அரசும் புரட்சியும் 1871 ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூனது அனுபவம்,மார்க்சின் பகுத்தாய்வு - பாகம் 2.

அரசும் புரட்சியும் 1871ஆம் ஆண்டு பாரிஸ் கம்யூனது அனுபவம்,மார்க்சின் பகுத்தாய்வு - பாகம் 2.

3. நாடாளுமன்ற முறையை ஒழித்தல்

கம்யூனானதுநாடாளுமன்ற உறுப்பாயில்லாமல் செயலாற்றும் உறுப்பாய், ஒருங்கே சட்டமன்றமாகவும் நிர்வாக குழுவாகவும் செயல்படும் உறுப்பாய்த் திட்டமிடப்பட்டதுஎன்று மார்க்ஸ் எழுதினார்.

“....ஆளும் வர்க்கத்தின் எந்த உறுப்பினர் நாடாளுமன்றத்தில் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி அடக்கி ஒடுக்குவதற்கென மூன்று அல்லது ஆறு ஆண்டுகளுக்குஒருதரம் தீர்மானிப்பதற்குப் பதிலாய், அனைத்து மக்கள் வாக்குரிமையானது கம்யூன்களாய் வகுக்கப்பெற்ற மக்களுக்கு - எந்த ஒரு முதலாளியும் தனது தொழிலுக்குத் தொழிலாளர் களையும் போர்மன்களையும் கணக்கர்களையும் தேடிக்கொள்ள தனியார் வாக்குரிமை பணியாற்று கிறதல்லவா, அது போல - பணியாற்ற வேண்டும்.

நாடாளுமன்ற முறை குறித்து 1871 ல் அளிக்கப்பெற்ற சிறப்பு மிக்க இந்த விமர்சனமும்கூட, வெகுவாய் மலிந்துவிட்ட சமூக தேசியவெறியின் காரணமாகவும் சந்தர்ப்பவாதத்தின் காரணமாகவும் இப்பொழுது மார்க்சியத்தின் மறக்கப்பட்ட வாசகங்களில்ஒன்றாகிவிட்டது.

அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருப்பதையே தொழிலாய்க்கொண்டோரும்,பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் புரிவோரும், தற்காலத்துச் செயல்முறைசோசலிஸ்டுகளும் நாடாளுமன்ற முறைபற்றியஎல்லா விமர்சனத்தையும்

அராஜகவாதிகளிடத்தே விட்டு வைத்துவிட்டனர்.இந்த அதிசயமான காராணத்தால்நாடாளுமன்ற முறை பற்றிய எல்லா விமர்சனத்தையுமே அவர்கள் அராஜகவாதமெனபறைசாற்றுகிறார்கள்.!!“முன்னேறியநாடாளுமன்ற நாடுகளைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினர்,ஷெய்டெமன் களையும் டேவிட்டுகளையும் லெகின்களையும் செம்பாக்களையும் ரெனொடேல்களையும் ஹெண்டர்சன் களையும் வண்டர்வேல்டேகளையும் ஸ்டானிங்குகளையும் பிரான்டிங்கு களையும் பிஸ்ஸொலாட்டிகளையும் அவர் சகாக்களையும் போன்ற சோசலிஸ்டுகளிடம்அருவருப்பு கொண்டு அராஜகவாத- சிண்டிகலி சத்துக்கு - இது சந்தர்ப்பவாதத்தின் உடன்பிறந்தஇரட்டையே ஆயினுங்கூட - மேலும் மேலும் ஆதரவு தெரிவிப்பதில் வியப்பில்லை.

ஆனால் மார்க்சுக்குப் புரட்சிகர இயக்கவியலானது,பிளெஹானவும் காவுத்ஸ்கியும் ஏனையோரும்ஆக்கிக் கொண்டுவிட்ட வெற்று ஜம்பமாகவோ விளையாட்டுக் கிலுகில்ப்பையாகவோ ஒருபோதும் இருந்ததில்லை.முதலாளித்துவ நாடாளுமன்ற முறை பன்றித் தொழுவமேஆயினுங்கூட அதனைப் பயன்படுத்திக்கொள்ள,முக்கியமாய் நிலைமை புரட்சிகர மானதாய் இல்லை என்பது தெளிவாய்த் தெரியும் நேரத்தில் அதைப் பயன்படுத்திக்கொள்ளத் திராணியற்றதாய்இருப்பதென்பதற்காக அராஜகவாதத்திடமிருந்து தயவு தாட்சண்யமின்றி முறித்துக்கொள்ள மார்க்சுக்குத் தெரிந்திருந்தது. அப்போதுநாடாளுமன்றமுறையை மெய்யாகவே புரட்சிகரமான பாட்டாளி வர்க்க நிலையிலிருந்து விமர்சிக்கவும் அவருக்குத் தெரிந்திருந்தது.

ஆளும் வர்க்கத்தின் எந்த உறுப்பினர் நாடாளுமன்றத்தின் மூலம் மக்களை அடக்கி ஒடுக்க வேண்டுமெனச் சில ஆண்டுகளுக்கு ஒரு தரம் தீர்மானிப்பதே முதலாளித்துவ நாடாளுமன்றமுறையின் மெய்யான சாரப்பொருள் நாடாளுமன்ற அரசியல் சட்டத்துக்கு உட்பட்ட முடியரசுகளில் மட்டுமின்றி,மிகவும் ஜனநாயகமான குடியரசிலுங்கூட இதுவேதான் நிலைமை.

அரசு குறித்த பிரச்சனையைப் பரிசீலிப்போமாயின்,இந்தத் துறையில் பாட்டாளி வர்க்கத்தின் முன்னுள்ள பணிகளின் கண்ணோட்டத்தில் அரசுக்குரிய நிறுவனங்களில் ஒன்றாகியநாடாளுமன்ற முறையைப் பரிசீலிப்போமாயின் நாடாளுமன்ற முறையை விட்டொழிக்கும்வழி என்ன? நாடாளுமன்ற முறையைத் தவிர்ப்பது எப்படி?

மறுபடியும் கூறுகிறோம்:கம்யூனை ஆராய்ந்த மார்க்ஸ் எடுத்துரைத்த படிப்பினைகள் அப்படி அடியோடு மறக்கப்பட்டுவிட்டதால்,இன்றைய சமூகஜனநாயகவாதிகளால்”(அதாவது,சோசலிசத்தின் இன்றைய துரோகிகளால்)நாடாளுமன்ற முறை பற்றிய அராஜகவாத அல்லது பிற்போக்கு விமர்சனத்தைத் தவிர்த்து வேறு எந்த விமர்சனத்தையும் உண்மையில் புரிந்துகொள்ள முடிவதில்லை.நாடாளுமன்ற முறையை விட்டொழிப்பதானது பிரதிநித்துவ உறுப்புகளையும் தேர்தலையுமே விட்டொழிப்பதாகாது.பிரதிநிதித்துவ உறுப்புகள் வெறும் வாய்ப்பேச்சுக் கூட்டங்களாய் இருப்பதை மாற்றி அவற்றைச் செயலாற்றும்உறுப்புகளாக்க வேண்டும் என்பதே இதன் பொருள். “கம்யூனானது நாடாளுமன்ற உறுப்பாயில்லாமல் செயலாற்றும் உறுப்பாய்,ஒருங்கே சட்டமன்றமாகவும் நிர்வாகக் குழுவாகவும் செயல்படும் உறுப்பாய்த்திட்டமிடப்பட்டது.” “நாடாளுமன்றஉறுப்பல்ல,செயலாற்றும்உறுப்பு”-தற்கால நாடாளுமன்றத் தினர்க்கும் சமூக- ஜனநாயகத்தின் செல்லப் பிள்ளைகளுக்கும்இது சரியான சவுக்கடி! அமெரிக்கா முதல் சுவிட்சர்லாந்து வரை, பிரான்ஸ் முதல் பிரிட்டன், நார்வே வரை இவ்வாறு எந்த நாடாளுமன்ற நாட்டை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்,இந்த நாடுகளில் எல்லாம் அரசுக்குரியமெய்யான வேலை திரைக்குப் பின்னால் நடத்தப்படுகிறது:இலாக்காக்களும் அமைச்சகசெயலகங்களும் படைத் தலைமையகங்களும் இதை நடத்துகின்றன. “பொது மக்களைஏய்ப்பதற்கென வாய்ப்பேச்சு பேசுவதே நாடாளுமன்றத்துக்கு அளிக்கப்பட்டி ருக்கும் பணி.இதுவே உண்மை என்பதை முதலாளித்துவக் குடியரசாகியுள்ளரஷ்யக் குடியர சுங்கூடபுலப்படுத்துகிறது.மெய்யான நாடாளுமன்றம் ஒன்றை இக்குடியரசு நிறுவிக்கொள்ளும் முன்னரேகூட நாடாளுமன்ற முறையின் இந்தக் கேடுகள் யாவும் உடனடியாகவே வெளிப்பட்டுவிட்டன. கேடுகெட்ட குட்டிமுதலாளித்துவ அற்பவாதத்தின் வீரர்களானோர் -ஸ்கோபெலெவ் களையும் தெஸெரெத்தேலிகளையும்,செர்னோவ்களையும் அவ்க்சேன்தியெவ் களையும் போன்றோர் அருவருப்பு மிக்க முதலாளித்துவ நாடாளுமன்ற முறையிலே சோவியத்துகளையும் நச்சுப்படுத்தி அவற்றை வெறும் வாய்ப்பேச்சுக் கூடங்களாய் மாற்றுவதில் வெற்றியுங்கூட பெற்று விட்டனர்.சோவியத்துகளில் சோசலிஸ்டுஅமைச்சர்கள்வாய்வீச்சு களாலும் தீர்மானங்களாலும் நாட்டுப்புறத்து ஏமாளிகளை ஏய்த்து வருகிறார்கள்.

ஒருபுறம்சோசலிஸ்டுப் புரட்சியாளர் களிலும் மென்ஷ்விக்குகளிலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிமானோருக்குப்பசையுள்ள, சிறப்புக் குரிய பதவிகளான சன்மானங்கள்கிட்டும்பொருட்டும், மறுபுறத்தில் மக்களுடைய கவனம்திசைதிருப்பப் பட்டுக் கவரப்படும்பொருட்டும் அரசாங்கத்தினுள் ஓயாத ஆள்மாற்றம் நடந்தேறுகிறது. இதற்கிடையில் அமைச்சகச் செயலகங்களும் படைத் தலைமையகங்களும் அரசுக்குரியவேலைகளை நடத்துகின்றனஆளும் சோசலிஸ்டு - புரட்சியாளர் கட்சியின் ஏடான தியேலொ நரோதா அண்மையில் ஒரு தலையங்கத்தில் - “எல்லோருமேஅரசியல் விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் உயர்குலத்துமாந்தரது ஒப்பில்லா நேர்மையோடு ஒப்புக்கொண்டது சோசலிஸ்டுகள்தலைமை தாங்கும் அமைச்சகங் களிலுங்கூட அதிகாரிகளிளான அமைப்பு எந்த மாற்றமுமின்றி அப்படியேஇருக்கிறது என்றும்,பழைய பாணியிலேயே வேலை செய்து புரட்சிகர நடவடிக்கைகளைத் தங்கு தடையின்றிசீர்குலைத்துவருகிறதென்றும் ஒப்புக்கொண்டதுஇந்த ஒப்புதல்வாக்குமூலமின்றியே,அரசாங்கத்தில் சோசலிஸ்டு புரட்சியாளர்களும் மென்ஷ்விக்குகளும்பங்குகொள்வதன் நடைமுறை வரலாறே இதனை நிருபிக்கவில்லையாஆயினும் அமைச்சரவையில் காடெட்டுகளுடைய சகவாசத்தால் செர்னோவ்களும் ருசானவ்களும் ஸென்ஸீனவ்களும் தியேலொ நரோதாவின் பிற ஆசிரியர்களும் இப்படி வெட்க்கங் கெட்டவர்களாகி ஏதோ அற்பவிவரத்தைக் குறிப்பிடுவதுபோல தமதுஅமைச்சகங்களில் எதுவும் மாற்றமின்றி அப்படியே இருப்பதாய்க் கூறுவது குறிப்பிடத்தக்கதாகும்!!கிராமப்புற ஏழை எளியோரை ஏய்க்கப் புரடசிகர ஜனநாயகச் சொல்லடுக்குகள், முதலாளிமார்கள் மனம் மகிழஅதிகார வர்க்க ஆட்சியும் செயலயங்களுக்கு வழக்கமான இழுத்தடிப்பும் - இதுதான் நேர்மை மிக்ககூட்டு அமைச்சரவையின் சாராம்சம்.

முதலாளித்துவ சமுதாயத்தின் ஊழல் மலிந்த நாற்றம் பிடித்த நாடாளுமன்ற முறைக்குப் பதிலாய்,கம்யூனானது கருத்துச் சுதந்திரமும் விவாதச் சுதந்திரமும் ஏமாற்று வித்தையாய்ச் சீரழிந்துவிடாத உறுப்புகளைத் தோற்றுவிக்கிறது.எப்படியெனில் நாடாளுமன்றத்தினர் தாமேவேலை செய்யவும்,தாம் இயற்றும் சட்டங்களைத் தாமே செயல்படுத்தவும்,உண்மையில் சாதிக்கப் பெற்ற பலன்களைத் தாமே சோதித்துப் பார்க்கவும்,தம்மைத் தேர்ந்தெடுத்த தொகுதியோருக்கு நேரடியாகத் தாமே பொறுப்புக் கூறவும் வேண்டியதாகிறது.பிரதிநித்துவ உறுப்புகள் தொடர்ந்து நிலவுகின்றன;ஆனால் நாடாளுமன்ற முறை ஒரு தனி வகை அமைப்பாய்,சட்டமியற்றுவதற்கும் செயல்படுத்து வதற்கும் இடையிலான உழைப்புப் பிரிவினையாய்,பிரதிநிதிகளது தனிச் சலுகை நிலையாய் நிலவவில்லை.பிரதிநிதித்துவஉறுப்புகள் இல்லாமல் ஜனநாயகத்தை,பாட்டாளி வர்க்க ஜனநாயகத்தையுங்கூட கற்பனை செய்து பார்க்க முடியாது.ஆனால் நாடாளுமன்ற முறை இல்லாமல் ஜனநாயகத்தை கற்பனை செய்து பார்க்க முடியும்.கட்டாயம் பார்க்க வேண்டும்.முதலாளித்துவ சமுதாயத்தை நாம் விமர்சித்து கண்டிப்பது வெறும் சொல் அளவிலானவிமர்சனமாய் நின்றுவிடக் கூடாதெனில்,முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டும் என்ற விருப்பம், மென்ஷ்விக்குகள், சோசலிஸ்டுப் புரட்சியாளர்கள் விவகாரத்திலும்,மற்ற ஷெய்டெமன்கள்,லெகின்களின் விவகாரத்திலும்,செம்பாக்கள்,வண்டர்வேல்டேகளின்விவகாரத்திலும் இருப்பது போலதொழிலாளர்களுடைய வாக்குகளைக் கவருவதற்கான வெறும் தேர்தல்முழக்கமாயிராது நமது திடமான உளப் பூர்வமான விருப்பமாய் இருந்தால் கட்டாயம் நாம் இவ்வாறே செய்ய வேண்டும்.

கம்யூனுக்கும் பாட்டாளி வர்க்க ஜனநாயகத்துக்கும் அவசியமான அந்த அதிகாரிகளின்பணிகள் குறித்துப் பேசுகையில் மார்க்ஸ் அவர்களை எந்த ஒரு முதலாளியின்ஊழியர்களுடன், அதாவது சாதாரண முதலாளித்துவத்தொழில்நிலையத்தின்தொழிலாளர்கள், போர்மன்கள், கணக்கர்களுடன்ஒப்பிடுவதுகருத்தூன்றிக் கவனிக்கத்தக்கதாகும்.

புதியசமுதாயம் ஒன்றைத் தாமே கற்பனா சக்தியால் தோற்றுவித்துக் கொண்டார், அல்லதுகண்டுபிடித்துக் கொண்டார் என்கிற பொருளில் மார்க்சிடம் கற்பனாவாதத்தின் சாயல்இம்மியும் கிடையாது.இல்லை,பழைய சமுதாயத்தின் உள்ளிருந்து புதிய சமுதாயம் பிறப்பதையும், முன்னது பின்னதாய் மாறிவிடும் வடிவங்களையும் இயற்கையான வரலாற்று நிகழ்ச்சிப்போக்காய் அவர் ஆராய்ந்தார்.வெகுஜனப் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் ஸ்தூலமான அனுபவத்தைப் பரிசீலித்து, அதனின்று நடைமுறைப் படிப்பினைகள் பெற முயன்றார். மாபெரும் புரட்சிகர சிந்தனையாளர்கள் எல்லோருமே ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய மாபெரும் இயக்கங்களின் அனுபவத்திலிருந்து தயக்கமின்றி கற்றறிந்து கொண்டது போலவே அவர் கம்யூனிசத்திலிருந்து கற்றறிந்து கொண்டாரேஅன்றி,“அவர்கள் போர் தொடங்கியிருக்கக் கூடாதுஎன்று பிளெஹானவ் கூறியதைப்போலவோ,வர்க்கமானது வரம்புக்கு உட்பட்டாக வேண்டும்என்று தெஸெரெத்தேலி கூறியதைப்போலவோ) பகட்டுப் புலமை வாய்ந்த ஞான உபதேசம்செய்ய முற்பட்டதில்லை.

உடனடியாகவும் எல்லா இடத்தும் முற்றாகவும் அதிகார வர்க்க ஆட்சியை அழித்துவிடுவது முடியாத காரியம்.அது ஓர் ஆகாயக் கோட்டையே ஆகும்.ஆனால் பழைய அதிகார வர்க்கப் பொறியமைவை உடனடியாகவே நொறுக்குவதும்,எல்லாவகை அதிகார வர்க்க ஆட்சியையும்படிப்படியாக ஒழித்திட வழிகோலும் புதிய பொறியமைவை உடனே அமைத்திடத் தொடங்குவதும் ஆகாயக் கோட்டை அல்ல,கம்யூனினது அனுபவமாகும்;புரட்சிகர பாட்டாளிவர்க்கத்துக்குரிய நேரடியான உடனடியான பணி இது.

அரசுநிர்வாகத்தின் பணிகளை முதலாளித்துவம் எளிதாக்கிவிடுகிறது.

நாட்டாண்மைபுரிவதுவிட்டொழிக்கப்படுவதும்,யாவும் பாட்டாளி வர்க்கத்தினர் (ஆளும் வர்க்கமாய்) ஒழுங்கமையும் விவகாரமாகி விடுவதும் இதனால் சாத்தியமாகிறது. இவ்வாறு ஒழுங்கமைந்த பாட்டாளி வர்க்கம் சமுதாயம் அனைத்தின் பெயரில் தொழிலாளர்களையும் போர்மன்களையும் கணக்கர்களையும்சம்பளத்துக்கு அமர்த்திக்கொள்ளும்.

நாம் கற்பனாவாதிகள் அல்ல, நிர்வாகம் அனைத்தையும், கீழ்படிதல் அனைத்தையும் உடனடியாகவே விட்டொழித்துவிடலாமென நாம் கனவு காணவில்லைபாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்துக்குள்ள கடமைகளைப் புரிந்துகொள்ளாததே இந்த அராஜகவாதக் கனவுகளுக்கு அடிப்படை. இவை மார்க்சியத்துக்கு முற்றிலும் புறம்பானவை. உண்மையில் மக்கள் வேறு விதமானோராய் மாறுகிறவரை சோசலிசப் புரட்சியை ஒத்திப் போடுவதற்கே இவை வகை செய்கின்றன. இல்லை, மக்கள் தற்போது இருக்கும் இதே நிலையிலேயே, கீழ்படிதலையும், மேற்பார்வையையும்,“போர்மன்களையும் கணக்கர்களையும்விட்டொழிக்க முடியாதவர்களாயுள்ள மக்களது இதே நிலையிலேயே, நாம் சோசலிசப் புரட்சி நடத்த விரும்புகிறோம்.

ஆனால்கீழ்படிதலானது,சுரண்டப் படுவோரும் உழைப்பாளர்களுமானோர் அனைவரின் ஆயுதம் ஏந்திய முன்னணிப் படைக்கு, அதாவது பாட்டாளி வர்க்கத்துக்குக் கீழ்படிதலாய் இருக்க வேண்டும். அரசாங்க அதிகாரிகளது தனிவகை நாட்டாண்மையை” ”போர்மன்கள், கணக்கர்கள்இவர்களது எளிய பணிகளாய் மாற்றுவதற்கு உடனடியாகவே,இத்தருணதே தொடங்கிவிட முடியும்,தொடங்கவும் வேண்டும்.இந்த எளிய பணிகள் ஏற்கனவே சராசரி நகரவாசியின் ஆற்றலுக்குமுற்றிலும் உட்பட்டவையே ஆனதால், “தொழிலாளர்களுக்குரிய சம்பளம்பெற்று இவற்றைத் திறம்படச் செய்ய முடியும்.

தொழிலாளர்களாகிய நாம் முதலாளித் துவம் ஏற்கனவே தோற்றுவித் திருப்பதன் அடிப்படையிலே பெருவீதப் பொருளுற்பத்தியை ஒழுங்கமைத்து நிறுவுவோம்.

தொழிலாளர்களான நம்முடைய சொந்த அனுபவத்தை ஆதாரமாய்க் கொண்டும், ஆயுதமேந்திய தொழிலாளர்களது அரசு அதிகாரத்தின் துணையுடன் கண்டிப்பான, உறுக்கு உறுதி கொண்ட கட்டுப்பாட்டை நிலைநாட்டியும் இதனைச் செய்திடுவோம்.அரசு அதிகாரி களுடைய பாத்திரத்தைப் பொறுப்புள்ள,விலக்கப்படக்கூடிய,சாதாரண சம்பளம் பெறும் போர்மன்களும் கணக்கர்களுமாய்இருந்து (எல்லா வகைகளையும் ரகங்களையும் தரங்களையும் சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்களது உதவியுடன்தான்)நமது உத்தரவுகளை நிறைவேற்றுவது மட்டுமான பாத்திரமாய்க் குறைத்து விடுவோம்.இதுவே நமக்குரிய பாட்டாளி வர்க்கக் கடமை.பாட்டாளி வர்க்கப் புரட்சியைச் சித்தி பெறச் செய்வதில் இதுவே நாம் செய்யத் தொடங்கக் கூடியதும்,செய்யத் தொடங்க வேண்டியதும் ஆகும்.பெருவீதப் பொருளுற்பத்தியின் அடிப்படையிலே அமைந்த இத்தகைய ஒரு துவக்கம் ஏற்படுமாயின்,அதுவே அதிகாரவர்க்கம் அனைத்தும் படிப்படியாய் உலர்ந்து உதிர்ந்துவிடுவதற்குஇட்டுச் செல்லும். மேலும் மேலும் எளிதாகி வரும் கண்காணிப்புப்பு, கணக்கு வைப்பு வேலைகள் கிரமப்படி ஒவ்வொரு வராலும் செய்யப்பட்டு, பிறகு நிலையான பழக்கமாகி,முடிவில் மக்களில் ஒரு தனிப் பகுதியோருக்குரிய தனிவகை வேலைகளாய் இருக்கும் நிலை மறைந்தொழிந்து விடும்படியான ஒழுங்கு முறை - மேற்கோள் குறிகளிட்டுக்காட்டப்பட வேண்டி யில்லாத ஒழுங்குமுறை, கூலியுழைப்பு அடிமை முறையின் சாயல் இம்மியும் இல்லாத ஒழுங்குமுறை - படிப்படியாய்த் தோற்றுவிக்கப்படுவதற்கு இட்டுச் செல்லும்.

கடந்த நூற்றாண்டின் எழுபதாம் ஆண்டுகளில் வேடிக்கையான ஜெர்மன் சமூக-ஜனநாயகவாதிஒருவர் அஞ்சல் பணித் துறையை சோசலிசப் பொருளாதார அமைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டாய்க் குறிப்பிட்டார். இது மிகவும் சரிதான். தற்போது அஞ்சல் பணித் துறை அரசு முதலாளித்துவ ஏகபோக முறையில் அமைந்த தொழிலாய் இருந்து வருகிறது.

ஏகாதிபத்தியமானது எல்லா டிரஸ்டுகளையுமே இதையொத்த நிறுவனங்களாகப் படிப்படியாய் மாற்றி வருகிறது. இவற்றில் அதே முதலாளித்துவ அதிகாரவர்க்கம்தான், அளவுமீறிய வேலைப் பளுவுக்கும் பட்டினிக்கும் இலக்காகி அவதியுறும் சாதாரணஉழைப்பாளி மக்களுக்கு மேலானதாய் நிற்கிறது. ஆனால் சமூக நிர்வாகத்தின் கட்டமைவு ஏற்கனவே இவற்றில் தயாராய் இருக்கிறது. முதலாளிகளை நாம் வீழ்த்தி இந்தச் சுரண்டலாளர்களுடைய எதிர்ப்பை ஆயுதமேந்திய தொழிலாளர்களது இரும்புக் கரம் கொண்டு நசுக்கி, தற்கால அரசின் அதிகாரவர்க்க பொறியமைவை நொறுக்கிதும், உன்னத முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்தக் கட்டமைவு, “புல்லுரிவிகளிடமிருந்து விடுவிக்கப் பட்டு நம்கைக்கு கிட்டிவிடும். ஒன்றுபட்ட தொழிலாளர்கள் தாமே இந்தக் கட்டமைவைத் திறம்பட இயங்கச் செய்யமுடியும். இத்தொழிலாளர்கள் தொழில்நுட்ப நிபுணர்களையும் போர்மன்களையும் கணக்கர்களையும் சம்பளத்துக்கு அமர்த்திக் கொள்வார்கள்; அவர்கள் எல்லோருக்கும், பொதுவாய் அரசுஅதிகாரிகள் எல்லோருக்கும் எப்படியோ அதே போல, தொழிலாளர் களுக்குரிய சம்பளங்களையே தருவார்கள். எல்லா டிரஸ்டுகள் சம்பந்தமாகவும் உடனடியாகவே நிறைவேற்றப்படக்கூடிய ஸ்தூலமான, நடைமுறைப் பணியாகும் இது.

இந்தப் பணி நிறைவேற்றப்பட்டதும் உழைப்பாளி மக்கள் சுரண்டலிலிருந்துவிடுவிக்கப்பட்டுவிடுவார்கள். ஏற்கனவே கம்யூனது நடைமுறையில் செய்யத் தொடங்கியதை (குறிப்பாய் அரசை அமைத்திடுவது சம்பந்தமாய்) கணக்கில் எடுத்துக் கொண்டு வகுக்கப்பெற்ற பணி இது.

பொருளாதாரம் அனைத்தையுமே அஞ்சல் பணித் துறையைப் போல ஒழுங்கமைத்து, தொழில்நுட்ப நிபுணர்கள், போர்மன்கள், கணக்கர்கள், மற்றும் எல்லா அதிகாரிகளும் தொழிலாளர்களுக்குரிய சம்பளத்துக்குஅதிகமல்லாத சம்பளம் பெறச் செய்து,

அனைத்தையுமே ஆயுதமேந்திய பாட்டாளிவர்க்கத்தின் கண்காணிப் பிலும் தலைமையிலும் இருத்த வேண்டும். - இதுவே நமது உடனடிக் குறிக்கோள். இதுவே நமக்குத் தேவையான அரசும், பொருளாதார அடித்தளமும், நாடாளுமன்ற முறையை ஒழித்து, பிரதிநிதித்துவ உறுப்புகளை முதலாளித்துவ வர்க்கம் ஆழ்த்திய இழிநிலையிலிருந்து வர்க்கங்களை விடுவிக்கப் போவது இதுவே.

நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை

1.இன்றைய பாராளுமன்ற ஆட்சி முறையில் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட பிரதிநிதிகள் சட்டத்தை இயற்றுகிறார்கள்,ஆனால் இந்த சட்டத்தைமக்களால் தேர்ந்தெடுக் கப்படாத மக்களுக்கு எவ்விதத்திலும் கட்டுப்படுத்தப்படாதஅரசு அதிகாரி கள்தான் செயல்படுத்துகிறார்கள். இதற்கு மாறாக சட்டத்தை இயற்றுபவர்களும் அதனை செயல்படுத்துபவர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் செயல்படுத்த வேண்டும் என்பதே சோவியத்து ஆட்சி முறையாகும். இதன் மூலம் சோவியத்து ஆட்சி முறைதான் உண்மையான மக்கள் ஆட்சி முறையாகும்.

2.ஆளும் வர்க்கத்தின் எந்தப் பிரிவினர் அல்லது எந்தப் பிரிவினரின் அரசியல் கட்சியானது நாடாளு மன்றத்தில் பெரும்பான்மை பெற்று ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியில்அமர்ந்து ஆளும் வர்க்களின் நலனுக்காக உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்கி ஆளவேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கான ஆட்சி முறைதான் இந்த நாடாளுமன்ற ஆட்சி முறையாகும்.

3.ஒரு கடையின் முதலாளி சில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொண்டால் அந்த தொழிலாளர்கள் முதலாளிக்கு கட்டுப்பட்டு முதலாளியின் நலனுக்காக செயல்பட்டால்தான் அந்த முதலாளி லாபம் பெற முடியும்.அதுபோலவே மக்களாகிய முதலாளிக்குகட்டுப்பட்டு மக்களின் நலனுக்காக மக்களின் பிரதிநிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட்டால் மட்டுமே மக்களாகிய முதலாளிகள்பயன்பெறுவார்கள். ஆனால் இங்கே நடப்பதென்ன?

நாடாளுமன்ன உறுப்பினர்கள் மக்களுக்கு கட்டுப்படுவதும் இல்லை, மக்களின்நலனுக்காகச் செயல்படு வதும் இல்லை. கடை முதலாளிக்கு கட்டுப்படாமல் செயல்படும் தொழிலாளியை வேலையிலிருந்து நீக்குவதற்குஅந்த முதலாளிக்கு அதிகாரம் இருப்பதால் தொழிலாளி முதலாளிக்குக் கட்டுப்பட்டு செயல்படுகிறார். அதேபோல் மக்களுக்கு கட்டுப்படாத நாடாளுமன்ற உறுப்பினரை பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் மக்களுக்கு இருக்குமானால்நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு கட்டுப்பட்டு மக்களின் நலனுக்காகச் செயல்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

4. அராஜகவாதிகள் நாடாளுமன்ற முறையை எதிர்க்கிறார்கள் என்பது உண்மையே. அதற்காக நாடாளுமன்ற முறையை எதிர்க்கும் மார்க்சிய லெனினியவாதிகளையும் அராஜகவாதிகளாக திருத்தல்வாதிகள் சித்தரிக்கின்றனர்.ஆகவேநாடாளுமன்ற முறை பற்றிய எல்லா விமர்சனங் களையும் அராஜகவாதமென இவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். அது தவறு என்று லெனின் விளக்கியுள்ளார்.

5.முதலாளித்துவ நாடாளுமன்றத்தை பன்றித் தொழுவம் என்றே லெனின் சொன்னார்.எனினும்இந்தநாடாளுமன்றத்தை மக்களிடம் புரட்சிகர எழுச்சி இல்லாதபோது அதனை ஒருபிரச்சார மேடையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றே லெனின் சொன்னார்.

6.இந்தப் பாராளுமன்றத்துக்குள்ளேயே மூழ்கிவிட்டுபுரட்சிக்கானத் தயாரிப்பு களை கைவிட வேண்டும் என்று சொல்லவில்லை.ஆகவே அமைதியான காலங்களில் மக்களைப் புரட்சிக்குத் தயார் செய்ய வேண்டும் என்றும்,அதன் மூலம் மக்கள் எழுச்சி பெறும்போது நாடாளுமன்றத்தைப் புறக்கணித்து புரட்சியை நடத்த வேண்டும் என்றே லெனின் சொன்னார்.

7.அராஜகவாதிகள் சொல்வது போல எப்போதும் நாடாளுமன்றத்தை புறக்கணிக்க வேண்டும்என்று லெனின் சொல்லவில்லை.மாறாக புரட்சிகரமான சூழல் நிலவாதபோது நாடாளுமன்றத்தை பிரச்சார மேடையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றே லெனின்சொன்னார்.

8. நாடாளுமன்றைத்தைப் பற்றி அராஜகவாதிகளின் விமர்சனத்தைத் தான் திருத்தல்வாதிகள் புரிந்திருக் கிறார்கள்.மாறாக மார்க்சியவாதி களால் முன்வைக்கப்படும் விமர்சனங் களைத் திருத்தல்வாதிகள் புரிந்துகொள்ளவில்லை என்றார் லெனின்.

9. நாடாளுமன்றத்தை ஒழிப்பது என்றால்மக்களின் பிரதிநிதித்து வத்தையே ஒழித்துவிடுவதாக, திருத்தல்வாதிகள் கருதுகிறார்கள். அது உண்மையில்லை என்கிறார் லெனின்.

10.நாடாளுமன்றத்திலுள்ள மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் வெற்று அரட்டை அடித்துக்கொண்டு இருக்கும் நிலையை மாற்றி மக்களின் பிரதிநிதிகள் விவாதங்களில் ஈடுபடுவதோடு கூடவும் செயல்படும் உறுப்பினர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே கம்யூனிஸ்டுகளின் நிலைபாடாகும் என்றார் லெனின்.அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் பிரதிநிதிகள் சட்டம் இயற்றுவது மடடுமல்லாமல் அதனை செயல்படுத்துபவராகவும் இருக்க வேண்டும் என்பதே கம்யூனிஸ்டுகளின் நிலையாகும்.இந்த நிலைபாட்டின் அடிப்படையில் உருவான அரசுதான் சோவியத்து அரசு முறையாகும்.

11.நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் விவாதங்களில் ஈடுபடுவதைவிட கூச்சல் குழப்பம் செய்வதை நாம் பார்க்கிறோம்.பெரும்பான்மையான மசோதாக்கள்எவ்விதமான விவாதமும் இல்லாமல்நிறைவேற்றப் படுவதையும் நாம் பார்க்கிறோம்.ஆனால் இந்த சட்டங்களை மசோதாக்களை அவர்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியே முதலாளிகளும்,அரசு அதிகாரிகளும் நாடாளுமன்றத்தை திரையாகப் பயன்படுத்தி விவாதிக்கிறார்கள்.பொதுமக்களை ஏய்ப்பதற்கென்றே நாடாளுமன்றத்தில் விவாதங்கள் நடப்பதாக நடிக்கிறார்கள் என்றார் லெனின்.

12. இவ்வாறு மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு பசையுள்ள பதவிகள் தரப்படுகிறது. இருந்த போதும் இவர்களை மக்கள் அடையாளம் கண்டுகொண்டவுடன், குறிப்பிட்ட நபர்களை மாற்றி புதிய நபர்களையோ புதிய கட்சிகளையோ பதவியில் அமர்த்திவிட்டு மாற்றம் ஏற்பட்டுவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்றார் லெனின்.

13.நாடாளுமன்ற கட்சிகளே ஒருவருக்கொருவர் குற்றங்களை சுமத்தி ஒவ்வொருவரும் மக்களிடம் அம்பலப்பட்டுக்கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம்.

14.சோவியத்து ஆட்சி முறையானது,ஊழல் மலிந்த கருத்துச் சுதந்திரம் மற்றும் விவாதச் சுதந்திரம் இல்லாத நேர்மையற்று,மக்களை ஏமாற்று வதற்கான பயிற்சி பெற்ற உறுப்பினர்கள் அடங்கிய இந்த நாடாளுமன்ற முறைக்கு மாற்றாக,ஊழல் இல்லாத,நேர்மையான கருத்துச் சுதந்திரம் மற்றும் விவாதச் சுதந்திரத்தை மதிக்கும் தன்மை படைத்த உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு முறைதான் சோவியத்து அமைப்பு முறையாகும்.

15. சோவியத்து அமைப்பு முறையில் சட்டம் இயற்றுவதற்கும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கும்அதிகாரம் படைத்தவர்கள்தான் சோவியத்து உறுப்பினர்களாகஇருக்கிறார்கள்.என்ற போதும் அரசை நிர்வகிப்பதற்கும் அரசின் திட்டங்களைச்செயல்படுத்து வதற்கும் தகுதியானவர்கள் தேவை என்பதால்,இந்தத் தேவையை நிறைவுசெய்ய தகுதியானவர்களை சோவியத்து அமைப்பானது சம்பளம் கொடுத்து அறிவாளிகளை அமர்த்திக்கொள்ளும். இந்த அறிவாளிகளை உழைக்கும் மக்கள் கண்காணிக்கவும் அவர்களின் மேல் நடவடிக்கை எடுப்பதற்கும் மக்களுக்கும் மக்களின் பிரதிநிதி களுக்கும் அதிகாரம் சோவியத்து அரசில் வழங்கப்பட்டுள்ளது.

16. மக்களின் பிரதிநிதிகளையோ, அரசு அதிகாரிகளையோ கண்காணிப் பதற்கும் அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்கோ மக்களுக்கு இந்த நாடாளுமன்ற ஆட்சி முறையில் எவ்விதமான அதிகாரமும் இல்லை.

17.சோவியத்து அமைப்பில் மக்களின் அதாவது சோவியத்து பிரதிநிதிகள் தாமே சட்டம் இயற்றவும், அதனை தாமே செயல்படுத்தவும், சாதிக்கப்பட்ட பலன்களை தாமே சோதித்துப் பார்க்கவும், தம்மைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு நேரடியாக பொறுப்பேற்று பதில்கூற கடமைப்பட்டவராக உள்ளார்.ஆனால் இந்த நாடாளுமன்ற ஆட்சிமுறையில் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமியற்றுவதோடு அவரது கடமை முடிந்துவிடுகிறது.அதனை செயல்படுத்தி மக்களுக்கு பொறுப்பேற்று பதில் கூறவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.

18. பிரதிநிதித்துவ உறுப்பினர்கள் இல்லாமல் ஜனநாயகத்தை கற்பனைசெய்து பார்க்க முடியாது. ஆனால் நாடாளுமன்றம் இல்லாமல் ஜனநாயகத்தை கற்பனை செய்து பார்க்க முடியும், அப்படி பார்க்க வேண்டும்.

19.இதுவரை வரலாறு கண்டுள்ள ஜனநாயக முறைகளில் மிகவும் உயர்ந்த ஜனநாயக முறையைக் கொண்ட ஆட்சிதான் சோவியத்து வடிவத்திலான ஆட்சியாகும்.

20.சோவியத்து ஆட்சிமுறையில் செயல்படும் அதிகாரிகள் சோவியத்து பிரதிநிதிகளால் சம்பளம் கொடுத்து அமர்த்தப்படுகிறார்கள்.இந்த அதிகாரிகளை கண்காணிப்பதற்கும் அவர்கள் தவறு செய்தால் அவர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கும் சோவியத்துக்கும் மக்களுக்கும் அதிகாரம்உண்டு.ஆனால்நாடாளுமன்ற ஆட்சிமுறையில் செயல்படும் அதிகாரிகளை கண்காணிப் பதற்கோ, அவர்கள்தவறுசெய்தால் தண்டிப்ப தற்கோ மக்களுக்குஅதிகாரம் இல்லை.

21. உடனடியாக நிலவுகின்ற அதிகார வர்க்கத்தை எல்லா இடங்களிலும் அழித்துவிடமுடியாது. எனினும் கம்யூனிஸ்டுகளின் தலைமையில் உழைக்கும் வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன் அதிகார வர்க்கத்தை ஒழித்திடும் பணியை துவங்கிட முடியும். அதாவது இந்த அதிகார வர்க்கத்தை சிறிது சிறிதாக அகற்றிவிட்டு அவர்களிடத்தில் தனது சொந்த உறுப்பினர்களையோ,மக்களிடத்திலுள்ளசிறந்தவர்களையோ கொண்டு அதிகாரிகளின் இடத்தை நிரப்பிட வேண்டும்.

22.அரசு அதிகாரிகளின் பணியை நவீன முதலாளித்துவமானது எளிதாக ஆக்கிவிட்டதால்,மக்களிடத்திலிருந்து எளிய முறையில் பயிற்சி அளித்து இந்த அரசு அதிகாரிகளுக்குப் பதிலானஉழைக்கும் மக்களைக் கொண்ட அரசு அதிகாரிகளைநாம்உருவாக்கிவிடலாம்.

23. நிர்வாகம் அனைத்தையும், கீழ்படிதல் அனைத்தையும் உடனடியாக ஒழித்துவிட முடியாது.

ஆகவே மக்கள் தற்போது என்ன நிலையில் உள்ளார்களோ அதனை கணக்கிலெடுத்துக்கொண்டே நாம் சோவியத்து அமைப்பின் பிரதிநிதிகளையும்,அரசுஅதிகாரிகளையும் வளர்க்க வேண்டும்.

தேன்மொழி

+++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்