தோழர்களே!
“கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தம்மைத் தாமே வளர்த்துக் கொண்டுதிடப்படுத்திக் கொள்வது எப்படி என்பதைப் பற்றியே நான் உங்களுடன்விவாதிக்க உள்ளேன். கட்சியைக் கட்டியமைத்து உறுதிப்படுத்தும் பணியைஎதிர்கொள்ளும் இத்தருணத்தில் இந்த விவாதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.” - லியுஷாவோகி.
கம்யூனிஸ்டுகள் என்றாலேயே கம்யூனிசத்தைப் பற்றியும் மார்க்சியலெனினியத்தைப் பற்றியும் தெளிவாக அறிந்திருப்பார்கள் என்று இங்குபலரும் கருதுகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. கம்யூனிசஅமைப்பில் செயல்படும் பலருக்கும் இத்தகைய மார்க்சிய அறிவுகுறைவாகவே உள்ளது என்பதுதான் உண்மையாகும். சீனாவில் புரட்சிநடப்பதற்கு முன்பே உருவான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து 1939ஆம் ஆண்டில் லியுஷாவோகி இந்த நூலை எழுதினார். அதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தம்மை தாமே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் என்றால் அங்குள்ளகம்யூனிஸ்டுகள் தங்களது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலையிலேயே இருந்தார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்அல்லவா? நாம் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது அதிகம் உள்ளதுஎன்று நாம் கூறுவதாலேயே கம்யூனிஸ்டுகள் சோர்வடைந்துவிடுவார்களா?அல்லது நம்பிக்கை இழந்துவிடுவார்களா? அப்படியானால் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவரான லியுஷாவோகி இந்த நூலை எழுதிகட்சி உறுப்பினர்களுக்கு சோர்வை ஏற்படுத்தினாரா? உற்சாகம் ஊட்டினாரா?இந்தப் புத்தகத்தைப் படித்த சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள்தான்ஒவ்வொருவரும் தனது சொந்த மார்க்சிய அறிவை வளர்த்துக்கொண்டு புரட்சியை நடத்தி முடித்தார்கள் என்பது வரலாறாகும். ஆகவே இங்குள்ள கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவரும் தனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்பு கொள்ளாமல் நம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது என்பதை உணர்ந்து அதனை தெரிந்துகொள்ள முயல வேண்டும். நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்களைப் பற்றி மார்க்சிய ஆசான்கள் ஏராளமான போதனைகளை நமக்கு வழங்கியுள்ளார்கள். அந்த போதனைகளை நாம் படித்துப் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் லியுஷாவோகி எழுதிய சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி என்ற நூலை நாம் படித்து புரிந்துகொள்வோம். அன்றைய சீனாவைப் போலவே இங்கும் கம்யூனிஸ்ட்கட்சியை கட்டியமைத்து உறுதிப்படுத்தும் நிலையிலேயே நாம் உள்ளோம். மேலும் கம்யூனிஸ்டுகள் பல பிரிவாக பிரிந்திருக்கும் நிலையிலேயே நாம் உள்ளோம். ஆகவே இத்தகைய மோசமான நிலையிலுள்ள நாம் ஒவ்வொருவரும் நமது மார்க்சிய லெனினிய அறிவை வளர்த்துக் கொள்வதும் அதனை திடப்படுத்துவதும் மிகமிக அவசியம் என்பதை நாம்ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
சுய - வளர்ப்புப் பயிற்சியை கம்யூனிஸ்டுகள் ஏன் மேற்கொள்ளவேண்டும்? உயிர் வாழ்வதற்காக மனிதன் இயற்கையை எதிர்த்துப் போராடவும் பொருளாயத செல்வங்களை உற்பத்தி செய்வதற்காக இயற்கையைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டியதாக இருக்கிறது. எல்லாக் காலங்களிலும் எல்லா நிலைமைகளிலும் பொருளாதய செல்வங்களை உற்பத்தி செய்யும் மனித செயல்பாடு சமூகத் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில், சமூக வளர்ச்சியின்எந்தவொரு கட்டத்திலும், மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடுகையில்தமக்கிடையில் குறிப்பிட்ட சில உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர்என்பதே. இயற்கையுடனான இடையறாத போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்,இயற்கையை இடையறாது மாற்றியமைக்கும் அதே வேளையில், தம்மையும் தமக்கிடையிலான உறவுகளையும் மாற்றி அமைக்கின்றனர்.
மனிதர்களும், அவர்களிடையிலான சமூக உறவுகளும், அவர்களின் சமூகஅமைப்பினுடைய வடிவங்களும், சமூக உணர்வுகளும் இன்றுள்ளதுபோலன்றி மாறுபட்டவையாகவே இருந்தன; எதிர்காலத்திலும் அவைமாறுபட்டவையாகவே இருக்கப் போகின்றன.மனிதர்கள் உயிர் வாழ்வதற்காக இயற்கையை எதிர்த்துப்போராடிக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக மின்னல் தாக்கி பல உயிர்மற்றும் பொருள் சேதங்களிலிருந்து பாதுகாக்க மின்னலைப் பற்றியவிஞ்ஞான அறிவை வளர்த்து மனிதர்கள் இடிதாங்கியியை அமைத்துதங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். சிலர் சொல்வது போல மனிதர்கள்இயற்கையோடு இயைந்தே மனிதர்கள் வாழ வேண்டும் என்றால், அதாவதுஇயற்கையை எதிர்த்து மனிதர்கள் போராடக் கூடாது என்றால் இயல்பாகஏற்படும் இடி மின்னல்களுக்கு மனிதர்கள் பலியாக வேண்டுமா? ஆகவேஇடி மின்னலிருந்து மனிதர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள,மனிதர்களைத் தாக்கும் இடி மின்னலின் இயல்பை எதிர்த்துப் போராடியேதீர வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். போராட்டமேமனிதர்களின் வாழ்க்கையாகும். அதாவது மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால் இயற்கையை எதிர்த்தும் தீங்கு செய்யும் மனிதர்கள்மற்றும் சமூகத்தை எதிர்த்தும் போராடியே தீரவேண்டும். மேலும்இயற்கையில் சமூகத்திலும் நமக்கு கிடைக்கும் நல்லவற்றை நாம்பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக நமக்கு இயற்கையில்கிடைக்கும் நெல் போன்ற உணவு வகைகளையும் சமூகத்தில் நமக்குகிடைக்கும் உரிமைகளையும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.அதுவே விஞ்ஞான முறையாகும்.
எல்லாக் காலங்களிலும், இனிவரும் காலங்களிலும் மனிதர்கள்பொருளுற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டே ஆகவேண்டும். அந்தஉற்பத்தியில் ஒரு தனி மனிதன் மட்டும் ஈடுபட முடியாது, மாறாக பலமனிதர்கள் உற்பத்தியில் ஈடுபட வேண்டியதுதான் அவசியமாக உள்ளதுஎன்பதை நாம் அனைவரும் அறிவோம். இதனையே சமூகத் தன்மைகொண்ட உற்பத்தி என்பார்கள்.ஆகவே மனிதர்கள் பொருளுற்பத்தியில்ஈடுபடும் போது இயற்கையோடு மட்டுமல்லாமல்லாமல் மனிதர்களுக்குஇடையிலும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இயற்கையோடுஉறவு கொள்ள மனிதர்களுக்கு உழைப்புக் கருவிகள் பயன்படுகின்றன.
இந்தக் கருவிகளின் மூலமே மனிதர்கள் இயற்கையோடு உறவுகொள்கிறார்கள். மேலும் இந்த உறவானது எப்பொழுதும் ஒரே மாதிரியாகஇருப்பதில்லை. அதில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.உதாரணமாக ஆரம்பகால விவசாயத்தில் மனிதர்கள் கற்களையும்,கம்புகளையும் பயன்படுத்தினான் அதன் காரணமாக விளைச்சல் மிகமிகக்குறைவாக இருந்தது, பின்பு ஏர்கலப்பையைப் பயன்படுத்தினான் அதனால்விளைச்சல் சற்று கூடியது, பின்பு டிராக்டர் என்ற இயந்திரத்தைப்பயன்படுத்தினான் மேலும் விளைச்சல் அதிகரித்தது. இவ்வாறுஇயற்கையோடு மனிதன் கொண்டிருக்கும் உறவில் ஏற்பட்ட மாற்றமானதுஇயற்கையையும் அதன் மூலம் கிடைக்கும் பலன்களிலும் மாற்றம்ஏற்பட்டுக்கொண்டே இருப்பதை நாம் காணலாம். அதே போலவேஉற்பத்தியில் ஈடுபடும் மனிதர்களுக்கு இடையிலும் உறவுகளை மனிதர்கள்ஏற்படுத்திக் கொள்கிறார்கள், இயற்கையுடனான இடையறாதபோராட்டத்தின் போது மனிதர்களுக்கு இடையிலான உறவுகளையும், தம்மையும் மனிதர்கள் மாற்றிக் கொள்கிறார்கள். அதாவது இயற்கையைப்பற்றியும் சமூகத்தைப் பற்றிய அறிவையும் மனிதர்கள்வளர்த்துக்கொள்கிறார்கள், மேலும் மனிதர்களுக்கு இடையிலான உறவுகளையும், உதாரணமாக ஆரம்ப காலத்தில் உற்பத்திக் கருவிகள்வளராத நிலையில் உற்பத்தி குறைவாக இருந்த போது மனிதர்கள்அனைவரும் கூட்டமாகச் சென்று வேட்டையாடுவதும் அதன் பலனைகூட்டாகப் பகிர்ந்துகொள்ளும் முறையைப் பின்பற்றி தங்களுக்கு இடையில்எவ்விதமான வேறுபாடும் இல்லாத சகோதர உறவு முறையைப்பின்பற்றினார்கள். அதன் பின்பு உற்பத்தி கருவிகளில் முன்னேற்றம்ஏற்பட்டு உற்பத்தி பெருகியபோது உபரி உற்பத்தியை சிலர் கைப்பற்றிஅதனை தனக்குச் சொந்தமாக மாற்றினார்கள். இவ்வாறு தனியுடமைதோன்றியதும் செல்வத்தை உடமையாகக் கொண்டவர்கள் ஒருபுறம்இருந்துகொண்டு உடமையற்ற மற்றவர்களை அடிமைப் படுத்தினார்கள்.இப்போது அடிமைகள் மற்றும் ஆண்டைகளுக்கான உறவு நிலையை மனிதர்கள் அடைந்தார்கள். மேலும் உற்பத்திக் கருவிகளில் ஏற்படும்மாற்றங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும், அதன் பயனாக உற்பத்தியிலும்மனிதர்களுக்கு இடையேயான சமூக உறவுகளிலும் மாற்றங்கள்ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆகவே சிலர் கருதுவது போல இன்றைய சமூகத்தில் உள்ள மனிதர்களுக்கு இடையிலான உறவுகளும் சமூகஅமைப்பு முறையிலும் மாற்றங்களே இருக்காது என்பது உண்மையல்ல.
நிச்சயமாக மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையாகும். உதாரணமாகஇந்தியாவில் சாதி அமைப்பில் ஒவ்வொரு சாதிப் பிரிவினரும் பிறப்பின்அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு ஒவ்வொரு சாதியினரும் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட சாதிக்கான தொழிலில்தான் ஈடுபடவேண்டும் என்ற முறை தற்போது ஒழிக்கப்பட்டுவிட்டது. தற்போது எந்த சாதிப் பிரிவினரும் எந்தத் தொழிலையும் கற்றுக்கொண்டு எந்தத் தொழிலும் ஈடுபடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டதை நாம் காணலாம்.
ஆகவே எந்த சமூகமும் மாறாமல் அப்படியே இருக்காது என்பதை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் இந்த மாறுதல்களை நாம் புரிந்துகொண்டு சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் சமூகத்திலுள்ள தீமைகளைஒழிப்பதற்காகவும் அதனை விரைவில் செயல்படுத்துவதற்கு நாம் என்ன
செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொண்டு போராடுவதன் மூலமே தீமைகளை ஒழித்து சமூகத்தை முன்னேற்ற முடியும் என்பதை நாம்புரிந்துகொள்ள வேண்டும்.
மனித இனமும் மனித சமுதாயமும் வரலாற்றினுடைய வளர்ச்சிப் போக்கில் மாறிக்கொண்டே - இயங்கிக் கொண்டே இருக்கின்றன. வரலாற்றில், மனித சமுதாயம் குறிப்பிட்டதொரு வளர்ச்சிக் கட்டத்தை அடைந்த போது, வர்க்கங்களும் வர்க்கப் போராட்டங்களும் உருவாயின. வர்க்க சமுதாயத்தினுடைய ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவறாகவே வாழ்கிறார்; குறிப்பிட்டதொரு வர்க்கப்போராட்ட சூழ்நிலைமைகளிலேயே வாழ்கிறார். மனிதனுடைய சமூகநிலைமையே அவனது சிந்தனையைத் தீர்மானிக்கிறது. வர்க்கச் சமுதாயத்தில், ஒவ்வொரு வர்க்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் சித்தாந்தமும் வேறுபட்ட நிலைகளைப் பிரதிபலிப்பதாகவும் வேறுபட்டவர்க்க நலன்களை வெளிப்படுத்துவதாகவும் உள்ளன. வெவ்வேறு நிலைபாடுகளையும், நலன்களையும், சித்தாந்தங்களையும் கொண்ட இந்த வர்க்கங்களுக்கு இடையிலான வர்க்கப் போராட்டம் இடையறாதுநடந்தவாறே இருக்கிறது. இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் மட்டுமல்லாது சமுதாயத்திலுள்ள வர்க்கங்களுக்கு இடையிலானபோராட்டத்திலும் ஈடுபட்டவாறுதான் மனிதர்கள் இயற்கையைமாற்றுகின்றனர். சமுதாயத்தையும் மாற்றுகின்றனர்; அதே வேளையில் தாமும் மாறுதலுக்கு உள்ளாகின்றனர்.மனிதர்களும், குடும்பங்களும், சமூகமும் மாறிக்கொண்டே இருக்கிறது. முன்பு இருந்தவாறு இன்றைய மனிதன் இல்லை. தனி மனிதர்களிடம்அவர்களின் சிந்தனை முறையிலும் பழக்க வழக்கங்களிலும் நடைமுறைவாழ்க்கையிலும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதை நாம் பார்க்கிறோம். முன்பெல்லாம் குடும்பங்களை அமைத்துக்கொள்வதற்கு இரத்த உறவை அடிப்படையாகக் கொண்டார்கள். குறிப்பாக நமது நாட்டில் சாதியை அடிப்படையாகக் கொண்டார்கள். ஆனால் தற்போது சமூகத்தின் வளர்ச்சியின் காரணமாக இரத்தஉறவு, மற்றும் சாதி தனது ஆதிக்கத்தை இழந்து கொண்டிருக்கிறது, அதனிடத்தில் பணத்தின் ஆதிக்கம் முதன்மையான பங்குவகிப்பதை நாம் பார்க்கிறோம். ஆகையால்குடும்பத்தை அமைத்துக்கொள்ள சாதியை மட்டும் இப்போது பார்ப்பதில்லைகூடுதலாக பணத்தை அல்லது பொருளாதார செல்வத்தையே முதன்மையாகப் பார்க்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். சில வேளைகளில் சாதியைக்கூட புறக்கணித்துவிட்டு பொருளாதாரத்தை மட்டும்அடிப்படையாகக் கொண்டு குடும்பங்கள் அமைக்கப்படுவதை நாம்காணலாம். மனிதர்கள் இயல்பாகவே தங்களது பொருளாதார நிலையை உயர்த்துவதற்காகவே போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.இதில் சாதிவேறுபாடுகள் இல்லை. அதற்கான முயற்சியில் ஈடுபடும் போது தடைஏற்படுமாயின் அந்தத் தடையை எதிர்த்து மனிதர்கள் சாதிவேறுபாடில்லாமல் அனைத்து சாதியினரும் பொருளாதாரத்துக்காகப்போராடுவதை நாம் பார்க்கலாம். இதனையே வர்க்கப் போராட்டம் என்றுமார்க்சியம் சொல்கிறது. ஆகவே பொதுவாகவே வர்க்கப் போராட்டத்தையாரும் தூண்ட வேண்டிய அவசியம் இல்லை. வர்க்கங்களுக்குஇடையிலான போராட்டமானது தன்னியல்பாகவே நடக்கும். உதாரணமாகஇங்கு அரசு ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் போராடினார்களேஅவர்களில் பலதரப்பட்ட சாதியினர் இருந்தார்களே, அவர்கள் நடத்தியப்போராட்டம் சாதிப் போராட்டம் இல்லையே, இத்தகையப் போராட்டங்களேவர்க்கப் போராட்டம் ஆகும். இத்தகையப் போராட்டங்கள் தொடர்ந்துநடக்கும். இத்தகைய வர்க்கப் போராட்டங்களை திசைதிருப்பவே மக்களைசாதிகளாகப் பிளவுபடுத்தி சாதிப் பிரச்சனையை சிலர் முதன்மைப் படுத்துகிறார்கள். எனினும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களை பிறசாதியினர் இழிவாகப் பார்க்கிறார்கள், மேலும் இழிவாக நடத்துகிறார்கள்என்பது உண்மையே இந்த இழிவுகளையும் தீண்டாமையையும் எதிர்த்துப்போராட வேண்டும் என்பதும் நியாயமானதே ஆகும். என்றாலும் உடமையற்ற ஏழை தொழிலாளர்களை செல்வம் படைத்தவர்கள் எப்படி நடத்துகிறார்கள்? தனது சொந்த சாதியைச் சேர்ந்த ஏழையை அதே சாதியைச் சேர்ந்த பணக்காரர் இழிவுபடுத்தவில்லையா? அத்தகைய இழிவையும் எதிர்த்துப் போராடுவது அவசியம் இல்லையா? ஆகவே இழிவுபடுத்துவது சாதி அடிப்படையில் மட்டுமல்ல, பொருளாதார அடிப்படையிலும் நடக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
சமுதாயத்தில் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு ஒழிந்துவிட்டால் இழிவுபடுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகவே சாதி இழிவை ஒழிப்பதற்கு இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. இதற்கு மாறாக தலித்தியவாதிகள் உட்பட சாதியவாதிகள், முன்வைக்கும் சாதி மறுப்புத் திருமணமும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையும் சாதிய இழிவையும் தீண்டாமைக் கொடுமையையும் தீர்க்காது, இதுவரை அந்தக் கொள்கை இந்தக் கொடுமைகளை ஒழித்துக்கட்டவில்லை. ஆகவே சமுதாயத்திலுள்ள அனைத்து மனிதர்களுக்குமான தேவைகள் பூர்த்தி செய்துகொள்வதற்கான நிலைமையை ஏற்படுத்துவதற்கு நாம் பாடுபட வேண்டும். அதற்கு தடையாக உள்ள கொள்கைகளையும், அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அரசியல் கட்சிகளையும், இந்த அரசமைப்பையும் எதிர்த்துப் ஏழை மக்கள் அனைவரும் நடுத்தர மக்களையும் இணைத்துக்கொண்டு போராடுவதுதான் இங்கே வறுமையை ஒழிக்கவும், சாதி இழிவு மற்றும் தீண்டாமையை ஒழிப்பதற்கான விஞ்ஞானப்பூர்வமானஒரே வழியாகும்.
மார்க்சும் எங்கெல்சும் கூறியதாவது: இந்த கம்யூனிச உணர்வைப் பெருமளவில் உற்பத்தி செய்வது, கம்யூனிச இலட்சியம் வெற்றியடைவது ஆகிய இரண்டுக்குமே மனிதர்கள் பெருமளவில் மாறுதலுக்கு உள்ளாவது கட்டாயத் தேவையாகும்; ஒரு நடைமுறை இயக்கத்தில்தான், புரட்சிகரமான ஒரு நடைமுறை இயக்கத்தில்தான் இது நடந்தேறும். எனவே, புரட்சி என்பது கட்டாயத்தேவையாகிறது. ஏனெனில் புரட்சி இல்லாமல் ஆளும் வர்க்கம் தூக்கிஎறியப்பட முடியாது என்பது மட்டுமல்லாமல், புரட்சிகர வர்க்கம், தன்னைக்காலங்காலமாக பீடித்திருக்கும் அழுக்குகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்கும், அமையவுள்ள புதிய சமுதாயத்துக்கு ஏற்ப தன்னைத்தகவமைத்துக் கொள்வதற்கும் புரட்சி கட்டாயத் தேவையாகிறது.
இதனையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சமூகப் புரட்சி என்ற காலங்காலமான புரட்சிப் போராட்டங்களின் ஊடாக உணர்வுப் பூர்வமாக பயணித்துத்தான் பாட்டாளி வர்க்கம் சமுதாயத்தை மாற்றியமைப்பதுடன் தன்னையும் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். உழைக்கும் மக்கள் அனைவரும் புனிதமானவர்கள் என்று நாம் கருதக் கூடாது. உழைக்கும் மக்கள் பக்கம் நியாயம் இருந்தபோதும், உழைக்கும் மக்களிடமும் பிற்போக்கான கொள்கைகளும் பழமையான நடைமுறைகளும் இருக்கும். இந்த பிற்போக்கு கொள்கைகள் மற்றும் கருத்துக்களும் நடைமுறைகளையும் அவர்கள் களைய வேண்டுமானால் உழைக்கும் மக்கள் ஒரு புரட்சிகரமான கொள்கை மற்றும்நடைமுறைகளைக் கொண்டுள்ள கட்சியில் இணைந்து புரட்சிகரமான இயக்கத்தில் ஈடுபட வேண்டியது அவசியமாகும். ஒரு புரட்சிகரமான இயக்கத்தை உழைக்கும் மக்கள் நடத்துவதன் மூலமே பிற்போக்கான அரசை தூக்கி எறிந்துவிட்டு, முற்போக்கான அரசை நிறுவ முடியும்.
இவ்வாறு உருவாக்கப்படும் ஒரு புரட்சிகரமான அரசின் மூலமே உழைக்கும் மக்களுக்கான உன்னதமான வாழ்வுக்கு உத்தரவாதம் கிடைக்கும். இவ்வாறு மக்களால் நடத்தப்படும் புரட்சியானது ஆயுதம் தாங்கிய புரட்சியாக மட்டுமே இருக்க முடியும் என்று கருதுவது தவறாகும். அந்தப் புரட்சியானது ஆயுதம் தாங்கிய வடிவிலும் இருக்கலாம், அரசியல் வடிவிலும் இருக்கலாம், பொருளாதார வடிவிலும் இருக்கலாம், சித்தாந்த வடிவிலும் இருக்கலாம். ஆகவே புரட்சிக்கான வடிவம் எப்படி இருந்த போதும் அதில் உழைக்கும் மக்களின் கூட்டு முயற்சி என்பதுதான் அடிப்படையாகும். அதாவது உழைக்கும் மக்கள் கூட்டாக ஒன்றுதிரண்டு செயல்பட்டு சாதிப்பதுவே புரட்சி ஆகும். இத்தகைய புரட்சியை உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு நடத்துவதன் மூலமாகவே சமுதாயமானது புரட்சிகரமாக மாற்றியமைக்கப்படுவதோடு கூடவே சமூகத்திலுள்ள ஒவ்வொருமனிதர்களிடமுள்ள பிற்போக்கு கொள்கைகளும்பழக்கவழக்கங்களும் களையப்பட்டு புரட்சிகரமானவர்களாகஒவ்வொருவரும் மாறுதலுக்கு உள்ளாவார்கள். ஆகவே ஒருகம்யூனிஸ்டுக் கட்சியானது முதலில் ஒரு புரட்சிகரமான கொள்கையைவகுக்க வேண்டும், அடுத்து புரட்சிகரமான மக்களை ஒன்றுதிரட்டவேண்டும், மக்களை புரட்சிகரமான போராட்டங்களில் ஈடுபடுத்த வேண்டும். அதன் மூலம் சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றுவதோடு மக்களையும்புரட்சிகரமான முறையில் மாற்றிட வேண்டும்.மக்கள் எந்தளவுக்கு கம்யூனிச உணர்வு ஊட்டப்படுகிறார்களோ, அதே போல் கம்யூனிச இலட்சியம் எந்தளவுக்கு வெற்றி பெறுகிறதோ அந்தளவுக்குசமூகம் மாறும்,சமூகத்திலுள்ள மக்களிடத்திலும் மாற்றங்கள் ஏற்படும்.சமூகத்தில் மாற்றம் ஏற்பட மனிதர்களிடத்தில் மாற்றங்கள் ஏற்படுவதுஅவசியமாகும். அதே போலவே மனிதர்களிடத்தில் மாற்றங்கள் ஏற்பட சமூக மாற்றம் அவசியமாகும்.இவ்விரண்டிற்கும் இடையில் இயங்கியல் உறவு உள்ளது. அதாவது ஒன்றில் ஏற்படும் மாற்றமானது பிறிதொன்றில் ஏற்படும் மாற்றத்துக்கு காரணமாக உள்ளது. இந்த இயங்கியல் உறவைப்புரிந்துகொண்டு கம்யூனிஸ்டுகள் செயல்பட்டால் அவர்களுக்கு வெற்றி நிச்சயம்.
எனவே, மாறுதல் நமக்குத் தேவை என்பதையும், நாம் மாறத் தகுதியுள்ளவர்கள் என்பதையும் நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.அப்பழுக்கு அற்றவர்களாகவும், புனிதர்களாகவும், மாற்றம் தேவைப்படாதவர்களாகவும் நம்மை நாமே கருதிக்கொள்ளக் கூடாது. சமூக மாற்றத்துக்கானப் போராட்டத்தில் ஈடுபடுகையில் நம்மை மறுவார்ப்பு செய்து கொள்ளும் பணியை எதிர்கொள்வது என்பது நம்மை தாழ்த்திக்கொள்ளும் விசயமல்ல. சமூக முன்னேற்றத்தின் புறநிலை விதிகள் நமது மறுவார்ப்பை கோருகின்றன. நம்மை மறுவார்ப்பு செய்து கொள்ளாவிட்டால் நாம் முன்னேற முடியாது அல்லது சமுதாயத்தை மாற்றியமைக்கும் கடமையை நாம் நிறைவேற்ற முடியாது.
கம்யூனிஸ்டுகளாகிய நாம் எவ்விதமான குறைபாடுகளும் இல்லாத புனிதமானவர்கள் இல்லை. சாதாரணமான மனிதர்களிடமுள்ள குறைபாடுகளும் நம்மிடம் இருக்கும். ஏனெனில் சாதாரணமான மனிதர்களாகவே பிறந்து இந்த சமூகத்தில் சாதாரணமான மனிதர்ளாகவே நாம் வாழ்ந்து வந்தோம். இப்போதும் நமது வாழ்க்கையானது சாதாரணமான மனிதர்களுடன் சேர்ந்தே நாம் ஒரு பக்கம் சாதாரணமான மனிதர்களாகவே வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அதே வேளையில் புரட்சிகரமான கம்யூனிச அமைப்பில் சேர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கும் நாம் கம்யூனிசப் பண்புகளை கற்று அதனை புரிந்துகொண்டு கம்யூனிஸ்டுகளாக மாறிக்கொண்டு இருக்கிறோம். இவ்வாறு மாறிக்கொண்டிருக்கும் நாம், நம்மிடமுள்ள பிற்போக்கு கருத்துக்களையும் நடைமுறைகளையும் களைந்து கொண்டே புதிய வகையிலான புரட்சிகரமான கருத்துக்களையும் நடைமுறைகளையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய இடைக்கட்டத்திலேயே வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஆகவே மார்க்சியஆசான்களது போதனைகளின் அடிப்படையில் நமக்கு மாற்றங்கள் தேவை என்பதை உணர வேண்டும். மாற்றம் என்று குறிப்பிடும் போது பிற்போக்கான மாற்றத்தை நாம் குறிப்பிடவில்லை, மாறாக புரட்சிகரமான மாற்றத்தையே இங்கு குறிப்பிடுகிறோம்.
ஒரு புரட்சிகரமான அமைப்பில் சேர்ந்து செயல்படும் போது அந்த அமைப்பானது போதுமான அளவு முன்னேறவில்லை என்றால் நம்மிடம் மாற்றங்கள் தேவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுஎன்ன வகையான மாற்றங்கள் நமக்குத் தேவை என்பதைப் பற்றி நாம் பரிசீலனை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு பரிசீலனை செய்து தேவையான மாற்றங்களை செய்து புதிய வழிமுறையில் செயல்பட்டால் மட்டுமே அந்த அமைப்பு முன்னேறும். தேவையான மாறுதல்களை அந்த அமைப்பு செய்யத் தவறினால்நிச்சயமாக அந்த அமைப்பு முன்னேறாது.
நம்மிடத்திலுள்ள குறைகளை களைந்துகொள்வதற்கான முயற்சியை நாம்இழிவாகக் கருதக் கூடாது. அதாவது நம்மிடம் குறைகள் உள்ளது என்பதைவெளிப்படுத்தினால் நம்மை பிறர் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்று கருதக்கூடாது. பிறர் நம்மை ஏளனமாகப் பார்த்தாலும் பரவாயில்லை, நமதுகுறைகளை வெளிப்படுத்தி நம்மை மறுவார்ப்பு செய்து கொள்வதன் மூலமே நாம் முன்னேறும் போது, நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் வெட்கிதலைகுனிய நேரிடும். ஆகவே நம்மிடமுள்ள குறைகளைக் கண்டு நாம்வேதனைப் படவேண்டிய அவசியம் இல்லை, அந்தக் குறைகளிலிருந்துநாம் மீண்டுவர முடியும். அதற்கான புதிய வழிமுறைகளைப் பின்பற்றிசாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு நம்மை மறுவார்ப்புசெய்துகொள்ள வேண்டும்.
நவீனகால வரலாற்றிலேயே ஆக மிக முன்னேறிய புரட்சியாளர்களாகவிளங்குவோர் கம்யூனிஸ்டுகளாகிய நாம்தான்; இந்த சமுதாயத்தையும்உலகையும் மாற்றியமைக்கும் பொறுப்பு நம் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளது;இந்த மாறுதலுக்கான இயக்கத்தின் இயங்கு சக்தியாக நாம்தான்இருக்கிறோம். எதிர்ப்புரட்சியாளர்களுக்கு எதிரான விட்டுக் கொடுக்கமுடியாத இந்தப் போராட்டத்தின் வாயிலாக கம்யூனிஸ்டுகளாகிய நாம்தான்சமுதாயத்தையும் உலகையும் மாற்றுகிறோம்; அதே வேளையில் நம்மைநாமே மாற்றியமைத்துக் கொள்கிறோம்.
இங்கே கம்யூனிஸ்டுகள் என்றால் யார்? என்பதை லியு ஷாவோகிவிளக்குகிறார். இதன் மூலம் ஒருவர் கம்யூனிஸ்டாக ஆக வேண்டுமானால் அவரது சிந்தனை முறையும் செயலும் எப்படி இருக்க வேண்டும் என்பதை லியு ஷாவோகியின் போதனையிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு கம்யூனிஸ்ட் சீர்திருத்தவாதியாக இல்லாமல் புரட்சியாளராக இருக்க வேண்டும். இந்த சமூகத்தையும் உலகையும் புரட்சிகரமாக மாற்றுவதற்காகப் பாடுபட வேண்டும். மாறாக நிலவுகின்ற பிற்போக்கான சமூக அமைப்பை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடக் கூடாது. பிற்போக்கான சமூக அமைப்பையும், பிற்போக்கு அரசு அமைப்பையும் நொறுக்குவதற்காக மக்களைத் திரட்டிப் பாடுபட வேண்டும். பிற்போக்கான சமூக அமைப்பை மாற்றுவதற்கான கடமைதான் கம்யூனிஸ்டுகளின் கடமை என்பதை கம்யூனிஸ்டுகள் உணர வேண்டும். அந்தக் கடமையை செய்வதற்கு தியாகங்கள் புரிய வேண்டும். சமூக மாற்றத்துக்கு எதிராக சதிகள் செய்து புரட்சிக்கு எதிராக இருப்பவர்களின்கருத்துக்களையும் செயலையும் எதிர்த்து விடாப்பிடியாகப் போராட வேண்டும்.மார்க்சிய லெனினிய சித்தாந்த அரசியலுக்கு எதிரானவர்களையும் அவர்களது கருத்துக்களையும் மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுத்தும் சித்தாந்தப் பணியை ஒருபோதும் கைவிடாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அவ்வாறு எதிர்ப்புரட்சிகர சந்தர்ப்பவாதத்தை முறியடிப்பதன் மூலமே மார்க்சிய லெனினியத்தை பாதுகாத்து மக்களை சோசலிச சிந்தனை முறையில் வளர்த்து, மக்களைத் திரட்டி கம்யூனிஸ்டுகள் புரட்சியை நடத்திட முடியும். இவ்வாறு கம்யூனிஸ்டுகள் மக்களைத் திரட்டி சமூக மாற்றத்திற்காக புரட்சிகரமாக போராடுவதன் மூலம்பிற்போக்கு சமூகத்தை கம்யூனிஸ்டுகள் மாற்றியமைப்பதோடு தங்களிடம் உள்ள பிற்போக்கு தன்மையையும் ஒழித்து தம்மைத் தாமே மாற்றிக்கொள்ள முடியும், மாற்றிக்கொள்ளவும்வேண்டும். இதுதான் ஒருவர் கம்யூனிஸ்டாக ஆவதற்கான வழி என்று லியுஷாவோகி நமக்குப் போதிக்கிறார்.எதிர்ப் புரட்சியாளர்களுக்கு எதிராக ஒவ்வொரு அரங்கிலும் போராட்டங்கள் தொடுப்பதன் மூலம் கம்யூனிஸ்டுகள் தம்மைத் தாமே மறு உருவாக்கம் செய்துகொண்டே தீர வேண்டும் என்று நாம் கூறுவதன் பொருள் என்ன?
இத்தகைய போராட்டங்களின் வாயிலாகத்தான் தாம் முன்னேறவும் தமது புரட்சிகர தரத்தையும் செயலாற்றலையும் கம்யூனிஸ்டுகள் மேம்படுத்திக் கொள்ளவும் வேண்டும் என்பதே இதன் பொருளாகும். முதிர்ச்சியுறாத ஒரு புரட்சியாளர் புரட்சிகரமான முறையில் புடமிடப்படுவதும் சுய வளர்ப்புப்பயிற்சியை மேற்கொள்ளுவதும் நெடிய மறுவார்ப்புக்கு உள்ளாவதுமானநீண்டகால வளர்ச்சிப் போக்கினூடாக செல்ல வேண்டும்; அதன் பின்னரேபுரட்சியின் விதிகளை நன்கு உள்வாங்கி தேர்ச்சியான முறையில்செயல்படுத்தும் திறனுடையவராவதும் முதிர்ச்சியும் தேர்ச்சியும் பெற்றதொரு புரட்சியாளராக வளர்ச்சி அடைவதும் சாத்தியப்படும்.
இங்கே ஒரு கம்யூனிசப் புரட்சியாளர் தன்னை தொடர்ந்து புரட்சியாளராக பாதுகாத்துக் கொள்வதற்கும், புரட்சியாளராக தொடர்ந்து வளர்த்துக்கொள்வதற்கும் ஒரு கம்யூனிஸ்ட் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு லியுஷாவோகி வழிகாட்டுகிறார். எதிர்ப் புரட்சியாளர்களையும் அவர்களதுகருத்துக்களையும் ஒவ்வொரு அரங்கிலும் அதாவது அரசியல் அரங்கு, பொருளியல் அரங்கு, சித்தாந்த அரங்கு, அமைப்புத்துறை அரங்கு மற்றும் பண்பாட்டுத் துறையிலும் ஒரு கம்யூனிஸ்டு எதிர்த்துப் போராட்டங்களைத் தொடுக்க வேண்டும். அதன் மூலம் எதிர்ப்புரட்சிகர அதாவது மக்களுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் நடைமுறையை மக்களிடம் அம்பலப்படுத்தி முறியடிப்பதோடு கூடவே நம்மிடமும் அத்தகைய தவறான கொள்கை மற்றும் நடைமுறைகளை நாம் புரிந்து கொண்டு அந்த தவறுகளை நாம் கைவிடுவதற்கான வாய்ப்பும் வழிமுறையையும் நாம் கற்றுக்கொள்வோம்.
மார்க்சிய லெனினியத்துக்கு எதிரானவர்களையும் அவர்களின் கருத்துக்களையும் நாம் எதிர்த்துப் போராடுவதன் மூலம்தான் நம்மை நாமே வளர்த்துக் கொள்ள முடியும். இங்கே சிலர் அல்லது சில அமைப்புகள் மார்க்சியத்துக்கு எதிரான கருத்துப் பிரச்சாரம் செய்பவர்களை எதிர்த்து சித்தாந்தப் போராட்டத்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை உணராமல், அவர்கள் செய்து செய்து பழக்கப்பட்ட வழியிலேயே செயல்பட்டு தங்களது சிந்தனையையும் நடைமுறையையும் குறுக்கிக்கொண்டு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுற்றி சுற்றி வருகிறார்கள். தங்களது அணிகளுக்கும் மார்க்சிய சித்தாந்த அரசியலை போதிப்பதும் இல்லை, மார்க்சிய சித்தாந்தத்துக்கு எதிரானவற்றை எதிர்த்தும் போராடுவதும் இல்லை. அதன் காரணமாக மார்க்சியத்துக்கும் மக்களுக்கும் எதிரான கருத்துக்கள் மேலும் மேலும் வளர்ந்து ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருப்பதோடு கூடவே தமது சொந்த அணிகளும் முன்னேறாமல் தேங்கியுள்ளார்கள். ஆகவே ஒரு கம்யூனிச அமைப்பிலுள்ள தோழர்கள் அனைவரும் தொடர்ந்து தங்களது சித்தாந்த அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் அதற்கான நீண்ட பயிற்சி பெற வேண்டும். அதன் மூலம் மட்டுமே அமைப்புகளிலுள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் முதிர்ச்சியும் தேர்ச்சியும் பெற்று திறமையான புரட்சியாளர்களாக வளர வேண்டும்.
ஆகவே ஒரு கம்யூனிச அமைப்பிலுள்ள தோழர்கள் எந்தளவுக்கு மார்க்சியதத்துவ அரசியலில் தேர்ச்சி பெற்றுள்ளார்களோ, அதனை நடைமுறையில்செயல்படுத்தும் திறனை வளர்த்துள்ளார்களோ அந்தளவுக்குத்தான் ஒருகம்யூனிச அமைப்பானது சிறந்த புரட்சிகரமான அமைப்பாக வளர முடியும்.இதற்கு மாறாக அமைப்பிலுள்ள தலைவர்கள் மட்டும் திறமையானவர்களாக இருந்தால் மட்டும் அந்த அமைப்பு சிறந்த அமைப்பாக இருக்க முடியாது. மேலும் அந்த அமைப்பு நிச்சயமாக சிறந்த அமைப்பாக வளரவே முடியாது. ஏனென்றால், முதலாவதாக, பழைய சமுதாயத்தில் பிறந்து வளர்ந்தஒப்பீட்டளவில் தேர்ச்சியுறாத புரட்சியாளர் பழைய சமுதாயத்தினுடைய பல்வேறு சித்தாந்தங்களின் மீதமிச்சங்களைச் (பழைய சமுதாயத்தின்தப்பெண்ணங்களையும், பழக்கவழக்கங்களையும்) சுமந்து வருகின்றனர்.
இரண்டாவதாக, அவர் நீண்டகாலப் புரட்சிகர நடவடிக்கையில்ஈடுபட்டவராக இருப்பதில்லை. இதனால், எதிரியைப் பற்றியோ மக்களைப் பற்றியோ அல்லது சமுதாய வளர்ச்சியினுடைய விதிகளைப் பற்றியோபுரட்சிப் போராட்டம் பற்றியோ போதுமான புரிதல் அவருக்கு இருப்பதில்லை. இத்தகைய பாதகமான நிலைமைகளை மாற்றுவதற்கு, கடந்தகால புரட்சி அனுபவங்களில் (புரட்சிகர முன்னோர்களின்அனுபவங்களில்) இருந்து கற்பதுடன் நிகழ்கால புரட்சி நடவடிக்கைகளில் அவர் நேரடியாகப் பங்கேற்க வேண்டும்; இந்தப் புரட்சிகர நடைமுறையில் ஈடுபடுகையில், எல்லா வகையான எதிர்ப் புரட்சியாளர்களை எதிர்த்தும் போராட வேண்டும். இவை அனைத்தையும் செய்யும் அதே வேளையில், முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தும் உணர்வுப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்; கடினப்பட்டு கற்பதையும் சுயவளர்ப்புப் பயிற்சியையும் உணர்வுப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு செயல்பட்டால்தான் ஆழ்ந்த அனுபவத்தை அவர் பெற முடியும்.சமுதாய வளர்ச்சி மற்றும் புரட்சிப் போராட்டம் பற்றிய ஆழமானப்புரிதலைப் பெற முடியும். எதிரிகளையும் மக்களையும் பற்றி ஆழமாகப்புரிந்துகொள்ள முடியும். தன்னிடமுள்ள தவறான கருத்துக்களையும் பழக்க வழக்கங்களையும் தப்பெண்ணங்களையும் கண்டறிந்து சரிப்படுத்திக்கொள்ள முடியும். இவ்வாறாக அரசியல் உணர்வு மட்டத்தைஉயர்த்திக்கொள்ள வேண்டும்; தனது புரட்சிகர உணர்வு மட்டத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
தனது புரட்சிகர வேலை முறைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறான வழிமுறைகளைக் கடைபிடித்து தன்னை மறு உருவமைத்துக் கொள்ளவும் தனது அரசியல்உணர்வு மட்டத்தை உயர்த்திக் கொள்ளவும் ஒரு புரட்சியாளர் புரட்சிகர நடவடிக்கையில் பங்கேற்க வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் ரட்சிகர நடவடிக்கையில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்வது கூடாது. மேலும் நடைமுறை வேலையின் போதே சுய வளர்ப்புப் பயிற்சியையும் கற்றலையும் முயன்று மேற்கொள்ள வேண்டும். இவ்வாறெல்லாம் செயல்படாமல் போனால் அவர் ஒருபோதும் முன்னேறமுடியாது.
பழைய சமுதாயமும் இன்றைய சமுதாயமும் ஆகிய இரண்டும் பிற்போக்கான சமுதாயங்களே ஆகும். இத்தகைய பிற்போக்கான சமுதாயத்தில் பிறந்து வாழ்ந்துவரும் நம்மிடையே பிற்போக்கான கருத்துக்களையும், பிற்போக்கான சிந்தனை முறையையும் பிற்போக்கான பழக்கவழக்கங்களையும் இந்த சமூகத்திலிருந்தே கற்றுக்கொண்டுபிற்போக்காளர்களாகவே நாம் இருப்பது இயல்பானதாகும். இத்தகையபிற்போக்காளர்களாக நாம் இருந்த போதும், இந்த சமூகத்தால்பாதிக்கப்பட்டு இந்த சமூகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றஉணர்வைப் பெற்று, சமூக மாற்றத்திற்காகப் பாடுபடும் கம்யூனிசஅமைப்பில் இணைந்து செயல்பட முன்வருவோம். அவ்வாறு ஒருகம்யூனிச அமைப்பில் சேர்ந்துவிட்ட உடனே நம்மிடமுள்ளபிற்போக்கானவற்றை விட்டுவிட மாட்டோம். மேலும் தற்போதுதான் கம்யூனிச அமைப்பில் சேர்ந்திருப்பதால் நீண்டகாலமாக புரட்சியில்ஈடுபட்டு அனுபவத்தைப் பெற்றிருக்க மாட்டோம். இதன் காரணமாக நமக்குமக்களின் எதிரிகளைப் பற்றியும், மக்களைப் பற்றியும், சமூகத்தின்வளர்ச்சிக்கான விதிகளைப் பற்றியோ புரட்சிகரமான போராட்டங்கள்பற்றியோ தேவையான புரிதலையும் அறிவையும் பெற்றிருக்க மாட்டோம்.
இவையெல்லாம் நமது ஆரம்ப காலங்களில் உள்ள பாதகமானஅம்சங்களாகும். இத்தகைய பாதகமான அம்சங்களை மாற்றுவதற்கு நாம்கடந்த காலங்களில் நமது முன்னோர்கள் நடத்திய புரட்சிகரமானபோராட்டங்களின் அனுபவங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும், அதன்மூலம் புரட்சியின் மீது நம்பிக்கை கொண்டு, புரட்சி நடத்திட வேண்டியதுநமது கடமை என்று உணர வேண்டும். தற்போதைய சூழலில் இங்குஎவ்வாறு புரட்சியை நடத்த வேண்டும் என்பதை பகுத்தறிய வேண்டும்.தற்போது புரட்சியை நடத்துவதற்கு ஆர்வமாக உள்ள புரட்சிகரமானஅமைப்பில் நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும். புரட்சிகரமானபோராட்டங்களில் நாம் ஈடுபட வேண்டும். அத்தகைய போராட்டங்களில்நாம் ஈடுபடும் போது மக்களுக்கு துரோகம் செய்யும்எதிர்ப்புரட்சியாளர்களை, மக்களிடம் அம்பலப்படுத்தி, அவர்களை எதிர்த்தும்நாம் போராட வேண்டும். இத்தகைய போராட்டங்களை நாம்உணர்வுப்பூர்வமாக செய்ய வேண்டும். இத்தகைய போராட்டங்களின் மூலம் நமக்கு கிடைக்கும் அனுபவங்களிலிருந்து புதிய வகையான கோட்பாட்டுமுடிவிற்கு நாம் வர வேண்டும். அதன் மூலம் நாம் சுயமாக கோட்பாட்டுஅறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் எதிரிகளையும்மக்களைப் பற்றியும், புரட்சி பற்றியும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் நம்மிடமுள்ள தவறுகளையும் அதாவது நம்மிடமுள்ள தவறானகருத்துக்கள், தவறான பழக்கவழக்கங்கள், தப்பெண்ணங்களைப் புரிந்துகொண்டு அதனை களைந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நமதுஅரசியல் உணர்வு மட்டத்தையும், புரட்சிகரமான உணர்வு மட்டத்தையும்நமது வேலை முறையையும் வளர்த்துக்கொண்டு புரட்சிகரமானபோராட்டங்களில் நாம் ஈடுபட வேண்டும். இவ்வாறு நமதுசித்தாந்தத்தையும் நடைமுறையையும் வளர்த்துக்கொண்டு செயல்படுவதன்
மூலமே நாம் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டாக வளர முடியும் தொடர்ச்சியாக
மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலின் நூல்களுக்கும் பின்னர் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் புகழ் பெற்ற புத்தகம் `சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?’ சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரபல தலைவரான லியூ – ஷோ – சி கட்சி ஊழியர்களின் கூட்டத்தில் ஆற்றிய உரையே இந்நூல்! இந்தச் சொற்பொழிவு சீனாவின் கம்யூனிஸ்ட் இயக்கத்தை மையமாக வைத்து நிகழ்த்தப்பட்டது என்றாலும் கட்சி அமைப்பு, அதன் தன்மை, புரட்சிகர தொலைநோக்குப் பார்வை, கட்சி உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு, அவர்களை சிறந்த கம்யூனிஸ்ட் ஆக்குவதற்கான வழிவகைகள் என்ற முறையில் உலகம் முழுவதிலுமுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் சிறந்த வழிகாட்டும் நூலாகும்.
அதன் சில முக்கிய அம்சங்கள்:
- கோட்பாடு மற்றும் கொள்கை சார்ந்திருக்கிற பிரச்சனைகளில் சமரசம் இல்லாத, சரணாகதி அடையாத உறுதியோடு, கட்சி கோட்பாடுகளை பாதுகாக்க போராட வேண்டும். அதே நேரத்தில் கொள்கை, கோட்பாடுகள் தொடர்பில்லாத சாதாரண நடைமுறை சர்ச்சைகள் வந்தால், கூடிய வரை சமரசம் செய்து கொள்ள வேண்டும்.
- கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களான நாம்தான் நவீன கால வரலாறில் மிகவும் வளர்ச்சி பெற்ற புரட்சிவாதிகளாவோம். சமூகத்தையும், உலகையும் மாற்றி அமைப்பதற்கு இன்று போர்ப்படையாகவும், முன்னோட்டச் சக்தியாகவும் இயங்குவது நாம் தான்.
- கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களின் பயிற்சியானது ஒரு புரட்சிகர பயிற்சியாகும். புரட்சிகர நடைமுறையின் நலன்களுக்குப் பாடுபடுவதும், வெகு ஜனங்களின் நடைமுறை புரட்சி இயக்கத்தை மேலும் அதிகமாக பயன்தரத் தக்கவாறு வழி நடத்திச் செல்வதும்தான் நம்முடைய பயிற்சியின் ஒரே நோக்கமாகும்.
- மார்க்சியம் – லெனினியம் என்பது தான் தொழிலாளி வர்க்கப் புரட்சியின் விஞ்ஞானம். முழுக்க முழுக்க தொழிலாளி வர்க்க கண்ணோட்டத்தை மேற்கொள்பவர்களும், தொழிலாளி வர்க்கத்தின் லட்சியத்தை தனது சொந்த லட்சியங்களாக ஏற்றுக் கொள்பவர்களும் தான் மார்க்சியம் – லெனினியத்தில் பரிபூரண ஞானமும், பாண்டித்தியமும் பெற முடியும்.
- சித்தாந்தப் பயிற்சி என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு வர்க்கங்களின் பொருளாதார, அரசியல் கோரிக்கைகளைப் பிரதிபலிக்கும் ஒன்றுக்கொன்று விரோதமான கருத்துக்களிடையே, நடைபெறும் ஒரு போராட்டத்தைக் குறிக்கிறது என்று நான் கருதுகிறேன். மனிதனின் சகல நடவடிக்கைகளும் அவனுடைய சித்தாந்தத்தால் வழி காட்டப்படுகிறது.
- கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களின் அடிப்படையான பொதுவான கடமை என்ன? கம்யூனிசத்தை அமைப்பதே, இன்றுள்ள உலகை ஒரு கம்யூனிஸ்ட் உலகாக மாற்றுவதே அந்தக் கடமை.
- கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எல்லா சூழ்நிலைகளிலும் தன் சொந்த நலன்களை கட்சியின் நலன்களுக்கு பரிபூரணமாகவும், நிபந்தனையின்றியும், கீழ்ப்படுத்துகிறாரா என்பதைக் கொண்டே கட்சிக்கும் புரட்சிக்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் அவர் செலுத்தும் விசுவாசத்தை மதிப்பிட வேண்டும்.
- சொந்த நலன்கள் கட்சியின் நலன்களுக்கும், பகுதி நலன்கள் பூரண நலன்களுக்கும், தற்காலிக நலன்கள் நீண்ட கால நலன்களுக்கும் ஒரு நாட்டின் நலன்கள் முழு உலகின் நலன்களுக்கும் கீழ்ப்படுத்தப்பட வேண்டும் என்பது மார்க்சிய – லெனினியக் கோட்பாடு ஆகும்.
- சொந்த நலனைவிட கட்சி நலனே பிரதானமானவை. இதுதான் கட்சி உறுப்பினர்களின் மிக முக்கியமான கோட்பாடாகும். கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் தன் சித்தாந்தத்தில் இந்தக் கருத்தை மிகவும் உறுதியாக நிலைநாட்ட வேண்டும். இதைத்hன் நாம் அடிக்கடி `கட்சி மனப்பான்மை’, `கட்சி உணர்வு’ `ஸ்தாபன உறவு’ என்று கூறி வருகிறோம்.
- நம் தோழர்கள் கட்சியின் நலன்களுக்குப் புறம்பான சொந்த நோக்கங்களைத் கொண்டிருக்க கூடாது. நம் கட்சி உறுப்பினர்களின் சொந்த நோக்கங்கள் கட்சியின் நோக்கங்களின் ஒரு பகுதியாகவே இருக்க முடியும்.
- தொழிலாளி வர்க்கத்தின், மனித குலத்தினுடைய விடுதலையின் நலன்களை அல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வேறெந்த நலனோ, நோக்கமோ கிடையாது.
- சில சமயங்களில் உறுப்பினர்களின் சொந்த நலன்கள், கட்சி நலனுக்கு விரோதமாக இருந்தால் உறுப்பினர் தன் சொந்த நலனை நிபந்தனையின்றி தியாகம் செய்ய வேண்டும்.
- கட்சி உறுப்பினர் என்பவர் சாதாரண ஆள் அல்ல. அவர் உணர்வுப்பூர்வமான தொழிலாளி வர்க்க முன்னணிப் போர் வீரராவார்.
- கட்சி உறுப்பினர் தங்கு தடையின்றி முழு மனதுடன் கட்சியின் நலன்களுக்கு கீழ்ப்படிய வேண்டும். அவர் தன்னிடம் கறாராக இருக்க வேண்டும். பொது நலக் கண்ணோட்டமுடையவராக இருக்க வேண்டும். தனக்கென சொந்தமான நோக்கங்களையோ, இச்சைகளையோ கொண்டிருக்கக் கூடாது. எல்லா விஷயங்களிலும் தன்னைப்பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது. தனக்கு உயர்ந்த பதவி தரவில்லையென்றோ, தன்னைப் போற்றி புகழவில்லை என்றோ கட்சி மீது புகார் செய்து கொண்டிருக்கக்கூடாது. கம்யூனிஸ்டுகள் சுய திருப்தி மனப்பான்மையோ அல்லது கர்வமோ கொண்டிருக்கக்கூடாது.
- பிரமைகளில் மூழ்கிக் கிடப்பதும், பயன்தரத்தக்க நடைமுறை வேலைகளையும், போராட்டத்தையும் கண்டு அஞ்சுவதும் குட்டிபூர்ஷ்வாக்களின் குண விசேஷங்களாகும்.
- கட்சியும், கட்சியின் தலைவர்களும் கட்சி உறுப்பினர்களின் பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு காணும் பொழுது அவர்களுடைய வேலை நிலைமைகள், வாழ்க்கை நிலைமைகள், கல்வி நிலைமைகள் முதலியவற்றில் கவனம் செலுத்தி அவர்கள் கட்சிக்காக சிறந்த முறையில் செயலாற்றுவதற்குமுன் தங்களை விருத்தி செய்து கொள்வதற்கும், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர லட்சியம் பற்றி தங்களுடைய உணர்வை உயர்த்தி செழுமைப்படுத்திக் கொள்வதற்கும் அவர்களுக்குச் சக்தி அளிக்க வேண்டும்.
இவர்கள் ஒருபோதும் கம்யூனிஸ்ட்டாக முடியாது.
சுரண்டும் வர்க்கங்களின் சித்தாந்தத்தை வன்மையாகப் பிரதிபலிக்கும் தோழர்கள் ஒரு சிலர் கட்சியில் இருந்து வருகின்றனர்.
இவர்கள் பரஸ்பர உதவி, ஒருமைப்பாடு என்னும் மனப்பான்மை கிஞ்சித்தும் இன்றி- கம்யூனிஸ்டுகள் உடைய- தொழிலாளி வர்க்கத்தின் உடைய மகத்தான மிகவும் நேர்மையான இந்த மனப்பான்மை கிஞ்சித்தும் இன்றி- பகைவர்களிடம் கையாளப்படும் முறைகளையே கட்சி உறுப்பினர்கள் சம்பந்தமாகவும் உள்கட்சி பிரச்சனைகள் சம்பந்தமாகவும் பல சந்தர்ப்பங்களிலும் கையாளுகின்றனர்.இத்தகைய சித்தாந்தத்தை உடையவர்கள் கட்சியில் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ளவும், தங்களை வளர்ச்சி செய்து கொள்ளவும் விரும்பி அதன் பொருட்டு மற்றவர்களைப் பிடித்து கீழே இழுக்கின்றனர்.
மற்றவர்களுடைய வளர்ச்சிக்கு இடைஞ்சலாக குறுக்கே நிற்கின்றனர். மற்றவர்களுடைய தலை மீது ஏறி தாண்டி சென்று விட விரும்புகின்றனர். தங்களை விட அதிக திறமை காட்டுபவர்களைக் கண்டு பொறாமைப்படுகின்றனர். மற்றவர்கள் தங்களை விட அதிகமாக முன்னேறிச் செல்வதையோ அல்லது தங்களுடைய நிலைக்கு உயர்ந்து வந்து விடுவதையோ காணும் பொழுது அவர்கள் அதிருப்தி அடைகின்றனர். மற்றவர்களைக் கீழே இருத்தி வைப்பதில் அல்லது தங்களை விட பின்தங்கி இருக்கும் படி செய்வதில் வெற்றி பெற்றாலொழிய அவர்களுக்கு திருப்தி ஏற்படுவதில்லை. மற்றவர்களுக்கு கீழ் இருக்க அவர்கள் விரும்புவதில்லை.
மற்றவர்களுடைய கஷ்டங்களைப் பற்றி அவர்கள் அக்கறை எடுத்துக் கொள்வதே இல்லை. அவர்கள் கவலைப்படுவதெல்லாம் தாங்கள் நன்றாக இருக்க வேண்டும், தாங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே. மற்ற தோழர்களுக்கு கஷ்டங்கள், தடங்கல்கள், மனச்சோர்வு அல்லது தாக்குதல்கள் ஏற்படுவதைக் காணும் பொழுது அவர்கள் இன்புறுகின்றனர். ரகசியமாய் ஆனந்தப் பட்டுக் கொள்கின்றனர் .சிறிதும் அனுதாபம் இன்றி இருக்கின்றனர். மற்ற தோழர்களை கெடுத்துவிட வேண்டும் என்று கூட திட்டமிடுகின்றனர்.’ கிணற்றுக்குள் விழுந்து தவிப்பவர்கள் மீது கல்லை விட்டெறிவதற்கு கூட துணிகின்றனர்’ மற்ற தோழர்களிடம் உள்ள பலவீனங்களையும் அவர்களுடைய கஷ்டங்களையும் பயன்படுத்திக்கொண்டு அவர்களை தாக்கி அவர்களுக்கு கெட்ட பெயர் வாங்கித் தருகின்றனர்.
மேலும் கட்சிக்குள் இவர்கள் கட்சி ஸ்தாபனத்தின் பலவீனங்களைப் பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய சொந்த நோக்கங்களை பூர்த்தி செய்துகொள்ள முயலுகின்றனர். சொந்த முறையில் தங்களுக்கு லாபம் உண்டாகும் படி செய்து கொள்கின்றனர்.
கட்சிக்குள் வதந்திகளைப் பரப்பி விடுவதிலும், மற்றவர்களைப்பற்றி முதுகிற்குப் பின்னிருந்து அவதூறு செய்வதிலும், தோழர்கள் இடையே நிலவும் உறவுகளை உடைத்து சிண்டு முடித்துவிடுவதிலும் இவர்களுக்கு அலாதியான பிரியம் உண்டு. கட்சிக்குள் நடைபெறும் கோட்பாடற்ற தகராறுகள் யாவற்றிலும் பங்கு எடுத்துக் கொள்வதற்கும், எல்லா ‘தர்க்கங்களிலும்’மிகுந்த அக்கறை காட்டுவதற்கும் விரும்புகின்றனர்.
குறிப்பாக,கட்சி மிகுந்த கஷ்டங்களுக்கு இடையே இருக்கும் பொழுது இவர்கள் கட்சிக்குள் இத்தகைய தாக்கங்களை உருவாக்குகின்றனர். அல்லது தீவிரமடையச் செய்கின்றனர் சுருங்கக் கூறுமிடத்து,இவர்கள் மிகக் கொடியவர்கள்.கிஞ்சித்தும் நேர்மை இல்லாதவர்கள். இத்தகைய ஆட்கள் மார்க்சியம் -லெனினியத்தின் தத்துவத்தையும் வழிமுறையையும் கற்று பாண்டித்தியம் பெற முடியும், தொழிலாளிவர்க்க சித்தாந்தத்தை பிரதிபலிக்க முடியும் என்று கூறுவது நகைக்கத் தக்கதாகும். இவர்களுடைய சித்தாந்தம் சுரண்டும் வர்க்கங்களுடைய சித்தாந்தத்தின் தத்ரூபமான பிரதிபிம்பம் என்பதில் சந்தேகமே இல்லை!”
மேலும்
==========================================================
இப்போது ஒரு எடுத்துக்காட்டை கவனிப்போம். கிட்டத்தட்ட ஒரேமாதிரியான சூழ்நிலைகளில் - பணி நிலைமைகளில் புரட்சிகர மக்கள்திரள் போராட்டங் களிலும் புரட்சிகர நடைமுறையிலும் கம்யூனிஸ்டுகள் பலரும் பங்கேற்கின்றனர். ஆனால், இந்தப் போராட்டங்களின் பாதிப்புகள் எல்லா உறுப்பினர்கள் மீதும் ஒரே மாதிரியானதாக இல்லாமற்போக வாய்ப்புகள்உள்ளன. சிலர் வேகவேகமாக முன்னேறு கின்றனர்; சிலர் சற்று பின்தங்கி ஆனால் மெதுவாக முன்னேறுகின்றனர். கட்சியின் சில உறுப்பினர்கள் மிகமிக மெதுவாக முன்னேறுவர். இன்னும் சிலரோ புரட்சிநடைமுறையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கையிலேயே முன்னேற்றம் அடையாமல் ஊசலாட்டத்துக்கு இரையாகி மிகமிகப் பின்தங்கி (தேங்கி) நின்றுவிடுகின்றனர். இதற்கு காரணம் என்ன?
இன்னொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். நமது கட்சியின் எண்ணற்றஉறுப்பினர்கள் நீண்ட பயணத்தில் பங்கேற்றனர்; அது ஒரு கடுமையான புடமிடும் வளர்ச்சிப் போக்காக அமைந்தது; இதில் பங்கேற்ற ஆக மிகப்பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பெருமளவு முன்னேற்றம் அடைந்தனர் என்பதும் உண்மைதான். ஆனால், நீண்ட பயணம் கட்சியில் உள்ளகுறிப்பிட்ட சில உறுப்பினர்கள் மீது எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தியது. நீண்ட பயணத்தில் பங்கேற்றுக் கொண்டிருந்த போதே சோதனையான போராட்டங் களின் முன் சிலர் மலைத்து தேக்கமடைந்தனர்;சிலர் பின்வாங்கி புறமுதுகிட்டு ஓடவும் திட்டமிட்டனர்; மற்றவர்களின் நெருக்குதலுக்கும் அற்ப ஆசைகளுக் குமான தூண்டுதலுக்கும் இரையான சிலர் புரட்சிகர படை வரிசைகளிலிருந்து ஓடினர். எண்ணற்ற கட்சி உறுப்பினர்கள் தோளோடு தோள் நின்று நீண்ட பயணத்தில் பங்கேற்றனர்;இருப்பினும் அவர்கள் மீதான அப்பயணத்தின் பாதிப்புகளும் விளைவுகளும் பெருமளவுக்கு வெவ்வேறாக இருந்தன. இதற்கு காரணம் என்ன? நமது புரட்சிகர அணிகள் சமுதாயத்தில் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தால் எவ்வாறு பாதிப்படைகின்றனர் என்பதே இந்த நிகழ்ச்சிப் போக்குக்கு அடிப்படையாக இருக்கிறது. நமது கட்சி உறுப்பினர்களின் தராதரங்கள் வெவ்வேறாக உள்ளன; ஏனெனில் அவர்களுடைய சமூகப் பின்னணிகள் வெவ்வேறுவகைப்பட்ட சமூக தாக்கங்களுக்கு உட்பட்டவைகளாக இருக்கின்றன.புரட்சிகர நடைமுறை பற்றிய அவர்களின் போக்கு, நிலைபாடு, புரிதல் ஆகியவற்றில் அவர்களிடையேவேறுபாடுகள் உள்ளன; இதன் விளைவாக புரட்சிகர நடைமுறையினுடைய வளர்ச்சிப் போக்கில் வெவ்வேறு திசைகளில் ஈர்க்கப்படுகின்றனர். இந்த கல்விச் சாலையிலும் நீங்கள் இப்போக்கு களைத் தெளிவாகக் காணலாம். இங்கு நீங்கள் அனைவரும் ஒரே மாதிரியான கல்வியையும் பயிற்சியையும்தான் பெறுகிறீர்கள். ஆனால், உங்களுடைய தரம், அனுபவம் ஆகியவை வெவ்வேறாக உள்ளதால், நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியும் சுயவளர்ப்புப் பயிற்சிக்காக நடவடிக்கைகளும் வெவ்வேறாக உள்ளதால் வெவ்வேறு முடிவுகளை நாம் காண்கிறோம். எனவே, புரட்சிப் போராட்டத்தின் போக்கில் தனிநபர்கள் எடுக்கும் முயற்சிகளும் சுயவளர்ப்புப் பயிற்சிக்கான நடவடிக்கைகளும் முழுக்க முழுக்கஅவசியமானதாகின்றன; தன்னைத்தானே மறு உருவமைத்துக் கொள்வதும் தனது வளர்ச்சி மட்டத்தை இடையறாது உயர்த்திக் கொள்வதும் தவிர்க்கமுடியாத தேவையாகிறது.
நீண்டகாலத்துக்கு முன்போ அல்லது சமீபத்திலோ, புரட்சியில் எப்போதுசேர்ந்தவராக இருந்தாலும், அரசியல்ரீதியில் முதிர்ச்சியடைந்த புரட்சியாள ராக விரும்பும் ஒவ்வொரு கம்யூனிஸ்டும் நீண்ட காலப் புரட்சி போராட்டத்தில் புடமிடுதலுக்கு உள்ளாகியே தீர வேண்டும். மக்கள்திரள் புரட்சிப் போராட்டங்களில் ஈடுபட்டு உருக்குபோல் புடமிட்டுக் கொள்ள வேண்டும்; எல்லாவிதமான இடையூறுகளுக்கும் கஷ்ட நஷ்டங்களுக்கும் தாக்குப் பிடிக்க வேண்டும்; போராட்ட நடைமுறை அனுபவங்களைத் தொகுத்துக் கொள்ள வேண்டும்; சுய வளர்ப்புப் பயிற்சிக்கு பெருமுயற்சிகளை எடுக்க வேண்டும். தனது சித்தாந்த அறிவு மட்டத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். தனது ஆற்றல்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். புதியவை எவற்றையும் பற்றிக் கொள்ளும் அறிவாற்றலை அதிகரித்துக்கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே, ஒருவர் உயரிய தரமிக்க அரசியல் ரீதியில் உறுதிவாய்ந்த புரட்சியாளர் ஒருவராக தன்னை வளர்த்துக்கொள்ள முடியும். கன்ஃபூசியஸ் கூறியதாவது:-“பதினைந்தாவது வயதில் என் மனம் கற்பதிலேயே குறியாக இருந்தது. முப்பதாவது வயதில் நான் சுயேட்சையாக சிந்திக்கும் நிலையை
அடைந்தேன். நாற்பதாவது வயதில் குழப்பங்கள் நீங்கி தெளிந்த நிலையை அடைந்தேன். ஐம்பதாவது வயதில் இறைவனின் ஆணை என்ன என்பதை தெரிந்து கொண்டேன். அறுபதாவது வயதில் உண்மைக்கு செவிமடுக்கும் நிலையை அடைந்தேன். எழுபதாவது வயதில் சரியானவை எவை என்பதை அறிந்து அந்த வரம்பை மீறாமல் என் மன விருப்பத்தின்படி நடக்கும் நிலையினை எட்டினேன்”.தனதுசொந்தசுயவளர்ப்புப் பயிற்சி யினுடைய நிகழ்ச்சிப் போக்கினை பிரபுத்துவ தத்துவவாதியாகிய கன்ஃபூசியஸ் இங்கு எடுத்துரைத்துள்ளார். தான் ஏதோ ஒரு “ஞானப் பிறவி” என்று அவர் தன்னைக் கருதவில்லை”கடும் உழைப்பினால் நரம்புகளும் எலும்புகளும் உறுதிப்படுதல், பசிக் கொடுமைக்கு உள்ளாகி உடல் வருத்தி மன வலிமை பெறுதல், கடைக்கோடி வறுமையில் உழன்று உடலும் மனமும் பக்குவப்படுதல், தடைபடும் பணிகளளால் மன உளைச்சல் அடைதல் என்ற கொடிய சோதனையான நிகழ்ச்சிப் போக்கில் உயரிய பண்புகளை எட்டுவது என்ற நெடிய புடமிடுதலுக்கு உள்ளாகாமல் ஒருவர் மகத்தான பணிகளை நிறைவு செய்து வரலாற்றில் பெரு முக்கியத்துவமிக்க பாத்திரத்தை ஆற்றும் நிலையினை அடைய இயலாது” என்ற மற்றொருபிரபுத்துவ தத்துவ ஞானி கூறியுள்ளார். வரலாறு முன்னெப்போதும் கண்டிராத உலகை மாற்றியமைத்தல் என்ற “மகத்தான பணியில்” ஈடுபடும் கம்யூனிஸ்டுகள், புரட்சிப் போராட்டங்களில் ஈடுபடுவதன் வாயிலாக தம்மை புடமிட்டுக் கொள்வதற்கும் சுய - வளர்ப்புப் பயிற்சியை மேற்கொள்வதற்கும் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வகைப்பட்ட கம்யூனிச சுய - வளர்ப்புப் பயிற்சி பாட்டாளி வர்க்கப்புரட்சியாளர்கள் அனைவருக்கும் கட்டாயத் தேவையாகும். இந்த சுயவளர்ப்புப் பயிற்சி முறை பாட்டாளி வர்க்கப் புரட்சிகர நடைமுறை யிலிருந்து பரந்துபட்ட உழைக்கும் மக்களிடமிருந்து, இன்னும் குறிப்பாக பரந்துபட்ட பாட்டாளிகளிடமிருந்து விலகியிருக்கக் கூடாது. தோழர் மாசேதுங் கூறியுள்ளதாவது:-”நடைமுறை வாயிலாக உண்மையை கண்டறிவது, மீண்டும் நடைமுறைவாயிலாக உண்மையை சோதித்தறிந்து உண்மையை வளர்ப்பது, புலனறிவிலிருந்து துவங்கி அதை ஆக்கப்பூர்வமான பகுத்தறிவாக வளர்த்தெடுப்பது; அக உலகையும் புறநிலை உலகையும் மாற்றுவதற்காக பகுத்தறிவி லிருந்து தொடங்கி புரட்சிகர நடைமுறையை ஊக்கமாக கடைபிடிப்பது. நடைமுறையிலிருந்து அறிவுக்கு,மீண்டும் நடைமுறை மீண்டும் அறிவு. முடிவில்லாத சுற்றுவட்டமாக மீண்டும் மீண்டும் இது நடைபெறும்; அடுத்தடுத்த சுற்றுகளில் நடைமுறையும் அறிவும் உயர்ந்த மட்டத்துக்குச் செல்லும். அறிவு பற்றிய இந்த இயங்கியல் பொருள்முதல்வாதக் கருத்தியல் அறிதலுக்கும் செயல்படலுக்கும் இடையிலான ஐக்கியம் பற்றிய கருத்தியல் ஆகியவற்றின் முழுமைச் சித்திரம் இதுதான்.
துயரங்கள், கஷ்ட, நஷ்டங்கள், பின்னடைவுகளை எதிர்கொள்ளும் போதானபுரட்சிகர நடைமுறை; அமைதியும் சிக்கலற்றுதுமான வெற்றி மேல் வெற்றி என்ற பாதையினூடாகச் செல்லும் போதான புரட்சிகர நடைமுறை.
இவ்விரு நிலைமைகளிலுமே நமது கட்சி உறுப்பினர்கள் புடமிடுதலுக்குத்தம்மை உட்படுத்திக் கொண்டு சுய- வளர்ப்புப் பயிற்சியைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். நமது கட்சியினுடைய சில உறுப்பினர்கள் வெற்றி ஆரவாரங்கள் எழும் நிலையை எதிர்கொள்ளும் திராணியற்றவர்களாக, தலைகணம் பிடித்தவர்களாக, ஆணவம் பிடித்தவர்களாக, இறுமாப்புஉடையவர்களாக, அதிகார மமதை உடையவர்களாக மாறிவிடுகின்றனர்;
ஊசலாட்டத்துக்கு உள்ளாகி, சீரழிக்கின்றனர்; ஊழலில் திளைப்பவர்களாக மாறி தமது புரட்சிகர இயல்பையையே அடியோடு இழந்துவிடுகின்றனர்.நமது கட்சி உறுப்பினர்கள் சிலர் இவ்வாறு சீரழிந்து போவது ஏதோ, நடக்காத நிகழ்வல்ல. கட்சியில் நடக்கும் இத்தகைய நிகழ்வுகளின்பால் தோழர்கள் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். .
உலக வரலாற்று அரங்கில் பாட்டாளி வர்க்கம் வருவதற்கு முந்தையகடந்த சகாப்பங்களில் (யுகங்களில்) உருவான புரட்சியாளர்களில் கிட்டத்தட்ட அனைவருமே வெற்றிகளைச் சாதித்த பின்னர் ஊழலில் மூழ்கி சீரழிந்து போயினர். தமது புரட்சி வீரியத்தை இழந்த அவர்கள், புரட்சி மேலும் வளர்ச்சி அடைவதற்கே தடைக்கற்களாக மாறினர். சீனாவின் கடந்த ஒரு நூற்றாண்டு வரலாற்றில், அல்லது மிகச் சமீபமான கடந்த ஐம்பது ஆண்டுகளில், எண்ணற்ற முதலாளித்துவ மற்றும் குட்டிமுதலாளித்துவப் புரட்சியாளர்கள் முந்தையப் புரட்சிகளினுடைய உள்ளார்ந்த இயல்பின் காரணமாக எதிர்ப் புரட்சிவாதிகளாக மாறினர். உலகவரலாறு நெடுகிலும், ரஷ்யாவின் மகத்தானநவம்பர் சோசலிசப் புரட்சிக்கு முந்தைய காலங்களில் நடந்த புரட்சிகள் அனைத்திலும், ஒரு சுரண்டல் வர்க்க ஆட்சியை ஒழித்து மற்றொரு சுரண்டல் வர்க்கஆட்சியைக்கொண்டு வருவதா கவே எல்லாப் புரட்சிகளும் அமைந்தன. தாமே ஆளும் வர்க்கமாக மாறியவுடன் அந்தப் புரட்சியாளர்கள் தமது புரட்சித்தன்மையினை இழந்து பரந்துபட்ட சுரண்டப்படும் மக்களை ஒடுக்கும் அடக்குமுறையாளர்களாக மக்களுக்கு எதிரிகளாக மாறினர். இந்த சகிக்க முடியாத விதியே சமூக நடப்பாக இருந்தது.
ஆனால் பாட்டாளி வர்க்கப் புரட்சியையும் கம்யூனிஸ்டுக் கட்சியையும் பொறுத்தவரையில் இப்படிப்பட்ட நிலைமைக்கு வாய்ப்பில்லை. பாட்டாளிவர்க்கப் புரட்சி என்பது எல்லா வகையான சுரண்டலையும்,அடக்குமுறையையும் வர்க்கங்களையும் ஒழிப்பதற்கான புரட்சியாகும்.
கம்யூனிஸ்டுக் கட்சி பாட்டாளி வர்க்கத்தை பிரதிநித்துவம் செய்கிறது;பாட்டாளி வர்க்கமே சுரண்டலுக்கு உள்ளாகும் வர்க்கம் என்பதால் அது மற்றவர்களைச் சுரண்டுவதில்லை; எனவே, அது புரட்சியை இறுதி வரையிலும் முன்னெடுத்துச் சென்று, கடைசியில் எல்லா வகையான சுரண்ட லையும் ஒழித்து, மனித சமூகத்தில் உள்ள எல்லா ஊழலையும், எல்லா சமூகஅழுகலையும் கேடுகளையும் துடைத்தெறியும். கறாறாக அமைப்பாக்கப்பட்ட, கட்டுப்பாடு மிக்க, மத்தியத்துவப் படுத்தப்பட்ட ஆனால் அதே வேளையில் ஜனநாயக ரீதியிலான அரசு இயந்திரத்தை கட்டியமைக்கும்; இத்தகைய கட்சியையும் அரசு இயந்திரத்தையும் கொண்டு சமுதாயத்தில் உள்ள எல்லா ஊழலையும், அழுகலையும் ஒழிக்க மக்களைத் திரட்டி இடையறாது போராடும்; கட்சியிலும் அரசு இயந்திரத்திலும் ஊழலையும் அலுகலையும் இல்லாமல் செய்யஇடையறாது போராடுவதன் மூலம், கட்சியிலும் அரசு இயந்திரத்திலும் உள்ள ஊழல் பேர்வழிகளையும் சீரழிந்து போனவர் களையும் (அவர்கள் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பவர்களானாலும்) தொடர்ச்சியாக களையெடுக்கும். இவற்றைச் செய்வதன் வாயிலாக கட்சி மற்றும் அரசு இயந்திரத்தின் தூய்மையைப் பாதுகாக்கும். பாட்டாளி வர்க்கப் புரட்சி, புரட்சிகர பாட்டாளி வர்க்க கட்சி ஆகியவற்றின் முதன்மையான பண்புக் கூறு இதுவே; இத்தகைய பண்புக் கூறுகள் இதற்கு முந்தையப் புரட்சிகளிலும் புரட்சிகரக் கட்சிகளிலும் இருந்ததே இல்லை, இருந்திருக் கவும்
முடியாது. பின்வரும் விசயத்தை நமது கட்சி உறுப்பினர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக புரட்சி வெற்றிமேல் வெற்றி பெற்று முன்னேறும் நிலைமையில், பரந்துபட்ட மக்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் அவர்கள் பெற்றிருக்கும் நிலையில், அவர்கள் தமது விழிப்புணர்வை கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும். பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தில் தமது சுய-வளர்ப்புப் பயிற்சியை தீவிரப்படுத்த வேண்டும். தமது பாட்டாளி வர்க்க புரட்சிகரப் பண்புக்கூறை எப்போதும் விழிப்புடன் காத்துக் கொள்ள வேண்டும்.இவற்றை எல்லாம் செய்வதன் வாயிலாக, வெற்றி பெறும் தருணங்களில்சீரழிந்து போன முந்தைய புரட்சியாளர்களைப் போல்வீழ்ந்து விடாமல் தம்மைக் காத்துக் கொள்ள வேண்டும். புரட்சிகர நடைமுறை யிலும் பாட்டாளி வர்க்க சித்தாந்தத்திலும் தன்னை புடமிட்டுக் கொண்டு சுய - வளர்ப்புப் பயிற்சியை மேற்கொள்வது ஒவ்வொரு கம்யூனிஸ்டுக்கும் முக்கிய கடமையாகும்; அதிலும் குறிப்பாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் இவற்றை அவர் கறாராககைக்கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டுக் கட்சி ஏதோ வின்னுலகத்திலிருந்து குதித்துவிடவில்லை; சீன சமுதாயத்தில்தான் இது உருவாகி வளர்ந்தது. கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் சீன சமுதாயத்தில்தான் பிறந்து வளர்ந்துள்ளனர். இந்த சமுதாயத்தில்தான் வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சமுதாயத்தின் விரும்பத்தகாத பாதகமான விசயங்களாலும் அவர்கள் இடையறாது பாதிக்கப் படுகின்றனர். அவர்கள் பாட்டாளி வர்க்கத்திலிருந்து வந்தவர்களானாலும் சரி, அல்லது பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இல்லாமலிருந்தாலும் சரி, கட்சியில் நீண்ட காலம் உறுப்பினர்களாக இருந்தவர்களானாலும் அல்லது சமீபத்தில் சேர்ந்தவர் களானாலும் சரி, அவர்கள் பழைய சமுதாயத்தின் சிந்தனைகளையும் பழக்க வழக்கங்களையும் கூடுதலாக அல்லது குறைவாக கம்யூனிஸ்டுகள் தம்முடன் கொண்டு வருகின்றனர் என்பதில் யப்படைய ஏதுமில்லை. பாட்டாளி வர்க்கப் போராளிகளின் முன்னணிப் படை என்ற முறையில் நமது தூய்மையைப் பேணிக் காக்கவும், தமது புரட்சித் தகுதியையும் வேலை செய்யும் ஆற்றலையும் தாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு ஒவ்வொரு கம்யூனிஸ்டும் எல்லாக் கூறுகளிலும் தன்னை உயர்த்திக் கொள்ள கடினமாக உழைத்து, தன்னைத்தானே புடமிட்டுக் கொண்டு சுய - வளர்ப்புப் பயிற்சியை மேற்கொள்வது கட்டாயத் தேவையாகும்.கம்யூனிஸ்டுகள் சுய - வளர்ப்புப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள் இவைதான். கம்யூனிச சுய - வளர்ப்புப் பயிற்சியினுடைய அடிப்படைக் கூறுகள் பற்றி இனி நாம் விவாதிப்போம்.
குறிப்புகள்:-ஏனானில் செயல்பட்ட மார்க்சிய லெனினிய கழகத்தில் ஆற்றிய உரையே இது. சீர்செய்யும் இயக்க ஆவணங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்ட இது 1945 ஆம் ஆண்டில் விடுதலைப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இது, 1962 ஆம்ஆண்டில் ஆசிரியரால் மீண்டும் சரிபார்க்கப்பட்டு மக்கள் வெளியீட்டகத்தால்மீண்டும் வெளியிடப்பட்டது.
நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை:-
1. கம்யூனிச அமைப்பில் ஒருவர் சேர்ந்துவிட்டாலே அவர்கம்யூனிஸ்டாகவோ, புனிதமானவராகவோ ஆகிவிட மாட்டார். கம்யூனிஸ்டு அமைப்பில் சேர்ந்த பிறகு ஒருவர், அந்தக் கட்சி நடத்தும் போராட்டங்களில் ஈடுபடுகிறார்,அந்தப் போராட்டங்களினால் அவர் மட்டுமல்ல அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ஒரே விதமான பாதிப்புக்கு உள்ளாவதில்லை, ஒவ்வொருவரும் அவர்களுக்கு உள்ள தனிப்பட்ட அறிவு திறமைக்கு ஏற்ப போராட்ட அனுபவத்திலிருந்து தங்களது அறிவையும் திறமையையும்மேலும்வளர்த்துக் கொள்கிறார்கள். எனினும் கம்யூனிஸ்டுகட்சியின் தலைமையானது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மார்க்சிய லெனினிய தத்துவக் கண்ணோட்டத்தைப் பெறுவதற்கும், அதன் அடிப்படையில் ஒவ்வொருவரும் சுயமாக சிந்தித்து முடிவெடுப் பதற்கானபயிற்சியைப் பெற வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி ஒவ்வொருகம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களுக்கும் சுய - வளர்ச்சிப் பயிற்சியைவழங்க வேண்டும் என்றுலியுஷாவோகி தனது சிறந்த கம்யூனிஸ்டாவது எப்படி என்ற நூலில் விளக்குகிறார்.
மார்க்சிய லெனினிய தத்துவ கண்ணோட்டத்திலிருந்து சுயமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை எந்தளவுக்கு அதிகமாக ஒரு கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் இருக்கிறார்களோ அந்தளவுக்கு, அந்த கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் மார்க்சியத்துக்கு எதிரான கொள்கைகளை கொண்டுவந்து அந்தக் கட்சியை பிளவுபடுத்தவோ, அல்லது அந்தக் கட்சியை திருத்தல்வாதக் கட்சியாகவோ, கலைப்புவாத கட்சியாகவோ, குட்டிமுதலாளித்துவ குறுங்குழுவாத அமைப்பாகவோ மாற்றிவிட முடியாது என்பதுதான் சர்வதேச கம்யூனிஸ்டு கட்சிகளின் வரலாற்று அனுபவமாக உள்ளது.
இந்தியாவில் உள்ளகம்யூனிச அமைப்புகள் கம்யூனிச அமைப்பாக இல்லாமல், திருத்தல்வாத, கலைப்புவாத, குறுங்குழுவாத அமைப்புகளாக பிளவுபட்டு இருப்பதற்குமுக்கியமான காரணம், கம்யூனிச அமைப்புகளிலுள்ள தலைவர்கள் மட்டுமல்ல, கம்யூனிச அமைப்புகளின் உறுப்பினர்களும் ஒரு முக்கியமான காரணம் ஆகும். கம்யூனிச அமைப்புகளிலுள்ள உறுப்பினர் கள் பெரும்பாலும் மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்தைப் பெறவில்லை, அதன் அடிப்படையில் சுயமாக சிந்திக்கும் அறிவையும் திறனையும் வளர்த்துக்கொள்ளவில்லை, மாறாக கட்சியின் தலைவர்கள் சொல்வதை எல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள்.
கட்சித் தலைவர்களின் கருத்துக்களில் தவறு இருக்கிறது என்று யார் பேசினாலும் அவர்களை எதிரிகளாகவே பார்க்கிறார்கள். இதன் மூலம் இவர்கள் மார்க்சிய லெனினியக் கண்ணோட்டம் இல்லாத அறியாமையில் உள்ளார்கள். எப்படி முதலாளித்துவ அறிவாளிகள் மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்களோ அது போலவே கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர் களிடத்திலுள்ள அறியாமையைப் (மார்க்சிய சிந்தனை முறையை வளர்காம லிருப்பது) பயன்படுத்தி கம்யூனிசஅமைப்பின் தலைவர்கள் கம்யூனிச அமைப்பை பிளவுபடுத்துகிறார்கள், அல்லது கம்யூனிச அமைப்பை திருத்தல்வாத, கலைப்புவாத, குறுங்குழுவாத அமைப்பாக மாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
2. ரஷ்யாவில் தோழர் ஸ்டாலின் மறைவிற்குப் பின் ரஷ்ய சோவியத்கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைக்கு வந்த குருஷேவ், கட்சியின் இருபதாவது காங்கிரசில் அவரது திருத்தல்வாதக் கொள்கையைமுன்வைத்தார் என்று குருஷேவின் மீது குற்றம் சாட்டுகிறார்கள். அது உண்மையே, அதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. அந்த தீர்மானத்தை காங்கிரஸ் நிறைவேற்றியதற்கு குருஷேவ் கும்பலுக்கு மட்டுமா பொறுப்பு?இல்லை, அந்த காங்கிரசில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கும், ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினர் களுக்கும் பங்கில்லையா? அவர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதுதான் உண்மையாகும். இந்த உண்மையை யாரும் பரிசீலிக்கவில்லை. குருஷேவ் கும்பல் திருத்தல்வாத தீர்மானத்தை காங்கிரசில் கொண்டு வந்தாலும், அந்ததீர்மானத்தை கட்சிக் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்த்து ஓட்டுப் போட்டிருந்தால் அந்த தீர்மானம் நிறைவேறி இருக்காதே. அதன் விளைவாக குருஷேவ் கும்பலால் ரஷ்ய சோவியத் கம்யூனிஸ்டுக் கட்சியை திருத்தல்வாதக் கட்சியாகமாற்றியிருக்க முடியாதே. ஆகவே இந்த வரலாற்று அனுபவத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
ஒவ்வொரு கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களும் மார்க்சிய லெனினியத்தின் அடிப்படை கோட்பாடுகளை படித்து புரிந்துகொள்ள வேண்டும், அதன் அடிப்படையில் எந்தப் பிரச்சனைகளையும் சுயமாக சிந்தித்து முடிவெடுப்பதற்கான அறிவையும் திறமையையும் வளர்த்துக்கொள்வதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் சொல்வதெல்லாம் சரி என்று தலையாட்டி பொம்மை களாக இருக்கக் கூடாது. தலைவர்களே சொன்னாலும் அது சரியா அல்லது தவறா என்று சுயமாக சிந்தித்து தனதுமாறுபட்ட கருத்தை முன்வைத்து போராட வேண்டும்.
ஆகவே ஒருகம்யூனிஸ்ட் கட்சி தவறு செய்கிறது என்றால் அதற்கு காரணம் அந்தக் கட்சியின் தலைவர்கள் மட்டுமல்ல, கட்சி உறுப்பினர்களுக்கும் பங்குண்டு என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களும் உணர்ந்துஅவர்கள் சுய - வளர்ப்புப் பயிற்சியைப் பெற வேண்டும். இதற்கு மாறாக கட்சியிலுள்ள ஒரு சிலரை மட்டும் குற்றவாளியாக்குவது தவறாகும்.
கட்சிக்குள் தவறு செய்பவர்களை திருத்துவதற்கு ஒவ்வொருஉறுப்பினர்களும் முயற்சி செய்ய வேண்டும். பலமுறை சொல்லியும்கேட்க்காமல் திருந்தவே திருந்தாவர்களை மட்டுமே கட்சியைவிட்டு வெளியேற்ற வேண்டும். இதற்கு மாறாக குருஷேவ் டாங்கே போன்றவர்கள் மீது மட்டும் குற்றம் சாட்டிவிட்டு கம்யூனிஸ்டுக் கட்சிஉறுப்பினர்களிடையே மார்க்சிய அறிவை வளர்த்துக்கொள்ளாத குற்றத்தை மூடிமறைக்கக் கூடாது. ஆகவே இதுவரை நடந்த கம்யூனிச இயக்க வரலாற்றில் கம்யூனிஸ்டுகளின் வெற்றிக்கு எப்படி கட்சியின் உறுப்பினர்களும் உழைக்கும் மக்களும் அடிப்படையோ அதே போலவே கம்யூனிஸ்டுகளின் தோல்விகளுக்கும் கம்யூனிஸ்டுக் கட்சித்தலைவர்கள் மட்டுமல்லாது கட்சி உறுப்பினர்களும் உழைக்கும் மக்களும் அடிப்படையாகவே உள்ளனர்.
ஆகவே ஒரு சரியான கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களின் முதன்மையான பணியானது கட்சி உறுப்பினர்கள் மற்றும் உழைக்கும் மக்களின் அறிவுத் திறமையை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்க்கப்பட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களால் மட்டுமே புரட்சியை நடத்துவதோடு புரட்சியை பாதுகாத்து வளர்க்கவும் முடியும்.
3. ரஷ்ய கம்யூனிஸ்டுகள் ஜார் மன்னனை எதிர்த்தும், கெரென்ஸ்கி அரசை எதிர்த்தும் உள்நாட்டுப் போரை நடத்தினர். அதன் பின்பு பாசிஸ்டுகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்தும் போரிட்டனர். அதன் காரணமாக ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்த பாட்டாளி வர்க்க உணர்வுபெற்ற பல சிறந்த தலைவர்கள் மரணம் அடைந்தார்கள். அதற்குப் பின்பு ரஷ்ய கம்யூனிஸ்டுக்கட்சிக்குள் ஸ்டாலின் போன்ற ஒரு சில தலைவர்கள் மட்டுமே பாட்டாளி வர்க்க உணர்வு பெற்ற தலைவர்கள் இருந்தார்கள். மேலும் பெரும்பாலான தலைவர்கள் குருஷேவ் போன்ற சுயநலவாத தலைவர்களாகவேஇருந்தார்கள். இதன் காரணமாகவே கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளும் மக்களிடையேயும்மார்க்சிய போதனைகளை போதிய அளவு அந்தக்கட்சியால் செய்ய முடியவில்லை.அதன் விளைவாக ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளும் மக்களிடையேயும் மார்க்சியத்துக்கு எதிரான கருத்துக்களை குருஷேவ் கும்பலால் வளர்க்க முடிந்தது. இந்த பலவீனமான நிலையைப்பயன்படுத்தித்தான் குருஷேவ் கும்பல் கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைமையையும் சோவியத்து அரசின் தலைமை யையும் கைப்பற்றி கட்சியை திருத்தல்வாத கட்சியாகவும், சோவியத்து அரசை அதிகார வர்க்க அரசாகவும் மாற்ற முடிந்தது. அது போலவே இந்தியாவிலும் பாட்டாளிவர்க்க உணர்வில்லாத கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் பாட்டாளி வர்க்க உணர்வை ஊட்டாமலும், மார்க்சிய சோசலிச சிந்தனை முறையை வளர்க்காமலும், அவர்களுக்கு சுய - வளர்ச்சிப் பயிற்சியைகொடுக்காததனினாலும் கட்சி உறுப்பினர்களும் உழைக்கும் மக்களும் மார்க்சியத்தை அறியாத அறியாமையில் ஆழ்த்தப்பட்டார்கள். இவ்வாறுஅறியாமையிலுள்ள கட்சி உறுப்பினர்களையும் உழைக்கும் மக்களையும் ஏமாற்றி கம்யூனிஸ்டுக் கட்சியை திருத்தல்வாத, கலைப்புவாத,குறுங்குழுவாத அமைப்புகளாக மாற்றிவிட்டனர். இப்போதும் கட்சி
உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் மார்க்சி யத்தின் அடிப்படைகோட்பாடுகளை போதிப்பதால் எவ்விதமான பயனும் இல்லை என்று சொல்லி கட்சி உறுப்பினர்களையும் மக்களையும் மார்க்சிய அடிப்படை அறிவில்லாத மூடர்களாகவே வைத்திருப்பதையே தங்களது கொள்கையாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதன் காரணமாகவே அவர்கள் பல குழுக்களாகப் பிளவுபட்டுக் கிடக்கிறார்கள்.
முதலாளித்துவ அரசியல்வாதிகளோடு கூட்டணி அமைக்கிறார்கள்,முதலாளிகளிடம் பாட்டாளி வர்க்கத்தை சரணடையச் செய்கிறார்கள். ஆகவே கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களும் உழைக்கும் மக்களும்எந்தளவுக்கு மார்க்சிய சிந்தனை முறையை வளர்த்துக் கொள்கிறார்களோ, எந்தளவுக்கு சுய-வளர்ப்புப் பயிற்சியை பெறுகிறார்களோ அந்தளவுக்கு அவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது. அத்தகைய மக்களிடமிருந்துபுரட்சியாளர்கள் உருவாவார்கள், அவர்கள் புரட்சிகரமான கட்சியை கட்டி எழுப்பு வார்கள் புரட்சியையும் நடத்தி முடிப்பார்கள். ஆகவே ஒவ்வொரு கம்யூனிஸ்டும் மார்க்சிய சிந்தனை முறையை வளர்க்க வேண்டும். சுய -வளர்ச்சிப் பயிற்சியைப் பெற வேண்டும். அதன் மூலம் நாம் சாதனைகள்புரியலாம்.
4. சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் வரலாற்றில் நீண்ட பயணம், புரட்சிக்குஒரு முக்கியமான பங்காற்றியது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர் களில் பலர் புடம் போட்டு எடுக்கப்பட்டனர். அதேவேளையில் ஒருசிலர் முன்னேறாமல் தேக்கம் அடைந்தனர் வேறு சிலர் புரட்சிகர இயக்கத்தைவிட்டு பின்னடைந்து வெளியேறினார் கள். இதன் மூலம் நாம் தெரிந்துகொள்வது என்ன? கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்து போராடுபவர்கள் அனைவரும் போராட்டங்களில் ஈடுபட்டு பலமானவர்களாக மாறிவிடமாட்டார்கள்.அவர்களில் சிலர் போராட்டத்தினால் ஏற்படும் துன்பங்களை சகிக்க முடியாமல் பின்வாங்கி விடுவதற்கு வாய்ப்புகள்உள்ளது. இவ்வாறு பின்வாங்குபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டுமானால் கட்சியானது தொடர்ந்து தனது அணிகளுக்கு வர்க்க உணர்வை ஊட்டி வளர்க்க வேண்டும். நாம் தற்போது வாழ்ந்துகொண்டு இருக்கும் வாழ்க்கையானது மிகவும் துன்பமானதாக உள்ளது. இத்தகையமோசமான வாழ்க்கை வாழ்ந்து இழிவான சாவை சந்திப்பதைக் காட்டிலும்புரட்சியில் ஈடுபட்டு சாவது எவ்வளவோ மேலானது என்ற உண்மையை அணிகளுக்கு தொடர்ந்து போதிக்க வேண்டும். சுய - வளர்ச்சிப் பயிற்சியை ஒவ்வொருவருக்கும் வழங்குவதன் மூலம் இந்த சமூகத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு காரணமானவர்களையும் அவர் களிடத்திலுள்ள அரசியல் அதிகாரத்தையும் ஒழித்துக் கட்டாமல் உழைக்கும் மக்களுக்கு வாழ்வே இல்லை என்பதை ஒவ்வொரு கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களுக்கும் உணர்த்த வேண்டும். மேலும் புரட்சியில் வெற்றி பெற்ற பின்பும் கட்சிக்குள்ளும் பாட்டாளி வர்க்க அரசுக்குள்ளும் குருஷேவ் போன்ற சுயநலவாதிகள் அவர்களிடமுள்ள பிற்போக்கு மற்றும் மக்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்டுவந்து நம்மை ஏமாற்றி நம்மை ஒடுக்குவதற்கு முயற்சி செய்வார்கள் என்று எச்சரித்து நாம் எப்போதும் எச்சரிக்கையோடு சித்தாந்தப் போராட்டத்தை நடத்து வதற்கான வலிமையை தொடர்ந்து பெறுவதற்கு முயல வேண்டும். அதன் மூலம் மட்டுமே கம்யூனிச அமைப்பிற்குள் மார்க்சியத்து எதிரான கருத்துக்களை நுழையவிடாமல் தடுக்க முடியும்.
5. சமூகத்தில் உள்ள மனிதர்களில் ஒவ்வொருவரும் வெவ்வேறான வாழ்க்கை முறையிலும் பழக்க வழக்கங்களும் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆகவே சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி நடத்திய மார்க்சியப்
பள்ளிகளில் இவர்கள் அனைவருக்கும் ஒரே மார்க்சிய கல்வியை வழங்கிய போதும், ஒவ்வொருவரும் அதனை புரிந்துகொள்ளவது அவர்களின் தரம் அறிந்து கொள்வதற்கான திறன்றுபாட்டால் வெவ்வேறுவிதமான
நிலைகளை அடைகிறார்கள் என்றார் லியுஷாவோகி. இருந்த போதிலும் சுய- வளர்ப்பு பயிற்சி பெறுவதன் மூலம் ஒவ்வொரு கம்யூனிஸ்டு உறுப்பினர்களும் தன்னைத்தானே மறு உருவாக்கம் செய்து கொள்ள முடியும் என்றும், தனது அறிவு மற்றும் திறமைக் கான மட்டத்தை இடையறாது வளர்த்துக் கொள்ளவும் முடியும் என்றார். இதனால் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொரு வரும் சுய-வளர்ச்சிப் பயிற்சி பெறுவது அவசியமாகும்என்றார்.இத்தகைய சுய-வளர்ப்புப் யிற்சியை கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கக் கூடியதலைவர்கள்தான்உண்மையான கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களாக இருக்க முடியும்.
இந்தக் கடமையை செய்யத் தவறுபவர்கள் கம்யூனிஸ்டாக இருக்கவே முடியாது. குட்டி முதலாளித்துவாதத் தலைவர்களாக இருப்பதற்கு தகுதியானவர்களாக மட்டுமே இருக்க முடியும்.
6. ஒருவர் கம்யூனிச புரட்சியாளராக வளர வேண்டுமால் அவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை கீழ்கண்டவாறு லியுஷாவோகி
விளக்குகிறார்.
1) கட்சி நடத்தும் போராட்டங்களில் நீண்டகாலம் கலந்துகொண்டு புடம்போடப்பட வேண்டும்.
2) போராட்டங்களில்ஈடுபடும்போதும் கட்சிப் பணிகளில் ஈடுபடும் போதும் எதிர்கொள்ளும் கஷ்ட நஷ்டங்களை சகித்துக் கொண்டு தாக்குப்பிடிக்க வேண்டும்,3) போராட்டங்களிலிருந்தும் கட்சி அமைப்பு நடவடிக்கைகளிலிருந்தும் அனுபவங்களைத் தொகுத்துக்கொள்ள வேண்டும்.
4) சுய - வளர்ப்புப் பயிற்சியை பெருமுயற்சி எடுத்து மேற்கொள்ள வேண்டும்.
5) தனது சித்தாந்த அறிவு மட்டத்தை தொடர்ந்து வளர்த்துக்கொள்ள வேண்டும்.
6)தனது திறமையை தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.
7)புதியவற்றை நன்கு ஆழமாகப் புரிந்துகொள்ளும் வகையில் தனதுஅறிவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும், இவற்றை எல்லாம்நிறைவேற்றுவதன் மூலமே ஒருவர் தன்னை கம்யூனிச புரட்சியாளராக
வளர்த்துக்கொள்ள முடியும் என்றார் லியுஷாவோகி. அவரது இந்த போதனையை ஒவ்வொரு கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினரும் பின்பற்றுவதன் மூலமே கம்யூனிஸ்டுக் கட்சிக்குள் உள்ள உறுப்பினர்களுக்கு இடையே சீரான வளர்ச்சியை நாம் ஏற்படுத்த முடியும்,அதாவது கம்யூனிஸ்டுக் கட்சியிலுள்ள பெரும்பான்மையான
உறுப்பினர்களை கம்யூனிச புரட்சியாளர்களாக வளர்க்க முடியும்.
7. “நடைமுறையிலிருந்து அறிவுக்கு, மீண்டும் நடைமுறை மீண்டும் அறிவு. முடிவில்லாத சுற்றுவட்டமாக மீண்டும் மீண்டும் இது நடைபெறும்” என்றார் மாவோ.
நடைமுறை அனுபவத்திலிருந்து கருத்துக்களை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். பின்பு உறுவாக்கிய கருத்து சரிதானா என்பதை மீண்டும் நடைமுறையின் மூலமாகவே சோதித்து அறிவதற்கு முயற்சிக்கிறார்கள். இவ்வாறு நடைமுறை பின்பு அறிவு, மீண்டும்நடைமுறை அதன் பின்பு அறிவு என்ற சுற்று வட்டத்தின் மூலமே அறிவை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த சுழற்சியின் போது ஒவ்வொரு சுழற்சியின் முடிவிலும் நமது அறிவானது ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு வளர்கிறது. நடைமுறை அனுபவத்தி லிருந்து படிப்பினை பெற்றுக் கொண்டு தனது கருத்தை வளர்த்துக்கொள்ள மறுப்பவர்களால் அவர்களது அறிவை வளர்த்துக் கொள்ளவும் முடியாது, உண்மையைஅவர்களால் அறிந்து கொள்ளவும் முடியாது. அத்தகைய தன்மை படைத்தவர்களால் தலைமை தாங்கப்படும் கட்சியானதுவளராது, அதற்குமாறாக அந்தக் கட்சியானதுதேய்ந்துகொண்டேபோகும்.இந்தியாவிலுள்ள கம்யூனிச அமைப்பின் தலைவர்களில் பெரும்பாலோர் தங்களது சொந்த நடைமுறை அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதில்லை. அதன்காரணமாக அவர்கள் செய்துகொண்டு இருக்கும் தவறுகளையே மீண்டும்மீண்டும் செய்கிறார்கள். இதன் விளைவு இவர்களின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை இழந்துகொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக தேர்தலில் பங்கேற்கும் கம்யூனிஸ்டுகள் தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறதை நாம் பார்க்கலாம். தேர்தலில் பங்கு பெறாக கம்யூனிசக் குழுக்கள் தொடர்ந்து பிளவுகளை சந்தித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம். இந்த அனுபவங்களிலிருந்து இவர்கள்பாடம் கற்றுக் கொண்டு இந்த தோல்விகளை தவிர்ப்பதற்கானபுதிய வழிழுறைகளை காண்பதற்கு முயற்சி செய்வதே இல்லை, அதன் விளைவாக இவர்களது அறிவு மட்டம் வளரவே இல்லை. அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு புதிய வழிமுறைகளைபின்பற்ற தவறுபவர்களின் அறிவு மட்டம் வளர்வதற்கு வாய்ப்பே இல்லை.
அதனால் இத்தகைய தலைவர்கள் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பதுதவிர்க் முடியாததாகும்.
8. சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியிலுள்ள சில உறுப்பினர்கள் தலைகணம்பிடித்தவர்களாகவும், ஆணவமிக்கவர்களாகவும் இறுமாப்புடைய வர்களா கவும், அதிகார மமதை உடையவர்களாகவும் மாறி விட்டார்கள்என்றும்,அவர்கள்ஊசாலாட்டத்துக்குள்ளாகி, ஊழல்செய்பவர்களாகவும் புரட்சிகரமான இயல்பையே இழந்துவிட்டனர் என்றும்லியுஷாவோகி கூறுகிறார். சீனாவில் புரட்சியில் ஈடுபட்டு புடம்போட்டு வளர்ந்த கட்சிக்குள்ளேயே இந்த இழிவான நிலை இருந்தது என்றால் இங்குள்ள கம்யூனிச அமைப்புக்குள் இத்தகைய சீரழிவுக்குப் போக்கு கொண்டவர்கள் இருப்பது இயல்பானதுதானே. எனினும் இத்தகைய மோசமான போக்கு கொண்டவர்களையும் இணைத்துக்கொண்டுஅவர்களையும் புரட்சியாளர் களாக மாற்றிக்கொண்டு சீனாவில்கம்யூனிஸ்டுக் கட்சி புரட்சி நடத்தியதற்கு காரணம் என்ன?
1. கட்சிநடத்தும் போராட்டங்களில் இத்தகைய கட்சி உறுப்பினர்களை ஈடுபடுத்திஅவர்களுக்கு உற்சாகம் ஊட்டப்பட்டு புடம்போடப்பட்டது.
2. இரண்டாவதாகஇத்தகைய கட்சி உறுப்பினர்களுக்கு சுய - வளர்ப்புப் பயிற்சியை தீவிரமாக மேற்கொள் வதற்கு வழிவகை செய்யப்பட்டது. இவ்விரண்டு முறைகளைகட்சித் தலைவர்களும் கட்சியும் பின்பற்றி கட்சியின் பலவீனத்தைப் போக்கி கட்சியைப் பலப்படுத்தி கட்சி உறுப்பினர்கள் மற்றும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி எதிரியை எதிர்த்துப் போராடி கம்யூனிஸ்டுகள்வெற்றி பெற்றார்கள். இந்த சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அனுபவத்தையும், லியுஷாவோகியின் போதனைகளையும் இந்தியா விலுள்ள கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் கண்டு கொள்ளவேஇல்லை. இந்திய கம்யூனிஸ்டுத் தலைவர்கள் கட்சி உறுப்பினர்களின் மார்க்சிய அறிவுமற்றும் திறனை வளர்ப்பதற்காகப் பாடுபடவே இல்லை. இதனால்தான் இங்கே கம்யூனிச அமைப்புகள் வளரவே இல்லை. மாறாக தேய்ந்து கொண்டும், பிளவுபட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். ஆகவே எந்த கம்யூனிச அமைப்பிலுள்ள உறுப்பினர்கள் மார்க்சிய அறிவையும்திறமையையும் சுய - வளர்ப்புப் பயிற்சியின் மூலம் வளர்த்துக்கொண்டு இருக்கிறார் களோ அந்த அமைப்பு வளரும். இதற்கு மாறாக கட்சியின் தலைவர்களை சார்ந்து செயல்படும் உறுப்பினர்களைக் கொண்ட அமைப்புநிச்சயமாக வளராது.
ஆகவே உண்மையான கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள், அவர்களது கட்சி உறுப்பினர்களுக்கு சுய - வளர்ப்புப்பயிற்சியை வழங்கி கட்சி உறுப்பினர் களின் மார்க்சிய சித்தாந்த மட்டத்தைதொடர்ந்து வளர்க்க வேண்டும்.
9. உலக வரலாற்றில் கம்யூனிஸ்டுக் கட்சி உருவாவதற்கு முன்பும் பலபுரட்சிகள் நடந்துள்ளது. அந்தப் புரட்சியில் ஈடுபட்ட புரட்சியாளர்கள் எல்லாம், வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்பு புரட்சிகரமான நோக்கங்களை கைவிட்டுவிட்டு சுயநலவாதிகளாக மாறி அவர்களது அதிகாரத்தை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தி மக்களை சுரண்டவும் ஒடுக்கவும் செய்தார்கள்என்பதுதான் வரலாறாகும். எனினும் கம்யூனிஸ்டுகள் இத்தகைய சுயநலவாதிகளாக மாறமாட்டார்கள் என்றார் லியுஷாவோகி. ஏனென்றால் பாட்டாளி வர்க்கமானது சுரண்டலை எதிர்க்கக்கூடிய வர்க்கமாகும், மேலும் அதற்கு பிறரை சுரண்ட வேண்டிய அவசியமில்லை, கம்யூனிஸ்டுக் கட்சியானது பாட்டாளி வர்க்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் கட்சியாகும்.ஆகவே கம்யூனிஸ்டுக் கட்சியானது புரட்சியில் வெற்றிபெற்ற பின்பு கறாரான கட்டுப்பாட்டைக் கொண்ட கம்யூனிஸ்டுக் கட்சியையும் பாட்டாளிவர்க்க அரசையும் கட்டியமைத்து உழைக்கும் மக்களைத் திரட்டி சுரண்டலுக்கும் ஊழலுக்கும் எதிராக தொடர்ந்து பாடுபடுவதன் மூலம் கட்சிக்குள் உள்ள சீரழிந்தபேர்வழிகளையும், ஊழல்வாதிகளையும், எதிர்த்துப் போராடி களையெடுக்கும். இவற்றின் மூலம் கட்சி மற்றும் பாட்டாளி வர்க்க அரசின் தூய்மையைப் பாதுகாக்கும். இத்தகைய கட்சி வரலாற்றில் உருவானதில்லை என்கிறார் லியுஷாவோகி. எனினும் பரந்துபட்ட மக்களின்ஆதரவோடு புரட்சி வெற்றி பெற்றிருந்தாலும் கம்யூனிஸ்டுகள் வெற்றிக்குப் பின்பும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், அவர்களது விழிப்புணர்வை கூர்மையாக்கிக்கொள்ள தொடர்ந்து கம்யூனிஸ்டு கள் சுய-வளர்ப்புப் பயிற்சியில் ஈடுபட்டு மாறுகின்ற சூழல்களைப் புரிந்துகொண்டு அவ்வப்போது தமது கடமைகளை உணர வேண்டும். மேலும் அவ்வப் போது ஏற்படும் மாற்றத்தின் காரணமாக கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளே இருப்பவர்களில் சிலர் கம்யூனிச கொள்கைகளையும் பாட்டாளி வர்க்க சர்வாதி காரத்தின் அவசியத்தையும் கைவிட்டுவிட்டு மார்க்சியத்துக்கு எதிரான முதலாளித்துவப் பாதைக்கு மாறிச் செல்பவர் களையும் அவர்களது திருத்தல்வாதக் கொள்கை களையும் இனம் கண்டு முறியடிக்கும்வலிமையை கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களும் மக்களும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறான வலிமையை ரஷ்ய, சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களும் மக்களும் வளர்த்துக் கொள்ள தவறியதால்தான் அந்தக் கட்சிக்குள் குருஷேவ், டெங்சியோபிங் போன்ற சுயநலவாதத் தலைவர்கள் அந்த கட்சியை குட்டி முதலாளித்துவ அதிகாரவர்க்க கட்சியாக மாற்றினார்கள். மேலும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஒழித்துவிட்டு அதிகார வர்க்கத்தின் ஆட்சியாக மாற்றினார்கள். ஆகவே கம்யூனிஸ்டுகளும் வெற்றிபெற்ற பின்பு சுயநலவாதிகளாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இங்கேயும் கூட புரட்சிக்காக ஓர் அடிகூட எடுத்துவைக்காத நிலையில் கம்யூனிச அமைப்புக்குள் சுயநலவாதிகள் காணப்படுகிறார் கள். இத்தகைய சுயநலவாதிகளை கட்டுப்படுத் தவும், ஒழித்துக்கட்டவும் கம்யூனிஸ்டுகளாகிய நாம் ஒவ்வொருவரும் சுய - வளர்ப்பு பயிற்சியில் ஈடுபட்டு நமது மார்க்சிய லெனினிய அறிவையும் அதனை பயன்படுத்தும் திறமையையும் வளர்த்துக் கொண்டு நாம் ஒன்றுபட்டு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. இதற்கு மாறாக கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவரும்தமது அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்ளவில்லை என்றால் கம்யூனிசஅமைப்பிற்குள் சுயநலவாதிகளின் வளர்ச்சியையும் அவர்களே கட்சியை கைப்பற்றிக் கொள்வதையும் தடுக்க முடியாது.
10. ரஷ்யாவில் கம்யூனிஸ்டுகள் புரட்சியை நடத்துவதற்கு முன்பு அங்குள்ளபெரும்பாலான உழைக்கும் மக்கள் வறுமையில் பல்வேறுவிதமான துன்பங்களை அனுபவித்து வாழ்ந்து வந்தனர். அவர்களது இந்த இழிவான வாழ்நிலையிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று விரும்பினர்.வாழ்நிலைதான் சிந்தனைக்கு அடிப்படை என்ற இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவ விளக்கத்தின் அடிப்படையில் ரஷ்யஉழைக்கும் மக்களின் இழிவான வாழ்நிலை காரணமாகவே அந்த இழிவைப் போக்குவதற்கு விரும்பினர். இதனை புரிந்துகொண்ட ரஷ்ய போல்ஷ்விக்கட்சியானது ரஷ்ய மக்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு காரணமான ஜாரின்எதேச்சாகார ஆட்சியை ஒழித்துவிட்டு பாட்டாளிகள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையைமக்களிடம் பரப்பினார்கள். இழிவான வாழ்நிலையை ஒழிக்க விரும்பியமக்கள் போல்ஷ்விக்குகளின் கொள்கை யானது அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு பொருத்தமான கொள்கை என்று அதனை ஏற்றுக் கொண்டு போல்ஷ்விக்குகளின் பின்னால் அணிதிரண்டனர்.
போல்ஷ்விக்குகளின் தலைமையில் போராடி தொழிலாளர்கள் மற்றும்விவசாயிகளின் அரசை உருவாக்கினார்கள். மக்களால் போல்ஷ்விக்குகளின் தலைமையில் உருவான சோவியத்து அரசு சிறிது காலத்துக்குள்ளேயே மக்களின் வாழ்க்கை துன்பங்களிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கு வளமான வாழ்க்கை கிடைக்கச் செய்தது. இப்போது உழைக்கும் மக்களின்வாழ்க்கையில் வளமான மாற்றங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர்களது சிந்தனை முறையிலும் மாற்றங்கள் ஏற்படலாயிற்று. இதுவரை கட்சியின்கட்டுப்பாட்டை ஏற்றவர்கள் அத்தகைய புரட்சிகரமான கட்டுப்பாட்டின் அவசியத்தை உணர மறுத்தனர். இத்தகைய கட்டுப்பாடில்லாமல் சோசலிச சமூகத்தை கம்யூனிச சமூகமாக வளர்க்க முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்ளத் தவறினார்கள். பெரும்பான்மையான மக்களின் இந்த பலவீனத்தைப் பயன்படுத்தியே குருஷேவ் போன்ற திருத்தல்வாத சுயநலவாதத் தலைவர்கள் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றி கட்சியை திருத்தல்வாதக்கட்சியாகவும் அரசை அதிகார வர்க்க அரசாகவும் மாற்றியமைத்து சோசலிசத்திலிருந்து கம்யூனிசமாக சமூகம் வளர்வதை தடுத்துவிட்டார்கள்.ஆகவே ஒரு கம்யூனிஸ்டுக் கட்சியாக இருந்தாலும் அதில் அதன் தலைவர்கள் மட்டும் மார்க்சிய அறிவாளிகளாக இருந்தால் மட்டும் போதாது கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் மார்க்சிய அறிவாளிகளாக மாற்ற வேண்டும். அதே போலவே ஒரு சமுதாயம் சோசலிச சமூகமாக இருக்கும் போது அங்குள்ள கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்கள் மட்டும் பாட்டாளிவர்க்க உணர்வு படைத்த அறிவாளிகளாக இருந்தால் மட்டும் போதாது. உழைக்கும் மக்கள் அனைவரும் பாட்டாளிவர்க்க உணர்வுபடைத்த அறிவாளிகளாக வளர்க்கப்பட வேண்டும்.
இதற்கு கம்யூனிஸ்டு கட்சியானது புரட்சிக்கு முன்பும், புரட்சிக்குப் பின்பும் மார்க்சிய கல்விக்கான இயக்கத்தை தொடர்ந்து நடத்திட வேண்டும். மேலும்
சுய-வளர்ப்பு பயிற்சியை கட்சி உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும்தொடர்ந்து வழங்கிட வேண்டும். ஆகவே ஒரு கம்யூனிஸ்டுக் கட்சியோ அல்லது ஒரு சமுதாயமோ சிறப்பாக வளர்ந்துள்ளது என்பதற்கான அளவுகோல் அந்தக் கட்சி உறுப்பினர்கள் எந்தளவுக்கு வளர்ந்துள்ளார்கள் என்பதும் அந்த சமூகத்திலுள்ள மக்கள் எந்தளவுக்கு வளர்ந்துள்ளார்கள்என்பதுதான் அடிப்படையாகும். தனிவுடமை சிந்தனை கொண்டவர்கள்தனது அறிவை வளர்த்துக் கொள்வதிலேயே குறியாக இருப்பார்கள்.
ஆனால் பொதுவுடமை சிந்தனை கொண்டவர்கள் தனது அறிவை வளர்த்துக்கொண்டு பிறரையும் தன்னைப் போன்ற அறிவாளியாக்குவதிலேயே குறியாக இருப்பார்கள். ஆகவே நாம்தனிவுடமை சிந்தனை முறைக்கும் பொதுவுடமை சிந்தனை முறைக்கும்இடையிலான வேறுபாட்டை மிகவும் கவனமாகவும் ஆழமாகவும் புரிந்துகொண்டு போதுவுடமை சிந்தனை முறையை தொடர்ந்து வளர்த்துக் கொள்ள பாடுபட வேண்டும். ..... தேன்மொழி
சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி?நூல் PDF வடிவில் இந்த லிங்கில்
No comments:
Post a Comment