பிரெஞ்சுப் புரட்சி பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டியவை. சிபி

ஐரோப்பிய முடியாட்சிகளை முதன் முதலில் அதிர வைத்த சிறப்பு பிரெஞ்சுப் புரட்சிக்கே உரியது

1789ல் ஏற்பட்ட பிரெஞ்சுப் புட்சி உலக வலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். மன்னர்களின் எதேச்சதிகாரா ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து மக்களால் உருவாக்கப்படும் ஆட்சிக்கு வழிவகுத்தது.  மக்களாட்சி சகாப்தத்தின் ஆரம்பம் தான் பிரெஞ்ச் புட்சி. முடியாட்சிக்கு முடிவுகட்டி குடியாட்சிக்கு வழிவகுத்தது.

நிலப்பிரபுக்கள்மன்னர்கள் ஆதிக்கம் செலுத்திய அன்றைய பிரான்சில் எழுந்த மாபெரும் புரட்சிஅந்தப்  புரட்சியின் போது அனைத்து மக்களும் சமம்” என்றும் சமத்துவ இலட்சியத்தை மக்கள் முழங்கினர் “சுதந்திரம்சமத்துவம்சகோதரத்துவம்” என்ற முழக்கங்களை முன்வைத்து ஆளுகிற கூட்டத்தை மக்கள் புரட்சிகரமான முறையில் வீழ்த்தினர்.

குடியாட்சிக்குரிய சட்டசபைகளையும், தேர்தல் முறைகளையும் இப் புரட்சி புகுத்தியது. ஆயினும் இப்புரட்சி சிறு உடைமையாளர்கள், நடுத்தர விவசாயிகள் மூலம சிறு பண்ட உற்பத்தியாளரின் ஆதிக்கத்துக்கும் வழிவகுத்தது. இவ் வர்க்கத்தவரின் ஆதரவுடனேயே பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் நெப்போலியன் போன்ற தளபதி ஒருவன சர்வதிகாரியாக பிரெஞ்சில் தோன்ற வாய்ப்பளித்தது.

1789இல் நிகழ்ந்த பிரெஞ்சுப் புரட்சி  அடிமைத்தனமும் மூடத்தனமும் அநீதிகளும் நிலவிய அன்றைய சமூகத்தில் சுதந்திரம்,சமத்துவம்சகோதரத்துவம்”  என்ற இலட்சிய முழக்கங்கள் மிகப் பெரிய முன்னேற்றமாக திகழ்ந்தன.

இன்று உலக நாடுகளில் ஜனநாயக உணர்வும் ஜனநாயக உரிமைகளுக்கான இயக்கங்களும் வளர்ந்துள்ளன. வாக்குரிமை, கருத்துரிமை உள்ளிட்ட உரிமைகளை உறுதிப்படுத்தும் அரசியல் சட்ட அமைப்புகள், ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு இயங்குகின்றன.

ஜனநாயக சட்டங்கள் அரசாங்கங்களை வழிநடத்தும் நெறிமுறைகளாக மாறியுள்ளன. ஜனநாயக மீறல்கள் பல நடக்கிற போது மக்களின் எதிர்ப்பு இயக்கங்களும் நடக்கின்றன. இதற்கெல்லாம் அடித்தளமிட்டவை பிரெஞ்சுப் புரட்சியாகும். பிரெஞ்சுப் புரட்சி முறியடிக்கப்பட்டு தோல்வியில் முடிந்தாலும்,மானுட வரலாற்றை சமத்துவஜனநாயக இலக்குகளை நோக்கிச் செல்வதற்கான உந்துதலை பிரெஞ்சுப் புரட்சி அளித்துள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், வரலாற்றின் இயக்கம் அத்துடன் முடிவடையவில்லை."பிரெஞ்சுப் புரட்சி எட்டாத இலக்குகளை அடைய வேண்டிய தேவை இப்போதும் நீடிக்கின்றது" என்றார் தோழர் லெனின்.

இந்த பிரெஞ்சுப் புரட்சி முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ சுதந்திரத்திற்கு அடித்தளமிட்டது”.நிலப்பிரப்புக்கள், மன்னர்களின்ஆட்சியை பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்குகொண்டு வந்தது. எனினும் முதலாளித்துவம் அதிகாரத்தில் அரங்கேறும் நிலை ஏற்பட்டது. பெரும் சொத்து படைத்த சிறு கூட்டம்பெரும்பான்மை உழைக்கும் மக்களை சுரண்டுகிற சமூக அமைப்பாக உலகில் நிறுவப்பட்டது. எனவே பிரெஞ்சுப் புரட்சியின் சமத்துவ இலக்குகளை எட்டுகிற மாற்றங்கள் மானுடத் தேவையாக நீடிக்கின்றன. இதற்கு மார்க்சியம் சரியான தத்துவமாக பயன்படுகிறது. பிரெஞ்சுப் புரட்சியின் போது, 1791 இல் குடிமக்களின் உரிமைப் பிரகடனம் என்ற பிரசித்தி பெற்ற ஜனநாயக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை புரிந்துக் கொள்ள பல நேரங்களில் பலரின் மூலம் அறிந்த தகவல்களை பேசுவோமே.
"மன்னர் மாளிகைக்கு முன்னே இது என்ன கூட்டம், கூச்சல்" என்று 16 ம் லூயியின் பட்டத்து ராணி மேரி அன்ரனெட் மன்னனைப் பார்த்துக் கேட்கிறாள்.
"சாப்பாட்டிற்கு ரொட்டியில்லையென்று கத்துகிறார்கள்" என்று மன்னன் பதிலளிக்கிறான்.
"ரொட்டியில்லா விட்டால் கேக்கைச் சாப்பிடும் படி சொல்லு வதுதானே" என்று நாடாளும் மன்னனின் ராணி கூறுகிறாள்.
1789ல் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் போது இப்படியான வேடிக்கையும் வேதனையும் மிக்க பல கதைகள், பேச்சுகள் பிரெஞ்சில் பேசப்பட்டன; எழுதப்பட்டன. அவற்றில் சிறப்பானது இதுவே.
மன்னராட்சியில் மக்களின் துன்பத்தை அறியாது அரசர்கள் ஆண்டனர் என்பதைப் பிரதிபலிப்பதே இக் கூற்றாகும்.
15வது லூயி மன்னன் யுத்தத்திலும் தன் சுகபோகத்திலும் ஈடுபட்டு பிரெஞ்சு நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்தான். 1774ல் 18வது லூயி மன்னனும் அதன் வழி தொடர்ந்தான்.
ஏழை மக்கள் மீது வரிகள் சுமத்தப்பட்டன. அதிகாரிகள் ஊழலில் மிதந்தனர். நிலப்பிரபுக்கள் மேலும் நிலமும் செல்வமும் சேர்த்தனர்வரிகொடுக்க முடியாதவர், அரசனை எதிர்த்தவர் கொடுமையில் உலகப் புகழ் பெற்றதாகக் கூறப்பட்ட பாஸ்டைலில் சிறையில் தள்ளப்பட்டனர்.
பிரெஞ்சு நாட்டின் முன்னோடி எழுத்தாளர்களான வால்டேரும் ருஸ்ஸோவும் நாட்டில் நடைபெற்ற கொடுமைகளை எதிர்த்து எழுதினர். பேசினர்.
இருவரது முயற்சிகளும் புத்திஜீவிகளையும் அறிஞர்களையும் தட்டி எழுப்பியது. அனைவரும் மன்னராட்சியை எதிர்த்து குரலெழுப்பினர். கைத்தொழில் உற்பத்தியில் ஈடுபட்டிருந்த முதலாளிகள் தமது தொழிலாளர்களையும் அணிதிரட்டி நிலப்பிரபுத்துவ ஆட்சியை, மன்னனின் அதிகாரத்தை எதிர்த்தனர்.
1789 ஜீலை 14ம் நாள் மக்கள் அணிதிரண்டு கொடும் சிறையான பாஸ்டையிலைத் தாக்கினர். சிறையில் துன்புற்ற மக்களை விடுவித்தனர்நாடெங்கும் மக்கள் புரட்சி பரவியது. மக்கள் கொதித்தெழுந்து மன்னராட்சியை எதிர்த்தனர். தேசிய மக்கள் சபை புதிய அரசியலமைப்பை ஏற்படுத்த, கூடியதாயிற்று,நிலப்பிரபுக்களும் அரசனைச் சார்ந்த செல்வந்தர்களும் நாட்டை விட்டு இங்கிலாந்திற்கும் பிற அண்டைநாடுகளுக்கும் ஓடினர்.
1791 ஜீன் மாதத்தில் 16வது லூயி மன்னன் தன் ராணியுடன் நாட்டை விட்டு ஒடமுயன்றன். மக்கள் தப்பி ஓடாது தடுத்து விட்டனர்.
இப் புரட்சி அண்டைநாட்டு அரசராட்சிகளுக்கெல்லாம் அச்ச மூட்டியது.
மேரி அன்ரனெட்டின் சகோதரன் ஒஸ்ரியாவின் பேரரசனாக இருந்தான், தன் தங்கையின் ஆட்சியை மீண்டும் நிலைநாட்ட முயன்றான். மக்கள் அமைத்த குடியரசுக் கட்சி தேசிய இன உணர்வுடன் ஒஸ்ரியாவை எதிர்த்து வெற்றி கண்டது.
1793 ஜனவரியில் பிரெஞ்சுக் குடியரசு நிறுவப்பட்டது. லூயி மன்னன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டான். 1793 ஜனவரி 21ம் தேதி சிரச்சேதம் செய்யப்பட்டான் அதைத் தொடர்ந்து அவனைச் சார்ந்து நிலப் பிரபுக்களும் செல்வர்களுமாக நூற்றுக்கணக்கானேர் கொல்லப்பட்டனர்.
1793 அக்டோபர் 16ம் நாள் மேரி அன்ரெனெட்டும் சிரச்சேதம் செய்யப்பட்டாள்; 1795 வரை அமைதியற்ற அரசியல் சூழலில் பலர் உயிரிழந்தனர். அவ்வாண்டு அக்டோபரின் பின்னர் அமைதி ஏற்பட்டது. 1789 ஜீலையில் ஆரம்பித்த பிரெஞ்சுப் புரட்சி 1795 அக்டோபரில் முடியுற்றது என வரலாற்றாசிரியர் கூறுவர். இப்புரட்சி நிலப்பிரபுக்களை ஒழித்து சிறு உடைமையாளரான நடுத்தர விவசாயிகளை பிரெஞ்சு நாட்டில் பரவலாக்கியது. இத்தகைய விசித்திர மாற்றம் இங்கிலாந்திலோ பிற ஐரோப்பிய நாடுகளிலோ முதலாளித்துவப் புரட்சியின் போது ஏற்பட்டதில்லை.
இச் சிறு நிலவுடைமையாளரின் ஆதரவுடனேயே பின்னர் நெப்போலியன் பிரெஞ்சு நாட்டின் ஆட்சியை யுத்தத்தின் மூலம் விரிவாக்க முயன்றான்.
பிரெஞ்சுப் புரட்சி ஒரு வன்முறைப் புரட்சியாகும்.பிரெஞ்சுப் புரட்சியின் போதே ' சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம்' என்ற குரல்கள் எழுப்பப்பட்டன. ஆதே நாடு பின்னர் ஏகாதிபத்திய நாடாக, உலகெங்கும் காலனி நாடுகளை ஆக்கிரமித்து அடக்கி ஆண்டது வேடிக்கையே?

பிரெஞ்சுப் புரட்சி ஒடுக்கப்பட்ட போதிலும் வரலாற்றை நுணுகிப் பயிலும் ஒவ்வொருவரும் அதை வெற்றிகரமான புரட்சி என்று ஏற்றுக் கொள்வார்கள்இந்த பிரெஞ்சுப் புரட்சி முதலாளித்துவ ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவ சுதந்திரத்திற்கு அடித்தளமிட்டது”.

நிலப்பிரப்புக்கள்மன்னர்களின்ஆட்சியை பிரெஞ்சுப் புரட்சி முடிவுக்குகொண்டு வந்ததுஎனினும் முதலாளித்துவம் அதிகாரத்தில் அரங்கேறும் நிலை ஏற்பட்டது. பெரும் சொத்து படைத்த சிறு கூட்டம், பெரும்பான்மை உழைக்கும் மக்களை சுரண்டுகிற சமூக அமைப்பாக உலகில் நிறுவப்பட்டது

பிரெஞ்சுப் புரட்சியின் சமத்துவ இலக்குகளை எட்டுகிற மாற்றங்கள் மானுடத் தேவையாக தொடங்கியது அவையே பெரும்பான்மையோரை உழைக்கும் பாட்டளிகளை ஒடுக்கவும் முதலாளிகளின் நலன்காக்கவும் முதலாளித்துவ தேவைக்காக மாறிவிட்டது. இவைதான் சமூக நியதி சமூக வளர்ச்சி  இதனை பற்றி மிகச்சரியாக மார்க்சிய தத்துவமாக பயன்படுகிறது. பிரெஞ்சுப் புரட்சியின் போது, 1791 இல் குடிமக்களின் உரிமைப் பிரகடனம் என்ற பிரசித்தி பெற்ற ஜனநாயக அறிவிப்பு வெளியிடப்பட்டது ஆனால் அடுத்த கட்ட சமூக நகர்வில் அவர்கள் கூறிய ஜனநாயக உரிமைகளை அதே முதலாளித்துவ அரசு வழங்க மறுக்கிறது.

ஆக இறுதியாக ஒரு நிலவுடைமை சமூகத்திலிருந்து முதலாளித்துவ கட்டத்தில் நுழையும் பொழுது மிக உயர்வாக மதிக்கப்பட்ட ஜனநாயகம் சகோரத்துவம் என்ற கோசங்கள் சுரண்டும் அரசுக்கு சாதகமாக மாறும் பொழுது பெரும்பான்மை மக்களை ஒடுக்க அவை பயன்ப்டுகிறது.

சமூக வளர்ச்சியில் நமது புரிதலை சரியாக்குவோம் தோழர்களே...

வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் 



No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்