பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் -
பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயர்த்துவது,ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் வெற்றி பெறுவது என்பதுதான் உழைக்கும் மக்களின் போராட்டத்தின் முதல் நடவடிக்கை ஆகும் - கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இருந்து.
உழைக்கும் வர்க்க அதிகாரம் பற்றி லெனின் எழுதினார் :- வர்க்கப் போராட்டத்தை மட்டும் ஏற்பவர்கள் மார்க்சிய வாதிகள் ஆகி விடமாட்டார்கள் ... வர்க்கப் போராட்டத்தை ஏற்பதும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்பது வரை விரிந்து செல்பவனே மார்க்சியவாதி ஆவான் . மார்க்சியவாதிக்கும் சாதாரண சிறு (அதே போல் பெரு) முதலாளிக்கும் இடையே உள்ள மிகவும் ஆழமான வேறுபாடாக இதுவே அமைகிறது . மார்க்சியம் பற்றிய உண்மையான புரிதலையும் அதை ஏற்றுக் கொள்வதை சோதித்து அறிவதற்கான உரைக்கல்லும் இதுதான் (லெ.தொ.நூ. ஆ 25. ப411)
இவ்வாறு மார்க்சியவாதி பற்றி லெனின் வரையறுப்புக்கு உள்ளேயே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய கருத்தாக்கம் நுழைந்து விடுகிறது. எனவே நாம் இவ் வரையறுப்பு ஏற்றுக் கொள்வோமானால் மார்க்சியம் பற்றிய தற்காலத்தில் நிலவும் முரண்பாடுகள் பற்றிய விளக்கங்களை இனம் பிரித்தறிவதில் இவ் வரையறுப்பை நாமும் ஒரு உரைக்கல்லாகப் பயன்படுத்துவோம்.
வர்க்க சமுதாயம் சுரண்டலையே அடிப்படையாகக் கொள்கிறது. சுரண்டுபவர்கள் ஆளும் வர்க்கமாகும் சுரண்டப்படுபவர்கள் ஆளப்படும் வர்க்கமாகவும் அமைகிறார்கள் ஆளும்வர்க்கம் அரசின் வழியாக தனது ஆட்சியை திணிக்கிறது.அரசு என்பது ஒரு வர்க்கம் மற்றொரு வர்க்கத்தை வன்முறையோடு ஒடுக்கும் உறுப்பு.அதன் முதன்மையான கருவிகள் ராணுவம் போலீஸ் ஆகும்.தமது கரங்களில் அதிகாரத்தை குவித்துக் கொண்டுள்ளவர்கள் ஒரு தனிப்பட்ட வர்க்கமாக இருப்பது தான் அரசின் சிறப்பம்சமாகும் (லெ.தொ. நூ 1 ப419).
எனவே வர்க்க சமுதாயத்தின் ஒவ்வொரு வடிவமும் - அடிமை சமுதாயம், நிலப் பிரப்புத்துவச் சமுதாயம் முதலாளித்துவ சமுதாயம் இவை ஒவ்வொன்றுமே - ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரம் ஆகும்.அதாவது முதலாளித்துவ சமுதாயத்தில் இது அநேகமாக ஜனநாயகம் இருக்கலாம் ;இது அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையை கொண்ட பாராளுமன்ற தேர்தலையும் அனுமதிக்கலாம்;ஆயினும் அது இன்னும் ஒரு சர்வாதிகாரம் தான் - ' பாராளுமன்ற வடிவம் என்ற முகமூடி தரித்த முதலாளி வர்க்க சர்வாதிகாரம்' தான் (லெ.தொ.நூ30 ப100).பாட்டாளி வர்க்கத்துக்கு கல்விப் புகட்டுவதற்கும் போராட்டத்துக்காக அதற்குப் பயிற்சி அளிப்பதற்கும் முதலாளி ஜனநாயகம் விலைமதிபற்றதாக உள்ளது என்றாலும் அது எப்போதும் குறுகலான போலித்தனமான மாய் மலம் நிறைந்த பொய்யான ஒன்று அது எப்போதும் வசதி படைத்தவர்களுக்கு ஜனநாயகமாகவும் வரியவர்களுக்கு மோசடியாக இருக்கிறது (லெ.தொ.நூ28 ப108).
எனவே மிக உறுதியான தீர்மானகரமான புரட்சிகர ஜனநாயக உணர்வோடு (லெ.தொ.நூ 21.ப409) முதலாளி வர்க்க ஜனநாயக உரிமைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழிலாளர்களிடம் வற்புறுத்தி கூறிய அதே வேளையில் லெனின் பாராளுமன்ற வழிமுறையை கொண்டு அவர்கள் அதிகாரத்தை வென்றெடுக்க முடியும் என்று நினைப்பது ஒரு பிரம்மை என்றும் எச்சரித்தார். இதுதான் அவருக்கும் அவர் காலத்திய புரட்டல்வாதிகளுக்கும் இடையி லிருந்து முதன்மையான பிரச்சினையாகும்.
இரண்டாம் அகில தலைவர்களைப் பற்றி பேசும் இடத்தில் சொல்லளவில் பாட்டாளி மக்கள் சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொள்வது தான் மிகவும் ஆபத்தான விஷயம், பாட்டாளி வரர்க்க சர்வாதிகாரம் என்பதை சொல்லலில் ஏற்றுக்கொண்டு கூடவே பெரும்பான்மை யோரின் சித்தம் அனைவருக்கும் வாக்குரிமை முதலாளித்து பாராளுமன்ற கொள்கை முதலாளி வர்க்க அரசு எந்திரத்தை முழுமையாக அழிக்கப்பட்டு உடைக்கப்பட்டு சுக்கு நூறாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஒதுக்குதல் ஆகியவற்றை கள்ளத்தனமாக கொண்டு வருவது தான் இப்போதைய நலுவல்கள் சீர்திருத்தவாத புதிய ஓட்டைகள் ஆகியவை தான் மிகவும் அஞ்ச தக்கவை.டதுசாரி கம்யூனிசம் - இளம் பருவக் கோளாறு என்ற நூலில் ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ரஷ்யப் புரட்சியின் அனுபவத்தி லிருந்து ஒரு நாட்டில் புரட்சிகர மான கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவதற்கு மார்க்சிய சித்தாந்த அறிவை நாம் பெற வேண்டிதன் அவசியம் குறித்து கூறியுள்ள தையும், ரஷ்யாவில் கம்யூனிஸ்டு கட்சி உருவாகி வளர்ந்து புரட்சியை சாதித்த வரலாற்றிலி ருந்தும் மார்க்சிய சித்தாந்த அறிவை நாம் பெற வேண்டியதன் அவசியம் குறித்து நாம்புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். இடதுசாரி கம்யூனிசம் - இளம் பருவக்கோளாறு எனும் நூலில் லெனின் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
“1917-20-ல் முன்பின் கண்டிராத மிகக் கடினமான நிலைமைகளில் போல்ஷ்வி சமானது மிகவும் கண்டிப்பான மத்தியத்து வத்தையும் உருக்கு உறுதி வாய்ந்த கட்டுப் பாட்டையும் நிறுவி அவற்றை வெற்றிகரமாக கட்டிக்காக்க முடிந்ததற்கு ரஷ்யாவின் வரலாற்றுச் சிறப்பியல்கள் பலவும் தான் காரணம்.
ஒருபுறத்தில், மார்க்சியத் தத்துவம் எனும் உறுதி மிக்க அடித்தளத்தின் மீது 1903-ல் போல்ஷ்விசம் உதித்தெழுந்தது. இந்தப் புரட்சிகரத் தத்துவம் பிழையற்றதாகும் என்பது, இதுஒன்றுமட்டும்தான் பிழையற்ற தாகும் என்பது, பத்தொன்பதாம் நூற்றாண்டு முழு வதிலுமான உலக அனுபவத்தால் மட்டுமின்றி, இன்னும் முக்கியமாய் ரஷ்யாவில் புரட்சிகரச்சிந்தனையின் விசாரங்கள், ஊசலாட்டங்கள், தவறுகள், ஏமாற்றங்கள் ஆகியவற்றின் இந்த அனுபவத்தாலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் மிகவும் கொடிய, மிகவும் பிற்போக்கான ஜாரிசத்தால் ஒடுக்கப்பட்டு வந்த முற்போக்குச் சிந்தனை சுமார் அரை நூற்றாண்டாய்—கடந்த நூற்றாண்டில் ஏறத்தாழ நாற்பதாம் ஆண்டுகளிலிருந்து தொண்ணூறாம் ஆண்டுகள்வரையில் --பிழையற்ற புரட்சிகரத் தத்துவத்தை ஆவலுடன் தேடி வந்தது; இத்துறையில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்; இறுதி முடிவாகக் கருதக் கூடியவை ஒவ்வொன்றையும் கண்ணும்கருத்துமாய், தளர்வில்லா ஊக்கத்துடன் கவனித்து வந்தது. ஈடிணையற்ற துன்பமும் தியாகமும்,ஈடிணையற்ற புரட்சிகர வீரமும், நம்புதற்கரிய முனைப்பும், அயராத தேடலும், ஆராய்ச்சியும், நடைமுறைச் சோதனையும், ஏமாற்றமும், சரிபார்த்தலும், ஐரோப்பிய அனுபவத்துடனான ஒப்பிடலும் நிறைந்த அரை நூற்றாண்டுக்காலத்தில் அனுபவித்த வேதனையின் வாயிலாய் ரஷ்யாவானது, பிழையற்ற ஒரேயொரு புரட்சித் தத்துவமான மார்க்சியத்தை வந்தடைந்தது. ஜாரிசத்தால் அரசியலாளர்கள் நாடுகடத்தப் பட்டு வந்ததன் விளைவாய், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புரட்சிகர ரஷ்யா, வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத அளவுக்கு வளமான சர்வதேசத் தொடர்பு களும், உலகப் புரட்சி இயக்கத்தின் வடிவங்களையும் தத்துவங்களை யும் பற்றிய அருமையான தகவல் ஞானமும் பெறலாயிற்று.
தத்துவமெனும் இந்தக் கருங்கல் அடித்தளத்தின் மீது எழுந்த போல்ஷ்வி சமானது, மறுபுறத்தில்,உலகில் வேறு எங்கும் ஒப்புவுமை காண இயலாத அனுபவச் செழுமை வாய்ந்த பதினைந்து ஆண்டுகால (1903 - 17) நடைமுறை வரலாற்றினைக் கடக்கலாயிற்று. அந்த பதினைந்துஆண்டுகளின் போது இந்நாடு கண்ட புரட்சிகர அனுபவத்துக்கும், அதிவேகமாகவும் பல்வேறு வகைப் பட்டதாகவும் வரிசையாக வந்த வெவ்வேறு இயக்க வகைகளுக்கும் -- சட்டப் பூர்வமானதும் சட்டவிரோதமானதும், அமைதியானதும் புயலின் மூர்க்கம் கொண்டதும், தலைமறைவானதும் பகிரங்கமானதும், சிறு குழுக்களின் அளவிலானதும் பரந்த வெகுஜன வீச்சு கொண்டதும்,நாடாளுமன்ற வடிவிலானதும் பயங்கரவாத வடிவிலானதும் ஆகிய விதவித மான இயக்க வகைகளுக்கும் -- ஏறத்தாழ ஒப்பானவற்றையுங்கூட வேறு எந்த நாடும் கண்டதில்லை. வேறு எந்தநாட்டிலும் நவீனச் சமுதாயத்தின் எல்லாவர்க்கங்களுக் குறிய போராட்டத்தின் இத்தனை விதமான வடிவங்களும் வகைகளும் முறைகளும் இவ்வளவு குறுகியகால வரம்பினுள் ஒன்று குவிந்ததில்லை. இந்தப் போராட்டம் நாட்டின் பிற்பட்ட நிலை காரணமாகவும், வியக்கத்தக்க வேகத்தில் முதிர்ச்சியுற்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசியல் அனுபவத்தின்;இறுதி முடிவாகக்; கருதக் கூடியவற்றுள் பொருத்தமானவற்றை மிகுந்த ஆவலுடனும், வெற்றிகரமாகவும் கிரகித்துக் கொண்டது” (லெனின் தேர்வு நூல்கள், தொகுதி 10, பக்கம் 190) 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி நடத்தி வெற்றி பெற்றதற்கு, ரஷ்யாவின் சிறப்பு இயல்புகள்தான் காரணம் என்கிறார் லெனின். அந்த சிறப்பு இயல்புகள் என்ன? ஒரு புறத்தில், மார்க்சியத் தத்துவம் எனும் உறுதி மிக்க அடித்தளத்தின் மீது 1903-ல் போல்ஷ்விசம் உதித்தெழுந்தது என்கிறார் லெனின். அதாவது மார்க்சியம் என்ற சித்தாந்தத்தை உள்வாங்கி, அறிவு வளர்ச்சி பெற்ற புரட்சிகர சக்திகளின் கூட்டு முயற்சியால் தான் அங்கே போல்ஷவிசம் என்ற தொழிலாளர் களின் கட்சி உறுவானது என்கிறார். இதனையே புரட்சிகர தத்துவம் இல்லாமல் ஒரு புரட்சிகர இயக்கம் இல்லைஎன்ற கோட்பாட்டை லெனின் நமக்கு வகுத்துக்கொடுத்தார். இதன் மூலம் ஒரு கம்யூனிஸ்டு கட்சியை உருவாக்குவதற்கு மார்க்சிய தத்துவப்புரிதல் எவ்வளவு அவசியமானது என்பதை இங்கே லெனின் விளக்குகிறார். ஆனால் இந்தியாவில் அடிப்படையான மார்க்சிய அறிவு வளர்ச்சி குறைவானவர்கள் எல்லாம் தங்களை கம்யூனிஸ்டுகள் என்றும், தங்களுக்குத் தெரியாத விசயங்கள் எதுவுமே இல்லைஎன்றும் தலைகனம் மிக்கவர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்களே. இது சரியா? சிந்திக்க வேண்டும். இத்தகைய அரைகுறையாக மார்க்சியத்தை தெரிந்துகொண்டு பிரச்சனைகளை மார்க்சிய தத்துவவெளிச்சத்தில் பார்க்காமல், அகநிலையாக பிரச்சனைகளை பார்த்து அவர்களது உணர்வுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பார்த்து முடிவுகள் எடுத்து செயல்படுவதால், பிரச்சனைகளை தீர்க்க முடிவதில்லை. என்ற அனுபவத்திலிருந்தும் பாடம் கற்றுக் கொள்ளாமல்,தொடர்ந்து அகநிலைவாத கண்ணோட்டத்தில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் இவர்களால் சமூகப் பிரச்சனையை பலஆண்டுகாலம் ஆன பிறகும் தீர்க்க முடிய வில்லை.
ரஷ்யப் புரட்சியின் அனுபவத்தி லிருந்தும் இவர்கள் பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சியின் வரலாற்றைஇவர்கள் படிப்பதே இல்லை. இன்னும் சிலர் ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சியின் அனுபவம் இங்கேபொறுந்தாது என்கிறார்கள்.
மார்க்சிய தத்துவத்தின் அடிப்படை யில் உருவாக்கப்பட்ட புரட்சிகரத் தத்துவம் பிழையற்றதாகும் என்பதும், இது ஒன்று மட்டும்தான் பிழையற்றதாகும் என்பதும், பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுவதிலு மான உலக அனுபவத்தால் மட்டுமின்றி, இன்னும் முக்கியமாய் ரஷ்யாவில் புரட்சிகரச்சிந்தனையின் விசாரங்கள், ஊசலாட்டங்கள், தவறுகள், ஏமாற்றங்கள் ஆகியவற்றின் இந்த அனுபவத்தாலும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது என்கிறார் லெனின்.
உருவாக்கப்பட்ட புரட்சிகர தத்துவம் (திட்டம், போர்த்தந்திரம், செயல் தந்திரம் அமைப்புக் கோட்பாடுகள்) பிழையற்றதாகும் என்றார் லெனின். அது பிழையற்றது என்பதுஉலகம் முழுவதிலுமுள்ள பல நாடுகளின் அனுபவத்திலிருந்தும், ரஷ்யாவின் அனுபவத்திலிருந்தும் நடைமுறை யில் நிருபிக்கப்பட்டுவிட்டது என்கிறார் லெனின். மேலும் ரஷ்யாவில் இந்ததத்துவத்திற்கு எதிராக போராடியவர்கள், ஊசலாடியவர்கள், தவறு செய்தவர்கள், மக்களை ஏமாற்றியவர்களின் எதிர்ப்பிரச்சாரங்களாலும் இந்த தத்துவத்தை தோற்கடிக்க முடியவில்லை என்கிறார் லெனின். இதன் மூலம் அங்கு உருவாக் கப்பட்ட திட்டமானது மார்க்சியம் பற்றியதெளிவான கண்ணோட்டத்திருந்து உருவாக்கப்பட்டதால் அந்த திட்டம் பிழையற்றதாக இருந்தது என்பதையே லெனின் இதன் மூலம் நமக்கு எடுத்துக்காட்டுகிறார். ரஷ்யாவில் மிகவும் கொடிய, மிகவும் பிற்போக்கான ஜாரிசத்தால் ஒடுக்கப்பட்டு வந்தமுற்போக்குச் சிந்தனை சுமார் அரை நூற்றாண்டாய் --கடந்த நூற்றாண்டில்ஏறத்தாழநாற்பதாம் ஆண்டுகளிலிருந்து தொண்ணூறாம் ஆண்டுகள் வரையில் --- பிழையற்ற புரட்சிகரத் தத்துவத்தைஆவலுடன் தேடி வந்தது என்கிறார் லெனின். அதாவது ஜாரின் கொடூரமான சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கும் போதுதான் ரஷ்யா விலுள்ள தொழிலாளர்களும், அறிவுஜீவி களும், சமூகத்தை மாற்றுவதற்கான முற்போக்கு சித்தாந்தத்தை ஆவலுடன் தேடிக்கொண்டிருந் தார்கள் என்கிறார் லெனின். அத்தகைய முற்போக்கான தத்துவம்தான் மார்க்சியம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்றும் அதற்காக பல காலம் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்கிறார் லெனின்.
அந்த காலங்களில் மார்க்சும் எங்கெல்சும் முதலாளித்து சமூக அமைப்பை ஆய்வு செய்து மார்க்சிய தத்துவத்தை படைத் திருந்தார்கள். அந்த மார்க்சிய தத்துவமானது ஐரோப்பிய நாடுகளில் மக்களின் செல்வாக்கைப் பெற்றுக் கொண்டு இருந்தது. ரஷ்யாவிலும், மார்க்சிய தத்துவங்களை ரஷ்யமொழியில் மொழி பெயர்த்து தொழிலாளர்களிடமும், அறிவுஜீவிகளிட மும் தோழர்பிளக்னோவால் பரப்பப் பட்டுக் கொண்டு இருந்தது.
இந்த சூழலில்தான், ஐரோப்பாவில் இந்த தத்துவத்தை செயல்படுத்திய அனுபவத்தில் ஏற்பட்ட வெற்றி மற்றும் தோல்விகளி லிருந்தும், இதனை சோதிக்க எடுத்த முயற்சிகளிலிருந்தும், ரஷ்யாவில் இதற்காக நடந்த போராட்டங்கள், தியாகங்கள், போன்றவற்றிலிருந்தும் புரட்சிகரமான தத்துவமான மார்க்சியத்தைபுரிந்து கொண்டோம் என்கிறார் லெனின். ஆகவே ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சியின் வரலாற்றில் ஜாரின் எதேச்சிகாரத்தை மீறியும், அதன் கொடுமைகளை தாங்கிக் கொண்டும் ரஷ்யாவிலுள்ள புரட்சிகர சக்திகள் மார்க்சியத்தின்அடிப்படைகளை பல காலம் முயற்சி செய்து பாடுபட்டுக் கற்றுக்கொண்டார்கள் என்பதை லெனின் இங்கே சுட்டிக்காட்டுகிறார். இதுபோன்ற வரலாற்று அனுபவம் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்கோ, இங்குள்ள புரட்சிகர சக்திகளுக்கோ இதுவரை இல்லை என்பதே இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாறாகும். அதற்கு காரணம் என்ன? தொடரில் பார்ப்போம். ஜாரிசத்தால் அரசியலாளர்கள் நாடுகடத்தப்பட்டு வந்ததன் விளைவாய், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புரட்சிகரரஷ்யா, வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத அளவுக்கு வளமான சர்வதேசத் தொடர்புகளும், உலகப் புரட்சி இயக்கத்தின் வடிவங்களையும் தத்துவங்களையும் பற்றிய அருமையான தகவல் ஞானமும்பெறலாயிற்று என்கிறார் லெனின்.
அதாவது ஜாரிசத்தின்கொடுமையால் ரஷ்யாவிலுள்ள புரட்சிகர சக்திகள் பலர் நாடுகடத்தப்பட்டார்கள். அதன் காரணமாகவே பல்வேறுநாடுகளுக்குச் சென்ற புரட்சியாளர்கள் பல நாடுகளின் அனுபவங்களைப் பெற்றனர். இத்தகைய அனுபத்தை பெற்ற நாடு உலகில் வேறு எங்கும் அப்போது இல்லை. உலகம் முழுவதிலுமுள்ள புரட்சிகர அனுபவத்தினாலும், பல்வேறு தத்துவங்கள் பற்றிய புரிதல் மூலம், இறுதியாக மார்க்சிய தத்துவ அறிவில் நல்ல வளர்ச்சியைப் பெற்றார்கள். இது ரஷ்யாவிலுள்ள புரட்சியாளர்களுக்கு ஒரு சிறப்பான கம்யூனிஸ்டு கட்சியை உருவாவதற்கு சாதகமாகிற்று.;இந்த மார்க்சிய தத்துவ கருங்கல் அடித்தளத்தின் மீதுதான் ரஷ்ய கம்யூனிஸ்டுகட்சி 1903ல் கட்டப் பட்டது. அதற்குப் பின்பு அதாவது 1903லிருந்து 1917வரை கட்சியானது பலபோராட்டங்களை நடத்தி, அதன் மூலம் கிடைத்த அனுபவங்களை மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் அலசி ஆராய்ந்து சிலவேளைகளில் ரகசியமாக செயல்படுவது சில வேளையில் பயிரங்கமாக செயல்படுவது போன்ற பல்வேறுவிதமான முறைகளை கையாண்டு இறுதியில் ஜார் அரசாங்கத்தையும், அதற்குப் பின்பு உருவான கெரன்சிக்கின் ஆட்சியையும் வீழ்த்தி தொழிலாளி வர்க்க அரசு உருவாக்கப்பட்டது. இந்த சாதனைக்கு முதன்மையான காரணம், ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சி ஊழியர்களும், தலைவர்களும் மார்க்சியத்தை கற்றுத் தேர்ந்ததே ஆகும்.
அவர்களுக்கு மார்க்சிய அறிவும் சர்வதேச புரட்சி இயக்கங்களின் வரலாற்று அறிவும் இல்லை என்றால் அவர்களால் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்க முடியாது.
ரசியாவில் புரட்சிகர கட்சியை கட்டுவதற்க்கு முன்பே பல்வேறு புரட்சிகர குழுக்கள், மார்க்சிய வாசகர்வட்டங்கள் தோன்றியிருந்தன, 1895-ல்தொழிலாளர் விடுதலைக் கான போராட்ட குழு லெனினால் தோற்றிவிக்கப் படுகிறது. பல குழுக்கள் ஏதேசதிகாரத்தை தனித் தனியாக போராடி ஒன்றும் சாதிக்க முடியாது் என்றும் ஒன்றுபட்ட ரசிய புரட்சிகர கட்சியால் மட்டுமே சாதிக்க முடியும் என்றும் முடிவுக்கு வரும் லெனின், பலம் வாய்ந்த கட்சியை கட்ட புரட்சிகர குழுக்கள் சமூக ஜன நாயக சக்திகள் இவ்வாறு பல்வேறு குழுக்களை ஒற்றுமை படுத்த நிலவும் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் தீர்த்து , சித்தந்த ஒற்றுமை என்பது கட்சியின் வேலை திட்ட அடிப்படையில் அடைய வேண்டும்., என்று கூறுகிறார் லெனின். கட்சி கட்டப் பட்ட பின்னரே கட்சிக்குள் பல்வேறு போக்குகள் வருவதை தடுக்க லெனின் மேற்கொண்ட நடவடிக்கை பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் இங்கோ இன்று வரை அந்த வகையில் கட்சி கட்டப் படவேயில்லை.
மூன்றாம் அகில வழிகாட்டுதல் படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகிலத்தின் வழிகாட்டுதலை அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி, ஏகாதிபத்திய பிற்போக்கு சக்திகளை தூக்கி எறிந்து மக்கள் ஜனநாயக அரசை நிறுவும்படியும், அதற்க்கு உடனடியாக பிரிந்து கிடக்கின்றகம்யூனிச குழுக்களையும், தனிநபர்களையும் இணைத்து பலம் வாய்ந்த ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவும்படி திரும்ப திரும்ப வலியுறுத்தியது. ஆனால் இன்றுவரை இந்தப் பணி நிறைவேறவில்லை. இந்தியாவின் இடதுசாரி ஒருபிரிவானது கம்யூனிசத்தின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளை புறகணித்து, அதாவது மூன்றாம் அகிலத்தின் நிலைப்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டன ;அதாவது அகிலத்தின் வழி காட்டுதலை புறகணித்தது. பொருளாதார போராட்டங்களும், முதலாளித்துவ தேர்தலுக்கு மட்டுமே தயாரிப்பு செய்வதாகும். இவர்கள் மக்களை அரசியல் படுத்தாமல் வெறும் ஓட்டு சீட்டிற்க்காக என்பதாகி போனது.
இன்னொறுபுறம் மார்க்சியத்தின் புரட்சிகர ஆன்மாவை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் வைத்து, ஒடுக்கப் பட்ட மக்களுக்கு புரட்சிகர கட்சியின் தலைமையளிக்க முன்னெடுத்த இயக்கம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உயர்த்திப் பிடித்து, புரட்சியின் மூலம் சுரண்டும் வர்க்க அரசைத் தகர்ப்பது, சோசலித்துக்கான அமைதிவழி மாற்றத்தை நிராகரித்து,புரட்சிகரபலாத்காரத்தை ஏற்றல், பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக கம்யூனிஸ்ட் கட்சியை மாற்றியமைத்தல்,புதிய ஜனநாயகப் புரட்சி, தொழிலாளி, விவசாயிகள்கூட்டணி அமைத்தல் போன்ற அரசியல் நிலைப் பாடுகளை அங்கீகரித்தது. ஆனால் வலது திருத்தல்வாத போக்குகளுக்கு சித்தாந்த ரீதியில் பலத்த அடி கொடுக்காமலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்கு வதற்க்கான நெறிமுறைகள் மூன்றாம் அகிலத்தினால் உருவாக்கப் பட்டத்தை கவனத்தில் கொள்ளாமலும் கட்சி தொடங்கிய காலத்தில் குருச்சேவ் திருத்தல்வாதத்தை எதிர்த்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவப் போராட்டமான மாபெரும் விவாதத்தின் நிலைப்பாடுகளை கிரகித்துக் கொள்ளாமலும் கட்சி கட்டப் பட்டது. கொரில்லாப் போரைத் தவிர மற்ற எல்லா போராட்ட வடிவங்களும் அமைப்பு வடிவங்களும் நிராகரிக்கப்பட்டன. இடது குறுங்குழுவாதத்தை புரட்சி வழியாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது. இன்று ஒரு கட்சிக்கு பதிலாக பல குழுக்கள்இயங்கிக் கொண்டிருக் கின்றன. அனுபவத்தின் வாயிலாகவும், அரைகுறையாக கோட்பாடுகளை கிரகித்துக் கொண்டதன் மூலம் இன்று அறியப் படும் நிலைப்பாடுகள்.
ஒருகம்யூனிஸ்டுக் கட்சி செய்ய வேண்டிய பணிகளின் பன்முகத் தன்மையை புரிந்து கொள்ளாமல் இன்றுவரை செயல்பட்டுக் கொண்டு இருப்பதுதான் தவறானது என்று கருதுகிறோம். கட்சியைகட்டிய பிறகாவது ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி கடந்துவந்த பாதையைப் புரிந்துகொண்டு மார்க்சிய கல்வியை கட்சிக்கு போதித்து கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களை மார்க்சிய சித்தாந்தவாதிகளாக வளர்த்திருக்க வேண்டும். அதனை இந்திய கம்யூனிஸ்டுகள் செய்யவில்லை. நமது நோக்கம் ரஷ்யாவில் நடந்தது போல் ஒரு புரட்சியின் மூலம் உழைக்கும் வர்க்கத்தின் அரசை உருவாக்க வேண்டும் என்பதாகும். அத்தகைய புரட்சியை நடத்திட உழைக்கும்மக்கள்ஒரு கொள்கையின் கீழ் திரட்டப்பட வேண்டும். அத்தகைய ஒரு கொள்கையை உருவாக்க புரட்சிகர சக்திகளுக்கு இடையே கருத்துப் போராட்டம் நடத்தி ஒரு பொதுக் கருத்தை நாம் வந்தடைய வேண்டும். அத்தகைய பொதுக்கருத்தை வந்தடைவதற்கான கருத்துப் போராட்டம் நடத்துபவர்களுக்கு மார்க்சிய லெனினிய தத்துவ அறிவை வளர்க்க வேண்டும், அதன் மூலம் மட்டுமே அவர்கள் சரியாக கருத்துப் போராட்டத்தை நடத்த முடியும்.இத்தகைய தத்துவ அறிவை வளர்ப்பது மட்டுமே நமது பணி என்று செயல்பட கூடாது.
இந்திய பொதுவுடமை இயக்க வரலாறின் இன்றைய நிலை அதற்கு அனுமதிக்காது. ஏனெனில் புறநிலையில் கம்யூனிச இயக்கத்தின் வளர்ச்சியை கணக்கிலெடுத்தால், மார்க்சியம் பற்றிய கல்வி போதனை மிகமிக அவசியம் என்ற போதிலும் மேலும் பல பணிகளை செய்வதன் மூலமே இங்கே ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சியை கட்ட முடியும். தத்துவங்களை போதனை செய்வது, சமூகத்தைப் பற்றிய அரசியல் பொருளாதார ஆய்வுகள் செய்வது, வர்க்கங்களைத் திரட்டிப் போராடுவதன் மூலம் வர்க்கங் களைப் பற்றிபுரிந்து கொள்ளவது, புரட்சிகர கலை இலக்கியங் கியங்களைப் படைப்பது,தேர்தல்களில் பங்கேற்று இந்த பாராளுமன்ற போலி ஜனநாயகத்தை அம்பலப் படுத்துவது, அவ்வப்போது ஆட்சியாளர்கள் மக்களின் மீது நடத்தும் தாக்குதல்களிலிருந்து மக்களை பாதுகாப்பது,இதுபோன்ற பல பணிகளை செய்து அதில் கிடைக்கும் அனுபவங் களையும் கணக்கில் எடுத்து மார்க்சிய கண்ணோட்டத்திலிருந்து ஒரு விஞ்ஞானப் பூர்வமான திட்டத்தை பலவகையான புரட்சிகர சக்திகளிடமும் விவாதித்து ஒரு பொதுக் கருத்தை உருவாக்கி, ஒரு காங்கிரசின் மூலம் ஒரு ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சியை நாம் உருவாக்க வேண்டும்.
ஆகவே நாம் செய்ய வேண்டிய பல பணிகளை வேலைப்பிரிவினையாக எடுத்துக்கொண்டு,ஒவ்வொரு பணி செய்யக்கூடிய தகுதிபடைத்தவர் களை இனம் கண்டு, அவர்களைக் கொண்டு தனிதனியாக குழுக்களை உருவாக்கி இந்தப் பணிகளை செய்வதன் மூலம் நம்மால் ரஷ்யாவில்கட்டப்பட்டது போன்ற கம்யூனிஸ்டு கட்சியை இங்கே கட்டமுடியும். ஆனால் இங்கே பல குழுக்களாகவும் கட்சிகளாகவும் பிரிந்து நிற்பவர்கள், ஒரு ஒன்றுபட்டகட்சியை கட்டமுடியாது என்று நம்பிக்கை இழந்துள்ளனர். இன்னும் சிலர் இங்கே பாசிச ஆட்சிநடக்கிறது என்றும் அதனை வீழ்த்திவிட்டு ஒரு சமூக நல அரசை கொண்டுவந்தால் மட்டுமே இங்கே ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சியை கட்ட முடியும் என்கிறார்கள். இவர்கள் ரஷ்யாவில் கொடூரமான ஜாரின் சர்வாதிகார ஆட்சி நடந்துகொண்டிருந்த போதுதான் அங்கு கட்சிகட்டப்பட்ட வரலாற்றை மறந்து விடுகிறார்கள். ஆகவே இங்கே ஒரு ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சியை கட்டுவதற் கான பல பணிகளை செய்வதற்கு முயற்சி செய்வோம், அதில் மிகவும் முதன்மையான பணியானது கம்யூனிசத்தின் அடிப்படை கொள்கை கோட்பாடு களை மக்களிடம் கொண்டு சென்று கல்வி புகட்டுவதாகும்.
மார்க்சிய தத்துவம் எனும் கருங்கல் அடித்தளத்தின்மீது ரஷ்யாவில் கம்யூனி்ஸ்டு கட்சிகட்டப்பட்டதால், அங்குள்ள முன்னணி களுக்கு மார்க்சிய தத்துவ அறிவு கொடுத்து வளர்க்கப் பட்டிருந்ததனால், மார்க்சியத்தின் அடிப்படையில் லெனினால் வைக்கப்பட்ட கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொண்டு புரட்சி நடத்தினார்கள். போல்ஷ்விக்குகளும் எவ்விதமான பிளவுகளையும் சந்திக்காமல் ஒற்றுமையாகஇருந்துதங்களை பலப்படுத்திக் கொண்டார்கள். அதே வேளையில் டிராட்ஸ்கி, மற்றும் மென்ஷ்விக்குகளின் கருத்துக்கள் மார்க்சியத்தை அடிப்படையாக கொள்ளாததை புரிந்துகொண்டு மக்களும் முன்னணிகளும் அதனை புறக்கணித்தார்கள். இந்த வரலாற்று உண்மையிலிருந்து மார்க்சிய தத்துவ கல்வியின் அவசியத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இதற்கு மாறாக இந்திய கம்யூனிஸ்டுகளின் வரலாற்றில் கம்யூனிஸ்டுகள் மார்க்சிய கல்வி போதனைக்கு முக்கியத்துவம் கொடுக்க தவறியதன் விளைவாக கம்யூனிச அமைப்புகள் பல குழுக்களாக சிதறிவிட்டது. மேலும் மார்க்சியத்திற்கு அன்னியமான, பின்நவீனத்துவம்,அடையாள அரசியல், டிராட்ஸ்கியம் போன்ற பிற்போக்கு சித்தாந்தங்கள் கம்யூனிஸ்டு கட்சிக்குள் புகுந்து விளையாட வழி ஏற்பட்டு விட்டது. இப்போதாவது ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சியின் அனுபவங்களை உள்வாங்கி நமது பணிகளை தீர்மானிக்க வேண்டும்.
இலக்கு இணையத்திலிருந்து….
++++++++++++++++++++++++++++++++++++++++