இதுவரை நடந்த ஆணவ படுகொலை பற்றி சற்று தேடுவோம்!

 ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணின் இடம் என்னவென்று நான் சொல்ல தேவையில்லை! அவை  தெரிந்துக் கொள்ள சற்று சமூக விஞ்ஞானம் அவசியம்

ஆணுக்கு பெண் அடிமையான பொழுதிலிருந்தே அவள் இச்சமூகதில் அடிமையாக வாழ்கிறாள். அதனைதான் மார்க்சிய ஆசான் எங்கெல்ஸ், "உடமை சமூகத்தில் முதன் முதலில் பெண்தான் அடிமையாக்கப்பட்டாள்"(பார்க்க குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் நூலில்).
 இன்று பெண்ணுக்கானா விடுதலை என்பது இன்று ஏகாதிபத்திய காலகட்டத்தில் சற்று தளர்வு ஏற்பட்டுள்ளது அவை சமூக தேவையை ஒட்டியே; பெண் கல்வி கற்க வேலைக்கு செல்ல இவ்வாறு  நிலைமை சற்று மேம்பட்டாலும் அதே ஆணாதிக்க சிந்தனைதான் மேலோங்கியுள்ளது. அவை கௌரவம், மானம், மரியாதை எல்லாம் பெண்ணின் காலுக்கு இடையில் வைத்து பராமறிக்கிறது இந்த சமூகம். இதனை புரிந்துக் கொள்ள இந்தியா பாகிஸ்தான் பிரிவினை பொழுது கொல்லப்பட்ட பெண்களை பற்றி தேடுங்கள் புரிந்துக் கொள்ள எளிதாக இருக்கும் வரலாற்றில் பெண்ணை எப்படி வைத்திருந்தனர் வைதுள்ளனர் புரிந்துக் கொள்ள!  

மேலும், இங்கு அவள் என்ன செய்ய வேண்டும் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் யார் கூட பழக வேண்டும் என்பது சமூக அமைப்பான  ஆண் ஆதிக்கம்தான் தீர்மானிக்கிறது. இதில் அந்த குறிப்பிட்ட பெண் வீட்டார் மட்டுமல்ல இந்த சமூக அமைப்பின் நியதியாக இதனை கடைபிடிக்கும் பொழுது அந்த தனிமனிதர்களை தண்டிப்பதனால் தண்டனை தடுக்கப்பட்டு விடுமா? இந்த கேடுகெட்ட ஆணாதிக்க சமூகம் இல்லாதொழிக்க வேண்டி உள்ளது அதனை ஒழிப்பதை பற்றி பேசாமல் நல்ல வசதி படைத்த பையன் நல்ல சம்பளம் கல்யாணத்தில் என்ன பிரச்சினை என்று கேட்கும் சமூகத்தில் தனக்கான இடம் தேடும் மாறாநிலைவாதிகளே குறிப்பிட்டவர்கள் தான்வாழ மட்டும் நினைக்கும் இந்த கூட்டம் மற்றவர்கள் உழைத்து உழைத்து செத்துக் கொண்டிருக்கிறார்களே அவர்களை பற்றி என்ன சொல்கிறது? 

இந்த விடயத்தில் அந்த பையனின் அப்பா சொல்லும்வாதம் சரியாக படலாம்,  சுர்ஜித் குடும்பத்தின் வெறிச்செயலை விட மோசமானது இல்லையா?.  கோவத்துல உன் மகளத்தானே வெட்டி இருக்கனும் ஊரான் வீட்டு புள்ளைய ஏன்டா வெட்டுறனு தானே அவரின் வாதம். இவை எவ்வகையிலும் தீர்வில்லை. 

நம் சமூக அமைப்பை ஒரு அங்குலம் கூட மாற்றமல் உள்ளதில் தேடும் வேலைதான் இவை.

அதனால் இதுவரை நடந்த ஆணவ படுகொலை பற்றி சற்று தேடுவோம்!

திவ்யா இளவரசன் திருமணம் அதற்கு பிறகான சம்பங்கள் முழுமையாக இந்த இணைப்பில்

கௌசல்யா சங்கர் காதல் திருமணத்தில் சங்கர் படுகொலை அதன் புரிதலை

2016இல் இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்தனர். சாதி மறுப்பு திருமணம் செய்ததுதான் இந்தக் கொலைக்கு காரணம் எனக் கூறும் கெளசல்யா, சாதியின் குருதிவெறிக்குப் பலியான சங்கரின் இழப்பு இன்றும் தன்னை வாட்டுவதாகக் கூறினார்.

சங்கர் கொல்லப்பட்ட வழக்கில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த எம். மணிகண்டன், எம்.மைக்கேல், பி செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், கல்லூரி மாணவர் பிரசன்ன குமார், மற்றொரு மணிகண்டன் என 11 பேரை உடுமலைப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் மீதான குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதால், அவர்கள் மூன்று பேரும் விடுவிக்கப்பட்டனர்.குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட எட்டு பேரில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி, கூலிப்படையைச் சேர்ந்த ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல், ஆகிய ஆறு பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அன்னலட்சுமி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து அரசுத் தரப்பும், தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
மூன்று ஆண்டுகள் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை, 2020இல் முடிவடைந்தது. இந்த வழக்கில், ஜூன் 22, 2020இல் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அப்போது, வழக்கின் முதன்மைக் குற்றவாளியான சின்னச்சாமியை குற்றவாளியாகக் கருத போதிய ஆதாரங்கள் இல்லை என விடுவித்த நீதிமன்றம், மற்றவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையையும், ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. 

எதிர்கட்சியாக இருந்தபோது, இந்த வழக்கில் எங்களுடன் துணை நிற்போம் எனக் கூறிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தற்போது முதல்வர் ஆனதும் எங்களைக் கைவிட்டுவிட்டார்,” என்றார் கெளசல்யா.

“மற்ற கட்சிகளைப் போல் அல்ல திமுக. சாதி மறுப்பு, சுயமரியாதை திருமணம் உள்ளிட்டவற்றை ஆதரித்த பாரம்பரியத்தில் இருந்து வந்த கட்சி, ஆணவக்கொலை வழக்குகளில் மெத்தனம் காட்டுவது கவலையாக உள்ளது.

எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றப்படும் எனக் கூறியிருந்தார். நாங்களும் அவரைச் சந்தித்து, அதற்கான சட்ட முன்வடிவத்தையும் கொடுத்து வந்தோம். ஆனால், இன்று வரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை,” என்றார் கதிர்.(நன்றி பிபிசி செய்தி பிரிவு 30 டிசம்பர் 2023)

கோகுல் ராஜ் 

இந்த வழக்கின் விவரத்தைப் பார்த்தால், கோகுல்ராஜ் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர், கல்லூரியில் தன்னுடன் படித்து வந்த வகுப்புத் தோழியுடன் நெருக்கமான நட்பில் இருந்துள்ளார். தனது செல்போன் பழுதடைந்ததாக அந்தப் பெண்ணிடம் அவர் கூறியுள்ளார். அதற்கு, `நான் பணம் கொடுக்கிறேன்' எனக் கூறி அந்தப் பெண் வரவழைத்துள்ளார். இதையடுத்து, சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து கோகுல்ராஜ் வந்தார். இந்தப் பெண்ணும் தனது சொந்த ஊரான பரமத்தி வேலூரில் இருந்து திருச்செங்கோடு பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது, 500 ரூபாய் தாள் இரண்டை அந்தப் பெண் கொடுத்துள்ளார். அங்கிருந்து திருச்செங்கோடு மலைக்கு சாமி கும்பிடுவதற்காக இருவரும் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, தீரன் சின்னமலை பேரவையைச் சேர்ந்த யுவராஜ் தனது ஆட்களுடன் அங்கு வந்துள்ளார்'' என்கிறார். கோகுல்ராஜுடன் சென்ற இளம்பெண் கொடுத்த புகாரின் காரணமாக சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ், தங்கதுரை, அருள் செந்தில், செல்வக்குமார், சிவக்குமார், அருண், சங்கர் உள்பட 17 பேரை நாமக்கல் போலீஸார் கைது செய்தனர்.

கோகுல்ராஜுடன் சென்ற அந்தப் பெண், அனைத்து வகைகளிலும் வழக்குக்கு உதவி செய்தார். காவல்துறையில் அந்தப் பெண் கொடுத்த புகாரின்பேரில்தான் வழக்கே பதிவு செய்யப்பட்டது. ஆனால், நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த காலகட்டத்தில் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று சிலர் மிரட்டியுள்ளனர். அவரும், `கோகுல்ராஜ் யார் என்றே தெரியாது' எனக் கூறிவிட்டார். இதனால் வழக்கிலும் சிக்கல் ஏற்பட்டது'' என்கிறார்.

தருமபுரி இலக்கியம்பட்டியில்  பிரபல பிரியாணி ஓட்டல் செயல்பட்டு வருகிறது. அந்த ஓட்டலில் கிரில் மாஸ்டராக பணிபுரிகிறார், அவர் தருமபுரி வி ஜெட்டி அள்ளியை சேர்ந்த முகமது ஆசிக் (25). அவரை 2024 ஜீலை 27 -ம் தேதி பணிபுரிந்துக் கொண்டிருந்த இடத்தில் வைத்துக் கொன்றுள்ளனர். டாக்டரான பட்டியல் இன சமூகத்தை சார்ந்த பெண்ணை காதலித்த குற்றதிற்காக கொல்லபட்டா முகமது ஆசிக் பெரிய பேசுபொருளாகவில்லை!?

முழு தகவலுக்கு இந்த பகுதியை அழுத்தி பாருங்கள்

இதுபோல் பல படுகொலைகளை நாம் பேசிக் கொண்டே போகலாம் இவை  ஏன் இவை சமூகத்தில் அரங்கேறுகிறது என்பதும் இதற்கான தீர்வையும் தேடாமல் பிரச்சினை பேசி என்ன பயன்?

ஆணவப்படுகொலை பற்றிய புரிதலுக்கு வர்க்க புரிதல் வேண்டும். இங்கே 1990 பின்னர் ஏற்பட்ட பல முரண்பாடுகள் சாதியின் ஆணிவேரையை அசைத்தது. அதுவரை கடைகோடியில் இருந்த பட்டியல் இன மக்களும் மற்ற பிற்படுத்தப்பட்ட மக்களும் கல்வி வேலைவாய்பின் பயனாய் சமூகத்தில் சிறிது உயர்ந்தனர். இவை எல்லோருக்கும் கிடைக்கவில்லை. அதில் உயரும் பொழுது சமூகத்தில் உள்ள சிக்கல்களை புரிந்துக் கொள்வதை விட தமக்கான இடம் தேடவும் இந்த அமைப்பில் தாங்கள் வாழ்வதற்கான அவர்களுக்கான அடைகளம் தேடுகின்றனர் அவைதான் சாதி சங்கங்கள் சாதி கட்சிகள்.

உண்மையில் இந்த சீழ்பிடித்துள்ள கேவலமான சமூக அமைப்பை மாற்றுவதற்கும் இதனை அனைத்து உழைக்கும் ஏழை எளிய மக்கள் வாழ்வதற்குரியதாக மாற்றுவதற்கு பதில் இதற்குள்ளே தனக்கான இடம்தேடி இதிலே சங்கமித்துவிடுகின்றனர். இந்த சாக்கடையான சாதி சமூகத்தில் சீர்திருத்தம் எனும் சந்தனம் பூசி அந்த சாக்கடையை கட்டிக்காக சிற்சில சலுகை சட்ட திருத்தம் மூலம் ஆளும் வர்க்கம் செய்வதை நம்பி அவையே உண்மையான மாற்றம் என்று நம்பி கெட்டோர் ஆன குட்டி முதலாளிய சிறு உடமை வர்க்கத்தின் பண்புகள்தான் இவை. ஆனால் ஆளும் வர்க்கம் தன் சுரண்டல் ஆதிக்கத்தை தொடர பல சமூக முரண்பாடுகளுக்கு கூர் தீட்டி மக்களிடையே இருக்கும் மங்கி போக வேண்டிய மத சாதிய பிற்போக்கு கருத்துக்களை முன் நிறுத்தி மதவாத சாதிவாத கட்சிகளை முன்னுக்கு கொண்டுவந்தது...

குறிப்பாக தர்மபுரி பகுதியில் தோன்றிய வன்னியர் தலித் கட்சியின் ஆரம்ப நிலை ஆராய்ந்தால் புரிந்துகொள்ள முடியும். அதேபோல் தமிழகத்தில் தோன்றிய சாதிகட்சிகள் தமக்கு கொடுத்த வேலையை கட்சிதமாக முடித்து சாதிக்கொரு கட்சி ஊர்ஊருக்கு சாதி கட்சி இறுதியில் அந்த கட்சிகளின் அய்கியம் பெரிய ஆளும் கட்சியிடம் சமரசம் சன்மானம் சரண்டர்...
இங்கே சாதி கௌரவம் சாதி சண்டையை மூட்டும் சாதி கட்சிகள் ஒன்றாகி சங்கமிக்கும் இடம் உங்களுக்கு தெரியாதா? இங்கே யார் வெட்டி செத்தா என்ன அவன்களுக்கு ஓட்டு வேணும்... ஆம் சாதி ஓட்டு!!! சாதிகட்சி தலைவர்கள் வெள்ளைவெளேர் என்று வலம் வருகின்றனர் ஆனால் உழைக்கும் மக்கள் வாழவழியே இல்லாத அளவு போயும் இவர்களை புரிந்துக் கொள்ளவில்லை. இங்கே சாதி கட்சிகள் மக்களை விட இந்த அரசை காக்க பல்வேறு சாதி கட்சிகள் ஒன்று சேர்கிறதே அது எப்படி?

இங்கே ஆணவப்படுகொலை பற்றி புரிந்துக் கொள்ள சற்று சமூகத்தை புரிந்துக் கொள்ள வேண்டும். மேல்தட்டு மக்களுக்கு இந்த பிரச்சினை இல்லை ஆனால் குட்டிமுதலாளி வர்க்கமான சிறு உடமை வர்க்கதிற்குதான் இந்த பிரச்சினையே....

இந்திராவின் கணவர் யார்? ஏன் மதவாத கட்சியான பி.ஜே.பில் உள்ள முஸ்லீம் மந்திரிகள் யார்? ஆளும் வர்க்கமாய் உள்ள கட்சிகளில் மதம் கடந்து சாதி கடந்து திருமணம் உறவுகள் தொடர்வது போல் அதிகார வர்க்கமான IAS, IPS, மற்றும் செகரட்டரி போன்ற பதவிகளில் உள்ளவர்கள் சாதியே பார்க்காமல் எப்படி திருமணம் நடக்கிறது அதை விடுங்கள் இன்று MBBS மருத்துவர், பொறியாளர், இன்னும் உயர் சம்பளம் வாங்குவோர் மத்தியில் இவை இல்லையே ஏன்?

குட்டிமுதலாளித்துவ வர்க்கம்தான் சமூகத்தில் பெரும்பகுதியான வர்க்கம் அவர்களின் கண்ணோட்டம் சமூகத்தில் பிரதி பளிக்கிறது ஆளும் வர்க்கம் தன் தேவைக்கு இதனை இறுகப்பற்றிக் கொள்கிறது....

ஏற்ற தாழ்வில்லா சமூகம் மட்டுமே இதற்கு மாற்று அதற்கான பணி செய்யாமல் இருபது ஏமாற்றே!!!
விவாதிக்க வாருங்கள் தோழமைகளே
இவை வர்க்க அணி சேர்க்கையும் இந்த அமைப்புமுறையை தகர்பதன் ஊடாக இதற்கு தீர்வு காண முடியும் இதே அமைப்பை கட்டிகாப்போர் சட்டவாதம் பேசலாம் ....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்