மார்க்சியம் சில போக்குகள் தொடர் விவாதம்

 தோழர்களே இரண்டு வாரமாக எமது கிளப் அவுஸ் பகுதியில் விவாதித்தவையே. 

முந்தைய வார விவாதம் ஒலி விவில் இந்த பகுதியை அழுத்தி கேட்கலாம்

நேற்றைய விவாதத்தை இந்த லிங்கை அழுத்தி ஒலி வடிவில் கேட்கலாம் தோழர்களே

தோழர்களே இன்று இடதுசாரிகளுக்கு இடையில் உள்ள போக்குகளை தத்துவார்த்த ரீதியில் புரிந்துக் கொள்ள ஒரு முயற்சியே இந்த விவாதம்.

இன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில் சமூகத்தின் உள் முரண்பாடான கூறுகளை புரிந்து கொள்வது அவசியமானது. அதனைப் பற்றி ஒரு மார்க்சிவாதிக்கு மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு இந்த இருவரும் பேசுவது ஒன்று மார்க்சியம் சார்ந்தவை மற்றது மார்க்சியம் அல்லாதவை .  அப்படி என்னும் பொழுது சரியான மார்க்சியப் புரிதலை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் தவறான பக்கத்தையும் நமது சமூகத்தில் பேசப்படும் பல போக்குகளையும் நாம் மார்க்சிய இயங்கியல் அடிப்படையில் விளங்கிக் கொள்ளும் திறன் நமக்கு வேண்டும் என்பதே.

மக்களைப் பிரித்து ஆள்வது என்பது எல்லா சமூகங்களிலும் ஆளும் வர்க்கங்களின் அடிப்படையான கோட்பாடுகளாக செயல்படுகின்றன. ஆளும் வர்க்கம் உழைக்கும் மக்கள் தங்கள் மீது நிகழ்த்தப்படும் கொடூர சுரண்டல் ஒடுக்குமுறைக்கு எதிராக திரண்டு விடாமல் தடுக்க "மத ஆன்மீக" கோட்பாடுகள் அதில் "முக்தி முன் ஜென்மம்" காரண காரியம் பேசி அதற்குள்ளேயே அழுத்தி  வைக்கும் சித்தாந்தம் என்றால் இதையையே பல்வேறு போர்வையில் ஆளும் வர்க்கத்தின் மீதான மாயை உடைபடாமல் இருக்க  அப்பொழுது புதிய புதிய சித்தாந்தங்களை மக்கள் மீது திணிப்பதும் மக்களை விழிப்படையாமல் இருக்க சிலர் ஆளும் வர்க்க சேவகர்களாக செய்யும் செயல்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதில் இன்று நம் மத்தியில் பேசப்படும் சில பிரச்சினைகளையும் அதற்கான தீர்வையும் நமது ஆசான்கள் வழியில் நாம் காண விளைவதும் இந்த  ஆளும் வர்க்க சேவகர்கள் விளைவதற்குமான வேறுபாட்டையும் நாம்  திறனுடன் அறிந்திருக்க வேண்டும்.

உலகத்தை ஒரு நிகழ்வு போக்காக இடையறாத வரலாற்று வளர்ச்சிக்கு உட்பட்டிருக்கும் பொருளாக மார்க்சியம் புரிந்து கொண்டிருக்கிறது. இதனாலேயே நின்று நிலைத்து வளரும் தத்துவமாய் மார்க்சியம் விளங்குகிறது.

மார்க்சியத்திற்கு எதிராக வைக்கப்படும் எல்லா போக்குகளும் திட்டமிட்டு மார்க்சியத்தை  மறுக்கிறது.

இதனைதான் நமது ஆசான்கள், "தத்துவ ஞானிகள் உலகத்தை பல்வேறு வழிகளில் வியாக்கியானப்படுத்தி தான் வந்திருக்கிறார்கள் ஆனால் அதை மாற்றுவது தான் இப்போது உள்ள விஷயம்"என்றார் மார்க்ஸ்.(1845 பயர் பாக் ஆய்வுரைகளிலிருந்து).

மேலும் பாரிஸ் கம்யூனின் படிப்பினைகளின் பிறகு மார்க்ஸ் எங்கெல்ஸ்(1872 ல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முன்னுரையில்) கூறுகின்றனர் "ஏற்கனவே பூர்த்தியான தயார் நிலையில் உள்ள அரசு பொறியமைவைத் தொழிலாளர் வர்க்கம் அப்படியே கைப்பற்றி தனது சொந்த காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியாது" என்கின்றனர்.(மேலும் பிரான்சில் உள்நாட்டு போர்) .

இதனை கணக்கில் கொண்டே லெனின் தன் நாட்டிற்கு உரித்தான வகையில் புரட்சியை நடத்த எஃகு உறுதி  போன்ற ஒரு போல்ஷ்விக் கட்சியை கட்டி அமைத்தார்,புரட்சிக்கான விதிகளை மார்க்சியத்தை தன் கட்சிகளுக்கு மட்டும் அல்லாது மக்களுக்கும் போதித்து புரட்சிக்கான சூழ்நிலையில் புரட்சி நடத்தி காட்டினார்.  லெனினின் வழியில் சீனாவும் தன் நாட்டின் குறிப்பான பொதுவான சூழ்நிலைகளை அறிந்து புரட்சியை  நடத்தி சோசலிச சமூகம் நோக்கி முன்னேறியது. உலகில் பல்வேறு நாடுகள் சோசலிஸ சமூகமாக மாறியது.

இன்று அவையெல்லாம் நமது ஆசான்களின் கோட்பாடுகளை கைவிட்டு முதலாளித்துவ சிந்தாந்தத்தை கையில் எடுத்ததால் திருத்தல்வாத நிலையில் மார்க்சியத்தை மறுத்து இன்று மார்க்சியம் அல்லாத நிலையில் உள்ளனர்.

இதில் சில போக்குகளை பற்றி பேசியுள்ளோம்.

இன்று உலக மயமாக்கல் சூழலில் ஏகாதிபத்தியம் எதிர்புரட்சிகர கருத்துகளை திணிப்பதையும் பல மா லெ அமைப்புகள் தங்களை புரட்சிகர அமைப்புகள் என்று கூறிக் கொண்டே எதிர்புரட்சிக்கு வித்திடும் போக்கை கணக்கில் கொண்டே எழுதுகிறேன்.
இந்திய சமூகத்தில் மேலாதிக்கம் செய்யும் கலாச்சாரம் ஏகாதிபத்திய நிலவுடமை கலாச்சாரமாகும்முதலில் அமெரிக்க உள்ளிட்ட மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் தம் கலாச்சாரத்தை  எப்படி பரப்புகின்றது என்று பார்ப்போம்.
(1) தனி நபர்வாதத்தை தூக்கி நிறுத்துகிறது
(2)வரைமுறையற்ற ஆபாசத்தை பரப்புகிறது.
 (3)விரக்தியை தூண்டும் நடவடிக்கைகள்.
 (4) உதிரிதனமாக வன்முறையை பரப்புகிறது. (5)அறிவியல் கலந்த மூட நம்பிக்கையை பரப்புவது
(6) மேட்டிமைதனத்தை பரப்புதல். (7)புதிய இடதுகள் என்ற போர்வையில் மார்க்சிய லெனின்யத்தைச் சிதைத்தல்.
மற்றொரு புரம் ரஸ்ய ஏகாதிபத்தியம் மார்க்சிய லெனின்யத்தை திரித்துஇங்குள்ள பண்டைய இந்திய இதிகாசங்களுடன் இன்றைய அறிவியலையும்தொழிற் நுட்ப வளர்ச்சியை (இன்றைய அதி நவீன)மார்க்சிய வழியில் வளர்தெடுக்காமல் மார்க்சியத்தை திரிப்பது இவர்களின் வேலையாக உள்ளதுஅதாவது புரட்சிகர உள்ளடகமின்றி புரட்சி வார்த்தைகளை பயன்படுத்துதல்புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்தே மார்க்சியத்தை பிரித்தல்இவ்வாறு பல்வேறு வடிவங்களில் ஏகாதிபத்தியம் இந்தச் சமூகத்தின் மீது தாக்குதல்களை தொடுத்து கொண்டுள்ளது,அதனை எதிர் கொள்ள திறன் அற்று அதில் சமரசமோ அல்லது சீரழிவுக்கோ இட்டு செல்கிறது இதிலிருந்து மாறுபட்டு நிற்கும் அந்தச் சொற்பர்கள் இங்கே பிரதிபலிப்பதில்லை அல்லது அவர்களின் பங்களிப்பு கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை.... 
இன்று இலங்கையில் தமிழர்களின் எழுச்சி போராட்டம் எப்படியெல்லாம் இன்று திரித்தும் புரட்டியும் பேசப்படுகிறது அதிலிருந்து இன அழிப்பு அதற்கு பின்னான  அரசியலின் ஊடாக உலகில் மார்க்சியத்தை மடை மாற்றும் செயல் எப்படியெல்லாம நடக்கிறது என்றொரு மாதிரியே இந்தப்பதிவு...
1980களின் ஆரம்பத்தில் பல தன்னார்வ நிறுவனங்கள் உருவாகின.தமிழ் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் கூர்மையடைந்த போது இவை அவற்றின் மீது பலவழிகளில் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்தன இடதுசாரி புத்திஜீவிகள் அன்னிய நாடுகளின் பெரும் பண உதவிகளின் பின்னணியில் தமது சொந்தத் தன்னார்வ நிறுவனங்களை ஆராம்பித்தனர்இவர்களோடே பல இரண்டா நிலை போராட்ட சக்திகள் உள்வாங்கப்பட்டனர்.புரட்சிகர சமூக இயக்கங்களின் அரசியல் வளர்ச்சியும் போராட்டங்களும் ஒரு பணம்கொழிக்கும் பண்டத்தை வழங்குகின்றனஅப்பண்டத்தையே ஐரோப்பிய அமரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களோடு நெருக்கமாகப் பிணைந்துள்ள தனியார் பொது நிறுவனங்களுக்கு முன்னாள் புரட்சிகரபோலிஜனரஞ்சக அறிவுஜீவிகள் விற்கிறார்கள்;அவை பன்னாட்டு நிறுவனங்களால் பெருமளவில் நிதியளிக்கப்படுகின்றன;அவை இந்த அறிவு ஜீவிகளின் நலன்களைப் பேணுகின்றனஎனவே அவர்கள் மீது அக்கறை காட்டுகின்றன. ” என்கிறார் ஜேம்ஸ் பிராட்ஸ்.
ஒரு கணிணிக்குப் முன்னாலிருந்து திட்ட முன்மொழிவுகளை எழுதுவதிலிருந்து இந்த முன்னாள் புரட்சிகர அறிவுஜீவிகளின் தன்னார்வ நிறுவனங்கள் ஆரம்பமாகின்றனதாம் மக்களின் போராட்ட உணர்வை தமது கட்டுப்பாட்டுக்குள் உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அறிக்கைகள் தயாரிக்கப்படுகின்றனமனித உரிமை மீறல்கள்கருத்துச் சுதந்திரம்,பெண்ணியம்,தலித்தியம் போன்ற முற்போக்கான,புத்திஜீவிகள் ஏற்கனவே பரீட்சயமான சொல்லாடல்களை நிதி நிறுவனங்களிற்கு விற்பனை செய்துபெரும் பணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். 
மார்க்சிய வாதிகளையும்இடது சாரிகளையும்கற்பனா வாதிகளாகசெயற்திட்டமற்ற கற்பனைப் புரட்சி நடத்துபவர்களாகவும் சித்தரிக்கின்றன.
இன்று நாம் காணும் இந்திய பிரச்சினைகளில் "பெண்களுக்கும், தலித்துகளுக்கும், மத – இனச் சிறுபான்மையின மக்களுக்கும் அன்றாட வாழ்க்கை அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறது. இதுபோன்று பயங்கரமான சம்பவங்கள் நாள்தோறும் ஏராளமாக நடந்து கொண்டேதான் இருக்கின்றன. இவற்றில் வெளியுலகின் கவனத்தில் வரக்கூடிய சில விஷயங்களுக்கு மட்டுமே சமூக வலைதளங்களில் குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. அதைவிடப் பெரியதொரு சம்பவம் வெளியே தெரிய வரும்போது முன்பிருந்த விஷயம் மறக்கடிக்கப்பட்டு புதிய சம்பவம் பேசுபொருளாக மாறுகிறது. இதனை நிர்வகிப்பது யார் என்று பாருங்கள். இதே உலகளாவிய NGOகளின் கையில் உள்ளதை அறிவீர்.
இப்போது நாடெங்கும் சாதி – மதவெறியர்களால் நிகழ்த்தப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், தலித்துகள், முஸ்லிம்கள், இதர சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆகிய அனைத்தும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல.  திட்டமிட்ட என்ஜிஓகளின் செயலில் உள்ளனர் பின் விரிவாக பேசுவோம்.

தனியார் மய தாரளமய உலகமயமாக்கல் கொள்கைக்கு இடம் கொடுத்த அனைத்து உலக நாடுகளின் சமூக பொருளாதார நிலை பற்றியும் அவர்களது உழைப்பும் வளங்களையும் பன்னாட்டு பெருநிறுவனங்களால் சுரண்டப்படுவதை குறித்தும் அதற்குத் துணையாக இருந்து தரகு வேலை பார்த்த பொருளாதார அடியார்கள் பற்றியுமான ஒரு ஆவணமாக தான் ஜான் பெர்கின்ஸ் எழுதியஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்முதல் பாகம் 2004 ஆம் ஆண்டில் வெளிவந்தது.தொடர்ச்சியாக 2015ஆம் ஆண்டு நவீன பொருளாதார அடியார்கள் பற்றியும் அமெரிக்க பற்றியும் பாதிக்கப்பட்ட நாடுகள் பற்றியான பதிவு தான் இரண்டாம் பாகம்.

சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி போன்ற பல நிதி நிறுவனங்களின் உதவியில் அடிப்படை கட்டுமான வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் ஒரு சமூகத்தின் மனித வளத்தையும் இயற்கை வளத்தையும் நாசமாக்கி பல்வேறு பழமைவாத கருத்துகளையும்  ஜாதிய மதவாத  நிலவுடமை சிந்தனைகளை நிலை நிறுத்த அதிகார வர்க்கத்தின் துணையோடு சந்தையை ஆக்கிரமிப்புதான் முதலாளித்துவத்தின் முதல் இலக்கு. அதற்கான முக்கிய கருவி தனி மனிதனை முற்றிலும் கண்காணிப்பதும் அவனது தேவைகள் என்னவென அவனைத் தீர்மானிக்க விடாமல் வழிநடத்தி அவனுக்குள் போட்டியையும் பொறாமையும் தூண்டிவிட்டு சக மனிதனின் வாய்ப்பை அடித்து பிடுங்கி தான் அவன் முன்னேற வேண்டும் என்ற சிந்தனையை அவனுள் வளர்த்துவதும் போலி ஜனநாயகத்தை முன்னிறுத்தி உழைப்பு சுரண்டலோடு இயற்கை வளங்களையும் கொள்ளையடடிப்பதுமே ஆகும்.

தங்களின் தந்திரத்தால் மக்களின் நுகர்வு வெறியை தூண்டி மக்களை தயார் படுத்துவதோடு அவர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஆழமாக வேரூன்றி விட்ட "ஜாதிய மத இன மொழி வர்க்க" பாகுபாடுகளை ஆராய்ந்து அவற்றை வளர்த்தெடுக்கவும் மிக எளிமையான மக்களை பிளவுபடுத்தவும் செய்கிறார்கள்.

இன்றைய பொருளாதார அடியார்கள் என்பவர்கள் யார்?

ஜான் பெர்கின்ஸ் கூறுகிறார்" நான் பொருளாதார அடையாளாக இருந்த காலத்தில் அமெரிக்காவில் ஒழுக்கம் கெட்ட ஏற்றுக்கொள்ள முடியாத சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையாக பார்க்கப்பட்ட அனைத்தும் இப்போது நிலையாக தொடர்ந்து நடக்கிறது போலியான சொற்களால் அது மறைக்கப்படுகிறது!".

சுழற் கதவு வழியாக செல்லும் ஆண்கள் மற்றும் பெண்களுடன் சேர்த்து பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தங்களை அரசியல் தரகர் என்று அழைத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் சட்ட அமைப்பிற்காக பணியாற்றுகிறார்கள், "ஆலோசகர்" "தகவல் நாடுபவர் " அல்லது அரசு நிர்வாக ஆலோசகர் போன்ற புனைபெயர்களோடு செல்வார்கள்.  ஒரு பெரிய ஆலோசனை மையத்தின் தலைமை பொருளாதார வல்லுனர் என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுவது போல இருப்பினும் அவர்களது உண்மையான வேலை என்னவென்றால் அரசுகளையும் மக்களையும் திட்டங்களுக்குள் இணைத்து பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை மேலும் ஏழைகளாகவும் உருவாக்குவது தான். அவர்கள் பெரும் நிறுவன முதலாளித்துவத்தை வளர்த்தெடுப்பதற்காக ஊதியம் பெரும் பொருளாதார அடியார்கள் . நிழல் உலகில் பதுங்கி இருப்பார்கள் இருப்பினும் அவர்களது செல்வாக்கு அளவிட முடியாதது.

வரி செலுத்துவரிடம் இருந்து திருடப்படும் பணம் பெரு நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்படும். சுகாதாரம் கல்வி மற்றும் இதர சமூக பயன்பாட்டிற்கு செலவிட வேண்டிய பணம் முழுவதும் பொருளாதார அடியார்கள் மற்றும் ஊழல் கறை படிந்த அரசியல்வாதிகளின் அன்பு பரிசாக பேராசை பிடித்து பெரு நிறுவனங்களின் பணப்பெட்டிக்கு அனுப்பப்படுகிறது.(ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் இரண்டாவது பாகம் pp81).

இன்றைய ஏகாத்திபத்திய காலதில் எண்பது சதவீத உலக மக்கள் வறுமையிலும் நோயிலும் அறியாமலும் வாழும் நிலையில் 20% வளர்ந்த சுரண்டலாளர்களின் சுகபோகத்திற்காக 80 சதவீதம் மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு வருகிறது.

இன்றைய இணைய உலகத்தில் உலகில் ஒரே குடையின் கீழ் வந்துவிட்டபின் சந்தை பொருளாதாரத்திற்காக தனி மனிதனை தனியாக காட்டப் முயற்சிக்கப்படுகின்றனர். இதன் அடிப்படையில் மனிதனின் தூய அக வாழ்வு பிரச்சினைகள் பண்பாட்டுப் பிரச்சினைகள் மனிதனின் புற வாழ்வு பிரச்சனைகளுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு புதிய புதிய தத்துவங்கள் உருவாக்கப்படுகின்றன.  இந்த புதிய புதிய தத்துவங்கள் எடுத்த எடுப்பிலே  மார்க்சியத்தைக் குறி வைத்து தாக்கி மார்க்சியத்துக்கு மேலான தன்னை பாவித்து கொள்வதில்  புரட்சிமயமாகின்றன. மார்க்சியத்தின் போதாமையை இவை பூர்த்தி செய்வதாகவும் பெருமையோடு மார்தட்டி பிரகனப்படுத்திக் கொள்கின்றன. மார்க்சியம் கவனிக்காமல் விட்டுவிட்ட பிரச்சினைகளுக்கு தமது வழியே மாற்று என பறைசாற்றுகின்றன.

நீட்சையின் அதர்க்கவாதத்தை எடுத்துக்கொண்ட ஐரோப்பிய பிற்போக்கின் தற்கால வாரிசாக பின் நவீனத்துவம்  உலகை வலம் வருகிறது.  பெரும் கதையாடலுக்கு பதிலாக சிறுகதையாடல் வர்க்கப் போராட்டத்திற்கு பதிலாக மற்றதுகளுக்கு இடையேயான போராட்டம் என அறிவியல் புரட்சிகயுகத்துப் போராட்டங்களை திசை திருப்புகிறது பின் நவீனத்துவம்.

பின்ன நவீனத்துவாதியான லியோ தார்த் சமூகங்கள் பின் தொழில் வளக் காலத்தை அடையும்போது கலாச்சாரங்கள் பின் நவீனத்துவ  காலத்தை அடைகின்றன என்றார்.

அறிவியல் புரட்சி மாற்றங்களை ஆராய்ந்த நேட்டோ ராணுவ கூட்டமைப்பின் பேராசிரியர் ஆல்வின் டாஃப்பர் "வர்க்கங்கள் இல்லை அவை சிறு சிறு அலகுகளாக உடைந்து விட்டன. பொருளாதார காரணிகள் முக்கியத்துவத்தை இழந்துவிட்டன தனிமனிதன் வாழ்க்கை முறையை தீர்மானிக்க வர்க்க அடிப்படை காரணமாக அமையவில்லை " என்றார்.

பின் நவீனத்துவம்   டபுலரின் கருத்தை கலாச்சாரத் துறையை பரப்பி வருகிறது. உண்மையில் உலகமயமாக்களின் கீழ் பன்னாட்டு பகாசுர கம்பெனிகளின் சுரண்டலைக்  காணவிடாமல் தடுக்க வர்க்கம் இல்லை என்ற போலிவாதம் முன்வைக்கப்படுகிறது . 

பொருள்உற்பத்தி  விநியோகம் நுகர்வு பற்றிய அரசியல் பொருளாதார விதிகளுக்கு உட்பட்டு தான் எந்த ஒரு தனி மனிதன் அல்லது குழுவின் சுயேட்சையும் சுதந்திரமும் இருக்கிறது என்பதை நவீன கலகக் காரர்கள் புரிந்து கொள்வதில்லை. தனிமனிதனின் அவலமும் சமூக உறவோடு சம்பந்தப்பட்டது.சமூக உறவுகள் அரசியல் பொருளாதார உறவுகளோடு பின்னிப் பிணைந்தது. இதை மாற்றுவதே சமூக மாற்றத்தின் துவக்கமாகும். 

பின்நவீனவத்துவம் உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கு எதிரான சந்தேகத்தையும் குழப்பத்தையும் விதைக்கிறது. பின் நவீனத்துவம் அடிப்படையில் கலகத்தின் தத்துவம் கூட அல்ல அது மனிதனை தனியான ஆக்கி ஒழுங்கற்ற குழப்பவாதியாக்கும் அராஜக கோட்பாடாகும்.

அறிவியல் புரட்சியோகத்தில் மனித குலம் மேலும் சிறப்பாக ஒழுங்கப்படுத்துப்பதை நோக்கியே நகர்கிறது. ஏகாதிபத்தியம் உலகை தனது நலனுக்குரிய வகையில் ஒற்றைத் தன்மை உள்ளதாக நுகர்வு சந்தையாக மாற்ற முயல்கையில் உலகளாவிய ஒருங்கிணைந்த ஒழுங்கப்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் போராட்டம் வளர வேண்டும் மார்க்சியம் இதை தான் முன்மொழிகிறது. பின் நவீனத்துவம் முன்வைக்கும் பிளவுபட்ட தனித்தனியான அராஜகவாதம் உலகமயமாக்கள் சந்தை சக்திகளோடு பின்புறவமாக கைகோர்த்துக் கொள்கிறது.

தத்துவ ஞானிகள்  உலகை பல்வேறு வகையில் வியாக்கானப்படுத்தித்தான் வந்திருக்கிறார்கள் ஆனால் அதை மாற்றுவது தான் இப்போதுள்ள விஷயமாகும் என்றார் மார்க்ஸ் ஆனால் இவர்கள் மக்கள் இந்த சமூக அமைப்புகுள்ளே அடங்கி ஒடுங்கி கிடக்க வேண்டும் எங்கின்றனர்.

இதனை முழுமையாக தத்துவ போராட்டத்தின் ஊடாக போராடி தெளிவடைய வேண்டி உள்ளது தோழர்களே தொடர்ந்து விவாதிப்போம்.



இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்