இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நாம் எப்படி பார்த்து, எப்படி மதிப்பீடு செய்வது?-தேன்மொழி

 
மக்களின் நலனை தனது லட்சியமாகக் கொண்ட மக்கள் அரசானது, அனைத்து மக்களுக்கும்,கல்வி மற்றும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதை தனது லட்சியமாகக் கொண்டிருக்கும்.

இத்தகைய லட்சியத்தை கொண்டிருப்பதோடு, அதற்காக திட்டமிட்டு செயல்படக் கூடியஅரசைத்தான் மக்களின் அரசு என்று சொல்ல முடியும்.

அனைத்து மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதை லட்சியமாகக்கொண்ட அரசாக இருந்தாலும், அந்த அரசினால் உடனடியாக அனைத்து மக்களுக்கும் கல்விமற்றும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது என்பது எதார்த்த நடைமுறைஉண்மையாகும். ஆகவே அத்தகைய மக்கள் அரசும் திட்டமிட்டு தொடர்ந்து அதற்காகசெயல்பட்டு கல்வி மற்றும் வேலை வாய்ப்யை சிறிது சிறிதாக ஏற்படுத்தி பல காலங்களுக்குப்பிறகுதான் அனைத்து மக்களுக்கும் முழுமையாக கல்வி, வேலை வாய்ப்பை வழங்க முடியும்.

இவ்வாறு சிறிது சிறிதாக கல்வி வேலை வாய்ப்பை மக்கள் அரசு ஏற்படுத்தும் போது,உருவாக்கப்பட்ட சிறிய அளவிலான கல்வி மற்றும் வேலைக்கான நிறுவனங்களில், அனைத்துமக்களுக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாத சூழலில், கல்வி, வேலை வாய்ப்பில் யாருக்குமுன்னுரிமை கொடுப்பது என்ற பிரச்சனை எழுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் இப்பிரச்சனையில் காலங்காலமாக சாதி அடிப்படையில் ஒடுக்கப்பட்டு கல்வி, வேலை வாய்ப்புமறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்என்ற முடிவைத்தான் மக்கள் அரசு எடுக்க வேண்டும். அதுதான் சமூக நீதியாகும். இதில்எவ்விதமான சந்தேகமும் வேண்டாம். அதே வேளையில் இந்த முன்னுரிமையானது மக்கள் அரசுதொடர்ந்து கல்வி, வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்காக திட்டமிட்டு செயல்பட்டு ஒரு கட்டத்தில்அனைத்து மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நிலையை அடையவேண்டும். அனைத்து மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பைஏற்படுத்திக் கொடுக்கும் வரைஒடுக்கப் பட்ட சாதியினருக்கு முன்னுரிமை கொடுக்கும் இட ஒதுக்கீட்டுக் கொள்கை தொடரவேண்டும். ஒரு அரசு மக்கள் நலன் காக்கும் மக்கள் அரசாக இருக்குமானால் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை இந்த கண்ணோட்டத் தில்தான்செயல்படுத்தும். மக்கள் அரசின் நீண்டகாலலட்சியம், அனைத்து மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பை வழங்குவது. அதன் குறுகியகால லட்சியம் அந்த அரசால் உருவாக்கப்படும் கல்வி, மற்றும் வேலைக்கான நிறுவனங்களில்ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பின்பற்றுவது. ஆகவே மக்கள் அரசானது குறுகியகால மற்றும் நீண்டகாலலட்சியங்களை செயல்படுத் தினால் மட்டுமே அது மக்கள் அரசாக இருக்க முடியும்.

லெனின், மற்றும் ஸ்டாலின் தலைமையிலான ரஷ்ய சோசலிச சோவியத் அரசானதுரஷ்யாவிலுள்ள அனைத்து மக்களையும் கல்வி அறிவு பெற்ற மக்களாக வளர்த்தது. அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த சாதனைகளின் மூலம் ரஷ்யசோசலிச சோவியத்து அரசானது ஓர் அரசானது அனைத்து மக்களுக்கும் கல்வி வேலை வாய்ப்பைஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்பதை நடைமுறையில் சாதித்துக் காட்டியது. இத்தகைய ரஷ்ய சோசலிச சோவியத்து அரசைத்தான் மக்கள் அரசு என்று சொல்வதற்கான தகுதி பெற்ற அரசாகும்.

ஆகவே இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நாம் பரிசீலித்து விவாதிக்கும்போது, இந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையை கொண்டுவந்து நடைமுறைப்படுத்தும் அரசையும், அதன்கொள்கைகளையும் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்.

இந்தியாவை ஆண்ட அரசுகளான,பிரிட்டீஷ் ஆட்சி தொடங்கி, பிரிட்டீஷார் வெளியேறிய பின்பு உருவான நேரு தலைமையிலான காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், ஆட்சிகளும், தற்போதைய பாரதிய ஜனதா கட்சி ஆட்சிவரை இவர்கள் அனைவரும் மக்களுக்கு எதிரானஆட்சியாளர் களாகவே இருந்தார்கள், இருக்கிறார்கள். என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இத்தகைய மக்களுக்கு எதிரான அரசுகள் தான் இடஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும்.

இரண்டாம் உலகப் போர் முடிந்தபோது கிழக்கு ஐரோப்பியாவிலுள்ள பல நாடுகளிலும், சீனாவிலும் நடந்துகொண்டிருந்த மக்களுக்கு எதிரான ஆட்சிகள் வீழ்த்தப்பட்டுகம்யூனிஸ்டு களின் ஆட்சி உருவானது. மேலும் ஏகாதிபத்தியவாதிகளின் சொந்த நாட்டில் உழைக்கும் வர்க்கங்கள் அந்த ஆட்சிக்கு எதிராக கம்யூனிச ஆட்சியை உருவாக்கப் போராடினார்கள். ஏகாதிபத்தியவாதிகளின் காலனி, அரைக்காலனி, புதிய காலனி நாடுகளில் தேசிய விடுதலைப் போராட்டங்கள் தீவிரமடைந்து கொண்டிருந்தது. இந்த சூழலில் உலகம் முழுவதும் கம்யூனிச நாடுகளாக மாறிவிடுமோ என்ற அச்சம் ஏகாதிபத்தியவாதிகளிடம் ஏற்பட்டது. மேலும் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட பல ஏகாதிபத்திய நாடுகள் அவர்களது மூலதனத்தை இழந்து நெருக்கடியிலிருந் தார்கள். அவர்களது நெருக்கடியிலிருந்து மீளவும்,கம்யூனிச அபாயத்திலிருந்து அவர்களை பாதுகாத்துக்கொள்ளவும் அதுவரை அவர்கள் பின்பற்றிய தனியார்மயக் கொள்கையை தற்காலிகமாக கைவிட்டுவிட்டு அரசு தலையிடும் கொள்கையான கீன்சிய பொருளாதாரக் கொள்கையை ஏகாதிபத்திய வாதிகள் அவர்களது நாடுகளிலும் அவர்களை சார்ந்து இருக்கும் காலனி நாடுகளிலும் பின்பற்றினார்கள்.

இந்தியாவிலும் ஆட்சியிலிருந்த புதிய காலனிய தாசர்களின் ஆட்சியிலும் இதே கொள்கை பின்பற்றப்பட்டது. அதன் காரணமாகவே நேருவின் ஆட்சியில் பல கல்வி நிலையங்களும், பொதுத்துறை தொழில் நிறுவனங்களும் துவங்கப்பட்டது. இதன் நோக்கம் அனைத்து மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதல்ல, மாறாக மக்கள் கம்யூனிஸ்டுகளின் பக்கம்போய்விடாமல்தடுப்பதற்கும், மக்கள் இவர்களது ஆட்சியை எதிர்த்து போராட விடாமல் திசை திருப்புவதற்கும், பெருமுதலாளி களும், அந்நிய நிதிமூலதன முதலாளிகள் அவர்களது மூலதன நெருக்கடியிலிருந்து மீண்டுவரவும் அரசு மூலதனத்தை முதலாளிகள் பயன்படுத்திக் கொள்வதற்காகவே கீன்சியப் பொருளாதாரக் கொள்கையை இந்த ஆட்சியாளர்கள்கடைபிடித்தார்கள். அப்போதுதான் ஒடுக்கப்பட்ட சாதி யினருக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கையான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பிரபலப்படுத்தி இந்த அரசை மக்களுக்கானஅரசாகக் காட்டி மக்களை இந்த அரசியல்வாதிகள் ஏமாற்றினார்கள்.

அதற்குப் பின்பு இந்த முதலாளிகள் நெருக்கடியிலிருந்த மீண்ட பின்பு உலகில் மூன்றில் ஒரு பகுதில் ஆட்சியிலிருந்த கம்யூனிச அரசுகள் வீழ்ந்த பிறகு, இந்த ஏகாதிபத்திய வாதிகளை தட்டிக்கேட்க்கவும், எதிர்த்துப் போராடவும் யாரும் இல்லாத சூழலில் இவர்கள் இதுவரை கடைபிடித்துவந்த கீன்சிய கொள்கையை கைவிட்டுவிட்டு, தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்றகொள்கையை முன்கொண்டுவந்து வெளிப்படையாகவே மக்களுக்கு எதிரான ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் அரசே கல்வி நிறுவனங்களை நடத்தும் கொள்கை கைவிடப்பட்டு, கல்வியை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டார்கள். ஆகவே இனிவரும் காலத்தில் மக்களுக்கு இலவசமாக கல்வி கொடுப்பதற்கு இந்த ஆட்சியாளரிடம் எதுவும்இருக்காது. ஆகவே இட ஒதுக்கீட்டின் மூலம் மக்களுக்கு கல்வி வாய்ப்பை இந்த ஆட்சியாளர்களால் ஏற்படுத்திக் கொடுக்க முடியாது. அதேபோல் பொதுத்துறை தொழில் நிறுவனங்களையும் தனியார் வசம் ஒப்படைத்துக்கொண்டு இருக்கிறார்கள் ஆகவே மக்களுக்குவேலை வாய்ப்பை வழங்கவும் இவர்களால் இனிமேல் முடியாது. ஆகவே மொத்தத்தில்இடஒதுக்கீட்டு கொள்கை என்பது பெயரளவில் மட்டுமே இருக்கும் நடைமுறை செயலில், அது இருக்காது. இத்தகைய மோசமான சூழலை ஏற்படுத்தியதற்கு காரணம் இந்த அரசானது மக்களின்நலனை லட்சியமாகக் கொண்ட மக்கள் அரசு அல்ல. மாறாக ஏகபோக முதலாளிகள் மற்றும்அந்நிய முதலாளிகளின் நலன் காக்கும் மக்கள் விரோத முதலாளிகள் அரசாக இருக்கின்றது.

பொதுவாக முதலாளிகள், குறிப்பாக கார்ப்பரேட் முதலாளிகள், தொழிலாளர் களுக்கு குறைந்தகூலியை கொடுத்து அதிக லாபம் பெறுவதையே விரும்புவார்கள். அதற்கு தொழிலாளர்களில் பலர் வேலையில்லாத வர்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலை தொழிலாளர்களிடையே ஏற்பட்டு, அவர்களுக்கு வேலை கிடைத்தால் போதும் கூலி எவ்வளவு குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று இந்த முதலாளிகளிடம் வேலைக்குச்சேருவார்கள். அதன் மூலம் முதலாளிகள் மிகமிக அதிக லாபத்தை அடைவார்கள். ஆகவே இந்த முதலாளிகள் அவர்களது நலன் காக்கும் அரசுகளை மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவிடாமல் தடுப்பார்கள். இந்த முதலாளித்துவ ஆட்சியாளர்களும் முதலாளிகளின் பேச்சைக் கேட்டு, மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டங்களை உருவாக்காமல் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரிப்பதற்கான வேலைகளை செய்வார்கள்.

ஆகவே நிலவுகின்ற முதலாளித்துவ ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பிரச்சனை ஒருபோதும் தீர்க்கப்பட மாட்டாது. அதாவது வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பிரச்சனைஎப்போதும் நிலவிக்கொண்டே இருக்கும்.

இதே போலவே மக்கள் அனைவரும் கல்வி அறிவு பெற்று எது சரி, எது தவறு என்று சிந்திக்கும் திறன் பெற்றவர்களாக வளருவதை இந்த முதலாளிகள் விரும்புவதில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் சிந்திக்கும் திறன் பெற்ற அறிவாளிகளாக மாறிவிட்டால், இந்த முதலாளிகளின் பொய்களையும், சூழ்ச்சி களையும் மக்கள் புரிந்துகொண்டு இந்த முதலாளிகளுக்கு எதிராகவும் அவர்களது ஆட்சிக்கு எதிராகவும் போராடுவார்கள் என்று இந்த முதலாளிகள் கருதுகிறார்கள்.மேலும் பெரும்பான்மையான மக்கள் மூடர்களாக இருந்தால்தான் அவர்களை ஏமாற்றி குறைந்தகூலி கொடுத்து அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என்றும் கருதுகிறார்கள். ஆகவே இந்த முதலாளிகள் பெரும்பான்மையான மக்களை கல்வி அறிவற்ற மூடர்களா கவே வைத்துக்கொள்ள விரும்பு கிறார்கள். ஆகவே முதலாளித்துவ நலன் காக்கும் இந்த ஆட்சியாளர்களை கட்டாயப்படுத்திமக்களுக்கு கல்வி வழங்கும் அரசின் கொள்கையை செயல்படுத்தவிடாமல் தடுக்கிறார்கள். அதேவேளையில் பணம் படைத்த செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதன் மூலம்,அவர்களைக் கொண்டு இந்த ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள்.

ஆகவேதான் அரசுக் கல்வி நிலையங்களை மூடுவதன் மூலம் ஏழைகளுக்கு கல்வி கற்க்கும் உரிமையை பறிக்கிறார்கள். அதே வேளையில் பணம் இருப்பவர்களுக்கு மட்டும் கல்வி கொள்கையை செயல்படுத்துகிறார்கள். மேலும் இந்த தனியார்மயக் கல்விக் கொள்கையின் மூலம் கல்வி நிறுவனங்களை நடதும் முதலாளிகள் கோடிகோடியாக கொள்ளையடித்துக்கொண்டு இருக்கி றார்கள். இந்த சூழலில் இட ஒதுக்கீட்டின் மூலம் ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு கல்விகொடுப்பதற்கான அனைத்து வாய்ப்புகளையும் இந்த அரசு இழந்துவிட்ட பின்பு, இந்த அரசு எங்கிருந்து ஒடுக்கப்பட மக்களுக்கு கல்வி கொடுக்க முடியும்? உழைக்கும் மக்களும் ஜனநாயகவாதிகளும் சிந்திக்க வேண்டும்.

பிரிட்டீஷார் நம்மை அடிமைப் படுத்துவதற்கு முன்பு இங்கு மன்னராட்சி, மற்றும் ஜமீந்தார்களின் ஆட்சி நடந்துவந்தது. அந்த ஆட்சிகளில் பார்ப்பனர்களும், சைவ வேளாளர்களும் அரசுப் பணிகளில் இருந்தனர். அவர்களின் பணி என்பது மன்னர்களின் நலனுக்காகவும் நிலவுடமையாளர்களின் நலனுக்காகவும் மக்களை அடக்கிஒடுக்கும் பணியாகவே இருந்தது அதன் மூலம் இந்த உயர்சாதியினர் செல்வாக்கோடு வளமான வாழ்க்கை வாழ்ந்தனர்.

பிரிட்டீஷார் நம்மை அடிமைப்படுத்திய பின்பு ஆரம்ப காலங்களில் அவர்களின் அரசில் பார்ப்பனர்கள் பங்குவகித்தார்கள். அதனால் உயர் சாதியினரான சைவ வேளாளர்கள் முன்பு இருந்த அரசு பதவிகளில் பங்குவகித்தல் என்ற நிலையை இழந்தனர். ஆகவே பிரிட்டீஷ் அரசுப் பதவிகளில் பார்ப்பனர்களுக்கு இணையாக தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று போராடிப் பெருவதற்காகவே பார்ப்பனர் அல்லாத இயக்கத்தை கட்டியமைத்தார்கள். அதனை சாதிப்பதற்காக உயர்சாதி சைவ வேளாளர்களோடு பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியனரையும் சேர்த்துக் கொண்டு இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முன்வைத்தார்கள். இதுதான் சமூக நீதி என்று சொல்லி நீதிக் கட்சியை கட்டியமைத்தார்கள். இந்த கொள்கையை பிரிட்டீஷ் ஆட்சியாளர்களும் ஏற்றுக்கொண்டனர், இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நீதிக் கட்சியினர் ஆட்சியை கைப்பற்றி நடைமுறைப்படுத்தினர். இதற்கு முன்பு சாதி மத அடிப்படையிலான வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையின் மூலம் சிறுபான்மை மதப் பிரிவினருக்கு சட்டமன்ற பதவிகளில் தனித் தொகுதி முறையை பிரிட்டீஷார் நடைமுறைப்படுத்தி வந்தனர். அதன் தொடர்ச்சிதான் இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கையாகும். இந்த கொள்கையை நடைமுறைப்படுத்தி ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்கு நன்மை செய்வது பிரிட்டீஷாரின் நோக்கம் அல்ல. மாறாக மக்களை சாதி மத அடிப்படையில் பிளவுபடுத்தி பிரித்தாளும் கொள்கையின் மூலம் இந்த நாட்டு மக்களை அடிமைப்படுத்தி ஆளுவதுதான் பிரிட்டீஷாரின் நோக்கமாகும். இத்தகைய பிரித்தாளும் கொள்கையின் மூலமே பிரிட்டீஷார் இந்தியாவை பல ஆண்டுகாலம் அடிமைப்படுத்தி ஆள முடிந்தது. பிரிட்டீஷாரின் பிரித்தாளும் கொள்கைக்கு துணைபோனவர்கள்தான் நீதிக்கட்சினர் ஆவார்கள். பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலிருந்தும் அதற்குப்பின்பும் அரசு ஆட்சி அதிகாரத்தில் பார்ப்பனர்களை ஒப்பிட்டு தங்களுக்கும் அதாவது பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கும் பங்கு வேண்டும் என்பதுதான் நீதிக் கட்சியின்

கொள்கையாகவும், நீதிக்கட்சியின் வாரிசுகளின் கொள்கையாகவும் இருந்தது,இருக்கிறது.

ஏகாதிபத்தியவாதிகளின் நலன் காக்க உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கு அரசு அதிகாரத்தில்பங்கு கேட்ப்பதுதான். நீதிக் கட்சி மற்றும் நீதிக்கட்சி வாரிசுகளின் கொள்கையாகும். இவர்கள்எப்போதும் நிலவுகின்ற அரசு ஆட்சியின் தன்மை பற்றியும், அதன் நோக்கம் முதலாளிகளின் நலனுக்காக உழைக்கும் மக்களை முதலாளிகள் சுரண்டுவதற்கும், ஒடுக்குவதற்கும் துணை போவதுதான் என்ற உண்மையைப் பற்றி பேச மாட்டார்கள். மாறாக இந்த அரசு இட ஒதுக்கீடு போன்ற சீர்திருத்தங்களை செய்து மக்களுக் காகவே பாடுபடுவதாக பொய் சொல்லி மக்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். எனினும் நீதிக் கடசியின் வாரிசுகளாக இருப்பவர்களில்

மக்களின் நலனில் ஆர்வம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். இட ஒதுக்கீட்டுக் கொள்கையானது ஒடுக் கப்பட்ட சாதி மக்களின் நலனுக்கானதா? அல்லது முதலாளிகளின் பிரித்தாளும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதா என்பதை நேர்மையான நீதிக்கட்சியின் வாரிசுகள் சிந்திக்க வேண்டும்.

நிலவுகின்ற கார்ப்பரேட் நலன் காக்கும் அரசிற்கு இட ஒதுக்கீட்டுக் கொள்கையை

நடைமுறைப்படுத்தி ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பைவழங்கும் நோக்கம் ஏதும் இல்லை. இந்த ஆட்சியாளர்களின் நோக்கமெல்லாம் உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களை பாதுகாப்பதே நோக்கமாகும். எனினும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை செயல்படுத்துவதாக நடித்துக்கொண்டே நடைமுறையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு மூடுவிழா நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் நிலவுகின்றமுதலாளித்துவ அரசின் வஞ்சக நாடகமாகும். இத்தகைய நாடகத்தை நடத்தி மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். மக்களும்இவர்களின் நாடகத்தை புரிந்துகொள்ளாமல், இந்த அரசையும், இந்த ஆட்சியை நடத்தும் தலைவர்களின் மீது நம்பிக்கை வைத்து ஏமாந்துகொண்டு இருக்கிறார்கள்.

இதே போலவே ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி பெரும்பான்மை மக்களின்வாக்குகளை பெற்று பெரும் பான்மையினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் இங்கு ஆட்சியை நடத்துகிறது என்று மக்களை நம்பவைத்து இது ஜனநாயகப் பூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட மக்களாட்சி என்று சொல்லி மக்களை நீண்டகாலமாக ஏமாற்றி வருகிறார்கள். ஆனால் நடைமுறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வரும் எந்த கட்சியும் ஆட்சிக்கு வரும் முன்பு அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவோம் என்று பல வாக்குறுதிகளை கொடுப்பார்கள், ஆனால் ஆட்சிக்குவந்தவுடன் இந்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்ற மாட்டார்கள். ஆனால் திரைமறைவில் முதலாளிகளுக்கு இவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள். உழைக்கும் மக்களுக்கு எதிராக போலீசை வைத்து மக்களின் மீது அடக்குமுறையை ஏவுவார்கள்.

உதாரணமாக குடிசை வாழ் மக்களை அவர்களது வாழ்விடத்திலிருந்து அப்புறப் படுத்துவது போன்றவைகளாகும். இவ்வாறுதான் பாராளுமன்ற ஜனநாயக ஆட்சி உலகெங்கிலும் நடக்கிறது, என்று சொல்லி இந்த பாராளுமன்ற ஆட்சிகளின் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்று கம்யூனிஸ்டுகள் மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று லெனின் சொன்னார். ஆனாலும் இந்த பாராளுமன்ற ஆட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்கும்வரை இந்த பாராளுமன்றத்தில் தேர்தல்கள் மூலம் கம்யூனிஸ்டுகள் பங்கு பெறவேண்டும் என்றும் லெனின் சொன்னார்.

இந்த பாராளுமன்றத்திற்குள்ளும் இந்த பாராளுமன்றத்தால் மக்களுக்கு எவ்விதமான நன்மையும் கிடைக்காது என்ற உண்மையை தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்யவேண்டும் என்றும், நடைமுறையில் இந்த பாராளுமன்றம் மக்களுக்கு எதிரானது என்ற உண்மையை மக்களுக்கு பாராளுமன்ற நடைமுறையின் மூலமும் கம்யூனிஸ்டுகள்மக்களுக்குபுரியவைக்க வேண்டும் என்றார் லெனின். மேலும் மக்கள் நடைமுறையில் இந்த பாராளுமன்றம் தங்களுக்கானது இல்லை என்று புரிந்துகொண்டால் ஒரு புரட்சியின் மூலம் இந்த பாராளுமன்ற ஆட்சி முறையை அகற்றிவிட்டு உண்மை யிலேயே மக்களுக்கு ஜனநாயத்தை வழங்கக் கூடிய ஓர் அரசமைப்பை மக்கள் உருவாக்குவார்கள் என்றார் லெனின். ஒரு சரியான கொள்கையையும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு மக்களின் வழியிலேயே சென்று மக்களுக்கு உண்மையை கம்யூனிஸ்டுகள் புரியவைக்க வேண்டும் என்பதே லெனின் கம்யூனிஸ்டுகளுக்கு காட்டும் வழியாகும். ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும், பாடுற மாட்டை பாடிக் கறக்கணும் என்பது நமது முன்னோர்களின் வழிகாட்டுதலாகும். இந்த வழிகாட்டுதலை பின்பற்றித்தான் மக்களுக்கு உண்மையை புரியவைக்க வேண்டும்.

பாராளுமன்ற ஆட்சிமுறையை அம்பலப் படுத்தி மக்களால் நடத்தப்படும் புரட்சியின் மூலம் எப்படி முடிவிற்கு கொண்டுவருவதற்காக கம்யூனிஸ்டுகள் என்ன முறையை கையாள வேண்டுமோ அதேமுறையிலேயே இந்த போலியான இட ஒதுக்கீட்டு முறையை அம்பலப் படுத்தி உண்மையான இட ஒதுக்கீட்டு முறையை எப்படி, எத்தகைய சூழலில் கொண்டுவர வேண்டும் என்ற உண்மையை மக்களுக்கு கம்யூனிஸ்டு கள் புரியவைக்க வேண்டும். அதற்காக இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஆதரிக்கின்ற ஜனநாயக சக்திகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த பாராளுமன்ற ஆட்சியானது மக்களை ஏமாற்றும் ஆட்சி முறை என்பதை கம்யூனிஸ்டுகள் புரிந்து வைத்துள்ளார்கள், ஆனால் இந்த உண்மை மக்களுக்கும், ஜனநாயக சக்திகளும் தெரிந்து கொள்ள வில்லையோ, அது போலவே நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டுக்கொள்கையானது மக்களைஏமாற்றுகின்ற போலியான கொள்கை என்பதை கம்யூனிஸ்டுகள் புரிந்து வைத்துள்ளார்கள், எனினும் மக்களும், ஜனநாயக சக்திகளும் இந்த உண்மையை

புரிந்துகொள்ளவில்லை. மேலும் இந்த இட ஒதுக்கீட்டுக் கொள்கை உண்மையானது என்று மக்களும், ஜனநாயக சக்திகளும் நம்புகிறார்கள். ஆகவே மக்களாலும் ஜனநாயக சக்திகளாலும் உண்மை என்று நம்பப்படும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முற்றிலும் புறக்கணித்து அதனை கைவிட வேண்டும் எனற கருத்தை கம்யூனிஸ்டுகள் மக்களிடம் முன்வைக்கக் கூடாது. மக்களின்

உணர்வுகளுக்கு மதிப்பளித்து இட ஒதுக்கீட்டுக் கொள்கையை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்க வேண்டும். அதே வேளையில் இந்த கொள்கையை ஆட்சியாளர்கள் உண்மையில் நடைமுறைப் படுத்தாமல் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்ற உண்மையை மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அரசுக் கல்வி நிலையங்களை மூடுவதன் மூலமும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதன் மூலமும் நிலவுகின்ற இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு மூடுவிழா நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே கம்யூனிஸ்டுகள் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பாதுகாப்பதற்கான போராட்டங் கள் நடத்துவதோடு கூடவே கல்வி நிலையங்களை தனியார் முதலாளிகள் நடத்துவதை கைவிட்டு தனியார் கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று மக்களைத் திரட்டிப் போராட வேண்டும். அப்போதுதான் இட ஒதுக்கீட்டுக்

கொள்கையின் மூலம் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கு கல்வியில் இடம் கிடைக்கும்.

அதுபோலவே பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்று போராட வேண்டும் அப்போதுதான் இட ஒதுக்கீட்டின் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். தொடர்ந்து புதிய கல்வி நிலையங்களையும், தொழில் நிலையங் களையும் அரசு உருவாக்கி நடத்திட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு தொடர்ந்து இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வியும் வேலைவாய்ப்பும் தொடர்ந்து கிடைக்கும். மேலும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பெருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும். தற்போதுள்ள இட ஒதுக்கீட்டுக்கொள்கையை பல ஆண்டுகள்நடைமுறைப் படுத்தியும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களில் மிகச் சிலரே பயனடைந்துள்ளனர். இந்த நிலை மாறி அனைத்து ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கும் கல்வி, மற்றும் வேலை வாய்ப்பில் இடம் கிடைக்க வேண்டுமானால் இந்த அரசானது தொடர்ந்து புதிய கல்வி நிலையங் களையும், புதிய தொழில் நிலையங் களையும் உருவாக்கி நடத்த வேண்டும். இந்த கோரிக்கையை முன்வைத்து உழைக்கும் மக்களைத் திரட்டி கம்யூனிஸ்டுகள் போராட வேண்டும். இந்த கொள்கையை நிலவுகின்ற முதலாளித்துவ அரசு நடைமுறைப் படுத்தாது என்று கம்யூனிஸ்டுகளுக்கும் ஜனநாயகவாதிகளுக்கும் நன்றாகவே தெரியும், எனினும் மக்களுக்கு இந்த உண்மையை புரிய வைப்பதற்காக இத்தகைய போராட்டங்களை நடத்த வேண்டும். அதன் மூலம் மக்கள் உண்மையைப் புரிந்துகொண்டால் இந்த மக்களுக்கு எதிரான அரசை அகற்றிவிட்டு உண்மையான மக்கள் அரசை உருவாக்குவார்கள்.

 அத்தகைய உண்மையான மக்கள் அரசுதான் தொடர்ந்து புதிய கல்வி நிலையங் களையும், தொழில் நிலையங்களையும் உருவாக்குவார்கள். அத்தகைய மக்களாட்சியில்தான் தற்காலிகமாக இடஒதுக்கீட்டுக் கொள்கையானது உண்மையில் நடைமுறையில் பின்பற்றப் படும். மேலும் அனைத்துமக்களுக்கும் கல்வி மற்றும் வேலை வாய்ப்பை ஒரு கட்டத்தில் ஏற்படுத்தி இட ஒதுக்கீட்டுக்கொள்கை இனி தேவையில்லை என்ற நிலையை அடைய முடியும்.

இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால், இட ஒதுக்கீட்டுக் கொள்கை பற்றி இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்கிறது என்பதை எடுத்துக்கொண்டு சட்டவாதம் செய்வதால் மட்டும் போதாது. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதோர் என்ற வாதமும் போதுமானது அல்ல. இந்த அரசு பார்ப்பனர்களின் அரசு என்ற வாதமும் போதுமானதல்ல. இந்த அரசாங்கம்சாதிய வர்ணக் கோட்பாட்டை நிலை நிறுத்துகின்ற அரசாங்கம் என்ற வாதமும் போதுமானதல்ல. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அனைவருக்கும் இதனால் பயன் கிடைக்கவில்லை என்றாலும் ஒரு சிலருக்காவது பயன் கிடைக்கிறதே என்ற வாதம் போதுமானதல்ல. இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அனைவருக்கும் பயன் கிடைத்து, அவர்கள் அனைவருக்கும் வளமான வாழ்வு கிடைக்க வேண்டும். அதற்கு என்ன வழி? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வாதம் செய்வதே மிமிக அவசியமாகும். இதற்கு மாறாக ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒரு சிலருக்காவது நன்மை கிடைக்கட்டும் என்று வாதம் செய்வது ஒடுக்கப்பட்ட சாதி மக்களில் பெரும்பான்மையானவர்களுக்கு நாம் துரோகம் செய்கிறோம் என்றே பொருள்படும்.

ஆகவே ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும், அதற்கு என்ன வழி என்பது பற்றி விவாதிப்போம். மக்களுக்காக பாடுபடுவதை லட்சியமாகக் கொண்ட மக்கள் அரசுதான் இதனை சாதிக்கும் என்பது எமது கருத்தாகும். அது பற்றி விவாதிப்போம். சரியான முடிவிற்கு வருவோம்.

தற்போது மக்கள் தங்களது குழந்தைகளின் கல்விக்காக தனியார்கல்வி நிலையங் களையே நாடுகிறார்கள். உதாரணமாக ஸ்ரீமதி என்ற மாணவி ஒரு தனியார் பள்ளியில் கொலைசெய்யப்பட்டாள் என்று பெரும்பான்மையான மக்கள் உணருகிறார்கள். எனினும் அந்த மக்களில் பெரும்பாலோர் தங்களது குழந்தைகளை அதே பள்ளியில்தான் மீண்டும் சேர்த்துள்ளனர்.

மக்களுக்கு தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை தற்போதைய ஆட்சியாளர்கள் உருவாக்கிவிட்டார்கள். இல்லம் தேடிவரும் கல்வியின் மூலம் அரசானது பள்ளிகளை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலையை உருவாக்க முயற்சி செய்கிறார்கள். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது வருங்காலத்தில் அரசுபள்ளிகளே இருக்காது என்ற நிலையை நோக்கி ஆட்சியாளர்கள் பயனிக்கிறார்கள். ஆகவே இனிவருங்காலத்தில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கு முழுமையாக கல்வி மறுக்கப்பட்டுவிடும்.

பணம் இருப்பவர்கள் மட்டுமே அவர்களது குழந்தைகளுக்கு கல்வி யைப் பெற முடியும். வேலை வாய்ப்பை பொருத்தமட்டில் இதுவரை பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் ஒடுக்கப் பட்டசாதியைச் சேர்ந்த மக்களுக்கு ஓரளவு வேலை வாய்ப்பை இந்த அரசு ஏற்படுத்தி கொடுத்தது. தற்போது இந்த பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் கொள்கை யை ஆட்சியாளர்கள் தீவிரமாக செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார் கள். இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை இனி வரும் காலங்களில் இந்த அரசால் கொடுக்க முடியாது என்ற நிலை ஏற்படும். எனினும் இந்த அரசு அமைப்பில் மக்களை அடக்கி ஒடுக்குவதற்கான அரசு அதிகாரிகள், நடுத்தர மற்றும் கடைநிலை பணியாளர்களை உருவாக்குவது இந்த அரசுமுறை நீடித்து இருப்பதற்கு அவசியமாகும். ஆகவே இந்த அரசுப் பணிகளில் மட்டும் இந்த ஆட்சியாளர்களால் வேலை வாய்ப்பை ஏற்பாடு செய்து கொடுக்க முடியும். மக்களை ஒடுக்கும் அரசு நிறுவனங்களான போலீஸ்துறை, நீதித்துறை, சிறைத்துறை, நிர்வாகத் துறை போன்ற நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆட்களை எடுப்பார்கள். இதிலும் கூட காலியிடங்கள் அனைத்தும்

நிரப்பக் கூடாது என்ற உலகவங்கியின் கட்டளைக்கு ஏற்ப அனைத்து காலியிடங்களையும் நிரப்பாமல் சில இடங்களை மட்டுமே நிரப்புவார்கள். இந்த வகையில் ஆட்சியாளர்களால் மிகவும் குறைந்த அளவிலான வேலை வாய்ப்பை மட்டுமே அதிலும் குறிப்பாக அரசுத் துறைகளில் மட்டுமே வேலை கொடுக்க முடியும் என்ற நிலையை நோக்கி இந்த அரசு நகர்ந்துகொண்டு இருக்கிறது. மேலும் இராணுவத்திற்கு பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்குசிறிது காலமே பணியில் இருக்க முடியும் என்ற கொள்கையை நடைமுறைப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். ஆகவே ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்கு இராணுவத்தில் வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால் ஒடுக்கப்பட்ட சாதியினர் மட்டும் பாதிக்கப்படவில்லை, உயர்சாதியைச் சேர்ந்தவர்களும் பாதிப்புகளை சந்திக்கிறார்கள். அதாவது வேலை வாய்ப்பு எண்ணிக்கை குறையும் போது உயர் சாதியினருக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு எண்ணிக்கையும் குறையும் அல்லவா. இந்த அரசானது கார்ப்பரேட் நலனுக்கான அரசாக இருப்பதால், கார்ப்பரேட் நலன்களை பாதுகாப்பதில் ஆர்வமுள்ளவர்களாக உயர் சாதியினர் குறிப்பாக பார்ப்பனர்கள் இருப்பதால் பார்ப்பனர்களின் பாதிப்பை ஈடுகட்டுவதற்காகவும், வட மாநிலங்களில் சில மாநிலங்களில் பார்ப்பனர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களின் ஓட்டுகளை பெறுவதற்காகவும் உயர் சாதியினருக்கு 10 சதவீதம் என்ற சட்டத்தை கொண்டுவருகிறார்கள்.

இவர்கள் என்னதான் தந்திரங்களை கையாண்டாலும் இவர்களால் மக்கள் தொகை

பெருக்கத்திற்கு ஏற்ப வேலை வாய்ப்பை வழங்க மாட்டார்கள். நடைமுறையில் இவர்கள் மக்களிடம் அம்பலப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆகவே இந்த ஆட்சியாளர்களின் ஏமாற்று வேலைகளை அம்பலப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் கம்யூனிஸ்டுமற்றும் ஜனநாயகவாதிகளின் பணியாகும். தேன்மொழி

அன்றைய இடஒதுகீடு புரிந்துக் கொள்ள... இன்று பலர் பேசும் தவறான தகவல்களை புறம்தள்ள..




No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்