கம்யூனிஸ்ட்டுகள் என்பவர்கள் இங்கே எப்படி உள்ளனர் -48 இலக்கு இதழிலிருந்து

 கம்யூனிஸ்ட் என்பவர்களே கம்யூனிசம் அல்லாதவை பேசும் பொழுது - கம்யூனிஸ்ட் கட்சிகளே கம்யூனிச விரோத கருத்துகளை பேசியும் பரப்பியும் வரும் பொழுது எப்படி கம்யூனிசத்தின் நோக்கத்தை இங்கே நிறைவேற்ற போகின்றோம்?

மார்க்ஸ் முதல் மாவோ வரை மார்க்சியத்தின் வழியில் செயல்பட்டு உலகில் மார்க்சியத்தை நிலை நாட்ட பாடுபட்டனர். மார்க்சியம் வளரும் சூழ்நிலைக்கேற்ப லெனினியமாகவும் மாவோ சிந்தனையாகவும் வளர்ந்தது. ஆக மார்க்சிய ஆசான்களை தங்களின் ஆசான்களாக ஏற்பவர்கள் மட்டுமே உண்மையாலும் மார்க்சியத்தை நடைமுறைக்கான தத்துவமாக ஏற்று நடக்கும் சித்தியுள்ளவர்கள் இவர்களை ஏற்காதவர்கள் எப்படி மார்க்சியவாதியாக முடியும்.

இங்கே மார்க்சிய ஆசான்களை ஏற்காதவர்களும் மார்க்சியவாதி எனும் போர்வையில் வலம் வருகின்றனர் அவர்களின் நோக்கம் மார்க்சியத்தை வளர்பதற்கல்ல குழப்புவதற்கு.(இது ஒரு கூட்டம்)

அதேபோல் இன்னொரு கூட்டம் மார்க்சியம் போதாது அம்பேத்கார் பெரியார் போதனைகளை மார்க்சியத்தோடு கலக்க வேண்டும் என்கின்றனர். இவர்கள் கலைப்புவாதிகள். மார்க்சியம் சுரண்படும் மக்களுக்களின் விடுதலைக்கான தத்துவமெனும் பொழுது உலகில் உள்ள எல்லா ஒடுக்கபட்ட மக்களின் விடுதலையை பேசும் ஒரே தத்துவம் மார்க்சியம். ஆனால் அம்பேத்கார் பெரியார் போதனைகள் உள்ள அமைப்புமுறைக்குள்ளே சில சீர்திருத்தங்களை செய்து அதற்குள்ளே தகவமைத்துக் கொள்ள சொல்கிறது. அப்படியெனும் பொழுது ஒரு சிலர் வாழ வெகுபலர் வாட உள்ள அமைப்புமுறை தொடர ஆளும் வர்க்க சித்தாந்தம் எப்படி அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டுள்ள மக்களின் விடுதலைக்கு வழிகாட்டும்?

மேலும் சில போக்குகள்

அரசு பற்றி லெனின் சொன்னதை மறுத்து புரட்சி போதனையான லெனினியத்தை கைவிட்டுவிட்டு மார்க்சிய ஆசான்கள் சொன்ன வர்க்கபோராட்டம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறந்துவிட்டு; ஒடுக்கும் அரசின் ஏவளாலியாக, அதன் தொங்குசதையாக மாறியுள்ளவர்கள் கம்யூனிஸ்ட்டுகளா? மார்க்சிய ஆசான் லெனின் சொன்னதையோ மார்க்சியத்தையோ கடைபிடிக்காத இவர்கள் அன்றைய ஐரோப்பிய வகைப்பட்ட பொருளாதார போராட்டம் மட்டுமே நடத்தும் தொழிற்சங்கத்தினை வழி நடத்திக் கொண்டிருப்பவர்கள் தங்களின் நடைமுறை பணியாக பாராளுமன்றத்தில் பங்கு பெருவதும் வெற்றி பெருவதுமாக இருக்கும் பொழுது. இவர்களின் கடந்தகால மற்றும் தற்கால பணி என்பது உள்ள ஆட்சிமுறைகுள்ளே தங்களுக்கான இடத்தை தேடுவதுதான். இதில் உழைக்கும் மக்கள் விடுதலை பற்றி எந்த திட்டமும் இல்லை எனலாம்.

ஆனால் கட்சி மட்டும் கம்யூனிஸ்ட் கட்சி எப்படி அவை உழைக்கும் மக்களின் விடுதலைக்கு பாடுபடாத பொழுது அந்த பெயர் எதற்கு?

சிலர் கூக்குரலிடுகிறார்கள் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் இதை செய்து விடுவான் அதை செய்து விடுவான் என்று ஆனால் நீங்கள் மக்கள் சக்தியை ஒன்றிணைக்காமல் பல்வேறு போக்கில் மேயவிட்டுள்ள போது அவன் எல்லாம் செய்வான்...

உழைக்கும் மக்கள் அவர்களின் பிரச்சினையை தீர்க்க வழி சொல்லி எதிரியை காட்டுவதோடு எதிரியின் நோக்கம் பலம் என்னவென்பதனையும் எதிரியை இந்த அரங்கத்திலிருந்து விரட்டி அடிக்க வெறும் தேர்தலால் மட்டுமே சாத்தியம் இல்லை இந்த அரசியல் அதிகாரம் உழைக்கும் மக்களுக்கு வேண்டும் என்பதனை இதுவரை செயல்பாட்டில் இறங்கியுள்ளீர்களா?இதற்கான முயற்சியில் கட்சி இறங்கியுள்ளது நடைமுறை என்று சொல்லுபவை எதற்கான நடைமுறை சொல்ல முடியுமா?

கம்யூனிஸ்டுகளின் பணி இந்த ஒடுக்குமுறைக்கான வர்க்க சமூகத்தை தூக்கியெறிந்து உழைக்கும் மக்களுக்கான அதிகாரம் படைத்த அரசமைப்பை உருவாக்குவதுதான் என்றனர் நமது ஆசான்கள்- கம்யூனிஸ்ட் கட்சிகள் இங்கே என்ன செய்துக் கொண்டுள்ளது?

நடைமுறைக்கும் நமது இடதுசாரிகளின் கடந்தகால இன்றைய நடைமுறை பற்றி ஓர் தேடல்...

வரலாற்று பக்கங்களை நமக்கான வற்றை தேடுவதல்ல சமுதாய வளர்ச்சி விதிகளை கற்றறிய சமூகத்தை கற்றறிவது போலவே கடந்தகால நிகழ்வுகளின் அடிப்படையில் சரி தவறுக்கான பாடத்தை நாம் கற்றல் அவசியம். ஆக இந்திய இடதுசாரிகளுக்கு இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமையோடு அவர்களின் நடைமுறை பணியினையும் புரிந்துக் கொள்ள முடியும் தோழர்களே.

தஞ்சை பகுதியில் மட்டுமல்ல நாட்டில் பேசப்படும் தெலுங்கான ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நட்த்தியவர்கள் யார்?ஆன்று கப்பல்படை புரட்சிக்கும் பல்வேறு ஆங்கிலேய எதிர்ப்பு போராட்டங்களுக்கு வித்திட்டவர்கள் இவர்களே ஆனால் அதே தலைமை இந்த உழைக்கும் மக்களை கைவிட்டுவிட்டு ஆளும் வர்க்கத்தின் பின்னால் அணி சேர்ந்த பின்னர் திருத்தல்வாத நிலைப்பாட்டை கையில் எடுத்தது ஆனால் இவையும் அன்று ஒரு புரட்சிக்கான கட்சியாக உதித்ததுதானே. பார்க்க(letters of the new central committee to all party members and SYMPATHIZERS in Rao (Ed), pp 644). ஆனால் இன்று ஆளும் வர்க்கத்தின் தொங்குசதையாக மாறி நிற்கிறது.

CPM மக்கள் மத்தியில் பணியாற்றவில்லையா? CPIயிலிருந்து வெளியேறியவர்கள்தானே இவர்கள். இவர்களின் ஆவணங்கள் சற்று பாருங்கள்.(SUNDARAYYAPEASANT MOVEMENT IN INDIA 1920-1950 PAGE 198).(112) தங்கள் கட்சி திட்டத்தின் 113 வது பிரிவு மக்கள் ஜன்நாயகத்தை நிறுவுவதற்கும் சோசலிச மாற்றத்தை அடைவதற்கும் போராடுவோம் என்றனர் ஆனால் இவையெல்லாம் தன் அணிகளை மயக்கதான் பேசப்பட்ட வீரவசனங்கள் என்பது விரைவிலே அம்பலமாகியது.

அன்றைய உள்துறை அமைச்சரை நந்தாவை சந்தித்த சுந்தரய்யா மக்கள் ஜன்நாயக புரட்சி என்ற முழக்கம் மட்டுமே வைத்துள்ளோம், சட்டரீதியாகவும் வெளிப்படையாகவும்தான் செயல்படும் தெலுங்கான போன்ற போராட்டம் தலைமறைவு இருக்காது என்று உறுதி அளித்தார். விரைவிலே குருசேவிய திருத்தல்வாத்தை பின்பற்றி ஆளும் வர்க்கத்தின் பின் அணி சேர்ந்துக் கொண்டது.

CPML மக்கள் மத்தியில் பணியாற்றவில்லையா? CPMயிலிருந்து வெளியேறியவர்கள்தானே இவர்கள். இவர்களின் ஆவணங்கள் சற்று பாருங்கள்.

தெலுங்கான போராட்டம் சோசலிசத்தை படைபதற்கான வழி பாராமன்றதிற்குள் அல்ல வன்முறை புரட்சியின் மூலம் மட்டுமே இந்த அடக்குமுறை ஒடுக்குமுறைக்கு முடிவு கட்ட முடியும் என்று தொடங்கிய கட்சி அதன் திட்டம் புரட்சிதான் என்றாலும் நடைமுறையில் இந்திய சமூக வடிவத்தை கணக்கில் கொள்வதில் ஏற்பட்ட சறுக்கல் எதிரிக்கு ஏற்பட வேண்டிய இழப்பை விட கட்சிக்குதான் ஏற்பட்டது.இன்றுள்ள பல போக்குகளுக்கு காரணம் அங்கிருந்துதான் தேட வேண்டும்.

இவ்வாறு இவர்களின் நடைமுறையை பரிசீலிக்கும் பொழுது நமக்கு புலப்படுவது நூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிபிஐ ஆகட்டும் 60 ஆண்டுகளுக்கு முன்தோன்றிய சி பி எம் ஆகட்டும் 50 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிபிஐஎம்எல் ஆகட்டும் இன்று அவர்களின் நடைமுறை திட்டத்தில் தோல்வி கண்டு உள்ளார்கள்தானே?

1925 ல் தோன்றி இ.க.க இருந்து அதற்கு பின் தோன்றிய CPMமும் ஏன் CPI(ML) ஏன் அதற்கான இலக்கை அடையாவில்லை?

அப்படி என்னும் பொழுது அவர்களோடு நடைமுறையில் ஏதோ சிக்கல்தான் உள்ளது.

100 ஆண்டுகள் 60 ஆண்டுகள் 50 ஆண்டுகள் ஆகியும் அவர்களின் ஏற்பட்ட தோல்வியை அவர்கள் மறுபரிசீலனை செய்தார்களா அந்தத் தோல்விக்கான பாடத்தில் இருந்து அவர்கள் என்ன மாறி உள்ளார்கள் ???

ஒவ்வொரு செயலையும் நடைமுறைப்படுத்துவதற்கு அவர்களுக்கான ஒரு திட்டம் தேவைப்படுகிறது அந்தத் திட்டத்தின் தோல்வி தான் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது அப்படி என்னும் பொழுது அந்த திட்டத்தில் எப்படி தோல்வி அடைந்தார்கள்?

அவர்கள் பரிசீலிக்க தயாரில்லாமல் அதே ஒருபக்கம் பாராளுமன்றம் மூலம் சமாதான வழியில் சோசலிசத்தை நிர்மாணித்து விடலாம் என்ற மார்க்சியம் அல்லாத காவுத்ஸ்கிய குருசேவிய பாணியிலான நடைமுறை இது ஆபத்தில்லாது. ஆளும் வர்க்கத்துடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டே அவர்கள் இவர்களுக்கான வழிவிடும் வரை காத்திருந்து அடிமைகளாக வாழ சொல்லும் தந்திரம்தான் CPI CPM மற்றும் இன்று தேர்தலில் லாவணிபாடும் CPI(ML) தேர்தல்பாதையை ஏற்பவர்களின் நடைமுறையாக உள்ளது. மற்றோரு பகுதியினர் உள்ளனர் அவர்களை பற்றி சற்று தெரிந்துக் கொள்வதைவிட இன்றுள்ள நிலைகளை விவாதிப்போம்.

நாம் புரிந்துக் கொள்ள இன்று இந்திய சமூகத்தில் எது சரியான திட்டமாக இருக்கும் அதற்கான ஆய்வையும் அதற்கான புரிதலையும் ஏற்படுத்தாமல் திடீரென்று நடைமுறை என்பது எவ்வகையில் சரியாக இருக்கும். தோல்விகளின் படிப்பினைகளும் நமது ஆசான்களின் வழிகாட்டுதலையும் புரிந்து செயல்பட முதலில் ஆய்வை செய்து அதனை நடைமுறையில் காண்போம்... தோழர்களே

மார்க்சியத்தை வளர்க்க வேண்டியவர்கள், அதனை வளர்க்கும் கடமையைச் செய்யத்தவறியதால்தான் மார்க்சியம் இங்கு வளரவில்லை. ரஷ்யாவிலும் சீனாவிலும் மார்க்சியத்தை எப்படி வளர்த்தார்கள் என்ற அனுபத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ளத் தவறியதால்தான் இங்கு மார்க்சியம் வளரவில்லை. மார்க்சியத்தை பிரச்சாரம் செய்பவர்களைப் பார்த்து நடைமுறை நடைமுறை என்று கூச்சலிடுபவர்களால்தான் இங்கு மார்க்சியம் வளரவில்லை. மார்க்சியம் என்றால் என்ன? என்றே புரியாததால்தான் இங்கே மார்க்சியம் வளரவில்லை. மார்க்சிய ஆசான்களது போதனைகளையே திருத்தி பிரச்சாரம் செய்பவர்களை எதிர்த்துப் போராடி மார்க்சியத்திற்கு எதிரான கருத்துக்களை முறியடிப்பதற்கான முயற்சி இல்லாததால்தான் இங்கு மார்க்சியம் வளரவில்லை. ரஷ்யாவிலும் சீனாவிலும் மார்க்சியத்தை கற்றுக்கொடுக்க கம்யூனிஸ்டுகள் பள்ளிகளை நடத்தினார்கள். ஆனால் இங்கு மார்க்சியத்தை கற்றுக்கொடுக்க பள்ளிகளை நடத்த தவறினார்கள், அதனால் இங்கு மார்க்சியம் வளரவில்லை. மார்க்சியத்தை உலக மக்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்று தோழர் ஸ்டாலின் காலத்தில் மார்க்சிய நூல்களை பல மொழிகளில் மொழிபெயர்து உலக மக்களிடம் கொண்டு சேர்த்தது ஸ்டாலின் தலைமையிலான சோவியத்து அரசு. அதனை அணிகளுக்கு வழங்கி மார்க்சிய கல்வி வழங்கத் தவறியது இந்திய திருத்தல்வாததத் தலைமை, அதனால் இங்கு மார்க்சியத்துக்கு எதிராக திருத்தல்வாதமே வளர்ந்தது, மார்க்சியம் வளரவில்லை.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்