தொடர்சியாக....
நக்சல்பாரியின் அனுபவம் என்னவாக இருந்தது? தேர்தல்கள் பற்றிய தீர்மாணத்தை மேற்காெள்வதற்கு ஓராண்டிற்கு முன்பாக சாரு மஜூம்தாரால் எழுதப்பட்டிருந்த “திரிபுவாதத்திற்கு எதிராகப் போராடுவதன் மூலமாக ஆயுதப் போராட்டத்தைக் கட்டியெழுப்புவாேம்” (அவருடைய எட்டு ஆவணங்களில் ஏழாவது ஆவணம்) என்ற ஆவணத்தில் கூறப்பட்டிருந்ததாவது:
“பொதுத் தேர்தல்களின் போது அதிருப்திக்கு உள்ளாகியிருக்கும் மக்கள், அரசியல் கருத்துக்களைத் தெரிந்து கொள்ள விரும்புவர். அவற்றை அறிந்தும் கொள்வர். வரவிருக்கின்ற தேர்தல்களை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாம் நமது அரசியலைப் பரப்ப வேண்டும். மக்கள் ஜனநாயகப் புரட்சி குறித்து நம்முடைய அரசியலை உழைக்கும் வர்க்கத்தின் தலைமையின் கீழ் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியாேர் இடையிலான கூட்டணி, ஆயுதப் போராட்டம் மற்றும் கட்சியின் தலைமையை நிறுவுவதற்கான அரசியல் ஆகியவற்றை நாம் துணிவுடன் மக்கள் முன் கொண்டு செல்ல வேண்டும். இந்த வாய்ப்பை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.”
ஆயுதந் தாங்கிய விவசாயிகள் புரட்சியின் பாதையைப் பின்பற்றுவதற்கு முடிவெடுத்திருந்த நக்சல்பாரிப் பகுதியைச் சார்ந்த புரட்சிகரத் தோழர்கள் தங்களுடைய அரசியலை மக்களிடையே பரப்புவதற்காக 1967-ன் தொடக்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள். முன்னர் கண்டது போல, சிலிகுரி துணை மண்டல விவசாயிகள் சங்கத்தின் தலைவரும் முன்னணி கம்யூனிஸ்ட் புரட்சியாளருமாகிய ஜங்கர் சந்தால் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பன்சிதேவா சட்டசபைத் தொகுதியில் நிறுத்தப்பட்டார்.
நக்சல்பாரிப் பகுதியைச் சார்ந்த கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் வாக்குகளைச் சேகரிப்பதற்காகத் தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்தவில்லை. மாறாக ஆயுதந்தாங்கிய விவசாயிகள் புரட்சியின் அரசியலைப் பரப்புவதற்காகவும், எதிர்வருகின்ற புரட்சிகரப் போராட்டத்திற்காக மக்களைத் தயார்படுத்துவதற்காகவும் அவற்றைப் பயன்படுத்தினார்கள். பரவலாக நடத்தப்பட்ட பிரச்சாரம் குந்தகம் விளைவிப்பதற்குப் பதிலாக உண்மையில் நக்சல்பாரி விவசாயிகள் கிளர்ச்சிக்கு உதவியது.
லெனின் போதனைகள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் படிப்பினைகள் மற்றும் நக்சல்பாரியின் சொந்த அனுபவம் ஆகியவை புறக்கணிக்கப்பட்டன, மேலும் வர்க்கப் போராட்டம், புரட்சி ஆகியவற்றின் எதிர்நிலையில் அமைந்துள்ள பாராளுமன்றப் பாதையிலிருந்து, புரட்சியின் குறிக்காேளுக்கு உதவுகின்ற வழிகளாகத் தேர்தல் பங்கேற்பைத் தெளிவாக வேறுபடுத்திப் பார்க்க நாம் தவறினாேம்.
இந்தக் கூட்டத்தில்தான் நமது தொழிற்சங்கப் பணி மீதான நீண்ட தீர்மானத்தை அகில இந்திய ஒருங்கினைப்புக் குழு மேற்காெண்டது. உழைக்கும் வர்க்கத்தின் முனையில், தொழிற்சங்கப் பணியினை விரிவுபடுத்துவதன் அவசியத்தையும், பொருளாதார வாதத்திற்கு எதிராகப் போராடுவதன் தேவையையும் இந்தக் கூட்டம் வலியுறுத்தியது. முதற்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்ததைப் போல, இந்தக் கூட்டத்திலும் தொழிற்சங்கங்கள் மூலமாக உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்களைக் கட்டியமைக்கும் பணிக்குச் சரியாகவே முக்கியத்துவம் வழங்கப்பட்டது.
மாசேதுங் சிந்தனையைப் பரவலாகக் கொண்டு செல்வது குறித்தும், புரட்சிகரக் கட்சி ஒன்றைக் கட்டியெழுப்பும் தேவை குறித்தும், முதலாளித்துவப் பின்புலம் கொண்ட இளைஞர்கள் மற்றும் மாணவர்களை, ஏழை மற்றும் நிலமற்ற விவசாயிகளுடன் ஒன்றிணைப்பது குறித்தும், கிராமப்புறப் பகுதிகளில் வர்க்கப் போரைத் தீவிரப்படுத்துவது குறித்தும், உழைக்கும் வர்க்கத்தினரின் போராட்டங்களை க் கட்டியமைப்பது குறித்தும் அந்த கூட்டத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் முடிவுற்ற பிறகு சாருமஜூம்தார் தான் சில சொற்களை சேர்க்க விரும்புவதாகக் கூறினார். பளபளப்பும் ஒப்பனையும் நிறைந்த மாபெரும் காட்சியாென்று நக்சல்பாரியில் விரைவில் அரங்கேறப் போகிறது என்று தனனுடைய வழக்கமான உற்சாகத்துடன் அவர் கூறினார். மேடை தயாராகி விட்டது. அது புதிய வரலாற்றை உருவாக்கும். அண்மையில் கோகன் மஜூம்தாரின் நூலைப் படிக்கும் வரையில் நான் இந்த மாபெரும் காட்சி குறித்து அறிந்திருக்கவில்லை.
கணுசன்யால், கோகன் மஜூம்தார் மற்றும் போராளி விவசாயிகள் நூறு பேர் மலைகளுக்கு சென்று ஒரு தேயிலைத் தோட்டத்திற்கு அருகில் உள்ள இடம் ஒன்றைத் தேர்வு செய்தார்கள். அங்கு கொரில்லாப் போர்ப் பயிற்சியை மேற்காெள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும், மலைகள் மற்றும் டெராய் பகுதியில் உள்ள காவல்துறை முகாம்களின் மீது தாக்குதல்கள் மேற்காெள்வதற்கும் அவர்கள் விரும்பினார்கள்.
அவர்கள் சில முகாம்கள் குறித்த தகவல்களையும் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் பட்டினி அவர்களை வாட்டியது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவர்களுக்கு உணவு வழங்கினார்கள். அவர்கள் காடுகளில் விளைந்த பொருட்களையே உணவாகக் கொண்டு காலம் கழித்தனர்.
24 நாட்களுக்குப் பிறகு உணவைக் கொண்டு வருவதற்காக கணுசன்யாலும் அவருடன் சேர்ந்து சில விவசாயிகளும் நக்சல்பாரிக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் நான்கு நாட்கள் கடந்த பின்பும் திரும்பவில்லை. ஆகவே மற்ற தோழர்களும் மலைகளிலிருந்து கீழே இறங்கி வந்துவிட்டனர். காட்சியும் நிறைவுற்றது.
மாசேதுங் கூறியது போல, “நாம் நமது மூளையைக் குளிர்வாகவும் சூடாகவும் வைக்க வேண்டும். இதுவும் ஒரு பொருளில் இருக்கும் இரண்டு எதிர்மறைகளாகும். பொங்கியெழும் உற்சாகம் என்பது மூளை சூடாவதைக் குறிக்கும். விஞ்ஞானப் பூர்வமாக ஆய்வது என்பது குளிர்ந்த நிலையில் மூளை உள்ளதைக் குறிக்கும்.”
சாருமஜூம்தாரிடத்திலும் எங்களிடத்திலும் சூடான மூளைக்குப் பஞ்சமில்லை. அது மாசேதுங் அறிவுறுத்தியதை விட மிக அதிகமாகவே எங்களிடம் இருந்தது. ஆனால் அவரிடத்திலும் எங்களிடத்திலும் குளிர்வான மூளூயின் பற்றாக்குறை இருந்தது.
தூல நிலைமைகள் குறித்த விஞ்ஞானப் பூர்வமான ஆய்வை சாருமஜூம்தார் மிக அரிதாகவே கடைபிடித்தார். கூடுதலான அளவிலாே அல்லது குறைந்த அளவிலாே நாங்களும் அவருடன் சேர்ந்து இந்த பண்புக் கூறைப் பகிர்ந்து கொண்டாேம்.
என்னால் நினைவு கூர முடிந்த வரையில், பஞ்சாபின் பிரதிநிதியாக ஒரு தோழர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஒரிசாவை யாரும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இந்தக் கூட்டத்தில்தான் நான் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டேன்.
நக்சல்பாரி முன்பும் பின்பும்....
………..தொடரும்…………
No comments:
Post a Comment