திருப்பூர் குணாவின் விமர்சனம்

 

திருப்பூர் குணா's Post


Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
Facebook
நமக்கு இந்த மனப்பாட மார்க்சிய வித்துவான்களை எண்ணி பரிதாபமாக இருக்கிறது. ஆரம்பத்தில் எரிச்சலாக இருந்தது. சலிப்பில்லாமல் ஆசான்களின் மேற்கோள்களை பக்கம் பக்கமாக பதிவிடுகிறார்கள். இந்த வேலையை தவமாக செய்கிறவர்கள் ஆயுதப்போராட்டமே ஒரே வழி என்று ஆசைப்படுகிறவர்கள். நடைமுறைப்படுத்துகிறவர்கள் அல்ல. போதனையாளர்கள். இவர்களின் எண்ணம் தேர்தல் பாதையில் இருப்பவர்கள் யாரும் மார்க்சியத்தை படித்தவர்கள் அல்ல என்பதுதான். தேர்தல் பாதையாளர்களும் படித்ததைத்தான் வகுப்புகளாக எந்திரகதியில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!
நமக்கு பிரச்சனை படிப்பதை வாந்தியெடுப்பதில் எந்த பலனும் இல்லை என்பதுதான். ஏனெனில் மார்க்சியம் சமூக மாற்றத்திற்கான நடைமுறை அறிவியலாகும். அப்படித்தான் சமூக மாற்றத்திற்கான நடைமுறையை கையாண்ட இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்க காலங்களிலும் அதிகார மாற்றத்திற்கு பின்பான சில முக்கிய காலகட்டங்களிலும் மார்க்சியம் முன்னுக்கு வந்தது. அது மாறுபட்ட நடைமுறைகளை கோரியது.
ஆனால் செக்குமாட்டுத் தனத்தில் சிக்கிக் கொண்ட எல்லாப் போக்குகளும் நெருக்கடியை சந்தித்து, இப்போது பெரும் பின்னடைவை சந்தித்துவிட்டது. இதைத்தான் தோழர் இரா. முருகவேள் அவர்களின் "நக்சல்பாரி ஒரு கிராமத்தின் பெயர் மட்டுமல்ல" நூல் அறிவார்ந்த வகையில் விவாதிக்கிறது.
நமது வளர்ச்சியிலுள்ள தேக்கத்தை குறித்த அந்த எல்லாவகை இயக்கங்களிலும் விவாதிக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால் யாருக்கும் அக்கறையில்லை, துணிவும் இல்லை.
அதனால் ஏதோ ஒரு பாதையை மனப்பாடம் செய்து கொண்டு, எந்த நடைமுறையிலும் இல்லாமல் புலம்புவது பரிதாபத்திற்குரியது.
குறிப்பு: இப்படியான நெருக்கடியில் சிக்கிக்கொண்டிருக்கிறவர்களாக நான் தோழர்கள் Ravindran Palani Chinnasamy போன்றவர்களைப் பார்க்கிறேன். தயவுசெய்து பரிசீலியுங்கள்.
May be an image of 1 person
All reactions:
You, Arivan Yaalie, Sathiyanarayanan and 28 others
47 comments
4 shares
Wow
Wow
Comment
Send
Share
Most relevant

சாமிக்கண்ணு அ.வெ.
சரியாகச் சொன்னீர்கள் தோழர்! இதைத்தான் நான் வெறும் 'பாடப்புத்தக மாக்சியம்' Textbook Marxism என்கிறேன்.
  • Like
  • Reply
2
Palani Chinnasamy
சாமிக்கண்ணு அ.வெ. உண்மைதான் தோழர் மார்க்சியம் போதாது இங்கு என்பதுதானே பேஸன் தோழர்
Palani Chinnasamy
சாமிக்கண்ணு அ.வெ. லெனின் அரசும் புரட்சியும் நூலில் கூறியவைதான் நாங்கள் பேசினால் இவர்களுக்கு வருத்தமாக உள்ளது. (முழுமையாக வாசிக்க இந்த லிங்கில் செல்க ( https://namaduillakku.blogspot.com/2024/11/blog-post_18.html ) தற்போது ஆதிக்கதிலுள்ள சந்தர்ப்பவாதமானது இதற்கு மாறாக தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களை உயர்ந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களுடைய பிரதிநிதிகளாகய்ச் செயல்படுவதற்கு- வெகுஜனங்களுடன் தொடர்பு இழந்து, முதலாளித்துவத்தில் எப்படியோ ஓரளவு நல்லபடியாகவே இருந்து, எச்சில் துண்டுகாக தமது பிறப்புரிமையையே விற்கும், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து மக்களது புரட்சிகர தலைவர்களாய்த் தாம் ஆற்ற வேண்டிய பாத்திரத்தை துறந்துவிடும் இத்தகைய பிரதிநிதிகளாய் செயல்படுவதற்கு- பயிற்சி வைக்கப்படுகிறது.
Author
திருப்பூர் குணா
Palani Chinnasamy நீங்க படிச்ச அரசும் புரட்சியும் நூலைத்தான் எல்லாரும் படிக்கிறார்கள். இன்றும் சொல்லப்போனால் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள பதிப்பில் CPIM கட்சிக்காரர் சிறப்பான முன்னுரை வழங்கியுள்ளார். இப்போ அதுக்கு என்ன?
Palani Chinnasamy
திருப்பூர் குணா ஓ இந்த வரிக்கு என்ன விளக்கம் சற்று கூறுங்கள், "தற்போது ஆதிக்கதிலுள்ள சந்தர்ப்பவாதமானது இதற்கு மாறாக தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களை உயர்ந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களுடைய பிரதிநிதிகளாகய்ச் செயல்படுவதற்கு- வெகுஜனங்களுடன் தொடர்பு இழந்து, முதலாளித்துவத்தில் எப்படியோ ஓரளவு நல்லபடியாகவே இருந்து, எச்சில் துண்டுகாக தமது பிறப்புரிமையையே விற்கும், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து மக்களது புரட்சிகர தலைவர்களாய்த் தாம் ஆற்ற வேண்டிய பாத்திரத்தை துறந்துவிடும் இத்தகைய பிரதிநிதிகளாய் செயல்படுவதற்கு- பயிற்சி வைக்கப்படுகிறது."- லெனின்
Ravindran
சாமிக்கண்ணு அ.வெ. மார்க்சிய பாடப் புத்தகத்தை படித்தவர்களால் மட்டுமே தத்துவத்தையும் நடைமுறையையும் இணைக்க வேண்டும் என்ற உண்மை தெரியும். பாடப்புத்தகத்தை படிக்காதவர்கள் கல்வி அறிவு அற்ற மூடர்களாகவே இருப்பார்கள். ஆகவே மார்க்சிய கல்வி அறிவும் வேண்டும் அதனை நடைமுறையில் பயன்படுத்தவும் வேண்டும் என்பதே மார்க்சியமாகும்.
  • Like
  • Reply
Author
திருப்பூர் குணா
Ravindran தப்பு. பாரிஸ் கம்யூன் எழுச்சி எவ்வாறு உருவானது?
  • Like
  • Reply
Palani Chinnasamy
லெனினது எழுத்துக்களை வாசித்து, சமகால பிரச்சனைகளோடு பொருத்தி பார்க்கும் நடைமுறையே ஒரு புரட்சிகரமான பணிதான். இதனை பேச கூட திறன் அற்றவர்களை என்ன சொல்ல நாங்கள் பேசினால் உங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது அதனையும் கூறிவிடுங்கள் சிறப்பாக இருக்கும்
Author
திருப்பூர் குணா
Palani Chinnasamy சமகால பிரச்சனையோடு பொருத்தி நீங்கள் முன்வைத்து நடத்தி காட்டியது என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன்
Palani Chinnasamy
திருப்பூர் குணா நீங்கள்தான் முன்முடிவை முன் வைத்துள்ளீரே அதிலிருந்தே நீங்கள் வந்தடைந்த முடிவை முன் வையுங்கள் நான் பதிலளிக்க தயார்
  • Like
  • Reply
  • Edited
Author
திருப்பூர் குணா
Palani Chinnasamy நான் எல்லாப் போக்குகளும் பின்னடைவை சந்தித்தப் போக்குகளே என்று உறுதியாக கூறுகிறேன். எனவே தோழமை இயக்கங்களை விமர்சிக்கிற தகுதி யாருக்கும் இல்லை என்று வலியுறுத்துகிறேன். மாறாக சுயவிமர்சனமே முக்கியமானது என்று கேட்டுக்கொள்கிறேன்.
சாமிக்கண்ணு அ.வெ.
சரியாகச் சொன்னீர்கள் தோழர்! இதைத்தான் நான் வெறும் 'பாடப்புத்தக மாக்சியம்' Textbook Marxism என்கிறேன்.
  • Like
  • Reply
2
Palani Chinnasamy
சாமிக்கண்ணு அ.வெ. உண்மைதான் தோழர் மார்க்சியம் போதாது இங்கு என்பதுதானே பேஸன் தோழர்
Palani Chinnasamy
சாமிக்கண்ணு அ.வெ. லெனின் அரசும் புரட்சியும் நூலில் கூறியவைதான் நாங்கள் பேசினால் இவர்களுக்கு வருத்தமாக உள்ளது. (முழுமையாக வாசிக்க இந்த லிங்கில் செல்க ( https://namaduillakku.blogspot.com/2024/11/blog-post_18.html ) தற்போது ஆதிக்கதிலுள்ள சந்தர்ப்பவாதமானது இதற்கு மாறாக தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களை உயர்ந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களுடைய பிரதிநிதிகளாகய்ச் செயல்படுவதற்கு- வெகுஜனங்களுடன் தொடர்பு இழந்து, முதலாளித்துவத்தில் எப்படியோ ஓரளவு நல்லபடியாகவே இருந்து, எச்சில் துண்டுகாக தமது பிறப்புரிமையையே விற்கும், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து மக்களது புரட்சிகர தலைவர்களாய்த் தாம் ஆற்ற வேண்டிய பாத்திரத்தை துறந்துவிடும் இத்தகைய பிரதிநிதிகளாய் செயல்படுவதற்கு- பயிற்சி வைக்கப்படுகிறது.
Author
திருப்பூர் குணா
Palani Chinnasamy நீங்க படிச்ச அரசும் புரட்சியும் நூலைத்தான் எல்லாரும் படிக்கிறார்கள். இன்றும் சொல்லப்போனால் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள பதிப்பில் CPIM கட்சிக்காரர் சிறப்பான முன்னுரை வழங்கியுள்ளார். இப்போ அதுக்கு என்ன?
Palani Chinnasamy
திருப்பூர் குணா ஓ இந்த வரிக்கு என்ன விளக்கம் சற்று கூறுங்கள், "தற்போது ஆதிக்கதிலுள்ள சந்தர்ப்பவாதமானது இதற்கு மாறாக தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களை உயர்ந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களுடைய பிரதிநிதிகளாகய்ச் செயல்படுவதற்கு- வெகுஜனங்களுடன் தொடர்பு இழந்து, முதலாளித்துவத்தில் எப்படியோ ஓரளவு நல்லபடியாகவே இருந்து, எச்சில் துண்டுகாக தமது பிறப்புரிமையையே விற்கும், அதாவது முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து மக்களது புரட்சிகர தலைவர்களாய்த் தாம் ஆற்ற வேண்டிய பாத்திரத்தை துறந்துவிடும் இத்தகைய பிரதிநிதிகளாய் செயல்படுவதற்கு- பயிற்சி வைக்கப்படுகிறது."- லெனின்
Ravindran
சாமிக்கண்ணு அ.வெ. மார்க்சிய பாடப் புத்தகத்தை படித்தவர்களால் மட்டுமே தத்துவத்தையும் நடைமுறையையும் இணைக்க வேண்டும் என்ற உண்மை தெரியும். பாடப்புத்தகத்தை படிக்காதவர்கள் கல்வி அறிவு அற்ற மூடர்களாகவே இருப்பார்கள். ஆகவே மார்க்சிய கல்வி அறிவும் வேண்டும் அதனை நடைமுறையில் பயன்படுத்தவும் வேண்டும் என்பதே மார்க்சியமாகும்.
  • Like
  • Reply
Author
திருப்பூர் குணா
Ravindran தப்பு. பாரிஸ் கம்யூன் எழுச்சி எவ்வாறு உருவானது?
  • Like
  • Reply
Palani Chinnasamy
லெனினது எழுத்துக்களை வாசித்து, சமகால பிரச்சனைகளோடு பொருத்தி பார்க்கும் நடைமுறையே ஒரு புரட்சிகரமான பணிதான். இதனை பேச கூட திறன் அற்றவர்களை என்ன சொல்ல நாங்கள் பேசினால் உங்களுக்கு என்ன பிரச்சினை உள்ளது அதனையும் கூறிவிடுங்கள் சிறப்பாக இருக்கும்
Author
திருப்பூர் குணா
Palani Chinnasamy சமகால பிரச்சனையோடு பொருத்தி நீங்கள் முன்வைத்து நடத்தி காட்டியது என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆவலாய் உள்ளேன்
Palani Chinnasamy
திருப்பூர் குணா நீங்கள்தான் முன்முடிவை முன் வைத்துள்ளீரே அதிலிருந்தே நீங்கள் வந்தடைந்த முடிவை முன் வையுங்கள் நான் பதிலளிக்க தயார்
  • Like
  • Reply
  • Edited
Author
திருப்பூர் குணா
Palani Chinnasamy நான் எல்லாப் போக்குகளும் பின்னடைவை சந்தித்தப் போக்குகளே என்று உறுதியாக கூறுகிறேன். எனவே தோழமை இயக்கங்களை விமர்சிக்கிற தகுதி யாருக்கும் இல்லை என்று வலியுறுத்துகிறேன். மாறாக சுயவிமர்சனமே முக்கியமானது என்று கேட்டுக்கொள்கிறேன்.
Palani Chinnasamy
எங்கள் மீது உங்களின் கருணைக்கு வாழ்த்துகள்.... எங்களின் குறைகளை பேச எத்தனித்த நீங்கள் எங்களின் எழுத்துகளை எத்தனை வாசித்துள்ளீர் என்றறியேன்! ஏனெனில் உங்களின் நிலைப்பாட்டிலிருந்து நான் விலகும் பொழுது உங்களின் சார்பு நிலை என்னவென்று தெரிந்தவந்தான் ஆனால் இவ்வளவு எங்களை உயர்த்தி பேசுவீர் என்று நினைக்கவில்லை நன்றி உங்கள் மார்க்சிய தொண்டு சிறக்க தோழரே
  • Like
  • Reply
Author
திருப்பூர் குணா
தோழர் இரா. முருகவேள் , நான் அல்லது நாங்கள் மட்டுமே கற்புக்கரசர்கள் என்கிற நிலவுடைமை மேதாவிகள்தான் இங்கு இன்னமும் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்பது எனது மதிப்பீடு தோழர். இங்கு உன்னுடைய படிப்பினை என்ன என்ற கேள்வி இல்லை தோழர். நீ என்ன பெரிய இவனா என்ற ஏளனம்தான் செல்வாக்கு செலுத்துகிறது தோழர். இப்படி ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி சேற்றை அடித்துக் கொள்வதை எதிரி செவ்வனே பயன்படுத்திக் கொள்கிறான் என்பதைக் கூட உணராத தன்னகங்காரம் எல்லாவற்றையும் அழிக்கிறது தோழர்.
  • Like
  • Reply
Ravindran replied
 
1 Reply
36 minutes ago
Author
திருப்பூர் குணா
தோழர் Ravindran உங்களுக்கு எந்த அமைப்பையும் பரிந்துரைக்கவில்லை. ஏனெனில் எந்த அமைப்பையும் தோழமையாக பார்க்கும் மார்க்சிய பண்பு உங்களிடம் இல்லை. நீங்கள் உங்களை கற்புக்கரசர் என்று நிரூபிப்பதற்காக அக்னி குண்டத்தில் பிரவேசிக்கிறீர்கள். அதனால் மற்றவர்களை இழிவாக பார்க்கிறீர்கள். இந்த அகந்தை அழியும் வரையில் உங்களால் எதார்த்தத்திற்கு அருகில் வரவே முடியாது.
  • Like
  • Reply
2
View all 0 replies
Ravindran
''அதனால் ஏதோ ஒரு பாதையை மனப்பாடம் செய்து கொண்டு, எந்த நடைமுறையிலும் இல்லாமல் புலம்புவது பரிதாபத்திற்குரியது''. இவ்வாறு நீங்கள் எழுதியுள்ளீர்கள் அதற்கு காரணம் என்ன? மார்க்சிய லெனினிய சிந்தனைமுறையை வளர்த்துக்கொள்ளாததன் காரணமாகவே இவர்கள் தன்மனப்போக்கில் பாதை வகுத்துக்கொள்கிறார்கள். ஆகவே எந்தவொரு கம்யூனிச அமைப்பானாலும் கட்சி அமைப்பை பலப்படுத்தி வளர்ப்பது, மக்கள்திரள் அமைப்புகளுக்கு தலைமை கொடுத்து வளர்ப்பது போன்ற பல பணிகளுக்கு ஊடே மக்களுக்கு மார்க்சிய சிந்தனைமுறையை வளர்ப்பதற்கான கல்வி இயக்கத்தை நடத்த வேண்டியது எக்காலத்திலும் கட்டாயமாகச் செய்ய வேண்டிய பணியாகும். இந்தப் பணியை இங்குள்ள எந்தக் கம்யூனிஸ்டுக் கட்சி கொள்கை முடிவாக எடுத்துச் செய்கிறது என்பதை தோழர் திருப்பூர் குணா அவர்களே எங்களுக்குச் சுட்டிக்காட்டுங்கள் அந்த அமைப்பில் சேர்ந்து செயல்பட நாங்கள் தயார். எனினும் நீங்கள் எங்கள் மீது வைக்கும் விமர்சனம் சரியானதே அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் மார்க்சிய ஆசான்களது போதனைகளை தற்போதைய சூழல்களை சுட்டிக்காட்டி விளக்கி பிரச்சாரம் செய்கிறோம். இது போதுமானது என்றும் இதிலேயே திருப்தியடைந்துவிட வேண்டும் என்று நாங்கள் கருதவில்லை. இது போதுமானது இல்லை என்பது உண்மைதான். இந்த சிறிய ஆனாலும் மிகவும் முக்கியமான பணியை யாரும் செய்திட முன்வராத நிலையிலேயே நாங்கள் இதனை செய்துவருகிறோம். இந்த சிறிய பணியை செய்துவரும் எங்களை விமர்சிக்கும் நீங்கள், இந்த மிகவும் முக்கியமான பணியை செய்திட மறுக்கும் பெரிய கம்யூனிஸ்டுக் கட்சிகளை விமர்சிக்கவில்லையே ஏன்? மார்க்சிய ஆசான்களது போதனைகள் தற்காலத்துக்கு அவசியமில்லை என்று கருதுபவர்களை நீங்கள் விமர்சனம் செய்யவில்லையே ஏன்? மிகச் சிறந்த தத்துவ அரசியலான மார்க்சியம் நம்மிடமிருந்தாலும் நாம் வெற்றியை நோக்கி முன்னேறவில்லை, மாறாக பிற்போக்கு மதவெறியர்களான சங்கிகள் முன்னேறியிருக்கிறார்களே ஏன்? சங்கிகள் சகா என்ற கல்வி இயக்கத்தை நடத்தி சிறு குழந்தைகளுக்குகூட மதவெறி கல்வி புகட்டுகிறார்களே அதன் மூலமாகவும்தானே அவர்கள் வளர்ந்தார்கள். ஆனால் இங்குள்ள கம்யூஸ்டுகள் மார்க்சிய கல்வி நிறுவனங்களை நடத்தி மார்க்சிய அடிப்படைகளை மக்களுக்கு கற்றுக்கொடுக்க தொடர்ந்து மறுத்துவருகிறார்களே அவர்களை நீங்கள் விமர்சனம் செய்யவில்லையே ஏன்? அவர்களையெல்லாம் விமர்சனம் செய்யாமல் இந்தக் கல்விப் பணியை சிறிய அளவில் செய்துவரும் எங்களை மட்டும் நீங்கள் விமர்சனத்துக்குள்ளாக்குவது ஏன்? தற்போது மார்க்சியத்தை சொன்னாலே சிலருக்கு வேப்பங்காயாக இருப்பதை நாங்கள் பார்க்கிறோம். அப்படிப் பார்ப்பவர்கள் தங்களை கம்யூனிஸ்டுகள் என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். இத்தகைய நபர்களை அடையாளம் கண்டு விமர்சியுங்கள் உங்களை பாராட்டுவோம். இறுதியாகச் சொல்லிக்கொள்கிறோம் எங்களது பணி போதுமானதல்ல அதனை நாங்கள் வெளிப்படையாகவே அறிவித்துள்ளோம். அதனை நாங்கள் மறைக்கவில்லை. இந்தப் பணியை யாரும் செய்ய முன்வராததால்தான் நாங்கள் அந்த சிறிய பணியை செய்துகொண்டு இருக்கிறோம். இந்த வகையில் உங்களது விமர்சனத்தை ஏற்கிறோம். இதற்கு மாற்று என்ன என்பதையும் நீங்கள் சொல்லுங்கள் நாங்கள் பரிசீலிக்கிறோம்.
  • Like
  • Reply
4
சாமிக்கண்ணு அ.வெ.
Ravindran உங்களின் கடைசிக் கேள்விக்கு எனது சிற்றறிவுக்கு எட்டிய விடை இது: மார்க்சிய-லெனினியத்தைப் பயில்கிற அல்லது பயிற்றுவிக்கிற அதே நேரத்தில் இன்று கல்வி, வேலை வாய்ப்பு ஆகிய அடிப்படைத் தேவைகளை அடைய முடியாததால் ஏற்படும் மன வெறுப்பில் சாதி மத வெறிக் கும்பல்களின் பின்னால் மிக விரைவாக அணி திரண்டு கொண்டிருக்கும் இளைஞர்களை அவர்கள் இருக்கும் இடம் தேடிச் சென்று அதற்கான காரணங்களை அவர்களுக்கு விளக்குங்கள். அவர்களை அமைப்பாக்குங்கள். நுகர்வியத்திலும் consumerism, முதலாளியத் தனியரியத்திலும் (முதலாளித்துவத் தனிநபர் வாதம் bourgeois individualism) போதைப் பொருள்களிலும் மூழ்கிக் கிடக்கிற இளைஞர்களை எப்படி அணுகுவது, கையாள்வது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். சரியாகச் சொல்லப் போனால் இன்று யாரும் தங்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வைச் சொல்லும் கோட்பாடு எது எனத் தேடிக் கொண்டிருக்கவில்லை. அரசியலற்ற/ கோட்பாட்டுத் தேவையை உணராத கூட்டமாகத் திட்டமிட்டு வளர்க்கப்பட்டுள்ள அவர்களை அணி திரட்டுவது ஆங்காங்குள்ள பண்பாட்டு, சமூகச் சூழல்களுடன் தொடர்புடையது. வறட்டுத்தனமாக ஏட்டில் படித்ததை அவர்களிடம் ஒப்புவிக்காமல் அவர்களின் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்பப் பொறுமையுடன் ஊடாடுங்கள். அப்போது அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் அய்யங்களுக்கும் பொருத்தமான விளக்கங்களை அளிப்பதற்கு உங்களின் மார்க்சியக் கல்வி உதவும்/ உதவும் வகையில் அதை நீங்கள் உள்வாங்க முயற்சிக்க வேண்டும். விடை தெரிந்தால் அப்போதே சொல்லி விடுங்கள். இல்லையேல் தெரிந்த மற்றவர்களிடம் கேட்கத் தயங்காதீர்கள். பிரச்சனைகளைத் தெரிந்துகொள்ள மக்களிடம் போவதும் அவர்களின் பட்டறிவுக்கு ஏற்ற தீர்வுகளை அவர்களிடமிருந்தே வர வைப்பதும் அவை போதாத போது உங்களின் கருத்துகளை அவர்களின் ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் முன் வைப்பதும் முக்கியம். எந்தச் சூழலிலும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாக நம்மை நினைத்துக் கொண்டு நாம் மக்களை அணுகக் கூடாது.
  • Like
  • Reply
Palani Chinnasamy
சாமிக்கண்ணு அ.வெ. மார்க்சியத்தை படிக்காதீர் அவ்வள்வுதானே உங்களின் வாதம் அதைதான் லெனின் மிகச் சரியாக குறிபிட்டுள்ளார் உங்களை போன்றோரின் நிலைப்பாட்டை கணக்கில் கொண்டே "லெனின் அரசும் புரட்சியும் நூலில் கூறியவைதான் தற்போது ஆதிக்கதிலுள்ள சந்தர்ப்பவாதமானது இ… 
See more
Ravindran
சாமிக்கண்ணு அ.வெ. உங்களது ஆலோசனையை நான் முழுவதுமாக ஏற்கிறேன். நீங்கள் சொல்லும் பணிகளைச் செய்திட ஒரு அமைப்பு வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நான் கருதுகிறேன். அத்தகைய அமைப்பு எதுவாக இருந்தாலும் அதனை எனக்கு சுட்டிக்காட்டுங்கள் அதோடு இணைந்து நான் செயல்படவே விரும்புகிறேன். அத்தகைய அமைப்பு சிறியது என்றாலும் அத்தகைய அமைப்பை உருவாக்குவதற்காகவே எனது எழுத்துப் பணியை செய்துகொண்டு இருக்கிறேன்.
Author
திருப்பூர் குணா
Ravindran உங்களது எழுத்து பணி, அதைவிட முக்கியமான உங்களது பாணி அமைப்பு கட்டுவதற்கானதல்ல.
R. Radhakrishnan
நண்பர்களே நீங்கள் ஒரு நீண்ட விவாதத்தை முன் வைத்திருக்கிறீர்கள் சமூகம் வருக போராட்டங்கள் உடைய வெற்றி தோல்வியால் முன்னேறிக் கொண்டிருக்கிறது இந்த முன்னேற்றத்தை ஆய்வுக்கூட்படுத்திய மார்ச் அதை புரிந்து கொண்டு தன் நாட்டினுடைய சூழ்நிலைமைக்கு ஏற்றவாறு அமல்படுத்திய லெனின் அதேபோல் மாவோ இப்படியான கம்யூனிஸ்ட் தலைவர்களும் கட்சிகளும் நடைமுறைப்படுத்தியது அந்தந்த நாட்டினுடைய முரண்பாடுகளை ஆய்வுக்கு உட்படுத்தி சர்வதேச சூழ்நிலைகளில் இருந்து முன்னுக்கு சென்ற அனுபவம் இந்தியச் சூழ்நிலையில் பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட இந்த கூட்டுக் குடியரசு தேசிய இனங்களையும் முரண்பாடுகளையும் சர்வதேச நிதி மூலதனம் அல்லது ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய முல தனத்துக்குமான உறவு முரண்பாடு தொழிலாளி வர்க்கத்திற்கும் மூலதனத்திற்கு முரண்பாடு இப்படியான விஷயங்களை எல்லாம் புரிந்து கொண்ட கம்யூனிஸ்டுகள் மக்களின் வாழ்வாதார பிரச்சனையை முன்னுக்கு எடுத்து அரசியல் படுத்தி முன்னேறுகிற பணியைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள் அது இப்பொழுது நடக்கும் வாழ்வியல் பிரச்சனையில் விலைவாசி வேலையின்மை மருத்துவம் குடியிருப்பு போன்ற விஷயங்களுக்கே மக்கள் தன்னுடைய தேவைகளை என்னுடைய தேவையை பூர்த்தி செய்து கொடு என்று அரசாங்கத்திடம் கேட்கவே வராத சூழ்நிலையில் ஆயுதப் போராட்டத்திற்கு ஆட்கள் வேண்டும் என்கின்ற சாமானிய சிந்தனை நமக்கு இருக்கும் பட்சத்தில் தான் மக்களின் வெகுஜன போராட்டங்களை முன் அடிக்கிற பணியை கம்யூனிஸ்ட் இயக்கங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறவர்களும் இதை செய்வதற்கு பதிலாக இருக்கிற இடதுசாரிகளை விமர்சனம் செய்து புத்தகப் புழுக்களாக விமர்சனம் செய்த ஆயுதப் போராட்டம் என்கின்ற பெயரில் மேற்கு வங்காள அரசர் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தி என்ன கண்டீர்கள் என்கின்ற ஆய்வு செய்து நீங்கள் சமூகத்தின் முன்னால் விமர்சனத்தை வையுங்கள் பிறகு மற்றவற்றை பேசுவோம்.
  • Like
  • Reply
Ravindran
R. Radhakrishnan மார்க்சியத்தின் அடிப்படையே தெரியாதவர்கள் பலர் தங்களை கம்யூனிஸ்டு என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களால் எப்படி சமூகப் பிரச்சனைகளை மார்க்சிய அடிப்படையில் புரிந்துகொள்ள முடியும்? சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்த மெத்தப் படித்தவர்கள் தாங்கள் கற்றுக்கொண்டதையே நடைமுறைப்படுத்துவது அவசியம் இல்லை என்றார்கள். அவர்களை அயோக்கியர்கள் என்று லி யு ஷாவோகி கூறினார். இவ்வாறு மெத்தப் படித்தவர்களே தவறு செய்தார்கள் என்பது வரலாறு. அப்படி இருக்கும் போது மார்க்சியத்தை படித்து அறிவை வளர்த்துக்கொள்ளாதர்கள் சரியாகவே நடந்துகொள்வார்களா? மார்க்சிய ஆசான்கள் நிறைய படித்தார்கள் வர்க்கப் போராட்ட அனுபவங்களை சேகரித்தார்கள் அதன் அடிப்படையிலேயே அவர்கள் கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் மக்களுக்கும் போதித்து வழிகாட்டினார்கள். இந்த நிலையில் சித்தாந்தத்தின் அவசியத்தை அவர்கள் உணர்ந்து அவர்கள் உருவாக்கி ஆவணப்படுத்தினார்கள். அந்த ஆவணங்கள் எல்லாம் நமக்கு பொக்கிஷங்களாக வழங்கி உள்ளார்கள். அந்த பொக்கிஷங்களை படிப்பதை மறுப்பவர்கள் மக்களை மூடர்களாகவே வைத்திருக்க விரும்பும் சனாதனவாதிகளே ஆவார்கள். சனாதனவாதிகள்தான் உழைக்கும் மக்கள் கல்வி அறிவு பெறக்கூடாது என்று தடைசெய்தவர்கள் என்பது வரலாறு. படித்த அறிவாளிகளில் சிலர் மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள் என்பதற்காக மார்க்சியத்தையே படிக்கக் கூடாது என்றும் பிறருக்கு கற்றுக்கொடுக்கக் கூடாது என்றும் மார்க்சிய ஆசான்கள் சொல்லவில்லை. ஆனால் இவர்கள் மார்க்சிய ஆசான்களது போதனையையே மறுத்துவிட்டு மார்க்சியத்தைப் படிப்பவர்களையும் அதனை பிறருக்கு கற்றுக்கொடுப்பவர்களையும் குறை சொல்வதன் நோக்கம் என்ன? மக்கள் மார்க்சியத்தை கற்றுக்கொண்டால் போலி கம்யூனிஸ்டுகளை மக்கள் புரிந்துகொண்டு அவர்களை புறக்கணிப்பார்கள் என்ற அச்சம் காரணமாகவே மார்க்சியத்தைப் படிப்பவர்களை குறைசொல்லித் திரிகிறார்கள். மார்க்சியத்தைப் படித்து தவறு செய்தாலும் அந்தத் தவறுகளை நாம் புரிந்துகொண்டு அவர்களை எதிர்த்து நாம் போராட வேண்டுமானால் நாம் மார்க்சியத்தை கட்டாயம் படிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் நாம் படித்து பெற்ற அறிவைக் கொண்டு சமூகப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான சரியான நடைமுறை கொள்கை வகுத்து செயல்பட வேண்டும். இதற்கு மாறாக மார்க்சியத்தை படிப்பதே தவறு என்று சொல்பவர்கள் அயோக்கியர்களே.
  • Like
  • Reply
Author
திருப்பூர் குணா
Ravindran உங்களுக்கு தன்னிலை மறக்கிற நோய் இருக்கிறது போலும். மார்க்சியத்தை படிக்காமலா அவர்கள் வகுப்புகள் நடத்துகிறார்கள்?
  • Like
  • Reply
Ravindran
அப்படி வகுப்பு நடத்துபவர்களை நான் குறை சொல்லவில்லை. அவர்களை நான் ஆதரிக்கிறேன் பாராட்டுகிறேன். அத்தகைய வகுப்பு நடத்தாத அதற்குத் தயாரில்லாத கட்சிகளை நீங்கள் விமர்சிக்கவில்லையே ஏன்? என்பதுதான் எனது கேள்வி. வகுப்பு நடத்துபவர்கள் மார்க்சியத்தை திருத்தியும் வகுப்பு நடத்துவதற்கு வாய்ப்புள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அப்படி அவர்கள் மார்க்சியத்தை திருத்தி வகுப்பெடுத்தால் அதனை மறுத்து போராட வேண்டும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. ஆகவே இங்கே ஒவ்வொருவர் முன்வைக்கும் கருத்துக்களுக்கு இடையே மட்டும் போராட்டங்களும் வாதங்களும் இருக்க வேண்டும். தனிநபர்களின் மீதான தாக்குதலாக இருக்கக் கூடாது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. ஆகவே என்னைப் பற்றி பொதுவாக விமர்சிப்பதற்குப் பதிலாக எனது பதிவுகளில் உள்ள தவறுகளை குறிப்பாகச் சுட்டிக்காட்டுங்கள் நான் நிச்சயமாக பரிசீலிப்பேன். குறை உள்ளது என்று நான் உணர்ந்தால் கட்டாயமாக திருத்திக்கொள்வேன். வீண் கௌரவம் பார்க்க மாட்டேன்.
  • Like
  • Reply
Author
திருப்பூர் குணா
Ravindran எல்லா கட்சிகளை விடவும் CPI மற்றும் CPI(M)தான் அதிகப்படியான அரசியல் வகுப்புகள் நடத்துகின்றன.
  • Like
  • Reply
Palani Chinnasamy
திருப்பூர் குணா உண்மைதான் பின்னர் ஏன் மார்க்சியத்தை மறுக்கும் நூல்களையும் மார்க்சிய ஆசான்களின் தத்துவத்தையே குழப்பும் நூல்களையே இரு கட்சி ஸ்தனமான வெளியீட்டகம் வெளியிடுகிறது அதனையும் உங்களின் மார்க்சிய கண்ணோட்டத்தில் இந்த முட்டாள்களுக்கு புரிய வைக்க முடியுமா?
Author
திருப்பூர் குணா
Palani Chinnasamy தாவாதீங்க. பிரச்சனை படித்தால் மட்டுமோ உபதேசித்தால் மட்டுமோ தீராது என்பதுதான் பதிவும் மறுபடி மறுபடியான பதிலும்.
Palani Chinnasamy
திருப்பூர் குணா அப்ப நாங்கள் பேசுவதும் எழுதுவதும் உங்களுக்கு சலிப்பு தட்டுவது என்று பேசும் நீங்கள் மார்க்சிய நூல்களை படிக்க தடை போடுங்கள் இனி யாரும் பேசமாட்டார்கள்
இரா. முருகவேள் 
Follow
பல்வேறு முதலாளித்துவ அறிஞர்களின் பார்வையை மார்க்சிய நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்தும் நூல்கள் நம்மிடம் இல்லை தோழர். புள்ளி விவரங்களை அங்கிருந்து தான் நாம் எடுக்க வேண்டும். உதாரணமாக நந்தன் நிலகெனி எழுதிய imagining India என்ற நூல் முதலாளித்துவ வளர்ச்சிக்கு… 
See more
  • Like
  • Reply
2
Ravindran
இரா. முருகவேள் நீங்கள் சொல்வது உண்மை ஏற்கிறேன். இதனை எந்தக் கண்ணோட்டத்தில் இருந்து விமர்சனப்பூர்வமாக புரிந்துகொள்வது? மார்க்சிய லெனினிய வெளிச்சத்திலிருந்துதான் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அதற்கு நாம் மார்க்சிய லெனினிய அறிவைப் பெறுவது முதன்மையானது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது. இவ்விரண்டையும் மறந்துவிடுவதை இங்கே நியாயப் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் நியாயமற்ற அயோக்கியர்களே. நீங்கள் சொல்வதை ஆய்வு செய்வது அவசியமே. அந்த ஆய்வு மார்க்சிய லெனினிய கண்ணோட்டத்திலிருந்து நடத்தப்பட வேண்டும் என்பதை இணைத்தே பார்க்க வேண்டும்.
  • Like
  • Reply
2
Author
திருப்பூர் குணா
Ravindran அந்த ஆய்வு என்ன? அதில் ஈடுபடாமல் மற்றவர்களிடம் குறை கண்டுபிடித்து சுயஇன்பம் அடையும் மனப்போக்கு ஏன்?
  • Like
  • Reply
Palani Chinnasamy
திருப்பூர் குணா யாரை குறை கண்டுபிடித்து கொண்டாடுகின்றனர் நீங்கள்தான் எங்களின் பகுதியில் உள்ள எத்தனை கட்டுரகளை வாசித்துள்ளீர் இப்படி சான்றிதல் வழங்க அதனை நீங்கள்தான் தெரிவிக்க வேண்டும், ஏனெனில் நாங்கள் மிகத்தெளிவாக அரசை பற்றியும் பாராளுமன்றம் பற்றியும் எழுதி உள்ள கட்டுரை இப்பொழுதும் பொதுவெளியில் இணையத்தில் உள்ளன ஆனால் நீங்கள் வைத்துள்ள இவை எவ்வகையிலும் உண்மையில்லை இவை முழுமையாக உங்களின் அகநிலை வாதம் ஏனெனில் நீங்கள் எங்களின் எந்த எழுத்தையும் வாசித்து விவாதிக்க அழைக்கிறேன் உண்மையில் நீங்கள் மார்க்சியத்தை விரும்புவராக இருந்தால் ஒவ்வொரு கேள்வி பதில் வடிவில் உங்களின் போதாமையை எங்களின் இணையத்திலிருந்து பதிலளிக்க முடியும் உங்களை போன்ற முன் முடிவு என்னிடம் இல்லை என்பேன் வாருங்கள் களத்தில் விவாதிக்க //நமக்கு இந்த மனப்பாட மார்க்சிய வித்துவான்களை எண்ணி பரிதாபமாக இருக்கிறது. ஆரம்பத்தில் எரிச்சலாக இருந்தது. சலிப்பில்லாமல் ஆசான்களின் மேற்கோள்களை பக்கம் பக்கமாக பதிவிடுகிறார்கள். இந்த வேலையை தவமாக செய்கிறவர்கள் ஆயுதப்போராட்டமே ஒரே வழி என்று ஆசைப்படுகிறவர்கள். நடைமுறைப்படுத்துகிறவர்கள் அல்ல. போதனையாளர்கள். இவர்களின் எண்ணம் தேர்தல் பாதையில் இருப்பவர்கள் யாரும் மார்க்சியத்தை படித்தவர்கள் அல்ல என்பதுதான். தேர்தல் பாதையாளர்களும் படித்ததைத்தான் வகுப்புகளாக எந்திரகதியில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!
நமக்கு பிரச்சனை படிப்பதை வாந்தியெடுப்பதில் எந்த பலனும் இல்லை என்பதுதான். ஏனெனில் மார்க்சியம் சமூக மாற்றத்திற்கான நடைமுறை அறிவியலாகும். அப்படித்தான் சமூக மாற்றத்திற்கான நடைமுறையை கையாண்ட இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தொடக்க காலங்களிலும் அதிகார மாற்றத்திற்கு பின்பான சில முக்கிய காலகட்டங்களிலும் மார்க்சியம் முன்னுக்கு வந்தது. அது மாறுபட்ட நடைமுறைகளை கோரியது.// இவை சரியா நீங்கள்தான் இதனை நிரூபிக்க கடமை பட்டவர்
Soma Sundaram Babu
மாக்ஸ்சியம் என்பது வேதியல் கண்டுபிடிப்பு அல்ல ; இயற்பியல் கண்டுபிடிப்பு!
விரைவுப்படுத்த முடியாமல் நாம் தவிப்பதை போல, தடுக்க முடியாமல் எதிர் தரப்பினரும் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
விரைவுப்படுத்தும் Catalyst கள் தனது பணியை செய்யாவிட்டாலும், reactant கள் வினை புரிந்தே தீரும்.
  • Like
  • Reply
2
Ravindran
Soma Sundaram Babu தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா.
Author
திருப்பூர் குணா
Ravindran அதந்தை, அவ்வளவு இளக்காரம். Soma Sundaram Babu என்ன சொல்கிறார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்