உழைக்கும் மக்களுக்கான தத்துவ கண்ணோட்டம், இயக்கவியல் பொருள்முதல்வாதமே- தேன்மொழி


 நமது நாட்டில் பல வண்ண அரசியல் கட்சிகள் உள்ளது. தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க, சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற பல கட்சிகள் இருந்தபோதும் இந்த கட்சிகள் அனைத்தும் பொதுவாக மக்களுக்காகப் பாடுபடுவதாகத்தான், சொல்கின்றன, இது உண்மையா? இல்லை என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

அ.தி.மு.க, தி.மு.க. ஆட்சியில் கடுமையான வெள்ளம் வந்தது, இந்த வெள்ளமானது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து வந்து மக்களுக்கு சேதத்தை கொடுக்கிறது. என்றாலும் இந்த அரசியல்வாதிகள் நிரந்தரமாக இந்தப் பிரச்சனையை தீர்க்கவில்லையே ஏன்? இவ்வாறு மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முயற்சி செய்யாதவர்கள் மக்களுக்கான அரசியல்வாதிகளாக எப்படி ஏற்பது? இவ்வாறு மக்களின் பிரச்சனைகளை இவர்கள் தீர்க்கவில்லை என்பது ஒரு பக்கம், மறுபக்கத்தில் புறம்போக்கு நிலங்களில் குடிசை போட்டு வாழும் மக்களை அவர்களின் வாழ்விடத்திலிருந்து விரட்டுகிறார்களே, மக்களின் பிரச்சனைகளை தீர்க்காதது மட்டுமல்ல, மக்களுக்கு வாழ்வில் பிரச்சனைகளையும் துண்பங்களையும் கொடுக்கிறார்களே, இவர்கள் மக்களுக்கான அரசியல்வாதிகளா? இல்லை என்பதுதான் உண்மையாகும். மேலும் இந்த அரசியல்வாதிகளில் ஏதாவது ஒரு கட்சிக்கு ஆதரவளித்து ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுக் கேட்டுவரும் சி.பி.ஐ, சி.பி.எம் கட்சியையும் மக்களுக்கான கட்சி என்று சொல்ல முடியுமா? இவர்களும் மக்களுக்கான அரசியல் கட்சியல்ல என்பதுதான் உண்மை ஆகும்.

காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகள் மத்தியில் ஆட்சி செய்து, இந்திய மக்கள் சந்திக்கும் எந்த பிரச்சனையாவது தீர்த்ததுண்டா? இல்லை என்பதே உண்மையாகும். இவர்களது ஆட்சியில்தான் வறுமை, வேலையில்லாத்திண்டாட்டம், நோய்வந்து,மக்களின் மரணம், விவசாயத்திற் காக வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து விவசாயிகளின் மரணம்.

ஏழை எளிய மாணவர்கள் பணம் இல்லாத காரணத்தால் உயர் கல்வி கற்க முடியாத நிலை, பணம் இல்லாததால் மருத்துவ வசதி கிடைக்காமல் பல ஏழைகளின் மரணங்கள். இத்தகைய கொடுமைகளிலிருந்து மக்களை மீட்டெடுக்க முயற்சி செய்யாத கட்சிகள் தான் காங்கிரசும், பா.ஜ.க.வும் என்பது உலகம் அறிந்த உண்மையாகும். அதே வேளையில் இவர்கள் அன்னியர்களான உலக வங்கி, ஐ.எம்.எப், போன்ற நிதி மூலதன முதலாளிகளிடம் கடனைப் பெற்று அவர்கள் போடும் உத்தரவுகளுக் கெல்லாம் கட்டுப் பட்டு, அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய நலத்திட்ட உதவி களை குறைப்பது, அரசில் ஒரு வேலை காலியாகும்போது அந்த காலியிடத்தை நிறப்புவதில்லை. புதிதாக வேலைக்கு ஆள் எடுக்கும் போது முன்புபோல் சுதந்திரமான ஊழியர் களாக அவர்களை வேலைக்கு எடுக்காமல், கூலி அடிமைகளாளகவே எவ்விதமான உரிமையும் கொடுக்காமல் பணிக்கு ஆள் எடுப்பது, இதுவரை நடத்திவந்த அரசுக் கல்லூரி களையும் அரசு மருத்துவ மனைகளையும் அரசு நடத்து வதை கைவிட்டுவிட்டு அதனை தனியார் கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்து இந்த கார்ப்பரேட் முதலாளிகள் கோடி கோடியாக கொள்ளையடித்து அவர்களின் சொத்துக்களை வளர்த்துக் கொள்ள வழி வகுத்து கொடுப்பதும். இதில் அன்னிய கார்ப்பரேட் முதலாளிகள் இந்தியா விலிருந்து கோடிகோடியாக கொள்ளை யடித்து அவர்களது நாட்டிற்கு கடத்திச் செல்வதற்கும் இவர்கள் துணை போகிறார்கள்.

சர்வதேச அளவில் பட்டினியால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த நிலை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இவ்வாறு மக்களுக்காக பாடுபடாமல் உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகப் பாடுபடுபவர்கள் மக்களுக்கான அரசியலவாதிகளா? இல்லை என்ற உண்மையை உழைக்கும் மக்கள் உணர வேண்டும்.

நம்மை இதுவரை ஆண்ட, தற்போது ஆண்டு கொண்டிருக்கின்ற (காங்கிரஸ், பா.ஜ.க. வுக்கு) அரசியல்வாதிகளுக்கு மக்கள் என்றால், டாட்டா, பிர்லா, அதானி, அம்பானி, மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட்டுகளான பில்கேட்ஸ், போர்டு நிறுவன கார்ப்பரேட்டு முதலாளிகள்தான் மக்களாக எண்ணு கிறார்கள். இவர்களின் நலனுக் காகவே இந்த அரசியல்வாதிகள் பாடு படுகிறார்கள்.

இந்த அரசியல்வாதிகளால் உருவாக்கப்படும் அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை, இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் அறிவுரை யின் பேரிலேயே உருவாக்கு கிறார்கள். உழைக்கும் மக்கள் எவ்விதமான கோரிக்கை களை வைத்தாலும் இந்த அரசியல் வாதிகளின் காதுகளுக்கு கேட்க்காது.

இந்த அரசியல்வாதிகளின் கொள்கையானது இந்த முதலாளிகளின் நலன்களையே அடிப்படையாகக் கொண்டதாகும். இவர்களால் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளுக்கு இவர்கள் கொண்டுள்ள தத்துவக் கண்ணோட்டமானது விஞ்ஞானத்திற்கு எதிரான, உண்மைக்கு எதிரான கருத்து முதல்வாதம் என்ற கண்ணோட்டமாகும்.

ஒருவர் ஏழையாக இருப்பதற்கு என்ன காரணம் என்று இவர்களிடம் கேட்டால், அது அவனது தலைவிதி என்று சமூகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு காரணத்தைச் சொல்லி மக்களை முட்டாளாக்கி அவர்களை சிந்திக்க விடாமல் குழப்புவார்கள். மேலும் ஒருவர் ஏழையாக இருப்பதற்கு அவர் உழைக்காமல் சோம்பேறியாக இருப்பதாகவும், ஊதாரியாக இருப்பதாகவும் காரணம் சொல்லி, உழைக்கும் மக்களை சோம் பேறியாகவும், ஊதாரியாகவும் பொய் சொல்லி உழைக்கும் மக்களை ஏமாற்றுவதை நாம் காணலாம்.

இதன் மூலம் இந்த அரசியல்வாதிகள் பொய் பேசி மக்களை ஏமாற்றுவதையே கொள்கையாகக் கொண்டிருப்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு மக்களை ஏமாற்று வதற்காகவே தலைவிதி தத்துவம் போன்ற கருத்துமுதலவாதக் கண்ணோட்டத்தை உழைக்கும் மக்களிடம் பரப்புகிறார்கள். ஆனால் இந்த கருத்துமுதல்வாத தத்துவ மானது உழைக்கும் மக்களுக் கானது அல்ல, மாறாக உழைக்கும் மக்களுக்கு எதிரான தத்துவம்தான் இந்த கருத்துமுதல்வாதம் ஆகும். இந்த உண்மையை உழைக்கும் மக்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த அரசியல்வாதிகள் உழைக்கும் மக்களை ஏமாற்ற முடியாத நிலையை நாம் உருவாக்க முடியும்.

கருத்துமுதல்வாதம் என்பது நம்மால் பார்க்க முடியாத, உணரவும் முடியாத, நமது எண்ண, மன ஓட்டங்களுக்கு உட்பட்ட, அதாவது நமது எண்ணங்களில் மட்டுமே இருக்கும் கடவுள், சொர்க்கம், நரகம், போன்ற கருத்துகளுக்கு உட்பட்டே நாம் வாழும் உலகம் உள்ளிட்ட இந்த பிரபஞ்சத்தின் தோற்றம் மற்றும் அதன் இயக்கமும் உள்ளது என்று சொல்வது கருத்துமுதல்வாதம் ஆகும்.

பொருள்கள் தனக்குத்தானே உருவாக்கிக் கொள்வதும், (மனிதன் அவனது குழந்தையை அவனே உருவாக்கிக் கொள்வதும்) தன்னைத் தானே மாற்றிக்கொள்வதும், அதாவது அந்தப் பொருட்களுக்கு இடையிலான இயக்கங்கள் மற்றும் ஆற்றல்கள் அனைத்தும் அந்தப் பொருட்களின் மூலமே நடக்கின்றன. (அந்த குழந்தை அது தானாக வளர்வதும்), பொருள்கள் தனே ஆக்கிக்கொண்டதைப் போல தானே அழித்துக்கொண்டும் தன்னை புதுப்பித்துக்கொள்ளும். (கோழி முட்டை தன்னைத்தானே அழித்துக்கொண்டு கோழி குஞ்சாக தன்னை புதுப்பித்துக் கொள்ளும்) இது போன்ற உண்மைகளை கருத்துமுதல்வாதம் ஏற்றுக்கொள்ளாது.

அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டது என்கின்றது கருத்துமுதல்வாத கண்ணோட்டம். அப்படியானால் கடவுளை படைத்தது யார் என்ற கேள்விக்கு கருத்து முதல்வாதத்தால் பதில் அளிக்க முடியாது. கடவுளை மட்டும் யாராலும் படைக்க முடியாது என்றும் கடவுள் மட்டும் தன்னைத்தானே படைத்துக்கொள்வார் என்கிறது கருத்து முதல்வாதம். அப்படியானால் ஒரு பொருள் தன்னைத்தானே படைத்துக்கொள்ளக் கூடாதா? (ஒரு விதையானது தன்னைத்தானே முளையாக மாற்றிக்கொள்கிறதே அது எப்படி) என்ற உண்மையான நிகழ்வை முன்வைத்து கேள்வி எழுப்பினால் கருத்துமுதல்வாதத்தால் பதிலளிக்க முடியாது.

இவ்வாறு கருத்துமுதல்வாதமானது அனைத்துப் பிரச்சனைகளுக்கும் இந்த சமூகத்திலிருந்தும் இயற்கையிலிருந்தும் காரணத்தை தேடாமல் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றிலிருந்து காரணத்தை தேடுவதால் அதனால் பிரச்சனைக்கு உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க முடியாது. ஆகவே கருத்துமுதல்வாத தத்துவ கண்ணோட்டமானது பொய் சொல்லியே வாழ்கிறது. மக்களிடமுள்ள அறியாமையைப் பயன்படுத்தி இந்த பொய்களை உண்மை என்று மக்களை நம்ப வைக்கிறது.

அதற்கு இந்த பொய்யான தத்துவ கண்ணோட்டமானது சுரண்டும் வர்க்கங் களுக்கு சாதகமாக இருப்பதால் ஆட்சியி லிருக்கும் ஆட்சியாளர்களும் அவர்களை சார்ந்தவர்களும் இந்த தத்துவக் கண்ணோட்டத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வதால் மக்கள் இந்த கருத்துமுதல்வாத தத்துவக் கண்ணோட்டத்தை ஏற்றுக் கொள்கிறார்கள், ஆதரிக்கிறார்கள்.

கடந்த காலங்களில் உலகில் பல நாடுகளில் கருத்துமுதல்வாத தத்துவ கண்ணோட்டமே மக்களிடம் செல்வாக்கு படைத்த தத்துவ கண்ணோட்டமாக இருந்தது. பணம் படைத்த செல்வந்தர்களின் நலன் காக்கும் ஆட்சியாளர்கள் இந்த கருத்துமுதல்வாத தத்துவத்திற்கும், அத்தத்துவவாதிகளுக்கும் ஆதரவளித்தார்கள். ஆகவே இந்த தத்துவம் வளர்ச்சியடைந்தது. அதன் மூலம் உலகிலுள்ள உழைக்கும் மக்கள் ஏமாற்றப்பட்டு, சுரண்டும் வர்க்கங்களை நம்பினார்கள்,அவர்களின் தயவால்தான் மக்களால் வாழ முடியும் என்று கருதி சுரண்டும் வர்க்கங்களுக்கும் அதன் ஆட்சியாளர்களுக்கும் அடிமை களாக இருந்து சேவை செய்தார்கள். சுரண்டும் வர்க்கங்களும் மக்களின் அறியாமையை பயன்படுத்தி உழைக்கும் மக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பலன்களை பெருமளவு அபகரித்துக்கொண்டு உழைக்கும் மக்களுக்கு அவர்களின் அடிப்படை வாழ்க்கை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு கூட தேவையான கூலியை கொடுக்க மறுத்து மிகவும் குறைவான கூலியை கொடுத்து உழைக்கும் மக்களின் வாழ்க்கையை சூறை யாடினார்கள். சுரண்டும் வர்க்கங்களின் இந்த சுரண்டலையும், ஒடுக்கு முறைகளையும், எதிர்த்தும் உழைக்கும் மக்கள் போராடினார்கள், இன்றும்கூட அந்தப் போராட்டம் தொடர்கிறது. இத்தகைய உழைக்கும் மக்கள் படும் கொடுமைகளை பார்த்த தத்துவவாதிகள் சிலர், இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்டி, அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு என்ன வழி? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். இவ்வாறு உழைக்கும் மக்களுக்காக பாடுபட்ட தத்துவவாதிகள் சுரண்டும் வர்க்கங் களுக்கான தத்துவ கண்ணோட்டமான கருத்துமுதல்வாத தத்துமானது தவறானது, அது எதார்த்தமானது அல்ல, உண்மைக்கு மாறானது என்பதை விளக்கி இதற்கு நேர் எதிரான தத்துவமாகிய பொருள்முதல்வாத தத்துவத்தைப் படைத்தனர்.

நம்மால் பார்க்கவும் உணரவும் முடிகிற இந்த இயற்கையானது, அதாவது இந்த உலகம், சூரியன், சந்திரன் உள்ளிட்ட இந்த பிரபஞ்ஞமானது, அவைகள் அனைத்தும் தானாகவே உருவாகி, இந்த இயற்கையில் ஏற்படும் மாற்றங்களை எல்லாம் அந்த பொருட்களுக்குள் இயல்பாக உள்ள ஆற்றல்களின் மூலம் தானாகவே நடைபெறுகிறது. இயற்கையில் ஏற்படும் மாற்றங்களுக்கு எவ்வகையான புற சக்தியும் தேவை யில்லை என்பதை விஞ்ஞானங்கள்நிருபித்துள்ளன. இந்த விஞ்ஞான முடிவுகளிலிருந்தே பொருள்முதல்வாதத் தத்துவம் தோன்றியது. பொருள்முதல்வாத தத்துவமானது எப்போதும் விஞ்ஞான உண்மையை ஏற்றுக்கொள்ளும், பொருள்முதல்வாத தத்துவ கண்ணோட் டத்துக்கு விஞ்ஞான உண்மைகளே அடிப்படையாகும். ஆகவேதான் பொருள் முதல்வாத தத்துவ வாதிகள் நடைமுறை உண்மையை மட்டுமே ஏற்றுக் கொள்கிறார்கள். இதற்கு மாறாக கற்பனை களை மட்டும் நம்பும் கருத்து முதல்வாதிகளை எதிர்த்துப் போரிடுகிறார்கள். ஆகவே பொருள்முதல்வாதிகள் உழைக்கும் மக்களின் ஏழ்மைக்கு காரணம் இயற்கைக்கு அப்பாற்பட்ட கடவுளை காரணமாகக் காட்டும் கருத்துமுதல்வாத தத்துவ கண்ணோட் டத்திற்கு மாறாக உழைக்கும் மக்களின் ஏழ்மைக்கு காரணம் சுரண்டும் வர்க்கங் களான முதலாளிகள் மற்றும் பண்ணை யார்கள் போன்றவர்களின் உழைப்புச் சுரண்டல்தான் காரணம் என்று உண்மையை விளக்குகிறார்கள். அந்த வகையில் பொருள் முதல்வாத தத்துவ வாதிகள் உழைக்கும் வர்க்கங்களின் நலனுக்காக இந்த தத்துவத்தை படைத்து வளர்த்தார்கள். அந்த வகையில் பொருள் முதல்வாதம் என்பது உழைக்கும் மக்களுக்கான தத்துவ கண்ணோட்டமாகும் என்பதை உழைக்கும் மக்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

கருத்துமுதல்வாத தத்துவத்திற்கும் பொருள் முதல்வாத தத்துவத்திற்கும் இடையில் நடந்த போராட்டங்களே தத்துவ வரலாற்றின் அடிப்படையாகும். இந்த தத்துப் போராட்ட வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டியது உழைக்கும் மக்களின் கடமையாகும். குறிப்பாக உழைக்கும் மக்களுக்காகப் பாடுபடும் கம்யூனிஸ்டுகளின் கடமையாகும். உலகத்தில் நடந்த வர்க்கப் போராட்ட வரலாற்றிற்கும், தத்துவப் போராட்ட வரலாற்றிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்தபோது தத்துவப் போராட்டமும் தீவிரமடைந்தது. வர்க்கப் போராட்டத்தின் காரணமாகவே உலகில் முதலாளித்துவ உற்பத்திமுறை உருவாகி முதலாளித்துவ சமூகம் உருவானது. தத்துவப் போராட்ட வரலாற்றில் இந்தமுதலாளித்துவ சமூகம் உருவான காலத்தில்தான் தத்துவப் போராட்டத் திற்குள் காரல்மார்க்சும், எங்கெல்சும் அடியெடுத்து வைக்கிறார்கள். முதலாளித்துவ சமூகத்தில் வளர்ச்சி யடைந்த விஞ்ஞான உண்மைகளை மார்க்சும், எங்கெல்சும் அவர்களால் உருவாக்கப்படும் தத்துவத்திற்கு அடிப்படையாக எடுத்துக்கொண்டும், அந்த விஞ்ஞான உண்மைகளைப் பயன்படுத்திக் கொண்டும் தத்துவ வரலாற்றில் ஒரு புரட்சிகரமான தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவ கண்ணோட்டத்தை உருவாக்குகிறார்கள். மேலும் இந்த கண்ணோட்டத்தை மனித சமூகத்தை புரிந்துகொண்டு, ஆய்வு செய்து சமூகத்தை மாற்றியமைப்பதற்கு வழிகாட்டும் தத்துவமான வரலாற்றுப் பொருள்முதல்வாத தத்துவத்தையும் படைத்தார்கள்.

இந்த தத்துவக் கண்ணோட்டத்தை அவர்கள் படைத்த பின்பு உலகிலுள்ள தொழிலாளர் வர்க்க அமைப்புகளில் உற்சாகம் ஏற்பட்டது. உலகிலுள்ள தொழிலாளர்களின் வர்க்க அமைப்பு களில் இந்த தத்துவமே விவாதப் பொருளானது. உலகெங்கிலுமுள்ள தொழிலாளர் வர்க்கத் தலைவர்கள் இந்த தத்துவத்தை ஆழமாகப் படித்து புரிந்து கொண்டு தொழிலாளர்களை திரட்டிப் போராடினார்கள். உலகம் முழுவதிலும் இருந்த முதலாளிகள் இந்த போராட்டங் களை கண்டு அஞ்சி நடுங்கினர். அதுவரை கருத்துமுதல்வாத கண்ணோட் டத்தைப் பயன்படுத்தி உழைக்கும் மக்களை ஏமாற்றி சுரண்டி வந்தவர்கள் உழைக்கும் மக்களின் கைகளில் கிடைத்த பேராயுதமான இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவ கண்ணோட் டத்தை எப்படியாவது ஒழித்திட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்து வருகிறார்கள். அதற்காக உழைக்கும் மக்களுக்காக பாடுபட்ட அறிவுஜீவிகளை விலைகொடுத்து வாங்குகிறார்கள். அவர்களை கருங்காலிகளாகப் பயன்படுத்தி,மார்க்சிய கண்ணோட்டத்தை ஒழிக்க முயற்சி செய்கிறார்கள். ஆகவே உழைக்கும் மக்களும், கம்யூனிஸ்டுகளும் மார்க்சிய லெனினிய தத்துவமான இயக்கவியல் பொருள்முதல்வாத தத்துவத்தை ஆழமாகப் படிக்க வேண்டும். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சனை களையும் இந்த தத்துவ வெளிச்சத்தில் பார்க்கவும், புரிந்துகொள்ளவும், பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வழி முறையை கண்டுபிடிக்கவும் பயிற்சியைப் பெற வேண்டும். எந்த பிரச்சனையையும் கற்பனையாகப் பார்த்து முடிவு செய்யக் கூடாது. மாறாக புறநிலை எதார்த்தை பார்த்து அதனை ஆய்வு செய்துதான் முடிவெடுக்க வேண்டும். கருத்துமுதல்வாத தத்துவத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பொருள் முதல்வாதிகள் என்று சொல்லிக்கொண்டு கருத்துமுதல்வாத கருத்துகளை கொண்டு வந்து நம்மை ஏமாற்ற முயற்சிக்கும் கருங்காலி களை இனம்கண்டு கொள்ள இது பயன்படும்.

மார்க்சிய தத்துவத்தை உலகிலுள்ள தொழிலாளி வர்க்த்திற்கு பாடுபட்ட பலரும் கற்றிருந்தார்கள். எனினும் இந்த தத்துவத்தை மிகவும் ஆழமாகவும், மிகவும் தெளிவாகவும் கற்றிருந்தவர்கள், லெனின் தலைமையிலான ரஷ்ய கம்யூனிஸ்டுகளே முதன்மையானவர் களாக இருந்தார்கள். மேலும் இந்த தத்துவ கண்ணோட்டத்தின் அடிப்படையில் ரஷ்ய சமூகத்தை பார்த்து புரிந்துகொள்ளவும், ரஷ்ய சமூகத்தை மாற்றியமைக்க தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான முடிவெடுக்கும் திறனையும் அவர்கள் பயிற்சியின் மூலம் வளர்த்திருந்தார்கள். அதற்காக அவர்களுக்கு இடையிலான கருத்துகளை விவாதித்து ஒரு தெளிவான முடிவெடுப்பதற்கான பக்குவம் அவர்களிடம் இருந்தது. அவர்களிடம் நமது நாட்டில் இருப்பது போன்ற தனிமனித தாக்குதல் இல்லை. மாறாக அவர்களுக்கு இடையே கருத்தியல் மோதல்களே பிரதானமாக இருந்தது. ஆகவே ஆரோக்கியமான விவாதங் களின் மூலம் ஒரு ஒன்றுபட்ட கருத்தை வந்தடைந்தார்கள். இவ்வாறு கருத்தொற்று மைக்கு வர முடிந்ததற்கு அவர்களிடம் மார்க்சிய தத்துவ கண்ணோட்டத்தில் அவர்கள் வளர்ச்சி பெற்றிருந்ததே காரணமாகும். லெனினது கருத்துகளை தொழிலாளர்கள்ஏற்றுக்கொண்டதற்கு தொழிலாளர் களிடமிருந்த தத்துவ வளர்ச்சியே காரணமாகும். அன்றைய காலத்தில் மார்க்சிய தத்துவ அறிவு வளர்ச்சியில் தொழிலாளர்களும், அதன் தலைவர் களாகிய கம்யூனிஸ்டுகளும் வளர்ச்சிய அடைந்ததில் முதன்மையான நாடாக ரஷ்யா இருந்தது. அதன் காரணமாக மார்க்சிய தத்துவத்தை நடைமுறை படுத்தி முதன்முதலாக ஒரு தொழிலாளி வர்க்க அரசை ரஷ்ய கம்யூனிஸ்டுகளும் ரஷ்யாவிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்றுபட்டு உருவாக்கினார்கள். அதன் மூலம் மார்க்சிய தத்துவம் நடைமுறையில் உண்மையானது என்றும் இந்த தத்துவம்தான் புரட்சிகர மானது என்றும் நிருபிக்கப்பட்டது. மார்க்சிய தத்துவத்தை புரிந்துகொண்டு நடைமுறை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இந்த தத்துவ கண்ணோட்டத்தை பயன் படுத்தியவர்கள் அவர்களது லட்சியத்தில் வெற்றி பெற்றார்கள். இந்த தத்துவத்தை பயிலாமல் புறக்கணித்தவர்களும், இதனை படித்திருந்தாலும் அதனை தங்களது நடைமுறைப் பணிக்கு பயன்படுத்த தவறியவரகளும் தோல்வி யடைந்தார்கள். தொடர்ந்து தோல்வி களை சந்தித்துக் கொண்டு இருக்கிறார் கள். ஆகவேதான் இயக்கவியல் பொருள் முதல்வாதம் மற்றும் வரலாற்றியல் பொருள்முதல்வாத தத்துவத்தை உழைக்கும் மக்கள் கற்றுக்கொண்டு அதனை நடைமுறை பிரச்சனைகளில் முடிவெடுப்பதற்கு பயன்படுத்துவதற் கான பயிற்சி எடுக்க வேண்டும் என்று இலக்கு கருதுகிறது. ஆகவே இந்த மார்க்சிய தத்துவம் பற்றி நமது மார்க்சிய ஆசான்கள் சொன்னவற்றை எளிமையாக விளக்கி தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்று இலக்கு முடிவு செய்து, தொடர்ந்து மார்க்சிய கண்ணோட்டத்தை விளக்கி கட்டுரைகளை வெளியிடும் என்று அறிவித்துக் கொள்ளப் படுகிறது....தேன்மொழி …


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்