சமூகத்தில் உள்ள மேலாண்மை செய்யும் கருத்துகள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் கருத்துகளே!
நிலவுடமை சமூக அமைப்பில் ஏற்பட்ட சமய கருத்துகளை முதலாளித்துவ சமூகத்தில் பரப்பும் பிற்போக்கு அரசியலை மாறாநிலை அரசியலை இந்துவெறி கட்சியான பி.ஜே.பி கற்பனையான ராம ராஜ்ஜியதிற்கு அழைத்து செல்ல பட்டினியும் பசியுமான மக்களுக்கு மதத்தை(விற்பனை செய்கின்றனர்) முன்நிறுத்தி ஏமாற்றுகின்றனர் என்றால் உழைக்கும் மக்களின் சுரண்டலின் வடிவமான கருத்துருவம்தான் மதம் அதனை அப்படியே தூக்கி பிடிக்கும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மந்திரி என்ன சொல்ல வருகிறார், "உண்மையான பக்தர்களைக் கண்டறிவது மிக எளிதானது. பகவத் கீதையின் 12-வது அத்தியாயத்தில் 13 முதல் 20 வரையிலான எட்டு ஸ்லோகங்களில் பக்தர்களின் பண்புகள் பற்றி கூறப்பட்டுள்ளன.சாந்தோக்ய உபதேசத்தில் இந்த வசனத்தின் பொருள் 'நீ அதுவாக இருக்கிறாய்' என்பதாகும். நானும் நீயும் ஒன்றாக ஆகிறோம் என்று சொல்லும்போது நம்ம வேறு அல்ல என்பது அர்த்தமாகும்".
உன் உழைப்பை சுரண்ட அனுமதி கேட்பதை தவிர வேறென்ன?
இதற்கான சில தேடலே இங்கு... நம் மத சிந்தனையின் அடிப்படைகளையும் அதற்கான சமூக அமைப்பையும் சற்று தேடுவோம்...
அரியும் சிவனும் ஒண்ணு
இது அறியாதவன் வாயிலே மண்ணு.
இந்த தமிழ் பழமொழியின் சாரம் சமய நல்லிணக்கமே. இது மட்டும் அல்ல அரியையும் சிவனையும் இது திடப்படுத்தவும் செய்கிறது. சமய நல்லிணக்கமும் ஒருபடி பேசும் அதே வேளையில் சமயத்தை உயர்த்தி பிடிக்கும் வேலையையும் செய்கிறது.
ஆக இந்துத்துவத்தை கருத்துரு அளவில் எதிர்க்க வேண்டுமெனில் சமயம் சாராத சிந்தனையை வளர்த்தெடுக்க வேண்டும். இந்துத்துவா எதிர்ப்பு அரசியலை முன்னிலைப் படுத்தி நடத்துபவர்கள் சமயம் சாராத சிந்தனையை அதன் அடுத்த கட்டமாக சமயத்தின் தோற்றம் அதன் செயல் சமூகத்தில் தாக்கம் புரிந்திருக்க வேண்டும். அவையன்றி சமயம் சார்ந்த கருத்துகளில் சமரமாகி சுரண்டல் வர்க்க சித்தாந்த அடிமையாகி போனால் அவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று எப்படி சொல்ல???..
பிறரையும் நமக்குள் ஏற்றுக் கொள்ளும்போது வேற்றுமை இல்லாமல் ஆகிறது. அனைவரும் ஒன்று என்ற விழிப்புநிலை ஏற்படுகிறது. இதுதான் சபரிமலை வெளிப்படுத்தும் தத்துவமாகும்-கேரள சி.பி.எம் முதன்மை அமைச்சர் பிரனாய் விஜயன் கூற்று. இவரை விமர்சிக்க வேண்டிய அவசியம் ஏனெனில் மதம் பற்றிய மார்க்சிய ஆய்வை புறகணித்து மதத்தை ஆரத்தழுவி தன் இயால நிலையை போக்க மதவாதிகள் சொல்லும் அதே உபதேசம் என்ன பயன்?
பம்பையில் நடைபெற்ற உலக ஐயப்ப சங்கமம் நிகழ்ச்சியில் கேரள சி.பி.எம் சி.எமின் ஆன்மீக பிரசங்கம்.
பி.ஜே.பி எதிர்க்க மதத்தையே ஆயுதமாக்கி உழைக்கும் மக்களுக்கு ஆன்மீக போதையூட்டி அதானிக்கு சேவகம் செய்ய சொல்கிறாரா?
ஐரோப்பிய சமூகங்களில். முதலாளிய வளர்ச்சி அந்த நாடுகளின் சுய தேவையை அடிப்படையாக கொண்டு அங்குள்ள நிலஉடமை முறையை அழித்து உருவாயிற்று. ஆனால் இந்தியாவில் ஏற்பட்ட முதலாளிய வளர்ச்சி, அன்னிய வளர்ச்சி வல்லரசுகளின் நலன்களுக்காக ஏற்பட்டதனால் அது நில உடமை முறையை முற்றாக அழித்து விடாமல் ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்ப திரித்து கொண்டது. எனவே ஐரோப்பிய நாடுகளில் கண்ட ஜனநாயக சமத்துவ உணர்வு சமய சார்பற்ற சிந்தனையை நாம் இங்கு அப்படியே பொருத்துக்கான இயலாது.
அதனால் நம்மில் ஆம் நமது சமூகத்தில் காணும் நடைமுறைகளிலிருந்து இதனை தேடுவோம்.
நம் சமூகத்தில் காணும் சமய சிந்தனையின் வரலாற்றைத் தொகுத்துக் காணும் பொழுது நம் சமயம் சார்ந்த கருத்துகள் ஏன் இப்படி இருக்கின்றது என்பதனை புரிந்துகொள்ள முடியும். அதற்கான காரணங்களை கீழ்க்காணும் சில வகை முடிவுக்கு வர வேண்டியதாக உள்ளது.
சமுதாயத்திலுள்ள மேலாதிக்கம் செய்யும் எல்லா கருத்துகளும் ஆளும் வர்க்கத்தின் நலன் சார்ந்த கருத்துகளே. சாதிய கருத்தாக்கட்டும் சமூக நடைமுறையில் உள்ள பலவற்றை சமய சாத்திரங்களின் அடிப்படையில் இருப்பதோடு சமய நம்பிக்கைகளையும் கட்டிக் காத்து கொண்டிருக்கும் கருத்துருவாக்கமே.
1). நமது பண்டிகைகள்,விழாக்கள், சடங்குகள் அனைத்தும் சமயம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. ஏன் பொங்கல் கூட ஒரு சமயத் திருவிழாவாக இன்று மாறி கொண்டுள்ளதைக் காணலாமே?
2). நம்ம குழந்தை வளர்ப்பு முறையில் தொடங்கி வாழ்க்கை கல்வி எல்லாவற்றிலும் பகுத்தறிவு சிந்தனை அறுபட்டு மூட நம்பிக்கையின் அடிப்படையிலேயே இருக்கின்றன. இது குழந்தைகளின் அச்சத்தை பயன்படுத்திக் கொள்வதற்காகவும். மக்கள் பிரச்சினைகளை தீர்க்க இயலாத சில பிரச்சினைகள் பூதகரமாக தலைவித்தாடுவதை தீர்க எதையையும் செய்யாமல் மறைத்து மாயையில் ஆழ்த்தும் மத நம்பிக்கைகள் காலம் தோறும் தொடர்கிறது.
3).பாரம்பரியமாக நமக்கு கதைகள்,பல மொழிகள், நம்பிக்கைகள், முன்னோர்களின் அனுபவங்கள் ஆகியவையின் மூலம் வழங்கப்பட்டு உறுதிப்படுத்தும் சிந்தனை முறை நம்மை இந்த சமூக சட்டகத்துக்குள்ளேயே அடைத்து வைத்துள்ளது. நம் கல்விமுறை முழுமையாக சமயத்தில் இருந்து விடுபடாது அறிவியல் சிந்தனை அற்று மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே உள்ளது.
இது போல சமய சிந்தனை முறை, நமது சமூக அடிப்படைகளாக இருக்கின்றன. அதேபோல சமயம் சாராத சிந்தனை முறையின் வளர்ச்சி சில சமூக அடிப்படைகள் இருக்க வேண்டும், இருந்தாக வேண்டும்.
சமய சிந்தனை ஒரு கருத்து என்ற அளவில் மட்டுமே இருந்து வளரவில்லை. அவற்றுக்கான சமூக அடிப்படைகள் உண்டு. நம் தமிழ்ச் சமூகத்தில் சமூக அடிப்படைகள், சமயம் சாராத சிந்தனையை வளர்க்க முட்டுக்கட்டையாக இருந்திருக்கின்றன. பண்டைய தமிழகத்தில் மட்டுமல்லாது எல்லா தேசத்திலும் சமயம் சமூகத்தோடு பின்னிப் பிணைந்து இருந்ததை காணலாம். அதில் தமிழ் சமுதாயமும் விதிவிலக்காக இல்லை. இங்கு ஓரளவு செழித்து வளரத் தொடங்கிய சமணத்தையும், பௌத்தத்தையும் சைவ வைணவ இணைப்பு முறியடித்தது. மக்களுக்கு இடையிலான கருத்து மோதல்,சமய தத்துவத்துக்கு இடையிலானதாகவும் மோதல்கள், வெளிப்பட்டன. இவற்றுக்கு அடிப்படையாக இருந்தது நிலஉடமை முறையும் அதற்கான அரசு அதிகார முறையும் ஆகும். நிலம்,கோயில், கிராமிய மைய, அரசு அதிகாரம் ஆகியவற்றை மட்டுமே சுற்றி வாழ்க்கை அமைந்தது. நில உடைமை முறையிலும் குறிப்பிடத்தக்க எவ்வித மாற்றங்களும் இல்லை. உற்பத்தி முறை ஒரே விதத்தில் அமைந்தது. புதிய புதிய தொழில்நுட்பங்கள் மலர்வதற்குரிய வாய்ப்புகள் இல்லை. நீண்ட காலமாக. கீழ்த்திசை நாடுகள் அரசு அதிகாரத்தின் கீழ் இது போல் இருந்தது என்று ஐரோப்பிய ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
இந்த உற்பத்தி முறைக்கும் அரசுமுறைக்கும் ஏற்பவே கருத்துருவாக்கம் அமைந்தது. அது சமய நெறியிலேயே அமைந்தது. பன்னிருதிருமுறைகள் திவ்யபிரபந்தம் காப்பியங்கள், புராணங்கள், சமய மற்றும் சைவ சமய சாத்திரங்கள், சங்கரர், இராமானுஜர் மத்துவர் ஆகியோரின் தத்துவங்கள் என எல்லாவற்றையும் கண்டால் அவை சமய அடிப்படையில் அமைந்தவை ஆகும். எனினும் இக்காலத்திலும். இதற்கு மாற்றான கருத்துகள் இதற்கு எதிரான அறிவு சார்ந்த சில கருத்துகள் எடுத்துக்காட்டுகள் உள்ளன. இருந்தும் சமயம் சாராத சமய எதிர்ப்பு நூல்கள் நமக்கு நேரடியாகக் கிடைப்பதில்லை. அவை மறுப்பு நூல்கள் மட்டுமே கிடைப்பதை நாம் அரிதாக காணலாம்.
சிங்காரவேலரின் வழிவந்தவர்கள் அவரின் சமயம் சாரா கருத்துகளை கூட உள்வாங்காமை வருத்தத்தை அளிக்கிறது, நான் மார்க்சை அழைக்காமைக்கு காரணம் இவர்கள்தான் மார்க்சை கைவிட்டு பல காலம் ஆகிவிட்டதே என்ன செய்ய?
No comments:
Post a Comment