலவிய மூன்று வகைப் போக்குகளை இனம் பிரித்துக் காட்டினார். அவ்வகைப் போக்குகள் கொண்டவர்களாக இவர்கள் உலகப் போரில் தங்கள் பக்க ஏகாதிபத்தியங்களுடன் கை கோர்த்துக் கொண்டனர். நடுநிலைவாதிகள் மேற்படி நபர்களுடன் ஒத்துப்போனவர்கள். மூன்றாவதாக, மெய்யான சர்வதேசியவாதிகள், இவர்கள் ஏகாதிபத்தியப் போரை முழுமூச்சாக எதிர்த்தனர். லெனின், மூன்றாவது பிரிவினர், இரண்டாம் அகிலத்திலிருந்து வெளியேறி புதிய அகிலத்தை தோற்றுவித்து, சந்தர்ப்பவாதத்திலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டு, பாட்டாளி வர்க்கத்தை புரட்சிகர மார்க்சிய அடிப்படையில் ஒன்றிணைக்க வேண்டுமென அறை கூவினார்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் முதல் பேரவை 1919 வசந்தத்தில் நடந்தது. அதன் முடிவில் “மூன்றாம் அகிலமும் வரலாற்றில் அதன் இடமும்” என்ற பிரசுரத்தை வெளியிட்ட லெனின், முதல் அகிலம் சர்வதேசிய அளவில் சோசலிசத்திற்காகப் பாட்டாளி வர்க்கம் போராட வேண்டியதற்கான அடிப்படைகளைத் தந்தது; இரண்டாவது அகிலம் இந்த இயக்கத்தை பல்வேறு நாடுகளுக்கு விரிவுபடுத்தியது; மூன்றாம் அகிலம் தன்னிலிருந்து சந்தர்ப்பவாதத்தை வெளியேற்றி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அவசியத்தை அங்கீகரித்ததன் மூலம் புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்து உள்ளது என்று சுட்டிக் காட்டினார்.

கம்யூனிஸ்ட் அகிலத்திற்கான லெனினது பங்களிப்புகள் அனைத்திலும் சந்தர்ப்பவாதத்தையும், குட்டி முதலாளித்துவ இடதுசாரிப்போக்கையும் அது மக்களிடமிருந்து கம்யூனிஸ்டுகளைத் தனிமைப்பட்டுப் போகச் செய்வதாகையால் எதிர்த்துப் போராட வேண்டியதை வலியுறுத்துகிறார். (பார்க்க: லெனின் இடதுசாரிக் கம்யூனிசம் ஒரு இளம் பருவக் கோளாறு)மூன்றாம் அகிலத்தின் பணிகள் (1919 ஜூலை) என்ற பிரசுரத்தில் மிக முக்கியத் தேவைகளாக கீழ்க்கண்டவற்றைச் சுட்டிக் காட்டுகிறார்:

1.சீர்திருத்தத்துக்கும் புரட்சிக்கும் இடையிலான வேறுபாட்டை திட்டவட்டமாக விளக்குதல். அதே வேளையில் சீர்திருத்தங்கள், முதலாளித்துவ நாடாளுமன்றங்களில் பங்கேற்பது ஆகியவற்றை நிராகரிக்காது இருப்பது.

2. சட்டபூர்வ – சட்ட விரோத வேலைகளை இணைப்பது.

3. தொழிலாளர் இயக்கத்திலிருந்து சந்தர்ப்பவாதிகளை வெளியேற்றப் பணிபுரிவது.

4. காலனிய விடுதலைக்கான புரட்சிப் போராட்டங்களுக்காகத் துணை புரிவது.

5. புரட்சிகர முழக்கங்களினால் எதிர்புரட்சிகரச் செயல்களை மூடி மறைக்க முயல்பவர்களை அம்பலப்படுத்துவது.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது பேரவையின் (1920) போது லெனின் “கம்யூனிஸ்ட் அகிலத்தின் இரண்டாவது பேரவையின் அடிப்படை கடமைகள்” பற்றிய படிவத்தைத் தயாரித்தார்.

அதில் சோசலிசத்தில் வெற்றிக்கான தேவைகளாக

1. சுரண்டுபவர்களைத் தூக்கியெறிவது, ஒடுக்குவது;

2. கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமைக்குத் தொழிலாளர்களை வென்றெடுப்பது; தொழிலாளி வர்க்கத்தின் வாழ்விலிருந்து கட்சியைத் தனியாகப் பிரிக்க முடியாத அளவுக்கு மாற்றுவது;

3. ஊசலாட்டப் பிரிவுகளை நடுநிலைப்படுத்துவது – ஆகியவற்றைக் குறிப்பிடுகின்றார்.மேலும், கம்யூனிஸ்டுகள் இந்த நிலைமைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தங்கள் பிரதான எதிரிகள் சந்தர்ப்பவாதிகள்தான் என்பதை உணர வேண்டும் என வலியுறுத்துகிறார்.

இரண்டாவது பேரவையில் “சர்வதேசிய நிலைமைகளும், கம்யூனிஸ்ட் அகிலத்தின் அடிப்படைப் பணிகளும்” என்ற அறிக்கையில் போருக்குப் பிந்திய அரசியல், பொருளாதார நிலைமைகளை விரிவாக ஆராய்கிறார்.

இதே காங்கிரசில் “கம்யூனிஸ்ட் அகிலத்தில் இணைவதற்கான நிபந்தனைகளை” லெனின் வரையறுத்தார். இந்த உரையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கும் சீர்திருத்தவாதக் கோட்பாடான அதிகாரத்தை வெல்வது என்பதற்குமிடையிலான வேறுபாடுகளை விளக்கினார்.

இதைப் போன்றே “விவசாயப் பிரச்சினை பற்றிய ஆய்வுகள்”, “தேசிய, காலனிய பிரச்சினை பற்றிய ஆய்வுகள்” ஆகியவற்றையும் படைத்தளித்தார். இதில் முன்னது விவசாயி வர்க்கத்துடனான கூட்டினை விளக்குகிறது.

“கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம்” என்ற உரையில் பிரிட்டிஷ் பிரதிநிதிகளான டானர், மெக் க்லேன் (Tanner, Mc Claine) ஆகியோருக்கு பதிலளிக்கையில் உணர்வுபூர்வமான புரட்சிகரச் சிறுபான்மை மக்களை வழிநடத்தும் வண்ணம் கட்சியைக் கட்ட வேண்டும் என்றார். மேலும் பிரிட்டிஷ் பொதுவுடைமைக் கட்சியை தொழிலாளர் கட்சியுடன் இணைப்பது பற்றிய பிரச்சினையையும் அவர்களுக்கு விளக்கினார்.

இதே சமயத்தில் எழுதிய “சுதந்திரம் பற்றிய போலிப் பேச்சுகள்” என்ற கட்டுரையிலும் சந்தர்ப்பவாதத்தை நிராகரிக்க வேண்டியது பற்றிக் கூறுகிறார். “கம்யூனிஸ்ட் அகிலத்தின் போர்த்தந்திரங்களை ஆதரித்து” என்ற உரையிலும் (1921) கட்சி மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். அதாவது, பெரும்பான்மை தொழிலாளி வர்க்கத்தை வெல்லவேண்டும். இந்தப் பெரும்பான்மை வெல்லப்படாவிடில் சோசலிசத்தின் வெற்றி சாத்தியமில்லை எனக் குறிப்பிடுகிறார்.

இக்கருத்தையே “ஜெர்மன் கம்யூனிஸ்டுகளுக்கு எழுதிய கடிதத்”திலும் திரும்பக் கூறுகிறார்.

ஆக நமக்கான பணியானது ஆசான்கள் வகுத்துக் கொடுத்துள்ளனர் அதனை புரிந்து நமது நாட்டிற்கேற்ற வகையில் பங்காற்ற வேண்டியவர்கள் பாட்டாளி வர்க்க கட்சியை புரட்சியில் ஈடுபடுத்த உடன்படுபவர்களின் பணியே.- சிபி.

மூலம்:- மார்க்சிய மூலநூல்களுக்கு வாசகர் வழிகாட்டி ஆசிரியர் மாரிஸ் கார்ன் ஃபோர்த் அவர்களுக்கு நன்றி உரித்தாகுக.

மார்க்சிய மூலநூல்களுக்கு வாசகர் வழிகாட்டி எனும் நூல் PDF வடிவில் இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளலாம்

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்